icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

விஜய்யின் முதுகு தான்... கரூர் மக்களின் நினைவுச்சின்னம்... சிவசங்கர் கொடுத்த பதிலடி

Chennai, Tamil Nadu:

SS Sivasankar Slams CM Vijay Latest News : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

முதலமைச்சர் விஜய் இன்று கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியது குறித்து எஸ். எஸ். சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரூரில் தவெக சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க | கரூர் கூட்டநெரிசல் : காவல்துறை அலர்ட் செய்யாதது ஏன்? - CM விஜய் கேட்ட கேள்விகள்

அதை குறிப்பிட்டு பேசிய எஸ்.எஸ். சிவசங்கர், "முதுகில் இருக்கிற கறையை மறைப்பதற்கு மற்றவர்களை குற்றம் சொல்வது தான் தன்னுடைய வழக்கம் என்பது போல, காவல்துறையும், காவல்துறைக்கு அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் எல்லாம் வழிகாட்டினார்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அதேபோல, அவர் இன்னும் திரைப்படத்தை விட்டு வெளியில் வரவில்லை.

'ஓடு... ஓடு... ஓடு...' என்று அதுக்கு வேற சைகை காட்டுகிறார். அதுக்கு எங்களுடைய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மிக அழகாக பதில் சொல்லி இருக்கிறார். 'ஓடு... ஓடு... ஓடு...' என்று கரூர் சம்பவம் நடந்த அன்னைக்கு சம்பவம் முடிந்த பிறகு, கரூரில் இருந்து சென்னைக்கு ஓடி வந்தது யார் என்று நாட்டிற்கே தெரியும். அந்த 'ஓடு... ஓடு... ஓடு...' அவர்தான் உதாரணம் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் படிக்க | ஓடு..ஓடு.. ஓடு! கரூரில் இருந்து ஓடியது யார்? CM விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி ரியாக்ஷன்

மிக அழகான பதில். அதேபோல, கரூரில் நினைவுச் சின்னம் அமைப்போம் என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே மக்கள் மனதில் அந்த நினைவுச் சின்னம் இருக்கிறது. திருச்சி விமான நிலையத்தில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள், 'சார்... சார்... சார்...' என்று கூப்பிடும் போது, அந்த ஒரு வேக நடை போட்டாரே, இன்றைக்கு சொன்ன அந்த "ஓடு... ஓடு... ஓடு...", அந்த முதுகு கரூர் மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நினைவுச் சின்னமாக அவர்கள் மனதில் இருக்கிறது.

நீங்கள் அமைக்கப்போகும் நினைவுச் சின்னம் காலா காலத்திற்கும் நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்தும். ஒரு நடிகர் பிரச்சாரத்திற்கு வருகிறேன் என சொல்லிவிட்டு, நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்த காரணத்தினால் 41 பேர் உயிர் இழந்தார்கள் என்பதையும் நினைவுபடுத்தும். இன்றைக்கு நேரத்திற்கு சென்றதுபோல் அன்றும் சென்றிருந்தால் இவ்வளவு பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க | மக்களை தவிக்கவிட்டு ஓடியது யார்? -முதல்வர் விஜய் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்பி அதிரடி பதிலட

0
0
Report

5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை... தவெகவுக்கு குட்டு... ஹைகோர்ட் அதிரடி

Chennai, Tamil Nadu:

Madras High Court : நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் சென்னையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் இரண்டு தொகுதியில் போட்டியிட்டார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 

இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல கரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்திருந்தார்கள்.

5 பேர் மீது வழக்கு

இவர்களை போன்று, தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் உள்ளிட்ட இருவரும் ராஜினாமா செய்தார்கள். மொத்தம் 7 தொகுதிகள் காலியானது.

இதில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய ஐந்து தொகுதிகளில் அந்த வெற்றியை எதிர்த்து, முறையே முதலமைச்சர் விஜய், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்ட அந்த ஐந்து பேரின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

உயர் நீதிமன்றத்தில் மனு

எனவே இவர்கள் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த பொதுநல வழக்கு மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருண் குமார் முன்புஸ இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது.

மனுவில் குறிப்பிடப்பட்டது என்ன?

  • இந்த வழக்குகளில் தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்னிறுத்தியுள்ளனர்.
  • ஆனால் இடைத்தேர்தலை நடத்தி எம்எல்ஏ-வை தேர்ந்தெடுத்தப்பின், தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்து வேட்பாளராக வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்துவிட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற நிலை ஏற்படும்.
  • இதனால் இந்த வழக்கு, தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட அந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே 1967ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை உள்ள பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

மனுதாரர் முன்வைத்த வாதம்

இந்த தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் தரப்பில், தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்திற்கு வரப்பெறவில்லை. ஆனால் இந்த வழக்கின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

அரசு தரப்பு வாதம்

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடும் போது, "தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அவர்கள் ராஜினாமா செய்யும்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை, அதற்குப் பிறகுதான் இந்த வழக்கு எல்லாம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் தரப்பு வாதம்

அதேபோன்று முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கும்போது, "இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ள தொகுதியின் வாக்காளராக இல்லாத ஒரு மனுதாரர் ஒருவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார், அவ்வாறு தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது. 

அனைத்துத் தரப்பினரையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை இன்று காலை தீர்ப்பைத் தள்ளி வைத்திருந்தனர். இன்று மாலை தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தீர்ப்பு விவரம்

  • ஜனநாயக நடைமுறையில் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்த கேள்வி பொருந்தாது.
  • ஆனால் தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது என்பது அரசுப் பணம் செலவிடப்படுவதோடு, ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகும்.
  • எனவே இந்த வழக்கு முடியும் வரை இதில் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் உள்ளது.
  • இதனையடுத்து 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட, தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாகக் கருத வேண்டியதில்லை. 
  • இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு, தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், முதலமைச்சர் விஜய், எம்எல்ஏ-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் மூன்று வாரக் காலத்தில் பதிலளிக்க வேண்டும். 
  • இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

அதுவரை இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதித்து இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0
0
Report

கரூர் கூட்டநெரிசல் : காவல்துறை அலர்ட் செய்யாதது ஏன்? - CM விஜய் கேட்ட கேள்விகள்

Karur, Tamil Nadu:

CM Vijay Karur Speech : கரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கரூரின் வெண்ணெய்மலை பகுதியில் நடந்த தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசினார். 

