icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

சென்னை: வண்டலூர் பூங்காவில் இலவச அனுமதி.. ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி?

Chennai, Tamil Nadu:

Vandalur Zoo Free Entry: தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு,  சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜூன் 21,22ஆம் தேதிகளில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்து இருந்தார். இதனால், மக்கள் குஷியில் உள்ளனர். இதற்கிடையில், பலருக்கும் இலவச அனுமதி தொடர்பாக சந்தேகம் இருந்தது. அதாவது, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமா அல்லது நேரில் அனுமதி சீட்டை பெற்றாலும் இலவசமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தற்போது வண்டலூர் பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் இலவச அனுமதி

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 22.06.2026 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படுகிறது.

இலவச நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு, உயிரியல் பூங்காவின் இணையதளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். எனவே, பார்வையாளர்கள் தங்களது இலவச நுழைவுச் சீட்டுகளை tickets.aazp.in என்ற இணையதளத்தின் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: தயார் நிலையில் கலைஞர் சர்வதேச பன்னாட்டு மையம்: எப்போது Open தெரியுமா?

 

ஆன்லைன் முன்பதிவு அவசியம்

முன்பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்கா நுழைவுச் சீட்டு கவுண்டர்களில் நேரடி (On-the-spot) டிக்கெட் முன்பதிவு வசதி இருக்காது.

பார்வையாளர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், இலவச நுழைவு இரண்டு தனித்தனி நேரப் பிரிவுகளாக (காலை மற்றும் பிற்பகல்) ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும், பிற்பகல் நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.

மேற்கண்ட இரு நாட்களிலும் உயிரியல் பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். மாலை 4.30 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக் கட்டணத்தைத் தவிர, பிற சேவைகளுக்கான கட்டணங்கள் நடைமுறையில் உள்ள கட்டண அட்டவணையின்படி வசூலிக்கப்படும். 

மேலும் படிக்க: சென்னை மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம்: ஜூன் 21 முதல் டோக்கன் விநியோகம்

 

சிங்கம் மற்றும் மான் சஃபாரி சேவை இயக்கப்படாது

இந்த இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்வையிடுவதற்கான மின்கல (Battery-operated) வாகன சேவையும், சிங்கம் மற்றும் மான் சஃபாரி (Lion and Deer Safari) சேவையும் இயக்கப்படாது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய நபர்களுக்காக மின்கல வாகன வசதி இந்த இரண்டு நாட்களிலும் இலவசமாக வழங்கப்படும்.

அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பார்வையாளர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க போதிய இடவசதி ஏற்படுத்தவும், அத்தியாவசிய வசதிகள் மற்றும் பிற சேவைகளை திறம்பட நிர்வகிக்கவும் நுழைவு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பூங்கா விலங்குகளின் நலன், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் பயனுள்ள அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் உயிரியல் பூங்காக்களைப் பார்வையிட்டு, வனவிலங்குகளை நேரடியாகக் கண்டு அனுபவித்து, உயிரினப் பன்முகத்தன்மை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடையே வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வையும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் நாளை (ஜூன் 20) மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா? மின்வாரியம் அறிவிப்பு

 

0
0
Report

ஆசிரியர்களே அலர்ட்! டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

Chennai, Tamil Nadu:

TET Exam Hall Ticket: தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை டிஆர்பி எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.  அரசுப் பள்ளியில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்ற டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டெட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள் ஒன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள் 2 என தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு

பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வு தேர்ச்சி அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பணி ஓய்வுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் 2028, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிட்டது. 5 வருடங்களுக்கு குறைவாக உள்ளவர்கள் டெட் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. 

மேலும் படிக்க: திமுக - அதிமுக கூட்டு! தவெகவுக்கு ஆதரவு ஏன்? பரபரப்பை கிளப்பிய சிபிஎம் சண்முகம்

இந்த உத்தரவால் பல லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தேதியையும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி,  2026 ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு ஜூலை 4 தாள் ஒன்று தேர்வு, ஜூன் 5ஆம் தேதி தாள் இரண்டு தேர்வும் நடைபெற உள்ளது.  இதற்கான ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.

டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ஆசிரியர்கள் உங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் இன்று (ஜூன் 19) முதல் உங்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். 

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II - 2026-க்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுகிறது.  விண்ணப்பதாரர்கள் https://trb1.ucanapply.com/login என்ற இணையதளத்திலிருந்து நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  நுழைவுச் சீட்டைக் கொண்டு வந்தால் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

மேலம் படிக்க: ரேஷன் கார்டு அப்டேட்! ஜூன் 25க்குள் இதை செய்யவும் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் 19.06.2026 முதல் https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து தங்களது நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கு, தங்களது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  .

விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் வழங்கும் தகவல்களே இறுதியானவை. விண்ணப்பத் தகவல்களில் செய்யப்படும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மையத்தை மாற்றுவதற்கான கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது.  தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்குவதற்கான வாரியத்தின் முடிவு முற்றிலும் தற்காலிகமானதாகும், மேலும் அது விண்ணப்பத்தில் அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ஆகாது” என தெரிவித்துள்ளது. 

மேலும், நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தில் சிறப்பு முகாமில் பெற்றுக் கொள்ளலாம். சிறப்பு முகாம்கள் ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை நடக்கும்.  நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்திலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தால் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நீட் மறுதேர்வு 2026 முக்கிய அறிவிப்பு! பழைய அட்மிட் கார்டு செல்லுமா? செல்லாதா? NTA விளக்கம்

 

0
0
Report

“நான் தான் முடிவெடுப்பேன்” - சட்டப்பேரவையில் வெடித்த தேசிய கீதம் விவகாரம்.! சபாநாயகர் பதிலடி...

MMathan2h ago
Chennai, Tamil Nadu:

TN Assembly National Anthem: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19), மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிரான அரசின் சிறப்பு தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதற்கு திமுக கேள்வி:

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ஆளுநர் உரையின்போது தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: சட்டப்பேரவையில் சலசலப்பு! திமுக - தவெக இடையே விவாதம்.. பதில் கொடுத்த ஆதவ்

தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டதற்கு அமைச்சர் வரவேற்பு:

இதற்கு பதிலளித்த அவை முன்னவரும் அமைச்சருமான செங்கோட்டையன், “140 கோடி மக்கள் தேசிய கீதத்தை மதித்து வாழும் இந்தியாவில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டதை வரவேற்கிறோம்” என்றார்.

