icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

CSK படுதோல்வி... ருதுராஜ் செய்த அந்த பெரிய தவறு - 8 வருடமாக தொடரும் சேஸிங் சிக்கல்!

Hyderabad, Telangana:

SRH vs CSK Highlights, IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் இன்று நடைபெற்ற 27வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், ஹைதராபாத் நகரில் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பேட்டிங்கில் சிஎஸ்கே அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்தாலும், மிடில் ஓவர்களில் செய்த பல்வேறு தவறுகள் காரணமாக 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 

0
0
Report

'நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்...' - பிரதமர் மோடி உரை

New Delhi, Delhi:

PM Modi Address To Nation Latest News: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று மக்களவையில் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

'மன்னிப்பு கேட்கிறேன்' 

அதில், "இன்று நான் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி விவாதிக்க இங்கு வந்துள்ளேன். குறிப்பாக இந்த நாட்டின் பெண்களுக்காக... இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெண்களின் முன்னேற்றம் எவ்வாறு தடைபட்டுள்ளது என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சிறப்பாக முயற்சித்தும் நாங்கள் வெற்றிபெறவில்லை.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திருத்தத்தை செய்ய நிறைவேற்ற முடியவில்லை. இதற்கான தேசத்தின் அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

'எதிர்க்கட்சிகளின் சுயநல அரசியல்'

தேசத்தின் நலனே நமது முன்னுரிமை, ஆனால் அது சிலருக்கு அரசியல் ஆதாயம். தேசத்தின் நலனை விடவும் பெரியதாக மற்றவை இருப்பதால், அந்த சுமையை பெண்கள் சுமக்கின்றனர். இந்த முறையும் அதுவே நடந்துள்ளது.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியலின் சுமையை நாட்டின் பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. 

தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தனது பல ஆண்டு தவறுகளை சரிசெய்து, தனது பாவங்களுக்கு பரிகாரம் தேடும் என்று நான் நம்பியிருந்தார். ஆனால், பெண்களுக்கு ஆதாரவாக நிற்பதற்கும், ஒரு வரலாற்றை படைப்பதற்குமான வாய்ப்பை காங்கிரஸ் இழந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் சதி

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காங்கிரஸ் தனது செல்வாக்கையும், இருப்பையும் இழந்துவிட்டது. ஒரு ஒட்டுண்ணியைப் போல, காங்கிரஸ் சில பிராந்தியக் கட்சிகளின் மீது சவாரி செய்து தன்னை உயிரோடு வைத்துக்கொள்ள போராடி வருகிறது. 

ஆனால் பிராந்தியக் கட்சிகள் வலுவடைவதை காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே, இந்த திருத்தத்தை எதிர்க்கும்படி செய்வதன் மூலம், பல பிராந்தியக் கட்சிகளின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் அரசியல் சதியை அது தீட்டியுள்ளது.

கைத்தட்டி கொண்டாடியது வருத்தம்

பெண்களின் நலனுக்கான இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டபோது, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற பாரம்பரியக் கட்சிகள் மகிழ்ச்சியில் கைதட்டியதைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். பெண்களின் உரிமைகளை பறித்த பிறகு இந்த மக்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். 

இது பெண்களின் சுயமரியாதை, கௌரவத்தின் மீதான தாக்குதல். பெண்கள் அனைத்தையும் மறைந்துவிடுவார்கள், ஆனால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எனவே, மக்களவையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நடத்தையால் ஏற்பட்ட வலி ஒவ்வொரு பெண்ணின் இதயத்திலும் என்றென்றும் நிலைத்திருக்கும். 

நாடு முழுவதும் உள்ள பெண்கள் மக்களவையில் இந்த தலைவர்களை பார்க்கும்போதெல்லாம்... தொகுதிகளில் உள்ளவர்கள், பெண்களுக்கான இட ஒதுக்கீடு தடுக்கப்பட்டபோது இதே நபர்கள்தான் கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்பதை நினைவில் கொள்வார்கள்.

எதிர்க்கட்சிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்

நேற்று மக்களவையில் பெண்களுக்கான அதிகாரம் சார்ந்த வந்த திருத்த மசோதாவை எதிர்த்த கட்சதிகளிடம் தெளிவாக ஒன்றை கூறுகிறேன். இந்த நபர்கள் பெண்களின் சக்தியை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டின் பெண்கள் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடுவார்கள். 

பெண்கள் இவர்களின் நோக்கங்களை புரிந்துகொண்டு உண்மையை முழுமையாக தெரிந்துவைத்துள்ளார்கள். எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்ததன் மூலம் அவர்கள் செய்த பாவத்திற்கு எதிர்க்கட்சிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.

மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான 66 சதவீத வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும், நாட்டின் 100 சதவீதப் பெண்களும் நம்முடன் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். நம் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினருக்கு உரிய உரிமையை வழங்குவதற்கான ஒரு நேர்மையான உண்மையான மற்றும் புனிதமான முயற்சியாக இந்த மசோதா இருந்தது. இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் பெண்களைச் சமமானவர்களாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக இது இருந்தது. இது காலத்தின் தேவையாகும். 

தேசத்தின் ஒவ்வொரு பிரதேசத்தையும் - வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு - வலுப்படுத்துவதற்கும், அதன் அளவு அல்லது மக்கள்தொகையை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மாநிலத்தின் குரலையும் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை ஒதுக்குவதற்கும் இது சிறந்த முயற்சியாக இரு்தது. அனைவருக்கும் சம அளவில் அதிகாரம் அளிப்பதற்கான ஒரு முயற்சியாக இது இருந்தது" என்றார்.

தோல்வியில் முடிந்த வாக்கெடுப்பு

மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா என மூன்று மசோதாக்களை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

வாக்கெடுப்பில் வெற்றிபெற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வாக்குகள்  வேண்டும். மக்களவையில் மொத்தம் 540 இடங்கள் உள்ளன, மசோதா வெற்றிபெற 360 வாக்குகள் தேவைப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியிடம் 293 மக்களவை உறுப்பினர்களும், இந்தியா கூட்டணியில் 233 உறுப்பினர்களும் உள்ளனர். 

இந்நிலையில், நேற்றைய வாக்கெடுப்பில் 528 பேர் மட்டுமே பங்கேற்றனர். 12 பேர் பங்கேற்கவில்லை. இதில் ஆதரவாக 352 வாக்குகள் தேவைப்பட்டன. இந்நிலையில், ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். உரிய வாக்குகள் கிடைக்காததால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறவில்லை. 

தொடர்ந்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா உடன் மற்ற 2 மசோதாக்களும் இணைக்கப்பட்டுள்ளன என்பதால் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. மக்களவையில் நிறைவேறாததால் மாநிலங்களவைக்கும் இந்த மசோதா போகாது. தேசிய ஜனநாய கூட்டணிக்கு மாநிலங்களவையில் 141 உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளுக்கு 83 உறுப்பினர்களும் இருக்கின்றனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 

0
0
Report

'ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது...' ராகுல் காந்தி கொடுத்த நாக்அவுட் பஞ்ச்

Ranipet, Tamil Nadu:

Rahul Gandhi Speech Latest News Updates: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் வரும் ஏப். 21ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவருமான ராகுல் காந்தி இன்றுதான் (ஏப்ரல் 18) முதல்முறையாக பரப்புரை மேற்கொள்கிறார்.

ராகுல் காந்தியன் இன்றைய பரப்புரை

டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு சென்று பரப்புரை செய்தார். அங்கிருந்து ராணிப்பேட்டை மாவ்டடம் சோளிங்கரில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து திருச்சி மாவட்டம் துறையூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

ராகுல் காந்தி இன்றுதான் முதல்முறை தமிழக தேர்தல் பரப்புரைக்கு வருகிறார் என்றாலும், இன்றும் கூட முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உடன் கூட்டு பரப்புரையில் ஈடுபடவில்லை. அடுத்து ராகுல் காந்தி வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) அன்றும் தமிழகத்திற்கு பயணம் செய்ய உள்ளார்.

சதித்திட்டம் முறியடிப்பு 

திருவள்ளூரில் பரப்புரை மேற்கொண்டபோது ராகுல் காந்தி, "பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதித்திட்டம் தீட்டியது. அதை நாம் போராடி முறியடித்தோம். 