அப்போது கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்தும் அவர் சில கருத்துகளை தெரிவித்தார். 41 பேர் உயிரிழந்த அச்சம்பவம் தவெகவுக்கு எதிராக தீட்டப்பட்ட சதி என மீண்டும் ஒரு முறை விஜய் பேசியுள்ளார்.

மேலும் அவர் சில கேள்விகளையும் எழுப்பி உள்ளார். "பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டும் என காவல்துறை கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல்துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?.

நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்துவிட்டது காவல்துறையினர்தான். இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனச் சொல்லி பிரஷர் போட்டது யார்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதேநேரத்தில், "நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே... எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என திமுகவை தாக்கி பேசினார்.

மேலும் அவர், "ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மனதளவில் சில காயங்கள், வலிகளை மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும்விட வலியும் காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான்" என்றார்.

நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரான சதியை, சூழ்ச்சியை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

0
0
Report
Advertisement

₹500 முதல் ₹2000-க்குள் இவ்வளவு பயனுள்ள Tech சாதனங்களா? இந்த 6 Gadgets-ஐ மிஸ் பண்ணாதீர்கள்!

Chennai, Tamil Nadu:

Best Tech Accessories Under Rs 2000: இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில், அலுவலகம், வீட்டிலிருந்து வேலை (Work From Home), கல்லூரி, ஆன்லைன் படிப்பு என அனைவருக்கும் சில சிறிய டெக் சாதனங்கள் வேலைகளை மிகவும் எளிதாக்குகின்றன. சந்தையில் நூற்றுக்கணக்கான Tech Accessories கிடைத்தாலும், அவற்றில் உண்மையில் பயனுள்ள மற்றும் பணத்திற்கு மதிப்பான (Value for Money) தயாரிப்புகளை தேர்வு செய்வது சற்று கடினம்.

சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட பல தயாரிப்புகளில் இருந்து, தினசரி பயன்படுத்த ஏற்ற ரூ.500 முதல் ரூ2,000 வரை கிடைக்கும் சிறந்த Tech Accessories பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் Monitor Stand முதல் Rechargeable Battery, Wireless Keyboard, SSD Enclosure, Smart Watch வரை பல பயனுள்ள சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் சிறப்பம்சங்கள், விலை பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம். 

முக்கிய அம்சங்கள்

  • ₹500 முதல் ₹2,000 வரை கிடைக்கும் Value for Money Gadgets
  • வீட்டிலும் அலுவலகத்திலும் பயன்படுத்த ஏற்றவை
  • மாணவர்கள், Professionals மற்றும் Content Creators-க்கு மிகவும் பயனுள்ள Accessories
  • USB-C ஆதரவு கொண்ட நவீன சாதனங்கள்
  • தேவையில்லாத செலவை தவிர்க்க உதவும் பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன

மேலும் படிக்க - 'பூகம்பம் வரப்போகுது, அலர்ட்!!' வெனிசுலா நிலநடுக்கத்திற்கு முன்பே மெசேஜ் அனுப்பிய கூகிள், எப்படி?

1. ஏசர் மானிட்டர் ஸ்டாண்ட்: உங்கள் மேசைக்கு புதிய தோற்றம்

கணினி திரை அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு திரையை சரியான உயரத்தில் வைத்துப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. அதற்காக ஏசர் நிறுவனத்தின் இந்த மானிட்டர் ஸ்டாண்ட் (Acer RGB Monitor Stand) சிறந்த தேர்வாக இருக்கும். இதமூலம் திரையை சரியான உயரத்தில் வைத்துப் பயன்படுத்துவதால் கழுத்து வலி மற்றும் முதுகு வலி குறைய வாய்ப்பு உள்ளது.

சிறப்பம்சங்கள்

  • அழகிய வண்ண ஒளி வசதி
  • நான்கு யூ.எஸ்.பி. இணைப்பு வசதி
  • யூ.எஸ்.பி. டைப்-சி மூலம் இணைக்கலாம்
  • கைப்பேசி வைக்கும் இடம்
  • சிறிய பொருட்களை வைக்க மறைவு பெட்டி
  • தேவைக்கேற்ப அகலத்தை மாற்றிக்கொள்ளலாம்
  • மடிக்கணினி மற்றும் கணினி திரை இரண்டிற்கும் பயன்படுத்தலாம்

விலை:

  • சுமார் ₹1,700 முதல் ₹1,900 வரை.

2. பழைய தட்டச்சு இயந்திர வடிவிலான வயர்லெஸ் விசைப்பலகை

இந்த விசைப்பலகையின் வடிவமைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. பழைய தட்டச்சு இயந்திரத்தைப் போல வட்ட வடிவிலான விசைகள் மற்றும் அழகான தோற்றம் (Vintage Typewriter Style Wireless Keyboard) இதன் சிறப்பம்சமாகும். இது எழுத்தாளர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

முக்கிய அம்சங்கள்

  • புளூடூத் இணைப்பு
  • வயர்லெஸ் இணைப்பு
  • ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களுடன் இணைக்கலாம்
  • கைப்பேசி மற்றும் டேப்லெட்டை வைக்கும் வசதி
  • மென்மையான தட்டச்சு அனுபவம்

விலை: 

  • ₹1,500 முதல் ₹1,700 வரை.

3. ஜி.எம். பல்நோக்கு மின்சார அடாப்டர்

இன்றைய காலத்தில் ஒரே நேரத்தில் பல மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்காக இந்த பல்நோக்கு மின்சார அடாப்டர் (GM Multi Plug Power Adapter) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முக்கிய வசதிகள்

  • மூன்று மின்சார இணைப்பு புள்ளிகள்
  • யூ.எஸ்.பி. டைப்-ஏ
  • யூ.எஸ்.பி. டைப்-சி
  • மின்சார அதிர்விலிருந்து பாதுகாப்பு
  • மின்சாரம் செயல்படுகிறதா என்பதை காட்டும் ஒளி
  • நீளமான கம்பி

விலை: 

  • ₹800 முதல் ₹900 வரை.

4. திரையுடன் வரும் எஸ்.எஸ்.டி. உறை வாங்க வேண்டுமா?

எஸ்.எஸ்.டி. சேமிப்பு (SSD Enclosure) சாதனத்தை வெளிப்புற சேமிப்பாக பயன்படுத்த இந்த உறை உதவுகிறது. இது யாருக்கு தேவைப்படும் எனப்பார்த்தால், திரை வசதி அவசியம் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த தயாரிப்பு பொருத்தமானது.

