பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
விஜய்யின் கைபிடித்த ஸ்டாலின்... கட்டிப்பிடித்த உதய்... ஆழ்வார்பேட்டையில் கூல் சந்திப்பு
Chennai, Tamil Nadu:CM Vijay - Stalin Meeting: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மரபுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அவர் வெற்றி பெற்றதே அரசியல் களத்தில் இயங்கும் பலரும் கணிக்காத ஒன்றாகும்.
அப்படியிருக்க இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகள் நிறைவடைந்ததும், தலைமைச் செயலகத்தில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்றார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்#MKStalin #DMK #TVK #TVKVijay #CMVijay #ZeeTamilNews pic.twitter.com/Pu76bsiU3n
— Zee Tamil News (@ZeeTamilNews) May 11, 2026
மேலும் படிக்க | விஜய் - ஸ்டாலின் சந்திப்பு.. இருவரும் பேசியது என்ன? சீமானை சந்திக்கிறாரா முதல்வர்?
ஸ்டாலின், உதயநிதி உடன் சந்திப்பு
அங்கு வாசலிலேயே எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விஜய்யை புன்னகையுடன் வரவேற்றார். விஜய்யும், உதயநிதியும் பரஸ்பரம் ஆரத்தழுவி தழுவி வரவேற்றனர். வீட்டுக்குள் சென்றதும் ஸ்டாலினும் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றார். மேலும், விஜய்யின் கையை பிடித்து ஸ்டாலினின் ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.
மேலும் படிக்க | முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த புத்தகம்! எங்கு கிடைக்கும்? விலை என்ன?
விஜய் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை அளித்தார். உடனே, ஸ்டாலினும் சால்வை அணிவித்து முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு "காலத்தின் நிறம் கருப்பு, சிவப்பு" என்ற திமுக பதிப்பித்த புத்தகத்தை பரிசளித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன்பின், விஜய், ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் சற்று நேரம் ஹாலில் அமர்ந்து சில நிமிடங்கள் பேசினர். பின்னர் முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.
இந்த சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின், ""தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்" என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில் பதிவிட்டார்.
இதுகுறித்து விஜய்யை பாராட்டி விசிக தலைவர் திருமாவளவன் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதலமைச்சர் விஜய் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற மேனாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்" என்றார்.
வைகோ உடன் சந்திப்பு
ஆழ்வார்பேட்டையில் இருந்து புறப்பட்டு சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்திற்கு விஜய் சென்றார். அங்கு மதிமுக தலைவர் துரை வைகோ அவரை வீட்டு வாசலிலேயே கட்டியணைத்து வரவேற்றார். வைகோவும் அவர் வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். வைகோ குடும்பத்தினர், வீட்டு பணியாளர்கள், மதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
வைகோ - விஜய் சிறிது நேரம் உரையாடினர். விஜய்யும், வைகோவும் கையை பிடித்துக்கொண்டு ஒன்றாக வீட்டைவிட்டு வெளியே வந்தனர். இருவரும் கூடியிருந்த மக்களை நோக்கி ஒரே நேரத்தில் கை அசைத்தனர். இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். வைகோ விஜய்யை கார் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.
அன்புமணியுடன் சந்திப்பு
ஸ்டாலின், வைகோவை தொடர்ந்து, நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணியின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கும் வீட்டு வாசலிலேயே அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வீட்டில் விஜய்யுடன் அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்தனர். அமைச்சர் என். ஆனந்த் அன்புமணியிடம் வாழ்த்து பெற்றார்.
இதன் பின்னர், விஜய் - அன்புமணி சந்தித்து பேசிக்கொண்டபோது அவருடன் அவரின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும் உடன் இருந்ததது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து வரும் முதலமைச்சர் விஜய், அடுத்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க உள்ளார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் யார் யாருக்கு z + security இருக்கிறது? முழு விவரம்!
தமிழ்நாட்டில் யார் யாருக்கு z + security இருக்கிறது? முழு விவரம்!
Chennai, Tamil Nadu:இந்தியாவில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளை வழங்குகின்றன. அதில் உச்சபட்ச பாதுகாப்பாக கருதப்படுவது Z+ Security ஆகும். தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மத்திய அரசு Z+ Security பாதுகாப்பை வழங்கி உள்ளது. ஏற்கனவே விஜய்க்கு பாதுகாப்புகள் அதிகம் உள்ள நிலையில், தற்போது அது கூடுதல் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி விஜய் வீடு மற்றும் அலுவலகங்களில் எப்போதும் பாதுகாப்பு படையினர் இருப்பார்கள். தமிழ்நாட்டில் எந்தெந்த தலைவர்களுக்கு இந்த உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ஸ்டாலினை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய்? என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்
Z+ Security என்றால் என்ன?
இந்தியாவில் பாதுகாப்பு அடுக்குகள் பொதுவாக X, Y, Y+, Z மற்றும் Z+ என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் Z+ என்பது பிரதமருக்கு வழங்கப்படும் SPG பாதுகாப்புக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பாகும். ஒருவருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டால், அவருக்கு 24 மணி நேரமும் சுமார் 55 பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பளிப்பார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், அதிநவீன ஆயுதங்கள் தாங்கிய காவலர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அடங்குவர். மேலும், இவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் பயணங்களின்போது பைலட் மற்றும் எஸ்கார்ட் வாகனங்களும் வழங்கப்படும்.
மேலும் படிக்க | முதல்வர் விஜய்க்கு Z+ Security.. என்னென்ன சிறப்பம்சங்கள்? கிட்ட நெருங்கவே முடியாது
தமிழ்நாட்டில் Z+ பாதுகாப்பு உள்ள தலைவர்கள்
முதலமைச்சர் மற்றும் ஆளுநர்
வழக்கமாக, ஒரு மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் மற்றும் மாநில ஆளுநருக்கு உச்சபட்ச பாதுகாப்பான Z+ பாதுகாப்பு வழங்கப்படும். அந்த வகையில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்க்கும், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கும் இந்த பாதுகாப்பு நடைமுறையில் உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆரம்பத்தில் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், 2025ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசால் அவருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கும் மாநில அரசின் சார்பில் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் ஒரு எம்எல்ஏ கூட ஆகவில்லை என்பதால் பாதுகாப்பில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற பிரிவுகளில் உள்ள தமிழக தலைவர்கள்
Z+ பாதுகாப்பு என்பது தேசிய அளவில் சுமார் 40 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு பாதுகாப்பாகும். தமிழ்நாட்டில் Z+ அல்லாமல் பிற முக்கிய பாதுகாப்பு பிரிவுகளை பெற்றுள்ள தலைவர்களும் உள்ளனர். தமிழ்நாடு முன்னாள் பாஜக மாநில தலைவரான கே. அண்ணாமலைக்கு ஆரம்பத்தில் X பிரிவு பாதுகாப்பு இருந்தது. பின்னர் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசால் அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதில் சுமார் 30 கமாண்டோக்கள் பாதுகாப்பளிப்பார்கள். மேலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இதே பாதுகாப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
மத்தியப் புலனாய்வு அமைப்புகளான ஐபி மற்றும் RAW போன்ற ஏஜென்சிகள், ஒரு தலைவருக்கு உள்ள அச்சுறுத்தல்களின் அளவை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் மத்திய உள்துறை அமைச்சகம் ஒருவருக்கு எந்த பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்குவது என்பதை தீர்மானிக்கிறது. அச்சுறுத்தல் குறையும்போது பாதுகாப்பு குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | காதலை சொல்லாமல் சொன்ன த்ரிஷா! விஜய் பதவியேற்பு விழா சம்பவம்..இதை பார்த்தீங்களா?
