பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
தவெக எம்.எல்.ஏ-வை 'Ego Attack'செய்த மேயர் - குத்துவிளக்கு ஏற்றுவதில் வெடித்த மோதல்..!
Chennai, Tamil Nadu:MLA Pallavi and Mayor Priya Clash: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்ற பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றுவதில், மேயர் பிரியா மெழுகுவர்த்தியை தவெக எம்.எல்.ஏ-விடம் தர மறுத்து புறக்கணித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பொதுமக்களும், நெட்டிசன்களும் சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு விழா:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் - 4) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள உருதுப் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக மாநகராட்சி இணை ஆணையர் கற்பகம், மேயர் பிரியா, எம்.எல்.ஏ பல்லவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மேயர் பிரியா, அதனைத் தொடர்ந்து வகுப்பறையில் குத்துவிளக்கேற்றி நிகழ்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு
தவெக எம்.எல்.ஏ-வை புறக்கணித்த மேயர்:
இந்த நிகழ்ச்சியில் முதலில் குத்துவிளக்கேற்றிய மேயர் அதனைத் தொடர்ந்து பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி அவரிடம் இருந்து மெழுகுவர்த்தி வாங்க கை நீட்டியும் அவர் தராதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்லவியிடம் மெழுகுவர்த்தியை தராமல், அவருக்கு அடுத்ததாக நின்றுக் கொண்டிருந்த இணை ஆணையரிடம் வலுக்கட்டாயமாக மெழுகுவர்த்தியைக் கொடுத்து குத்துவிளக்கு ஏற்றவைத்தார். இதனால் அவமனாத்திற்குள்ளான அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் குறித்து மேயர் பிரியா மீது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
2-வது நிகழ்ச்சி:
பள்ளி வகுப்பறைக் கட்டிட திறப்பு விழாவில் தான் அவமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த வெளியேறிய எம்.எல்.ஏ அதன்பிறகு அடுத்த கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கும் மேயர் பிரியாவே ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிலையில், அடுத்ததாக குத்துவிளக்கையும் முதல் ஆளாக அவரே ஏற்றி வைத்தார்.
முதல் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட தவெக எம்.எல்.ஏக்கு அடுத்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றுமாறு மேயர் பிரியா அவரிடம் மெழுகுவர்த்தியை வழங்கியுள்ளார். ஆனால் முதல் நிகழ்ச்சியில் தான் புறக்கணிக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கை ஏற்றாமல், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து அவர் சென்றுவிட்டார்.
மேலும் படிக்க: ரூ.5,000 அபராதம்.. லைசன்ஸ் பெற ஜூன் 15 கடைசி நாள்.. சென்னை மாநகராட்சி அலர்ட்
எம்.எல்.ஏ பல்லவி செய்தியாளர்கள் சந்திப்பு:
பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் தான் புறக்கணிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிய அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம் தொகுதியில் இதுவரை எதுவும் முறையாக செய்யப்படவில்லை, கடந்த ஆட்சியில் அனைத்தையும் செய்வதாகவும், செய்துவிட்டதாகவும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள், இந்த முறை நாங்கள் களத்தில் பணியாற்ற இருக்கிறோம், தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்தையும் சீரான முறையில் செய்து தருவோம் என்று தெரிவித்தார்.
‘கடந்த ஆட்சியில் அதிகார திமிரில் இருந்த அவர்கள், இன்னமும் நாங்கள் தான் என்று ஆணவத்திலும் திமிரிலும்’ இருக்கின்றார்கள். இவர்களின் செயல்கள் மக்களுக்கு தெரியும். இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை, விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை என்று நாங்கள் இருக்கிறோம். எங்கள் தளபதியே அனைவரையும் அமைதியாக கையாள்கிறார், அதுபோல தான் நாங்களும் இருக்க வேண்டும், அவர்கள் ஆடுகிறார்கள் என்று நாங்களும் ஆடினால் அவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும், அதனால் தளபதி வழியிலேயே நாங்களும் பயணிப்போம் என்றும் கூறினார்.
மேயர் பிரியா விளக்கம்:
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பல்லவி பொது நிகழ்ச்சியில் புறக்கணிப்பட்டது குறித்து மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சிக்கு வந்து என்னுடன் சேர்ந்து ரிப்பன் வெட்டினார். அதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் மேயர் என்ற முறையில் தான் முதலில் குத்துவிளக்கு ஏற்றியதாகவும், நான் ஏற்றியவுடன் எண்ணிடம் இருந்து மெழுகுவர்த்தியை அவர் வாங்க முற்பட்ட போது, புரோட்டோகால்படி அருகில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான மாநகராட்சி இணை ஆணையர் கற்பகத்திடம் வழங்கியதாகவும், இந்த நிலையில் தான் அவர் தானாக வந்து மெழுகுவர்த்தி வாங்க கை நீட்டியதாகவும் தெரிவித்தார்.
புரோட்டோக்கால் விதிமுறைகள் அவர்களுக்கு தெரியாமல் ரியாக்ட் செய்கிறார்கள், பொது நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகளை அவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். அடுத்ததாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நிலையில், அதனை அவர் ஏற்க மறுத்தார் என்பதும், முந்தைய நிகழ்ச்சியில் நடைபெற்றதை மனதில் வைத்துக் கொண்டு அவர் இவ்வாறு நடந்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
நெட்டிசன்கள் கேள்வி:
இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நெட்டிசன்கள், “ஒரு பொது நிகழ்வில் மெழுகுவர்த்தியை வாங்கக் கை நீட்டும்போது கொடுப்பது தான் மரியாதை. கை நீட்டியவரிடம் கொடுக்க மறுத்து அடுத்தவரிடம் வலுக்கட்டாயமாக ஏற்றும்படி வற்புறுத்துவதுதான் மரியாதையா?
தேர்தல் முடிவுகள் வெளியாகியதிலிருந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெளியில் வராத பிரியா இப்போது வெளியில் வந்து கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என்றும், புரோட்டாக்கால் தெரியும் அவர்களுக்கும், சபை நாகரிகம் தெரியவில்லையா? என்று நெட்டிசன்கள் பிரியாவிடம் சமூக வலைத்தளங்களில் சரமாரியாக கேள்வியெழுப்பி வருகின்றனர்.
