பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
வெள்ளை அறிக்கையை வெளியிட்டது தவெக அரசு... முக்கிய அம்சங்கள் என்னென்ன?
Chennai, Tamil Nadu:White Paper On Tamilnadu Finances : முதலமைச்சர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றபோது, பதவியேற்பு மேடையிலேயே தமிழ்நாட்டின் தற்போதை நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அறிவித்தார்.
அந்த வகையில், முதலமைச்சர் விஜய் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் மரியவில்சன், தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். தொடர்ச்சியாக வெள்ளை அறிக்கை குறித்து அவர் விளக்கம் அளித்து வருகிறார்.
சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ பொறுப்பு ராஜினாமா... தவெகவில் இணைகிறாரா...?
Chennai, Tamil Nadu:C Vijayabhaskar Resignation : முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதன் கடிதத்தை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் வழங்கினார். இதனால், அதிமுகவின் எம்எல்ஏ எண்ணிக்கை 42 ஆக குறைகிறது.
கேரளாவை மிரட்டும் ஷிகெல்லா தொற்று... தமிழ்நாட்டில் என்ன நடவடிக்கை? அமைச்சர் அருண்ராஜ்
Namakkal, Tamil Nadu:Minister Arunraj Latest News : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 497 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுபாலன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டார். அரசு அதிகாரிகள, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ரேஷன் கார்டு வழங்குதல் தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு உரம் வழங்குதல் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவி வழங்குதல், கல்வி உதவித்தொகை தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை வழங்குதல், தோட்டக்கலை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 1.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
497 பேருக்கு நலத்திட்ட உதவி...
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், "திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 497 பயனாளிகளுக்கு ரூபாய் 1.76 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் நடக்கும் நிகழ்வு இனிதே நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு அரசு தான் தமிழக முதலமைச்சர் முன்னெடுத்துட்டு இருக்கிறார்.
இந்த நலத்திட்டம் கொடுக்கிறோம் என்றால், இது எல்லாமே மக்களோட வரி பணம் தான். அந்த மக்களோட வரி பணத்தை முறையாக அந்த மக்களுக்கு திருப்பி செலுத்தும் நேரம். திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இது, என்னுடைய முதல் நிகழ்வு. நலத்திட்ட உதவிகள் 497 பேருக்கு வழங்குவதில் உண்மையாகவே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
நோய் பரவாமல் தடுப்போம்...
இது ஆரம்பம் தான். கூடிய விரைவில் இன்னும் நிறைய விண்ணப்பங்கள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக நாங்கள் பரிசீலித்து, மக்களுக்கு உண்டான, மக்களுக்கு அவர்களுக்கு உரிமையான அந்த நலத்திட்டங்களை விரைவில் கொண்டு சேர்ப்பேன்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் பெருந்தொற்று நோய்கள் இப்போது அதிகமாக பரவிவரும் நிலையில், அந்த அச்சுறுத்தல் இருக்கும் இந்த காலகட்டத்தில், இதற்கான முன்னெடுப்புகள் நாங்கள் கண்டிப்பாக எடுப்போம். நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் நம் உடன் இருக்கிறார். எந்தெந்த விதத்திலும் இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ, அதை அனைத்தையும் எடுப்போம்.
ஷிகெல்லா பாக்டீரியா என்றால் என்ன?
ஷிகெல்லா பாக்டீரியா (Shigella) என்பது Gastroenteritis தான். உணவு சரியான பாதுகாப்பு இல்லாத உணவுப் பொருட்கள் உட்கொண்டதால் வந்திருக்கும். இப்போது பார்த்தீர்கள் என்றால், உணவுப் பாதுகாப்பு துறையும் நமது சுகாதாரத்துறையின் கீழ்தான் இருக்கிறது.
அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடமும் நாங்கள் ஏற்கனவே பேசி உள்ளோம். கண்டிப்பாக அனைத்து உணவு விடுதிகளிலும் பாதுகாப்பான, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும், அதை உறுதி செய்ய வேண்டும் என்ற ஒரு உத்தரவையே நாங்க போட்டுள்ளோம்.
