பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
கரூரில் மக்களை கொன்றது போலீஸ்... ஸ்டாலின் தான் காரணம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகீர்
Salavankuppam, Tamil Nadu:Minister Aadhav Arjuna About Karur Stampede : தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா மாமல்லபுரத்தில் இன்று (ஜூன் 2) நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம் ஆனந்த், திருச்சியைச் சேர்ந்த வளர்மதி உள்ளிட்ட ஏராளமானோர் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
பிரம்மாண்டமாக நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விழாவில், அமைச்சரும், தவெக தேர்தல் பிரச்சார மேலாணஅமைப்பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார்.
"கரூர் விவகாரத்தில் தனிப்பட்ட கணக்கு ஒன்று உள்ளது. அந்த கணக்கை தீர்க்காமல் விடமாட்டோம். கரூரில் காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள். கரூர் மக்களின் கண்ணீரால்தான் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்றார்" என பகீரங்கமாக திமுக மீதும், ஸ்டாலின் மீதும் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டி உள்ளார்.
செந்தில் பாலாஜி தலைமறைவு...? கரூரில் சல்லடை போட்டு தேடும் போலீஸ் - அடுத்தது என்ன?
Karur, Tamil Nadu:Senthil Balaji Abscond : அடுத்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சாபநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரில், தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இளைய சகோதரர் அசோக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை போலீசார் கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, பண்ணை உள்ளிட்ட இடங்களிலும் சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கரூரில் உள்ள இடங்களில் செந்தில் பாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் செந்தில் பாலாஜி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால் செந்தில் பாலாஜி நேரடியாக செய்தியாளர்களை சந்திப்பார், ஆனால் இதுவரை அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. விரைவில் கைதாகலாம் என்றும் கூறப்படுகிறது.
திமுகவில் இதுதொடர்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் கொண்டுவந்த புதிய வசதி... மத்திய அரசு போட்ட திடீர் தடை - என்ன காரணம்?
New Delhi, Delhi:Whatsapp Username Feature: வாட்ஸ்அப் செயலியில் மொபைல் எண் இல்லாமல் தொடர்புகொள்ளும் புதிய Username அம்சத்தை கொண்டுவர மெட்டா நிறுவனம் முடிவெடுததுள்ளது. இதற்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மொபைல் எண் இல்லாதபட்சத்தில் சைபர் மோசடி குற்றவாளிகளை கண்காணிப்பதில் சைபர் கிரைம் பிரிவிற்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், Username அம்சம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும்; இந்தாண்டின் கடைசியில் படிப்படியாக வெளியிடப்படும் என்றும் வாட்ஸ்அப் தெளிவுப்படுத்தி உள்ளது.
எனவே, இந்த மூன்று நாள்களுக்குள் இந்த அம்சம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கலந்தாலோசனைகள் முடியும் வரை இந்தியாவில் இதை செயல்படுத்தாமல், நிறுத்தி வைக்குமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தனியுரிமை, பாதுகாப்பு, மோசடி தொடர்பான சாத்தியமான பிரச்னைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விஜய் கரூர் போகும் முன்... கைதாகிறாரா செந்தில் பாலாஜி...? திமுகவை முந்தும் தவெக!
Chennai, Tamil Nadu:Tamil Nadu Politics, Senthil Balaji : தவெக எம்எல்ஏக்கள் 15 பேரைத் தூக்க முயற்சி நடந்து வந்ததாகவும், தவெகவில் 20 எம்எல்ஏக்கள் வரை அவர்களிடம் பேரம் பேச முயற்சிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக எம்எல்ஏவிடம் நடத்தப்பட்ட பேரத்தில் செந்தில் பாலாஜி பெயர் மற்றும் தவெக எம்எல்ஏவிடம் நடத்தப்பட்ட பேரத்தில் செந்தில் பாலாஜி பெயர் அடிபட்டுள்ளது.
முன்னதாக, ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசி, தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறி IDPS திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
40 நாள்களாக நடக்கும் பேரம்
அப்போது பேதிய அவர், "சற்று நேரத்துக்கு முன்பாக சென்னை காவல் துறையில் இருந்து உங்களுக்கு செய்தி ஒன்று வெளிவந்திருக்கும். 40 நாட்களாக நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம், திமுகவும் ஸ்டாலினும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இன்றைய செய்தி குறிப்பு அதன் வெளிப்பாடாகவே வெளிவந்துள்ளது.
திமுகவை சேர்ந்த முக்கியமான நபர் செந்தில் பாலாஜி போன்றவர்கள், ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் உத்தரவு பேரில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து 10 கோடி ரூபாய் தருகின்றோம், 20 கோடி ரூபாய் தருகிறோம் என்று எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த 40 நாட்களாக தொடர்பு கொண்டு வருகின்றனர்.
