icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

சூர்யவன்ஷிக்கு அடிச்சது ஜாக்பாட்... கேப்டனாகும் ஷ்ரேயாஸ் ஐயர் - இந்திய ஸ்குவாட் அறிவிப்பு

Mumbai, Maharashtra:

Team India Squad Announcement : இந்திய அணி வரும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து அணியுடன் 5 டி20ஐ போட்டிகள், அயர்லாந்து அணியுடன் 2 டி20ஐ போட்டிகளை விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி 15 பேர் கொண்ட ஸ்குவாட் இன்று (ஜூன் 6) அறிவிக்கப்பட்டது. அதேபோல், செப்டம்பர் மாதம் ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளதால், அதற்கான ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், டி20ஐ தொடரில் இருந்து மொத்தமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு அணியிலேயே இடமில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று தொடர்களிலும் கேப்டனாக செயல்படுகிறார், திலக் வர்மா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மூன்று தொடர்களிலும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார். இதன்மூலம், இந்திய தேசிய அணியில் மிக இளம் வயதில் வாய்ப்பு கிடைத்த வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள், அதிக ஸ்ட்ரைக் ரேட் என பல சாதனைகளை வைபவ் சூர்யவன்ஷி படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
Report

சிவகங்கை: 15 வயது பள்ளி மாணவன் கழுத்தறுத்துக் கொலை - கண்மாய் பகுதியில் நடந்தது என்ன?

MMathan5h ago
Sivaganga, Tamil Nadu:

Sivagangai Murder: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் பகுதியைச் சேர்ந்த நாகாராஜ் என்பவர் அதேப் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். இவர் அதேப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நண்பர்களுடன் மது அருந்திய சிறுவன்:

அஸ்வின் கடந்த வியாழக்கிழமை (மே-2) பள்ளிக்குச் செல்வதாக சொல்லிவிட்டு டிப்ளமோ படிக்கும் 17 வயதான தனது நண்பருடன் ஊர் சுற்ற சென்றுள்ளார். அதன்பிறகு அவர் பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுவன் மூலம் அவர்களது நண்பர்களான அரவிந்த்(25) மற்றும் கணேசன்(22) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருநெல்வேலி அருகே பயங்கரம்: மது அருந்துவதை தட்டிக்கேட்ட தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகன்..!

அன்றைய தினம் இவர்கள் மூன்று பேருடன் ஒரே பைக்கில் ஒன்றாக சுற்றிய நிலையில், அன்று மாலை அரவிந்த் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் கீழக்காவனிப்பட்டி கண்மாய் அருகே மது அருந்தியுள்ளனர். பிறகு அவர்கள் அந்த சிறுவனை மது அருந்தும்படி வலுக்கட்டாயமாக வற்புறுத்தியாக தெரிகிறது. மது அருந்த மாட்டேன் என்று அஸ்வின் தெரிவிக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அமைதியாக இருந்துள்ளனர்.

10-ம் வகுப்பு மாணவன் கொலை:

மது அருந்தும்போது மீண்டும் அந்த சிறுவனை மது அருந்தும்படி அவர்கள் இருவரும் வற்புறுத்தியுள்ளனர். இதனை தட்டிக்கழித்த அந்த சிறுவனுடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது தகராறாக மாறியுள்ளது. பின்னர் போதை தலைக்கேறிய அவர்கள், அந்த சிறுவனை தாக்கியுள்ளனர். இதனைப் பார்த்த அந்த சிறுவனின் நண்பரான 17 வயது சிறுவன் சற்று தூரம் விலகிச் சென்றுள்ளார். பின்னர், அரவிந்த் தான் வைத்திருந்த கத்தியைக் கொண்டு அந்த சிறுவனை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டுச் சென்ற அவரது நண்பர் அஸ்வின் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக சிறுவனின் உடலை அங்கிருந்த கண்மாயில் போட்டுவிட்டு அவர்கள் அங்கிருந்து அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் அவரை எச்சரித்து அவரது வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: Viral Video: சாக்குமூட்டையில் குழந்தையை அடைத்த பணியாளர்.. தென்காசி அங்கன்வாடி மையத்தில் ஷாக்

போலீஸில் புகார்:

நண்பர் கொலையுண்ட சம்பவத்தில் இருந்து மீளாத அந்த சிறுவன் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அவரின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அருகிலிருந்த கண்மாயில் கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

பின்னர் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மகன் இறந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்தது. உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை:

இந்த கொலை குறித்து அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் தெரிவித்ததாவது, நாங்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை பள்ளிகுச் செல்லாமல் ஊர் சுற்ற வெளியே சென்றதாகவும், அப்போது வெளியில் தனக்கு நெருங்கிய நண்பர்களை சந்தித்ததாகவும், அப்போது அவர்களுடன் ஒரே பைக்கில் நான்கு பேரும் சென்று ஊர் சுற்றியதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் மற்றும் கணேசன் மது அருந்தியதாகவும் மது அருந்தும்போது சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்கள் சிறுவனை குத்திக் கொலை செய்துவிட்டு, இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியதாகவும் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தை பெற்ற போலீஸார் தப்பியோடிய கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களை தேடி வருகின்றனர்.

பள்ளிக்குச் சென்ற ஊர் சுற்ற சென்ற நிலையில், மது அருந்தும்போது தனது நண்பர்களாலேயே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: CM விஜய் தொகுதியில் ஷாக்! பெரம்பூரில் சூட்கேஸில் கிடந்த தலையில்லாத சடலம்.. குலைநடுங்கிய மக்கள்

 

0
0
Report

2018க்கு பின்... இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் - பிளேயிங் XI, நேரலை விவரங்கள் இதோ

Tira, Punjab:

India vs Afghanistan Test : ஐபிஎல் முடிந்ததும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனிப்போடும் வகையில் அடுத்தடுத்து சர்வதேச போட்டிகள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இந்திய அணி வீரர்களும் ஆப்கானிஸ்தான் தொடருக்கு தயாராகிவிட்டனர். டி20ஐ தொடர் முடிந்த உடனேயே தற்போது ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. 

