icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

“என் அத்தை மண்டைய போடனும்” - 20 ரூபாய் நோட்டில் சாமிக்கு கடிதம்...பக்தரின் விநோத வேண்டுதல்..!

MMathan3h ago
Ananthapur, Andhra Pradesh:

20 Rupees Note Viral: ஆந்திராவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு 20 ரூபாய் தாளில் பக்தர் ஒருவர் விநோதமான வேண்டுதலை வைத்து காணிக்கை செலுத்தியிருந்தது தெரியவந்தது. அதில் “என் அத்தை சாக வேண்டும்” என்று பக்தர் வைத்துள்ள வேண்டுதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற பம்பனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 16-ம் நுற்றாண்டில் விஜயநகரப் பேரரசை சேர்ந்த வியாசராஜு என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் அனந்தபுரம் மாவட்ட மக்களின் முக்கிய கோவிலாக திகழ்கிறது. அது மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு வேண்டுதல்களுக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை அப்டேட்: இவர்களுக்கு ரூ.2500 கிடையாது.. அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்!

இந்த கோவிலில் தொடர்ந்து 9 அல்லது 11 செவ்வாய்க்கிழமைகளில் 108 பிரதட்சிணங்களுடன் மூல தெய்வத்திற்குப் பூஜை செய்வதால், நாக தோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், நவ கிரக தோஷம், குஜ தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாது அனைத்து நாட்களிலும் பக்தர்களில் அதிகளவில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த புகழ்பெற்ற கோவிலில் தான் ஒரு விநோதமான வேண்டுதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பொதுவாக ஒருவர் கோவிலுக்கு நிம்மதியை தேடி செல்வர். அங்கு, அவர்கள் நன்றாக இருக்க வேண்டும், அக்கம்பக்கத்தினர் நன்றாக இருக்க வேண்டும், உறவினர்கள் நன்றாக இருக்க வேண்டும் அல்லது பக்கத்து வீட்டுக்காரன் நன்றாக இருக்கக் கூடாது, தான் ஒரே இரவில் பணக்காரணாக வேண்டும், தனக்கு நல்ல வேலை வேண்டும், தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பாஸ் ஆக வேண்டும், நல்ல வேலை கிடைக்கனும், வீடு கட்டனும், திருமணம் ஆகனும், குழந்தை வரம் வேண்டும் என்று இவ்வாறெல்லாம் தங்களது வேண்டுதலை கடவுளிடம் வைத்து விட்டு வருவர்.

அதே வேளையில் உண்டியல் காணிக்கை அல்லது துண்டு சீட்டு எழுதி மரத்தில் கட்டிவிட்டு வருவர். இது தான் இதுவரையில் இருக்கின்ற வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் ஒருவர் உடைத்து ஒரு விநோத வேண்டுதலை கடவுளிடம் வைத்திருக்கிறார் என்பதை சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அப்படியொரு வேண்டுதலை தான் அந்த நபர், இந்த 5 நூற்றாண்டு பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்துவிட்டு வந்திருக்கிறார். 

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை அப்டேட்: இவர்களுக்கு ரூ.2500 கிடையாது.. அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்!

விநோத வேண்டுதல்:

இந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பணம் எண்ணிக்கையின் போது அந்த பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் ஒரு ரூபாய் நோட்டில் இருந்த வாசகத்தை பார்த்து திகைத்துப் போயுள்ளார்.

அந்த ரூபாய் நோட்டில் “என் அத்தை சீக்கிரம் சாக வேண்டும்” என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகம் 20 ரூபாய் தாளில் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த சக பணியாளர்கள் ஆச்சரியப்பட்டு தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள்:

இதனைப் பார்த்த சமூக வலைத்தள பயனாளர்கள் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து சில காமெடியான கருத்துக்களையும், இது போன்ற செயல்களை யார் செய்திருப்பார்கள்? ஒரு வேளை உள்ளூர்காரர்களே இந்த வேண்டுதல வைத்தனரா? மேலும் இதில் அத்தை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது அவருடைய சொந்த அத்தையா? அல்லது மாமியார் எனப்படும் அத்தையா? என பல்வேறு கேள்விகளையும் எழுப்பி தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை! பின்னணியில் வாட்ஸ் அப்? சி.இ.ஓ குற்றச்சாட்டு

0
0
Report

வெளுக்கப்போகுது! இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் அலர்ட்

Chennai, Tamil Nadu:

TN Weather Update Today: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம் (TN Weather) குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை அலர்ட்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சுமார் 0.9 கிமீ உயரத்தில் கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 20) தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: நீட் எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு... தமிழகத்தில் 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 21ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஈரோடு டூ சேலம்.. தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!

ஜூன் 22ஆம் தேதி  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 23 முதல் ஜூன் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை பற்றிய அறிவிப்பு

ஜூன் 20 முதல் ஜூன் 23ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை பெய்யுமா?

சென்னையில் இன்று (ஜூன் 20) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெதர்மேன் முக்கிய அலர்ட்

 

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், மத்திய மற்றும் டெல்டா மண்டலப் பகுதிகளுக்கு இது ஒரு சிறப்பான நாள்; இப்பகுதிகளில் பலத்த மழை (அதாவது 'டமால் டுமீல்' என இடி-மின்னலுடன் கூடிய கனமழை) பெய்துள்ளது. இன்று, வட உள் தமிழகத்தில் மழைப்பொழிவு சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை நோக்கி நகரும். இவை இடி-மின்னலுடன் கூடிய மழையாக இருக்கும். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலும் இல்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டினால் அது ஒரு அதிசயமாகவே இருக்கும்” என்று கூறினார்.

மேலும் படிக்க: நீலகிரி : சம்பளத்தில் ஏமாற்றும் நிர்வாகம்... கூடலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

 

 

0
0
Report

இரு மடங்கு அபராதம்! ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்தால் நடவடிக்கை.. புது ரூல்ஸ் இதோ

Chennai, Tamil Nadu:

Indian Railway Rules Latest: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது  ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினமும் 15,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  குறைந்த கட்டணம்,  கழிவறை வசதி, படுக்கை வசதி போன்றறை இருப்பதால் பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். 

இரட்டிப்பாகும் ரயில்வே அபராதம்

அவ்வப்போது ரயில் பயணிகளுக்காக விதிமுறைகளை இந்தியன் ரயில்வே அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது. மேலும், டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளையும் இந்தியன் ரயில்வே கடுமையாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதாவது,  ரயில்வே அபராத தொகையை இந்தியன் ரயில்வே இரட்டிப்பாக்கி உள்ளது. 

