icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

திருச்செந்தூர் கோவிலில் அனிதா ராதாகிருஷ்ணன் போராட்டம்; தவெக அரசுக்கு எதிர்ப்பு - காரணம் என்ன?

Tiruchendur Temple Latest News : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட் அகற்றக் கோரியும், உள்ளுர் மக்கள் வழிபடுவதற்கு நேரம் நிச்சயம் செய்து அடையாள அட்டை ஆதார் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என கோரியும் கோயில் நிர்வாக அலுவலரான இணை ஆணையருக்கு மனு கொடுத்தும் இப்போது வரை இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இது குறித்து திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ அனிதா R.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல ஆண்டுகளாக திருவிழா காலங்களிலும் விசேஷ நாட்களிலும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். 

மேலும் படிக்க | "திமுக - அதிமுக கூட்டணி வெறும் கட்டுக்கதை".. வதந்திக்கு இபிஎஸ் முற்றுப்புள்ளி

நம் தமிழ்நாடு மக்கள்  மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் விரதமிருந்து சுவாமி தரிசனத்திற்கு வருகின்ற நிலை பல ஆண்டு காலமாக இருக்கிறது.

தென் மாவட்டங்களில் உள்ள  விவசாயிகள் தங்களது விவசாயம் செழிக்க வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் விவசாய விளை பொருட்களை முருகப்பெருமானுக்கு காணிக்கை படைக்கும் நிகழ்வு பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. வாழைத்தார், நெல், வெற்றிலை, தேங்காய் மற்றும் இதர விளை பொருட்களை சண்முக விலாச மண்டபத்தில் காணிக்கையாக செலுத்தி கடவுளை வழிபடுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஏராளமான திருமணங்கள் சண்முக விலாச மண்டபத்தின் முன்பு நடைபெறுகிறது. இப்படியாக முக்கியத்துவம் வாய்ந்த சண்முக விலாச மண்டபம் இரும்பு கிரில் கேட் போட்டு தற்போது அடைக்கப்பட்டுள்ளது.

இரும்பு கிரில் கேட் அகற்றப்பட வேண்டும் 

முருகப்பெருமானுக்கு விவசாயிகள் காணிக்கை செலுத்துவதற்கும் உள்ளுர் மக்கள் உற்சவரை வழிபடுவதற்கும் காலங்காலமாக இருந்துவந்த மரபை தடுக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு கிரில் கேட் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் உள்ளுர் மக்கள் வழிபடுவதற்கு நேரம் நிச்சயம் செய்து அடையாள அட்டை ஆதார் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது  பக்தர்களின் கோரிக்கை 

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு ரூ.62,000 காப்பீடு.. தமிழக அரசின் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

நிர்வாக அலுவலரான இணை ஆணையருக்கு மனு 

பக்தர்களின் இந்த கோரிக்கைகளை ஜூலை 15 ஆம் தேதிக்குள் நிறைவேற்றவில்லை என்றால்  அனிதா R.ராதாகிருஷ்ணன் தலைமையில் பக்தர்கள் அறவழியில் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்பதை தெரிவித்து கோயில் நிர்வாக அலுவலரான இணை ஆணையருக்கு ஜூலை 6 அன்று மனு வழங்கியுள்ளனர்.

அறவழிப் போராட்டம் நடைபெறும் 

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படாத நிலையில் வரும் ஜூலை 22 அன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு திருக்கோயில் முன்பு சுமார் 5000 பக்தர்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் வடிவிலான அறவழிப் போராட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி MLA அனிதா R.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில் சமூக அமைப்பினரும் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ளவர்களும் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா R.ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக முக்கிய பங்கு வகித்து வருகிறார், நடந்து முடிந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு பின்னர் வந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போதய முதலமைச்சர் சி ஜோசப் விஜயை அவதூறாக பேசியதிற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய் நிகழ்ச்சிக்கு கல்தா... எல். முருகன் நிகழ்வுக்கு வருகை - மேயர் பிரியா சொன்ன பதில்

0
0
Report

CM விஜய் போட்ட திட்டம்.. சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.. ஆர்.பி.உதயகுமார் பகீர் தகவல்!

Madurai, Tamil Nadu:

Admk RB Udhayakumar: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தவெக அரசை கடுமையாக விமர்சித்து தினந்தோறும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில்,  இன்று (ஜூலை 16) ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ”நடந்து முடிந்த தேர்தலிலே 35 சதவீதம் ஆதரவு வாக்குகளை பெற்று, 65 சதவீதம் எதிர்ப்பு வாக்குகளை பெற்று இருக்கின்ற முதல்வர் விஜயின் பாப்புலாரிட்டி இப்போது  உலகத்திலேயே உச்சத்தில் இருக்கிறதாக தொடர்ந்து பக்காவான பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு தகவல்

இந்த சோசியல் மீடியாவில ட்ரெயின் ப்ரொபஷனல்  இன்புலியன்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த வாடைக்கு அமர்ந்திருப்பவர்கள். விஜயின் பின்பத்தை பாப்புலர்லாக்கி கட்டமைக்கின்ற கடமையை கச்சிதமாக காட்சிப்படுத்த கணக்கு வழக்கு இல்லாமல் பல கோடி ரூபாயை கொட்டி கொடுப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. 

அதற்கு சில உதாரணங்களை நாம் இன்றைக்கு பார்க்கிறோம். நம்ம முதல்வர் விஜய் எவ்வளவு அழகாக கொடி அசைக்கிறார் பார்த்தீர்களா. எந்த மனசு சார் அவருக்கு எவ்வளவு, ஸ்டைலாக நடக்கிற பாத்திங்களா , போதை பொருள் ஒழிப்பதற்கு எவ்வளவு வேகமாக ஓடுகிறார் பாத்திங்களா, என்ன மனசு சார் முதல்வர் விஜய்க்கு, லஞ்சத்தை ஒழிக்க எவ்வளவு துணிச்சலாக whatsapp எண் அறிவித்திருக்கிறார் பார்த்தீர்களா  என்ன தைரியம் நம்ம முதல்வருக்கு .