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இடம்பெறவில்லை. எனவே, இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் கணக்கிடப்படாது. அந்த வகையில், இப்போட்டி குறித்த முழு விவரங்கள் இதோ...

மேலும் படிக்க | விராட் கோலி காயம்... ஆனால் ஆர்சிபி, சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி - ஏன் தெரியுமா?

இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெறும் மைதானம்

பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகர் நகரில் முலான்பூர் பகுதியில் உள்ள மஹாராஜா யதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற இருக்கிறது. 

இதுவரை இங்கு டெஸ்ட் போட்டியே நடைபெற்றது இல்லை. சமீபத்தில், ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் (மே 27), குவாலிபயர் 2 (மே 29) போட்டிகள் இம்மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நேரம்

  • நாளை (ஜூன் 6) தொடங்கி அடுத்த 5 நாள்களுக்கு, அதாவது வரும் புதன்கிழமை (ஜூன் 10) இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நடைபெறும். 
  • தினமும் காலை 9.30 மணிக்கு தொடங்கி, மாலை 4.30 மணிவரை ஆட்டம் நடைபெறும். 
  • ஒருவேளை ஆட்டம் நீட்டிக்கப்பட்டால் மாலை 5 மணிவரை நடைபெறும்.
  • நாளை முதல் நாள் ஆட்டத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு டாஸ் வீசப்படும்.

மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவுக்கு டாட்டா காட்டும் பிசிசிஐ... கம்பீர் எடுக்கும் முடிவு என்ன?

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் செஷன் விவரம்

  • முதல் செஷன் : காலை 9.30 - பகல் 11.30 மணிவரை
  • மதிய உணவு இடைவேளை: பகல் 11:30 - மதியம் 12:10 மணிவரை
  • இரண்டாவது செஷன்: மதியம் 12:10 - மதியம் 2:10 மணிவரை
  • தேநீர் இடைவேளை: மதியம் 2:10 - மதியம் 2.30 மணிவரை
  • மூன்றாவது செஷன்: மதியம் 2.30 - மாலை 5 மணிவரை

இந்தியா - ஆப்கானிஸ்தான் நேரலை விவரங்கள்

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரடி ஒளிபரப்பு காணலாம்.

இந்தியா பிளேயிங் XI கணிப்பு:

கேஎல் ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷ் தூபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், குர்னூர் பிரர்.

ஆப்கானிஸ்தான் பிளேயிங் XI கணிப்பு:

ஹஷ்ஸமத்துலா ஷாஹிதி (கேப்டன்), அஃப்சர் ஜசாய், அப்துல் மாலிக், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லாஹ் உமர்சாய், ஷரபுதீன், அஷ்ரஃப் ஜியாவுர், ரஹ்மான் ஷரீபி, கைஸ் அஹ்மத், பிலால் சமி, முகமது சலீம் சஃபி.

மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் நீக்கம்? ஸ்ரேயாஸ் இடத்தை தட்டிப்பறிக்கும் ரஜத் படிதார்

0
0
Report
Advertisement

கட்சி தொடங்கும் ரஜினி...? லதா தொடங்கிய புதிய இயக்கம் - இணைவது எப்படி?

Chennai, Tamil Nadu:

Latha Rajinikanth Makkal Medai : மக்கள் மேடை என்ற பெயரில், தனியாக இயக்கம் ஒன்றை தொடங்கி இருப்பதாக பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா அறிவித்துள்ளார். அண்ணாமலை இன்றுதான் அவரது புதிய அரசியல் இயக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், லதா ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் ஒன்றிணைவோம். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் இயக்கத்தில் இணையலாம் என லதா ரஜினிகாந்த் அழைப்பு வெளியிட்டுள்ளார்.

மக்கள் மேடை என்ற அவரது இயக்கத்தில் தொலைப்பேசி எண்: 7550080515, மின்னஞ்சல் முகவரி: makkalmedaitn12@gmail.com ஆகியவை மூலம் தொடர்புகொண்டு இணையலாம் என லதா ரஜினிகாந்த், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

0
0
Report

புதிய கட்சி தொடக்கம்... அடுத்த தேர்தலில் போட்டி - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

Chennai, Tamil Nadu:

Annamalai New Party Announcement : தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை  பாஜகவில் இருந்து இன்று அதிகாரப்பூர்வமாக விலகினார். இதைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் சமூக வலைதளங்களின் வழியாக மக்கள் மத்தியில் உரையாற்றினார். 

அதில், புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க இருப்பதாக அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழ்நாட்டின் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும், தமிழகத்தில் இன்றும் புதிய கட்சிக்கான தேவை உள்ளது. ஆனந்தமாக புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

இன்று முதல் புதிய பாதை, புதிய இயக்கம். ரஜினி இயக்கத்தில் இணைய வாய்ப்பு வந்தது. ரஜினி 2020ஆம் ஆண்டில் என்னை அவரது கட்சியில் சேர அழைத்தார். ரஜினி அழைப்பை ஏற்காமல் நான் பாஜகவில் இணைந்தேன்.

புதிய பாதையை உருவாக்க 18 ஆண்டுகள் போராடினேன். சொல்விட்டு விலகுவதே தமிழர் பண்பு. தமிழ் பண்பாட்டை ஒருபோதும் நான் விட்டு கொடுத்ததில்லை. தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தேன்.

0
0
Report
Advertisement

தவெக எம்.எல்.ஏ-வை 'Ego Attack'செய்த மேயர் - குத்துவிளக்கு ஏற்றுவதில் வெடித்த மோதல்..!

