பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
விமானப்படை விமானம் விபத்து : 5 அதிகாரிகள் பலி - அசாமில் நடந்தது என்ன?
Parokhuwa, Assam:Assam IAF Aircraft Accident : அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை நிலையத்தில், இந்திய விமானப்படைக்கு (IAF) AN-2 சொந்தமான போக்குவரத்து ரக விமானம் இன்று காலையில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி, தீப்பற்றி எரிந்தது.
The Indian Air Force deeply regrets the loss of five personnel in the An-32 accident at Jorhat, Assam.
— Indian Air Force (@IAF_MCC) June 13, 2026
Sqn Ldr Prashant Singh, Flt Lt Shubham Kumar, Sgt Jitendra Sharma, Agniveervayu Khemaram Kumawat and Agniveervayu Danish Alam made the supreme sacrifice in the line of duty.… pic.twitter.com/9SmOjtS5mU
இதில் விமானப் படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, உயிரிழந்தவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டது.
1. படைப்பிரிவுத் தலைவர் பிரசாந்த் சிங்
2. விமான லெப்டினன்ட் சுபம் குமார்
3. சார்ஜென்ட் ஜிதேந்திர சர்மா
4. அக்னிவீர்வாயு கெமரம் குமாவத்
5. அக்னிவீர்வாயு டேனிஷ் ஆலம்
3 லட்சம் பேருக்கு வெறும் 6 பேர் தானா? மயிலாடுதுறை ‘சிங்கப்பெண்’ படைக்கு விழுந்த முதல் செக்.!
Mayiladuthurai, Tamil Nadu:Mayiladuthurai Singappen Scheme: தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பதவியேற்ற தவெக தலைவர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பிரத்யேகமாக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்படும் என்ற கோப்பில் முதலாவதாகக் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (10.06.2026) முதல் இந்த அதிரடிப்படை தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தின் தற்போதைய கள நிலவரம் மற்றும் புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேற தற்போதைய கட்டமைப்பு போதுமானதா? அல்லது இது வெறும் விளம்பர முழக்கமா?" என்ற விவாதத்தையும், சமூக ஆர்வலர்களிடையே பெரும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
3 லட்சம் பெண்களுக்கு 6 பேர் மட்டுமே! - விந்தையான கணக்கீடு:
சமீபத்திய மக்கள் தொகை மற்றும் வாக்காளர் புள்ளிவிவரங்களின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண் மக்கள் தொகையினர் வசித்து வருகின்றனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், தினசரி சந்தை மற்றும் பொது இடங்களுக்கு வரும் பெண் தொழிலாளர்கள் எனப் பெரும் பகுதியினர் அடங்குவர்.
மேலும் படிக்க: ஆவின் பச்சை பால் விற்பனை நிறுத்தம்? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
ஆனால், இவ்வளவு பெரிய பரப்பளவும் மக்கள் தொகையும் கொண்ட இந்த மாவட்டத்திற்கு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த காவல்துறையினரின் எண்ணிக்கை வெறும் 6 பேர் மட்டுமே (2 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 பெண் காவலர்கள்).
ஷிப்டுக்கு 3 பேர்: 1300 சதுர கிலோமீட்டரை எப்படிக் கண்காணிப்பது?
மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்ய ‘சுழற்சி முறை’ பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த 6 பேரும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு ஷிப்ட்டிற்கு ஒரு உதவி ஆய்வாளர் (SI) மற்றும் இரண்டு பெண் காவலர்கள் (PC) என மொத்தம் 3 பேர் மட்டுமே களத்தில் இருப்பார்கள். மயிலாடுதுறை மாவட்டம் என்பது மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், குத்தாலம் எனப் பல முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய, சுமார் 1,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய மாவட்டமாகும்.
சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி:
ஒரே ஒரு அதிநவீன ரோந்து வாகனத்தை வைத்துக்கொண்டு, ஒரு ஷிப்ட்டில் இருக்கும் 3 பெண் காவலர்கள், ஒட்டுமொத்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒரே நேரத்தில் எப்படிக் கண்காணிக்க முடியும்?
நீண்ட தூரப் பயணமும், 'மின்னல் வேக' நடவடிக்கையின் சாத்தியமும்!
காவல்துறை தரப்பில், "அவசரக் கால உபகரணங்கள் கொண்ட வாகனம் வழங்கப்பட்டுள்ளது, எந்தவொரு அவசர அழைப்பிற்கும் இவர்கள் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மயிலாடுதுறையின் ஒரு எல்லையான கொள்ளிடத்திலோ அல்லது குத்தாலத்தின் கிராமப்புறப் பகுதியிலோ ஒரு பெண்ணிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றால், அந்த நேரத்தில் இந்த சிங்கப்பெண் படை மாவட்டத் தலைமையகத்திலோ அல்லது சீர்காழியிலோ ரோந்துப் பணியில் இருந்தால், அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சேரக் குறைந்தது 45 நிமிடங்களாவது ஆகும்.
போக்குவரத்து நெரிசல்களையும் கடந்தே அவர்கள் செல்ல வேண்டும். இத்தகைய சூழலில், மின்னல் வேக நடவடிக்கை" என்பது தற்போதைய 3 பேர் கொண்ட ஒரு ஷிப்ட் அமைப்பில் எப்படிச் சாத்தியமாகும் என்பது சமூக ஆர்வலர்களின் நியாயமான கேள்வியாக உள்ளது.
மேலும் படிக்க: மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பது எப்படி?
முக்கியப் பொறுப்புகளும், பற்றாக்குறையான மனிதவளமும்:
இந்த அதிரடிப்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலக்குகள் மிக அதிகம். மாவட்ட எஸ்பி G.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இவர்கள் கண்காணிக்க வேண்டிய இடங்கள்:
- மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்.
- மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியச் சந்திப்புகள்.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்.
- வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருவிழா நடக்கும் பகுதிகள்.
- இதுதவிர, பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்களையும் இவர்களே நடத்த வேண்டும்.
ஒரு மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களையும், பேருந்து நிலையங்களையும் வெறும் 3 பேர் கொண்ட ஒரு குழு தினசரி எப்படிக் கண்காணித்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியும்? இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று எனப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீர்வு என்ன? சமூக ஆர்வலர்களின் கோரிக்கை:
முதலமைச்சரின் இந்த ‘சிங்கப்பெண் படை’ என்ற தொலைநோக்குத் திட்டம் மிகச் சிறப்பானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெண்களிடத்தில் இது பாதுகாப்பைப் பற்றிய ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. ஆனால், இந்தத் திட்டம் வெறும் காகித அளவிலும், பெயரளவிலும் சுருங்கிவிடக் கூடாது என்றால், அரசு உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தாலுக்கா வாரியான பிரிவுகள்:
மாவட்டத்திற்கு 6 பேர் என்பதை மாற்றி, மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவிற்கும் (மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்) தலா ஒரு சிங்கப்பெண் படைப் பிரிவு அமைக்கப்பட வேண்டும்.
மனிதவளத்தை அதிகரித்தல்:
ஒரு ஷிப்ட்டிற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 பெண் காவலர்களாவது சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும்.
இருசக்கர வாகன ரோந்து:
குறுகலான தெருக்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல, நான்கு சக்கர வாகனத்துடன் சேர்த்து, பெண் காவலர்களுக்குத் இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட வேண்டும்.
ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக, பெண்களின் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்யக் கொண்டுவரப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’, மயிலாடுதுறை மாவட்டத்தின் 3 லட்சம் பெண்களுக்கும் உண்மையான அரணாக விளங்க வேண்டுமே தவிர, வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாது. அரசு உடனடியாக இந்த ஆட்கள் பற்றாக்குறையைக் கவனித்து, கூடுதல் காவலர்களை நியமித்தால் மட்டுமே, இந்தச் சிங்கப்பெண்கள் உண்மையான ‘அதிரடிப்படையாக’ உருவெடுக்க முடியும் என்று சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ரூ.2 லட்சம் வழங்கும் தமிழக அரசு.. எப்படி பெறலாம்? ஜூன் 30ம் தேதி கடைசி நாள்!
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் முடங்கியது... கதறும் இளசுகள் - என்னாச்சு?
Chennai, Tamil Nadu:Facebook, Instagram, Whatsapp Down : உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா தளங்கள் முடங்கி இருப்பதாக தெரிகிறது. இதனால், ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று இரவு 7.45 மணியளவில் பேஸ்புக்கில் பிரச்னை என சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் புகார் தெரிவித்திருப்பதாக Downdetector தளத்தில் தெரிகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பிரச்னையை பயனர்கள் சந்திக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் லாக்-இன் செய்ய முடிவில்லை போன்ற புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற மெட்டா செயலிகள் முடங்கியிருப்பதை X தளத்தில் பல பயனர்கள் குறிப்பிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. முடக்கத்திற்கான காரணம் குறித்து மெட்டா இதுவரை அதிகாரப்பூர்வமாக விளக்கம் தெரிவிக்கவில்லை.
கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு... அவரின் இந்த 5 சாதனைகளை யாராலும் உடைக்க முடியாது!
Auckland, Auckland:Kane Williamson Retirement : நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், Fab 4 வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 16 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த கேன் வில்லியம்சன் மூன்று பார்மட்களிலும் சேர்த்து மொத்தம் 378 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
It's a team I love and it's so dear to my heart
— BLACKCAPS (@BLACKCAPS) June 12, 2026
Thank you for pic.twitter.com/u1qBOMEfzy
தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இத்தொடரின் முதல் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் டெஸ்டில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி தோல்வியடைந்த அந்த போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடியிருந்தார். இதுதான் அவரது கடைசி சர்வதேச போட்டியாக அமைந்துவிட்டது. அதில் 0 & 18 ரன்களையே அவர் அடித்திருந்தார். இத்தொடரில் அடுத்து உள்ள இரண்டு போட்டிகளிலும் கூட அவர் விளையாட மாட்டார் என அறிவித்துள்ளார்.
‘நீங்க பேசுங்க நா போறன்’ - அழைத்த அமைச்சர்... நைசாக நழுவிய மேயர்..!
Chennai, Tamil Nadu:Mayor Priya Avoid Press Meet: முதலமைச்சர் விஜயை மேயர் பிரியா இதுவரையில் சந்திக்காத நிலையில், தவெக அமைச்சருடன் முதல் பொது நிகழ்சியில் கலந்து கொண்டார். சென்னை ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் மேயர் பிரியா கலந்து கொண்டு, அங்கு செய்தியாளர்களை சந்திக்காமல் அங்கிருந்து செய்தியாளர்களை தவிர்த்து எஸ்கேப் ஆகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சரை சந்திக்காத மேயர் பிரியா:
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு அமைந்து ஒரு மாதத்தை நிறைவு செய்த நிலையில், சென்னை மாநகராட்சியின் மேயராக இருக்கக்கூடிய பிரியா இதுவரையில் முதலமைச்சர் விஜய் அவர்களை சந்திக்கவில்லை. இது தவெக அரசை அவமதிக்கும் செயல்பாடாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்னதான் திமுக கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், தற்போது ஆளும் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது இயல்பு.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய் கொடுக்கும் ரூ.1 லட்சம் பரிசு - யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஆனால், சந்திக்காமல் தவெக அரசை விமர்சித்து வருவதும் அவரது கட்சி எம்.எல்.ஏக்களை அவமதித்து வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்கள் பணி என்று வந்துவிட்டால் ஒருங்கிணைந்து வேளை செய்ய வேண்டும் என்றும், விருப்பு வெறுப்பை காட்டுவது சரியல்ல என்ற கருத்தையும் சிலர் தங்களது கருத்துகளாக தெரிவித்து வருகின்றனர்.