கையும் களவுமாக கைது
நாங்கள் கண்டிப்பாக இத்தனை சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்போம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவர்களிடம் மறுக்கையில் அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர்.
எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயர் மிரட்டியவர் தற்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குதிரை பேரத்தில் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ அவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
ரூ.50 கோடி வரை பேரம்
குறிப்பாக நரேஷ் மற்றும் தியாகராஜன் என்ற இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நரேஷ் என்பவர் செந்தில் பாலாஜியுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். இதை போன்ற கேவலமான கீழ்த்தரமான பணிகளை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின், செந்தில் பாலாஜி போன்ற நபர்களை பயன்படுத்தி 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசும் போக்கினை முழு நேரமாக ஈடுபட்டு வருகின்றனர்
அடுத்து வரும் கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது வைக்கப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் திமுகவுக்கு ஆதரவாக l வாக்களிக்க வேண்டும் என பேரம் பேசி உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நபர்கள் புகார் அளித்துள்ளனர்.
குறுக்கு வழியில் முயற்சிக்கும் இபிஎஸ்
லட்சக்கணக்கான கோடியை திமுக ஆட்சியில் கொள்ளையடித்து விட்டு எப்படியாபாது சட்டமன்ற உறுப்பினர்களை வாங்கிவிடலாம் என்று முயற்சி செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று இவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்.
இது போன்ற கீழ்த்தனமான செயல்களில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சட்டபூர்வமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நேரடியாக செந்தில் பாலாஜியுடன் பயணிப்பவர்கள் அவருடைய கரூர் நிறுவனத்தில் யாரெல்லாம் பணிபுரிந்து இருக்கிறார்களோ மற்றும் அவருடைய கரூர் கேங் நபர்கள் மீது நடவடிக்கை சட்டபூர்வமாக எடுக்கப்படும்.
ஸ்டாலினுக்கு வெட்கம் இல்லையா?
இது மாதிரியான குதிரை பேரத்தினை நிறுத்த வேண்டும், இது போன்ற குதிரை பேரத்தில் ஈடுபட்டு விட்டு மறுபக்கம் எங்கள் மீது புகார்களை தெரிவிக்கும் ஸ்டாலினுக்கு சிறிதளவும் வெட்கம் இல்லையா...?
இதற்கு தான் மக்கள் உங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர். உங்களுடன் பயணித்த கூட்டணி கட்சிகள் உங்களை விட்டு வெளிவந்து விட்டனர். இந்தக் குதிரையை பேரத்தில் கூட வெற்றி பெற முடியாமல் இருக்கிறார் ஸ்டாலின்.
தற்பொழுது செந்தில் பாலாஜியின் நெருங்கிய நபர் கைதாகி உள்ளதால் செந்தில் பாலாஜி தொடர்பான குற்றங்கள் நமக்கு வெளி வருகிறது. ஆனால் இதைப் போன்று எத்தனை பேர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என யாருக்கு தெரியும்?
நாளை தேர்தல் வந்தாலும் தவெக வெல்லும்...
ஸ்டாலின் இதனை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் உங்கள் மாவட்ட செயலாளர்கள் போல் ஒரு தொகுதிக்கு 200 கோடி ரூபாய், ஆயிரம் கோடி ரூபாய் என்று நாங்கள் செலவளிக்கவில்லை. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெறும் மூன்று அல்லது நான்கு லட்சம் ரூபாய் மட்டுமே செலவழித்தனர். அடுத்த தேர்தலிலும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படிதான் வெற்றி பெறுவார்கள்
மக்கள் அனைவரும் எங்கள் மீது 100 சதவீதம் நம்பிக்கை வைத்துக்கொண்டு வாக்களித்துள்ளனர் , எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். இன்று அல்லது நாளை தேர்தல் வந்தாலும் அதில் நாங்கள் சந்தித்து நாங்களே வெற்றி பெறுவோம்.
அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்
திராவிட கழகம் ஆட்சியில் கடந்த ஐந்து வருடமாக மக்களுக்கு செய்த அநீதிகள் மற்றும் தீங்கின் காரணமாகவே நீங்கள் தோல் தேர்தலில் தோல்வி அடைந்தீர்கள். அதனை உணர்ந்துகண்டு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
உங்களை (ஸ்டாலின்) போல் இதுவரை முதலமைச்சர் வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் தோல்வியடைந்தது கிடையாது, இதுதான் மக்கள் உங்களுக்கு கொடுத்த பாடம். ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் அல்லது நீங்கள் முன்பாக முடிவு செய்தது போல் திமுக - அதிமுக இணைந்து பாரதிய ஜனதா கட்சியிடம் சேர்ந்து அரசியல் ஆதாயத்தை தேடி சொல்லுங்கள்.