பயபக்தியோட தன்னடக்கமாக  எப்படி சாமி கும்பிடறார் பார்த்தீங்களா.  யாருக்கு சார் இந்த மனது வரும் வரும்? என்னமா சட்டசபையில் கலக்குகிறார். எப்படி செமையா செய்கை பாத்திங்களா இதெல்லாம் ஒரு தில்லு வருது சார்.  ரேசன் கடையிடல் கீழே கொட்டால் சர்க்கரையை எப்படி கைக்குள்ள கொட்டுகிறார் பாத்திங்களா? சீராக எப்படி கார் ஓட்டுகிறார் , அங்கே கர்நாடகாவில் இருந்த ஓட்டி வருகிறபோது பிளாஸ்டிக் பாட்டில்ல  வச்சிருந்தை  மட்டும் கேட்கக்கூடாது.

இப்படி ஒவ்வொரு நொடிக்கு நொடி விஜயின் பிம்பத்தை செயற்கையாக கட்டமைப்பதை பார்க்கின்ற போது ஏதோ இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எந்த  எந்த முதல்வரும் செய்யாத திட்டங்களை, இப்போது இவர் மட்டும்தான் மக்களுக்கு செய்து வருவது போல ஒரு கனகச்சிதமான கட்டமைப்பு செய்து வருவதோடு, எதிர்க்கட்சிகள் யாராவது ஏதாவது இதை பற்றி விஜிய்யிடம் கேள்வி கேட்டால் போச்சு உடனே என்ன சொல்வார்.வாய் இருக்கிறது என்பதால்  என் மேல பழி போடுறாங்க என்று உணர்ச்சிவசமான, வசீகரமான வசனத்தை பேசி அசத்தி அரசியலை அதிரவை பார்முதல்வர் விஜய்.

அதிமுகவை அபகரிக்க திட்டம்

அவர் ஆடுகிற அரசியல் ஆட்டத்தில் முக்கியமான ஒன்று அதிமுகவை அபகரிக்க வேண்டும் என்ற பேராசையில் முதல்வர் விஜய்  ஒவ்வொரு முறையும் தடுமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாட்டு மக்களும் இதை உன்னிப்பாக பார்த்து வருகிறார்கள். 
அண்ணா திமுக தொண்டர்களும் இதை வேதனையோடு பார்த்து வந்தார்கள். 

த.வெ.க அரசின் பெரும்பான்மை நிரூபிக்க விஜய்க்கு ஆதரவு அளிக்க 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து அதிமுகவை அலேக்காக தூக்கிவிடலாம். அதன் பிறகு விஜய்க்கு ஆதரவாக சட்டமன்றத்திலே அவர்களை வாக்களித்தால், ஆதரவளித்த உறுப்பினர்களை அமைச்சர் அதிகாரம் அளித்து என்கிற ஆசை காட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சாமானியர்  என்று விஜய் தப்பு கணக்கு போட்டு விட்டார். எடப்பாடியாரை குறைத்து மதிப்பீடு செய்து  விட்டார்.

சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்

ஆகவே தான் அவருடைய ரகசிய திட்டம்  எடப்பாடியாரை விலக்கி வைத்துவிட்டு, அதிமுகவை விஜய்க்கு அடகு வைக்கவும் ,அடிமை சாசனம் எழுதி வைப்பதற்கு தயாராக இருப்பவர்களை வைத்து அதிமுகவை வழிநடத்தும் எடப்பாடியாரையும், அதிமுகவை ஒட்டுமொத்தமாக அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்ற விஜய்யின் ரகசிய திட்டத்தை, எடப்பாடியார் செய்த புண்ணியம்,  எதற்கும் அஞ்சாத மன உறுதி எப்போதும் மாறாத விசுவாச தொண்டர்களின் ஆதரவால் அதிமுகவின் ஒரே நம்பிக்கையை எடப்பாடியார் என்று ஒட்டுமொத்தமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சூளுரை ஏற்று விஜய் என்று ரகசிய திட்டத்தை சுக்கு நூறாக அகற்றி எரிந்து விட்டார்கள்.

இன்னைக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆன்மாக்களின் ஆசி  எடப்பாடியாருக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் பேராசை பிடித்தவர்களிடமிருந்து ,அதிமுகவை மீண்டும் மீட்டெடுத்து புதிய பொலிவோடும் வலிமையோடும் தலைமை தாங்கி வழி நடத்தி மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்பை காட்டுவேன் என்று தன்னை அர்ப்பணித்து அயராது உழைத்து வரும் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான கழக தொண்டர்கள் விசுவாச உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது” என்றார்.

0
0
Report

தமிழகத்தில் வெங்காய விலை கிடு கிடு உயர்வு!வரும் நாட்களில் ரூ.60ஐ தொடுமா?

Nagalapuram, Tamil Nadu:

Tamilnadu Onion Price Hike : கடந்த நாட்களில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான பல்லாரி வெங்காயம் தற்போது விலை உயர்ந்து ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிராவில் மழை தொடர்ந்தால் வெங்காயத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது!

பல்லாரி வெங்காய வரத்து குறைவு 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாசிக், புனே, சோலாப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து தமிழகத்திற்கு அனுப்பப்படும் பல்லாரி வெங்காயத்தின் வரத்து தற்போது குறைந்து வருவதாக தெரிகிறது.

மேலும் படிக்க | வெப்ப அலை அலர்ட்! பள்ளிகளுக்கு விடுமுறை? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

தென் மாவட்டங்களின் முக்கிய காய்கறி மொத்த விற்பனை மையமாக மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்கள் மட்டுமின்றி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்கிலிலிருந்தும் தினமும் இங்கு ஏராளமான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இது மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனையாகும் பல்லாரி வெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு மற்றும் மதுரை மாட்டுத்தாவணி உள்ளிட்ட முக்கிய சந்தைகளுக்கு வழக்கமாக தினமும் 60 முதல் 65 லாரிகளில் பல்லாரி வெங்காயம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இந்த கனமழை காரணமாக வரத்து குறைந்து தற்போது 30 முதல் 35 லாரிகளாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | பதவி பறிக்கப்படும்... ரீல்ஸ் போடக்கூடாது... CM விஜய் கறார் - ஆடிப்போன அமைச்சர்கள்!