  • இதில் சிறிய திரை கொடுக்கப்பட்டுள்ளதால், அதன்மூலம்
  • சேமிப்பு திறன்
  • வெப்பநிலை
  • இணைப்பு நிலை போன்ற தகவல்களை காணலாம்.

ஆனால் நடைமுறையில் பார்த்தால் Display இல்லாத SSD Enclosure-க்கும் இதற்கும் Speed-ல் பெரிய வித்தியாசம் இல்லை.

சோதனையில் தெரிய வந்தவை

  • தகவல் பரிமாற்ற வேகம் சிறப்பாக உள்ளது.
  • சேமிப்பு திறனை சரியாக காட்டுகிறது.
  • வெப்பநிலை விவரங்கள் எப்போதும் துல்லியமாக இருக்காது.

விலை: 

  • திரையுடன் - ₹1,500
  • திரை இல்லாமல் - ₹700 முதல் ₹900 வரை.

மேலும் படிக்க - உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பெஸ்ட் 1.5 Ton இன்வெர்ட்டர் ஏசிகள் இவைதான்

5. யூ.எஸ்.பி. டைப்-சி மூலம் சார்ஜ் செய்யக்கூடிய ஏஏ பேட்டரிகள்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த பேட்டரிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இந்த Battery-யின் சிறப்பு என்னவென்றால் தனியாக Charger தேவையில்லை. ஒவ்வொரு Battery-யிலும் நேரடியாக USB Type-C Port கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதை (USB-C Rechargeable AA Batteries) மவுஸ், விசைப்பலகை, ரிமோட், விளையாட்டு சாதனங்கள் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

முக்கிய அம்சங்கள்

  • 1850 மில்லி ஆம்பியர் திறன்
  • நேரடியாக யூ.எஸ்.பி. டைப்-சி மூலம் சார்ஜ் செய்யலாம்
  • நூற்றுக்கணக்கான முறை பயன்படுத்தலாம்
  • தனியாக சார்ஜர் தேவையில்லை
  • மின்னணு கழிவுகளை குறைக்க உதவும்

6. வெளிப்படையான வடிவமைப்பில் ஸ்மார்ட் கைக்கடிகாரம்

சந்தையில் தற்போது Transparent Design கொண்ட Smart Watch-களும் கவனம் பெற ஆரம்பித்துள்ளன. அதாவது வெளிப்புறத்திலேயே உள்ளமைப்பைக் காணக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் (Transparent Smart Watch) வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இதில் உள்ள வசதிகள்

  • 1.83 அங்குல திரை
  • இதயத் துடிப்பு கண்காணிப்பு
  • நடை எண்ணிக்கை
  • உறக்க கண்காணிப்பு
  • அழைப்பு மற்றும் அறிவிப்பு வசதி
  • குறைகள்
  • திரைத் தரம் சாதாரணமாக உள்ளது.
  • கட்டுமானத் தரம் இன்னும் மேம்படுத்தப்படலாம்.

விலை: 

  • ₹1,200 முதல் ₹1,400 வரை.

Tech Accessories சந்தையின் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்

  1. USB Type-C தற்போது அனைத்து சாதனங்களிலும் பொதுவாக மாறி வருகிறது.
  2. Rechargeable Accessories மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
  3. RGB Lighting கொண்ட Desk Setup Accessories அதிகமாக விற்பனையாகின்றன.
  4. Work From Home பயனாளர்களுக்கான Ergonomic சாதனங்களின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
  5. Bluetooth Multi-device Keyboard மற்றும் Portable Accessories அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.
  6. வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
  7. உங்கள் தேவைக்கேற்ற தயாரிப்பை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
  8. அதிக வசதிகள் இருப்பதால் மட்டுமே வாங்க வேண்டாம்.
  9. Warranty மற்றும் Brand Support இருப்பதை உறுதி செய்யுங்கள்.
  10. USB Type-C ஆதரவு உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
  11. Online Review மற்றும் User Rating-களையும் பார்க்கலாம்.

Tech Accessories அட்வைஸ்

குறைந்த செலவில் அதிக பயன் தரக்கூடிய தொழில்நுட்ப சாதனங்களைத் தேடுபவர்களுக்கு இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மானிட்டர் ஸ்டாண்ட், வயர்லெஸ் விசைப்பலகை, பல்நோக்கு மின்சார அடாப்டர் மற்றும் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் மிகவும் சிறந்த தேர்வாகும். அதே நேரத்தில், கூடுதல் வசதிகள் இருப்பதற்காக மட்டும் அதிக விலை கொடுத்து வாங்காமல், உண்மையில் உங்களுக்குத் தேவையான அம்சங்களைப் பொறுத்து தேர்வு செய்வது சிறந்த முடிவாக இருக்கும். இந்த சாதனங்கள் உங்கள் வேலைத் திறனை அதிகரிப்பதோடு, அன்றாட பயன்பாட்டையும் மிகவும் எளிதாக்கும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தயாரிப்புகள் இணையத்தில் கிடைத்த தகவல்கள், பயனர் அனுபவங்கள் மற்றும் பொதுவான தொழில்நுட்ப விவரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. தயாரிப்புகளின் விலை, அம்சங்கள் மற்றும் கிடைக்கும் நிலை காலப்போக்கில் மாறக்கூடும். எந்த தயாரிப்பையும் வாங்குவதற்கு முன் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது விற்பனை தளத்தில் உள்ள விவரங்களை சரிபார்த்து, உங்கள் தேவைக்கேற்ப முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் கட்டுரை தகவல் வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது; குறிப்பிட்ட எந்த தயாரிப்பையும் வாங்க வேண்டும் என்ற பரிந்துரையாக இதை எடுத்துக்கொள்ளக் கூடாது.

மேலும் படிக்க - ரூ.20,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்

0
0
Report

FIFA WC: 'Z' நிறுவனத்திற்கு குவிந்த விளம்பரங்கள்... 95% விற்றுத் தீர்ந்த விளம்பர இடங்கள்!

New Delhi, Delhi:

FIFA World Cup 2026 : பிபா உலகக் கோப்பை தொடரில், முதல்முறையாக இந்த முறைதான் 48 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 12 பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றிருந்தன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

12 பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடித்த 24 அணிகள் நேரடியாக, ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு தகுதிபெற்றன. அடுத்த சிறந்த 8 அணிகளும் ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு தகுதிபெற்றன. தொடர்ந்து, நாக்அவுட் சுற்றுகள் தொடங்கின. ரவுண்ட் ஆப் 32 சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்று நிறைவடைந்தது.

