icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

கேரளாவை உலுக்கும் உறுப்பு தான மோசடி... 50 லட்சத்தில் கிட்னி சேல்: ED அதிரடி சோதனை

Ayyampuzha, Kerala:

Kerala ED Raids: உடல் உறுப்பு தான முறைகேடுகளில் ஈடுபட்ட ஒரு மோசடி கும்பல் (racket) குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை (ஜூன் 18) அன்று கேரளா முழுவதும் அதிரடி சோதனைகளைத் தொடங்கியது. கோட்டயம், கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் வங்கி அதிகாரிகள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவி வருகின்றனர்.

கேரள மருத்துவமனைகளில் அமலாக்க இயக்குநரகம் சோதனை

கொச்சியில், ராஜகிரி மருத்துவமனை (ஆலுவா), மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனை (பல்லிமுக்கு), ஆஸ்டர் மெட்சிட்டி (சேரநல்லூர்) மற்றும் விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனை (மராடு) ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. இந்த நாசவேலை நெட்வொர்க்கின் முக்கிய முகவராகக் கருதப்படும் முகமது நஜீப்பின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

நஜீப் நடத்தி வந்த 'கல்லத்ராஸ் மெடிக்கல் டூரிசம் பிரைவேட் லிமிடெட்' (Kallatras Medical Tourism Private Limited) என்ற நிறுவனத்தை மையமாக வைத்து இந்த விசாரணை நடைபெறுகிறது. இந்த நிறுவனம் மருத்துவச் சுற்றுலா என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் உறுப்பு தான செயல்முறைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை ஏற்பாடு செய்வதற்காக, இடைத்தரகர்கள் மூலம் உறுப்பு வழங்குநர்கள், பெறுநர்கள் மற்றும் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டதாகவும், இதற்காகப் பெருந்தொகை வசூலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய ஆண்டுகளில், உறுப்பு தான மோசடி பற்றி கேரளா முழுவதும் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளின் (FIR) அடிப்படையில் அமலாக்கத் துறையின் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவமனைகள் மற்றும் முகவர்கள் உடந்தையாக இருக்க, இக்கும்பல் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய உறுப்பு கடத்தல் வலைப்பின்னலுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்டறிவதே இந்தச் சோதனைகளின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | தாயின் காதலன் வெறிச்செயல்.... 7 வயது சிறுவனை காவு வாங்கிய கள்ளக்காதல், மீரட்டில் பயங்கரம்

கேரளா சட்ட விரோத உறுப்பு தான மாஃபியா: பின்னணி என்ன?

கேரளாவில் நடந்து வரும் இந்த சட்டவிரோத உடல் உறுப்பு வியாபாரம் (Kerala Organ Trafficking Case) பற்றிய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையின் முடிவுகளை மையமாகக் கொண்டு அமலாக்க இயக்குநரகம் மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ED இப்போது 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.

உத்தரப் பிரதேசத்தில் கைதான மாஸ்டர் மைண்ட் முகமது நஜீப்

பல்வேறு மாவட்டங்களிலும், அநேகமாக மாநிலத்திற்கு வெளியேயும் செயல்பட்டதாகக் கூறப்படும் பரந்த உறுப்பு கடத்தல் வலைப்பின்னலின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் முகமது நஜீப்பை (53) கேரள காவல்துறை கைது செய்தது. காசர்கோடைச் சேர்ந்த நஜீப், பல மாத விசாரணைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார். ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக அவர் கால்நாட்டில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நஜீப்பின் மனைவி ரஷீதா உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுநீரக மார்கெட்: 5-10 லட்சத்துக்கு வாங்கி 20-50 லட்சத்துக்கு விற்பனை

நிதி நெருக்கடியில் உள்ள நபர்களைக் குறிவைத்து, சிறுநீரகங்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாக இக்கும்பல் ஆசை காட்டியதாகவும், பின்னர் போலியான ஆவணங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம் பெறுநர்களுக்கு 20 முதல் 50 லட்சம் ரூபாய்க்கு அவற்றை விற்றதாகவும் காவல்துறை குற்றம் சாட்டுகிறது.

மேலும் படிக்க | பெட்ரோல், டீசல் விலை குறையப்போகுது: உலக சந்தையில் கிடுகிடுவென சரியும் கச்சா எண்ணெய் ரேட்!!

திருவனந்தபுரத்தில் முதலில் அம்பலமான முறகேடுகள்

திருவனந்தபுரத்தில் உறுப்பு வழங்குநர் மற்றும் பெறுநர் விண்ணப்பங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கும்பலின் செயல்பாடு வெளிச்சத்திற்கு வந்தது. அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலியான முத்திரைகள், கையொப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். வடக்கேக்கராவைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசி, சிறுநீரக தானம் செய்ததற்காக ₹9.5 லட்சம் பெற்றதாகவும், ஆனால் பெறுநர் கிட்டத்தட்ட ₹20 லட்சம் செலுத்தியதாகவும் கூறப்படும் வழக்கு, இந்த வலையமைப்பை அம்பலப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது.

இந்தியாவின் கடுமையான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிமுறைகளைத் தவிர்ப்பதற்காக, நஜீபின் இந்தச் செயல்பாடு போலியான ஆதார் அட்டைகள், போலி பிரமாணப் பத்திரங்கள் மற்றும் கள்ளப் பரிந்துரைக் கடிதங்களை நம்பியிருந்ததாக காவல்துறை கூறுகிறது. சரிபார்ப்பு அழைப்புகளைத் திசைதிருப்புவதற்காக போலியான தொலைபேசி எண்களும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சிறப்புப் புலனாய்வுக் குழு

நஜீப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனை அளவிலான அனுமதிகள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் இடைத்தரகர்களின் பங்கு ஆகியவற்றை விசாரிக்க மாநில அளவிலான சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சோதனைகளில் ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் அளவு, இந்தக் கும்பல் கேரளா முழுவதும் சட்டப்பூர்வமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைமுறைகளில் ஊடுருவியிருக்கக்கூடும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க | 20 வயது காதலியை... கொன்ற லிவ்-இன் காதலன்... இன்ஸ்டாகிராமில் அறிமுகம் - நடந்தது என்ன?

