icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

'லஞ்சம் கேட்டா உடனே புகார் கொடுங்க': வாட்ஸ்அப் எண் அறிமுகம், தமிழக அரசு அதிரடி

Nagalapuram, Tamil Nadu:

Tamil Nadu Government: தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு வாட்ஸ்அப் உதவி எண்ணை (94981 80936) அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்து அரசுத் துறைகளும் இந்த வாட்ஸ்அப் எண்ணைத் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முக்கியமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சாய் குமார் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ஊழலுக்கு எதிரான புகார்களைக் குடிமக்கள் எளிதாக அளிக்கும் வகையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (DVAC) இணையதளத்திற்கான நேரடி இணைப்பை வழங்கவும் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குறித்து புகார் அளிக்கலாம்

இனி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எவரேனும் தங்கள் பணிகளை செய்ய லஞ்சம் கோரினால், 9498180936 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் (WhatsApp) செய்தி அனுப்பி அந்த நபர் மீது புகார் அளிக்கலாம்.

ஊழலை ஒழிப்பதற்காக அரசு எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் லஞ்ச ஒழிப்பு தொடர்பான அறிவிப்புப் பலகைகள் தெளிவாகத் தெரியும் வகையில் வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் செவ்வாய்க்கிழமையன்று சுற்றறிக்கை அனுப்பினார். 

மேலும் படிக்க | தமிழ் முக்கிய செய்திகள் Live : காமராஜர் 124வது பிறந்தநாள்; நாகர்கோவிலில் பதற்றம்

0
0
Report

காமராஜருக்கு மாலை போட்டாலே பிடிக்காது... காரணம் என்ன தெரியுமா?

Allampatti, Kooraikundu, Tamil Nadu:

Kamaraj 124th Birthday: கல்விக் கண் திறந்த காமராஜரின் 124வது பிறந்தநாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு கல்வியில் தற்போது இந்தளவிற்கு முன்னேற்றம் கண்டதற்கு காமராஜர் முக்கிய புள்ளியாக இருந்தார்.

பள்ளியில் மதிய உணவு, இலவச கல்வி, இலவச சீருடை, பள்ளிகளின் உள்கட்டமைப்பை சீர்செய்து, பள்ளிகளை அதிகப்படுத்தியது என காமராஜரின் அன்றைய தொலைநோக்கு திட்டங்களே, தற்போது 80 சதவீதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் படிப்பறிவு பெற்றதற்கான முதன்மை காரணம்.

மேலும் படிக்க | மாணவர்களுக்கு குட் நியூஸ்! 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிரடி அறிவிப்பு

'கருப்பு காந்தி' காமராஜர்

காமராஜர் சாமானிய மனிதர்களுக்கான தலைவராகவே கடைசி வரை வாழ்ந்து மறைந்தார். எளிய வாழ்க்கை முறையையே அவர் பின்பற்றி வாழ்ந்தார், கடைசிவரை குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் செல்லாமல், திருமணம் செய்யாமலே இருந்தார். காமராஜர் தனது முழு வாழ்வையும் பொது பணிகளுக்கு என தியாகம் செய்தவர்.

நாட்டின் பிரதமராகும் அதிகாரம் இருந்தும், அதனை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்தவர். மெட்ராஸ் மாகாணம் போன்று தென்னிந்தியாவில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் 'காலா காந்தி', அதாவது 'கருப்பு காந்தி' என மக்களாலும், தொண்டர்களாலும் போற்றப்பட்டவர்.

கிங் மேக்கர் காமராஜர்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் 1964ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டுவரை அகில இந்திய தலைவராக இருந்தவர் காமராஜர். இவரது பதவிக்காலத்தில் இந்தியா மூன்று பிரதமர்களை கண்டது. இவர் நேரு பிரதமராக இருந்தபோது தலைவராக பொறுப்பேற்றார், அடுத்து லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராவதற்கு காமராஜர் காரணகர்த்தாவாக இருந்தார்.

தூய்மையான அரசியல்வாதிக்கான இலக்கணம்

1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை 9 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னரே, கட்சிப் பணி ஆற்ற முதலமைச்சர் பொறுப்பை துறந்தார். இன்றும் ஊழலற்ற, தூய்மையான அரசியல்வாதியாக காமராஜர் விளங்குகிறார்.

காமராஜருக்கு பூ மாலை பிடிக்காதது ஏன்?

அப்படிப்பவர்களுக்கு பூ மாலை பிடிக்காது என சொன்னால் நம்ப முடிகிறதா... ஆம்... அவருக்கு பூ மாலைகளே பிடிக்காது. அதற்கு ஒரு சுவாரஸ்ய காரணமும் இருக்கிறது. பூ மாலைகள் பிடிக்காது என்றாலும் அவருக்கு யாராவது கதர் துண்டை பரிசளித்தால் மகிழ்ச்சியாக பெற்றுக்கொள்வாராம்.

மேலும் படிக்க | இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு.. எப்படி பெறுவது?

மதுரா வெளியீடு என்ற பதிப்பகம் வெளியிட்ட, இளசை சுந்தரம் என்பவர் எழுதிய 'காமராஜ் - நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்' என்ற புத்தகத்தில் இதுகுறித்த தகவல்கள் உள்ளன. பூ மாலைகள் ஏன் காமராஜருக்கு பிடிக்காது என்பது குறித்து அவரது உதவியாளர் வைரவன் அளித்த பதிலை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

காமராஜருக்கு பூ மாலை பிடிக்காததற்கு காரணம், அவை அழைத்தும் உடனடியாக குப்பைக்கு போயிடக்கூடியவை, அதனால் பெரிய பலனிலை என்பதும் ஒன்று. அதுமட்டுமின்றி பூக்களில் இருக்கும் புழுக்கள் கழுத்தை கடித்து புண்ணாகும் வழக்கம் இருந்ததாம். 

அதேபோல், மாலைகளில் ஜரிகை நூல் சுற்றப்பட்டிருக்கும், அந்த நூ் கழுத்தில் லேசாக அறுத்து கீறல்கள் ஏற்படுமாம். காமராஜருக்கு நீரிழிவு நோய் இருந்தது. எனவே, இதுபோதல் ஏற்படும் காய்கள், புண்கள், கீறல்களை தடுக்க காமராஜர் பூ மாலைகளை கழுத்தில் சூடிக்கொள்ளாமல், யாராவது கொண்டு வந்தாலும் அதை கைகளிலேயே வாங்கிக் கொள்வாராம்.