கூடுதல் பணியிடங்கள் தேவை உள்ளது
கண்டிப்பாக படிப்படியாக எங்கெங்கெல்லாம் இந்த மாதிரி பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற உணவு விடுதிகள் இருக்கிறதோ அவை அனைத்திற்கும் நாங்க ஒரு சாம்பிள்ஸ் எடுத்து, அது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக உத்தரவும் நாங்கள் போட்டுள்ளோம்" என்றார். கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா வேகமாக பரவி வருகிறது. சிறார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதை குறிப்பிட்டே அமைச்சர் அருண்ராஜ் பேசி உள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் கண்டிப்பாக தொடரும். மருத்துவர்களின் பணியிடங்களைப் பொறுத்தவரைக்கும், இப்போது இருக்கிற sanctioned இடங்கள் சுமார் 96.97 விழுக்காடு நிரம்பி உள்ளது. இருந்தாலும், கூடுதல் பணியிடங்கள் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் நான் ஒற்றுக்கொள்கிறேன்.
அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும்...
அதை முதலமைச்சரிடம் கலந்து பேசி, எந்தெந்த மருத்துவமனைகள், இப்போது மாவட்ட மருத்துவமனைகள், சில இடங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட உயர் சிறப்பு வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு எப்படி உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் பேசி அதற்கான உத்தரவை பெற்று நடவடிக்கை எடுப்போம்.
கடந்த அறுபது வருடங்களாக மாறி மாறி இந்த ரெண்டு கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டு, ஒரு புற்றுநோய் மாதிரி தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறையிலும், நிர்வாகத்திலும் படர்ந்திருக்கு. நோய் பரவி இருக்கிறது. நீங்கள் பாருங்கள், தலைமை சரியாக இருந்தால் அனைத்து துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் கண்டிப்பாக நேர்மையாக தான் செயல்பட வேண்டும். அதற்கு எந்தவித ஒரு எஸ்கேப்பும் (escape) கிடையாது.
மருத்துவர்களுக்கு அறிவுரை
படிப்படியாக பாருங்கள், அனைத்து துறையிலும் ஊழல் குறையும். இந்த ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவ துறையில் மட்டுமல்ல, பல பல்வேறு துறைகளிலும் பணி நிரந்தரம் தொடர்பான முடிவுகளை முதலமைச்சரிடம் பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம்.
மல்லசமுத்திரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை இன்று ஆய்வு செய்தேன். காலையில், மக்கள் அவர்களின் தேவைகளை சொல்லி இருந்தார்கள். முதலில் மருத்துவமனை சுத்தமாக இருக்க வேண்டும். அந்த மருத்துவமனையை பார்த்தீர்கள் என்றால், அங்கு நிறைய கட்டடங்கள் எல்லாம் இடிந்து, குப்பைகள் எல்லாம் இருந்தது. சுத்தமாகவே இல்லை. இப்போது நாங்கள் சொல்லியிருக்கோம். பொதுப்பணித்துறை பொறியாளர்களை கூப்பிட்டு பேசி இருக்கிறோம்.
மருத்துவர்களும், நோயாளிகளிடம் மிக கனிவாக, மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும். குறிப்பாக, 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சுகாதார நிலையம், இரவு நேரத்தில் வந்தாலும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, அவங்களுக்கு தேவையான சிகிச்சையை செய்து கொடுக்க வேண்டும். நான் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன்" என்றார்.
மேலும் படிக்க | CM விஜய் அடித்த சிக்ஸர்... சொல்லாத வாக்குறுதியை நிறைவேற்றிய தவெக - மாஸ் அறிவிப்பு
4 நாளில் 100 மில்லியன்... ஆரம்பமே அமர்களம்! FIFA ஒளிப்பரப்பில் 'Z' பிரம்மாண்ட சாதனை
Mumbai, Maharashtra:பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் வார இறுதியில் பல்வேறு தளங்கள் வாயிலாக 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து ஜீ (Z) சாதனை படைத்துள்ளது. தொடக்க விழா உள்பட முதல் நான்கு நாள்களில், நேரலை போடடிகளை பார்த்த ஒவ்வொரு பார்வையாளரின் சராசரி நேரம் 190 நிமிடங்களுக்கும் அதிகமாக பதிவாகி Zee5 தளம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
CM விஜய் அடித்த சிக்ஸர்... சொல்லாத வாக்குறுதியை நிறைவேற்றிய தவெக - மாஸ் அறிவிப்பு
Chennai, Tamil Nadu:Muthalamaicharin Kalai Unavu Thittam Extension: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்… pic.twitter.com/jGRdHYaWoG
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 15, 2026
குறிப்பாக தந்தை பெரியாரின் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கைக்கோர்த்த Peko - Kalp; சிறு நிறுவனங்களின் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு புதிய கூட்டணி