'ஜீ' நிறுவனத்திற்கு குவிந்த விளம்பரங்கள்!

காலிறுதி சுற்றுக்கு தற்போது 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. இந்திய நேரப்படி ஜூலை 10ஆம தேதி முதல் காலிறுதி சுற்று தொடங்குகிறது. 

பரபரப்பான கட்டத்தை பிபா உலகக் கோப்பை தொடர் எட்டியிருக்கும் நிலையில், இத்தொடரின் இந்திய ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ள ஜீ என்டர்டெய்ன்மென்ட் என்டர்பிரைசஸ் நிறுவனம் (ZEEL), விளம்பரதாரர்கள் மூலம் அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜீ நிறுவனத்தின் லீனியர் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் மற்றும் Zee 5 ஓடிடி தளத்தின் பிரீமியம் விளம்பர இடங்கள் மூலம் 95 சதவீதத்திற்கும் மேல் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ளன.

22+ முன்னணி பிராண்டுகள் பார்ட்னர்ஷிப்

ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், எஃப்.எம்.சி.ஜி (FMCG), நிதிச் சேவைகள், ஆடை மற்றும் வாழ்க்கை முறை, இ-காமர்ஸ், ரியல் எஸ்டேட், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 22க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகள் ஜீ நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளன.

நாக்-அவுட் சுற்றுகளின் போது உச்சகட்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க விளம்பரதாரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக, 10 வினாடி பிரீமியம் விளம்பரக் கட்டணம் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

0
0
Report
Advertisement

இலங்கையை சதம் அடித்து மிரட்டிய... வடசென்னை 'ஆபத்பாந்தவன்' - யார் இந்த வி.கே. வினீத்?

Western Province:

Who Is VK Vineeth? : 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி தொடர் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியை விளையாட இளம் இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள ஹம்பாந்தோட்டா நகரின் மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் திட்டமிடப்பட்ட நிலையில், ஜூலை 4ஆம் தேதி ஒருநாள் தொடர் தொடங்கியது

முதல் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில், 2வது போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என சமனடைந்தது.

மேலும் படிக்க | கிளாசனை தர்றோம்.. இந்த 2 வீரரை தாங்க! சிஎஸ்கே-விடம் டீல் பேசிய SRH

அன்வே டிராவிட் விளையாடவில்லை...

இந்த தொடரில் ராகுல் டிராவிட்டின் அன்வே டிராவிட் மகன் விளையாடுவதால் கவனம் பெற்றது, அவரும் 2வது போட்டியில் 87 ரன்களை குவித்திருந்தார். ஆனால், 3வது போட்டியில் அன்வே டிராவிட் விளையாடவில்லை.

சொதப்பிய தொடக்கம்

தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் யஷ்பர்தன் சவுகான் 6 ரன்களிலும், விக்கெட் கீப்பரான ரஜத் பாகேல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியாவை காப்பாற்றிய பார்ட்னர்ஷிப்

ஓபனிங் சொதப்பினாலும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வி.கே. வினீத் மற்றும் லக்ஷயா ராய்சந்தானி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதில் வி.கே. வினீத் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஜோடி 117 பந்துகளுக்கு 108 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ஆபத்பாந்தவன் வினீத்

ராய்சந்தானி 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்தவர்கள் வினீத்திற்கு ஓரளவு பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய வினீத் 116 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இக்கட்டான நிலையில் விளையாடி வந்த இந்திய அணிக்கு, தமிழக வீரர் வினீத் ஆபத்பாந்தவனாக விளங்கினார்.

மேலும் படிக்க | IND vs ENG 4th T20: இந்தியா பிளேயிங் 11ல் சஞ்சு சாம்சன், அதிரடி வீரர் நீக்கம்? சூர்யவன்சி இல்லை!

131 ரன்களை குவித்த வி.கே. வினீத்

சதம் அடித்த பின்னரும் அதிரடி காட்டிய வினீத், 43வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசரடித்தார். அடித்து ஆட முயன்று, 45வது ஓவரில் வினீத் ஆட்டமிழந்தார். அவர் 136 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 131 ரன்களை பதிவு செய்திருந்தார்.

மற்ற பேட்டர்களும் ஓரளவு பங்களிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களை குவித்தது. தற்போது இந்திய அணி பந்துவீசி வருகிறது.

யார் இந்த வி.கே. வினீத்?

  • இந்த போட்டியை வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை கைப்பற்றும். இந்த முக்கிய போட்டியில் சதம் அடித்த வி.கே. வினீத், தமிழ்நாட்டின் வடசென்னை பகுதியைச் சேர்ந்தவர். 
  • பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் வி.கே. வினீத். 
  • வினீத் 2025ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் முத்தரப்பு தொடரில் முதல்முறையாக விளையாடினார். அத்தொடரில் இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிகள் விளையாடின.
  • 2025-26 வினோ மன்கட் கோப்பை தொடரில், வினீத் தமிழ்நாடு அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 488 ரன்களை குவித்தார், அதிகபட்சமாக 139 ரன்களை பதிவு செய்திருந்தார். அத்தொடரில் அதிக ரன்களை குவித்தவரும் இவரே.
  • அத்தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வினீத் 63 ரன்களை குவித்து கவனம் பெற்றார். தற்போது இலங்கையில் நடைபெறும் ஒருநாள் தொடரில் 2வது போட்டியில் களமிறங்கி 24 ரன்களை எடுத்திருந்த அவர், இன்றைய போட்டியில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
  • தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, வினீத்தை ரூ.2.8 லட்சத்திற்கு எடுத்துள்ளது. இடதுகை பேட்டரான இவர், ஆஃப்-ஸ்பின்னராகவும் அறியப்படுகிறார்.
  • வினீத் டிஎன்பிஎல் தொடரில் ரன்களை குவித்து, விரைவில் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்றும்; நிச்சயம் இந்திய சீனியர் அணிக்கும் விளையாடுவார் என்றும் இவரது பயிற்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | 3 RCB வீரர்களை தூக்கும் பிசிசிஐ.. கம்பீருக்கு நெருக்கடி! IND அணியில் நடக்கப்போகும் மாற்றம்

0
0
Report

மின்வெட்டு காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டதா? - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

Chennai, Tamil Nadu:

Minister Rajmohan Latest News : சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில், தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாளை ஒட்டி நடைபெறும் அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஜூலை 9) திறந்து வைத்தார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கினார்.