கதர் துண்டை ஏற்றுக்கொண்டது ஏன்?

ஆனால், கதர் துண்டு யாராவது அணிவித்தால் அதை மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வாராம். ஏனென்றால் தலைவருக்கு அணிவிக்கப்படும் துண்டுகள் அனைத்தும் 'பால மந்திர்' என்ற அனாதைச் சிறுவர் பள்ளிக்கு அனுப்பப்படும். அது அந்த குழந்தைகளுக்கு உடனடியாக பயன்படும் என்பதாலேயே அவர் கதர் துண்டுகளை விரும்பியிருக்கிறார்.

மேலும் படிக்க | தமிழக அரசு அதிரடி அறிவிப்பு: தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே! ரூ.30,000 சம்பளத்தில் வேலை... அப்ளை செய்ய லிங்க் இதோ!

0
0
Report

கணவரை நெரித்துக் கொன்று 3 துண்டுகளாக்கிய பெண்: நவி மும்பையில் கொடூரம்.. 11 மாதங்களுக்குப் பின் சிக்கியது எப்படி?

Navi Mumbai, Maharashtra:

Navi Mumbai Crime: நவி மும்பையில் திடீரென காணாமல் போன ஒரு மனிதரின் வழக்கு காவல்துறைக்கு சவாலாக இருந்துவந்த நிலையில், கணவரை காணாமல் மனைவி பட்ட பாடு அனைவரையும் பரிதாபப்பட வைத்தது. 11 மாத கால புலனாய்வு மற்றும் தொடர் விசாரணையின் பலனாக போலீசார் இப்போது அந்த வழக்கின் பின்னுள்ள மர்மத்தை கண்டறிந்துள்ளனர். உண்மை அனைவரையும் உலுக்கிப் போட்டது. ஆம்! காணாமல் போன நபர் அவரது மனைவி மற்றும் மனைவியின் காதலனால் கொல்லப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது!

மர்மத்தை தீர்த்த நவி மும்பை போலீஸார் 

நவி மும்பை, ஐரோலியின் யாதவ் நகரில் நடந்த, 11 மாதங்களாகத் துப்பு துலங்காமல் இருந்த ஒரு கொடூரமான கொலை வழக்கை நவி மும்பை போலீஸார் வெற்றிகரமாகத் தீர்த்துள்ளனர். ஒரு 40 வயதுப் பெண்ணும், அவரது காதலன் எனக் கூறப்படுபவரும், அப்பெண்ணின் கணவரைக் கொடூரமாகக் கொன்று, உடலைத் துண்டுகளாக்கி அப்புறப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம், யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட அப்படியே மறைந்திருக்க வேண்டிய ஒரு ஒரு நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரபலே MIDC காவல்துறையினர் இக்கொலை வழக்கை இப்போது தீர்த்துள்ளனர். கொல்லப்பட்ட பலிராமின் மனைவி சுனிதா குஷ்வாஹா (40) மற்றும் அவரது காதலராகக் கருதப்படும் ராகுல் தசரத் பிரஜாபதி (30) ஆகியோரை இக்கொலைக்காக போலீசார் கைது செய்துள்ளனர். 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரவு இக்கொலை நிகழ்த்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதற்கு ஏறக்குறைய 11 மாதங்களுக்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் என்ன?

சுனிதா மற்றும் ராகுல் இடையில் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்துவந்துள்ளது. இதை பாலிராம் கடுமையாக எதிர்த்ததே இந்தக் குற்றத்திற்கான காரணம் என ரபாலே MIDC போலீஸார் கூறுகின்றனர். குடும்பத்தில் மோதல்கள் அதிகரித்த நிலையில், தங்கள் உறவைத் தொடர்வதற்கு தடையாக இருந்த பாலிராமை ஒழித்துக்கட்ட இருவரும் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

கொடூரமான சதித்திட்டம்

தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் முன், சம்பவத்தை நேரில் காண யாரும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, சுனிதாவும் ராகுலும் பாலிராமின் இரண்டு குழந்தைகளையும் அவர்களின் அத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆகஸ்ட் 9, 2025 அன்று இரவு, யாதவ் நகரில் உள்ள தனது வீட்டில் பாலிராம் தூங்கிக்கொண்டிருந்தபோது, ​​அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்த, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது கழுத்தை அறுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | 17வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்கசுக் உடல்நிலை கவலைக்கிடம்..விவரம்

கணவரின் உடலை துண்டு துண்டாக்கிய மனைவி

பலிராமை கொலை செய்த பின்னர், சுனிதாவும் ராகுலும் பாலிராமின் உடலை வீட்டிற்குள்ளேயே மூன்று பாகங்களாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் பின், உடல் பாகங்களை சாக்குப்பைகள் மற்றும் படுக்கை விரிப்புகளில் கட்டி, ராகுலின் ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு அடர்ந்த காவ்லி தேவ் (Gavli Dev) வனப்பகுதிக்கு அவர்கள் சென்றனர். அங்கு ஆதாரங்களை அழிப்பதற்காக உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசினர்.

மறுநாள் காலையிலேயே, சுனிதா பொய்களைப் பின்னத் தொடங்கினார். தனது கணவர் திடீரென குடும்பத்தைக் கைவிட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக உறவினர்களிடமும் அண்டை வீட்டாரிடமும் கூறினார்.

தனது கடந்த காலத்தை முழுமையாக மறைக்க, யாதவ் நகரில் இருந்த தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, சுனிதா தனது குழந்தைகளுடன் கன்சோலியில் உள்ள ராகுலின் வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். பல மாதங்களுக்கு, இந்தக் குற்றம் அந்தப் பொய்க் கதையின் பின்னால் மறைந்திருந்தது.

சகோதரருக்கு வந்த சந்தேகம்

பலிராமின் சகோதரர் தங்கள் சொந்தக் கிராமத்திலிருந்து வந்தபோதுதான் இந்தக் சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியது. பலிராம் திடீரென மாயமானார் என்ற கதையை நம்ப மறுத்த அவர், பல வித கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது விடாமுயற்சியின் காரணமாக, உண்மையான கொலை நடந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 2026-ல் ரபலே எம்.ஐ.டி.சி (Rabale MIDC) காவல் நிலையத்தில் பலிராம் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டது.

