Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Ramanathapuram623527

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Aug 22, 2024 11:44:56
Ramanathapuram, Tamil Nadu

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SGSudharsan G
Dec 21, 2025 13:43:02
دبي, دبي:

U19 Asia Cup 2026 Final Highlights: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
comment0
Report
RSRK Spark
Dec 21, 2025 07:33:12
Chennai, Tamil Nadu:

ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு, சில நாட்கள் இடைவெளி விட்டு புதுப்பித்தால், அந்த இடைப்பட்ட காலத்தை உரிமம் இருந்ததாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெலங்கானா மாநில காவல்துறை தேர்வாணையம் (Telangana State Level Police Recruitment Board) தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில், தெலங்கானா காவல்துறை தேர்வாணையம், காவலர் ஓட்டுநர் மற்றும் தீயணைப்பு துறை ஓட்டுநர் ஆகிய 325 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | அசாமில் ரயில் விபத்து: 8 யானைகள் பலியான சோகம்... தடம் புரண்ட பெட்டிகள்

சில விண்ணப்பதாரர்களின் ஓட்டுநர் உரிமம் இந்த இரண்டு ஆண்டு காலத்தில் காலாவதியாகி, பின்னர் சில நாட்கள் கழித்து புதுப்பிக்கப்பட்டிருந்தது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, உரிமம் காலாவதியான ஓராண்டுக்குள் புதுப்பிக்கப்பட்டால், அது காலாவதியான தேதியிலிருந்து செல்லுபடியாகும் என்று உயர்நீதிமன்றம் கருதி, அவர்களை தேர்வில் பங்கேற்க அனுமதித்தது. இதை எதிர்த்து தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் எஸ்.வி.என். பட்டி அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. தொடர்ச்சியாக என்ற வார்த்தைக்கு பொருள், எந்தவித இடைவெளியும் இல்லாமல் இருப்பது தான். உரிமம் காலாவதியான நாளிலிருந்து அது புதுப்பிக்கப்படும் நாள் வரையிலான இடைப்பட்ட காலத்தில், அந்த நபருக்கு வாகனம் ஓட்ட சட்டப்பூர்வ அனுமதி இல்லை. எனவே, அந்த காலத்தைத் தொடர்ச்சியான அனுபவமாக கணக்கில் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

சட்ட திருத்தம்

2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், உரிமம் காலாவதியான பிறகு 30 நாட்கள் சலுகைக் காலம் என்பது நீக்கப்பட்டுவிட்டது என்பதை குறிப்பிட்டது. எனவே, உரிமம் காலாவதியான மறுநாளே அது செல்லாததாகிவிடும். உரிமத்தை புதுப்பிக்கும்போது அது பழைய தேதியிலிருந்து செல்லுபடியாகும் என்று கருதினாலும், அது ஆவண ரீதியாக மட்டுமே சரியே தவிர, பணி நியமனத்திற்கான தொடர்ச்சியான தகுதிக்கு பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம், ஓட்டுநர் பணி நியமனங்களில் தொடர்ச்சியான அனுபவம் கேட்கப்படும்போது, இடையில் உரிமம் காலாவதியாகி இருந்தால், அது தகுதியிழப்பாக கருதப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவின் டாப் 7 பணக்காரர்கள்.. லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 20, 2025 09:40:51
Chennai, Tamil Nadu:

ICC T20 World Cup 2026, Team India Squad: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் துணை கேப்டன் மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஸ்குவாட்

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்சர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 20, 2025 05:16:59
Ernakulam, Kerala:

Actor Sreenivasan Passes Away: பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 69. தமிழில் லேசா லேசா, ரெட்டைச்சுழி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 19, 2025 14:05:52
Chennai, Tamil Nadu:

Ban For Pit Bulls, Rottweilers In Chennai: சென்னையில் பிட்புல், ராட்வீலர் ஆகிய இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை (டிசம்பர் 20) முதல் தடை விதித்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தடையை மீறி வளர்த்தால், நாய் வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை (Leashing), வாய்க்கவசம் (Muzzling) உள்ளிட்டவை அணிவிப்பது சென்னையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 19, 2025 12:59:25
Chennai, Tamil Nadu:

Tamil Nadu Draft Electoral List After SIR: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது.

சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்காளர்கள் அதற்கான படிவங்களை நிரப்பியதன் அடிப்படையில், அந்த படிவங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை காரணமாக போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர் நீக்கப்பட்டிருக்கின்றனர். சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு முன்னர் 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 5.43 கோடியாக குறைந்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SMShiva Murugesan
Dec 19, 2025 08:04:19
Chennai, Tamil Nadu:

TN Pongal Gift News: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை (Pongal Festival 2026) என்றாலே பொதுமக்களின் எதிர்பார்ப்பு "பொங்கல் பரிசுத் தொகுப்பு" (TN Pongal Gift) மீதுதான் இருக்கும். இந்த ஆண்டு பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படுமா, இல்லையா என்ற பட்டிமன்றமே சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து ஒரு மிக முக்கியமான தகவல் கசிந்துள்ளது. அதாவது  ஒவ்வொரு ரேஷன் கார்டு குடும்பத்திற்கும் 3000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு (1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு) வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே பொங்கல் பரிசு (TN Pongal Gift) மற்றும் ரொக்க பணம் (TN Pongal Cash) குறித்து ஆளும் திமுக அரசின் திட்டம் என்ன?, பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு எப்பொழுது வரும்?, அதற்கான முன்னேற்பாடுகள் என்ன? போன்ற விவரங்களை பற்றி பாப்போம்.

ரூ.3,000 பொங்கல் ரொக்கப் பரிசு: அதிகாரப்பூர்வ முடிவு?

பொங்கல் பரிசு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நிதித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் முடிவில், ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ. 3,000 ரொக்கப் பணம் வழங்க அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு முன் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடும் வகையில் இந்த திமுக அரசு திட்டமிட்டு வருகிறது.

அதேநேரம் பொங்கலுக்கு ரூபாய் 5,000 வழங்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதால், அரசாங்கத்தின் முடிவு முக்கியமாக பார்க்கப்படுகிறத. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டு, அப்போதைய ஆளும் அரசு அதிமுக பொங்கலுக்கு 21 பொருட்கள் (பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், மஞ்சள் பை, முழு கரும்பு) மற்றும் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கியது. அதேபோல அடுத்த வருடம் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக பொங்கலுக்கு ரொக்கப் பரிசு ரூ.3,000 வழங்க தற்போதைய ஆளும் திமுக அரசு திட்டமிட்டு வருகிறது.

2.25 கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்

தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்தச் சலுகை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்வது மற்றும் இதர பொருட்களைத் தயார் நிலையில் வைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பொங்கல் பரிசு பணம் எப்படி வழங்கப்படும்?

பொங்கல் பரிசு: இந்த முறை பொங்கல் பரிசுப் பணத்தை விநியோகிப்பதில் ஒரு புதிய முறையை அரசு கையாளப்போவதாகக் கூறப்படுகிறது.

நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT): வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ள கார்டுதாரர்களுக்கு, பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும்.

ரேஷன் கடைகள்: வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அல்லது தொழில்நுட்ப சிக்கல் உள்ளவர்கள் நேரடியாக ரேஷன் கடைகளில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

பொருட்கள்: அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவற்றை எப்போதும் போல ரேஷன் கடைகளிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் " பொங்கல் பரிசு மழை"

வரும் காலங்களில் தேர்தல் நெருங்கி வருவதால், இந்த பொங்கல் பரிசு அரசுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 2,500 வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை திமுக அரசு ரூ. 3,000 வழங்கத் திட்டமிட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 4,000: மகளிர் உரிமைத் தொகை + பொங்கல் பணம்

மேலும், ஜனவரி மாதத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகையுடன், இந்த ரூ.3,000 பொங்கல் பரிசும் சேரும் என்பதால், இல்லத்தரசிகள் இந்த பொங்கலை கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