அதன் பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அறிவியல் தமிழ் தந்தை முஸ்தபாவின் பணி என்பது மிகவும் அளப்பரியது. அவரின் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை வைத்தது என்பது மிகவும் சிறப்புக்குரியது. பல ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்ததை தந்தவர்.

பள்ளிகளில் கட்சி நிகழ்வுகள் கிடையாது...

மேலும், பள்ளிகளில் எந்த கட்சியினராக இருந்தாலும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் மேற்கொள்ள தடை உள்ளது. அதையும் மீறி கட்சி சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதற்கு சட்டபூர்வமாக பதில் அளிப்போம்" என்றார்.

மேலும் படிக்க | டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! 25% சம்பள உயர்வு; கெடுபிடி ரூல்ஸ்..! விவரம் என்ன..?

மின்வெட்டால் பள்ளி விடுமுறையா...?

தொடர்ந்து பேசிய அமைச்சர், "மின்சார பிரச்சனை என்பதை தாண்டி பள்ளிகளில் எந்த சுழலிலும் தேவையின்றி  விடுமுறை விடக் கூடாது. காஞ்சிபுரத்தில் மின்வெட்டு காரணம் காட்டி தனியார் பள்ளி விடுமுறை விடப்பட்டதா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.

நோயாளிகளுக்கு பாதிப்பு வராது...

அதேபோல் மருத்துவமனைகளில் நோயாளிகளில் பாதிப்படையும் நிகழ்வுகள் ஏதேனும் நடைபெற்றிருந்தால் வருத்தம் தெரிவித்த அமைச்சர், அறிவியல் தமிழ் அறிஞர் முஸ்தபா பிறந்தநாள் நிகழ்ச்சி என்பதால் மருத்துவமனையை விட வேறு பொறுத்தமான இடம் இருக்காது என்பதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் வரும்போது நோயாளிகளுக்கு தொந்தரவு தரக்கூடிய எந்த நிகழ்வும் இல்லை. அதுபோன்ற நடவடிக்கை இருந்தால், இனி வரும் காலங்களில் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்கிறேன்" என்றும உறுதியாளித்தார்.

மேலும் படிக்க | TN Power Cut: தமிழகத்தில் நாளை (10-07-2026) மின்தடை.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட் இங்கே!

தனியார் பள்ளி கட்டண பட்டியல்

மேலும், "தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு தண்டனை என்ற முறையில் சில கடுமையான சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர்கள் நமது குழந்தைகள். ஆகையால் மனிதாபிமானத்தோடு மாணவர்களை கையாள வேண்டும்.

நீதிமன்றம் மற்றும் அரசின் சார்பில் ஏற்கனவே பள்ளியில் கட்டண பட்டியலை வெளிப்படையாக வைக்க வேண்டும் என கூறியுள்ளோம். அதன்படி வைக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற பல முன்னெடுப்புகள் எடுக்கப்படும். மாணவர்களுக்கு பலபேர் பயிற்சிகள் வழங்கப்படும்.

பெரம்பூர் மாணவி மாதவிடாய் பிரச்னை

சென்னை பெரம்பூரில் மாதவிடாய் காலத்தில் மாணவி ஒருவரை வெளியே நிற்க வைத்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "அது வேண்டுமென்று நடைபெற்ற சம்பவம் அல்ல, மாணவியின் பெற்றோர்கள் வர தாமதமாகிவிட்டது. மாணவி அன்று வீட்டுக்கு செல்வதற்காக காத்திருந்தார்" என விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க | தொடரும் பவர் கட்... எப்போது விடிவுகாலம்? - சிடிஆர் நிர்மல் குமார் சொன்ன பதில்

0
0
Report

தொடரும் பவர் கட்... எப்போது விடிவுகாலம்? - சிடிஆர் நிர்மல் குமார் சொன்ன பதில்

Chennai, Tamil Nadu:

Minister CTR Nirmal Kumar : சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் தொடரமைப்பு கழக கட்டடத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்  முன்னிலையில் தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டார்..

பின்னர் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடர் மின்வெட்டு இருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "இது சம்பந்தமாக ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். எதனால் மின் தட்டுப்பாடு வருகிறது என்று சொல்லி இருக்கிறோம்.

மின்தடை ஏன்...? அமைச்சர் விளக்கம்

ஆங்காங்க இருக்கக்கூடிய குறைபாடுகளை வைத்து நிவர்த்தி செய்து வருகிறோம். ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு இருக்கிறது. டிரான்ஸ்பாரம் பிரச்சனையா அல்லது வேறு என்ன பிரச்சனை என்பது குறித்து ஆராய்ந்து சரி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் படிக்க | திமுகவும் தவெகவும் ஒரே அணியில் இருக்க வேண்டும்! திருமாவளவனின் கருத்தால் பரபரப்பு!

பாலவாக்கத்தில் கொஞ்சம் நீண்ட நேரம் ஆனது, அதன் பிறகு அதை சரி செய்து முடித்தார்கள். அதிகமான ஒப்பந்த தொழிலாளர்களை எடுத்து பிரச்சினையை சரி செய்து வருகிறோம். 

அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எடுத்து பிரச்சினையை சரி செய்து வருகிறோம். விரைவில் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மேம்படுத்தினால் தான் நிரந்தர தீர்வு கொடுக்கும் முடியும், அதற்கு சில காலங்கள் எடுக்கும்.

ஐஐடி உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்

நமக்கு நல்ல செயல்முறை மற்றும் கொள்கைகள் வேண்டும். அது இல்லாமல் புது தொழில்நுட்பங்கள் நிறைய இருக்கிறது, சர்வதேச அளவில் மானிட்டர் செய்ய வேண்டுமா?. புது டெக்னாலஜி வருகிறது, புது மீட்டர் வருகிறது. வேறு ஏதாவது டெக்னாலஜி வருகிறதா?, சோலாரில்  புது டெக்னாலஜி, இதெல்லாம் கையாள்வதற்கு நல்ல ஒரு டெக்னாலஜி குழு வேண்டும். 

அது இங்கிருக்கும் மின்சாரத் துறையின் மூத்த பொறியாளர்களும் ஐஐடியுண் இணைந்து வேலை செய்வார்கள். இதில் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது, உடனடியாக தீர்வு வேண்டும் என்று ஏற்கனவே ஐஐடி குழுவுடன் ஆலோசனை செய்திருக்கிறோம். அதெல்லாம் சேர்த்து வைத்து அதற்கான தீர்வை வரும் காலங்களில் கொடுப்பார்கள்.

லாபம் இருந்தால்தான் மக்களுக்கு நலன்... 

