icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

பிளே ஆப் சென்ற RR... PBKS, KKR கனவில் மண்ணள்ளி போட்ட MI

Mumbai, Maharashtra:

MI vs RR, IPL 2026 : ஐபிஎல் லீக் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4வது மற்றும் கடைசி அணியாக தகுதிபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றதன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.

ஏற்கெனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. நான்காவது இடத்திற்கு பஞ்சாப், ராஜஸ்தான், கேகேஆர் அணிகளுக்கு போட்டி இருந்தது.

இன்று மாலை மும்பையில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் மும்பை வென்றால் மட்டுமே பஞ்சாப் மற்றும் கேகேஆர் அணிக்கு பிளே ஆப் போவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, பஞ்சாப் மற்றும் கேகேஆர் அணியையும் தன்னோடு வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய போட்டியை வென்று 7வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது. 2008ஆம் ஆண்டில் ஷேன் வார்னே தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன்பின் 2022ஆம் ஆண்டில்தான் இறுதிப்போட்டிக்கே தகுதிபெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய போட்டியில் 205 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் துருவ் ஜூரேல் 38, ஜோப்ரா ஆர்ச்சர் 32, தசுன் ஷனகா 29 ரன்களை குவித்தனர். மும்பை அணியில் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 60, ஹர்திக் பாண்டியா 34, வில் ஜாக்ஸ் 33 ரன்களை எடுத்தனர். இருப்பினும் ஆர்ச்சர் 3, பிரிஜேஷ், நான்ரே பர்கர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

பிளே ஆப் போட்டிகள்

  • மே 26  - குவாலிபயர் 1 : ஆர்சிபி vs குஜராத்
  • மே 27 - எலிமினேட்டர் : எஸ்ஆர்ஹெச் vs ராஜஸ்தான்
  • மே 29 - குவாலிபயர் 2 : குவாலிபயர் 1 தோல்வியடைந்தவர் vs எலிமினேட்டர் வெற்றியாளர்
  • மே 31 - இறுதிப்போட்டி : குவாலிபயர் 1 வெற்றியாளர் vs குவாலிபயர் 2 வெற்றியாளர்

 

0
0
Report

RSS பிள்ளையை தத்தெடுப்பதா? விசிகவில் இருந்து விலகிய பனையூர் பாபு - அடுத்தது யார்?

Chennai, Tamil Nadu:

Panaiyur Babu Left VCK : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பனையூர் பாபு அக்கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிள்ளை என விஜய்யை விமர்சித்துவிட்டு, அவரையே தத்தெடுப்பதா என திருமாவளவனை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகியிருப்பதாகவும் அறிவித்துள்ளார். அவர் விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்தார்.

பனையூர் பாபு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகலை நீண்ட அறிக்கையை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில், சுமார் 6 பக்கத்திற்கு அவர் நீண்ட விளக்கத்தையும், திருமாவளவன் மீதான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். 

குறிப்பாக, "நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்; நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறி மீறி பாய்தல் தீரம்" என திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெகவின் அமைச்சரவையில் விசிக இடம்பிடித்த நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பங்கு அளப்பரியது என்றும் ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அவர் என்றும் திருமாவளவனை புகழ்ந்து அந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் அதில் தொடர்ச்சியாக, "சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்றுதான் நான் முழுமையாக நம்பினேன். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்தேன்" என திருமாவளவன் மீது வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார். 

தொடர்ந்து அறிக்கையின் பிற்பகுதியில், ஆனால், அந்த அடிப்படை அரசியல் அறம் தடம் மாறும் போது தன்னால் மௌனமாகக் கடந்து செல்ல முடியவில்லை என்றும் மிகுந்த மனவேதனையோடு ஒரு யதார்த்தத்தை இங்குப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தான் தள்ளப்பட்டுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதில், "சமீப காலங்களாகத் தலைமையின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குப் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன. ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவது அவரது இயல்பல்ல. நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, மீண்டும் இரவில் சமூக வலைத்தள நேரலையில் முற்றிலும் முரணான ஒரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

திமுக - அதிமுக இணைவது குறித்த பேச்சுவார்த்தை குறித்தும், திருமாவளவனை முதலமைச்சராக முன்னிறுத்தி பேசப்பட்ட திரைமறைவு பேச்சுவார்த்தை குறித்தும் திருமாவளவன் பல்வேறு இடங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னுக்கு பின் முரணமாக கருத்து தெரிவிப்பதாக பலரும் குற்றஞ்சாட்டிய நிலையில், அதை திருமாவளவனுக்கு நெருக்கமாக இருந்த பனையூர் பாபுவே குறிப்பிட்டுள்ளது கவனிக்க வேண்டியது.

"நேற்று வரை ஒரு நடிகரை (விஜய்) 'ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பெற்றெடுத்த பிள்ளை’ என்று கடுமையாக விமர்சித்த அவர், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது" என குற்றஞ்சாட்டி உள்ளார்.

'விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்' என்று விசிகவை கடுமையாக விமர்சித்த திருமாவளவன், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும் என கடுமையாக விமர்சித்துள்ளார். 

மேலும் அவர் அந்த அறிக்கையில், "ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்; அது நிலையற்றது. ஆனால், பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்த கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள். அரசியல் தளத்தில், 'மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது' என்று அம்பேத்கர் கடுமையாக எச்சரித்துள்ளார். 

ஆனால் இன்று  அந்த அபாயகரமான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன். கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது.
 
எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கட்சியிலிருந்து விலகினாலும் திருமாவளவனிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல் உறுதியாக நின்று பயணிப்பேன். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

0
0
Report

இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு பயோபிக்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

RSRK Spark15h ago
Chennai, Tamil Nadu:

திரைத்துறையில் எப்போதுமே நிஜ மனிதர்களின் சாதனைகளையும், வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட ஆளுமைகளின் கதைகளையும் பேசும் திரைப்படங்களுக்கு தனித்துவமான வரவேற்பு உண்டு. அந்த வகையில், இந்திய விண்வெளி அறிவியலாளர் நம்பி நாராயணனின் கதையை 'ராக்கெட்டரி' திரைப்படம் மூலம் உலகறிய செய்து, தேசிய விருதையும் வென்ற நடிகர் மாதவன், தற்போது மீண்டும் ஒரு வரலாற்று நாயகனின் கதையோடு களமிறங்கியுள்ளார். கோவை மண்ணின் பெருமையாகவும், 'இந்தியாவின் எடிசன்' என்றும் போற்றப்படும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

ஜூலை மாதம் திரையரங்குகளில்

வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படம் வெளியாவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் நடிகர் மாதவனின் தோற்றம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜி.டி. நாயுடுவின் கம்பீரமான அடையாளத்தையும், அவரது தனித்துவமான உடல்மொழியையும் அப்படியே பிரதிபலிக்கும் வகையில் மாதவன் உருமாறியுள்ளார். 'ராக்கெட்டரி' படத்திற்கு பிறகு மாதவனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இந்த கேரக்டர் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணகுமார் ராமகுமார்

இத்திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் மிக நேர்த்தியாக எழுதி, இயக்கியுள்ளார். கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ‘வெல்த் கிரியேட்டர்’ ஜி.டி. நாயுடு, அறிவியல் மற்றும் தொழில்துறை தொழில்நுட்பங்களில் நிகழ்த்திய புரட்சிகரமான கண்டுபிடிப்புகளையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும் மையமாகக் கொண்டு இந்தத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றும் மற்றுமொரு ஊக்கமளிக்கும் கதையாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை. மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோரும், ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் மாதவனுடன் இணைந்து தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்திருப்பதால், படத்தின் மீதான வர்த்தக மதிப்பும், எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

விநியோகம்

பல்வேறு மொழிகளில், உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் நோக்கில், இப்படத்தின் விநியோக உரிமையை இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

தமிழ்நாடு ஏஜிஎஸ் சினிமாஸ் (AGS Cinemas)
ஆந்திரா & தெலங்கானா ஸ்பிரிட் மீடியா (Spirit Media)
கேரளா ஊர்வசி தியேட்டர்ஸ் (Urvasi Theatres)
வெளிநாடுகள் ஏபி இண்டர்நேஷனல் (AP International)

இறுதி பணிகள்

திரைப்பட குழுவினர் அளித்துள்ள தகவலின்படி, இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மிகுந்த சுமுகமாகவும், நேர்மறையான சூழலிலும் திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. ஜி.டி. நாயுடுவின் கதாபாத்திரத்திற்காக மாதவன் எடுத்துக்கொண்ட அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்களையும் வியக்க வைத்துள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து, கிராபிக்ஸ், பின்னணி இசை மற்றும் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை மாதத்தில் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு, ஒரு எமோஷனல் மற்றும் இன்ஸ்பிரேஷனல் திரையனுபவத்தை வழங்கப் போவதாகப் படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் டீசர், ட்ரெய்லர் ஆகியவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
Report
Advertisement

SSC CGL 2026 வேலை வாய்ப்பு அறிவிப்பு: 12,256 பணியிடங்கள் வெளியீடு - முழு விவரங்கள் உள்ளே!

MMathan1d ago
Wadgaon, Maharashtra:
SSC CGL Exam Notification 2026 News: மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 12,256 பணியிடங்களுக்கு குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
விண்ணப்பத்தாரர்கள் மே 21 முதல் ஜூன் 22-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்ப படிவங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 22, இரவு 11 மணி வரையும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு ஜூன் 23, 2026 வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நிரப்பப்படும் பதவிகளின் விவரம்...

மேலும் படிக்க: கோவை மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு... முழு விவரங்கள் உள்ளே!

விண்ணப்பம் தொடக்கம் தேதி மே 21, 2026
விண்ணப்பம் கடைசி தேதி ஜூன் 22, 2026 இரவு 11 மணி வரை
ஆன்லைன் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூன் 23, இரவு 11 மணி வரை
விண்ணப்ப திருத்த சாளரம் ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 1 வரை
SSC CGL அடுக்குத் தேர்வு-1 2026 ஆகஸ்ட்-செப்டம்பர் 2026
SSC CGL அடுக்குத் தேர்வு-2 2026 டிசம்பர் 2026
விண்ணப்பக் கட்டணம் ரூ.100

குரூப் B பதவிகள்:

உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, வருமான வரி ஆய்வாளர், ஆய்வாளர் (மத்திய சரக்கு மற்றும் சேவை வரி & மத்திய கலால் வரி), ஆய்வாளர் (தடுப்பு அதிகாரி), ஆய்வாளர் (பரிசோதகர்), உதவி அமலாக்க அதிகாரி, உதவி ஆய்வாளர், ஆய்வாளர் பதவிகள், பிரிவுத் தலைவர், நிர்வாக உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், கோட்டக் கணக்காளர், இளநிலை புலனாய்வு அதிகாரி, இளநிலை புள்ளியியல் அதிகாரி (JSO), புள்ளியியல் புலனாய்வாளர் தரம்-II, அலுவலக கண்காணிப்பாளர்

குரூப் C பதவிகள்:

தபால் உதவியாளர்/பிரிப்பு உதவியாளர், தணிக்கையாளர், கணக்காளர்/ இளநிலை கணக்காளர், மூத்த செயலக உதவியாளர்/மேல்நிலை எழுத்தர்கள், மூத்த நிர்வாக உதவியாளர், வரி உதவியாளர், உதவி ஆய்வாளர்

வயது வரம்பு: 

இந்த பதவிகளுக்கு 01.08.2026 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுளகள் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: Government jobs : அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026: கல்வித்தகுதி 12th, டிகிரி - முழு விவரம்

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: 

ஒவ்வொரு பதவிகளுக்கும் சம்பள முறை வேறுபடும்.
 
