icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

0
0
Report

பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

Chennai, Tamil Nadu:

பிரபல திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில், அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

0
0
Report
Advertisement

விரைவில் பாகுபலி 3? ஹிண்ட் கொடுத்த நடிகர்கள்! ராஜமௌலி சொன்ன விஷயம்..

Chennai, Tamil Nadu:

பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் குறித்த செய்திதான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படம் குறித்து நடிகர்கள் பேசிய போது, இப்படிப்பட்ட ஒரு விஷயம் பேசியதுதான் இந்த பரபரப்புக்கு காரணம். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம். 

பாகுபலி 3:

சமீபத்தில் Baahubali : The Torchbearer என்கிற பெயரில், ஒரு டாக்குமெண்ட்ரி வெளியிடப்பட்டது. அதில், பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலி, படத்தில் ஹீரோவாக நடித்த பிரபாஸ், வில்லனாக நடித்த ராணா டகுபதி, ஹீரோயினாக நடித்த அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நேர்காணல் அளித்திருந்தனர். இந்த படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் படிக்க | குஷ்பு மகள் திருமண கொண்டாட்டம்! யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க..

இது குறித்து வைரலாகி வரும் வீடியோவில், ராண “இந்த உலகம் அதற்கு தயாராக இருக்காது, ஆனால் இன்னொரு பாகுபலி படம் வரும்..” என்று தெரிவித்தார். அப்போது அருகில் இருந்த பிரபாஸ் தன் கையை உயர்த்தி மூன்று விரல்களை காண்பித்தார். இதை பார்த்த பிறகு அவர் அருகில் அமர்ந்திருந்த அனுஷ்கா உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோ முடியும் போது “இந்த சகாப்தம் தொடரும்..” என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும் பாகுபலி 3 படம் கன்ஃபார்ம் ஆகி விட்டதாக கூறி வருகின்றனர்.

ராஜமௌலி கூறியது என்ன?

பாகுபலி படத்தின் முதல் இரண்டு பாகங்கள், உலகளவில் அதிகம் வசூலித்த இரண்டு இந்திய படங்கள் என்கிற பெயரை எடுத்த படங்களாகும். பாகுபலி படத்தில், தந்தை-மகன் கதை இரண்டு படங்களீல் எடுத்து சொல்லப்பட்டு விட்டது. இதில் எந்த கதையும் முடிவில்லாமல் இல்லை. இருப்பினும், பாகுபலி 3 படத்தில் எந்த மாதிரியான கதை இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. முந்தைய இரு படங்களை எடுத்த ராஜமௌலி, பாகுபலி 3 திரைப்படம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 

அனுஷ்கா, பிரபாஸ் மற்றும் ராணா இது குறித்து பேசியிருந்தாலும், படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால்தான் எந்த உண்மையும் தெரிய வரும்.

ரூ.5,000 கோடி வரை வசூல் ஆகுமா?

நெட்டிசன்கள் பலரும், பாகுபலி 3 திரைப்படத்தின் அறிவிப்பிற்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர். இந்திய சினிமாவின் முகத்தை, உலகிற்கு காட்டிய படம் இது என்று புகழும் நெட்டிசன்கள், இந்த படம் முந்தைய இரண்டு படங்களை விட பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படலாம் எனவும், இது இந்திய சினிமாவிற்கு இன்னொரு பெஞ்ச்மார்க் படமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். இதை வெறும் முடிவுக்கதை இல்லை (Sequel) என்று கூறும் அவர்கள், இது ஒரு பெரிய சினிமா நிகழ்ச்சியாக நடைபெறும் என்றும் கூறி வருகின்றானர். இதை பார்க்க, பல மில்லியன் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 

முதல் இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்!

பாகுபை : தி பிகினிங் திரைப்படம், 2015ஆம் ஆண்டில் முதலில் வெளியானது. சுமார், ரூ.170 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம், தெலுங்கு சினிமாவின் முதல் பெரிய பட்ஜெட் படமாக உருவானது. உலகளவில், சுமார் ரூ.650 கோடி வரை வசூலித்தது. 

பாகுபலி 2 திரைப்படம், 2017ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம், இந்தியாவில் மட்டும் ரூ.1430 கோடி வரை வசூலித்தது. உலகளவில், ரூ.1,810 கோடி வரை வசூலித்திருந்தது. இந்த வசூல், வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தது. தெலுங்கில் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட டப் செய்யப்பட்ட மொழிகளிலும் இப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. மொத்தமாக இந்த இரு படங்களும், ரூ.2410 கோடி வரை வசூலித்திருந்தது. 

மேலும் படிக்க | CM விஜய் மிஸ்ஸிங்..குஷ்பு மகள் திருமணத்திற்கு தனியாக வந்த த்ரிஷா! ஏன் தெரியுமா?

0
0
Report

ரேஷன் பொருட்களுக்கான அடிப்படை விதியே மாறுகிறது: ஏழை குடும்பங்களுக்கு நிவாரணம்

Nagalapuram, Tamil Nadu:

Ration card Latest News: தமிழகம் உட்பட அனைத்து மாநில ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவுள்ளன. 'அந்தியோதயா அன்ன யோஜனா' (AAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தானிய அளவை, தற்போதுள்ள குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ என்ற நிலையான அளவிலிருந்து, நபர் ஒருவருக்கு மாதம் 7 கிலோ (அதிகபட்சம் 35 கிலோ வரை) என மாற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசால் பரிசீலிக்கப்படும் இந்த மாற்றம் அதிக அளவிலான ஏழைக் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப அலகின் அடிப்படையில் அல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுவது சிறந்த மாற்றமாக இருக்கும் என கருதப்படுகின்றது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ல் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு

உணவு மற்றும் பொது விநியோகத் துறை 'தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013'-ல் திருத்தம் செய்ய முன்மொழிந்துள்ளது. மேலும், உணவு அமைச்சகம் 'தேசிய உணவுப் பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026' குறித்த பொதுமக்களின் கருத்துக்களை ஜூலை 13-ஆம் தேதி வரை வரவேற்றுள்ளது.