பாஜக தவெக ஒரே மாதிரி இருக்கிறதா? போட்டு உடைத்த சு.வெங்கடேசன் எம்.பி.. பரபரப்பு மேட்டர்
Madurai, Tamil Nadu:S. Venkatesan Mp On TVK: அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ரயில்வே துறை அதிகாரிகள் பொறியாளர்கள் மற்றும் மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடிக்கு புதிய ரயில் தடம்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ”மதுரை தூத்துக்குடிக்கு புதிய ரயில்வே தடம் 2600 கோடி மதிப்பீட்டில் அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி புதிய வழித்தடம் என்பது தூத்துக்குடி துறைமுகத்திற்கான முக்கியமானது. இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதற்கான நில எடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது. மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
375 கோடி ரூபாய் செலவில் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே நிலைய விரிவாக்க பணிகள் நடந்துவரும் நிலையில் 3ஆவது முறையாக ஆய்வு செய்துள்ளேன். இந்த பணி திட்டம் 2027 மார்ச் மாதத்திற்கு முடிவடையும். 50 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டது. மார்ச் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக அனைத்து பணிகளும் முடிந்துவடையும். 40 ஆண்டுகால எதிர்கால திட்டத்தை நோக்கி இந்த பணிகள் நடைபெறுகிறது. விமான நிலையத்துக்கு இணையாக மதுரை ரயில்வே நிலைய விரிவாக்க பணிகளில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் படிக்க: திமுக நாசமா போனதுக்கு காரணமே திமுககாரன் தான்... Ex மினிஸ்டர் மூர்த்தி தடாலடி பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், ”வந்தே மாதரம் அரசாணை ஒன்றிய அரசு செய்திருக்கக்கூடிய மகா பாதகமான செயல். ஒருவர் உதடு என்ன பாடல் பாட வேண்டும் என்பதை மோடியும் அமித்ஷாவும் தீர்மானிக்க முடியாது. எனவே வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்ற சுற்றறிக்கை என்பது அரசியல் சாசனம் சொல்லியிருக்க கூடிய மத சுதந்திரத்திற்கு எதிரானது. அதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. வந்தே மாதரம் பாடலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. சட்டமன்றத்தில் வந்தே மாதரம் பாடலை அனுமதிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்
CBSE தேர்வு முறைகேடு 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர் எவ்வளவு பெரிய கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அரங்கேறியிருக்கிறது. CBSE தேர்வு தாள் மதிப்பீட்டு பணிக்கு ஏற்கனவே பல தவறுகளை செய்த மோசடியான நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை கொடுக்க ஒன்றிய அரசு செய்திருக்கிற திட்டமிடல் சதி பயங்கரமாக உள்ளது அந்த நிறுவனம் வர வேண்டும் என்பதற்காக கருப்பு பட்டியல் விதியை மாற்றியிருக்கிறார்கள்.
ஒரு மோசடி நிறுவனத்தை இங்கே உள்ள அனுமதிப்பதற்காகவே விதிகள் அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் 27 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். பெட்ரோல், கேஸ் விலை உயர்வு வேலை வேலையின்மை இந்த பிரச்சனைகளை திசை திருப்புவதற்கு வந்தே மாதரம் பாடலை பாடுகிறாயா இல்லையா என வெறுப்பு அரசியலை மையப்படுத்தி மாற்றுவதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு எதிராக தொடர்ந்து எதிர் வினையாற்றுவோம்" என்று கூறினார்.
| பேட்டியின் முக்கிய அம்சங்கள் | விமர்சனங்கள் |
| சிபிஎஸ்இ தேர்வு | தேர்வுத்தாள் மதிப்பீட்டு ஒப்பந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தார் |
அமைச்சர் ராஜினாமா கோரிக்கை |
CBSE முறைகேட்டுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் |
| தவெக அரசின் செயல்பாடு | த.வெ.க. அரசு நல்லது செய்தால் வரவேற்போம்; தவறு செய்தால் விமர்சிப்போம் என்றார் |
| திமுகவின் குற்றச்சாட்டு | பா.ஜ.க.வும் த.வெ.க.வும் ஒரே மாதிரி என்பது திமுகவின் பார்வை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வை அல்ல |
பா.ஜ.கவும் த.வெகவும் ஒரே மாதிரி இருக்கிறது
புது அரசு எந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்பதில்லை என்ற திமுகவின் குற்றச்சாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன் எம்.பி, ”திமுகவின் விமர்சனத்திற்கு த.வெ.கவிடம் தான் பதில் கேட்க வேண்டும்/ இந்த அரசு புதிய அரசு பொறுப்பேற்றியிருக்கிறது கட்சி தொடங்கிய மூன்றாவது ஆண்டில் மக்கள் ஆதரவை பெற்று ஆட்சி பொறுப்பேற்று இருக்கிறார்கள். ஒரு உரிய கால அவகாசம் செயல்பாடுகளை கவனிக்க வேண்டியது இயற்கையான நியதி.
த.வெ.க அரசு நல்லது செய்தால் வரவேற்போம். நல்லது செய்யவில்லை என்றால் விமர்சிப்போம். அல்லாததை செய்தால் எதிர்ப்போம். எங்கள் எதிர்ப்பையும் மீறி அல்லாததை நிறைவேற்றினால் களத்தில் இறங்கி மக்களை திரட்டி போராடுவோம். பா.ஜ.கவும் த.வெகவும் ஒரே மாதிரி இருக்கிறது என்பது திமுகவின் பார்வை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்வை அல்ல.
பாஜக அல்லாத அரசுகளை பாதுகாப்பதும் அந்த மாநிலங்களில் பாஜகவின் வெறுப்பு தத்துவத்தை விதைக்க விடாமல் தடுப்பதும் என்பது அரசியல் நிலைப்பாடும். அந்த வகையில் தான் அந்த வகையில் தான் இந்த தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானது.
ஒவ்வொரு மாநிலத்திலும் பத்து சதவீதம் வாக்குகளை பெறுகிற வரை தான் பாஜக கொஞ்சமாக வளரும் பத்து சதவீத தாண்டி விட்டால் பன்மடங்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும் என பாஜகவின் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தியாவின் முழுக்க அதுதான் நடந்துள்ளது அந்த பார்முலா உடைக்கப்பட்டுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு. கடந்த நாடாளுமன்ற தேர்தல் 12.8 சதவீதம் பெற்ற பாஜக இந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு சதவீதம் வந்துள்ளது.
பாஜகவினுடைய அந்த வெறுப்பு அரசியலை மிகப்பெரிய அளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் புறம் தள்ளியிருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டு அரசியல் தத்துவார்த்த வளர்ச்சி மிக முக்கியமான பகுதி. இதனை வளர்த்தெடுக்க வேண்டும். இதனை வளர்த்தெடுக்குற அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும். ஆனால் சமரசமற்ற அணுகு முறையை கம்யூனிஸ்டுகள் இடதுசாரிகள் செய்து கொண்டே இருக்கிறோம்” என்றார்.