ஊதிய நிலை-4 (ரூ.25,500 முதல் ரூ.81,100)
ஊதிய நிலை-5 (ரூ.29,200  முதல் ரூ.92,300)
ஊதிய நிலை-6 (ரூ.35,400  முதல் ரூ.1,12,400)
ஊதிய நிலை-7 (ரூ.44,900 முதல் ரூ.1,42,400)
ஊதிய நிலை-8  (ரூ.47,600 முதல் ரூ.1,51,100)

தேர்வு முறை:

இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். 
 
முதல்நிலைத் தேர்வு:
முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (General Intelligence and Reasoning), பொது விழிப்புணர்வு (General Awarness), அளவுசார் திறனறிவு (Quantitative Aptitude), ஆங்கிலப் புரிதல் (English Comprehension) ஆகிய பகுதிகளில் இருந்து 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 1 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 
 
முதன்மைத் தேர்வு:
முதன்மைத் தேர்வானது 390 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் கணித திறன்கள் (Mathematical Ability) மற்றும் பகுத்தறிவு, பொது நுண்ணறிவு (Reasoning, General Intelligence) பிரிவில் தலா 30 கேள்விகளும், ஆங்கில மொழி மற்றும் புரிதல் (English Language and Comprehension) 45 கேள்விகளும், பொது விழிப்புணர்வு (General Awarness) பிரிவில் 25 கேள்விகளும், என 130 கேள்விகள் கேட்கப்படும். கணிணி அறிவு (Computer Knowledge) பிரிவில் 20 கேள்விகள் கேட்கப்படும். 

பாடத்திட்டம்:

பொது அறிவுப் பிரிவில் இந்தியா மற்றும் அண்டை நாடுகள், அதில் குறிப்பாக வரலாறு, கலாச்சாரம், புவியியல், பொருளாதாரம், பொதுக் கொள்கை & அறிவியல் ஆராய்ச்சி பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். 
 
கணித பிரிவில் எண் கணிதம், இயற்கணிதம், வடிவியல், முக்கோணவியல், வட்டி கணக்குகள், சராசரி, விகிதம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். 
 
திறனறிதல் பிரிவில் எண்கள், படங்கள், திசைகள், எண் வரிசை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளப் பக்கத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 
 
0
0
Report

கோவை சம்பவம்! முதல்வர் விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

Coimbatore, Tamil Nadu:

கோவையில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர். சம்பவம் நடந்த சுழலூர் பகுதியில் தமிழ்நாடு டிஜிபி, கூடுதல் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று இரவு திடீரென, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். சூழலூர் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமி, மே 20 அன்று மாலை வீட்டுக்கு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடியபோது, அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டின் அருகில் அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. உடலில் பலாத்காரத்தின் அறிகுறிகள் தெளிவாக தெரிந்தன. இந்த கொடூரம் உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சம்பவம் அறிந்த உடனே கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முதற்கட்ட விசாரணையில், அருகில் இருந்த ஒரு நபர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தமிழக மருத்துவத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2026: உடனே விண்ணப்பியுங்கள்!

மக்கள் கொந்தளிப்பு

சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுழலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல், கடைகள் அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய மக்கள், “இனியும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்க கூடாது” என வலியுறுத்தினர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மக்களை சந்தித்து அமைதியை வலியுறுத்தினர். வழக்கு விரைவாக முடிக்கப்படும். குற்றவாளி விரைவில் தண்டிக்கப்படுவார் என உறுதியளித்தனர்.

அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளனர். சில கட்சிகள் ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. இந்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், வழக்கை விரைவாக முடிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க: ரூ.1000 உதவித் தொகை அறிவிப்பு.. இளைஞர்களுக்கு விஜய்யின் ஜாக்பாட் அறிவிப்பு.. எப்படி பெறுவது?

முதல்வர் விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், "கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: "ஏன் அமைதியாக இருக்கிறார்?" சிறுமி தாயார் கண்ணீர் கேள்வி.. உடனே ரியாக்ட் செய்த சிஎம் விஜய்!

விசாரணை நிலவரம்

- சம்பவ இடத்தில் இருந்து முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
- சிசிடிவி காட்சிகள், செல்போன் லொக்கேஷன் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
- சந்தேக நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது

0
0
Report

கால்நடை மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு... மே, 25-ம் தேதி முதல் தொடக்கம்!

PPINEWZ1d ago
Nagalapuram, Tamil Nadu:

தமிழ்நாடு மருத்துவக் கல்லூர்களின் பட்டியல் மற்றும் இட ஒதுக்கீடு:

TANUVAS Admission 2026-27 News: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

மேலும் படிக்க: 10 வகுப்பு ரிசல்ட் வருது... ஐடிஐ படிப்புகள் அட்மிஷன் ஆரம்பம் - விண்ணப்பிப்பது எப்படி?

இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 660 இடங்கள் இருக்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால் வளத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 60 இடங்கள், மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. 

TANUVAS 2026-27 மாணவர்கள் சேர்க்கை: 

அதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் உணவு தொழில்நுட்ப படிப்புக்கு 40 இடங்கள், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள இணைப்புக் கல்லூரியில் பால்வளத் தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் இருக்கின்றன. 4 ஆண்டுகள் கொண்ட இந்த 3 பி.டெக் பட்டப்படிப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

மேலும் படிக்க: சினிமாவில் சாதிக்க ஆசையா? தமிழக அரசின் குட் நியூஸ்... உடனே அப்ளை பண்ணுங்க

இந்த நிலையில், பி.வி.எஸ்சி-ஏ.ஹெச் மற்றும் பி.டெக் பட்டப்படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிப்பது வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு, இணையத்தள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணையத்தளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். 

இவை அனைத்து படிப்புகளுக்கும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாநில மற்றும் அகில இந்திய இடங்கள்: 

இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கைக் குழு தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில், நான்கு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளும் உள்ளன.

இந்த கல்லூரிகளில் உள்ள ஐந்தரை ஆண்டு மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிபுப் படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் எனவும், மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கும் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100 இடங்கள் உள்ள நிலையில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 25-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க: HR துறையில் சாதிக்கலாம்... மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு - தமிழ்நாடு அரசின் இந்த படிப்பை பாருங்க!