| பாதுகாப்புப் பிரிவு | மொத்த காவலர்கள் | கமாண்டோக்கள் (NSG/CRPF) | சிறப்பு அம்சங்கள் |
|---|---|---|---|
| <table style="border-collapse: collapse; width: 100%; font-family: Arial, sans-serif; class=" [&_tr:last-child_td]:border-b-0="" my-0="" w-full="" table-auto="" border-separate="" border-spacing-0="" text-sm="" font-sans="" rounded-lg="" [&_tr:last-child_td:first-child]:rounded-bl-lg="" [&_tr:last-child_td:last-child]:rounded-br-lg"=""> | |||
| SPG | மிக ரகசியம் | அதிநவீன கமாண்டோக்கள் | இந்தியப் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும் உச்சபட்சப் பாதுகாப்பு. |
| Z+ (Z Plus) | 55 வீரர்கள் | 10-க்கும் மேற்பட்டவர்கள் | 24 மணி நேரமும் பாதுகாப்பு, குண்டு துளைக்காத வாகனங்கள் (Bulletproof cars). |
| Z (Z Category) | 22 வீரர்கள் | 4 முதல் 5 பேர் | எஸ்கார்ட் வாகனங்களுடன் கூடிய சுழற்சி முறைப் பாதுகாப்பு. |
| Y+ (Y Plus) | 11 வீரர்கள் | 2 பேர் | ஷிப்ட் முறையில் வீட்டின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு. |
| Y (Y Category) | 8 வீரர்கள் | 1 அல்லது 2 பேர் | இரண்டு ஷிப்டுகளில் தலா ஒரு தனிநபர் பாதுகாப்பு அதிகாரி. |
| X (X Category) | 2 வீரர்கள் | கமாண்டோக்கள் இல்லை | அடிப்படைப் பாதுகாப்பு, ஆயுதம் ஏந்திய உள்ளூர் காவலர்கள். |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்புப் பிரிவு எது?
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்புப் பிரிவு SPG ஆகும். இது இந்தியப் பிரதமருக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்பாகும்.
2. பிரதமருக்கு அடுத்தபடியாக உள்ள உச்சபட்சப் பாதுகாப்பு எது?
பிரதமருக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பு Z+ பாதுகாப்பாகும்.
3. தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது?
தமிழ்நாட்டில் தற்போதைய முதலமைச்சர், ஆளுநர், மற்றும் முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரான விஜய்! உடனடியாக டெல்லி பயணம்! யார் யாரை சந்திக்கிறார்?
New Delhi, Delhi:தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் இன்று சட்டமன்றத்தில் கலந்து கொண்டார். வெற்றி பெற்ற எம்எல்ஏகள் சட்டமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று மதியம் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியானது. மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் சந்திக்க உள்ளார் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் இந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சோனியா காந்தி ஆகியோர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் படிக்க | ஸ்டாலினை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய்? என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்
முதல்வரான விஜய்!
17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதன்முறையாக இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்தார். அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். இன்றைய கூட்டத்தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள எம்.வி. கருப்பையா, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவைக்குள் நுழைந்த தருணம் மற்றும் அவர் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற நிகழ்வு ஆகியவை தமிழக அரசியல் களத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
மு.க. ஸ்டாலின் மற்றும் வைகோவுடன் சந்திப்பு
சட்டமன்ற நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் விஜய் முன்னெடுத்துள்ள அரசியல் நாகரிகம் பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இன்று மதியம், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தியே விஜய் ஆட்சியை பிடித்துள்ளார். மேலும், மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். இத்தகைய அதீத அரசியல் போட்டிக்கு மத்தியிலும், வெற்றி பெற்ற பிறகு முன்னாள் முதலமைச்சரை நேரில் சென்று சந்திப்பது என்பது தமிழக அரசியலில் இதுவரை காணாத ஒரு புதிய அரசியல் நாகரிகத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல, திராவிட அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவையும் இன்று விஜய் சந்திக்க உள்ளார். மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களின் ஆலோசனைகளைக் கேட்கும் விஜய்யின் இந்த அணுகுமுறை, அவர் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறார் என்பதையே காட்டுகிறது.
மேலும் படிக்க | முதல்வர் விஜய்க்கு Z+ Security.. என்னென்ன சிறப்பம்சங்கள்? கிட்ட நெருங்கவே முடியாது
முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி பயணம்
தமிழ்நாட்டில் தனது அரசியல் நகர்வுகளை மிக கவனமாக மேற்கொண்டு வரும் முதலமைச்சர் விஜய், தேசிய அளவிலும் தனது ராஜதந்திரத்தை வெளிப்படுத்தத் தயாராகிவிட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இந்த வாரம் அவர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த டெல்லி பயணம் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவை தொகைகள், பேரிடர் நிவாரண நிதிகள் மற்றும் மாநில உரிமைகள் குறித்த முக்கிய கோரிக்கைகளை அவர் பிரதமரிடம் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவர் ஆற்றிய முதலமைச்சர் உரையில், முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுள்ளது என குறிப்பிட்டிருந்தார். எனவே, மாநிலத்தின் நிதிநிலையை சீர்செய்ய மத்திய அரசின் உதவியை கோருவது இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
பிரதமரைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்கவுள்ளார். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான மத்திய அரசின் ஒத்துழைப்பு குறித்து இந்தச் சந்திப்புகளில் விவாதிக்கப்படலாம்.