சபாநாயகர் விளக்கம்:

இதையடுத்து விளக்கமளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருப்பதைப் போலவே நாங்களும் உறுதியாக உள்ளோம். இந்த விவகாரம் உறுப்பினர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளையும் மக்களின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் அரசு உறுதியாக உள்ளது: 

விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த நிகழ்ச்சி ஆளுநரின் கட்டுப்பாட்டில் நடைபெற்றதால் மாநில அரசால் தலையிட முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: திமுக - அதிமுக கூட்டு! தவெகவுக்கு ஆதரவு ஏன்? பரபரப்பை கிளப்பிய சிபிஎம் சண்முகம்

அதேபோல், முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் முதலில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பேரறிஞர் அண்ணா உருவாக்கிய மாநிலக் கொள்கையில் உறுதியாக இருந்த முதலமைச்சர் அதை ஏற்கவில்லை. அதன் விளைவாக ஆளுநர் முன்னிலையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. மாநில உரிமைகள் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய நடைமுறைகளில் அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

இது எதிர்காலத்தில் நடைமுறையாக மாறக்கூடும்:

தொடர்ந்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, “ஆளுநர் உரையின்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக நாட்டுப்பண்ணும் பாடப்படுவது வழக்கமான நடைமுறை. தற்போது தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் புதிய நடைமுறையாக மாறக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இருப்பினும், ஆளுநர் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதை வரவேற்கிறோம்” என்றார்.

தேசிய கீதம் குறித்து முடிவெடுப்பது சபாநாயகர்:

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “தேசிய கீதம் எத்தனை முறை பாடப்பட வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன். நடந்தது நல்லதாகவே நடந்துள்ளது. இனி நடைபெறுபவையும் நல்லதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: குதிரை பேரம் செய்ததா தவெக? ஆளுங்கட்சிக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

0
0
Report
Advertisement

சட்டப்பேரவையில் சலசலப்பு! திமுக - தவெக இடையே விவாதம்.. பதில் கொடுத்த ஆதவ்

Chennai, Tamil Nadu:

TN Assembly Aadhav Arjuna: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து, முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், இன்று (ஜூன் 19) மேகதாது அணை தொடர்பாக முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்தார்.  தொடர்ந்து, இதுகுறித்து விவாதம் நடந்து வந்த நிலையில், திடீரென நேரலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவையில் சலசலப்புகள் ஏற்பட்டது. 

தவெக  - திமுக இடையே காரசார விவாதம்

அப்போது, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரத்தில் அவையின் மாண்பு மீறப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மரபுகள் மீறப்படவில்லை நாட்டு தேசிய கீதம் தமிழக மக்களால் என்றைக்கும் புறக்கணிக்கப்பட்டது கிடையாது.  

நமது தலைவர்கள் அண்ணா முதல்கொண்டு, காமராஜர் முதல்கொண்டு, கலைஞர் முதல்கொண்டு, புரட்சித்தலைவி அம்மா முதல்க்கொண்டு தமிழக மக்கள் எப்பொழுதும் தேசிய கீதத்திற்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் நாம் நமது மரியாதையை கொடுத்திருக்கிறோம்.

தேசிய கீதமா தமிழ்த்தாய் வாழ்த்தா என்று வரும்போது, முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தை இன்றைய ஆளுநர் முன்பு பாடவைத்த முதல்வர் எங்களது முதல்வர். தமிழ்நாட்டின் சுயமரியாதையை காப்பாற்ற உறுதியுடன் நின்று தமிழக சட்டமன்றத்தில்  ஆளுநர் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட  தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அதே சபையில் அதே ஆளுநர் முன் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 

மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெறணுமா? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க!

 

திமுக எம்எல்ஏக்க்கு ஆதவ் அர்ஜுனா பதில்

ஆளுநர் மரபை நாங்கள் மீறவில்லை டைவர்ட் செய்யாதீர்கள். அறிஞர் அண்ணாவின் திமுக கொள்கைகளை அரசியல் கருத்துக்களை நாங்கள் உறுதியாக பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். எங்களது தலைவரின் அரசியல் ஆசானான அறிஞர் அண்ணாவை மதுரை மாநாட்டில் டிக்லர் செய்தார். அரசியல் மாண்புகளை டிப்லமெர்சியாக எடுத்து வையுங்கள் மாநில கொள்கைகளில் நாங்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்போம்” என்றார்.

மேலும், திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின்  புதிய ஆளுநரின் அழுத்தத்திற்கு இந்த அரசு பணிந்து விட்டது என்றார். அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, "நாங்கள் எப்பொழுதும் எந்தெந்த அழுத்தத்திற்கும் பணிந்தது கிடையாது. உங்களது பழைய வரலாற்றை பேசினால் அவையின் மரபு மீறப்படும். அதனால் நாங்கள் அதை பேசவில்லை.  மாநில சுயாட்சிகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சட்டமன்றத்தில் அரசியலை உருவாக்காதீர்கள். நாங்கள் உறுதியாகவும் உண்மையாகவும் இருப்பதால் தான் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது” என்றார். 

மேலும் படிக்க: இளைஞர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை.. CM விஜய் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

 

கொளத்தூரில் என்ன நடந்தது என்று தெரியும்?

தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ ஆஸ்டீன், மீடியா கவர்ச்சியால் தவெக ஆட்சிக்கு வந்து விட்டது என்று கூற, பதிலளித்த செங்கோட்டையன், மீடியா மோத்தமும் திமுகவிற்கு வக்காளத்து வாங்கியதே தவிர, நாங்கள் மீடியாவை கையில் வைத்துக்கொண்டு வெற்றிபெறவில்லை என்றார். தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா பேசுகையில், மக்கள் கொடுத்த வெற்றியை provoke செய்யும் வகையில் பேசுகிரார்கள். அவைக்கு தவரான தகவல்களை திமுக சட்டமன்ற உப்பினர் பேசுகிரார்கள்.

திமுக ஆட்சியில் கடந்த மே மாதம் தூத்துக்குடியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியின் வழக்கை 36 மணி நேரமாக எடுத்து விசாரிக்கவில்லை. இதுகுறித்து அப்போதைய முதல்வர் வாய் திறக்கவே இல்லை. நீங்கள் பாலியல் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுத்தது போல் பேசுவது சரியா? ஆனால் நாங்கள் வந்த முப்பது நாட்களில் எங்களது முதல்வர் அதற்கான நடவடிக்கையை எடுத்தார். 

என்ன பேச வேண்டும், எப்பொழுது பேச வேண்டும் என்பது நீங்கள் முதல்வருக்கு சொல்லித் தர தேவையில்லை. அவருக்கு நன்றாக அது தெரியும். நாங்கள் இந்த அவையின் மாண்பை கடைப்பிடித்து பேசி வருகிறோம். கொளத்தூரில் என்ன நடந்தது என்று தெரியும்?   கொளத்தூரில் பேசியதால் என்ன தேர்தல் முடிவு வந்தது அனைவருக்கும் தெரியும் என்றார். இவ்வாறு அமைச்சர் ஆதவ அர்ஜுனா பேசியவுடன் திமுகவினருக்கும் தவெக'வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் சமாதானப்படுத்தி அவர்களை இருக்கையில் அமர வைத்தார்.