MMathan2d ago
Chennai, Tamil Nadu:

MLA Pallavi and Mayor Priya Clash: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்ற பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றுவதில், மேயர் பிரியா மெழுகுவர்த்தியை தவெக எம்.எல்.ஏ-விடம் தர மறுத்து புறக்கணித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பொதுமக்களும், நெட்டிசன்களும் சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு விழா:

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் - 4) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள உருதுப் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக மாநகராட்சி இணை ஆணையர் கற்பகம், மேயர் பிரியா, எம்.எல்.ஏ பல்லவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மேயர் பிரியா, அதனைத் தொடர்ந்து வகுப்பறையில் குத்துவிளக்கேற்றி நிகழ்சியை தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

தவெக எம்.எல்.ஏ-வை புறக்கணித்த மேயர்:

இந்த நிகழ்ச்சியில் முதலில் குத்துவிளக்கேற்றிய மேயர் அதனைத் தொடர்ந்து பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி அவரிடம் இருந்து மெழுகுவர்த்தி வாங்க கை நீட்டியும் அவர் தராதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்லவியிடம் மெழுகுவர்த்தியை தராமல், அவருக்கு அடுத்ததாக நின்றுக் கொண்டிருந்த இணை ஆணையரிடம் வலுக்கட்டாயமாக மெழுகுவர்த்தியைக் கொடுத்து குத்துவிளக்கு ஏற்றவைத்தார். இதனால் அவமனாத்திற்குள்ளான அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் குறித்து மேயர் பிரியா மீது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். 

2-வது நிகழ்ச்சி:

பள்ளி வகுப்பறைக் கட்டிட திறப்பு விழாவில் தான் அவமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த வெளியேறிய எம்.எல்.ஏ அதன்பிறகு அடுத்த கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கும் மேயர் பிரியாவே ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நிலையில், அடுத்ததாக குத்துவிளக்கையும் முதல் ஆளாக அவரே ஏற்றி வைத்தார்.

முதல் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட தவெக எம்.எல்.ஏக்கு அடுத்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றுமாறு மேயர் பிரியா அவரிடம் மெழுகுவர்த்தியை வழங்கியுள்ளார். ஆனால் முதல் நிகழ்ச்சியில் தான் புறக்கணிக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கை ஏற்றாமல், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து அவர் சென்றுவிட்டார்.

மேலும் படிக்க: ரூ.5,000 அபராதம்.. லைசன்ஸ் பெற ஜூன் 15 கடைசி நாள்.. சென்னை மாநகராட்சி அலர்ட்

எம்.எல்.ஏ பல்லவி செய்தியாளர்கள் சந்திப்பு:

பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் தான் புறக்கணிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிய அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம் தொகுதியில் இதுவரை எதுவும் முறையாக செய்யப்படவில்லை, கடந்த ஆட்சியில் அனைத்தையும் செய்வதாகவும், செய்துவிட்டதாகவும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள், இந்த முறை நாங்கள் களத்தில் பணியாற்ற இருக்கிறோம், தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்தையும் சீரான முறையில் செய்து தருவோம் என்று தெரிவித்தார்.

‘கடந்த ஆட்சியில் அதிகார திமிரில் இருந்த அவர்கள், இன்னமும் நாங்கள் தான் என்று ஆணவத்திலும் திமிரிலும்’ இருக்கின்றார்கள். இவர்களின் செயல்கள் மக்களுக்கு தெரியும். இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. 

அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை, விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை என்று நாங்கள் இருக்கிறோம். எங்கள் தளபதியே அனைவரையும் அமைதியாக கையாள்கிறார், அதுபோல தான் நாங்களும் இருக்க வேண்டும், அவர்கள் ஆடுகிறார்கள் என்று நாங்களும் ஆடினால் அவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும், அதனால் தளபதி வழியிலேயே நாங்களும் பயணிப்போம் என்றும் கூறினார். 

மேயர் பிரியா விளக்கம்:

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பல்லவி பொது நிகழ்ச்சியில் புறக்கணிப்பட்டது குறித்து மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சிக்கு வந்து என்னுடன் சேர்ந்து ரிப்பன் வெட்டினார். அதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் மேயர் என்ற முறையில் தான் முதலில் குத்துவிளக்கு ஏற்றியதாகவும், நான் ஏற்றியவுடன் எண்ணிடம் இருந்து மெழுகுவர்த்தியை அவர் வாங்க முற்பட்ட போது, புரோட்டோகால்படி அருகில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான மாநகராட்சி இணை ஆணையர் கற்பகத்திடம் வழங்கியதாகவும், இந்த நிலையில் தான் அவர் தானாக வந்து மெழுகுவர்த்தி வாங்க கை நீட்டியதாகவும் தெரிவித்தார்.

புரோட்டோக்கால் விதிமுறைகள் அவர்களுக்கு தெரியாமல் ரியாக்ட் செய்கிறார்கள், பொது நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகளை அவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். அடுத்ததாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நிலையில், அதனை அவர் ஏற்க மறுத்தார் என்பதும், முந்தைய நிகழ்ச்சியில் நடைபெற்றதை மனதில் வைத்துக் கொண்டு அவர் இவ்வாறு நடந்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். 

நெட்டிசன்கள் கேள்வி:

இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நெட்டிசன்கள்,  “ஒரு பொது நிகழ்வில் மெழுகுவர்த்தியை வாங்கக் கை நீட்டும்போது கொடுப்பது தான் மரியாதை. கை நீட்டியவரிடம் கொடுக்க மறுத்து அடுத்தவரிடம் வலுக்கட்டாயமாக ஏற்றும்படி வற்புறுத்துவதுதான் மரியாதையா?