துப்பு கிடைக்காத வழக்கை காவல்துறை எவ்வாறு தீர்த்தது?

ரபலே எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் தேவிதாஸ் கதோலே, இவ்வழக்கு ஆரம்பத்தில் நேரடி ஆதாரங்களோ அல்லது உடலோ இல்லாத, துப்பு கிடைக்காத ஒரு கொலை வழக்காக இருந்ததைக் குறிப்பிட்டார். இருப்பினும், அர்ப்பணிப்புடன் கூடிய தொழில்நுட்ப ரீதியான விசாரணை நிலைமையை மாற்றியது.

ஆரம்பகட்ட விசாரணையின்போது, ​​சுனிதா கூறிய காலவரிசை மற்றும் வாக்குமூலங்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதை காவல் துறையினர் கவனித்தனர்.

டிஜிட்டல் தடயங்களை அழிக்க, பலி ராம் மாயமான சிறிது காலத்திலேயே சுனிதா மற்றும் ராகுல் இருவரும் தங்கள் அலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகளை மாற்றியிருந்ததை காவல்துறை கண்டறிந்தது. இது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் ஆழமாக்கியது.

புதிய எண்களைப் பயன்படுத்திய போதிலும், சி.டி.ஆர் (CDR) பகுப்பாய்வில், ராகுல் பல ரகசிய தொலைபேசி இணைப்புகள் மூலம் சுனிதாவோடு தொடர்ந்து மற்றும் பிரத்யேகமாகத் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. தனித்தனியான விசாரணைகளின்போது அடுக்கடுக்கான தொழில்நுட்ப ஆதாரங்களை எதிர்கொண்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உடைந்துபோய் கொலையை ஒப்புக்கொண்டனர்.

மேலும் படிக்க | ஓடும் ரயிலில் பூஜை! ஆத்தாடி இத்தனை லட்சம் செலவா? வைரலாகும் வீடியோ

வழக்கின் தற்போதைய நிலை என்ன?

சுனிதாவும் ராகுலும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, உள்ளூர் நீதிமன்றம் சுனிதா குஷ்வா மற்றும் ராகுல் பிரஜாபதி ஆகிய இருவரையும் ஏழு நாள் காவல் காவலில் வைக்க உத்தரவிட்டது.

பலிராமின் எலும்புக்கூட்டு எச்சங்களை மீட்க, கரடுமுரடான கவ்லி தேவ் மலை மற்றும் வனப்பகுதியில் காவல்துறை குழுக்கள் சவாலான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளன. உடல் பாகங்கள் வீசப்பட்டு ஏறக்குறைய 11 மாதங்கள் கடந்துவிட்டதால், அந்த எச்சங்களை மீட்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று போலீசார் ஒப்புக்கொள்கிறார்கள். இது குறித்த மேலதிக விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

கலியுகம் பலியுகமாக மாறிவருகிறது. ஒருவருடன் வாழ பிடிக்காவிட்டால் விலகிச்செல்லலாம். அவரை அழித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற அவசியம் என்ன? இப்படிப்பட்ட வழக்குகள் மனித மனதின் கொடூர பக்கத்தை வெளிச்ச்சம் போட்டு காட்டுகின்றன. முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக அறியப்பட்ட இப்படிப்பட்ட நிகழ்வுகள், இப்போது தினம் தினம் நம் கண்முன் நடக்கின்றன.

இந்த வழக்கில் பலிராமின் சகோதரரின் விடாமுயற்சியால் அவரது கொலையாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இப்படி எத்தனை பேர் மவுனமாக சடலமாகிப்போனார்களோ? இந்த வழக்கை பொறுத்தவரை, 11 மாதங்களுக்கு பிறகு பலிராம் காணாமல் போனதற்கான காரணம் அறிந்த அவரது ஊர் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்க | கேரளா லாட்டரி Scam: எச்சரிக்கை மக்களே.. Unsold Ticket திருடி பணம் வாங்கிய அரசு ஊழியர்கள்

0
0
Report
Advertisement

நாகர்கோவில் கைதி மரணம்: உடலில் 19 இடங்களில் காயம்... வெளியான ஷாக் ரிப்போர்ட்

Nagercoil, Tamil Nadu:

Nagercoil Lockup Death Updates : கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் விசாரணை கைதியாவார். இவர் நாகர்கோவில் சிறையில் போலீசாரின் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்தார் என குற்றஞ்சாட்டப்படுகிறது. 

சாத்தான்குளம் சம்பவத்தை போன்து தனது கணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என சபரிவர்மனின் மனைவி புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடந்த பிரதேச பரிசோதனையில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன. 

அவரின் கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும்; வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கை, கால்களை கட்டிப் போட்டு தாக்கியதற்கான அடையாளம் உள்ளது என்றும்; தலை, பின் கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சபரிவர்மன் மரணமடைந்த விவகாரத்தில் சிறை வார்டன் உட்பட சிறைக் காவல்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரண விவகாரத்தில் கைதான சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடைநம்பி ஆகிய மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து நெல்லை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. செந்தாமரை உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | முதலமைச்சர் விஜய்க்கு, மு.க.ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கை

மேலும் படிக்க | நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.. செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்.. என்ன மேட்டர்?

மேலும் படிக்க | நல்லா பேசுனான் இப்ப செத்துட்டான்! அவன அடிச்சே கொன்னுட்டாங்க! லாக்-அப் மரணம்?

0
0
Report

பைனலில் ஸ்பெயின்... பிரான்ஸ் அணிக்கு பெரிய ஷாக் - எம்பாப்பே ஏமாற்றம்

Arlington, Texas:

FIFA World Cup 2026, France vs Spain : 2018 பிபா உலகக் கோப்பை தொடரின் சாம்பியன், 2022 பிபா உலகக் கோப்பை தொடரின் ரன்னர் அப் அணியாக விளங்கும் பிரான்ஸ் அணி, இந்த முறை அரையிறுதியோடு வெளியேறியிருப்பது கால்பந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ஸ்பெயின் அணி 2வது முறையாக பிபா உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இதற்கு முன் 2010ஆம் ஆண்டில் இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது கோப்பையை நெருங்கி உள்ளது.