0
0
Report

தாயின் காதலன் வெறிச்செயல்.... 7 வயது சிறுவனை காவு வாங்கிய கள்ளக்காதல், மீரட்டில் பயங்கரம்

Meerut, Uttar Pradesh:

மீரட்: உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், ஏழு வயது சிறுவன் அவனது தாயின் காதலனால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது தாய் மற்றும் அவரது காலதலனின் உறவுக்கு அந்தச் சிறுவன் தடையாக இருந்ததாலேயே அவன் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் சிறுவனின் குடும்பம் மட்டுல்லாமல், நாட்டு மக்களையே பீதியில் ஆழ்த்தியுள்ளது.

மீரட் கிரைம்: திடீரென காணாமல் போன அங்கத்

அங்கத் என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுவன், செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட அர்பித் பராஷர் என்பவர், சாக்லேட் தருவதாகக் கூறி அச்சிறுவனைத் தனது காருக்குள் வரவழைத்து அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவனைக் கொன்று கால்வாய் அருகே உள்ள வயல்வெளியில் உடலை வீசியதாகவும் கூறப்படுகிறது.

குடும்பத்தினர் அளித்த புகார்

வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனதால், குடும்பத்தினர் பதறி காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி, சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் கண்காணிப்புத் தரவுகளை ஆய்வு செய்தனர். அந்தக் காட்சிகளில் சிறுவன் ஒரு காரில் அழைத்துச் செல்லப்படுவது பதிவாகியிருந்தது. இது விசாரணையயை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது.

மேலும் படிக்க | 20 வயது காதலியை... கொன்ற லிவ்-இன் காதலன்... இன்ஸ்டாகிராமில் அறிமுகம் - நடந்தது என்ன?

விசாரணையை திசை திருப்ப முயன்ற குற்றவாளி

அர்பித் பராஷர் ஆரம்பத்தில் விசாரணையைத் திசைதிருப்ப முயன்றதாகவும், தனது வாக்குமூலங்களை அடிக்கடி மாற்றிக்கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், தான் சிறுவனை ஒரு கால்வாயில் வீசிவிட்டதாக அவர் கூறியதையடுத்து, காவல்துறையினரும் நீச்சல் வீரர்களும் அங்குத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், அங்குச் சிறுவன் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

தொடர் விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், உடலை வீசிய இடத்திற்குக் காவல்துறையினரை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கால்வாய்க்கு அருகிலுள்ள ஒரு வயல்வெளியிலிருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

விசாரணயில் வெளிவந்த பகீர் உண்மைகள்

குற்றத்தை ஒப்புக்கொண்ட அர்பித் பராஷரிடம் விசாரணை தீவிரமடைந்தது. விசாரணையின் போது, ​​தானும் சிறுவனின் தாய் குர்பிரீத் கவுரும் நெருக்கமான நிலையில் இருந்ததை அங்கத்வீர் பார்த்துவிட்டதாக அற்பித் கூறியதாக மவானா வட்ட அதிகாரி பங்கஜ் லவானியா தெரிவித்தார். சமூக அவப்பெயருக்கு அஞ்சி, அங்கத்தை கடத்திச் சென்று, பத்ரகாலி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து கொன்றதாகவும், பின்னர் உடலை புதர்களில் வீசியதாகவும் அவர் கூறினார். உடல் மீட்கப்பட்ட செய்தி கிடைத்ததும், அங்கத்வீரின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். குற்ற நடந்த இடத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் குழு முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாக காவல் அதிகாரி (CO) பங்கஜ் லவானியா தெரிவித்தார். கொலையில் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் 'வாகன்-ஆர்' (WagonR) காரும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வேலைக்காக சவுதி அரேபியா சென்ற கணவன்

பஹ்சுமாவைச் சேர்ந்த குர்சேவக் என்பவர் பிழைப்புக்காக சவுதி அரேபியா சென்றிருந்தார். அவர் இல்லாத நேரத்தில், அவரது மனைவி குர்பிரீத், அர்பித் பராஷர் என்பவருடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அர்பித் ஏற்கனவே திருமணமானவர். அங்கத்வீர் என்ற அப்பாவிக் குழந்தையின் கொலையில் தாய்க்கும் பங்கு இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவரது பங்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட அங்கத் வீரின் தாயார் குர்பிரீத் கவுர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஹ்சுமாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியதாக அந்த அதிகாரி விளக்கினார். அவர் தினமும் பேருந்தில் சென்று வந்தார். குற்றம் சாட்டப்பட்ட அர்பித் பராஷர், ஹாபூரில் உள்ள HDFC வங்கி கிளையில் பகுதி மேலாளராகப் (Area Manager) பணியாற்றி வந்தார். அவர்கள் தினமும் பேருந்தில் சந்தித்துக்கொண்டனர், தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர்; காலப்போக்கில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.

மேலும் படிக்க | "ஏன்னை விட்டுடு": பாலியல் வன்கொடுமை, வசியம்... IAF அதிகாரி மனைவியை சீரழித்த தோழன், நாக்பூரில் அதிர்ச்சி

மீரட் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அபிஜீத் குமார் சிங் கூறுகையில், கடத்தல் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஒரு சிறப்புக் காவல் குழு குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ததாகத் தெரிவித்தார். விசாரணையின்போது, ​​குற்றகாளி சிறுவனைத் தனது காரில் அழைத்துச் சென்று கொன்றதையும், பின்னர் உடலை அப்புறப்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார்.

