icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

Thazh Thiravaa Movie கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த தாழ் திறவா!

Chennai, Tamil Nadu:

தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுக்கும், மாறுபட்ட ஜானரிலான முயற்சிகளுக்கும் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இப்போது “தாழ் திறவா” திரைப்படம் கேன்ஸ் திரைவிழாவில் பெற்ற கவனத்தால் பேசுபொருளாகியுள்ளது. அமானுஷ்யம், மர்மம், திகில், வரலாற்று பின்னணி என பல அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகும் இப்படத்தின் டீசரும், தற்போது வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பார்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பரணி சேகரன் இயக்குகிறார். ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வழக்கமான ஹாரர் படங்களை போல அல்லாமல், அகழ்வாராய்ச்சி சார்ந்த ஒரு மர்மக் கதையை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. கிராமப்புறப் பின்னணி, பழமையான எழுத்துகள், மறைந்திருக்கும் ரகசியங்கள், அமானுஷ்ய சம்பவங்கள் ஆகியவை இப்படத்தின் முக்கிய தூண்களாக அமைந்துள்ளன.

மேலும் படிக்க | குடும்பத்தை கெடுத்த '3 எழுத்து இட்லி நடிகை...' ரவி மோகன் கண்ணீர் - யார் அவர்?

கேன்ஸ் திரைப்பட விழா

கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் மே 19ஆம் தேதி “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் திரை ரசிகர்களும், விமர்சகர்களும் கவனிக்கும் பிரசித்தி பெற்ற மேடையில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் இடம்பிடித்திருப்பது, படக்குழுவினருக்கே அல்லாமல் தமிழ் சினிமாவிற்கும் பெருமையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கேன்ஸ் போன்ற சர்வதேச திரைவிழாவில் ஒரு தமிழ் ஹாரர் திரில்லர் படம் கவனம் பெறுவது, அந்த படத்தின் உள்ளடக்கத்துக்கும், விளக்கவுரை தரத்துக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம்.

மைய கதைக்களம் 

படத்தின் மைய கதைக்களம் ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழைய எழுத்துக்களை சுற்றி நகர்கிறது. அந்த எழுத்துகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மர்மம், அந்த மர்மம் உருவாக்கும் அச்சம், அதனால் பாதிக்கப்படும் மனிதர்கள் ஆகியவற்றைத் தழுவிய கதையாக இது உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அகழ்வாராய்ச்சி, பழமையான நாகரிகங்கள், தொன்மையான ரகசியங்கள் போன்ற கூறுகளுடன் ஹாரர் ஜானரை இணைப்பது அரிதான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் “தாழ் திறவா” ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இப்படத்தின் மனநிலையை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. முதல் போஸ்டரில், இருளால் சூழப்பட்ட அறை ஒன்றில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள், வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், ஆதவ் கண்ணதாசன் பதற்றத்துடன் அவரை காப்பாற்ற ஓடிவரும் காட்சி, திகிலையும், நெருக்கடியையும் ஒருசேர உருவாக்குகிறது. ஒரு பார்வையிலேயே பார்வையாளருக்கு பய உணர்வைத் தூண்டும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, அமானுஷ்ய சூழல், பயத்துடன் நிற்கும் குழந்தைகள், ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் என பல பரபரப்பூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரில் காணப்படும் ஒவ்வொரு விவரமும் ஒரு மர்மப் பின்னணியைச் சுட்டிக்காட்டுகிறது. கதையின் பின்புலத்தில் ஏதோ பெரிய ரகசியம் மறைந்திருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்

ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் ஆகிய இருவருடன் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கூடுதலாக குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் கதைக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்படத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் முக்கிய தருணங்களில் இடம்பெறுவது, கதையின் உணர்ச்சிப்பூர்வமான பரிமாணத்தை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

மேலும் படிக்க | “4 மாச கரு கலஞ்சிது..” ரவி மோகன்-ஆர்த்தி விவாகரம் குறித்து கெனிஷா வீடியோ!

0
0
Report

தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் வரும் தினசரி வருமானம் எவ்வளவு தெரியுமா?

Chennai, Tamil Nadu:

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை என்பது அரசின் வருமானத்தில் முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் போன்ற நேரங்களில் மதுபான விற்பனை சாதாரண நாள்களை விட பல மடங்கு அதிகரிப்பது வழக்கம். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் ஒருநாள் வருமானம் எவ்வளவு என்ற கேள்வி, ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் மீண்டும் மீண்டும் பேசுபொருளாகிறது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அதிகாரப்பூர்வமாக, வெளியாகும் தகவல்களின்படியும், தினசரி விற்பனை சராசரியாக ரூ.100 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. வார இறுதி நாட்களில் இது ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை உயர்வதாகவும் தகவல்கள் உள்ளன. 

பண்டிகை காலம்!