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி,  ரயில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கான அபராதத்தை  அதிகரித்துள்ளது.ரயில்வே விதித்த குறைந்தபட்ச அபராதம் ரூ.250-ஐ ரூ.500 ஆக உயர்த்தியுள்ளது.  ரயில்வே சட்டம், 1989-இன் 137 மற்றும் 138 பிரிவுகளின் கீழான குறைந்தபட்ச அபராதம், ஜூலை 1, 2026 முதல் ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போருக்கு அபராதமாக ஜூலை 1 முதல் ரூ.500 இனி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஆறு மாதங்கள் தண்டனை விதிக்கப்படலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வெறும் ரூ.1,650 தான்.. திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனம்.. ஐஆர்சிடிசி சூப்பர் பேக்கேஜ்

ரயில்வே விதிகளில் திருத்தம்

மேலும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அல்லது பயணிகளைப் பொருட்கள் வாங்கத் துண்டுபவர்கள் மீதான விதிமுறையை இந்தியன் ரயில்வே கடுமையாக்கி உள்ளது.  இத்தகைய  குற்றங்களுக்கு ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
மேலும், ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ குடிபோதையில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். அனுமதியின்றி ரயில்களில் பயணிகள் அமருக்கு இருக்கைகள் அல்லது பகுதிக்குள் நுழைவது, வெளியேற  மறுப்பதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் இல்லாமல், மற்ற ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அத்துமீறி நுழைவதற்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டி, இருக்கை அல்லது அறைக்குள் அனுமதியின்றி நுழையும் ஆண் பயணிக்கு ரூ.2500 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை செலுத்த  தவறினால், நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு, ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய  வளாகத்திற்குள் தவறான இடத்தில் வாகன நிறுத்துதல், ஒருவழிப் பாதை விதிகளை மீறுதல் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால் ஆகியவற்றுக்கு ரூ.500  அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க: குற்றாலத்தை விடுங்க... கேரளாவின் இந்த 5 அருவிகளுக்கு போங்க... இப்போ செம சீசன்!

ஜூலை 1 முதல் அமல்

விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. இருப்பினும், புதிய விதிகளைச் செயல்படுத்த தனி அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், ஜூலை 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் வழக்குகளுக்குத் திருத்தப்பட்ட அபராதங்களைச் செயல்படுத்துமாறு பயணச்சீட்டு சோதனையாளர்கள் (TTEs), வணிகப் பணியாளர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் பிற களப் பணியாளர்களுக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. 

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதைக் கட்டுப்படுத்துதல், விதிமுறைகளுக்கு இணங்குவதை ஊக்குவித்தல், ரயில்வே வருவாயைப் பாதுகாத்தல் மற்றும் பயணச்சீட்டு சோதனை முறையை மேலும் திறம்படச் செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஒரே இரவில் பேய்களால் கட்டபட்ட கோவில்! 6 மணிக்கு மேல் நோ எண்ட்ரி..எங்க இருக்கு?

 

0
0
Report
Advertisement

'எனக்கு மரியாதை இல்ல, கொன்னுட்டேன்..': பணிப் பெண்ணை அடித்தே கொன்ற மருத்துவர், டெல்லியில் அதிர்ச்சி

New Delhi, Delhi:

புது டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியின் மவுண்ட் கைலாஷ் பகுதியில் தங்கள் வீட்டில் பணிபுரியும் பணிப் பெண்ணை கொன்றதற்காக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் வெளிவரும் தகவல்கள் பீதியை அளிக்கும் வண்ணம் உள்ளன. சாதாரண கருத்து வேறுபாடுகளே கொலைக்கு காரணமாக அமைந்ததாக வெளிவரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன.

மருத்துவரை விசாரிக்கத் தொடங்கிய டெல்லி போலீஸ்

டெல்லியைச் சேர்ந்த தோல் மருத்துவரான (dermatologist) மனீஷ் குப்தா தங்கள் வீட்டு பணிப் பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை விடுத்த கோரிக்கையை விசாரித்த நீதித்துறை நடுவர் அனுராக் சாப்ரா அதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கிரிக்கெட் மடையால் அடித்துக் கொலை

மருத்துவர் மனீஷ் குப்தா தனது வீட்டில் பணிபுரிந்த மீனா என்ற பெண்ணை வியாழக்கிழமை காலை கிரிக்கெட் மட்டையால் அடித்ததாகவும், கூர்மையான ஆயுதத்தால் குத்தியதாகவும் கூறப்படுகின்றது. மீனா தன் குடும்பத்தில் பில்லி சூனியம் செய்ததாகவும், தனது குடும்பத்தில் தொடர்ந்து நிலவிய கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகளுக்கு மீனாவே காரணம் என அவர் நம்பியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி மருத்துவரின் வெறிச்செயல்

மருத்துவரால் கொல்லப்பட்ட மீனா, சுமார் 10-12 ஆண்டுகளாக அவரது குடும்பத்தில் வேலை செய்து வருகிறார். வியாழக்கிழமை காலை தனது மகன் வீட்டில் இருந்த நிலையில், டாக்டர் மனீஷ் குப்தா அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் மீனாவை அடித்தே கொன்றுள்ளார். காலை சுமார் 10:15 மணிக்கு மனீஷ் குப்தாவின் மனைவி, டாக்டர் டீனா குப்தா வேலைக்கு சென்றுள்ளார். 10:30 மணி வாக்கில் வீட்டுக்கு வந்த பணிப்பெண் துணிகளை துவைத்து மாடியில் உலர்த்த சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற டாக்டர் குப்தா, சுமார் 11:30-11:45 மணி வாக்கில் அவரை தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | அம்மா என்னால் முடியவில்லை...: அடி, உதை, CCTV கண்காணிப்பு, திருமணமாகி 47 நாட்களில் பெண் தற்கொலை

முதலில் மருத்துவர் பணிப்பெண்ணை மட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் தள்ளாடி கீழே விழ்ந்துள்ளார். அதன் பிறகு மருத்துவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகின்றது. அதன் பின் கீழே இறங்கி வீட்டுக்குள் வந்த மருத்துவர் மனீஷ், தான் பயன்படுத்திய ஆயுதங்களை படிக்கட்டின் அருகில் வைத்துள்ளார். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை காவல்துறை பிறகு கைப்பற்றியது. மீனாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் வெளியே வந்து பார்த்திருக்கிறார்கள். ஆனாலும், சத்தம் எங்கிருந்து வருகிறது என்பது முதலில் பலருக்கு புரியவில்லை.

சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள மொட்டை மாடியில் ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு மருத்துவரையும் கைது செய்தனர்.

மேலும் படிக்க | பாஜக பிரமுகர் கொடூர கொலை.. காருடன் தீ வைத்து எரிப்பு! என்ன நடந்தது?