0
0
Report
Advertisement

புதுச்சேரி மக்களே அலர்ட்! மே 25 இந்த பகுதிகளில் 4 மணி நேரம் மின்தடை, முழு லிஸ்ட் இதோ

Puducherry, Puducherry:

Puducherry Power Cut: புதுச்சேரி மக்களுக்கு முக்கிய செய்தி. நாளை மறுநாள் (மே 25) புதுச்சேரியில் சில முக்கிய இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் துண்டிக்கபப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று எத்தனை மணி நேரம் மின்தடை இருக்கும்? எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? இது குறித்த முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

புதுச்சேரியில் பராமரிப்பு பணிகள்

புதுச்சேரி பொதுமக்களுக்குத் தடையில்லா மின்சாரத்தை வழங்க, மின்வாரியம் சார்பில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின் பாதைகளில் உள்ள பழுதுகளை நீக்குதல், பழைய மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்காக, குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம்.

மேலும் படிக்க | 11-ம் வகுப்பு சேர்க்கை: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கடைசி தேதி இதுதான்!

அந்த வகையில், புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அவசரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை முக்கிய விவரங்கள்:

தேதி: மே 25 (திங்கட்கிழமை)
நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை (மொத்தம் 4 மணி நேரம்) மின் விநியோகம் நிறுத்தப்படும்.
காரணம்: மின் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள சுழற்சி முறை பராமரிப்பு பணிகள்.

புதுச்சேரி மக்கள் கவனத்திற்கு.....

மின்தடை ஏற்படும் நாள் மே 25, திங்கட்கிழமை (நாளை மறுநாள்)
மின்தடை நேரம் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை (4 மணி நேரம்)
மின்தடைக்கான காரணம் வெங்கட்டா நகர் துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்
பாதிக்கப்படும் முக்கியப் பகுதிகள் முத்தியால்பேட்டை, வெங்கட்டா நகர், சாரம், காமராஜர் சாலை, ரெயின்போ நகர், குருசுக்குப்பம், வைத்திக்குப்பம், சாரம், லெனின் வீதி, எழில் நகர், கிருஷ்ணா நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மேலும் படிக்க | “விஜய் என்ன கடவுளா?” சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ-வை கண்டித்த சபாநாயகர்!

மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் (Power Cut Areas List):

பராமரிப்பு பணிகள் காரணமாக, வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மே 25 அன்று மின்சாரம் இருக்காது:

  • புஸ்சி வீதிக்கு வடக்கு பகுதி
  • முத்தியால்பேட்டை, கிருஷ்ணா நகர், எழில் நகர்
  • வெங்கட்டா நகர், ரெயின்போ நகர்
  • குருசுக்குப்பம், வைத்திக்குப்பம்
  • குபேர் சாலை, டவுன் புல்வார்டு, கோவிந்த சாலை
  • பிருந்தாவனம், சாந்தி நகர், இளங்கோ நகர்
  • காமராஜர் சாலை, சாரம், ராஜய்யர் தோட்டம்
  • லெனின் வீதி, சத்தியா நகர், சக்தி நகர்

முக்கிய குறிப்பு: 

இது கோடை காலம். ஆகையால், மின்சாரத்திற்கான தேவை அனைவருக்கும் அதிகமாகவே இருக்கும். பொதுமக்கள் இந்த 4 மணி நேர மின்தடையை நினைவில் கொண்டு, அதற்கேற்ப தங்களின் அன்றாடத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டியை நிரப்பி வைத்தல், மொபைல் போன்கள், லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் செய்து கொள்ளுதல், வீட்டிலிருந்து அலுவலக பணிகளை செய்பவர்கள் (Work From Home) அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுதல், ஆன்லைன் பணிகளுக்கான ஏற்பாடு, மிக்சி, கிரைண்டர் பணிகளை முடித்துக்கொள்ளுதல் ஆகியவற்றை முன்னரே செய்துவைத்துக்கொண்டால், மின் தடை நேரத்தில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளாமல் தப்பிக்கலாம்.

மேலும் படிக்க | தோல்வி அடைந்த மாணவர்களுக்கு குட் நியூஸ்.. புதுச்சேரி அரசின் சூப்பர் வாய்ப்பு!

0
0
Report

2017 முதல் 2026 வரை! சிராஜின் ஐபிஎல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Hyderabad, Telangana:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மூலம் பல ஆண்டுகளாக அபாரமான வளர்ச்சியை அடைந்துள்ளார். 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர், தனது திறமையாலும் கடின உழைப்பாலும் இன்று பல கோடிகளை ஈட்டும் முன்னணி வீரராக உயர்ந்துள்ளார். வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து, இன்று கோடிகளில் புரளும் சிராஜின் 2017 முதல் 2026 வரையிலான ஐபிஎல் சம்பள விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2017)

ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சிராஜ், 2017ம் ஆண்டு தனது சொந்த ஊர் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமானார். அந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சிராஜின் அடிப்படை விலை வெறும் 20 லட்சமாக இருந்த நிலையில், அவரை 2.60 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி வாங்கியது. இது அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த சீசனில் அவர் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2018 - 2021)

2018ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சிராஜை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதே 2.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது. விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாட தொடங்கிய சிராஜ், பெங்களூரு அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். 2018 முதல் 2021 வரை தொடர்ந்து நான்கு சீசன்களுக்கு பெங்களூரு அணிக்காக 2.60 கோடி ரூபாய் சம்பளத்தில் அவர் விளையாடினார். இந்த காலகட்டத்தில் அவர் இந்திய அணிக்காகவும் அறிமுகமாகி தனது திறமையை நிரூபித்தார்.

பெங்களூரு அணியில் சம்பள உயர்வு (2022 - 2024)

சிராஜின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை கண்ட பெங்களூரு அணி நிர்வாகம், 2022ம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்திற்கு முன்பாக அவரை 7 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது. இது அவரது முந்தைய சம்பளத்தை விட சுமார் 169% அதிகமாகும். 2022, 2023 மற்றும் 2024 ஆகிய மூன்று சீசன்களுக்கும் அவருக்கு தலா 7 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சிராஜ் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி, எதிரணிகளை அச்சுறுத்தும் ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளராக மாறினார்.