சோனியா காந்தியுடன் சந்திப்பு: கூட்டணியின் பலம்
மத்திய பாஜக அமைச்சர்களுடனான சந்திப்பை முடித்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியையும் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். நடப்பு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை மட்டுமே பெற்றுத் தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவால்தான் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். எனவே, தனக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமைக்கு நேரில் நன்றி தெரிவிக்கும் விதமாக சோனியா காந்தியை அவர் சந்திக்கிறார். மேலும், கூட்டணிக் கட்சிகளுக்குத் தமிழக அமைச்சரவையில் இடமளிப்பது குறித்தும், எதிர்காலத் தேர்தல் வியூகங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்படும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | காதலை சொல்லாமல் சொன்ன த்ரிஷா! விஜய் பதவியேற்பு விழா சம்பவம்..இதை பார்த்தீங்களா?
Vijay Speech தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏகளுக்கு விஜய் சொன்ன எச்சரிக்கை!
Chennai, Tamil Nadu:தமிழகத்தின் முதல்வராக விஜய் இன்று பதவியேற்றுள்ளார். கடந்த மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து விஜய் எப்போது முதல்வராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சி அமைக்க 10 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டது. இதனால் கூட்டணி கட்சிகளின் உதவியை நாடிய விஜய், அவர்களின் ஆதரவுடன் தற்போது முதலமைச்சராக பதவி ஏற்றார். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளனர். இன்று சென்னை நேரு அரங்கில் நடைபெற்ற விழாவில் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று வரலாற்று சாதனை படைத்தது உள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றதும் அவர் பேசிய முதல் பேச்சு ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | ஜோசப் விஜய் எனும் நான்.. முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர்.. அமைச்சரான 9 பேர்
திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம்
தமிழ்நாடு அரசியலில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ளார். முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து, 9 மூத்த மற்றும் இளம் தலைவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.
முதல் கையெழுத்தும் அதிரடி திட்டங்களும்
பதவியேற்பு விழா முடிந்த கையோடு, மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான கோப்பில் அவர் தனது முதல் கையெழுத்தை இட்டார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
"தவறு செய்தால் கேள்வி கேட்பேன்" - விஜய்யின் உறுதி
இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தனது அரசின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். "ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் யாராக இருந்தாலும் சரி, எனது அமைச்சரவையில் உள்ளவர்களோ அல்லது கட்சியினரோ தவறு செய்தால், தயவுதாட்சண்யமின்றி அவர்களை கேள்வி கேட்பேன். தவறுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், தவெக தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் முக்கிய அறிவுரை ஒன்றையும் வழங்கினார். "நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்பதற்காக, யாரும் மமதையுடன் நடந்துகொள்ள கூடாது. இந்த வெற்றி மக்கள் நமக்களித்த பொறுப்பு. அதை உணர்ந்து அடக்கத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
எனக்கு அவகாசம் கொடுங்கள்
தனது உரையில் விஜய் மேலும் பேசுகையில், "தமிழ்நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சர் என்ற ஒரு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளீர்கள். எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதை நான் அறிவேன். ஆனால், முன்பு இருந்த அரசு கஜானாவை சுத்தமாக காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். எனவே, அனைத்துத் திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்துவதற்கு எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள்" என்று கோரிக்கை வைத்தார். மேலும் "என்னுடைய அரசில் ஒரே அதிகார மையம் தான் இருக்கும். பல அதிகார மையங்களுக்கு இங்கு இடமில்லை. அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும். மேலும், தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் தற்போதைய நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடுவேன்" என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
அரசியல் களத்தில் புதிய உதயம்
ஊழலற்ற, வெளிப்படையான, மதச்சார்பற்ற ஆட்சியை கொடுப்பேன் என்ற முழக்கத்துடன் அரசியலில் களமிறங்கிய விஜய், இன்று முதலமைச்சராக பொறுப்பேற்று தனது முதல் உரையை மிகவும் முதிர்ச்சியுடனும் அதிரடியாகவும் ஆற்றியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. எந்தவொரு முன் அனுபவமும் இன்றி அரசியலுக்கு வந்து, மிகப்பெரிய தலைவர்களை எதிர்கொண்டு ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ள விஜய்யின் இந்த அடுத்தகட்ட பயணம் எவ்வாறு இருக்கும் என்பதை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் மரபு மீறல்
வாக்குறுதியை நிறைவேற்ற பணம் இல்லை - CM விஜய் சொன்ன மேட்டர் - ஸ்டாலின் அட்வைஸ்
Chennai, Tamil Nadu:MK Stalin First Advice To CM Vijay: திமுக தலைவர் ஸ்டாலின் அவரது X பதிவில், "எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 10, 2026
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை…
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்" என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் பதவியேற்பு விழா: சென்னை மக்களே இதை கவனிங்க - நேரலையில் பார்ப்பது எப்படி?
Chennai, Tamil Nadu:CM Vijay Oath Taking Ceremony Live Telecast: தமிழ்நாட்டின் 18வது முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் இன்று (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார்.
விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலையில் பதவியேற்பதை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
| வ. எண் | நேரலை செய்யப்படும் இடம் |
| 1. | அண்ணாநகர் டவர் பார்க் |
| 2. | மெரினா கடற்கரை |
| 3. | கோயம்பேடு சி.எம்.பி.டி |
| 4. | சென்ட்ரல் ரயில் நிலையம் |
| 5. | தி.நகர் பேருந்து நிலையம் |
| 6. | பெசன்ட் நகர் கடற்கரை |
| 7. | திருவான்மியூர் பேருந்து நிலையம் |
| 8. | கத்திபாரா நகர சதுக்கம் |
| 9. | செம்மொழிப் பூங்கா |
| 10. | தீவு மைதானம் பேருந்து நிறுத்தம் |
| 11. | நாகேஸ்வர ராவ் பூங்கா |
| 12. | மயிலாப்பூர் டேங்க் ஏரியா |
| 13. | வடபழனி பேருந்து நிலையம் |
| 14. | எம்ஜிஆர் நகர் மார்கெட் பகுதி |
| 15. | நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரை |
| 16. | மாதவரம் பேருந்து நிலையம் |
| 17. | மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் பார்க், புதிய பூங்கா L&T அருகில் |
| 18. | அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் |
| 19. | தண்டையார்பேட்டை பஸ் டிப்போ பகுதி |
| 20. | அடையாறு டிப்போ சந்திப்பு |
தவெகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாமல் இருந்த நிலையில், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனால், 120 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில், இன்று விஜய் பதவியேற்க இருக்கிறார். பதிவியேற்பு விழாவின் நேரலையை கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்தும் பார்க்கலாம்.
9 அமைச்சர்கள்
தவெகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாமல் இருந்த நிலையில், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனால், 120 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில், இன்று விஜய் பதவியேற்க இருக்கிறார்.
விஜய்யுடன், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்களாக இன்று (மே 10) பதவியேற்க உள்ளனர். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜ்மோகன், காரைக்குடி பிரபு, வெங்கட ரமணன், சி.டி.ஆர். நிர்மல் குமார், கீர்த்தனா ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்கின்றனர்.