பொங்கல் காலத்தில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு உயர்கிறது என்பதற்கு சமீபத்திய புள்ளிவிவரங்களே சான்றாக உள்ளன. 2025 பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டும் டாஸ்மாக் மூலம் ரூ.725.56 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்ததாக செய்திகள் வெளியாகின. அந்த ஆண்டில் ஜனவரி 13 முதல் 16 வரை விற்பனை அதிகரித்து, ஒருநாள் சராசரி ரூ.145 கோடியை தொட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

அதற்கும் அடுத்த ஆண்டில் நிலை இன்னும் உயர்ந்தது. 2026 பொங்கல் காலத்தில் 2 நாட்களில் மட்டும் ரூ.517.85 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல்கள் வெளியானது. இதில் ஜனவரி 14ஆம் தேதி ரூ.184.05 கோடியும், ஜனவரி 15ஆம் தேதி ரூ.251.23 கோடியும் விற்பனையாகியுள்ளதாக செய்திகள் கூறுகிறது. பின்னர் போகி மற்றும் பொங்கல் தினங்களில் சேர்த்து சுமார் ரூ.850 கோடி அளவுக்கு விற்பனை நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

டாஸ்மாக் விற்பனை

இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை எந்தளவுக்கு உயர்கிறது என்பதை காட்டுகிறது. அதேசமயம், அரசுக்கு இந்த விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் இது நெகட்டிவ் விவாதத்தையும் உருவாக்குகிறது. பண்டிகை காலத்தில் குடும்ப செலவுகள் அதிகரிக்கும் நேரத்தில், மது விற்பனையும் உச்சத்தை அடைவது சமூக ரீதியாக பல கேள்விகளை எழுப்புகிறது.

டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பதற்கான மற்றொரு காரணம் விற்பனை மையங்களின் எண்ணிக்கையும், மக்களின் தேவை அடிப்படையிலான நுகர்வும் ஆகும். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கடைகள் செயல்படுகின்றன. வழக்கமாக வார இறுதியில், மாலை நேரங்களில், பண்டிகை விடுமுறைகளில் கடைகளுக்கு கூட்டம் அதிகமாக வரும். இதனால் பல கடைகளில் நீண்ட வரிசை, கூடுதல் ஊழியர்கள், போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 

கூடுதலாக 10 ரூபாய் 

சமீப காலங்களில் மது பாட்டில்களுக்கு எம்ஆர்பி விலையை விட கூடுதலாக 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. தற்போது விஜய் தலைமையிலான அரசு இந்த கூடுதல் 10 ரூபாய் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

0
0
Report

டிரெண்டாகும் ஜெயில் டூரிசம்... சிறைவாசம் அனுபவிக்க ஒருநாள் வாடகை இவ்வளவா?

MMathan6h ago
Wadgaon, Maharashtra:
Trendig Jail Tourism: கோடை விடுமுறை, வார விடுமுறை என்றால் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கடற்கரை பகுதிகள், பனி மூடிய மலைவாசஸ்தலங்கள், காடுகள், சரணாலயங்கள் போன்ற பகுதிகளுக்கு செல்வது தான் வழக்கம் ஆகும். ஆனால் இப்போது பயண ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பிரியர்கள் உலகில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு புதிய போக்கை பின்பற்றி வருகின்றனர். அதாவது, சுற்றுலா செல்பவர்கள் தாங்களாகவே முன்வந்து சிறைகளில் தங்க தேர்வு செய்கின்றனர். இது டிரெண்டிங் சுற்றுலா தேர்வாக சுற்றுலா பயணிகள் கருதுகின்றனர். 
 
உலகெங்கிலும் உள்ள பல முன்னாள் சிறைச்சாலைகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் சிறை போன்ற அறைகளில் தங்கி சிறைச்சாலை உணவை உண்டு ஒரு காலத்தில் குற்றவாளிகளின் வாழ்க்கையாக கருதப்பட்ட அதே சூழலை பெறுகின்றனர். ஆச்சரியப்படும் விதமாக இந்த தனித்துவமான அனுபவத்திற்காக பலரும் கணிசமான தொகையைச் செலவிடுகின்றனர். வேகமாகப் பரவி வரும் இந்த பயணப் போக்கை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.  
 
இன்றைய காலத்தில் சுற்றுலா செல்வது என்பது பயணம் மட்டுமே செய்ய விரும்பாமல், மாறாக அதை அனுபவிக்கவே விரும்புகின்றனர். அதனால் தான் சுற்றுலாப் பயணிகள் வரலாற்று சுற்றுலா, சாகச சுற்றுலா, இருண்ட சுற்றுலா போன்ற சுற்றுலாவை விரும்பி மேற்கொள்கின்றனர்.
 
இதில் முக்கிய பகுதியாக சிறை சுற்றுலா பங்காற்றி வருகிறது. அந்த காலத்தில் இன்பச் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா என பல்வேறு சுற்றுலா மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறைச் சுற்றுலா பிரபலமாகி வருகிறது. 

சிறை சுற்றுலா:

சிறை சுற்றுலா என்பது வழக்கமாக மேற்கொள்ளப்படும் சுற்றுலாவை தவிர்த்து, சிறைச்சாலைகளில் நடக்கும் சுவாரசியமான தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ளும் நடைமுறையாகும். இந்த சுற்றுலா மேற்கொள்வதன் மூலமாக சுற்றுலாப் பயணிகள் புதுவிதமான அனுபவங்களை பெற ஏதுவாக அமைகிறது. இதில் சிறைக் கைதிகள் அனுபவிக்கும் பல தண்டனைகள் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை சுற்றுலாப் பயணிகள் உருவாக்குகின்றனர்.
 
