பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
தேர்தலில் போட்டியிடவில்லை... காரணத்தை சொன்ன திருமா! மாற்று வேட்பாளர் அறிவிப்பு
Chennai, Tamil Nadu:VCK President Thirumavalavan Latest News: 2026 சட்டப்பேரவை தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. முகநூல் நேரலை வழியாக திருமாவளவனே இதை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாற்று வேட்பாளர் இவரா?
இன்னும் காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன், வேட்புமனுவை தாக்கல் செய்யாத நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. எனவே, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவனுக்கு பதில், விசிகவின் மாநில அமைப்புச் செயலர் இளமாறன் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திருமாவளவன் தற்போது சிதம்பரம் மக்களவை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 தொகுதிகளில் விசிக
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போதைய 2026 சட்டப்பேரவை தேர்தலில் 8 இடங்களில் போட்டியிட உள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4இல் வெற்றிபெற்ற விசிக, இம்முறை தங்களின் எம்எல்ஏக்களை அதிகப்படுத்தவும் விசிக திட்டமிட்டுள்ளது. கண்டிப்பாக, இரட்டை இலக்க தொகுதிகளை திமுகவிடம் கோரிக்கை வைத்த விசிகவுக்கு குறைந்தபட்சம் 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளின் செயல்பாடுகளின் மூலம் விசிகவும் தன்னை அதற்கு தகுதிப்படுத்திக்கொண்டது. ஆனால், திமுக கூட்டணியில் தேமுதிகவின் வருகையாலும், காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளை கூடுதலாக பெற்றதாலும் விசிகவுக்கு வரவேண்டிய அந்த 2 தொகுதிகளில் சிக்கல் ஏற்படவே, 8 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது.
இந்த 8 தொகுதிகளுக்குமான விசிக வேட்பாளர்களை திருமாவளவன் சமீபத்தில் அறிவித்தார். அதில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அவரே அறிவித்தார். 2026 தேர்தலுக்கு தமிழ்நாடு அரசியல் களம் மாற இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருமா பின்வாங்குவது ஏன்?
குறிப்பாக, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் வெற்றிபெற்றால், சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். அதில் விசிக யாரை நிறுத்தி வெற்றிபெறும் என்ற கேள்வியும் எழுந்தது. மேலும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முடிவை திருமாவளவன் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவுக்கு முன்னரே தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது திமுகவுக்கு சற்று அதிருப்தியை அளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், திடீரென மாநில அரசியல் பக்கம் திரும்பும் முடிவும், ஆளுர் ஷா நவாஸுக்கு வாய்ப்பு வழங்காததும் உட்கட்சியிலேயே சிறு மாற்றுக் கருத்துகளை ஏற்படுத்தியிருக்கின்றன. எனவே, திருமாவளவன் இந்த ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
விசிகவின் தற்போதைய வேட்பாளர் பட்டியல்
காட்டுமன்னார்கோவில் - திருமாவளவன்
செய்யூர் - சிந்தனைச் செல்வன்
திருப்போரூர் - பன்னீர் தாஸ்
பெரியகுளம் - ஆற்றல் அரசு
பண்ருட்டி - அப்துல் ரகுமான்
திண்டிவனம் - வன்னி அரசு
அரக்கோணம் - எழில் கரோலின்
கள்ளக்குறிச்சி - மாலதி
மேலும் படிக்க | திட்டம் போட்டு ஓரங்கட்டினாரா திருமா? - 2 நாளுக்கு பின் வாய் திறந்த ஆளுர் ஷா நவாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ஜன் விஷ்வாஸ் மசோதா: சட்டத்தின் ஆட்சியா? திமுக எம்.பி கடும் கண்டனம்!
New Delhi, Delhi:சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பதற்கு பதிலாக அபராதத்தை மட்டும் செலுத்தி, அந்த குற்றத்தை குற்றமற்றதாக மாற்றும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 'ஜன் விஷ்வாஸ் சட்டத்திருத்த மசோதாவை' மாநிலங்களவையில் திமுக எம்.பி பி.வில்சன் கடுமையாக எதிர்த்து உரையாற்றினார். பெருநிறுவனங்கள் தங்களது தவறுகளை பணத்தை கொடுத்து மறைத்து தப்பித்து செல்லவே இந்த மசோதா வகை செய்வதாகவும், இது பொதுமக்களின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்குகிறது என்றும் அவர் ஆவேசமாக தெரிவித்தார். பி.வில்சன் தனது உரையில் முன்வைத்த கூடுதல் முக்கிய புள்ளிகள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பெருநிறுவனங்களுக்கு ஆதரவான மசோதாவா?
இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மூத்த வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன், "இந்த மசோதா முற்போக்கான ஆளுகையை அளிக்கவில்லை. மாறாக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு சிதைக்கும் வகையிலும், பெருநிறுவனங்களின் வசதிக்காக சட்டத்தின் ஆட்சியை சரணடைய செய்யும் வகையிலும் அமைந்துள்ளது" என குற்றம் சாட்டினார். சிறுசிறு நடைமுறை தவறுகளுக்கும், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கடுமையான மீறல்களுக்கும் எந்த வேறுபாடும் காட்டாமல் அனைத்தையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பது சீர்திருத்தம் அல்ல என்றார்.
மேலும் படிக்க | தொடங்கியது Census: சுய-கணக்கெடுப்பு என்றால் என்ன? ஆன்லைனில் இதை செய்வது எப்படி?
பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்
1940ம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ், தரமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் அழகுசாதன பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்தால் ஓராண்டு சிறைத்தண்டனை என்ற விதி தற்போது அபராதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை விற்று, அதனால் பெண்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டாலும், குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் அந்த நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அபராதத்தை செலுத்திவிட்டு தொடர்ந்து வியாபாரம் செய்யும் அவலம் உருவாகும் என்று சுட்டிக்காட்டினார்.
ரியல் எஸ்டேட் மற்றும் மருத்துவ துறைகளில் சமரசம்
உணவு பாதுகாப்பு தர சட்டம் மற்றும் மின்சார திருட்டை தடுக்கும் சட்டம் ஆகியவை பெருமளவு நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், பில்டர்கள் வீடுகளை கட்டி தரவில்லை என்றால் வெறும் அபராதத்துடன் தப்பித்துக்கொள்ளலாம். மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தில் மருத்துவ பரிசோதனை மற்றும் நோயறிதல் தொடர்பான குற்றங்கள் தீவிரமாக எடுத்து கொள்ளப்படாமல் அபராதத்துடன் சுருக்கப்பட்டுள்ளன. போலி முத்திரை தாள்களை விற்பனை செய்தாலும் சுலபமாக அபராதம் செலுத்திவிட்டு தப்பிக்க முடியும் என எம்.பி வில்சன் அதிர்ச்சி தகவல்களை பதிவு செய்தார்.
My speech in Parliament on the Jan Vishwas (Amendment of Provisions) Bill 2026.
— P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் (@PWilsonDMK) April 2, 2026
Thank you, Hon’ble Vice Chairman, Madam.
I rise today not merely to oppose, but to vehemently resist this dangerous, deeply flawed, and utterly reckless piece of legislation - the Jan Vishwas… pic.twitter.com/pDnrBw2mWd
ரயில்களில் அத்துமீறல் - பாதுகாப்பு எங்கே?
ரயில்வே கட்டமைப்பு சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை கடுமையாக சாடிய வில்சன், "ரயில்களில் குடிபோதையில் அத்துமீறுவது, தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைப்பிடிப்பது, மற்றும் பெண்களின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்குள் நுழைவது போன்ற குற்றங்களுக்கும் இனி அபராதம் செலுத்தித் தப்பிக்கலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பொது ஒழுங்கு மற்றும் பெண்களின் கண்ணியம் ஆகியவை எவ்வித கடுமையான பின்விளைவுகளும் இன்றி சமரசம் செய்யப்படுகின்றன" என்றார்.
தேசிய நெடுஞ்சாலை விபத்துகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்
தேசிய நெடுஞ்சாலைகளை மறிப்பது, ஆம்புலன்ஸ் சேவைகளை தாமதப்படுத்துவது மற்றும் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விபத்துகளை உண்டாக்குவது போன்ற குற்றங்களுக்கு முன்பு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை இருந்தது. ஆனால் தற்போது பெருநிறுவனங்கள் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை அபராதம் செலுத்திவிட்டு பிரச்சனையை முடித்துக்கொள்ளலாம். மேலும், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளை மிரட்டுவது, பதிப்புரிமையைத் திருடுவது போன்றவற்றிற்கும் அபராதம் மட்டுமே என விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் தொழிலாளர் நலன் பாதிப்பு
காற்று மற்றும் ஒலி மாசுபாடு ஏற்படுத்துபவர்கள், உள்நாட்டு கப்பல்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றுபவர்கள் இனி அபராதம் செலுத்திவிட்டு தொடர்ந்து சுற்றுச்சூழலை நாசப்படுத்தலாம். மேலும், வழிதவறிய கால்நடைகளால் விவசாயிகளின் பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு எந்தத் தீர்வும் கிடைக்காது; வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்படும். அதேபோல, கப்பல் தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பான தொழிலாளர் சட்ட மீறல்களும் பண அபராதங்களாக சுருக்கப்பட்டுள்ளன.
நீதித்துறையின் அதிகாரம் அதிகாரிகளுக்கு மாற்றமா?
