icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

விஜய் அண்ணாச்சி தேர்தல் அறிக்கை என்னாச்சு? விருத்தாசலத்தில் விவசாயிகள் போராட்டம்

Virudhachalam, Tamil Nadu:

Virudhachalam: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, கடலூர் மாவட்ட விருத்தாசலத்தில் விவசாயிகள் நடத்திய திடீர் போராட்டமும், கோட்டாட்சியர் அலுவலக முற்றுகையும் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் பின்னணி என்ன? விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன? என்பது குறித்த முழுமையான விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலக முற்றுகை: பின்னணி என்ன?

கடலூர் மாவட்ட பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக, விவசாயிகள் தங்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பதற்காக விருத்தாசலம் கோட்டாட்சியர் (RDO) அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். அவர்களுடைய முதன்மை கோரிக்கை: "தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்தையும் உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என்பதுதான்.

அரசியல் கட்சி ஒன்றின் தேர்தல் அறிக்கையை முன்வைத்து, விவசாயிகள் அரசு நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட வந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரம், விருத்தாசலம் - கடலூர் முக்கிய சாலையில்  சாலை மறியல்

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் வந்த விவசாயிகளுக்கு அங்கு ஏமாற்றமே மிஞ்சியது. மனுவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய அதிகாரிகள் யாரும் அந்த சமயத்தில் அலுவலகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த விவசாயிகள், கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக உள்ள விருத்தாசலம் - கடலூர் முக்கிய சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுரோட்டில் விவசாயிகள் திரண்டதால், அந்த வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

"விஜய் அண்ணாச்சி தேர்தல் அறிக்கை என்னாச்சு?" :  அதிரடி முழக்கங்கள்

சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், தமிழக அரசுக்கு எதிராகவும் தங்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், "விஜய் அண்ணாச்சி.. விஜய் அண்ணாச்சி.. தேர்தல் அறிக்கை என்னாச்சு?" என்றும், "ஏமாற்றாதே.. ஏமாற்றாதே.. விவசாயிகளை ஏமாற்றாதே!" என்றும் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவானது.

மேலும் படிக்க | திருச்சி, கரூர் தாயுமானவர் திட்டம் அப்டேட் : வீடு தேடி வரும் ரேஷன் - தேதியை நோட் பண்ணுங்க

கட்சியின் கொள்கைகளும் அறிவிப்புகளும் தங்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் என நம்பியே இந்த மனுவை அளிக்க வந்ததாகவும், ஆனால், அதை பெற்றுக்கொள்ள  கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் கூட இல்லாதது பெரும் மன உளைச்சலை அளித்ததாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் தலையீடு

திடீர் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமானதை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கினர். போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் மூலம் போலீசார் விவசாயிகளை சமாதானப் படுத்த முயன்றனர்.

மேலும் படிக்க | தேனியில் விவசாயிகள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்! ஏன் தெரியுமா?

கடலூர் - விருத்தாசலம் சாலையில் சீரான போக்குவரத்து

அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் விவசாயிகளை நேரில் அழைத்துச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுவை அளிக்க உரிய ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து கொடுத்தனர். அதிகாரிகளிடம் மனு ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். அதன் பின்னரே கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து சீரானது.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பல வித வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. தேர்தல் முடிந்ததும் அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளை கட்சிகளும் மறந்துவிடுகின்றன, மக்களும் மறந்துவிடுகிறார்கள். ஆனால், இப்போது காலம் மாறி விட்டது. தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதற்கும், தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக விவசாயிகள் எந்த அளவுக்குக் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கும் இந்த விருத்தாசலம் சம்பவமே ஒரு மிகச்சிறந்த உதாரணமாக அமைகிறது.

மேலும் படிக்க | அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசையை நிறைவேறிய இபிஎஸ்.. கையோடு தெண்டர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!

0
0
Report

தஞ்சாவூர்: அதிமுக பிளவால் நேர்ந்த கொடூரம்: காட்டுப்பகுதியில் தொண்டன் தற்கொலை, ஓடோடி வந்த இபிஎஸ்

Thiruvidaimaruthur, Tamil Nadu:

Thanjavur News: அதிமுகவின் தேர்தல் தோல்வி மற்றும் உட்கட்சிப் பிளவால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அதிமுக வர்த்தக அணி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி

மரணமடைந்த தொண்டரின் இறுதி ஆசையை ஏற்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியது அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பனந்தாள் அதிமுக வர்த்தக அணி நிர்வாகி மகேந்திரன் யார்?

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). இவர் அதிமுகவின் தீவிர விசுவாசி. திருப்பனந்தாள் பகுதி அதிமுக வர்த்தக அணியின் பொறுப்பாளராகவும் இவர் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.

கட்சியின் மீது அலாதி பற்று கொண்ட மகேந்திரன், கடந்த சில தேர்தல்களில் அதிமுக சந்தித்த தொடர் தோல்விகள் மற்றும் அதற்குப் பின் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவுகள், தலைவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளால் கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்துள்ளார்.

முகநூலில் உருக்கமான பதிவிட்ட மகேந்திரன்

இந்நிலையில், நேற்று மாலை மகேந்திரன் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் மிகவும் உருக்கமான, கண்ணீரை வரவழைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

"அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும். கட்சியின் தோல்விகளும், பிளவுகளும் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், நான் மீண்டும் அதிமுகவின் எளிய தொண்டனாகவே பிறக்க வேண்டும். என்னுடைய இந்த முடிவிற்குப் பிறகு, எனது உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும்."

இந்த அதிர்ச்சியூட்டும் பதிவைப் பார்த்த அவரது நண்பர்களும், உறவினர்களும் பதறியடித்துக்கொண்டு மகேந்திரனைப் பல்வேறு இடங்களில் தேடத் தொடங்கினர். அவரது செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றும் பலனளிக்கவில்லை.

பாலூர் அருகே நேர்ந்த கொடூரம்

உறவினர்கள் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த நிலையில், திருப்பனந்தாள் அருகே உள்ள பாலூர் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் மனித உடல் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், அங்கு எரிந்த நிலையில் இருந்த உடலை மீட்டனர். பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது காணாமல் போன அதிமுக பிரமுகர் மகேந்திரன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க | தேனியில் விவசாயிகள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்! ஏன் தெரியுமா?

காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக (Post-mortem) திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் குவிந்த அதிமுகவினர்

மகேந்திரனின் தற்கொலைச் செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாரதி மோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கினர். இதனால் மருத்துவமனைப் பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் சூழ்ந்தது.

நேரில் சென்று இபிஎஸ் அஞ்சலி

இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் கவனத்திற்குத் கொண்டு செல்லப்பட்டது. செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த எடப்பாடி பழனிச்சாமி, உடனடியாகத் தனது பயணத் திட்டங்களை மாற்றிக்கொண்டு இன்று திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த தற்கொலை செய்து கொண்ட தொண்டர் மகேந்திரனின் உடலுக்கு, அவரது இறுதி ஆசைப்படியே மலர்வளையம் வைத்து கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். மேலும், மகேந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

AIADMK Worker Commits Suicide in Thanjavur Over Party Defeat

கட்சிக்காக தொண்டன் எடுத்த முடிவும் அந்த தொண்டனின் ஆசையை ஏற்று கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய சம்பவமும் திருப்பனந்தாள் பகுதியில் இருந்த பொதுமக்களையும், கட்சிப் பிரமுகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க | பெரம்பலூரில் இந்த வாரம் (ஜூன் 2-7) தினமும் 5 மணி நேரம் பவர் கட்: எங்கெல்லாம் மின் வினியோகம் இருக்காது?