தமிழ்நாட்டு மக்களின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அன்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் என் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து வராவிட்டாலும் தமிழ் மண்ணை சேர்ந்தவனாகவே உணர்கிறேன். தமிழர்கள் யார் என்பதை பாஜக சரியாக புரிந்துகொள்ளவில்லை.

பிறகு தான் தேர்தல்...

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஒருபோதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தை தொட முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிமுக அழிந்துவிட்டது. இப்போது இருப்பது வெறும் முகமூடிதான். அது பாஜகவினுடையது. 

பெரியாரின் சிந்தனைகளை தத்துவங்களை தகர்க்க பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சதி செய்கிறது. அவரின் சமூக நீதிக் கொள்கைகளை அழிக்கப்பார்க்கிறார்கள். முதலில் கொள்கைக்கான போர் பிறகுதான் அரசியல்" என பேசியிருந்தார். பொன்னேரியில் முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசவே இல்லை.

உண்மையை குழித்தோண்டி புதைக்கிறார்கள்

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் பகுதியில் உள்ள திடலில், சோளிங்கர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம், ஆற்காடு திமுக வேட்பாளர் கே.எல்.ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் ஆர்.காந்தி, அரக்கோணம் விசிக வேட்பாளர் எழில்கரோலின் ஆகியோரை ஆதரித்து  இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, "இந்த தேர்தல் மூலம் தமிழகத்திற்குள் ஆர்எஸ்எஸ் - பாஜக நுழைய முயலும். இந்த தேர்தல் மூலம் மக்கள் அதனை அனுமதிக்க கூடாது. நேற்று நரேந்திர மோடி, அமித்ஷா நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டம் கொண்டுவர முயன்றனர். ஆனால் முறியடித்துவிட்டோம்.

தேசம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பெண் இடஒதுக்கீட்டை கொண்டு வருவதாக சொல்கிறார்கள். உண்மை என்னவெனில் உண்மையை குழிதோண்டி புதைக்கிறார்கள்.

எல்லா மாநிலங்களும் அடங்கியது இந்தியா

தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்க நினைக்கிறார்கள். தமிழகத்தையும், வடகிழக்கு மாநிலத்தையும் ஒடுக்க பார்க்கிறார்கள். நரேந்திர மோடி ஏற்கெனவே சட்டத்தை ஒடுக்கி விட்டார். 

எல்லா மாநிலங்களும் அடங்கியது இந்தியா. எல்லா மாநிலங்களுக்கும் குரல் கொடுக்கும் உரிமை உள்ளது. எல்லா மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநில வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் அடையாளத்தை அழிக்க நினைக்கிறது பாஜக.

பாஜக பிரதமர் ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு மொழி என்கிறார். ஆனால் இந்தியா அப்படி இல்லை. பல மொழிகளை சார்ந்தது இந்தியா. மொழிகளால் பிணைக்கப்பட்டது இந்தியா. தமிழ் சாதாரண மொழி அல்ல. தமிழ் மொழியை நேசிக்க காரணம் தமிழ்நாட்டிற்கு தாய் ஆகும். தமிழ் மொழியை தாக்க பிரதமருக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்... உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை" என்றார்.

ஸ்டாலின் குறித்து ராகுல் காந்தி

இந்நிலையில், பொன்னேரியில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேசாமல் இருந்ததை, சோளிங்கரில் ராகுல் காந்தி திருத்திக்கொண்டார். ராகுல் காந்தி பேசியதாவது, "சகோதரர் ஸ்டாலினுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். நமது கூடடணி பாஜகவின் பாஜகவின் சதிகளை தடுத்து நிறுத்தும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்தவே முடியாது" என பேசியிருந்தார்.

சகோதரர் என குறிப்பிட்ட ராகுல்

ஸ்டாலினுக்கும், ராகுல் காந்திக்கும் பிரச்னை இருக்கிறது என்றும் கடந்தாண்டு ஸ்டாலின் பிறந்தநாளுக்கு 'சகோதரர்' என ராகுல் காந்தி பதிவிட்டதாகவும், இந்தாண்டு அந்த சகோதரர் மிஸ்ஸாகிவிட்டது என்றும் பாஜகவின் அண்ணாமலை போன்ற விமர்சித்து வந்தனர். இந்நிலையில், மேடையில் ஸ்டாலினை சகோதரர் என ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசியதும் கவனிக்கத்தக்கது. 

திமுக - காங்கிரஸ் உறவில் கசப்பா?

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு முன் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே திமுகவுக்கு எதிரான கலகக் குரல்கள் எழுந்தன. தொகுதி பங்கீடு, தொகுதிகள் தேர்வு என அனைத்திலும் இழுபறி இருந்தது. திமுக - காங்கிரஸ் உறவு கசந்துவிட்டதாக பேசப்பட்டது. 

ராகுல் காந்தியின் ஆதரவாளர்களாக அறியப்படும் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோரே திமுகவுக்கு எதிராக பேசி வந்தனர். அதிலும் பிரவீன் சக்ரவர்த்தி தவெக உடன் நெருக்கம் காட்டினார். தலைமை சொல்லியே விஜய்யுடன் பேசியதாகவும் சமீபத்தில் பிரவீன் சக்ரவர்த்தி பேசியிருந்ததும் கவனிக்கத்தக்கது. 

மேலும் படிக்க | மக்களவைத் தொகுதி மறுவரையறை தமிழகத்தைப் பாதிக்காது: சேலம் பிரச்சாரத்தில் இபிஎஸ்

மேலும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு மசோதா: என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனிங்க? - ஸ்டாலின் போட்ட ஸ்பெஷல் பதிவு

மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீர் போல தமிழகத்தையும் 3 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க திட்டம்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

0
0
Report
Advertisement

மக்களவைத் தொகுதி மறுவரையறை தமிழகத்தைப் பாதிக்காது: சேலம் பிரச்சாரத்தில் இபிஎஸ்

Salem, Tamil Nadu:

TN Assembly Election: தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பரப்புரை, மேடை, மைக், மாலை, மரியாதை, பிரச்சாரம், உறுதிமொழி, கைத்தட்டல், கைகலப்பு, கோஷம், வேஷம், வாக்குறுதி, பேச்சு, ஏச்சு என தினம் தினம் திருவிழாவாக தேர்தல் களம் பட்டையை கிளப்பி வருகின்றது. அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தவறான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மக்களவைத் தொகுதி மறுவரையறை (delimitation) தமிழகத்தைப் பாதிக்காது என்றும், மாறாக அதன் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவாக அறிவித்த பிறகும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தலை முன்னிட்டு ஒரு தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

தொகுதி மறுவரையறை குறித்து விரிவாகப் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த விளக்கத்தின்படி, தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆக உயரவுள்ளதாகவும், மாநிலத்தின் பங்கு 7.18 சதவீதத்திலிருந்து 7.23 சதவீதமாக அதிகரிக்கவுள்ளதாகவும் கூறினார்.

கருப்புக்கொடி அழைப்புக்கு ஆதரவு இல்லை

இதெல்லாம் இருந்தபோதிலும், திமுக தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், தேர்தல் ஆதாயங்களுக்காகப் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இபிஎஸ் குற்றம் சாட்டினார். கருப்புக் கொடி ஏந்த வேண்டும் என்ற அழைப்புகளையும் அவர் கேள்விக்குள்ளாக்கியதோடு, அத்தகைய வேண்டுகோள்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மக்களைத் திசைதிருப்பும் திமுக

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென்னிந்தியாவைச் சேர்ந்த எவரும் பிரதமராக முடியாது என்று முதலமைச்சர் கூறியிருந்த கருத்துக்குப் பதிலளித்த அவர், அந்தக் கூற்று மக்களைத் திசைதிருப்பும் வகையிலானது என்று கூறினார். மேலும், மு. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் காரணமாகவே ஜி.கே. மூப்பனார் போன்ற தலைவர்களுக்குப் பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவி வகிக்க ஆதரவு அளிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் பேசுகையில், "இப்போதும் கூட, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை அதிமுக ஆதரித்தது. ஆனால், திமுக அந்த நடவடிக்கையை எதிர்த்தது," என்று கூறினார். மேலும், "திமுகவைப் பொறுத்தவரை, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அதிகாரப் பதவிகளை வகிக்கவும் தகுதியானவர்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள்," என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

குடும்ப நலனுக்கே முன்னுரிமை அளிக்கும் திமுக

ஆட்சி நிர்வாகம் குறித்துப் பேசிய பழனிசாமி, ஆளும் கட்சியானது பொதுமக்களின் நலனை விடத் தங்கள் குடும்ப நலனுக்கே முன்னுரிமை அளித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், "மத்திய அரசில் கிடைத்த அதிகாரப் பதவிகள் பொதுமக்களுக்குப் பயன்படாமல், அந்தக் குடும்பத்திற்கு மட்டுமே பயன்பட்டுள்ளன. மாநிலத்திற்குப் பயனளிக்கும் வகையிலான எந்தவொரு குறிப்பிடத்தக்க திட்டமோ அல்லது நிதியுதவியோ பெற்றுத் தரப்படவில்லை," என்றும் அவர் கூறினார்.