அரசியல் எதிர்காலம் இல்லை
திமுக குதிரை பேரம் பேசும் நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிந்தவுடன் ஆளுநருக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும். தன் நபர்கள் இல்லை என்று ஆதாரத்தை மட்டும் காட்ட வேண்டியது தானே...? திமுக - அதிமுக இடையே கூட்டணி என்ற பேச்சுவார்த்தையின் காரணமாகவே கூட்டணி கட்சிகள் வெளியேறினர். அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளில் யாருக்கும் அரசியல் எதிர்காலம் இல்லை.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பது சிறிய காரியம் கிடையாது. மக்களை சந்திக்க விடாமல் செய்தது ஸ்டாலின் மற்றும் எடப்பாடி ஆகிய இருவர் மட்டுமே. அதன் காரணமாகவே இரு கட்சிகளில் இருந்து வெளியேறி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொள்கின்றனர். எடப்பாடி முதல்வர் ஆக்குவதற்கு முயற்சிக்கிறோம் என ஸ்டாலின் கூறினால் எந்த கூட்டணி கட்சிகள் அவருடன் பயணிக்க தயாராக இருப்பார்கள்.
மகனை வைத்து பயிற்சி
மு.க. ஸ்டாலின் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு எந்த வேலையும் பார்க்காமல் எப்படியாவது பொறுப்பினை பணம் கொடுத்து வாங்கி விட வேண்டும் என இந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படியாவது குறுக்கு புதியில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியும் என்று நினைத்தால் அது முடியாது.
உங்கள் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் உங்கள் மகனை வைத்து பயிற்சி மேற்கொண்டீர்கள். அரசியலுக்கு அது வெற்றி பெற முடியவில்லை, இன்று அவர் துபாயில் இருக்கிறார். துபாயில் உதயநிதிக்கு என்ன வேலை?. முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் பயிற்சி தாருங்கள், நீங்களே கடைசி வரை அரசியல்வாதியாக ஆக முடியவில்லை.
திமுக கதை முடிந்துவிட்டது
இன்னைக்காவது ஸ்டாலின் தலைமையிலான அரசு என்று சொல்லி இருக்கிறாரா? திராவிட மாடல் அரசு என்றுதான் சொல்லி இருக்கின்றார். ஏனென்றால் அவருக்கே அந்த தைரியம் கடைசி வரை வரவில்லை. இப்போதும் நாங்கள் சொல்கின்றோம் திமுகவுடைய அத்தியாயம் இத்துடன் முடிவடைந்துவிட்டது. என்றைக்கு அதிமுகவுடன் சேர்ந்து பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று எண்ணம் வந்ததோ அன்றே திமுக உடைய அத்தியாயம் முடிவடைந்துவிட்டது" என பேசியிருந்தார்.
செந்தில் பாலாஜி கைதா...?
இவ்வாறு அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அடுக்கி உள்ளார். இருப்பினும் இதுகுறித்து திமுக தரப்பிலோ அல்லது செந்தில் பாலாஜி தரப்பிலோ இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
வரும் ஜூலை 10 மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் விஜய் கரூருக்குச் செல்வதற்குள் செந்தில் பாலாஜி மற்றும் அவரது இளைய சகோதரர் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்படலாம் என்றும் பேசி உள்ளனர்.
தொடர்ந்து சோபா மாடல், குதிரை பேரம் என தவெக மீது திமுக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது திமுகவை மிஞ்சும் அளவுக்கு தவெக குற்றஞ்சாட்டை அடுக்கி உள்ளது. இதற்கு திமுகவின் பதில் என்ன என்பதே அரசியல் களத்தில் தற்போதைய கேள்வியாக உள்ளது.
பொறியியல் தரவரிசை பட்டியல் வந்தாச்சு... ரேங்கிங் எண்ணை தெரிந்துகொள்வது எப்படி? முழு விவரம்
Chennai, Tamil Nadu:TNEA Ranking List 2026 : பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று (ஜூலை 1) வெளியிடப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின் பேசிய அமைச்சர் விஸ்வநாதன் பல்வேறு தகவல்களை வெளியிட்டார். தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு விண்ணப்பப் பதிவு செய்ய கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிர்தது 235 என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | VB GRAM G Act : புதிய 125 நாள் வேலை திட்டத்தின் 8 முக்கிய நன்மைகள் என்ன? முழு விவரம்
இதில் தரவரிசை எண் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது?
- மாணவர்களின் எண்ணிக்கை: 1 லட்சத்து 30 ஆயிரத்து 767
- மாணவிகளின் எண்ணிக்கை: 1 லட்சத்து 5 ஆயிரத்து 245
- மூன்றாம் பாலினத்தவர்: 5 பேர்
- மொத்த எண்ணிக்கை: 2 லட்சத்து 36 ஆயிரத்து 17 பேர்
7.5% இட ஒதுக்கீடு விண்ணப்பம்
- இந்த ஆண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 50 ஆயிரத்து 494 மாணாக்கர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
- இதில் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 46 ஆயிரத்து 604 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு பிரிவில் எத்தனை பேர் விண்ணப்பம்?
