icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

'கணவனை தேடும் மனைவியின் கதை' விஜய் குட்டிக்கதைக்கு... உதயநிதி பதில் அட்டாக்

Chennai, Tamil Nadu:

CM Vijay vs Udhayanidhi Stalin : ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 18ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையுடன் இன்று (ஜூன் 23) நிறைவடைந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் கடந்த சில நாள்கள் நடைபெற்ற நிலையில், இன்று முதலமைச்சர் பதிலுரை ஆற்றினார். 

இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நேற்றைய (ஜூன் 22) குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் விஜய் சட்டப்பேரவையில் உரையாற்றினார். விஜய்யின் பேச்சுக்கு இடையே திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

மேலும் படிக்க | திமுகவை கடுபேற்றிய முதலமைச்சர் விஜய்யின் அந்த ஒரு வார்த்தை! அமளி துமளியான சட்டப்பேரவை

'சட்டப்பேரவையில் நடிக்கும் முதல்வர்'

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது X பக்கத்தில், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், "சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted (எழுதிகொடுக்கப்பட்ட) அவதூறுகளை அள்ளிவீசி acting performance (நடித்துக்) காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் லைவ் கேமராவை, சினிமா கேமரா என்று நினைத்துக்கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி சிங்கிள் டேக்கில் ஷூட் செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல என்றும் விஜய்யின் பேச்சை கடுமையாக சாடி உள்ளார்.

முதல்வரிடம் எந்த பதிலும் இல்லை...

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பஞ்ச் டயலாக்கும் மட்டும்தான் இருந்ததே தவிர, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது என்றும் உதயநிதி பேசி உள்ளார்.

உதயநிதி அதிரடி அட்டாக் 

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது என்றும்; செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும் என்றும் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | “அப்பா எங்கப்பா?” CM விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி-குலுங்கி சிரித்த EPS! வைரல் மொமண்ட்..

குட்டிக்கதை vs விவாகரத்து

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஒரு குட்டிக் கதை சொல்லியிருந்தார். 'எங்கப்பா உங்க அப்பாவ காணோம்' என விஜய் பேசியிருந்தார். அதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே இல்லை என்பதை சைலண்டாக விமர்சித்திருந்தார். 

இதற்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது விஜய்யின் விவாகரத்து வழக்கை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவரது X பதிவின் இறுதியில், ஆகவே விஜய் தான் நடிகர் என்பதை மறந்து, இனியாவது முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க | அனைத்து ஊழல்களும் தோண்டி எடுக்கப்படும், யாரும் தப்பிக்க முடியாது - முதலமைச்சர் விஜய்

0
0
Report

புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி நகை திருட்டு: கோவையில் கொடூரம்

Coimbatore, Tamil Nadu:

கோயம்புத்தூர்: கோவையில் புதைக்கப்பட்ட ஒரு நபரின் உடலைத் தோண்டி எடுத்து, அவர் உடலில் இருந்த தங்கச் சங்கிலியை சிலர் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு அமைதியான மயானத்தில், உயிர் இழந்து மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கூட மீன் வியாபாரி எதிர்கொண்ட இந்த வினோத கொடுமை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மயான ஊழியர் உட்பட மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை சௌரிபாளையத்தின் சம்பவம்

கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (60). மீன் வியாபாரியான இவர், கடந்த ஜூன் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். நாகராஜுவின் உடலை அவரது மகன் வெங்கடேஷ் சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்தார். நாகராஜுக்கு மீன் வடிவிலான பதக்கம் (Pendant) கொண்ட தங்கச் சங்கிலி என்றால் மிகவும் பிடிக்கும். அதனை அவர் எப்போதும் அணிந்திருப்பார். அவர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவரது மகன், இறுதிச் சடங்கின் போது அந்தத் தங்கச் சங்கிலியை அகற்றாமல், உடனுடனேயே வைத்தார். நாகராஜின் உடல் ஜூன் 7 அன்று சௌரிபாளையம் மயானத்தில் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்: ஆந்திராவை உலுக்கிய சோகம்!

16-ஆம் நாள் சடங்கின் போது கிடைத்த அதிர்ச்சி

நாகராஜ் இறந்து 16 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவரது மகன் வெங்கடேஷ் குமார் மற்றும் உறவினர்கள், காரிய சடங்குகளைச் செய்ய மயானத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, நாகராஜ் புதைக்கப்பட்ட இடத்தின் மண் தோண்டப்பட்டு, கலைந்து கிடப்பதைக் கண்டு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

சௌரிபாளையத்தை உலுக்கிய உண்மை

இதனால் மறைந்த நாகராஜின் குடும்பத்தினருக்கு கவலை ஏற்பட்டது. இதில் ஏதோ சதி வேலை உள்ளது என சந்தேகமடைந்த குடும்பத்தினர், மயானத்தைப் பராமரித்து வந்த ஊழியரான கார்த்திகேயன் (27) என்பவரிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் தான், ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய அந்தத் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.

மேலும் படிக்க | அண்ணன் குடும்பத்தை மொத்தமாக காலி செய்த 16 வயது இளைஞன்: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மயானத்தின் சுவரேறி குதித்து துணிகரம்

சந்தேகப்பட்ட நாகராஜ் குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் விவரங்கள் தெரியவந்தன. மயான ஊழியர் கார்த்திகேயனின் உடந்தையுடன், உள்ளூரைச் சேர்ந்த சக்திவேல் (26) மற்றும் மணிகண்டன் (25) ஆகிய இருவரும் ஜூன் 16 நள்ளிரவில் மயானத்தின் சுற்றுச்சுவரை ஏறி குதித்துள்ளனர். நாகராஜின் உடலின் தலைப் பகுதி இருந்த இடத்தை மட்டும் குறிவைத்து தோண்டியுள்ளனர். அதன் பின்னர் அவரது கழுத்தில் இருந்த 3.5 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனர்.