மது விற்பனை தொடர்பாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், மாநிலம் முழுவதும் சுமார் 6,000 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாகவும், தினமும் சுமார் 1.5 கோடி மது பாட்டில்கள் விற்பனையாவதாகவும் தெரிவித்தார். மேலும், அமலாக்கத் துறை அதிகாரிகள் இம்முயற்சியில் உள்ள முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டால், ஊழலின் அளவு இன்னும் மிக அதிக அளவில் வெளிவரக்கூடும் என்றும் அவர் கூறினார். விவசாயத்திற்கு ஆதரவளிப்பதற்காக வகுக்கப்பட்ட திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், விவசாயிகள் நலனை திமுக புறக்கணித்துவிட்டதாகவும் சாடினார்; மேலும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய முன்னெடுப்புகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

அரசு ஊழியர்கள் குறித்துப் பேசிய அவர், ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி, திமுக தேர்தல் காலத்தில் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி, வீரபாண்டி, ஓமலூர் மற்றும் மேட்டூர் ஆகிய நான்கு தொகுதிகளில் திரு. பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க | விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி.. பிரேமலதா விஜயகாந்த் உறுதி!

மேலும் படிக்க | திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம் - தேர்தல் நேரத்தில் விஜய் பரபரப்பு அறிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

0
0
Report

அன்புமணி மகள்கள் கண்ணீர்விட்டு கதறல்... துரோகி ஜி.கே. மணி - வைரலாகும் வீடியோ

Pennagaram, Tamil Nadu:

Tamil Nadu Assembly Election, Ramadoss vs Anbumani: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வரும் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்பதால் ஒவ்வொரு கட்சியினரும், தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நாம் தமிழரும், தவெகவும்...

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் எவ்வித கூட்டணியும் இன்றி தனித்து போட்டியிடுகிறது. அதேபோல், புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய்யுடன் யாரும் கூட்டணிக்கு வராததை தொடர்ந்து அவரும் தனித்து போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதியில் வேட்பாளரின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, 233 தொகுதிகளில் தவெக போட்டியிடுகிறது.

176 தொகுதிகளில் உதயசூரியன் 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக மட்டும் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், மதிமுக 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2, மனிதநேய மக்கள் கட்சி 2, மனிநேய ஜனநாயக கட்சி 1, முக்குலத்தோர் புலிப்படை 1, எஸ்டிபிஐ 1, தமிழர் தேசம் கட்சி 1 என 12 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 176 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது. மேலும் காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஎம் மற்றும் சிபிஐ தலா 5, இந்தியன் யூனியன் முஸ்லீக் 2 என 58 தொகுதிகளில் தனித் தனிச் சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.

172 தொகுதிகளில் இரட்டை இலை

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 166 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக கட்சி 2, புரட்சி பாரதம் கட்சி 1, புதிய நீதி கட்சி 1, சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 என 172 தொகுதிகளில் இரட்டை இலை போட்டியிடுகிறது.

33 தொகுதிகளில் தாமரை சின்னம்

தொடர்ந்து பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 26 பாஜக உறுப்பினர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு உள் ஒதுக்கீடாக 1 தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 5 தொகுதிகளிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1 என 6 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனால் மொத்தம் 33 தொகுதிகளில் தாமரை சின்னம் போட்டியிடுகிறது.

120 தொகுதிகளில் சசிகலா - ராமதாஸ் 

பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி) 18 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்திலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளில் குக்கர் சின்னத்திலும் போட்டியிடுகின்றன. ஏற்கெனவே நான்கு முனையில் கட்சிகள் இருக்கும் நிலையில், சசிகலா - ராமதாஸ் கூட்டணியும் களத்தில் மொத்தம் 120 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தனித்து போட்டியிடும் பல கட்சிகள்

சசிகலாவின் அஇபுதமமுக 71 தொகுதிகளில் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மற்ற அமைப்புகள் 11 தொகுதிகளில் சசிகலா உடன் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் 82 தொகுதிகளில் தென்னந்தோப்பு சின்னத்தில் சசிகலாவின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ராமதாஸ் தரப்பு பாமக 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது, சிலிண்டர் சின்னத்தில் இவர்களின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல், தமிழக வாழ்வுரிமை கட்சி 170 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 118 தொகுதிகளிலும், புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

ராமதாஸ் vs அன்புமணி

இந்த முறை வட மாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகள் கடுமையாக பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒன்றுபட்ட பாமகவின் வாக்கு வங்கி யார் பக்கம் அதிகம் சாயும் என்பதை பொறுத்தே, பாமக யார் பக்கம் போகும்? என்பதும் உறுதியாகும். தேர்தலுக்கு பின் ராமதாஸ் - அன்புமணி ஒன்றுபடுவார்களா என்ற கேள்வியும் அரசியல் களத்தில் நீடிக்கிறது. 

இது ஒருபுறம் இருக்க, தருமபுரி சட்டப்பேரவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்டார் வேட்பாளராக அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுகிறார். சௌமியாவுக்கும், அன்புமணி பாமகவின் வேட்பாளர்களுக்கும் அன்புமணியின் மகள்களான சங்கமித்ரா, சஞ்சுத்ரா இருவரும் தொடர்ச்சியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வி.செல்வத்தை ஆதரித்து ஏரியூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.

வைரலாகி வரும் வீடியோ 

அப்போது தங்களையும், தாத்தா ராமதாஸையும் ஜி.கே.மணி பிரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும், பொங்கல் விழா எப்போதும் கூட்டுக் குடும்பமாக கொண்டாடி மகிழ்ந்தோம் என்றும் ஆனால் தற்போது ஒரு வருடமாக பிரிந்து இருக்கிறோம் என்றும் தனது வருத்தத்தை பதிவு செய்தார். தற்போது சங்கமித்ரா மற்றும் சஞ்சுத்ரா ஆகியோர் பரப்புரை மேற்கொள்ளும் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஜி.கே. மணி மீது குற்றச்சாட்டு

அதில் அன்புமணியின் மகள் சங்கமித்ரா, "தனக்கு குழந்தை பிறந்து 6 மாதமாகியும், இதுவரை தாத்தாவுக்கு தெரியாது. முதல் குழந்தை பிறக்கையில், பிரசவ வலி வந்தபோதே மருத்துவமனைக்கு வந்து பார்த்தார். என் குழந்தையை பார்க்கவில்லை. போன் கூட பண்ணவில்லை. அதற்கு கூட ஜி.கே.மணி விடுவதில்லை‌" என கடுமையாக குற்றஞ்சாட்டினர்.

தருமபுரியை விட பென்னாகரம் வெற்றி முக்கியம் 

தொடர்ந்து, அவர்கள், "நாங்கள் தருமபுரியின் எங்கள் அம்மாவுக்காக பிரச்சாரம் செய்ய தான் வந்தோம்‌. ஆனால் பென்னாகரத்தில், நமக்கு துரோகம் செய்தவர்கள் போட்டியிடுகிறார்கள். தருமபுரி வெற்றியை விட, பென்னாகரம் வெற்றி தான் நமக்கு ரொம்ப முக்கியம்" என கண்ணீர் விட்டு உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தனர். அன்புமணியின் மகள் சங்கமித்ராவுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. அன்புமணி - சௌமியா இணையருக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள் ஆவர். 

மேலும் படிக்க | சவுமியா அன்புமணியின் மொத்த சொத்துக்கள்! வேட்புமனுவில் தாக்கல் செய்த முழு விவரம்!