13வது முதலமைச்சர்
விஜய் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் இந்த விழாவை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 1967ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக திமுக, அதிமுக அல்லாத ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கிறது. தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளார்.
தமிழ் திரையுலகின் 5வது முதலமைச்சர்
குறிப்பாக, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர் முதல்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். மேலும், தமிழ் திரையுலகைச் சேர்ந்த 5வது நபர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து தற்போது விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அண்ணா மற்றும் கருணாநிதி எழுத்தாளர்களாக திரைத்துறையில் பங்களித்த நிலையில், மற்ற மூவரும் நடிகர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
தவெக அமைச்சர்கள் பட்டியல்: இவரா கல்வி அமைச்சர்? இப்போதே கடும் எதிர்ப்பு - ஏன் தெரியுமா?
Chennai, Tamil Nadu:TVK Cabinet Ministers: தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இன்றைய (மே 10) நாள் மிகவும் முக்கியமான நாளாகும். முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர் பதவியேற்க இருக்கிறார். சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டிற்கு இது பெருமைமிகு தருணமாக பார்க்கப்படுகிறது.
முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச. ஜோசப் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டு, ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொள்ள இருக்கிறார்.
மேலும் படிக்க | தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு! அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
கடந்த மே 4ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. தமிழகம் முழுவதும் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட தவெக, 108 தொகுதிகளை கைப்பற்றியது. இதன்மூலம், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இல்லாமல் இருந்தது.
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு
இதனால், மே 4ஆம் தேதி முதல், கடந்த ஆறு நாள்களாக தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே இருந்தது. விஜய்யின் தவெகவுக்கு திமுக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்த காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியினருக்கு தவெக அமைச்சரவையில் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மறுபக்கம், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு என்றும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
விஜய்க்கு ஆதரவு ஏன்?
விஜய்யின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் முடிவை ஏற்கும் வகையிலும், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதாலும், குடியரசு தலைவர் ஆட்சி மூலம் மத்திய பாஜகவின் ஆளுகை தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், தங்களால் விஜய் ஆட்சியமைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும், தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதாலும் விஜய்யின் தவெகவை ஆதரித்திருப்பதாக விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஒத்த கருத்துடன் தெரிவித்துள்ளன.
உத்தேச அமைச்சரவை பட்டியல்
இந்தச் சூழலில், இன்று விஜய்யுடன் பதவியேற்க இருக்கும் அமைச்சர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
| அமைச்சர் பெயர் | இலாக்கா |
| செங்கோட்டையன் | பொதுப்பணித்துறை |
| சி.டி.ஆர். நிர்மல் குமார் | மின்சார துறை |
| என். ஆனந்த் | நகராட்சி நிர்வாகத்துறை |
| வெங்கட ரமணன் | பள்ளிக்கல்வித்துறை |
| அருண் ராஜ் | வணிக வரித்துறை |
| ஆதவ் அர்ஜூனா | விளையாட்டு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை |
| முஸ்தபா | சிறுபான்மையினர் நலத்துறை |
காங்கிரஸில் 2 பேருக்கு வாய்ப்பு
இவர்களுடன் ஒரு மகளிரும் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் இரண்டு பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற விஸ்வநாதனுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவர் பொதுத் தொகுதியில் போட்டியிட்ட வென்ற பட்டியலினத்தவர் என்பது கூடுதல் சிறப்பு. இவருடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கும் அமைச்சரவையில் இடம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | விஜய்யின் தவெகவிற்கு ஏன் ஆதரவு? திருமாவளவன் சொன்ன 2 முக்கிய காரணங்கள்!
இது அதிகாரப்பூர்வமானது இல்லை...
விஜய் உள்பட மொத்தம் 11 பேர் இன்று பதவியேற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இவை எதுவும் உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் இல்லை. தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்படவில்லை.
விசிக தரப்பில் விமர்சனம்
இன்னும் அமைச்சரவையே பதவியேற்காத நிலையில், தவெகவுக்கு சில கண்டனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அதுவும் நேற்று (மே 9) தான் தவெகவுக்கு தனது ஆதரவு கடிதத்தை வழங்கிய விசிக தரப்பில் இருந்து, அமைச்சரவை குறித்த விமர்சனம் எழுந்துள்ளது.
விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் அவரது X பக்கத்தில், நேற்றிரவு 11.10 போட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சராகும் ஜோசப் விஜய் அவர்களுக்கும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்போருக்கும் வாழ்த்துகள்" என வாழ்த்து தெரிவித்துவிட்டு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
வெங்கட ரமணன் மீதான விமர்சனம்
அந்த பதிவில், "கடந்த திமுக ஆட்சியில் கோவி செழியன், அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து வந்தவர்களின் கைகளில் அத்துறை இருப்பதே நன்று. தவெக அமைச்சரவையிலும் அந்நிலை தொடர வேண்டும்" என ஆளுர் ஷா நவாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராகும் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்போருக்கும் வாழ்த்துகள்.
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) May 9, 2026
கடந்த திமுக ஆட்சியில் திரு.கோவி செழியன், திரு.அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து…
அதாவது, தவெகவின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வெங்கட ரமணன் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அவர் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆளுர் ஷா நவாஸ் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, 'தமிழ்நாட்டில் பிரமாணிய எதிர்ப்பு கொள்கை காலாவதியாகவிட்டது' என வெங்கட ரமணன் முன்பு ஒருமுறை பேட்டி அளித்திருந்ததும் திராவிட இயக்க ஆதரவாளர்களின் விமர்சனங்களுக்கு காரணமாகும்.
மேலும் ஆளுர் ஷா நவாஸ் அந்த பதிவில், "தமிழ்நாட்டின் கல்வி வரலாறும் அரசியல் வரலாறும் வேறு வேறல்ல. கல்வியே நம் அரசியல். கல்விக்காகவே நம் அரசியல்" என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். பல்வேறு திராவிட இயக்க ஆதரவாளர்கள், திமுக ஆதரவு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வெங்கட்ராமனை தேர்வு செய்யக்கூடாது என கோரிக்கை வைத்து வருகின்றனர். தவெகவின் பொருளாளரான வெங்கட ரமணன், சட்டப்பேரவை தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.
மேலும் படிக்க | விஜய் எப்போது முதல்வராக பதவி ஏற்கிறார்? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சரவை?