மயான ஊழியருக்கும் பங்கு

நாகராஜின் சடலத்திலிருந்து திருடப்பட்ட நகையை விற்று, அதில் கிடைத்த பணத்தை சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக மயான ஊழியர் கார்த்திகேயனுக்கு ரூ.30,000 கொடுக்கப்பட்டுள்ளது.

பீளமேடு போலீஸார் நடவடிக்கை

இதுகுறித்து நாகராஜின் மகன் வெங்கடேஷ் குமார் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருக்கும் கார்த்திகேயன், சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரையும் தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | 9 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: 12 வயது சிறுவன் கைது, உத்தர பிரதேசத்தில் கொடூரத்தின் உச்சம்

0
0
Report
Advertisement

அமோனியா வாயு கசிவு : 7 பேர் உயிரிழப்பு... நுரையீரல் வீங்கி பாதிப்பு... ICU-வில் 23 பேர்

Periyakuppam, Tamil Nadu:

Tiruvallur Ammonia Gas Leak Accident : திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று (ஜூன் 21) காலை திடீரென  அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், சுற்றுவட்டார மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

அமோனியா வாயு கசிந்ததில் சுமார் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். தொடர்ந்து அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.மேலும் 9 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பணியில் இருந்த 100 பேர்

விபத்து நடந்த இறால் தொழிற்சாலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், இன்று காலை சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அம்மோனியா வாயு கசிந்தது.

மயங்கி விழுந்த தொழிலாளர்கள்

இதனால் தொழிலாளர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பபட்டது. மேலும், கண் எரிச்சல், மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன் பலரும் மயங்கி விழுந்தனர். இதனால் தொழிற்சாலையில் பதற்றம் நிலவியது.

தகவல் கிடைத்ததும் பெரியபாளையம் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர்.

நுரையீரல் வீங்கி பாதிப்பு 

மேலும் 30க்கும் மேற்பட்டோர் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 6 தொழிலாாளர்கள் உள்பட 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆணை பிறப்பித்த ஆட்சியர்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா உடனடியாக தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான சிகிச்சைகளை வழங்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அம்மோனியா வாயு கசிவு எப்படி ஏற்பட்டது?, தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா?, தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் வாயு கசிவு ஏற்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட மற்ற துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழு அமைத்த தமிழ்நாடு அரசு

இந்நிலையில், அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

0
0
Report

ITI சேர்க்கை: 100% வேலை கேரண்டி, உதவித்தொகையுடன் இலவச சைக்கிள்... கலெக்டர் முக்கிய அறிவிப்பு

Nagapattinam, Tamil Nadu:

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கையின் (Spot Admission) காலக்கெடு ஜூன் 30, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முக்கிய அம்சங்கள்:

  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளை ஐ.டி.ஐ நிலையங்களில் தகுதியான மாணவ, மாணவிகள் நேரடியாகச் சேர்ந்து பயன்பெறும் வகையில் தற்போது நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெற்று வருகிறது. 
  • இதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • மாணவர்கள் இந்த தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர அதிக அவகாசத்தை அளிப்பதே இதன் நோக்கம்.
  • 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஐடிஐ நேரடி சேர்க்கை: கட்டண விவரம்

இந்த தொழிற்பயிற்சிக்கு மிக குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகின்றது. ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கு ரூ. 235 மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளுக்கு ரூ. 245 என கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்த கட்டணம் விண்ணப்பக்கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டண என பிரிக்கப்பட்டுள்ளது. 

ஐடிஐ நேரடி சேர்க்கை: தேவையான ஆவணங்கள்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) நேரடி சேர்க்கைக்கு செல்லும்போது, மாணவ, மாணவிகள் பின்வரும் அசல் சான்றிதழ்களை (Original Certificates) கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும். 

தேவையான ஆவணங்களின் பட்டியல்:

கல்விச் சான்றிதழ்:

8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அசல் சான்றிதழின் (Original Mark Sheet).

மாற்றுச் சான்றிதழ் (TC):

பள்ளியிலிருந்து பெறப்பட்ட அசல் மாற்றுச் சான்றிதழ் (Original Transfer Certificate).

சாதிச் சான்றிதழ்:

அரசால் வழங்கப்பட்ட அசல் சாதிச் சான்றிதழ் (Original Community Certificate).

அடையாள மற்றும் முகவரிச் சான்று:

ஆதார் அட்டையின் விவரங்கள்

புகைப்படம்:

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

இவற்றுடன் நீங்கள் பயன்படுத்தும் செயலில் உள்ள மொபைல் போன் எண், மின்னஞல் முகவரி ஆகிய தகவல்களுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் (போதுமான அளவு) உடன் எடுத்துச் செல்லவும்.