பொதுநிகழ்ச்சியில் தவெக எம்.எல்.ஏவை அவமதித்த மேயர்:
கடந்த ஜூன் 4-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் பள்ளி வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ பல்லவி, மேயர் பிரியா, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி இணை ஆணையர் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி வகுப்பறை ரிப்பன் வெட்டி திறப்பதில் இருந்து, குத்துவிளக்கு ஏற்றி வைப்பது போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவெக எம்.எல்.ஏ-வை அவமதிக்கும் விதமாக அவருக்கான முன்னுரிமை அங்கு மறுக்கப்பட்டது.
அன்றைய தினமே அதேப் பகுதியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் தவெக எம்.எல்.ஏவுக்கு பிரியா முன்னுரிமை அளித்தார். ஆனால் தான் அவமானப்படுத்தப்பட்டதை உணர்ந்த பல்லவி அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த முன்னுரிமையை நிராகரித்து பிரியாவுக்கு பதிலடி கொடுத்தார்.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய் கொடுக்கும் ரூ.1 லட்சம் பரிசு - யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மேலும் எம்.எல்.ஏ அவமதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்தும் புரோட்டோக்கால் படி தான் செய்யப்பட்டது. மேயருக்கு அடுத்தபடியாக அரசு அதிகாரிகள் தான் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும் என்பதை தெரிவித்தார். ஒரு பொது நிகழ்ச்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி, அமைச்சர், எம்.எல்.ஏ-வுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் பலரும் பிரியாவை விமர்சித்தனர். அதனைத் தொடர்ந்து மேயர் பிரியாவை “புரோட்டோகால் பிரியா” எனவும் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
செய்தியாளர் சந்திப்பிற்கு அழைத்த அமைச்சர், தவிர்த்த மேயர்:
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயின்று பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு கல்வி ஊக்க உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு சிறப்பு ஊக்கத்தொகையை மாணவர்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு மேயர் பிரியா வர, அவரை பார்த்த அமைச்சர் ‘அம்மா வர்றீங்களா 3 செய்தி சேனல் முடக்கதை பற்றி பேசனும்னு’ பத்திரிக்கையாள சந்திப்புக்கு அழைத்தார். அதற்கு பிரியா, ‘இல்லை இல்லை... நீங்க பேசுங்க நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டு அவசரம் அவசரமாக அங்கிருந்து வெளியேறிய மேயர் பிரியாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘இன்னும் 6 மாதத்திற்கு இவங்களோடு எப்படி டா ஓட்டப் போகிறோம் என்ற மன நிலையுடனும், பதட்டத்துடனும் மேயர் அங்கிருந்து வெளியேறினார்’ என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ரூ.1 கோடி வரை தொழில் கடன்: கல்வித்தகுதி தேவையில்லை! தமிழக அரசு
ஐசிசி உலகக் கோப்பை தேதிகள் வந்தாச்சு... 2027இல் எப்போது நடைபெறும்?
Bengaluru, Karnataka:ICC World Cup 2027 Dates: உலகமே பிபா கால்பந்து உலகக் கோப்பைக்கு காத்திருக்கும் வேளையில், 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. கடந்த 2023 ஐசிசி உலகக் கோப்பை இந்திய அணிக்கு மறக்க முடியாத துயரை ஏற்படுத்தியிருக்கிறது என்பதால் பலரும் இத்தொடருக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக வென்று இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
மேலும் படிக்க | ரோஹித் - ஹர்திக் பாண்டியா பிட்னஸ் டெஸ்டில் பாஸா? பிசிசிஐ ரிப்போர்ட் விவரம்
அடுத்தடுத்து 3 கோப்பை
ஆனால், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வி அடைந்து கோப்பையை தவறவிட்டது.
இதன் பின் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; சூர்யகுமார் யாதவ் தலைமையில் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை என அடுத்தடுத்து 3 ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்திருக்கிறது.
அடுத்து இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி உலகக் கோப்பையை வென்றால் தொடர்ச்சியாக இத்தனை ஐசிசி கோப்பைகளை வென்ற சாதனையை படைக்கலாம். இந்த இரு தொடர்களுமே 2027ஆம் ஆண்டில் நடைபெற இருப்பது கவனிக்கத்தக்கது.
முக்கியத்துவம் பெறும் டெஸ்ட், ஓடிஐ
இந்த இரு தொடர்களும் சமீப காலமாக இந்திய அணியின் வசம் கிடைக்கவில்லை. இந்திய அணி கடைசியாக 2011இல் ஐசிசி உலகக் கோப்பையை வென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கி மூன்று இறுதிப்போட்டிகள் முடிந்துவிட்டன.
மேலும் படிக்க | முகமது சிராஜ் நீக்கம்.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு! இந்திய அணியில் திடீர் மாற்றம்
அதில் முதலிரண்டு முறை பைனல் வரை வந்து இந்தியா தோற்றது. கடைசி முறை இந்தியா இறுதிப்போட்டிக்கே தகுதிபெறவில்லை. எனவே, இந்திய அணி தற்போதைய முழு கவனமும் டெஸ்ட் மற்றும் ஓடிஐ அணியை வெற்றிகரமாக கட்டமைப்பதே ஆகும்.
2027 ஐசிசி உலகக் கோப்பை எப்போது?