0
0
Report

மாற்றுத்திறனாளிக்கு இரண்டு மணி நேரத்தில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய கலெக்டர்!

P.RAJESHP.RAJESHFollow1d ago
Pudukkottai, Tamil Nadu:புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகேசன் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில், கலெக்டர் அருணாவை நேரில் சந்தித்து எனக்கு மூன்று சக்கர சைக்கிள் தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பரிசளித்த கலெக்டர் அருணா இரண்டே மணி நேரத்தில் ரூபாய் 14 ஆயிரம் மதிப்புள்ள, மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளி முருகேசன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார். அப்பொழுது அங்கிருந்த பொது மக்களையும் அலுவலர்களையும் கலெக்டரின் செயலால் மகிழ்ச்சி அடைந்தனர்.
0
0
Report
Advertisement

France vs Spain : முதல் செமி பைனலில் வெற்றி யாருக்கு...? - பலம், பலவீனம் என்ன?

Arlington, Texas:

FIFA World Cup 2026 Semi Final, France vs Spain : பிபா உலகக் கோப்பை 2026 தொடர் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. கிளைமேக்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறப்போவது யார் யார் என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

முதல்முறையாக பிபா உலகக் கோப்பை தொடர் 48 அணிகளுடன் விளையாடப்பட்டது. குரூப் சுற்று, ரவுண்ட் ஆப் 32 சுற்று, ரவுண்ட் ஆப் 16 சுற்று, காலிறுதிச் சுற்று என இதுவரை 44 அணிகள் வெளியேறிவிட்டன. அரையிறுதிச் சுற்றுக்கு மூன்று ஐரோப்பிய அணிகளும், ஒரு தென்னமெரிக்க அணியும் என 4 அணிகள் தகுதிபெற்றுள்ளன.

மேலும் படிக்க |  உலகக்கோப்பை கால்பந்து : அர்ஜென்டினா - இங்கிலாந்து மேட்சை நேரலையில் பார்ப்பது எப்படி?

அரையிறுதிப் போட்டிகள் எப்போது?

இந்திய நேரப்படி வரும் ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவு 12. 30 மணிக்கு பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும்; ஜூலை 16ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள் 2வது அரையிறுதிப் போட்டியிலும் மோதின.

இறுதிப்போட்டி எப்போது?

இதையடுத்து, அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் ஜூலை 19ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு 3வது இடத்திற்கான போட்டியில் மோதும். ஜூலை 20ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

எம்பாப்பே vs யமால்

இந்நிலையில், முதல் அரையிறுதிப் போட்டியில் மோதும் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் இரண்டுமே ஐரோப்பிய அணிகளாகும். எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் தொடர்ச்சியாக 3வது முறையாக இறுதிப்போட்டிக்குச் செல்லுமா அல்லது 18 வயதான லமினே யமால் இருக்கும் ஸ்பெயின் தகுதிபெறுமா என கால்பந்து உலகமே காத்திருக்கிறது. 

எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்கும், யமால் பார்சிலோனா அணிக்கும் நேருக்கு நேர் தொடர்ந்து மோதி வருகின்றன. La Liga தொடரில் El Clasico போட்டியில் பலமுறை இருவரும் மோதியிருந்தாலும் முதல்முறையாக உலகக் கோப்பை தொடரில் மோதுகிறார்கள். இதுவரை எம்பாப்பே இடம்பெற்ற அணிக்கு எதிராக விளையாடிய இறுதிப்போட்டியில் யமால் இடம்பெற்ற அணி தோற்றதே இல்லை. 

அந்த வகையில், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் இதுவரை நேருக்கு நேர் மோதியதில் யார் அதிக முறை வென்றிருக்கிறார்கள்?; சமீபத்திய போட்டிகளில் எந்த அணி அதிக முறை வென்றிருக்கிறது?; இரு அணிகளின் பலம், பலவீனம், நட்சத்திர வீரர்கள் ஆகியவற்றை இதில் காணலாம்.

பிரான்ஸ் vs ஸ்பெயின் - நேருக்கு நேர் மோதல்

  • ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மொத்தமாக இதுவரை 38 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. 
  • இதில் ஸ்பெயின் 18 முறையும், பிரான்ஸ் 13 முறையும் வெற்றிபெற்றுள்ளன. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
  • இரு அணிகளும் கடைசியாக 2025 UEFA நேஷன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதின. 
  • அதில் ஸ்பெயின் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது. யமால் அந்த போட்டியில் 2 கோல்களையும், எம்பாப்பே 1 கோலையும் அடித்திருந்தனர்.
  • பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் ஸ்பெயின் 3 முறையும், பிரான்ஸ் 2 முறையும் வென்றுள்ளன.

பிபா உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் vs ஸ்பெயின்

இதுவரை பிபா உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் ஒரே ஒரு முறை மட்டுமே மோதி உள்ளன. 2006ஆம் ஆண்டில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில், பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

ஈரோ தொடரில் பிரான்ஸ் vs ஸ்பெயின்

ஈரோ சாம்பியன்ஷிப் தொடரில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் 5 முறை மோதி, இரண்டு அணிகளும் தலா 2 முறை வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

கடைசியாக ஈரோ சாம்பியன்ஷிப் தொடரில், 2024ஆம் ஆண்டின் அரையிறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது. அதில் ஸ்பெயின் அணிக்கு யமால் மற்றும் டானி ஓல்மோ தலா 1 கோலை அடித்தனர்.

மேலும் படிக்க | கால்பந்து மைதான புற்கள் விற்பனை! ஒரு துண்டு புல் விலை ரூ.42 ஆயிரம்

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் - கோப்பைகள், பதக்கங்கள்

பிரான்ஸ்: 1998, 2018 என இரண்டு பிபா உலகக் கோப்பை தொடர்களையும்; 1984, 2000 என இரண்டு ஈரோ சாம்பியன்ஷிப் தொடர்களையும் பிரான்ஸ் வென்றுள்ளது. 1984ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது பிரான்ஸ்.