மாஸ் காட்டும் CM விஜய்... 8,200 பேருக்கு வேலை... தமிழ்நாடு அரசு - L&T ஒப்பந்தம்
Chennai, Tamil Nadu:Tamil Nadu Government L&T MoU : தமிழ்நாட்டில் பல்வேறு உறுதியளிக்கப்பட்ட தொழில் முதலீடுகளை மேற்கொள்ள L&T நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் விஜய் முன்னிலையில், இந்த தொழில்துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
L&T நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம் மூலம், ரூ.18 ஆயிரத்து 600 கோடியில் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த மூன்று திட்டங்கள் மூலம் 8200 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில்,
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 4, 2026
லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 18,600 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு… pic.twitter.com/3y9sod7EtI
மூன்று திட்டங்கள்
| மாவட்டம் | முதலீடு | திட்டத்தின் பெயர் | வேலைவாய்ப்பு |
| காஞ்சிபுரம் | ரூ.15,000 கோடி | தகவல் தரவு மைய விரிவாக்கம் | 500 பேருக்கு வேலை |
| கோயம்புத்தூர் | ரூ.2,500 கோடி | மின்னணுப் பொருள்கள், மின்னணு அமைப்புகள் உற்பத்தி திட்டம் | 2000 பேருக்கு வேலை |
| திருவள்ளூர் | ரூ.1,100 கோடி | காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம் | 5700 பேருக்கு வேலை |
ஓசூர் அட்கோ போலீஸ் அதிரடி: குடியிருப்பு பகுதிக்கே வந்த கஞ்சா, சிறுவர்கள் சிதறி ஓட்டம்
Avalapalli Hudco, Tamil Nadu:ஓசூர்: தமிழகத்தில் சமீப காலங்களில் போதை கலாச்சாரம் பூதாகரமாக அதிகரித்துள்ளது. இளைய தலைமுறை இதன் பிடியில் சிக்கி சீர்ழிந்து வரும் நிலை காணப்படுகிறது. கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள ஓசூர் மாநகரம், சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முக்கிய இலக்காக மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபாட்டில்கள், குட்கா மற்றும் கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் அண்டை மாநிலத்திலிருந்து தொடர்ந்து கடத்தி வரப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
ஓசூர் அட்கோ பகுதியில் நடந்த பரபரப்புச் சம்பவம்
ஓசூர் வசந்த்நகர் குடியிருப்பு பகுதியில், சமீபநாட்களாக கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாகவும், இதனால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகவும் அட்கோ காவல் நிலையத்திற்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஒரு வெட்டவெளியில், சில சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குழுவாக அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த கும்பலைச் சுற்றி வளைக்க முயன்றனர்.

மேலும் படிக்க | தென்மேற்கு பருவமழை.. ஆட்டத்தை காட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தலைதெறிக்க ஓடிய சிறுவர்கள்
போலீசாரைக் கண்டதும் சிறுவர்கள் அதிர்ச்சியடைந்தனர, அடுத்த நொடியே தலைதெறிக்க நாலாபுறமும் சிதறி ஓடினர். சந்து பொந்துகளுக்குள் நுழைந்து, போலீசாரை திசைதிருப்பி அவர்கள் தப்பியோடினர். இருப்பினும், துரத்திச் சென்ற போலீசார் அதில் ஒரு சிறுவனை மட்டும் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், முதல்முறை என்பதால் அவனது பெற்றோர வரவழைத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மற்ற சிறுவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ரகசிய வழிகள் வழியாக கஞ்சா கடத்தல்
இந்தச் சம்பவம் ஓசூரில் நிலவும் போதைப்பொருள் புழக்கத்தின் தீவிரத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ரகசிய வழிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஓசூருக்குள் கொண்டு வரப்படுவது அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | CM விஜய் தலைமையில் முதல்முறை... கூடுகிறது அமைச்சரவை - என்னென்ன அறிவிப்புகள் வரலாம்?
பொதுமக்களின் குமுறல்
"பெருநகரப் பகுதிகளில் மட்டுமன்றி, தற்போது சிறுநகரப் பகுதிகளிலேயே சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி சுற்றுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்குள் போலீசார் இதில் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்." என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
போலீசாரின் அதிரடி நடவடிக்கை
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள மாவட்ட காவல்துறை, ஓசூர் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
தீவிர ரோந்துப் பணி: வசந்த்நகர் மட்டுமல்லாது, நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவான இடங்களில் இரவு நேர ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரகசிய எண்கள்: போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் குறித்து பொதுமக்கள் பயமின்றி தகவல் தெரிவிக்க ஏதுவாக ரகசிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு முகாம்கள்: பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழக இளைஞர்கள போதை கலாச்சாரத்திலிருந்து மீட்டெடுப்பதே இப்போது பெற்றோர், காவல்துறை, அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கும் கஞ்சா கும்பலை வேரறுக்க, எல்லையோரச் சோதனைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க | கருணாநிதி புகைப்படம் அகற்றப்பட்டதா? பொங்கிய திமுக - தவெக அரசு கொடுத்த விளக்கம்
மருத்துவமனை ICU-வில் தீ விபத்து : 3 பேர் பலி, 20 பேர் மீட்பு - அதிகாலையில் நடந்தது என்ன?
Muzaffarpur, Bihar:Bihar Muzaffarpur Hospital Fire : பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை 3 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு தீ பரவியதால் பெரும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் 3 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன. பலரும் மீட்கப்பட்டுள்ளனர், பலரும் காயமடைந்துள்ளனர்.
VIDEO | Muzaffarpur, Bihar: DM Subrata Kumar Sen on fire at ICU of a private hospital, says, "A total of 15 patients were admitted at the facility, and we have so far obtained records for 13 of them. Some patients were also being treated in the CCU. They have now been shifted and… pic.twitter.com/I0c8HYOsMO
— Press Trust of India (@PTI_News) June 4, 2026
முசாபர்பூர் நகரில் உள்ள பிரசாத் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என மாவட்ட ஆட்சியர் சுப்ரத் குமார் சென் தெரிவித்துள்ளார். ஆனால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கவில்லை.
கட்டடத்தின் உள்ளே தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து, கரும்புகை மருத்துவமனைக்குள் பரவியது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. அவசரநிலை குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, நோயாளிகளை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட தொடங்கினர்.
தீ விபத்துக்கான காரணம்
மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட மின்கசிவு காரணம் என முதற்கட்ட தகவல்களின் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இது உறுதிசெய்யப்படவில்லை. 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் தீ விபத்தின் காரணமாக காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனை கட்டடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மீட்கப்பட்ட நோயாளிகள் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதிகாரிகள் அவர்களின் உடல்நிலை மற்றும் அவர்களின் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வருகிறது. தலைமை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மருத்துவ உதவிகளை மேற்பார்வையிடுகின்றனர்.
15 நோயாளிகள் அனுமதி
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுப்ரத் குமார் சென் அளித்த பேட்டியில், "அந்த மருத்துவமனையில் மொத்தம் 15 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேரின் மருத்துவப் பதிவுகளை நாங்கள் இதுவரை பெற்றிருக்கிறோம். சில நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (CCU) சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவர்கள் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் நாங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு வரும் ஒவ்வொரு தகவலையும் நாங்கள் சரிபார்த்து வருகிறோம்.