மேலும் படிக்க:  திமுக - அதிமுக கூட்டு! தவெகவுக்கு ஆதரவு ஏன்? பரபரப்பை கிளப்பிய சிபிஎம் சண்முகம்

 

0
0
Report

கோவை: எழுத, படிக்க தெரியுமா? ரூ.58,000 சம்பளம்.. தமிழக அரசின் சூப்பர் வேலை!

Coimbatore, Tamil Nadu:

Coimbatore District Job News: தமிழக அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. குறிப்பாக, மாவட்ட  வாரியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது,  கோவை, நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் துணை இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேலைவாய்ப்பு

கோவை, நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் துணை இயக்குநர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 17.06.2026 முதல் 09.07.2026 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் அலுவலகத்தில் ஒரு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க: நீட் மறுதேர்வு பயத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு.. ஷாக் சம்பவம்

கல்வித்தகுதி, வயது விவரம்

  • எழுத்தர் துணை இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • கணினி பற்றிய அடிப்படை அறிவு (Basic Computer Knowledge)
  • இந்த பணிக்கு குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • BC/BCM/MBC/DC பிரிவினர்  குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • SC/ST பிரிவினர் குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை

வாசித்தல் மற்றும் எழுதும் திறனின் அடிப்படையில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு குறித்த விவரங்கள் இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்படும் தகவல் அறிவிப்பு பலகையில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: கோவையில் 8 மணிநேர பவர்கட்... நாளை எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...?

பணியிடம் கோவை
பணி பதிவுரு எழுத்தர் 
காலிப் பணியிடம்  ஒன்று (1)
மாத சம்பளம்  ரூ.15,900 - ரூ.58,500
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி  நாள்  ஜூலை 9, 2026

நிபந்தனைகள் 

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரருக்கு 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வி ஆகிய இனங்களில் போதிய தகுதி இல்லாத விண்ணப்பங்கள். விண்ணப்பதாரர் கோவை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

பதிவுரு எழுத்தர்களுக்கான விண்ணப்பப் படிவம் கோவை, மண்டல நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்திலும் http://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் கோவை, நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 09.07.2026 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க; கைதியை தப்பிக்கவிட்ட போலீசார்... 2 பேர் கைது... 3 காவலர்கள் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

 

0
0
Report

அம்மா என்னால் முடியவில்லை...: அடி, உதை, CCTV கண்காணிப்பு, திருமணமாகி 47 நாட்களில் பெண் தற்கொலை

Badapur, Maharashtra:

Ambernath, Maharashtra: மகாராஷ்டிராவின் அம்பர்நாத் பகுதியில், திருமணமான 47 நாட்களிலேயே 26 வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை, உடல் ரீதியான வன்முறை மற்றும் சிசிடிவி (CCTV) மூலம் தொடர் கண்காணிப்பு போன்ற கொடுமைகளால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது கணவர் மற்றும் கணவர் வீட்டார் மீது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அம்பர்நாத் போலீசார் விசாரணை

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறையினர் அப்பெண்ணின் கணவர் நிதின் தில்கர், அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோரைக் கைது செய்து, முறையான குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு மாறிய சூழல்

விசாகா தில்கர் என்ற அப்பெண், கடந்த ஏப்ரல் 30 அன்று டாக்டர் நிதின் தில்கரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையிலான உறவு மிகவும் சுமூகமாகவே இருந்ததாகவும், ஆனால், விசாகா தனது கணவர் வீட்டிற்குச் சென்ற உடனேயே அங்குள்ள சூழல் மோசமடைந்ததாகவும் விசாகாவின் குடும்பத்தினரின் கூறுகிறார்கள்

விசுவரூபம் எடுத்த வரதட்சணை கொடுமை

திருமணத்தில் அளிக்கப்பட்ட பரிசுகள் மற்றும் சம்பிரதாய முறைப்படி வழங்கப்பட்ட பொருட்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், விசாகாவைத் தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வரதட்சணை கொடுமை என நேரடியாக இதை கூற முடியுமா என தெரியவில்லை என்று கூறும் விசாகா குடும்பத்தார், திருமணத்தில் அளிக்கப்பட்ட பொருட்கள் மீதான அதிருப்தியே அனைத்துக்கும் காரணம் எனவும் தெரிவிக்கின்றனர்.

தொடர் சிசிடிவி கேமரா கண்காணிப்பு

விசாகா மீது வரதட்சணை தொடர்பான அழுத்தம் விரைவாக அதிகரித்தது. தனது பெற்றோரிடமிருந்து தங்கமும் பணமும் கேட்டுப் பெறுமாறு விசாகா தொடர்ந்து வற்புறுத்தப்பட்டதாகவும், அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத போதெல்லாம் அவர் கடுமையான மிரட்டல்களுக்கு ஆளானதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | பாஜக பிரமுகர் கொடூர கொலை.. காருடன் தீ வைத்து எரிப்பு! என்ன நடந்தது?

துன்புறுத்தலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், கணவர் அவரைத் தொடர்ந்து கண்காணிக்கும் முறையை ஏற்பாடு செய்திருந்தார். விசாகாவின் அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்களை அவர் பொருத்தியிருந்தார். காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின்படி, அண்டை வீட்டார் அல்லது வெளியாட்களுடன் பேசுவது போன்ற சாதாரண விஷயங்களுக்காகக் கூட விசாகா கடுமையாகக் கேள்வி கேட்கப்பட்டார்; அத்துடன் மோசமான குற்றச்சாட்டுகள், தொடர் வாக்குவாதங்கள் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களால் அவர் தினம் தினம் வேதனையின் உச்சிக்கு சென்றார்.

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அருகில் இருந்த வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததற்காக விசாகா உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அம்மா என்னால் முடியவில்லை.....

தன் கணவர் வீட்டில் இருந்த நிலையை விசாகா தன் தாயிடம் விளக்கியுள்ளார். தன்னால் அந்த கண்காணிப்பையும், துன்புறுத்தலையும், பேராசையால் எழும் வரதட்சணை கோரிக்கைகளையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று அவர் தனது தாயிடம் கூறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவர் கூறியதை கேட்ட விசாகாவின் பெற்றோர், அவரை மீண்டும் தங்கள் வீட்டிற்கே அழைத்து வர எண்ணி இருந்ததாகவும், ஆனால் அதற்குள் விசாகா வேறு முடிவு எடுத்துவிட்டதாகவும் உறவினர்கள் விளக்குகிறார்கள்.

காவல்துறை விசாரணை

செவ்வாய்க்கிழமை அன்று, விசாகா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் சிவாஜி நகர் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் செயல்பாட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் இருப்பதை முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்திய அதிகாரிகள், கணவர் அப்பெண்ணின் நடமாட்டத்தைக் கடுமையாகக் கண்காணித்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இது வலுசேர்ப்பதாகக் குறிப்பிட்டனர். 