ஸ்பெயின்: 2010ஆம் ஆண்டில் பிபா உலகக் கோப்பையையும்; 1964, 2008, 2012, 2024 என நான்கு முறை ஈரோ சாம்பியன்ஷிப் தொடர்களையும், ஸ்பெயின் வென்றுள்ளது. அதேபோல், ஸ்பெயின் 1992 மற்றும் 2024 ஒலிம்பிக் தொடர்களில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் - முக்கிய வீரர்கள்

பிரான்ஸ்: எம்பாப்பே (8 கோல்கள், 3 அசிஸ்ட்), உஸ்மான் டெம்பேலே (5 கோல்கள்),  மைக்கெல் ஒலிஸ் (5 அசிஸ்ட்)

ஸ்பெயின்: மிக்கேல் ஓயர்சபல் (4 கோல்கள்), மிக்கேல் மொரேனோ (2 கோல்கள்), மார்க் குகுரெல்லா (2 அசிஸ்ட்). யமால் 1 கோல் மட்டுமே அடித்துள்ளனர்.

பலம், பலவீனம்

பிரான்ஸ்: பிராட்லி பார்கோலா, டெம்பேலே, ஒளிஸ் என மூன்று அட்டாக்கிங் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்களுடன் எம்பாப்பே இருப்பது பெரும் பலம். 

ஆனால், குரூப் போட்டிகளில் செனகல், நார்வே அணிகளுக்கு எதிராக கோல்களை கன்சீட் செய்த பிரான்ஸ் அணிக்கு தடுப்பாட்டத்தில் சற்று வீக்னஸ் இருக்கிறது. ஆனாலும் நாக்-அவுட் போட்டிகளில் பிரான்ஸ் அணி ஒரு கோலை கூட கொடுக்கவில்லை.

ஸ்பெயின்: பிரான்ஸ் அணிக்கு தடுப்பாட்டம் சற்று பலவீனம் என்றால், ஸ்பெயின் அணியின் பலமே அதுதான். இதுவரை விளையாடிய 6 போட்டிகளில், ஸ்பெயின் 5 போட்டிகளில் ஒரு கோல் கூட கொடுக்கவில்லை. காலிறுதியில் மட்டுமே பெல்ஜியம் அணிக்கு எதிராக 1 கோலை கொடுத்தது. 

ஸ்பெயினின் அட்டாக் என்பது சற்று சொதப்பலாகவே உள்ளது. கடைசி இரண்டு போட்டிகளிலும் மெரினோவின் கடைசி நேர கோல்கள் மூலமே ஸ்பெயின் வெற்றிபெற்றது. யமால் துடிப்புடன் விளையாடும்பட்சத்தில் நிச்சயம் ஸ்பெயின் அணியால் அரையிறுதியில் வெல்ல முடியும்.

மேலும் படிக்க | FIFA WC : கடைசி 5 முறை... Golden Boot விருது வாங்கியவர்கள் யார் யார்? மெஸ்ஸி இல்லை

0
0
Report

ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கவில்லை - சென்னை வந்ததும் விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி

Chennai, Tamil Nadu:

EV Velu Slams CM Vijay Allegation : திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக ரூ.3.23 கோடி டெண்ட் முறைகேடு வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 25ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், எ.வ.வேலு தொடர்புடைய பல மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஜூலை 3ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. 

ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத எ.வ.வேலு, தான் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் வந்திருப்பதாக அவரது வழக்கறிஞர் மூலம் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். இருப்பினும் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் இருந்து தப்பிக்கவே வெளிநாடு சென்றார் என சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவின. 

இந்தச் சூழலில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு இன்று (ஜூலை 12) தாயகம் திரும்பினார். சென்னையில் வந்து இறங்கியதும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தனது சிங்கப்பூர் பயணத்தின் காரணம் குறித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். 

எ.வ. வேலு சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டியில், "நான் ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கவில்லை. திமுக அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை. 2016ஆம் ஆண்டு முதலே சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைககு சிகிச்சைக்காக சென்று வருகிறேன்" என விளக்கம் அளித்தார்.

நேற்று முன்தினம் (ஜூலை 10) கரூரில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், செந்தில் பாலாஜி ஓடி ஒளிந்துவிட்டார் என்றும்; இன்னொருவர் வெளிநாட்டுக்குச் சென்று பதுங்கிவிட்டார் என்றும் எ.வ. வேலுவை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். 'சிங்கப்பூருக்குச் செக்-அப்பிற்கு போனாருல்ல அவருதான்' என எ.வ. வேலு பெயர் குறிப்பிடாமல் முதல்வர் விஜய் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
Report
Advertisement

விஜய்யின் முதுகு தான்... கரூர் மக்களின் நினைவுச்சின்னம்... சிவசங்கர் கொடுத்த பதிலடி

Chennai, Tamil Nadu:

SS Sivasankar Slams CM Vijay Latest News : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

முதலமைச்சர் விஜய் இன்று கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியது குறித்து எஸ். எஸ். சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரூரில் தவெக சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க | கரூர் கூட்டநெரிசல் : காவல்துறை அலர்ட் செய்யாதது ஏன்? - CM விஜய் கேட்ட கேள்விகள்

அதை குறிப்பிட்டு பேசிய எஸ்.எஸ். சிவசங்கர், "முதுகில் இருக்கிற கறையை மறைப்பதற்கு மற்றவர்களை குற்றம் சொல்வது தான் தன்னுடைய வழக்கம் என்பது போல, காவல்துறையும், காவல்துறைக்கு அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் எல்லாம் வழிகாட்டினார்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அதேபோல, அவர் இன்னும் திரைப்படத்தை விட்டு வெளியில் வரவில்லை.

'ஓடு... ஓடு... ஓடு...' என்று அதுக்கு வேற சைகை காட்டுகிறார். அதுக்கு எங்களுடைய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மிக அழகாக பதில் சொல்லி இருக்கிறார். 'ஓடு... ஓடு... ஓடு...' என்று கரூர் சம்பவம் நடந்த அன்னைக்கு சம்பவம் முடிந்த பிறகு, கரூரில் இருந்து சென்னைக்கு ஓடி வந்தது யார் என்று நாட்டிற்கே தெரியும். அந்த 'ஓடு... ஓடு... ஓடு...' அவர்தான் உதாரணம் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் படிக்க | ஓடு..ஓடு.. ஓடு! கரூரில் இருந்து ஓடியது யார்? CM விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி ரியாக்ஷன்

மிக அழகான பதில். அதேபோல, கரூரில் நினைவுச் சின்னம் அமைப்போம் என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே மக்கள் மனதில் அந்த நினைவுச் சின்னம் இருக்கிறது. திருச்சி விமான நிலையத்தில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள், 'சார்... சார்... சார்...' என்று கூப்பிடும் போது, அந்த ஒரு வேக நடை போட்டாரே, இன்றைக்கு சொன்ன அந்த "ஓடு... ஓடு... ஓடு...", அந்த முதுகு கரூர் மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நினைவுச் சின்னமாக அவர்கள் மனதில் இருக்கிறது.