"நாம் காட்டாட்சியில் இருக்கிறோமா? அல்லது சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா?" என்று கேள்வியெழுப்பிய வில்சன், நீதிமன்றங்களின் அதிகாரங்கள் நிர்வாகக் கட்டமைப்புக்கு மாறுவதைக் கண்டித்தார். இனி தண்டனைகளை நீதிபதிகள் வழங்க மாட்டார்கள், அதிகாரிகளே வழங்குவார்கள். மேல்முறையீடுகளும் அதிகாரிகளின் படிநிலைக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளதால், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இரு அடுக்கு நீதி அமைப்பு
விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்துவது என்பது பலம் பொருந்திய பெருநிறுவனங்களுக்கு அவர்களின் சாதாரண பட்ஜெட் செலவினமாகவே இருக்கும். ஆனால், அதே அபராதம் சாதாரண குடிமக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறும். இது பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்ற இரு அடுக்கு அமைப்பை உருவாக்குகிறது. சட்டங்கள் உருவாக்கப்படுவது விதிகளை மீறுபவர்களுக்கு வசதியாக இருப்பதற்காக அல்ல; மாறாகக் குடிமக்களை பாதுகாப்பதற்காகவே என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். குற்றங்களின் தெளிவான வகைப்பாடு, விகிதாசார தண்டனைகள் இன்றி, எவ்வித தாக்க மதிப்பீடும் இல்லாமல் அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த 'ஜன் விஷ்வாஸ் சட்டத்திருத்த மசோதாவை' விரிவான ஆய்விற்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று பி.வில்சன் தனது உரையின் முடிவில் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
CSK மீண்டும் தோல்வி... ருதுராஜ் செய்த பெரிய தவறு - வீழ்ச்சிக்கு இதுவே காரணம்!
Chennai, Tamil Nadu:IPL 2026, Chennai Super Kings vs Punjab Kings Highlights: ஐபிஎல் 2026 தொடர் கடந்த சனிக்கிழமை (மார்ச் 28) தொடங்கிய நிலையில், அனைத்து அணிகளும் தலா 1 போட்டியை நிறைவு செய்துள்ளன.
CSK பிளேயிங் லெவன் மாற்றம்
நடப்பு சீசனின் 7வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று (ஏப். 3) நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ருதுராஜ் தொடர்ச்சியாக 2வது முறை டாஸை இழந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. சிஎஸ்கே அணி மேத்யூ ஷார்டுக்கு பதில் பிரசாந்த் வீரை பிளேயிங் லெவனில் சேர்த்தது.
ஆயுஷ் மாத்ரே அதிரடி
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு இந்த முறையும் மோசமான தொடக்கமே கிடைத்தது. சஞ்சு சாம்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது ஓவரில் உள்ளே வந்த ஆயுஷ் மாத்ரே முதல் நான்கு பந்துகள் சற்று ரன் அடிக்க திணறினார். அடுத்து செட்டிலான அவர் வேகப்பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்தார். அவர் அதிரடி காட்ட மறுமுனையில் ருதுராஜ் நிதானம் காட்டினார். பவர்பிளே முடிவில் சிஎஸ்கே 57 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.
பிரேக் போட்ட சஹால்
பவர்பிளே முடிந்தாலும் ஆயுஷ் அதிரடி நிறுத்தவில்லை. ஆனால், சஹால் வீசிய 7வது, 9வது, 11வது ஓவரில் சிஎஸ்கேவால் பவுண்டரியே அடிக்க முடியவில்லை. ருதுராஜ் 22 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த ஆயுஷ் மாத்ரே 43 பந்துகளுக்கு 6 பவுண்டரி, 5 சிக்ஸர் உடன் 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கார்த்திக் சர்மாவும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சர்பராஸ் கான் மிரட்டல் கேமியோ
14வது ஓவரில் உள்ளே வந்த சர்பராஸ் கான் 12 பந்துகளில் அதிரடியாக 6 பவுண்டரிகள், 1 சிக்ஸரை பறக்கவிட்டார். குறிப்பாக, வைஷாக் வீசிய 17வது ஓவரில் முதல் மூன்று பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்ட சர்பராஸ் கான், 4வது பந்தில் ஆட்டமிழந்தார். தூபே கடைசி கட்டத்தில் ஓரிரு பவுண்டரிகளை அடிக்க 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது.
20 ரன்கள் குறைவு
பிரசாந்த் வீர் 7 பந்துகளில் 6 ரன்களை மட்டும் அடித்தது சற்று பின்னடைவாக இருந்தது. மொத்த அழுத்தமும் தூபேவின் மீது இருந்தது. அவரும் 27 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் என 45 ரன்களை அடித்திருந்தார். தூபே இன்னும் முன்கூட்டியே பவுண்டரிகளுக்கு சென்றிருக்க வேண்டும். 20 ரன்கள் குறைவாக அடிக்கப்பட்டதாக அப்போதே தோன்றியது. பஞ்சாப் பந்துவீச்சில் வைஷாக் 2, சஹால், பார்ட்லட், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
பிரியான்ஷ் ஆர்யா மிரட்டல் ஆட்டம்
210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். பிரியான்ஷ் டபுள் அதிரடியை காட்டினார். 4.1 ஓவர்களில் பஞ்சாப் 61 ரன்களை அடித்திருந்தது, அப்போது பிரியான்ஷ் ஆர்யா 10 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரி உடன் 39 ரன்களை அடித்திருந்தார். 4.2 பந்தில் பிரியான்ஷ் ஆர்யா, ஹென்றி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பின் பவர்பிளேவில் 10 பந்துகள் இருந்தது. ஆனால், அந்த 10 பந்துகளில் பஞ்சாப் 7 ரன்களையே அடித்தது. பவர்பிளேவில் பஞ்சாப் 1 விக்கெட்டை இழந்து 68 ரன்களை சேர்த்தது.
ஆட்டநாயகன் பிரியான்ஷ் ஆர்யா
சிஎஸ்கே மிடில் ஓவரில் சற்று நிதானம் காட்டிய நிலையில், அங்குதான் கூப்பர் கானொலி, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ரன்களை குவித்தனர். பிரப்சிம்ரன் 43(34), கானொலி 36(22) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 50(29) அடித்து ஆட்டமிழந்தார். வதேரா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Led the show #PBKS Captain Shreyas Iyer goes back for a well made 50
— IndianPremierLeague (@IPL) April 3, 2026
Updates https://t.co/riWrE2EZiF#TATAIPL | #KhelBindaas | #CSKvPBKS pic.twitter.com/kCpWu5LluE
இறுதிக்கட்டத்தில் ஷஷாங்க் சிங் 14, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 9 ரன்கள் ஆட்டத்தை முடித்துவைத்தனர். 8 பந்துகளை மிச்சம் வைத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை அடைந்தது. அன்சுல் கம்பாஜ், மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை பிரியான்ஷ் ஆர்யா வென்றார். பஞ்சாப் இன்றைய போட்டியில் வென்றதன் மூலம், சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசியாக மோதிய 8 போட்டிகளில் 7இல் வென்றிருக்கிறது. ஒரே ஒரு போட்டியில்தான் சிஎஸ்கே வென்றுள்ளது.
ருதுராஜ் செய்த பெரிய தவறு
ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவின் பிளேயிங் 12 தேர்வில்தான் பெரிய தவறை செய்தார். அவர் சூழலை தவறாக கணித்துவிட்டார். சுழற்பந்துவீச்சு பெரியளவில் சாதகமாக இல்லாத சூழலில், ராகுல் சஹாரை இம்பாக்ட் வீரராக கொண்டுவந்தது பெரிய தவறு. அந்த இடத்தில் ஓவர்டன் அல்லது வேறு வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு வந்திருக்கலாம். தூபேவை கூட மிடில் ஓவர்களில் வீச வைத்திருக்கலாம். பஞ்சாப் அணி வெறும் 3 ஓவர்கள் மட்டுமே சுழற்பந்துவீச்சை பயன்படுத்தியது. ஆனால் சிஎஸ்கேவில் நூர் அகமது மற்றும் ராகுல் சஹார் தலா 4 ஓவர்களை வீசி முறையே 38 மற்றும் 46 ரன்களை கொடுத்தனர். அதாவது 8 ஓவர்களில் அவர்கள் மட்டும் 84 ரன்களை கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. மிடில் ஓவரில் இது பெரும் சொதப்பலாக அமைந்தது. தூபே, ஓவர்டன், குர்ஜப்னீத் சிங் ஆகியோரில் ஒருவரை இம்பாக்ட் வீரராக விளையாட வைத்திருக்கலாம்.
மேலும் படிக்க | டெவால்ட் பிரெவிஸ் எப்போது சிஎஸ்கே அணியில் இணைவார்? முக்கிய தகவல்!
மேலும் படிக்க | CSK இன்றும் அதே தவறை செய்யக்கூடாது... முதல் வெற்றியை ருசிக்க இதுதான் பக்கா பிளான்!
மேலும் படிக்க | IPL: ஒரே அணிக்கு அதிக போட்டிகள்... டாப் 7 வீரர்கள் யார் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... வட மாநிலங்களில் பீதியில் உறைந்த மக்கள்!