அரசியல் தலைவர்களின் வேண்டுகோள்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிமுக தலைமை மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். "அரசியலில் வெற்றிகளும், தோல்விகளும், சோதனைகளும் சகஜமானவை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் இது. எனவே, தொண்டர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்ற தீவிரமான முடிவுகளை எடுக்கக் கூடாது. உங்கள் உயிர் உங்கள் குடும்பத்திற்கும், இந்த இயக்கத்திற்கும் மிகவும் தேவையானது" என்று தலைவர்கள் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொண்டரின் இந்த விபரீத முடிவு திருப்பனந்தாள் மற்றும் ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டத்திலும் இன்றும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. மனதை உலுக்கும் இந்தச் சம்பவம் அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

அரசியல் தோல்விகளோ, உட்கட்சிப் பூசல்களோ தற்காலிகமானவை. எந்த வித பிரச்சனைக்கும் விலைமதிப்பற்ற மனித உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. உங்களையோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களையோ ஏதேனும் மன உளைச்சல் அல்லது தற்கொலை எண்ணங்கள் பாதித்தால், தயவுசெய்து உடனடியாக மாநில அரசின் இலவச உதவி எண்களை (Sneha Helpline - 044-24640050 / மாநில சுகாதாரத் துறை உதவி எண் - 104) தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மேலும் படிக்க | அண்ணாமலை போடும் புது கணக்கு.. புதிய கட்சி தொடங்கவில்லை! பிளானே வேற

0
0
Report

CSK, MI சாதனையை சமன் செய்த RCB... ஆரஞ்சு கேப், பர்பிள் கேப், MVP பரிசு யார் யாருக்கு?

Ahmedabad, Gujarat:

IPL 2026 RCB Won 2nd Championship : ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை தக்கவைத்துள்ளது. 17 ஆண்டுகளாக கோப்பைக்காக தவம் இருந்த ஆர்சிபி அணி, ரஜத் பட்டிதர் தலைமையில் 2025, 2026 என தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வென்றுள்ளது.

ஆர்சிபி சமன்செய்த சாதனை

இதற்கு முன் 2010, 2011 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ்; 2019, 2020 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. அதன் வரிசையில் ஆர்சிபி அணியும் தற்போது இணைந்துள்ளது. குறிப்பாக, தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் வரிசையில் ரஜத் பட்டிதார் இணைந்திருக்கிறார் எனலாம்.

இன்று (மே 31) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 155 ரன்களையே அடித்தது. வாஷிங்டன் சுந்தர் மட்டுமே போராடி 37 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். ரஷிக் சலா 3 விக்கெட், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட் 2 விக்கெட், குர்னால் பாண்டியா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பைனலின் ஆட்டநாயகன் விராட் கோலி

அடுத்து விளையாடிய ஆர்சிபிக்கு விராட் கோலி கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். அவர் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர் உடன் 75 ரன்களை குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் 178.57 ஆகும். வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 32 ரன்களை அடித்ததும் ஆர்சிபி வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது. இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார். அதிக பவுண்டரி, அதிக சிக்ஸர்களையும் அவரே அடித்திருந்தார். அதிக டாட் பந்துகளை புவனேஷ்வர் குமார் வீழ்த்தியிருந்தார். 

இறுதிப்போட்டி நிறைவடைந்திருக்கும் சூழலில், ஐபிஎல் 2026 தொடரில் முக்கிய விருதுகளை வென்ற வீரர்கள் விவரம் இதோ:

வளர்ந்து வரும் வீரர் (Emerging Player of 2026): வைபவ் சூர்யவன்ஷி - ரூ.10 லட்சம்

அதிக ஸ்ட்ரைக் ரேட் பெற்ற வீரர் (Super Striker of 2026) : வைபவ் சூர்யவன்ஷி - ஸ்ட்ரைக் ரேட்: 237.30 - டாடா கார்

அதிக சிக்ஸர் அடித்த வீரர் (Super Sixes of 2026): வைபவ் சூர்யவன்ஷி - 72 சிக்ஸர்கள் - ரூ.10 லட்சம்

அதிக சிக்ஸர் அடித்த வீரர் (Super Sixes of 2026): சாய் சுதர்சன் - 75 பவுண்டரிகள் - ரூ.10 லட்சம்

அதிக டாட் பால்கள் (Most Dot Ball bowler of 2026): முகமது சிராஜ் - 172 டாட் பந்துகள் - ரூ.10 லட்சம்

சிறந்த கேட்ச் பிடித்த வீரர் (Catch of 2026): மனீஷ் பாண்டே - ரூ.10 லட்சம்

நன்நடத்தை விருது (Fairplay Award of 2026): பஞ்சாப் கிங்ஸ்

அதிக விக்கெட் வீழ்த்தியவர் (Purple Cap of 2026): ககிசோ ரபாடா - 29 விக்கெட்டுகள் - ரூ.10 லட்சம்

அதிக ரன்கள் அடித்தவர் (Orange Cap of 2026):  வைபவ் சூர்யவன்ஷி - 776 ரன்கள் - ரூ.10 லட்சம்

மிகவும் மதிப்பு பெற்ற வீரர் (Most Valuable Player of 2026): வைபவ் சூர்யவன்ஷி - ரூ.15 லட்சம்

ஆடுகளம் மைதானத்திற்கான விருதுகள்

சிறந்த ஆடுகளம் மற்று் மைதானம் (5 போட்டிகளுக்கு மேல்): வங்காள கிரிக்கெட் வாரியம் (கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ்) - ரூ.50 லட்சம்

சிறந்த ஆடுகளம் மற்று் மைதானம் (5 போட்டிகளுக்கு குறைவாக): ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் வாரியம் (தரம்சாலா மைதானம்) - ரூ.25 லட்சம்

0
0
Report
Advertisement

IPL Final : குஜராத் ஜெயிக்க இன்னும் வாயிருக்கு... ஆர்சிபி கனவு 'இவர்களின்' கையில்...!

Ahmedabad, Gujarat:

IPL Final 2026, RCB vs GT Match Updates : ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் பரபரப்பான முதல் பாதி முடிந்திருக்கிறது. முதல் பாதியை முழுமையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. ஆர்சிபி அணி எவ்வித அவசரமும் காட்டாமல் நிதானமாக விளையாடினாலே 2வது கோப்பையை வென்றுவிடலாம் என்ற சூழல் தற்போது உள்ளது. 

ஆர்சிபி அணி டாஸ் வென்றபோதே, அந்த அணி 30% கோப்பையை நெருங்கிவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், டாஸிற்கு பின் தெரிவித்திருந்தார். தற்போது குஜராத்தை 155 ரன்களுக்கு சுருட்டியதன் மூலம், இன்னும் 30% கோப்பையை நெருங்கிவிட்டது ஆர்சிபி என்றே சொல்லலாம். 60% கோப்பையில் கைவைத்திருக்கும் ஆர்சிபி, அதை தூக்கிக் கொண்டாட இந்த சேஸ்ஸிங்கை சிறப்பாக அமைத்தாலே போதுமானது.

குஜராத் என்ன செய்ய வேண்டும்?

பவர்பிளேவில் குஜராத் அணி 3-4 விக்கெட்டை எடுத்தால் அந்த அணிக்கு பெரியளவில் வாய்ப்புள்ளது. சிராஜ், ரபாடா, ஹோல்டர், அர்ஷத் கான் என சிறந்த பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளனர். இவர்கள் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசி ஆர்சிபியை கட்டுப்படுத்தினால், அடுத்த மிடில் ஓவர் ரஷித் கானின் கைகளில் உள்ளது. பவர்பிளேவிலும், மிடில் ஓவரிலும் 6-7 விக்கெட்டை எடுக்க வேண்டிய நிலையில் குஜராத் உள்ளது. 

சிராஜ், ரபாடா கையில் ஆர்சிபி கனவு

மறுபக்கம், ஆர்சிபி அணிக்கு சேஸ்ஸிங் கிங் விராட் கோலி இருக்கும் நிலையில் அவர் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பந்தில் சிராஜ் மற்றும் ரபாடா பந்துவீச்சை தாக்குப்பிடித்து, விக்கெட்டை விடாமல் சீராக ரன்களை சேர்த்தாலே ஆர்சிபி அணி இன்று கோப்பையை தட்டித்தூக்குவது உறுதியாகிவிடும்.