மேலும் படிக்க | Sarthak PDS: மத்திய அரசின் புதிய ரேஷன் திட்டம்! யாருக்கெல்லாம் பலன்? முழு விபரம்!

தற்போதைய நடைமுறை என்ன?

  • தற்போதைய சட்டத்தின்படி, மிகவும் ஏழ்மையானவர்களாகக் கருதப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள், குடும்பத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் மாதம் 35 கிலோ தானியத்தைப் பெறுகின்றன.
  • 'முன்னுரிமைக்குரிய குடும்பங்கள்' (Priority Households) பிரிவில் உள்ளவர்கள் நபர் ஒருவருக்குக் குறைவான அளவிலேயே தானியத்தைப் பெறுகின்றனர்.
  • இருப்பினும், இப்பிரிவில் உள்ளவர்கள் AAY பயனாளிகளை விடக் குறைவான பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளவர்களே ஆவர்.
  • அதிக தேவையில் இருக்கும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்களில் பெரிய குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு கிடைக்கும் தானியத்தின் அளவு மிக குறைவாகவே உள்ளது.
  • குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படாமல், குடும்ப அலகின் அடிப்படையிலேயே தானியம் வழங்கப்படுவதே பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.

அமைச்சகம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, அந்தியோதயா அன்ன யோஜனாவின் கீழ் தற்போதுள்ள குடும்பம் சார்ந்த ஒதுக்கீட்டு முறை மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அது குடும்ப அளவின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது. ஆகையால் இதில் மாற்றம் பரிசீலிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு பயனர்களே உஷார்! உடனே இதை செய்யலனா அரிசி, பருப்பு கட்?

புதிய விதியால் யார் பயனடைவார்கள், யார் பயனடைய மாட்டார்கள்?

முன்மொழியப்பட்ட அமைப்பின் கீழ், ஒரு குடும்ப உறுப்பினருக்கு 7 கிலோ என்ற ரீதியில் இனி உனவு தானியங்கள் அளிக்கப்படும். அதாவது, இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட AAY குடும்பம் மாதம் 14 கிலோ தானியத்தைப் பெறும். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் தற்போதுள்ள வரம்பான 35 கிலோ வரை தானியத்தைப் பெறும். ஏனெனில், இந்த முறையில் 35 கிலோ என்ற வரம்பு இருக்கும். சிறிய குடும்பங்களுக்கு மொத்த தானிய அளவு பெரும்பாலும் மாறாமல் இருந்தாலும், குடும்ப அளவின் அடிப்படையில் ஒதுக்கீடு தீர்மானிக்கப்படுவதால் பெரிய குடும்பங்கள் அதிக பயனடையும்.

ரேஷன் பொருட்களுக்கான இந்த விதியின் நோக்கம் என்ன?

மனித வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான அரசின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. 'தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013'-ன் நோக்கங்களுக்கு இணங்க, தரமான உணவை போதுமான அளவில் மற்றும் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். தற்போது, ​​முன்னுரிமைக்குரிய குடும்பங்கள் மற்றும் AAY பயனாளிகள் ஆகிய இரு தரப்பினருக்கும் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன.

குடும்ப உறுப்பினர்களின் அளவின் படி ரேஷன் பொருட்களை அளித்தால், அது பெரிய குடும்பங்களுக்கு சிறந்ததாக அமையும். ஆனால், சிறிய அளவு குடும்பங்களுக்கு இது பாதகத்தை ஏற்படுத்தலாம். உதாரணமக, 3 பேர் உள்ள குடுமபத்திற்கு முன்பு குடும்ப அலகின் படி 35 கிலோ தானியங்கள் கிடைத்திருக்கும். ஆனால், புதிய விதி அமலுக்கு வந்தால், குடும்ப உறுப்பினர்களின் அடிப்படையில் அவர்களுக்கு 21 கிலோ (7x3=21) தானியங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரேஷன் அட்டை புதிய விதி: இனி குடும்ப உறுப்பினர்களின் அடிப்படையில் பொருட்கள்? அரசு பரிசீலனை

0
0
Report

CM விஜய் மிஸ்ஸிங்..குஷ்பு மகள் திருமணத்திற்கு தனியாக வந்த த்ரிஷா! ஏன் தெரியுமா?

Bandoli, Goa:

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாகவும், தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய புள்ளியாகவும் இருப்பவர் குஷ்பு. இவருக்கும் சுந்தர்.சிக்கும் திருமணம் ஆனதை அடுத்து, இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்கிற இரு மகள்கள் பிறந்தனர். இதில் அவந்திகாவிற்கு சமீபத்தில் கோவாவில் திருமணம் நடந்தது.

குஷ்பு மகள் திருமணம்:

குஷ்பு-சுந்தர்.சியின் மூத்த மகளான அவந்திகாவிற்கும், வணிகக் கடற்படை அதிகாரியாக இருக்கும் ஷ்ரவன் ஸ்ரீநிவாசன் என்பவருக்கும் கோவாவில், ஜூன் 25ஆம் தேதியான நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் பங்கேற்க, பல்வேறு சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தடபுடலலாக நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதையடுத்து, அதில் பங்கேற்றிருந்த த்ரிஷா குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க | “Autoimmune நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” விஷ்ணு விஷால் கொடுத்த அதிர்ச்சி!

கலந்து கொண்ட பிரபலங்கள்..

இரண்டு தினங்களுக்கு முன்பிருந்தே, குஷ்பு மகளின் திருமண கொண்டாட்டங்கள் துவங்கப்பட்டு விட்டன. கோவாவில் நடந்த இந்த திருமணத்தில் பங்கேற்க, தென்னிந்திய பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். குறிப்பாக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, அமலா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் வருகை புரிந்திருந்தனர். தமிழ்நாட்டு முதல்வர் விஜய்யை குஷ்பு தன்னுடைய குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்த திருமணத்தில், நடிகை த்ரிஷாவுடன் விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு நடந்த கதையே வேறு. நடிகை த்ரிஷா, இந்த திருமணத்தில் தனியாக கலந்து கொண்டார்.

விஜய் ஏன் வரவில்லை?