அங்கத் (Angad) பஞ்சாபில் தனது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும், அங்குப் படித்து வந்ததாகவும், சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் மீரட்டிற்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: உண்மை தெரிந்த பெண்ணுக்கு அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

0
0
Report

சபாநாயகர் அறையில் முதல்வர் விஜய், திமுக, அதிமுக ஒன்றாகக் கூடியது ஏன்? பின்னணி விவரம்!

Chennai, Tamil Nadu:

சென்னை: தமிழ்நாடு 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தொடங்கியுள்ள சூழலில், அடுத்தகட்ட கூட்டத்தொடர் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் என்பதால், இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டத்தின் விவரங்கள், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நோக்கம் மற்றும் ஆளுநர் உரையின் விரிவான சிறப்பம்சங்கள் என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

மேலும் படிக்க - தமிழ்நாடு சட்டப்பேரவை : அரசு வேலை டூ சாதிவாரி கணக்கெடுப்பு வரை - ஆளுநர் அர்லேகர் உரை சிறப்பம்சங்கள்

சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுகுழு கூட்டம்

சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு (Business Advisory Committee) கூட்டம் தொடங்கியது.

முதலமைச்சர் பங்கேற்பு

இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரடியாகப் பங்கேற்றார்.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்

தமிழக வெற்றிக் கழக அரசுடன், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அலுவல் ஆய்வுகுழு கூட்டம் முக்கிய நோக்கம்

இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களை எத்தனை நாட்களுக்கு வைப்பது மற்றும் பட்ஜெட் அல்லது இதர முக்கிய மசோதாக்கள் எப்போது தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க - tamil nadu news live updates today : தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று, ஆளுநர் உரை முக்கிய அம்சங்கள், தமிழக வானிலை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

17வது சட்டப்பேரவை: ஆளுநர் உரையின் முக்கிய சிறப்பம்சங்கள்

முன்னதாக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் ஆற்றிய உரையில், புதிய அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வைகளை விரிவாகப் பட்டியலிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்..

1. அரசியல் மற்றும் நிர்வாக மாற்றம்

  • புதிய அரசியல் புரட்சி: 1967-ல் அண்ணா, 1977-ல் எம்.ஜி.ஆர் தலைமைகளில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது போல, 2026-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது.
  • பகிரப்பட்ட அதிகாரம்: தமிழ்நாட்டின் 74 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில், "பகிரப்பட்ட ஆட்சி மற்றும் பகிரப்பட்ட அதிகாரம்" என்ற புதிய கூட்டாட்சி முன்மாதிரியை இந்த அரசு உருவாக்கியுள்ளது.
  • நிர்வாக வழிகாட்டிகள்: தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளே இந்த அரசின் நிர்வாகத்திற்கு வழிகாட்டி.

2. மாநில உரிமைகள் மற்றும் நிதி கோரிக்கைகள்

  • மத்திய அரசிடம் வலியுறுத்தல்: மத்திய அரசுக்கு தமிழ்நாடு வழங்கும் வரிகளில் மாநிலத்திற்கு உரிய பங்கைப் பெற வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
  • சிறப்பு சட்டக் குழு: தமிழ்நாட்டிற்கு சட்டபூர்வமாக கிடைக்க வேண்டிய நிதி உரிமைகள் மற்றும் நிலுவைத் தொகைகளைப் பெறுவதற்காக சிறப்பு சட்டக் குழு ஒன்று அமைக்கப்படும்.
  • வெள்ளை அறிக்கை: கடந்த 5 ஆண்டுகால நிதி நிர்வாகத்தின் உண்மை நிலையை வெளிப்படையாக விளக்கும் வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.

3. சட்டம்-ஒழுங்கு, சமூக நீதி மற்றும் வேலைவாய்ப்பு

  • காலிப் பணியிடங்கள் நிரப்புதல்: உயர்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் மற்றும் பிற காலிப் பணியிடங்கள் தகுதி, திறமை அடிப்படையில், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் போர்க்கால அடிப்படையில் நிரப்பப்படும்.
  • சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு தனது சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை நிறைவு செய்த பிறகு, தமிழ்நாடு அரசு விரிவான சமூகநீதி ஆய்வை மேற்கொள்ளும்.
  • சிங்கப்பெண் அதிரடிப்படை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்தச் சிறப்பு அதிரடிப்படையின் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

4. போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கல்வி

  • மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு: கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 'சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை' அமைக்கப்படும். கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
  • தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு மாறான தேசிய கல்விக் கொள்கை (NEP-2020), மும்மொழித் திணிப்பு மற்றும் நீட் (NEET) தேர்வு முறையை இந்த அரசு உறுதியாக எதிர்க்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

5. வாழ்வாதார உரிமைகள்

  • காவிரி நதிநீர் உரிமை: கர்நாடக அரசின் புதிய அணை கட்டுமானத் திட்டங்களைத் தடுத்து, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை முழுமையாகப் பெற தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடரும்.
  • மீனவர்கள் பாதுகாப்பு: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்.

மேலும் படிக்க - திரையில் நாயகன்.. தரையில் வில்லனா? தவெக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக முழக்கம்

0
0
Report
Advertisement

மொபைல் சர்வீஸ் பயிற்சி... தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாடு - யார் யார் சேரலாம்?

Chennai, Tamil Nadu:

Mobile Repair and Service Training : தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான 'மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி' வழங்க உள்ளது.

சென்னையில் வரும் ஜூன் 23ஆம் தேதி ஜூன் 25 வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க | தமிழக அரசு எச்சரிக்கை: கல்வி உதவித்தொகையெல்லாம் பொய், இப்படி செய்தி வந்தா நம்பாதீங்க!