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு! அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
Chennai, Tamil Nadu:கடந்த மே நான்காம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆனாலும் விஜய்யால் தமிழக முதல்வராக தற்போது வரை பதவியேற்க முடியவில்லை. காரணம், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில், விஜய்க்கு 108 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு தேவைப்பட்டது. ஒருசில கட்சிகள் உடனடியாக ஆதரவு தெரிவித்தாலும், ஒருசிலர் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் விஜய்க்கு தங்களது நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளன. இதன் காரணமாக தற்போது 120 எம்.எல்.ஏக்களுடன் விஜய் ஆளுநரை சந்தித்து பதவி பிரமாணம் செய்து வைக்க கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி ஆளுநரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: முதல்வராகிறார் விஜய்.. விசிக ஆதரவு! பதவி ஏற்பு எப்போது?
நாளை விஜய் பதவியேற்பு
ஏற்கனவே மூன்று முறை ஆளுநரை சந்தித்த விஜய், தன்னை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரியிருந்தார். ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் இந்த பதவியேற்பு தள்ளிப்போனது. தற்போது 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதால் விஜய் முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி நாளை மதியம் 3:15 மணிக்கு விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்றும், அவரோடு இணைந்து 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பதவியேற்பு நடைபெறும் இடம்
தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த எட்டாம் தேதி இந்த பதவியேற்பு விழா நடைபெறவிருந்த நிலையில், நாளை மே பத்தாம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய்யுடன் செங்கோட்டையன் போன்ற ஒன்பது முக்கிய தவெக நிர்வாகிகள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அமைச்சர் பட்டியல் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
தமிழகத்தின் முதல்வராக விஜய்
கடந்த 2024ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்து, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று முதலமைச்சராக பதவியேற்று வரலாற்றில் இடம்பெற உள்ளார். தனது முன்னோடியாக எம்.ஜி.ஆரை சொல்லிக்கொண்டிருந்த விஜய், அவரையே முந்தி இந்த தேர்தலில் கூடுதலான வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளார். இருப்பினும் அவரால் தனிப்பெரும்பான்மைக்கான 118 இடங்களை பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தற்போது விஜய்க்கு கிடைத்திருப்பதால் அவர் முதலமைச்சராக நாளை பொறுப்பேற்கிறார். அதன்பிறகு திங்கட்கிழமை கோட்டைக்கு செல்லும் விஜய், தனது முதல் கையெழுத்தை இட உள்ளார். நாளை விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதற்கு மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
|
விஜய் எப்போது பதவி ஏற்கிறார் |
நாளை |
|
எங்கு பதவி ஏற்கிறார்? . |
நேரு விளையாட்டு அரங்கம் |
|
எத்தனை மணிக்கு |
மதியம் 3.30 மணி |
| யார் யார் பங்கேற்பு | ராகுல் காந்தி பங்கேற்கலாம் |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
கடந்த மே 4, 2026 அன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.
2. 108 எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் விஜய்யால் உடனடியாக ஏன் முதல்வராகப் பதவியேற்க முடியவில்லை?
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. விஜய்க்கு 108 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருந்ததால், தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.
3. தற்போது விஜய்க்கு எத்தனை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது?
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளதால், தற்போது அவருக்கு 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது.
4. ஆளுநர் ஏன் முதலில் விஜய்யைப் பதவியேற்க அழைக்கவில்லை?
ஆரம்பத்தில் ஆளுநர் தரப்பிலிருந்து, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ-க்கள்) நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதன் காரணமாகப் பதவியேற்பு தாமதமானது.
விஜய் ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டுக்கே பேரழிவு... டிடிவி தினகரன் பகீரங்க தாக்கு
Chennai, Tamil Nadu:TTV Dhinakaran Latest News Updates: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மே 9)செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது அவர், "எனது கட்சி எம்எல்ஏ காமராஜ் ஆதரவளித்திருந்தால், அவர் அளித்ததாக சொல்லப்படும் ஆதரவு கடிதத்தின் அசல் கடிதம் எங்கே?, காமராஜ் கையெழுத்திட்டதாக வெளியான வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? அசல் கடிதம் தராதது ஏன்?. எதன் அடிப்படையில் பேரம் பேசப்பட்டது?" என தவெக தலைவர் விஜய்யை நோக்கி கேள்விகளை அடுக்கினார்.
தவெக யாரை ஏமாற்ற பார்க்கிறது. அந்த அறிவுஜீவிகளை சுற்றி பல அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். அவர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.
நீங்கள் பெரிய ஹீரோவா (விஜய்) இருக்கலாம். 108 சீட் ஜெயிச்சிருக்கலாம். நாங்கள் 30 வருடங்களாக பல அரசுகள், பல முதலமைச்சர்கள், பல தாக்குதல்களை சந்தித்தவர்கள். உங்களைப் போல் ஓடி ஒளிந்தவர்கள் அல்ல.
முதலமைச்சராகி ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்றீர்கள். முதலமைச்சராவதற்கே மோசடி வேலைகளை செய்கிறீர்கள். கொள்கைத் தலைவராக அண்ணல் அம்பேத்கரை சொல்லி அரசமைப்பு சட்டத்தால் காலில் போட்டு மிதிக்கிறீர்கள். காமராஜ் கையெழுத்திட்டதாக தவெக வெளியிட்ட வீடியோவில் இருப்பது காமராஜ் அல்ல, ஏஐ வீடியோ. அமமுக எம்எல்ஏ காமராஜ் பெயரில் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட தவெக ஆதரவு கடிதம் போலியானது.
முதல்வராகும் விஜய்க்கு... ஸ்டாலின் வைத்த முதல் கோரிக்கை - காங்கிரஸ் கட்சிக்கு சாட்டையடி
Chennai, Tamil Nadu:MK Stalin Request To TVK Government: மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவதை கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 9, 2026
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில்…
திமுக - அதிமுக கூட்டணி இல்லை! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
Salem, Tamil Nadu:நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்து யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஐந்து நாட்களாக தமிழக அரசியலில் நிலவி வந்தது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 108 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டியை பெற மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவை அவர் கேட்டு வந்தார். இருப்பினும், அதில் எந்த ஒரு சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையில், யாரும் எதிர்பாராத விதமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அறிக்கை!
எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், "நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக ஆட்சி அமைக்காது அல்லது யாருக்கும் ஆதரவு தரப்போவது இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் அதிமுக - திமுக கூட்டணி என்ற பேச்சிற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.@AIADMKOfficial
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 9, 2026
மேலும் படிக்க: உருவாகும் விஜய்யின் பயோபிக்! இயக்குனர் மற்றும் ஹீரோ யார்?
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்குமா?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் பலம் தேவை என்ற நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் பிற கட்சிகளின் ஆதரவைக் கோரி வந்தார். முதல் கட்சியாக காங்கிரஸ் தனது நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தது. அதனை தொடர்ந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக-விற்குத் தங்களது ஆதரவை அளித்துள்ளன. தற்போது திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்தால் மட்டுமே, விஜய் சுமுகமாக ஆட்சியமைக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆனாலும், திருமாவளவன் தனது முடிவை உடனடியாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
மேலும் படிக்க | திருமாவுக்கு துணை முதல்வர்... திருச்சி கிழக்கில் வாய்ப்பு - தவெகவின் வாக்குறுதிகள்
விசிகவின் நிபந்தனைகளா காரணம்?