முதல்வர் விஜய், தொடர்ந்து இரு தினங்களாக அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். 300 புதிய அரசு பஸ்களை நேற்று தொடங்கி வைத்த இவர், போதை பொருள் உபயோகத்தை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 3 கி.மீ மாராத்தானிலும் கலந்து கொண்டார். இப்படி அவர் தொடர்ந்து பிசியாக இருப்பதால் அவரால் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது.

மேலும் படிக்க | கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சமந்தா! மீண்டும் சினிமாவில் இருந்து பிரேக்..

விஜய்யை ரசிகர்கள் தேடியது ஏன்?

விஜய், தேர்தலில் களம் காணுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி சங்கீதா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறி மனுதாக்கல் செய்தார். இதில், அவர் விஜய் மீது வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் ஒன்று, விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது என்பது. இந்த குற்றச்சாட்டு வெளிவந்த சில நாட்களிலேயே, த்ரிஷாவுடன் மேட்சிங் உடையணிந்து விஜய் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். இது மட்டுமல்லாமல், விஜய்யின் பிறந்தநாளுக்கு விதவிதமாக கேக் கொடுத்த சர்ப்ரைஸ் செய்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். விஜய் முதல்வர் ஆவதற்கு முன்பே, அவருடைய பிறந்தநாளுக்கு த்ரிஷா வெளியிட்ட புகைப்படங்களுக்கு கண்டனம் தெரிவித்து வந்த ரசிகர்கள், தற்போது, முதல்வர் ஆன பிறகும் இப்படியே செய்வதா? என்று த்ரிஷா மீது தொடர் விமர்சனங்களை அடுக்கி வந்தனர்.

அந்த பிறந்தநாள் போட்டோ சர்ச்சையே இன்னும் முடிவடையாத சமயத்தில், குஷ்புவின் மகள் திருமணத்திலும் முதல்வரும் த்ரிஷாவும் ஒன்றாக வருவார்களோ, மேலும் சர்ச்சைகளுக்கு வழி வகுப்பார்களோ என்று தவெகவினர் பலர் அச்சத்தில் இருந்தனர். ஆனால், த்ரிஷா இந்த திருமணத்தில் தனியாக வந்து கலந்து கொண்டிருந்தார். இதனால், முதல்வர் விஜய்யின் ஆதரவாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர். 

த்ரிஷாவை மட்டும் சாடுவது ஏன்?

த்ரிஷா-விஜய் மத்தியில் இருக்கும் உறவு நட்பு ரீதியானதா, அல்லது நட்பை தாண்டியதா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இருப்பினும், விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை த்ரிஷா பதிவிடும் போதெல்லாம், மக்கள் அவரை மட்டுமே திட்டி தீர்த்து வருகின்றனர். “குடும்பத்தை பிரித்தவள்” உள்பட பல்வேறு இழிச்சொற்களை கூறி ரசிகர்கள் த்ரிஷாவை திட்டும் போது, பெண்களில் ஒரு சாரார், “ஏன் த்ரிஷாவை மட்டும் திட்டுகிறீர்கள்? முதல்வருக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லையா என்ன? அவருக்குதானே குடும்பம், மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியது அவர்தானே. ஏன் அவரை யாரும் ஒன்றும் சொல்வதில்லை?” என்று அவர்களுடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால், சமூகத்தின் பார்வையில் இப்போது வரை த்ரிஷாதான் தவறானவராக பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | குஷ்பு மகள் திருமண கொண்டாட்டம்! யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க..

0
0
Report
Advertisement

நடிகை வீட்டில் பிணம்! திருமணத்தை மீறிய உறவால் வந்த வினை..என்ன விவரம்?

Bengaluru, Karnataka:

பெங்களூருவை சேர்ந்த நடிகை, கிரிஷி தாபாண்டா. இவர், பெங்களூருவில் இருக்கும் ஆர்.ஆர். நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் 45 வயது நபர் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

பதற வைத்த சம்பவம்!

இந்த பதற வைக்கும் சம்பவம், ஆர்.ஆர்.நகரில் உள்ள அப்ஸ்கேல் எலகெண்ட்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் நடந்திருக்கிறது. இதுவரை இந்த சம்பவம் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, இந்த வீட்டில் உயிரிழந்தவரின் பெயர், வைஷாக். இவர், இந்த வீட்டிற்கு கடந்த புதன்கிழமை இரவு வந்திருக்கிறார். போலீசார் இவர் அங்கிருந்த மின்விசிரியில் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் நடக்கையில் சுத்தி வேறு யாரும் இல்லை என்பது தெரிகிறது. 

மேலும் படிக்க | குஷ்பு மகள் திருமண கொண்டாட்டம்! யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க..

இது குறித்து பேசிய அதிகாரிகள், கிரிஷி தாபாண்டா வீட்டில் இல்லை என்றும், அவர் வெளியில் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து தகவல் தெரிவித்ததன் பேரில் ஆர்.ஆர்.நகர் போலீசார் இந்த வீட்டிற்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இருக்கும் ஃபாரன்ஸிக் தடயங்களையும் சேகரித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடல், விக்டோரியா மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ரிப்போர்ட் வந்த பிறகுதான், இறப்பிற்கான காரணம் என்ன என்பதை உறுதியாக கூற முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 

திருமணத்தை மீறிய உறவு..!

உயிரிழந்தவரின் பெயர் வைஷாக். இவருக்கு 45 வயது ஆகிறது. பெங்களூருவை சேர்ந்தகார் பணிமனை உரிமையாளரான இவருக்கு ஏற்கனவி திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர்.  இதையடுத்து, பெங்களூருவை சேர்ந்த 36 வயது நடிகையான கிருஷி தாபண்டாவிற்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் இருவரும், பின்னர் காதலர்கள் ஆகியிருக்கின்றனர். பின்னர், வைஷாக், குடும்ப பிரச்சனை காரணமாக அவர்களை விட்டு பிரிந்து வந்து நடிகையின் வீட்டிலேயே வசித்து வந்தார்.

ஏற்கனவே கைது!