அதன்மூலம், சிஎஸ்கே (2010, 2011) மற்றும் மும்பையின் (2019, 2020) வரிசையில் ஆர்சிபி அணியும் தொடர்ச்சியாக 2வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

0
0
Report

தேடி வந்த துணை முதல்வர் பதவி... நோ சொன்ன பிரமலதா - தேமுதிகவிடமும் விஜய் பேசினாரா?

Chennai, Tamil Nadu:

Premalatha Latest News Updates : சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலர்கள் இன்று (மே 31) கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேமுதிக மாவட்ட செயலளர்கள் கூட்டம் நடப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. 

மாவட்ட செயலளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, "பேரத்திற்கும் பதவிக்கும் சோஃபாவுக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான். யாரை தீய சக்தி என தவெக சொன்னதோ அந்த தீய சக்தியின் ஆதரவோடுதான் ஆட்சி நடந்து வருகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி தவெக தரப்பில் எங்களை அணுகினர். நான் மட்டும் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஜய் துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். மற்ற கட்சிகளிடம் யார் பேசினாரோ, அதே நபர் எங்களிடமும் பேசினார்.

தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின் ஒரு கூட்டணி என்ற நிலை எங்களுக்கு இல்லை. இது உண்மையான தேர்தலே அல்ல என மக்கள் நினைக்கின்றனர். சினிமா கவர்ச்சி என்ற மாயையால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. விரலில் வைத்த மை கூட காயாத நிலையில், பதவியை ராஜிநாமா செய்வது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு" என்றார்.

தொடர்ந்து அவர், "விமர்சிப்பதில் ஹனிமூன் பீரியட் எல்லாம் பார்க்க முடியாது. அவதிக் கால பீரியட் என மக்கள் நினைக்கின்றனர். கூட்டணி தர்மத்தை அதிமுக மதிக்கவில்லை. தேமுதிகவுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை. கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மட்டுமே நினைத்தார்" என பேசினார்.

மேலும் படிக்க | ஜூன் மாதம் வரும் ரூ. 3000.. முதலமைச்சர் விஜய்யின் ஜாக்பாட் அறிவிப்பு!

மேலும் படிக்க | பயந்து நடுங்க கூடாது... முதல்வர் விஜய்யை கிழித்தெடுத்த உதயநிதி... காவி திருவள்ளூவர் சர்ச்சை

மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகையில் முறைகேடு? வட மாநிலத்தவர்களுக்கும் ரூ. 1000.. அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு
 

0
0
Report

தேர் சக்கரத்தில் நசுங்கி இளைஞர் பலி... திருச்செங்கோட்டில் நடந்தது என்ன? - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Kavundampalayam, Tamil Nadu:

Tiruchengode Ther Festival Accident Latest News : நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று  (மே 31) நடைபெற்றது. அப்போது, தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அதில், இன்னொரு இளைஞர் படுகாயம் அடைந்தார். 

இந்துசமய அறநிலையத்துறை நிதி ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு புதிய தேர் செய்யப்பட்டு முதன்முறையாக தேரோட்டம் நடக்க இருந்தது. தேர் நிலை பெயர்க்கும்போது சுவருக்கும் தேருக்கும் இடையில் சிக்கி இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹர்ஷவர்த்தன் எனும் இளைஞர் உயிரிழந்த நிலையில், சஷ்டிகன் என்ற இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார்.

வைகாசி விசாக தேர்த்திருவிழா மிக சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி மலையில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக கீழிறங்கி வந்து, இன்று (மே 31) ரதம் ஏறினார். நான்கு வீதிகளில் உலா வர புறப்படும் சமயத்தில் இந்த கோர சம்பவம் நடந்தது. 

0
0
Report
Advertisement

ஆர்சிபி ரசிகர்களுக்கு... பெரிய தடை... காவல்துறை கொடுத்த எச்சரிக்கை - ஐபிஎல் பைனல் பரபரப்பு

Bengaluru, Karnataka:

IPL Final 2026, RCB vs GT : ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே 31) நடைபெற இருக்கிறது. ரஜத் பட்டிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் என இரண்டு அணிகளுமே தங்களின் இரண்டாவது கோப்பைக்காக இன்று முட்டிமோத உள்ளன. 

இன்று மாலை 6.30 மணியில் இருந்து நள்ளிரவு தாண்டியும் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இறுதிப்போட்டியை ஆவலோடு கண்டுகளிக்க தயாராகி வருகிறது. இப்போட்டியில் குஜராத் வெல்வதை காட்டிலும் ஆர்சிபி வென்றால் நிச்சயம் நாடு முழுவதும் பெரியளவில் கொண்டாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஐபிஎல் இறுதி போட்டியில் வெல்லப்போகும் அணி இதுதான் - அடித்து சொல்லும் அஸ்வின்!

ஆர்சிபி அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி தொடர் முழுவதும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் கலக்கி வந்துள்ளது. சீனியர் வீரரான விராட் கோலி இந்தாண்டு விளையாடும் கடைசி டி20 போட்டியும் இதுதான். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி ஆர்சிபி அணியால் கப் அடிக்கவே முடியாது என சொல்லப்பட்டு வந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு ஆர்சிபி அணி முதல் கோப்பையை ருசித்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிலை என்ன?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கோ பலத்தை விட பலவீனங்களே அதிகம். சாய் சுதர்சன், சுப்மான் கில், ஜாஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கிலும், ரபாடா மற்றும் சிராஜ் ஆகியோர் பந்துவீச்சிலும் தொடர்ந்து கைக்கொடுக்கிறார்கள். ஹோல்டர் அவ்வப்போது கைக்கொடுக்கிறார். ஆனால், மற்ற வீரர்கள் அனைத்தும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் பலரும் ஆர்சிபி அணியே வெற்றிபெறும் என்றும் கணிக்கிறார்கள், சிலர் மட்டுமே குஜராத் பக்கம் நிற்கிறார்கள்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி: ஒருவேளை மழை பெய்தால் சாம்பியன் யார்? முழு விவரம்

காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?

  • அப்படியிருக்க, ஆர்சிபி ரசிகர்கள் இப்போது இருந்தே தங்களின் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், பெங்களூரு போலீசார் பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.
  • இன்றைய போட்டிக்கு முன்னரும், போட்டி நடைபெறும் போதும், போட்டிக்கு பின்னரும், அமைதியுடனும் ஒழுக்கத்துடனும், பொது ஒழுங்கை பேணும்படி பெங்களூரு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
  • பெங்களூரு முழுவதும் போக்குவரத்து நெரிசல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் கொண்டாட்டங்கள் தொடர்பான விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுப்பதற்காக சிறப்பு முன்னெச்சரிக்கைர நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • போலீசார் நேற்று முன்தினம் (மே 29) அறிவுறுத்தலின்பேரில், போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, ரசிகர்கள் பொது இடங்களில் கொண்டாடங்களுக்காக ரசிகர்கள் கூட வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 
  • கட்டுப்பாடற்ற கொண்டாட்டங்கள் பாதுகாப்பு அபாயங்களையும் பொதுமக்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
  • அதேநேரத்தில், எவ்வித அனுமதியும் இன்றி சாலைகளை நோக்கியவாறு எல்.ஈ.டி திரைகளை வைப்பதற்கும், போட்டிகளை ஒளிப்பரப்புவதற்கும் காவல்துறை தடைவித்துள்ளது.
  • அதேபோல், மால்கள், பப்கள், உணவகங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு வெளியே பொதுமக்கள் பார்க்கும் வகையில் போட்டியை நேரடி ஒளிபரப்புகளை ஏற்பாடு செய்யக்கூடாது. 
  • கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசு வெடிப்பதற்கும், அபாயகரமான பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 
  • பைக் பேரணிகள், அதிவேகமாகச் செல்லுதல், அபாயகரமான சாகசங்கள் செயதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் இந்த அறிவுரை மேலும் தடை விதித்துள்ளது. 
  • பொது இடங்களில் மது அருந்துவது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது, சண்டையிடுவது அல்லது கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வது போன்றவற்றுக்கு எதிராக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
  • வதந்திகள், ஆத்திரமூட்டும் செய்திகள் அல்லது வெறுப்புணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்களை இணையத்தில் பரப்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 
  • எதிரணி ஆதரவாளர்களை கேலி செய்யவோ, சீண்டவோ அல்லது அவமதிக்கவோ வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய நடத்தை தேவையற்ற மோதல்களுக்கு வழிவகுக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கூட்டநெரிசல் சம்பவத்தால் அறிவுரைகள்