3 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருக்குவளை அரசினர் தொழிற்பயிற்சி மையம் மற்றும் செம்போடை அரசினர் தொழிற்பயிற்சி மையம் ஆகிய கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த அரசு பயிற்சி மையங்களைத் தவிர, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் கிடைக்கஊடிய 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் (Government Quota) நடப்பு 2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இவற்றையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | TN Power Cut: நாளை இந்த மாவட்டங்களில் கரண்ட் கட்! உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம்

ஐடிஐ கல்வி நிறுவனங்களில் வெற்றிகரமாக படித்து முடிக்கும் மாணவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் வேலையில் சேர்வதற்கும் தமிழக அரசு உதவுகின்றது. இந்த கல்வி நிறுவனங்களில் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வளாக நேர்காணல்கள் (Campus Interviews) நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் 100% வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகின்றது. இது மட்டும் இன்றி படிக்கும் போதே பெரிய நிறுவனங்களில்  வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சியும் (Apprenticeship) அளிக்கப்படுகிறது.

ஐடிஐ நேரடி சேர்க்கை முறை

ஐடிஐ கல்வி நிறுவனங்களில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகின்றது. ஆகையால் இந்த நிறுவனங்களில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்படுவதற்கு முன்பு ஆர்வமுள்ள தகுதியான மாணவர்கள் உடனடியாக சென்று சேர்க்கை செயல்முறையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் படிக்க | திருவண்ணாமலை : மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை! விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்

ஐடிஐ நேரடி சேர்க்கை: தமிழக அரசு வழங்கும் சலுகைகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ மாணவிகளுக்கு அவர்களது கல்விச் சுமையை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இலவச பொருட்கள், மாதாந்திர உதவித் தொகைகள், சலுகைகள், அரசு திட்டங்களின் நன்மைகள் ஆகியவை இதில் அடங்கும்.

மாணவர்களுக்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் 

பயணச்சலுகை மாணவ மாணவிகளுக்கு கல்வி நிலையங்களுக்கு செல்ல இலவச பேருந்து பயண அட்டை
உதவித்தொகை தொழிற்பயிற்சி பெரும் அனைத்து மாணவர்களுக்கும் மாதா மாதம் ரூபாய் 750 உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றது.
தமிழக அரசு திட்டங்களின் நன்மைகள்

தொழில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் சிறப்பு நிதி உதவி அளிக்கப்படுகிறது.

புதுமைப்பெண் திட்டம்: மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000

தமிழ்ப் புதல்வன் திட்டம்: மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000

இலவச பொருட்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் அனைத்து, மாணவ மாணவிகளுக்கும் மிதிவண்டி, சீருடைகள், நூல்கள், காலணிகள், வரைபடக் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. 

மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஐடிஐ நேரடி சேர்க்கை மற்றும் அதில் உள்ள தொழில் பிரிவுகள் குறித்த மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தில் உதவி இயக்குனரை அணுகலாம். 

இவரிடம் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்: 8526572260, 04365-250126

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு! இன்னும் 4 நாட்களே கெடு - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

0
0
Report
Advertisement

டெல்லி பார்க்கிங் சண்டையில் பெண் கொலை, தீவிர சிகிச்சையில் கணவன்: அதிர்ச்சி சம்பவம்!

New Delhi, Delhi:

புது டெல்லி: நாட்டின் தலைநகரமான டெல்லியில், பார்க்கிங், அதாவது வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் கணவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 2-3 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி நடந்துவருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நம்மிடம் உள்ள வாகனங்களின் பாதுகாப்பை விட சக மனிதர்களின் பாதுகாப்பு மலிவாகிவிட்டதா? சம்பவத்தின் முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

டெல்லி பார்க்கிங் சண்டை

டெல்லியில் பார்கிங் தகராறு நடப்பது பொதுவான விஷயமாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்கூட்டர், பைக், கார் என ஒவ்வொரு வாகனம் என்பது இயல்பாகிவிட்ட இன்றைய சூழலில், அவற்றை நிறுத்தும் இடத்திற்கான சண்டைகளும் இயல்பாகிவிட்டன. ஆனால், வாகங்களை பார்க் செய்ய சரியான இடம் கிடைக்காத போதோ, அல்லது தங்கள் பார்க்கிங் இடத்தில் வேறொருவருடைய வாகனத்தை காணும் போதோ கோபம் தலைக்கேறி விடுகிறது. அப்படிப்பட்ட தருணங்களில் மனிதம் எங்கோ தொலைந்து விடுகிறது.

துவாரகா ஜேஜே காலனியில் நடந்த சம்பவம்

டெல்லியில் துவாரகா பகுதியில் பிந்தாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஜேஜே காலனி செக்டார் 3 பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பார்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சனிக்கிழமையன்று 2-3 இளைஞர்கள், ஒரு இளம் கணவன் மனைவி ஜோடி மீது கத்தியால் கொடிய தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது. 

டெல்லி கிரைம்: நடந்தது என்ன?