அரவிந்த் ரெட்டி என்கிற தயாரிப்பாளருக்கும் கிருஷிக்கும் சில காலங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில் தலையிட்ட வைஷாக், அரவிந்த் ரெட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதன் காரணமாக, வைஷாக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். பின்பு, வெளியில் வந்து விட்டார். கூடவே, வைஷாக் தன் மனைவியுடன் தகறாரில் ஈடுபட்டதாகவும் தொடர்கிறது. 

மேலும் படிக்க | “Autoimmune நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” விஷ்ணு விஷால் கொடுத்த அதிர்ச்சி!

தற்போது நடைப்பெற்ற சம்பவத்தின் போது நடிகை கிருஷி, தான் நடிக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக நெலமங்களா வரை சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு போன் செய்த வைஷாக் தான் உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாக கூறியிருக்கிறார்.

அவரை போனிலேயே சமாதானப்படுத்தி விட்டு, நடிகை கிருஷி வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், அவர் வருவதற்குள் வைஷாக் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

வெவ்வேறு கோணங்களில் விசாரணை!

இந்த வழக்கு குறித்து, போலீசார் தொடர்ந்து வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார், விரைவில் உயிரிழந்தவரின் குடும்பத்தாரிடமும் நடிகையிடமும் விசாரணை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படி நடிகையின் வீட்டில் மர்மமான முறையில் ஒருவர் பிணமாக இருந்தது கன்னட திரையுலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இது குறித்து ஆர்.ஆர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | CM விஜய் மிஸ்ஸிங்..குஷ்பு மகள் திருமணத்திற்கு தனியாக வந்த த்ரிஷா! ஏன் தெரியுமா?

0
0
Report

Fact Check: 3 கி.மீ., ஓடிய முதல் CM விஜய் தானா? ஆதவ் அர்ஜூனா கொடுத்த பில்டப்.. உண்மை என்ன?

Chennai, Tamil Nadu:

CM Vijay Marathon News Fact Check: சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு நாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று (ஜூன் 26) நடைபெற்றது. சென்னையில் காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு, மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார். 

3 கி.மீ மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய்யா?

மேலும், மாரத்தானை தொடங்கி வைத்ததும் இல்லாமல், மக்களோடு மக்களாக முதல்வர் விஜய்யும் மாரத்தான் ஓடியானர்.  அண்ணா நினைவிடத்தில் இருந்து ஔவையார் சிலை வரை 3 கி.மீ தூரத்திற்கு மாரத்தான் ஓடினார். முதல்வருடன், அமைச்சர்கள்  ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ரமணன் உள்ளிட்டோர் இருந்தனர்.  

மேலும் படிக்க: மாரத்தான் போட்டியில் ஓடிய CM விஜய்... அதிகாலையில் முதல்வரின் 'ஸ்பெஷல் மெசேஜ்'

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இதுவரைக்கு இருந்து முதலமைச்சர்களிலேயே ஒரு மாரத்தானில் கலந்து கொண்டு, 3 கிலோ மீட்டர் வரை ஓடிய ஒரே முதல்வர்  தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் ஜோசப் விஜய் அண்ணன் தான். வேறு எந்த முதலமைச்சரும், தமிழ்நாடு வரலாற்றில் மாரத்தான் ஓடியது கிடையாது. 

காலை 5 மணிக்கு ஷார்ப்பாக எழுந்து, 6.10 நிகழ்ச்சிக்கு வந்து, காலை 6.15 மணிக்கு மாரத்தான் ஓட ஆரம்பித்தார் முதல்வர் விஜய். நம்ம முதல்வர் விஜய் மாதிரி, தமிழ்நாடும் ஆரோக்கியமாக மாறப்போகிறது. இப்படியாக young-ஆன முதல்வர் இந்தியாவிலேயே இல்லை. இந்த அரசு இளைஞர்கள் மற்றும் பெண்களூக்கான அரசு தான்” என்று கூறினார். 

இந்தியாவிலேயே 3 கி.மீ மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் தான் ஆதவ் அர்ஜுனா கூறியது விவாதத்தை கிளப்பியுள்ளது.  இது தொடர்பாக சோஷியில் மீடியாவில் உண்மை தகவல்கள் வெளியாகி  வருகிறது. அதாவது, இந்தியாவிலேயே 3 கி.மீ மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் கிடையாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆதவ் அர்ஜுனா சொன்ன விஷயத்தின் உண்மைதன்மை குறித்து பார்ப்போம்.

மேலும் படிக்க: 8வது ஊதியக்குழு: சென்னையில் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், 40% HRA, மாதம் எவ்வளவு அதிகரிக்கும்?

21 கி.மீ மாரத்தான் ஓடிய உமர் அப்துல்லா

ஆனால், விஜய்க்கு முன்னதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர்  உமர் அப்துல்லா 21 கி.மீ வரை மாரத்தான் ஓடியுள்ளார். அதாவது,  2024, அக்டோபர் 16ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்ற உமர் அப்துல்லா, அதே ஆண்டில் அக்டோபர் 20ஆம் தேதி 21 கி.மீட்டர் வரை மாரத்தான் ஓடியுள்ளார். ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட உமர் அப்துல்லா 2 மணி நேரத்தில் 21 கி.மீ வரை ஓடியுள்ளார்.

சராசரியாக ஒரு கிலோ மீட்டரை 5 நிமிடங்கள் 54 விநாடிகளில் கடந்ததாக அவர் தெரிவித்து இருந்தார். மேலும், பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் உமர் அப்துல்லா. உமர் அப்துல்லா மட்டுமில்லாமல், ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் போன்றவர்கள் மாரத்தான் ஓடியதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளது.

 

எனவே, இந்தியாவில் 3 கி.மீட்டர் மாரத்தான் ஓடிய முதல்வர், விஜய் இல்லை என்பது தெரியவருகிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்தியாவிலேயே 3 கி.மீட்டர் மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் தான் என தவறான தகவலை கூறியுள்ளார். இதன்பிறகு, ஆதவ் அர்ஜுனாவே அதனை சரி செய்து கொண்டு, தமிழகத்தில் ஒரே முதல்வர் என கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்.. சீட்டில் அமர்ந்ததும் செய்த செயல்.. வைரல் மோமட்ஸ்!