பயிற்சி நோக்கம்:

பயிற்சியில் பங்கெடுப்பவர்களுக்கு மொபைல் போன் ஹார்ட்வேர் மற்றும் Chip Level Service துறையில் தொழில்துறைத் தரநிலைக்கு ஏற்ப தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பயிற்சி முடிவில், பயிற்சியில் பங்கேற்றவர்கள் சுய வேலைவாய்ப்பு / சேவை மையம் / தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு தயாராக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாள் பயிற்சியில் ஒவ்வொரு நாளிலும் என்னென்ன விஷயங்களுக்கு பயிற்சி வழங்கப்டும் என்பதையும் தமிழ்நாடு அரசு அதன் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மொபைல் சர்வீஸ் பயிற்சி - நாள் 1

  • மொபைல் போன்களின் அடிப்படை அறிமுகம்
  • தொலைபேசிகளின் வகைகள்
  • உற்பத்தியாளர்கள் பற்றிய விளக்கம்
  • ஆண்ட்ராய்டு மற்றும் சிப்செட்
  • சார்ஜர்கள் மற்றும் பேட்டரிகளின் வகைகள் 
  • டிஸ்ப்ளே வகைகள் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள்
  • Ear Speaker, Loud Speaker, Microphone போன்ற கூறுகள் மற்றும் சார்ஜிங் இணைப்பகங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் நடைமுறைகள்.
  • FFC ஸ்ட்ரிப்ஸ், கேபிள்கள், சென்சார்கள் மற்றும் சார்ஜிங் போர்டுகள் தொடர்பான பழுதுபார்த்தல்.

மொபைல் சர்வீஸ் பயிற்சி - நாள் 2

  • Chip Level சர்வீசிங் பற்றிய அடிப்படை மற்றும் சுருக்கமான விளக்கம்
  • SMT கூறுகள், மின்தடை, மின் தேக்கி, டையோடு, IC ஆகியவற்றின் செயல்முறை விளக்கம்.
  • கூறுகளை அகற்றுதல், Soldering நுட்பங்கள் மற்றும் Multimeter மூலம் கூறுகளை கண்டறியும் பயிற்சி.
  • மொபைல் மதர்போர்டில் உள்ள மின்னழுத்தப் பிரிவுகள் - CPU, EMMC, Network, Battery, CC Board, Display, Battery Section.
  • மாணவர்களின் தனிப்பட்ட செயல்திறன் மேம்பாட்டுக்கான நடைமுறை பயிற்சி.
  • மின்னழுத்தம் (Voltage), மினோட்டம் (Current), Amps & Watts பற்றிய தெளிவான விளக்கம்.
  • மதர்போர்டில் Voltage-களை கண்டறியும் முறைகள் மற்றும் Dead Condition மொபைல்களை சரி செய்யும் நுட்பங்கள்.

மேலும் படிக்க | தவெக இதை செய்தால் பதவியிலிருந்தே விலகுகிறேன்! CM விஜய்க்கு தங்கம் தென்னரசு நேரடி சவால்..!

மொபைல் சர்வீஸ் பயிற்சி – நாள் 3

  • BQ, MediaTek, Qualcomm சார்ஜிங் Tracing மற்றும் Fixing நடைமுறைகள்.
  • LCD மற்றும் OLED Display பிரிவுகள், Backlight மற்றும் GFX Section பழுதுபார்த்தல். 
  • VREG Line, LDO Lines Tracing, Short Killer மூலம் மொபைல் சரி செய்யும் முறை. 
  • Primary & Secondary Power Section பழுதுபார்த்தல், 6 Amps மூலம் Port Repair. 
  • DC PSU Reading Fault Diagnosis.
  • Software Unlock கருவிகள், Network Section - PA மற்றும் WTR நேரடி கண்காணிப்பு மற்றும் சரிசெய்தல்.
  • FRP Unlock-க்கான நேரடி Unlocked நடைமுறை பயிற்சி.

யார் யார் பயிற்சியில் சேரலாம்?

  • மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.
  • பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
  • இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 
  • ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள், தொழில்முனைவோர்கள் கலந்துகொள்ளலாம்.
  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், சுயதொழில் ஆர்வலர்கள் தற்போதுள்ள மொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது, தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
  • மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். 
  • திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கைபேசி 8668100181 / 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 
  • தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600032.

மேலும் படிக்க | அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்.. பெண்களுக்கு CM விஜய்யின் முக்கிய அறிவிப்பு

0
0
Report

ஏமாற்றிய ரொனால்டோ... திணறிய போர்ச்சுகல்... மேஜிக் செய்த டிஆர் காங்கோ

Houston, Texas:

Portugal vs DR Congo, FIFA World Cup 2026 : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் K பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் போர்ச்சுகல் - டிஆர் காங்கோ அணிகள் இன்று ஹவுஸ்டன் மைதானத்தில் மோதின. இந்திய நேரப்படி இப்போட்டி ஜூன் 17ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தொடங்கியது.

போர்ச்சுகல் - டிஆர் காங்கோ அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் கூட அடிக்காமல் பெரும் ஏமாற்றத்தை அளித்தார், இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

0
0
Report

சென்னையில் ரயில் சேவை திடீர் பாதிப்பு... பயணிகள் கடும் பாதிப்பு - என்ன பிரச்னை?

Chennai, Tamil Nadu:

Chennai Ennore Train Service Affected : சென்னை எண்ணூர் அருகே புறநகர் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணூர் மேம்பாலம் அருகே ரயில்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார கோளாறு காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில்களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.  நீண்ட நேரமாக ரயில்கள் நிற்பதால் பயணிகள் கீழே இறங்கி, தண்டவாளம் வழியாக நடந்தே செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்களில் பயணிகள் சிக்கி உள்ளனர். Overhead Cable எனப்படும் ஓ.ஜி. மின்கம்பி கோளாறு காரணமாக ரயில் இயக்கத்தில் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எண்ணூர் பகுதியில் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ரயில் சேவை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

0
0
Report
Advertisement

அசுர ஆட்டத்தை காட்டிய இந்தியா... இதுவரை எந்தெந்த போட்டிகளில் 400+ ரன்களை அடித்துள்ளது?