கடந்தாண்டு ஜூன் 3ஆம் தேதி ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பெங்களூருவில் கூட்டநெரிசல் ஏற்பட்டத்தில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, இந்த அறிவுறுத்தலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | குஜராத் கப் அடிக்க அதிக வாய்ப்பு... ஆர்சிபிக்கு ஆப்பு ரெடியா...? ஐபிஎல் பைனல் A to Z இதோ

0
0
Report

அஜித் குமாரை கட்டியணைத்து முதல்வர் விஜய் ஆறுதல்... மறைந்த தாயாருக்கு நேரில் அஞ்சலி

Chennai, Tamil Nadu:

Actor Ajith Kumar Mother Death : பிரபல நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமாரின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (மே 29) காலமானார். அவருக்கு 84 வயது. இந்த துயரச் செய்தி அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது 

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | கோவை மெட்ரோ திட்டம்.. முதல் அடி எடுத்து வைத்த முதலமைச்சர் விஜய்!

சென்னை வந்தார் அஜித் குமார்

சென்னை பாலவாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்தில் அவரது தாயாரின் இறுதிச்சடங்குகள் ஞாயிறு அன்று (மே 31) நடைபெற உள்ளது. நடிகர் அஜித் குமார்  துபாயில் இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு விமானம் மூலம் அவசர அவசரமாக சென்னை வந்தடைந்தார்.

பிரபலங்கள் இரங்கல்

கடந்த 2023ஆம் ஆண்டு, அஜித்தின் தந்தை பி.சுப்ரமணியம் காலமானார். அவர் உயிரிழந்து மூன்றாண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது அவரது தாயார் மோகினி காலமாகி இருக்கிறார். அஜித்தின் தாயார் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

நேரில் சென்ற முதல்வர் அஞ்சலி

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் சனிக்கிழமை இரவு, பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அஜித்தை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். காலமான அஜித்தின் தாயார் உடலுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் விஜய் உடன் நடிகை திரிஷாவும் அங்கு வந்திருந்தார். திரிஷாவும் அஜித் குமாருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.

முன்னதாக முதலமைச்சர் விஜய் அவரது X தளத்திலும் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். " நண்பர்  அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்துவாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க | பயந்து நடுங்க கூடாது... முதல்வர் விஜய்யை கிழித்தெடுத்த உதயநிதி... காவி திருவள்ளூவர் சர்ச்சை

0
0
Report

அமைச்சர்களின் ‘அசிஸ்டென்ட் விவகாரம்’... அதிரடி காட்டிய முதலமைச்சர் விஜய்.!

PPINEWZ2d ago
Chennai, Tamil Nadu:

TN Minister Assistan officers Selection News: தமிழக அமைச்சரவை பட்டியல் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. இந்த அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்களின் நிர்வாக பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், அமைச்சர்களின் அலுவலக உதவியாளராக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். உதவியாளர்களை தேர்வு செய்வதில் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், ஜாதி மதம் பார்க்காமல் நடுநிலையாக தகுதியானவர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு:

தலைமை செயலக அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய். தமிழகத்தின் அரசு துறைகளை வழிநடத்த 34 அமைச்சர்களை முதலமைச்சர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களுக்கு உதவியாக தனி உதவியாளர், ஆபிஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் மற்றும் சீனியர் அசிஸ்டென்ட், டிரைவர், தபேதார், கம்யூட்டர் ஆபரேட்டர்கள், செக்யூரிட்டி போலீஸ் என ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தனி பட்டாளமே தேவைப்படும்.

மேலும் படிக்க: ஜூன் 22ல் முதல் மகளிருக்கு ரூ. 2500? முதல்வர் விஜய் அதிரடி முடிவு.. அமைச்சர் செங்கோட்டையன் ஓப்பன் டாக்!

அந்த வகையில் அதற்கான ஆட்களை தேர்வு செய்யும் பணியில் அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் முதலமைச்சர் விஜய் இத்தகைய பதவிகளுக்கான ஆட்களை தேர்வு செய்யும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதே சமயம் அமைச்சர்களுக்கு இது குறித்த ஒரு முக்கிய உத்தரவையும் பிறப்பித்துள்ளார். 

ஜாதியோட நிழல் படியக் கூடாது:

அமைச்சர்களின் அலுவலகத்தில் ஜாதியோட நிழல் படியக் கூடாது என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். ஜாதி, மதம், சொந்த பந்தம்னு எந்த பாசமும் பார்க்கக் கூடாது. தகுதி மட்டுமே தாரக மந்திரமாக இருக்க வேண்டும். கோட்டை வட்டாரத்தில் கசிந்திருக்கும் இந்த ஒரு தகவல் தான் தற்போதைய முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது. 

ஆட்களை தேர்வு செய்வதில் பழைய ‘மெத்தட்’-க்கு முற்றுப்புள்ளி:

அமைச்சர்களின் அலுவல் வேலைகளுக்கு நியமிக்கப்படும் ஆட்களை தேர்வு செய்வதில் வழக்கமான முறையிலிருந்து முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பெல்லாம் அமைச்சர்களின் உதவியாளராகவும், அலுவலக பணியாளராகவும் நியமிக்க அவர்களது உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் ஜாதி அடிப்படையில் பார்த்து பார்த்து ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு முக்கிய காரணம் அமைச்சர்களின் நிர்வாக ரகசியங்கள் கசிந்து விடக்கூடாது என்பதற்காகவும், தாங்கள் செய்யும் ஊழல்களையும் வெளியில் தெரியாமல் மறைக்கவே இத்தகைய நடைமுறையை அவர்கள் கையாண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பெண்களுக்கு குட் நியூஸ்.. அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்.. அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் முதலமைச்சர் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதாவது, ஜாதியின் அடிப்படையிலோ அல்லது உறவினர்கள் என்ற அடிப்படையிலோ எவருக்கும் இந்த பதவிக்கு இடமில்லை என்றும், படித்தவர்களுக்கே இந்த அமைச்சர் குழுவில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தகுதியற்றவர்கள் இந்த பணியில் இருந்து நீக்கப்பட்டு தகுதியான படித்த நபர்கள் இதில் பணியாற்ற வாய்ப்புகள் வழங்கப்படும். 

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு:

நிர்வாக திறன்களை கையாள்வது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்றை முதலமைச்சர் அனுப்பியுள்ளார். தற்போது தவெக அரசு தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்றும், அவர்களின் நிர்வாக திறமையில் சற்று தொய்வு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றும், இதனால் அவர்களுக்கு நிர்வாக திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கசிந்த ரகசிய தகவல்:

அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ரகசிய தகவலில், அமைச்சர்களுக்கு அனுபவக் குறைவு என்பதால், தொய்வு ஏற்படுவது யதார்தமே. புதியதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் சிலர் மட்டும் தான் நிர்வாகத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால் நிர்வாக திறமையில் குன்றி இருப்பவர்களை ஆதரித்து அதிகாரிகளாகிய நீங்கள் தான் அமைச்சர்களை எதிர்பாராமல் தாங்களாகவே முன்வந்து அன்றாட நடவடிக்கைகளை கையாள வேண்டும் எனவும், மேலும் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிது தங்களது கடமை என்றும் தெரிவித்துள்ளார். 