2026 பொங்கல் பரிசின் முக்கிய அம்சங்கள்

- பொங்கல் பரிசு திட்டம் சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முக்கியமானது
- ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3000 ரூபாய் ரொக்க பரிசு வழங்க திட்டம்.
- 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
- பணம் நேரடியாக வங்கி கணக்குக்கு டிடிபி முறையில் வழங்கப்படும்; இல்லையெனில் ரேஷன் கடையில் பெறலாம்.
- தமிழகத்தில் 2.25 கோடி குடும்பங்களுக்கு இந்த தொகுப்பு வழங்கப்படும்.
- பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் ஜனவரி முதல் அமல்படுத்தப்படலாம்.
- தேர்தல் காலத்திற்காக இந்த பரிசு திட்டம் முக்கிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
- எதிர்கட்சிகள் அதிக தொகை வழங்க கோரிக்கை; அரசாங்கத்தின் முடிவு என்ன என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னர் எந்த தகவலும் உறுதி செய்யக்கூடாது;

முக்கிய குறிப்பு

பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்துவிட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அறிவிப்பு வந்த பிறகே இது இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - புதிய ரேஷன் கார்டு + பொங்கல் பரிசு கிடைக்குமா? அமைச்சர் சக்கரபாணி கொடுத்த அப்டேட்

மேலும் படிக்க - பொங்கல் பரிசு மட்டும் இல்லை! மக்களுக்கு கிடைக்கப்போகும் கூடுதல் நன்மை!

மேலும் படிக்க - பொங்கல் பரிசு 2026: ரூ.5000 உறுதி? அரசின் சூப்பர் பிளான்.. 10 முக்கிய விசியங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SMShiva Murugesan
Dec 19, 2025 08:00:24
Chennai, Tamil Nadu:

Old Pension Scheme Update: 2021 சட்டமன்றத் தேர்தலின் போது "ஆட்சிக்கு வந்தால் OPS அமல்படுத்தப்படும்" என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சி முடிய உள்ள நிலையில் ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிதி நிலைமை மற்றும் ஊழியர் நலன் குறித்து அமைச்சர்களின் அவசர ஆலோசனை. பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயமாக அமலுக்கு வரும் என அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றன. தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட காலக் கனவான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் அமலாகப் போகிறதா? 2026 தேர்தலுக்கு முன் அதிரடி திருப்பம் நிகழுமா? பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) குறித்து தற்போதைய தமிழக அரசின் நிலைபாடு என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

திமுக தேர்தல் அறிக்கை

தமிழக அரசு ஊழியர்களும் மற்றும் ஆசிரியர்களும் ஓபிஎஸ் எனப்படும் பழைய பென்ஷன் திட்டத்தை (Old Pension Scheme - OPS) மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்" என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னமும் பழைய பென்ஷன் திட்டம் குறித்து முடிவு ஏதும் அதிகாரப்பூர்வமாக இன்னும் எடுக்கப்படவில்லை.

புதிய பென்ஷன் திட்டம்

அதே சமயம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடும் பொழுது தற்போது "புதிய பென்ஷன் திட்டம்" தான் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்ததால், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யல்லது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து இடைவிடாமல் போராடி வருகின்றனர்.

ககன்தீப் சிங் பேடி குழு அறிக்கை

இந்த நிலையில் முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வகையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பழைய ஓய்வுதிய திட்டம் (Old Pension Scheme - OPS), பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (National Pension System - NPS), ஒருங்கிணைந்த ஓய்வுதிய திட்டம் (Unified Pension Scheme - UPS) ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. 

அந்த குழுவினர் அரசு ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் எல்ஐசி போன்ற நிதி நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துறைகள் குறித்து தற்பொழுது தீர்மானங்கள் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

அமைச்சர்கள் ஆலோசனை

தற்பொழுது ககன்தீப் சிங் பேடி குழுவினருடன் தமிழ்நாடு அமைச்சர்களான தங்கம் தென்னரசு, ஏவா வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விரிவாக விவாதித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். தமிழக அரசின் நிதிநிலைமை மற்றும் அரசு ஊழியர்களின் நலன் ஆகிய இரண்டையும் சமன்படுத்தும் வகையில், எந்த திட்டம் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதா தகவல் வெளியாகி இருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம் இறுதி அறிக்கை

இதற்கிடையே அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து டிசம்பர் மாத இறுதிக்குள்ள ககன்தீப் சிங் பேடி குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இந்த இறுதி அறிக்கை தொடர்பாகத் தான் தற்பொழுது பரபரப்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ககன்தீப் சிங் தலைமையிலான குழுவினர் மூன்று வகையான பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ததில், இறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு சிபாரிசு செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.