PPINEWZ23h ago
Ardonamau, Uttar Pradesh:

Team India 400 ODI Score : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஓடிஐ போட்டி இன்று (ஜூன் 17) நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி மகத்தான சாதனையை படைத்திருக்கிறது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 402 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. கேப்டன் சுப்மான் கில் 110 பந்துகளில் 22 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 154 ரன்களையும்; விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 79 பந்துகளில் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 125 ரன்களையும் அடித்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் நங்கேயாலியா கரோட்டி 4 மற்றும் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை சரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடரை ஒளிபரப்பும் ஜீ.. எந்த சேனலில் பார்க்கலாம்? முழு அட்டவணை இதோ!

ஓடிஐயில் இந்திய அணி...

ஓடிஐ போட்டிகளை பொருத்தவரை இந்திய அணி எப்போதுமே சிறந்த அணியாகவே திகழும். இதுவரை இந்த பார்மட்டில் மட்டும் 1983 ஐசிசி உலகக் கோப்பை, 2011 ஐசிசி உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என நான்கு முறை ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வென்றிருக்கிறது.

இந்திய அணியின் 400+ ரன்கள் - முக்கிய புள்ளிகள்

  • அப்படியிருக்க, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 400 ரன்களை பதிவு செய்துள்ளது, முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. 
  • இதற்கு முன், ஓடிஐ அரங்கில் இந்திய அணி 7 முறை 400 ரன்களை கடந்துள்ளது. இந்நிலையில், 8வது முறையாக இந்திய அணி தற்போது 400 ரன்களை கடந்துள்ளது.
  • இந்திய அணி ஓடிஐ அரங்கை பொருத்தவரை, 2011ஆம் ஆண்டில் இந்தூர் நகரில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 418/5 ரன்களை அடித்தே, அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
  • இந்திய அணி 2007 ஐசிசி உலகக் கோப்பை தொடரில், போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் பெர்முடா அணிக்கு எதிரான போட்டியில்தான் 400 ரன்களை முதல்முறையாக கடந்தது. அந்த போட்டியில் 413/5 ஸ்கோரை இந்திய அணி அடித்தது.
  • இந்திய அணி 8 முறை 400 ரன்களுக்கு மேல் ஓடிஐயில் அடித்திருக்கும் நிலையில், அதில் 6 மைதானங்கள் இந்திய மைதானங்களில் அடிக்கப்பட்டது. பேட்டிங்கிற்கு ஏற்ற தட்டையான ஆடுகளம் மற்றும் குறைந்த நீளத்தில் இருக்கும் பவுண்டரிகளின் காரணமாக 400+ ரன்கள் குவிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
  • ஆடவர் ஓடிஐ போட்டிகளை பொருத்தவரை, இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணி இரண்டும் தலா 8 முறை 400+ ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சுப்மான் கில் படைத்த அதிவேக சாதனை... விராட் கோலி லிஸ்டிலியே இல்லை

இந்திய அணியின் 400+ ஸ்கோர்கள்

தரவரிசை  இந்திய ஸ்கோர் எதிரணி  மைதானம்  நாள்
1   418/5  மேற்கு இந்திய தீவுகள் இந்தூர், இந்தியா டிசம்பர் 8, 2011
414/7  இலங்கை  ராஜ்கோட், இந்தியா   டிசம்பர் 15, 2009
3   413/5  பெர்முடா போர்ட் ஆப் ஸ்பெயின், டிரினிடாட்   மார்ச் 19, 2007
4   410/4  நெதர்லாந்து   பெங்களூரு, இந்தியா    நவம்பர் 12, 2023
409/8  வங்கதேசம்  சாட்டோகிராம், வங்கதேசம்   டிசம்பர் 10, 2022
404/5   இலங்கை   கொல்கத்தா, இந்தியா   நவம்பர்  13, 2014
402/10  ஆப்கானிஸ்தான்   லக்னோ, இந்தியா  ஜூன் 17, 2026
401/3  தென்னாப்பிரிக்கா   குவாலியர், இந்தியா  பிப்ரவரி 24, 2010

மேலும் படிக்க | சண்டை போட்ட சூர்யவன்ஷி... ஜெர்ஸி பிடித்து இழுத்து பரபரப்பு - இலங்கையில் நடந்தது என்ன?

0
0
Report

சோபா மாடல்: உதயநிதி குற்றச்சாட்டுக்கு... தவெக கொடுத்த சரவெடி பதிலடி - இதுதான் முதல்முறை

Chennai, Tamil Nadu:

எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை சோஃபா மாடல் அரசு என குற்றஞ்சாட்டி வருகிறார். 

முதலமைச்சர் விஜய் கூட்டணி கட்சித் தலைவர்கள், அவரது அரசுக்கு ஆதரவு அளித்த சி.வி. சண்முகம் உள்ளிட்டோரை சந்திக்க சென்றபோது, அவர்களது இல்லத்திற்கு சோஃபாக்கள் கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அதை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை சோஃபா மாடல் என திமுக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தனர்.

மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை (ஜூன் 18) மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு லிஸ்ட்

அமைச்சர் அருண் ராஜ் X பதிவு

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினரின் குற்றச்சாட்டுக்கு முதல்முறையாக தவெக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் அவரது X தளத்தில், "தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே  ஊறித் திளைக்கும் 'sonஆதன'  சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலினே... அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க | தவெக இதைப் செய்தால் நான் பதவியிலிருந்தே விலகுகிறேன்!முதலமைச்சருக்கு தங்கம் தென்னரசு நேரடி சவால்..!