இந்நிலையில், 2027 ஐசிசி உலகக் கோப்பை குறித்த அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா உள்ளிட்ட நாடுகள் நடத்தும் இத்தொடர் வரும் 2027ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 21ஆம் தேதிவரை நடைபெற வாய்ப்பிருப்பதாக தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதமே அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஐசிசி வாரியக் கூட்டத்தில் போட்டிகளின் தேதிகள் இறுதி செய்யப்ட்டதாகவும், ஜூலை மாதம் எடின்பரோவில் நடைபெற்ற இறுதி ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இறுதி ஒப்புதல் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்ரிக்க கண்டத்தில் ஐசிசி உலகக் கோப்பை வரும் 2027இல் நடைபெற இருக்கிறது. 54 போட்டிகளில் 41 போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 14 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. எனவே, அடுத்த 2027ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் காலத்தில் களைகட்டும்.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கும் மீண்டும் காயம்... ஓடிஐ தொடர் அம்போ - மாற்று வீரர் யார்?
முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் - நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியது என்ன?
New Delhi, Delhi:CM Vijay In 11th NITI Aayog Meeting : டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றது. இது திட்டக்குழுவுக்கு பதில் கொண்டுவரப்பட்ட நிதி ஆயோக்கின் 11வது ஆட்சிமன்றக் குழுவின் கூட்டமாகும். தமிழ்நாடு முதலமைச்சரான விஜய் இதில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், "ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுகிறோம்" என குறிப்பிட்டு பேசினார்.
அதேநேரத்தில் நீட் விலக்கு கோரிக்கை குறித்தும் விஜய் பேசினார். "நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மருத்துவ இடங்களை 12ஆம் வகுப்பு மதிப்பெண்படி நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு அனுமதி தர வேண்டும்" என்றார்.
கால்பந்து வெறியர்களே... FIFA உலகக் கோப்பை லைவ் எதில் பார்க்கணும் தெரியுமா?
Chennai, Tamil Nadu:FIFA World Cup 2026 : பிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்க இருக்கிறது. கிரிக்கெட்டுக்கு அடுத்து கால்பந்துக்கு இந்தியாவில் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் கால்பந்துக்கு வெறித்தனமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
இந்திய அணி இத்தொடரில் விளையாடாது என்றாலும், இந்திய ரசிகர்கள் அவரவருக்கு பிடித்த வீரர்கள் விளையாடும் அணிகளுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்துவார்கள். பள்ளி, கல்லூரிகள், பேஸ்புக், X, இன்ஸ்டாகிராம் என அடுத்த ஒரு மாதத்திற்கு கால்பந்து வெறியர்களை கையிலேயே பிடிக்க முடியாது.
மிகப்பெரிய கால்பந்து உலகக் கோப்பை தொடர்
அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் பிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 48 அணிகள் மோதுகின்றன. இது கால்பந்து உலகக் கோப்பை அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், அதாவது 24 அணிகள் தானாக அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெறுவார்கள். அதேபோல், மீதம் உள்ள 24 அணிகளில் பெஸ்ட் 8 அணிகளும் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்குச் செல்லும்.
நாக்-அவுட் சுற்றுகள்
அதன்படி, ரவுண்ட் ஆப் 32, ரவுண்டர் ஆப் 16, காலிறுதிச் சுற்று, அரையிறுதிச் சுற்று, இறுதிச் சுற்று என லீக் சுற்றுக்கு பின் வரும் அனைத்து போட்டிகளுமே நாக்-அவுட் போட்டிகள்தான். எனவே ஒவ்வொரு அணிகளும் மிக கவனமாக ஒவ்வொரு போட்டியையும் அணுகுவார்கள்.
ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய Zee
பிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை பெற இந்தியாவில் நீண்ட காலமாக சிக்கல் நீடித்தது. இந்நிலையில், Zee Entertainment பிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் உரிமத்தை கைப்பற்றியிருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளம் இரண்டின் உரிமைத்தையும் Zee கைப்பற்றியிருக்கிறது.
The world's biggest tournament.
— Unite8 Sports Official (@unite8sports) June 8, 2026
India's biggest watch party.
Iss baar poora India Watchega.
Only on Unite8 Sports and ZEE5.#FIFAWorldCup #WorldCup2026 #unite8sports pic.twitter.com/Uht0rHmjOo
ஒப்பந்ததின் ஒரு பகுதியாக, வரும் 2034ஆம் ஆண்டு வரை கூடுதலாக பிபாவின் 38 தொடர்களின் உரிமத்தையும் Zee கைப்பற்றியிருக்கிறது. இதன்மூலம், அடுத்த 8 ஆண்டுகளுக்கு இந்தியாவில் கால்பந்து என்றாலே Zee என்ற நிலைதான்.
எந்தெந்த சேனல்களில் பார்க்கலாம்?
Zee நெட்வோர்க் அதன் புதிய விளையாட்டு சேனல்களை தொடங்கிய பின்னரே, பிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது.
Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2, Unite8 Sports 2 HD ஆகிய தொலைக்காட்சி சேனல்களை பிரத்யேகமாக விளையாட்டுகளை ஒளிபரப்புவதற்கே Zee தொடங்கியிருக்கிறது. இந்த சேனல்களில் நீங்கள் பிபா கால்பந்து தொடரை கண்டுகளிக்கலாம். எனவே உங்கள் கேபிள் ஆப்ரேட்டர்கள்/செட்-ஆப் பாக்ஸ் ஆப்ரேட்டர்களை தொடர்புகொண்டு இந்த சேனல்களை பெற்றுக்கொள்ளவும்.
ஓடிடியில் பார்ப்பது எப்படி?
அதேபோல், நீங்கள் ஓடிடியில் பார்க்க வேண்டும் என்றால் Zee5 தளத்தில் காணலாம். Zee5 தளத்தில் இரண்டு பிளான்களில் நீங்கள் பிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை கண்டுகளிக்கலாம். மூன்று மாதங்களுக்கு 799 ரூபாய் மற்றும் ஒரு வருடத்திற்கு 1699 ரூபாய் திட்டங்களாகும்.
போட்டிகளை எப்போது பார்க்கலாம்?