தேர்தல் முடிவுகள் வெளியாகியதிலிருந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெளியில் வராத பிரியா இப்போது வெளியில் வந்து கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என்றும், புரோட்டாக்கால் தெரியும் அவர்களுக்கும், சபை நாகரிகம் தெரியவில்லையா? என்று நெட்டிசன்கள் பிரியாவிடம் சமூக வலைத்தளங்களில் சரமாரியாக கேள்வியெழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: பிறப்புச் சான்றிதழ் : வாட்ஸ்அப் மூலம் பெறுவது எப்படி? சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

0
0
Report

பாஜக தவெக ஒரே மாதிரி இருக்கிறதா? போட்டு உடைத்த சு.வெங்கடேசன் எம்.பி.. பரபரப்பு மேட்டர்

Madurai, Tamil Nadu:

S. Venkatesan Mp On TVK: அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது ரயில்வே துறை அதிகாரிகள்  பொறியாளர்கள் மற்றும் மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தூத்துக்குடிக்கு புதிய ரயில் தடம்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ”மதுரை தூத்துக்குடிக்கு புதிய ரயில்வே தடம் 2600 கோடி மதிப்பீட்டில் அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி புதிய வழித்தடம்  என்பது தூத்துக்குடி துறைமுகத்திற்கான முக்கியமானது. இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதற்கான நில எடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது. மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

375 கோடி ரூபாய் செலவில் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே நிலைய விரிவாக்க பணிகள் நடந்துவரும் நிலையில் 3ஆவது முறையாக ஆய்வு செய்துள்ளேன். இந்த பணி திட்டம் 2027 மார்ச் மாதத்திற்கு முடிவடையும். 50 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டது. மார்ச் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக அனைத்து பணிகளும் முடிந்துவடையும். 40 ஆண்டுகால எதிர்கால திட்டத்தை நோக்கி இந்த பணிகள் நடைபெறுகிறது. விமான நிலையத்துக்கு இணையாக மதுரை ரயில்வே நிலைய விரிவாக்க பணிகளில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் படிக்க: திமுக நாசமா போனதுக்கு காரணமே திமுககாரன் தான்... Ex மினிஸ்டர் மூர்த்தி தடாலடி பேச்சு

 

தொடர்ந்து பேசிய அவர், ”வந்தே மாதரம் அரசாணை ஒன்றிய அரசு செய்திருக்கக்கூடிய மகா பாதகமான செயல். ஒருவர் உதடு என்ன பாடல் பாட வேண்டும் என்பதை மோடியும் அமித்ஷாவும் தீர்மானிக்க முடியாது. எனவே வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்ற சுற்றறிக்கை என்பது அரசியல் சாசனம் சொல்லியிருக்க கூடிய மத சுதந்திரத்திற்கு எதிரானது. அதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. வந்தே மாதரம் பாடலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. சட்டமன்றத்தில் வந்தே மாதரம் பாடலை அனுமதிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்

CBSE தேர்வு முறைகேடு 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர் எவ்வளவு பெரிய கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அரங்கேறியிருக்கிறது. CBSE தேர்வு தாள் மதிப்பீட்டு பணிக்கு ஏற்கனவே பல தவறுகளை செய்த  மோசடியான நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை கொடுக்க ஒன்றிய அரசு செய்திருக்கிற திட்டமிடல் சதி பயங்கரமாக உள்ளது அந்த நிறுவனம் வர வேண்டும் என்பதற்காக கருப்பு பட்டியல் விதியை மாற்றியிருக்கிறார்கள். 

ஒரு மோசடி நிறுவனத்தை இங்கே உள்ள அனுமதிப்பதற்காகவே விதிகள் அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் 27 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். பெட்ரோல், கேஸ் விலை உயர்வு வேலை வேலையின்மை இந்த பிரச்சனைகளை திசை திருப்புவதற்கு வந்தே மாதரம் பாடலை பாடுகிறாயா இல்லையா என வெறுப்பு அரசியலை மையப்படுத்தி மாற்றுவதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு எதிராக தொடர்ந்து எதிர் வினையாற்றுவோம்"  என்று கூறினார்.

பேட்டியின் முக்கிய அம்சங்கள் விமர்சனங்கள்
சிபிஎஸ்இ தேர்வு    தேர்வுத்தாள் மதிப்பீட்டு ஒப்பந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தார்

அமைச்சர் ராஜினாமா  கோரிக்கை
CBSE முறைகேட்டுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்
தவெக அரசின் செயல்பாடு  த.வெ.க. அரசு நல்லது செய்தால் வரவேற்போம்; தவறு செய்தால் விமர்சிப்போம் என்றார்
திமுகவின் குற்றச்சாட்டு பா.ஜ.க.வும் த.வெ.க.வும் ஒரே மாதிரி என்பது திமுகவின் பார்வை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வை அல்ல

பா.ஜ.கவும் த.வெகவும் ஒரே மாதிரி இருக்கிறது

புது அரசு எந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்பதில்லை என்ற திமுகவின் குற்றச்சாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன் எம்.பி, ”திமுகவின் விமர்சனத்திற்கு த.வெ.கவிடம் தான் பதில் கேட்க வேண்டும்/ இந்த அரசு புதிய அரசு பொறுப்பேற்றியிருக்கிறது கட்சி தொடங்கிய மூன்றாவது ஆண்டில் மக்கள் ஆதரவை பெற்று ஆட்சி பொறுப்பேற்று இருக்கிறார்கள். ஒரு உரிய கால அவகாசம் செயல்பாடுகளை கவனிக்க வேண்டியது இயற்கையான நியதி.

த.வெ.க அரசு நல்லது செய்தால் வரவேற்போம். நல்லது செய்யவில்லை என்றால் விமர்சிப்போம். அல்லாததை செய்தால் எதிர்ப்போம். எங்கள் எதிர்ப்பையும் மீறி அல்லாததை நிறைவேற்றினால் களத்தில் இறங்கி மக்களை திரட்டி போராடுவோம்.  பா.ஜ.கவும் த.வெகவும் ஒரே மாதிரி இருக்கிறது என்பது திமுகவின் பார்வை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்வை  அல்ல. 

மேலும் படிக்க: பள்ளிகள் திறப்பு... மாணவர்களுக்கு ஷாக் - திடீரென TC வாங்க சொன்ன அரசு உதவிபெறும் பள்ளி!