New Delhi, Delhi:சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிதி மற்றும் வணிகத்தை மேம்படுத்தவும், மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்கவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெகோ (Peko) மற்றும் கல்ப் (Kalp) நிறுவனங்கள் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அடுத்த தலைமுறை டிஜிட்டல் வணிக உள்கட்டமைப்பை உருவாக்க பெகோ மற்றும் கல்ப் நிறுவனங்கள் கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகளாவிய சந்தைகளில் உள்ள வங்கிகள், இலவச மண்டலங்கள் (Free Zones), அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், Peko நிறுவனத்தின் வணிக சூப்பர்-பிளாட்ஃபார்முடன் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் (Distributed-ledger), புரோகிராமிங் செய்யக்கூடிய பணம் மற்றும் டிஜிட்டல் சொத்து உள்கட்டமைப்புகள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Peko - Kalp கூட்டணியின் நோக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி வணிக மேலாண்மை சூப்பர்-பிளாட்ஃபார்ம் Peko. டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் Kalp. இவை இரண்டும் இன்று (ஜூன் 14) ஒரு முக்கிய மூலோபாய கூட்டணியை அறிவித்துள்ளன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) அடுத்த தலைமுறை நிதி மற்றும் வணிகத்திற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு அடித்தளத்தை உருவாக்குவதே இக்கூட்டணியின் நோக்கமாகும்.
கிடைக்கப்பெறும் வசதிகள்
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி (MoU), KALP நிறுவனத்தின் டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் Peko தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், Peko நேரடியாகவும் அதன் நிறுவன கூட்டாளிகள் மூலமாகவும் சேவை வழங்கும் வணிகங்களுக்கு, அனுமதி பெற்ற விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் (DLT), புரோகிராமிங் செய்யக்கூடிய digital-cash, digital-asset வாலட், முக்கிய மேலாண்மை சூழல் மற்றும் டோக்கனைசேஷன் உள்கட்டமைப்பு போன்ற அதிநவீன வசதிகள் கிடைக்கப்பெறும். இந்த ஒப்பந்தம், இரு நிறுவனங்களின் தனித்துவமான பலங்களை ஒன்றிணைக்கிறது.
Peko தளத்தின் சேவை
Peko நிறுவனம், இன்வாய்சிங், பணம் செலுத்துதல், ஊதியம் (Payroll), நிறுவன உருவாக்கம், கார்ப்பரேட் பயணம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில் நவீன வணிகங்களின் இயக்க அமைப்பாக (Operating System) வேகமாக உருவெடுத்துள்ளது.
Kalp நிறுவனம் வழங்கும் சேவை
Kalp நிறுவனம், இத்தகைய தளங்களுக்குத் தேவையான அடிப்படை டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குகிறது. இது பார்ட்னர் நிறுவனங்கள் தங்களின் சொந்த பிராண்டின் கீழ் மேம்பட்ட digital-asset மற்றும் புரோகிராமிங் செய்யக்கூடிய நிதிச் சேவைகளை வழங்க வழிவகுக்கிறது.
முன்னர் பெரிய நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) அன்றாடம் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதே இந்த இரு நிறுவனங்களின் கூட்டு இலக்காகும்.
சிறு, நடுத்தர பொருளாதாரம் அதிவேகமடையும்...
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து Peko நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான (CEO) காஷிப் அகமது கான், "நாங்கள் Peko தளத்தை உருவாக்கியபோது, வணிகச் செயல்பாடுகளை எளிதாக்குவது மட்டுமே எங்களின் நோக்கமாக இருக்கவில்லை. அதற்குப் பின்னால் இருக்கும் உள்கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்ய விரும்பினோம்.
Kalp உடனான இந்த ஒத்துழைப்பு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை சாதாரண வணிகங்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உதவுகிறது. இது சிறு, நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரத்தை அதிவேகமாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதற்கான தீர்க்கமான படியாகும்" என்றார்.
எதிர்காலத்திற்கான திட்டமிடல்
Kalp டிஜிட்டல் இன்ஃப்ரஸ்ட்ரக்சர் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் தபன் சங்கல், "அடுத்த 10 ஆண்டுகளில் வணிகங்கள் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையே மாறப்போகிறது. இந்த மாற்றத்தை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்னின்று நடத்த வேண்டும். Peko உடன் இணைவதன் மூலம், கோடிக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரம்பிற்குள் அந்த எதிர்காலத்தைக் கொண்டு வருகிறோம்" என குறிப்பிட்டார்.