Delhi, Delhi:Earthquake In Delhi NCR Latest News: டெல்லி - தேசிய தலைநகர் பகுதியில் இன்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. புது டெல்லி, ஜம்மு காஷ்மீரில் மட்டுமின்றி பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் போன்ற வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சேதங்கள் குறித்து இன்னும் விரிவாக தெரியவரவில்லை.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள ஹிந்து குஷ் மலைத்தொடரில் இருந்தது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோளில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. சுமார் 10-15 விநாடிகள் ஜம்மு காஷ்மீரில் மக்கள் இந்த நிலஅதிர்வை உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அச்சத்தில் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, சாலையில் தஞ்சம் புகுந்தனர்.
#WATCH | Ghaziabad: A local resident says, "It was raining when we felt the earthquake. It was not a major one. Then I came out to check the situation." https://t.co/27ie3D6rVW pic.twitter.com/81D6HMkyuC
— ANI (@ANI) April 3, 2026
ஆப்கானிஸ்தானில் இன்றிரவு 9.47 மணிக்கு 150 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி, காசியாபாத், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மக்கள் பெரியளவில் அச்சுறுத்தும் வகையில் ஏதுமில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
டெல்லியில் ஒருவர் ANI ஊடகத்திடம் கூறுகையில், "15 நிமிடங்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது. நான் அப்போது சமைத்துக்கொண்டிருந்தேன், அதை உணர்ந்தேன். நான் 5வது மாடியில் வசிக்கிறேன். ஆனால் உடனடியாக தரைத்தளத்திற்கு வரும்போது நிலநடுக்கம் நின்றுவிட்டது" என்றார். மேலும் மற்றுமொரு டெல்லிவாசி கூறுகையில், "நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான் எனது அறையில் அமர்ந்திருந்தேன். நன்கு குழுங்குவதை உணர முடிந்தது. நான் கூரையை பார்த்தபோது, விசிறி ஆடுவதை பார்த்தேன். நான் வெளியே வந்தபோது என்னைப் போலவே மக்கள் பயந்து வெளியே வந்திருப்பதை பார்த்தேன்" என்றார்.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது உண்டு. செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதி நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பிய - ஆசிய புவித்தட்டுகளுக்கு இடையேயான மண்டலத்தில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளதே, நிலநடுக்கங்களால் அது எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலைக்கு காரணமாகும். நாட்டின் சில பகுதிகள் வழியாக பெரிய பிளவுக்கோடு ்செல்கிறது. இதனாலேயே நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், பருவகால வெள்ளப்பெருக்குகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் ஆப்கானிஸ்தான் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது என்று UNOCHA குறிப்பிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
வெடித்து சிதறிய போர் விமானம்... ஈரானிடம் சிக்கிய அமெரிக்க விமானி - போரில் முக்கிய ட்விஸ்ட்
Haftador, Yazd Province:Iran War Latest News Updates: தென்மேற்கு ஈரானில், அமெரிக்க போர் விமானத்தில் இருந்து விமானி கீழே குதித்து வெளியேறினார் என ஈரானிய அரசு தொலைக்காட்சியை மேற்கொள் காட்டி AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், மற்றொரு அமெரிக்க போர் விமானத்தை ஈரான் வீழ்த்தியதாக தெரிகிறது.
பொதுமக்களுக்கு வெகுமதி
ஈரானிய தொலைக்காட்சி சேனலின் செய்தி வாசிப்பாளர் நேரலையில் அந்நாட்டு மக்களை நோக்கி, "எதிரி நாட்டு விமானி அல்லது விமானிகளை சிறை பிடித்தால், அவர்களை போலீசாரிடமோ அல்லது ராணுவத்திடமோ உயிருடன் ஒப்படைக்க வேண்டும். உயிருடன் ஒப்படைத்தால் மதிப்புமிக்க வெகுமதியை பெறுவீர்கள்" என்றார். மேலும், தனியே தொலைக்காட்சி திரையில், "அவர்களை பார்த்தால் சுட்டுவிடுங்கள்" என்றும் ஒளிப்பரப்பட்டுள்ளது.
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB அதன் X தளத்தில், கார்கள் விபத்து நடந்த இடத்தை நோக்கி பொதுமக்கள் ஓடிச்சென்றதாக பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "அமெரிக்க விமானியை சிறைபிடிப்பதற்காக, தென்மேற்கு ஈரானில் உள்ள பொதுமக்கள் பலர், கார்களில் மீது போர் விமானம் விழுந்து, விபத்து ஏற்பட்ட பகுதியை நோக்கி ஓடிச்சென்றனர். விமானியை யாரும் துன்புறுத்த அனுமதிக்க வேண்டாம் என்று ஈரானிய ஆயுதப் படைகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன" என குறிப்பிட்டுள்ளது.
புகைப்படங்களை வெளியிட்ட ஈரான் ஊடகம்
மத்திய ஈரான் பகுதியில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் F-35 போர் விமானம், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க போர் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், விமானத்தின் சிதறிக்கிடக்கும் சிதலங்களின் புகைப்படங்களையும் ஈரானின் Tasnim செய்தி முகமை வெளியிட்டுள்ளது. மேலும், அந்த விமானத்தில் இருந்து கீழே குதித்த போர் விமானி உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என தெரிவித்திருந்தது.
விமானிகளின் நிலை தெரியவில்லை
இங்கிலாந்தில் உள்ள RAF லேக்கன்ஹீத் எனப்படும் அமெரிக்காவின் விமானப்படை தளத்தைச் சேர்ந்த 494வது ஃபைட்டர் ஸ்குவாட்ரனுக்குச் சொந்தமான F-15E போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக IRIB தெரிவித்துள்ளது. அதன் X பதிவில், "போர் விமானத்தின் வால் பகுதியின் சிதிலங்கள் விமானம் வீழ்த்தப்பட்டதை உறுதிபடுத்துகின்றன. விமானிகளின் நிலை தற்போது தெளிவாகத் தெரியவில்லை" என பதிவிட்டுள்ளது.
இந்த மூன்றாவது போர் விமானம்?
ஆபரேஷன் ஃபியூரி என்ற பெயரில் அமெரிக்காவும், ஆபரேஷன் ரைஸ்ஸிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஈரான் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. ஈரானும் இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்தும் தாக்குதல் தொடுத்து வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி 28ஆம் தேதியில் இருந்து தற்போது வரை மொத்தம் 3 அமெரிக்க F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் கடந்த மார்ச் 23ஆம் தேதியும், ஏப்ரல் 2ஆம் தேதியும் F-35 போர் விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்திருக்கிறது. ஆனால், அமெரிக்கா ஈரானின் இந்த கூற்றுகளை முற்றிலும் மறுத்துள்ளது. அதேநேரத்தில் தற்போது ஈரானின் பிடியில் அமெரிக்க விமானி சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வேளையில், மற்றுமொரு போர் விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்திருக்கும் நிலையில், அமெரிக்க தரப்பில் இருந்து இதுவரை மறுப்பு ஏதும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | பொருளாதார சிக்கல்.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக போர் கொடி!
மேலும் படிக்க | ஹார்முஸ் ஜலசந்தி இனி திறக்கப்படும்...? முக்கிய தளபதி கொலை - உறைந்து போன ஈரான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சட்டமன்ற தேர்தல் 2026: உறுதிமொழி எடுத்த ரஜினி ரசிகர்கள்! முழு விவரம்!
Madurai, Tamil Nadu:வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் ஜனநாயக பொறுப்பை உணர்த்தும் விதமாக உற்சாகமான முயற்சியில் ஈடுபட்டனர். மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஒன்றிணைந்து, வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நாம் அனைவரும் நம்முடைய ஜனநாயக கடமையை மறக்காமல் 100% வாக்களிப்போம் என்ற உறுதியுடன் அவர்கள் உறுதிமொழி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மதுரை பாண்டி கோவில் பகுதியில் காவல் தெய்வமாக விளங்கும் பாண்டி முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் சமூக பொறுப்பை உணர்த்தும் வகையில் அனைவரும் ஒன்று கூடி, முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
மேலும் படிக்க | வந்தாச்சு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்... மேலூர் மட்டும் மிஸ்ஸிங் - காரணம் என்ன?
வாக்குரிமையின் அவசியம்
இந்நிகழ்வு, வாக்குரிமையின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர்களின் பங்கேற்பில் தான் இருக்கிறது என்பதை நினைவூட்டும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது. மேலும் ரஜினி மன்ற நிர்வாகியான அழகிரி ஏற்பாட்டில் வந்திருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மதுரை ஸ்டைலில் சிக்கன் மட்டன் குடல் எப்படியாக மிக அசைவ விருந்தும் வழங்கப்பட்டது. இதற்கிடையில் ரஜினி வேடமிட்ட நகல் கலைஞர் ஜெயிலர் பட ரஜினி போல வேடமடைந்து வந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாது அவர்களோடு புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் அவர்களின் மகிழ்வித்தார்.
தமிழக வெற்றிக் கழகம்!
திருத்தணியில் தவெக வேட்பாளர் சத்திய குமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் பரிதாபம். வேட்பாளரை மாற்றக்கோரி மாவட்ட செயலாளர் உட்பட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக பிரச்சாரத்தை புறக்கணிப்பு.
சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தவேக சார்பில் வழக்கறிஞர் சத்தியகுமார் போட்டியிடுகிறார். சத்தியகுமார் திருத்தணியில் உள்ள இளைஞர்கள் கஞ்சா பார்ட்டிகள் மற்றும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று கொச்சைப்படுத்தி பேசியதாகவும். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தனி ஒருவராக சென்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் தொடர்ந்து இவர் வேட்பாளராக இருந்தால் இவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் இன்று தவெக வேட்பாளர் சத்தியகுமார் திருத்தணி நகர முழுவதும் தனி ஒருவராக வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டும் பின்னர் சாலையில் நின்று கொண்டும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
#TVKForTirutanni#ThalapathyCM2026@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @BussyAnand @TVKWarriorsHQ pic.twitter.com/ZTvkwdcV0Q
— TVKAdvocate_SathyaKumar (@TVKSathyaKumar) April 3, 2026
மேலும் படிக்க | ராஜீவ் காந்தி படுகொலையால் தலைகீழான தமிழக அரசியல்! 1991 தேர்தல் திருப்பங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
வந்தாச்சு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்... மேலூர் மட்டும் மிஸ்ஸிங் - காரணம் என்ன?
Chennai, Tamil Nadu:Tamil Nadu Assembly Election 2026, Congress Candidates List: தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அனைத்து முன்னணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்றுதான் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
காங்கிரஸின் 27 வேட்பாளர்கள்
பாஜக தங்கள் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியோ 28 தொகுதிகளுக்கு, 27 வேட்பாளர்களை மட்டுமே அறிவித்துள்ளது. இன்னும் மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை.
12 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பொன்னேரி தொகுதியில் துரை சந்திரசேகர், வேளச்சேரி தொகுதியில் ஹசன் மௌலானா, அறந்தாங்கியில் ராமசந்திரன் (திருநாவுக்கரசு மகன்), காரைக்குடி மாங்குடி, நாங்குநேரி ரூபி மனோகரன் ஆகியோர் என சிட்டிங் எம்எல்ஏக்கள் 12 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
5 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லை
குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், தென்காசி எம்எல்ஏ பழனி, மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார், உதகை எம்எல்ஏ கணேஷ், விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தற்போது வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவான தாரகை கத்பர்ட் தற்போது குளச்சல் தொகுதிக்கு மாறியுள்ளார். மயிலாடுதுறையில் ஜமால் யூனஸ் முகமது என்பவர் போட்டியிடுகிறார். சிட்டிங் எம்எல்ஏ ராஜ்குமார், பிரவீன் சக்ரவர்த்தியின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. உதகையில் ஏற்கெனவே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற பி. ராமசந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதி திமுகவுக்கும், விருதாச்சலம் தொகுதி தேமுதிகவுக்கும் ஒதுக்கப்பட்டுவிட்டது.
6 நாளில் தமிழ் குமரனுக்கு வாய்ப்பு
பாமக (ராமதாஸ்) எம்எல்ஏ ஜி.கே. மணியின் மகனான ஜி.கே.எம். தமிழ் குமரன் கடந்த மார்ச் 28ஆம் தேதி, பாமகவில் இருந்து பிரிந்து டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் காங்கிரஸில் இணைந்தார். தற்போது அவருக்கு பென்னாகரம் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில் தற்போது இவரின் தந்தை ஜி.கே. மணி எம்எல்ஏ ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் லைகா புரொடக்ஷன்ஸில் தயாரிப்பாளராகவும் இருந்தவர்.
Congress releases a list of 27 candidates for the Tamil Nadu Assembly elections
— ANI (@ANI) April 3, 2026
Congress PCC chief K. Selvaperunthagai to contest from Sriperumbudur assembly constituency and former MP Dr A Chella Kumar from Krishnagiri pic.twitter.com/7zfHwPDnNP
மேலூர் தொகுதி வேட்பாளரை அறிவிக்காதது ஏன்?
காங்கிரஸ் கட்சி மேலூர் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது. இன்றிரவு அல்லது நாளை காலை மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவிப்போம் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். ஆனால், ஏன் மேலூரில் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மேலூர் தொகுதி என்பது அதிமுக தற்போது தற்போது பலமாக உள்ள தொகுதி. 2001ஆம் ஆண்டில் இருந்து அதிமுகதான் அங்கு வெற்றிபெற்று வருகிறது. 1980 முதல் 1991 வரை காங்கிரஸ் கட்சியும், 1996இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இங்கு வெற்றிபெற்றிருக்கின்றன. எனவேதான், தவறவிட்ட கோட்டையை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. 2011, 2016 தேர்தல்களில் திமுக போட்டியிட்டும் இங்கு தோல்விதான் கிடைத்தது.
2021 தேர்தலில் இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவியது. அப்போது காங்கிரஸ் சார்பில் டி. ரவிசந்திரன் போட்டியிட்டார். இவர் விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூரின் மாமனார் என சொல்லப்படுகிறது. கடந்த முறை மேலூரில் ரவிசந்திரன் படுதோல்வியடைந்ததால், இந்த முறை மதுரை வடக்கு தொகுதியை அவருக்கு பெற்று தந்துவிட வேண்டும் என மாணிக்கம் தாகூர் விருப்பப்பட்டுள்ளார்.
காரணம், மதுரை வடக்கு திமுக எம்எல்ஏ கோ. தளபதியுடன் மாணிக்கம் தாகூருக்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு அனைவரும் அறிந்ததே. அந்த தொகுதி காங்கிரஸுக்கு கிடைக்காத நிலையில், மீண்டும் மேலூர் தான் கொடுக்கப்பட்டது. மேலூர் தொகுதியும் ரவிசந்திரனுக்கு ஒதுக்க, செல்வப்பெருந்தகை மறுத்ததாக கூறப்படுகிறது. அங்கு கார்த்திகேயன் என்பவரை வேட்பாளராக நிறுத்த செல்வப்பெருந்தகை பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதில் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாகவே கடந்த மார்ச் 28ஆம் தேதி, காங்கிரஸின் மாநில அளவிலான தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியில் இருந்து மாணிக்கம் தாக்கூர் விலகியதாக கூறப்படுகிறது. ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களாக அறியப்படும் பிரவீன் சக்ரவர்த்தியும், மாணிக்கம் தாகூரும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், அவர்கள் மீதான அதிருப்தியின் காரணமாகவே அவர்களின் கோரிக்கையை கட்சியின் மாநிலத் தலைமை மறுப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
பொன்னேரி - துரைசந்திரசேகர்
வேளச்சேரி - ஹசன் மவுலானா
ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை
சோளிங்கர் - முனிரத்னம்
ஊத்தங்கரை - குப்புசாமி
கிருஷ்ணகிரி - செல்லக்குமார்
பென்னாகரம் - ஜி.கே.எம்.தமிழ்குமரன்
ஆத்தூர் (சேலம்) - அர்த்தநாரி
ஈரோடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்
உதகை - ராமச்சந்திரன்
கவுண்டம்பாளையம் - சூர்யபிரகாஷ்
சிங்காநல்லூர் - ஸ்ரீநிதி நாயுடு
துறையூர் - விச்சு லெனின் பிரசாத்
கடலூர் - சந்திரசேகரன்
மயிலாடுதுறை - ஜமால் யூனுஷ் முகமது
அறந்தாங்கி - ராமச்சந்திரன்
காரைக்குடி - எஸ்.மாங்குடி
உசிலம்பட்டி - சரவணகுமார்
சிவகாசி - கணேசன் அசோகன்
திருவாடானை - ராம.கருமாணிக்கம்
ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ்
சங்கரன்கோவில் - சங்கை கணேசன்
அம்பாசமுத்திரம் - துரை
நாங்குநேரி - ரூபி மனோகரன்
குளச்சல் - தாரகை கத்பட்
விளவங்கோடு - பிரவீன்
கிள்ளியூர் - ரஜேஷ்குமார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
பாஜக வேட்பாளர் பட்டியல்: அண்ணாமலைக்கு நோ சீட்... நயினாரின் கணக்கு பலித்ததா?
Chennai, Tamil Nadu:Tamil Nadu Assembly Election 2026, BJP Candidates List: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏப்.23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு தேர்தல் களத்தில் தற்போது நான்கு முனை போட்டி நிலவுகிறது. முன்னணி கூட்டணிகளாக திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள் உள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. சசிகலா - ராமதாஸ் தரப்பும் ஒருபுறம் தேர்தலை தனித்து சந்திக்கிறது. இதில் அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சார களத்தில் குதித்துவிட்டன. ஆனால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள்தான் வேட்பாளரை கூட அறிவிக்காமல் இருந்தன.
27 தொகுதிகளில் போட்டியிட்டு...
நாளையும் (ஏப். 4), வரும் திங்கட்கிழமையும் (ஏப். 6) மட்டும்தான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலையில், பாஜக தேசிய தலைமை அதன் தமிழக வேட்பாளர் பட்டியலை இன்று (ஏப். 3) வெளியிட்டுள்ளது. அதிமுக தலைமயிலான கூட்டணியில் பாஜக முக்கிய அங்கம் வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தேசிய தலைமையாக பாஜக இருந்தாலும், தமிழக தலைமையாக அதிமுகவே உள்ளது. அந்த வகையில், பாஜகவுக்கு 5 தனித்தொகுதிகள், 22 பொதுத்தொகுதிகள் என மொத்தம் 27 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருந்தது.