போட்டிகளின் நேரம் ஒவ்வொரு போட்டிகளுக்கும் மாறுபடும். இந்தியாவில் பின்னிரவு, நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலேயே போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இருட்டு அறையில் அரங்கேறிய ஆணவக் கொலை... UP-யை அதிரவைத்த சம்பவம்..!
Peera Mahua, Uttar Pradesh:Uttarpradesh Honour Killing: உத்திரபிரதேசம் மாநிலம், குஷிநகர் மாவட்டம் பிப்ராகாட் கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் அதேப் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு லாலி மற்றும் ஷீலா என்ற இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். சகோதரிகளான லாலி மற்றும் ஷீலா இருவரும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் அதன்பிறகு வீட்டு வேலை கவனித்து வந்துள்ளனர்.
அதன்பிறகு அதேப் பகுதியை சேர்ந்த இளைஞர்களை இரு சகோதரிகளும் காதலித்து வந்துள்ளனர். இது அவரது தந்தைக்கு தெரியவரவே அவர்களை பலமுறை கண்டித்துள்ளனர். இதனை மகள்கள் கேட்காததால் அவர்கள் இருவரையும் அடித்தே கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலில் விழுந்த சகோதரிகள்:
சகோதரிகள் கடைக்கு செல்லும் போதும் வரும்போதும் அதேப் பகுதியில் இருக்கும் சகோதரர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடையில் நெருக்கமாக மாறி காதலித்து வந்துள்ளனர். வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் குறித்து அவரது தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதனால் காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளார்.
வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள்:
அதனைத் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்கள் வீட்டில் இல்லாதபோது காதலர்களிடம் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதை ஒருகட்டத்தில் தெரிந்துக் கொண்ட தந்தை ராம்பிரசாத், மகள்கள் காதலிக்கும் இளைஞர்கள் வேறுசமூகத்தை சேர்ந்தவர்கள் என்பவர்கள் என்பதால் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தங்களது காதலை தந்தை பிரித்துவிடுவார் என்ற அச்சத்தில் இருந்த பெண்கள் தங்களது காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். உடனடியாக இது குறித்து ராம்பிரசாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே இரண்டு மகள்களையும் தேடி கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர். மீண்டும் காதலர்களுன் பேசி வந்த நிலையில் அடுத்தடுத்து மூன்று முறை தங்களது காதலர்களுடன் ஓடவே இருவரையும் போலீஸார் கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் படிக்க: நெல்லையில் ஆணவக் கொலை? அக்காவை சரமாரியாக வெட்டிய தம்பி.. கொலை நடந்தது எப்படி?
அப்போது, தங்களுடைய மகள் காதலிக்கும் இளைஞர்களுக்கே திருமணம் செய்து வைக்கவும் சொல்லி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதனை தந்தை செய்யாததால், லாலி, ஷீலா ஆகிய இருவம் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த முறை போலீஸிடம் செல்லாத அவர், தனது மகன்களுடன் சென்று தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதன்படி பல இடங்களில் தேடி அவர்களை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆணவக் கொலை செய்த தந்தை:
மகள்களை வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை, அறிவுரை கூறி தங்களது நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத மகள்கள் கடந்த ஜூன் 8-ம் தேதி மீண்டும் தங்களது காதலர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த ராம்பிரசாத் தனது மகன்களுடன் சேர்ந்து அவர்களை தாக்கி தனி அறைக்குள் வைத்து கட்டை மற்றும் லத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்கள் இறந்ததை அறிந்த தந்தை மற்றும் மகன்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
போலீஸார் விசாரணை:
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இறந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தந்தையே மகள்களை அடித்துக் கொலை செய்ததாகவும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த மாதிரி செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பெண்களை காதலித்த இரண்டு இளைஞர்களையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தந்தை மற்றும் மகன்கள் என மூவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேறு சமூக இளைஞர்களை மகள்கள் காதலித்ததால் தந்தையே அவர்களை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் கைது: ஜூன் 9 வரை நீதிமன்றக் காவல்
காலமானார் இயக்குநர் இமயம் பாரதிராஜா... அதிர்ச்சியில் திரையுலகம்
Chennai, Tamil Nadu:Tamil Movie Director Bharathiraja Passed Away: இயக்குனர் இமயம் என போற்றப்படும் தமிழ் சினிமாவின் முதுபெரும் இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். சென்னை நீலாங்கரை உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்திர சோகத்தில் வாடிய பாரதிராஜா
84 வயதான பாரதிராஜா நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உயிரிழந்ததை தொடர்ந்து, பாரதிராஜா கடும் மன அழுத்தத்தில் ஆழ்ந்ததாகவும் தெரிகிறது. மிகுந்த பிரியத்துடன் வளர்த்த மகன் தனது கண் முன்னால் உயிரிழந்தது அவருக்கு தீராத மன வேதனையை கொடுத்திருக்கிறது.
கடைசியாக இயக்கிய படைப்பு
மன வேதனையும், உடல்நலக்குறைவும் பாரதிராஜாவை கடுமையாக பாதித்ததாகவே தெரிகிறது. பாரதிராஜா கடைசியாக இயக்கிய படம், 2020ஆம் ஆண்டு வெளியான 'மீண்டும் ஒரு மரியாதை'. இத்திரைப்படத்தின் தயாரிப்பு 2014ஆம் ஆண்டு தொடங்கி, கொரோனா பெருந்தோற்று இந்தியாவில் உச்சமடைவதற்கு முன், அதாவது 2020 பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது. இருப்பினும் இப்படம் வரவேற்பை பெறவில்லை.
அதேநேரத்தில், Amazon Prime தளத்தில் வெளியான Modern Love Chennai எனும் ஆந்தாலஜி தொடரில் ஒரு 'பறவை கூட்டில் வாழும் மான்கள்' எனும் ஒரு பாகத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே அவரது இயக்கத்தில் வெளியான கடைசி படைப்பு எனலாம்.