மேலும் படிக்க | கேரளாவை உலுக்கும் உறுப்பு தான மோசடி... 50 லட்சத்தில் கிட்னி சேல்: ED அதிரடி சோதனை

விசாகாவின் உறவினர்கள் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், விசாகாவின் கணவர் டாக்டர் நிதின் தில்கர், அவரது மாமியார் சாயா தில்கர் மற்றும் மைத்துனர் நினத் தில்கர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய மூவரும் புதன்கிழமையன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சம்பவங்களின் துல்லியமான காலவரிசையைத் தொகுத்தறியும் வகையில், புலனாய்வாளர்கள் தற்போது ஆதாரங்களைச் சேகரித்தல், கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தல் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்துயரச் சம்பவத்தின் அனைத்துக் கோணங்களும் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும், நடைபெற்று வரும் விசாரணையின் உறுதியான முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசை ஆசையாய் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர், திருமணம் முடிந்த 47 நாட்களில் அவரை பிணமாக கண்டதில் எப்படிப்பட்ட துன்பத்தை அடைந்திருப்பார்கள் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது. நாம் மண்ணைத் தோண்டி மண்டபம் கட்டலாம், விண்ணைத் தாண்டி வெற்றி காணலாம், ஆனால், நம் பெண்ணைக் காக்கத் தவறிய கேடுகெட்ட பாவிகளாகத் தான் இன்னும் நிற்கிறோம். வருடங்கள் பல ஓடிக்கொண்டே இருந்தாலும், பெண்ணுக்கு மட்டும் இன்னும் வரதட்சணை கொடுமையிலிருந்து விடிவுகாலம் பிறக்கவில்லை!!

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். 
மாநில உதவிமையம்: 104

மேலும் படிக்க | தாயின் காதலன் வெறிச்செயல்.... 7 வயது சிறுவனை காவு வாங்கிய கள்ளக்காதல், மீரட்டில் பயங்கரம்

0
0
Report
Advertisement

வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

Walajabad, Tamil Nadu:

Kancheepuram District: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே 30வயது மதிக்கதக்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜாபாத் அருகிலுள்ள கிராமத்தில் நடந்த சம்பவம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஓர் கிராமத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். தனது முக்கியமான தினசரி பணிகளுக்கே பிறர் உதவியை நாடி இருக்கும் அப்பெணின் தாய், தந்தை தினமும் மாடுகளை மேய்க்கச் செல்வது வழக்கம். அப்படி அவர்கள் சென்றபோது அதே பகுதியை சார்ந்த நபர் ஒருவர் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலாகிருஷ்ணன் என்ற அந்த நபருக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அவர் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தீப்பெட்டி கேட்பது போல் உள்ளே சென்று அவரிடம் பேச முயற்சியுள்ளார்‌.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெறணுமா? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க!

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு

அப்போது, வீட்டில் தாய், தந்தை இல்லாததை அறிந்து கொண்ட பாலாகிருஷ்ணன் மாற்றுத்திறனாளி பெண் என்று கூட பாராமல் அவர் வாயை மூடி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து அங்கிருந்து சென்றுள்ளான். பின்னர், வீட்டிற்கு வந்த தாய் மற்றும் தனது அண்ணன்களிடம்  அந்த பெண் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த நபரை பிடித்த பெண்ணின் குடும்பத்தார் அவரை அடித்துள்ளனர்.

Kanchipuram Sexual Assault

இதுக்குறித்து அறிந்த பொதுமக்களும் பெண்ணின் குடும்பத்தாருடன் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பிறகு காவல் உதவி எண்ணான 100க்கு அழைத்து நடந்த சம்பம் பற்றி தெரிவித்துள்ளனர். காவல்துறையிடம் ஊர் மக்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணும் தகவல் கொடுத்தார்.

மேலும் படிக்க | விடாமல் கொட்டும் கனமழை! சென்னையிலும் வெளுக்கப்போகுது.. வானிலை அப்டேட்

குற்றவாளியை கைது செய்த வாலாஜாபாத் போலீசார்

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் காவல் துறையினர் பாலகிருஷ்ணனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களும், தாங்களும் பெண் பிள்ளைகளுடன் வசித்து வருவதால் தங்களுக்கும் அந்த நபரால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், குற்றவாளி வெளியே வராது வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kanchipuram Sexual Assault

எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான இந்த குற்றச்செயல்கள், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல, நிற்காமல், குறையாமல் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட கொடுமைகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிப்பதே இதற்கான ஒரே தீர்வாக இருக்கக்கூடும். இன்று ஒரு குற்றவாளிக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனை நாளை குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு அச்சத்தை அளிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு 'சிங்கப் பெண்' படை அமைக்கப்பட்டது நல்ல விஷயம்தான். ஆனால், வீட்டுக்கு வீடு சிங்கம் காவல் காக்க முடியாது. தண்டனைகள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். நடவடிக்கை எடுக்குமா அரசு?

மேலும் படிக்க | தமிழக அரசில் வேலை.. 720 காலி பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?

0
0
Report

கேரளாவை உலுக்கும் உறுப்பு தான மோசடி... 50 லட்சத்தில் கிட்னி சேல்: ED அதிரடி சோதனை

Ayyampuzha, Kerala:

Kerala ED Raids: உடல் உறுப்பு தான முறைகேடுகளில் ஈடுபட்ட ஒரு மோசடி கும்பல் (racket) குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை (ஜூன் 18) அன்று கேரளா முழுவதும் அதிரடி சோதனைகளைத் தொடங்கியது. கோட்டயம், கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் வங்கி அதிகாரிகள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவி வருகின்றனர்.

கேரள மருத்துவமனைகளில் அமலாக்க இயக்குநரகம் சோதனை

கொச்சியில், ராஜகிரி மருத்துவமனை (ஆலுவா), மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனை (பல்லிமுக்கு), ஆஸ்டர் மெட்சிட்டி (சேரநல்லூர்) மற்றும் விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனை (மராடு) ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. இந்த நாசவேலை நெட்வொர்க்கின் முக்கிய முகவராகக் கருதப்படும் முகமது நஜீப்பின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

நஜீப் நடத்தி வந்த 'கல்லத்ராஸ் மெடிக்கல் டூரிசம் பிரைவேட் லிமிடெட்' (Kallatras Medical Tourism Private Limited) என்ற நிறுவனத்தை மையமாக வைத்து இந்த விசாரணை நடைபெறுகிறது. இந்த நிறுவனம் மருத்துவச் சுற்றுலா என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் உறுப்பு தான செயல்முறைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை ஏற்பாடு செய்வதற்காக, இடைத்தரகர்கள் மூலம் உறுப்பு வழங்குநர்கள், பெறுநர்கள் மற்றும் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டதாகவும், இதற்காகப் பெருந்தொகை வசூலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய ஆண்டுகளில், உறுப்பு தான மோசடி பற்றி கேரளா முழுவதும் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளின் (FIR) அடிப்படையில் அமலாக்கத் துறையின் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவமனைகள் மற்றும் முகவர்கள் உடந்தையாக இருக்க, இக்கும்பல் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய உறுப்பு கடத்தல் வலைப்பின்னலுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்டறிவதே இந்தச் சோதனைகளின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | தாயின் காதலன் வெறிச்செயல்.... 7 வயது சிறுவனை காவு வாங்கிய கள்ளக்காதல், மீரட்டில் பயங்கரம்

கேரளா சட்ட விரோத உறுப்பு தான மாஃபியா: பின்னணி என்ன?

