பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
இருட்டு அறையில் அரங்கேறிய ஆணவக் கொலை... UP-யை அதிரவைத்த சம்பவம்..!
Peera Mahua, Uttar Pradesh:Uttarpradesh Honour Killing: உத்திரபிரதேசம் மாநிலம், குஷிநகர் மாவட்டம் பிப்ராகாட் கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் அதேப் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு லாலி மற்றும் ஷீலா என்ற இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். சகோதரிகளான லாலி மற்றும் ஷீலா இருவரும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் அதன்பிறகு வீட்டு வேலை கவனித்து வந்துள்ளனர்.
அதன்பிறகு அதேப் பகுதியை சேர்ந்த இளைஞர்களை இரு சகோதரிகளும் காதலித்து வந்துள்ளனர். இது அவரது தந்தைக்கு தெரியவரவே அவர்களை பலமுறை கண்டித்துள்ளனர். இதனை மகள்கள் கேட்காததால் அவர்கள் இருவரையும் அடித்தே கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலில் விழுந்த சகோதரிகள்:
சகோதரிகள் கடைக்கு செல்லும் போதும் வரும்போதும் அதேப் பகுதியில் இருக்கும் சகோதரர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடையில் நெருக்கமாக மாறி காதலித்து வந்துள்ளனர். வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் குறித்து அவரது தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதனால் காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளார்.
வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள்:
அதனைத் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்கள் வீட்டில் இல்லாதபோது காதலர்களிடம் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதை ஒருகட்டத்தில் தெரிந்துக் கொண்ட தந்தை ராம்பிரசாத், மகள்கள் காதலிக்கும் இளைஞர்கள் வேறுசமூகத்தை சேர்ந்தவர்கள் என்பவர்கள் என்பதால் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தங்களது காதலை தந்தை பிரித்துவிடுவார் என்ற அச்சத்தில் இருந்த பெண்கள் தங்களது காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். உடனடியாக இது குறித்து ராம்பிரசாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே இரண்டு மகள்களையும் தேடி கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர். மீண்டும் காதலர்களுன் பேசி வந்த நிலையில் அடுத்தடுத்து மூன்று முறை தங்களது காதலர்களுடன் ஓடவே இருவரையும் போலீஸார் கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் படிக்க: நெல்லையில் ஆணவக் கொலை? அக்காவை சரமாரியாக வெட்டிய தம்பி.. கொலை நடந்தது எப்படி?
அப்போது, தங்களுடைய மகள் காதலிக்கும் இளைஞர்களுக்கே திருமணம் செய்து வைக்கவும் சொல்லி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதனை தந்தை செய்யாததால், லாலி, ஷீலா ஆகிய இருவம் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த முறை போலீஸிடம் செல்லாத அவர், தனது மகன்களுடன் சென்று தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதன்படி பல இடங்களில் தேடி அவர்களை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆணவக் கொலை செய்த தந்தை:
மகள்களை வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை, அறிவுரை கூறி தங்களது நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத மகள்கள் கடந்த ஜூன் 8-ம் தேதி மீண்டும் தங்களது காதலர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த ராம்பிரசாத் தனது மகன்களுடன் சேர்ந்து அவர்களை தாக்கி தனி அறைக்குள் வைத்து கட்டை மற்றும் லத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்கள் இறந்ததை அறிந்த தந்தை மற்றும் மகன்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
போலீஸார் விசாரணை:
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இறந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தந்தையே மகள்களை அடித்துக் கொலை செய்ததாகவும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த மாதிரி செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பெண்களை காதலித்த இரண்டு இளைஞர்களையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தந்தை மற்றும் மகன்கள் என மூவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேறு சமூக இளைஞர்களை மகள்கள் காதலித்ததால் தந்தையே அவர்களை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் கைது: ஜூன் 9 வரை நீதிமன்றக் காவல்
காலமானார் இயக்குநர் இமயம் பாரதிராஜா... அதிர்ச்சியில் திரையுலகம்
Chennai, Tamil Nadu:Tamil Movie Director Bharathiraja Passed Away: இயக்குனர் இமயம் என போற்றப்படும் தமிழ் சினிமாவின் முதுபெரும் இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். சென்னை நீலாங்கரை உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்திர சோகத்தில் வாடிய பாரதிராஜா
84 வயதான பாரதிராஜா நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உயிரிழந்ததை தொடர்ந்து, பாரதிராஜா கடும் மன அழுத்தத்தில் ஆழ்ந்ததாகவும் தெரிகிறது. மிகுந்த பிரியத்துடன் வளர்த்த மகன் தனது கண் முன்னால் உயிரிழந்தது அவருக்கு தீராத மன வேதனையை கொடுத்திருக்கிறது.
கடைசியாக இயக்கிய படைப்பு
மன வேதனையும், உடல்நலக்குறைவும் பாரதிராஜாவை கடுமையாக பாதித்ததாகவே தெரிகிறது. பாரதிராஜா கடைசியாக இயக்கிய படம், 2020ஆம் ஆண்டு வெளியான 'மீண்டும் ஒரு மரியாதை'. இத்திரைப்படத்தின் தயாரிப்பு 2014ஆம் ஆண்டு தொடங்கி, கொரோனா பெருந்தோற்று இந்தியாவில் உச்சமடைவதற்கு முன், அதாவது 2020 பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது. இருப்பினும் இப்படம் வரவேற்பை பெறவில்லை.
அதேநேரத்தில், Amazon Prime தளத்தில் வெளியான Modern Love Chennai எனும் ஆந்தாலஜி தொடரில் ஒரு 'பறவை கூட்டில் வாழும் மான்கள்' எனும் ஒரு பாகத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே அவரது இயக்கத்தில் வெளியான கடைசி படைப்பு எனலாம்.
பாரதிராஜாவின் முதல் திரைப்படமே, தமிழ் திரையுலகையின் திசையை திருப்பிப் போட்டது. தெக்கத்தி பொண்ணு, அப்பனும் ஆத்தாளும், முதல் மரியாதை உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களையும் பாரதிராஜா இயக்கி உள்ளார்.
கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் இளையராஜா இசையில் 1977ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' தான் பாரதிராஜாவின் முதல் திரைப்படம். தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்பட இயக்குநர் விருதை அப்படத்திற்காக அவர் வென்றார். அடுத்த ஆண்டே கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில், பாரதிராஜா இயக்கிய 'சிகப்பு ரோஜாக்கள்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்பட இயக்குநருக்கான பிலிம்பேர் விருதை வென்றது.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், மண் வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, அந்திமந்தாரை உள்ளிட்ட பல ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு தந்து, ரசிகர்களுக்கு பெரு விருந்து படைத்தவர் பாரதிராஜா. அவர் மொத்தம் 42 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 5 தேசிய விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பாரதிராஜா வென்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பாரதிராஜா படங்களை இயக்கி உள்ளார்.
பாரதிராஜாவின் கதை சொல்லும் முறையும், கிராமத்தின் மண் வாசம் மாறாத காட்சிகளும், முற்போக்கான அம்சங்கள் நிறைந்த கதையும் அவருக்கு தனித்துவமான இயக்குநர் என்ற முத்திரையை பெற்று தந்தது. அதுவே அவரை 'இயக்குநர் இமயம்' என திரையுலகமே போற்ற வழிவகையும் செய்தது.
அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக பாரதிராஜா காத்திரமான, தனித்துவமான பாத்திரங்களை ஏற்று நடித்தும் வந்தார். 30க்கும் மேற்பட்ட தமிழ், மலையாள திரைப்படங்களில் தமிழை பொருத்தவரை கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான 'நிறம் மாறா உலகில்' எனும் திரைப்படம் அவருக்கு நடித்து வெளியான கடைசி படமாக உள்ளது. தொடர்ந்து, மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியான 'துடரும்' திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தஞ்சாவூரில் நாளை (ஜூன் 10) 6 மணி நேரம் மின்தடை: எங்கெல்லாம் பவர் கட்? லிஸ்ட் இதோ
Thanjavur, Tamil Nadu:Thanjavur Power Cut Area List: தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 10, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்திலும் சீரான இடைவெளியில் பல்வேறு துணை மின் நிலையங்களுக்கான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் மின்தடை
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரத் துறையால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அவ்வப்போது தஞ்சாவூரில் சில பகுதிகளில், குறிப்பிட்ட நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. நாளை (ஜூன் 10 ஆம் தேதி, புதன்கிழமை) எங்கெல்லாம் மின் தடை இருக்கும் என்பது பற்றி இங்கே காணலாம்.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தந்த துணை மின் நிலையங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளின் போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (ஜூன் 10, புதன்கிழமை) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம்:
மின்தடை ஏற்படும் நாள்: 10, ஜூன் 2026
மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை
மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை வாங்காத பெண்களே! உங்களுக்ககான மற்றொரு மாத உதவித்தொகை
ஜூன் 10 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் பற்றி இங்கே காணலாம்:
ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 10, 2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளின் விவரம் பின்வருமாறு:
பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் நடக்கவுள்ள மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக, பூண்டி, சாலியமங்கலம், பச்சைக்கோட்டை, பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், திருபுவனம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், மலையர்நத்தம், குடு காடு, கோவிலூர், புலவர் நத்தம், செண்பலபுரம், மேலகொருக்கப்படு, தென்கொண்டார் இருப்பு, ராரா முத்திரக்கோட்டை, கிருஷ்ணாபுரம், வாளமரக்கோட்டை, அருந்தவபுரம், நெய்வாசல், ஆர்சுத்திப்பட்டு, அரு மலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம் பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டாரக்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்.
மேலும் படிக்க | குவாட்டர், பீர் விலை உயரும்? டாஸ்மாக் அதிரடி உத்தரவு.. ரூ.90 வரை கூடுதல் கட்டணம்!
அய்யம்பேட்டை துணை மின் நிலையம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 10, 2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளின் விவரம் பின்வருமாறு:
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் நடக்கவுள்ள மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக, அய்யம்பேட்டை நகரம், கணபதி கரகாரம், வீரமாங்குடி, தேவன்குடி, வழுத்தூர், இளங்கார்குடி, அகர மாங்குடி, வடக்குமாங்குடி, சூலமங்கலம், பசுபதிகோவில், மாத்தூர், வீரசிங்கம்பேட்டை, நெடார், வயலூர், ராமாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்படும்,
தஞ்சாவூரில் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை, சுமார் 6 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆகையால், பொதுமக்கள், முன்னரே குடிநீர் நிரப்பி வைத்தல், மொபைல் போன்கல், லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் செய்து வைத்தல் ஆகிய அத்தியாவசியப் பணிகளை செய்துவைத்துக்கொண்டால் மின்தடை நேரத்தில் அசவுகரியங்களை தடுக்கலாம்.
மேலும் படிக்க | ரூ.1 கோடி வரை தொழில் கடன்: கல்வித்தகுதி தேவையில்லை! தமிழக அரசு
மதுரையில் மாரிதாஸ் கைது... CM விஜய் அதிரடி - திடீர் நடவடிக்கை ஏன்?
Madurai, Tamil Nadu:Youtuber Maridas Arrest : பிரபல யூ-ட்யூபர் மாரிதாஸ், சமீப காலமாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் தொடர்பாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தமிழக அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசிவந்ததை அடுத்து, சென்னை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் மற்றும் மதுரை மாநகர காவல் துறையுடன் இணைந்து மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பிரபல யூ-ட்யூபர் மாரிதாஸை சென்னை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல் துறையினர் அடுத்த கட்ட விசாரணைக்கு பின்னர் முழுமையான விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகின்றது.
Video : சுனாமி அலர்ட்... பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த் நிலநடுக்கம் - இடிந்து விழுந்த கட்டடம்!