- இந்த ஆண்டு விளையாட்டு பிரிவின் கீழ் 7,981 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள்.
- அவர்களின் விளையாட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 3 ஆயிரத்து 210 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த கல்வியாண்டில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர் பிரிவின் கீழ் 1,176 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 500 மாணாக்கர்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.
200க்கு 200 கட் ஆப்
200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 53. அதில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணாக்கர்கள் 39 மற்றும் மற்ற தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 14.
தரவரிசை எண்ணை தெரிந்துகொள்வது எப்படி?
- மாணவ, மாணவியர் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
- இணையதளத்திற்கு சென்றதும் TNEA 2026 Rank List என முகப்பு பக்கத்தில் இருக்கும் இணைப்பை கிளிக் செய்யவும்.
- அடுத்து தரவரிசையின் PDF திரையில் தெரியும்.
- அதை தரவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
பெயர் இல்லாத மாணவர்கள் கவனத்திற்கு...
மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்து, தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் 6 நாட்களுக்குள் (ஜூலை 6ஆம் தேதிக்குள்) தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்தினை (TFC's) அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்யலாம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அவகாசம்
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்திற்கு கோராமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று ஜூலை 6ஆம் தேதிக்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம்.
சந்தேகங்களை தீர்க்க தொடர்பு எண்
- மாணாக்கர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தினை தொலைபேசி (1800-425-0110) வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
- இதுவரையில் அழைப்பு மையத்தினை தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 843 என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல், tneacare@gmail.com என்ற மின்னஞ்சலை பயன்படுத்து 10 ஆயிரத்து 125 மாணாக்கர்களும் மற்றும் நேரடியாக 1,497 மாணாக்கர்களுக்கும் தங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளனர்.
'திமுக ஆட்சியில் ஊழல்... பொதுப்பணித்துறையில் முறைகேடு' அமைச்சர் ஆதவ்வின் அதிரடி அறிவிப்பு
Chennai, Tamil Nadu:Minister Aadhav Arjuna Allegation : திமுக ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள், விதிமீறல்கள், லஞ்சம் என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை அறிய முடிகிறது என்றும் பல புகார்கள் தற்போது வந்து கொண்டிருக்கின்றன என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
Minister Aadhav Arjuna announced that appropriate action will be taken if anyone who was allegedly cheated or defrauded after paying money to contracts in various government departments during previous governments comes forward and files a complaint. pic.twitter.com/NbUgh1dlN4
— Vignesh Theni (@Vignesh_twitz) July 1, 2026
விஜய் தலைமையில் இணையும் '2 விஜயபாஸ்கர்கள்' - தவெகவில் கரையும் அதிமுக
Salavankuppam, Tamil Nadu:C Vijayabaskar, MR Vijayabaskar Joins TVK : சி. விஜயபாஸ்கரை தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கரும் நாளை (ஜூலை 2) அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக தெரிகிறது. சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இணைப்பு விழா நடைபெற உள்ளது.
LPG சிலிண்டர் விலை குறைந்தது - ஜூலை 1இல் வந்த நல்ல செய்தி
Chennai, Tamil Nadu:LPG Cylinder Price Reduced: 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை சுமார் 183.50 ரூபாய் அளவுக்கு குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதுமில்லை.
'வாழ முடியல, சேர்ந்து சாகலாம்' காரில் பாம் போட்டு இறந்த காதலன்... வெளியே குதித்து தப்பிய காதலி
Tumakur, Karnataka:Bengaluru Bizarre News : கர்நாடகா மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூருவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார். அவரை பெங்களூருவை சேர்ந்த நாகேந்திரா என்பவர் காதலித்து வந்துள்ளார்.
இருவருக்கும் சமீபத்தில் பிரேக் அப் நடந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் காதலியை சந்தித்து, மீண்டும் உறவை ஏற்படுத்திக்கொள்ள ஆசை ஆசையாய் பெங்களூருவில் இருந்து வாடகை காரை நேற்று (ஜூன் 27) முன்பதிவு செய்துள்ளார் நாகேந்திரா.
மேலும் படிக்க | தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவி, சுட்டுக் கொன்ற கணவன்: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
வலுகட்டாயமாக கடத்தல்
பெங்களூரு ஜெயாநகரில் உள்ள அந்த பெண்ணின் வாடகை வீட்டிற்கே நேரடியாக சென்றிருக்கிறார் நாகேந்திரா. காரில் தன்னுடன் வரும்படி நாகேந்திரா கேட்டுள்ளார். நாகேந்திரா மீது பெரிதாக பற்று இல்லாத அப்பெண் முதலில் நாகேந்திராவுடன் காரில் பயணிக்க மறுத்துள்ளார்.