விலை உயர்வு 

சந்தையில் வெங்காயத்தின் இருப்பு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள வியாபாரிகள், அதன் எதிரொலியாக இதற்கு முன்பு ரூ.20 முதல் ரூ.25 வரையே விற்பனையான பல்லாரி வெங்காயம் தற்போது உள்ள நிலையில் ரூ.30 முதல் ரூ.35 வரை விலை உயர்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் மேலும் உயருமா?

தற்போதே விலை உயர்ந்து காணப்படும் வெங்காயம், மகாராஷ்டிராவில் கனமழை நீடித்தால் வெங்காய வரத்து மேலும் பாதிக்கப்படும். அதன் விளைவாக வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் உயர்ந்து ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் மேலும் வெங்காயம் விலை உயர்ந்தால் தினசரி காய்கறி விற்பனையாளர்கள், பொதுமக்கள் வெகுவாக பாதிப்படைவார்கள் என கவலை தெரிவிக்கின்றனர். இந்த விலை ஏற்றம் வெங்காயத்திற்கு மட்டும் தான் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா கனமழையால் மற்ற காய்கறியின் விலையில் பாதிப்பு எதுவும் இல்லை, வெங்காய உற்பத்தி மட்டுமே அங்கிருந்து அதிகமாக நடைபெறுவதால் வெங்காயத்தின் விலையில் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே மற்ற காய்கறிகள் வழக்கம் போல விற்பனையாகி வருகிறது என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 255 புதிய வேலைவாய்ப்புகள்! தமிழக இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

0
0
Report
Advertisement

பதவி பறிக்கப்படும்... ரீல்ஸ் போடக்கூடாது... CM விஜய் கறார் - ஆடிப்போன அமைச்சர்கள்!

Chennai, Tamil Nadu:

Tamil Nadu Government Cabinet Meeting : சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படலாம். பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கலாம்.

இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், "ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும். எனது தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்" என அமைச்சர்களை எச்சரித்துள்ளார்.

மேலும், ஊழலற்ற அரசாக இருக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியும் உள்ளார். தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பார்க்க மாட்டேன் என்றும்; உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, "பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று வீடியோ எடுத்து, பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது" என அமைச்சர்களுக்கு, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

0
0
Report

எஸ். ஜானகிக்கு நடந்த பேரிழப்பு - மகனின் சாவையும் மிஞ்சிய மற்றொரு சோகம்... பேத்தி போட்ட பதிவு

Chennai, Tamil Nadu:

s janaki death news : மறைந்த எஸ்.ஜானகி கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் , எளிமையை விரும்பி தன் இறுதி நாட்களில் மைசூரில் சொந்த வீடு தனக்கென இருந்தும் , அங்கே ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரின் இந்த செயலுக்கு பின்னால் அவருடைய வாழ்க்கையில் சந்தித்த இழப்புக்களே காரணம். கடந்த ஆண்டு தன் ஒரே மகனை இழந்த ஜானகி அந்த இழப்புக்கு முன்னதாகவே இன்னொரு இழப்பை அவர் சந்தித்ததாக ஜானகியின் பேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஜனநாயகன் ஜூலை 23ஆம் தேதி ரிலீஸ்! டிக்கெட் புக்கிங் தொடங்குவது எப்போது?

மறைந்த எஸ். ஜானகி

இந்த குரலை கேட்டிராத ஆட்கள் உண்டோ? என கேட்கும் அளவிற்கு இவரது பாடல்கள் பிரபலமானவை. இவர் யார் என்று அறியாத இன்றைய தலைமுறையினர் கூட இந்த குரலை ரசித்திருக்கிறார்கள். இந்த இனிமையான குரலுக்கு ரசிகர்கள் ஏராளம், ரசிகர்களின் பேரன்பால் "ஜானகி அம்மா" என அழைக்கப்பட்டார். ஜானகி அம்மா மறைந்திருந்தாலும் அவரது குரலுக்கு என்றும் அழிவில்லை. தனது வாழ்க்கையை இசைக்காக அர்ப்பணித்தவர், பல மொழிகளில் 48,000 பாடல்கள் மேல் பாடியுள்ளார்

அவரது இறுதி வாழ்க்கை  

கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் தனது இறுதி நாட்களில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். மைசூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அதே ஊரில் அவருக்கு சொந்தமாக வீடு இருந்தும் அங்கே செல்லவில்லை. அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு உயிரிழந்தார், அந்த வேதனையையை தாங்கி கொள்ள முடியாத அவர் மைசூருக்கு இடம்பெயர்ந்ததற்கு இந்த இழப்பே காரணம். 

பேத்தி அப்சராவின் பதிவு

கடைசி நாட்களில் ஜானகி தனது மருமகள் மற்றும் பேத்தி அப்சரா உடன் வாழ்ந்து வந்தார். அப்சரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் மகனை இழப்பதற்கு முன்னதாகவே வேறு ஒரு பெரிய இழப்பை அவர் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அவர் சந்தித்த இழப்பு, அவருடைய ஒரே மகன் முரளியின் இன்னொரு மகள் வர்ஷா. ஜானகிக்கு இரண்டு பேத்திகள் ஒருவர் வர்ஷா, இன்னொருவர் தான் அப்சரா. வர்ஷாவும் ஜானகியும் மிகவும் நெருக்கமானவர்கள், ஜானகி அம்மாவுக்கு உலகிலேயே மிகவும் பிடித்த நபர் வர்ஷா தான் என அவர் தெரிவித்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் அதீத அன்பு கொண்டிருந்தனர்,  இன்று ஜானகியை பார்த்துக்கொள்ள வேண்டிய இடத்தில வர்ஷா இருந்திருக்க வேண்டும் என வேதனையோடு தெரிவித்துள்ளார். வர்ஷா இருந்திருந்தால் பாட்டிக்கு அனைத்திலும் அவர் உதவியாக இருந்திருப்பர்.

மேலும் படிக்க | ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே நடக்கிறது? வெளியான அப்டேட்!