மேலும் படிக்க | மாநில சுயாட்சி பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருகிறது : அன்புமணி

மேலும் படிக்க | திமுக தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதானா? அன்புமணி கேள்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

0
0
Report

உலகத்திற்கே நல்ல செய்தி... ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறப்பு - ஈரான் அறிவிப்பு

Iran Latest Announcement On Strait of Hormuz: கடந்த பிப். 28ஆம் தேதியில் இருந்து ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே கடும் மோதல் நிலவி வரும் சூழலில், தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த போர் நிறுத்தம் காலகட்டத்தில் ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து எண்ணெய் கப்பல்களும் அனுமதிக்கப்படும் என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.15 மணிக்கு, "லெபனானில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இணங்க, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கெனவே, அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதையில், போர் நிறுத்தம் நீடிக்கும் காலம் முழுவதும் ஹார்முஸ் ஜலசந்தி, அனைத்து எண்ணெய் கப்பல்களுக்கும் முழுமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

நன்றி சொன்ன டிரம்ப்

இதை அமெரிக்க அதிபர் டொனால்ட் அவரது சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். அதில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். "ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. முழு பயணத்திற்கு தயாராக இருங்கள். நன்றி" என பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் வைத்த செக்...

இதுகுறித்த அவர் தனது Truth Social தளத்தில், "ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்பட்டு, வர்த்தகத்திற்கு முழுமையான போக்குவரத்திற்கும் தயாராக உள்ளது. ஆனால், ஈரான் உடனான நமது பரிவர்த்தனை 100% நிறைவடையும் வரை, ஈரானை பொருத்தவரை மட்டும் கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும். பெரும்பாலான விஷயங்கள் குறித்து ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டதால், இந்த செயல்முறை மிக விரைவாக நடைபெறும்" என பதிவிட்டுள்ளார். 

மார்ச் 2 முதல்...

பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடங்கியதற்கு பின், மார்ச் 2ஆம் தேதியில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தொடர்ச்சியாக கட்டுப்படுத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து செய்யப்படுகிறது. இந்த ஜலசந்தி அதிகளவில் முடக்கப்பட்டதால் எண்ணெய் கப்பல் போக்குவரத்தும் தடைப்பட்டது, இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையும் அதிகரித்தது.

எரிபொருள் தட்டுபாடு

கச்சா எண்ணெய் விலை மட்டுமின்றி எரிபொருள் தட்டுபாடும் ஏற்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிபொருள்கள் கப்பல்கள் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட வந்தன. இது தடைப்பட்டதால் இந்தியா உள்பட நாடுகளில் கடுமையான தாக்கங்கள் இருந்தன. இந்தியாவுக்கு சில கப்பல்கள் அனுமதிக்கப்பட்டாலும் கூட எல்பிஜி தட்டுபாடு ஏற்பபட்டது. 

ஈரான் - அமெரிக்க போர் நிறுத்தம்

இது அமெரிக்காவுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுத்தது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அன்று அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, ஜலசந்தியை மொத்தமாக திறந்துவிட வேண்டும் என ஈரானிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

254 பேர் உயிரிழப்பு

இருப்பினும் இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா முகாம்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை தொடுத்து வந்ததால், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் என கூறப்பட்டது. லெபனானில் ஒரே நாளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 254 பேர் கொல்ல்பபட்டது பெரும் பதற்றத்தை ஏற்பட்டது. 

இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம்

இதைத் தொடர்ந்து, இதனால், அமெரிக்காவும் ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றிவளைத்து, ஈரான் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களையும், வெளியேறும் கப்பல்களையும் தனது கடற்படை மூலம் முற்றுகையிட்டு வந்தது நிலைமையை மோசமாக்கியது. ஆனால், இஸ்ரேல் - லெபனான் இடையே இன்று போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

0
0
Report
Advertisement

சீறிப்பாயும் CSK... மும்பையை முந்தியது - மிரட்டலான 2வது வெற்றி; பட்டையை கிளப்பிய பௌலர்கள்

Chennai, Tamil Nadu:

IPL 2026 CSK vs KKR Highlights: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, அதன் 2வது வெற்றியை பதிவு செய்தது. சிஎஸ்கே 8வது இடத்திற்கு முன்னேறியது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

0
0
Report

நிதிஷ் குமார் அவுட்! பீகாரின் புதிய முதல்வர் சாம்ராட் சௌத்ரி - இவரின் சொத்து மதிப்பு தெரியுமா?

Patna, Bihar:

Who Is New Bihar CM Samrat Choudhary: பீகார் அமைச்சரவையை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று (ஏப்ரல் 14) கலைத்தார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான முதலமைச்சர் நிதிஷ்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எம்.பி.,யாக பதவியேற்றக் கொண்டார். இதனையடுத்து, நிதிஷ்குமார் அவரது தலைமையிலான பீகார் அமைச்சரவையை கலைத்தார். 

அமைச்சரவையை கலைத்த நிலையில், முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ராஜினாமாவுக்கு பிறகு, பாஜக தலைவர் சாம்ராட் சௌத்ரி புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் பீகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிதிஷ் குமார் தற்போது மாநில அரசியலில் இருந்து ஒதுங்கி, மாநிலங்களவை பக்கம் சென்றுவிட்டார்.

அந்த வகையில், நிதிஷ் குமாரின் இடத்தை நிரப்ப பாஜக தேர்வு செய்திருக்கும் சாம்ராட் சௌத்ரி யார்...? அவரின் பின்னணி மற்றும் அரசியல் அனுபவம் என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம். 

சாம்ராட் சௌத்ரி, பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தவர். 57 வயதான இவருக்கு குறிப்பிடத்தக்க அரசியல் பாரம்பரியமும் இருக்கிறது. சாம்ராட் சௌத்ரியின் தந்தை சகுனி, தாராபூர் தொகுதியில் ஆறு முறை எம்எல்ஏ ஆக இருந்தவர்.

சாம்ராட்டின் தாயார் பார்வதி அதே தாராபூர் தொகுதியில் 1998ஆம் ஆண்டில் சம்தா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர், தற்போது அந்த கட்சி செயல்பாட்டில் இல்லை. அந்த வகையில், நீண்ட காலத்திற்கு பிறகு 2025ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சாம்ராட் சௌத்ரி தனது குடும்பத்தின் கோட்டையான தாராபூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றினார். கடந்த 12 தேர்தல்களில் தாராபூர் தொகுதியை இவரது குடும்பம் மட்டும்  9 முறை வென்றிருக்கிறது. 

சாம்ராட் சௌத்ரி 1980 காலகட்டத்தில் அரசியலில் கால்பதித்தார். 1999ஆம் ஆண்டில் லல்லு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி தலைமையிலான ஆட்சி பீகாரில் நடைபெற்றது. அப்போது பாஜக லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருந்தது. அந்த நேரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்த சாம்ராட் சௌத்ரி, விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். 

ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் 2000 மற்றும் 2010 தேர்தல்களில் பர்பட்டா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் 2010ஆம் ஆண்டில் இவர் பீகார் சட்டப்பேரவையின் தலைமை கொறடாவாக இருந்தார். 2014இல் ஜிதன் ராம் மாஞ்சியின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். 

தொடர்ந்து, ஆர்ஜேடியில் இருந்து விலகி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். 2014ஆம் ஆண்டு ஆர்ஜேடி கட்சியை உடைத்துக்கொண்டு, 12 எம்எல்ஏ உடன் பாஜகவில் இணைந்தார். 2021ஆம் ஆண்டில் பாஜக உடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்ததும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக சாம்ராட் சௌத்ரி பொறுப்பேற்றார். ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும் இருந்தார். 

2023ஆம் ஆண்டில் பீகார் பாஜக மாநில தலைவர் பொறுப்பை பெற்றார். தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் துணை முதல்வராக பொறுப்பேற்றார். 2025ஆம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தபோதும் இவர் துணை முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்து வந்த நிதிஷ் குமார் தற்போது மாநில அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் சூழலில், சாம்ராட் புதிய முதலமைச்சராக நாளை (ஏப். 15) பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தலைமையிலான அமைச்சரவையும் நாளை பதவியேற்கும். 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

0
0
Report

இலவச 3 LPG சிலிண்டர், கல்விக் கடன் ரத்து - பாஜகவின் 27 முக்கிய வாக்குறுதிகள் இதோ!