இந்நிலையில், அந்த காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றிருக்கிறார் என காவல்துறையினர் குற்றஞ்சாட்டினார். பெண் காணாமல் போனதாக ஜெயாநகர் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர், அவரை கடத்திச் சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
காரில் நடந்த பேச்சுவார்த்தை
துமகூரு மாவட்டத்தின் சிரா தாலுகாவில் அங்கோலா பகுதியை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுள்ளது. அப்போது நைசாக நாம் திருமணம் செய்துக்கொள்ளலாமா என பேச்சை தொடங்கினார். நாகேந்திரா மீது பயம் ஒருபக்கம் இருக்க, மெதுவாக முடியாது... செட் ஆகாது என அந்த பெண் மறுத்து பேச ஆரம்பித்தார். இதை தாங்கிக்கொள்ள முடியாத நாகேந்திரா... சரி உனக்கும் வேணா... எனக்கும் வேணை.. என்னுடன் வாழ பிடிக்கா பரவால... சேர்ந்தே சாவோம்... என சினிமா வசனத்தை பேசியுள்ளார்.
பதறிப்போன டிரைவர்
அந்த நொடியில், இதை கேட்ட டாக்ஸி டிரைவர் பிரவீன் கதிகலங்கிபோனார். அடுத்து என்ன செய்வது என யோசிப்பதற்குள், நாகேந்திரா கையில் கத்தியை எடுத்து ஆருயிர் காதலியை தாக்கினார். காரை நிறுத்த முற்பட்ட பிரவீனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. நாகேந்திரா தனது கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்கச்செய்ய மும்முரம் காட்டினார்.
மேலும் படிக்க | டெல்லியில் கொடூரம்: 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கேப் டிரைவர்
காருடன் பற்றி எரிந்த நாகேந்திரா
கண் மூடி திறப்பதற்குள் சமயோசித புத்தியால் அப்பெண் கார் கதவை திறந்து வெளியே குதித்துவிட்டார். சூழ்நிலையை புரிந்துக்கொண்ட டிரைவர் பிரவீனும் காரை நிறுத்திவிட்டு வெளியே குதித்தார். அடுத்த நொடியே வெடிகுண்டு வெடித்து, காரும் சிதறி வெடித்தது. இதில் நாகேந்திரா காருடன் பற்றி எரிந்து உயிரிழந்தார்.
இருவர் உயிர் தப்பினர்
இந்த கொடூர சம்பவத்தில் அப்பெண்ணும், டிரைவரும் சிறு காயங்களுடன் உயர் தப்பினர். சம்பவ இடத்தை துமகூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். வெடிப்புக்கான காரணம், பயன்படுத்தப்பட்ட வெடிபொருளின் தன்மை மற்றும் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
#WATCH | Tumakuru, Karnataka: SP Ashok Venkat says, "We received information about a car engulfed in fire at Kallambella Police Station on the Pune Highway. When the local police reached the spot, they found a burnt car (yellow number plate) and a person named Nagendran’s burnt… pic.twitter.com/LBWPjpVO5n
— ANI (@ANI) June 28, 2026
முதற்கட்ட விசாரணை
நாகேந்திரா வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்றதாகவும், அவரே அதை வெடிக்க வைத்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என துமகூரு காவல் கண்காணிப்பாளர் அசோக் கே.வி. தெரிவித்தார். வாகனத்தில் இருந்து வெடிகுண்டு போன்ற வெடிபொருளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த வெடிப்பொருளின் தன்மை, அது எவ்வாறு வெடித்தது அல்லது வெடிக்கவைக்கப்பட்டது, அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடைபெறுகிறது.
காவ்யா மாறன் - அனிருத் திருமணம் விரைவில்... பிரபல நடிகர் சொன்ன தகவல்
Chennai, Tamil Nadu:Kavya Maran - Anirudh Marriage : பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து அறிய பொதுமக்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. அதுவும் அவர்களின் திருமணம் மற்றும் காதல் சார்ந்த தகவல்களை அறியவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள், இதில் ஆண், பெண் வித்தியாசம் ஏதுமில்லை.
அந்த வகையில், அனிருத் - காவ்யா மாறன் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக, இதுவரை சமூக வலைதளங்களில் அரசல்புரசலாக பரப்பப்பட்ட வந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பேசி உள்ளார். இதன்மூலம் விரைவில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க | காவ்யா மாறன் - அனிருத் இடையே வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?
இது அனிருத்தின் சகாப்தம்
பிரபல இசையமைப்பாளரான அனிருத் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இவரது இசையமைப்பில் தயாரான ஜனநாயகன் ரிலீஸிற்கு காத்திருக்கிறது.
அடுத்து DC, ஜெயிலர் 2 ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாக காத்திருக்கின்றன. மேஜிக், தி பாரடைஸ் என இரண்டு தெலுங்கு படங்களும் இந்தாண்டு வெளியாக உள்ளன.
வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் அரசன், ஷாருக்கானின் கிங் (இந்தி) என தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களிலும் அனிருத் பணியாற்றி வருகிறார்.
அடுத்தடுத்து ரஜினி - அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் தர்மன், அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் இணையும் AA23, கமல் - ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் KH x RK படத்திலும் அனிருத் ஒப்பந்தமாகி உள்ளார்.
வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 திரைப்படங்கள் அனிருத் இசையில் வெளியாகும். இந்தாண்டில் கடைசியாக வெளியான LIK திரைப்படம், அவருக்கு 41வது திரைப்படமாகும். 35 வயதான அனிருத் அடுத்தாண்டு அவரது 15வது ஆண்டு திரைவாழ்வை நிறைவு செய்ய உள்ளார்.
மேலும் படிக்க | ரூ. 1 கோடி வசூல் செய்த பாக்யராஜ் படம் - தமிழ் சினிமாவில் முதல்முறை... எது தெரியுமா?
3 அணிகளை கவனிக்கும் காவ்யா
மறுபுறம் 33 வயதான காவ்யா மாறன், சன்ரைசர்ஸ் அணிகளின் உரிமையாளராக உள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்ட்ரன் கேப், இங்கிலாந்தின் The hundred தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் உள்ளிட்ட அணிகளை காவ்யா மாறன் கவனித்து வருகிறார்.
சன் குழுமத்தின் நிறுவனத் தலைவரான கலாநிதி மாறனின் ஒரே மகள் தான் காவ்யா மாறன். சன்ரைசர்ஸ் அணிகளை மட்டுமின்றி சன் டிவி நெட்வொர்கிலும் காவ்யா மாறன் முக்கிய பொறுப்பை வகிக்கிறார்.
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்?
அவரவர் துறையில் பெரும் உச்சத்தில் இருக்கும் காவ்யா - அனிருத் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வருவதாக தகவல்கள் கசிந்தன. அவர்கள் வெளிநாடுகளில் ஒன்றாக இருப்பது போன்ற உறுதிப்படுத்தப்படாத புகைப்படங்களும், வீடியோகளும் இணையத்தில் அவ்வப்போது பரவும்.
ஒய்.ஜி. மகேந்திரன் சொன்ன தகவல்
இந்தச் சூழலில், பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் காவ்யா மாறன் - அனிருத் திருமணம் குறித்த தகவலை தற்போது தெரிவித்துள்ளார். அனிருத் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென திருமண டாப்பிக்கை தொட்ட ஒய்.ஜி. மகேந்திரன், "நானும் கேள்விப்பட்டதை வைத்துதான் சொல்கிறேன், கண்டிப்பாக அது நடக்கும். அந்த பொண்ணு (காவ்யா மாறன்) ஒண்ணும் சாதாரண பொண்ணு இல்லை.
So it's almost confirmed now
— Deepak Kaliamurthy (@Dheeptweet) June 27, 2026
Anirudh going to Marry Kavya Maran.
YGM Confirms it in a interview.
Kalanidi Maran took a Good Decision.
SUN Network Mappilai Ani.
Rajinikanth will soon announce it officially along with Ani parents and Kalanidhi Maran.#Anirudh#KavyaMaran pic.twitter.com/tOh2Z82se5
அவ்வளவு பெரிய டீமை பார்த்துக்கொள்ள முடிகிறது என்றால் அவரது அப்பாவின் வியாபார மூளையை பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மியூஸிக்கல் பிசினஸ் பண்ணுவாங்க" என சொல்லியிருந்தார். ஒய்.ஜி. மகேந்திரன் பேசும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒய்.ஜி. மகேந்திரன் - அனிருத் ஆகியோர் உறவினர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க | அனிருத்துக்கு வெளிநாட்டில் திருமணம்? தடபுடலான ஏற்பாடு..பொண்ணு யாரு?
வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்... பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு
Venezuela Earthquake : வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்கள் முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கெனவே கடுமையான பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டனர்.
920 பேர் உயிரிழப்பு#Venezuela | #Earthquake | #ZeeTamilNews pic.twitter.com/mpLEPcJk3v
— Zee Tamil News (@ZeeTamilNews) June 27, 2026
உயிரிழப்பு எண்ணிக்கை 920 ஆக உயர்ந்திருக்கும் சூழலில், 4.9 ரிக்டர் அளவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அன்று ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ் காலமானார்; திரையுலகத்திற்கு பேரிழப்பு
Chennai, Tamil Nadu:Bhagyaraj Passes Away : பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Chennai, Tamil Nadu:பிரபல திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில், அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 27, 2026
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த… pic.twitter.com/Nun0KZ3biV
விரைவில் பாகுபலி 3? ஹிண்ட் கொடுத்த நடிகர்கள்! ராஜமௌலி சொன்ன விஷயம்..