 

0
0
Report

2 நாட்களுக்கு வெளுக்கப்போகுது! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

Chennai, Tamil Nadu:

TN Weather Update Today: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை உட்பட வட மாவட்டங்களில்  நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று கூட, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தநிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை?

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சுமார் 0.9 கிமீ உயரத்தில். தமிழக கடலோர பகுதிகளின் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 26) தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 8வது ஊதியக்குழு: சென்னையில் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், 40% HRA, மாதம் எவ்வளவு அதிகரிக்கும்?

 

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்

ஜூன் 27ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28ஆம் தேதி  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்.. சீட்டில் அமர்ந்ததும் செய்த செயல்.. வைரல் மோமட்ஸ்!

 

வானிலை மையம் அலர்ட்

விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

ஜூன் 29ஆம் தேதி விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 30ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாரத்தான் போட்டியில் ஓடிய CM விஜய்... அதிகாலையில் முதல்வரின் 'ஸ்பெஷல் மெசேஜ்'

 

0
0
Report
Advertisement

பாஸ்போர்ட் குடியுரிமைக்கான அதாரம் இல்லை என்கிறது மத்திய அரசு: அப்போ எதுதான் ஆதாரம்?

New Delhi, Delhi:

Indian Passport: "இந்தியக் கடவுச்சீட்டு (Passport) என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே; அது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல" என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 'கடவுச்சீட்டு சேவை தினத்தை' (Passport Seva Divas) முன்னிட்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும், மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்போர்ட் இந்திய குடியுரிமைக்கான அடையாளம் இல்லை

இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பது மட்டும் உங்களை இந்தியக் குடிமகனாக அடையாளப்படுத்தாது. பாஸ்போர்ட் இந்திய குடியுரிமைக்கான அடையாளம் இல்லை என்றால், வேறு எந்த ஆவணத்தை இதற்கு கருதுவது? இதற்கான சுருக்கமான பதில் என்னவென்றால், இந்தியாவில், அனைத்துச் சூழ்நிலைகளிலும் குடியுரிமையைத் திட்டவட்டமாக நிரூபிக்கும் ஒரே, பொதுவான ஆவணம் எதுவும் இல்லை. இது குழப்பமாகத் தோன்றலாம், ஆனால் இதுதான் உண்மை. இந்த விஷயத்தில் இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. பல முக்கிய ஜனநாயக நாடுகள், ஒரே ஒரு முதன்மை ஆவணத்தின் மூலம் குடியுரிமையை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, பல்வேறு ஆவணங்களின் தொகுப்பின் மூலமே அதை நிறுவுகின்றன.

பாஸ்போர்ட் என்பது என்ன? வெளியுறவு அமைச்சகம் கூறுவது என்ன?

பாஸ்போர்ட் வாங்குவதற்கு பல்வேறு கட்ட விரிவான சரிபார்ப்புகள் (Verification) நடத்தப்பட்டாலும், அதன் முக்கிய வேலை வெளிநாடுகளில் ஒரு இந்தியரின் தேசியத்தை (Nationality) உறுதிப்படுத்துவது மட்டுமே. இது வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான ஒரு பயண ஆவணமே தவிர, உள்நாட்டில் உங்களுடைய இந்தியக் குடியுரிமைக்கான இறுதியான சான்றாகச் செயல்படாது. பலர் கருதுவது போல, கடவுச்சீட்டு குடியுரிமைக்கான சான்று அல்ல என்பது இப்போது கொண்டுவரப்பட்ட புதிய விஷயம் அல்ல. இது பல ஆண்டுகளுக்கு முன்பே சட்ட விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வாட்ஸ்-அப் புதிய CEO குணால் ஷா! யார் இவர்? தலைமை பொறுப்புக்கு வந்தது எப்படி?

இந்தியக் குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படுமா? 

பொதுவாக இந்தியர்களுக்கு மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டாலும், இந்தியக் குடிமகன் அல்லாத தனிநபர்களுக்கும் இந்தியப் பாஸ்போர்ட் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.

1976-ஆம் ஆண்டின் கடவுச்சீட்டுச் சட்டம் (Passports Act, 1976) கூறுவது என்ன?

  • இச்சட்டத்தின் பிரிவு 20-ன் படி, பொது நலன் கருதி அவசியமெனக் கருதினால், இந்தியக் குடிமகன் அல்லாத ஒரு நபருக்கும் இந்தியக் கடவுச்சீட்டை (Indian Passport) வழங்க இந்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
  • இதன் மூலம், கடவுச்சீட்டு மற்றும் குடியுரிமை ஆகிய இரண்டும் ஒன்றல்ல, அவை தனித்தனி கருத்துகள் என்பதைச் சட்டமே தெளிவுபடுத்துகிறது.

இந்தியாவில் குடியுரிமை எவ்வாறு பெறப்படுகிறது?

இந்தியாவில் ஒருவர் குடியுரிமை பெறுவதற்குப் பல்வேறு காலக்கட்டங்களின்படி வழிமுறைகள் உள்ளன:

  • ஜனவரி 26, 1950 - ஜூலை 1, 1987: இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
  • 1987 - 2003: இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்தால் குடியுரிமை வழங்கப்பட்டது.
  • 2003-க்குப் பிறகு: இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரும் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற விதி வந்தது. (அல்லது ஒருவர் குடிமகனாகவும், மற்றொருவர் சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது). 
  • வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள்: இந்தியத் தூதரகத்தில் ஓராண்டுக்குள் பிறப்பு பதிவு செய்யப்பட்டால், இந்தியப் பெற்றோரின் வழித்தோன்றல் அடிப்படையில் குடியுரிமை பெறலாம்.
  • வெளிநாட்டினர்: சட்டவிரோதக் குடியேறிகளாக இல்லாமல், இந்தியாவில் தொடர்ந்து 12 ஆண்டுகள் வசித்திருந்தால் உறுதிமொழி ஏற்பதன் மூலம் குடியுரிமை பெறலாம்.