அன்றாடப் பயன்பாட்டுக்கு...
Kalp நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மிருத்யுஞ்ஜய (ஜே) பிரஜாபதி, "பெகோ போன்ற பரந்த வரம்பைக் கொண்ட ஒரு தளத்துடன் கைகோர்ப்பதன் மூலம், எங்கள் உள்கட்டமைப்பு உண்மையான அளவில் வணிகங்களைச் சென்றடைகிறது. மேம்பட்ட digital-asset உள்கட்டமைப்பை வெறும் வாக்குறுதியாக வைக்காமல், நிஜப் பொருளாதாரத்திற்கான அன்றாட பயன்பாடாக நாங்கள் மாற்றுகிறோம்” என பேசினார்.
முதற்கட்ட திட்டம் என்ன?
முதற்கட்டமாக, இரு நிறுவனங்களும் இணைந்து இதன் பாதுகாப்பு மற்றும் வணிக மாதிரிகளை மதிப்பீடு செய்து, படிப்படியாக Peko அமைப்பில் இந்தச் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளன.
இந்த ஒத்துழைப்பு ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இந்தியா மற்றும் பிற சந்தைகளில் உள்ள Peko நிறுவனத்தின் நெட்வொர்க்குகளுக்கு விரிவுபடுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Dubai Gold Price: துபாயில் திடீரென உயர்ந்த தங்க விலை, 24k 22k 18k விலை எவ்வளவு?
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... மகளிர் டி20 உலகக் கோப்பையில் முதல் வெற்றி
England:INDW vs PAKW T20I WC : மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, அதன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
It's all blue in
— BCCI Women (@BCCIWomen) June 14, 2026
Scorec https://t.co/1tfRc3jcrX#TeamIndia | #WomenInBlue pic.twitter.com/slDhUJnXY5
முடிவுக்கு வருகிறது போர்... ஹார்முஸ் நீரிணை உடனே திறக்கப்படும் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு
Washington, District of Columbia:US Iran Deal, Donald Trump Announcement : மத்திய கிழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியில் இருந்து நீடித்து வரும் போர் பதற்றத்தை ஒருவழியாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்துவிட்டார் என்றே சொல்லலாம்.
சனிக்கிழமையான இன்று (ஜூன் 13) அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்திட இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட உடனே ஹார்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் திறந்துவிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது Truth Social சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் அவரது பதிவில், "இந்த ஒப்பந்தம் நாளை கையெழுத்திடப்பட உள்ளது. கையெழுத்தான உடனேயே ஹார்முஸ் ஜலசந்தி அனைவரின் பயன்பாட்டுக்கும் திறக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2016ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஈரான் உடன் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு இது நேர் எதிரானது என்றும்; ஒபாமா செய்துகொண்ட ஒப்பந்தம் என்பது ஈரான் அதன் அணு ஆயுதம் கனவை நோக்கி வேகமாக்கும் என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விமானப்படை விமானம் விபத்து : 5 அதிகாரிகள் பலி - அசாமில் நடந்தது என்ன?
Parokhuwa, Assam:Assam IAF Aircraft Accident : அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை நிலையத்தில், இந்திய விமானப்படைக்கு (IAF) AN-2 சொந்தமான போக்குவரத்து ரக விமானம் இன்று காலையில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி, தீப்பற்றி எரிந்தது.
The Indian Air Force deeply regrets the loss of five personnel in the An-32 accident at Jorhat, Assam.
— Indian Air Force (@IAF_MCC) June 13, 2026
Sqn Ldr Prashant Singh, Flt Lt Shubham Kumar, Sgt Jitendra Sharma, Agniveervayu Khemaram Kumawat and Agniveervayu Danish Alam made the supreme sacrifice in the line of duty.… pic.twitter.com/9SmOjtS5mU
இதில் விமானப் படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, உயிரிழந்தவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டது.
1. படைப்பிரிவுத் தலைவர் பிரசாந்த் சிங்
2. விமான லெப்டினன்ட் சுபம் குமார்
3. சார்ஜென்ட் ஜிதேந்திர சர்மா
4. அக்னிவீர்வாயு கெமரம் குமாவத்
5. அக்னிவீர்வாயு டேனிஷ் ஆலம்
3 லட்சம் பேருக்கு வெறும் 6 பேர் தானா? மயிலாடுதுறை ‘சிங்கப்பெண்’ படைக்கு விழுந்த முதல் செக்.!