கேரளாவில் நடந்து வரும் இந்த சட்டவிரோத உடல் உறுப்பு வியாபாரம் (Kerala Organ Trafficking Case) பற்றிய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையின் முடிவுகளை மையமாகக் கொண்டு அமலாக்க இயக்குநரகம் மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ED இப்போது 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.

உத்தரப் பிரதேசத்தில் கைதான மாஸ்டர் மைண்ட் முகமது நஜீப்

பல்வேறு மாவட்டங்களிலும், அநேகமாக மாநிலத்திற்கு வெளியேயும் செயல்பட்டதாகக் கூறப்படும் பரந்த உறுப்பு கடத்தல் வலைப்பின்னலின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் முகமது நஜீப்பை (53) கேரள காவல்துறை கைது செய்தது. காசர்கோடைச் சேர்ந்த நஜீப், பல மாத விசாரணைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார். ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக அவர் கால்நாட்டில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நஜீப்பின் மனைவி ரஷீதா உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுநீரக மார்கெட்: 5-10 லட்சத்துக்கு வாங்கி 20-50 லட்சத்துக்கு விற்பனை

நிதி நெருக்கடியில் உள்ள நபர்களைக் குறிவைத்து, சிறுநீரகங்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாக இக்கும்பல் ஆசை காட்டியதாகவும், பின்னர் போலியான ஆவணங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம் பெறுநர்களுக்கு 20 முதல் 50 லட்சம் ரூபாய்க்கு அவற்றை விற்றதாகவும் காவல்துறை குற்றம் சாட்டுகிறது.

மேலும் படிக்க | பெட்ரோல், டீசல் விலை குறையப்போகுது: உலக சந்தையில் கிடுகிடுவென சரியும் கச்சா எண்ணெய் ரேட்!!

திருவனந்தபுரத்தில் முதலில் அம்பலமான முறகேடுகள்

திருவனந்தபுரத்தில் உறுப்பு வழங்குநர் மற்றும் பெறுநர் விண்ணப்பங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கும்பலின் செயல்பாடு வெளிச்சத்திற்கு வந்தது. அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலியான முத்திரைகள், கையொப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். வடக்கேக்கராவைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசி, சிறுநீரக தானம் செய்ததற்காக ₹9.5 லட்சம் பெற்றதாகவும், ஆனால் பெறுநர் கிட்டத்தட்ட ₹20 லட்சம் செலுத்தியதாகவும் கூறப்படும் வழக்கு, இந்த வலையமைப்பை அம்பலப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது.

இந்தியாவின் கடுமையான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிமுறைகளைத் தவிர்ப்பதற்காக, நஜீபின் இந்தச் செயல்பாடு போலியான ஆதார் அட்டைகள், போலி பிரமாணப் பத்திரங்கள் மற்றும் கள்ளப் பரிந்துரைக் கடிதங்களை நம்பியிருந்ததாக காவல்துறை கூறுகிறது. சரிபார்ப்பு அழைப்புகளைத் திசைதிருப்புவதற்காக போலியான தொலைபேசி எண்களும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சிறப்புப் புலனாய்வுக் குழு

நஜீப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனை அளவிலான அனுமதிகள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் இடைத்தரகர்களின் பங்கு ஆகியவற்றை விசாரிக்க மாநில அளவிலான சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சோதனைகளில் ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் அளவு, இந்தக் கும்பல் கேரளா முழுவதும் சட்டப்பூர்வமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைமுறைகளில் ஊடுருவியிருக்கக்கூடும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க | 20 வயது காதலியை... கொன்ற லிவ்-இன் காதலன்... இன்ஸ்டாகிராமில் அறிமுகம் - நடந்தது என்ன?

0
0
Report

தாயின் காதலன் வெறிச்செயல்.... 7 வயது சிறுவனை காவு வாங்கிய கள்ளக்காதல், மீரட்டில் பயங்கரம்

Meerut, Uttar Pradesh:

மீரட்: உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், ஏழு வயது சிறுவன் அவனது தாயின் காதலனால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது தாய் மற்றும் அவரது காலதலனின் உறவுக்கு அந்தச் சிறுவன் தடையாக இருந்ததாலேயே அவன் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் சிறுவனின் குடும்பம் மட்டுல்லாமல், நாட்டு மக்களையே பீதியில் ஆழ்த்தியுள்ளது.

மீரட் கிரைம்: திடீரென காணாமல் போன அங்கத்

அங்கத் என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுவன், செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட அர்பித் பராஷர் என்பவர், சாக்லேட் தருவதாகக் கூறி அச்சிறுவனைத் தனது காருக்குள் வரவழைத்து அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவனைக் கொன்று கால்வாய் அருகே உள்ள வயல்வெளியில் உடலை வீசியதாகவும் கூறப்படுகிறது.

குடும்பத்தினர் அளித்த புகார்

வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனதால், குடும்பத்தினர் பதறி காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி, சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் கண்காணிப்புத் தரவுகளை ஆய்வு செய்தனர். அந்தக் காட்சிகளில் சிறுவன் ஒரு காரில் அழைத்துச் செல்லப்படுவது பதிவாகியிருந்தது. இது விசாரணையயை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது.

மேலும் படிக்க | 20 வயது காதலியை... கொன்ற லிவ்-இன் காதலன்... இன்ஸ்டாகிராமில் அறிமுகம் - நடந்தது என்ன?