BJP releases list of 27 candidates for Tamil Nadu Assembly elections; Dr Tamilisai Soundararajan to contest from Mylapore, Vanathi Srinivasan to contest from Coimbatore (North), Dr. L. Murugan from Avanashi (SC) pic.twitter.com/4c2uRhy6Gp
— ANI (@ANI) April 3, 2026
மூன்று எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு
இந்நிலையில், பாஜக நேரடியாக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. தற்போதைய பாஜக எம்எல்ஏக்களான நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், எம்.ஆர். காந்தி ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் இருந்து சாத்தூர் தொகுதிக்கு மாறியுள்ளார். வானதி ஸ்ரீனிவாசனும் கோவை தெற்கு தொகுதியில் இருந்து கோவை வடக்கு தொகுதிக்கு மாறியுள்ளார்.
நாகர்கோவில் தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் எம்.ஆர். காந்திக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ, சி. சரஸ்வதிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் அவருக்கு பதில் சி. சரஸ்வதியின் மருமகளான கிருத்திகா சிவகுமாருக்கு மொடக்குறிச்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவிநாசியில் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இம்முறை அவிநாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவிநாசி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் வேளையில், கடந்த இரண்டு முறை முன்னாள் சபாநாயகர் தனபால் அங்கு வெற்றிபெற்றிருந்த சூழலில், இம்முறை எல்.முருகனுக்காக அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு அதிமுக விட்டுக்கொடுத்துள்ளது. அங்கு 28 வயதே ஆன மருத்துவர் கோகிலாமணி என்ற பெண்மணி திமுக களமிறக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய முகங்களுக்கு வாய்ப்பு
மயிலாப்பூர் தொகுதியில் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன், தஞ்சாவூர் தொகுதியில் கருப்பு முருகானந்தம், அறந்தாங்கி தொகுதியில் கவிதா ஸ்ரீகாந்த், மதுரை தெற்கு தொகுதியில் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன், வாசுதேவநல்லூர் தொகுதியில் ஆனந்தன் அய்யாசாமி, விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி ஆகியோருக்கு முக்கிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருமாறனுக்கு, சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியை பாஜக ஒதுக்கி உள்ளது. அவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பன் சிட்டிங் எம்எல்ஏ என்பது கவனிக்கத்தக்கது.
ஏ.சி. சண்முகத்திற்கு ஆப்பு
ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு பாஜக ஒரு தொகுதியை ஒதுக்குவதாக கூறப்பட்டது. ஆனால் பாஜக தற்போது அவர்களுக்கு எந்த தொகுதியையும் ஒதுக்கவில்லை. புதிய நீதிக்கட்சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது, அதில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து சுந்தர். சி களமிறக்கப்பட்டுள்ளார்.
33 தொகுதிகளில் தாமரை சின்னம் போட்டி
அதேநேரத்தில், தமிழக மாநில காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ராஜபாளையத்திலும் என 6 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். எனவே, 33 தொகுதிகளில் தாமரை சின்னம் இம்முறை போட்டியிடுகிறது.
அண்ணாமலை போட்டியிடவில்லை
பாஜக வேட்பாளர் பட்டியலில், அண்ணாமலையின் பெயர் இல்லாதது கவனிக்கத்தக்கது. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அண்ணாமலை கோவையின் கவுண்டம்பாளையம் அல்லது பல்லடம் தொகுதியை ஆரம்பத்தில் எதிர்பார்த்ததாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே அந்த தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும், நயினார் நாகேந்திரனும் அந்த தொகுதியை பெற எடப்பாடி பழனிசாமிக்கு போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் வந்தன.
அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன்?
தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்னரும் கூட, அண்ணாமலைக்கு திருப்பூர் தெற்கு, மொடக்குறிச்சி, தளி ஆகிய தொகுதிகளில் போட்டியிட கட்சியின் மேலிடம் ஆலோசனை நடத்தியதாகவும்; ஆனால், அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. செந்தில் பாலாஜி தற்போது கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாறியிருப்பதன் மூலம், அவரை எதிர்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டதாக கூறப்பட்டது. ஆனால், கோவை வடக்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றியிருந்ததன் காரணமாக அண்ணாமலைக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை.
அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் நோ சீட்
தொகுதி ஒதுக்கீட்டில் இருந்தே அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்கவில்லை. குறிப்பாக, வினோஜ் பி. செல்வம் (தி.நகர்), எஸ்.ஜி. சூர்யா (வேளச்சேரி) ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு கொடுக்கப்படவில்லை. செங்கல்பட்டு தொகுதியில் கே.டி. ராகவனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அந்த தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. கே.டி. ராகவன் முக்கியத்துவம் பெறக்கூடாது என நயினார் நினைப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இவர்களுக்கு தற்போது வேறு தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.
இபிஎஸ், நயினார் கணக்கு பலித்ததா?
பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன், தளி தொகுதியில் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில் அங்கும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்ற இபிஎஸ் திட்டமும், கட்சியில் இருந்து அண்ணாமலையையும் தனக்கு எதிராக இருப்பவர்களையும் ஓரங்கட்டும் நயினாரின் கணக்கும் தற்போது நிறைவேறிவிட்டதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், "சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளில், ஒரு தொண்டனாக நான், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்" என பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான பின், இவ்வாறு அண்ணாமலை அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பிரதமரின் சென்னை ரோட் ஷோ ரத்து... நிர்வாகிகளை சந்திக்கும் மோடி - பின்னணி என்ன?
மேலும் படிக்க | தேர்தலில் போட்டியிடவில்லை? பாஜக மேலிடம் வைத்த செக்.. அடம்பிடித்த அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
அதிர்ச்சி... LPG சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு - சென்னையில் எவ்வளவு தெரியுமா?
Chennai, Tamil Nadu:Commercial LPG Cylinder Price Hike: இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, அரசின் எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களின் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளது.
19 கிலோ வணிக ரீதியான LPG சிலிண்டர் மற்றும் 5 கிலோ மினி சிலிண்டர் ஆகியவற்றின் விலையை இன்று (ஏப். 1) எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. 5 கிலோ மினி சிலிண்டரின் விலை சுமார் ரூ.51 அளவிற்கு உயர்ந்துள்ளது. 19 கிலோ வணிக ரீதியான LPG சிலிண்டர் ரூ.195 முதல் ரூ.218 அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.
சென்னை விலை உயர்வு
19 கிலோ வணிக ரீதியான LPG சிலிண்டர் சென்னையில் 203 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் 19 கிலோ வணிக ரீதியான LPG சிலிண்டர் ரூ.2,246 ஆக விற்பனையாகிறது. அதேநேரத்தில் ஆறுதல் அளிக்கும் விதமாக, வீட்டு உபயோக LPG சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் தொடங்கிய பின்னர், கடந்த மார்ச் 7ஆம் தேதி 60 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. இப்போது சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.913 ஆக உள்ளது.
#NewsUpdate | சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!#ZeeTamilNews | #CommercialCylinder | #PriceHike pic.twitter.com/UXUY1V02xm
— Zee Tamil News (@ZeeTamilNews) April 1, 2026
மற்ற நகரங்களில் விலை நிலவரம்
சென்னையில் ரூ.2,246 ஆக விற்பனையாகும் வணிக சிலிண்டர் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களை ஒப்பிடுகையில் அதிக விலையில் உள்ளது. டெல்லி, மும்பையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.195.5 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.2,078.50, மும்பையில் ரூ.2,031 ஆக விற்பனையாகிறது. கொல்கத்தாவில் ரூ.218 அளவிற்கு உயர்ந்து, தற்போது ரூ.2,208 ஆக விற்பனையாகிறது.
பெங்களூருவில் ரூ.203 உயர்ந்து ரூ.2,161 ஆகவும்; ஹைதராபாத் நகரில் ரூ.215 உயர்ந்து ரூ.2,320.50 ஆகவும் விற்பனையாகிறது. நாட்டிலேயே பாட்னாவில்தான் அதிக விலையில் வணிக சிலிண்டர் விற்பனையாகிறது. அங்கு ரூ.220 அளவிற்கு உயர்ந்து ரூ.2,353 ஆக விற்பனையாகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மும்பை அணி செம ஹேப்பி; 14 ஆண்டுகால சாபம் நீங்கியது - சேஸ்ஸிங்கிலும் சாதனை!
Mumbai, Maharashtra:MI vs KKR 2026 Highlights: ஐபிஎல் 2026 தொடர் நேற்று (மார்ச் 28) தொடங்கிய நிலையில், 2வது லீக் போட்டி இன்று (மார்ச் 29) மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
ஹை-ஸ்கோரிங் ஆடுகளம்
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய போட்டியின் ஆடுகளம், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளம்தான். அன்றைய போட்டியில் இந்தியா 253 ரன்களை அடிக்க, இங்கிலாந்து 246 ரன்களை அடித்தது. மொத்தம் 499 ரன்கள் அன்று அடிக்கப்பட்டது.
களமிறங்கிய புதுமுகங்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஷெர்ப்ரேன் ரூதர்போர்ட், ஷர்துல் தாக்குல், மயங்க் மார்க்கண்டே, அல்லாஹ் கசன்பர் ஆகியோர் விளையாடினர். வில் ஜாக்ஸ், சான்ட்னர், டி காக் ஆகியோர் விளையாடவில்லை. கேகேஆர் அணியில் பின் ஆலன், கேம்ரூன் கிரீன், பிளெஸ்ஸிங் முசர்பானி ஆகியோர் புதிதாக இடம்பெற்றனர். இம்பாக்ட் வீரராக கார்த்திக் தியாகி களமிறங்கினார்.