3 பேர் பலி
தற்போதைய நிலவரப்படி, மூன்று பேர் உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. நாங்கள் உடல்களை கண்டோம். மேலும் தலைமை மருத்துவரும் இந்த மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரத்யேக விசாரணைக் குழு
இது மிகவும் துயரமான சம்பவம். முழுமையான விசாரணை நடத்துவதே எங்களின் முன்னுரிமையாக இருக்கும். இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை ஆராய ஒரு பிரத்யேகக் குழு அமைக்கப்படும். அனைத்து விதங்களிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்படும். முதற்கட்டமாக, இந்தச் சம்பவம் மின்கசிவால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், விரிவான விசாரணைக்குப் பிறகே சரியான காரணத்தைக் கண்டறிய முடியும்" என தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பு... மாணவர்களுக்கு ஷாக் - திடீரென TC வாங்க சொன்ன அரசு உதவிபெறும் பள்ளி!
Kanniyakumari, Tamil Nadu:Kanniyakumari School Close : கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள படந்தாலுமூட்டில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வந்தனர்.
இந்த பள்ளியில் நிர்வாக தரப்பில் வழக்கு நடந்து வருகிறது. அதேநேரத்தில், தொடர்ச்சியாக பள்ளிக்கு மாணவர் சேர்க்கையும் குறைந்ததுகொண்டே வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 13 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து இந்த பள்ளியில் பணியாற்றும் 13 ஆசிரியர்களுக்கும் மாற்று பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பள்ளி மூடப்படுகிறது... மாணவர்கள் கலக்கம்...
ஆனால் இதுகுறித்து தெரியாமல் இந்த பள்ளியில் பயின்று மாணவர்கள் நாளை (ஜூன் 4) பள்ளி திறப்புக்கு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மாணவர்களுக்கு பள்ளி தரப்பில் தங்களுடைய மாற்றுச் சான்றிதழை வாங்கிச் செல்லும்படி நேற்று (ஜூன் 2) திடீரென அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களும், பெற்றோர்களும் இன்று (ஜூன் 3) பள்ளிக்கு வந்து என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினர். மேலும், பள்ளி நிர்வாகம் தரப்பில் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு வேறு பள்ளிகளுக்குச் செல்லுங்கள் என இறுதி நேரத்தில் தெரிவித்தனர். இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த கலக்கத்துடன் அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல்
திகைத்து நின்றனர்.
மாணவர்களுக்கு வரும் சிக்கல்
மேலும் இப்பள்ளியில் பல மாணவர்கள் மலையாள மொழி பயின்று வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டத்தில் தற்போது மலையாள மொழி பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக குறைந்துள்ளது. பல வருடங்களாக படித்த பள்ளியில் திடீரென மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியதால் மாணவர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர், தங்களின் நண்பர்களை பிரிவது உள்ளிட்ட சில சிக்கல்களும் அவர்களுக்கு எழுந்துள்ளன.
காரணத்தைச் சொல்லாத பள்ளி நிர்வாகம்
இதுகுறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவி வைஷ்ணவி கூறுகையில், "நான் டி.சி.கே பள்ளியில் படித்து வருகிறேன். நான் ஆறாம் வகுப்பில் இருந்து இங்குதான் படிக்கிறேன். நாளைக்கு பள்ளி திறக்கப்பட இருக்கிறது. ஒரு நாள் முன்னாடி எங்களை ஆசிரியர்கள் அழைத்து... பள்ளி மூடப்போகிறது, வந்து மாற்றுச் சான்றிதழ் (TC) வாங்க வேண்டும் என சொன்னார்கள். உடனே நானும், பெற்றோரும் பள்ளிக்கு வந்துள்ளோம்.
இங்க வந்து என்ன காரணம் என்று கேட்டால், அவர்கள் சொல்லவில்லை. 'டி.சி., வாங்கிட்டு போங்க, ஸ்கூல அடைக்கப் போறாங்க' என சொல்கிறார்கள். என்ன காரணம் என்று கேட்டாலும் சொல்லவில்லை, நாங்கள் எல்லோரும் வழிதெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறோம்.
பெற்றோரும் வந்து கேட்டார்கள், சொல்லவில்லை. ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் இனி எங்கே போவது என்று கூட தெரியவில்லை. முன்னாடியே சொல்லியிருந்தால் கூட எங்கேயாவது, டி.சி வாங்கிட்டு போகலாம். ஆனா, ஒரு நாள் முன்னாடி தான் வரவழைத்து சொல்கிறார்கள். டி.சி வாங்கணும் என்று... இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை" என தனது குழப்பத்தை விளக்கினார்.
மாணவர்களுக்கு மன அழுத்தம் வரலாம்...
மேலும் இங்கு பயிலும் மாணவியின் தாய் பிரீதா, "என் மகள் இங்கு 12ஆம் வகுப்பு படிக்கிறாள். இப்போது உடனே இப்படி சொன்னால் நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதுதான் ஒரு முக்கிய விஷயம். நாளைக்கு ஸ்கூல் ஓப்பனிங் டே. ஆனால், திடீர்னு சொல்கிறார்கள்.
எங்களுக்கு இதேபோல ஒரு நல்ல ஸ்கூல் எங்கு கிடைக்கும்? ஏனென்றால், இப்போது இவர்கள் இங்கு பழகிவிட்டார்கள், நன்றாக பழகிவிட்டார்கள். இனி திடீரென மாற்ற வேண்டும் என சொல்லும்போது மாணவர்களுக்கு மனரீதியாக ரொம்ப மன அழுத்தம் (Depression) ஆகும். ஏனென்றால், அவர்கள் எவ்வளவு குழந்தைகள் குறைவாக இருந்தாலும், அவர்களோட ஒரு ஒருமைப்பாடு, பழக்கம் எல்லாமே இந்த ஸ்கூலுக்கு வந்த பிறகு தான்.
ஆனா, திடீர்னு போகும்போது அந்த கஷ்டம் குழந்தைகளை ரொம்ப பாதிக்கும். எங்களுக்கு இதேபோல ஒரு நல்ல ஸ்கூலும் கூட அவர்களே பார்த்துச் சொன்னால், அது நல்ல ஒரு உதவியா இருக்கும்" என்றார்.
பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள்
மொத்தத்தில் பள்ளி கல்வித்துறையின் இந்த செயல்பாடு மாணவர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே, இதுபோன்று கல்வி பயிலும் மாணவர்களிடம் பொறுப்பெற்ற முறையில் கல்வித்துறை செயல்படக்கூடாது என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | 3 நாட்களில் 12 மாநிலங்களா? இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணம் - முழு விவரங்கள் இதோ.!
பற்றி எரிந்த ஹோட்டல்... டெல்லியில் 20 பேர் பலி... பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
New Delhi, Delhi:Delhi Restaurant Fire Accident : டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெற்கு டெல்லியின் ஹவுஸ் பகுதியில் இயங்கும் ராணி லெமன் கிரீன் ரெஸ்டாரண்ட் என்ற பல அடுக்குகள் கொண்ட உணவகத்தின் அடித்தளத்தில் இன்று காலை 8.50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதைத் தொடர்ந்தே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
#WATCH | Delhi | Death toll rises to 10 in Malviya Nagar restaurant fire incident, say Delhi Police.