விசாரணையை திசை திருப்ப முயன்ற குற்றவாளி

அர்பித் பராஷர் ஆரம்பத்தில் விசாரணையைத் திசைதிருப்ப முயன்றதாகவும், தனது வாக்குமூலங்களை அடிக்கடி மாற்றிக்கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், தான் சிறுவனை ஒரு கால்வாயில் வீசிவிட்டதாக அவர் கூறியதையடுத்து, காவல்துறையினரும் நீச்சல் வீரர்களும் அங்குத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், அங்குச் சிறுவன் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

தொடர் விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், உடலை வீசிய இடத்திற்குக் காவல்துறையினரை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கால்வாய்க்கு அருகிலுள்ள ஒரு வயல்வெளியிலிருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

விசாரணயில் வெளிவந்த பகீர் உண்மைகள்

குற்றத்தை ஒப்புக்கொண்ட அர்பித் பராஷரிடம் விசாரணை தீவிரமடைந்தது. விசாரணையின் போது, ​​தானும் சிறுவனின் தாய் குர்பிரீத் கவுரும் நெருக்கமான நிலையில் இருந்ததை அங்கத்வீர் பார்த்துவிட்டதாக அற்பித் கூறியதாக மவானா வட்ட அதிகாரி பங்கஜ் லவானியா தெரிவித்தார். சமூக அவப்பெயருக்கு அஞ்சி, அங்கத்தை கடத்திச் சென்று, பத்ரகாலி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து கொன்றதாகவும், பின்னர் உடலை புதர்களில் வீசியதாகவும் அவர் கூறினார். உடல் மீட்கப்பட்ட செய்தி கிடைத்ததும், அங்கத்வீரின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். குற்ற நடந்த இடத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் குழு முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாக காவல் அதிகாரி (CO) பங்கஜ் லவானியா தெரிவித்தார். கொலையில் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் 'வாகன்-ஆர்' (WagonR) காரும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வேலைக்காக சவுதி அரேபியா சென்ற கணவன்

பஹ்சுமாவைச் சேர்ந்த குர்சேவக் என்பவர் பிழைப்புக்காக சவுதி அரேபியா சென்றிருந்தார். அவர் இல்லாத நேரத்தில், அவரது மனைவி குர்பிரீத், அர்பித் பராஷர் என்பவருடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அர்பித் ஏற்கனவே திருமணமானவர். அங்கத்வீர் என்ற அப்பாவிக் குழந்தையின் கொலையில் தாய்க்கும் பங்கு இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவரது பங்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட அங்கத் வீரின் தாயார் குர்பிரீத் கவுர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஹ்சுமாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியதாக அந்த அதிகாரி விளக்கினார். அவர் தினமும் பேருந்தில் சென்று வந்தார். குற்றம் சாட்டப்பட்ட அர்பித் பராஷர், ஹாபூரில் உள்ள HDFC வங்கி கிளையில் பகுதி மேலாளராகப் (Area Manager) பணியாற்றி வந்தார். அவர்கள் தினமும் பேருந்தில் சந்தித்துக்கொண்டனர், தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர்; காலப்போக்கில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.

மேலும் படிக்க | "ஏன்னை விட்டுடு": பாலியல் வன்கொடுமை, வசியம்... IAF அதிகாரி மனைவியை சீரழித்த தோழன், நாக்பூரில் அதிர்ச்சி

மீரட் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அபிஜீத் குமார் சிங் கூறுகையில், கடத்தல் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஒரு சிறப்புக் காவல் குழு குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ததாகத் தெரிவித்தார். விசாரணையின்போது, ​​குற்றகாளி சிறுவனைத் தனது காரில் அழைத்துச் சென்று கொன்றதையும், பின்னர் உடலை அப்புறப்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார்.

அங்கத் (Angad) பஞ்சாபில் தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும், அங்குப் படித்து வந்ததாகவும், சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் மீரட்டிற்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: உண்மை தெரிந்த பெண்ணுக்கு அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

0
0
Report
Advertisement

சபாநாயகர் அறையில் முதல்வர் விஜய், திமுக, அதிமுக ஒன்றாகக் கூடியது ஏன்? பின்னணி விவரம்!

Chennai, Tamil Nadu:

சென்னை: தமிழ்நாடு 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தொடங்கியுள்ள சூழலில், அடுத்தகட்ட கூட்டத்தொடர் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் என்பதால், இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டத்தின் விவரங்கள், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நோக்கம் மற்றும் ஆளுநர் உரையின் விரிவான சிறப்பம்சங்கள் என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

மேலும் படிக்க - தமிழ்நாடு சட்டப்பேரவை : அரசு வேலை டூ சாதிவாரி கணக்கெடுப்பு வரை - ஆளுநர் அர்லேகர் உரை சிறப்பம்சங்கள்

சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுகுழு கூட்டம்

சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு (Business Advisory Committee) கூட்டம் தொடங்கியது.

முதலமைச்சர் பங்கேற்பு

இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரடியாகப் பங்கேற்றார்.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்

தமிழக வெற்றிக் கழக அரசுடன், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அலுவல் ஆய்வுகுழு கூட்டம் முக்கிய நோக்கம்

இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களை எத்தனை நாட்களுக்கு வைப்பது மற்றும் பட்ஜெட் அல்லது இதர முக்கிய மசோதாக்கள் எப்போது தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க - tamil nadu news live updates today : தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று, ஆளுநர் உரை முக்கிய அம்சங்கள், தமிழக வானிலை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

17வது சட்டப்பேரவை: ஆளுநர் உரையின் முக்கிய சிறப்பம்சங்கள்

முன்னதாக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் ஆற்றிய உரையில், புதிய அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வைகளை விரிவாகப் பட்டியலிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்..

1. அரசியல் மற்றும் நிர்வாக மாற்றம்

  • புதிய அரசியல் புரட்சி: 1967-ல் அண்ணா, 1977-ல் எம்.ஜி.ஆர் தலைமைகளில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது போல, 2026-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது.
  • பகிரப்பட்ட அதிகாரம்: தமிழ்நாட்டின் 74 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில், "பகிரப்பட்ட ஆட்சி மற்றும் பகிரப்பட்ட அதிகாரம்" என்ற புதிய கூட்டாட்சி முன்மாதிரியை இந்த அரசு உருவாக்கியுள்ளது.
  • நிர்வாக வழிகாட்டிகள்: தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளே இந்த அரசின் நிர்வாகத்திற்கு வழிகாட்டி.

2. மாநில உரிமைகள் மற்றும் நிதி கோரிக்கைகள்

  • மத்திய அரசிடம் வலியுறுத்தல்: மத்திய அரசுக்கு தமிழ்நாடு வழங்கும் வரிகளில் மாநிலத்திற்கு உரிய பங்கைப் பெற வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
  • சிறப்பு சட்டக் குழு: தமிழ்நாட்டிற்கு சட்டபூர்வமாக கிடைக்க வேண்டிய நிதி உரிமைகள் மற்றும் நிலுவைத் தொகைகளைப் பெறுவதற்காக சிறப்பு சட்டக் குழு ஒன்று அமைக்கப்படும்.
  • வெள்ளை அறிக்கை: கடந்த 5 ஆண்டுகால நிதி நிர்வாகத்தின் உண்மை நிலையை வெளிப்படையாக விளக்கும் வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.