Chennai, Tamil Nadu:

TN Assembly Election 2026, BJP Election Manifesto: தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தலையொட்டி பாஜக அதன் தேர்தல் அறிக்கையை தமிழ் புத்தாண்டான இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டுள்ளது. பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தலைமையில் சென்னையில் வெளியிடப்பட்டது. 

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது உடன் இருந்தனர். 'புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி - 2026' என்ற தலைப்பில் மொத்தம் 114 பக்கங்களுடன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

16 தலைப்புகளின் கீழ் பாஜக தேர்தல் அறிக்கை

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளை குறிவைத்து வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு; சமூக நீதி, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு; இளைஞர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு; விவசாயிகளும் விவசாயமும்; மீனவர்களும் மீன்வளமும்; அனைவருக்கும் ஆரோக்கியம்; தமிழ் கலாச்சாரமும் சுற்றுலாத்துறையும்; பொருளாதாரமும் தொழில்துறையும், உட்கட்டமைப்பு; நீர் வளம் மற்றும் சுற்றுச்சூழல்; சென்னை பகுதி; கொங்குப் பகுதி; தெற்குப் பகுதி; வடக்குப் பகுதி; டெல்டா பகுதி என 16 தலைப்புகளின் கீழ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த உடன்...

இந்நிலையில், பாஜக அதன் 27 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த உடன், இந்த வாக்குறுதிகள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொன்றும் காலக்கெடுவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளது.

பாஜகவின் 27 முக்கிய வாக்குறுதிகள்

1. குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி: தமிழ்நாடு குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். ஒருமுறை நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும்.

2. விலையில்லா சிலிண்டர்கள்: பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி என ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

3. பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு: 'ஜீரோ-எப்ஐஆர்' (Zero-FIR) முறை, சாட்சியாளர் பாதுகாப்பு, போக்சோ குற்றங்களுக்குச் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், கல்வி நிலையங்கள்/பேருந்துகளில் 100% சிசிடிவி கண்காணிப்பு உறுதி செய்யப்படும்.

4. பெண்களுக்கு வட்டியில்லா கடன்: பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு உற்பத்தி அலகுகளை அமைக்க ரூ.50 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். அரசின் கொள்முதலில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.

5. தைப்பூச மாநில விழா: தைப்பூசத் திருநாள் மாநில விழாவாக அறிவிக்கப்படும்.

6. திருப்பரங்குன்ற தீபம்: திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்பட்டுப் பாதுகாக்கப்படும்.

7. போதைப்பொருள் ஒழிப்பு: 'தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை' உருவாக்கப்படும். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

8. விவசாயிகளுக்கு நிதியுதவி: 'உழவே தலை' திட்டத்தின் கீழ் பிஎம்-கிசான் நிதியுடன் சேர்த்து ஆண்டுக்கு மொத்தம் ரூ. 9,000 நிதியுதவி வழங்கப்படும்.

9. சேமிப்புக் கிடங்குகள்: பஞ்சாயத்து அளவில் தானியங்களுக்காகச் சிறிய எஃகு சேமிப்புக் கிடங்குகளும் (Steel Silos), பழங்கள் / மலர்களுக்காகக் குளிர்பதனக் கிடங்குகளும் அமைக்கப்படும்.

10. உழவர் உறுதுணைத் திட்டம்: சிறு/குறு விவசாயிகள் கால்நடை, இறால், தேனீ வளர்ப்பைத் தொடங்க ஒருமுறை நிதியுதவியாக ரூ. 50,000 வழங்கப்படும்.

11. மீனவர் நலன்: மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.12 ஆயிரமாகவும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்கப்படும்.

12. மாணவர் கடன் தள்ளுபடி: முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பின்மை காரணமாக மாதத் தவணை செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

13. தூய்மையான நகரங்கள்: தமிழ்நாட்டின் 10 நகரங்களை இந்தியாவின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.

14. செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி: 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வட்டார வள மையங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் பயிற்சிகள் வழங்கப்படும்.

15. இளைஞர் தொழில்முனைவோர்: முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் வரை வட்டியில்லா கடன் மற்றும் ஜிஎஸ்டி சலுகைகள் வழங்கப்படும்.

16. மின்சார ஸ்கூட்டர் மானியம்: தகுதியுள்ள பெண்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.

17. திருக்கோவில் நித்ய பூஜை திட்டம்: கோவில்களுக்கு மாதம் அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பு மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும்.

18. தொழிற்பூங்காக்கள்: மத்திய அரசின் BHAVYA திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 10 'பிளக்-அண்ட்-பிளே' (Plug-and-Play) தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.

19. கிக் தொழிலாளர் பாதுகாப்பு: கிக் தொழிலாளர்களுக்கு (Rapido, Swiggy டெலிவரி ஊழியர்கள்) மாதம் ரூ.1,500 எரிபொருள் மானியம் மற்றும் விபத்துக் காப்பீடு ₹10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

20. மாவட்ட மருத்துவமனை மேம்பாடு: கூடுதல் ஆம்புலன்ஸ்கள், இலவச டயாலிசிஸ் மையங்கள், தாய்ப்பால் வங்கிகள் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) அமைக்கப்படும்.

மேலும் படிக்க | முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்த ரகசியம்! விஜய்க்கு சாத்தியம் ஆகுமா?

மேலும் படிக்க | சிறை வாழ்க்கை முதல் முதலமைச்சர் வரை: M.K. Stalin வாழ்க்கையை மாற்றிய சம்பவம்

மேலும் படிக்க | ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் - பரபரக்கும் வார்த்தை போர் - இதுவரை நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

0
0
Report
Advertisement

அரசுப் பள்ளியில் வைத்தே... பெண் ஆசிரியர் வெட்டிக்கொலை - நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

Omalur, Tamil Nadu:

Salem Crime News Updates: சேலம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளியை வளாகத்தில் வைத்த பெண் ஆசிரியர் ஸ்ரீவித்யா என்பவரை அவரது கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப பிரச்னையில் ஆசிரியை ஸ்ரீவித்யாவை அவரது கணவர் விஜய்முருகன் வெட்டிக்கொலை செய்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
0
Report

இளம் பௌலர்களால் ஆட்டம் கண்ட RR... SRH முதல் தோல்வி - ஆட்டநாயகன் பிரபுல் ஹிங்கே

Hyderabad, Telangana:

IPL 2026, SRH vs RR: ஐபிஎல் 2026 சீசனின் 21வது லீக் போட்டி இன்று (ஏப். 13) நடைபெற்றது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டி ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான ஒன்றாக அமைந்தது.

நடப்பு சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி, அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டனஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என பெரிய அணிகளை வீழ்த்தி, வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்தது.

அதிரடி வீரர் சூர்யவன்ஷி

அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றதாக இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதுவும் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பும்ரா, ஹேசில்வுட், சிராஜ், ரபாடா என உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களாலேயே கட்டுப்படுத்த இயலவில்லை. இதுவரை 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 452 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 அரைசதம், 1 சதம் அடக்கம். இந்த தொடரில் 4 போட்டிகளில் 200 ரன்களை அடித்திருக்கிறார்.

முதல் ஓவரிலேயே 3 விக்கெட்

இப்படியிருக்க, இந்த போட்டியில் அவர் முதல்முறையாக டக்அவுட்டானார். அவரை வீழ்த்தியது தனது அறிமுக போட்டியை விளையாடும் பிரபுல் ஹிங்கே எனும் 24 வயது வீரர் ஆவார். தொடர்ந்து ஜூரேல், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஆகியோரையும் அதே முதல் ஓவரில் டக்அவுட்டாகினார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையையும் படைத்தார். 

பவர்பிளேவில் 5 விக்கெட்

பிரபுல் ஹிங்கேவை போல் மற்றொரு அறிமுகமாக வீரரான சகிப் ஹூசைனும் மிரட்டலாக பந்துவீசினார். போட்டியின் 2வது ஓவரிலேயே அவர் ஜெய்ஸ்வாலை 1 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த 3வது ஓவரில் பிரபுல் ஹிங்கே கேப்டன் பராக்கை 4 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். ராஜஸ்தான் ஒரு கட்டத்தில் 9 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்தது.