மேலும் படிக்க | நிலம் வாங்குபவர்களுக்கு ஷாக்... 2 மடங்கு உயர்ந்த பதிவு கட்டணம் - அடுத்து தமிழகத்தில் உயருமா?

இந்தியக் குடியுரிமையை உண்மையில் எது தீர்மானிக்கிறது?

இந்தியக் குடியுரிமை என்பது 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இச்சட்டம் இந்தியக் குடிமகனாவதற்கான ஐந்து வழிகளை அங்கீகரிக்கிறது: 

  • பிறப்பு, 
  • வம்சாவளி, 
  • பதிவு, 
  • இயல்புரிமை (naturalisation) அல்லது 
  • ஒரு பகுதி இந்தியாவோடு இணைக்கப்படுதல்.

ஒரு நபர் எந்த அடையாள அட்டையை வைத்திருக்கிறார் என்பது முக்கியமல்ல, மாறாக, அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பூர்வமான தகுதிகளை அவர் பூர்த்தி செய்கிறாரா என்பதே முக்கியம். இதனால்தான் ஆதார், பான் (PAN) மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை அடையாளம், வசிப்பிடம் அல்லது வாக்களிக்கும் தகுதிக்கான சான்றுகளாகச் செயல்படுகின்றனவே தவிர, குடியுரிமைக்கான சான்றுகளாக அமைவதில்லை.

மத்திய அரசின் இந்த விளக்கம், பாஸ்போர்ட் என்பது சர்வதேச அளவில் நமது அடையாளத்தை நிரூபிக்க மட்டுமே பயன்படும் ஒரு ஆவணம் என்பதையும், நம் குடியுரிமைக்கு இது சான்றாகாது என்பதையும் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மேற்கு மத்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு: மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு 25%-75% கட்டண சலுகை

0
0
Report

ஜெர்மனிக்கு ஷாக்... 4 முறை சாம்பியனை சாய்த்த ஈக்வடார் அணி - அடுத்த சுற்றுக்கு தகுதி

East Rutherford, New Jersey:

Germany vs Ecuador : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் 4 முறை சாம்பியன் அணியான ஜெர்மனியை, 2-1 என்ற கோல் கணக்கில், ஈக்வடார் அணி வெற்றிபெற்று வரலாறு படைத்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஈக்வடார் அணியின் வெற்றி, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              

0
0
Report

மாரத்தான் போட்டியில் ஓடிய CM விஜய்... அதிகாலையில் முதல்வரின் 'ஸ்பெஷல் மெசேஜ்'

Chennai, Tamil Nadu:

CM Vijay Latest News : சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாரத்தான் போட்டியை முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 26) அதிகாலையில் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். 

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகே, சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார்.

முன்னதாக, வெள்ளை போர்டில் 'Start Run, Stop Drugs' எனும் இந்த மாரத்தான் போட்டியின் கருப்பொருளை எழுதிய விஜய், தொடர்ந்து 'ஸ்போர்ட்ஸை எடு; டிரக்ஸை விடு' என தனது ஸ்டைலில் இளைஞர்களுக்கு இன்று அதிகாலையிலேயே மெசேஜ் சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை முதலமைச்சர் விஜய் முன்மொழியை, மாரத்தான் போட்டியின் பங்கேற்பாளர்கள் அனைவரும் வழிமொழிந்தனர்.

அதைப்போல், இந்த மாரத்தான் போட்டியில் முதலமைச்சர் விஜய்யும் கலந்துகொண்டு ஓடி வருகிறார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, வெங்கட ரமணன், மரிய வில்சன் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர். அரசு அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். சுமார் 10 ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவ - மாணவியர்கள் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.

0
0
Report
Advertisement

மாணவர்கள் ஹேப்பி! நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை, சேலம் மக்களின் ஸ்பெஷல் பிளான் என்ன தெரியுமா?

Salem, Tamil Nadu:

Tamil Nadu School Holidays: தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில்தான் பள்ளிகல் திறந்த நிலையில், மொஹரம் பண்டிகை காரணமாக நாளை (ஜூன் 26) தொடங்கி 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்ற செய்தி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அப்போதுதான் புதிய கல்வியாண்டு தொடங்கியிருக்கும். பண்டிகைகளும், அரசு விடுமுறை நாட்களும் குறைவாகவே இருக்கும். அந்த நிலையில், இந்த மாதத்தில் 3 நாட்களுக்கான தொடர் விடுமுறை கிடைப்பது ஒரு ஜாக்பாட் செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.

3 நாட்கள் தொடர் விடுமுறை

இந்த ஆண்டு இஸ்லாமியர்களின் புனித மாதமான மொஹரம் பண்டிகையின் முக்கிய நாளான 'ஆஷுரா' (Ashura), ஜூன் 26 வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த பண்டிகைக்கான விடுமுறை வார இறுதியுடன் இணைந்து வருவதால், 3 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க | திருநெல்வேலி: மாதம் ரூ.80,000 சம்பளம்! ஆவின் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. தேர்வு கிடையாது

3 நாட்கள் தொடர் விடுமுறை எப்படி?

  • ஜூன் 26 (வெள்ளிக்கிழமை): மொஹரம் அரசு பொது விடுமுறை
  • ஜூன் 27 (சனிக்கிழமை): வார இறுதி விடுமுறை (பல அலுவலகங்களுக்கு இது 4-வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாளாகும்)
  • ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை): வார இறுதி விடுமுறை

இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைவருக்கும் தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இதனால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். பலர் இந்த தொடர் விடுமுறையில் தங்களது குடும்பத்துடன் சிறிய சுற்றுலா செல்ல அல்லது சொந்த ஊர்களுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

குஷியில் சேலம் மாவட்ட மாணவர்கள்

சேலம் உட்பட அனைத்து மாவட்ட பள்ளி மாணவர்களும் இந்த தொடர் விடுமுறையால் குஷியில் உள்ளனர். அதுவும், சேலத்தில் கடந்த ஒரு வார காலமாக காலை வேளைகளில் வெயில் சுட்டெறித்து வருகின்றது. அந்த நிலையில், இந்த 3 நாள் தொடர் விடுமுறை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சேலம் மக்கள் பலர் 3 நாள் டூர் செல்ல தயாராகி விட்டனர்.