10 ஆண்டுகளாக டாக்டரின் குடும்பத்திற்காக உழைத்த பெண்

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் வீட்டில் பணிபுரிந்த பெண்ணை மருத்துவர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மருத்துவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கள் வீட்டில் பணிபுரிந்து வந்த மீனா என்ற பெண்மணியை தனக்கு பிடிக்கவில்லை என மருத்துவர் ஒப்புக்கொண்டார். மீனா பில்லி சூனிய செயல்களில் ஈடுபட்டதாக அவருக்கு சந்தேகம் இருந்தது. அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என பல நாட்களாக அவர் தனது மனைவியிடம் கூறி வந்தார். ஆனால், அது நடக்காமல் போகவே அவரது ஆத்திரம் இன்னும் அதிகமானது. தன் வீட்டிலேயே தனக்கு மதிப்பு இல்லை என்ற உணர்வு அவரது கோவத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

குடும்பச் சண்டைகள், அதிகரித்த டென்ஷன்

நீண்டகாலமாக குடும்பத்தில் இருந்துவந்த சண்டைகள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றின் வடிகாலாக இந்த கொலை இருந்திருக்கலாம் என கவால்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக, மருத்துவர் மனீஷ் குப்தா மனச்சோர்வுக்கான மருந்துகளை உட்கொண்டு வருவதாக அவரது மனைவியும் மகனும் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதிர்ச்சியில் பணிப் பெண்ணின் குடும்பம்

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட பணிப்பெண்ணின் குடும்பம் கடுமையான அதிர்ச்சியில் உள்ளது. அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பதை தங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்றும், போலீசார் பாரபட்சமின்றி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் அக்குடும்பம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 'எங்கள் குடும்பத்துக்காக என் தாய் கடுமையாக உழைத்தார். அவர் எப்போதும் குப்தா குடும்பத்தினரை பற்றி பாராட்டித்தான் பேசுவார். அவர்கள் இப்படி செய்ததை நம்பவே முடியவில்லை' என இறந்த பெண்ணின் மகன் கூறியுள்ளார்.

இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவரைத் தவிர வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகின்றது.

மேலும் படிக்க | கேரளாவை உலுக்கும் உறுப்பு தான மோசடி... 50 லட்சத்தில் கிட்னி சேல்: ED அதிரடி சோதனை

0
0
Report

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி: ஜூன் 26-க்குள் இதை முடிக்கணும், மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Pudukkottai, Tamil Nadu:

Pudokkottai Ration Card Update: குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்துகொள்ளாதவர்கள், வரும் 26 ஆம் தேதிக்குள் (26.6.26), அருகிலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று இந்த பணியை செய்துமுடிக்க வெண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

  • புதுக்கோட்டை குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்னும் கைரேகை பதிவை முடிக்காத உறுப்பினர்கள் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் இந்த முக்கிய பணியை செய்துமுடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
  • பணி நிமித்தமாகவோ, அல்லது பிற காரணங்களுக்காகவோ தற்காலிகமாக வேறு பகுதிகளில் வசித்து வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
  • அவர்களும் தற்போது தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ஜூன் 26 ஆம் தெதிக்குள் கைரேகை பதிவு செய்யும் பணியை முடித்துக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்

குடும்ப அட்டைதாரர்கள் அட்டையில் உள்ள இறந்த உறுப்பினர்களின் பெயர்கள நீக்குவதற்கான பணிகளையும் இந்த கால்க்கெடுவிற்குள் செய்து முடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. குடம்ப அட்டையில் உள்ள இறந்த உறுப்பினர்களின் பெயரை நீக்க, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை வழங்கி பெயர் நீக்கும் நடவடிக்கைகளை 20.6.26 -க்குள் செய்து முடிக்குமாறு நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாதம் ரூ.2,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. CM விஜய்யின் ஜாக்பாட் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

ரேஷன் அட்டைக்கான உடனடி நடவடிக்கை

ரெஷன் அட்டை தொடர்பான சிக்கல்களை தவிர்க்கவும், பொது விநியோக முறையின் கீழ் மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து பெறவும், அவ்வப்போது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் புதுப்பித்தல்களை கவனித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியமாகும். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த பணிகளை, ஜூன் 26ஆம் தேதிக்குள் செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | தமிழ்நாடு பிரேக்கிங் நியூஸ் நேரலை: செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ்; சென்னையில் IND vs AFG மோதல்

ரேஷன் கார்டு கைரேகை பதிவை செய்து முடிப்பது எப்படி?

இதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்:

  • இதற்கு முதலில் ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.
  • அங்குள்ள ஊழியரிடம் கைரேகை பதிவு செய்ய வந்திருப்பதை தெரிவிக்கவும்.
  • அவர் உங்களது ரேஷன் அட்டை பதிவுகளை முதலில் e-POS கருவியில் பதிவு செய்வார்.
  • அதன் பிறகு உங்கள் ஆதார் எண்ணை சரிபார்ப்பார்.
  • இதன் பிறகு, கைரேகை ஸ்கேனர் கருவியின் மூலம் உங்கள் விரலை ஸ்கேன் செய்து பதிவு செய்வார்.
  • கருவியில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட கைரேகை, ஆதார் தரவுத்தளத்தில் உள்ள கைரேகையுடன் பொருந்த வேண்டும்.
  • அதன் பிறகு ரேஷன் அட்டை கைரேகை இணைக்கப்படும்.

ரேஷன் அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே கைரேகை பதிவு செய்ய முடியும். ஆகையால். உங்கள் ரேஷன் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக கட்டாயமாகும். இன்னும் இவ்விரண்டும் இணைக்கப்படவில்லை என்றால், தேவையான ஆவணங்களுடன் ரேஷன் கடை ஊழியர்களை அணுகி முதலில் அந்த பணிகளை செய்துமுடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வெளுக்கப்போகுது! இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் அலர்ட்

0
0
Report
Advertisement

சென்னை: வண்டலூர் பூங்காவில் இலவச அனுமதி.. ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி?

Chennai, Tamil Nadu:

Vandalur Zoo Free Entry: தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு,  சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜூன் 21,22ஆம் தேதிகளில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்து இருந்தார். இதனால், மக்கள் குஷியில் உள்ளனர். இதற்கிடையில், பலருக்கும் இலவச அனுமதி தொடர்பாக சந்தேகம் இருந்தது. அதாவது, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமா அல்லது நேரில் அனுமதி சீட்டை பெற்றாலும் இலவசமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தற்போது வண்டலூர் பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் இலவச அனுமதி

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 22.06.2026 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படுகிறது.

இலவச நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு, உயிரியல் பூங்காவின் இணையதளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். எனவே, பார்வையாளர்கள் தங்களது இலவச நுழைவுச் சீட்டுகளை tickets.aazp.in என்ற இணையதளத்தின் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: தயார் நிலையில் கலைஞர் சர்வதேச பன்னாட்டு மையம்: எப்போது Open தெரியுமா?

 

ஆன்லைன் முன்பதிவு அவசியம்

முன்பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்கா நுழைவுச் சீட்டு கவுண்டர்களில் நேரடி (On-the-spot) டிக்கெட் முன்பதிவு வசதி இருக்காது.

பார்வையாளர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், இலவச நுழைவு இரண்டு தனித்தனி நேரப் பிரிவுகளாக (காலை மற்றும் பிற்பகல்) ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும், பிற்பகல் நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.

மேற்கண்ட இரு நாட்களிலும் உயிரியல் பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். மாலை 4.30 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக் கட்டணத்தைத் தவிர, பிற சேவைகளுக்கான கட்டணங்கள் நடைமுறையில் உள்ள கட்டண அட்டவணையின்படி வசூலிக்கப்படும். 

