பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
மதுரை குலுங்க... குலுங்க... பச்சை பட்டுடுத்தி வந்த கள்ளழகர் - இதில் விசேஷம் என்ன?
Goripalayam, Tamil Nadu:Madurai Kallazhagar In Vaigai River: மதுரை குலுங்க... குலுங்க... கள்ளழகர் இன்று வைகையாற்றில் எழுந்தருளி பாண்டிய தேசத்து மக்களுக்கு தரிசனம் கொடுத்துவிட்டார். லட்சோப லட்ச பக்தர்கள் கள்ளழகரை தரிசித்து அருள் பெற்றனர்.
உலகப் புகழ்பெற்ற நிகழ்வான இது, ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருள்வார்.
நேற்று முன்தினம் அழகர் புறப்பட்டார்
இந்தாண்டிற்கான மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 3வது நாள் நிகழ்வாக நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 29) அன்று மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டார்.
பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்த புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
எதிர்சேவை நிகழ்ச்சி
நேற்று (ஏப்ரல் 30) அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நள்ளிரவில் திருமஞ்சணம்
கள்ளழகர் வரும் வழி முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி வரவேற்பு கொடுத்தனர். இன்று நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நிகழ்வும் நடைபெற்றது.
தங்க குதிரையில் புறப்பட்ட அழகர்
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்தில், தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். இதனையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவில் முன்பாக உள்ள ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சக்கரை தீபம் ஏற்றி வரவேற்பு
இதனைதொடர்ந்து வைகையாற்றை நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.
வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக் குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். வைகை ஆற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.
கோவிந்தா... கோவிந்தா...
அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்காண பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் 'கோவிந்தா கோவிந்தா' என மதுரையே அதிரும் வகையில் பக்தி கோஷங்களை முழங்கினர். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பச்சை பட்டு உடுத்தியது விசேஷம்
கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குவது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தாண்டு முழுவதும் நாடு செழிப்பாகவும், விவசாயம் அமோகமாகவும், மக்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்பது ஐதீகம். பச்சை நிறம் பசுமை, செழிப்புக்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவே, போதிய மழை பொழிந்து வளம் கூடும் என மக்களால் நம்பப்படுகிறது.
அழகர் உடுத்தும் பட்டு
பச்சை மட்டுமின்றி வெற்றியையும், சுபிட்சத்தையும் குறிக்கும் வகையில் சிவப்பு பட்டு; மங்களகரமான நிகழ்வுகளையும், செல்வத்தையும் குறிக்கும் வகையில் மஞ்சள் பட்டு; அமைதியைக் குறிக்கும் வகையில் வெள்ளை பட்டு உடன் கள்ளழகர் ஆற்றில் இறங்குவார். இந்தாண்டு பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கியிருக்கிறார்.
அடுத்த தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு புறப்பாடு
இதனைத்தொடர்ந்து தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள் மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீரராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ராமராயர் மண்டகப்படியில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டுச் சென்றார்.
சித்திரை திருவிழா ஏற்பாடுகள்
முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2 டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்ஷித் தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. வெளிநாட்டவர்களும் வருகை தந்திருந்தனர்.
விழாக் கோலத்தில் மதுரை
கள்ளழகர் எழுந்தருளியபோது வைகையாற்று நீரை தெளித்து உற்சாகத்துடன் நடனமாடினர். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
"வாராரு வாராரு அழகர் வாராரு... சப்பரம் ஏறி வாராரு... நம்ம சங்கம் தீர்க்க போறாரு..." "சாமி கண்டதும் பாதி சனங்க... சாமியேறி ஆடுதே... சாதி சனங்க கோடி சனங்க... சாதி மறந்து கூடுதே..." என்ற வரிகள் இன்று மதுரையில் எட்டுத்திசையும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. (இந்த வரிகள் கள்ளழகர் திரைப்படத்திற்காக தேவா இசையில், கவிஞர் வைரமுத்து எழுதியவை)
மேலும் படிக்க | பழனி முருகன் கோயில்... உண்டியல் முதல் நாள் கலெக்சன் மட்டும் எவ்வளவு தெரியுமா?
மேலும் படிக்க | விஜய் மீது பாயும் நடவடிக்கை.. டிஜிபிக்கு பறந்த கடிதம்.. என்ன மேட்டர்?
மேலும் படிக்க | தமிழ்நாடு வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு... ஷாக்கில் மக்கள் - பெட்ரோல், டீசல் விலை அப்டேட்
Chennai, Tamil Nadu:LPG Cylinder Price Hike In India: 1ஆம் தேதி நெருங்க நெருங்க ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் பதற்றத்தில் இருந்தது. தேர்தல் சீசனும் முடிந்துவிட்டது, போர் பதற்றமும் முடிந்தபாடில்லை, எனவே பெட்ரோல், டீசல், LPG விலை கடுமையாக உயருமோ என்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது.
இந்நிலையில், மே 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.993 அளவுக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. பெட்ரோல் மற்றும் டீசலும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் போர் சூழல் காரணமாக, எரிபொருளின் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்திருக்கிறது, இருப்பினும் அதன் தாக்கம் உள்நாட்டு நுகர்வோர்களை எட்டவில்லை. உள்நாட்டு விமானங்களுக்கான ATF (விமான டர்பைன் எரிபொருள்) விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒட்டுமொத்தமாக சுமார் 80% பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது பெரும்பாலான நுகர்வோருக்கு நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. மொத்த மற்றும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
மொத்த டீசல் மற்றும் சர்வதேச விமானச் செயல்பாடுகளுக்கான ATF ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சுமார் 4% பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது உலகளாவிய விலை மாற்றங்களின் மாறும் தன்மையை பிரதிபலிக்கிறது" என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.203 அளவுக்கு உயர்ந்து, ரூ.2,246.50 விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.928 விலை உயர்ந்துள்ளது, இதனால் 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.3,1740.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
The retail prices of petrol, diesel, and domestic LPG (14.2 kg cylinders) have remained unchanged, fully insulating domestic consumers from the recent increase in international fuel prices. No change in prices of domestic LPG (14.2 kg) for 33 crore domestic LPG consumers. No…
— ANI (@ANI) May 1, 2026
இந்நிலையில், மே 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.993 அளவுக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. பெட்ரோல் மற்றும் டீசலும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
புதுச்சேரி சிறுமி கொலை: 500 பக்க ஆதாரம்.. கஞ்சா போதை.. பிஞ்சு உயிரை பறித்த கருணாஸ் குற்றவாளி
Puducherry, Puducherry:புதுச்சேரி சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு: புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கிய ஒன்பது வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுமார் ஒரு ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கருணாஸ் என்பவரை குற்றவாளி என அறிவித்துள்ள நீதிமன்றம், தண்டனை விவரத்தை வரும் ஐந்தாம் தேதி அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பின்னணி: புதுச்சேரியை உலுக்கிய மார்ச் 2024 சம்பவம்
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுமியை தீவிரமாகத் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 4-ம் தேதி சிறுமியின் வீடு அருகிலேயே இருந்த ஒரு கழிவுநீர் வாய்க்காலில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் புதுச்சேரி மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால் புதுச்சேரி போர்க்களமாக மாறியது.
போலீஸ் விசாரணை மற்றும் 500 பக்க குற்றப்பத்திரிகை
இச்சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் 59 வயதான விவேகானந்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கஞ்சா போதையில் சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொடூரமாக கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கை விரைந்து முடிக்க புதுச்சேரி அரசு சிறப்பு நீதிமன்றத்தை (POCSO Court) நாடியது. காவல்துறை தரப்பில் சுமார் 500 பக்கங்களுக்கும் மேலான விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அறிவியல் பூர்வ ஆதாரங்கள், டிஎன்ஏ சோதனைகள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்றது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கினார்.
குற்றவாளி உறுதி
இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.
தண்டனை விவரம்
கருணாஸுக்கான தண்டனை விவரங்கள் (ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை) வரும் ஐந்தாம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவேகானந்தன் தற்கொலை
இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியாகக் கருதப்பட்ட 59 வயது விவேகானந்தன், சிறையில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டதால், அவர் மீதான விசாரணை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை
கஞ்சா மற்றும் போதைப் பழக்கத்தால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோனது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது கருணாஸ் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கும், நீதி வேண்டிப் போராடிய மக்களுக்கும் ஒரு சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.
சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரும் ஐந்தாம் தேதி நீதிமன்றம் வழங்கப்போகும் இறுதித் தீர்ப்பு, இது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு முக்கிய தகவல்கள்
விவரம் |
தகவல் |
| சம்பவம் நடந்த இடம் | சோலை நகர், முத்தியால்பேட்டை, புதுச்சேரி |
| சிறுமி மாயமான தேதி | மார்ச் 2, 2024 |
| கைது செய்யப்பட்டவர்கள் | கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (59) |
| தற்போதைய நிலை | கருணாஸ் குற்றவாளி எனத் தீர்ப்பு |
| தண்டனை அறிவிப்பு தேதி | வரும் ஐந்தாம் தேதி |
மேலும் படிக்க - தமிழ்நாட்டை விடுங்க! புதுச்சேரியில் யார் ஆட்சி? கருத்து கணிப்புகள் இதோ!
மேலும் படிக்க - புதுச்சேரி எக்சிட் போல் 2026: ஆட்சியை பிடிக்கப்போவது யார்? விஜய்யின் நிலை இதுதான்
மேலும் படிக்க - இனி பாண்டிச்சேரி சரக்கை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரலாமா? விதிகள் செல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
CSK-ன் முக்கிய ஆயுதம்... பிளேயிங் 11ல் யார்க்கர் மன்னன் - அடுத்த 4 போட்டிகளை ஈஸியா ஜெயிக்கலாம்!
Chennai, Tamil Nadu:Chennai Super Kings, IPL 2026: ஐபிஎல் 2026 தொடரின் முதல் பாதி மிரட்டலாக நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாதியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இரண்டாவது பாதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது, ராஜஸ்தான் அணிதான் பஞ்சாப்பை முதல் அணியாக தோற்கடித்திருக்கிறது. ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச், ராஜஸ்தான் தற்போது வெற்றிகளை குவித்து வருகின்றனர்.
மிரட்டும் டாப் 4 அணிகள்
பஞ்சாப் கிங்ஸ் 13 புள்ளிகளுடனும்; ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடனும் முறையே 2வது, 3வது, 4வது இடத்தில் உள்ளன. இதனால், டாப் 4 இடங்கள் ஏற்கெனவே முடிவாகிவிட்டது போல் தோற்றமளிக்கின்றன.
மற்ற அணிகளின் நிலவரம்
அடுத்து குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே மற்றும் டெல்லி தலா புள்ளிகளுடன் 6வது, 7வது இடத்தில் உள்ளன. கேகேஆர் அணி 5 புள்ளிகளுடன் 8வது இடத்திலும்; தலா 4 புள்ளிகளுடன் மும்பை மற்றும் லக்னோ முறையே 9வது, 10வது இடத்தி நீடிக்கின்றன.
இந்த 3 அணிகளுக்கு இனி வாய்ப்பில்லை
ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் 9 போட்டிகளையும், மற்ற 8 அணிகள் தலா 8 போட்டிகளையும் விளையாடியிருக்கின்றன. அந்த வகையில், அப்படியிருக்க மும்பை, கேகேஆர், லக்னோ அணிகள் மீதம் இருக்கும் தலா 6 போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
இந்த 3 அணிகள் என்ன செய்யும்?
எனவே, டாப்பில் நான்கு அணிகள் வலுவாக இருக்க, கீழே மூன்று அணிகள் வலுவிழந்து கிடக்க, குஜராத் - சென்னை - டெல்லி அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த அணிகளும் தங்களின் அடுத்த அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் என்றாலும், இவர்களுக்கு சற்று வாய்ப்புள்ளது.
சிஎஸ்கேவுக்கு அடுத்த 4 போட்டிகள் முக்கியம்
அதிலும் சிஎஸ்கே அணிக்கு மும்பை, டெல்லி, லக்னோ (2 போட்டிகள்) என அடுத்த நான்கு போட்டிகள் ஓரளவு ஜெயிக்க கூடிய அளவில் இருக்கிறது. இதில் இரண்டு போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த 4 போட்டிகளை வென்றால் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும். கடைசியில் குஜராத் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளை வீழ்த்தும்பட்சத்தில் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து சிஎஸ்கேவின் இடம் உறுதியாகும்.
சிஎஸ்கேவின் பந்துவீச்சு காம்பினேஷன்
சிஎஸ்கேவின் பேட்டிங் ஓரளவு நன்றாக இருந்தாலும், காம்பினேஷன் அமைந்துவிட்டால் நிச்சயம் இன்னும் பலமாகிவிடும். பந்துவீச்சை பொருத்தவரை சிஎஸ்கே நல்ல நிலையில் இருக்கிறது. அகேல் ஹொசைன் ஓரிரு ஓவரை வீசுவார். அன்சுல் கம்போஜ் 2 ஓவர்கள், முகேஷ் சௌத்ரி 3 ஓவர்களை வீசுவார்கள். மிடில் ஓவர்களில் ஆடுகளத்தை பொருத்து நூர் அகமது - அகேல் ஹொசைன் - ஜேமி ஓவர்டன் - குர்ஜப்னீத் சிங் பந்துவீசுகிறார்கள். டெத் ஓவர்களில் ஜேமி ஓவர்டன் 1 ஓவர், குர்ஜப்னீத் சிங் 1 ஓவர், அன்சுல் கம்போஜ் 2 ஓவர்களை வீசுவார்கள்.
குர்ஜப்னீத் சிங் தேவையில்லை
முகேஷ் சௌத்ரி பந்தை ஸ்விங் செய்வார் என்பதாலேயே அவரை பவர்பிளேவில் பந்துவீச வைக்கிறார்கள், அவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்பது பிளஸ். ஏற்கெனவே, ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இருக்கையில், ஸ்குவாடில் இன்னொரு இடதுகை வேகப்பந்துவீச்சாளரின் அவசியம் குறைகிறது. குர்ஜப்னீத் சிங்கின் ஸ்லோயர் பந்துகள் சிறப்பானது என்றாலும் அவரிடம் பெரிதாக யார்க்கர் இல்லை, ஓரளவு கணிக்கும் அளவுக்கு செயல்படுகிறார்.
யார்க்கர் தான் காப்பாற்றும்
எனவே குர்ஜப்னீத் சிங்கிற்கு பதில் ஆகாஷ் மத்வாலை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் களமிறக்க வாய்ப்புள்ளது. டெத் ஓவர்களில் அன்சுல் கம்போஜ் ஒரு முனையில் ரன்களை கட்டுபடுத்தினால், ஆகாஷ் மத்வாலும் அதே விஷயத்தை மிடில் ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் காட்டினால் நிச்சயம் சிஎஸ்கேவின் பந்துவீச்சு பலமாகும். அதுவும் சேப்பாக்கத்தில் பெரிய ஸ்கோயர் பவுண்டரிகள் என்பதால் பவுன்சர் மற்றும் ஸ்லோயர் பந்துகளை காட்டிலும் யார்க்கர் வேரியஷன் பந்துவீச்சு, பெரியளவில் கைக்கொடுக்கும்.
Official Announcement
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2026
Speed incoming!!
Akash Madhwal is now #Yel
Note: Akash Madhwal replaces Ayush Mhatre, who has been ruled out due to hamstring injury.#WhistlePodu pic.twitter.com/tSgnZupmZb
ஆகாஷ் மத்வால் ஏன் சரிப்பட்டு வருவார்?
2023 சேப்பாக்கத்தில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்களில் 5 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டை எடுத்தார். அப்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார். ஆகாஷ் மத்வால் பழைய பார்மில் இல்லையென்றாலும், வைட் யார்க்கர் மற்றும் யார்க்கரை வீசவைப்பதில் சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கைத்தேர்ந்தவர் என்பதால் நிச்சயம் ஆகாஷ் மத்வால் பட்டைத்தீட்டப்பட்டு, சிஎஸ்கேவின் கூர்மையான ஆயுதமாக மாற அதிக வாய்ப்புள்ளது.
சிஎஸ்கேவின் இதை ஏன் செய்ய வேண்டும்?