— ANI (@ANI) June 3, 2026
Visuals from the site pic.twitter.com/sfrzsMzJIm
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கிரிவலப் பாதையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - காதலன் மற்றும் நண்பர்களின் அநாகரிக செயல்.!
Tiruvannamalai, Tamil Nadu:Tiruvannamalai Women assault News: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் மேற்கொண்டுவிட்டு காதலனை சந்திக்கச் சென்ற இளம்பெண்ணுக்கு காதலன் உட்பட அவரது நண்பர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். பட்டப்பகலில் காதலனை நம்பிச் சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த இந்த கொடுமை திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை சுற்றி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு செல்கின்றனர். கார்த்திக்கை தீபத் திருநாளன்று பல லட்சக்கணக்கிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து கிரிவலம் மேற்கொண்டு தீப தரிசனத்தை பார்த்துவிட்டுச் செல்வர்.
மேலும் படிக்க: எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு...நடந்தது என்ன?
காதலனை சந்தித்த இளம்பெண்:
அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டம், கிரிவலப் பாதைக்கு அருகாமை கிராமமான வேல்நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் தனியாக திருவண்ணாமலைக்கு கடந்த மே 31-ம் தேதி கிரிவலம் மேற்கொள்வதற்காக வருகை புரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கிரிவலம் முடித்துவிட்டு தனது காதலனை சந்திப்பதற்காக அவரை போன் செய்து வரவழைத்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணை அவரது காதலன் அடி அண்ணாமலை ஏரிக்கரை பகுதிக்கு வரச்சொல்லியுள்ளார். அவர் சொன்ன பகுதிக்கு தனியாக சென்ற அந்த பெண் நீண்ட நேரமாக காத்திருந்தார். அதன்பிறகு ஏரிக்கரை பகுதிக்கு வந்த அந்த பெண்ணின் காதலன் அவரை சந்தித்து பேசியுள்ளார்.
காதலிக்கு பாலியல் தொல்லை:
காதலனை சந்தித்து பேசிக் கொண்டிருந்த வேளையில் அவரது நண்பர்கள் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனை தனது காதலனிடம் கூறவே அவரும் அதே போல அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் காதலனிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.
மேலும் படிக்க: த்விஷா சர்மா வழக்கு: கணவரின் முன்னாள் காதலி மீது திரும்பிய CBI கவனம்
அதற்கு அவர் கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று கூறியதாக கூறப்படுகிறது. பாலியல் சீண்டைலில் ஈடுபட்டதுடன், அந்த இளம்பெண் காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்கக் கம்மலை பறித்துக் கொண்டு அங்கிருந்து காதலன் மற்றும் அவரது நண்பர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
போலீஸில் புகார்:
காதலனை நம்பி சந்திக்க போன இடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி போலீஸில் கூறிய அந்த பெண், தன்னிடம் இருந்த தங்க கம்மலையும் பறித்துவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை செய்ததில், தான் திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு அருகாமையில் இருக்கும் வேல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், தற்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை தினம் பௌர்ணமி என்பதால் கிரிவலம் மேற்கொண்டுவிட்டு தன்னுடைய காதலனை சந்தித்துவிட்டு செல்லலாம் என்று வந்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரான ஆடையூர் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு கூட்டாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரையும் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய் அண்ணாச்சி தேர்தல் அறிக்கை என்னாச்சு? விருத்தாசலத்தில் விவசாயிகள் போராட்டம்
Virudhachalam, Tamil Nadu:Virudhachalam: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, கடலூர் மாவட்ட விருத்தாசலத்தில் விவசாயிகள் நடத்திய திடீர் போராட்டமும், கோட்டாட்சியர் அலுவலக முற்றுகையும் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் பின்னணி என்ன? விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன? என்பது குறித்த முழுமையான விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலக முற்றுகை: பின்னணி என்ன?
கடலூர் மாவட்ட பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக, விவசாயிகள் தங்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பதற்காக விருத்தாசலம் கோட்டாட்சியர் (RDO) அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். அவர்களுடைய முதன்மை கோரிக்கை: "தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்தையும் உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என்பதுதான்.
அரசியல் கட்சி ஒன்றின் தேர்தல் அறிக்கையை முன்வைத்து, விவசாயிகள் அரசு நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட வந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரம், விருத்தாசலம் - கடலூர் முக்கிய சாலையில் சாலை மறியல்
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் வந்த விவசாயிகளுக்கு அங்கு ஏமாற்றமே மிஞ்சியது. மனுவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய அதிகாரிகள் யாரும் அந்த சமயத்தில் அலுவலகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த விவசாயிகள், கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக உள்ள விருத்தாசலம் - கடலூர் முக்கிய சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுரோட்டில் விவசாயிகள் திரண்டதால், அந்த வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
"விஜய் அண்ணாச்சி தேர்தல் அறிக்கை என்னாச்சு?" : அதிரடி முழக்கங்கள்
சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், தமிழக அரசுக்கு எதிராகவும் தங்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், "விஜய் அண்ணாச்சி.. விஜய் அண்ணாச்சி.. தேர்தல் அறிக்கை என்னாச்சு?" என்றும், "ஏமாற்றாதே.. ஏமாற்றாதே.. விவசாயிகளை ஏமாற்றாதே!" என்றும் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவானது.
கட்சியின் கொள்கைகளும் அறிவிப்புகளும் தங்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் என நம்பியே இந்த மனுவை அளிக்க வந்ததாகவும், ஆனால், அதை பெற்றுக்கொள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் கூட இல்லாதது பெரும் மன உளைச்சலை அளித்ததாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் தலையீடு
திடீர் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமானதை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கினர். போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் மூலம் போலீசார் விவசாயிகளை சமாதானப் படுத்த முயன்றனர்.
மேலும் படிக்க | தேனியில் விவசாயிகள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்! ஏன் தெரியுமா?
கடலூர் - விருத்தாசலம் சாலையில் சீரான போக்குவரத்து
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் விவசாயிகளை நேரில் அழைத்துச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுவை அளிக்க உரிய ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து கொடுத்தனர். அதிகாரிகளிடம் மனு ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். அதன் பின்னரே கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து சீரானது.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பல வித வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. தேர்தல் முடிந்ததும் அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளை கட்சிகளும் மறந்துவிடுகின்றன, மக்களும் மறந்துவிடுகிறார்கள். ஆனால், இப்போது காலம் மாறி விட்டது. தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதற்கும், தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக விவசாயிகள் எந்த அளவுக்குக் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கும் இந்த விருத்தாசலம் சம்பவமே ஒரு மிகச்சிறந்த உதாரணமாக அமைகிறது.