நிதி பற்றாக்குறை 

தமிழக அரசை பொறுத்தவரையில் நிதி பற்றாக்குறை காரணத்தால் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கி வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் மிகவும் நெருங்கி விட்டதால்  ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல் செய்யாவிட்டால், அது திமுகவிற்கு பெரிய பின்னடைவாகும் என அமைச்சர்கள் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி 

அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுவதால்,  நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு ஜிஎஸ்டி வரி சமன்பாட்டில் இருந்து பணத்தை பங்களிக்கலாம் என்ற ஒரு ஆலோசனை செய்யப்பட்டதாம். அதன் அடிப்படையில் டிசம்பர் இறுதியில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான இறுதி அறிக்கை பரிசீலனை செய்து, ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்

தற்பொழுது சட்டமன்ற தேர்தல் வருவதால அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் திட்டம் என்பது திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அதிமுக தரப்புக்கு மிகவும் சாதகமாகும் என்பதல, பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயமாக அமலுக்கு வரும் என அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றன.

50 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்ப வாக்கு 

அதே சமயம் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அறிவிப்பதன் மூலம் திமுக அரசிற்கு தமிழ்நாடு அரசை சேர்ந்த சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்ப வாக்கு கிடைக்கலாம். அதனால் இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பழைய பென்ஷன் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். 

முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தால், அது அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். டிசம்பர் இறுதி அறிக்கைக்குப் பின் முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த 'மெகா' முடிவு என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க - பழைய ஓய்வூதியத் திட்டம்: 'வாய்ப்பில்ல ராஜா' நிதி அமைச்சகம் திட்டவட்டம், அரசு ஊழியர்களுக்கு ஷாக்

மேலும் படிக்க - 2026 தேர்தல்: திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கான நேரம் வந்தாச்சு? மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்!

மேலும் படிக்க - OPS திரும்புமா? 8-வது ஊதியக் குழுவில் மாற்றம் கோரி PM மோடிக்கு ஊழியர் சங்கம் கடிதம்

0
comment0
Report
RSRK Spark
Dec 18, 2025 14:43:36
Chennai, Tamil Nadu:

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக தனது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு வங்கியின் அடிப்படையில், வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகளை அக்கட்சி அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உத்தேச பட்டியலை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளார். பாஜக தயார் செய்துள்ள பட்டியலில் மொத்தம் 65 இடங்கள் உள்ளன. அதில் 50 தொகுதிகள் பாஜக நேரடியாக போட்டியிட விரும்பும் இடங்கள். 15 தொகுதிகள் தனது கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள். 

மேலும் படிக்க - 2026 தேர்தல்: திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கான நேரம் வந்தாச்சு? மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்!

சென்னையில் 8 இடங்கள்! - பாஜகவின் புதிய குறி

இந்த 50 தொகுதிகளில் 35 தொகுதிகள், கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாஜக 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தமுள்ள இடங்கள் சாதிவாரி கணக்குகள் மற்றும் கட்சி வளர்ச்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் கட்சியை வளர்க்கும் நோக்கில், பட்டியலில் 8 தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர், தியாகராய நகர், விருகம்பாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகியவை இதில் அடங்கும். கடந்த தேர்தலில் இங்கு பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 27% வாக்குகள் பெற்று அதிமுகவை பின்னுக்கு தள்ளியது பாஜகவிற்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் கன்னியாகுமரியில் குளச்சல், கிள்ளியூர், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி விரும்புகிறது. அதேபோல, கோயம்புத்தூரில் கோயம்புத்தூர் வடக்கு, தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சூலூர் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய 6 தொகுதிகளைக் குறிவைத்துள்ளது. 2024 தேர்தலில் அண்ணாமலை கோவையில் 33% வாக்குகள் பெற்றது இதற்கு முக்கியக் காரணம். அமித் ஷா இந்த மாதம் தமிழகம் வரும்போது, இந்த பட்டியலை அடிப்படையாக கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வேளச்சேரியில் நிலவும் போட்டி