இவ்வழக்கு குறித்த விவரங்களை துவாரகா துணை காவல் ஆணையர் (DCP) குஷால் பால் சிங் வெளியிட்டார். உயிர் இழந்த பெண் ஆர்த்தி மற்றும் அவரது கணவர் விக்கிக்கும், அவர்களது அண்டை வீட்டாரான பப்பு மற்றும் வேறு சிலருக்கும் இடையில் பார்கிங் தொடர்பான தகராறு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்துவது தொடர்பாகவே இந்தத் தகராறு எழுந்தது. பார்கிங் தொடர்பாக இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே இதற்கு முன்னரும் பல முறை தகராறுகள் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆர்த்தியின் உயிரை காவு வாங்கிய இந்த சம்பவம் சனிக்கிழமை மதியம் நடந்துள்ளது. தங்கள் வாகனங்களை நிறுத்தும் இடம் குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பப்புவும் அவனது கூட்டாளிகளும் ஆர்த்தியையும், விக்கியையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும் படிக்க | 'எனக்கு மரியாதை இல்ல, கொன்னுட்டேன்..': பணிப் பெண்ணை அடித்தே கொன்ற மருத்துவர், டெல்லியில் அதிர்ச்சி

தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சிகிச்சை

இச்சம்பவத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்த இருவரும் ஹரி நகரில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோதே அப்பெண் (ஆர்த்தி) இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது கணவர் விக்கிக்குக் கடுமையான காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

இது பற்றிய தகவல் கிடைத்தவுடன், சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தவும் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கவும் தடயவியல் (FSL) மற்றும் குற்றப்புலனாய்வுக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. முக்கியக் குற்றவாளியான பப்புவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனுடன் குற்றத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பப்புவுடன் சேர்ந்து இந்த கொடூரமான செயலை செய்த மற்றவர்கள் இன்னும் 18 வயது கூட ஆகாத சிரார்கள் என்று கூறப்படுகின்றது.

மேலும் படிக்க | யோகா அனைவரையும் இணைக்கிறது... சர்வேதச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறதா?

டெல்லியில் நடக்கும் பல குற்றங்களுக்கு தலைக்கேறும் கோவமும், அரசியல் வட்டாரங்களில் இருக்கும் அறிமுகமும், பணம் படைத்த திமிருமே காரணமாக அமைகின்றன. டெல்லியில் பார்கிங் பிரச்சனையால் ஒரு பெண் உயிர் இழந்ததற்கு ஒரு நாள் முன்பு டெல்லி அருகில் உள்ள நோய்டாவிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது. நொய்டாவின் செக்டார் 15 (பேஸ்-1 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி) பகுதியில் வசிக்கும் 77 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்கும், அவரது அண்டை வீட்டில் வசித்து வந்த ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர் ஒருவருக்கும் இடையே கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் முதியவரைத் தாக்கித் தள்ளியதில், அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. கவலைக்கிடமான நிலையில் நொய்டாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க | மூணார் ரெசார்ட்.. பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடூரம்: கேரளா போலீசிடம் சிக்கிய தமிழக ரோமியோக்கள்

0
0
Report

யோகா அனைவரையும் இணைக்கிறது... சர்வேதச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

Kolkata, West Bengal:

12th International Yoga Day : 2015ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ஆம் தேதி அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் (ஜூன் 21) உலகம் முழுவதும் சர்வேதச யோகா தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று காலையில் ஒவ்வொரு நகரிலும் மக்கள் அனைவரும் இணைந்து கூட்டாக யோகா நிகழ்வில் ஈடுபட்டனர். அந்த வகையில், 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி மேற்கு வங்கம் தலைநகர் கொல்காத்தாவில் உள்ள ரெட் ரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். 

இந்தாண்டுக்கான கரு 'ஆரோக்கிய முதுமைக்கான யோகா' என்பதுதான். அதாவது, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கை இது எடுத்துரைக்கும் விதத்தில் இன்றைய யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

மக்கள் தொகையில் அதிகமானோர் முதுமையடைவதாலும், தொற்றா நோய்களால் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலக் கவலைகளும் உலகளவில் அதிகரித்து வருகின்றன. ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் இருந்து, ஆரோக்கியக் காலகட்டம், வாழ்க்கைத் தரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கி முக்கியத்துவம் மாறி வருகிறது.

ஒட்டுமொத்த தேசமும், மற்ற உலக நாடுகளும் இணைந்திருப்பது போல் தெரிகிறது. இதுதான் யோகாவின் சக்தி. யோகா அனைவரையும் இணைக்கும் சக்தி. அனைவரையும் ஒன்றிணைக்கிறது. 

இந்த சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதற்கும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய யோகா தினத்தில், தூய்மைப் பணி இயக்கத்திற்காக பணியாற்றிய வங்காள மக்களை குறிப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான முயற்சி" என்றார்.

தொடர்ந்து அவர், "யோகா தின கொண்டாட்டம் இன்று வங்காளத்தில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் அவதரித்த, சுவாமி விவேகானந்தர் யோகாவை உலகிற்கே அறிமுகப்படுத்திய புனித பூமியான வங்காளம். 

லஹிரி மகாசயா போன்ற மாபெரும் யோகிகள், யோகாவின் பாரம்பரியத்தை புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்ற இடம் இது. இன்று அதே மண்ணில் நடைபெறும் கூட்டு யோகா நிகழ்வு, ஒரு தனித்துவமான ஆன்மீக அனுபவத்தை தருகிறது" என்றார்.

0
0
Report

“என் அத்தை மண்டைய போடனும்” - 20 ரூபாய் நோட்டில் சாமிக்கு கடிதம்...பக்தரின் விநோத வேண்டுதல்..!

MMathan2d ago
Ananthapur, Andhra Pradesh:

20 Rupees Note Viral: ஆந்திராவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு 20 ரூபாய் தாளில் பக்தர் ஒருவர் விநோதமான வேண்டுதலை வைத்து காணிக்கை செலுத்தியிருந்தது தெரியவந்தது. அதில் “என் அத்தை சாக வேண்டும்” என்று பக்தர் வைத்துள்ள வேண்டுதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற பம்பனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 16-ம் நுற்றாண்டில் விஜயநகரப் பேரரசை சேர்ந்த வியாசராஜு என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் அனந்தபுரம் மாவட்ட மக்களின் முக்கிய கோவிலாக திகழ்கிறது. அது மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு வேண்டுதல்களுக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை அப்டேட்: இவர்களுக்கு ரூ.2500 கிடையாது.. அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்!