Concepcion, Mimaropa:Philippines Earthquake : தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலையில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பபட்டுள்ளது. இதனால், இப்பகுதியைச் சுற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் கடற்கரை ஓரத்தில் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மின்டோ நகரத்திற்கு அருகே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராயச்சி மையம் தெரிவித்துள்ளது. இது கடுமையான நில அதிர்வு மற்றும் சுனாமி குறித்த கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
evastating scene: Jollibee building completely collapses in General Santos, Mindanao after the powerful 7.8 quake.
— Faizan (@FreesoulFaizan) June 8, 2026
Shocking video shows total structural failure rescue efforts now underway.
No casualty reports yet as aftershocks continue.#PhilippinesQuake #Earthquake https://t.co/SIEFxzrqf5 pic.twitter.com/vI7W4z8YHT
முதலில், இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவிலும் பின்னர் 8.2 ரிக்டர் அளவிலும் திருத்தியமைக்கப்பட்டது. பின்னர், அதை 7.8 ரிக்டர் அளவு என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் உறுதிசெய்தது.
அண்ணாமலை இயக்கத்திற்கு மோடியின் ஆசிர்வாதமா...? நயினார் நாகேந்திரன் பேச்சு
Chennai, Tamil Nadu:Nainar Nagenthran Latest News Updates : சென்னையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியது; We The Leaders எனும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியது உள்ளிட்டவை சார்ந்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், "அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி அதற்கான ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர் ஒரு இயக்கத்தை ஆரம்பித்ததாக செய்திகள் நேற்று பார்த்தேன். அதில் பாஜகவின் ஒன்றிரண்டு பொறுப்பாளர்கள் போயிருக்கிறார்கள், நிறைய அடிமட்டத்தில் உள்ள பொறுப்பாளர்கள் போயிருக்கிறார்கள்.
மோடி, அமித்ஷாவின் ஆசி கிடையாது...
ஆனால், அவர்களை ஒரு மூலச்சலவை செய்து, அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோடு தான் நாங்கள் தனி இயக்கம் ஆரம்பிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதே நேரத்தில் இதுவரை இயக்கம் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் ஊடகங்கள் வாயிலாக நான் தெரிவித்து கொள்வது, பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆசியோ தேசியத் தலைவரின் ஆசியோ, யாருடைய ஆசியும் எந்த இயக்கத்திற்கும் கிடையாது" என அறிவித்தார்.
பாஜக, தேசம், இந்த நாடு என்கின்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவை பொருத்தமட்டில் மூத்த தலைவர்கள், முதலமைச்சராக இருந்த கல்யாண சிங், உமா பாரதி உள்பட இன்னும் நிறைய பேர், இந்த இயக்கத்தில் இருந்து வெளியே போய், திரும்ப இந்த இயக்கத்திற்கு வந்ததாகத்தான் வரலாறு இருக்கிறது.
யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்...
பாஜக தொண்டர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள், யாரும் எதையும் நம்பி, நீங்கள் போக வேண்டிய அவசியம் இல்லை. யாருடைய ஆசீர்வாதமும் நிச்சயமாக எந்த இயக்கத்திற்கும் கிடையாது. இயக்கத்தில் இருப்பவர்கள் பாஜக தொண்டர்களாக நிச்சயமாக இருக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சியினுடைய இருப்பவர்கள் மட்டுமே இருக்க முடியும், வேறு எந்த அமைப்புகளிலோ வேறு எந்த அமைப்புகளில் இருக்க முடியாது. ஆகவே யாரும் இதை நம்பி போக வேண்டாம் என்று நான் அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
மேலும் படிக்க | அண்ணாமலை புது இயக்கம் தொடக்கம்..பாஜக ரியாக்ஷன் என்ன? எதிர்பார்ப்பாக ஒன்று!
பாஜகவுக்கு பாதிப்பு கிடையாது...
சில நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணாமலை இயக்கத்திற்கு போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் ஏதாவது பின்னடைவு இருக்குமா?, "இதுவரையிலும் எந்த விதமான பின்னடைவுகளும் கிடையாது. இதனால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டு பேசியது போல பாஜக மிகப்பெரிய கட்சி.
உலகத்திலே மிகப்பெரிய கட்சி இன்னைக்கு மிகப்பெரிய தலைவர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருப்பவர் மோடி. பிரதமர் மோடி வழியில்தான் இன்றைக்கு தமிழக பாஜகவும், அகில இந்திய பாஜகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது" என்றார்.
ராஜினாமாவுக்கு பிறகு எப்படி ஆசிர்வாதம்...
மோடி ஆசியோ இல்லை, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆசியோ இல்லை என்கிறீர்கள், இப்போது டெல்லியில் ஏறத்தாழ ஐந்து நாள் இருந்தார், இப்ப இல்லை என சொல்கிறீர்களே... என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "இல்லை, இல்லை. நீங்கள் ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு எப்படி ஆசி இருக்க முடியும். ஒரு கட்சியில் இருந்து கொண்டு ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்ட பிறகு அவர்கள் போன பிறகு ஆசிர்வாதம் எப்படி இருக்க முடியும்...?" என்றார்.
மேலும் அவர், "பாஜகவின் கடைநிலை கிளை தலைவர் முதல் மாநில நிர்வாகிகள் வரை நான் வேண்டுகோள் வைப்பது, யாரும் எதையும் நம்பி ஏமாற வேண்டாம். பாரதிய ஜனதா கட்சியிலும் இருந்து கொள்ளலாம், இந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளலாம் என்று என்கின்ற எண்ணம் யாருக்கும் வேண்டாம்.
அதை தவிர்த்து நம்முடைய கொள்கையின் அடிப்படையில் பாஜகவில் மட்டுமே உறுப்பினராக இருந்து செயல்பட முடியும் என்பதை என்னுடைய அனைத்து தலைவர்களுக்கும் எங்களுடைய கிளைக் கழகத்தினுடைய பொறுப்பாளர்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்" என நயினார் நாகேந்திரன் பேசினார்.
மேலும் படிக்க | பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியவர்கள் யார் யார்? அண்ணாமலை ஜெயிப்பாரா?
ஜீ குறும்பட போட்டி நிறைவு விழா: வெற்றியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசும்... சினிமா வாய்ப்பும்!