72 ரன்கள் பார்ட்னர்ஷிப்

அங்கிருந்து ஜடேஜா - ஃபெரேரா ஜோடி சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது, ராஜஸ்தானுக்கு ஆறுதல் அளித்தது. பவர்பிளே முடிவில் 40 ரன்களை ராஜஸ்தான் அடித்தது. இந்த ஜோடி மொத்தம் 9 ஓவர்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 72 ரன்கள் அடித்தது.

ஃபெரேரா 44 பந்துகளில் 7 பவுண்டரி, 3 விக்கெட் என 69 ரன்களை எடுத்து சக்கிப் ஹூசைன் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து ஜடேஜா இஷான் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களை சேர்த்தார். அடுத்து ஆர்ச்சர் 2, பிஷ்னோய் 0 சக்கிப் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தேஷ்பாண்டே 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினாலும் கடைசியில் அவரும் அவுட்டாக 19 ஓவர்களில் 159 ரன்களை மட்டும் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்-அவுட்டானது. அந்த வகையில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.

மிரட்டிய பிரபுல் ஹிங்கே, சக்கிப் ஹூசைன் 

பிரபுல் ஹிங்கே 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றினார், முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டை வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். சக்கிப் ஹூசைன் 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். இஷான் மலிங்கா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

217 ரன்கள் இலக்கு

முன்னதாக பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா முதல் பந்தில் டக்அவுட்டானார். பவர்பிளேவில் 51 ரன்களை ஹைதராபாத் அணி அடித்தது. டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். கிளாசெனும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இஷான் கிஷன் 91 ரன்கள்

இஷான் கிஷன் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 91 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். கிளான் 40(26), நிதிஷ் குமார் 28(13), சலீல் அரோரா 24(13) ரன்களை அடித்தனர். இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை அடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சர் 2 விக்கெட், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். 

புள்ளிப்பட்டியல் அப்டேட் 

புள்ளிப்பட்டியலை பொருத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 போட்டிகளில் 2இல் வென்று 4 புள்ளிகளுடன் (நெட் ரன்ரேட் +0.576) 4வது இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் 4இல் வென்று, 1இல் தோற்று 8 புள்ளிகளுடன் (நெட் ரன்ரேட் +0.889) முதலிடத்தில் நீடிக்கிறது. 

மேலும் படிக்க | CSK அணியின் 2 போட்டிகள் திடீர் இடமாற்றம்... பிசிசிஐ சொல்லும் காரணம் என்ன?

மேலும் படிக்க | அதிர்ஷ்டமில்லாத 6 CSK வீரர்கள்... ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டார்கள்!

மேலும் படிக்க | கேகேஆர் அணிக்கு எதிரான போட்டி! சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு? ஏன் தெரியுமா?                                                                                                                                             

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ                                                                                                                                                                                                                                                                  

0
0
Report

சூர்யவன்ஷி டக்அவுட்... ஒரே ஓவரில் 3 விக்கெட் - யார் இந்த பிரபுல் ஹிங்கே?

Hyderabad, Telangana:

Who is Praful Hinge?, SRH vs RR 2026: ஐபிஎல் தொடரில் 21வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் இஷான் கிஷன் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 91 ரன்களை அடித்தார். கிளாசென் 40, நிதிஷ் குமார் ரெட்டி 28, சலீல் அரோரா 24 ரன்களை எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சர் மட்டும் 2 விக்கெட்டை வீழ்த்தினார். சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

தொடர்ந்து, 217 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துரத்தியது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மீதுதான் அனைவரின் கவனமும் இருந்தது. அவர் கடந்த 4 போட்டிகளில் 200 ரன்களை அடித்திருந்தார். அப்படியிருக்க முதல் ஓவரை பிரபுல் ஹிங்கே என்ற அறிமுக பௌலர் வீச வந்தார். யாரும் இவரை பெரிதாக எண்ணவில்லை. முதல் பந்தில் ஜெய்ஸ்வால் சிங்கிள் அடிக்க, 2வது பந்தில் சூர்யவன்ஷி தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து டக்அவுட்டானார். அவரை இதுவரை ஐபிஎல் தொடரில் யாரும் டக்அவுட்டாக்கியதே இல்லை. 

இதுவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்த நிலையில், அடுத்து, துருவ் ஜூரேல் 0, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 0 என ஓரே ஓவரில் பிரபுல் ஹிங்கே 3 விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார். தொடக்க வீரரான ஜெய்ஸ்வால், மற்றொரு அறிமுக வேகப்பந்துவீச்சாளர் சாகிப் ஹூசைனிடம் 1 ரன்னில் வீழ்ந்தார். அடுத்த 3வது ஓவரில் பிரபுல் ஹிங்கேவிடம் கேப்டன் ரியான் பராக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது. ஜடேஜா - டோனோவன் ஃபெரேரா ஆகியோர் ராஜஸ்தானை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர். 

அப்படியிருக்க, இப்போது எங்கு பார்த்தாலும் யார் இந்த பிரபுல் ஹிங்கே? என்ற கேள்விதான் சுற்றி சுற்றி வருகிறது. இதுவரை 19 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த அறிமுக பந்துவீச்சாளரும் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டை எடுத்ததே இல்லை. மணிக்கு 140+ மேல் வீசும் இந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் நாக்பூரை சேர்ந்தவர். 

24 வயதான இவர் உள்நாட்டு தொடர்களில் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். 10 முதல் தர போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டை எடுத்துள்ளார். குறைந்த அளவிலான டி20 போட்டிகளிலேயே விளையாடியிருக்கிறார். இவரை இந்த மினி ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்தது. 

நடுத்தர குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் பிரபுல் ஹிங்கே. இவரது தந்தை மகாராஷ்டிராவின் அரசு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருபவர். ஆரம்பத்தில் பேட்டிங்கில் கவனம் செலுத்திய பிரபுல் ஹிங்கேவை, வேகப்பந்துவீச்சாளராக மாற்றியதே அவரது தந்தை தான். ஆரம்பத்தில் அவர் விதிமுறைகளுக்கு ஏற்ப பந்துவீசவில்லையாம். தொடர்ச்சியான பயிற்சி மூலம் சிறப்பான பந்துவீச்சு ஆக்ஷனை அவர் கண்டுபிடித்துக்கொண்டார். அவரது 16 வயதிலேயே விதர்பா கிரிக்கெட் சங்க அகாடாமியில் இணைந்து, பயிற்சியாளர் சஞ்சீவிடம் பயிற்சி பெற்று வந்துள்ளார். 

தொடர்ந்து சென்னையில் மிகப் பிரபலமான MRF Pace Foundation எனும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான கிரிக்கெட் அகாடமியில் இணைந்துள்ளார். அங்கு பட்டைத்தீட்டப்பட்ட வைரம் தான் பிரபுல் ஹிங்கே.  MRF Pace Foundation-க்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுடன் அதிக தொடர்புகள் உண்டு. அப்படியிருக்க இவர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள புபா தேசிய கிரிக்கெட் மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். ஹசில்வுட், ஹை ரிச்சர்ட்சன் போன்ற ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்றியதாக கூறப்படுகிறது.

MRF Pace Foundation உடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருக்கும் இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன், தற்போது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார், அவரால் தான் பிரபுல் ஹிங்கேவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்தது. தற்போது ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூட அங்கு இருப்பது பிரபுல் ஹிங்கேவுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் பல திறமையான இந்திய பேட்டர்களை பார்க்கும்போது, அரிதாகவே திறமையான இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை பார்க்க முடியும். அதில் பிரபுல் ஹிங்கேவும் ஒருவர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report
Advertisement

ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் - பரபரக்கும் வார்த்தை போர் - இதுவரை நடந்தது என்ன?

Chennai, Tamil Nadu:

MK Stalin vs Nirmala Sitharaman, Paddy Incentive Full Details: தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. இதனால், வரும் ஏப்ரல் 21ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவுபெறும்.

எனவே, ஒரு வாரக்காலம் மட்டுமே தேர்தல் பரப்புரைக்கு நேரம் உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வாக்காளர்களை குறிவைத்து வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.

நெல் சாகுபடி ஊக்கத்தொகை: ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன்

இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே நெல் சாகுபடிக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து பெரும் வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது.