நீங்கள் அமைக்கப்போகும் நினைவுச் சின்னம் காலா காலத்திற்கும் நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்தும். ஒரு நடிகர் பிரச்சாரத்திற்கு வருகிறேன் என சொல்லிவிட்டு, நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்த காரணத்தினால் 41 பேர் உயிர் இழந்தார்கள் என்பதையும் நினைவுபடுத்தும். இன்றைக்கு நேரத்திற்கு சென்றதுபோல் அன்றும் சென்றிருந்தால் இவ்வளவு பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க | மக்களை தவிக்கவிட்டு ஓடியது யார்? -முதல்வர் விஜய் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்பி அதிரடி பதிலட

0
0
Report

5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை... தவெகவுக்கு குட்டு... ஹைகோர்ட் அதிரடி

Chennai, Tamil Nadu:

Madras High Court : நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் சென்னையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் இரண்டு தொகுதியில் போட்டியிட்டார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 

இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல கரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்திருந்தார்கள்.

5 பேர் மீது வழக்கு

இவர்களை போன்று, தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் உள்ளிட்ட இருவரும் ராஜினாமா செய்தார்கள். மொத்தம் 7 தொகுதிகள் காலியானது.

இதில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய ஐந்து தொகுதிகளில் அந்த வெற்றியை எதிர்த்து, முறையே முதலமைச்சர் விஜய், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்ட அந்த ஐந்து பேரின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

உயர் நீதிமன்றத்தில் மனு

எனவே இவர்கள் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த பொதுநல வழக்கு மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருண் குமார் முன்புஸ இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது.

மனுவில் குறிப்பிடப்பட்டது என்ன?

  • இந்த வழக்குகளில் தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்னிறுத்தியுள்ளனர்.
  • ஆனால் இடைத்தேர்தலை நடத்தி எம்எல்ஏ-வை தேர்ந்தெடுத்தப்பின், தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்து வேட்பாளராக வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்துவிட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற நிலை ஏற்படும்.
  • இதனால் இந்த வழக்கு, தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட அந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே 1967ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை உள்ள பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

மனுதாரர் முன்வைத்த வாதம்

இந்த தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் தரப்பில், தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்திற்கு வரப்பெறவில்லை. ஆனால் இந்த வழக்கின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

அரசு தரப்பு வாதம்

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடும் போது, "தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அவர்கள் ராஜினாமா செய்யும்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை, அதற்குப் பிறகுதான் இந்த வழக்கு எல்லாம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் தரப்பு வாதம்

அதேபோன்று முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கும்போது, "இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ள தொகுதியின் வாக்காளராக இல்லாத ஒரு மனுதாரர் ஒருவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார், அவ்வாறு தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது. 

அனைத்துத் தரப்பினரையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை இன்று காலை தீர்ப்பைத் தள்ளி வைத்திருந்தனர். இன்று மாலை தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தீர்ப்பு விவரம்

  • ஜனநாயக நடைமுறையில் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்த கேள்வி பொருந்தாது.
  • ஆனால் தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது என்பது அரசுப் பணம் செலவிடப்படுவதோடு, ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகும்.
  • எனவே இந்த வழக்கு முடியும் வரை இதில் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் உள்ளது.
  • இதனையடுத்து 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட, தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாகக் கருத வேண்டியதில்லை. 
  • இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு, தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், முதலமைச்சர் விஜய், எம்எல்ஏ-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் மூன்று வாரக் காலத்தில் பதிலளிக்க வேண்டும். 
  • இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

அதுவரை இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதித்து இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0
0
Report

கரூர் கூட்டநெரிசல் : காவல்துறை அலர்ட் செய்யாதது ஏன்? - CM விஜய் கேட்ட கேள்விகள்

Karur, Tamil Nadu:

CM Vijay Karur Speech : கரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கரூரின் வெண்ணெய்மலை பகுதியில் நடந்த தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசினார். 

அப்போது கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்தும் அவர் சில கருத்துகளை தெரிவித்தார். 41 பேர் உயிரிழந்த அச்சம்பவம் தவெகவுக்கு எதிராக தீட்டப்பட்ட சதி என மீண்டும் ஒரு முறை விஜய் பேசியுள்ளார்.

மேலும் அவர் சில கேள்விகளையும் எழுப்பி உள்ளார். "பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டும் என காவல்துறை கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல்துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?.

நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்துவிட்டது காவல்துறையினர்தான். இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனச் சொல்லி பிரஷர் போட்டது யார்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதேநேரத்தில், "நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே... எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என திமுகவை தாக்கி பேசினார்.

மேலும் அவர், "ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மனதளவில் சில காயங்கள், வலிகளை மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும்விட வலியும் காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான்" என்றார்.

நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரான சதியை, சூழ்ச்சியை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

0
0
Report
Advertisement

₹500 முதல் ₹2000-க்குள் இவ்வளவு பயனுள்ள Tech சாதனங்களா? இந்த 6 Gadgets-ஐ மிஸ் பண்ணாதீர்கள்!

Chennai, Tamil Nadu:

Best Tech Accessories Under Rs 2000: இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில், அலுவலகம், வீட்டிலிருந்து வேலை (Work From Home), கல்லூரி, ஆன்லைன் படிப்பு என அனைவருக்கும் சில சிறிய டெக் சாதனங்கள் வேலைகளை மிகவும் எளிதாக்குகின்றன. சந்தையில் நூற்றுக்கணக்கான Tech Accessories கிடைத்தாலும், அவற்றில் உண்மையில் பயனுள்ள மற்றும் பணத்திற்கு மதிப்பான (Value for Money) தயாரிப்புகளை தேர்வு செய்வது சற்று கடினம்.

சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட பல தயாரிப்புகளில் இருந்து, தினசரி பயன்படுத்த ஏற்ற ரூ.500 முதல் ரூ2,000 வரை கிடைக்கும் சிறந்த Tech Accessories பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் Monitor Stand முதல் Rechargeable Battery, Wireless Keyboard, SSD Enclosure, Smart Watch வரை பல பயனுள்ள சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் சிறப்பம்சங்கள், விலை பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம். 

முக்கிய அம்சங்கள்

  • ₹500 முதல் ₹2,000 வரை கிடைக்கும் Value for Money Gadgets
  • வீட்டிலும் அலுவலகத்திலும் பயன்படுத்த ஏற்றவை
  • மாணவர்கள், Professionals மற்றும் Content Creators-க்கு மிகவும் பயனுள்ள Accessories
  • USB-C ஆதரவு கொண்ட நவீன சாதனங்கள்
  • தேவையில்லாத செலவை தவிர்க்க உதவும் பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன

மேலும் படிக்க - 'பூகம்பம் வரப்போகுது, அலர்ட்!!' வெனிசுலா நிலநடுக்கத்திற்கு முன்பே மெசேஜ் அனுப்பிய கூகிள், எப்படி?

1. ஏசர் மானிட்டர் ஸ்டாண்ட்: உங்கள் மேசைக்கு புதிய தோற்றம்

கணினி திரை அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு திரையை சரியான உயரத்தில் வைத்துப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. அதற்காக ஏசர் நிறுவனத்தின் இந்த மானிட்டர் ஸ்டாண்ட் (Acer RGB Monitor Stand) சிறந்த தேர்வாக இருக்கும். இதமூலம் திரையை சரியான உயரத்தில் வைத்துப் பயன்படுத்துவதால் கழுத்து வலி மற்றும் முதுகு வலி குறைய வாய்ப்பு உள்ளது.

சிறப்பம்சங்கள்

  • அழகிய வண்ண ஒளி வசதி
  • நான்கு யூ.எஸ்.பி. இணைப்பு வசதி
  • யூ.எஸ்.பி. டைப்-சி மூலம் இணைக்கலாம்
  • கைப்பேசி வைக்கும் இடம்
  • சிறிய பொருட்களை வைக்க மறைவு பெட்டி
  • தேவைக்கேற்ப அகலத்தை மாற்றிக்கொள்ளலாம்
  • மடிக்கணினி மற்றும் கணினி திரை இரண்டிற்கும் பயன்படுத்தலாம்

விலை:

  • சுமார் ₹1,700 முதல் ₹1,900 வரை.

2. பழைய தட்டச்சு இயந்திர வடிவிலான வயர்லெஸ் விசைப்பலகை

இந்த விசைப்பலகையின் வடிவமைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. பழைய தட்டச்சு இயந்திரத்தைப் போல வட்ட வடிவிலான விசைகள் மற்றும் அழகான தோற்றம் (Vintage Typewriter Style Wireless Keyboard) இதன் சிறப்பம்சமாகும். இது எழுத்தாளர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

முக்கிய அம்சங்கள்

  • புளூடூத் இணைப்பு
  • வயர்லெஸ் இணைப்பு
  • ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களுடன் இணைக்கலாம்
  • கைப்பேசி மற்றும் டேப்லெட்டை வைக்கும் வசதி
  • மென்மையான தட்டச்சு அனுபவம்

விலை: 

  • ₹1,500 முதல் ₹1,700 வரை.

3. ஜி.எம். பல்நோக்கு மின்சார அடாப்டர்

இன்றைய காலத்தில் ஒரே நேரத்தில் பல மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்காக இந்த பல்நோக்கு மின்சார அடாப்டர் (GM Multi Plug Power Adapter) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முக்கிய வசதிகள்

  • மூன்று மின்சார இணைப்பு புள்ளிகள்
  • யூ.எஸ்.பி. டைப்-ஏ
  • யூ.எஸ்.பி. டைப்-சி
  • மின்சார அதிர்விலிருந்து பாதுகாப்பு
  • மின்சாரம் செயல்படுகிறதா என்பதை காட்டும் ஒளி
  • நீளமான கம்பி

விலை: 

  • ₹800 முதல் ₹900 வரை.

4. திரையுடன் வரும் எஸ்.எஸ்.டி. உறை வாங்க வேண்டுமா?

எஸ்.எஸ்.டி. சேமிப்பு (SSD Enclosure) சாதனத்தை வெளிப்புற சேமிப்பாக பயன்படுத்த இந்த உறை உதவுகிறது. இது யாருக்கு தேவைப்படும் எனப்பார்த்தால், திரை வசதி அவசியம் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த தயாரிப்பு பொருத்தமானது.

  • இதில் சிறிய திரை கொடுக்கப்பட்டுள்ளதால், அதன்மூலம்
  • சேமிப்பு திறன்
  • வெப்பநிலை
  • இணைப்பு நிலை போன்ற தகவல்களை காணலாம்.

ஆனால் நடைமுறையில் பார்த்தால் Display இல்லாத SSD Enclosure-க்கும் இதற்கும் Speed-ல் பெரிய வித்தியாசம் இல்லை.

சோதனையில் தெரிய வந்தவை

  • தகவல் பரிமாற்ற வேகம் சிறப்பாக உள்ளது.
  • சேமிப்பு திறனை சரியாக காட்டுகிறது.
  • வெப்பநிலை விவரங்கள் எப்போதும் துல்லியமாக இருக்காது.

விலை: 

  • திரையுடன் - ₹1,500
  • திரை இல்லாமல் - ₹700 முதல் ₹900 வரை.