இந்த சிறைச்சாலைகளின் பெரிய தடினமான சுவர்கள், இரும்புக் கம்பிகள், சிறிய அறைகள் மற்றும் அச்சமூட்டும் சூழல் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை தூண்டுகின்றன. கைதிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள சுற்றுலாப் பயணிகள் சிறைச் சுற்றுலாவை தேர்ந்தெடுக்கின்றனர். 

சிறைச்சுற்றுலா பிரபலமாகி வருவதற்கான காரணம்:

சிறைச்சாலையில் நடைபெறும் சில ருசிகரமான சம்பவங்கள் காரணமாகவும், அவர்களுக்கு ஏற்படும் தனித்துவமான அனுபவங்கள் காரணமாகவும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக, மக்கள் சிறைச்சாலைகள் பற்றி தெரிந்துக்கொள்ள அந்தந்த மாநில அரசே ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மாநில அரசின் அனுமதியுடன் சிறைச்சாலைகளில் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. 
 
பழைய சிறைச்சாலைகளின் பெரிய தடிமனனான சுவர்கள், இரும்புக் கம்பிகள், சிறிய அறைகள் மற்றும் அச்சமூட்டும் சூழல் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை தூண்டுகின்றன. கைதிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்து சுற்றுலாப் பயணிகள் தெரிந்துக்கொள்ள விரும்புகிறார்கள். சிலர் சிறையின் வரலாற்றை அருகிலிருந்து அனுபவிக்க வருகிறார்கள். மற்றவர்களோ சமூக ஊடகங்களுக்காகத் தனித்துவமான உள்ளடக்கங்களை உருவாக்க வருகிறார்கள். 
 
சுற்றுலாப் பயணிகளுக்கு சிறைச்சாலை சுற்றுலா மீதான மோகம் அதிகரித்துள்ளதால் சிறை வாசத்தை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிறையை நோக்கி படையெடுக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகள் தங்கும் விடுதிகளாகவோ அல்லது சுற்றுலாத் தலங்களாகவோ மாற்றப்பட்டுள்ளன. சில சுற்றுலா இடங்கள் பிரபலமடைந்துள்ளதால் அவற்றை சுற்றி பார்க்க சில மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது.

ஒரு நாள் வாடகை ரூ.500:

இந்தியாவில் உள்ள பல்வேறு ஜெயில்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் உள்ளத் மத்திய சிறை, மகாராஷ்டிராவில் உள்ள எரவாடா சிறை,கர்நாடக மாநிலம் பெலகாவி மத்திய சிறை,     
ஹைதராபாத் சங்கரெட்டி சிறை போன்ற சிறைகளில் ஒரு நாள் சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
 
ஒரு நாளைக்கு ரூ.500 செலுத்தினால் சிறைக் கைதியைப் போல ஒருநாள் முழுவதும் உள்ளேயே இருக்கலாம் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறை சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு கதர் உடை, மூன்று வேளை ஜெயில் உணவு, இருளில் மூழ்கிய அறை போன்றவை வழங்கப்படுகிறது. இவ்வாறு சிறைக்கு வருபவர்களுக்கு கைதி எண், கைதிக்கான உடை, சிறை அறை எண், உணவு அருந்துவதற்கான அலுமினியம் தட்டு போன்றவை வழங்கப்படுகின்றன.
 
ஒரு சிறைக் கைதியை எவ்வாறு நடத்துவார்களோ அதே போல தான் சுற்றுலாப் பயணிகளையும் அந்த நாள் முழுவதும் நடத்துகின்றனர். இந்த வித்தியாசமான அனுபவங்களை மேற்கொள்ள சுற்றுலாப் பயணிகள் அதிகளவிலான ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
0
0
Report
Advertisement

மோடி சொன்ன அந்த வார்த்தை... இத்தாலி அதிபர் குலுங்கி குலுங்கி சிரித்தது ஏன்?

Lazio:

Modi Giorgia Meloni Viral : பிரதமர் மோடி தற்போது இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உடனான பிரதமர் மோடியின் சந்திப்புதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிலும் பிரதமர் மோடி, ஜியோர்ஜியா மெலோனிக்காக இந்தியாவில் இருந்து எடுத்துச் சென்ற சிறப்பு பரிசும், அதை மோடி வழங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோவும் இணையம் முழுவதும் நிரம்பியிருக்கிறது.

மேலும் படிக்க | மீண்டும் வருகிறதா ஊரடங்கு? பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் ரகசியம்

ஜார்ஜியா மெலானி போட்ட வீடியோ

பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து பார்லே நிறுவனத்தின் மெலடி (Melody) எனப்படும் மிட்டாய் பாக்கெட்டை ஜியோர்ஜியா மெலோனிக்கு பரிசாக வழங்கினார். இதற்கு ஜியோர்ஜியா மெலோனி நன்றி தெரிவித்து அவரது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் மோடி மற்றும் மெலோனி இருவரும் அந்த மெலடி மிட்டாய் பாக்கெட்டை கையில் வைத்திருந்தனர்.