Chennai, Tamil Nadu:பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் குறித்த செய்திதான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படம் குறித்து நடிகர்கள் பேசிய போது, இப்படிப்பட்ட ஒரு விஷயம் பேசியதுதான் இந்த பரபரப்புக்கு காரணம். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
பாகுபலி 3:
சமீபத்தில் Baahubali : The Torchbearer என்கிற பெயரில், ஒரு டாக்குமெண்ட்ரி வெளியிடப்பட்டது. அதில், பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலி, படத்தில் ஹீரோவாக நடித்த பிரபாஸ், வில்லனாக நடித்த ராணா டகுபதி, ஹீரோயினாக நடித்த அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நேர்காணல் அளித்திருந்தனர். இந்த படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் படிக்க | குஷ்பு மகள் திருமண கொண்டாட்டம்! யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க..
Prabhas, Rana & Anushka indirectly hits there is a possibility for #Baahubali3 in the future pic.twitter.com/4sZuzJbEIq
— AmuthaBharathi (@CinemaWithAB) June 26, 2026
இது குறித்து வைரலாகி வரும் வீடியோவில், ராண “இந்த உலகம் அதற்கு தயாராக இருக்காது, ஆனால் இன்னொரு பாகுபலி படம் வரும்..” என்று தெரிவித்தார். அப்போது அருகில் இருந்த பிரபாஸ் தன் கையை உயர்த்தி மூன்று விரல்களை காண்பித்தார். இதை பார்த்த பிறகு அவர் அருகில் அமர்ந்திருந்த அனுஷ்கா உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோ முடியும் போது “இந்த சகாப்தம் தொடரும்..” என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும் பாகுபலி 3 படம் கன்ஃபார்ம் ஆகி விட்டதாக கூறி வருகின்றனர்.
ராஜமௌலி கூறியது என்ன?
பாகுபலி படத்தின் முதல் இரண்டு பாகங்கள், உலகளவில் அதிகம் வசூலித்த இரண்டு இந்திய படங்கள் என்கிற பெயரை எடுத்த படங்களாகும். பாகுபலி படத்தில், தந்தை-மகன் கதை இரண்டு படங்களீல் எடுத்து சொல்லப்பட்டு விட்டது. இதில் எந்த கதையும் முடிவில்லாமல் இல்லை. இருப்பினும், பாகுபலி 3 படத்தில் எந்த மாதிரியான கதை இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. முந்தைய இரு படங்களை எடுத்த ராஜமௌலி, பாகுபலி 3 திரைப்படம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
அனுஷ்கா, பிரபாஸ் மற்றும் ராணா இது குறித்து பேசியிருந்தாலும், படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால்தான் எந்த உண்மையும் தெரிய வரும்.
ரூ.5,000 கோடி வரை வசூல் ஆகுமா?
நெட்டிசன்கள் பலரும், பாகுபலி 3 திரைப்படத்தின் அறிவிப்பிற்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர். இந்திய சினிமாவின் முகத்தை, உலகிற்கு காட்டிய படம் இது என்று புகழும் நெட்டிசன்கள், இந்த படம் முந்தைய இரண்டு படங்களை விட பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படலாம் எனவும், இது இந்திய சினிமாவிற்கு இன்னொரு பெஞ்ச்மார்க் படமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். இதை வெறும் முடிவுக்கதை இல்லை (Sequel) என்று கூறும் அவர்கள், இது ஒரு பெரிய சினிமா நிகழ்ச்சியாக நடைபெறும் என்றும் கூறி வருகின்றானர். இதை பார்க்க, பல மில்லியன் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
முதல் இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்!
பாகுபை : தி பிகினிங் திரைப்படம், 2015ஆம் ஆண்டில் முதலில் வெளியானது. சுமார், ரூ.170 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம், தெலுங்கு சினிமாவின் முதல் பெரிய பட்ஜெட் படமாக உருவானது. உலகளவில், சுமார் ரூ.650 கோடி வரை வசூலித்தது.
பாகுபலி 2 திரைப்படம், 2017ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம், இந்தியாவில் மட்டும் ரூ.1430 கோடி வரை வசூலித்தது. உலகளவில், ரூ.1,810 கோடி வரை வசூலித்திருந்தது. இந்த வசூல், வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தது. தெலுங்கில் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட டப் செய்யப்பட்ட மொழிகளிலும் இப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. மொத்தமாக இந்த இரு படங்களும், ரூ.2410 கோடி வரை வசூலித்திருந்தது.
மேலும் படிக்க | CM விஜய் மிஸ்ஸிங்..குஷ்பு மகள் திருமணத்திற்கு தனியாக வந்த த்ரிஷா! ஏன் தெரியுமா?