Mayiladuthurai, Tamil Nadu:Mayiladuthurai Singappen Scheme: தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பதவியேற்ற தவெக தலைவர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பிரத்யேகமாக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்படும் என்ற கோப்பில் முதலாவதாகக் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (10.06.2026) முதல் இந்த அதிரடிப்படை தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தின் தற்போதைய கள நிலவரம் மற்றும் புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேற தற்போதைய கட்டமைப்பு போதுமானதா? அல்லது இது வெறும் விளம்பர முழக்கமா?" என்ற விவாதத்தையும், சமூக ஆர்வலர்களிடையே பெரும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
3 லட்சம் பெண்களுக்கு 6 பேர் மட்டுமே! - விந்தையான கணக்கீடு:
சமீபத்திய மக்கள் தொகை மற்றும் வாக்காளர் புள்ளிவிவரங்களின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண் மக்கள் தொகையினர் வசித்து வருகின்றனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், தினசரி சந்தை மற்றும் பொது இடங்களுக்கு வரும் பெண் தொழிலாளர்கள் எனப் பெரும் பகுதியினர் அடங்குவர்.
மேலும் படிக்க: ஆவின் பச்சை பால் விற்பனை நிறுத்தம்? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
ஆனால், இவ்வளவு பெரிய பரப்பளவும் மக்கள் தொகையும் கொண்ட இந்த மாவட்டத்திற்கு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த காவல்துறையினரின் எண்ணிக்கை வெறும் 6 பேர் மட்டுமே (2 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 பெண் காவலர்கள்).
ஷிப்டுக்கு 3 பேர்: 1300 சதுர கிலோமீட்டரை எப்படிக் கண்காணிப்பது?
மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்ய ‘சுழற்சி முறை’ பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த 6 பேரும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு ஷிப்ட்டிற்கு ஒரு உதவி ஆய்வாளர் (SI) மற்றும் இரண்டு பெண் காவலர்கள் (PC) என மொத்தம் 3 பேர் மட்டுமே களத்தில் இருப்பார்கள். மயிலாடுதுறை மாவட்டம் என்பது மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், குத்தாலம் எனப் பல முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய, சுமார் 1,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய மாவட்டமாகும்.
சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி:
ஒரே ஒரு அதிநவீன ரோந்து வாகனத்தை வைத்துக்கொண்டு, ஒரு ஷிப்ட்டில் இருக்கும் 3 பெண் காவலர்கள், ஒட்டுமொத்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒரே நேரத்தில் எப்படிக் கண்காணிக்க முடியும்?
நீண்ட தூரப் பயணமும், 'மின்னல் வேக' நடவடிக்கையின் சாத்தியமும்!
காவல்துறை தரப்பில், "அவசரக் கால உபகரணங்கள் கொண்ட வாகனம் வழங்கப்பட்டுள்ளது, எந்தவொரு அவசர அழைப்பிற்கும் இவர்கள் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மயிலாடுதுறையின் ஒரு எல்லையான கொள்ளிடத்திலோ அல்லது குத்தாலத்தின் கிராமப்புறப் பகுதியிலோ ஒரு பெண்ணிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றால், அந்த நேரத்தில் இந்த சிங்கப்பெண் படை மாவட்டத் தலைமையகத்திலோ அல்லது சீர்காழியிலோ ரோந்துப் பணியில் இருந்தால், அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சேரக் குறைந்தது 45 நிமிடங்களாவது ஆகும்.
போக்குவரத்து நெரிசல்களையும் கடந்தே அவர்கள் செல்ல வேண்டும். இத்தகைய சூழலில், மின்னல் வேக நடவடிக்கை" என்பது தற்போதைய 3 பேர் கொண்ட ஒரு ஷிப்ட் அமைப்பில் எப்படிச் சாத்தியமாகும் என்பது சமூக ஆர்வலர்களின் நியாயமான கேள்வியாக உள்ளது.
மேலும் படிக்க: மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பது எப்படி?
முக்கியப் பொறுப்புகளும், பற்றாக்குறையான மனிதவளமும்:
இந்த அதிரடிப்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலக்குகள் மிக அதிகம். மாவட்ட எஸ்பி G.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இவர்கள் கண்காணிக்க வேண்டிய இடங்கள்:
- மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்.
- மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியச் சந்திப்புகள்.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்.
- வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருவிழா நடக்கும் பகுதிகள்.
- இதுதவிர, பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்களையும் இவர்களே நடத்த வேண்டும்.
ஒரு மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களையும், பேருந்து நிலையங்களையும் வெறும் 3 பேர் கொண்ட ஒரு குழு தினசரி எப்படிக் கண்காணித்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியும்? இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று எனப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீர்வு என்ன? சமூக ஆர்வலர்களின் கோரிக்கை:
முதலமைச்சரின் இந்த ‘சிங்கப்பெண் படை’ என்ற தொலைநோக்குத் திட்டம் மிகச் சிறப்பானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெண்களிடத்தில் இது பாதுகாப்பைப் பற்றிய ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. ஆனால், இந்தத் திட்டம் வெறும் காகித அளவிலும், பெயரளவிலும் சுருங்கிவிடக் கூடாது என்றால், அரசு உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தாலுக்கா வாரியான பிரிவுகள்:
மாவட்டத்திற்கு 6 பேர் என்பதை மாற்றி, மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவிற்கும் (மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்) தலா ஒரு சிங்கப்பெண் படைப் பிரிவு அமைக்கப்பட வேண்டும்.
மனிதவளத்தை அதிகரித்தல்:
ஒரு ஷிப்ட்டிற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 பெண் காவலர்களாவது சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும்.
இருசக்கர வாகன ரோந்து:
குறுகலான தெருக்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல, நான்கு சக்கர வாகனத்துடன் சேர்த்து, பெண் காவலர்களுக்குத் இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட வேண்டும்.
ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக, பெண்களின் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்யக் கொண்டுவரப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’, மயிலாடுதுறை மாவட்டத்தின் 3 லட்சம் பெண்களுக்கும் உண்மையான அரணாக விளங்க வேண்டுமே தவிர, வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாது. அரசு உடனடியாக இந்த ஆட்கள் பற்றாக்குறையைக் கவனித்து, கூடுதல் காவலர்களை நியமித்தால் மட்டுமே, இந்தச் சிங்கப்பெண்கள் உண்மையான ‘அதிரடிப்படையாக’ உருவெடுக்க முடியும் என்று சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ரூ.2 லட்சம் வழங்கும் தமிழக அரசு.. எப்படி பெறலாம்? ஜூன் 30ம் தேதி கடைசி நாள்!
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் முடங்கியது... கதறும் இளசுகள் - என்னாச்சு?
Chennai, Tamil Nadu:Facebook, Instagram, Whatsapp Down : உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா தளங்கள் முடங்கி இருப்பதாக தெரிகிறது. இதனால், ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று இரவு 7.45 மணியளவில் பேஸ்புக்கில் பிரச்னை என சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் புகார் தெரிவித்திருப்பதாக Downdetector தளத்தில் தெரிகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பிரச்னையை பயனர்கள் சந்திக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் லாக்-இன் செய்ய முடிவில்லை போன்ற புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற மெட்டா செயலிகள் முடங்கியிருப்பதை X தளத்தில் பல பயனர்கள் குறிப்பிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. முடக்கத்திற்கான காரணம் குறித்து மெட்டா இதுவரை அதிகாரப்பூர்வமாக விளக்கம் தெரிவிக்கவில்லை.
கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு... அவரின் இந்த 5 சாதனைகளை யாராலும் உடைக்க முடியாது!
Auckland, Auckland:Kane Williamson Retirement : நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், Fab 4 வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 16 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த கேன் வில்லியம்சன் மூன்று பார்மட்களிலும் சேர்த்து மொத்தம் 378 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
It's a team I love and it's so dear to my heart
— BLACKCAPS (@BLACKCAPS) June 12, 2026
Thank you for pic.twitter.com/u1qBOMEfzy
தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இத்தொடரின் முதல் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் டெஸ்டில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி தோல்வியடைந்த அந்த போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடியிருந்தார். இதுதான் அவரது கடைசி சர்வதேச போட்டியாக அமைந்துவிட்டது. அதில் 0 & 18 ரன்களையே அவர் அடித்திருந்தார். இத்தொடரில் அடுத்து உள்ள இரண்டு போட்டிகளிலும் கூட அவர் விளையாட மாட்டார் என அறிவித்துள்ளார்.