அதில் மெலோனி, "பிரதமர் மோடி மிகவும் சிறந்த டாஃபியை (காப்பி மிட்டாய்) பரிசாக கொண்டுவந்துள்ளார்" என்ற சொல்ல, பிரதமர் மோடி உடனே, "Melody" என்பார். உடனே இருவரும் சிரித்து அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

Melodi ரகசியம்

மோடிக்கும், மெலோனிக்கும் இடையேயான நட்புறவை வழக்கமாக இணையத்தில் 'Melodi' என்றே குறிப்பிடுவார்கள். அதாவது, மெலோனி (mel) + மோடி (odi) தான் 'Melodi' அதை குறிப்பிடும் வகையில் இந்த பரிசை மோடி வழங்கியிருக்கிறார். இரு நாட்டு தலைவர்களின் நட்பு இணையத்தில் பரந்தளவில் எப்போதும் கவனம் ஈர்க்கும்.

புகைப்படங்களும் வைரல்

தற்போது இந்த வீடியோவை குறிப்பிட்டு, மோடி - மெலோனி நட்புறவை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், ரோம் நகரில் மோடி - மெலோனி சந்தித்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி என மே 15ஆம் தேதி தொடங்கி இன்று (மே 20) வரை 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | PM Modi UAE Visit | சமையல் எரிவாயு தட்டுப்பாடு தீருமா? இந்தியா-அமீரகம் இடையே எரிசக்தி ஒப்பந்தம்

அந்த வகையில், நேற்று (மே 20) ரோம் வந்தடைந்த பிரதமர் மோடியை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி வரவேற்றிருந்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் மெலானி பகிர்ந்திருந்தார்.

பிரதமர் மோடியின் பதிவு

அதேபோல், பிரதமர் மோடி அவரது X பக்கத்தில், "ரோம் நகரில் இப்போதுதான் தரையிறங்கினேன். பிரதமர் மெலோனியை இரவு விருந்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற கொலோசியத்தையும் பார்வையிட்டேன். நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான நட்புறவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்த உரையாடலைத் தொடரவிருக்கும் பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த பதிவுடன் பல புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

முக்கியமான பயணம் 

பல்வேறு துறைகளில் இந்தியா - இத்தாலி இடையேயான ஒத்துழைப்பிற்கான, 2025-2029ஆம் ஆண்டுக்கான கூட்டு மூலோபாய செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா - இத்தாலி உறவுகளில் வலுவான உத்வேகம் ஏற்பட்டுள்ள சூழலில், பிரதமர் மோடியின் இத்தாலி பயணம் அமைந்திருக்கிறது. மத்திய கிழக்கின் போர் பதற்றம் அதன் காரணமாக எழுந்துள்ள கச்சா எண்ணெய் விநியோக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வேதச அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் இந்த 5 நாடுகள் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் படிக்க | டிரம்ப் விரித்த வலையில் ஈரானா? அல்லது ஈரானின் வலையில் டிரம்பா? ஆட்டத்தை மாற்றிய 3 பேர்

0
0
Report

இனி டிராபிக் டென்ஷன் இல்ல.. எழும்பூரில் வேற லெவல் மாற்றம்.. குஷியில் வாகன ஓட்டிகள்

MMathan8h ago
Chennai, Tamil Nadu:

Chennai Egmore Multi Level Car-Bike Parking: தென்னிந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகளை கையாளுகின்றது. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பெரிய அளவிலான பார்க்கிங் வசதி செய்யப்பட வேண்டும் என ரயில் பயணிகளிடையே கோரிக்கை எழுந்தது.

ரயில் நிலையங்களுக்கு பயணிகள் அதிகம் வந்து செல்வதால் அவர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புலம்பி வந்தனர். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தென்னக ரயில்வே சார்பில் புதிய மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட்டது. 

மேலும் படிக்க: தி.நகர் மக்களே... விரைவில் வருகிறது மெட்ரோ - இனி போக்குவரத்து பிரச்னை பறந்து போகும்!

எழும்பூரில் 842 கோடி ரூபாய் செலவில்:

எழும்பூர் காந்தி-இர்வின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாகன நிறுத்துமிடத்தில், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்த ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தை 842 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த முனையமாக மாற்றும் மறுசீரமைப்பு பணிகளின் முக்கியப் பகுதியாக அதிநவீன பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தை தெற்கு ரயில்வே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தால் வாகன போக்குவரத்து கணிசமாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,442.13 சதுர மீட்டர் பரப்பளவு

மல்டி லெவர் பார்க்கிங் வளாகத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்கள் சுமார் 3,442.13 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு தளங்களிலும் சேர்த்து 122 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 68 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்டுள்ளது.

மேலும், 2842.13 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நான்காவது தளம் 62 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 34 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடம் அமைந்துள்ளது. இந்த பார்கிங் வளாகத்தில் சுமார் 280-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: மெட்ரோ பயணத்தில் வரப்போகும் மாஸ் மாற்றங்கள்: குஷியில் பயணிகள்

பாதுகாப்பு வசதிகள்: 

ரயில் பயணிகளின் வாகனங்களை பாதுகாக்கும் நோக்கில் 24X7 சிசிடிவி கண்காணிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 24 மணி நேர காவலர்களும், அந்த பார்க்கிங் லெவலுக்கு எளிதில் சென்றடையும் வகையில் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதனை கையாள்வதற்கு தனியாக ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சிறப்பம்சங்கள்:

இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தில் 22 மின்சார வாகனம்(EV) சார்ஜிங் நிலையங்கள், தானியங்கி வாகன மேலாண்மை அமைப்புகள், பொது அறிவிப்பு வசதி மற்றும் மேம்பட்ட தீயணைப்பு பாதுகாப்பு வழிமுறைகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பயணிகள் வசதிக்காக கட்டணக் கழிப்பிடங்கள், ஓட்டுநர்களுக்கான ஓய்வறைகள், ஸ்மார்ட் லாக்கர், சிற்றுண்டி நிலையங்கள் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் 20 பயணிகள் பயணிக்கும் திறன் கொண்ட நவீன மின்தூக்கி வசதி, பிரத்யேக அவசரகால வெளியேற்றப் படிக்கட்டுகள், பாதுகாப்பு கைப்பிடிகள் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல ஒரு அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பக்கத்திலும் மிக வேகமாகத் தயாராகி வருகிறது. இந்த வேலை முழுமையடையும் போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிட திறன் பலமடங்கு அதிகரிக்கும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க: சென்னை மக்களே... 13.3 கி.மீ., தூரத்திற்கு மேம்பாலம் - இந்த ஏரியாவில் டிராபிக் ஜாம் இருக்காது!

0
0
Report

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஆம்னி பேருந்துக் கட்டணமும் உயரும் அபாயம்?

Chennai, Tamil Nadu:

கிட்டத்தட்ட சில ஆண்டுகளாக நிலையாக இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தற்போது மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்துள்ளன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் தாக்கமும், மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றமும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் விளைவாக இந்தியா முழுவதும் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த சில மாதங்களாக இருந்த தேர்தல் கால கட்டுப்பாடுகள் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றமின்றி இருந்தது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக கடந்த வாரம் பெட்ரோல் லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3.11 ரூபாயும் உயர்த்தப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை சமாளிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | தோல்வி அடைந்த மாணவர்களுக்கு குட் நியூஸ்.. புதுச்சேரி அரசின் சூப்பர் வாய்ப்பு!

மீண்டும் உயர்வு!

இதனை தொடர்ந்து கடந்த மே 19ஆம் தேதி இரண்டாவது முறையாகவும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு விலை உயர்வால் சிறு ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதோடு, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அடுத்தடுத்த வாரங்களில் உயரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட செலவினம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆம்னி பேருந்து கட்டணம் உயருமா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் நேரடி தாக்கம் போக்குவரத்து துறையில் காணப்படும் என்பதால், ஆம்னி பேருந்து கட்டணமும் உயரக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது அரசு பேருந்துகளை விட ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதிலும் வார இறுதி நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் கட்டணங்கள் அதிவேகமாக உயர்த்தப்படும் நிலை நீடித்து வருகிறது. சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ஏற்கனவே அதிக கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழலில் உள்ளனர். இப்போது எரிபொருள் விலை மேலும் உயர்ந்துள்ளதால், ஆம்னி பேருந்து சங்கங்கள் கட்டணத்தை திருத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும், இதுவரை சங்கங்களின் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | புதுச்சேரி அரசியலில் பூகம்பம்: ஒரு அமைச்சர் பதவி 100 கோடியா? –நாராயணசாமி அதிரடி

தற்போதைய கட்டணம்!

சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் தற்போது சாதாரண நாட்களில் 800 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த தொகைக்கு மேலாக இன்னும் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும். கடந்த ஆட்சியிலும் இதே போன்ற கட்டண உயர்வு தொடர்பான புகார்கள் தொடர்ந்திருந்தன. ஆனாலும் ஆம்னி பேருந்துகளின் கட்டண முறை மீது கண்காணிப்பு போதுமான அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. தற்போதைய சூழலில் எரிபொருள் விலை உயர்வை காரணமாக கொண்டு, ஆம்னி பேருந்து கட்டணமும் உயர்த்தப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் நிலையில் உள்ளது. 

மேலும் படிக்க | Pharmacy Closure | நாளை மருந்து கடைகள் மூடல்? மக்கள் என்ன செய்ய வேண்டும்? புதுச்சேரி அரசு உத்தரவு

முக்கிய செய்தி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.             
காரணம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு
முதல் உயர்வு பெட்ரோல் லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3.11 ரூபாயும் உயர்வு
இரண்டாவது உயர்வு மே 19ஆம் தேதி பெட்ரோல் 87 காசுகள், டீசல் 91 காசுகள் உயர்வு
பொதுமக்கள் பாதிப்பு அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம்

 

0
0
Report
Advertisement

அதிமுகவுக்கு அல்வா கொடுத்த விஜய்... அமைச்சரவை நோ இடம் - துணை முதல்வர் திருமா..?

Chennai, Tamil Nadu:

TVK Cabinet Latest News : முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக இடம்பெறாது என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், விசிக தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுகிறதா என்பதை விரைவில் தெரிவிப்போம் என கூறினார்.

தமிழ்நாட்டில் கடந்த மே 10ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜய் தலைமையிலா அமைச்சரவை பொறுப்பேற்றது. விஜய் உள்பட மொத்தம் 10 பேர் மட்டுமே முதற்கட்டமாக அமைச்சரவையில் இடம்பெற்றனர். தொடர்ந்து, அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடு செய்யவும் காலதாமதம் ஏற்பட்டது.