ஓபனிங் மிரட்டல்
முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு பின் ஆலன் - ரஹானே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பின் ஆலன் 17 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் என 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நம்பர் 3 இடத்தில் களமிறங்கிய கேம்ரூன் கிரீன் 10 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் என 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஜிங்கயா ரஹானே சிறப்பாக விளையாடினாலும் கடைசி கட்டத்தில் சற்று நிதானம் காட்டியதால் ரன்ரேட் மிடில் ஓவர்களில் குறைந்தது. ரஹானே 40 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 67 ரன்களையும், ரகுவன்ஷி 29 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 51 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதேநேரத்தில் கடைசி 3 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே மும்பை கொடுத்தது.
சிக்ஸ் அடிக்காத ரின்கு சிங்
இதனால் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை சேர்த்தது. ரிங்கு சிங் 21 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 33 ரன்களை சேர்த்தார். இவர் சிக்ஸர்களை அடிக்காதது பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. மும்பை பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டை எடுத்தார்.
முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப்
தொடர்ந்து 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ரோஹித் சர்மா - ரிக்கல்டன் ஜோடி களமிறங்கியது. இந்த ஜோடியை கேகேஆர் பந்துவீச்சாளர்களால் பிரிக்கவே முடியவில்லை. பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்களை சேர்த்தது. மறுபக்கம் கேகேஆர் அணி பவர்பிளேவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 78 ரன்களை அடித்திருந்தது. இதன்மூலம் மும்பை சேஸ்ஸிங்கில் முன்னிலை பெற்றது. ரோஹித் - ரிக்கல்டன் ஜோடி 148 ரன்களை சேர்த்தது.
ரிக்கல்டன் மிரட்டல்
11.5 ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 38 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 78 ரன்களை சேர்த்தது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 பந்துகளில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த ரிக்கல்டன் 43 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்ஸருடன் 81 ரன்களில் ரன்அவுட்டானார். கடைசி கட்டத்தில் திலக் வர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், 19.1 ஓவர்களில் மும்பை அணி இலக்கை கடந்தது, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மும்பையின் சாதனை சேஸ்ஸிங்
மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச சேஸ்ஸிங் இதுதான். மேலும், 2012ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அதாவது 14 ஆண்டுகள் சாபம் நீங்கிவிட்டது. ஆட்டநாயகனாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.
@mipaltan begin their #TATAIPL 2026 campaign with an impressive icket victory at hom
— IndianPremierLeague (@IPL) March 29, 2026
Scorec https://t.co/JmJcgsoHQ7#KhelBindaas | #MIvKKR pic.twitter.com/zOnWb5Sc8U
ஆர்ஆர் vs சிஎஸ்கே
ஐபிஎல் 2026 தொடரின் 3வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை (மார்ச் 30) கௌகாத்தியில் மோதுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
அவிநாசியில் ஸ்டாலின் செய்த காரியம்... எல். முருகன் vs 28 வயது கோகிலாமணி - ஜெயித்தால் அமைச்சரா...?
Avinashi, Tamil Nadu:அவிநாசி சட்டப்பேரவை தொகுதி 2026 திமுக இளம் வேட்பாளர் கோகிலாமணி: கொங்கு மண்டலத்தின் முக்கியமான மாவட்டமாக திருப்பூர் விளங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி அருகே உள்ள திருமலைக் கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர், சத்துணவுக் கூடத்தின் சமையலராக இருந்தார்.
அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்த பெண்மணி சமைத்த உணவை, தங்களின் பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடாது என்ற கொடூரமான சம்பவம், 2018ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் திருமலைக் கவுண்டன் பாளையத்தில் நடந்தேறியது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கொடூரமான தீண்டாமையால் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணியின், அதே ஊரைச் சேர்ந்த மருத்துவர் கோகிலாமணி என்பவரை அவிநாசி (தனி) தொகுதிக்கு வேட்பாளராக திமுக களமிறக்கி உள்ளது. வெறும் 28 வயதான கோகிலாமணி, திமுகவில் மிகவும் கவனிக்கப்படும் வேட்பாளராக உருமாறியுள்ளார். இவர்தான் திமுகவின் இளம் வேட்பாளராகவும் உளஅளார். அந்த வகையில், கோகிலாமணி குறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
அவிநாசி அதிமுகவின் கோட்டை
அவிநாசி தொகுதி அதிமுகவின் கோட்டை எனலாம். 1984ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டுவரை அதிமுக இங்கு ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இந்த காலகட்டத்தில் 1996 தேர்தலில் மட்டுமே திமுக இங்கு வெற்றி பெற்றது. மேலும், கடந்த இரண்டு தேர்தல்களாக முன்னாள் சபாநாயகர் தனபால் இங்கு போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.
அவிநாசியில் களமிறங்கும் எல்.முருகன்
இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அவிநாசி தொகுதியை அதிமுக, பாஜகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. 42 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் தொகுதியை பாஜகவுக்கு அதிமுக விட்டுக்கொடுத்ததற்கு காரணமும் இருக்கிறது. இங்கு பாஜக சார்பில் தற்போதைய மத்திய இணை அமைச்சர் எல். முருகன் போட்டியிட இருக்கிறார். நட்சத்திர வேட்பாளர் களமிறங்கும் காரணத்தாலேயே அதிமுக தனது பலமான தொகுதியை பாஜகவுக்கு கொடுத்திருக்கிறது.
தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு திரும்பும்படி, எல். முருகனுக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது. அதன் காரணமாக, வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்திலும் எல். முருகன் உள்ளார். 2021 சட்டப்பேரவையில் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டும், 2024 மக்களவை தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் போட்டியிடும் எல். முருகன் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய இணை அமைச்சர் எல். முருகனை, 28 வயதான மருத்துவர் கோகிலாமணி எதிர்கொள்ள இருப்பது கொங்கு அரசியலில் விறுவிறுப்பை உண்டாக்கியுள்ளது.
யார் இந்த கோகிலாமணி?
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் ஊரைச் சேர்ந்த கோகிலாமணி 1998ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி பிறந்தவர். கோகிலாமணி தற்போது அரசு மருத்துவராக உள்ளார். கோகிலாமணியின் தந்தை வெங்கிட்டான் விவசாய கூலியாவார். மேலும், வெங்கிட்டான் 15 ஆண்டுகளாக திருமலைக்கவுண்டன்பாளையம் திமுக கிளைச் செயலாளராக உள்ளார். சேயூர் ஒன்றிய ஆதிதிராவிடர் நல பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார்.
கோகிலாமணி 10ஆம் வகுப்பு திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து முடித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை படித்தார்.
2021ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பை முடித்து மூன்று ஆண்டுகள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றியிருக்கிறார். கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் அவிநாசி வட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். 2022ஆம் ஆண்டு முதல் திமுக சேயூர் ஒன்றிய மருத்துவரணி துணை அமைப்பாளராக உள்ளார்.
ஸ்டாலினின் ஸ்டேட்மண்ட்!
முன்னர் கூறியது போல், அருந்திய சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி சமைத்த உணவை தங்களின் பிள்ளைகளுக்கு வழங்கக் கூடாது என தீண்டாமை சம்பவம் நடந்த பகுதியில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் மருத்துவரை, களமிறக்கி உள்ளார் மு.க.ஸ்டாலின்.
ஜெயித்தால் அமைச்சர் பொறுப்பா...?
ஒருவேளை, எல். முருகனை வீழ்த்தி, மருத்துவர் கோகிலாமணி அவிநாசி தொகுதியில் வெற்றிபெற்றால் நிச்சயம் பெரும் சாதனையாக பார்க்கப்படும். வெற்றிபெற்றால், அவர் இளம் சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமின்றி, இளம் அமைச்சராகவும் பொறுப்பேற்க கூடிய வாய்ப்புள்ளது.
கடந்த 2021 தேர்தலில், தாராபுரம் (தனி) தொகுதியில் எல்.முருகனை வீழ்த்தி, திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ், அமைச்சரவையில் இடம்பிடித்தார். முதலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கயல்விழி செல்வராஜ், தற்போது மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். அந்த வகையில், கயல்விழி செல்வராஜை போல் மருத்துவர் கோகிலாமணிக்கும் வெற்றிபெற்றால், அமைச்சரவையில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என தொகுதிக்குள் பேசப்படுகிறது.
மேலும் படிக்க | கோவை அதிமுகவின் கோட்டை.. 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - எஸ்.பி. வேலுமணி உறுதி!
மேலும் படிக்க | TN Election: அதிமுகவை விழுங்கும் பாஜக.. கோவையின் கள நிலவரம் என்ன? யாருக்கு சாதகம்!
மேலும் படிக்க | எந்த தொகுதியும் வேண்டாம்.. 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை? முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
பட்டாசாக வெடித்த படிக்கல்... முடித்துவைத்த விராட்... ஆர்சிபியின் சாதனை சேஸிங்!
Bengaluru, Karnataka:RCB vs SRH 2026 Highlights: ஐபிஎல் 2026 தொடர் இன்று தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞசர்ஸ் பெங்களூரு அணியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொண்டது.