இந்த கோவிலில் தொடர்ந்து 9 அல்லது 11 செவ்வாய்க்கிழமைகளில் 108 பிரதட்சிணங்களுடன் மூல தெய்வத்திற்குப் பூஜை செய்வதால், நாக தோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், நவ கிரக தோஷம், குஜ தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாது அனைத்து நாட்களிலும் பக்தர்களில் அதிகளவில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த புகழ்பெற்ற கோவிலில் தான் ஒரு விநோதமான வேண்டுதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பொதுவாக ஒருவர் கோவிலுக்கு நிம்மதியை தேடி செல்வர். அங்கு, அவர்கள் நன்றாக இருக்க வேண்டும், அக்கம்பக்கத்தினர் நன்றாக இருக்க வேண்டும், உறவினர்கள் நன்றாக இருக்க வேண்டும் அல்லது பக்கத்து வீட்டுக்காரன் நன்றாக இருக்கக் கூடாது, தான் ஒரே இரவில் பணக்காரணாக வேண்டும், தனக்கு நல்ல வேலை வேண்டும், தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பாஸ் ஆக வேண்டும், நல்ல வேலை கிடைக்கனும், வீடு கட்டனும், திருமணம் ஆகனும், குழந்தை வரம் வேண்டும் என்று இவ்வாறெல்லாம் தங்களது வேண்டுதலை கடவுளிடம் வைத்து விட்டு வருவர்.

அதே வேளையில் உண்டியல் காணிக்கை அல்லது துண்டு சீட்டு எழுதி மரத்தில் கட்டிவிட்டு வருவர். இது தான் இதுவரையில் இருக்கின்ற வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் ஒருவர் உடைத்து ஒரு விநோத வேண்டுதலை கடவுளிடம் வைத்திருக்கிறார் என்பதை சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அப்படியொரு வேண்டுதலை தான் அந்த நபர், இந்த 5 நூற்றாண்டு பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்துவிட்டு வந்திருக்கிறார். 

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை அப்டேட்: இவர்களுக்கு ரூ.2500 கிடையாது.. அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்!

விநோத வேண்டுதல்:

இந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பணம் எண்ணிக்கையின் போது அந்த பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் ஒரு ரூபாய் நோட்டில் இருந்த வாசகத்தை பார்த்து திகைத்துப் போயுள்ளார்.

அந்த ரூபாய் நோட்டில் “என் அத்தை சீக்கிரம் சாக வேண்டும்” என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகம் 20 ரூபாய் தாளில் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த சக பணியாளர்கள் ஆச்சரியப்பட்டு தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள்:

இதனைப் பார்த்த சமூக வலைத்தள பயனாளர்கள் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து சில காமெடியான கருத்துக்களையும், இது போன்ற செயல்களை யார் செய்திருப்பார்கள்? ஒரு வேளை உள்ளூர்காரர்களே இந்த வேண்டுதல வைத்தனரா? மேலும் இதில் அத்தை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது அவருடைய சொந்த அத்தையா? அல்லது மாமியார் எனப்படும் அத்தையா? என பல்வேறு கேள்விகளையும் எழுப்பி தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை! பின்னணியில் வாட்ஸ் அப்? சி.இ.ஓ குற்றச்சாட்டு

0
0
Report
Advertisement

வெளுக்கப்போகுது! இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் அலர்ட்

Chennai, Tamil Nadu:

TN Weather Update Today: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம் (TN Weather) குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை அலர்ட்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சுமார் 0.9 கிமீ உயரத்தில் கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 20) தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: நீட் எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு... தமிழகத்தில் 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 21ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஈரோடு டூ சேலம்.. தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!

ஜூன் 22ஆம் தேதி  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 23 முதல் ஜூன் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை பற்றிய அறிவிப்பு

ஜூன் 20 முதல் ஜூன் 23ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை பெய்யுமா?

சென்னையில் இன்று (ஜூன் 20) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெதர்மேன் முக்கிய அலர்ட்

 

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், மத்திய மற்றும் டெல்டா மண்டலப் பகுதிகளுக்கு இது ஒரு சிறப்பான நாள்; இப்பகுதிகளில் பலத்த மழை (அதாவது 'டமால் டுமீல்' என இடி-மின்னலுடன் கூடிய கனமழை) பெய்துள்ளது. இன்று, வட உள் தமிழகத்தில் மழைப்பொழிவு சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை நோக்கி நகரும். இவை இடி-மின்னலுடன் கூடிய மழையாக இருக்கும். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலும் இல்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டினால் அது ஒரு அதிசயமாகவே இருக்கும்” என்று கூறினார்.

மேலும் படிக்க: நீலகிரி : சம்பளத்தில் ஏமாற்றும் நிர்வாகம்... கூடலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

 

 

0
0
Report

இரு மடங்கு அபராதம்! ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்தால் நடவடிக்கை.. புது ரூல்ஸ் இதோ

Chennai, Tamil Nadu:

Indian Railway Rules Latest: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது  ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினமும் 15,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  குறைந்த கட்டணம்,  கழிவறை வசதி, படுக்கை வசதி போன்றறை இருப்பதால் பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். 