மேலும் படிக்க: சென்னை மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம்: ஜூன் 21 முதல் டோக்கன் விநியோகம்

 

சிங்கம் மற்றும் மான் சஃபாரி சேவை இயக்கப்படாது

இந்த இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்வையிடுவதற்கான மின்கல (Battery-operated) வாகன சேவையும், சிங்கம் மற்றும் மான் சஃபாரி (Lion and Deer Safari) சேவையும் இயக்கப்படாது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய நபர்களுக்காக மின்கல வாகன வசதி இந்த இரண்டு நாட்களிலும் இலவசமாக வழங்கப்படும்.

அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பார்வையாளர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க போதிய இடவசதி ஏற்படுத்தவும், அத்தியாவசிய வசதிகள் மற்றும் பிற சேவைகளை திறம்பட நிர்வகிக்கவும் நுழைவு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பூங்கா விலங்குகளின் நலன், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் பயனுள்ள அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் உயிரியல் பூங்காக்களைப் பார்வையிட்டு, வனவிலங்குகளை நேரடியாகக் கண்டு அனுபவித்து, உயிரினப் பன்முகத்தன்மை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடையே வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வையும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் நாளை (ஜூன் 20) மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா? மின்வாரியம் அறிவிப்பு

 

0
0
Report

ஆசிரியர்களே அலர்ட்! டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

Chennai, Tamil Nadu:

TET Exam Hall Ticket: தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை டிஆர்பி எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.  அரசுப் பள்ளியில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்ற டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டெட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள் ஒன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள் 2 என தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு

பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வு தேர்ச்சி அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பணி ஓய்வுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் 2028, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிட்டது. 5 வருடங்களுக்கு குறைவாக உள்ளவர்கள் டெட் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. 

மேலும் படிக்க: திமுக - அதிமுக கூட்டு! தவெகவுக்கு ஆதரவு ஏன்? பரபரப்பை கிளப்பிய சிபிஎம் சண்முகம்

இந்த உத்தரவால் பல லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தேதியையும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி,  2026 ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு ஜூலை 4 தாள் ஒன்று தேர்வு, ஜூன் 5ஆம் தேதி தாள் இரண்டு தேர்வும் நடைபெற உள்ளது.  இதற்கான ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.

டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ஆசிரியர்கள் உங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் இன்று (ஜூன் 19) முதல் உங்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். 

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II - 2026-க்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுகிறது.  விண்ணப்பதாரர்கள் https://trb1.ucanapply.com/login என்ற இணையதளத்திலிருந்து நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  நுழைவுச் சீட்டைக் கொண்டு வந்தால் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

மேலம் படிக்க: ரேஷன் கார்டு அப்டேட்! ஜூன் 25க்குள் இதை செய்யவும் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் 19.06.2026 முதல் https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து தங்களது நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கு, தங்களது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  .

விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் வழங்கும் தகவல்களே இறுதியானவை. விண்ணப்பத் தகவல்களில் செய்யப்படும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மையத்தை மாற்றுவதற்கான கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது.  தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்குவதற்கான வாரியத்தின் முடிவு முற்றிலும் தற்காலிகமானதாகும், மேலும் அது விண்ணப்பத்தில் அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ஆகாது” என தெரிவித்துள்ளது. 

மேலும், நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தில் சிறப்பு முகாமில் பெற்றுக் கொள்ளலாம். சிறப்பு முகாம்கள் ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை நடக்கும்.  நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்திலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தால் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நீட் மறுதேர்வு 2026 முக்கிய அறிவிப்பு! பழைய அட்மிட் கார்டு செல்லுமா? செல்லாதா? NTA விளக்கம்

 

0
0
Report

“நான் தான் முடிவெடுப்பேன்” - சட்டப்பேரவையில் வெடித்த தேசிய கீதம் விவகாரம்.! சபாநாயகர் பதிலடி...

MMathan1d ago
Chennai, Tamil Nadu:

TN Assembly National Anthem: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19), மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிரான அரசின் சிறப்பு தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதற்கு திமுக கேள்வி:

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ஆளுநர் உரையின்போது தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: சட்டப்பேரவையில் சலசலப்பு! திமுக - தவெக இடையே விவாதம்.. பதில் கொடுத்த ஆதவ்

தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டதற்கு அமைச்சர் வரவேற்பு:

இதற்கு பதிலளித்த அவை முன்னவரும் அமைச்சருமான செங்கோட்டையன், “140 கோடி மக்கள் தேசிய கீதத்தை மதித்து வாழும் இந்தியாவில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டதை வரவேற்கிறோம்” என்றார்.

சபாநாயகர் விளக்கம்:

இதையடுத்து விளக்கமளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருப்பதைப் போலவே நாங்களும் உறுதியாக உள்ளோம். இந்த விவகாரம் உறுப்பினர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளையும் மக்களின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் அரசு உறுதியாக உள்ளது: 

விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த நிகழ்ச்சி ஆளுநரின் கட்டுப்பாட்டில் நடைபெற்றதால் மாநில அரசால் தலையிட முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: திமுக - அதிமுக கூட்டு! தவெகவுக்கு ஆதரவு ஏன்? பரபரப்பை கிளப்பிய சிபிஎம் சண்முகம்

அதேபோல், முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் முதலில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பேரறிஞர் அண்ணா உருவாக்கிய மாநிலக் கொள்கையில் உறுதியாக இருந்த முதலமைச்சர் அதை ஏற்கவில்லை. அதன் விளைவாக ஆளுநர் முன்னிலையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. மாநில உரிமைகள் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய நடைமுறைகளில் அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

இது எதிர்காலத்தில் நடைமுறையாக மாறக்கூடும்:

தொடர்ந்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, “ஆளுநர் உரையின்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக நாட்டுப்பண்ணும் பாடப்படுவது வழக்கமான நடைமுறை. தற்போது தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் புதிய நடைமுறையாக மாறக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இருப்பினும், ஆளுநர் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதை வரவேற்கிறோம்” என்றார்.

தேசிய கீதம் குறித்து முடிவெடுப்பது சபாநாயகர்:

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “தேசிய கீதம் எத்தனை முறை பாடப்பட வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன். நடந்தது நல்லதாகவே நடந்துள்ளது. இனி நடைபெறுபவையும் நல்லதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: குதிரை பேரம் செய்ததா தவெக? ஆளுங்கட்சிக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

0
0
Report
Advertisement

சட்டப்பேரவையில் சலசலப்பு! திமுக - தவெக இடையே விவாதம்.. பதில் கொடுத்த ஆதவ்

Chennai, Tamil Nadu:

TN Assembly Aadhav Arjuna: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து, முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், இன்று (ஜூன் 19) மேகதாது அணை தொடர்பாக முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்தார்.  தொடர்ந்து, இதுகுறித்து விவாதம் நடந்து வந்த நிலையில், திடீரென நேரலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவையில் சலசலப்புகள் ஏற்பட்டது. 

தவெக  - திமுக இடையே காரசார விவாதம்

அப்போது, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரத்தில் அவையின் மாண்பு மீறப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மரபுகள் மீறப்படவில்லை நாட்டு தேசிய கீதம் தமிழக மக்களால் என்றைக்கும் புறக்கணிக்கப்பட்டது கிடையாது.  