சிஎஸ்கேவில் பந்துவீச்சு பலமாகும்பட்சத்தில் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளை வென்று பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும். விக்கெட் எடுக்கும் பந்துகளை வீசுவதை விட, ரன்களை கட்டுபடுத்தும் பந்துகளை வீசுவதே தற்போதைய காலகட்டத்தில் சிறப்பான பிளான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது அந்த பாணியை கச்சிதமாக மேற்கொண்டு வருகிறது, அதையும் சிஎஸ்கே அணியும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கேவின் பிளேயிங் 11 கணிப்பு
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், டிவால்ட் பிரெவிஸ், சிவம் தூபே, கார்த்திக் சர்மா/பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், அகேல் ஹொசைன், அன்சுல் கம்போஜ், நூர் அகமது, ஆகாஷ் மத்வால். இம்பாக்ட் வீரர்: முகேஷ் சௌத்ரி.
மேலும் படிக்க | பிளே ஆப் வாய்ப்பை இழந்ததா மும்பை இந்தியன்ஸ்? அதிர்ச்சி தகவல்!
மேலும் படிக்க | சிவம் தூபேவை தூக்குங்க... CSK வலிமையாக மாற... இந்த 2 மாற்றம் ரொம்ப முக்கியம்!
மேலும் படிக்க | சிஎஸ்கே தோல்விகளுக்கு இந்த ஒரு வீரர் முக்கிய காரணமா? என்ன ஆனது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ஷாக்கான மகள்... 76 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை... குற்றவாளி உடனே கைது!
Chennai, Tamil Nadu:Chennai Crime News In Tamil: தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக முதல் நேற்று முளைத்த தவெக வரை ஆளும் திமுக ஆட்சிக்கு எதிராக முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும் ஒன்றாகும்.
குற்றங்களும், போதை புழக்கமும்...
அதேபோல், தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துவிட்டது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதே இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கும் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்துவிட்டதா?
தமிழ்நாடு அரசின் உள்துறை மற்றும் காவல்துறை தகவல்களின்படி, வழக்குப்பதிவான பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2021இல் 8,501; 2022இல் 9,450; 2023இல் 10,210, 2024இல் 9,850; 2025இல் 9,600 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம், அதாவது ஒரு லட்சம் பெண்களில் 25-30 பேர் பாதிக்கப்படுகின்றனர். தேசிய சராசரி 66.4 ஆக உள்ளது. அதைவிட தமிழ்நாட்டில் ஓரளவு குறைவாகவே உள்ளது. டெல்லியில் 144.4 மற்றும் ஹரியானா 118.7 போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் பாதியளவுக்கும் குறைவாகவே உள்ளது.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 5% மற்றும் கொலை வழக்குகள் 8.5% குறைந்துள்ளதாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
விளாத்திகுளம் சம்பவம்
இருப்பினும் கூட, தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. கடந்த மார்ச் மாதம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மூதாட்டிக்கு நடந்த அதிர்ச்சி
இந்நிலையில், சென்னையில் தனியாக இருந்த 76 வயது மூதாட்டி ஒருவரை, வீடு புகுந்து ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குற்றத்தின் பின்னணியை இங்கு காணலாம்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் 76 வயதான மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் நான்கு பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மேலும், மகளும் திருமணமாகி கணவருடன் புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார்.
தனியாக வாழ்ந்து வரும் மூதாட்டியை அவரது மகள் தினமும் வீட்டுக்கு சென்று குளிக்க வைத்து சாப்பாடு கொடுத்து பராமரித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
பிறப்புறுப்பில் ரத்தம்
இந்நிலையில், நேற்று (ஏப். 27) மாலை கீதா வழக்கம் போல் தாய் வீட்டிற்கு சென்று அவரை குளிக்க வைக்க சென்றபோது, அவரது பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தாயிடம் இதுகுறித்து கேட்டதில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், அதே பகுதியை சேர்ந்த 57 வயதான பிளம்பர் மருதப்பன் என்பவன் வீட்டில் புகுந்து தன்னை பாலியல் வன்கொடுக்கும் உள்ளாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மூதாட்டி கொடுத்த புகார்
இதனை கேட்டு, அதிர்ந்து போன மகள் உடனே தாயை எழும்பூரில் உள்ள தாய்சேய் நல அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதிகாலையில் கைதான பிளம்பர்
அதன் பேரில், போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிளம்பர் மருதப்பனை இன்று காலை கூடுவாஞ்சேரியில் வைத்து கைது செய்தனர். அவர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்.
மேலும் படிக்க | ஆபாச வீடியோவை பாரு... 19 வயது பெண்ணுக்கு வந்த மெசேஜ்... பரபரப்பு சம்பவம்!
மேலும் படிக்க | ஆண்டிப்பட்டி முருகன்... பழனியில் கொலை செய்யப்பட்டது எப்படி? - 3 இளைஞர்கள் கைது
மேலும் படிக்க | தி.நகர் மக்களே... விரைவில் வருகிறது மெட்ரோ - இனி போக்குவரத்து பிரச்னை பறந்து போகும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
MI-க்கு இனி நல்ல காலம்... சான்ட்னருக்கு பதில்... பிளேயிங் 11இல் வரும் முக்கிய வீரர் யார்?
Mumbai, Maharashtra:Mumbai Indians Playing 11 Prediction: ஐபிஎல் 2026 சீசன் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி என இரண்டு அணிகளுக்குமே மெகா ஹிட் சீசனாக அமைந்திருக்கிறது. கடந்தாண்டும் இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில் மோதின.
பஞ்சாப், ஆர்சிபி வெற்றி பார்முலா
முன்பெல்லாம், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கும். ஆனால், தற்போது நிலைமை சற்று மாறியிருக்கிறது. அதுவும் கடந்த இரண்டு சீசன்களாக பஞ்சாப் மற்றும் ஆர்சிபி சிறப்பாக விளையாட அவர்கள் மெகா ஏலத்தில் அதிக தொகையுடன் சென்று, பக்காவான வீரர்களை வாங்கி, சரியான காம்பினேஷனை அமைத்ததே காரணம்.
சொதப்பும் மும்பை, சிஎஸ்கே
இதை இந்த முறை சிஎஸ்கேவும், மும்பை இந்தியன்ஸ் அணியும் செய்ய தவறிவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸை விட மும்பை இந்தியன்ஸின் நிலைமை மிக மிக மோசமாக உள்ளது. கடைசியாக 2020ஆம் ஆண்டில்தான் மும்பை கோப்பையை வென்றது. அதன்பின் 5 சீசன்களாக கோப்பை இல்லை. தற்போது 6வது சீசனாக தொடர்ந்து சொதப்பி வருகிறது.
மும்பை பிளே ஆப் போக வாய்ப்பிருக்கா?
நடப்பு சீசனில் மும்பை அணி 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வி என 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. நெட் ரன்ரேட் -0.736 என மிக மோசமான நிலையில் உள்ளது. மீதம் இருக்கும் 7 போட்டிகளிலும் வென்றால்தான் மும்பை பிளே ஆப் போக ஓரளவு வாய்ப்பு கிடைக்கும்.
மும்பைக்கு ஏற்பட்ட பின்னடைவுகள்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் சிறப்பாக அமையாததற்கு இன்னொரு முக்கிய காரணம், சரியான காம்பினேஷனில் பிளேயிங் லெவனை அமைக்காதது. வில் ஜாக்ஸ் இல்லாததால் மும்பையின் கீழ்வரிசை பலவீனமாக இருந்தது. பும்ராவை தவிர்த்து வேகப்பந்துவீச்சில் யாரும் பெரிதாக அச்சுறுத்தவில்லை, அஸ்வானி குமார் தற்போது ஓரளவு சிறப்பாக வீசுகிறார்.
சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் மோசமான பார்ம் மும்பைக்கு பின்னடைவாக அமைந்தது. ஷர்துல் தாக்கூர் - தீபக் சஹார் இந்த முறை வேலைக்கு ஆகவில்லை. இந்திய ஸ்பின்னர்களும் மும்பைக்கு கைக்கொடுக்கவில்லை. ரோஹித் சர்மா காயத்தால் ஓரிரு போட்டிகளை தவறவிட்டதும் சிக்கலாகிவிட்டது.
பலமான ஹைதராபாத் உடன் மோதல்
இந்தச் சூழலில், மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (ஏப். 29) மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து நான்கு போட்டிகளில் வென்று பலமான அணியாக எஸ்ஆர்ஹெச் மும்பை வந்துள்ளது. ரோஹித் காயத்தில் இருந்து மீண்டிருப்பது மும்பைக்கு நல்ல செய்தியாகும்.