பாரதிராஜாவின் முதல் திரைப்படமே, தமிழ் திரையுலகையின் திசையை திருப்பிப் போட்டது. தெக்கத்தி பொண்ணு, அப்பனும் ஆத்தாளும், முதல் மரியாதை உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களையும் பாரதிராஜா இயக்கி உள்ளார்.
கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் இளையராஜா இசையில் 1977ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' தான் பாரதிராஜாவின் முதல் திரைப்படம். தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்பட இயக்குநர் விருதை அப்படத்திற்காக அவர் வென்றார். அடுத்த ஆண்டே கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில், பாரதிராஜா இயக்கிய 'சிகப்பு ரோஜாக்கள்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்பட இயக்குநருக்கான பிலிம்பேர் விருதை வென்றது.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், மண் வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, அந்திமந்தாரை உள்ளிட்ட பல ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு தந்து, ரசிகர்களுக்கு பெரு விருந்து படைத்தவர் பாரதிராஜா. அவர் மொத்தம் 42 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 5 தேசிய விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பாரதிராஜா வென்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பாரதிராஜா படங்களை இயக்கி உள்ளார்.
பாரதிராஜாவின் கதை சொல்லும் முறையும், கிராமத்தின் மண் வாசம் மாறாத காட்சிகளும், முற்போக்கான அம்சங்கள் நிறைந்த கதையும் அவருக்கு தனித்துவமான இயக்குநர் என்ற முத்திரையை பெற்று தந்தது. அதுவே அவரை 'இயக்குநர் இமயம்' என திரையுலகமே போற்ற வழிவகையும் செய்தது.
அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக பாரதிராஜா காத்திரமான, தனித்துவமான பாத்திரங்களை ஏற்று நடித்தும் வந்தார். 30க்கும் மேற்பட்ட தமிழ், மலையாள திரைப்படங்களில் தமிழை பொருத்தவரை கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான 'நிறம் மாறா உலகில்' எனும் திரைப்படம் அவருக்கு நடித்து வெளியான கடைசி படமாக உள்ளது. தொடர்ந்து, மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியான 'துடரும்' திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தஞ்சாவூரில் நாளை (ஜூன் 10) 6 மணி நேரம் மின்தடை: எங்கெல்லாம் பவர் கட்? லிஸ்ட் இதோ
Thanjavur, Tamil Nadu:Thanjavur Power Cut Area List: தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 10, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்திலும் சீரான இடைவெளியில் பல்வேறு துணை மின் நிலையங்களுக்கான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் மின்தடை
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரத் துறையால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அவ்வப்போது தஞ்சாவூரில் சில பகுதிகளில், குறிப்பிட்ட நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. நாளை (ஜூன் 10 ஆம் தேதி, புதன்கிழமை) எங்கெல்லாம் மின் தடை இருக்கும் என்பது பற்றி இங்கே காணலாம்.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தந்த துணை மின் நிலையங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளின் போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (ஜூன் 10, புதன்கிழமை) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம்:
மின்தடை ஏற்படும் நாள்: 10, ஜூன் 2026
மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை
மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை வாங்காத பெண்களே! உங்களுக்ககான மற்றொரு மாத உதவித்தொகை
ஜூன் 10 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் பற்றி இங்கே காணலாம்:
ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 10, 2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளின் விவரம் பின்வருமாறு:
பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் நடக்கவுள்ள மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக, பூண்டி, சாலியமங்கலம், பச்சைக்கோட்டை, பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், திருபுவனம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், மலையர்நத்தம், குடு காடு, கோவிலூர், புலவர் நத்தம், செண்பலபுரம், மேலகொருக்கப்படு, தென்கொண்டார் இருப்பு, ராரா முத்திரக்கோட்டை, கிருஷ்ணாபுரம், வாளமரக்கோட்டை, அருந்தவபுரம், நெய்வாசல், ஆர்சுத்திப்பட்டு, அரு மலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம் பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டாரக்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்.
மேலும் படிக்க | குவாட்டர், பீர் விலை உயரும்? டாஸ்மாக் அதிரடி உத்தரவு.. ரூ.90 வரை கூடுதல் கட்டணம்!
அய்யம்பேட்டை துணை மின் நிலையம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 10, 2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளின் விவரம் பின்வருமாறு:
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் நடக்கவுள்ள மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக, அய்யம்பேட்டை நகரம், கணபதி கரகாரம், வீரமாங்குடி, தேவன்குடி, வழுத்தூர், இளங்கார்குடி, அகர மாங்குடி, வடக்குமாங்குடி, சூலமங்கலம், பசுபதிகோவில், மாத்தூர், வீரசிங்கம்பேட்டை, நெடார், வயலூர், ராமாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்படும்,
தஞ்சாவூரில் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை, சுமார் 6 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆகையால், பொதுமக்கள், முன்னரே குடிநீர் நிரப்பி வைத்தல், மொபைல் போன்கல், லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் செய்து வைத்தல் ஆகிய அத்தியாவசியப் பணிகளை செய்துவைத்துக்கொண்டால் மின்தடை நேரத்தில் அசவுகரியங்களை தடுக்கலாம்.
மேலும் படிக்க | ரூ.1 கோடி வரை தொழில் கடன்: கல்வித்தகுதி தேவையில்லை! தமிழக அரசு
மதுரையில் மாரிதாஸ் கைது... CM விஜய் அதிரடி - திடீர் நடவடிக்கை ஏன்?
Madurai, Tamil Nadu:Youtuber Maridas Arrest : பிரபல யூ-ட்யூபர் மாரிதாஸ், சமீப காலமாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் தொடர்பாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தமிழக அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசிவந்ததை அடுத்து, சென்னை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் மற்றும் மதுரை மாநகர காவல் துறையுடன் இணைந்து மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பிரபல யூ-ட்யூபர் மாரிதாஸை சென்னை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல் துறையினர் அடுத்த கட்ட விசாரணைக்கு பின்னர் முழுமையான விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகின்றது.