விசிக முடிவை அறிவிக்க தாமதமாவதற்கு, அக்கட்சியின் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகள்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், கூட்டணியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் விசிக தரப்பில் கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை; இவை அனைத்தும் சமூக வலைதளங்களில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தமிழக அரசியலில் மற்றொரு பரபரப்பாக, அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு தர உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க திமுக துணை நிற்கும் என்றும் வதந்திகள் பரவின. மேலும், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் பொதுவான ஒருவராக திருமாவளவனை முதல்வராக்குவது குறித்தும் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியவுடனேயே அதிமுக அதிலிருந்து உடனடியாக பின்வாங்கியதாகவும், அதனால்தான் திமுக - அதிமுக கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை இரண்டு முறை சந்தித்துள்ள விஜய், இன்று மாலையும் மீண்டும் ஆளுநரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு தங்களது நிலைப்பாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அந்த அறிவிப்பில் தான், அவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பார்களா இல்லையா என்பது உறுதியாகும். எது எப்படி இருந்தாலும், விசிக நிச்சயம் தவெக-விற்கு ஆதரவு தெரிவிக்கும் என்றே பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அவ்வாறு ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், நாளை அதிகாரப்பூர்வமாகத் தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு... விசிகவும் வருது? - ஆளுநரை சந்திக்கும் விஜய்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க எத்தனை இடங்கள் தேவை?
தமிழகச் சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.
2. விஜய்க்கு இதுவரை எந்தெந்த கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன?
தவெக ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் கட்சி முதலில் தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளன.
3. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவிக்கத் தாமதமாவதற்கு என்ன காரணம்?
விசிக சார்பில் துணை முதல்வர் பதவி கேட்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
குதிரை பேரம் என்றால் என்ன? ஆளுநரை ஏமாற்றியதா தவெக? - சிறை செல்கிறாரா விஜய்?
Chennai, Tamil Nadu:Horse Trading Allegations On TVK: விறுவிறுப்பான மசாலா சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு தமிழ்நாடு அரசியல் களம் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் காணப்படுகிறது.
ஆளுநரை சந்தித்த விஜய்
பெரும்பான்மை இருப்பதாக கூறி ஆட்சியமைக் கோரி தவெக தலைவர் விஜய் நேற்று (மே 8) தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார். சிபிஐ, சிபிஎம் ஆதரவு கடிதம் அளித்த நிலையில், அமமுக எம்எல்ஏவிடம் ஆதரவு கடிதம் பெற்று, அதை நேற்று ஆளுநரிடம் சமர்பித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு... விசிகவும் வருது? - ஆளுநரை சந்திக்கும் விஜய்
அமமுக எம்எல்ஏ தவெக ஆதரவா?
அதிமுக கூட்டணி சார்பில் மன்னார்குடி தொகுதியில் அமமுகவின் காமராஜ் போட்டியிட்டார். இவர் டி.ஆர்.பி ராஜாவை வீழ்த்தி வெற்றிபெற்றார். அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட்டு இந்த ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.
அந்த வகையில், அமமுக எம்எல்ஏ காமராஜ், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஒப்புதலோடு விஜய்க்கு ஆதரவு அளித்ததாக தகவல்கள் பரவின. விஜய்யும் அவரது ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதாக கூறப்பட்டது.
ஆளுநரை சந்தித்த டிடிவி தினகரன்
அதை தொடர்ந்து, நேற்றிரவு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென சென்னை ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆதரவு தெரிவித்து ஆளுநரிடம் கடிதத்தை வழங்கினார். அமமுக எம்எல்ஏ காமராஜ் கையெழுத்திட்ட அந்த கடிதத்தை ஆளுநரிடம் டிடிவி தினகரன் வழங்கினார்.
#WATCH | Tamil Nadu | AMMK Party General Secretary TTV Dhinakaran says, "A letter was issued in support of TVK by my MLA Kamaraj. We are all shocked that I got an appointment with the Governor and I showed the real letter that I got from our CM candidate Edappadi Palaniswami... I… https://t.co/pHTPmAOu8w pic.twitter.com/C8NPSXcBXG
— ANI (@ANI) May 8, 2026
தினகரன் முன்வைத்த குற்றச்சாட்டுகள்
தொடர்ந்து, ஆளுநரை சந்தித்துவிட்டு ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தனது வழக்கறிஞரின் மூலம் அமமுக எம்எல்ஏ காமராஜ் நேற்று மாலை 6.30 மணிக்கு அதிமுகவுக்கான ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டு தனக்கு அனுப்பியதாக தெரிவித்தார். ஆனால், அவர் தவெகவுக்கு ஆதரவு அளித்து கடிதம் வழங்கியதாக செய்திகள் வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.
மேலும் படிக்க | திருமாவுக்கு துணை முதல்வர்... திருச்சி கிழக்கில் வாய்ப்பு - தவெகவின் வாக்குறுதிகள்
காணாமல் போன எம்எல்ஏ
மேலும், அமமுக எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்றும் அவர் தொலைபேசி தொடர்புகொண்டாலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, தவெக அவரிடம் குதிரை பேரம் நடத்தியிருக்கலாம் அல்லது அவர் விலை போயிருக்கலாம் என்றும் பேசியிருந்தார்.
நள்ளிரவில் வந்த காமராஜ்
ஆனால், அதன் பிறகு காமராஜ், சென்னை ஆளுநர் மாளிகைக்கு நேரில் வந்தார். டிடிவி தினகரன் உடன் சென்று காமராஜ், ஆளுநரை நேரில் சந்தித்தார். ஆளுநரை சந்தித்த பின்னர், ஆளுநர் மாளிகைக்கு வெளியே அளித்த பேட்டியில், புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே தானும் தங்கியிருந்ததாக கூறினார்.
காமராஜ் கூறியது என்ன?
"தவெகவுக்கு நான் எந்த ஆதரவு கடிதத்தையும் கொடுக்கவில்லை. ஆளுநர் மாளிகை செயலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது, அதனால் உடனே இங்கு வந்துவிட்டேன். டிடிவி தினகரன் அழைக்கும்போது என் கையில் போன் இல்லை. அதனால் அவர் போனை எடுக்க முடியவில்லை. என்னைப் போலவே போலியாக கையெழுத்துவிட்டு கடிதம் அளித்துள்ளனர்" என்றார்.