காத்திருந்தோருக்கு அதிர்ச்சி கொடுத்த கோட்டை: 

முதலமைச்சர் விஜயின் இந்த அதிரடி உத்தரவால் தங்களுக்கு நெருக்கமானவர்களின் பட்டியலோடு காத்திருந்த அமைச்சர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுதி வாய்ந்த திறமையான நபர்களை மட்டுமே அந்த 400-க்கும் மேற்பட்ட சீட்களில் உட்கார வைக்க வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்கிறது. நிர்வாகத் தூய்மை அமைச்சர்களின் அறையிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதற்காக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவக்கும் என்றும் நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க: விஜய் மகளிர் உரிமைத்தொகை : ரூ.2500 பெற 30 மாதங்கள் காத்திருக்க வேண்டுமா? திமுக பார்முலா

0
0
Report
Advertisement

கடலூர்: வடலூர் பெண் கொலை வழக்கு, குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம் வெளியீடு!

Vadalur R.F., Tamil Nadu:

Vadalur Crime News: வடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அதிரடி திருப்பமாக அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ள அந்தப் பெண் தொடர்ந்து வற்புறுத்தியதால், ஆத்திரத்தில் இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக கைதான வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த கொலை வழக்கின் பின்னணி என்ன? காவல்துறை கொலையாளியை கண்டுபிடித்தது எப்படி? போலீசின் அதிரடி விசாரணையில் குற்றவாளி அளித்த பகீர் வாக்குமூலம் என்ன? முழு விவரத்தையும் இந்த பதிவில் காணலாம்.

வடலூரில் நள்ளிரவில் நெடுஞ்சாலையில் கிடந்த சடலம்

கடலூர் மாவட்டம் வடலூர் கண்ணுத்தோப்பு அருகே, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பார்ப்பதற்கே நெஞ்சை பதறவைக்கும் வகையில் முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் குவியலுக்குள் பாதி புதைந்த நிலையில் அந்த சடலம் கிடந்தது. இது வடலூரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதைப்பார்த்து பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

வடலூர் கொலை வழக்கு: தனிப்படை அமைத்து தீவிர வேட்டை

கொல்லப்பட்ட பெண் யார்? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து துப்புலக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின் பேரில், உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் வடலூர் ஓ.பி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி மஞ்சுளா என்பது தெரியவந்தது. மஞ்சுளாவின் செல்போன் எண்கள் மற்றும் அவரது நட்பு வட்டாரங்களை நோக்கி போலீசார் தங்களது விசாரணையைத் திருப்பியபோதுதான், இந்த கொலையின் பின்னணியில் இருந்த கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

காவல்துறை விசாரணையில் சிக்கிய கள்ளக்காதலன்

மஞ்சுளாவின் செல்போன் அழைப்புகளை (Call Details) ஆய்வு செய்தபோது, அவர் நெய்வேலி அருகே உள்ள சேப்பளாநத்தம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தகாத உறவு இருந்து வந்துள்ளது.

சம்பத்குமாரின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே, தனிப்படை போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சம்பத்குமார் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். ஆனால், ஆதாரங்களை முன்வைத்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், மஞ்சுளாவை தானே கொலை செய்ததாக சம்பத்குமார் ஒப்புக்கொண்டு, வாக்குமூலம் அளித்தார்.

மேலும் படிக்க | த்விஷா சர்மா வழக்கு: சம்பவத்தன்று நடந்தது என்ன? 'டன்னல் வியூ' முறையில் CBI ஆய்வு

குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்

குற்றவாளி சம்பத் குமார் அளித்த வாக்குமூலத்தில், நள்ளிரவில் நடந்த பயங்கரம் அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சம்பத்குமார் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

"மஞ்சுளாவுக்கும் எனக்கும் இடையே கடந்த சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. கடந்த புதன்கிழமை இரவு மஞ்சுளா சென்னையில் இருந்து பேருந்து மூலம் வடலூருக்கு வந்து கொண்டிருந்தார். நான் அவரை அழைத்து வருவதற்காக விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்ரோடு பகுதிக்கு எனது இருசக்கர வாகனத்தில் சென்றேன்.

Vadalur Woman Murder Case

அங்கிருந்து மஞ்சுளாவை எனது பைக்கில் ஏற்றிக்கொண்டு வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது பைக் ஓடிக்கொண்டிருக்கும் போதே மஞ்சுளா என்னிடம், 'நாம் இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்? என்னை முறைப்படி கல்யாணம் செய்துகொள்' என்று வற்புறுத்தினார். நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

பைக் வடலூர் அடுத்த கண்ணுத்தோப்பு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற நான், வண்டியை நிறுத்திவிட்டு, என்னிடம் இருந்த கத்தியால் மஞ்சுளாவை சரமாரியாக வெட்டினேன். அவர் அலறியடித்தும் நான் விடவில்லை. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அவரது முகத்தை கொடூரமாக சிதைத்தேன்.

பின்னர், சாலையோரம் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் அவரது உடலை அரைகுறையாகப் புதைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராதவாறு அங்கிருந்து தப்பியோடிவிட்டேன்."

இவ்வாறு சம்பத்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பாக எஸ்பி ஜெயக்குமார் விளக்கம்

இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை அல்ல. இருசக்கர வாகனத்தில் வரும்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதத்தின் விளைவாக, ஆத்திரத்தில் நடந்த சம்பவமாகவே முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது இருப்பினும், குற்றவாளி சம்பத்குமாரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது." என்று கூறினார்.

மேலும் படிக்க | தஞ்சாவூர் அருகே பரபரப்பு: காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ, காவலர்களுக்கு உருட்டுக்கட்டை அடி- 6 பெண்கள் கைது!

வடலூர் கொலை வழக்கில் சமீபத்திய தகவல்

  • வடலூரில் பரபரப்பு: நள்ளிரவில் பைக் பயணத்தின் போது நடந்த இந்த கொடூரக் கொலை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
  • நீதிமன்றக் காவல்: கைது செய்யப்பட்ட சம்பத்குமார் மீது கொலை (IPC 302 / புதிய சட்டப்பிரிவு), சாட்சியங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
  • தடயவியல் ஆய்வு: சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி ரத்த மாதிரிகள் மற்றும் கைரேகைகளை சேகரித்துள்ளனர்.
  • பிரேதப் பரிசோதனை அறிக்கை: மஞ்சுளாவின் உடலில் எத்தனை வெட்டுக்காயங்கள் உள்ளன மற்றும் அவரது மரணத்திற்கான துல்லியமான காரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

திருமணத்தை மீறிய தகாத உறவால், ஒரு இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, மணலில் புதைக்கப்பட்ட சம்பவம் வடலூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. கண்ணீரில் பெற்றோர்.. புதுக்கோட்டையில் பகீர்

0
0
Report

சன்டே சென்னை புறப்படும் மக்களே... உங்களுக்காக சிறப்பு ரயில் - உடனே முன்பதிவு செய்யுங்க

Nagercoil, Tamil Nadu:

Nagercoil - Chennai Egmore Special Train : கோடை விடுமுறை காரணமாக பள்ளி, கல்லூரிகளிலும் விடுமுறை என்பதால் பலரும் தங்களின் சொந்த ஊருக்குச் செல்வார்கள். இதனால், ரயில், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே, கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து இயக்கப்படுவது இயல்புதான்.

அந்த வகையில், நேற்று (மே 28) பக்ரீத், இன்று (மே 29) சுபமுகூர்த்த நாள் ஆகும். அதேநேரத்தில், நாளையும், நாளை மறுதினமும் வார இறுதி நாட்கள் என்பதால் சென்னை போன்ற நகரங்களில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிப்பார்கள். அதேபோல், தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்தும் சென்னை திரும்புவார்கள்.