தஞ்சாவூர்: அதிமுக பிளவால் நேர்ந்த கொடூரம்: காட்டுப்பகுதியில் தொண்டன் தற்கொலை, ஓடோடி வந்த இபிஎஸ்
Thiruvidaimaruthur, Tamil Nadu:Thanjavur News: அதிமுகவின் தேர்தல் தோல்வி மற்றும் உட்கட்சிப் பிளவால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அதிமுக வர்த்தக அணி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி
மரணமடைந்த தொண்டரின் இறுதி ஆசையை ஏற்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியது அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பனந்தாள் அதிமுக வர்த்தக அணி நிர்வாகி மகேந்திரன் யார்?
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). இவர் அதிமுகவின் தீவிர விசுவாசி. திருப்பனந்தாள் பகுதி அதிமுக வர்த்தக அணியின் பொறுப்பாளராகவும் இவர் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.
கட்சியின் மீது அலாதி பற்று கொண்ட மகேந்திரன், கடந்த சில தேர்தல்களில் அதிமுக சந்தித்த தொடர் தோல்விகள் மற்றும் அதற்குப் பின் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவுகள், தலைவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளால் கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்துள்ளார்.
முகநூலில் உருக்கமான பதிவிட்ட மகேந்திரன்
இந்நிலையில், நேற்று மாலை மகேந்திரன் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் மிகவும் உருக்கமான, கண்ணீரை வரவழைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
"அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும். கட்சியின் தோல்விகளும், பிளவுகளும் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், நான் மீண்டும் அதிமுகவின் எளிய தொண்டனாகவே பிறக்க வேண்டும். என்னுடைய இந்த முடிவிற்குப் பிறகு, எனது உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும்."
இந்த அதிர்ச்சியூட்டும் பதிவைப் பார்த்த அவரது நண்பர்களும், உறவினர்களும் பதறியடித்துக்கொண்டு மகேந்திரனைப் பல்வேறு இடங்களில் தேடத் தொடங்கினர். அவரது செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றும் பலனளிக்கவில்லை.
பாலூர் அருகே நேர்ந்த கொடூரம்
உறவினர்கள் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த நிலையில், திருப்பனந்தாள் அருகே உள்ள பாலூர் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் மனித உடல் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், அங்கு எரிந்த நிலையில் இருந்த உடலை மீட்டனர். பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது காணாமல் போன அதிமுக பிரமுகர் மகேந்திரன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க | தேனியில் விவசாயிகள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்! ஏன் தெரியுமா?
காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக (Post-mortem) திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் குவிந்த அதிமுகவினர்
மகேந்திரனின் தற்கொலைச் செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாரதி மோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கினர். இதனால் மருத்துவமனைப் பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் சூழ்ந்தது.
நேரில் சென்று இபிஎஸ் அஞ்சலி
இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் கவனத்திற்குத் கொண்டு செல்லப்பட்டது. செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த எடப்பாடி பழனிச்சாமி, உடனடியாகத் தனது பயணத் திட்டங்களை மாற்றிக்கொண்டு இன்று திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த தற்கொலை செய்து கொண்ட தொண்டர் மகேந்திரனின் உடலுக்கு, அவரது இறுதி ஆசைப்படியே மலர்வளையம் வைத்து கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். மேலும், மகேந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

கட்சிக்காக தொண்டன் எடுத்த முடிவும் அந்த தொண்டனின் ஆசையை ஏற்று கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய சம்பவமும் திருப்பனந்தாள் பகுதியில் இருந்த பொதுமக்களையும், கட்சிப் பிரமுகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அரசியல் தலைவர்களின் வேண்டுகோள்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிமுக தலைமை மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். "அரசியலில் வெற்றிகளும், தோல்விகளும், சோதனைகளும் சகஜமானவை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் இது. எனவே, தொண்டர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்ற தீவிரமான முடிவுகளை எடுக்கக் கூடாது. உங்கள் உயிர் உங்கள் குடும்பத்திற்கும், இந்த இயக்கத்திற்கும் மிகவும் தேவையானது" என்று தலைவர்கள் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொண்டரின் இந்த விபரீத முடிவு திருப்பனந்தாள் மற்றும் ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டத்திலும் இன்றும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. மனதை உலுக்கும் இந்தச் சம்பவம் அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
அரசியல் தோல்விகளோ, உட்கட்சிப் பூசல்களோ தற்காலிகமானவை. எந்த வித பிரச்சனைக்கும் விலைமதிப்பற்ற மனித உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. உங்களையோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களையோ ஏதேனும் மன உளைச்சல் அல்லது தற்கொலை எண்ணங்கள் பாதித்தால், தயவுசெய்து உடனடியாக மாநில அரசின் இலவச உதவி எண்களை (Sneha Helpline - 044-24640050 / மாநில சுகாதாரத் துறை உதவி எண் - 104) தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மேலும் படிக்க | அண்ணாமலை போடும் புது கணக்கு.. புதிய கட்சி தொடங்கவில்லை! பிளானே வேற
CSK, MI சாதனையை சமன் செய்த RCB... ஆரஞ்சு கேப், பர்பிள் கேப், MVP பரிசு யார் யாருக்கு?
Ahmedabad, Gujarat:IPL 2026 RCB Won 2nd Championship : ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை தக்கவைத்துள்ளது. 17 ஆண்டுகளாக கோப்பைக்காக தவம் இருந்த ஆர்சிபி அணி, ரஜத் பட்டிதர் தலைமையில் 2025, 2026 என தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வென்றுள்ளது.
ஆர்சிபி சமன்செய்த சாதனை
இதற்கு முன் 2010, 2011 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ்; 2019, 2020 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. அதன் வரிசையில் ஆர்சிபி அணியும் தற்போது இணைந்துள்ளது. குறிப்பாக, தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் வரிசையில் ரஜத் பட்டிதார் இணைந்திருக்கிறார் எனலாம்.
Finishing off i
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
And it's none other than K
Scorecardhttps://t.co/Yz6K3q6w0X#TATAIPL | #Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/FZNGQ26gBs
இன்று (மே 31) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 155 ரன்களையே அடித்தது. வாஷிங்டன் சுந்தர் மட்டுமே போராடி 37 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். ரஷிக் சலா 3 விக்கெட், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட் 2 விக்கெட், குர்னால் பாண்டியா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பைனலின் ஆட்டநாயகன் விராட் கோலி
அடுத்து விளையாடிய ஆர்சிபிக்கு விராட் கோலி கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். அவர் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர் உடன் 75 ரன்களை குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் 178.57 ஆகும். வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 32 ரன்களை அடித்ததும் ஆர்சிபி வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது. இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார். அதிக பவுண்டரி, அதிக சிக்ஸர்களையும் அவரே அடித்திருந்தார். அதிக டாட் பந்துகளை புவனேஷ்வர் குமார் வீழ்த்தியிருந்தார்.