இரட்டிப்பாகும் ரயில்வே அபராதம்

அவ்வப்போது ரயில் பயணிகளுக்காக விதிமுறைகளை இந்தியன் ரயில்வே அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது. மேலும், டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளையும் இந்தியன் ரயில்வே கடுமையாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதாவது,  ரயில்வே அபராத தொகையை இந்தியன் ரயில்வே இரட்டிப்பாக்கி உள்ளது. 

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி,  ரயில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கான அபராதத்தை  அதிகரித்துள்ளது.ரயில்வே விதித்த குறைந்தபட்ச அபராதம் ரூ.250-ஐ ரூ.500 ஆக உயர்த்தியுள்ளது.  ரயில்வே சட்டம், 1989-இன் 137 மற்றும் 138 பிரிவுகளின் கீழான குறைந்தபட்ச அபராதம், ஜூலை 1, 2026 முதல் ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போருக்கு அபராதமாக ஜூலை 1 முதல் ரூ.500 இனி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஆறு மாதங்கள் தண்டனை விதிக்கப்படலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வெறும் ரூ.1,650 தான்.. திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனம்.. ஐஆர்சிடிசி சூப்பர் பேக்கேஜ்

ரயில்வே விதிகளில் திருத்தம்

மேலும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அல்லது பயணிகளைப் பொருட்கள் வாங்கத் துண்டுபவர்கள் மீதான விதிமுறையை இந்தியன் ரயில்வே கடுமையாக்கி உள்ளது.  இத்தகைய  குற்றங்களுக்கு ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
மேலும், ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ குடிபோதையில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். அனுமதியின்றி ரயில்களில் பயணிகள் அமருக்கு இருக்கைகள் அல்லது பகுதிக்குள் நுழைவது, வெளியேற  மறுப்பதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் இல்லாமல், மற்ற ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அத்துமீறி நுழைவதற்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டி, இருக்கை அல்லது அறைக்குள் அனுமதியின்றி நுழையும் ஆண் பயணிக்கு ரூ.2500 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை செலுத்த  தவறினால், நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு, ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய  வளாகத்திற்குள் தவறான இடத்தில் வாகன நிறுத்துதல், ஒருவழிப் பாதை விதிகளை மீறுதல் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால் ஆகியவற்றுக்கு ரூ.500  அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க: குற்றாலத்தை விடுங்க... கேரளாவின் இந்த 5 அருவிகளுக்கு போங்க... இப்போ செம சீசன்!

ஜூலை 1 முதல் அமல்

விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. இருப்பினும், புதிய விதிகளைச் செயல்படுத்த தனி அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், ஜூலை 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் வழக்குகளுக்குத் திருத்தப்பட்ட அபராதங்களைச் செயல்படுத்துமாறு பயணச்சீட்டு சோதனையாளர்கள் (TTEs), வணிகப் பணியாளர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் பிற களப் பணியாளர்களுக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. 

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதைக் கட்டுப்படுத்துதல், விதிமுறைகளுக்கு இணங்குவதை ஊக்குவித்தல், ரயில்வே வருவாயைப் பாதுகாத்தல் மற்றும் பயணச்சீட்டு சோதனை முறையை மேலும் திறம்படச் செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஒரே இரவில் பேய்களால் கட்டபட்ட கோவில்! 6 மணிக்கு மேல் நோ எண்ட்ரி..எங்க இருக்கு?

 

0
0
Report

'எனக்கு மரியாதை இல்ல, கொன்னுட்டேன்..': பணிப் பெண்ணை அடித்தே கொன்ற மருத்துவர், டெல்லியில் அதிர்ச்சி

New Delhi, Delhi:

புது டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியின் மவுண்ட் கைலாஷ் பகுதியில் தங்கள் வீட்டில் பணிபுரியும் பணிப் பெண்ணை கொன்றதற்காக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் வெளிவரும் தகவல்கள் பீதியை அளிக்கும் வண்ணம் உள்ளன. சாதாரண கருத்து வேறுபாடுகளே கொலைக்கு காரணமாக அமைந்ததாக வெளிவரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன.

மருத்துவரை விசாரிக்கத் தொடங்கிய டெல்லி போலீஸ்

டெல்லியைச் சேர்ந்த தோல் மருத்துவரான (dermatologist) மனீஷ் குப்தா தங்கள் வீட்டு பணிப் பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை விடுத்த கோரிக்கையை விசாரித்த நீதித்துறை நடுவர் அனுராக் சாப்ரா அதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கிரிக்கெட் மடையால் அடித்துக் கொலை

மருத்துவர் மனீஷ் குப்தா தனது வீட்டில் பணிபுரிந்த மீனா என்ற பெண்ணை வியாழக்கிழமை காலை கிரிக்கெட் மட்டையால் அடித்ததாகவும், கூர்மையான ஆயுதத்தால் குத்தியதாகவும் கூறப்படுகின்றது. மீனா தன் குடும்பத்தில் பில்லி சூனியம் செய்ததாகவும், தனது குடும்பத்தில் தொடர்ந்து நிலவிய கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகளுக்கு மீனாவே காரணம் என அவர் நம்பியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி மருத்துவரின் வெறிச்செயல்