மேலும் படிக்க | சேலம், ஈரோடு வழியாக எர்ணாகுளம் - சென்னை சிறப்பு ரயில் இயக்கம்: முக்கிய அறிவிப்பு

பெரும்பாலும் பொதுமக்கள் முன்பதிவு செய்து தங்களின் பயணத்தை திட்டமிடுவார்கள். ஆனால், ஒரு சிலர் கடைசி நேர திட்டமிடல் காரணமாக முன்பதிவு செய்யாமல் தான் பயணிப்பார்கள். இவர்களுக்கு சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகள்தான் பெரும் வரப்பிரசாதம் ஆகும்.

சிறப்பு ரயில் சேவை

இந்தச் சூழலில், மக்கள் கூட்டத்தை குறைக்கும் விதமாக, நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே கோடை கால சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே செயல்படுத்த உள்ளது. இந்த வழிதடத்தில் இது கூடுதலாக இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆகும்.

பகல் நேர சேவை

வரும் ஞாயிறு அன்று பலரும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு புறப்படுவார்கள். பலரும் இரவில்தான் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவார்கள். ஆனால், இந்த ரயில் சேவை பகல் நேரத்தில் இயக்கப்படுகிறது. இதன்மூலம், இரவில் கூட்டத்தை தவிர்க்க நினைப்போர் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக்கொள்வார்கள். இரவே சென்னைக்கும் சென்றடையலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு இந்த சிறப்பு ரயில் பேரூதவியாக இருக்கும். 

சிறப்பு ரயில் அட்டவணை

வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 31) அன்று பகல் 11.45 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில், சென்னை எழும்பூரில் வரும் இரவு 11.55 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில் (ரயில் எண்: 06196) ஒற்றை சேவையாகவே இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க | பயணிகள் கவனத்திற்கு: சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு, முழு விவரம் இதோ

சிறப்பு ரயில் நின்று செல்லும் இடங்கள்

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மொத்தம் எத்தனை பெட்டிகள்?

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில், 2 ஏசி சேர் கார் பெட்டிகள், 16 சேர் கார் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் (மாற்றுத்திறனாளி) உள்ளிட்டவை இருக்கும்.

முன்பதிவு எப்போது? 

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலின் முன்பதிவு, சனிக்கிழமை (மே 30) அன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.

சிறப்பு பேருந்துகளும் இயக்கம்

சிறப்பு ரயில் மட்டுமின்றி சிறப்பு பேருந்து தமிழ்நாடு அரசால் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வரும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு செல்ல பயணிகளின் வசதிக்காகவும், அவர்களின் தேவைக்கு ஏற்பவும் அனைத்து இடங்களில் இருந்து மொத்தம் 1085 சிறப்பு பேருந்து இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் கூட்டத்தை தவிர்க்க www.tnstc.in மற்றும் TNSTC மொபைல் செயலியின் மூலம் விரைவாக முன்பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | ரூ.19,900 சம்பளத்தில் ரயில்வே வேலை.. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க

0
0
Report

அந்த 4 எம்எல்ஏக்கள்... சிபிஐ விசாரணையில் சிக்குவார்கள்... இன்பதுரை சொன்ன முக்கிய பாயிண்ட்

Thoothukudi, Tamil Nadu:

AIADMK Latest News Updates : தூத்துக்குடியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை இன்று (மே 29)  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "விஜய் தலைமையிலான தவெகவினர் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள எம்ஜிஆர் மரபை அழித்துவிட்டு, விஜய் மரபு என்ற புதிய மரபை உருவாக்குவதற்காக முயற்சி செய்கிறார்கள். 

தேர்தலுக்கு முன்பு நிலைப்பாடு திமுக ஒரு தீய சக்தி, அதை அழிக்க வேண்டும் என்பதுதான். அப்படிதான், தேர்தலில் எம்ஜிஆர் படத்தை மற்றும் அண்ணா படத்தை பயன்படுத்தினார். தேர்தலில் அதிமுகவும், திமுக ஒரு தீய சக்தி என்று சொன்னது, இப்போது தேர்தல் முடிந்துவிட்டது.

மேலும் படிக்க | சிவி சண்முகத்தின் அடுத்தகட்ட நகர்வு? தவெகவில் இணைகிறாரா?

விஜய் எம்ஜிஆர் நினைவகத்திற்கு சென்றாரா?

தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்திய எம்ஜிஆர் முகத்தையும், அண்ணா முகத்தையும் இப்போது தவெக எங்கே வைத்திருக்கிறது?, எங்கேயாவது பயன்படுத்துகிறார்களா?, தேர்தல் வெற்றி அடைந்ததும் தந்தை பெரியார் இல்லத்திற்கு சென்றார், வரவேற்கிறேன். எம்ஜிஆர் நினைவகத்திற்கு அவர் இதுவரை சென்றிருக்கிறாரா, அண்ணா பெயரை உச்சரித்திருக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. 

அதற்கு மாறாக ஜெயலலிதா பெயரிலான அம்மா உணவகத்தில் படத்தை அகற்ற முயற்சிக்கிற ஆட்சிதான் இது. இறுதியில் எம்ஜிஆர் மரபை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது, யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவை அழிக்கலாம் என்று சென்றவர்கள் பல பேர் அழிந்து போனார்கள். அதிமுக ஒரு ஆலமரம், இதில் இருந்து சில கிளைகள் உதிரும், மரப்பட்டைகள் உதிரத்தான் செய்யும், அசையாமல் இருக்கும்.

எம்ஜிஆர் மரபை அழிக்க முடியாது

ஆதவ் அர்ஜுனா சொல்கிறார், 90 சதவீத அதிமுகவினர் இங்கே வந்துவிடுவார்கள் என்று... தவெக அடைந்த வெற்றி ஒரு மாயாஜால வெற்றி, முழுமையாக எட்டு மாவட்டங்களில் வெற்றி அடையவில்லை. சுமார் 48 தொகுதிகளில் மூன்றாவது இடம். தற்போது அதிமுகவில் இருந்து பிள்ளை பிடிக்கும் வேலையை, ஆள் பிடிக்கும் வேலையை செய்கிறார்கள்

பிள்ளை பிடிப்பவர்களாக மாறி உள்ளனர். திமுக கூட்டணியில் இருந்து ஆள் தூக்கி உள்ளனர். திமுகவை தீய சக்தி அதன் கூட்டணியில் இருப்பவர்களும் தீய சக்தியினர் என்று கூறிவிட்டு, அண்ணா திமுகவை ஆட்சி அமைக்க தவெக அழைக்காமல்... தீய சக்தியை வீழ்த்துவதுதான் இரண்டு பேரோட நோக்கம், திமுகவின் கூட்டணி கட்சிகளை அழைத்து வந்து ஒரு ஆட்சியை அமைக்கிறார்கள் என்றால் எம்ஜிஆர் மரபை அழிக்க வேண்டும் என்பது நோக்கம், ஆனால் ஒருபோதும் எம்ஜிஆர் மரபு அழிக்க முடியாது.

ரீல்ஸ் மோகம்

தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து அவர்களுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும். அவர்கள் எல்கேஜி நிலையில் இருக்கிறார்கள். ஆட்சியை செய்வதற்கான பயிற்சி இல்லை. ரீல்ஸ் மோகத்தில் வாழ்ந்தார்கள், கனவு உலகத்தில் மிதந்தார்கள், மேகத்தில் மெத்தை போட்டார்கள், கனவு உலகத்தில் இருந்து இப்போதுதான் இறங்கி வந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆட்சி செய்ய போதிய அவகாசம் வழங்க வேண்டும்.