Mumbai, Maharashtra:Zee Short Film Contest 2026 : 'ஜீ' (Z) இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும். அந்த வரையில், ஜீ நிறுவனம் சார்பில் நாடு தழுவிய அளவில் 'ஜீ குறும்பட போட்டி' (Zee Short Film Contest) மும்பை கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் பிரம்மாண்டமாக கோலாகமான முறையில் நடைபெற்றது.
இந்தியாவின் பல மொழிகளைச் சேர்ந்த திரைப்படத் திறமையாளர்களான தேடலாக, அவர்களை கண்டறியும் நோக்கில், நடத்தப்பட்ட ஜீ குறும்பட போட்டியின் இறுதி நிகழ்வில், நாட்டின் முன்னணி இயக்குநர்கள், திரைத்துறையினர் மற்றும் இளம் படைப்பாளிகள் என பல்வேறு தரப்பினர் கந்துகொண்டனர்.
மேலும் படிக்க | “பாலு இல்லாதது வெற்றிடமா இருக்கு..” SPB 80வது பிறந்தநாள்! இளையராஜா உருக்கமாக பதிவு..
நிகழ்ச்சியில் ஹைலைட்ஸ்
டாக்டர் சுபாஷ் சந்திரா வாழ்த்து
Z Entertainment நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா இந்நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர், "இளம் இயக்குநர்கள் தங்களின் படைப்பாற்றலை வளர்த்துக்கொண்டு எதிர்கால சினிமாவை வடிவமைக்க வேண்டும்" என தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
33 ஆண்டுகால பயணம்
இந்நிகழ்வில், Z நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாகிரியான புனித் கோயங்கா பேசும்போது, Z நிறுவனத்தின் 33 ஆண்டுகால கதை சொல்லும் பயணத்தை நினைவு கூர்ந்தார். மேலும் குறும்பட போட்டியில் தேர்வாகியுள்ள இளைஞர்களே, Z குழுமத்தின் அடுத்த தலைமுறை படைப்பாளிகல் என்று கூறி அவர்களை வரவேற்று பேசினார்.
குறும்பட போட்டியின் தேர்வுக்குழு
இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குநர்கள், 8 மொழிப் பிரிவுகளின் கீழ் நடுவர்களாகச் செயல்பட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
- அனுராக் காஷ்யப் - இந்தி
- ரவி ஜாதவர் - மராத்தி
- ஸ்ரீஜித் முகர்ஜி - பெங்காலி
- பி. சமுத்திரக்கனி - தமிழ்
- ஹேமந்த் ராவ் - கன்னடம்
- லிஜோ ஜோஸ் பெல்லிசேரி - மலையாளம்
மேலும் படிக்க | விஜய் பெயரை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி! வெகுண்டெழுந்த ரசிகர்கள்..சூர்யா போட்ட பாேஸ்ட்
இளம் படைப்பாளிகளுடனான விவாதம்
பிரபல திரை விமர்சகர் ராஜீவ் மசந்த் நடத்திய கலந்துரையாடலில், இந்த இயக்குநர்கள் கலந்துகொண்டு பிராந்திய சினிமா, தொழில்நுட்பம் மற்றும் இந்திய சினிமாவின் எதிர்காலம் குறித்துப் பேசினார்.
பரிசு விவரங்கள்
இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு மொழியிலும் ஒரு குறும்படம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. டாக்டர் சுபாஷ் சந்திரா வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளை அறிவித்தார். அவை கீழ்வருமாறு:
- முதலிடம் பிடித்த சிறந்த குறும்படம் (ஒவ்வொரு மொழியிலும்): தலா ரூ. 5 லட்சம்
- இரண்டாம் இடம் பிடித்த குறும்படம் (ஒவ்வொரு மொழியிலும்): தலா ரூ. 2.5 லட்சம்
- நடிகர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் நடுவர் விருதுகள் என சிறப்பு பரிசுகளுக்கு ஒவ்வொருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் வெற்றியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
கதை சொல்லும் வாய்ப்பு
ரொக்கப் பரிசை வழங்கியதை மட்டுமின்றி, இளம் படைப்பாளிகள் திரையுலகில் நுழைவதற்கான புதிய வாய்ப்பையும் இந்த போட்டி உருவாக்கி கொடுத்தது. அதாவது, ஒவ்வொரு மொழியிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வெற்றியாளர்கள், தங்களின் முழுநீளத் திரைப்படத்தின் (Feature Film) கதையை Zee Studios நிறுவனத்திடம் விவரிக்கும் (Pitch) வாய்ப்பு வழங்கப்படும்.
அதில் தேர்வு ஆகும் ஒரு கதை, Zee Studios தயாரிப்பில் இளம் திரைப்படமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் படைப்பாளிகள் குறும்படங்களில் இருந்து நேரடியாக பெரிய திரைக்குள் நுழைவதற்கான ஒரு சில பாலமாக 'ஜீ குறும்பட போட்டி' அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | டெய்லர் to தேசிய விருது வின்னர்..யார் இந்த இந்திரன்ஸ்? முழு விவரம்...
சூர்யவன்ஷிக்கு அடிச்சது ஜாக்பாட்... கேப்டனாகும் ஷ்ரேயாஸ் ஐயர் - இந்திய ஸ்குவாட் அறிவிப்பு
Mumbai, Maharashtra:Team India Squad Announcement : இந்திய அணி வரும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து அணியுடன் 5 டி20ஐ போட்டிகள், அயர்லாந்து அணியுடன் 2 டி20ஐ போட்டிகளை விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி 15 பேர் கொண்ட ஸ்குவாட் இன்று (ஜூன் 6) அறிவிக்கப்பட்டது. அதேபோல், செப்டம்பர் மாதம் ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளதால், அதற்கான ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், டி20ஐ தொடரில் இருந்து மொத்தமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு அணியிலேயே இடமில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று தொடர்களிலும் கேப்டனாக செயல்படுகிறார், திலக் வர்மா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Presenting #TeamIndia's T20I squads for the tours of England & Ireland 202#ENGvIND | #IREvIND pic.twitter.com/f84kSSAIDf
— BCCI (@BCCI) June 6, 2026
மேலும், மூன்று தொடர்களிலும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார். இதன்மூலம், இந்திய தேசிய அணியில் மிக இளம் வயதில் வாய்ப்பு கிடைத்த வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.