ஸ்டாலின் - நிர்மலா சீதாராமன் இடையே தொடர்ச்சியாக பதிலடிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில், இந்த விவகாரத்தில் ஆதி முதல் தற்போதைய அப்டேட்டை வரை விரிவாக இங்கு காணலாம்.

1. விவாதத்தின் தொடக்க புள்ளி

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியதுதான் இந்த பிரச்னையின் ஆதி ஊற்று. தஞ்சாவூரில் அவர் பேசியபோது, "ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு எழுதியிருக்கும் கடிதம் ஒன்றை அதிகாரிகள் தன்னிடம் கொடுத்தனர். அதில், நெல் சாகுபடிக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை காரணமாக நெல் உற்பத்தி பெருகிவிட்டதாம். அப்படி பெருகுவதால் பல பிரச்னைகள் வருகிறதாம்.

எனவே, தமிழ்நாடு அரசு வழங்கி வரும் நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்கள். மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்றார்.

இபிஎஸ்-க்கு கேள்வி: தன்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என கூறிக்கொள்ளும் நிர்மலா சீதாராமனின் நிதி அமைச்சகம் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறது என்றும் எனவே, தமிழர் என்ற உணர்வு இருந்தால் ஒன்றிய அரசை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டிப்பாரா என்றும் எச்சரித்திருந்தார். மேலும், வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் பாஜகவை கண்டிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஊக்கத்தொகையை அதிகரித்த ஸ்டாலின்: 2021 தேர்தல் வாக்குறுதியின்படி, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 திமுக வழங்கியது என்றும் 2026 வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

2. நிதி அமைச்சர் கொடுத்த முதல் பதிலடி

உண்மைக்கு புறம்பானது: மு.க. ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது X பக்கத்தில் நேற்று (ஏப். 12) மாலை 6.05 மணிக்கு, நீண்ட பதிவு ஒன்றை போட்டு பதிலடி கொடுத்தார். 

அதில்,"நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு  தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட,  தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது" என குறிப்பிட்டிருந்தார்.

ஆலோசனை மட்டும்தான்: மேலும், அதில், "தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும்" என விளக்கம் அளித்திருந்தார். அதாவது, அது ஆலோசனை மட்டும்தான் என்றும் அது உத்தரவு இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.

மாநில அதிகாரத்தை பறிக்கவில்லை: தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது என்றும், மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது என்றும் திமுக அரசு மீது நிர்மலா சீதாராமன் சாடினார். 

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை என்றும் ஸ்டாலினுக்கு அவர் பதிலடி கொடுத்தார். 

சுயநல அரசியல்: முதல்வர் ஸ்டாலின் தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அரசியலமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல என்றும் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினார். 

பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிக்கவே: மத்திய அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கியுள்ள இந்த ஆலோசனை என்பது பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வை என நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் நிலைபாட்டை விளக்கினார். இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும் என்றார்.

3. கடிதத்தை ரிலீஸ் செய்ய சொன்ன ஸ்டாலின்

நிர்மலா சீதாராமனின் இந்த குற்றச்சாட்டுக்கு இன்று (ஏப்ரல் 13) காலை 6.45 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் X பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை" என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 'நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்' எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.

முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய முதல்வர்: "எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள்" என ஸ்டாலின் நிர்மலா சீதாராமனின் பதிவில் இருந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் விதமாக குறிப்பிட்டிருந்தார். 

எனவே, தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? எனவும் நிர்மலா சீதாராமனை நோக்கி கேள்வியெழுப்பியிருந்தார்.

4. கடிதத்தை வெளியிட்டு நிதி அமைச்சர் விளக்கம்

தயக்கம் ஏதுமில்லை: இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கேட்டபடி, நிதி அமைச்சகத்தின் கடிதத்தை நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12.16 மணிக்கு X பக்கத்தில் வெளியிட்டார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என கூறி அந்த கடிதத்துடன் நீண்ட விளக்கத்தையும் வெளியிட்டிருந்தார்.  

உத்திசார்ந்த தேவை: அதன்படி, "அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்போது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது வெளிப்புறத் தாக்கங்களுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரியான சூழல் அல்ல. 

பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார்ந்த (strategic) தேவையும் கூட. சமையல் எண்ணெய் தேவையைக் காட்டிலும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியாதா? பருப்பு வகைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது.

தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் விவசாயிகளின் நலன் முதலமைச்சர் ஸ்டாலினின் மனதில் இல்லை.

இந்தியாவின் இலக்கு: பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், புரதம் நிறைந்த பயிர்கள் வழியாக ‘ஊட்டச்சத்து பாதுகாப்பை’ உறுதி செய்யவும், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் ‘பொருளாதார நிலைத்தன்மையை’ அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது" என நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார். 

பல மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன: மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும் என்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன என்றும் தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார் என்றும் சாடியிருக்கிறார்.

"நீர் அதிகம் தேவைப்படும் உபரிப் பயிர்களுக்குப் (நெல், கரும்பு) பதிலாக, இந்தியாவிற்கு உண்மையில் தேவைப்படும் அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது மட்டுமே உண்மையான உணவு இறையாண்மை சாத்தியமாகும்.

வெளிநாட்டு நலனுக்கு முக்கியத்துவமா?: மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்" என நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார். 

அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். 

ஸ்டாலினின் வெற்று வீரம்: "அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார். அது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார்" என ஸ்டாலின் மீது அட்டாக்கை தொடர்ந்தார்.

ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு: இறுதியாக, "தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள். ஆனால், ஸ்டாலின் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார். ஏனெனில், திமுகவைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்களின் நோக்கம்" என்றும் திமுக அரசு இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உள்நோக்கம் கற்பிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

5. பிரச்சனையின் லேட்டஸ்ட் அப்டேட்

நிர்மலா சீதாராமனும், ஸ்டாலின் கேட்டுக்கொண்டபடி கடிதத்தை வெளியிட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு மீண்டும் ஒரு பதிலடியை வழங்கி உள்ளார். 

குட்டு அம்பலமாகிவிட்டது: இன்று மாலை 5.04 மணிக்கு வெளியிட்ட பதிவில், "தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது" என சாடி உள்ளார்.

அதாவது, நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அதன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இதை குறிப்பிட்டுதான் குட்டு அம்பலமாகிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் சாடியிருக்கிறார். 

அதேபோல், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாரமன் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பினராயி விஜயனின் பதிவு: அதற்கு, கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இதுகுறித்து வெளியிட்ட பதிவே சாட்சி என அந்த பதிவின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். 

பினராயி விஜயன் கடந்த பிப். 8ஆம் தேதி போட்ட அந்த பதிவில், "கேரள அரசால் வழங்கப்பட்டு வரும் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.6.31 என்ற போனஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையையும், உணவு உற்பத்தியை ஒரு சுமை என்று முத்திரை குத்துவதும் நமது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அவமானமாகும். 

சந்தையை திறந்துவிடுகிறதா ஒன்றிய அரசு: கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் நிலையில், நமக்கு உணவளிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறிய ஊக்கத்தொகை சுமையாகக் கருதப்படுவது. இந்த இரட்டை வேடம் ஏற்றுக்கொள்ள முடியாதது. புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான நமது இந்திய சந்தைகளை திறப்பதற்கான முதல் படி இதுவா? 

எனவே, தனது விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் கேரளாவைத் தண்டிப்பதை நிறுத்திவிட்டு, எங்களுக்கு நிலுவையில் உள்ள கொள்முதல் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார். 

ஸ்டாலினுக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் பெரும் வார்த்தை போரை ஏற்படுத்திய அதே கடிதத்தை குறிப்பிட்டுதான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் மத்திய அரசை கண்டித்துள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மத்திய நிதி அமைச்சகம் அனுப்பிய அந்த கடிதம், கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் - ஆழமான உரையாடல்

நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த மோதல் வெற்று அரசியல் விவாதமாக மட்டுமின்றி, கூட்டாட்சி தத்துவம் மற்றும் விவசாயக் கொள்கை குறித்த ஆழமான உரையாடலாக மாறியுள்ளது. 

பயிர் மாற்றத்தை மத்திய அரசு வலியுறுத்தினாலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி மாநில உரிமைகளுக்காகத் தமிழக அரசு போராடுவதையே ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் இடையேயான இந்த வார்த்தைப் போர் பிரதிபலிக்கிறது. 