மேலும் படிக்க | அதிமுகவினர் தவெகவை தேடி வரும் காரணம் இதுதான்... ஆதவ் அர்ஜுனா பளிச்

இது எல்கேஜி அரசாங்கம்

உட்கட்சி பிரச்சனையை அதிமுக பேசி தீர்த்துக் கொள்ளும். நல்ல தீர்வு வரும். அதிமுகவை அழிக்க உருவாக்கப்பட்டதுதான் தவெக என்று முன்பு சொல்லி இருந்தேன். அதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். உங்கள் கட்சிக்கு போதிய எண்ணிக்கை இல்லை, பின்னர் ஏன் அதிமுக கூட்டத்தில் இருந்து ஆடுகளை திருடுகிறீர்கள் என ஆதவ் அர்ஜுனாவை கேட்கிறேன். பொதுவாக இது ஒரு கத்துக்குட்டி அரசாங்கம், எல்கேஜி அரசாங்கம், போதிய பயிற்சி பெறணும் 

அண்ணா திமுகவின் உடைய நான்கு எம்எல்ஏக்களை பிள்ளை பிடிப்பவர்கள் போன்று பிடித்து கொண்டு சென்றுள்ளனர். ஏதோ வசியம் செய்து ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்றிருக்கிறார்கள். இந்த நான்கு தொகுதிகளில் அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறையில் தவெக மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு தவெக வருவதை மக்கள் விரும்பவில்லை.

சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

அதிமுக உழைப்பை சுரண்டி வெற்றி பெற்றவர்கள் மர்மமான முறையில் அதிமுகவை விட்டு சென்றிருக்கிறார்கள். கீழே ராஜினிமா செய்கிறார்கள், மேலே கட்சியில் இணைகிறார்கள். கட்சி தாவல் தடைச் சட்டம் விசாரணை இருக்கும்போது அதை பரிசீலிக்காமல், அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு அவசர அவசரமாக முடிவெடுத்து, உடனடியாக ஆளும் கட்சியில் சேர்த்தது சர்ச்சைக்குரியது.

இதுபோன்று கட்சி தாவல் இருக்கும் நிலையில் சபாநாயகர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. அரசியல் சட்ட விதிமுறைகள் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை சபாநாயகர் தவறாக பயன்படுத்துகிறார். இது குறித்து ஏற்கனவே ஆள் தூக்கி வேலைகளை செய்கிறது என்றும் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றும் புகார் உள்ளது 

இதுகுறித்து ஆளுநரிடம் அதிமுக புகார் அளிக்கும் இந்த இதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் சிபிஐ விசாரணை நிச்சயமாக கேட்போம். இதில் என்னென்ன நடந்திருக்கு? எவ்வளவு பணம் பரிமாறி இருக்கிறது? என்ன சாதகமான நிலை நடந்திருக்கிறது? என்பது தெரியவரும். அதற்கான விளைவுகளை கட்சி தாவி நான்கு பேரும் சந்திக்க வேண்டும்" என எச்சரித்தார். 

மேலும் படிக்க | அதிமுக உயிர் மூச்சு.. தவெகவுக்கு ஆதரவு அளித்தது ஏன்? எஸ்.பி.வேலுமணி பளீச் பதில்

0
0
Report
Advertisement

ஜூன் மாசமும் கொளுத்தப் போகுது வெயில்... 11 மாநிலங்களுக்கு பெரிய அலர்ட் - தமிழ்நாடு இருக்கா...?

New Delhi, Delhi:

IMD Warning On Heat Waves June 2026 :  இந்தியாவில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டாலும் கூட இன்னும் பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயிலின் தாக்கம் இருந்துதான் வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களும் வெளியே வர இயலாமல், வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் உள்ளது.

வெயில் கடுமையாக இருந்தால், நீர்நிலைகள் வற்றிவிடும். பயிர்களுக்கு மட்டுமின்றி மனிதர்கள் குடிப்பதற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். கால்நடைகள் முதல் வனவலிங்குகள் வரை கடுமையான பாதிப்பை ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும். ஒருவழியாக, கத்திரி வெயில் காலம் முடிந்துவிட்டது, ஜூன் பிறந்தால் வெயில் குறைந்து, மழை பொழிவு அதிகரிக்கும் என மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரும் ஜூன் மாதத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பால் பொதுமக்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இயல்பை விட குறைவான மழைப்பொழிவு, வடகிழக்கு இந்தியாவில் நீண்ட கால சராசரியில் 94% முதல் 106% வரையில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மத்திய இந்தியா, தென்னிந்திய தீபகற்ப பகுதிகள், வடமேற்கு இந்தியா, பருவமழையை மையமாக கொண்ட மண்டலங்கள் ஆகியவை இந்த இயல்பை விட குறைவான பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பருவமழை பொழியும் அளவு குறையும்போது, ஜூன் மாதம் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பேரில், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா என 8 மாநிலங்களில் சராசரியை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் பதிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த 8 மாநிலங்களை அடுத்து மகாராஷ்டிரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான மழைப்பொழிவு, அதிக வெப்பத்தால் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் மின் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு என்றும் எச்சரித்துள்ளது. அதே வேளையில், வெப்ப அலையை எதிர்கொள்ள மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

0
0
Report

கோயம்புத்தூர் மின் தடை: மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி பகுதிகளில் நாளை 7 மணி நேர பவர்கட்

Coimbatore, Tamil Nadu:

Coimbatore Power Shutdown Update: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காகவும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக, கோவை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான மேட்டுப்பாளையம், அன்னூர், பசூர் மற்றும் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என மொத்தம் 7 மணி நேரம் இந்த மின் தடை அமலில் இருக்கும் என கோவை மின் பகிர்மான வட்ட வடக்கு செயற்பொறியாளர் ஆர்.சத்யா மற்றும் பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க - தஞ்சாவூரில் நாளை (மே 30) 8 மணி நேரம் மின்தடை: எங்கெல்லாம் பவர் கட்? லிஸ்ட் இதோ

பராமரிப்பு பணிகள் மீண்டும் தீவிரமடைந்தது ஏன்?

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றதால், பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த காலகட்டத்தில் எவ்வித தடையுமின்றி சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது தேர்வுகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், மின் பாதைகளில் உள்ள பழுதுகளை நீக்குதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், மின் கம்பிகளில் உராய்ந்து நிற்கும் மரக்கிளைகளை வெட்டுதல் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தல் போன்ற அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மின்வாரிய ஊழியர்கள் தற்போது மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் கால அட்டவணை

பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும் வகையில், மின்சார விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் மற்றும் துணை மின் நிலையங்களின் விவரங்கள் கீழே அட்டவணையாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

1. நாளை (30.05.2026 - சனிக்கிழமை) மின்தடை பகுதிகள்:

துணை மின் நிலையங்கள்

மின்தடை நேரம்

மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள்

மேட்டுப்பாளையம், அன்னூர், பசூர் காலை 09:00 மணி முதல்மாலை 04:00 மணி வரை மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், கரியம்பாளையம், தெலுங்கு பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அன்னூர் நகரம், பசூர், பூசாரி பாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டப்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக் காடு புதூர், அம்மா செட்டி புதூர்

2. இன்று (29.05.2026 - வெள்ளிக்கிழமை) மின்தடை பகுதிகள்:

துணை மின் நிலையங்கள்

மின்தடை நேரம்

மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள்

தாளக்கரைஜமீன், முத்தூர்(பொள்ளாச்சி கோட்டம்) காலை 09:00 மணி முதல்மாலை 04:00 மணி வரை ஜமீன் முத்தூர், அய்யம்பாளையம், மண்ணூர், ராமபட்டிணம், வெள்ளையகவுண்டனூர், கொசுவமடை, ராமநாதபுரம், ஜலத்தூர், தேவம்பாடி, காளிபாளையம், களத்துபுதூர், செல்லாண்டிகவுண்டன்புதூர், நல்லுத்துக்குளி, ஒரக்கலியூர், போடிபாளையம், குளத்தூர், பொன்னாயூர், முருகன் நிலையம், நல்லூர், சக்தி கார்டன், கோல்டன்சிட்டி, டி.நல்லிகவுண்டன்பாளையம், ஆர்.பொன்னாபுரம், ஆ.சங்கம்பாளையம், வேலவன் நகர், சக்தி மில் பின்புறம், சிங்காரவேலவன் காலனி, ஜே.ஜே.காலனி, வெங்கடேஷ் காலனி, சேரன் தொழிலாளர் காலனி, சரஸ்வதி அவென்யூ, பெருமாள் நகர்
மார்ச்சநாயக்கன் பாளையம் காலை 09:00 மணி முதல்மாலை 04:00 மணி வரை வாழைக்கொம்பு நாகூர், சுப்பேகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துபுதூர், பெரியபோது, திவான்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, பூச்சனாரி, திம்மங்குத்து, சாத்துப்பாறைசித்தூர், சாமியாண்டிபுதூர், நாதேகவுண்டன்புதூர், மண்ணூர், கோபாலபுரம், தாவளம்

மேலும் படிக்க - கோவை சிறுமி வன்கொடுமை ப்ரஸ் மீட்டில் சிரித்த போலீஸ் அதிகாரி! யார் இந்த ரம்யா பாரதி ஐபிஎஸ்?