ரேஷன் பொருட்களுக்கான அடிப்படை விதியே மாறுகிறது: ஏழை குடும்பங்களுக்கு நிவாரணம்
Nagalapuram, Tamil Nadu:Ration card Latest News: தமிழகம் உட்பட அனைத்து மாநில ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவுள்ளன. 'அந்தியோதயா அன்ன யோஜனா' (AAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தானிய அளவை, தற்போதுள்ள குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ என்ற நிலையான அளவிலிருந்து, நபர் ஒருவருக்கு மாதம் 7 கிலோ (அதிகபட்சம் 35 கிலோ வரை) என மாற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசால் பரிசீலிக்கப்படும் இந்த மாற்றம் அதிக அளவிலான ஏழைக் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப அலகின் அடிப்படையில் அல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுவது சிறந்த மாற்றமாக இருக்கும் என கருதப்படுகின்றது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ல் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு
உணவு மற்றும் பொது விநியோகத் துறை 'தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013'-ல் திருத்தம் செய்ய முன்மொழிந்துள்ளது. மேலும், உணவு அமைச்சகம் 'தேசிய உணவுப் பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026' குறித்த பொதுமக்களின் கருத்துக்களை ஜூலை 13-ஆம் தேதி வரை வரவேற்றுள்ளது.
மேலும் படிக்க | Sarthak PDS: மத்திய அரசின் புதிய ரேஷன் திட்டம்! யாருக்கெல்லாம் பலன்? முழு விபரம்!
தற்போதைய நடைமுறை என்ன?
- தற்போதைய சட்டத்தின்படி, மிகவும் ஏழ்மையானவர்களாகக் கருதப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள், குடும்பத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் மாதம் 35 கிலோ தானியத்தைப் பெறுகின்றன.
- 'முன்னுரிமைக்குரிய குடும்பங்கள்' (Priority Households) பிரிவில் உள்ளவர்கள் நபர் ஒருவருக்குக் குறைவான அளவிலேயே தானியத்தைப் பெறுகின்றனர்.
- இருப்பினும், இப்பிரிவில் உள்ளவர்கள் AAY பயனாளிகளை விடக் குறைவான பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளவர்களே ஆவர்.
- அதிக தேவையில் இருக்கும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்களில் பெரிய குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு கிடைக்கும் தானியத்தின் அளவு மிக குறைவாகவே உள்ளது.
- குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படாமல், குடும்ப அலகின் அடிப்படையிலேயே தானியம் வழங்கப்படுவதே பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.
அமைச்சகம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, அந்தியோதயா அன்ன யோஜனாவின் கீழ் தற்போதுள்ள குடும்பம் சார்ந்த ஒதுக்கீட்டு முறை மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அது குடும்ப அளவின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது. ஆகையால் இதில் மாற்றம் பரிசீலிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு பயனர்களே உஷார்! உடனே இதை செய்யலனா அரிசி, பருப்பு கட்?
புதிய விதியால் யார் பயனடைவார்கள், யார் பயனடைய மாட்டார்கள்?
முன்மொழியப்பட்ட அமைப்பின் கீழ், ஒரு குடும்ப உறுப்பினருக்கு 7 கிலோ என்ற ரீதியில் இனி உனவு தானியங்கள் அளிக்கப்படும். அதாவது, இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட AAY குடும்பம் மாதம் 14 கிலோ தானியத்தைப் பெறும். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் தற்போதுள்ள வரம்பான 35 கிலோ வரை தானியத்தைப் பெறும். ஏனெனில், இந்த முறையில் 35 கிலோ என்ற வரம்பு இருக்கும். சிறிய குடும்பங்களுக்கு மொத்த தானிய அளவு பெரும்பாலும் மாறாமல் இருந்தாலும், குடும்ப அளவின் அடிப்படையில் ஒதுக்கீடு தீர்மானிக்கப்படுவதால் பெரிய குடும்பங்கள் அதிக பயனடையும்.
ரேஷன் பொருட்களுக்கான இந்த விதியின் நோக்கம் என்ன?
மனித வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான அரசின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. 'தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013'-ன் நோக்கங்களுக்கு இணங்க, தரமான உணவை போதுமான அளவில் மற்றும் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். தற்போது, முன்னுரிமைக்குரிய குடும்பங்கள் மற்றும் AAY பயனாளிகள் ஆகிய இரு தரப்பினருக்கும் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன.
குடும்ப உறுப்பினர்களின் அளவின் படி ரேஷன் பொருட்களை அளித்தால், அது பெரிய குடும்பங்களுக்கு சிறந்ததாக அமையும். ஆனால், சிறிய அளவு குடும்பங்களுக்கு இது பாதகத்தை ஏற்படுத்தலாம். உதாரணமக, 3 பேர் உள்ள குடுமபத்திற்கு முன்பு குடும்ப அலகின் படி 35 கிலோ தானியங்கள் கிடைத்திருக்கும். ஆனால், புதிய விதி அமலுக்கு வந்தால், குடும்ப உறுப்பினர்களின் அடிப்படையில் அவர்களுக்கு 21 கிலோ (7x3=21) தானியங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