நமது தலைவர்கள் அண்ணா முதல்கொண்டு, காமராஜர் முதல்கொண்டு, கலைஞர் முதல்கொண்டு, புரட்சித்தலைவி அம்மா முதல்க்கொண்டு தமிழக மக்கள் எப்பொழுதும் தேசிய கீதத்திற்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் நாம் நமது மரியாதையை கொடுத்திருக்கிறோம்.

தேசிய கீதமா தமிழ்த்தாய் வாழ்த்தா என்று வரும்போது, முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தை இன்றைய ஆளுநர் முன்பு பாடவைத்த முதல்வர் எங்களது முதல்வர். தமிழ்நாட்டின் சுயமரியாதையை காப்பாற்ற உறுதியுடன் நின்று தமிழக சட்டமன்றத்தில்  ஆளுநர் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட  தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அதே சபையில் அதே ஆளுநர் முன் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 

மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெறணுமா? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க!

 

திமுக எம்எல்ஏக்க்கு ஆதவ் அர்ஜுனா பதில்

ஆளுநர் மரபை நாங்கள் மீறவில்லை டைவர்ட் செய்யாதீர்கள். அறிஞர் அண்ணாவின் திமுக கொள்கைகளை அரசியல் கருத்துக்களை நாங்கள் உறுதியாக பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். எங்களது தலைவரின் அரசியல் ஆசானான அறிஞர் அண்ணாவை மதுரை மாநாட்டில் டிக்லர் செய்தார். அரசியல் மாண்புகளை டிப்லமெர்சியாக எடுத்து வையுங்கள் மாநில கொள்கைகளில் நாங்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்போம்” என்றார்.

மேலும், திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின்  புதிய ஆளுநரின் அழுத்தத்திற்கு இந்த அரசு பணிந்து விட்டது என்றார். அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, "நாங்கள் எப்பொழுதும் எந்தெந்த அழுத்தத்திற்கும் பணிந்தது கிடையாது. உங்களது பழைய வரலாற்றை பேசினால் அவையின் மரபு மீறப்படும். அதனால் நாங்கள் அதை பேசவில்லை.  மாநில சுயாட்சிகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சட்டமன்றத்தில் அரசியலை உருவாக்காதீர்கள். நாங்கள் உறுதியாகவும் உண்மையாகவும் இருப்பதால் தான் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது” என்றார். 

மேலும் படிக்க: இளைஞர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை.. CM விஜய் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

 

கொளத்தூரில் என்ன நடந்தது என்று தெரியும்?

தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ ஆஸ்டீன், மீடியா கவர்ச்சியால் தவெக ஆட்சிக்கு வந்து விட்டது என்று கூற, பதிலளித்த செங்கோட்டையன், மீடியா மோத்தமும் திமுகவிற்கு வக்காளத்து வாங்கியதே தவிர, நாங்கள் மீடியாவை கையில் வைத்துக்கொண்டு வெற்றிபெறவில்லை என்றார். தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா பேசுகையில், மக்கள் கொடுத்த வெற்றியை provoke செய்யும் வகையில் பேசுகிரார்கள். அவைக்கு தவரான தகவல்களை திமுக சட்டமன்ற உப்பினர் பேசுகிரார்கள்.

திமுக ஆட்சியில் கடந்த மே மாதம் தூத்துக்குடியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியின் வழக்கை 36 மணி நேரமாக எடுத்து விசாரிக்கவில்லை. இதுகுறித்து அப்போதைய முதல்வர் வாய் திறக்கவே இல்லை. நீங்கள் பாலியல் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுத்தது போல் பேசுவது சரியா? ஆனால் நாங்கள் வந்த முப்பது நாட்களில் எங்களது முதல்வர் அதற்கான நடவடிக்கையை எடுத்தார். 

என்ன பேச வேண்டும், எப்பொழுது பேச வேண்டும் என்பது நீங்கள் முதல்வருக்கு சொல்லித் தர தேவையில்லை. அவருக்கு நன்றாக அது தெரியும். நாங்கள் இந்த அவையின் மாண்பை கடைப்பிடித்து பேசி வருகிறோம். கொளத்தூரில் என்ன நடந்தது என்று தெரியும்?   கொளத்தூரில் பேசியதால் என்ன தேர்தல் முடிவு வந்தது அனைவருக்கும் தெரியும் என்றார். இவ்வாறு அமைச்சர் ஆதவ அர்ஜுனா பேசியவுடன் திமுகவினருக்கும் தவெக'வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் சமாதானப்படுத்தி அவர்களை இருக்கையில் அமர வைத்தார்.

மேலும் படிக்க:  திமுக - அதிமுக கூட்டு! தவெகவுக்கு ஆதரவு ஏன்? பரபரப்பை கிளப்பிய சிபிஎம் சண்முகம்

 

0
0
Report

கோவை: எழுத, படிக்க தெரியுமா? ரூ.58,000 சம்பளம்.. தமிழக அரசின் சூப்பர் வேலை!

Coimbatore, Tamil Nadu:

Coimbatore District Job News: தமிழக அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. குறிப்பாக, மாவட்ட  வாரியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது,  கோவை, நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் துணை இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேலைவாய்ப்பு

கோவை, நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் துணை இயக்குநர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 17.06.2026 முதல் 09.07.2026 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் அலுவலகத்தில் ஒரு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க: நீட் மறுதேர்வு பயத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு.. ஷாக் சம்பவம்

கல்வித்தகுதி, வயது விவரம்

  • எழுத்தர் துணை இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • கணினி பற்றிய அடிப்படை அறிவு (Basic Computer Knowledge)
  • இந்த பணிக்கு குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • BC/BCM/MBC/DC பிரிவினர்  குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • SC/ST பிரிவினர் குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை

வாசித்தல் மற்றும் எழுதும் திறனின் அடிப்படையில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு குறித்த விவரங்கள் இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்படும் தகவல் அறிவிப்பு பலகையில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: கோவையில் 8 மணிநேர பவர்கட்... நாளை எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...?