சான்ட்னர் விலகல்
மும்பை இந்தியன்ஸ் அணியில் சான்ட்னர் - கசன்பர் சுழல் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், சான்ட்னர் கடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியின் இடது கை தோள்பட்டை பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மாற்று வீரர் கேசவ் மகாராஜ்
சான்ட்னர் விலகியதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு பதில் கேசவ் மகாராஜை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய உள்ளார். தென்னாப்பிரிக்க இடதுகை ஸ்பின்னரான அவர் 30 டி20 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டை எடுத்திருக்கிறார். ஆனால் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பது கடினம்
வில் ஜாக்ஸ் விளையாடுவார்
சான்ட்னர் ஸ்பின்னராக மட்டுமின்றி கீழ்வரிசை பேட்டராகவும் செயல்பட்டார். கேசவ் மகாராஜ் முழுமையாகவே ஸ்பின்னர்தான். எனவே பிளேயிங் லெவனில் சான்ட்னர் இடத்தில் வில் ஜாக்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவன் கணிப்பு இதோ...
ரோஹித் சர்மா, குவின்டன் டி காக், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷெர்பேன் ஷெப்பர்ட், ஹர்திக் பாண்டியா, வில் ஜாக்ஸ், அல்லா கசன்பர், கிரிஸ் பகத்/ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா. இம்பாக்ட் வீரர்: அஸ்வானி குமார்.
மேலும் படிக்க | சிஎஸ்கே அணியில் மற்றொரு இளம் புயல்! யார் இந்த ஆயுஷ் வர்தக்?
மேலும் படிக்க | சிஎஸ்கே தோல்விகளுக்கு இந்த ஒரு வீரர் முக்கிய காரணமா? என்ன ஆனது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
கடக ராசிக்காரர் விஜய்... முதல்வர் பதவியை அடைய... அடுத்து போகும் 5 கோயில்கள்!
Chennai, Tamil Nadu:TVK Vijay Temple Visit Latest News: தமிழ்நாட்டில் இப்போது எங்கு திரும்பினாலும் ஒரே பேச்சு... பாஸ்சிடிவாகவும் சரி, நெகடிவ்வாகவும் சரி தமிழகம் எங்கும் விஜய் குறித்து மட்டும்தான் பேச்சு.
ஹிட்டான விசில் சின்னம்
கரூர் சம்பவத்திற்கு பிறகு தொடர்ச்சியான மக்கள் சந்திப்பு பிரச்சாரங்கள் செய்யவில்லை, வழக்கமான அரசியல் கட்சிகளின் வழியில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் எதுவும் அதிகமாக நடைபெறவில்லை, பல பிரச்சார சுற்றுப்பயணங்களும் ரத்து செய்யப்பட்டன. இத்தனை பிரச்னை இருந்தும் விஜய்யும், தவெகவும், தவெகவின் சின்னமான விசிலும் தமிழ்நாட்டின் பட்டித் தொட்டியில் எல்லாம் ஹிட் அடித்திருக்கிறது.
விஜய்க்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள், இளம்பெண்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் உள்ளிட்டோர் கணிசமாக விஜய்க்கு வாக்களித்திருப்பதாக தெரிகிறது. ஒரு தரப்பினர் விஜய்க்கு 15%-20% அளவுக்கு வாக்குச் சதவீதம் கிடைக்கும், 2-3 தொகுதிகளில்தான் வெற்றிபெறுவார் என்கிறார்கள்,
இன்னொரு தரப்பினர் விஜய்யின் தவெக, அதிமுகவை காலிசெய்துவிடும் என்றும் 30% மேல் வாக்குகளை பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுவிடும் என்றும கணிக்கிறார். இன்னொரு தரப்பினர் விஜய் முதலமைச்சராகிவிடுவார் என்றும் நம்பி வருகிறார்கள். இதில் எது நடந்தாலும் விஜய்க்கு வரலாற்று வெற்றிதான். ஆனால், மக்கள் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பதை மே 4ஆம் தேதி அனைவருமே தெரிந்துகொள்ளலாம்.
திருச்செந்தூரில் விஜய்
இந்தச் சூழலில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 6 நாள்களே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் தற்போது ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. முதல்கட்டமாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஜய் இன்று அதிகாலை தரிசனம் மேற்கொண்டார்.
திருச்செந்தூர் கோயில் சார்பில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பட்டி வேட்டி, சட்டை அணிந்துவந்த விஜய் கடற்கரைக்குச் சென்றும் வழிபாடு நடத்தினார். விஜய்யின் இந்த திடீர் ஆன்மீக விசிட் பலரையும் புருவத்தை தூக்க வைத்திருக்கிறது.
தேர்தல் முடிந்த பின்...
திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தேவாலயம், மசூதி, கோவில் என மும்மதங்களின் வழிப்பாட்டுத் தலங்களும் சென்றார். அது தேர்தலுக்கு முன் நடந்தது என்பதால் அதை 'தேர்தல் நேர ஸ்டண்ட்' என பலரும் விமர்சித்திருந்தார்கள். ஆனால், இப்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், விஜய்யின் இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
விஜய்யின் ராசி, நட்சத்திரம்
விஜய் கிறிஸ்துவர் என்றாலும் அவர் அனைத்து மதங்களையும் பின்பற்று நபராகவே பொதுவெளியில் பார்க்கப்படுகிறார். விஜய் பூச நட்சத்திரம், கடக ராசி என்றும் பொதுவெளியில் அறியப்படுகிறது. வரும் ஜூன் 2ஆம் தேதி கடக ராசியில் குரு பெயர்ச்சி இருப்பதால் இந்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என ஜோதிடர்களும் கணிக்கிறார்கள்.
திருச்செந்தூருக்கு விஜய் சென்றது ஏன்?
அப்படியிருக்க, தங்களின் அரசியல் அதிகாரங்களை நிறைவேற்ற கடலோரத் தலமான திருச்செந்தூரில் முருகனை வழிபடுவது கடக ராசிக்காரர்களுக்கு இருக்கும் தயங்களைப் போக்கி வெற்றிக்கான வேகத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
Thiruchendur, Tamil Nadu: Tamilaga Vettri Kazhagam (TVK) chief and actor Vijay arrives at the Arulmigu Subramaniya Swamy Temple pic.twitter.com/He8kpEXG6u
— IANS (@ians_india) April 28, 2026
எதிரிகளை வெல்லும் ஆற்றலையும் சம்ஹார மூர்த்தியான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வழங்குவார். எனவேதான் விஜய் தனது ஆன்மீகச் சுற்றுலாவை திருச்செந்தூரில் இருந்து தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் ஆன்மீகச் சுற்றுலா
இந்நிலையில், விஜய் தொடர்ச்சியாக ஆன்மீக சுற்றுலாவை மேற்கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர் பதவி கிடைப்பதற்கும், தான் விரும்பும் அரசியல் அதிகாரங்களை பெறவும் விஜய் சில முக்கிய வழிபாட்டு தலங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் செல்ல வாய்ப்புள்ள 5 கோயில்கள்
அந்த வகையில், திருச்செந்தூரை தொடர்ந்து இந்த 5 திருக்கோயில்களுக்கு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய் அடுத்து எந்தெந்த கோயில்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது? அங்கு தரிசனம் செய்வதால் அவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு காணலாம்?
1. திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில்: அரசியலில் அதிகாரத்தை அடைய விரும்புபவர்கள் வணங்க வேண்டிய மிக முக்கியமான திருத்தலமாக திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் உள்ளது. இங்கே உள்ள மனுநீதிச் சோழன் தொடர்பான வரலாறு, தியாகராஜரின் அருள், நீதி தவறாத ஆளுமை திறனை வழங்கும் என நம்பப்படுகிறது.
2. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்: தமிழ்நாடு அரசியலில் அண்ணாமலையார் வழிபாடு என்பது மிகவும் பிரபலமான ஒன்றும். அதிகாரம், ஆதிக்கம், ஆளுமை உள்ளிட்டவைக்கு சூரிய பகவான் முக்கிய காரணம் என ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. அப்படியிருக்க, அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை திருக்கோயிலை வணங்குவது, எதிர்ப்புகளை தாண்டி வெற்றியை அடைய உதவும்.
3. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்: கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் உகந்தவர். செவ்வாயின் பலம் இருந்தால்தான் அதிகாரம் நிலைக்கும். பழனி மலை ஏறி முருகனை தரிசித்தால் நிர்வாகத் திறனும், போராட்ட குணமும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
4. மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில்: அரசியல் ரீதியான எதிர்ப்புகள், மறைமுகச் சதித் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள மயிலாடுதுறையில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் செல்வ முத்துக்குமார் சுவாமி (முருக) வழிபாடு அவசியமானது. அதேபோல், செவ்வாய் பகவானுக்கு உரிய முக்கிய பரிகாரத் தலமாகும்.
5. சென்னை காளிகாம்பாள் திருக்கோவில்: வரலாற்று ரீதியாகவே இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக கருதப்படுகிறது. சத்திரபதி சிவாஜி போன்ற மாவீரர்கள் வழிபட்ட தலம் இது. சென்னையில் அரசியல் களம் காண்பவர்கள் காளிகாம்பாள் வழிபாட்டை மேற்கொள்வார்கள். இங்கு வழிபாடு மேற்கொண்டால் ஆளுமை திறன் அதிகரிக்கும்.
விஜய் வருவாரா?
இந்த கோயில்களுக்கு விஜய் வருகிறார் என அதிகாரப்பூர்வமாக ஏதும் சொல்லப்படவில்லை. ஜோதிடத்தின்படி, அதிகாரத்திற்கு செல்ல விரும்புபவர்கள் இந்த 5 கோயில்களிலும் வழிபாடு நடத்துவார்கள் என்பதால், திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் இநத் கோயில்களுக்கு வர வாய்ப்புள்ளது என்பதே கூறப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, தான் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிருக்கிறார், விஜய். தமிழ்நாடு முழுவதும் இவருக்கு வரவேற்பு இருந்தாலும் தவெக என்ற கட்சி அரசியல் அதிகாரத்தை பிடிக்குமா?, அரசியல் களத்தில் தொடர்ந்து செயலாற்றுமா?, திமுக, அதிமுக போன்ற முன்னணி கட்சிகளுக்கு இணையாக வளர்ச்சி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | விஜய் 2 தொகுதிகளிலும் தோல்விதான்.. 200 இடங்களில் தவெக டெபாசிட் காலி! அதிரடி கணிப்பு
மேலும் படிக்க | தவெகவினர் குஷி.. சங்கீதா வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. என்ன மேட்டர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
திருச்செந்தூரில் அதிகாலையில் சாமி தரிசனம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்!
Thiruchendur, Tamil Nadu:அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தமிழகத்தின் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கடலோரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் செந்திலாண்டவனை தரிசிக்கத் தமிழகம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தருகின்றனர். பொதுவாக எந்த ஒரு கோவிலாக இருந்தாலும், அங்கு அதிகாலையில் சாமி தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலையில் சுவாமி தரிசனம் மற்றும் பூஜைகளில் கலந்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

அதிகாலை தரிசன நேரங்கள் என்ன?
திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் பாடப்படும். அதனை தொடர்ந்து, 5:30 மணி முதல் காலை 6:15 மணி வரை விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அதன் பின்னர், காலை 6:15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 8:00 மணிக்கு காலசந்தி பூஜையும் நடைபெறும்.
மன அமைதி மற்றும் விஸ்வரூப தரிசனம்
பொதுவாக அதிகாலை நேரம் என்பது பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சுழலும் பிரபஞ்ச ஆற்றல் மிக அதிகமாக இருக்கும். அதிகாலையில் கடல் அலைகளின் ஓசையோடு, கோவிலில் ஒலிக்கும் சுப்ரபாதம் மற்றும் வேத மந்திரங்களை கேட்டு முருகனை தரிசிக்கும் போது, மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், நாள் முழுக்க தேவையான நேர்மறை ஆற்றலையும் பெற முடியும். அதிகாலையில் சுவாமிக்கு நடைபெறும் முதல் தரிசனமே விஸ்வரூப தரிசனமாகும். இறைவனின் முதல் பார்வை பக்தர்கள் மீது படும் நேரம் இதுவேயாகும். இந்த விஸ்வரூப தரிசனத்தை காண்பதால், வாழ்வில் அதுவரை இருந்த கஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தும் நீங்கி, நல்ல யோகமும் வெற்றியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கடன் தொல்லைகள் தீரும்
செவ்வாய்க்கிரகத்தின் அதிபதியாக முருக பெருமான் விளங்குகிறார். எனவே, வாழ்க்கையில் தீர்க்க முடியாத கடன் தொல்லைகள், சொத்து பிரச்சனைகள் மற்றும் வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள், அதிகாலையில் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடிவிட்டு திருச்செந்தூர் முருகனை தரிசித்தால், அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் நடைபெறும் என்று நம்பப்படுகிறது. திருச்செந்தூர் கோவில் கடலோரத்தில் அமைந்துள்ளதால், அதிகாலை நேரத்தில் அங்கு வீசும் குளிர்ந்த காற்றை சுவாசித்து, கடலில் நீராடி சாமி தரிசனம் செய்வது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், தொடர்ச்சியான தோல்விகளை சந்திப்பவர்கள் அல்லது தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண நினைப்பவர்கள், புதன்கிழமை அதிகாலையில் முருகனை தரிசனம் செய்தால் தொழிலில் லாபத்தையும், வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவியும் கிடைக்கும்.
குடும்ப ஒற்றுமை மற்றும் செழிப்பு
திருச்செந்தூர் முருகனை அதிகாலையில் குடும்பத்தோடு சென்று தரிசிப்பதன் மூலம், கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். மேலும், பூர்வீகப் பிரச்சினைகள் தீர்ந்து குடும்பம் செழிக்கும் என்றும், பொருளாதார நிலை மேம்படும் என்றும் நம்பப்படுகிறது. அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்யும் போது கோவிலில் பெரிதாக மக்கள் கூட்டம் இருக்காது. எனவே, கூட்ட நெரிசலோ அல்லது எந்த ஒரு சிரமமுமோ இன்றி, அமைதியாக முழு ஈடுபாட்டுடன் முருகனைத் தரிசித்து அவனது பரிபூர்ண அருளைப் பெற்று வர முடியும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க: குரு பெயர்ச்சி: கடக ராசியில் குரு.. இந்த ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்!
மேலும் படிக்க: ராகு கேது பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. செல்வம், அதிர்ஷ்டம் குவியும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Vijay: விஜய்யின் திடீர் திருச்செந்தூர் பயணத்திற்கு காரணம் இது தான்!
Thiruchendur, Tamil Nadu:தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதிகாலையில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியும் விஜய்யின் முதல் ஆன்மீகப் பயணம் இதுவாகும். அதுவும் தேர்தலுக்கு முன்பு இல்லாமல் தேர்தல் முடிந்த பின்பு விஜய் இந்த ஆன்மீக பயணத்தை மேற்கொள்வதால், இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் விஜய். விஜய் உடன் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவரது மேலாளர் உடன் சென்றுள்ளனர்.
#WATCH | Tamil Nadu | Fans and supporters of Tamilaga Vettri Kazhagam (TVK) chief and actor Vijay go wild with excitement as he arrives at the Madurai Airport from Chennai.
— ANI (@ANI) April 27, 2026
He is scheduled to visit Tiruchendur in the morning to offer prayers at the Tiruchendur Murugan Temple. pic.twitter.com/5b3nCl1LQO
அதிகாலையில் சுவாமி தரிசனம்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. பரபரப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் விஜய்க்கு அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. வரும் மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தற்போது விஜய் திருச்செந்தூர் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விஜய் வருகை தந்தார். அதிகாலையில் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
விஜய்யை காண குவிந்த மக்கள்
தற்போது கோடை விடுமுறை என்பதால் பலரும் குடும்பங்களாக கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் ஏற்கனவே அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் விஜய் வருகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், அங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களும் உள்ளூர் பொதுமக்களும் அவரை பார்க்கக் கோவிலில் குவிந்தனர். தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த விஜய்யை பார்த்து ரசிகர்கள் பலரும் கோஷமிட்டனர். கூட்ட நெரிசலில் காரில் இருந்த விஜய், ரசிகர்களை பார்த்து காரில் இருந்து வெளியே வந்து கையசைத்தார். பின்பு, காவல்துறையினர் மற்றும் கோவில் பாதுகாப்பு பணியாளர்கள் விஜய்யை பத்திரமாக கோயிலை விட்டு வெளியே வர உதவினர்.