‘நீங்க பேசுங்க நா போறன்’ - அழைத்த அமைச்சர்... நைசாக நழுவிய மேயர்..!
Chennai, Tamil Nadu:Mayor Priya Avoid Press Meet: முதலமைச்சர் விஜயை மேயர் பிரியா இதுவரையில் சந்திக்காத நிலையில், தவெக அமைச்சருடன் முதல் பொது நிகழ்சியில் கலந்து கொண்டார். சென்னை ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் மேயர் பிரியா கலந்து கொண்டு, அங்கு செய்தியாளர்களை சந்திக்காமல் அங்கிருந்து செய்தியாளர்களை தவிர்த்து எஸ்கேப் ஆகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சரை சந்திக்காத மேயர் பிரியா:
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு அமைந்து ஒரு மாதத்தை நிறைவு செய்த நிலையில், சென்னை மாநகராட்சியின் மேயராக இருக்கக்கூடிய பிரியா இதுவரையில் முதலமைச்சர் விஜய் அவர்களை சந்திக்கவில்லை. இது தவெக அரசை அவமதிக்கும் செயல்பாடாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்னதான் திமுக கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், தற்போது ஆளும் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது இயல்பு.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய் கொடுக்கும் ரூ.1 லட்சம் பரிசு - யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஆனால், சந்திக்காமல் தவெக அரசை விமர்சித்து வருவதும் அவரது கட்சி எம்.எல்.ஏக்களை அவமதித்து வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்கள் பணி என்று வந்துவிட்டால் ஒருங்கிணைந்து வேளை செய்ய வேண்டும் என்றும், விருப்பு வெறுப்பை காட்டுவது சரியல்ல என்ற கருத்தையும் சிலர் தங்களது கருத்துகளாக தெரிவித்து வருகின்றனர்.
பொதுநிகழ்ச்சியில் தவெக எம்.எல்.ஏவை அவமதித்த மேயர்:
கடந்த ஜூன் 4-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் பள்ளி வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ பல்லவி, மேயர் பிரியா, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி இணை ஆணையர் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி வகுப்பறை ரிப்பன் வெட்டி திறப்பதில் இருந்து, குத்துவிளக்கு ஏற்றி வைப்பது போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவெக எம்.எல்.ஏ-வை அவமதிக்கும் விதமாக அவருக்கான முன்னுரிமை அங்கு மறுக்கப்பட்டது.
அன்றைய தினமே அதேப் பகுதியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் தவெக எம்.எல்.ஏவுக்கு பிரியா முன்னுரிமை அளித்தார். ஆனால் தான் அவமானப்படுத்தப்பட்டதை உணர்ந்த பல்லவி அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த முன்னுரிமையை நிராகரித்து பிரியாவுக்கு பதிலடி கொடுத்தார்.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய் கொடுக்கும் ரூ.1 லட்சம் பரிசு - யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மேலும் எம்.எல்.ஏ அவமதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்தும் புரோட்டோக்கால் படி தான் செய்யப்பட்டது. மேயருக்கு அடுத்தபடியாக அரசு அதிகாரிகள் தான் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும் என்பதை தெரிவித்தார். ஒரு பொது நிகழ்ச்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி, அமைச்சர், எம்.எல்.ஏ-வுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் பலரும் பிரியாவை விமர்சித்தனர். அதனைத் தொடர்ந்து மேயர் பிரியாவை “புரோட்டோகால் பிரியா” எனவும் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
செய்தியாளர் சந்திப்பிற்கு அழைத்த அமைச்சர், தவிர்த்த மேயர்:
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயின்று பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு கல்வி ஊக்க உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு சிறப்பு ஊக்கத்தொகையை மாணவர்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு மேயர் பிரியா வர, அவரை பார்த்த அமைச்சர் ‘அம்மா வர்றீங்களா 3 செய்தி சேனல் முடக்கதை பற்றி பேசனும்னு’ பத்திரிக்கையாள சந்திப்புக்கு அழைத்தார். அதற்கு பிரியா, ‘இல்லை இல்லை... நீங்க பேசுங்க நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டு அவசரம் அவசரமாக அங்கிருந்து வெளியேறிய மேயர் பிரியாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘இன்னும் 6 மாதத்திற்கு இவங்களோடு எப்படி டா ஓட்டப் போகிறோம் என்ற மன நிலையுடனும், பதட்டத்துடனும் மேயர் அங்கிருந்து வெளியேறினார்’ என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ரூ.1 கோடி வரை தொழில் கடன்: கல்வித்தகுதி தேவையில்லை! தமிழக அரசு
ஐசிசி உலகக் கோப்பை தேதிகள் வந்தாச்சு... 2027இல் எப்போது நடைபெறும்?