சென்னை வேளச்சேரி தொகுதியில் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் இளைஞரணி தலைவர்கள் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி தொகுதியில் திமுக சார்பில், அக்கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், பாஜகவில் வேட்பாளர் தேர்வில் போட்டி நிலவுகிறது. வேளச்சேரி தொகுதியில் போட்டியிட பாஜகவின் மூத்த நிர்வாகியான டால்பின் ஸ்ரீதர் நீண்ட நாட்களாக விருப்பம் தெரிவித்து வருகிறார். 

இந்த சூழலில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா வேளச்சேரியை குறிவைத்து தனது காய்களை நகர்த்தி வருகிறார். சமூக வாக்குகள் மற்றும் பொதுவான இந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க சூர்யாவால் முடியும் என்று பாஜக மேலிடம் கருதுகிறது. பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் மூத்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மூலம் தனது வேட்புமனுவை சூர்யா ஏறக்குறைய உறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. 

நயினார் நாகேந்திரனின் கிரீன் சிக்னல்

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நாகேந்திர சேதுபதி இல்ல திருமண விழாவில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், எஸ்.ஜி. சூர்யாவும் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து இருவரும் ஒரே விமானத்தில் சென்னை திரும்பியுள்ளனர். இந்த தனிப்பட்ட பயணத்தின்போது, வேளச்சேரி தொகுதி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், சூர்யாவிற்கு நயினார் நாகேந்திரன் கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாநிலத் தலைவருடன் சூர்யா காட்டும் இந்த திடீர் நெருக்கம், வேட்பாளர் தேர்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் படிக்க - OPS திரும்புமா? 8-வது ஊதியக் குழுவில் மாற்றம் கோரி PM மோடிக்கு ஊழியர் சங்கம் கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 18, 2025 11:30:26
New Delhi, Delhi:

VB G RAM G Full Form: மக்களவையில் நேற்று (டிச. 17) நள்ளிரவு வரை விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை கடுமையாக சம்பாதித்திருக்கிறது, VB G RAM G மசோதா. கடும் எதிர்ப்புகளையும் தாண்டி இன்று காலையில் VB G RAM G மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அடுத்து மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் பிரியங்கா காந்தி, திமுக உறுப்பினர் டிஆர் பாலு, சமாஜ்வாதி கட்சி தர்மேந்திர யாதவ் ஆகியோர் மக்களவையில் மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசினர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், VB G RAM G என்பதன் விரிவாக்கம் என்ன?, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGA) இருந்து VB G RAM G மசோதா எந்தளவிற்கு வேறுபடுகிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.

VB G RAM G Full Form:  விபி ஜி ராம் ஜி விரிவாக்கம் என்ன?

VB G RAM G மசோதா நிறைவேறியதில் இருந்து பலரும் கூகுள் தேடு தளத்தில், இதன் விரிவாக்கத்தை அதிகமாக தேடி வருகின்றனர். அந்த வகையில், அதன் விரிவாக்கத்தையும் தமிழ் விளக்கத்தையும் இங்கு முதலில் பார்ப்போம். VB G RAM G - Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) மசோதா, 2025 என்பதுதான் இதன் முழு நீள பெயராகும்.

VB G RAM G: விபி ஜி ராம் ஜி மசோதா 

2047ஆம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா'-வை (Viksit Bharat) உருவாக்குவோம் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாக, கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வதார திட்டம் என்பதை விவரிக்க இவ்வாறு பெயரிட்டுள்ளனர். மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து, பெயரையும் மாற்றி உள்ளார்கள். பெயர் மாற்றம் மற்றும் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்திற்காகவே எதிர்க்கட்சிகள் இதில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 

MGNREGA திட்டம் டூ  VB G RAM G மசோதா: முக்கிய மாற்றங்கள்

- 100 நாள் வேலை என்பது புதிய மசோதாவில் 125 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 

- முன்னர், திட்டத்தின் நிதி 90% மத்திய அரசாலும்,  10% மாநில அரசாலும் வழங்கப்படும். ஆனால், புதிய மசோதாவின்படி 60% நிதி மத்திய அரசாலும், 40% நிதி மாநில அரசாலும் வழங்கப்படும். 