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளே அலர்ட்! மறுவாய்ப்பு கிடையாது.. 3ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

மேலும் படிக்க | டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

மேலும் படிக்க | நெல் ஊக்கத்தொகை விவகாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

திமுகவில் இணைய முக்கிய காரணம் இது தானா? அஜிதாவின் மாஸ்டர் பிளான்!

Thoothukudi, Tamil Nadu:

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கட்சி தாவல்களும், குற்றச்சாட்டுகளும் அதிகரித்துள்ளன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய முகமாக அறியப்பட்ட அஜிதா, அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். நடிகர் விஜய்யின் தீவிர ஆதரவாளரான இவர், திடீரென ஆளுங்கட்சியான திமுகவில் ஐக்கியமாகியுள்ளது தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஸ்டாலின் முதல் விஜய் வரை.. அதிக சொத்து வைத்திருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்! யாரு டாப்?

 

யார் இந்த அஜிதா? 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே, பல ஆண்டுகளாக அவரது மக்கள் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அஜிதா. விஜய்யின் மீது கொண்ட தீவிர பற்றின் காரணமாக, அப்பகுதியில் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்த இவர், கடந்த 2024ம் ஆண்டு விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியபோது, கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெற்ற இவர், தூத்துக்குடி முழுவதும் தவெக-வின் அடித்தளத்தை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வந்தார்.

ஏமாற்றமும், பனையூர் போராட்டமும்

கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்து வந்ததால், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி தனக்கே கிடைக்கும் என அஜிதா மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக, அந்த பதவியை சாமுவேல் என்பவருக்கு வழங்கி தவெக தலைமை உத்தரவிட்டது. இது அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தங்களுக்கான நியாயத்தை கேட்பதற்காக, அஜிதா தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு சென்று மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், தேர்தல் பணிகளுக்காக புறப்பட்ட நடிகர் விஜய்யின் காரை வழிமறித்து அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். நிலைமை கைமீறி போவதை கண்ட தவெக-வின் முக்கிய நிர்வாகியான சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர், அஜிதாவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த உள்கட்சி பூசல் அப்போதே ஊடகங்களில் வெளியாகி தவெக-வில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.

தற்கொலை முயற்சியும், எம்.எல்.ஏ சீட் ஏமாற்றமும்

கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அஜிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், "நான் ஒருபோதும் என் தலைவர் விஜய்யை விட்டு விலக மாட்டேன், அவருக்காகத் தொடர்ந்து உழைப்பேன்" என உருக்கமாகப் பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அஜிதா பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், கட்சியின் தலைவர் விஜய் அந்த தொகுதியைத் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத் என்பவருக்கு ஒதுக்கி அவரை வேட்பாளராக களமிறக்கினார். மாவட்ட செயலாளர் பதவியை தொடர்ந்து, எம்.எல்.ஏ சீட்டும் மறுக்கப்பட்டதால் அஜிதாவின் பொறுமை எல்லையை மீறியது. அவரது ஆதரவாளர்களும் இனி தவெக-வில் நீடிப்பதில் எந்த பலனும் இல்லை என அவருக்குக் கடும் அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.

கனிமொழி முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

தவெக-வில் ஏற்பட்டுள்ள இந்த விரிசலை சரியாக பயன்படுத்திக்கொண்ட திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் அஜிதாவை தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக காய் நகர்த்தின. இதில் இறுதியாக ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெற்றது. இன்று தூத்துக்குடியில், எம்.பி கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்த அஜிதா, தன்னை முறைப்படி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜிதா, "கட்சியில் பெண்களுக்கு உரிய வாய்ப்புகளும், மரியாதையும் அளிக்கப்படாத ஒரே காரணத்தினால் தான் நான் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்தேன்" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மாஸ்டர் பிளான்

அஜிதாவின் இந்த திடீர் கட்சி மாற்றத்தின் பின்னணியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மிக முக்கிய அரசியல் வியூகம் இருப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீனவ சமூக மக்களின் வாக்குகளை கணிசமாக பெறுவதற்கு, அப்பகுதியில் செல்வாக்கு மிக்க அஜிதாவின் வரவு திமுகவிற்கு பெரிதும் கைகொடுக்கும் என அமைச்சர் கணக்கு போட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே அஜிதாவுடன் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இந்த இணைப்பு அரங்கேறியுள்ளது. மேலும், அஜிதாவின் சகோதரர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஏற்கனவே திமுகவில் தீவிரமாக பயணித்து வருவதால் தான், தவெக தலைமை அவருக்கு பொறுப்புகளையும், தேர்தல் வாய்ப்பையும் வழங்க தயங்கியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | ஜனநாயகன் படம் லீக் ஆனது குறித்து பேசிய முக ஸ்டாலின்! என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

திடீரென மயங்கிய ராமதாஸ்... மருத்துவமனையில் அனுமதி - சேலத்தில் திடீர் பரபரப்பு

Salem, Tamil Nadu:

Ramadoss Health Update Latest News: பாமக (ராமதாஸ்) - பாமக (அன்புமணி) என பாட்டாளி மக்கள் கட்சி உடைந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தல் களத்தில் பாமக (அன்புமணி) தேசிய ஜனநாயக கூட்டணியில் மாம்பழம் சின்னத்தில் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மறுமுனையில், பாமக (ராமதாஸ்) திமுக, அதிமுக, தவெக என முன்னணி கட்சிகளுடன் கூட்டணி சேராமல் சசிகலாவின் அஇபுதமமுக உடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். சசிகலா - ராமதாஸ் கூட்டணி மொத்தம் 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சசிகலாவின் அஇபுதமமுக 71 தொகுதிகளிலும், பாமக சார்பில் 38 தொகுதிகளிலும், கூட்டணியில் உள்ள பிற அமைப்புகள் 11 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. இதில் சசிகலா தரப்பு 82 வேட்பாளர்கள் தென்னந்தோப்பு சின்னத்திலும், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

அந்த வகையில், சேலம் பள்ளப்பட்டி பகுதியில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் தனது வேட்பாளர் அருளை ஆதரித்து ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ராமதாஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள காவல் துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் குண்டுக்கட்டாக தூக்கி, ராமதாஸுக்கு முதலுதவி சிகிச்சையை வழங்கினர்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ராமதாஸ் மயக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களத்தில் 4,023 வேட்பாளர்கள்

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. வரும்  ஏப்ரல் 21ஆம் தேதியோடு பரப்புரை நிறைவடைகிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. மார்ச் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது. ஏப்ரல் 7ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற காலஅவகாசம் வழங்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் இந்த முறை 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் குறைந்தபட்சமாக 5 வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுகின்றனர்.

முக்கிய தலைவர்கள் போட்டி

இத்தேர்தலில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் - கொளத்தூர், துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான கே. பழனிசாமி - எடப்பாடி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - காரைக்குடி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் - பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதேநேரத்தில், ராமதாஸ், சசிகலா, அன்புமணி, டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடவில்லை.

ராமதாஸ் தேர்தல் பயணம்

பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்து போட்டியிடும் சூழலில், இன்றில் இருந்துதான் அவரின் பிரச்சார பயணத்தை தொடங்கினார். நாளை (ஏப். 13) தருமபுரியில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்.16ஆம் தேதி கும்பகோணம்; ஏப். 17ஆம் தேதி காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம்; ஏப். 18இல் விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி; ஏப். 19இல் செய்யாறு, போளூர், கலசப்பாக்கம்; ஏப். 20இல் விக்கிரவாண்டி, செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட இடங்களில் ராமதாஸ் பிரச்சாரம் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரது பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வியும் அவரது தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | தவெக + அஇபுதமமுக.. விஜய்யுடன் கூட்டணியா? சசிகலா பதில்!

மேலும் படிக்க | ராமதாஸ் பாமக + தவெக.. விஜய்யின் பிளான் என்ன? தைலாபுரம் செல்லும் செங்கோட்டையன்

மேலும் படிக்க |'பெரியய்யா - சின்னம்மா கூட்டணியில்...' விஜய் சேர்ந்தால் என்னவாகும்? - உருவாகுமா தவெக கூட்டணி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report
Advertisement
Advertisement
Back to top