
களத்தில் குதித்த ராகுல் காந்தி... பிரதமர் இல்லம் முற்றுகை - மத்திய அரசுக்கு பெரிய நெருக்கடி
New Delhi, Delhi:Delhi Rahul Gandhi Protest : டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள், டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுட்டு வருகின்றனர்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகல், பிரதமர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் முழுக்கமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
हम छात्रों के खून का हिसाब मांगने प्रधानमंत्री के घर आए हैं - युवाओं की गुनहगार मोदी सरकार जवाबदेही और संसद में चर्चा से भाग नहीं सकती।
— Congress (@INCIndia) July 21, 2026
देश के युवाओं का भविष्य बर्बाद करने, और उनके ख़िलाफ क्रूरता के लिए नरेंद्र मोदी, अमित शाह और धर्मेंद्र प्रधान इस्तीफा दें। pic.twitter.com/Rik1PVrUe6
மேலும் படிக்க | காயமடைந்த மாணவர்களை சந்தித்த ராகுல்... ஏன் மௌனம்? - பிரதமர் மோடிக்கு நறுக் கேள்வி
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இதையொட்டி, ராகுல் காந்தி பேரணியை கலைக்க போலீசார் முயற்சித்து, காங்கிரஸ் கட்சியினரை தடுத்த நிறுத்தி உள்ளனர். அவர்கள் பிரதமர் இல்லத்திற்கு அருகே சாலையிலேயே அமர்ந்து கோஷமிட்டு வருகின்றனர். கையில் விலங்கிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் ராகுல் காந்தியுடன் இருப்பவர்களை ஒவ்வொருவராக குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்துள்ளனர். குண்டர்களை கையாள்வதை போல் காங்கிரஸ்காரர்களை போலீசார் கையாள்கின்றனர் என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
'PM, HM ராஜினாமா செய்ய வேண்டும்...'
இதுகுறித்து ராகுல் காந்தி அவரது X பக்கத்தில், "நேற்று இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் கோரி, நாங்கள் அவரது இல்லத்திற்கு பேரணியாக சென்றோம்.
We have marched to PM Modi’s house to demand answers from him for the brutalities against young students yesterday.
— Rahul Gandhi (@RahulGandhi) July 21, 2026
The Government doesn’t want to take any accountability or does it want to have a debate on it in Parliament.
PM and HM must resign for destroying the future of… pic.twitter.com/gnU3ZkRKDx
அரசாங்கம் எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கவும் விரும்பவில்லை. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்ததற்காக, பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை... ராகுல் மறுப்பு
பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் ராகுல் காந்தியிடம், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசின் சமரசத்தை ராகுல் காந்தி ஏற்கவில்லை என தெரிகிறது.
#WATCH | Delhi: Union Minister Jitendra Singh engages in a conversation with Lok Sabha LoP Rahul Gandhi over Congress's ongoing protest at Lok Kalyan Marg. pic.twitter.com/D929hAzh8Q
— ANI (@ANI) July 21, 2026
மேலும் படிக்க | டெல்லி போராட்டம்: போராட்டக்காரர்களுடனான அமைச்சர் நட்டாவின் சந்திப்பில் நடந்தது என்ன?
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