குஜராத் டைட்டன்ஸ் (2025 - 2026)

2025ம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை விடுவித்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், பல அணிகள் சிராஜை எடுக்க போட்டி போட்டன. இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 12.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இது சிராஜின் ஐபிஎல் வாழ்க்கையில் அவர் பெற்ற அதிகபட்ச சம்பளமாகும். முந்தைய சம்பளத்தை விட இது 75% அதிகம். 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு சீசன்களுக்கும் அவருக்கு தலா 12.25 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். 

ஆண்டு வாரியாக முகமது சிராஜின் ஐபிஎல் சம்பளம்

ஐபிஎல் சீசன் விளையாடிய அணி சம்பளம் 
2017   சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2.60 கோடி 
2018   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  2.60 கோடி
2019 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  2.60 கோடி
2020 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  2.60 கோடி
2021 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  2.60 கோடி
2022 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  7.00 கோடி
2023 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  7.00 கோடி
2024 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  7.00 கோடி
2025 குஜராத் டைட்டன்ஸ் 12.25 கோடி
2026 குஜராத் டைட்டன்ஸ் 12.25 கோடி

ஒட்டுமொத்த ஐபிஎல் வருமானம்

2017 முதல் 2026 வரையிலான 10 சீசன்களில், ஐபிஎல் மூலமாக மட்டுமே முகமது சிராஜ் சுமார் 58.50 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளார். இதுதவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கிரேடு 'A' ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். மேலும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான மேட்ச் பீஸும் அவருக்கு வழங்கப்படுகிறது. பல முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் செயல்பட்டு வரும் சிராஜின் தற்போதைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 57 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநரின் மகனாக பிறந்து, இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தூணாகவும், ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவராகவும் முகமது சிராஜ் உருவெடுத்துள்ளது பல இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

0
0
Report

ரத்த வடு இன்னும் மறையவில்லை... அவங்கள தூக்குல போடுங்க... 8-ம் ஆண்டு நினைவு தினத்தில் கதறி அழும் உறவினர்கள்..!

MMathan2d ago
Thoothukudi, Tamil Nadu:

Tuticorin Sterlite Massacre Memorial Day News: உலகளவில் உலோகத் தொழிலில் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள வேதாந்தா நிறுவனம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதன் வணிக மதிப்பை மேம்படுத்த பல்வேறு துறைகளில் தடம் பதித்தது. இதன் நிறுவனரான அனில் அகர்வால் வெளிநாடுகளில் தங்களது வணிகத்தை நிலை நாட்டி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவரது பார்வை தமிழகத்தின் பக்கம் விழுந்தது.

அந்த பார்வையே கடைசியில் பல பேரின் உயிரிழப்புக்கு காரணம் ஆகாது என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆம், அப்படி ஒரு சம்பவம் தான் தூத்துக்குடியில் நடைபெற்றது. அப்படி என்னதான் நடைபெற்றது என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம். 

தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் பகுதியில் இயங்கி வந்த வேதாந்தா குழுமத்தில் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியின் இயற்கை வளங்கள் அனைத்தையும் நஞ்சாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தது. இந்த தாமிர உருக்காலையால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். இவ்வாலையில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. 

மாவட்ட ஆட்சியரிடம் மனு: 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் மே 22, 2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தினர். பிப்ரவரி 4-ம் தேதி மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒன்று திரண்டு மனு ஒன்றை அளித்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

துப்பாக்கிச்சூடு:

100 நாட்களைக் கடந்த இந்த போராட்டத்தால் எந்த ஒரு பயனும் இல்லாமல் அதிருப்தியான மக்கள் தூத்துக்குடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் செய்வதறியாது இருந்த போலீஸார் தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதனையெல்லாம் பொருட்படுத்தாத மக்கள் தடுப்புகளை தூக்கியெறிந்து மாவட்ட அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அதன் விளைவாக மே 22-ம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

நிரந்தரமாக மூடப்பட்ட ஆலை: 

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வாசலிலும் அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே உடலை வாங்குவதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவர்களின் விடாப்பிடியால், மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அரசு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அரசாணை பிறப்பித்தது. 

நினைவு தினம் அனுசரிப்பு:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் இன்று (மே 22) அவர்களது 8-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, தூத்துக்குடி பாத்திமா நகரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 

8 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஸ்டெர்லைட் நினைவு தினத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தங்களது இரங்கலையும், ஆறுதலையும் பதிவிட்டு வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்று 8 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இன்று வரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தூத்துக்குடி மக்களிடையே ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

0
0
Report
Advertisement

கோவை மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு... முழு விவரங்கள் உள்ளே!

MMathan2d ago
Coimbatore, Tamil Nadu:

Coimbatore District Job News: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் https://coimbatore.nic.in/ என்ற இணையதள முகவரியில் உள்ளன. மேலும் இந்த பணிக்கான தகுதி மற்றும் பணியிடங்கள் இந்த இணையதள பக்கத்தில் உள்ளன. மேற்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்தி அதில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலம் 02.06.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி பெயர்: பாலின நிபுணர்
சம்பளம்: ரூ.21,000
காலிப்பணியிடம்: 01
தகுதிகள்:

  1. விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்
  2. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல்
  3. முதுகலைப் பட்டம் படித்து முடித்தவருக்கு முன்னுரிமை
  4. பணி தொடர்பான தொடர்புடைய துறையில் 3 வருடம் பணி அனுபவம்.

மேலும் படிக்க: HR துறையில் சாதிக்கலாம்... மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு - தமிழ்நாடு அரசின் இந்த படிப்பை பாருங்க!

பணி பெயர்: பல்நோக்கு உதவியாளர் 
சம்பளம்: ரூ.12,000
கல்வித்தகுதி: 10, 12-ம் வகுப்பு
காலிப்பணியிடம்: 01
விண்ணப்பத்தாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல்

முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
பழைய கட்டிடம்,
தரைத்தளம், அறை எண்:5
மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர். 
தொடர்பு எண்:0422-2228477

02.06.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்

மேலும் படிக்க: எச்சரிக்கை! AI வந்ததால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வேலைகளே இருக்காது!