Video : சுனாமி அலர்ட்... பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த் நிலநடுக்கம் - இடிந்து விழுந்த கட்டடம்!
Concepcion, Mimaropa:Philippines Earthquake : தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலையில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பபட்டுள்ளது. இதனால், இப்பகுதியைச் சுற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் கடற்கரை ஓரத்தில் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மின்டோ நகரத்திற்கு அருகே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராயச்சி மையம் தெரிவித்துள்ளது. இது கடுமையான நில அதிர்வு மற்றும் சுனாமி குறித்த கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
evastating scene: Jollibee building completely collapses in General Santos, Mindanao after the powerful 7.8 quake.
— Faizan (@FreesoulFaizan) June 8, 2026
Shocking video shows total structural failure rescue efforts now underway.
No casualty reports yet as aftershocks continue.#PhilippinesQuake #Earthquake https://t.co/SIEFxzrqf5 pic.twitter.com/vI7W4z8YHT
முதலில், இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவிலும் பின்னர் 8.2 ரிக்டர் அளவிலும் திருத்தியமைக்கப்பட்டது. பின்னர், அதை 7.8 ரிக்டர் அளவு என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் உறுதிசெய்தது.
அண்ணாமலை இயக்கத்திற்கு மோடியின் ஆசிர்வாதமா...? நயினார் நாகேந்திரன் பேச்சு
Chennai, Tamil Nadu:Nainar Nagenthran Latest News Updates : சென்னையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியது; We The Leaders எனும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியது உள்ளிட்டவை சார்ந்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், "அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி அதற்கான ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர் ஒரு இயக்கத்தை ஆரம்பித்ததாக செய்திகள் நேற்று பார்த்தேன். அதில் பாஜகவின் ஒன்றிரண்டு பொறுப்பாளர்கள் போயிருக்கிறார்கள், நிறைய அடிமட்டத்தில் உள்ள பொறுப்பாளர்கள் போயிருக்கிறார்கள்.
மோடி, அமித்ஷாவின் ஆசி கிடையாது...
ஆனால், அவர்களை ஒரு மூலச்சலவை செய்து, அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோடு தான் நாங்கள் தனி இயக்கம் ஆரம்பிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதே நேரத்தில் இதுவரை இயக்கம் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் ஊடகங்கள் வாயிலாக நான் தெரிவித்து கொள்வது, பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆசியோ தேசியத் தலைவரின் ஆசியோ, யாருடைய ஆசியும் எந்த இயக்கத்திற்கும் கிடையாது" என அறிவித்தார்.
பாஜக, தேசம், இந்த நாடு என்கின்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவை பொருத்தமட்டில் மூத்த தலைவர்கள், முதலமைச்சராக இருந்த கல்யாண சிங், உமா பாரதி உள்பட இன்னும் நிறைய பேர், இந்த இயக்கத்தில் இருந்து வெளியே போய், திரும்ப இந்த இயக்கத்திற்கு வந்ததாகத்தான் வரலாறு இருக்கிறது.
யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்...
பாஜக தொண்டர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள், யாரும் எதையும் நம்பி, நீங்கள் போக வேண்டிய அவசியம் இல்லை. யாருடைய ஆசீர்வாதமும் நிச்சயமாக எந்த இயக்கத்திற்கும் கிடையாது. இயக்கத்தில் இருப்பவர்கள் பாஜக தொண்டர்களாக நிச்சயமாக இருக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சியினுடைய இருப்பவர்கள் மட்டுமே இருக்க முடியும், வேறு எந்த அமைப்புகளிலோ வேறு எந்த அமைப்புகளில் இருக்க முடியாது. ஆகவே யாரும் இதை நம்பி போக வேண்டாம் என்று நான் அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
மேலும் படிக்க | அண்ணாமலை புது இயக்கம் தொடக்கம்..பாஜக ரியாக்ஷன் என்ன? எதிர்பார்ப்பாக ஒன்று!
பாஜகவுக்கு பாதிப்பு கிடையாது...
சில நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணாமலை இயக்கத்திற்கு போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் ஏதாவது பின்னடைவு இருக்குமா?, "இதுவரையிலும் எந்த விதமான பின்னடைவுகளும் கிடையாது. இதனால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டு பேசியது போல பாஜக மிகப்பெரிய கட்சி.
உலகத்திலே மிகப்பெரிய கட்சி இன்னைக்கு மிகப்பெரிய தலைவர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருப்பவர் மோடி. பிரதமர் மோடி வழியில்தான் இன்றைக்கு தமிழக பாஜகவும், அகில இந்திய பாஜகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது" என்றார்.
ராஜினாமாவுக்கு பிறகு எப்படி ஆசிர்வாதம்...
மோடி ஆசியோ இல்லை, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆசியோ இல்லை என்கிறீர்கள், இப்போது டெல்லியில் ஏறத்தாழ ஐந்து நாள் இருந்தார், இப்ப இல்லை என சொல்கிறீர்களே... என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "இல்லை, இல்லை. நீங்கள் ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு எப்படி ஆசி இருக்க முடியும். ஒரு கட்சியில் இருந்து கொண்டு ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்ட பிறகு அவர்கள் போன பிறகு ஆசிர்வாதம் எப்படி இருக்க முடியும்...?" என்றார்.
மேலும் அவர், "பாஜகவின் கடைநிலை கிளை தலைவர் முதல் மாநில நிர்வாகிகள் வரை நான் வேண்டுகோள் வைப்பது, யாரும் எதையும் நம்பி ஏமாற வேண்டாம். பாரதிய ஜனதா கட்சியிலும் இருந்து கொள்ளலாம், இந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளலாம் என்று என்கின்ற எண்ணம் யாருக்கும் வேண்டாம்.