ஆளுநர் விசாரணை
மேலும், காமராஜ் பெயரில் போலியாக கடிதம் ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என டிடிவி தினகரனும் குற்றஞ்சாட்டினார். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஆளுநரிடம் கோரியாதகவும், உரிய விசாரணையை மேற்கொள்வதாக ஆளுநர் உறுதியளித்ததாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். இதுகுறித்து ஆளுநர் என்ன முடிவெடுப்பார்? என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.
தவெக தலைவர் ஆளுநரிடம் போலி ஆதரவு கடிதத்தை அளித்திருக்கும்பட்சத்தில், BNS சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். இந்த குற்றத்திற்கான தண்டனை விவரங்களை இங்கு காணலாம்.
போலி ஆவணம் தயாரித்தல் : ஆளுநரிடம் போலி கையெழுத்து இட்ட கடிதத்தை அளிப்பது மிகக் கடுமையான குற்றம். BNS பிரிவு 336 & 340-இன் கீழ், போலி ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் அதை உண்மையானது என நம்பவைத்து ஏமாற்றுதல். இதற்கு 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
ஏமாற்றுதல் மற்றும் மோசடி : BNS பிரிவு 318-இன் கீழ், ஒரு பொது அதிகாரியை (இங்கு ஆளுநர்) ஏமாற்றி, ஒரு பதவியைப் பெறுவது கிரிமினல் மோசடியாகும். 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
கூட்டுச் சதி : BNS பிரிவு 61-இன் இத்தகைய செயலில் பல நபர்கள் இணைந்து ஈடுபட்டால், அது சதித் திட்டத்தின் கீழ் வரும். இதற்கும் மிகக் கடுமையான தண்டனைகள் உண்டு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குதிரை பேரம் என்றால் என்ன?
பெயர் காரணம்: பழங்காலத்தில், சந்தைகளில் குதிரைகளின் தரம் மற்றும் விலையை நிர்ணயிக்கும்போது வாங்குபவருக்கும் விற்பனை செய்பவருக்கும் இடையே கடுமையான பேரம் நடக்கும். அதைப் போலவே, அரசியலில் எம்எல்ஏ, எம்பிக்கள் குதிரையை போன்றவரகள். அவர்களுக்கு பணம் அல்லது பதவி ஆசை காட்டி பேரம் பேசுவதால் இதை குதிரை பேரம் (Horse Trading) என்கிறார்கள்.
இது எப்போது நடக்கும்?: இது பெரும்பாலும் தேர்தல் நேரங்களிலும், ஒரு ஆட்சி கவிழும் தருவாயிலும் தான் நடக்கும். ஆட்சியில் இருக்கும்போது, சில எம்எல்ஏ, எம்பிக்கள் அதிருப்தியில் இருந்தால், அந்த ஆட்சியை தக்கவைக்கவோ அல்லது கவிழ்க்கவோ எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும் போது இந்த குதிரை பேரம் நடக்கும்.
கட்சித் தாவல் தடை சட்டம்: இந்தியாவில் இதை தடுக்க, கடந்த 1985ஆம் ஆண்டில் கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இதில் உள்ள சில ஓட்டைகளை பயன்படுத்தியும் குதிரை பேரம் நடைபெறுகிறது. ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பிரிந்து சென்றால் இது கட்சித் தாவலாக கருதப்படாது. இதுவும் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்.
குடியரசு தலைவர் ஆட்சியா?
ஒருவேளை, குதிரை பேர குற்றச்சாட்டுகள் உண்மையாகும்பட்சத்தில், தவெக ஆட்சியமைப்பதிலும், விஜய் முதல்வராவதிலும் சிக்கல் எழலாம். வேறு யாரும் ஆட்சியமைக்க முன்வராதபட்சத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமலுக்கு வரும் வாய்ப்பும் உள்ளது.
தவெக வெளியிட்ட வீடியோ
ஆனால், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்த பகீரங்க குற்றச்சாட்டுக்கு தமிழக வெற்றிக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமமுக எம்எல்ஏ காமராஜ் ஒரு காரின் முன் இருக்கையில் அமர்ந்து, தவெகவிற்கு ஆதரவளித்த கடிதத்தில் கையெழுத்திடுவது போன்ற வீடியோ தவெக தரப்பில் வெளியிடப்பட்டது.
காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது என்றும் டிடிவி தினகரன் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
#WATCH | TVK shares a video of AMMK MLA Kamaraj, saying "These are the video visuals of AMMK MLA Kamaraj voluntarily and happily writing a letter expressing his support for the Tamilaga Vettri Kazhagam. He had stated that he was extending support to the Tamilaga Vettri Kazhagam… pic.twitter.com/sM3xtyXx12
— ANI (@ANI) May 8, 2026
தவெகவின் பதிலடி
ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது என்றும் இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார் என்றும் தவெக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
நாட்டின் புதிய CDS... என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
New Delhi, Delhi:India's Next CDS: நாட்டின் அடுத்த முப்படை தலைமை தளபதியாக (CDS) ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் அடுத்த கடற்படைத் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முப்படை தலைமை தளபதி மற்றும் கடற்படைத் தலைமை தளபதி என இரண்டு ராணுவ உயர் பதவிகளுக்கான உத்தரவுகள், இன்று (மே 9) அதிகாலையில் வெளியிடப்பட்டன. இருவரும் வரும் மே மாத இறுதியில் பதவியேற்றுக்கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர்; ஓராண்டு நிறைவு...! “ராணுவ வீரர்களுக்கு சல்யூட்
Government of India appoints Lieutenant General N S Raja Subramani PVSM, AVSM, SM, VSM (Retd.) as the Chief of Defence Staff, who shall also function as Secretary to Government of India, Department of Military Affairs, with effect from the date of assumption of charge and until… pic.twitter.com/FpGolQxe5a
— ANI (@ANI) May 9, 2026
முப்படை தலைமை தளபதி: தற்போது CDS ஆக ஜெனரல் அனில் சௌகான் உள்ளார். இந்நிலையில், வரும் மே 30ஆம் தேதி அன்று லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி பதவியேற்பார்.
கடற்படை தலைமை தளபதி: தற்போது இந்த பதவியில் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி உள்ளார். வரும் மே 31ஆம் தேதி அன்று அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் பதவியேற்பார்.
புதிய முப்படை தலைமை தளபதி
யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி?: தேசிய பாதுகாப்பு அகாதமி மற்றும் இந்திய ராணுவ அகாதமியின் முன்னாள் மாணவர் ஆவார். ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, நாட்டின் ராணுவ சேவையில் சுமார் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
கல்வித் தகுதி: இங்கிலாந்து நாட்டின் பிராக்னெல் நகரில் உள்ள Joint Services Command Staff கல்லூரியிலும், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியிலும் படித்தார். பின்னர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பயின்று லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் வென்றார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத்துறை சார்ந்த ஆய்வுகளில் M.Phil பட்டத்தையும் பெற்றார்.