Here's a look at #TeamIndia's squad for the Asian Games 2026 in Japan this Sep#AsianGames pic.twitter.com/euMfmhWEcN
— BCCI (@BCCI) June 6, 2026
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள், அதிக ஸ்ட்ரைக் ரேட் என பல சாதனைகளை வைபவ் சூர்யவன்ஷி படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை: 15 வயது பள்ளி மாணவன் கழுத்தறுத்துக் கொலை - கண்மாய் பகுதியில் நடந்தது என்ன?
Sivaganga, Tamil Nadu:Sivagangai Murder: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் பகுதியைச் சேர்ந்த நாகாராஜ் என்பவர் அதேப் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். இவர் அதேப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நண்பர்களுடன் மது அருந்திய சிறுவன்:
அஸ்வின் கடந்த வியாழக்கிழமை (மே-2) பள்ளிக்குச் செல்வதாக சொல்லிவிட்டு டிப்ளமோ படிக்கும் 17 வயதான தனது நண்பருடன் ஊர் சுற்ற சென்றுள்ளார். அதன்பிறகு அவர் பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுவன் மூலம் அவர்களது நண்பர்களான அரவிந்த்(25) மற்றும் கணேசன்(22) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அன்றைய தினம் இவர்கள் மூன்று பேருடன் ஒரே பைக்கில் ஒன்றாக சுற்றிய நிலையில், அன்று மாலை அரவிந்த் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் கீழக்காவனிப்பட்டி கண்மாய் அருகே மது அருந்தியுள்ளனர். பிறகு அவர்கள் அந்த சிறுவனை மது அருந்தும்படி வலுக்கட்டாயமாக வற்புறுத்தியாக தெரிகிறது. மது அருந்த மாட்டேன் என்று அஸ்வின் தெரிவிக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அமைதியாக இருந்துள்ளனர்.
10-ம் வகுப்பு மாணவன் கொலை:
மது அருந்தும்போது மீண்டும் அந்த சிறுவனை மது அருந்தும்படி அவர்கள் இருவரும் வற்புறுத்தியுள்ளனர். இதனை தட்டிக்கழித்த அந்த சிறுவனுடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது தகராறாக மாறியுள்ளது. பின்னர் போதை தலைக்கேறிய அவர்கள், அந்த சிறுவனை தாக்கியுள்ளனர். இதனைப் பார்த்த அந்த சிறுவனின் நண்பரான 17 வயது சிறுவன் சற்று தூரம் விலகிச் சென்றுள்ளார். பின்னர், அரவிந்த் தான் வைத்திருந்த கத்தியைக் கொண்டு அந்த சிறுவனை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டுச் சென்ற அவரது நண்பர் அஸ்வின் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக சிறுவனின் உடலை அங்கிருந்த கண்மாயில் போட்டுவிட்டு அவர்கள் அங்கிருந்து அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் அவரை எச்சரித்து அவரது வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
போலீஸில் புகார்:
நண்பர் கொலையுண்ட சம்பவத்தில் இருந்து மீளாத அந்த சிறுவன் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அவரின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அருகிலிருந்த கண்மாயில் கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
பின்னர் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மகன் இறந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்தது. உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை:
இந்த கொலை குறித்து அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் தெரிவித்ததாவது, நாங்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை பள்ளிகுச் செல்லாமல் ஊர் சுற்ற வெளியே சென்றதாகவும், அப்போது வெளியில் தனக்கு நெருங்கிய நண்பர்களை சந்தித்ததாகவும், அப்போது அவர்களுடன் ஒரே பைக்கில் நான்கு பேரும் சென்று ஊர் சுற்றியதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அரவிந்த் மற்றும் கணேசன் மது அருந்தியதாகவும் மது அருந்தும்போது சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்கள் சிறுவனை குத்திக் கொலை செய்துவிட்டு, இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியதாகவும் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தை பெற்ற போலீஸார் தப்பியோடிய கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களை தேடி வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்ற ஊர் சுற்ற சென்ற நிலையில், மது அருந்தும்போது தனது நண்பர்களாலேயே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018க்கு பின்... இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் - பிளேயிங் XI, நேரலை விவரங்கள் இதோ
Tira, Punjab:India vs Afghanistan Test : ஐபிஎல் முடிந்ததும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனிப்போடும் வகையில் அடுத்தடுத்து சர்வதேச போட்டிகள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இந்திய அணி வீரர்களும் ஆப்கானிஸ்தான் தொடருக்கு தயாராகிவிட்டனர். டி20ஐ தொடர் முடிந்த உடனேயே தற்போது ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இடம்பெறவில்லை. எனவே, இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் கணக்கிடப்படாது. அந்த வகையில், இப்போட்டி குறித்த முழு விவரங்கள் இதோ...
மேலும் படிக்க | விராட் கோலி காயம்... ஆனால் ஆர்சிபி, சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி - ஏன் தெரியுமா?
இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெறும் மைதானம்
பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகர் நகரில் முலான்பூர் பகுதியில் உள்ள மஹாராஜா யதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற இருக்கிறது.
இதுவரை இங்கு டெஸ்ட் போட்டியே நடைபெற்றது இல்லை. சமீபத்தில், ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் (மே 27), குவாலிபயர் 2 (மே 29) போட்டிகள் இம்மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நேரம்
- நாளை (ஜூன் 6) தொடங்கி அடுத்த 5 நாள்களுக்கு, அதாவது வரும் புதன்கிழமை (ஜூன் 10) இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நடைபெறும்.
- தினமும் காலை 9.30 மணிக்கு தொடங்கி, மாலை 4.30 மணிவரை ஆட்டம் நடைபெறும்.
- ஒருவேளை ஆட்டம் நீட்டிக்கப்பட்டால் மாலை 5 மணிவரை நடைபெறும்.