3. சட்டம்-ஒழுங்கு, சமூக நீதி மற்றும் வேலைவாய்ப்பு

  • காலிப் பணியிடங்கள் நிரப்புதல்: உயர்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் மற்றும் பிற காலிப் பணியிடங்கள் தகுதி, திறமை அடிப்படையில், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் போர்க்கால அடிப்படையில் நிரப்பப்படும்.
  • சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு தனது சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை நிறைவு செய்த பிறகு, தமிழ்நாடு அரசு விரிவான சமூகநீதி ஆய்வை மேற்கொள்ளும்.
  • சிங்கப்பெண் அதிரடிப்படை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்தச் சிறப்பு அதிரடிப்படையின் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

4. போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கல்வி

  • மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு: கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 'சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை' அமைக்கப்படும். கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
  • தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு மாறான தேசிய கல்விக் கொள்கை (NEP-2020), மும்மொழித் திணிப்பு மற்றும் நீட் (NEET) தேர்வு முறையை இந்த அரசு உறுதியாக எதிர்க்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

5. வாழ்வாதார உரிமைகள்

  • காவிரி நதிநீர் உரிமை: கர்நாடக அரசின் புதிய அணை கட்டுமானத் திட்டங்களைத் தடுத்து, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை முழுமையாகப் பெற தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடரும்.
  • மீனவர்கள் பாதுகாப்பு: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்.

மேலும் படிக்க - திரையில் நாயகன்.. தரையில் வில்லனா? தவெக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக முழக்கம்

0
0
Report

மொபைல் சர்வீஸ் பயிற்சி... தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாடு - யார் யார் சேரலாம்?

Chennai, Tamil Nadu:

Mobile Repair and Service Training : தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான 'மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி' வழங்க உள்ளது.

சென்னையில் வரும் ஜூன் 23ஆம் தேதி ஜூன் 25 வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க | தமிழக அரசு எச்சரிக்கை: கல்வி உதவித்தொகையெல்லாம் பொய், இப்படி செய்தி வந்தா நம்பாதீங்க!

பயிற்சி நோக்கம்:

பயிற்சியில் பங்கெடுப்பவர்களுக்கு மொபைல் போன் ஹார்ட்வேர் மற்றும் Chip Level Service துறையில் தொழில்துறைத் தரநிலைக்கு ஏற்ப தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பயிற்சி முடிவில், பயிற்சியில் பங்கேற்றவர்கள் சுய வேலைவாய்ப்பு / சேவை மையம் / தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு தயாராக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாள் பயிற்சியில் ஒவ்வொரு நாளிலும் என்னென்ன விஷயங்களுக்கு பயிற்சி வழங்கப்டும் என்பதையும் தமிழ்நாடு அரசு அதன் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மொபைல் சர்வீஸ் பயிற்சி - நாள் 1

  • மொபைல் போன்களின் அடிப்படை அறிமுகம்
  • தொலைபேசிகளின் வகைகள்
  • உற்பத்தியாளர்கள் பற்றிய விளக்கம்
  • ஆண்ட்ராய்டு மற்றும் சிப்செட்
  • சார்ஜர்கள் மற்றும் பேட்டரிகளின் வகைகள் 
  • டிஸ்ப்ளே வகைகள் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள்
  • Ear Speaker, Loud Speaker, Microphone போன்ற கூறுகள் மற்றும் சார்ஜிங் இணைப்பகங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் நடைமுறைகள்.
  • FFC ஸ்ட்ரிப்ஸ், கேபிள்கள், சென்சார்கள் மற்றும் சார்ஜிங் போர்டுகள் தொடர்பான பழுதுபார்த்தல்.

மொபைல் சர்வீஸ் பயிற்சி - நாள் 2

  • Chip Level சர்வீசிங் பற்றிய அடிப்படை மற்றும் சுருக்கமான விளக்கம்
  • SMT கூறுகள், மின்தடை, மின் தேக்கி, டையோடு, IC ஆகியவற்றின் செயல்முறை விளக்கம்.
  • கூறுகளை அகற்றுதல், Soldering நுட்பங்கள் மற்றும் Multimeter மூலம் கூறுகளை கண்டறியும் பயிற்சி.
  • மொபைல் மதர்போர்டில் உள்ள மின்னழுத்தப் பிரிவுகள் - CPU, EMMC, Network, Battery, CC Board, Display, Battery Section.
  • மாணவர்களின் தனிப்பட்ட செயல்திறன் மேம்பாட்டுக்கான நடைமுறை பயிற்சி.
  • மின்னழுத்தம் (Voltage), மினோட்டம் (Current), Amps & Watts பற்றிய தெளிவான விளக்கம்.
  • மதர்போர்டில் Voltage-களை கண்டறியும் முறைகள் மற்றும் Dead Condition மொபைல்களை சரி செய்யும் நுட்பங்கள்.

மேலும் படிக்க | தவெக இதை செய்தால் பதவியிலிருந்தே விலகுகிறேன்! CM விஜய்க்கு தங்கம் தென்னரசு நேரடி சவால்..!

மொபைல் சர்வீஸ் பயிற்சி – நாள் 3

  • BQ, MediaTek, Qualcomm சார்ஜிங் Tracing மற்றும் Fixing நடைமுறைகள்.
  • LCD மற்றும் OLED Display பிரிவுகள், Backlight மற்றும் GFX Section பழுதுபார்த்தல். 
  • VREG Line, LDO Lines Tracing, Short Killer மூலம் மொபைல் சரி செய்யும் முறை. 
  • Primary & Secondary Power Section பழுதுபார்த்தல், 6 Amps மூலம் Port Repair. 
  • DC PSU Reading Fault Diagnosis.
  • Software Unlock கருவிகள், Network Section - PA மற்றும் WTR நேரடி கண்காணிப்பு மற்றும் சரிசெய்தல்.
  • FRP Unlock-க்கான நேரடி Unlocked நடைமுறை பயிற்சி.

யார் யார் பயிற்சியில் சேரலாம்?

  • மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.
  • பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
  • இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 
  • ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள், தொழில்முனைவோர்கள் கலந்துகொள்ளலாம்.
  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், சுயதொழில் ஆர்வலர்கள் தற்போதுள்ள மொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது, தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
  • மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். 
  • திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கைபேசி 8668100181 / 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 
  • தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600032.

மேலும் படிக்க | அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்.. பெண்களுக்கு CM விஜய்யின் முக்கிய அறிவிப்பு

0
0
Report

ஏமாற்றிய ரொனால்டோ... திணறிய போர்ச்சுகல்... மேஜிக் செய்த டிஆர் காங்கோ

Houston, Texas:

Portugal vs DR Congo, FIFA World Cup 2026 : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் K பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் போர்ச்சுகல் - டிஆர் காங்கோ அணிகள் இன்று ஹவுஸ்டன் மைதானத்தில் மோதின. இந்திய நேரப்படி இப்போட்டி ஜூன் 17ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தொடங்கியது.

போர்ச்சுகல் - டிஆர் காங்கோ அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் கூட அடிக்காமல் பெரும் ஏமாற்றத்தை அளித்தார், இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

0
0
Report
Advertisement

சென்னையில் ரயில் சேவை திடீர் பாதிப்பு... பயணிகள் கடும் பாதிப்பு - என்ன பிரச்னை?