பணி பெயர்: வழக்கு பணியாளர்
சம்பளம்: ரூ.18,800
பணியிடம்: 13
தகுதி: BSW, B.A.Sociology, Psychology, Clinical Psychology, MSW
வயது வரம்பு: 21-40

பணி பெயர்: தகவல் தொழில்நுட்ப பணியாளர்
சம்பளம்: ரூ.20,000
பணியிடம்: 01
தகுதி: கணினி துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 21-40

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.05.2026 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பழைய கட்டிடம், தரை தளம்,
கோயம்புத்தூர்-641018
தொடர்பு எண்:0422-2305156.

குறிப்பு: இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை.. கைநிறைய சம்பளம்.. சூப்பர் வாய்ப்பு

0
0
Report

பாகிஸ்தானில் அடுத்த ஸ்கெட்ச்! ஹம்ஸா பர்ஹான் மரணம் - இந்தியாவுக்கு ஏன் ரொம்ப முக்கியம்?

Mekhtar, Balochistan:

Hamza Burhan Shot Dead: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள முசாஃபராபாத் பகுதியில், இந்தியாவின் 'மோஸ்ட் வான்டெட்' பயங்கரவாதிகளில் ஒருவனான ஹம்ஸா பர்ஹான் (Hamza Burhan), அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசாஃபராபாத்தில் துப்பாக்கிச் சூடு -என்ன நடந்தது?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரமான முசாஃபராபாத்தில் பதுங்கியிருந்த ஹம்ஸா பர்ஹானை, பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் திடீரென சரமாரியாக சுட்டனர். இதில் உடலில் பலத்த குண்டுக் காயங்கள் ஏற்பட்ட ஹம்ஸா பர்ஹான், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இச்சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியைச் சுற்றி வளைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | 'கொல்கத்தாவை தாக்குவோம்...' இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் - வீண் பேச்சுக்கு குறைச்சல் இல்லை!

யார் இந்த ஹம்ஸா பர்ஹான்? (புல்வாமா பின்னணி)

பயங்கரவாத அமைப்பான 'அல்-பதர்' (Al-Badr) பிரிவின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்தவன் தான் இந்த ஹம்ஸா பர்ஹான். கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 40 சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் வீரமரணமடைய காரணமான புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய சதிகாரர்களில் இவனும் ஒருவன்.

தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை

புல்வாமா தாக்குதல் வழக்கில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இவனது பெயர் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.

பஹல்காம் தாக்குதல்

பாகிஸ்தானில் இருந்துகொண்டே ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நேரடியாக இயக்கியதும் இவன் தான்.

UAPA சட்டத்தின் கீழ் தடை

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து நிழல் யுத்தம் நடத்தி வந்ததால், இந்திய அரசால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் இவன் பல ஆண்டுகளுக்கு முன்பே தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்தான்.

பாகிஸ்தானில் தொடரும் 'மர்ம மனிதர்களின்' வேட்டை -யார் காரணம்

கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகளை "யாரோ" குறிவைத்து அழித்து வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடப்பு 2026-ம் ஆண்டில் மட்டும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் அல்-பதர் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 7 முதல் 8 முக்கிய பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | டிரம்ப் விரித்த வலையில் ஈரானா? அல்லது ஈரானின் வலையில் டிரம்பா? ஆட்டத்தை மாற்றிய 3 பேர்

காஷ்மீர் ஊடுருவலுக்கு விழுந்த பலத்த அடி

பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI-ன் முழுப் பாதுகாப்போடு, எல்லையைத் தாண்டி ஜம்மு காஷ்மீருக்குள் ஆயுதங்களையும் உள்ளூர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதப் பாதையிலும் திருப்பி வந்தவன் ஹம்ஸா பர்ஹான். குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அண்மைக்காலமாக உள்ளூர் ஆதரவாளர்கள் (Over Ground Workers) மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்ட இவன் தீவிரமாக திட்டமிட்டு வந்ததாக இந்திய பாதுகாப்பு முகமைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.

தற்போது இவன் வீழ்த்தப்பட்டதன் மூலம், எல்லையில் பயங்கரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல் திட்டங்களுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

அலறும் பாகிஸ்தான் பாதுகாப்பு முகமைகள்

தங்கள் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள சர்வதேச பயங்கரவாதிகள், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து துல்லியமாக சுட்டுக் கொல்லப்படுவது பாகிஸ்தான் ராணுவத்திற்கும், அதன் உளவு அமைப்பான ISI-க்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் பாதுகாப்பு வளையத்தை மீறி, இந்த 'மர்ம துப்பாக்கிதாரிகள்' (Unknown Gunmen) எப்படி தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தெரியாமல் பாகிஸ்தான் உளவுத்துறை திணறி வருகிறது.

ஹம்ஸா பர்ஹானின் மரணம் குறித்து பாகிஸ்தான் அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக விரிவான அறிக்கையை வெளியிடவில்லை என்றாலும், பயங்கரவாத அமைப்புகளின் வட்டாரத்தில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் 'மோஸ்ட் வான்டெட்' பட்டியலில் இருந்த மற்றொரு முக்கிய தலைவன் பாகிஸ்தான் மண்ணிலேயே மண்ணைக் கவ்வியிருப்பது, எல்லையோர பாதுகாப்பில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் அடுத்தடுத்து ஸ்கெட்ச் முக்கிய அம்சங்கள்

முசாஃபராபாத்தில் வேட்டை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பதுங்கியிருந்த பயங்கரவாதி ஹம்ஸா பர்ஹான் சுட்டுக்கொலை.

புல்வாமா சதிகாரன்: 2019 புல்வாமா தாக்குதல் வழக்கில் NIA குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்த முக்கிய குற்றவாளி.

UAPA தடை: இந்திய அரசால் பல ஆண்டுகளுக்கு முன்பே தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவன்.