பேத்தி வர்ஷாவின் இழப்பு 

ஜானகியின் அன்பிற்குரிய பேத்தியான வர்ஷா 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த உலகை விட்டு பிரிந்தார். இதுவே பாட்டியின் முதல் பேரிழப்பாக இருந்தது. இந்த இழப்பிலிருந்து வெளிவருவதற்கு முன்பே அடுத்த பேரிடியாக மகன் முரளி கிருஷ்ணாவின் மறைவு அமைந்தது. இது போன்று அடுத்தடுத்த இழப்புகள் அவரை உருக்குலைத்து என அப்சரா தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பதிவில் 

"துயரங்கள் முழுமையாக விலகுவதில்லை, வாழ்க்கை முழுவதும் சுமந்து செல்ல கற்றுக்கொள்கிறோம்" எங்கோ ஒன்றாக எனது பாட்டி ஜானகியும் சகோதரி வர்ஷாவும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பது தான் என்னுடைய ஆறுதல். வாழ்க்கை முடிந்தாலும் அன்பு முடிவதில்லை. அனுபவங்கள் தான் என்னை பலமாக்குகிறது. துயரம் எப்போதும் வெளிப்படையாக இருக்காது. சில நேரங்களில் அது அமைதியான, தனிப்பட்ட உணர்வாக இருக்கும்". என்று தெரிவித்துள்ள அவர், மேலும், "எனது பாட்டி யாரையும் குறை சொல்லாதவர். எல்லோரிடமும் நல்லதையே பார்ப்பவர். என் சகோதரியும் அப்படி பட்டவர்தான். இருவருமே குழந்தை குணம் கொண்டவர்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அன்பை பரப்பினர். அவர்களிடம் பேசுபவர்கள் அனைவரும் அவர்களை நேசித்து விடுவார்கள். இப்போது இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதுவே என்னுடைய மன நிம்மதி" என்று அப்சரா பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அமீர்கான் தன் மனைவிகளை மதம் மாற சொன்னாரா? அவரே கொடுத்த விளக்கம்

0
0
Report

மெஸ்ஸியின் மேஜிக்... பைனலில் அர்ஜென்டினா... இங்கிலாந்து கனவு காலி

Atlanta, Georgia:

Argentina vs England : 2022 பிபா உலகக் கோப்பையை வென்ற அதே உற்சாகத்தோடு அர்ஜென்டினா அணி தற்போது 2026 பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அர்ஜென்டினா வரலாற்றில் அதன் 4வது உலகக் கோப்பையை குறிபார்த்து தற்போது காத்திருக்கிறது.

பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் அர்ஜென்டினா - இங்கிலாந்து மோதும் 2வது அரையிறுதிப் போட்டி அட்லாண்டா நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று (ஜூலை 16) நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கியது. 

இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டிா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. வரும் ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

0
0
Report
Advertisement

3 வயது குழந்தைக்கு எமனாய் மாறிய நிலக்கடலை: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Malappuram, Kerala:

மலப்புரம், கேரளா: கேரளாவின் மலப்புரம் குன்னுப்புரத்தில் உள்ள தனது வீட்டில், தற்செயலாக வேர்க்கடலை தொண்டையில் சிக்கியதால் மூன்று வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திங்களன்று நடைபெற்ற நிலையில், உள்ளூர் காவல்துறையினர் இதனை புதன்கிழமையன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

மலப்புரத்தில் நடந்த விபரீதம்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், வேர்க்கடலை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறி மூன்று வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். சிறுவன் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதில் இருந்த ஒரு வேர்க்காலை அவனது தொண்டையில் சிக்கி மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனின் மூச்சுக் குழாயில் வேர்க்கடலை பருப்பு ஒன்று சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்ட சிறுவன், மூச்சுத் திணறலால் மயக்கமடைந்தாக வெங்கரா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் துயரச் சம்பவத்தை உள்ளூர் காவல்துறையினர் புதன்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.

மேலும் படிக்க | வாங்சுக் போராட்டத்தை நீடித்தால் 2 நாட்களில் உயிரிழப்பு? நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

அவசர சிகிச்சையும் பயனிறி போனது

சிறுவன் மயங்கி விழுந்ததைக் கண்ட குடும்பத்தினர் அச்சிறுவனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், சிறுவனின் சுவாசத்தை மீட்டெடுக்கவும் தொண்டையில் சிக்கியிருந்த வேர்க்கடலையை அகற்றவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இருப்பினும், மூச்சுக் குழாயில் நீண்ட நேரம் அடைப்பு இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை; அவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அக்குடும்பத்தினரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | IRCTC புதிய இணையதளம்: இனி டிக்கெட் புக்கிங் ரொம்ப ஈசி.. அதிரடி மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

பெற்றோருக்கான முக்கிய எச்சரிக்கை

இச்சம்பவம் சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு ஒரு தீவிர எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளின் சுவாசப் பாதைகள் மிகவும் குறுகியதாக இருப்பதால், உலர் பழங்கள், வேர்க்கடலை மற்றும் பாப்கார்ன் (பொரித்த சோளம்) போன்ற பொருட்கள் அவற்றில் எளிதில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. மருத்துவ ரீதியாக இந்நிலை 'சோக்கிங்' (choking - மூச்சுக்குழாய் அடைப்பு) என்று அழைக்கப்படுகிறது.

பெற்றோருக்கான அறிவுறுத்தல்

குழந்தைகள் சாப்பிடும்போது உடன் இருப்பது மிக அவசியம்.

பெரிய அளவில் உள்ள உணவுப்பொருட்களை உடைத்து அல்லது நசுக்கி கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வெண்டும்.

பெரிய, கூரான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு அளிப்பதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் ஹைட்ரோஜென் ரயில்! டிக்கெட் விலை என்ன? எந்த ரூட்டில் இயங்கும்?

0
0
Report

சுப்மான் கில் காயம்... ஓடிஐ கேப்டனாகும் ஷ்ரேயாஸ் ஐயர்... பிளேயிங் 11-ல் பெரிய மாற்றம்

England:

Shubman Gill Injury, IND vs ENG ODI : இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த சில வாரங்களாகவே தொடர் தோல்விகள் மட்டும்தான் இருந்துவந்தன. அயர்லாந்து அணிக்கு எதிராக 0-2, இங்கிலாந்து அணிக்கு எதிராக 0-4 என டி20ஐ கிரிக்கெட்டில் தொடர் தோல்விகள்.

இவை அனைத்திற்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், நேற்று (ஜூலை 14) இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க |  ஹர்திக், சாய் கிஷோரை தூக்க CSK மாஸ்டர் பிளான்.. ஆனா ஒரு வீரருக்காக அடித்துக்கொள்ளும் MI - GT!