எது எதெல்லாம் உடனடியாக தேவையோ உடனடியாக அதை குறிப்பிடுவோம். அது இல்லாமல் மற்றவை டெக்னாலஜி வகையில் ஆராய்வோம். நிறைய டெக்னாலஜி உள்ளிருக்கிறது அந்த டெக்னாலஜியை கொண்டு வருவோம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலையை இன்றைக்கே தொடங்கி இருக்கிறோம். 
 
இதற்கு நாம் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் செயல்முறை மற்றும் கொள்கைதான். அது இல்லாமல் புது தொழில்நுட்பம் இருந்தால் அதை கண்காணிப்பதற்கு நல்ல தொழில்நுட்பம் வேண்டும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறுவனத்திற்கு உதவியாக இருந்தாலே அனைவருக்கும் உதவியாக இருக்கும். நிறுவனத்தை மேம்படுத்துவதற்காகதான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். நிறுவனம் மேம்படுத்தினாலே பொதுமக்களுக்கான லாபமாக இருக்கும்..

மின்சாரத்துறையில் ஆள் சேர்ப்பு

ஸ்மார்ட் மீட்டரில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை  டெக்னாலஜி வகையில் நாம் அதில் உறுதியாக இல்லை. இந்த வருடம் 15 ஆயிரம் நபர்களை வேலைக்கு எடுக்கிறோம். ஐந்தாயிரம் பழைய கேங்மேன் வேலைக்கு எடுக்கிறோம். ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குள்  விரைவாக முடிக்கின்ற பணியில் இருக்கிறோம்.

மேலும் படிக்க | திருநெல்வேலி: இடைநிலை, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்

அதுவரை ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து சரி செய்து வருகிறோம். மின்சாரத் துறைக்கு பணியாளர்களை எடுப்பது கண்டிப்பாக தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி வழியாக தான் நடக்கும்.

வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டது போல முறைகேடு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடைபெற்று வருகிறது. உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நிர்மல் குமார் மேடை பேச்சு

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "மின்சார வாரியத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உன்னிப்பாக நகர்த்தி வருகிறோம், நமக்கு முக்கியமான காலகட்டம், நமக்கு தேவையான ஒன்று. நமக்கு மிகப்பெரிய செயல்பாடுகள் நடக்கின்ற மின்சார வாரியத்தில் எல்லா சேவையும் கொடுத்து வருகிறோம்.

உலகத்தரம் வாய்ந்த ஒரு செயல்பாடு, பாலிசி வேண்டும். புதிய டெக்னாலஜி செயல்படுத்துவதற்கு ஒரு குழு வேண்டும். அதற்காக முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் இது. ஒவ்வொரு இடத்திலும் Vendors வேலை செய்கிறார்கள், ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு அனுபவமுள்ள நபர்கள் கொண்ட ஒரு குழு வேண்டும்" என்றார்.

ஐஐடி இயக்குநர் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி இயக்குனர் காமகோடி, "தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியும் சூரிய உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. அதனை சேமிப்பதற்கு வழிமுறைகளை அரசுக்கு இந்த ஒப்பந்தம் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகை செய்கிறோம்.

ஹைட்ரஜன் பயோகேஸ் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது , அதில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் தமிழக அரசுடன் கையெழுத்து இடுகிறோம்" என பேசியிருந்தார்.

மேலும் படிக்க | ரூ.5,000 கோடி வராது... ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட்டால்... விஜய்க்கு பாஜக செக்?

0
0
Report
Advertisement

சேலம் மக்களுக்கு சூப்பர் செய்தி: இனி 24 மணி நேரமும் குடிநீர் வசதி.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

Salem, Tamil Nadu:

சேலம்: சேலம் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லாமல் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையவுள்ள இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இதோ:

திட்டத்தின் நோக்கம்: சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் 10.83 லட்சம் (10,83,506) மக்கள் பயன்பெறும் வகையில், 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்குதல்.

திட்ட மதிப்பு: ஆரம்பத்தில் ₹758.13 கோடியாக இருந்த இத்திட்டத்தின் மதிப்பு, தற்போது ₹1,035.81 கோடியாக திருத்தியமைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த நிறுவனம்: இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் பராமரிக்கவும் M/S. SUEZ Project International Private Limited என்ற சர்வதேச நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பணிகளுக்கான டைம்லைன்:

  • முதல் ஆண்டு: தற்போதுள்ள குடிநீர் உட்கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்படும்.
  • அடுத்த 4 ஆண்டுகள்: புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் ₹1,035.81 கோடி மதிப்பில் நடக்கும்.
  • அடுத்த 25 ஆண்டுகள்: குடிநீர் விநியோகத்தை சீராகத் தொடரவும், பராமரிக்கவும், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும் இந்நிறுவனத்திற்கு ₹3,258.73 கோடி மதிப்பில் பராமரிப்புப் பணி வழங்கப்பட்டுள்ளது.

நிதிப் பங்கீடு:

  • மத்திய அரசின் அம்ரூட் (AMRUT 2.0) திட்டம் – ₹227.44 கோடி
  • தமிழ்நாடு அரசு – ₹393.92 கோடி
  • ஒப்பந்த நிறுவனம் – ₹414.25 கோடி

மேலும் படிக்க | பள்ளி, கல்லூரிகளில் CM விஜய் பிறந்தநாள் விழா.. அரசிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்திரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்

சேலம் மாநகராட்சியில் குடிநீர் உட்கட்டமைப்புகளை சீரமைப்பு செய்தும், புதிய உட்கட்டமைப்புகளை உருவாக்கியும், சேவம் மாநகரில் வசிக்கும் 10,83,506 மக்கள் பயன்பெறும் வகையில் மாநகரம் முழுவதும் 24 மணி நோமும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அரசாணை எண், GO (MS) NO.39 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA2) துறை மூலம் நாள் 08.03.2024-ன்படி மதிப்பீட்டு தொகை ரூ.758.13 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி ஒப்பந்தப்புள்ளி கோரி பல கட்டங்களில் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு சூறைந்தப்பட்சு ஒப்பந்த புள்ளி அளிந்த M/S.SUEZ Project International Private Limited என்ற நிறுவனத்தின் மூலம் இத்திட்டத்தினை நிறைவேற்ற சேலம் மாநகராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியதன் பேரில் மேற்படி நிறுவனத்திற்கு ஏற்பளிப்பு கடிதம் (LO)08.02.2026 அன்று வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களால் இத்திட்டத்திற்கான திருத்திய மதிப்பீட்டிடின்படி ரூ.1035.81 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை எண். G.O. (4D) NO.10 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MCS) துறை நாள்: 04.08.2026 அன்று வெளியிடப்பட்டது. 