தொடரும் மர்ம மரணங்கள்: 2026-ல் மட்டும் பாகிஸ்தான் மண்ணில் லஷ்கர், ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்த 8 பயங்கரவாதிகள் வரை எலிமினேஷன்.

மேலும் படிக்க | கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்றால் என்ன? இதை உருவாக்கியது யார்? அரசியல் அலசல்!

0
0
Report
Advertisement

நடுரோட்டில் உடையும் மது பாட்டில்கள்.. அலறும் பள்ளி மாணவர்கள்: கொட்டிவாக்கம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடிதம்

Chennai, Tamil Nadu:

சென்னை: சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும், அதனை உடனடியாக அகற்றக் கோரியும் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்குப் புரட்சி தமிழகம் கட்சி (பறையர் பேரவை) நிர்வாகி துரை.கதிர்வேல் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறு தரும் டாஸ்மாக் கடை

தென் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட இ.சி.ஆர் (ECR) நெடுஞ்சாலை, கொட்டிவாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை எண்: 4507 இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கடையின் அருகே ஏராளமான குடியிருப்புகளும், புகழ்பெற்ற துலுக்கானத்தம்மன் கோவிலும் அமைந்துள்ளன.

இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும், பொதுமக்களும், பெண் பக்தர்களும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் சாலையிலேயே நின்று கொண்டு தகாத வார்த்தைகளில் பேசுவதும், மது பாட்டில்களை நடுரோட்டில் வீசி உடைப்பதும் தொடர்கதையாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் படிக்க - TASMAC இரவு 10 மணிக்கு மூடாவிட்டால்... காவலர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை - முழு பின்னணி

போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை

இதுகுறித்து முதல்வர் விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கொட்டிவாக்கம் 181-வது வட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான துரை.கதிர்வேல் குறிப்பிட்டுள்ளதாவது, 

"இந்த டாஸ்மாக் கடை வாசலில் அளவுக்கு அதிகமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்கள் தினசரி செல்லும் பனையூர் சாலையில்தான் இந்த சிக்னல் அமைந்துள்ளது.

இந்த நெரிசலால் அவசரக் காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாமல் திணறும் அவல நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது."

மேலும் படிக்க - இனி டிராபிக் டென்ஷன் இல்ல.. எழும்பூரில் வேற லெவல் மாற்றம்.. குஷியில் வாகன ஓட்டிகள்

அகற்றப்படுமா டாஸ்மாக் கடை?

பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும், மக்கள் நலனில் எப்போதும் அக்கறை காட்டும் தமிழக முதல்வர் இந்த டாஸ்மாக் கடையை (கடை எண்: 4507) உடனடியாக அப்பகுதியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொட்டிவாக்கம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதல்வரின் சொந்தப் பகுதியான பனையூர் செல்லும் வழியிலேயே இத்தகைய புகார் எழுந்துள்ளதால், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என அப்பகுதி மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.

கொட்டிவாக்கம் டாஸ்மாக் கடை முக்கிய கோரிக்கை

  • கொட்டிவாக்கம் ECR சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எண் 4507-ஐ அகற்றக் கோரிக்கை.
  • டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு நடுரோட்டில் பாட்டில்களை உடைப்பதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு.
  • பள்ளி மாணவர்கள், துலுக்கானத்தம்மன் கோவில் பக்தர்கள் கடந்து செல்ல கடும் அவதி.
  • வாகன நெரிசலால் சிக்னலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சிக்கிக் கொள்ளும் அவலம்.
  • முதல்வர் விஜய் பனையூர் செல்லும் வழியிலேயே இந்த பாதிப்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு

மேலும் படிக்க - ‘நோ செல்போன்’ மீறினால் சஸ்பெண்ட்! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

0
0
Report

புதிய ரேஷன் கார்டு : காத்திருந்தவர்களுக்கு குட்நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு

Chennai, Tamil Nadu:

New Ration Card : தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகளை அடுத்த ஓரிரு மாதங்களில் விரைந்து வழங்க தமிழக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு : விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பட்டியல் - முழு விவரம்

உணவுத்துறை அமைச்சரின் திடீர் ஆய்வு

தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வெங்கடரமணன், சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ள பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.

அதிகாரிகளுக்குப் பறந்த கறாரான உத்தரவு

ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் வெங்கடரமணன், "புதிய ரேஷன் கார்டு கோரி வந்துள்ள விண்ணப்பங்கள் மீது எவ்வித தொய்வும் இன்றி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் புதிய கார்டுகள் விநியோகிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்று கறாராக அறிவுறுத்தினார்.

கடை நேரமும் பொருட்களின் தரமும்

புதிய கார்டுகள் வழங்குவது மட்டுமன்றி, தற்போது செயல்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளின் தரம் குறித்தும் அமைச்சர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளும் குறிப்பிட்ட நேரத்திற்குத் திறக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தரமானதாக இருப்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் அரசின் பொங்கல் பரிசு, பேரிடர் நிவாரண உதவிகள் மற்றும் மானிய விலையிலான அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். கடந்த சில காலமாக கார்டு கிடைக்காமல் தவித்து வந்த லட்சக்கணக்கான மக்களுக்கு, அரசின் இந்த அதிரடி உத்தரவு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் வீட்டிலிருந்தபடியே டிஎன்பிடிஎஸ் இணையதளம் மூலமாகவோ அல்லது அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ இதற்கு விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

தேவையான ஆவணங்கள் 

குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய ஆதார் கார்டு , கேஸ் பில், மின்சார கட்டண ரசீது வேண்டும். வாடகை வீட்டில் இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம் கொடுக்க வேண்டும். மேலும், குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முந்தைய ரேஷன் கார்டில் பெயர் இருந்தது என்றால், அங்கிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு அப்டேட் : குறைதீர்ப்பு முகாம் - பொதுமக்களுக்கான முக்கிய தகவல்

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

1. ரேஷன் கார்டு இணையதளமான www.tnpds.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

2. முகப்புப் பக்கத்தில் வலதுபுறம் உள்ள "மின்னணு அட்டை விண்ணப்பிக்க" என்ற லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

3. புதிய பக்கத்தில் குடும்பத் தலைவரின் பெயர், முகவரி, கைபேசி எண் போன்ற விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரியாக நிரப்ப வேண்டும். பின்னர் குடும்பத் தலைவரின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. உறுப்பினர்களைச் சேர்க்க என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி, குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் ஆதார் எண்களை உள்ளிட வேண்டும்.