கோடைகால கூடுதல் மின் தேவை மற்றும் மின்வாரியத்தின் முன்னெச்சரிக்கை

தற்போது நிலவி வரும் கடுமையான கோடைகாலம் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் மின்சாரத்தின் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. வீடுகளில் ஏசி (Air Conditioner), குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஏர் கூலர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சார விநியோக கட்டமைப்பில் அதிகப்படியான லோடு (Overload) ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மின்மாற்றிகள் (Transformers) பழுதடைவதையும், லோ-வோல்டேஜ் (Low Voltage) பிரச்சனைகளையும் தவிர்க்க இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் மிகவும் அவசியமானதாகிறது.

பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைந்து விட்டால், மாலை 4 மணிக்கு முன்பாகவே மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு தொழிலகங்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு மின்வாரியத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்த தற்காலிக சிரமத்திற்கு பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுடன் ஒத்துழைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பானில் தடை! ஏன் இந்த திடீர் முடிவு? காரணம் இதுதான்..

 

கோயம்புத்தூர் மின் தடை: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

கேள்வி 1: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின்தடை எப்போது நடைபெறுகிறது?

பதில்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 மே 29 (வெள்ளிக்கிழமை) மற்றும் மே 30 (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு வெவ்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கேள்வி 2: மின்சாரம் எத்தனை மணி நேரம் நிறுத்தப்படும்? மின்தடை நேரம் என்ன?

பதில்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை என மொத்தம் 7 மணி நேரம் மின் விநியோகம் இருக்காது.

கேள்வி 3: மே 30 (சனிக்கிழமை) அன்று எந்தெந்த துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன?

பதில்: சனிக்கிழமை அன்று மேட்டுப்பாளையம், அன்னூர் மற்றும் பசூர் ஆகிய முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

கேள்வி 4: சனிக்கிழமை (30.05.2026) அன்று மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் எவை?

பதில்: மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், கரியம்பாளையம், தெலுங்கு பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அன்னூர் நகரம், பசூர், பூசாரி பாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டப்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக் காடு புதூர் மற்றும் அம்மா செட்டி புதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

கேள்வி 5: பொள்ளாச்சி கோட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது?

பதில்: பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட தாளக்கரை, ஜமீன் முத்தூர் மற்றும் மார்ச்சநாயக்கன்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமப்புற மற்றும் நகரப் பகுதிகளில் மே 29 (வெள்ளிக்கிழமை) அன்று மின்தடை செய்யப்படுகிறது.

0
0
Report

ஹர்திக் பாண்டியாவுக்கு CSK கேப்டன்ஸியை கொடுப்பதே நல்லது... முன்னாள் வீரரின் கருத்து

Chennai, Tamil Nadu:

CSK Hardik Pandya Trading Speculation : ஐபிஎல் 2026 சீசன் அதன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி மட்டுமே இன்னும் பாக்கி உள்ளது. 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த சில சீசன்களாகவே கடுமையாக சொதப்பி வருகின்றன.

சிஎஸ்கே, மும்பையின் சொதப்பல்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக 2023ஆம் ஆண்டில் கோப்பையை வென்றது. அதுதான் சிஎஸ்கே கடைசியாக பிளே ஆப் சென்ற ஆண்டாகும். அதன்பின் 2024ஆம் ஆண்டில் 5வது இடத்திலும், 2025ஆம் ஆண்டில் 10வது இடத்திலும், 2026ஆம் ஆண்டில் 8வது இடத்திலும் நிறைவு செய்தது.

மேலும் படிக்க | IPL: ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள்... டாப் 5 வீரர்கள் யார் யார் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியோ கடைசியாக 2020ஆம் ஆண்டில் கோப்பையை வென்றது. அதன்பின் 2023 மற்றும் 2025 என இரண்டு சீசன்களில் பிளே ஆப் வரை மட்டுமே சென்றது. 2022 மற்றும் 2024 சீசன்களில் 10வது இடத்திலேயே நிறைவு செய்தது.

ஹர்திக் பாண்டியா டிரேடிங்

அப்படியிருக்க, நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே 8வது மற்றும் மும்பை 9வது இடத்தில் அடுத்தடுத்து முடித்திருக்கிறது. இரண்டு அணிகளும் கடந்த மெகா ஏலத்தில் கடுமையாக சொதப்பியதால்தான் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவதாக பேச்சுகள் உள்ளன. 

எனவே, அடுத்து 2028ஆம் ஆண்டில்தான் மெகா ஏலம் நடக்க உள்ளது. ஆனால், இதற்கிடையே 2027 மினி ஏலத்திலேயே இரு அணிகளும் தங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. அதில், சிஎஸ்கே அணிக்கு ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்பட வேண்டும் என்ற பேச்சும் இணையத்தில் தற்போது அதிகமாகி உள்ளது.

பதிர்நாத் சொன்ன மேட்டர்

அந்த வகையில், முன்னாள் சிஎஸ்கே வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுப்ரமணிய பத்ரிநாத் இந்த டிரேடிங் குறித்த தனது விருப்பத்தையும் பதிவு செய்துள்ளார். அதில், சிஎஸ்கே ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யுமானால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிவம் தூபே மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரையும் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இருந்து தோனி விலகுகிறாரா? காசி விஸ்வநாதன் கொடுத்த முக்கிய தகவல்!

இதுகுறித்து பத்ரிநாத் அவரது யூ-ட்யூப் சேனலில், "நான் மும்பை இந்தியன்ஸ் தரப்பாக இருந்தார், நான் ஹர்திக் பாண்டியாவை கொடுத்து சிஎஸ்கே அணியிடம் இருந்து சிவம் தூபே மற்றும் ஆயுஷ் மாத்ரேவை பெற வேண்டும்.

ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்ஸி

சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட் - ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் சிஎஸ்கே அணியின் பிராண்டை அடுத்த உயரத்திற்கு எடுத்து செல்வார்கள். சஞ்சு சாம்சன்தான் கேப்டனாக வேண்டும் என ஒரு விதியும் கிடையாது. 

ஹர்திக் பாண்டியா கேப்டன்ஸியை கேட்கும்பட்சத்தில் அவருக்கு சிஎஸ்கே அணி கேப்டன் பதவியை கொடுக்கலாம். ஏனென்றால் தோனி உடனான ஹர்திக் பாண்டியாவின் உறவு என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும்" என்றார். ஒருவேளை பத்ரிநாத் கூறுவது போல் நடந்தால், அது மும்பை அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் பரஸ்பரம் சிறப்பான டிரேட் ஆக இருக்கும்.

மேலும் படிக்க | பைனலுக்கு போக ராஜஸ்தான் அணிக்கே அதிக வாய்ப்பு... ஏன் தெரியுமா?

0
0
Report
Advertisement
Advertisement
Back to top