- நாளை முதல் நாள் ஆட்டத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு டாஸ் வீசப்படும்.
மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவுக்கு டாட்டா காட்டும் பிசிசிஐ... கம்பீர் எடுக்கும் முடிவு என்ன?
இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் செஷன் விவரம்
- முதல் செஷன் : காலை 9.30 - பகல் 11.30 மணிவரை
- மதிய உணவு இடைவேளை: பகல் 11:30 - மதியம் 12:10 மணிவரை
- இரண்டாவது செஷன்: மதியம் 12:10 - மதியம் 2:10 மணிவரை
- தேநீர் இடைவேளை: மதியம் 2:10 - மதியம் 2.30 மணிவரை
- மூன்றாவது செஷன்: மதியம் 2.30 - மாலை 5 மணிவரை
இந்தியா - ஆப்கானிஸ்தான் நேரலை விவரங்கள்
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரடி ஒளிபரப்பு காணலாம்.
இந்தியா பிளேயிங் XI கணிப்பு:
கேஎல் ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷ் தூபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், குர்னூர் பிரர்.
ஆப்கானிஸ்தான் பிளேயிங் XI கணிப்பு:
ஹஷ்ஸமத்துலா ஷாஹிதி (கேப்டன்), அஃப்சர் ஜசாய், அப்துல் மாலிக், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லாஹ் உமர்சாய், ஷரபுதீன், அஷ்ரஃப் ஜியாவுர், ரஹ்மான் ஷரீபி, கைஸ் அஹ்மத், பிலால் சமி, முகமது சலீம் சஃபி.
மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் நீக்கம்? ஸ்ரேயாஸ் இடத்தை தட்டிப்பறிக்கும் ரஜத் படிதார்
அண்ணாமலைக்கு கரு. நாகராஜன் ஆதரவு... பாஜகவுக்கு டாட்டா - அடுத்து வரப்போவது யாரு?
Chennai, Tamil Nadu:Annamalai We The Leaders Movement : பாஜகவின் மாநில துணைத் தலைவரான கரு. நாகராஜன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் இருந்து விலகி, அண்ணாமலை இன்று தொடங்கியிருக்கும் We The Leaders எனும் புதிய இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் மட்டுமல்ல, யார் தவறு செய்தாலும் அண்ணாமலை சுட்டிக்காட்டுவார் என்றும் அனைத்து துறைகள் பற்றி அறிந்த, ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர் அண்ணாமலை என்றும் கரு. நாகராஜன் பேசியிருக்கிறார்.
கட்சி தொடங்கும் ரஜினி...? லதா தொடங்கிய புதிய இயக்கம் - இணைவது எப்படி?
Chennai, Tamil Nadu:Latha Rajinikanth Makkal Medai : மக்கள் மேடை என்ற பெயரில், தனியாக இயக்கம் ஒன்றை தொடங்கி இருப்பதாக பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா அறிவித்துள்ளார். அண்ணாமலை இன்றுதான் அவரது புதிய அரசியல் இயக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், லதா ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் ஒன்றிணைவோம். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் இயக்கத்தில் இணையலாம் என லதா ரஜினிகாந்த் அழைப்பு வெளியிட்டுள்ளார்.
மக்கள் மேடை என்ற அவரது இயக்கத்தில் தொலைப்பேசி எண்: 7550080515, மின்னஞ்சல் முகவரி: makkalmedaitn12@gmail.com ஆகியவை மூலம் தொடர்புகொண்டு இணையலாம் என லதா ரஜினிகாந்த், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய கட்சி தொடக்கம்... அடுத்த தேர்தலில் போட்டி - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு
Chennai, Tamil Nadu:Annamalai New Party Announcement : தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து இன்று அதிகாரப்பூர்வமாக விலகினார். இதைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் சமூக வலைதளங்களின் வழியாக மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதில், புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க இருப்பதாக அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழ்நாட்டின் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும், தமிழகத்தில் இன்றும் புதிய கட்சிக்கான தேவை உள்ளது. ஆனந்தமாக புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார்.
An Important Announcement https://t.co/IcEnfaZGRK
— K.Annamalai (@annamalai_k) June 5, 2026
இன்று முதல் புதிய பாதை, புதிய இயக்கம். ரஜினி இயக்கத்தில் இணைய வாய்ப்பு வந்தது. ரஜினி 2020ஆம் ஆண்டில் என்னை அவரது கட்சியில் சேர அழைத்தார். ரஜினி அழைப்பை ஏற்காமல் நான் பாஜகவில் இணைந்தேன்.
புதிய பாதையை உருவாக்க 18 ஆண்டுகள் போராடினேன். சொல்விட்டு விலகுவதே தமிழர் பண்பு. தமிழ் பண்பாட்டை ஒருபோதும் நான் விட்டு கொடுத்ததில்லை. தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தேன்.
தவெக எம்.எல்.ஏ-வை 'Ego Attack'செய்த மேயர் - குத்துவிளக்கு ஏற்றுவதில் வெடித்த மோதல்..!
Chennai, Tamil Nadu:MLA Pallavi and Mayor Priya Clash: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்ற பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றுவதில், மேயர் பிரியா மெழுகுவர்த்தியை தவெக எம்.எல்.ஏ-விடம் தர மறுத்து புறக்கணித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பொதுமக்களும், நெட்டிசன்களும் சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு விழா:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் - 4) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள உருதுப் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக மாநகராட்சி இணை ஆணையர் கற்பகம், மேயர் பிரியா, எம்.எல்.ஏ பல்லவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மேயர் பிரியா, அதனைத் தொடர்ந்து வகுப்பறையில் குத்துவிளக்கேற்றி நிகழ்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு
தவெக எம்.எல்.ஏ-வை புறக்கணித்த மேயர்:
இந்த நிகழ்ச்சியில் முதலில் குத்துவிளக்கேற்றிய மேயர் அதனைத் தொடர்ந்து பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி அவரிடம் இருந்து மெழுகுவர்த்தி வாங்க கை நீட்டியும் அவர் தராதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்லவியிடம் மெழுகுவர்த்தியை தராமல், அவருக்கு அடுத்ததாக நின்றுக் கொண்டிருந்த இணை ஆணையரிடம் வலுக்கட்டாயமாக மெழுகுவர்த்தியைக் கொடுத்து குத்துவிளக்கு ஏற்றவைத்தார். இதனால் அவமனாத்திற்குள்ளான அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் குறித்து மேயர் பிரியா மீது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
2-வது நிகழ்ச்சி:
பள்ளி வகுப்பறைக் கட்டிட திறப்பு விழாவில் தான் அவமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த வெளியேறிய எம்.எல்.ஏ அதன்பிறகு அடுத்த கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கும் மேயர் பிரியாவே ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிலையில், அடுத்ததாக குத்துவிளக்கையும் முதல் ஆளாக அவரே ஏற்றி வைத்தார்.