கவனிக்கத்தக்க மைல்கற்கள்: 1985ஆம் ஆண்டில் கார்வால் ரைபிள்ஸ் படையில் அதிகாரியாக பணியாற்றினார். அதற்கு அவர் ராணுவத் துணை தளபதியாக பணியாற்றினார். உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள மத்திய ராணுவக் கட்டளை தளபதியாகவும் பணியாற்றினார்.
சிறப்பு தகுதி: நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகள் குறித்த சிறப்பான புரிதலை கொண்டவர். அங்கு செயல்பாட்டு இயக்கவியல் குறித்த ஆழ்ந்த நுண்ணறிவுக்கு பெயர் பெற்றவர். முப்படைகளில் கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் முன்னுரிமை அளித்து வரும் நேரத்தில் இவரை முப்படை தலைமை தளபதி ஆவார்.
மேலும் படிக்க | யார் இந்த சுவேந்து அதிகாரி? மம்தாவை தோற்கடித்தவர்..இப்போ மேற்கு வங்க முதல்வர்!
விஜய் பதவியேற்பதில் சிக்கல்... குதிரை பேரம் நடத்தியதா தவெக? - திருமாவின் முடிவு என்ன?
Chennai, Tamil Nadu:TVK Vijay Latest News Updates: தவெக தலைவர் விஜய் இன்று காலையில் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், விசிக ஆதரவு இன்னும் உறுதியாகவில்லை. இதனால், விஜய் இன்று பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும், அமமுக எம்எல்ஏ உடன் குதிரை பேரம் நடத்தியதாகவும் தவெக மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவெக பலம் 116 ஆக உயர்வு
தவெகவிடம் ஏற்கெனவே 107 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கட்சியும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்து தனது முழு ஆதரவையும் அளித்தது, இதனால் தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்தது. நேற்று (மே 8) சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்கினர். இதனால், தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது.
விசிக ஆதரவு உறுதியாகவில்லை
ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை, இன்னும் விசிகவிடம் இருந்து ஆதரவு கடிதம் தவெகவுக்கு கிடைக்கவில்லை. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தவெகவுக்கு ஆதரவு என தகவல்கள் பரவிய நிலையில், அக்கட்சி ஆதரவு அளிக்கவில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. எனவே தற்போது வரை தவெகவின் பலம் 116 ஆக மட்டுமே உள்ளது.
இன்று பதவியேற்பு விழாவா?
இது ஒருபுறம் இருக்க, தவெக தலைவர் விஜய் நேற்றிரவு ஆளுநரை 3வது முறையாக சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அச்சந்திப்பில் 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் விஜய் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. அதை தொடர்ந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (மே 9) காலையில் பதவியேற்பு விழா நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
விஜய் பதவியேற்பாரா இல்லையா?
ஆனால், விசிகவின் ஆதரவு கடிதம் இன்னும் கிடைக்காத நிலையிலும், ஐயூஎம்எல் ஆதரவு அளிக்காத நிலையிலும் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. மேலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆளுநரும் ஆட்சியமைக்க விஜய்யை அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை விசிகவின் நிலைப்பாட்டு அதன் தலைவர் திருமாவளவன் இன்று காலையில் அறிவிக்கும்பட்சத்தில், விஜய் பதவியேற்பாரா இல்லையா என்பது உறுதியாகும்.
ஆளுநரை சந்தித்த டிடிவி தினகரன்
இந்தச் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநரை நேரில் சந்தித்து, அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதினார். அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற காமராஜ் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார், டிடிவி தினகரன்.
#WATCH | AMMK general secretary T.T.V. Dhinakaran says, "I am supporting AIADMK. I have submitted this letter in support of Edappadi Palaniswami to form the Govt. Our MLA Kamaraj has also signed it and sent it through my secretary. When I saw TVK, I was shocked. because there was… https://t.co/zgMgkKzpQk pic.twitter.com/wXN14B2ueS
— ANI (@ANI) May 8, 2026
அமமுக எம்எல்ஏவை காணவில்லை...
இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்து டிடிவி தினகரன் பெரும் அதிர்ச்சிகர தகவலை அளித்தார். மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ்-ஐ காணவில்லை. அவரை தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை, விஜய் குதிரை பேரம் நடத்தியிருக்க வேண்டும், அல்லது விலை போயிருக்க வேண்டும் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.
நேரில் வந்த அமமுக எம்எல்ஏ
அடுத்து நள்ளிரவில், அமமுக எம்எல்ஏ காமராஜ் நேரில் வந்து, தான் தவெகவுக்கு ஆதரவளிக்கவில்லை என்றும் இன்னும் டிடிவி தினகரன் உடன் தான் இருக்கிறேன் என்றும் விளக்கம் அளித்தார். தான் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு எந்த கடிதத்தையும் அளிக்கவில்லை என்றும், அனைத்தும் வதந்தி என குறிப்பிட்டிருந்தார்.
குதிரை பேரம் குற்றச்சாட்டு - தவெக வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெகவுக்கு சுயநினைவுடன் எழுதிய கடிதம் குறித்த வீடியோவை தவெக வெளியிட்டது. மேலும் தவெக அளித்த விளக்கத்தில், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.
#WATCH | TVK shares a video of AMMK MLA Kamaraj, saying "These are the video visuals of AMMK MLA Kamaraj voluntarily and happily writing a letter expressing his support for the Tamilaga Vettri Kazhagam. He had stated that he was extending support to the Tamilaga Vettri Kazhagam… pic.twitter.com/sM3xtyXx12
— ANI (@ANI) May 8, 2026
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன், ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது மாறானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராகிறார் விஜய்... நாளை காலை பதவியேற்பு? - முடிவுக்கு வந்தது இழுபறி!
Chennai, Tamil Nadu:TVK Vijay Swearing In Ceremony Latest News Updates: தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருக்கும் நிலையில், நாளை (மே 9) காலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக பதவியேற்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு திமுக கூட்டணியில் இடம்பெற்ற சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, ஆளுநர் மாளிகையில் தவெக தலைவரும், சட்டப்பேரவைக்கு குழுத் தலைவருமான விஜய் இன்று (மே 8) நேரில் சந்தித்தார். அப்போது, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரிடம் அளித்தார்.
இதனால், 3வது முறையாக ஆளுநரை சந்தித்த நிலையில், தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் நாளை (மே 9) காலை முதலமைச்சராக பதவியேற்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம், நாளை காலை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு மற்றும் பதவி பிரமாணம் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அமைச்சரவையும் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக கட்சி கழகம் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக முறையே இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு தள்ளி உள்ளது. இந்த சூழலில் தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