4 அறிமுக வீரர்கள்
கடந்தாண்டு கோப்பையை வென்ற வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு இன்றைய போட்டிக்கு முன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
போட்டியின் டாஸை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ஜேக்கப் பெத்தெல் இன்று விளையாடவில்லை. ஆர்சிபியில் ஜேக்கப் டஃப்பி மற்றும் அபிநந்தன் சிங் ஆகியோர் தங்களின் அறிமுக போட்டியை இன்று விளையாடினர். எஸ்ஆர்ஹெச் அணியில் சலீல் அரோரா மற்றும் டேவிட் பெய்ன் ஆகியோர் தங்களின் அறிமுக போட்டியில் விளையாடினர்.
மிரட்டிய ஜேக்கப் டஃப்பி
முதலில் பேட்டிங் செய்த எஸ்ஆர்ஹெச் அணிக்கு சற்றே மோசமான தொடக்கம்தான் கிடைத்தது. ஜேக்கப் டஃப்பி வீசிய 3வது ஓவரில் இருந்து ஹைதராபாத் அணியின் வீழ்ச்சி தொடங்கியது. அபிஷேக் சர்மா 7, டிராவிஸ் ஹெட் 11 என ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். அடுத்து டஃப்பி வீசிய 5வது ஓவரில் நிதிஷ் குமார் ரெட்டி 1 ரன்னில் வெளியேறினார். இருப்பினும் ஹைதராபாத் அணி பவர்பிளேவில் 49 ரன்களை அடித்து 3 விக்கெட்டை இழந்தது.
இஷான் கிஷன் 80
4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் இஷான் கிஷன் - ஹென்ரிச் கிளாசென் இணை சுமார் 97 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் வைத்தனர். கிளாசென் 31 ரன்கள் எடுத்து பில் சால்டின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அதையடுத்து சலீல் அரோரா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த இஷான் கிஷன் 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 80 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் அனிகேத் வர்மா மட்டுமே ஆறுதல் அளித்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் ஹைதராபாத் அடித்தது. அனிகேத் வர்மா 18 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் என 43 ரன்களை அடித்தார். ஆர்சிபி பந்துவீச்சில் ஜேக்கப் டஃப்பி மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினார்.
படிக்கலின் மிரட்டலடி
202 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய ஆர்சிபி அணியில் பில் சால்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த படிக்கல் - கோலி இணை 45 பந்துகளில் 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. படிக்கல் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 61 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
முடித்துவைத்த விராட்
அடுத்து வந்த கேப்டன் ரஜத் படிதார் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 31 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். ஜித்தேஷ் சர்மா டக்அவுட்டாகி ஏமாற்றமளித்தார். டிம் டேவிட் உடன் சேர்ந்து ஓபனரான விராட் கோலி ஆட்டத்தை முடித்து வைத்தார். 26 பந்துகளை மிச்சம்வைத்து ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அதன் முதல் வெற்றியை பதிவு செய்தது.
Picking up exactly where th
— IndianPremierLeague (@IPL) March 28, 2026
Defending champions #RCB kick off their #TATAIPL 2026 campaign with a clinical, comprehensive victory ov
Updates https://t.co/Eo5z0jh4K4 #KhelBindaas | #RCBvSRH | @RCBTweets pic.twitter.com/q3IAaMP3LK
ஆட்ட நாயகன் ஜேக்கப் டஃப்பி
விராட் கோலி 38 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 69 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு மிக சுமாராகவே இருந்தது. டேவிட் பெய்ன் 2 விக்கெட், ஹர்ஷ் தூபே, ஜெயதேவ் உனத்கட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆர்சிபி அணி சார்பாக 3 விக்கெட்டை வீழ்த்திய டஃப்பி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
MI vs KKR மோதல்
ஐபிஎல் 2026 தொடரின் 2வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - அஜிங்கயா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நாளை (மார்ச் 29) மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
தோனி இதற்கு முன் காயமடைந்தபோது சிஎஸ்கே கப் அடித்தது... இந்த வரலாறு தெரியுமா?
Chennai, Tamil Nadu:ஐபிஎல் 2026 எம்.எஸ்.தோனி: கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த 19வது ஐபிஎல் சீசன் இன்று (மார்ச் 28) கோலாகலமாக பெங்களூரு சின்னசாமி தொடங்க இருக்கிறது.
ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், அஜிங்கயா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரஜத் பட்டிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் என 10 அணிகள் இந்த 2026 தொடரில் முட்டிமோத இருக்கின்றன.
வெறியோடு வெயிட்டிங்
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், கௌகாத்தி, ராய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர், முலான்பூர், தரம்சாலா, டெல்லி, லக்னோ என 14 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இரவு போட்டி என்றால் 7 மணிக்கு டாஸ் வீசப்பட்டு, 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். பகல் போட்டி என்றால் மதியம் 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டு, 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். அனைவருமே ஐபிஎல் அட்டவணையுடன் ரெடியாகிவிட்ட சூழலில், ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி இன்று காலையில் வந்தது.
தோனி விளையாட மாட்டார்
கெண்டைக்கால் வலி காரணமாக அடுத்து 2 வாரங்களுக்கு சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், முதல் 4-5 போட்டிகளை தோனி தவறவிடக்கூடும். தோனிக்கு இது கடைசி சீசன் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தோனியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் அவர் விரைவாக குணமடைந்து போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தோனியும் சிஎஸ்கேவும்...
2008ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வந்தார். 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கேவுக்கு தடைவிதிக்கப்பட்டது, அப்போது 2016இல் மட்டும் ரைஸ்ஸிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டுவரை கேப்டனாக செயல்பட்டார். 2022இல் ஜடேஜாவிடம் கேப்டன்ஸியை ஒப்படைத்து, பாதி சீசனிலேயே மீண்டும் கேப்டன்ஸியை பெற்றார். 2023ஆம் ஆண்டிலும், 2025ஆம் ஆண்டில் பாதியில் இருந்து தோனி கேப்டன்ஸியை பார்த்துக்கொண்டார். இவர் தலைமையில் 2010, 2011, 2018, 2021, 2023 என ஐந்து முறை சிஎஸ்கே கோப்பையை வென்றிருக்கிறது.
தோனி, ரெய்னா இல்லாமல் முதல்முறையாக...
இந்தச் சூழலில், தோனி கடந்த 18 ஆண்டுகளாக ஒரு ஐபிஎல் தொடரை கூட தவறவிட்டதில்லை. ஆனால், இதற்கு முன் ஒரு சில போட்டிகளை மட்டும் தோனி தவறவிட்டுள்ளார். ஆனால் அது நடந்தது சுமார் 16 வருடங்களுக்கு முன்னர்... தற்போது 19 வருட வரலாற்றில் முதல்முறையாக தோனியோ, ரெய்னாவோ இன்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது. அந்த வகையில், தோனி இதற்கு முன் எப்போது காயமடைந்தார்? அவர் இல்லாமல் சிஎஸ்கே எப்போது விளையாடியது? என்பதை இங்கு காணலாம்.
தோனி இதற்கு முன் எப்போது காயமடைந்தார்?
2010ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஷேன் பாண்ட் பந்தை தோனி எதிர்கொண்டார். வலது முழங்கையில் பந்து வேகமாக தாக்கியது. அந்த வலியை தாங்கிக் கொண்டு 33 பந்துகளில் 66 ரன்களை தோனி அன்று விளாசினார். ஆனால், போட்டிக்கு பின் ஸ்கேன் செய்து பார்த்ததில் காயம் கடுமையாக இருந்தது. அவருக்கு 10 நாள்கள் ஓய்வு தேவைப்பட்டது. அதனால், மூன்று போட்டிகளை தோனி தவறவிட்டார். தொடர்ந்து அந்த சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகளை தோனி தவறிவிட்டார். இந்த மூன்று போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டார். விக்கெட் கீப்பராக பார்த்தீவ் பட்டேல் இருந்தார். இதில் டெல்லியுடன் மட்டும் சிஎஸ்கே வென்றது. பஞ்சாப் உடன் சூப்பர் ஓவரில் தோற்றது, ஆர்சிபி உடன் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
காயம்பட்ட சிங்கத்தின் மூச்சுக்காற்று
ஆனால், அந்த சீசனில் தோனி கேப்டனாக கம்பேக் கொடுத்து கடைசி கட்டத்தில் பல போட்டிகளை வென்று, வாழ்வா சாவா என்ற கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு சிஎஸ்கே தகுதிபெற்றது. அந்தாண்டில்தான் சிஎஸ்கே அதன் முதல் கோப்பையை ருசித்தது. தோனியின் கேப்டன்ஸி வாழ்வில் அந்த 2010 ஐபிஎல் சீசன் மிக முக்கியமானதாக அமைந்தது. காயம்பட்ட சிங்கத்தில் மூச்சுக்காற்று கர்ஜனையை விட பயங்கரமானது என்ற வசனத்தை அன்று உணர்த்தியிருந்தார், தோனி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
திமுக வேட்பாளர் பட்டியல்: ஸ்டாலின் தூக்கியடித்த பெரிய தலைகள் யார் யார்...? 60+ புதுமுகங்கள்
Chennai, Tamil Nadu:TN Assembly Election, DMK Candidates List: திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்ட நிலையில், திமுகவின் 164 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். திமுக நேரடியாக 164 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் கூட்டணி கட்சிகள் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அதாவது மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது.