இறுதிப்போட்டி நிறைவடைந்திருக்கும் சூழலில், ஐபிஎல் 2026 தொடரில் முக்கிய விருதுகளை வென்ற வீரர்கள் விவரம் இதோ:
வளர்ந்து வரும் வீரர் (Emerging Player of 2026): வைபவ் சூர்யவன்ஷி - ரூ.10 லட்சம்
அதிக ஸ்ட்ரைக் ரேட் பெற்ற வீரர் (Super Striker of 2026) : வைபவ் சூர்யவன்ஷி - ஸ்ட்ரைக் ரேட்: 237.30 - டாடா கார்
அதிக சிக்ஸர் அடித்த வீரர் (Super Sixes of 2026): வைபவ் சூர்யவன்ஷி - 72 சிக்ஸர்கள் - ரூ.10 லட்சம்
அதிக சிக்ஸர் அடித்த வீரர் (Super Sixes of 2026): சாய் சுதர்சன் - 75 பவுண்டரிகள் - ரூ.10 லட்சம்
அதிக டாட் பால்கள் (Most Dot Ball bowler of 2026): முகமது சிராஜ் - 172 டாட் பந்துகள் - ரூ.10 லட்சம்
சிறந்த கேட்ச் பிடித்த வீரர் (Catch of 2026): மனீஷ் பாண்டே - ரூ.10 லட்சம்
நன்நடத்தை விருது (Fairplay Award of 2026): பஞ்சாப் கிங்ஸ்
அதிக விக்கெட் வீழ்த்தியவர் (Purple Cap of 2026): ககிசோ ரபாடா - 29 விக்கெட்டுகள் - ரூ.10 லட்சம்
அதிக ரன்கள் அடித்தவர் (Orange Cap of 2026): வைபவ் சூர்யவன்ஷி - 776 ரன்கள் - ரூ.10 லட்சம்
மிகவும் மதிப்பு பெற்ற வீரர் (Most Valuable Player of 2026): வைபவ் சூர்யவன்ஷி - ரூ.15 லட்சம்
ஆடுகளம் மைதானத்திற்கான விருதுகள்
சிறந்த ஆடுகளம் மற்று் மைதானம் (5 போட்டிகளுக்கு மேல்): வங்காள கிரிக்கெட் வாரியம் (கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ்) - ரூ.50 லட்சம்
சிறந்த ஆடுகளம் மற்று் மைதானம் (5 போட்டிகளுக்கு குறைவாக): ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் வாரியம் (தரம்சாலா மைதானம்) - ரூ.25 லட்சம்
IPL Final : குஜராத் ஜெயிக்க இன்னும் வாயிருக்கு... ஆர்சிபி கனவு 'இவர்களின்' கையில்...!
Ahmedabad, Gujarat:IPL Final 2026, RCB vs GT Match Updates : ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் பரபரப்பான முதல் பாதி முடிந்திருக்கிறது. முதல் பாதியை முழுமையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. ஆர்சிபி அணி எவ்வித அவசரமும் காட்டாமல் நிதானமாக விளையாடினாலே 2வது கோப்பையை வென்றுவிடலாம் என்ற சூழல் தற்போது உள்ளது.
ஆர்சிபி அணி டாஸ் வென்றபோதே, அந்த அணி 30% கோப்பையை நெருங்கிவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், டாஸிற்கு பின் தெரிவித்திருந்தார். தற்போது குஜராத்தை 155 ரன்களுக்கு சுருட்டியதன் மூலம், இன்னும் 30% கோப்பையை நெருங்கிவிட்டது ஆர்சிபி என்றே சொல்லலாம். 60% கோப்பையில் கைவைத்திருக்கும் ஆர்சிபி, அதை தூக்கிக் கொண்டாட இந்த சேஸ்ஸிங்கை சிறப்பாக அமைத்தாலே போதுமானது.
குஜராத் என்ன செய்ய வேண்டும்?
பவர்பிளேவில் குஜராத் அணி 3-4 விக்கெட்டை எடுத்தால் அந்த அணிக்கு பெரியளவில் வாய்ப்புள்ளது. சிராஜ், ரபாடா, ஹோல்டர், அர்ஷத் கான் என சிறந்த பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளனர். இவர்கள் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசி ஆர்சிபியை கட்டுப்படுத்தினால், அடுத்த மிடில் ஓவர் ரஷித் கானின் கைகளில் உள்ளது. பவர்பிளேவிலும், மிடில் ஓவரிலும் 6-7 விக்கெட்டை எடுக்க வேண்டிய நிலையில் குஜராத் உள்ளது.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
Washington Sundar fights back but an all-round effort from #RCB restricts #G
Scorecarhttps://t.co/Yz6K3q6w0X#TATAIPL | #Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/1nMfBYvg1D
சிராஜ், ரபாடா கையில் ஆர்சிபி கனவு
மறுபக்கம், ஆர்சிபி அணிக்கு சேஸ்ஸிங் கிங் விராட் கோலி இருக்கும் நிலையில் அவர் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பந்தில் சிராஜ் மற்றும் ரபாடா பந்துவீச்சை தாக்குப்பிடித்து, விக்கெட்டை விடாமல் சீராக ரன்களை சேர்த்தாலே ஆர்சிபி அணி இன்று கோப்பையை தட்டித்தூக்குவது உறுதியாகிவிடும்.
அதன்மூலம், சிஎஸ்கே (2010, 2011) மற்றும் மும்பையின் (2019, 2020) வரிசையில் ஆர்சிபி அணியும் தொடர்ச்சியாக 2வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
தேடி வந்த துணை முதல்வர் பதவி... நோ சொன்ன பிரமலதா - தேமுதிகவிடமும் விஜய் பேசினாரா?
Chennai, Tamil Nadu:Premalatha Latest News Updates : சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலர்கள் இன்று (மே 31) கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேமுதிக மாவட்ட செயலளர்கள் கூட்டம் நடப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
மாவட்ட செயலளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, "பேரத்திற்கும் பதவிக்கும் சோஃபாவுக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான். யாரை தீய சக்தி என தவெக சொன்னதோ அந்த தீய சக்தியின் ஆதரவோடுதான் ஆட்சி நடந்து வருகிறது.
பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி தவெக தரப்பில் எங்களை அணுகினர். நான் மட்டும் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஜய் துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். மற்ற கட்சிகளிடம் யார் பேசினாரோ, அதே நபர் எங்களிடமும் பேசினார்.
தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின் ஒரு கூட்டணி என்ற நிலை எங்களுக்கு இல்லை. இது உண்மையான தேர்தலே அல்ல என மக்கள் நினைக்கின்றனர். சினிமா கவர்ச்சி என்ற மாயையால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. விரலில் வைத்த மை கூட காயாத நிலையில், பதவியை ராஜிநாமா செய்வது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு" என்றார்.
தொடர்ந்து அவர், "விமர்சிப்பதில் ஹனிமூன் பீரியட் எல்லாம் பார்க்க முடியாது. அவதிக் கால பீரியட் என மக்கள் நினைக்கின்றனர். கூட்டணி தர்மத்தை அதிமுக மதிக்கவில்லை. தேமுதிகவுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை. கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மட்டுமே நினைத்தார்" என பேசினார்.