259 ரன்கள் இலக்கு

பந்துவீச்சில் 4 விக்கெட்டையும், பேட்டிங்கில் 57* ரன்களையும் எடுத்த அக்சர் பட்டேல் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இங்கிலாந்து பேட்டிங்கில் ஜோ ரூட் 76 ரன்களையும், லியம் டாவ்சன் 68 ரன்களையும், டக்கெட் 43 ரன்களை எடுத்து, இந்திய அணிக்கு 259 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.

அதை இந்திய அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து அடித்துவிட்டது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சுப்மான் கில் காயம்

ஆனால், கேப்டன் சுப்மான் கில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். ஷ்ரேயாஸ் 35, கேஎல் ராகுல் 1 என ஆட்டமிழந்தனர். சுப்மான் கில் 75 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்ஸர் என 80 ரன்களை எடுத்தபோது ரிட்டையர்ட் ஹர்ட் மூலம் பெவிலியன் திரும்பினார்.

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக மும்பை செல்லும் CSK வீரர்! அவரே போட்ட சூசக பதிவு

கடைசி வரை வாஷிங்டன் சுந்தர் - அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று விளையாடி ஆட்டத்தை முடித்துவைத்தது. வாஷிங்டன் 52 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 57 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி வரை வராத கில்

வலது காலில் திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறிய கேப்டன் சுப்மான் அதன்பின் களமிறங்கவில்லை, இதனால் அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அவர் வெளியேறிய பின்னர் அடுத்தடுத்து கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தாலும் வாஷிங்டன் சுந்தர் - அக்சர் பட்டேல் ஜோடி ஆட்டமிழக்காமல் நின்றது குறிப்பிடத்தக்கது.

சுப்மான் கில்லுக்கு பதில் யார்? 

இந்தச் சூழலில், நாளை (ஜூலை 15) கார்டிஃப் நகரில் நடைபெற இருக்கும் இரண்டாவது ஓடிஐ போட்டி நடைபெற இருக்கிறது. இதில் சுப்மான் கில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. 

ஒருவேளை அவர் விளையாடாதபட்சத்தில் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர், கேப்டன்ஸியை பொறுப்பை பெறுவார். அதேபோல், சுப்மான் கில் இடத்தில் இஷான் கிஷன் இடம்பெற வாய்ப்புள்ளது. அவர் ரோஹித் சர்மாவுடன் ஓபனிங்கில் களமிறங்குவார். இதனால், ஓபனிங்கில் இடது - வலது காம்பினேஷன் கிடைக்கும்.

இஷான் கிஷன் வருகையால் டாப் ஆர்டரில் இடது கை வீரர் ஒருவர் கிடைத்துள்ளார். ரோஹித், விராட், ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் என அடுத்தடுத்து வலது வீரர்கள் உள்ளன. வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், சிவம் தூபே என பின்வரிசையில் இடது கை பேட்டர்கள் நிறைந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | சிஎஸ்கே புதிய கோச் யார்? பிளெமிங் விலகிய பின் ரேஸில் ஷேன் வாட்சன், அஸ்வின்!

0
0
Report

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்... அடுத்த 7 நாள்களுக்கு அலர்ட் - வானிலை அப்டேட்

Nagalapuram, Tamil Nadu:

Tamil Nadu Today Weather Update : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் வெளுத்து வாங்க கூடிய நிலையில் வருகிற வாரம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிகிறது.தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்தாலும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என தெரிகிறது.தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில்...

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இன்றி அதிகபட்ச வெப்பநிலையே காணப்பட்டது. 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை சில இடங்களில் இயல்பிலிருந்து உயர்ந்தும் மற்ற இடங்களில் இயல்பு நிலையே நீடித்தது.

மேலும் படிக்க | 'லஞ்சம் கேட்டா உடனே புகார் கொடுங்க': வாட்ஸ்அப் எண் அறிமுகம், தமிழக அரசு அதிரடி

அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது, குறைந்தபட்சமாக கோயம்புத்தூர் விமான நிலையம்22.6 டிகிரி செல்சியஸ் மற்றும் உதகமண்டலம் 12.6 டிகிரி செல்சியஸ் பதிவானது.

மாவட்டங்களில் பதிவான வெப்பநிலை

  • கரூர், திண்டுக்கல், நீலகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது.
  • சென்னை, கடலூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட மிக அதிகமாக இருந்தது.
  • கோயம்பத்தூர் (விமான நிலையம்), ஈரோடு, கன்னியாகுமரி, தர்மபுரி, நாகப்பட்டினம், சேலம், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் பதிவானது.

வருகிற நாட்களில்...

  • இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவான வறண்ட வானிலையே தென்படும்.
  • நாளை மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற இடங்கள்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவான வறண்ட வானிலையே காணப்படும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க | இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு.. எப்படி பெறுவது?

  • ஜூலை 17 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
  • ஜூலை 18 மற்றும் 19 ஆம் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகள்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
  • ஜூலை 20 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை எச்சரிக்கை!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாகவே இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை காணப்படும் எனவே வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க | சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு: மாதம் ரூ.63000 சம்பளம்.. இன்னும் 7 நாட்கள் மட்டுமே

0
0
Report
Advertisement

'லஞ்சம் கேட்டா உடனே புகார் கொடுங்க': வாட்ஸ்அப் எண் அறிமுகம், தமிழக அரசு அதிரடி

Nagalapuram, Tamil Nadu:

Tamil Nadu Government: தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு வாட்ஸ்அப் உதவி எண்ணை (94981 80936) அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்து அரசுத் துறைகளும் இந்த வாட்ஸ்அப் எண்ணைத் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முக்கியமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சாய் குமார் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ஊழலுக்கு எதிரான புகார்களைக் குடிமக்கள் எளிதாக அளிக்கும் வகையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (DVAC) இணையதளத்திற்கான நேரடி இணைப்பை வழங்கவும் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குறித்து புகார் அளிக்கலாம்

இனி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எவரேனும் தங்கள் பணிகளை செய்ய லஞ்சம் கோரினால், 9498180936 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் (WhatsApp) செய்தி அனுப்பி அந்த நபர் மீது புகார் அளிக்கலாம்.