125 பட்டதாரி வேட்பாளர்கள்
திமுக வேட்பாளர்கள் பட்டியலில் பெண்கள் 18 பேர், முனைவர் 7 பேர், மருத்துவர்கள் 15 பேர், பொறியியல் பட்டதாரிகள் 17, சட்டம் படித்தவர்கள் 29 பேர் உட்பட பட்டம் படித்தவர்கள் 125 பேர் உள்ளனர். புதுமுகங்கள் 60க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதிமுக வேட்பாளர்களை அறிவித்த பின், திமுக அறிவித்துள்ளது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளோம்" என்றார்.
நாளை திமுக தேர்தல் அறிக்கை
கூட்டணிக் கட்சிகள் அனைவரையும் திருப்திப்படுத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம் என்றும் முன்னர் இது மெகா கூட்டணி, இப்போது மெகா மெகா கூட்டணியாக மாறியுள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், நாளை (மார்ச் 29) அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்றும் தெரிவித்தார். வரும் மார்ச் 31ஆம் தேதி மு.க.ஸ்டாலின் அவரது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் - 2026
— DMK (@arivalayam) March 28, 2026
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்!#DMKWins2026 pic.twitter.com/A3ZuIEHsgf
தூக்கியடிக்கப்பட்ட பெரிய தலைகள் யார் யார்?
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூன்று அமைச்சர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை. திமுகவில் தற்போது அமைச்சர்களாக உள்ள மனோ தங்கராஜ், காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காந்தியின் ராணிப்பேட்டை தொகுதி அவரது மகன் வினோத் காந்திக்கு் ஒதுக்கப்பட்டுள்ளது. பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி அவரது மகன் கௌதமசிகாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. கயல்விழி செல்வராஜின் தாராபுரம் தொகுதியில் டாக்டர் இந்திராணி என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பல்லாவரம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ இ. கருணாநிதிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவரது மகன் - மருமகள் அவர்களின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதை செய்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. எனவே அவருக்கு வழங்கப்படவில்லை. சென்னை எழும்பூரில் ஐ.பரந்தாமனுக்கு வாய்ப்பில்லை. அங்கு தமிழன் பிரசன்னா போட்டியிடுகிறார்.
திமுக வேட்பாளர் பட்டியல் ஹைலைட்ஸ்
திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் 16 தொகுதிகளில் 15 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. வேளச்சேரியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. மு.க. ஸ்டாலின் (கொளத்தூர்), உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி), சேகர்பாபு (துறைமுகம்), மா. சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 சிட்டிங் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பூரில் விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு சிட்டிங் எம்எல்ஏ ஆர்.டி. சேகருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வில்லிவாகத்தில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் நிலையில், அங்கு திமுக திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கார்த்திக் மோகன் களமிறக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் (போடி), மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), தோப்பு வெங்கடாசலம் (பெருந்துறை) ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் 16 தொகுதிகளில் 15 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. வேளச்சேரியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. மு.க. ஸ்டாலின் (கொளத்தூர்), உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி), சேகர்பாபு (துறைமுகம்), மா. சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
பெரம்பூரில் விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு சிட்டிங் எம்எல்ஏ ஆர்.டி. சேகருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வில்லிவாகத்தில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் நிலையில், அங்கு திமுக திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கார்த்திக் மோகன் களமிறக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் (போடி), மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), தோப்பு வெங்கடாசலம் (பெருந்துறை) ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கரூர் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார்.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி vs வேலுமணி கன்பார்ம்! கோவையில் பந்தயம் அடிக்கப்போவது யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
உணவகங்களுக்கு நிம்மதி... LPG சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் இருக்காது - மத்திய அரசு
New Delhi, Delhi:வணிக ரீதியான LPG சிலிண்டர்: இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் கடந்த பிப். 28ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் குறைந்தபாடில்லை.
ஈரானின் எரிபொருள் கட்டமைப்புகளை தாக்குவதை 10 நாள்களுக்கு அமெரிக்கா ஒத்திவைத்திருக்கிறது. அமைதி பேச்சுவார்த்தை சிறப்பாக சென்றுகொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
பெட்ரோல், டீசல் விலை குறையுமா...?
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா - ஈரான் அதிகாரிகளுக்கு இடையே, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், துருக்கி மற்றும் எகிப்து நாடுகள் இதற்கு ஆதரவளித்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் தெரிவித்திருந்தார்.
போர் நிலைமை இப்படியிருக்க, போரினால் இந்தியாவும் சிரமங்களை சந்தித்து வருகிறது. எனினும், தற்சமயம் இந்தியாவில் எரிபொருள் தட்டுபாடோ, விநியோகத்தில் பிரச்னையோ ஏதுமில்லை என மத்திய அரசு தெரிவிக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. லிட்டருக்கு ரூ.13 ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.10 ஆக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்தக் கலால் வரி நீக்கத்தால் சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதை தடுக்கும் முயற்சியாக இந்த கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.
LPG தட்டுபாடு
இந்தியாவை பொருத்தவரை LPG தட்டுபாடு பெரியளவில் நிலவுகிறது. அதுவும் வீட்டு உபயோக LPG சிலிண்டர் மற்றும் குழாய் வழியான எரிவாயு (PNG) ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வணிக ரீதியான LPG சிலிண்டரின் விநியோகம் மட்டுமே சிக்கலாகி உள்ளது. அதை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப கட்டத்தில், பொதுமக்களின் நுகர்வுக்காக வணிக சிலிண்டரின் விற்பனையில் கட்டுபாடு விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிலும் தளர்வு ஏற்பட்டுள்ளது.
இயல்பு நிலைக்கு திரும்பிய விநியோகம்
மேலும், வணிக ரீதியான LPG சிலிண்டர்களுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. வணிக ரீதியான LPG வாடிக்கையாளர்கள் இப்போது போருக்கு முந்தைய காலகட்டத்தில் பெற்ற, 70% ஒதுக்கீட்டை இப்போது பெறுவார்கள். போர் தொடங்கிய போது இந்த ஒதுக்கீடு 20% ஆக குறைக்கப்பட்டது, பின்னர் 50% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையாள், வணிக ரீதியான LPG சிலிண்டர்களை சார்ந்திருக்கும் தொழில்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும்.
கள்ளச் சந்தையில் சிலிண்டர் விற்பனை
இந்தியாவின் 60% LPG தேவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போதைய போர் காரணமாக இதில் சிக்கல் ஏற்பட்டது. இதனாலேயே வணிக ரீதியான LPG சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு கட்டுபாடு கொண்டுவர நேர்ந்தது.
சரக்கு கட்டணங்கள் அதிகரித்ததாலும், போர் காரணமாக கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதத்தாலும், வழித்தடங்ககள் மூடப்பட்டதாலும் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டது. இதனால், இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் எரிவாயுவை மீண்டும் நிரப்ப பல மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மக்கள் பீதியில் பொருட்களை வாங்குவதும், கள்ளச் சந்தையில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்படுதல் போன்றவையும் காணப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட உணவகங்கள்
வணிக ரீதியான LPG சிலிண்டர் தட்டுபாடு காரணமாக உணவகங்கள், உணவு பதப்படுத்தும் ஆலைகள், திருநெல்வேலி சாந்தி அல்வா கடை போன்ற பேக்கரிகள் போன்ற உணவு சமைக்கும் சிறு, பெரு நிறுவனங்கள் அனைத்தும் மிக மோசமான பாதிப்பை சந்தித்தனர். இதனால், கடையை திறக்க முடியாத சூழலும், உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலையும் உருவானது. இதனால் அன்றாடம் உணவகங்கள், ஹாஸ்டல் மெஸ்களை நம்பியிருந்தவர்களின் நிலையும் மோசமானது. மேலும் உணவகங்கள் மின்சாரத்தை பயன்படுத்தியோ அல்லது பழைய முறைப்படி விறகு அடுப்பில், கரி அடுப்பில் சமைக்கும் முறைக்கு திரும்பியிருக்கின்றனர்.
LPG சிலிண்டர் விநியோக பற்றாக்குறை காரணமாக மற்றொரு சிக்கலும் கூடவே வந்தது. கடந்த சில வாரங்களில் LPG விலைகளும் உயர்ந்துள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களை விட, வணிக ரீதியான LPG சிலிண்டரின் விலை அதிகளவில் உயர்ந்தது. உலகளவில் எரிபொருள் விலை உயர்வால் இந்தியா அதிக பணவீக்கத்தை எதிர்கொள்ள நேரீடும். அதனால், வணிகங்களுக்கான உள்ளீட்டுச் செலவுகளும் அதிகரித்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
போர் தொடங்குவதற்கு முன், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 70 அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இருந்தது. தற்போது 40% அளவிற்கு உயர்ந்து, ஒரு பீப்பாய் 110 அமெரிக்கா டாலர்கள் அளவிற்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை உயரும்பட்சத்தில் நிச்சயம் நீண்டகால பொருளாதார பிரச்னையை உருவாக்கலாம். கச்சா எண்ணெய்யின் விலை இயல்புக்கு திரும்ப, போர் நின்ற பின்னரும் சுமார் 6 மாதக்காலம் ஆகலாம் என சர்வதேச எரிபொருள் ஆணையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியாவில் மீண்டும் லாக் டவுன் இருக்கா? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