மே 16ஆம் தேதிதான் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும், இன்னும் பல முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாமல் அரசுப் பணிகள் தேங்கியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த வகையில், அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்தன. 

அதேவேளையில், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளும் இடம்பெற இருப்பதால்தான் இந்த காலதாமதம் ஏற்படுகிறது என தவெக தரப்பில் கூறப்பட்டது. காங்கிரஸ் மட்டுமே அதிகாரப்பூர்வமாக தவெகவின் அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. கிள்ளியூர் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் மற்றும் மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

0
0
Report

IND vs AFG: ஜடேஜா, சஞ்சுவுக்கு ஆப்பு; ஓடிஐ, டெஸ்ட் - இந்திய அணி அறிவிப்பு

Guwahati, Assam:

IND vs AFG Squad Announcement : ஐபிஎல் முடிந்த கையுடன் வரும் ஜூன் மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. மேலும், இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி என்பது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஓடிஐ மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஸ்குவாடை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தின் கௌகாத்தியில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான குழு இன்று கூடிய நிலையில், ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் ஸ்குவாட்

சுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெயஸ்வால், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார், குர்னூர் பிரர், ஹர்ஷ் தூபே, துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்)

இந்திய ஓடிஐ ஸ்குவாட்

சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா*, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா*, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரர், ஹர்ஷ் தூபே. (* குறியிடப்பட்ட வீரர்கள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்)

0
0
Report

நரக வாழ்க்கையாக மாறிய நடிகையின் காதல் திருமணம்... கடைசி போன் காலின் திக் திக் நிமிடங்கள்!

MMathan1d ago
Noida, Uttar Pradesh:

Twisha sharma death case : உத்திரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா ஷ்ர்மா என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வழக்கறிஞர் ஒருவர் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறி 5 மாதங்களுக்கு முன்பு ட்விஷாவும், போபாலைச் சேர்ந்த வழக்கறிஞரான சமர்த் சிங்கும் திருமணம் செய்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற திருமண வாழ்க்கை ஒரு கட்டத்தில் கசக்கவே சமர்த் சிங் நாளடைவில் மனைவி மீது வெறுப்பைக் காட்டத் தொடங்கினார். இந்த வெறுப்பு இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறி பெரிய சண்டைக்கு வழிவகுத்தது. தனது கணவர் தன்னிடம் அடிக்கடி சண்டையிடுவது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்துள்ளார். அவர்களும் தனது மகளுக்கு அனுசரித்து போகும்படி அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க| சூட்கேசில் தலையில்லா சடலம்! பெண் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்..

 

மேலும் தொடர்ந்து பெற்றோரிடம் திருமண வாழ்க்கை நரகமாகிவிட்டதாக பலமுறை குடும்பத்தினரிடம் கூறியிருந்த ட்விஷா தற்போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12-ம் தேதி இரவு 10 மணியளவில் ட்விஷா தனது தாயை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

கணவர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகவும் அவர் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் பேசிக்கொண்டிருந்த வேளையில், திடீரென அவரது கணவர் அறைக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். 

துண்டிக்கப்பட்ட செல்போன் அழைப்பு:

தனது மகள் செல்போன் துண்டிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ட்விஷாவின் பெற்றோர் அவரது கணவர் சமர்த் சிங்கையும், மாமியார் கிரிபாலா சிங்கையும் பலமுறை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். யாரும் அழைப்பை எடுக்காத நிலையில், சுமார் 10 நிமிடங்கள் கழித்து மாமியார் கிரிபாலா சிங் அழைப்பை ஏற்று, ட்விஷா மூச்சுவிடல என்று கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக ட்விஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 5 கிலோ மீட்டர் தூரத்தில் மருத்துவமனை இருந்ததாக கூறப்படும் நிலையில், வேண்டுமென்றே மருத்துவ உதவி வழங்க தாமதம் ஏற்படுத்தி தனது மகளை அவரது கணவர் வீட்டார் அநியாயமாக கொன்றுவிட்டதாக வேதனை தெரிவித்தனர்

மேலும் படிக்க| 13 வயது சிறுவன் கொலை... அடித்துக் கொன்ற நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி

ஹர்சித் ஷர்மாவின் வாக்குமூலம்:

ட்விஷாவின் மரணம் குறித்து பேசிய அவரது சகோதரரான இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஹர்ஷித் ஷர்மா, “என் சகோதரை தொடர்ந்து குடும்ப வன்முறைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்ததாகவும், கர்ப்பமாக இருந்தபோது குழந்தையை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று கணவர் மற்றும் மாமியார் கடுமையான அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இது வரையில் அவரை உடல் ரீதியாக புண்படுத்தி வந்த கணவர் குடும்பத்தினர், மன ரீதியாக அவர் மீதான நடத்தை குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். கர்ப்பம் தரித்திருந்த ட்விஷா அவருக்கு முறையற்ற உறவில் குழந்தை உருவானதாக மேலும் அவர் மீது பகிர் குற்றச்சாட்டுக்களை கணவர் குடும்பத்தார் அடுக்கியுள்ளனர். 