ஊழலை ஒழிப்பதற்காக அரசு எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் லஞ்ச ஒழிப்பு தொடர்பான அறிவிப்புப் பலகைகள் தெளிவாகத் தெரியும் வகையில் வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் செவ்வாய்க்கிழமையன்று சுற்றறிக்கை அனுப்பினார். 

மேலும் படிக்க | தமிழ் முக்கிய செய்திகள் Live : காமராஜர் 124வது பிறந்தநாள்; நாகர்கோவிலில் பதற்றம்

0
0
Report

காமராஜருக்கு மாலை போட்டாலே பிடிக்காது... காரணம் என்ன தெரியுமா?

Allampatti, Kooraikundu, Tamil Nadu:

Kamaraj 124th Birthday: கல்விக் கண் திறந்த காமராஜரின் 124வது பிறந்தநாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு கல்வியில் தற்போது இந்தளவிற்கு முன்னேற்றம் கண்டதற்கு காமராஜர் முக்கிய புள்ளியாக இருந்தார்.

பள்ளியில் மதிய உணவு, இலவச கல்வி, இலவச சீருடை, பள்ளிகளின் உள்கட்டமைப்பை சீர்செய்து, பள்ளிகளை அதிகப்படுத்தியது என காமராஜரின் அன்றைய தொலைநோக்கு திட்டங்களே, தற்போது 80 சதவீதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் படிப்பறிவு பெற்றதற்கான முதன்மை காரணம்.

மேலும் படிக்க | மாணவர்களுக்கு குட் நியூஸ்! 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிரடி அறிவிப்பு

'கருப்பு காந்தி' காமராஜர்

காமராஜர் சாமானிய மனிதர்களுக்கான தலைவராகவே கடைசி வரை வாழ்ந்து மறைந்தார். எளிய வாழ்க்கை முறையையே அவர் பின்பற்றி வாழ்ந்தார், கடைசிவரை குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் செல்லாமல், திருமணம் செய்யாமலே இருந்தார். காமராஜர் தனது முழு வாழ்வையும் பொது பணிகளுக்கு என தியாகம் செய்தவர்.

நாட்டின் பிரதமராகும் அதிகாரம் இருந்தும், அதனை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்தவர். மெட்ராஸ் மாகாணம் போன்று தென்னிந்தியாவில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் 'காலா காந்தி', அதாவது 'கருப்பு காந்தி' என மக்களாலும், தொண்டர்களாலும் போற்றப்பட்டவர்.

கிங் மேக்கர் காமராஜர்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் 1964ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டுவரை அகில இந்திய தலைவராக இருந்தவர் காமராஜர். இவரது பதவிக்காலத்தில் இந்தியா மூன்று பிரதமர்களை கண்டது. இவர் நேரு பிரதமராக இருந்தபோது தலைவராக பொறுப்பேற்றார், அடுத்து லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராவதற்கு காமராஜர் காரணகர்த்தாவாக இருந்தார்.

தூய்மையான அரசியல்வாதிக்கான இலக்கணம்

1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை 9 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னரே, கட்சிப் பணி ஆற்ற முதலமைச்சர் பொறுப்பை துறந்தார். இன்றும் ஊழலற்ற, தூய்மையான அரசியல்வாதியாக காமராஜர் விளங்குகிறார்.

காமராஜருக்கு பூ மாலை பிடிக்காதது ஏன்?

அப்படிப்பவர்களுக்கு பூ மாலை பிடிக்காது என சொன்னால் நம்ப முடிகிறதா... ஆம்... அவருக்கு பூ மாலைகளே பிடிக்காது. அதற்கு ஒரு சுவாரஸ்ய காரணமும் இருக்கிறது. பூ மாலைகள் பிடிக்காது என்றாலும் அவருக்கு யாராவது கதர் துண்டை பரிசளித்தால் மகிழ்ச்சியாக பெற்றுக்கொள்வாராம்.

மேலும் படிக்க | இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு.. எப்படி பெறுவது?

மதுரா வெளியீடு என்ற பதிப்பகம் வெளியிட்ட, இளசை சுந்தரம் என்பவர் எழுதிய 'காமராஜ் - நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்' என்ற புத்தகத்தில் இதுகுறித்த தகவல்கள் உள்ளன. பூ மாலைகள் ஏன் காமராஜருக்கு பிடிக்காது என்பது குறித்து அவரது உதவியாளர் வைரவன் அளித்த பதிலை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

காமராஜருக்கு பூ மாலை பிடிக்காததற்கு காரணம், அவை அழைத்தும் உடனடியாக குப்பைக்கு போயிடக்கூடியவை, அதனால் பெரிய பலனிலை என்பதும் ஒன்று. அதுமட்டுமின்றி பூக்களில் இருக்கும் புழுக்கள் கழுத்தை கடித்து புண்ணாகும் வழக்கம் இருந்ததாம். 

அதேபோல், மாலைகளில் ஜரிகை நூல் சுற்றப்பட்டிருக்கும், அந்த நூ் கழுத்தில் லேசாக அறுத்து கீறல்கள் ஏற்படுமாம். காமராஜருக்கு நீரிழிவு நோய் இருந்தது. எனவே, இதுபோதல் ஏற்படும் காய்கள், புண்கள், கீறல்களை தடுக்க காமராஜர் பூ மாலைகளை கழுத்தில் சூடிக்கொள்ளாமல், யாராவது கொண்டு வந்தாலும் அதை கைகளிலேயே வாங்கிக் கொள்வாராம்.

கதர் துண்டை ஏற்றுக்கொண்டது ஏன்?

ஆனால், கதர் துண்டு யாராவது அணிவித்தால் அதை மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வாராம். ஏனென்றால் தலைவருக்கு அணிவிக்கப்படும் துண்டுகள் அனைத்தும் 'பால மந்திர்' என்ற அனாதைச் சிறுவர் பள்ளிக்கு அனுப்பப்படும். அது அந்த குழந்தைகளுக்கு உடனடியாக பயன்படும் என்பதாலேயே அவர் கதர் துண்டுகளை விரும்பியிருக்கிறார்.

மேலும் படிக்க | தமிழக அரசு அதிரடி அறிவிப்பு: தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே! ரூ.30,000 சம்பளத்தில் வேலை... அப்ளை செய்ய லிங்க் இதோ!