உதயநிதிக்கு பதிலடி

மேலும், நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... முதலமைச்சர் தலைமையில்  ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது என்றும் சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள்  பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  

அதேபோல், தமிழ்நாட்டில் மே 4ஆம் தேதி அன்று வாரிசுகளின் சிம்மானம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும் இனி தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழக அரசு எச்சரிக்கை: கல்வி உதவித்தொகையெல்லாம் பொய், இப்படி செய்தி வந்தா நம்பாதீங்க!

0
0
Report

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: உண்மை தெரிந்த பெண்ணுக்கு அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

MMathan1d ago
Bengaluru, Karnataka:

Bengaluru Murder: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் செல்போன் கடையில் வேலை செய்து வந்த இளம்பெண்ணை ஏமாற்றி ஆட்டோ ஓட்டுநர் திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த அந்த இளம்பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தன்னை பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் அந்த பெண்ணை கணவர் சந்திரசேகரன் கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணுடம் திருமணம்:

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் மகதி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பவானி, பி.எஸ்.சி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவின் திகளாரபாள்யா பகுதியில் உள்ள செல்போன் விற்பனை நிலையத்தில் பில்லிங் பிரிவில் பணியாற்றி வந்தார். வேலை காரணமாக துளசி நகர் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தண்ணீர் குடிக்க வந்தவருக்கு நேர்ந்த கதி! அலட்சியத்தால் பிறபோன உயிர்..ஷாக் சம்பவம்

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 33 வயதுடைய சந்திரசேகருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஆண்டு கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

முதல் திருமணத்தை மறைத்த கணவர்:

திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் கடந்த நிலையில், சந்திரசேகரின் நடவடிக்கைகள் மீது பவானிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் குறித்து விசாரித்தபோது, சந்திரசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயது குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பவானி, நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் தெரிவித்ததுடன், சந்திரசேகரை விட்டு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் பவானிக்கு வேறு திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

பவானியின் தந்தை போலீஸில் புகார்:

இந்நிலையில், கடந்த ஜூன் 13-ஆம் தேதி பவானியின் சமூக வலைதள கணக்கில், சந்திரசேகருடன் திருமணம் செய்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘ஸ்டோரி’யாக பதிவிடப்பட்டிருந்ததை அவரது உறவினர்கள் கவனித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பவானியின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பவானியை தொடர்பு கொள்ள அவரது தந்தை முயன்றபோது, அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த அவர், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் வீட்டின் உரிமையாளர் பவானியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியபோதும் எந்த பதிலும் கிடைக்காததால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: "ஏன்னை விட்டுடு": பாலியல் வன்கொடுமை, வசியம்... IAF அதிகாரி மனைவியை சீரழித்த தோழன், நாக்பூரில் அதிர்ச்சி

2-வது மனைவி திட்டமிட்டு கொலை:

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பவானி உயிரிழந்த நிலையிலும், அருகில் சந்திரசேகர் மயக்க நிலையில் கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பவானியின் தந்தை அளித்த புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

சிகிச்சைக்கு பின்னர் சந்திரசேகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பவானி தன்னை விட்டு பிரிய முடிவு செய்ததால் மன உளைச்சலில் இருந்த சந்திரசேகர், தொடர்ந்து தன்னுடன் வாழுமாறு அவரை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பவானி அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, பவானிக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்ததாகவும், அவர் அதை வாந்தி எடுத்து வெளியேற்றியதால் உயிர் தப்பிவிடக்கூடும் என்ற அச்சத்தில், வீட்டில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் சந்திரசேகர் தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சந்திரசேகரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட காதலன், அவரை பிரிய முயன்றதற்காக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: 22 வயது நடிகை உயிரிழப்பு! சோகத்தில் திரையுலகம்..இதோ முழு விவரம்

0
0
Report
Advertisement

கேரளாவை மிரட்டும் ஷிகெல்லா தொற்று... தமிழ்நாட்டில் என்ன நடவடிக்கை? அமைச்சர் அருண்ராஜ்

Namakkal, Tamil Nadu:

Minister Arunraj Latest News : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 497 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுபாலன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டார். அரசு அதிகாரிகள,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ரேஷன் கார்டு வழங்குதல் தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு உரம் வழங்குதல் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவி வழங்குதல், கல்வி உதவித்தொகை தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை வழங்குதல், தோட்டக்கலை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 1.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் படிக்க | மூடப்படும் மதுக்கடைகளின் விவரங்கள் வெளியீடு: மதுரையில் மண்டலத்தில் மட்டும் இவ்வளவு கடைகளா?

497 பேருக்கு நலத்திட்ட உதவி...

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், "திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 497 பயனாளிகளுக்கு ரூபாய் 1.76 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் நடக்கும் நிகழ்வு இனிதே நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு அரசு தான் தமிழக முதலமைச்சர் முன்னெடுத்துட்டு இருக்கிறார். 

இந்த நலத்திட்டம் கொடுக்கிறோம் என்றால், இது எல்லாமே மக்களோட வரி பணம் தான். அந்த மக்களோட வரி பணத்தை முறையாக அந்த மக்களுக்கு திருப்பி செலுத்தும் நேரம். திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இது, என்னுடைய முதல் நிகழ்வு.  நலத்திட்ட உதவிகள் 497 பேருக்கு வழங்குவதில் உண்மையாகவே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

நோய் பரவாமல் தடுப்போம்...

இது ஆரம்பம் தான். கூடிய விரைவில் இன்னும் நிறைய விண்ணப்பங்கள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக நாங்கள் பரிசீலித்து, மக்களுக்கு உண்டான, மக்களுக்கு அவர்களுக்கு உரிமையான அந்த நலத்திட்டங்களை விரைவில் கொண்டு சேர்ப்பேன்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் பெருந்தொற்று நோய்கள் இப்போது அதிகமாக பரவிவரும் நிலையில், அந்த அச்சுறுத்தல் இருக்கும் இந்த காலகட்டத்தில், இதற்கான முன்னெடுப்புகள் நாங்கள் கண்டிப்பாக எடுப்போம். நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் நம் உடன் இருக்கிறார். எந்தெந்த விதத்திலும் இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ, அதை அனைத்தையும் எடுப்போம்.