அவரை மன ரீதியாக துன்புறுத்தியது போதாமல், மேலும் ட்விஷாவின் தந்தை திருமணத்திற்கு பரிசாக வழங்கிய 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகள் மற்றும் முதலீடுகளை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார். இந்த வேளையில் மர்மமான முறையில் இறந்த ட்விஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

ட்விஷா உயிருடன் இருக்கும்போதே கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டதாகவும், அவரது உடலில் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்திருக்கிறது. மேலும் சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ட்விஷாவின் கணவர் வழக்கறிஞர் என்பதாலும், அவரது மாமியார் ஓய்வுபெற்ற நீதிபதி என்பதாலும் ஆதாரங்கள் சிதைக்கப்படலாம் என அச்ச்சப்படும் குடும்பத்தினர் அவர்களது வீட்டை உடனடியாக சீல் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வரதட்சனை கொடுமை மற்றும் கொலை வழக்கு ஆகிய பிரிவுகளின் கீழ் சமர்த் சிங் மற்றும் கிரிபாலா சிங் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இளம்பெண்ணை வரதட்சனைக் கொடுமைப்படுத்தி தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

மேலும் படிக்க| ஆசிரியர் செய்த வேலை.. விபரீத முடிவு எடுத்த 16 வயது சிறுமி.. ஷாக் சம்பவம் பிரேத பரிசோதனை அறிக்கை:

0
0
Report
Advertisement

இளையராஜாவை கேலி செய்த விவகாரம்..வருத்தம் தெரிவித்த ‘கருப்பு’ படக்குழு!

Chennai, Tamil Nadu:

Karuppu Team Regrets Mocking Ilaiyaraaja : கடந்த 15ஆம் தேதி வெளியான திரைப்படம், கருப்பு. இந்த படத்தில்,  ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடித்ததோடு படத்தை எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து காெள்வோம்.

கருப்பு திரைப்படம்:

சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் முன்னர் ஹிட் அடித்திருந்த நிலையில், படமும் வெளியான பிறகு நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தில் ஓரிரு இடங்களில் இசை சரியாக கேட்கவில்லை என்பது ரசிகர்களின் விமர்சனமாக இருந்தது. இதையடுத்து, இத்திரைப்படத்தின் இசை ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது இந்த படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | நடிகை ஸ்ரீலீலா காதலிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்? தாயார் சொன்ன உண்மை!

இளையராஜாவை கலாய்த்த காட்சி!

இசையுலகின் ராஜாவாகவும், 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இசை ஜாம்பவானாகவும் திகழ்பவர் இசைஞானி இளையராஜா. இவர், மஞ்சுமெல் பாய்ஸ், குட் பேட் அக்லி, கூலி உள்ளிட்ட பல படங்களில் தன் பாடல்கள் அனுமதி கேட்காமல் உபயோகிக்கப்பட்ட போது, தனது காப்புரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை வைத்து ‘கருப்பு’ படத்தில் கேலி செய்ய பட்டிருந்தது.

1985ல் வெளியான அலை ஓசை என்கிற படத்தில் வெளியான பாடல் இது. இதனை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். இந்த பாடல், பரியேறும் பெருமாள் படத்தில் போராட்டத்திற்கான பாடலாக உபயோகிக்கப்பட்டிருக்கும். அப்போதிருந்து இந்த பாடல், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்த பாடலாகும்.

‘கருப்பு’ படத்தில், ஏழுகிணறு எனும் நீதிமன்றத்தை சேர்ந்த அனைவரும் தங்களது கட்டடம் இடிந்து விழுந்ததால், இதனை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்துவர். படத்தில், இந்த போராட்டம் நடத்தும் போது அவர்கள் “போராடடா” எனும் பாட்டை உபயோகித்திருப்பர். கடைசியில், “தன் பாடலை உபயோகித்ததற்காக வழக்கறிஞர்கள் மீது இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்” என செய்திகள் வெளியில் வரும்.

ஏற்படுத்திய சர்ச்சை:

கருப்பு படத்தில், இது போல தனது உரிமைக்காக போராடும் இளையராஜாவை, ஒரு நகைச்சுவை எலிமெண்டாக சித்தரித்தது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், அனைவரும் கருப்பு படக்குழுவிற்கும், குறிப்பாக ஆர்.ஜே.பாலாஜிக்கும் கண்டனங்களை தெரிவித்தனர். இளையராஜாவின் சட்டப்போராட்டத்தை இப்படி கேலி செய்து எப்படி எடுக்க முடியும் என்பது கண்டனம் தெரிவித்தவர்களின் குரலாக இருந்தது. இதையடுத்து, படக்குழு இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பதிவு!

கருப்பு திரைப்படத்தை தயாரித்த ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம், சமீபத்தில் எழுந்துள்ள இந்த பிரச்சனை குறித்து விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், “மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு, "கருப்பு" திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.

50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

படம்  கருப்பு
சர்ச்சை இளையராஜாவின் காப்புரிமையை கேலி செய்த விவகாரம்
ரசிகர்கள் ரியாக்‌ஷன் சமூக வலைதளங்களில் கண்டனம்
படக்குழு ரியாக்‌ஷன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது
ஏற்பட்ட மாற்றம் இளையராஜ தொடர்பான காட்சி படத்திலிருந்து நீக்கம்

மேலும் படிக்க | கருப்பு பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்! ரிலீஸான நான்கு நாட்களில் இத்தனை கோடியா?