தலைவன பார்த்துட்டேன்pic.twitter.com/FtJ1PC79b5
— SureshR Tvk TUTICORIN (@TvkSureshR) April 28, 2026
ஆன்மீக அரசியலை கையில் எடுக்கிறாரா விஜய்?
விஜய் தனது எந்த ஒரு படங்களின் வெளியீட்டிற்கும் முன்பாக கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டவரில்லை. இருப்பினும் வேளாங்கண்ணி கோவிலுக்கு வருடத்திற்கு ஒரு முறை விஜய் செல்வார் என்று கூறப்படுகிறது. தற்போது முழு நேர அரசியல்வாதியாகியுள்ள விஜய், திருச்செந்தூருக்கு சென்று சுவாமி தரிசனம் செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஜய்யை யாரும் ஒரு மத சாயம் பூசி பார்ப்பதில்லை; அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து வருகின்றனர். தனது அரசியல் நிலைப்பாட்டில் பலவற்றை திராவிட அரசியலில் இருந்து விஜய் பின்பற்றினாலும், ஒருவரின் தனிப்பட்ட ஆன்மீக உணர்வுகளில் தலையிட மாட்டோம் என்று விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
கடந்த இரண்டு மாதங்களாக தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய்க்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலை வீசியது. ஆரம்பத்தில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே விஜய்க்கு ஓட்டு விழும் என்று கூறப்பட்ட நிலையில், தேர்தலுக்கு பின்பு அது 25 முதல் 30 சதவீதமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விஜய் எத்தனை எம்.எல்.ஏ-க்களை வெல்வார், அவர் முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதற்கெல்லாம் மே நான்காம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள்தான் பதில் சொல்லும்.
மேலும் படிக்க: விஜய் 2 தொகுதிகளிலும் தோல்விதான்.. 200 இடங்களில் தவெக டெபாசிட் காலி! அதிரடி கணிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
பழனி முருகன் கோயில்... உண்டியல் முதல் நாள் கலெக்சன் மட்டும் எவ்வளவு தெரியுமா?
Palani, Tamil Nadu:Palani Murugan Temple Undiyal Collection: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என முருகனின் அறுபடை வீடுகளில் அமைந்துள்ள திருக்கோயில்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக திருக்கோயில்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா செல்வது வழக்கம். இதனாலேயே திருக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதுவும் முருகன் கோயில்களில் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு கூட்டம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
உண்டியல் எண்ணும் பணி
இந்தச் சூழலில், முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், நேற்று (ஏப்ரல் 27) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. கோடை விடுமுறை மற்றும் விஷேட நாட்களை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில், உண்டியல்கள் நிரம்பிய காணிக்கை எண்ணும் பணி தொடங்கிவிட்டது.
ரொக்கம் மட்டும் எவ்வளவு?
கோயில் இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. நேற்று முதல் நாள் முடிவில் மலைக்கோயில் அனைத்து உண்டியல்கள் மூலம் 4 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 739 ரூபாய் ரொக்கம் வருவாயாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி எவ்வளவு கிடைத்தது?
உண்டியலில் பக்தர்கள் ரொக்கமாக மட்டுமின்றி தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களையும் காணிக்கையாக செலுத்துவார்கள். அந்த வகையில், ரொக்கத்தை தவிர்த்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்திய 748 கிராம் தங்கம் மற்றும் 12,893 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் வருவாயாக கிடைத்துள்ளன.
மேலும், இந்திய ரூபாய் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 1448 கரன்சி நோட்டுகளும் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களும், வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் பழனி கோயிலுக்கு அதிகம் வரும் காரணத்தால் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் உண்டியலில் காணிக்கையாக போடப்படுவது வாடிக்கையானதாகும்.
இன்றும் தொடரும்...
நேற்று தொடங்கிய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். உண்டியல்கள் எண்ணும் பணி இன்னும் அதிகமாக இருப்பதால், உண்டியல்களும் அதிகமாக இருப்பதால் இன்னும் இப்பணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பழனி முருகன் கோயிலில் சமீபத்தில் மொத்தம் எவ்வளவு வருமானம் உண்டியல்கள் மூலம் கிடைத்துள்ளன என்பது வரும் நாள்களில் தெரியவரும்.
பழனி கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்
பழனி திருக்கோயிலை பொருத்தவரை எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இப்போது கோடை விடுமுறை என்பதால் கூட்டமும் டபுளாக உள்ளது. மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், பொது தரிசனம், கட்டண தரிசனம் என மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தரிசனம் செய்ய பல மணிநேரங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுபடுத்தும் விதமாக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கு நடந்து செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி வரவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுபடுத்திட ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கல்யாணம், தேரோட்டம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (ஏப். 28) திருக்கல்யாணமும், நாளை முன்தினம் (ஏப். 30) சித்திரை தேரோட்டமும் நடைபெற இருக்கிறது.
மேலும் படிக்க | திருச்செந்தூர் உண்டியல் காணிக்கை... எவ்வளவு தெரியுமா?
மேலும் படிக்க | பக்தர்களுக்கு கட்டுப்பாடு! திருச்செந்தூர் கோயிலில் இனி இதற்கு தடை - அதிரடி உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
கேஸ் சிலிண்டர் புக் பண்றீங்களா? மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசின் ரூல்ஸ்!
New Delhi, Delhi:ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை கடந்த மார்ச் மாதம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தை பதுக்கலை தடுக்கும் விதமாக, மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சில புதிய கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, மார்ச் 1 அன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை அதிரடியாக உயர்த்தின.
மேலும் படிக்க | எச்சரிக்கை! AI வந்ததால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வேலைகளே இருக்காது!

சிலிண்டர் விலை!
இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 60 உயர்த்தப்பட்டு, தற்போது சென்னையில் ரூ. 928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 114 உயர்த்தப்பட்டு, ரூ. 2,043-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களையும், சிறு உணவகங்கள் நடத்துவோரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதிய 25 நாட்கள் கட்டுப்பாடு
விலை உயர்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவியதால், வசதி படைத்த பலர் தேவைக்கு அதிகமாகச் சிலிண்டர்களை முன்பதிவு செய்து இருப்பு வைக்க தொடங்கினர். இதனால், உண்மையான தேவையுடைய ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இந்த பதுக்கலைத் தடுக்கும் நோக்கத்தோடு, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் முன்னெடுப்பு விநியோகக் கொள்கை என்ற புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, இனி ஒரு வாடிக்கையாளர் கேஸ் சிலிண்டரை பெற்ற பிறகு, அடுத்த சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த இடைவெளி 15 முதல் 21 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
25 நாட்களுக்கு முன்பாகவே எவரேனும் சிலிண்டரை புக் செய்ய முயன்றால், அந்த முன்பதிவு தானாகவே ரத்து செய்யப்படும். எரிவாயு தட்டுப்பாட்டை போக்கவும், கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவுமே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை
வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை பெருமளவு உயர்ந்திருப்பதால், சில சிறு உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளை நடத்துபவர்கள், விலை குறைவான வீட்டு உபயோக சிலிண்டர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தடுக்கும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியான தேவைகளுக்கு பயன்படுத்தினால் அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கேஸ் ஏஜென்சிகள், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புகார் அளிக்க உதவி எண்கள்
சிலிண்டர்களை முன்பதிவு செய்தும் நீண்ட நாட்களாக டெலிவரி செய்யப்படவில்லை என்றாலோ, முன்பதிவு தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டாலோ அல்லது கேஸ் டெலிவரி ஊழியர்கள் கூடுதலாக பணம் கேட்டாலோ, வாடிக்கையாளர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Grievance Portal மூலமாகவும் Cash Memo Not Given, Delay in Refill Supply போன்ற பிரிவுகளின் கீழ் நேரடியாக புகார்களை பதிவு செய்யலாம். மத்திய அரசின் இந்த புதிய 25 நாள் கட்டுப்பாட்டு விதிமுறை, கேஸ் சிலிண்டர்கள் சீராகவும் தடையின்றியும் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க
இண்டேன் கேஸ் (Indane Gas): 1800-2333-555
பாரத் கேஸ் (Bharat Gas): 1800-22-4344
ஹெச்பி கேஸ் (HP Gas): 1800-233-3555
தமிழ்நாடு அரசின் மாநில நுகர்வோர் உதவி எண்: 1967 அல்லது 044-28592828 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க | PMEGP திட்டம்: தொழில் தொடங்க மானியம்... மத்திய அரசின் மாஸ் திட்டம், விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
HR துறையில் சாதிக்கலாம்... மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு - தமிழ்நாடு அரசின் இந்த படிப்பை பாருங்க!