முதல் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட தவெக எம்.எல்.ஏக்கு அடுத்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றுமாறு மேயர் பிரியா அவரிடம் மெழுகுவர்த்தியை வழங்கியுள்ளார். ஆனால் முதல் நிகழ்ச்சியில் தான் புறக்கணிக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கை ஏற்றாமல், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து அவர் சென்றுவிட்டார்.
மேலும் படிக்க: ரூ.5,000 அபராதம்.. லைசன்ஸ் பெற ஜூன் 15 கடைசி நாள்.. சென்னை மாநகராட்சி அலர்ட்
எம்.எல்.ஏ பல்லவி செய்தியாளர்கள் சந்திப்பு:
பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் தான் புறக்கணிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிய அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம் தொகுதியில் இதுவரை எதுவும் முறையாக செய்யப்படவில்லை, கடந்த ஆட்சியில் அனைத்தையும் செய்வதாகவும், செய்துவிட்டதாகவும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள், இந்த முறை நாங்கள் களத்தில் பணியாற்ற இருக்கிறோம், தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்தையும் சீரான முறையில் செய்து தருவோம் என்று தெரிவித்தார்.
‘கடந்த ஆட்சியில் அதிகார திமிரில் இருந்த அவர்கள், இன்னமும் நாங்கள் தான் என்று ஆணவத்திலும் திமிரிலும்’ இருக்கின்றார்கள். இவர்களின் செயல்கள் மக்களுக்கு தெரியும். இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை, விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை என்று நாங்கள் இருக்கிறோம். எங்கள் தளபதியே அனைவரையும் அமைதியாக கையாள்கிறார், அதுபோல தான் நாங்களும் இருக்க வேண்டும், அவர்கள் ஆடுகிறார்கள் என்று நாங்களும் ஆடினால் அவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும், அதனால் தளபதி வழியிலேயே நாங்களும் பயணிப்போம் என்றும் கூறினார்.
மேயர் பிரியா விளக்கம்:
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பல்லவி பொது நிகழ்ச்சியில் புறக்கணிப்பட்டது குறித்து மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சிக்கு வந்து என்னுடன் சேர்ந்து ரிப்பன் வெட்டினார். அதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் மேயர் என்ற முறையில் தான் முதலில் குத்துவிளக்கு ஏற்றியதாகவும், நான் ஏற்றியவுடன் எண்ணிடம் இருந்து மெழுகுவர்த்தியை அவர் வாங்க முற்பட்ட போது, புரோட்டோகால்படி அருகில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான மாநகராட்சி இணை ஆணையர் கற்பகத்திடம் வழங்கியதாகவும், இந்த நிலையில் தான் அவர் தானாக வந்து மெழுகுவர்த்தி வாங்க கை நீட்டியதாகவும் தெரிவித்தார்.
புரோட்டோக்கால் விதிமுறைகள் அவர்களுக்கு தெரியாமல் ரியாக்ட் செய்கிறார்கள், பொது நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகளை அவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். அடுத்ததாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நிலையில், அதனை அவர் ஏற்க மறுத்தார் என்பதும், முந்தைய நிகழ்ச்சியில் நடைபெற்றதை மனதில் வைத்துக் கொண்டு அவர் இவ்வாறு நடந்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
நெட்டிசன்கள் கேள்வி:
இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நெட்டிசன்கள், “ஒரு பொது நிகழ்வில் மெழுகுவர்த்தியை வாங்கக் கை நீட்டும்போது கொடுப்பது தான் மரியாதை. கை நீட்டியவரிடம் கொடுக்க மறுத்து அடுத்தவரிடம் வலுக்கட்டாயமாக ஏற்றும்படி வற்புறுத்துவதுதான் மரியாதையா?
தேர்தல் முடிவுகள் வெளியாகியதிலிருந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெளியில் வராத பிரியா இப்போது வெளியில் வந்து கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என்றும், புரோட்டாக்கால் தெரியும் அவர்களுக்கும், சபை நாகரிகம் தெரியவில்லையா? என்று நெட்டிசன்கள் பிரியாவிடம் சமூக வலைத்தளங்களில் சரமாரியாக கேள்வியெழுப்பி வருகின்றனர்.