 

பாஜக அல்லாத அரசுகளை பாதுகாப்பதும் அந்த மாநிலங்களில் பாஜகவின் வெறுப்பு தத்துவத்தை விதைக்க விடாமல் தடுப்பதும் என்பது அரசியல் நிலைப்பாடும். அந்த வகையில் தான் அந்த வகையில் தான் இந்த தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானது.

ஒவ்வொரு மாநிலத்திலும் பத்து சதவீதம் வாக்குகளை பெறுகிற வரை தான் பாஜக கொஞ்சமாக வளரும் பத்து சதவீத தாண்டி விட்டால் பன்மடங்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும் என  பாஜகவின் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தியாவின் முழுக்க அதுதான் நடந்துள்ளது  அந்த பார்முலா உடைக்கப்பட்டுள்ள  முதல் மாநிலம் தமிழ்நாடு. கடந்த நாடாளுமன்ற தேர்தல் 12.8 சதவீதம் பெற்ற பாஜக இந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு சதவீதம் வந்துள்ளது. 

மேலும் படிக்க: பழனி - திருச்சி இடையே புதிய ரயில்கள் இயக்கம் எப்பொழுது? மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் விளக்கம்

 

பாஜகவினுடைய அந்த வெறுப்பு அரசியலை மிகப்பெரிய அளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் புறம் தள்ளியிருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டு  அரசியல் தத்துவார்த்த வளர்ச்சி மிக முக்கியமான பகுதி. இதனை வளர்த்தெடுக்க வேண்டும். இதனை வளர்த்தெடுக்குற அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும். ஆனால் சமரசமற்ற அணுகு முறையை கம்யூனிஸ்டுகள் இடதுசாரிகள் செய்து கொண்டே இருக்கிறோம்” என்றார்.

0
0
Report

மாஸ் காட்டும் CM விஜய்... 8,200 பேருக்கு வேலை... தமிழ்நாடு அரசு - L&T ஒப்பந்தம்

Chennai, Tamil Nadu:

Tamil Nadu Government L&T MoU : தமிழ்நாட்டில் பல்வேறு உறுதியளிக்கப்பட்ட தொழில் முதலீடுகளை மேற்கொள்ள L&T நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் விஜய் முன்னிலையில், இந்த தொழில்துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

L&T நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம் மூலம், ரூ.18 ஆயிரத்து 600 கோடியில் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த மூன்று திட்டங்கள் மூலம் 8200 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று திட்டங்கள்

மாவட்டம் முதலீடு திட்டத்தின் பெயர் வேலைவாய்ப்பு
காஞ்சிபுரம் ரூ.15,000 கோடி தகவல் தரவு மைய விரிவாக்கம் 500 பேருக்கு வேலை
கோயம்புத்தூர் ரூ.2,500 கோடி மின்னணுப் பொருள்கள், மின்னணு அமைப்புகள் உற்பத்தி திட்டம் 2000 பேருக்கு வேலை
திருவள்ளூர் ரூ.1,100 கோடி காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம் 5700 பேருக்கு வேலை
0
0
Report
Advertisement

ஓசூர் அட்கோ போலீஸ் அதிரடி: குடியிருப்பு பகுதிக்கே வந்த கஞ்சா, சிறுவர்கள் சிதறி ஓட்டம்

Avalapalli Hudco, Tamil Nadu:

ஓசூர்: தமிழகத்தில் சமீப காலங்களில் போதை கலாச்சாரம் பூதாகரமாக அதிகரித்துள்ளது. இளைய தலைமுறை இதன் பிடியில் சிக்கி சீர்ழிந்து வரும் நிலை காணப்படுகிறது. கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள ஓசூர் மாநகரம், சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முக்கிய இலக்காக மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபாட்டில்கள், குட்கா மற்றும் கஞ்சா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் அண்டை மாநிலத்திலிருந்து தொடர்ந்து கடத்தி வரப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

ஓசூர் அட்கோ பகுதியில் நடந்த பரபரப்புச் சம்பவம்

ஓசூர் வசந்த்நகர் குடியிருப்பு பகுதியில், சமீபநாட்களாக கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாகவும், இதனால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகவும் அட்கோ காவல் நிலையத்திற்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஒரு வெட்டவெளியில், சில சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குழுவாக அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த கும்பலைச் சுற்றி வளைக்க முயன்றனர்.

Hosur Ganja Menace

மேலும் படிக்க | தென்மேற்கு பருவமழை.. ஆட்டத்தை காட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தலைதெறிக்க ஓடிய சிறுவர்கள்

போலீசாரைக் கண்டதும் சிறுவர்கள் அதிர்ச்சியடைந்தனர, அடுத்த நொடியே தலைதெறிக்க நாலாபுறமும் சிதறி ஓடினர். சந்து பொந்துகளுக்குள் நுழைந்து, போலீசாரை திசைதிருப்பி அவர்கள் தப்பியோடினர். இருப்பினும், துரத்திச் சென்ற போலீசார் அதில் ஒரு சிறுவனை மட்டும் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், முதல்முறை என்பதால் அவனது பெற்றோர வரவழைத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மற்ற சிறுவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hosur Ganja Menace

ரகசிய வழிகள் வழியாக கஞ்சா கடத்தல்

இந்தச் சம்பவம் ஓசூரில் நிலவும் போதைப்பொருள் புழக்கத்தின் தீவிரத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ரகசிய வழிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஓசூருக்குள் கொண்டு வரப்படுவது அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | CM விஜய் தலைமையில் முதல்முறை... கூடுகிறது அமைச்சரவை - என்னென்ன அறிவிப்புகள் வரலாம்?