மருத்துவரால் கொல்லப்பட்ட மீனா, சுமார் 10-12 ஆண்டுகளாக அவரது குடும்பத்தில் வேலை செய்து வருகிறார். வியாழக்கிழமை காலை தனது மகன் வீட்டில் இருந்த நிலையில், டாக்டர் மனீஷ் குப்தா அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் மீனாவை அடித்தே கொன்றுள்ளார். காலை சுமார் 10:15 மணிக்கு மனீஷ் குப்தாவின் மனைவி, டாக்டர் டீனா குப்தா வேலைக்கு சென்றுள்ளார். 10:30 மணி வாக்கில் வீட்டுக்கு வந்த பணிப்பெண் துணிகளை துவைத்து மாடியில் உலர்த்த சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற டாக்டர் குப்தா, சுமார் 11:30-11:45 மணி வாக்கில் அவரை தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | அம்மா என்னால் முடியவில்லை...: அடி, உதை, CCTV கண்காணிப்பு, திருமணமாகி 47 நாட்களில் பெண் தற்கொலை

முதலில் மருத்துவர் பணிப்பெண்ணை மட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் தள்ளாடி கீழே விழ்ந்துள்ளார். அதன் பிறகு மருத்துவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகின்றது. அதன் பின் கீழே இறங்கி வீட்டுக்குள் வந்த மருத்துவர் மனீஷ், தான் பயன்படுத்திய ஆயுதங்களை படிக்கட்டின் அருகில் வைத்துள்ளார். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை காவல்துறை பிறகு கைப்பற்றியது. மீனாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் வெளியே வந்து பார்த்திருக்கிறார்கள். ஆனாலும், சத்தம் எங்கிருந்து வருகிறது என்பது முதலில் பலருக்கு புரியவில்லை.

சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள மொட்டை மாடியில் ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு மருத்துவரையும் கைது செய்தனர்.

மேலும் படிக்க | பாஜக பிரமுகர் கொடூர கொலை.. காருடன் தீ வைத்து எரிப்பு! என்ன நடந்தது?

10 ஆண்டுகளாக டாக்டரின் குடும்பத்திற்காக உழைத்த பெண்

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் வீட்டில் பணிபுரிந்த பெண்ணை மருத்துவர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மருத்துவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கள் வீட்டில் பணிபுரிந்து வந்த மீனா என்ற பெண்மணியை தனக்கு பிடிக்கவில்லை என மருத்துவர் ஒப்புக்கொண்டார். மீனா பில்லி சூனிய செயல்களில் ஈடுபட்டதாக அவருக்கு சந்தேகம் இருந்தது. அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என பல நாட்களாக அவர் தனது மனைவியிடம் கூறி வந்தார். ஆனால், அது நடக்காமல் போகவே அவரது ஆத்திரம் இன்னும் அதிகமானது. தன் வீட்டிலேயே தனக்கு மதிப்பு இல்லை என்ற உணர்வு அவரது கோவத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

குடும்பச் சண்டைகள், அதிகரித்த டென்ஷன்

நீண்டகாலமாக குடும்பத்தில் இருந்துவந்த சண்டைகள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றின் வடிகாலாக இந்த கொலை இருந்திருக்கலாம் என கவால்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக, மருத்துவர் மனீஷ் குப்தா மனச்சோர்வுக்கான மருந்துகளை உட்கொண்டு வருவதாக அவரது மனைவியும் மகனும் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதிர்ச்சியில் பணிப் பெண்ணின் குடும்பம்

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட பணிப்பெண்ணின் குடும்பம் கடுமையான அதிர்ச்சியில் உள்ளது. அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பதை தங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்றும், போலீசார் பாரபட்சமின்றி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் அக்குடும்பம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 'எங்கள் குடும்பத்துக்காக என் தாய் கடுமையாக உழைத்தார். அவர் எப்போதும் குப்தா குடும்பத்தினரை பற்றி பாராட்டித்தான் பேசுவார். அவர்கள் இப்படி செய்ததை நம்பவே முடியவில்லை' என இறந்த பெண்ணின் மகன் கூறியுள்ளார்.

இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவரைத் தவிர வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகின்றது.

மேலும் படிக்க | கேரளாவை உலுக்கும் உறுப்பு தான மோசடி... 50 லட்சத்தில் கிட்னி சேல்: ED அதிரடி சோதனை

0
0
Report
Advertisement

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி: ஜூன் 26-க்குள் இதை முடிக்கணும், மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Pudukkottai, Tamil Nadu:

Pudokkottai Ration Card Update: குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்துகொள்ளாதவர்கள், வரும் 26 ஆம் தேதிக்குள் (26.6.26), அருகிலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று இந்த பணியை செய்துமுடிக்க வெண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

  • புதுக்கோட்டை குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்னும் கைரேகை பதிவை முடிக்காத உறுப்பினர்கள் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் இந்த முக்கிய பணியை செய்துமுடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
  • பணி நிமித்தமாகவோ, அல்லது பிற காரணங்களுக்காகவோ தற்காலிகமாக வேறு பகுதிகளில் வசித்து வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
  • அவர்களும் தற்போது தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ஜூன் 26 ஆம் தெதிக்குள் கைரேகை பதிவு செய்யும் பணியை முடித்துக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்

குடும்ப அட்டைதாரர்கள் அட்டையில் உள்ள இறந்த உறுப்பினர்களின் பெயர்கள நீக்குவதற்கான பணிகளையும் இந்த கால்க்கெடுவிற்குள் செய்து முடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. குடம்ப அட்டையில் உள்ள இறந்த உறுப்பினர்களின் பெயரை நீக்க, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை வழங்கி பெயர் நீக்கும் நடவடிக்கைகளை 20.6.26 -க்குள் செய்து முடிக்குமாறு நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாதம் ரூ.2,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. CM விஜய்யின் ஜாக்பாட் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