பணியிடம் கோவை
பணி பதிவுரு எழுத்தர் 
காலிப் பணியிடம்  ஒன்று (1)
மாத சம்பளம்  ரூ.15,900 - ரூ.58,500
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி  நாள்  ஜூலை 9, 2026

நிபந்தனைகள் 

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரருக்கு 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வி ஆகிய இனங்களில் போதிய தகுதி இல்லாத விண்ணப்பங்கள். விண்ணப்பதாரர் கோவை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

பதிவுரு எழுத்தர்களுக்கான விண்ணப்பப் படிவம் கோவை, மண்டல நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்திலும் http://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் கோவை, நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 09.07.2026 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க; கைதியை தப்பிக்கவிட்ட போலீசார்... 2 பேர் கைது... 3 காவலர்கள் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

 

0
0
Report

அம்மா என்னால் முடியவில்லை...: அடி, உதை, CCTV கண்காணிப்பு, திருமணமாகி 47 நாட்களில் பெண் தற்கொலை

Badapur, Maharashtra:

Ambernath, Maharashtra: மகாராஷ்டிராவின் அம்பர்நாத் பகுதியில், திருமணமான 47 நாட்களிலேயே 26 வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை, உடல் ரீதியான வன்முறை மற்றும் சிசிடிவி (CCTV) மூலம் தொடர் கண்காணிப்பு போன்ற கொடுமைகளால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது கணவர் மற்றும் கணவர் வீட்டார் மீது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அம்பர்நாத் போலீசார் விசாரணை

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறையினர் அப்பெண்ணின் கணவர் நிதின் தில்கர், அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோரைக் கைது செய்து, முறையான குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு மாறிய சூழல்

விசாகா தில்கர் என்ற அப்பெண், கடந்த ஏப்ரல் 30 அன்று டாக்டர் நிதின் தில்கரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையிலான உறவு மிகவும் சுமூகமாகவே இருந்ததாகவும், ஆனால், விசாகா தனது கணவர் வீட்டிற்குச் சென்ற உடனேயே அங்குள்ள சூழல் மோசமடைந்ததாகவும் விசாகாவின் குடும்பத்தினரின் கூறுகிறார்கள்

விசுவரூபம் எடுத்த வரதட்சணை கொடுமை

திருமணத்தில் அளிக்கப்பட்ட பரிசுகள் மற்றும் சம்பிரதாய முறைப்படி வழங்கப்பட்ட பொருட்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், விசாகாவைத் தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வரதட்சணை கொடுமை என நேரடியாக இதை கூற முடியுமா என தெரியவில்லை என்று கூறும் விசாகா குடும்பத்தார், திருமணத்தில் அளிக்கப்பட்ட பொருட்கள் மீதான அதிருப்தியே அனைத்துக்கும் காரணம் எனவும் தெரிவிக்கின்றனர்.

தொடர் சிசிடிவி கேமரா கண்காணிப்பு

விசாகா மீது வரதட்சணை தொடர்பான அழுத்தம் விரைவாக அதிகரித்தது. தனது பெற்றோரிடமிருந்து தங்கமும் பணமும் கேட்டுப் பெறுமாறு விசாகா தொடர்ந்து வற்புறுத்தப்பட்டதாகவும், அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத போதெல்லாம் அவர் கடுமையான மிரட்டல்களுக்கு ஆளானதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | பாஜக பிரமுகர் கொடூர கொலை.. காருடன் தீ வைத்து எரிப்பு! என்ன நடந்தது?

துன்புறுத்தலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், கணவர் அவரைத் தொடர்ந்து கண்காணிக்கும் முறையை ஏற்பாடு செய்திருந்தார். விசாகாவின் அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்களை அவர் பொருத்தியிருந்தார். காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின்படி, அண்டை வீட்டார் அல்லது வெளியாட்களுடன் பேசுவது போன்ற சாதாரண விஷயங்களுக்காகக் கூட விசாகா கடுமையாகக் கேள்வி கேட்கப்பட்டார்; அத்துடன் மோசமான குற்றச்சாட்டுகள், தொடர் வாக்குவாதங்கள் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களால் அவர் தினம் தினம் வேதனையின் உச்சிக்கு சென்றார்.

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அருகில் இருந்த வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததற்காக விசாகா உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அம்மா என்னால் முடியவில்லை.....

தன் கணவர் வீட்டில் இருந்த நிலையை விசாகா தன் தாயிடம் விளக்கியுள்ளார். தன்னால் அந்த கண்காணிப்பையும், துன்புறுத்தலையும், பேராசையால் எழும் வரதட்சணை கோரிக்கைகளையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று அவர் தனது தாயிடம் கூறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவர் கூறியதை கேட்ட விசாகாவின் பெற்றோர், அவரை மீண்டும் தங்கள் வீட்டிற்கே அழைத்து வர எண்ணி இருந்ததாகவும், ஆனால் அதற்குள் விசாகா வேறு முடிவு எடுத்துவிட்டதாகவும் உறவினர்கள் விளக்குகிறார்கள்.

காவல்துறை விசாரணை

செவ்வாய்க்கிழமை அன்று, விசாகா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் சிவாஜி நகர் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் செயல்பாட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் இருப்பதை முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்திய அதிகாரிகள், கணவர் அப்பெண்ணின் நடமாட்டத்தைக் கடுமையாகக் கண்காணித்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இது வலுசேர்ப்பதாகக் குறிப்பிட்டனர். 

மேலும் படிக்க | கேரளாவை உலுக்கும் உறுப்பு தான மோசடி... 50 லட்சத்தில் கிட்னி சேல்: ED அதிரடி சோதனை

விசாகாவின் உறவினர்கள் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், விசாகாவின் கணவர் டாக்டர் நிதின் தில்கர், அவரது மாமியார் சாயா தில்கர் மற்றும் மைத்துனர் நினத் தில்கர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய மூவரும் புதன்கிழமையன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சம்பவங்களின் துல்லியமான காலவரிசையைத் தொகுத்தறியும் வகையில், புலனாய்வாளர்கள் தற்போது ஆதாரங்களைச் சேகரித்தல், கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தல் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்துயரச் சம்பவத்தின் அனைத்துக் கோணங்களும் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும், நடைபெற்று வரும் விசாரணையின் உறுதியான முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசை ஆசையாய் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர், திருமணம் முடிந்த 47 நாட்களில் அவரை பிணமாக கண்டதில் எப்படிப்பட்ட துன்பத்தை அடைந்திருப்பார்கள் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது. நாம் மண்ணைத் தோண்டி மண்டபம் கட்டலாம், விண்ணைத் தாண்டி வெற்றி காணலாம், ஆனால், நம் பெண்ணைக் காக்கத் தவறிய கேடுகெட்ட பாவிகளாகத் தான் இன்னும் நிற்கிறோம். வருடங்கள் பல ஓடிக்கொண்டே இருந்தாலும், பெண்ணுக்கு மட்டும் இன்னும் வரதட்சணை கொடுமையிலிருந்து விடிவுகாலம் பிறக்கவில்லை!!

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். 
மாநில உதவிமையம்: 104

மேலும் படிக்க | தாயின் காதலன் வெறிச்செயல்.... 7 வயது சிறுவனை காவு வாங்கிய கள்ளக்காதல், மீரட்டில் பயங்கரம்

0
0
Report
Advertisement

வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

Walajabad, Tamil Nadu:

Kancheepuram District: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே 30வயது மதிக்கதக்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜாபாத் அருகிலுள்ள கிராமத்தில் நடந்த சம்பவம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஓர் கிராமத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். தனது முக்கியமான தினசரி பணிகளுக்கே பிறர் உதவியை நாடி இருக்கும் அப்பெணின் தாய், தந்தை தினமும் மாடுகளை மேய்க்கச் செல்வது வழக்கம். அப்படி அவர்கள் சென்றபோது அதே பகுதியை சார்ந்த நபர் ஒருவர் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலாகிருஷ்ணன் என்ற அந்த நபருக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அவர் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தீப்பெட்டி கேட்பது போல் உள்ளே சென்று அவரிடம் பேச முயற்சியுள்ளார்‌.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெறணுமா? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க!