மேலும் படிக்க | விஜய்யின் அடியாள்... பல பெண்கள் பாதிப்பு... திவ்யா சத்யராஜ் சொல்லும்... 'மிஸ்டர் ஜெ' யார்?

ஷிகெல்லா பாக்டீரியா என்றால் என்ன?

ஷிகெல்லா பாக்டீரியா (Shigella) என்பது Gastroenteritis தான். உணவு சரியான பாதுகாப்பு இல்லாத உணவுப் பொருட்கள் உட்கொண்டதால் வந்திருக்கும். இப்போது பார்த்தீர்கள் என்றால், உணவுப் பாதுகாப்பு துறையும் நமது சுகாதாரத்துறையின் கீழ்தான் இருக்கிறது. 

அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடமும் நாங்கள் ஏற்கனவே பேசி உள்ளோம். கண்டிப்பாக அனைத்து உணவு விடுதிகளிலும் பாதுகாப்பான, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும், அதை உறுதி செய்ய வேண்டும் என்ற ஒரு உத்தரவையே நாங்க போட்டுள்ளோம்.

கூடுதல் பணியிடங்கள் தேவை உள்ளது

கண்டிப்பாக படிப்படியாக எங்கெங்கெல்லாம் இந்த மாதிரி பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற உணவு விடுதிகள் இருக்கிறதோ அவை அனைத்திற்கும் நாங்க ஒரு சாம்பிள்ஸ் எடுத்து, அது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக உத்தரவும் நாங்கள் போட்டுள்ளோம்" என்றார். கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா வேகமாக பரவி வருகிறது. சிறார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதை குறிப்பிட்டே அமைச்சர் அருண்ராஜ் பேசி உள்ளார். 

மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் கண்டிப்பாக தொடரும். மருத்துவர்களின் பணியிடங்களைப் பொறுத்தவரைக்கும், இப்போது இருக்கிற sanctioned இடங்கள் சுமார் 96.97 விழுக்காடு நிரம்பி உள்ளது. இருந்தாலும், கூடுதல் பணியிடங்கள் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் நான் ஒற்றுக்கொள்கிறேன்.

அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும்...

அதை முதலமைச்சரிடம் கலந்து பேசி, எந்தெந்த மருத்துவமனைகள், இப்போது மாவட்ட மருத்துவமனைகள், சில இடங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட உயர் சிறப்பு வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு எப்படி உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் பேசி அதற்கான உத்தரவை பெற்று நடவடிக்கை எடுப்போம்.

கடந்த அறுபது வருடங்களாக மாறி மாறி இந்த ரெண்டு கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டு, ஒரு புற்றுநோய் மாதிரி தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறையிலும், நிர்வாகத்திலும் படர்ந்திருக்கு. நோய் பரவி இருக்கிறது. நீங்கள் பாருங்கள், தலைமை சரியாக இருந்தால் அனைத்து துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் கண்டிப்பாக நேர்மையாக தான் செயல்பட வேண்டும். அதற்கு எந்தவித ஒரு எஸ்கேப்பும் (escape) கிடையாது.

மருத்துவர்களுக்கு அறிவுரை

படிப்படியாக பாருங்கள், அனைத்து துறையிலும் ஊழல் குறையும்.  இந்த ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவ துறையில் மட்டுமல்ல, பல பல்வேறு துறைகளிலும் பணி நிரந்தரம் தொடர்பான முடிவுகளை முதலமைச்சரிடம் பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம்.

மல்லசமுத்திரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை இன்று ஆய்வு செய்தேன். காலையில், மக்கள் அவர்களின் தேவைகளை சொல்லி இருந்தார்கள். முதலில் மருத்துவமனை சுத்தமாக இருக்க வேண்டும். அந்த மருத்துவமனையை பார்த்தீர்கள் என்றால், அங்கு நிறைய கட்டடங்கள் எல்லாம் இடிந்து,  குப்பைகள் எல்லாம் இருந்தது. சுத்தமாகவே இல்லை. இப்போது நாங்கள் சொல்லியிருக்கோம். பொதுப்பணித்துறை பொறியாளர்களை கூப்பிட்டு பேசி இருக்கிறோம்.

மருத்துவர்களும், நோயாளிகளிடம் மிக கனிவாக, மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும். குறிப்பாக, 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சுகாதார நிலையம், இரவு நேரத்தில் வந்தாலும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, அவங்களுக்கு தேவையான சிகிச்சையை செய்து கொடுக்க வேண்டும். நான் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன்" என்றார்.

மேலும் படிக்க |  CM விஜய் அடித்த சிக்ஸர்... சொல்லாத வாக்குறுதியை நிறைவேற்றிய தவெக - மாஸ் அறிவிப்பு

0
0
Report
Advertisement

CM விஜய் அடித்த சிக்ஸர்... சொல்லாத வாக்குறுதியை நிறைவேற்றிய தவெக - மாஸ் அறிவிப்பு

Chennai, Tamil Nadu:

Muthalamaicharin Kalai Unavu Thittam  Extension: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

குறிப்பாக தந்தை பெரியாரின் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

0
0
Report

கைக்கோர்த்த Peko - Kalp; சிறு நிறுவனங்களின் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு புதிய கூட்டணி

New Delhi, Delhi:

சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிதி மற்றும் வணிகத்தை மேம்படுத்தவும், மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்கவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெகோ (Peko) மற்றும் கல்ப் (Kalp) நிறுவனங்கள் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அடுத்த தலைமுறை டிஜிட்டல் வணிக உள்கட்டமைப்பை உருவாக்க பெகோ மற்றும் கல்ப் நிறுவனங்கள் கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகளாவிய சந்தைகளில் உள்ள வங்கிகள், இலவச மண்டலங்கள் (Free Zones), அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், Peko நிறுவனத்தின் வணிக சூப்பர்-பிளாட்ஃபார்முடன் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் (Distributed-ledger), புரோகிராமிங் செய்யக்கூடிய பணம் மற்றும் டிஜிட்டல் சொத்து உள்கட்டமைப்புகள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 8-வது ஊதியக்குழு: வாகனம், விழாக்கள்... அரசு ஊழியர்களுக்கு இனி அனைத்துக்கும் முன்பணம் கிடைக்கும்!!