ரேஷன் அட்டைக்கான உடனடி நடவடிக்கை

ரெஷன் அட்டை தொடர்பான சிக்கல்களை தவிர்க்கவும், பொது விநியோக முறையின் கீழ் மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து பெறவும், அவ்வப்போது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் புதுப்பித்தல்களை கவனித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியமாகும். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த பணிகளை, ஜூன் 26ஆம் தேதிக்குள் செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | தமிழ்நாடு பிரேக்கிங் நியூஸ் நேரலை: செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ்; சென்னையில் IND vs AFG மோதல்

ரேஷன் கார்டு கைரேகை பதிவை செய்து முடிப்பது எப்படி?

இதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்:

  • இதற்கு முதலில் ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.
  • அங்குள்ள ஊழியரிடம் கைரேகை பதிவு செய்ய வந்திருப்பதை தெரிவிக்கவும்.
  • அவர் உங்களது ரேஷன் அட்டை பதிவுகளை முதலில் e-POS கருவியில் பதிவு செய்வார்.
  • அதன் பிறகு உங்கள் ஆதார் எண்ணை சரிபார்ப்பார்.
  • இதன் பிறகு, கைரேகை ஸ்கேனர் கருவியின் மூலம் உங்கள் விரலை ஸ்கேன் செய்து பதிவு செய்வார்.
  • கருவியில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட கைரேகை, ஆதார் தரவுத்தளத்தில் உள்ள கைரேகையுடன் பொருந்த வேண்டும்.
  • அதன் பிறகு ரேஷன் அட்டை கைரேகை இணைக்கப்படும்.

ரேஷன் அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே கைரேகை பதிவு செய்ய முடியும். ஆகையால். உங்கள் ரேஷன் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக கட்டாயமாகும். இன்னும் இவ்விரண்டும் இணைக்கப்படவில்லை என்றால், தேவையான ஆவணங்களுடன் ரேஷன் கடை ஊழியர்களை அணுகி முதலில் அந்த பணிகளை செய்துமுடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வெளுக்கப்போகுது! இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் அலர்ட்

0
0
Report

சென்னை: வண்டலூர் பூங்காவில் இலவச அனுமதி.. ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி?

Chennai, Tamil Nadu:

Vandalur Zoo Free Entry: தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு,  சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜூன் 21,22ஆம் தேதிகளில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்து இருந்தார். இதனால், மக்கள் குஷியில் உள்ளனர். இதற்கிடையில், பலருக்கும் இலவச அனுமதி தொடர்பாக சந்தேகம் இருந்தது. அதாவது, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமா அல்லது நேரில் அனுமதி சீட்டை பெற்றாலும் இலவசமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தற்போது வண்டலூர் பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் இலவச அனுமதி

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 22.06.2026 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படுகிறது.

இலவச நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு, உயிரியல் பூங்காவின் இணையதளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். எனவே, பார்வையாளர்கள் தங்களது இலவச நுழைவுச் சீட்டுகளை tickets.aazp.in என்ற இணையதளத்தின் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: தயார் நிலையில் கலைஞர் சர்வதேச பன்னாட்டு மையம்: எப்போது Open தெரியுமா?

 

ஆன்லைன் முன்பதிவு அவசியம்

முன்பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்கா நுழைவுச் சீட்டு கவுண்டர்களில் நேரடி (On-the-spot) டிக்கெட் முன்பதிவு வசதி இருக்காது.

பார்வையாளர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், இலவச நுழைவு இரண்டு தனித்தனி நேரப் பிரிவுகளாக (காலை மற்றும் பிற்பகல்) ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும், பிற்பகல் நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.

மேற்கண்ட இரு நாட்களிலும் உயிரியல் பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். மாலை 4.30 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக் கட்டணத்தைத் தவிர, பிற சேவைகளுக்கான கட்டணங்கள் நடைமுறையில் உள்ள கட்டண அட்டவணையின்படி வசூலிக்கப்படும். 

மேலும் படிக்க: சென்னை மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம்: ஜூன் 21 முதல் டோக்கன் விநியோகம்

 

சிங்கம் மற்றும் மான் சஃபாரி சேவை இயக்கப்படாது

இந்த இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்வையிடுவதற்கான மின்கல (Battery-operated) வாகன சேவையும், சிங்கம் மற்றும் மான் சஃபாரி (Lion and Deer Safari) சேவையும் இயக்கப்படாது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய நபர்களுக்காக மின்கல வாகன வசதி இந்த இரண்டு நாட்களிலும் இலவசமாக வழங்கப்படும்.

அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பார்வையாளர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க போதிய இடவசதி ஏற்படுத்தவும், அத்தியாவசிய வசதிகள் மற்றும் பிற சேவைகளை திறம்பட நிர்வகிக்கவும் நுழைவு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பூங்கா விலங்குகளின் நலன், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் பயனுள்ள அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் உயிரியல் பூங்காக்களைப் பார்வையிட்டு, வனவிலங்குகளை நேரடியாகக் கண்டு அனுபவித்து, உயிரினப் பன்முகத்தன்மை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடையே வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வையும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் நாளை (ஜூன் 20) மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா? மின்வாரியம் அறிவிப்பு

 

0
0
Report
Advertisement
Advertisement
Back to top