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு

அப்போது, வீட்டில் தாய், தந்தை இல்லாததை அறிந்து கொண்ட பாலாகிருஷ்ணன் மாற்றுத்திறனாளி பெண் என்று கூட பாராமல் அவர் வாயை மூடி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து அங்கிருந்து சென்றுள்ளான். பின்னர், வீட்டிற்கு வந்த தாய் மற்றும் தனது அண்ணன்களிடம்  அந்த பெண் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த நபரை பிடித்த பெண்ணின் குடும்பத்தார் அவரை அடித்துள்ளனர்.

Kanchipuram Sexual Assault

இதுக்குறித்து அறிந்த பொதுமக்களும் பெண்ணின் குடும்பத்தாருடன் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பிறகு காவல் உதவி எண்ணான 100க்கு அழைத்து நடந்த சம்பம் பற்றி தெரிவித்துள்ளனர். காவல்துறையிடம் ஊர் மக்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணும் தகவல் கொடுத்தார்.

மேலும் படிக்க | விடாமல் கொட்டும் கனமழை! சென்னையிலும் வெளுக்கப்போகுது.. வானிலை அப்டேட்

குற்றவாளியை கைது செய்த வாலாஜாபாத் போலீசார்

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் காவல் துறையினர் பாலகிருஷ்ணனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களும், தாங்களும் பெண் பிள்ளைகளுடன் வசித்து வருவதால் தங்களுக்கும் அந்த நபரால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், குற்றவாளி வெளியே வராது வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kanchipuram Sexual Assault

எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான இந்த குற்றச்செயல்கள், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல, நிற்காமல், குறையாமல் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட கொடுமைகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிப்பதே இதற்கான ஒரே தீர்வாக இருக்கக்கூடும். இன்று ஒரு குற்றவாளிக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனை நாளை குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு அச்சத்தை அளிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு 'சிங்கப் பெண்' படை அமைக்கப்பட்டது நல்ல விஷயம்தான். ஆனால், வீட்டுக்கு வீடு சிங்கம் காவல் காக்க முடியாது. தண்டனைகள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். நடவடிக்கை எடுக்குமா அரசு?

மேலும் படிக்க | தமிழக அரசில் வேலை.. 720 காலி பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?

0
0
Report

கேரளாவை உலுக்கும் உறுப்பு தான மோசடி... 50 லட்சத்தில் கிட்னி சேல்: ED அதிரடி சோதனை

Ayyampuzha, Kerala:

Kerala ED Raids: உடல் உறுப்பு தான முறைகேடுகளில் ஈடுபட்ட ஒரு மோசடி கும்பல் (racket) குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை (ஜூன் 18) அன்று கேரளா முழுவதும் அதிரடி சோதனைகளைத் தொடங்கியது. கோட்டயம், கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் வங்கி அதிகாரிகள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவி வருகின்றனர்.

கேரள மருத்துவமனைகளில் அமலாக்க இயக்குநரகம் சோதனை

கொச்சியில், ராஜகிரி மருத்துவமனை (ஆலுவா), மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனை (பல்லிமுக்கு), ஆஸ்டர் மெட்சிட்டி (சேரநல்லூர்) மற்றும் விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனை (மராடு) ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. இந்த நாசவேலை நெட்வொர்க்கின் முக்கிய முகவராகக் கருதப்படும் முகமது நஜீப்பின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

நஜீப் நடத்தி வந்த 'கல்லத்ராஸ் மெடிக்கல் டூரிசம் பிரைவேட் லிமிடெட்' (Kallatras Medical Tourism Private Limited) என்ற நிறுவனத்தை மையமாக வைத்து இந்த விசாரணை நடைபெறுகிறது. இந்த நிறுவனம் மருத்துவச் சுற்றுலா என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் உறுப்பு தான செயல்முறைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை ஏற்பாடு செய்வதற்காக, இடைத்தரகர்கள் மூலம் உறுப்பு வழங்குநர்கள், பெறுநர்கள் மற்றும் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டதாகவும், இதற்காகப் பெருந்தொகை வசூலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய ஆண்டுகளில், உறுப்பு தான மோசடி பற்றி கேரளா முழுவதும் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளின் (FIR) அடிப்படையில் அமலாக்கத் துறையின் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவமனைகள் மற்றும் முகவர்கள் உடந்தையாக இருக்க, இக்கும்பல் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய உறுப்பு கடத்தல் வலைப்பின்னலுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்டறிவதே இந்தச் சோதனைகளின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | தாயின் காதலன் வெறிச்செயல்.... 7 வயது சிறுவனை காவு வாங்கிய கள்ளக்காதல், மீரட்டில் பயங்கரம்

கேரளா சட்ட விரோத உறுப்பு தான மாஃபியா: பின்னணி என்ன?

கேரளாவில் நடந்து வரும் இந்த சட்டவிரோத உடல் உறுப்பு வியாபாரம் (Kerala Organ Trafficking Case) பற்றிய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையின் முடிவுகளை மையமாகக் கொண்டு அமலாக்க இயக்குநரகம் மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ED இப்போது 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.

உத்தரப் பிரதேசத்தில் கைதான மாஸ்டர் மைண்ட் முகமது நஜீப்

பல்வேறு மாவட்டங்களிலும், அநேகமாக மாநிலத்திற்கு வெளியேயும் செயல்பட்டதாகக் கூறப்படும் பரந்த உறுப்பு கடத்தல் வலைப்பின்னலின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் முகமது நஜீப்பை (53) கேரள காவல்துறை கைது செய்தது. காசர்கோடைச் சேர்ந்த நஜீப், பல மாத விசாரணைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார். ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக அவர் கால்நாட்டில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நஜீப்பின் மனைவி ரஷீதா உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுநீரக மார்கெட்: 5-10 லட்சத்துக்கு வாங்கி 20-50 லட்சத்துக்கு விற்பனை

நிதி நெருக்கடியில் உள்ள நபர்களைக் குறிவைத்து, சிறுநீரகங்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாக இக்கும்பல் ஆசை காட்டியதாகவும், பின்னர் போலியான ஆவணங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம் பெறுநர்களுக்கு 20 முதல் 50 லட்சம் ரூபாய்க்கு அவற்றை விற்றதாகவும் காவல்துறை குற்றம் சாட்டுகிறது.

மேலும் படிக்க | பெட்ரோல், டீசல் விலை குறையப்போகுது: உலக சந்தையில் கிடுகிடுவென சரியும் கச்சா எண்ணெய் ரேட்!!

திருவனந்தபுரத்தில் முதலில் அம்பலமான முறகேடுகள்

திருவனந்தபுரத்தில் உறுப்பு வழங்குநர் மற்றும் பெறுநர் விண்ணப்பங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கும்பலின் செயல்பாடு வெளிச்சத்திற்கு வந்தது. அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலியான முத்திரைகள், கையொப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். வடக்கேக்கராவைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசி, சிறுநீரக தானம் செய்ததற்காக ₹9.5 லட்சம் பெற்றதாகவும், ஆனால் பெறுநர் கிட்டத்தட்ட ₹20 லட்சம் செலுத்தியதாகவும் கூறப்படும் வழக்கு, இந்த வலையமைப்பை அம்பலப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது.