Chennai, Tamil Nadu:Tamil Nadu Education Latest Updates: வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை - Labour Management) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை - Labour Management) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு - Post Graduate Diplomo in Labour Administration), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
பிரத்யேக கல்வித் தகுதி
சென்னை பல்கலைக் கழகத்தால் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றன.
பி.ஏ. மற்றும் எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை, பிஜி.டி.எல்.ஏ., டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
— TN DIPR (@TNDIPRNEWS) April 27, 2026
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் அறிவிப்பு.#TNDIPR | pic.twitter.com/LKjh78GGzc
வேலைவாய்ப்பு
மேற்குறிப்பிட்ட படிப்புகள் மனிதவள மேம்பாட்டு துறையில் சீரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. இங்கு பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக (Human Resource Manager) பணிபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர் சேர்க்கை
இந்நிலையில், பி.ஏ. மற்றும் எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகளுக்கு 2026 – 2027ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
12ஆம் வகுப்பு முடித்த விருப்பமுள்ள மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்பையும், இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்பையும், முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
ஆண்களுக்கு மட்டும் தங்கும் விடுதி வசதி
விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தங்கும் விடுதி வசதி, இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 18ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
ஒரு விண்ணப்பத்தின் கட்டணம் ரூ.200 ஆகும். பட்டியல் சமூகம் மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.100 ஆகும். விண்ணப்பத்தை பெறும்போது, சாதி சான்றிதழின் நகலை சமர்பிப்பதும் அவசியமாகும்.
தபால் மூலம் பெற வேண்டும்
விண்ணப்பங்களை தபால் மூலமாக பெற வேண்டும். விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200, SC/ST மாணவர்கள் என்றால் ரூ.100 மற்றும் தபால் கட்டணம் ரூ.50 ஆகியவற்றுக்கான வங்கி வரைவோலையினை (Bank Demand Draft) "The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai" என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
மதிப்பெண் மற்றும் தமிழ்நாடு அரசின் விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு...
இதுகுறித்து உங்களுக்கு கூடுதல் விவரங்களோ அல்லது சந்தேகமோ இருக்கும்பட்சத்தில் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பாளர்கள் இருவரின் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
- ஆராய்ச்சி அலுவலர், முனைவர், M. காமராஜ், மொபைல் நம்பர் - 8667754203
- உதவி பேராசிரியர், முனைவர் S. கார்த்திகேயன், மொபைல் நம்பர் - 9965899822
நேரில் சென்று விசாரிக்க...
நேரில் சென்று விசாரிக்க விரும்புபவர்கள் அம்பத்தூர் மங்களாபுரம், மின்வாரிய சாலையில், அரசு ஐ.டி.ஐ கல்லூரிக்கு பின்புறம் அமைந்துள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கு (சென்னை 600098) செல்லலாம். அதன் தொலைபேசி எண். 044 - 29567885 / 29567886. tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் நீங்கள் தொடர்புகொள்ளலாம். எனவே, 12ஆம் வகுப்பு முடித்து என்ன படிக்கலாம்? என யோசனையில் உள்ள மாணவர்களும், மனிதவள மேம்பாட்டுத்துறையில் சாதிக்க விரும்புபவர்களும் தயங்காமல் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! AI வந்ததால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வேலைகளே இருக்காது!
மேலும் படிக்க | PMEGP திட்டம்: தொழில் தொடங்க மானியம்... மத்திய அரசின் மாஸ் திட்டம், விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சிஎஸ்கே தோல்விகளுக்கு இந்த ஒரு வீரர் முக்கிய காரணமா? என்ன ஆனது?
Chennai, Tamil Nadu:இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியான தோல்விகளால் புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள சிஎஸ்கே அணி, பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் முக்கிய நட்சத்திர ஆட்டக்காரரான சிவம் துபே, தொடர்ந்து ரன்கள் அடிக்க தவறி வருவதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் மிகவும் மந்தமாக விளையாடிய சிவம் துபே 16 பந்துகளில் 21 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது இந்த மந்தமான ஆட்டமே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க: மஞ்சள் ஜெர்சியில் தோனியை பார்க்க முடியாது? அஸ்வினால் ரசிகர்கள் அதிர்ச்சி

பத்ரிநாத் கடும் சாடல்
சிவம் துபேயின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் வெளிப்படையாக பேசியுள்ள பத்ரிநாத், "சிவம் துபே ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாக மாறிவிட்டார். அவர் தற்போது களத்தில் அணிக்கு ஒரு சுமையாக தான் இருக்கிறார். சிக்ஸர்கள் அடிப்பதிலும், ஸ்பின்னர்களை எதிர்கொள்வதிலும் வல்லவரான அவர், இந்த சீசன் முழுவதும் அந்தத் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டார். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 195 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சென்னை அணி, ஆரம்பத்தில் மிக சிறப்பான நிலையில் தான் இருந்தது. ஆனால் 11வது ஓவரில் சர்பராஸ் கான் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தின் போக்கு முழுமையாக மாறிவிட்டது. அடுத்து வந்த டெவால்ட் பிரெவிஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். அந்த நெருக்கடியான சூழ்நிலையில் களமிறங்கிய சிவம் துபே, பந்துகளை சரியாக எதிர்கொள்ள திணறினார். அவரால் டைமிங் செய்து பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. துபேயின் ஆட்டத்திறன் இந்த சீசனில் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது," என்று கூறியுள்ளார்.
சிவம் துபே ஏமாற்ற காரணம் என்ன?
கடந்த சில சீசன்களாக சென்னை அணியின் மிடில்-ஆர்டரில் முதுகெலும்பாக திகழ்ந்தவர் சிவம் துபே. குறிப்பாக ஐபிஎல் 2023ல் 418 ரன்களை குவித்து அசத்தினார். ஆனால், நடப்பு 2026 சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒரு அரைசதம் கூட அடிக்காமல் வெறும் 128 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்களும், கொல்கத்தா அணிக்கு எதிராக 13 ரன்களும் என தொடர்ந்து சொதப்பி வருகிறார். ரூ. 18 கோடி என்ற இமாலய தொகைக்கு தக்கவைக்கப்பட்ட ஒரு வீரர், அந்த விலைக்கு ஏற்ப விளையாடாதது அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவரது இந்த தொடர் சறுக்கலுக்கு, அணியில் அவருக்கான சரியான பொறுப்பு ஒதுக்கப்படாததே காரணம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் ஒரு ஃபினிஷரா அல்லது மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனா என்பதில் உள்ள குழப்பமும், பேட்டிங் வரிசையில் அடிக்கடி செய்யப்படும் மாற்றங்களுமே அவரது ஃபார்மை பாதித்துள்ளது.
கேப்டன்கள் பொறுப்பேற்க வேண்டும்
தொடர் தோல்விகளால் துவண்டுள்ள சென்னை அணியை மீட்க வேண்டுமென்றால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவர் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என பத்ரிநாத் ஆலோசனை வழங்கியுள்ளார். "அணியில் ஒரு வீரர் நிலையாக நின்று ஆட வேண்டியது அவசியம். அப்போது தான் மற்ற பேட்ஸ்மேன்கள் அவரை சுற்றி எந்தவித அழுத்தமும் இன்றி தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். சிஎஸ்கே அணியின் தற்போதைய நிலை கவலைமளிப்பதாக உள்ளது. அவர்கள் தங்களின் வியூகங்களை உடனடியாக மாற்றியாக வேண்டும்," என்று பத்ரிநாத் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2026
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே, உர்வில் படேல், நூர் அகமது, நாதன் எல்லிஸ், ஸ்ரேயாஸ் கோபால், கலீல் அகமது, ராமகிருஷ்ணா கோஷ், முகேஷ் சவுத்ரி, ஜேமி ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், அன்ஷுல் காம்போஜ், அகீல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மேட் ஹென்றி, ராகுல் சாஹார், ஜாக் ஃபோல்க்ஸ்.