0
0
Report

கணவரை நெரித்துக் கொன்று 3 துண்டுகளாக்கிய பெண்: நவி மும்பையில் கொடூரம்.. 11 மாதங்களுக்குப் பின் சிக்கியது எப்படி?

Navi Mumbai, Maharashtra:

Navi Mumbai Crime: நவி மும்பையில் திடீரென காணாமல் போன ஒரு மனிதரின் வழக்கு காவல்துறைக்கு சவாலாக இருந்துவந்த நிலையில், கணவரை காணாமல் மனைவி பட்ட பாடு அனைவரையும் பரிதாபப்பட வைத்தது. 11 மாத கால புலனாய்வு மற்றும் தொடர் விசாரணையின் பலனாக போலீசார் இப்போது அந்த வழக்கின் பின்னுள்ள மர்மத்தை கண்டறிந்துள்ளனர். உண்மை அனைவரையும் உலுக்கிப் போட்டது. ஆம்! காணாமல் போன நபர் அவரது மனைவி மற்றும் மனைவியின் காதலனால் கொல்லப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது!

மர்மத்தை தீர்த்த நவி மும்பை போலீஸார் 

நவி மும்பை, ஐரோலியின் யாதவ் நகரில் நடந்த, 11 மாதங்களாகத் துப்பு துலங்காமல் இருந்த ஒரு கொடூரமான கொலை வழக்கை நவி மும்பை போலீஸார் வெற்றிகரமாகத் தீர்த்துள்ளனர். ஒரு 40 வயதுப் பெண்ணும், அவரது காதலன் எனக் கூறப்படுபவரும், அப்பெண்ணின் கணவரைக் கொடூரமாகக் கொன்று, உடலைத் துண்டுகளாக்கி அப்புறப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம், யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட அப்படியே மறைந்திருக்க வேண்டிய ஒரு ஒரு நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரபலே MIDC காவல்துறையினர் இக்கொலை வழக்கை இப்போது தீர்த்துள்ளனர். கொல்லப்பட்ட பலிராமின் மனைவி சுனிதா குஷ்வாஹா (40) மற்றும் அவரது காதலராகக் கருதப்படும் ராகுல் தசரத் பிரஜாபதி (30) ஆகியோரை இக்கொலைக்காக போலீசார் கைது செய்துள்ளனர். 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரவு இக்கொலை நிகழ்த்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதற்கு ஏறக்குறைய 11 மாதங்களுக்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் என்ன?

சுனிதா மற்றும் ராகுல் இடையில் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்துவந்துள்ளது. இதை பாலிராம் கடுமையாக எதிர்த்ததே இந்தக் குற்றத்திற்கான காரணம் என ரபாலே MIDC போலீஸார் கூறுகின்றனர். குடும்பத்தில் மோதல்கள் அதிகரித்த நிலையில், தங்கள் உறவைத் தொடர்வதற்கு தடையாக இருந்த பாலிராமை ஒழித்துக்கட்ட இருவரும் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

கொடூரமான சதித்திட்டம்

தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் முன், சம்பவத்தை நேரில் காண யாரும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, சுனிதாவும் ராகுலும் பாலிராமின் இரண்டு குழந்தைகளையும் அவர்களின் அத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆகஸ்ட் 9, 2025 அன்று இரவு, யாதவ் நகரில் உள்ள தனது வீட்டில் பாலிராம் தூங்கிக்கொண்டிருந்தபோது, ​​அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்த, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது கழுத்தை அறுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | 17வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்கசுக் உடல்நிலை கவலைக்கிடம்..விவரம்

கணவரின் உடலை துண்டு துண்டாக்கிய மனைவி

பலிராமை கொலை செய்த பின்னர், சுனிதாவும் ராகுலும் பாலிராமின் உடலை வீட்டிற்குள்ளேயே மூன்று பாகங்களாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் பின், உடல் பாகங்களை சாக்குப்பைகள் மற்றும் படுக்கை விரிப்புகளில் கட்டி, ராகுலின் ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு அடர்ந்த காவ்லி தேவ் (Gavli Dev) வனப்பகுதிக்கு அவர்கள் சென்றனர். அங்கு ஆதாரங்களை அழிப்பதற்காக உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசினர்.

மறுநாள் காலையிலேயே, சுனிதா பொய்களைப் பின்னத் தொடங்கினார். தனது கணவர் திடீரென குடும்பத்தைக் கைவிட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக உறவினர்களிடமும் அண்டை வீட்டாரிடமும் கூறினார்.

தனது கடந்த காலத்தை முழுமையாக மறைக்க, யாதவ் நகரில் இருந்த தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, சுனிதா தனது குழந்தைகளுடன் கன்சோலியில் உள்ள ராகுலின் வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். பல மாதங்களுக்கு, இந்தக் குற்றம் அந்தப் பொய்க் கதையின் பின்னால் மறைந்திருந்தது.

சகோதரருக்கு வந்த சந்தேகம்

பலிராமின் சகோதரர் தங்கள் சொந்தக் கிராமத்திலிருந்து வந்தபோதுதான் இந்தக் சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியது. பலிராம் திடீரென மாயமானார் என்ற கதையை நம்ப மறுத்த அவர், பல வித கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது விடாமுயற்சியின் காரணமாக, உண்மையான கொலை நடந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 2026-ல் ரபலே எம்.ஐ.டி.சி (Rabale MIDC) காவல் நிலையத்தில் பலிராம் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டது.

துப்பு கிடைக்காத வழக்கை காவல்துறை எவ்வாறு தீர்த்தது?

ரபலே எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் தேவிதாஸ் கதோலே, இவ்வழக்கு ஆரம்பத்தில் நேரடி ஆதாரங்களோ அல்லது உடலோ இல்லாத, துப்பு கிடைக்காத ஒரு கொலை வழக்காக இருந்ததைக் குறிப்பிட்டார். இருப்பினும், அர்ப்பணிப்புடன் கூடிய தொழில்நுட்ப ரீதியான விசாரணை நிலைமையை மாற்றியது.

ஆரம்பகட்ட விசாரணையின்போது, ​​சுனிதா கூறிய காலவரிசை மற்றும் வாக்குமூலங்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதை காவல் துறையினர் கவனித்தனர்.