மேலும் படிக்க - உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பெஸ்ட் 1.5 Ton இன்வெர்ட்டர் ஏசிகள் இவைதான்

5. யூ.எஸ்.பி. டைப்-சி மூலம் சார்ஜ் செய்யக்கூடிய ஏஏ பேட்டரிகள்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த பேட்டரிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இந்த Battery-யின் சிறப்பு என்னவென்றால் தனியாக Charger தேவையில்லை. ஒவ்வொரு Battery-யிலும் நேரடியாக USB Type-C Port கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதை (USB-C Rechargeable AA Batteries) மவுஸ், விசைப்பலகை, ரிமோட், விளையாட்டு சாதனங்கள் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

முக்கிய அம்சங்கள்

  • 1850 மில்லி ஆம்பியர் திறன்
  • நேரடியாக யூ.எஸ்.பி. டைப்-சி மூலம் சார்ஜ் செய்யலாம்
  • நூற்றுக்கணக்கான முறை பயன்படுத்தலாம்
  • தனியாக சார்ஜர் தேவையில்லை
  • மின்னணு கழிவுகளை குறைக்க உதவும்

6. வெளிப்படையான வடிவமைப்பில் ஸ்மார்ட் கைக்கடிகாரம்

சந்தையில் தற்போது Transparent Design கொண்ட Smart Watch-களும் கவனம் பெற ஆரம்பித்துள்ளன. அதாவது வெளிப்புறத்திலேயே உள்ளமைப்பைக் காணக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் (Transparent Smart Watch) வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இதில் உள்ள வசதிகள்

  • 1.83 அங்குல திரை
  • இதயத் துடிப்பு கண்காணிப்பு
  • நடை எண்ணிக்கை
  • உறக்க கண்காணிப்பு
  • அழைப்பு மற்றும் அறிவிப்பு வசதி
  • குறைகள்
  • திரைத் தரம் சாதாரணமாக உள்ளது.
  • கட்டுமானத் தரம் இன்னும் மேம்படுத்தப்படலாம்.

விலை: 

  • ₹1,200 முதல் ₹1,400 வரை.

Tech Accessories சந்தையின் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்

  1. USB Type-C தற்போது அனைத்து சாதனங்களிலும் பொதுவாக மாறி வருகிறது.
  2. Rechargeable Accessories மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
  3. RGB Lighting கொண்ட Desk Setup Accessories அதிகமாக விற்பனையாகின்றன.
  4. Work From Home பயனாளர்களுக்கான Ergonomic சாதனங்களின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
  5. Bluetooth Multi-device Keyboard மற்றும் Portable Accessories அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.
  6. வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
  7. உங்கள் தேவைக்கேற்ற தயாரிப்பை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
  8. அதிக வசதிகள் இருப்பதால் மட்டுமே வாங்க வேண்டாம்.
  9. Warranty மற்றும் Brand Support இருப்பதை உறுதி செய்யுங்கள்.
  10. USB Type-C ஆதரவு உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
  11. Online Review மற்றும் User Rating-களையும் பார்க்கலாம்.

Tech Accessories அட்வைஸ்

குறைந்த செலவில் அதிக பயன் தரக்கூடிய தொழில்நுட்ப சாதனங்களைத் தேடுபவர்களுக்கு இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மானிட்டர் ஸ்டாண்ட், வயர்லெஸ் விசைப்பலகை, பல்நோக்கு மின்சார அடாப்டர் மற்றும் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் மிகவும் சிறந்த தேர்வாகும். அதே நேரத்தில், கூடுதல் வசதிகள் இருப்பதற்காக மட்டும் அதிக விலை கொடுத்து வாங்காமல், உண்மையில் உங்களுக்குத் தேவையான அம்சங்களைப் பொறுத்து தேர்வு செய்வது சிறந்த முடிவாக இருக்கும். இந்த சாதனங்கள் உங்கள் வேலைத் திறனை அதிகரிப்பதோடு, அன்றாட பயன்பாட்டையும் மிகவும் எளிதாக்கும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தயாரிப்புகள் இணையத்தில் கிடைத்த தகவல்கள், பயனர் அனுபவங்கள் மற்றும் பொதுவான தொழில்நுட்ப விவரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. தயாரிப்புகளின் விலை, அம்சங்கள் மற்றும் கிடைக்கும் நிலை காலப்போக்கில் மாறக்கூடும். எந்த தயாரிப்பையும் வாங்குவதற்கு முன் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது விற்பனை தளத்தில் உள்ள விவரங்களை சரிபார்த்து, உங்கள் தேவைக்கேற்ப முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் கட்டுரை தகவல் வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது; குறிப்பிட்ட எந்த தயாரிப்பையும் வாங்க வேண்டும் என்ற பரிந்துரையாக இதை எடுத்துக்கொள்ளக் கூடாது.

மேலும் படிக்க - ரூ.20,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்

0
0
Report

FIFA WC: 'Z' நிறுவனத்திற்கு குவிந்த விளம்பரங்கள்... 95% விற்றுத் தீர்ந்த விளம்பர இடங்கள்!

New Delhi, Delhi:

FIFA World Cup 2026 : பிபா உலகக் கோப்பை தொடரில், முதல்முறையாக இந்த முறைதான் 48 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 12 பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றிருந்தன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

12 பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடித்த 24 அணிகள் நேரடியாக, ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு தகுதிபெற்றன. அடுத்த சிறந்த 8 அணிகளும் ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு தகுதிபெற்றன. தொடர்ந்து, நாக்அவுட் சுற்றுகள் தொடங்கின. ரவுண்ட் ஆப் 32 சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்று நிறைவடைந்தது.

'ஜீ' நிறுவனத்திற்கு குவிந்த விளம்பரங்கள்!

காலிறுதி சுற்றுக்கு தற்போது 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. இந்திய நேரப்படி ஜூலை 10ஆம தேதி முதல் காலிறுதி சுற்று தொடங்குகிறது. 

பரபரப்பான கட்டத்தை பிபா உலகக் கோப்பை தொடர் எட்டியிருக்கும் நிலையில், இத்தொடரின் இந்திய ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ள ஜீ என்டர்டெய்ன்மென்ட் என்டர்பிரைசஸ் நிறுவனம் (ZEEL), விளம்பரதாரர்கள் மூலம் அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜீ நிறுவனத்தின் லீனியர் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் மற்றும் Zee 5 ஓடிடி தளத்தின் பிரீமியம் விளம்பர இடங்கள் மூலம் 95 சதவீதத்திற்கும் மேல் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ளன.

22+ முன்னணி பிராண்டுகள் பார்ட்னர்ஷிப்

ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், எஃப்.எம்.சி.ஜி (FMCG), நிதிச் சேவைகள், ஆடை மற்றும் வாழ்க்கை முறை, இ-காமர்ஸ், ரியல் எஸ்டேட், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 22க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகள் ஜீ நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளன.

நாக்-அவுட் சுற்றுகளின் போது உச்சகட்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க விளம்பரதாரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக, 10 வினாடி பிரீமியம் விளம்பரக் கட்டணம் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

0
0
Report
Advertisement
Advertisement
Back to top