மேலும் படிக்க: டரியலான டெல்லி... பவர்பிளேவில் குறைவான ஸ்கோர் இதுதான் - டாப் 8 லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
பிரியாணிக்கு பின் தர்பூசணி... ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி - உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Mumbai, Maharashtra:Bizarre News: கடந்த சனிக்கிழமை இரவு (ஏப்ரல் 25) அன்று மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்த 13 வயதான சைனப், அவரது மூத்த சகோதரி மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் தடபுடலாக பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.
இரவு பிரியாணி சாப்பிட்ட பின்னர் நள்ளிரவு வேளையில் அனைவருக்கும் இனிப்பு சாப்பிட வேண்டும் என தோன்றியிருக்கிறது. எனவே, அவர்கள் தர்பூசணி பழத்தை இனிப்பிற்காக சாப்பிட்டதாக தெரிகிறது.
நான்கு பேரும் உயிரிழந்தனர்
உடனே அடுத்த நாள் (ஏப். 26), அவர்களுக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவர்கள் நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதுவும் கைக்கொடுக்கவில்லை. மருத்துவமனையிலேயே 4 பேர் கொண்ட மொத்த குடும்பமும் உயிரிழந்தது.
கெட்டுப்போன உணவை சாப்பிட்டதன் காரணமாக நான்கு பேரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மேற்கொண்டு விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பையில் அப்துல்லா அப்துல் காதர் (40) என்பவர் சிறு மொபைல் கடையை வைத்திருக்கிறார். அவரது மனைவி நஸ்ரின் (35), குழந்தைகள் ஆயிஷா (16), சைனப் (13) ஆகியோர் அவர்களது உறவினர்களுடன் இரவு உணவருந்தி உள்ளனர். 5 உறவினர்களுடன் இரவு 10.30 மணியளவில் சாப்பிட்டுள்ளார். அதில் பிரியாணியும் அட்ககம். இரவு உணவை முடித்துவிட்டு பைதோனியில் உள்ள அவர்களது வீட்டுக்கு அப்துல் காதர், அவரின் மனைவி, குழந்தைகள் சென்றுவிட்டனர்.
நள்ளிரவில் தர்பூசணி
வீடு திரும்பும் வரை யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. வீட்டுக்குச் சென்ற பின்னர், நள்ளிரவு 1 மணியளவில் குடும்பத்தினர் நான்கு பேரும் தர்பூசணி பழத்தை சாப்பிட்டிருக்கிறார்கள். பின்னர், அதிகாலை 5 மணிக்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கடுமையாக வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து உயிரிழப்பு
ஆரம்பத்தில் அருகில் இருந்த மருத்துவரை பார்த்து பரிசோதித்துள்ளனர். இருப்பினும் நிலைமை மோசமாக உடனே அவர்கள் ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர். அப்துல் காதரின் இளைய மகள் காலை 10.15 மணிக்கு உயிரிழந்தார். அதன்பின் அவரது தாயார் நஸ்ரின், ஆயிஷா ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இரவு 10.30 மணிக்கு அப்துல் காதர் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவர் சொன்னது என்ன?
முதலில், குடும்பத்தினர் நால்வரின் உடல்நிலையையும் பரிசோதித்த சையத் குரேஷி கூறுகையில், "அவர்கள் அப்போதே மிகவும் மோசமான நிலையில் இருந்தனர், கடும் சோர்வாக தென்பட்டனர். கடுமையாக வாந்தி, பேதி ஏற்பட்டது அவர்களுக்கு. அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன், அவர்கள் தர்பூசணி பழத்தை சாப்பிட்டதாக என்னிடம் சொன்னார்கள்" என்றார்.
ஃபுட் பாய்சன்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நால்வருக்கும் உடல்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. 12 மணிநேர இடைவெளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததற்கு ஃபுட் பாய்சனே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
காவல்துறையினர் பாதியளவு உண்ணப்பட்ட தர்பூசணித் துண்டு ஒன்றை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மும்பை காவல்துறையின் துணை ஆணையர் பிரவீன் முண்டே, "பிரேதப் பரிசோதனையின் போது உடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கூடுதல் விசாரணைக்காக எடுத்துச்செல்லப்பட்டன" என்றார். இந்த விசாரணைக்காக தடயவியல் மற்றும் உணவுத் துறைகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. ஜே.ஜே மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறை, அந்த தர்பூசணி பழத்தில் நோய்த்தொற்றுகள் அல்லது பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டறிய பரிசோதித்து வருகிறது. அனைத்து விசாரணைகளுக்கும் பிறகே உயிரிழப்புக்கான காரணங்கள் உறுதியாகும்.
மேலும் படிக்க | ரூ.80 லட்சம் சம்பளம் வாங்கும் நபரை... கல்யாணம் பண்ண மறுத்த பெண் - காரணம் தெரியுமா?
மேலும் படிக்க | மதுப்பிரியர்களுக்கு ஷாக்... மதுபான விலை உயர்கிறது... அதுவும் மே 1 முதல்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
தி.நகர் மக்களே... விரைவில் வருகிறது மெட்ரோ - இனி போக்குவரத்து பிரச்னை பறந்து போகும்!
Chennai, Tamil Nadu:Chennai Metro Rail Limited: சென்னையில் முதல்கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அன்றாடம் மக்கள் பயன்பாடுக்கு பேரூதவியாக இந்த இரு வழித்தடங்களும் உள்ளன.
2ஆம் கட்ட மெட்ரோ - ஒரு பார்வை
சென்னையின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, பொது போக்குவரத்தை எளிமையாக்குதல் மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கூடுதலாக மூன்று வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மொத்த தூரம்: 116.1 கி.மீ.,
மொத்த மதிப்பு: ரூ.63,246 கோடி
3வது வழித்தடம்: மாதவரம் டூ சிறுசேரி - 45.4 கி.மீ.,
4வது வழித்தடம்: பூந்தமல்லி டூ கலங்கரை விளக்கம் - 26.1 கி.மீ.,
5வது வழித்தடம்: மாதவரம் டூ சோழிங்கநல்லூர் - 44.6 கி.மீ.,
விரைவில் பூந்தமல்லி - வடபழனி
அந்த வகையில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை கொண்ட 4வது வழித்தடத்தில் பூந்தமல்லி பைபாஸ் முதல் போரூர் மற்றும் போரூர் முதல் வடபழனி வரையிலான பணிகள் முடிந்துள்ளன. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை இழக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் இடையே 10 ரயில் நிலையங்கள் மட்டுமே உள்ளன. வடபழனி - போரூர் வரை ஒரு நேரத்தில் ஒரு ரயில் வரவே அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அடுத்த பனகல் பார்க் மெட்ரோ
இதே வழித்தடத்தில் அடுத்து, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பனகல் பூங்கா வரை தண்டவாள பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளன. இருபுறமும் சேர்த்து மொத்தம் 5.8 கிலோ மீட்டர் நீளத்திற்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த வழித்தடத்தின் உயர்மட்ட பாதையை வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணிகள் முழு வீச்சில்...
இதற்கான கட்டுமானம் தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் சவாலான இருக்கும் என கூறப்படுகிறது. தண்டவாளம் அமைக்கும் பணிகள் மட்டுமின்றி மெட்ரோ ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் மேல்நிலை மின்சாரக் கம்பிகள் அமைக்கும் பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் மாதத்திற்குள் வந்தால்...
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், தி.நகர் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பயனடைவார்கள். பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் செயல்பாட்டிற்கு வந்தால், மக்களால் தற்போது செயல்பட்டு வரும் வழித்தடத்துடன் எளிமையாக இணைந்துக்கொள்ளளாம். இது பயணிகளின் நேரத்தை வெகுவாக குறைக்கும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வடபழனியோடு நிறுத்தாமல் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு பனகல் பார்க் வரை கொண்டு வந்தால் சென்னையின் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஒருபடி உயரும், மக்களுக்கும் பெரும் பயனாக அமையும்.
மேலும் படிக்க | பழைய கார்டுக்கு குட்பை.. மே 1 முதல் மெட்ரோ நிர்வாகம் அதிரடி!
மேலும் படிக்க | கோயம்பேடு - டிரேட் சென்டர் மெட்ரோ... ஜூன் மாதம் வராது? - காரணம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