Bengaluru, Karnataka:ICC World Cup 2027 Dates: உலகமே பிபா கால்பந்து உலகக் கோப்பைக்கு காத்திருக்கும் வேளையில், 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. கடந்த 2023 ஐசிசி உலகக் கோப்பை இந்திய அணிக்கு மறக்க முடியாத துயரை ஏற்படுத்தியிருக்கிறது என்பதால் பலரும் இத்தொடருக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக வென்று இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
மேலும் படிக்க | ரோஹித் - ஹர்திக் பாண்டியா பிட்னஸ் டெஸ்டில் பாஸா? பிசிசிஐ ரிப்போர்ட் விவரம்
அடுத்தடுத்து 3 கோப்பை
ஆனால், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வி அடைந்து கோப்பையை தவறவிட்டது.
இதன் பின் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி; சூர்யகுமார் யாதவ் தலைமையில் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை என அடுத்தடுத்து 3 ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்திருக்கிறது.
அடுத்து இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி உலகக் கோப்பையை வென்றால் தொடர்ச்சியாக இத்தனை ஐசிசி கோப்பைகளை வென்ற சாதனையை படைக்கலாம். இந்த இரு தொடர்களுமே 2027ஆம் ஆண்டில் நடைபெற இருப்பது கவனிக்கத்தக்கது.
முக்கியத்துவம் பெறும் டெஸ்ட், ஓடிஐ
இந்த இரு தொடர்களும் சமீப காலமாக இந்திய அணியின் வசம் கிடைக்கவில்லை. இந்திய அணி கடைசியாக 2011இல் ஐசிசி உலகக் கோப்பையை வென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கி மூன்று இறுதிப்போட்டிகள் முடிந்துவிட்டன.
மேலும் படிக்க | முகமது சிராஜ் நீக்கம்.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு! இந்திய அணியில் திடீர் மாற்றம்
அதில் முதலிரண்டு முறை பைனல் வரை வந்து இந்தியா தோற்றது. கடைசி முறை இந்தியா இறுதிப்போட்டிக்கே தகுதிபெறவில்லை. எனவே, இந்திய அணி தற்போதைய முழு கவனமும் டெஸ்ட் மற்றும் ஓடிஐ அணியை வெற்றிகரமாக கட்டமைப்பதே ஆகும்.
2027 ஐசிசி உலகக் கோப்பை எப்போது?
இந்நிலையில், 2027 ஐசிசி உலகக் கோப்பை குறித்த அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா உள்ளிட்ட நாடுகள் நடத்தும் இத்தொடர் வரும் 2027ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 21ஆம் தேதிவரை நடைபெற வாய்ப்பிருப்பதாக தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதமே அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஐசிசி வாரியக் கூட்டத்தில் போட்டிகளின் தேதிகள் இறுதி செய்யப்ட்டதாகவும், ஜூலை மாதம் எடின்பரோவில் நடைபெற்ற இறுதி ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இறுதி ஒப்புதல் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்ரிக்க கண்டத்தில் ஐசிசி உலகக் கோப்பை வரும் 2027இல் நடைபெற இருக்கிறது. 54 போட்டிகளில் 41 போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 14 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. எனவே, அடுத்த 2027ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் காலத்தில் களைகட்டும்.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கும் மீண்டும் காயம்... ஓடிஐ தொடர் அம்போ - மாற்று வீரர் யார்?
முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் - நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியது என்ன?
New Delhi, Delhi:CM Vijay In 11th NITI Aayog Meeting : டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றது. இது திட்டக்குழுவுக்கு பதில் கொண்டுவரப்பட்ட நிதி ஆயோக்கின் 11வது ஆட்சிமன்றக் குழுவின் கூட்டமாகும். தமிழ்நாடு முதலமைச்சரான விஜய் இதில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், "ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுகிறோம்" என குறிப்பிட்டு பேசினார்.
அதேநேரத்தில் நீட் விலக்கு கோரிக்கை குறித்தும் விஜய் பேசினார். "நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மருத்துவ இடங்களை 12ஆம் வகுப்பு மதிப்பெண்படி நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு அனுமதி தர வேண்டும்" என்றார்.