பாஜக தவெக ஒரே மாதிரி இருக்கிறதா? போட்டு உடைத்த சு.வெங்கடேசன் எம்.பி.. பரபரப்பு மேட்டர்
Madurai, Tamil Nadu:S. Venkatesan Mp On TVK: அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ரயில்வே துறை அதிகாரிகள் பொறியாளர்கள் மற்றும் மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடிக்கு புதிய ரயில் தடம்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ”மதுரை தூத்துக்குடிக்கு புதிய ரயில்வே தடம் 2600 கோடி மதிப்பீட்டில் அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி புதிய வழித்தடம் என்பது தூத்துக்குடி துறைமுகத்திற்கான முக்கியமானது. இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதற்கான நில எடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது. மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
375 கோடி ரூபாய் செலவில் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே நிலைய விரிவாக்க பணிகள் நடந்துவரும் நிலையில் 3ஆவது முறையாக ஆய்வு செய்துள்ளேன். இந்த பணி திட்டம் 2027 மார்ச் மாதத்திற்கு முடிவடையும். 50 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டது. மார்ச் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக அனைத்து பணிகளும் முடிந்துவடையும். 40 ஆண்டுகால எதிர்கால திட்டத்தை நோக்கி இந்த பணிகள் நடைபெறுகிறது. விமான நிலையத்துக்கு இணையாக மதுரை ரயில்வே நிலைய விரிவாக்க பணிகளில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் படிக்க: திமுக நாசமா போனதுக்கு காரணமே திமுககாரன் தான்... Ex மினிஸ்டர் மூர்த்தி தடாலடி பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், ”வந்தே மாதரம் அரசாணை ஒன்றிய அரசு செய்திருக்கக்கூடிய மகா பாதகமான செயல். ஒருவர் உதடு என்ன பாடல் பாட வேண்டும் என்பதை மோடியும் அமித்ஷாவும் தீர்மானிக்க முடியாது. எனவே வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்ற சுற்றறிக்கை என்பது அரசியல் சாசனம் சொல்லியிருக்க கூடிய மத சுதந்திரத்திற்கு எதிரானது. அதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. வந்தே மாதரம் பாடலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. சட்டமன்றத்தில் வந்தே மாதரம் பாடலை அனுமதிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்
CBSE தேர்வு முறைகேடு 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர் எவ்வளவு பெரிய கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அரங்கேறியிருக்கிறது. CBSE தேர்வு தாள் மதிப்பீட்டு பணிக்கு ஏற்கனவே பல தவறுகளை செய்த மோசடியான நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை கொடுக்க ஒன்றிய அரசு செய்திருக்கிற திட்டமிடல் சதி பயங்கரமாக உள்ளது அந்த நிறுவனம் வர வேண்டும் என்பதற்காக கருப்பு பட்டியல் விதியை மாற்றியிருக்கிறார்கள்.
ஒரு மோசடி நிறுவனத்தை இங்கே உள்ள அனுமதிப்பதற்காகவே விதிகள் அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் 27 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். பெட்ரோல், கேஸ் விலை உயர்வு வேலை வேலையின்மை இந்த பிரச்சனைகளை திசை திருப்புவதற்கு வந்தே மாதரம் பாடலை பாடுகிறாயா இல்லையா என வெறுப்பு அரசியலை மையப்படுத்தி மாற்றுவதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு எதிராக தொடர்ந்து எதிர் வினையாற்றுவோம்" என்று கூறினார்.
| பேட்டியின் முக்கிய அம்சங்கள் | விமர்சனங்கள் |
| சிபிஎஸ்இ தேர்வு | தேர்வுத்தாள் மதிப்பீட்டு ஒப்பந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தார் |
அமைச்சர் ராஜினாமா கோரிக்கை |
CBSE முறைகேட்டுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் |
| தவெக அரசின் செயல்பாடு | த.வெ.க. அரசு நல்லது செய்தால் வரவேற்போம்; தவறு செய்தால் விமர்சிப்போம் என்றார் |
| திமுகவின் குற்றச்சாட்டு | பா.ஜ.க.வும் த.வெ.க.வும் ஒரே மாதிரி என்பது திமுகவின் பார்வை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வை அல்ல |
பா.ஜ.கவும் த.வெகவும் ஒரே மாதிரி இருக்கிறது
புது அரசு எந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்பதில்லை என்ற திமுகவின் குற்றச்சாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன் எம்.பி, ”திமுகவின் விமர்சனத்திற்கு த.வெ.கவிடம் தான் பதில் கேட்க வேண்டும்/ இந்த அரசு புதிய அரசு பொறுப்பேற்றியிருக்கிறது கட்சி தொடங்கிய மூன்றாவது ஆண்டில் மக்கள் ஆதரவை பெற்று ஆட்சி பொறுப்பேற்று இருக்கிறார்கள். ஒரு உரிய கால அவகாசம் செயல்பாடுகளை கவனிக்க வேண்டியது இயற்கையான நியதி.
த.வெ.க அரசு நல்லது செய்தால் வரவேற்போம். நல்லது செய்யவில்லை என்றால் விமர்சிப்போம். அல்லாததை செய்தால் எதிர்ப்போம். எங்கள் எதிர்ப்பையும் மீறி அல்லாததை நிறைவேற்றினால் களத்தில் இறங்கி மக்களை திரட்டி போராடுவோம். பா.ஜ.கவும் த.வெகவும் ஒரே மாதிரி இருக்கிறது என்பது திமுகவின் பார்வை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்வை அல்ல.
பாஜக அல்லாத அரசுகளை பாதுகாப்பதும் அந்த மாநிலங்களில் பாஜகவின் வெறுப்பு தத்துவத்தை விதைக்க விடாமல் தடுப்பதும் என்பது அரசியல் நிலைப்பாடும். அந்த வகையில் தான் அந்த வகையில் தான் இந்த தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானது.
ஒவ்வொரு மாநிலத்திலும் பத்து சதவீதம் வாக்குகளை பெறுகிற வரை தான் பாஜக கொஞ்சமாக வளரும் பத்து சதவீத தாண்டி விட்டால் பன்மடங்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும் என பாஜகவின் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தியாவின் முழுக்க அதுதான் நடந்துள்ளது அந்த பார்முலா உடைக்கப்பட்டுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு. கடந்த நாடாளுமன்ற தேர்தல் 12.8 சதவீதம் பெற்ற பாஜக இந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு சதவீதம் வந்துள்ளது.
பாஜகவினுடைய அந்த வெறுப்பு அரசியலை மிகப்பெரிய அளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் புறம் தள்ளியிருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டு அரசியல் தத்துவார்த்த வளர்ச்சி மிக முக்கியமான பகுதி. இதனை வளர்த்தெடுக்க வேண்டும். இதனை வளர்த்தெடுக்குற அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும். ஆனால் சமரசமற்ற அணுகு முறையை கம்யூனிஸ்டுகள் இடதுசாரிகள் செய்து கொண்டே இருக்கிறோம்” என்றார்.