மேலும் படிக்க | 'போலாம் ரைட்....' 300 புதிய அரசு பேருந்துகளை தொடக்கிவைத்த முதல்வர் விஜய்: எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

சேலம் அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

  • ஏற்காடு: சேலத்தில் இருந்து சுமார் 32 கி.மீ
  • மேட்டூர் அணை: சேலத்தில் இருந்து சுமார் 48 கி.மீ
  • சங்ககிரி கோட்டை: சேலத்தில் இருந்து சுமார் 38 கி.மீ
  • கோதண்டராமர் கோவில்: சேலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ
  • ஒகேனக்கல்: சேலத்தில் இருந்து சுமார் 100 கி.மீ

சேலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் விவரம்

  • 1,400-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள்
  • 300-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள்
  • மொத்தம் 1,700-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் 

மொஹரம் விடுமுறை ஜூன் 25-ஆ? ஜூன் 26-ஆ?

இஸ்லாமியர்களின் சந்திர நாட்காட்டியின்படி (Lunar Calendar), பிறை நிலா தெரிவதன் அடிப்படையில் தான் பண்டிகை தேதிகள் முடிவு செய்யப்படுகின்றன. இதனால் மொஹரம் விடுமுறை ஜூன் 25 (வியாழன்) வருமா அல்லது ஜூன் 26 (வெள்ளி) வருமா என்பதில் சில மாநிலங்களில் குழப்பம் நிலவியது. முதலில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் ஜூன் 25-ஆம் தேதியை மொஹரம் விடுமுறையாக அறிவித்திருந்தன. ஆனால், பிறை சந்திரன் தென்பட்ட தேதியின் அடிப்படையில், தற்போது இந்த மாநிலங்கள் தங்களது விடுமுறையை ஜூன் 26 (வெள்ளிக்கிழமை) அன்றைக்கு மாற்றியமைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

ஆனால், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே ஜூன் 26-ஆம் தேதியை மொஹரம் விடுமுறை நாளாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மொஹரம் மாதத்தின் 10-வது நாளான 'ஆஷுரா' தினம், இந்த ஆண்டு ஜூன் 25 மாலை முதலே தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஜூன் 26 (வெள்ளிக்கிழமை) அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | CM விஜய் அணிந்திருக்கும் சட்டையின் விலை! அடேங்கப்பா..இவ்வளவா?

0
0
Report

ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்குது... முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளும் ஸ்ரீதர் வேம்பு

Chennai, Tamil Nadu:

Sridha Vembu on CM Vijay: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் தனது கிராமப்புறப் பள்ளித் திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான பணிகள் விரைவாக நடந்ததாக ஜோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு புதன்கிழமை கூறியுள்ளார். முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இதற்கு அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஸ்ரீதர் வேம்புவின் கலைவாணி கல்வி மையம்

ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, புதன்கிழமையன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம், தமிழ்நாட்டில் அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் நிலவும் ஊழல் விவகாரத்தின் மீது மீண்டும் கவனத்தைத் திருப்பியுள்ளார். லாப நோக்கற்ற அடிப்படையில் செயல்படும், குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கும் கிராமப்புறப் பள்ளியான 'கலைவாணி கல்வி மையம்' அனுமதி பெறுவதில் சிரமங்களைச் சந்தித்ததாக வேம்பு கூறினார். "கிராமப்புறக் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசக் கல்வியை வழங்கும் எங்கள் கிராமப்புறப் பள்ளியான கலைவாணி கல்வி மையம், முந்தைய அரசிடம் அனுமதி பெறுவதில் தாமதங்களைச் சந்தித்தது. அது முற்றிலும் இலவசப் பள்ளியாக இருந்தபோதிலும், கணிசமான பணம் கோரப்பட்டது; அதுவே அதற்கான ஒரே வழி என்றும் எங்களிடம் கூறப்பட்டது," என்று ஸ்ரீதர் வேம்பு தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டார்.

முந்தைய அரசுடன் ஒப்பீடு

முந்தைய அரசுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தற்போதைய நிர்வாகத்துடன் ஒப்பிட்ட ஸ்ரீதர் வேம்பு, தவெக அரசு பதவியேற்ற பிறகு அனுமதிகள் தாமதமின்றி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "விஜய்யின் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, அனுமதிகள் விரைவாகவும் தானாகவும் கிடைத்துள்ளன. நம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த நேர்மறையான மாற்றத்தைப் பாராட்டுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்திற்காக திரு.விஜய் அவர்களுக்கு நன்றி," என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாடு முக்கிய செய்திகள் Live: எ.வ.வேலு வீட்டில் சோதனை; 300 பேருந்துகளை துவங்கி வைக்கும் CM விஜய்!

திமுக மீது புதிய தாக்குதல்

மற்றொரு பதிவில், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் ஆழமாக வேரூன்றியிருந்ததாகக் கூறி ஸ்ரீதர் வேம்பு அக்கட்சியைச் சாடினார். "திமுக ஆட்சியில் தமிழகத்தில் அதிக அளவில் ஊழல் இருந்தது. இது உலகிற்கே தெரிந்த ஒன்று; இது ஒன்றும் பெரிய ரகசியம் அல்ல," என்று அவர் கூறினார். ஊழல் "இமாலய உயரத்தை" எட்டியுள்ளதாகக் கூறிய வேம்பு, மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சர் ஒருவர் முன்பு கூறிய கருத்துகளையும் சுட்டிக்காட்டினார். அந்த அமைச்சர் வேறொரு துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு ஊழல் குறித்து பகிரங்கமாகப் புகார் அளித்திருந்ததை அவர் குறிப்பிட்டார்.