இந்தியாவின் கடுமையான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிமுறைகளைத் தவிர்ப்பதற்காக, நஜீபின் இந்தச் செயல்பாடு போலியான ஆதார் அட்டைகள், போலி பிரமாணப் பத்திரங்கள் மற்றும் கள்ளப் பரிந்துரைக் கடிதங்களை நம்பியிருந்ததாக காவல்துறை கூறுகிறது. சரிபார்ப்பு அழைப்புகளைத் திசைதிருப்புவதற்காக போலியான தொலைபேசி எண்களும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சிறப்புப் புலனாய்வுக் குழு

நஜீப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனை அளவிலான அனுமதிகள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் இடைத்தரகர்களின் பங்கு ஆகியவற்றை விசாரிக்க மாநில அளவிலான சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சோதனைகளில் ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் அளவு, இந்தக் கும்பல் கேரளா முழுவதும் சட்டப்பூர்வமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைமுறைகளில் ஊடுருவியிருக்கக்கூடும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க | 20 வயது காதலியை... கொன்ற லிவ்-இன் காதலன்... இன்ஸ்டாகிராமில் அறிமுகம் - நடந்தது என்ன?

0
0
Report

தாயின் காதலன் வெறிச்செயல்.... 7 வயது சிறுவனை காவு வாங்கிய கள்ளக்காதல், மீரட்டில் பயங்கரம்

Meerut, Uttar Pradesh:

மீரட்: உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், ஏழு வயது சிறுவன் அவனது தாயின் காதலனால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது தாய் மற்றும் அவரது காலதலனின் உறவுக்கு அந்தச் சிறுவன் தடையாக இருந்ததாலேயே அவன் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் சிறுவனின் குடும்பம் மட்டுல்லாமல், நாட்டு மக்களையே பீதியில் ஆழ்த்தியுள்ளது.

மீரட் கிரைம்: திடீரென காணாமல் போன அங்கத்

அங்கத் என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுவன், செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட அர்பித் பராஷர் என்பவர், சாக்லேட் தருவதாகக் கூறி அச்சிறுவனைத் தனது காருக்குள் வரவழைத்து அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவனைக் கொன்று கால்வாய் அருகே உள்ள வயல்வெளியில் உடலை வீசியதாகவும் கூறப்படுகிறது.

குடும்பத்தினர் அளித்த புகார்

வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனதால், குடும்பத்தினர் பதறி காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி, சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் கண்காணிப்புத் தரவுகளை ஆய்வு செய்தனர். அந்தக் காட்சிகளில் சிறுவன் ஒரு காரில் அழைத்துச் செல்லப்படுவது பதிவாகியிருந்தது. இது விசாரணையயை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது.

மேலும் படிக்க | 20 வயது காதலியை... கொன்ற லிவ்-இன் காதலன்... இன்ஸ்டாகிராமில் அறிமுகம் - நடந்தது என்ன?

விசாரணையை திசை திருப்ப முயன்ற குற்றவாளி

அர்பித் பராஷர் ஆரம்பத்தில் விசாரணையைத் திசைதிருப்ப முயன்றதாகவும், தனது வாக்குமூலங்களை அடிக்கடி மாற்றிக்கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், தான் சிறுவனை ஒரு கால்வாயில் வீசிவிட்டதாக அவர் கூறியதையடுத்து, காவல்துறையினரும் நீச்சல் வீரர்களும் அங்குத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், அங்குச் சிறுவன் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

தொடர் விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், உடலை வீசிய இடத்திற்குக் காவல்துறையினரை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கால்வாய்க்கு அருகிலுள்ள ஒரு வயல்வெளியிலிருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

விசாரணயில் வெளிவந்த பகீர் உண்மைகள்

குற்றத்தை ஒப்புக்கொண்ட அர்பித் பராஷரிடம் விசாரணை தீவிரமடைந்தது. விசாரணையின் போது, ​​தானும் சிறுவனின் தாய் குர்பிரீத் கவுரும் நெருக்கமான நிலையில் இருந்ததை அங்கத்வீர் பார்த்துவிட்டதாக அற்பித் கூறியதாக மவானா வட்ட அதிகாரி பங்கஜ் லவானியா தெரிவித்தார். சமூக அவப்பெயருக்கு அஞ்சி, அங்கத்தை கடத்திச் சென்று, பத்ரகாலி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து கொன்றதாகவும், பின்னர் உடலை புதர்களில் வீசியதாகவும் அவர் கூறினார். உடல் மீட்கப்பட்ட செய்தி கிடைத்ததும், அங்கத்வீரின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். குற்ற நடந்த இடத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் குழு முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாக காவல் அதிகாரி (CO) பங்கஜ் லவானியா தெரிவித்தார். கொலையில் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் 'வாகன்-ஆர்' (WagonR) காரும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வேலைக்காக சவுதி அரேபியா சென்ற கணவன்

பஹ்சுமாவைச் சேர்ந்த குர்சேவக் என்பவர் பிழைப்புக்காக சவுதி அரேபியா சென்றிருந்தார். அவர் இல்லாத நேரத்தில், அவரது மனைவி குர்பிரீத், அர்பித் பராஷர் என்பவருடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அர்பித் ஏற்கனவே திருமணமானவர். அங்கத்வீர் என்ற அப்பாவிக் குழந்தையின் கொலையில் தாய்க்கும் பங்கு இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவரது பங்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட அங்கத் வீரின் தாயார் குர்பிரீத் கவுர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஹ்சுமாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியதாக அந்த அதிகாரி விளக்கினார். அவர் தினமும் பேருந்தில் சென்று வந்தார். குற்றம் சாட்டப்பட்ட அர்பித் பராஷர், ஹாபூரில் உள்ள HDFC வங்கி கிளையில் பகுதி மேலாளராகப் (Area Manager) பணியாற்றி வந்தார். அவர்கள் தினமும் பேருந்தில் சந்தித்துக்கொண்டனர், தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர்; காலப்போக்கில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.

மேலும் படிக்க | "ஏன்னை விட்டுடு": பாலியல் வன்கொடுமை, வசியம்... IAF அதிகாரி மனைவியை சீரழித்த தோழன், நாக்பூரில் அதிர்ச்சி

மீரட் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அபிஜீத் குமார் சிங் கூறுகையில், கடத்தல் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஒரு சிறப்புக் காவல் குழு குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ததாகத் தெரிவித்தார். விசாரணையின்போது, ​​குற்றகாளி சிறுவனைத் தனது காரில் அழைத்துச் சென்று கொன்றதையும், பின்னர் உடலை அப்புறப்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார்.

அங்கத் (Angad) பஞ்சாபில் தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும், அங்குப் படித்து வந்ததாகவும், சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் மீரட்டிற்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: உண்மை தெரிந்த பெண்ணுக்கு அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

0
0
Report
Advertisement
Advertisement
Back to top