5. முகவரி சான்றாக நீங்கள் தேர்வு செய்த ஆவணத்தை (ஆதார், மின்சார பில் போன்றவை) ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். எரிவாயு (Gas) இணைப்பு இருந்தால், அதுகுறித்த விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியா என்று ஒருமுறை சரிபார்த்து உறுதிப்படுத்து ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு குறிப்பு எண் குறுஞ்செய்தியாக வரும். இதை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனிலேயே கண்காணித்துக் கொள்ளலாம்.

இதன்பின், உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அதிகாரி அல்லது வருவாய் ஆய்வாளர் உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து கள ஆய்வு நடத்துவார். உங்கள் விண்ணப்பம் தகுதியானது என உறுதி செய்யப்பட்டதும், புதிய ரேஷன் கார்டு அச்சிடப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும். 

மேலும் படிக்க | ரேஷன் கார்டு அப்டேட் : குடும்ப தலைவரின் பெயரை மாற்றுவது எப்படி?

 

0
0
Report

பெண் குழந்தைகள் வைத்திருந்தால் ரூ.50 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

Allampatti, Kooraikundu, Tamil Nadu:

Chief Minister Girl Child Protection Scheme : தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்காகவும், அவர்களின் எதிர்காலக் கல்வியை உறுதி செய்யும் நோக்கோடும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2026-2027 ஆம் நிதியாண்டிற்கு, இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளிடமிருந்து புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் வரும் தினசரி வருமானம் எவ்வளவு தெரியுமா?

பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே பெண் குழந்தைகளின் பெயரில் அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் நீண்ட கால வைப்புத்தொகையாக முதலீடு செய்வதுதான். ஒரு குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த நிதியுதவி மாறுபடுகிறது.

ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பங்கள்: ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்து, வேறு குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அந்தப் பெண் குழந்தையின் பெயரில் முதலீட்டுத் தொகையாக ரூ.50,000/- (ஐம்பதாயிரம் ரூபாய்) அரசால் வைப்புத்தொகை வைக்கப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ ரசீது குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.

இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்கள்: ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், ஒரு குழந்தைக்கு தலா ரூ.25,000/- வீதம், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.50,000/- (ஐம்பதாயிரம் ரூபாய்) வைப்புத்தொகை ரசீதாக பிரித்து வழங்கப்படும்.

மூன்று பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்கள்: சில குறிப்பிட்ட சிறப்பு நேர்வுகளின் கீழ், ஒரு குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், ஒரு குழந்தைக்கு தலா ரூ.25,000/- வீதம், மூன்று பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.75,000/- (எழுபத்தைந்தாயிரம் ரூபாய்) அரசாங்கத்தால் வைப்புத்தொகை ரசீதாக அக்குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்படும்.

முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கான தகுதிகளும் நடைமுறைகளும்

அரசால் பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்படும் இந்த வைப்புத்தொகையானது, அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களின் உயர் கல்விக்கோ அல்லது பிற முக்கியத் தேவைகளுக்கோ பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர், அவர்கள் தங்களின் முதிர்வுத் தொகையை (Maturity Amount) வட்டியுடன் சேர்த்து மொத்தமாகப் பெற்றுக் கொள்ளத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். இந்த முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கு, அக்குழந்தையின் பெற்றோர் அல்லது அக்குழந்தை சில முக்கிய ஆவணங்களுடன் அரசை அணுக வேண்டும்.

அவற்றுள், அரசாங்கத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட பெண் குழந்தையின் வைப்புத்தொகை ரசீது நகல், அக்குழந்தையின் கல்வித் தகுதியை உறுதிப்படுத்தும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் முதிர்வுத் தொகை நேரடியாகச் சென்று சேருவதற்கேற்ப அக்குழந்தையின் பெயரில் துவங்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவை மிக முக்கியமானவை ஆகும்.

இந்த ஆவணங்களைச் சேகரித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலரை நேரில் சந்தித்துச் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் இந்த ஆவணங்களைச் சரிபார்த்து, முதிர்வுத் தொகையை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு குட் நியூஸ்.. மாதம் ரூ.25000 சம்பளம்.. கூட்டுறவு வங்கியில் வேலை

விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளும் சான்றிதழ்களும்

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான பொதுமக்கள், தங்களின் அருகாமையில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது பின்வரும் சான்றிதழ்களின் நகல்களைத் தவறாமல் இணைக்க வேண்டும்:

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்: குழந்தையின் வயதை உறுதி செய்ய உள்ளாட்சி அமைப்பால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அவசியம்.

பெற்றோரின் வயதுச் சான்றிதழ்: தாய் அல்லது தந்தையின் வயது வரம்பை உறுதி செய்யும் அதிகாரப்பூர்வ சான்றிதழ்.

ஆண்டு வருமானச் சான்றிதழ்: இத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்குள் (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்) இருப்பதாக வட்டாட்சியரால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்: பெற்றோர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதற்கான மருத்துவச் சான்றிதழ்.

ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ்: குடும்பத்தில் ஆண் குழந்தைகள் எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்.

இருப்பிடச் சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றுகள்: தமிழ்நாட்டில் வசிப்பதற்கான பிறப்பிடச் சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் பெற்றோரின் உரிய அடையாள அட்டை நகல் ஆகியவை தேவை.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தத் திட்டம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது கூடுதல் விளக்கங்கள் தேவைப்பட்டாலோ நேரடியாக மாவட்ட அதிகாரிகளை அணுகலாம். அதற்கென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
விருதுநகர் மாவட்டம் – 626002.

தொலைபேசி எண்: 04562-252701

கூடுதல் தகவல்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0
0
Report
Advertisement
Advertisement
Back to top