பொதுமக்களின் குமுறல்

"பெருநகரப் பகுதிகளில் மட்டுமன்றி, தற்போது சிறுநகரப் பகுதிகளிலேயே சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி சுற்றுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்குள் போலீசார் இதில் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்." என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

போலீசாரின் அதிரடி நடவடிக்கை

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள மாவட்ட காவல்துறை, ஓசூர் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.

தீவிர ரோந்துப் பணி: வசந்த்நகர் மட்டுமல்லாது, நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவான இடங்களில் இரவு நேர ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரகசிய எண்கள்: போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் குறித்து பொதுமக்கள் பயமின்றி தகவல் தெரிவிக்க ஏதுவாக ரகசிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு முகாம்கள்: பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழக இளைஞர்கள போதை கலாச்சாரத்திலிருந்து மீட்டெடுப்பதே இப்போது பெற்றோர், காவல்துறை, அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கும் கஞ்சா கும்பலை வேரறுக்க, எல்லையோரச் சோதனைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க | கருணாநிதி புகைப்படம் அகற்றப்பட்டதா? பொங்கிய திமுக - தவெக அரசு கொடுத்த விளக்கம்

0
0
Report

மருத்துவமனை ICU-வில் தீ விபத்து : 3 பேர் பலி, 20 பேர் மீட்பு - அதிகாலையில் நடந்தது என்ன?

Muzaffarpur, Bihar:

Bihar Muzaffarpur Hospital Fire : பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை 3 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு தீ பரவியதால் பெரும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் 3 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன. பலரும் மீட்கப்பட்டுள்ளனர், பலரும் காயமடைந்துள்ளனர்.

முசாபர்பூர் நகரில் உள்ள பிரசாத் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என மாவட்ட ஆட்சியர் சுப்ரத் குமார் சென் தெரிவித்துள்ளார். ஆனால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கவில்லை.

கட்டடத்தின் உள்ளே தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து, கரும்புகை மருத்துவமனைக்குள் பரவியது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. அவசரநிலை குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, நோயாளிகளை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட தொடங்கினர். 

தீ விபத்துக்கான காரணம்

மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட மின்கசிவு காரணம் என முதற்கட்ட தகவல்களின் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இது உறுதிசெய்யப்படவில்லை. 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் தீ விபத்தின் காரணமாக காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனை கட்டடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மீட்கப்பட்ட நோயாளிகள் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதிகாரிகள் அவர்களின் உடல்நிலை மற்றும் அவர்களின் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வருகிறது. தலைமை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மருத்துவ உதவிகளை மேற்பார்வையிடுகின்றனர்.

15 நோயாளிகள் அனுமதி

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுப்ரத் குமார் சென் அளித்த பேட்டியில், "அந்த மருத்துவமனையில் மொத்தம் 15 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேரின் மருத்துவப் பதிவுகளை நாங்கள் இதுவரை பெற்றிருக்கிறோம். சில நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (CCU) சிகிச்சை பெற்று வந்தனர்.

தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவர்கள் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் நாங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு வரும் ஒவ்வொரு தகவலையும் நாங்கள் சரிபார்த்து வருகிறோம்.

3 பேர் பலி

தற்போதைய நிலவரப்படி, மூன்று பேர் உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. நாங்கள் உடல்களை கண்டோம். மேலும் தலைமை மருத்துவரும் இந்த மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரத்யேக விசாரணைக் குழு

இது மிகவும் துயரமான சம்பவம். முழுமையான விசாரணை நடத்துவதே எங்களின் முன்னுரிமையாக இருக்கும். இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை ஆராய ஒரு பிரத்யேகக் குழு அமைக்கப்படும். அனைத்து விதங்களிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்படும். முதற்கட்டமாக, இந்தச் சம்பவம் மின்கசிவால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், விரிவான விசாரணைக்குப் பிறகே சரியான காரணத்தைக் கண்டறிய முடியும்" என தெரிவித்தார்.

0
0
Report

பள்ளிகள் திறப்பு... மாணவர்களுக்கு ஷாக் - திடீரென TC வாங்க சொன்ன அரசு உதவிபெறும் பள்ளி!

Kanniyakumari, Tamil Nadu:

Kanniyakumari School Close : கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள படந்தாலுமூட்டில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வந்தனர்.

இந்த பள்ளியில் நிர்வாக தரப்பில் வழக்கு நடந்து வருகிறது. அதேநேரத்தில், தொடர்ச்சியாக பள்ளிக்கு மாணவர் சேர்க்கையும் குறைந்ததுகொண்டே வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 13 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து இந்த பள்ளியில் பணியாற்றும் 13 ஆசிரியர்களுக்கும் மாற்று பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | குமரிக்கு 6 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை

பள்ளி மூடப்படுகிறது... மாணவர்கள் கலக்கம்...

ஆனால் இதுகுறித்து தெரியாமல் இந்த பள்ளியில் பயின்று மாணவர்கள் நாளை (ஜூன் 4) பள்ளி திறப்புக்கு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மாணவர்களுக்கு பள்ளி தரப்பில் தங்களுடைய மாற்றுச் சான்றிதழை வாங்கிச் செல்லும்படி நேற்று (ஜூன் 2) திடீரென அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களும், பெற்றோர்களும் இன்று (ஜூன் 3) பள்ளிக்கு வந்து என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினர். மேலும், பள்ளி நிர்வாகம் தரப்பில் மாற்றுச் சான்றிதழை வாங்கிக் கொண்டு வேறு பள்ளிகளுக்குச் செல்லுங்கள் என இறுதி நேரத்தில் தெரிவித்தனர். இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த கலக்கத்துடன் அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல்
திகைத்து நின்றனர்.

மாணவர்களுக்கு வரும் சிக்கல்

மேலும் இப்பள்ளியில் பல மாணவர்கள் மலையாள மொழி பயின்று வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டத்தில் தற்போது மலையாள மொழி பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக குறைந்துள்ளது. பல வருடங்களாக படித்த பள்ளியில் திடீரென மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியதால் மாணவர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர், தங்களின் நண்பர்களை பிரிவது உள்ளிட்ட சில சிக்கல்களும் அவர்களுக்கு எழுந்துள்ளன.