Chennai, Tamil Nadu:

Chennai Ennore Train Service Affected : சென்னை எண்ணூர் அருகே புறநகர் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணூர் மேம்பாலம் அருகே ரயில்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார கோளாறு காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில்களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.  நீண்ட நேரமாக ரயில்கள் நிற்பதால் பயணிகள் கீழே இறங்கி, தண்டவாளம் வழியாக நடந்தே செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்களில் பயணிகள் சிக்கி உள்ளனர். Overhead Cable எனப்படும் ஓ.ஜி. மின்கம்பி கோளாறு காரணமாக ரயில் இயக்கத்தில் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எண்ணூர் பகுதியில் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ரயில் சேவை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

0
0
Report

அசுர ஆட்டத்தை காட்டிய இந்தியா... இதுவரை எந்தெந்த போட்டிகளில் 400+ ரன்களை அடித்துள்ளது?

PPINEWZ2d ago
Ardonamau, Uttar Pradesh:

Team India 400 ODI Score : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஓடிஐ போட்டி இன்று (ஜூன் 17) நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி மகத்தான சாதனையை படைத்திருக்கிறது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 402 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. கேப்டன் சுப்மான் கில் 110 பந்துகளில் 22 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 154 ரன்களையும்; விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 79 பந்துகளில் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 125 ரன்களையும் அடித்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் நங்கேயாலியா கரோட்டி 4 மற்றும் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை சரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடரை ஒளிபரப்பும் ஜீ.. எந்த சேனலில் பார்க்கலாம்? முழு அட்டவணை இதோ!

ஓடிஐயில் இந்திய அணி...

ஓடிஐ போட்டிகளை பொருத்தவரை இந்திய அணி எப்போதுமே சிறந்த அணியாகவே திகழும். இதுவரை இந்த பார்மட்டில் மட்டும் 1983 ஐசிசி உலகக் கோப்பை, 2011 ஐசிசி உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என நான்கு முறை ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வென்றிருக்கிறது.

இந்திய அணியின் 400+ ரன்கள் - முக்கிய புள்ளிகள்

  • அப்படியிருக்க, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 400 ரன்களை பதிவு செய்துள்ளது, முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. 
  • இதற்கு முன், ஓடிஐ அரங்கில் இந்திய அணி 7 முறை 400 ரன்களை கடந்துள்ளது. இந்நிலையில், 8வது முறையாக இந்திய அணி தற்போது 400 ரன்களை கடந்துள்ளது.
  • இந்திய அணி ஓடிஐ அரங்கை பொருத்தவரை, 2011ஆம் ஆண்டில் இந்தூர் நகரில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 418/5 ரன்களை அடித்தே, அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
  • இந்திய அணி 2007 ஐசிசி உலகக் கோப்பை தொடரில், போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் பெர்முடா அணிக்கு எதிரான போட்டியில்தான் 400 ரன்களை முதல்முறையாக கடந்தது. அந்த போட்டியில் 413/5 ஸ்கோரை இந்திய அணி அடித்தது.
  • இந்திய அணி 8 முறை 400 ரன்களுக்கு மேல் ஓடிஐயில் அடித்திருக்கும் நிலையில், அதில் 6 மைதானங்கள் இந்திய மைதானங்களில் அடிக்கப்பட்டது. பேட்டிங்கிற்கு ஏற்ற தட்டையான ஆடுகளம் மற்றும் குறைந்த நீளத்தில் இருக்கும் பவுண்டரிகளின் காரணமாக 400+ ரன்கள் குவிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
  • ஆடவர் ஓடிஐ போட்டிகளை பொருத்தவரை, இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணி இரண்டும் தலா 8 முறை 400+ ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சுப்மான் கில் படைத்த அதிவேக சாதனை... விராட் கோலி லிஸ்டிலியே இல்லை

இந்திய அணியின் 400+ ஸ்கோர்கள்

தரவரிசை  இந்திய ஸ்கோர் எதிரணி  மைதானம்  நாள்
1   418/5  மேற்கு இந்திய தீவுகள் இந்தூர், இந்தியா டிசம்பர் 8, 2011
414/7  இலங்கை  ராஜ்கோட், இந்தியா   டிசம்பர் 15, 2009
3   413/5  பெர்முடா போர்ட் ஆப் ஸ்பெயின், டிரினிடாட்   மார்ச் 19, 2007
4   410/4  நெதர்லாந்து   பெங்களூரு, இந்தியா    நவம்பர் 12, 2023
409/8  வங்கதேசம்  சாட்டோகிராம், வங்கதேசம்   டிசம்பர் 10, 2022
404/5   இலங்கை   கொல்கத்தா, இந்தியா   நவம்பர்  13, 2014
402/10  ஆப்கானிஸ்தான்   லக்னோ, இந்தியா  ஜூன் 17, 2026
401/3  தென்னாப்பிரிக்கா   குவாலியர், இந்தியா  பிப்ரவரி 24, 2010

மேலும் படிக்க | சண்டை போட்ட சூர்யவன்ஷி... ஜெர்ஸி பிடித்து இழுத்து பரபரப்பு - இலங்கையில் நடந்தது என்ன?

0
0
Report

சோபா மாடல்: உதயநிதி குற்றச்சாட்டுக்கு... தவெக கொடுத்த சரவெடி பதிலடி - இதுதான் முதல்முறை

Chennai, Tamil Nadu:

எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை சோஃபா மாடல் அரசு என குற்றஞ்சாட்டி வருகிறார். 

முதலமைச்சர் விஜய் கூட்டணி கட்சித் தலைவர்கள், அவரது அரசுக்கு ஆதரவு அளித்த சி.வி. சண்முகம் உள்ளிட்டோரை சந்திக்க சென்றபோது, அவர்களது இல்லத்திற்கு சோஃபாக்கள் கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அதை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை சோஃபா மாடல் என திமுக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தனர்.

மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை (ஜூன் 18) மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு லிஸ்ட்

அமைச்சர் அருண் ராஜ் X பதிவு

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினரின் குற்றச்சாட்டுக்கு முதல்முறையாக தவெக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் அவரது X தளத்தில், "தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே  ஊறித் திளைக்கும் 'sonஆதன'  சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலினே... அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க | தவெக இதைப் செய்தால் நான் பதவியிலிருந்தே விலகுகிறேன்!முதலமைச்சருக்கு தங்கம் தென்னரசு நேரடி சவால்..!

உதயநிதிக்கு பதிலடி

மேலும், நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... முதலமைச்சர் தலைமையில்  ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது என்றும் சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள்  பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  

அதேபோல், தமிழ்நாட்டில் மே 4ஆம் தேதி அன்று வாரிசுகளின் சிம்மானம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும் இனி தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழக அரசு எச்சரிக்கை: கல்வி உதவித்தொகையெல்லாம் பொய், இப்படி செய்தி வந்தா நம்பாதீங்க!

0
0
Report
Advertisement
Advertisement
Back to top