Peko - Kalp கூட்டணியின் நோக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி வணிக மேலாண்மை சூப்பர்-பிளாட்ஃபார்ம் Peko. டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் Kalp. இவை இரண்டும் இன்று (ஜூன் 14) ஒரு முக்கிய மூலோபாய கூட்டணியை அறிவித்துள்ளன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) அடுத்த தலைமுறை நிதி மற்றும் வணிகத்திற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு அடித்தளத்தை உருவாக்குவதே இக்கூட்டணியின் நோக்கமாகும்.

கிடைக்கப்பெறும் வசதிகள்

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி (MoU), KALP நிறுவனத்தின் டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் Peko தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், Peko நேரடியாகவும் அதன் நிறுவன கூட்டாளிகள் மூலமாகவும் சேவை வழங்கும் வணிகங்களுக்கு, அனுமதி பெற்ற விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் (DLT), புரோகிராமிங் செய்யக்கூடிய digital-cash, digital-asset வாலட், முக்கிய மேலாண்மை சூழல் மற்றும் டோக்கனைசேஷன் உள்கட்டமைப்பு போன்ற அதிநவீன வசதிகள் கிடைக்கப்பெறும். இந்த ஒப்பந்தம், இரு நிறுவனங்களின் தனித்துவமான பலங்களை ஒன்றிணைக்கிறது.

Peko தளத்தின் சேவை

Peko நிறுவனம், இன்வாய்சிங், பணம் செலுத்துதல், ஊதியம் (Payroll), நிறுவன உருவாக்கம், கார்ப்பரேட் பயணம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில் நவீன வணிகங்களின் இயக்க அமைப்பாக (Operating System) வேகமாக உருவெடுத்துள்ளது.

மேலும் படிக்க | தனியார் துறை ஊழியர்களுக்கு ரூ.15,000 அளிக்கும் அரசு: யாருக்கு கிடைக்கும்? எப்படி பெறுவது?

Kalp நிறுவனம் வழங்கும் சேவை

Kalp நிறுவனம், இத்தகைய தளங்களுக்குத் தேவையான அடிப்படை டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குகிறது. இது பார்ட்னர் நிறுவனங்கள் தங்களின் சொந்த பிராண்டின் கீழ் மேம்பட்ட digital-asset மற்றும் புரோகிராமிங் செய்யக்கூடிய நிதிச் சேவைகளை வழங்க வழிவகுக்கிறது.

முன்னர் பெரிய நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) அன்றாடம் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதே இந்த இரு நிறுவனங்களின் கூட்டு இலக்காகும்.

சிறு, நடுத்தர பொருளாதாரம் அதிவேகமடையும்...

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து Peko நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான (CEO) காஷிப் அகமது கான், "நாங்கள் Peko தளத்தை உருவாக்கியபோது, வணிகச் செயல்பாடுகளை எளிதாக்குவது மட்டுமே எங்களின் நோக்கமாக இருக்கவில்லை. அதற்குப் பின்னால் இருக்கும் உள்கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்ய விரும்பினோம்.

Kalp உடனான இந்த ஒத்துழைப்பு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை சாதாரண வணிகங்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உதவுகிறது. இது சிறு, நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரத்தை அதிவேகமாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதற்கான தீர்க்கமான படியாகும்" என்றார்.

எதிர்காலத்திற்கான திட்டமிடல்

Kalp டிஜிட்டல் இன்ஃப்ரஸ்ட்ரக்சர் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் தபன் சங்கல், "அடுத்த 10 ஆண்டுகளில் வணிகங்கள் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையே மாறப்போகிறது. இந்த மாற்றத்தை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்னின்று நடத்த வேண்டும். Peko உடன் இணைவதன் மூலம், கோடிக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரம்பிற்குள் அந்த எதிர்காலத்தைக் கொண்டு வருகிறோம்" என குறிப்பிட்டார்.

அன்றாடப் பயன்பாட்டுக்கு...

Kalp நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மிருத்யுஞ்ஜய (ஜே) பிரஜாபதி, "பெகோ போன்ற பரந்த வரம்பைக் கொண்ட ஒரு தளத்துடன் கைகோர்ப்பதன் மூலம், எங்கள் உள்கட்டமைப்பு உண்மையான அளவில் வணிகங்களைச் சென்றடைகிறது. மேம்பட்ட digital-asset உள்கட்டமைப்பை வெறும் வாக்குறுதியாக வைக்காமல், நிஜப் பொருளாதாரத்திற்கான அன்றாட பயன்பாடாக நாங்கள் மாற்றுகிறோம்” என பேசினார்.

முதற்கட்ட திட்டம் என்ன?

முதற்கட்டமாக, இரு நிறுவனங்களும் இணைந்து இதன் பாதுகாப்பு மற்றும் வணிக மாதிரிகளை மதிப்பீடு செய்து, படிப்படியாக Peko அமைப்பில் இந்தச் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளன. 

இந்த ஒத்துழைப்பு ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இந்தியா மற்றும் பிற சந்தைகளில் உள்ள Peko நிறுவனத்தின் நெட்வொர்க்குகளுக்கு விரிவுபடுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Dubai Gold Price: துபாயில் திடீரென உயர்ந்த தங்க விலை, 24k 22k 18k விலை எவ்வளவு?

0
0
Report
Advertisement
Advertisement
Back to top