அதை தவிர்த்து நம்முடைய கொள்கையின் அடிப்படையில் பாஜகவில் மட்டுமே உறுப்பினராக இருந்து செயல்பட முடியும் என்பதை என்னுடைய அனைத்து தலைவர்களுக்கும் எங்களுடைய கிளைக் கழகத்தினுடைய பொறுப்பாளர்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்" என நயினார் நாகேந்திரன் பேசினார்.
மேலும் படிக்க | பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியவர்கள் யார் யார்? அண்ணாமலை ஜெயிப்பாரா?
ஜீ குறும்பட போட்டி நிறைவு விழா: வெற்றியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசும்... சினிமா வாய்ப்பும்!
Mumbai, Maharashtra:Zee Short Film Contest 2026 : 'ஜீ' (Z) இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும். அந்த வரையில், ஜீ நிறுவனம் சார்பில் நாடு தழுவிய அளவில் 'ஜீ குறும்பட போட்டி' (Zee Short Film Contest) மும்பை கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் பிரம்மாண்டமாக கோலாகமான முறையில் நடைபெற்றது.
இந்தியாவின் பல மொழிகளைச் சேர்ந்த திரைப்படத் திறமையாளர்களான தேடலாக, அவர்களை கண்டறியும் நோக்கில், நடத்தப்பட்ட ஜீ குறும்பட போட்டியின் இறுதி நிகழ்வில், நாட்டின் முன்னணி இயக்குநர்கள், திரைத்துறையினர் மற்றும் இளம் படைப்பாளிகள் என பல்வேறு தரப்பினர் கந்துகொண்டனர்.
மேலும் படிக்க | “பாலு இல்லாதது வெற்றிடமா இருக்கு..” SPB 80வது பிறந்தநாள்! இளையராஜா உருக்கமாக பதிவு..
நிகழ்ச்சியில் ஹைலைட்ஸ்
டாக்டர் சுபாஷ் சந்திரா வாழ்த்து
Z Entertainment நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா இந்நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர், "இளம் இயக்குநர்கள் தங்களின் படைப்பாற்றலை வளர்த்துக்கொண்டு எதிர்கால சினிமாவை வடிவமைக்க வேண்டும்" என தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
33 ஆண்டுகால பயணம்
இந்நிகழ்வில், Z நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாகிரியான புனித் கோயங்கா பேசும்போது, Z நிறுவனத்தின் 33 ஆண்டுகால கதை சொல்லும் பயணத்தை நினைவு கூர்ந்தார். மேலும் குறும்பட போட்டியில் தேர்வாகியுள்ள இளைஞர்களே, Z குழுமத்தின் அடுத்த தலைமுறை படைப்பாளிகல் என்று கூறி அவர்களை வரவேற்று பேசினார்.
குறும்பட போட்டியின் தேர்வுக்குழு
இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குநர்கள், 8 மொழிப் பிரிவுகளின் கீழ் நடுவர்களாகச் செயல்பட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
- அனுராக் காஷ்யப் - இந்தி
- ரவி ஜாதவர் - மராத்தி
- ஸ்ரீஜித் முகர்ஜி - பெங்காலி
- பி. சமுத்திரக்கனி - தமிழ்
- ஹேமந்த் ராவ் - கன்னடம்
- லிஜோ ஜோஸ் பெல்லிசேரி - மலையாளம்
மேலும் படிக்க | விஜய் பெயரை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி! வெகுண்டெழுந்த ரசிகர்கள்..சூர்யா போட்ட பாேஸ்ட்
இளம் படைப்பாளிகளுடனான விவாதம்
பிரபல திரை விமர்சகர் ராஜீவ் மசந்த் நடத்திய கலந்துரையாடலில், இந்த இயக்குநர்கள் கலந்துகொண்டு பிராந்திய சினிமா, தொழில்நுட்பம் மற்றும் இந்திய சினிமாவின் எதிர்காலம் குறித்துப் பேசினார்.
பரிசு விவரங்கள்
இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு மொழியிலும் ஒரு குறும்படம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. டாக்டர் சுபாஷ் சந்திரா வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளை அறிவித்தார். அவை கீழ்வருமாறு:
- முதலிடம் பிடித்த சிறந்த குறும்படம் (ஒவ்வொரு மொழியிலும்): தலா ரூ. 5 லட்சம்
- இரண்டாம் இடம் பிடித்த குறும்படம் (ஒவ்வொரு மொழியிலும்): தலா ரூ. 2.5 லட்சம்
- நடிகர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் நடுவர் விருதுகள் என சிறப்பு பரிசுகளுக்கு ஒவ்வொருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் வெற்றியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
கதை சொல்லும் வாய்ப்பு
ரொக்கப் பரிசை வழங்கியதை மட்டுமின்றி, இளம் படைப்பாளிகள் திரையுலகில் நுழைவதற்கான புதிய வாய்ப்பையும் இந்த போட்டி உருவாக்கி கொடுத்தது. அதாவது, ஒவ்வொரு மொழியிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வெற்றியாளர்கள், தங்களின் முழுநீளத் திரைப்படத்தின் (Feature Film) கதையை Zee Studios நிறுவனத்திடம் விவரிக்கும் (Pitch) வாய்ப்பு வழங்கப்படும்.
அதில் தேர்வு ஆகும் ஒரு கதை, Zee Studios தயாரிப்பில் இளம் திரைப்படமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் படைப்பாளிகள் குறும்படங்களில் இருந்து நேரடியாக பெரிய திரைக்குள் நுழைவதற்கான ஒரு சில பாலமாக 'ஜீ குறும்பட போட்டி' அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | டெய்லர் to தேசிய விருது வின்னர்..யார் இந்த இந்திரன்ஸ்? முழு விவரம்...