டிஜிட்டல் தடயங்களை அழிக்க, பலி ராம் மாயமான சிறிது காலத்திலேயே சுனிதா மற்றும் ராகுல் இருவரும் தங்கள் அலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகளை மாற்றியிருந்ததை காவல்துறை கண்டறிந்தது. இது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் ஆழமாக்கியது.

புதிய எண்களைப் பயன்படுத்திய போதிலும், சி.டி.ஆர் (CDR) பகுப்பாய்வில், ராகுல் பல ரகசிய தொலைபேசி இணைப்புகள் மூலம் சுனிதாவோடு தொடர்ந்து மற்றும் பிரத்யேகமாகத் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. தனித்தனியான விசாரணைகளின்போது அடுக்கடுக்கான தொழில்நுட்ப ஆதாரங்களை எதிர்கொண்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உடைந்துபோய் கொலையை ஒப்புக்கொண்டனர்.

மேலும் படிக்க | ஓடும் ரயிலில் பூஜை! ஆத்தாடி இத்தனை லட்சம் செலவா? வைரலாகும் வீடியோ

வழக்கின் தற்போதைய நிலை என்ன?

சுனிதாவும் ராகுலும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, உள்ளூர் நீதிமன்றம் சுனிதா குஷ்வா மற்றும் ராகுல் பிரஜாபதி ஆகிய இருவரையும் ஏழு நாள் காவல் காவலில் வைக்க உத்தரவிட்டது.

பலிராமின் எலும்புக்கூட்டு எச்சங்களை மீட்க, கரடுமுரடான கவ்லி தேவ் மலை மற்றும் வனப்பகுதியில் காவல்துறை குழுக்கள் சவாலான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளன. உடல் பாகங்கள் வீசப்பட்டு ஏறக்குறைய 11 மாதங்கள் கடந்துவிட்டதால், அந்த எச்சங்களை மீட்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று போலீசார் ஒப்புக்கொள்கிறார்கள். இது குறித்த மேலதிக விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

கலியுகம் பலியுகமாக மாறிவருகிறது. ஒருவருடன் வாழ பிடிக்காவிட்டால் விலகிச்செல்லலாம். அவரை அழித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற அவசியம் என்ன? இப்படிப்பட்ட வழக்குகள் மனித மனதின் கொடூர பக்கத்தை வெளிச்ச்சம் போட்டு காட்டுகின்றன. முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக அறியப்பட்ட இப்படிப்பட்ட நிகழ்வுகள், இப்போது தினம் தினம் நம் கண்முன் நடக்கின்றன.

இந்த வழக்கில் பலிராமின் சகோதரரின் விடாமுயற்சியால் அவரது கொலையாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இப்படி எத்தனை பேர் மவுனமாக சடலமாகிப்போனார்களோ? இந்த வழக்கை பொறுத்தவரை, 11 மாதங்களுக்கு பிறகு பலிராம் காணாமல் போனதற்கான காரணம் அறிந்த அவரது ஊர் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்க | கேரளா லாட்டரி Scam: எச்சரிக்கை மக்களே.. Unsold Ticket திருடி பணம் வாங்கிய அரசு ஊழியர்கள்

0
0
Report
Advertisement

நாகர்கோவில் கைதி மரணம்: உடலில் 19 இடங்களில் காயம்... வெளியான ஷாக் ரிப்போர்ட்

Nagercoil, Tamil Nadu:

Nagercoil Lockup Death Updates : கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் விசாரணை கைதியாவார். இவர் நாகர்கோவில் சிறையில் போலீசாரின் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்தார் என குற்றஞ்சாட்டப்படுகிறது. 

சாத்தான்குளம் சம்பவத்தை போன்து தனது கணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என சபரிவர்மனின் மனைவி புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடந்த பிரதேச பரிசோதனையில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன. 

அவரின் கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும்; வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கை, கால்களை கட்டிப் போட்டு தாக்கியதற்கான அடையாளம் உள்ளது என்றும்; தலை, பின் கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சபரிவர்மன் மரணமடைந்த விவகாரத்தில் சிறை வார்டன் உட்பட சிறைக் காவல்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரண விவகாரத்தில் கைதான சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடைநம்பி ஆகிய மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து நெல்லை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. செந்தாமரை உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | முதலமைச்சர் விஜய்க்கு, மு.க.ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கை

மேலும் படிக்க | நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.. செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்.. என்ன மேட்டர்?

மேலும் படிக்க | நல்லா பேசுனான் இப்ப செத்துட்டான்! அவன அடிச்சே கொன்னுட்டாங்க! லாக்-அப் மரணம்?

0
0
Report

பைனலில் ஸ்பெயின்... பிரான்ஸ் அணிக்கு பெரிய ஷாக் - எம்பாப்பே ஏமாற்றம்

Arlington, Texas:

FIFA World Cup 2026, France vs Spain : 2018 பிபா உலகக் கோப்பை தொடரின் சாம்பியன், 2022 பிபா உலகக் கோப்பை தொடரின் ரன்னர் அப் அணியாக விளங்கும் பிரான்ஸ் அணி, இந்த முறை அரையிறுதியோடு வெளியேறியிருப்பது கால்பந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ஸ்பெயின் அணி 2வது முறையாக பிபா உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இதற்கு முன் 2010ஆம் ஆண்டில் இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது கோப்பையை நெருங்கி உள்ளது.

0
0
Report

மாற்றுத்திறனாளிக்கு இரண்டு மணி நேரத்தில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய கலெக்டர்!

P.RAJESHP.RAJESHFollow3d ago
Pudukkottai, Tamil Nadu:புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகேசன் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில், கலெக்டர் அருணாவை நேரில் சந்தித்து எனக்கு மூன்று சக்கர சைக்கிள் தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பரிசளித்த கலெக்டர் அருணா இரண்டே மணி நேரத்தில் ரூபாய் 14 ஆயிரம் மதிப்புள்ள, மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளி முருகேசன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார். அப்பொழுது அங்கிருந்த பொது மக்களையும் அலுவலர்களையும் கலெக்டரின் செயலால் மகிழ்ச்சி அடைந்தனர்.
0
0
Report
Advertisement
Advertisement
Back to top