- விதை நடவு காலம் தொடங்கி விவசாய நிலத்தில் அதிக வேலை இருக்கும் காலகட்டத்தில் இத்திட்டத்தில் வேலை அளிக்கப்படாது. 

- முன்னர் 15 நாள்களுக்கு ஒரு முறை சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது வாரம் ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளது.

VB G RAM G: எதிர்ப்பும், ஆதரவும்

- மகாத்மா காந்தியின் பெயர் கொண்ட MGRNEGA திட்டத்தை மாற்றம் செய்து, அதன் பெயரையும் மாற்றுவதன் மூலம் மகாத்மா காந்தியின் பெயரை இருட்டடிப்பு செய்கிறது பாஜக அரசு என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள், திட்டத்தின் பெயரை மாற்றுவதில் பாஜகவுக்கு 'வெறி' இருப்பதாக பிரியங்கா காந்தி பேசியிருந்தார். ஆனால், காங்கிரஸ் நேருவின் பெயரில் மட்டுமே திட்டங்களுக்கு பெயர் சூட்டின என்று மத்திய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாடியுள்ளார். 

- மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்கிறேன் என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், ஊதியமும் உயர்த்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். ஆனால் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை" என சாடினார்.  இதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே. 100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பாஜக ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. 125 நாள்கள் வேலை என்பது காகித அளவிலேயே இருக்கும்" என பதில் அளித்துள்ளார். 

- புதிய VB G RAM G மசோதாவின்படி, 40% நிதி மாநிலங்கள் வழங்க வேண்டும் என்பதால், மாநிலங்களின் நிதிச்சுமை அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. ஜிஎஸ்டி வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். 

- விவசாய நிலங்களில் அதிக வேலை இருக்கும் காலகட்டங்களில் இத்திட்டத்தின் கீழ் தற்காலிகமாக பணிகள் ஏதும் அளிக்கப்படாது என புதிய மசோதாவில் சொல்லப்படுகிறது. இதன்மூலம், விவசாய வேலைகளில் நிலவுவதாக கூறப்படும் ஆள் பற்றாக்குறைவு பிரச்னை நீக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதன்பின், மீண்டும் குறைந்த தொகையில் விவசாய வேலைக்கு போக கட்டாயப்படுத்தும்படி உள்ளது என்றும் அந்த காலகட்டத்தில் ஒருவேளை விவசாய வேலை இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எடுத்துரைக்கப்படுகிறது.

VB G RAM G  Bill: மத்திய அரசு சொல்வது என்ன?

மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "MGNREGA சுமார் 20 கிராமப்புற மக்களுக்கு உத்தரவாதமான கூலி, வேலைவாய்ப்பை வெற்றிகரமாக வழங்கி வருகிறது. இருப்பினும், சமூகப் பாதுகாப்பு விரிவாக்கம் மற்றும் முக்கிய அரசாங்கத் திட்டங்களின் நிறைவு ஆகியவற்றால் உந்தப்பட்டு, 'கிராமப்புறங்களில் காணப்படும் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, MGRNEGA திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகியுள்ளது" என்றார். 

மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, நாளைக்குள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், அடுத்த குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். குடியரசு தலைவர் அதை ஏற்கும்பட்சத்தில் மசோதா சட்டமாகும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளே உஷார்! லக்கேஜ் அளவுக்கு மேல் இருந்தால் 1.5 மடங்கு அபராதம் -முழுவிவரம்

மேலும் படிக்க | விருதை இந்திய மக்கள் சார்பாக ஏற்கிறேன் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

மேலும் படிக்க | 3 மாநிலங்களில் 1 கோடி பேர் நீக்கம்..! தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!