மேற்காணும் தொகையில் ரூ.22744 கோடி இந்திய அரசால் அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழும். ரூ.393.92 கோடி தமிழ்நாடு மாநில அரசால் பங்களிப்பு செய்யவும், மீதமுள்ள ரூ.414.25 கோடி தொகை இத்திட்த்தினை செயலாக்கம் செய்ய தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பங்களிப்பு செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அரியலூர்: 8ம் வகுப்பு படித்தவரா? மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை.. தமிழக அரசு அறிவிப்பு

மேற்படி அரசாணையின்படி சேலம் மாநகராட்சிக்கும் M/S.SUEZ Project International Freate Limited என்ற நிறுவனத்திற்கும் இடைய 19.05.2025 அன்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

சேவம் மாநகரில் இத்திட்டத்தினை செயபடுத்திட ஏதுவாக தற்போது உள்ள குடிநீர் சம்பந்தமான உட்கட்டமைப்பு வசதிகளை முதல் வருடத்தில் ஆய்வு செய்து அடுத்துள்ள நான்கு ஆண்டுகளில் குடிநீர் திட்டம் தொடர்பான தற்போது உள்ள உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், புதிய வசதிகள் ஏற்படுத்திடவும், ரூ.1035.61 கொடி மதிப்பீட்டிலான பணிகளை ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ளும்.

மேலும் அந்நிறுவனம் மூலமாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு அத்திட்டத்தின் தொடர் பராமரிப்பு பணிகள் ரூ.3258.73 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

இப்பராமரிப்பு காலத்தில் குடிநீர் விநியோகத்தினை திறன்மிக்க வகையில் கையாளவும், குடிநீர் விநியோகம் தொடர்பான பொதுமக்களின் குறைகளை உடனுக்குஅன் களையவும், உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை இந்நிறுவனம் சிறப்பான முறையில் மேற்கொள்வதை உறுதி செய்யவும் இலக்குகள் நிர்ணயித்து செயல்படுத்திட இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு. இத்திட்டத்தினை செயலாக்கம் செய்திட திரு. ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. அரசு கூடுதல் தலைமை செயலாளர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை., திரு.ப. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. நகாட்சி நிர்வாக இயக்குனர் அவர்கள், திரு. சிரண்ஜித் சிங் காலோன் இ.ஆ.ப. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் அவர்கள் மற்றும் திரு. பியாரே பவுலியாக் நிர்வாக துணை தலைவர் M/S.SULL Project International Private Limited ஆகியோரது முந்னிலையில் திரு. வலித் ஆதித்ய நீலம் இ.ஆ.ப, சேலம் மாநகராட்சி ஆவண அவர்களாலும், திரு. ரஸ்மி ரஞ்ஜன்ரே. தலைமை நிர்வாக அலுவலர். M/S.SULZ Project International Private Limited அவர்களாலும் 19.08.2028 அன்று தலைமை செயலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மேலும் படிக்க | தமிழ்நாடு முக்கிய செய்திகள் LIVE: நாளை கரூர் செல்லும் CM விஜய்.. ஓணம் பண்டிக்கைக்கு சிறப்பு ரயில்கள்!

0
0
Report

இன்றிரவு ஈரானை கடுமையாக தாக்குவோம்... முன்கூட்டியே டிரம்ப் எச்சரிக்கை - அதிகரிக்கும் பதற்றம்

Washington, District of Columbia:

US Iran War : இன்றைய நேட்டோ உச்சி மாநாட்டில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியபோது, "நேற்றிரவு ஈரானை கடுமையாகத் தாக்கினோம். அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இன்று இரவும் அவர்களை கடுமையாக தாக்கப் போகிறோம்" என்றார்.

மேலும் அவரது பேச்சில், "ஈரான் மிகவும் மோசமாக நடந்துக்கொள்கிறது. நிலைமை எப்படி அமைகிறது என்பதை பார்ப்போம். ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக மக்களை கொன்று வருகிறது" என்றார்.

ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்த நிலையில், வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் தடைப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அமைதி ஒப்பந்தம் ரத்து... குண்டை போட்ட டிரம்ப் - இனி அடுத்து என்ன நடக்கும்?

மேலும் படிக்க | ஈரானில் 80 இலக்குகள் மீது அட்டாக், வெறிகொண்டு தாக்கிய அமெரிக்கா: டிரம்ப் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்!

மேலும் படிக்க | மீண்டும் வெடித்தது போர்! ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்! மத்திய கிழக்கில் பதற்றம்!

0
0
Report

சென்னை - குற்றாலம் சுற்றுலா... தமிழ்நாடு அரசின் ஸ்பெஷல் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம்?

Melagaram, Tamil Nadu:

Chennai - Courtallam TTDC Tour Package : தென்மேற்கு பருவமழை காலகட்டம் தற்போது உச்சத்தில் உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் மழை அடித்துக் கொட்டுகிறது. கேரளாவில் மழை பெய்கிறது என்றால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை அதிகம் இருக்கும்.

அதிலும் குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால மக்களுக்கு சீசன் தொடங்கிவிடும். இந்த வருடன் ஜூன் 4ஆம் தேதி முதல் குற்றால சீசன் தொடங்கிவிட்டது. நடப்பு சீசனில் அருவிகளில் தண்ணீர் இல்லாமலும் இருந்திருக்கிறது, அதிகளவில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் குற்றாலத்திற்கு தினம் தினம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து வருகிறது.

குற்றலாத்தில் அனுமதி உள்ள அருவிகள்

  • மெயின் அருவி
  • ஐந்தருவி
  • பழைய குற்றாலம்
  • புலியருவி
  • சிற்றருவி

இவை ஒருபுறம் இருக்க, சென்னையில் இருந்து குற்றாலம் செல்ல விரும்பும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் (TTDC)சிறப்பு சுற்றுலா திட்டத்தை வைத்துள்ளது. சென்னை - குற்றாலம் மூன்று சுற்றுலா திட்டத்தில் எந்தெந்த இடங்களை பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்?, என்னென்ன வசதிகள் கிடைக்கும்?, சுற்றுலாவுக்கான கட்டணம் எவ்வளவு? உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | சென்னையில் இருந்து ஒரே ஒரு நாள்... TTDC-ன் சூப்பரான டூர் பிளான்... கட்டணம் எவ்வளவு?