காரணத்தைச் சொல்லாத பள்ளி நிர்வாகம்

இதுகுறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவி வைஷ்ணவி கூறுகையில், "நான் டி.சி.கே பள்ளியில் படித்து வருகிறேன். நான் ஆறாம் வகுப்பில் இருந்து இங்குதான் படிக்கிறேன். நாளைக்கு பள்ளி திறக்கப்பட இருக்கிறது. ஒரு நாள் முன்னாடி எங்களை ஆசிரியர்கள் அழைத்து... பள்ளி மூடப்போகிறது, வந்து மாற்றுச் சான்றிதழ் (TC) வாங்க வேண்டும் என சொன்னார்கள். உடனே நானும், பெற்றோரும் பள்ளிக்கு வந்துள்ளோம்.

இங்க வந்து என்ன காரணம் என்று கேட்டால், அவர்கள் சொல்லவில்லை. 'டி.சி., வாங்கிட்டு போங்க, ஸ்கூல அடைக்கப் போறாங்க' என சொல்கிறார்கள். என்ன காரணம் என்று கேட்டாலும் சொல்லவில்லை, நாங்கள் எல்லோரும் வழிதெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க | நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் சரமாரி தாக்குதல்.. நடந்தது என்ன?

பெற்றோரும் வந்து கேட்டார்கள், சொல்லவில்லை. ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் இனி எங்கே போவது என்று கூட தெரியவில்லை. முன்னாடியே சொல்லியிருந்தால் கூட எங்கேயாவது, டி.சி வாங்கிட்டு போகலாம். ஆனா, ஒரு நாள் முன்னாடி தான் வரவழைத்து சொல்கிறார்கள். டி.சி வாங்கணும் என்று... இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை" என தனது குழப்பத்தை விளக்கினார். 

மாணவர்களுக்கு மன அழுத்தம் வரலாம்...

மேலும் இங்கு பயிலும் மாணவியின் தாய் பிரீதா, "என் மகள் இங்கு 12ஆம் வகுப்பு படிக்கிறாள். இப்போது உடனே இப்படி சொன்னால் நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதுதான் ஒரு முக்கிய விஷயம். நாளைக்கு ஸ்கூல் ஓப்பனிங் டே. ஆனால், திடீர்னு சொல்கிறார்கள்.

எங்களுக்கு இதேபோல ஒரு நல்ல ஸ்கூல் எங்கு கிடைக்கும்? ஏனென்றால், இப்போது இவர்கள் இங்கு பழகிவிட்டார்கள், நன்றாக பழகிவிட்டார்கள். இனி திடீரென மாற்ற வேண்டும் என சொல்லும்போது மாணவர்களுக்கு மனரீதியாக ரொம்ப மன அழுத்தம் (Depression) ஆகும். ஏனென்றால், அவர்கள் எவ்வளவு குழந்தைகள் குறைவாக இருந்தாலும், அவர்களோட ஒரு ஒருமைப்பாடு, பழக்கம் எல்லாமே இந்த ஸ்கூலுக்கு வந்த பிறகு தான்.

ஆனா, திடீர்னு போகும்போது அந்த கஷ்டம் குழந்தைகளை ரொம்ப பாதிக்கும். எங்களுக்கு இதேபோல ஒரு நல்ல ஸ்கூலும் கூட அவர்களே பார்த்துச் சொன்னால், அது நல்ல ஒரு உதவியா இருக்கும்" என்றார்.

பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள்

மொத்தத்தில் பள்ளி கல்வித்துறையின் இந்த செயல்பாடு மாணவர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே, இதுபோன்று கல்வி பயிலும் மாணவர்களிடம் பொறுப்பெற்ற முறையில் கல்வித்துறை செயல்படக்கூடாது என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | 3 நாட்களில் 12 மாநிலங்களா? இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணம் - முழு விவரங்கள் இதோ.!

0
0
Report
Advertisement

பற்றி எரிந்த ஹோட்டல்... டெல்லியில் 20 பேர் பலி... பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

New Delhi, Delhi:

Delhi Restaurant Fire Accident : டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெற்கு டெல்லியின் ஹவுஸ் பகுதியில் இயங்கும் ராணி லெமன் கிரீன் ரெஸ்டாரண்ட் என்ற பல அடுக்குகள் கொண்ட உணவகத்தின் அடித்தளத்தில் இன்று காலை 8.50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதைத் தொடர்ந்தே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

0
0
Report

கிரிவலப் பாதையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - காதலன் மற்றும் நண்பர்களின் அநாகரிக செயல்.!

MMathan3d ago
Tiruvannamalai, Tamil Nadu:

Tiruvannamalai Women assault News: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் மேற்கொண்டுவிட்டு காதலனை சந்திக்கச் சென்ற இளம்பெண்ணுக்கு காதலன் உட்பட அவரது நண்பர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். பட்டப்பகலில் காதலனை நம்பிச் சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த இந்த கொடுமை திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை சுற்றி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு செல்கின்றனர். கார்த்திக்கை தீபத் திருநாளன்று பல லட்சக்கணக்கிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து கிரிவலம் மேற்கொண்டு தீப தரிசனத்தை பார்த்துவிட்டுச் செல்வர். 

மேலும் படிக்க: எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு...நடந்தது என்ன?