தனது விமர்சனம் அரசியல் கொள்கை சார்ந்ததல்ல என்று கூறிய அவர் பொதுச் சேவைக்காகத் தான் மதிக்கும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் சுட்டிக்காட்டினார். "இது கொள்கை சார்ந்தது அல்ல. அக்காலத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த கேரள மார்க்சிஸ்டுகள் கூட, திமுக எவ்வளவு ஊழல் மலிந்த கட்சியாக இருந்தது என்பதைச் சொல்வார்கள்," என்று அவர் கூறினார். கேரளாவின் முன்னாள் நிதியமைச்சர் பாலகோபாலைப் பாராட்டிய வேம்பு, "கேரளாவின் முன்னாள் நிதியமைச்சர் திரு. பாலகோபால் போன்றவர்களின் அர்ப்பணிப்புள்ள பொதுச் சேவையை நான் எப்போதும் பாராட்டி வந்துள்ளேன்," என்றும் கூறினார்.

சுயபரிசோதனை அவசியம்

விமர்சிப்பவர்களைக் குறிவைப்பதற்குப் பதிலாக, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காண்பதில் திமுக கவனம் செலுத்த வேண்டும் என்று வேம்பு கூறினார். "திமுக உண்மையாகவே சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்பினால், அவர்கள் தங்கள் ஊழல் விவகாரத்திலிருந்தே அதைத் தொடங்க வேண்டும். அதற்குப் பதிலாக, என்னைப் போன்ற ஒருவனை 'தவெக கைக்கூலி', 'பிராமணர்' அல்லது 'சங்கி' என்றெல்லாம் முத்திரை குத்தித் தாக்குவதிலேயே அவர்கள் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள்," என்று அவர் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | வெயிலுக்கு பிரேக்.. கனமழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்

அமைச்சர் ராஜ்மோகன் போட்ட உத்தரவு

தமிழக பள்ளிக்கல்வுத்துறை அமைச்சர் ஏ.ஜாஜ்மோகம் கடந்த வாரம் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனுமதி மற்றும் சான்றிதழ்கள் குறித்த அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த செயல்முறைகள் எந்த வித லஞ்சமும் இன்றி பெற வழி இல்லாதபடி ஆன்லைன் மூலம் மட்டுமே நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவுக்கு பல கல்வி நிறுவனங்கள் தங்கள் நன்றியை தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ரந்து ஜோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்புவின் இந்த பாராட்டு, விஜய் தலைமையிலான தவெக அரசின் இந்த புதிய முயற்சி உண்மையில் பயனுள்ளதாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் இது குறித்து அளித்த முக்கிய தகவல்கள்:

  • தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ் பெறுவதற்கு தகுதி ஒன்றே ஒரே அளவுகோல்.
  • அனுமதி பெற யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம்.
  • அரசியல் கட்சிகள், கல்வித் தரகர்கள் அல்லது வேறு யாரேனும் பணம் கேட்டு அணுகினால் நம்ப வேண்டாம்.
  • பள்ளிகளுக்கான அங்கீகாரம், புதுப்பித்தல், NOC ஆகிய அனைத்து விண்ணப்பங்களும் இனி ஆன்லைனில் மட்டுமே ஏற்படும்.
  • கல்வித்துறை அதிகாரிகளின் நேரடித் தலையீடு குறையும்.
  • வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.

மேலும் படிக்க | School Holidays: குஷியில் மாணவர்கள்.. 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு.. ஏன் தெரியுமா?

0
0
Report

ஆவின் பாலகம் தொடங்க வேண்டுமா? அரசின் மெகா அறிவிப்பு.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Chennai, Tamil Nadu:

Chennai Aavin Parlour News: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு ஆவின் நிறுவனம், மக்களுக்கு குறைவான விலையில் பால் மற்றும் பால் பொருட்களை வழங்கி வருகிறது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, தயிர், பனீர், ஐஸ்கிரீம், நெய் உள்ளட்ட பால் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஆவின் நிர்வாகம் அவ்வப்போது முக்கியமான அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகர எல்லைக்குள் காலியாக உள்ள 9 ஆவின் பாலகங்களை அமைக்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு ஜூன் 24ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கு ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 9 இடங்களில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ரூ.1 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலகத்தின் உள்கட்டமைப்பு, அலங்காரப் பணிகளுக்கான செலவையும் விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும். அந்த செலவுகள் ஆவின் நிறுவனத்தால் திருப்பி வழங்கப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது.  தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1 லட்சம் டெபாசிட் தொகை செலுத்தி, ஆவின் பாலகத்தை  அமைத்துக் கொள்ளலாம்.

ஆவின் பாலகம் அமைக்க வேண்டிய இடங்கள்

 

வ.எண் மண்டலம் பாலகம் இடம்
1. அசோக் நகர் கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி, சென்னை
2. தென் சென்னை காவலர் குடியிருப்பு, கொந்திதோப்பு, சென்னை
3. தென் சென்னை மிண்ட் தெரு, சௌகார்பேட்டை, சென்னை
4. பெரம்பூர் எண் 131, அபிராம் அவென்யூ 9வது தெரு கவியரசு கண்ணாதாசன் நகர் (ரேணுகா மருத்துவமனை அருகில்) சென்னை
5. அண்ணா நகர் எம்எம்டிஏ காலனி, மதுரவாயல், சென்னை
6. தி.நகர் லலிதாபுரம், தி.நகர், சென்னை
7. பாலவாக்கம் பிடிசி குடியிருப்பு,  பல்லவன் குடியிருப்பு, துரைப்பாக்கம், சென்னை
8. பாலவாக்கம் காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை
9. மயிலாப்பூர் சிஐடி காலனி, ஆழ்வார்பேட்டை, சென்னை

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

  • ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிறுதொழில் அல்லது வணிக அனுபவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • சில்லறை வணிகத்தில் குறைந்தது 2 ஆண்டுகள்  அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
  • கடந்த ஓராண்டுக்கான வங்கி கணக்கு வரவு ரூ.25 லட்சத்தை தாண்டியிருக்க வேண்டும் 
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
  • பாலகத்தின் உட்கட்டமைப்பு செலவை ஆவின் நிர்வாக ஏற்காது.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்க விருப்பப்படுபவர்கள் aavin.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு ஜூலை 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. 

The General Manager, Marketing Unit, TCMPG Ltd, No.3A Pasumpon Muthuramlinganar Salai, Nandanam, Chennai - 35 என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 3300 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

0
0
Report
Advertisement
Advertisement
Back to top