மேலும் படிக்க | ஓசூர் To கேரளா: தினமும் பறக்கும் 2 லட்சம் ரோஜாக்கள்! விவசாயிகள் படுகுஷி

மேலும் படிக்க | மதுரையில் LIC அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.. பெண் பலி! அதிர்ச்சி

மேலும் படிக்க | ஜனவரி 9இல் புதுக்கோட்டை வருகிறாரா பிரதமர்? - நயினார் நாகேந்திரன் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
SGSudharsan G
Dec 18, 2025 09:32:07
New Delhi, Delhi:

VB G RAM G Bill Passed In Lok Sabha: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு பதிலாக (MGNREGA), பாஜக கொண்டுவந்த விபி ஜி ராம் ஜி (VB G RAM G) மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று (டிசம்பர் 18)  நிறைவேறியது. நேற்று நள்ளிரவு வரை இந்த மசோதாவின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று மசோதாவை நிறைவேற்றி, நாள் முழுவதும் மக்களவையை ஒத்திவைத்தார், மக்கள் சபாநாயகர் ஓம் பிர்லா. இதன்மூலம், நாளை (டிசம்பர் 19) காலை 11 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளையுடன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது. 

மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கிறது, மகாத்மாக காந்தியின் பெயரை இருட்டடிப்பு செய்வது உள்ளிட்ட பல காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தன. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இருப்பினும், தற்போது மக்களவையில் விபி ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 18, 2025 09:09:23
Erode, Tamil Nadu:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு விஜயமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, 81 நாட்கள் இடைவெளிவிட்டு அவர் பொதுவெளியில் தோன்றிய முதல் கூட்டம் இது. இதற்கு முன்பு காஞ்சிபுரத்தில் தனி அரங்கில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதுச்சேரியில் சிறிய அளவில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெரிய அளவில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

மேலும் படிக்க: LIVE: ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம்.. மதுரை தீ விபத்தில் ஒருவர் பலி - இன்றைய அப்டேட்ஸ்!

ஈரோட்டில் விஜய் பேசிய 10 முக்கிய விஷயங்கள்!

வள்ளுவர்கோட்டத்திற்கு காட்டும் அக்கறையை மக்கள் வாழ்வாதாரத்தில் காட்டாதது ஏன்?

திமுக கவர்ன்மெண்ட் நடத்துறாங்களா? இல்லை கண்காட்சி நடத்துறாங்களா ?

தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லாத போது அதனை பார்த்து பயந்து கதறுவது ஏன்?

மாறுவேசத்தில் மரு வைத்து கொண்டு மீடியாவுல உங்கள் ஆட்களை வைத்து பேசுவது மக்களுக்கு தெரியும்! 

திமுகவுக்கு கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு துணை என்றால்... எனக்கு என்மீது எல்லையில்லாத பாசம் வைத்திருக்கும் மக்கள் தான் துணை.

பெரியார் பெயரை பயன்படுத்தி கொண்டு கொள்ளையடிப்பவர்கள் தான் நம் அரசியல் எதிரிகள். 

எதிரிகள் யார் என்பதை சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறோம். அவர்களை மட்டுமே எதிர்ப்போம். 

களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாதவர்களையும் எதிர்க்க முடியாது. 

நான் எத்தனை நிமிடங்கள் பேசினால், எப்படி பேசினால் உங்களுக்கு என்ன? அதில் இருக்கும் விசயத்தை மட்டும் பாருங்கள்?

தரக்குறைவாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு நன்றாகவே வரும். வேண்டாம் என விட்டுவைத்துள்ளேன். 

மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என சொல்கிறீர்கள்?

மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் வந்து நிற்பான். விஜய் மக்கள் பக்கம், மக்களும் என் பக்கம் தான். 

நாங்கள் வாயிலேயே வடை சுடுவதற்கு திமுக அல்ல. நாங்க தவெக.

அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என ட்ராமா வேற நடத்துகிறார்கள். 

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சமரமே இருக்காது. மக்கள் தைரியமாக இருக்கலாம். 

எம்ஜிஆரும், மேடம் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி திமுகவை காலி செய்ததை போல நானும் சொல்கிறேன் திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி. 

செங்கோட்டையனை போலவே இன்னும் பலர் தவெகவில் இணைய உள்ளார்கள். 

எப்போது பார்த்தாலும் நான் பேசுவதை சினிமா டயலாக் போல இருப்பதாக சொன்னார்கள். 