காதலனை சந்தித்த இளம்பெண்:

அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டம், கிரிவலப் பாதைக்கு அருகாமை கிராமமான வேல்நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் தனியாக திருவண்ணாமலைக்கு கடந்த மே 31-ம் தேதி கிரிவலம் மேற்கொள்வதற்காக வருகை புரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கிரிவலம் முடித்துவிட்டு தனது காதலனை சந்திப்பதற்காக அவரை போன் செய்து வரவழைத்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணை அவரது காதலன் அடி அண்ணாமலை ஏரிக்கரை பகுதிக்கு வரச்சொல்லியுள்ளார். அவர் சொன்ன பகுதிக்கு தனியாக சென்ற அந்த பெண் நீண்ட நேரமாக காத்திருந்தார். அதன்பிறகு ஏரிக்கரை பகுதிக்கு வந்த அந்த பெண்ணின் காதலன் அவரை சந்தித்து பேசியுள்ளார்.

காதலிக்கு பாலியல் தொல்லை:

காதலனை சந்தித்து பேசிக் கொண்டிருந்த வேளையில் அவரது நண்பர்கள் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனை தனது காதலனிடம் கூறவே அவரும் அதே போல அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் காதலனிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.

மேலும் படிக்க: த்விஷா சர்மா வழக்கு: கணவரின் முன்னாள் காதலி மீது திரும்பிய CBI கவனம்

அதற்கு அவர் கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று கூறியதாக கூறப்படுகிறது. பாலியல் சீண்டைலில் ஈடுபட்டதுடன், அந்த இளம்பெண் காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்கக் கம்மலை பறித்துக் கொண்டு அங்கிருந்து காதலன் மற்றும் அவரது நண்பர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

போலீஸில் புகார்:

காதலனை நம்பி சந்திக்க போன இடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி போலீஸில் கூறிய அந்த பெண், தன்னிடம் இருந்த தங்க கம்மலையும் பறித்துவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை செய்ததில், தான் திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு அருகாமையில் இருக்கும் வேல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், தற்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை தினம் பௌர்ணமி என்பதால் கிரிவலம் மேற்கொண்டுவிட்டு தன்னுடைய காதலனை சந்தித்துவிட்டு செல்லலாம் என்று வந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், அவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரான ஆடையூர் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு கூட்டாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரையும் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த இடைவிடாத கொடுமை - தாயின் காதலனின் வெறிச்செயலால் பறிபோன குழந்தை உயிர்..!

0
0
Report

விஜய் அண்ணாச்சி தேர்தல் அறிக்கை என்னாச்சு? விருத்தாசலத்தில் விவசாயிகள் போராட்டம்

Virudhachalam, Tamil Nadu:

Virudhachalam: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, கடலூர் மாவட்ட விருத்தாசலத்தில் விவசாயிகள் நடத்திய திடீர் போராட்டமும், கோட்டாட்சியர் அலுவலக முற்றுகையும் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் பின்னணி என்ன? விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன? என்பது குறித்த முழுமையான விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலக முற்றுகை: பின்னணி என்ன?

கடலூர் மாவட்ட பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக, விவசாயிகள் தங்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பதற்காக விருத்தாசலம் கோட்டாட்சியர் (RDO) அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். அவர்களுடைய முதன்மை கோரிக்கை: "தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்தையும் உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என்பதுதான்.

அரசியல் கட்சி ஒன்றின் தேர்தல் அறிக்கையை முன்வைத்து, விவசாயிகள் அரசு நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட வந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரம், விருத்தாசலம் - கடலூர் முக்கிய சாலையில்  சாலை மறியல்

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் வந்த விவசாயிகளுக்கு அங்கு ஏமாற்றமே மிஞ்சியது. மனுவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய அதிகாரிகள் யாரும் அந்த சமயத்தில் அலுவலகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த விவசாயிகள், கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக உள்ள விருத்தாசலம் - கடலூர் முக்கிய சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுரோட்டில் விவசாயிகள் திரண்டதால், அந்த வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

"விஜய் அண்ணாச்சி தேர்தல் அறிக்கை என்னாச்சு?" :  அதிரடி முழக்கங்கள்

சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், தமிழக அரசுக்கு எதிராகவும் தங்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், "விஜய் அண்ணாச்சி.. விஜய் அண்ணாச்சி.. தேர்தல் அறிக்கை என்னாச்சு?" என்றும், "ஏமாற்றாதே.. ஏமாற்றாதே.. விவசாயிகளை ஏமாற்றாதே!" என்றும் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவானது.

மேலும் படிக்க | திருச்சி, கரூர் தாயுமானவர் திட்டம் அப்டேட் : வீடு தேடி வரும் ரேஷன் - தேதியை நோட் பண்ணுங்க

கட்சியின் கொள்கைகளும் அறிவிப்புகளும் தங்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் என நம்பியே இந்த மனுவை அளிக்க வந்ததாகவும், ஆனால், அதை பெற்றுக்கொள்ள  கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் கூட இல்லாதது பெரும் மன உளைச்சலை அளித்ததாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் தலையீடு

திடீர் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமானதை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கினர். போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் மூலம் போலீசார் விவசாயிகளை சமாதானப் படுத்த முயன்றனர்.

மேலும் படிக்க | தேனியில் விவசாயிகள் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்! ஏன் தெரியுமா?

கடலூர் - விருத்தாசலம் சாலையில் சீரான போக்குவரத்து

அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் விவசாயிகளை நேரில் அழைத்துச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுவை அளிக்க உரிய ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து கொடுத்தனர். அதிகாரிகளிடம் மனு ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். அதன் பின்னரே கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து சீரானது.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பல வித வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. தேர்தல் முடிந்ததும் அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளை கட்சிகளும் மறந்துவிடுகின்றன, மக்களும் மறந்துவிடுகிறார்கள். ஆனால், இப்போது காலம் மாறி விட்டது. தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதற்கும், தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக விவசாயிகள் எந்த அளவுக்குக் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கும் இந்த விருத்தாசலம் சம்பவமே ஒரு மிகச்சிறந்த உதாரணமாக அமைகிறது.

மேலும் படிக்க | அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசையை நிறைவேறிய இபிஎஸ்.. கையோடு தெண்டர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!

0
0
Report
Advertisement
Advertisement
Back to top