மேலும் படிக்க | ஜூன் மாதம் வரும் ரூ. 3000.. முதலமைச்சர் விஜய்யின் ஜாக்பாட் அறிவிப்பு!
தேர் சக்கரத்தில் நசுங்கி இளைஞர் பலி... திருச்செங்கோட்டில் நடந்தது என்ன? - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Kavundampalayam, Tamil Nadu:Tiruchengode Ther Festival Accident Latest News : நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று (மே 31) நடைபெற்றது. அப்போது, தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அதில், இன்னொரு இளைஞர் படுகாயம் அடைந்தார்.
இந்துசமய அறநிலையத்துறை நிதி ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு புதிய தேர் செய்யப்பட்டு முதன்முறையாக தேரோட்டம் நடக்க இருந்தது. தேர் நிலை பெயர்க்கும்போது சுவருக்கும் தேருக்கும் இடையில் சிக்கி இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹர்ஷவர்த்தன் எனும் இளைஞர் உயிரிழந்த நிலையில், சஷ்டிகன் என்ற இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார்.
#NewsUpdate | துயர விபத்து#ZeeTamilNews | #Tiruchengode | #Accident pic.twitter.com/gLkgMbtKrC
— Zee Tamil News (@ZeeTamilNews) May 31, 2026
வைகாசி விசாக தேர்த்திருவிழா மிக சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி மலையில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக கீழிறங்கி வந்து, இன்று (மே 31) ரதம் ஏறினார். நான்கு வீதிகளில் உலா வர புறப்படும் சமயத்தில் இந்த கோர சம்பவம் நடந்தது.
ஆர்சிபி ரசிகர்களுக்கு... பெரிய தடை... காவல்துறை கொடுத்த எச்சரிக்கை - ஐபிஎல் பைனல் பரபரப்பு
Bengaluru, Karnataka:IPL Final 2026, RCB vs GT : ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே 31) நடைபெற இருக்கிறது. ரஜத் பட்டிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் என இரண்டு அணிகளுமே தங்களின் இரண்டாவது கோப்பைக்காக இன்று முட்டிமோத உள்ளன.
இன்று மாலை 6.30 மணியில் இருந்து நள்ளிரவு தாண்டியும் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இறுதிப்போட்டியை ஆவலோடு கண்டுகளிக்க தயாராகி வருகிறது. இப்போட்டியில் குஜராத் வெல்வதை காட்டிலும் ஆர்சிபி வென்றால் நிச்சயம் நாடு முழுவதும் பெரியளவில் கொண்டாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஐபிஎல் இறுதி போட்டியில் வெல்லப்போகும் அணி இதுதான் - அடித்து சொல்லும் அஸ்வின்!
ஆர்சிபி அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி தொடர் முழுவதும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் கலக்கி வந்துள்ளது. சீனியர் வீரரான விராட் கோலி இந்தாண்டு விளையாடும் கடைசி டி20 போட்டியும் இதுதான். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி ஆர்சிபி அணியால் கப் அடிக்கவே முடியாது என சொல்லப்பட்டு வந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு ஆர்சிபி அணி முதல் கோப்பையை ருசித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிலை என்ன?
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கோ பலத்தை விட பலவீனங்களே அதிகம். சாய் சுதர்சன், சுப்மான் கில், ஜாஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கிலும், ரபாடா மற்றும் சிராஜ் ஆகியோர் பந்துவீச்சிலும் தொடர்ந்து கைக்கொடுக்கிறார்கள். ஹோல்டர் அவ்வப்போது கைக்கொடுக்கிறார். ஆனால், மற்ற வீரர்கள் அனைத்தும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் பலரும் ஆர்சிபி அணியே வெற்றிபெறும் என்றும் கணிக்கிறார்கள், சிலர் மட்டுமே குஜராத் பக்கம் நிற்கிறார்கள்.
A monumental stage for a monu
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
How excited are you for the #TATAIPL#Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/GAyTuc52wO
மேலும் படிக்க | ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி: ஒருவேளை மழை பெய்தால் சாம்பியன் யார்? முழு விவரம்
காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?
- அப்படியிருக்க, ஆர்சிபி ரசிகர்கள் இப்போது இருந்தே தங்களின் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், பெங்களூரு போலீசார் பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.
- இன்றைய போட்டிக்கு முன்னரும், போட்டி நடைபெறும் போதும், போட்டிக்கு பின்னரும், அமைதியுடனும் ஒழுக்கத்துடனும், பொது ஒழுங்கை பேணும்படி பெங்களூரு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
- பெங்களூரு முழுவதும் போக்குவரத்து நெரிசல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் கொண்டாட்டங்கள் தொடர்பான விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுப்பதற்காக சிறப்பு முன்னெச்சரிக்கைர நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- போலீசார் நேற்று முன்தினம் (மே 29) அறிவுறுத்தலின்பேரில், போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, ரசிகர்கள் பொது இடங்களில் கொண்டாடங்களுக்காக ரசிகர்கள் கூட வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
- கட்டுப்பாடற்ற கொண்டாட்டங்கள் பாதுகாப்பு அபாயங்களையும் பொதுமக்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அதேநேரத்தில், எவ்வித அனுமதியும் இன்றி சாலைகளை நோக்கியவாறு எல்.ஈ.டி திரைகளை வைப்பதற்கும், போட்டிகளை ஒளிப்பரப்புவதற்கும் காவல்துறை தடைவித்துள்ளது.
- அதேபோல், மால்கள், பப்கள், உணவகங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு வெளியே பொதுமக்கள் பார்க்கும் வகையில் போட்டியை நேரடி ஒளிபரப்புகளை ஏற்பாடு செய்யக்கூடாது.
- கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசு வெடிப்பதற்கும், அபாயகரமான பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
- பைக் பேரணிகள், அதிவேகமாகச் செல்லுதல், அபாயகரமான சாகசங்கள் செயதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் இந்த அறிவுரை மேலும் தடை விதித்துள்ளது.
- பொது இடங்களில் மது அருந்துவது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது, சண்டையிடுவது அல்லது கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வது போன்றவற்றுக்கு எதிராக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- வதந்திகள், ஆத்திரமூட்டும் செய்திகள் அல்லது வெறுப்புணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்களை இணையத்தில் பரப்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
- எதிரணி ஆதரவாளர்களை கேலி செய்யவோ, சீண்டவோ அல்லது அவமதிக்கவோ வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய நடத்தை தேவையற்ற மோதல்களுக்கு வழிவகுக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டநெரிசல் சம்பவத்தால் அறிவுரைகள்
கடந்தாண்டு ஜூன் 3ஆம் தேதி ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பெங்களூருவில் கூட்டநெரிசல் ஏற்பட்டத்தில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, இந்த அறிவுறுத்தலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