ஆனால் முதலமைச்சர் அண்மையில் பேசிய என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்க என பேசியது சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததா?

மேலும் படிக்க: 'திமுக ஒரு தீய சக்தி... தவெக ஒரு தூய சக்தி' - ஈரோட்டில் விஜய் பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
RSRK Spark
Dec 18, 2025 08:34:30
Madurai, Tamil Nadu:

இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூரில் ஒரு புதிய காற்று வீசதொடங்கியுள்ளது. ஐபிஎல் 2026 சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செய்துள்ள மாற்றங்கள் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளன. குறிப்பாக, நீண்ட கால கேப்டனான சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழி அனுப்பிவிட்டு, அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் போன்ற ஆல்-ரவுண்டர்களை டிரேட் செய்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: CSK வீரரை வாங்க துடித்த ரிஷப் பண்ட்.. யார் தெரியுமா? சுவாரஸ்யம் பகிர்ந்த LSG ஓனர்!

ஏலத்தில் ராஜஸ்தானின் அணுகுமுறை

அபுதாபியில் நடைபெற்ற மினி ஏலத்திற்கு செல்லும்போதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ. 16.05 கோடி என்ற குறைவான பட்ஜெட்டே இருந்தது. 9 இடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர்கள், பெரிய அளவில் பணத்தை வாரி இறைக்காமல், தங்களின் தேவையை மட்டும் குறிவைத்து செயல்பட்டனர். அணியின் முக்கிய தேவையாக இருந்த ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளரை வாங்குவதில் அவர்கள் குறியாக இருந்தனர்.

புதிய வரவுகள்

ராஜஸ்தான் அணியின் இந்த திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவரை ரூ. 7.2 கோடி கொடுத்து வாங்கியது ராஜஸ்தான் அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றே சொல்லலாம். கூக்ளி பந்துகளை வீசுவதில் வல்லவரான பிஷ்னோய், ஜெய்ப்பூர் போன்ற மைதானங்களில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். ஏலத்திற்கு முன்பே ராஜஸ்தான் அணி சில துணிச்சலான முடிவுகளை எடுத்தது. அணியின் முகமாக இருந்த சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு கொடுத்துவிட்டு, அங்கிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை வாங்கியது. ஜடேஜாவின் அனுபவமும், சாம் கரனின் ஆல்-ரவுண்டர் திறமையும் அணிக்கு கூடுதல் பலம்.

மேலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடமிருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டோனோவன் ஃபெரீராவை வாங்கியுள்ளது, பினிஷிங் ரோலுக்கு உதவும். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் போன்ற இளம் இந்திய பட்டாளத்தை ராஜஸ்தான் தக்கவைத்துள்ளது. வெளிநாட்டு வீரர்களில் ஷிம்ரோன் ஹெட்மையர் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அணியின் முக்கிய தூண்கள். ராஜஸ்தானின் வேகப்பந்து வீச்சு இம்முறை மிரட்டலாக உள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர், நான்ட்ரே பர்கர், க்வேனா மபாகா என ஒரு தென்னாப்பிரிக்க - இங்கிலாந்து வேக கூட்டணி அமைந்துள்ளது. இவர்களுக்குத் துணையாக இந்திய சூழலில் சிறப்பாக செயல்படும் சந்தீப் சர்மா மற்றும் துஷார் தேஷ்பாண்டே உள்ளனர். சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் மற்றும் ஜடேஜா கூட்டணி எதிரணியை திணறடிக்க காத்திருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் முழு அணி விவரம்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (WK), ஷிம்ரோன் ஹெட்மையர், சுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, டோனோவன் ஃபெரீரா (WK), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ரியான் பராக், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, யுத்வீர் சிங் சரக், நான்ட்ரே பர்கர், க்வேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்.

சஞ்சு சாம்சன் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், ஜடேஜா மற்றும் சாம் கரன் வருகை அணிக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. புதிய கேப்டன் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2026 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்களுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் 2026 சீசனில் ஒரு வலுவான போட்டியாளராக களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க: டாஸ் கூட போடாமல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி ரத்து! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
comment0
Report
Advertisement
Back to top