முதல் நாள் - புறப்பாடு

சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து முதல் நாள் மாலை 4.30 மணிக்கு சுற்றுலா பேருந்து புறப்படும்.

இரண்டாம் நாள் - அருவிகளுக்கு விசிட்

  • காலை 5 மணிக்கெல்லாம் குற்றாலத்தை அடைந்துவிடலாம். குற்றலாத்தில் ரம்மியமான காலையை நீங்கள் கண்டு ரசிக்கலாம். அங்குள்ள ஹோட்டல் தமிழ்நாடு அறை ஒதுக்கப்படும். அங்கு செக்-இன் செய்து சுற்றுலாவுக்கு புறப்படலாம். 
  • காலை 9 - 10 மணிக்கு காலை உணவு வழங்கப்படும். 
  • காலை 10 மணிக்கு மெயின் அருவிக்கு புறப்படலாம். அங்கு மதியம் 12 மணிவரை நீங்கள் குளிக்கலாம், கடைகளில் வேண்டிய பொருள்களை வாங்கலாம். அங்கு தேவையென்றால் நீங்களே உணவுப் பொருள்களை வாங்கி உண்ணலாம். குற்றலாநாத சுவாமி கோவிலிலும் தரிசனம் செல்லலாம்.
  • மதியம் 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஐந்தருவிக்கு குளிக்க செல்லலாம். மதியம் 12.20 மணியில் இருந்து 1.20 மணிவரை அங்கு குளிக்கலாம். அடுத்து ஹோட்டலுக்கு திரும்பி மதிய உணவை சாப்பிடலாம்.
  • மதியம் 2.30 மணிக்கு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு பழைய குற்றலா அருவிக்கு புறப்படலாம். மதியம் 3 மணிமுதல் மாலை 4 மணிவரை அங்கு குளிக்கலாம். பின்னர் அங்கிருந்து ஹோட்டலுக்கு திரும்பி, இரவு உணவை அங்கு சாப்பிடலாம்.

மேலும் படிக்க | மதுரைக்கு 3 நாள் சுற்றுலா... மலை ஏறலாம், அருவியில் குளிக்கலாம் - எவ்வளவு கட்டணம்?

மூன்றாம் நாள் - செண்பகாதேவி மலையேற்றம்

  • காலை உணவை முடித்துவிட்டு, 8.30 மணிக்கு செண்பகாதேவி என்ட்ரி பாயிண்டுக்கு சென்றுவிடலாம். காலை 9 மணி முதல் செண்பகாதேவியை மலையில் ஏறி, மதியம் 12.30 மணிக்கு கீழே வந்துவிடலாம்.
  • அதன்பின் ஹோட்டலுக்கு புறப்பட்டு மதியம் உணவை சாப்பிட்டு, மதியம் 2 மணிக்கு ஹோட்டலில் இருந்து செக்-அவுட் செய்து ஸ்ரீவல்லிபுத்தூர் கோவிலை நோக்கிச் செல்லலாம்.
  • மாலை 4.30 மணிக்கு கோவிலை சென்றடைந்து, மாலை 6 மணிவரை கோவிலில் தரிசனம் மேற்கொள்ளலாம்.

எவ்வளவு கட்டணம்?

அதன்பின் அங்கிருந்து சென்னை நோக்கி புறப்படலாம். வழியில் இரவு உணவை சாப்பிடலாம். அடுத்த நான்காம் நாள் காலை 5 மணிக்கு சென்னை வந்தடையலாம்.

செண்பகாதேவி மலையில் அருவியும் இருக்கிறது. இங்கு பயணிகளால் எளிதாக பயணிக்க முடியாது. வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். எனவே, இதன்மூலம் பயணிப்பவர்களுக்கு அந்த கவலையில்லை.

பேருந்து, தங்குமிடம், சுற்றுலா வழிகாட்டி ஆகிய வசதிகளை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு வாரியம் (TTDC) வழங்குகிறது. இதற்கு மொத்தம் 8,400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

1800-4253-1111 என்ற இலவச எண், support@ttdconline.com என்ற மின்னஞ்சல் மூலம் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தை தொடர்புகொள்ளலாம். இதன் தேதி உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | சென்னை - கொல்லிமலை: 2 நாள் இன்ப சுற்றுலா... தமிழக அரசின் ஏற்பாடு - கட்டணம் எவ்வளவு?

0
0
Report
Advertisement

ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி: நாளை (ஜூலை 9) சேலம் மயிலாடுதுறை ரயில் இயக்கத்தில் மாற்றம்

Karur, Tamil Nadu:

கூரமங்கலம், சேலம்: ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி! கரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளப் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (ஜூலை 9) அன்று சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.

மயிலாடுதுறை–சேலம் எக்ஸ்பிரஸ்

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்:

மயிலாடுதுறை சந்திப்பிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை–சேலம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16811), விராரக்கியம் நிலையம் வரை மட்டுமே பயணிக்கும். இந்த ரயில் வழக்கத்தை போல விராரக்கியம் மற்றும் சேலம் சந்திப்புக்கு இடையே இயக்கப்படாது. 

அதே பொல், சேலம் சந்திப்பிலிருந்து நாளை மதியம் 2.05 மணிக்குக் கிளம்ப வேண்டிய சேலம்–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16812), கரூர் சந்திப்பிலிருந்து மதியம் 3.40 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கும். இந்த ரயில் சேலம் சந்திப்பு மற்றும் கரூர் சந்திப்புக்கு இடையே இயக்கப்படாது. இது கரூர் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி மயிலாடுதுறை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.

மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை (09-07-2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. முழு லிஸ்ட்!

பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ்

பாலக்காடு டவுன் நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16844), கரூர் சந்திப்புடன் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும். 

பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு, வழக்கமான சேவையைப் போலவே அதே நிறுத்தங்களுடன், கரூர் முதல் திருச்சி சந்திப்பு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இது இயக்கப்படும்.

கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து காலை 8 மணிக்குக் கிளம்பும் கோயம்புத்தூர்–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16322), கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் இடையே போத்தனூர், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

மேலும் படிக்க | தமிழக கோயில்களில் சிரமமில்லா தரிசனம், திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு: அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்ஸ்

இதன் விளைவாக, இந்த ரயில் கோயம்புத்தூர் வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, இங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகலூர், கரூர், பாளையம் மற்றும் எரியோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், போத்தனூர் மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில் தடங்களில் பயணிக்க திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி: 839 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்? முழு விவரம்

0
0
Report
Advertisement
Advertisement
Back to top