காட்சி நீக்கம்!

50 வருடங்களுக்கும் மேலாக, இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ சிறிதளவும் இல்லை என கருப்பு படக்குழு விளக்கமளித்து, வருத்தம் தெரிவித்ததையடுத்து இன்னொரு மூவ்-ஐயும் எடுத்துள்ளது. கருப்பு படத்தில் இளையராஜா தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. 

மொத்த வசூல்..

சூர்யாவிற்கு கடந்த13 வருடங்களில், நல்ல வெற்றியை கொடுத்த படமாக இருக்கிறது, கருப்பு. கடைசியாக வெளியான கங்குவா மற்றும் ரெட்ரோ உள்ளிட்ட திரைப்படங்கள் கவிழ்த்துவிட்ட நிலையில், சூர்யாவிற்கு இந்த வெற்றி தேவைப்படும் ஒன்றாக இருந்தது. இப்படம், வெளியான 4 நாட்களில் சுமார் ரூ.147 கோடி வரை வசூலித்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த வசூல் ரூ.60 கோடியை கடந்தது. படத்தின் ரிலீஸ் தேதியான 14ஆம் தேதி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்த நிதி பிரச்சனை காரணமாக, இப்படத்தை அன்றைய தினத்தில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இதையடுத்து, ஆர்.ஜே.பாலாஜிக்கும் சரி, சூர்யாவிற்கும் சரி இந்த படம் இப்படி நல்ல வெற்றியை தந்துள்ளது பெரு மகிழ்ச்சியை தந்துள்ளது. அடுத்தடுத்து புதிதாக எந்த புதிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதாலும், இது சம்மர் லீவ் சமயம் என்பதாலும் கண்டிப்பாக இந்த படம் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்று தியேட்டரில் நன்றாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த ஓடிடியில் வெளியாகும்?

கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது. படம் தியேட்டரில் வெளியாகி 48 நாட்களுக்கு பிறகு, வழக்கமாக படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும். அப்படி, இந்த படத்தின் அப்டேட்டும் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ’கருப்பு’ திரைப்படம் இத்தனை படங்களின் காப்பியா? RJB-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்!

0
0
Report

சால்வை, பேனர் வேண்டாம், குறைகளைச் சொல்லுங்க! சேலம் தெற்கு தவெக எம்.எல்.ஏ தரமான சம்பவம்

Salem, Tamil Nadu:

Salem South TVK MLA: சேலம் தெற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அ. விஜய் தமிழன் பார்த்திபன் அரசியலில் புதிய ட்ரெண்டை உருவாக்கி மாஸ் காட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் தொடங்கிய 'Digital Help Desk' அத்தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. ரமணா படத்தில் வரும், 'யாருப்பா அவரு? எனக்கே அவர பார்க்கணும் போல இருக்கே!' என பலரும் எண்ணும் வகையில், சில அதிரடி அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். "நோ பிளக்ஸ், நோ பேனர், நோ சால்வை.... ஒன்லி பப்ளிக் சர்வீஸ்!" என்ற ரீதியில் தொகுதி மக்களின் குறைகளுக்கு டிஜிட்டல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சேலம் தெற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ தமிழன் பார்த்திபன்.

மக்கள் முதல்வர் விஜய்

தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். மாற்றத்திற்கான விடையாக, ஊழலின் எதிர்ப்பாக, பெண்களின் பாதுகாவலனாக, தங்கள் வீட்டில் ஒருவராக பெரும்பாலான மக்கள் சேர்ந்து அவரை சி.எம். பதவியில் அமர வைத்துள்ளார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகளும், பதவி ஏற்பு விழா உரையில் தெரிந்து அர்ப்பணிப்பும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழகம் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தைக் காணும்.

மேலும்  படிக்க | CM விஜய் வாங்கும் மாத சம்பளம் எவ்வளவு? சலுகைகள் என்னென்ன?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பு

முதல்வராக பதவி ஏற்ற உடனேயே அவர் கூறிய சில விஷயங்கள் பலரது கவனத்தை கவர்ந்தன. மாநிலத்தின் முதலமைச்சராக தான் என்ன செய்வேன் என கூறியது மட்டுமல்லாமல், தனது கட்சியில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் கோடிட்டுக்காட்டினார். இது மக்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. 

முதல் பந்திலேயே சிக்சர்

முதலமைச்சராக அனைவரது பாராட்டையும் உடனடியாக பெறுவது சாத்தியம் இல்லை. அதற்கு சிறிது காலம் செல்ல வேண்டும். ஆனால், தொடக்கம் நன்றாக இருந்தால், தொடர்வதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு பிறக்கும். அந்த வகையில் முதல்வர் விஜய் முதல் பந்திலேயே சிக்சர் அடித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். பதவியேற்பு விழா மேடையிலேயே, பொதுமக்களுக்கு 200 யூனிட்கள் இலவச மின்சாரம், பெண்களுக்கு சிங்கப் பெண் அதிரடிப்படை, போதை பொருட்களுக்கு எதிரான போதைப்பொருள் தடுப்புப் படைகள் என்று 3 முக்கிய திட்டங்களை அறிவித்தார். இதன் மூலம் மக்கள் மனதிலும் நம்பிக்கையை வித்திட்டுள்ளார்.

முதல்வர் எவ்வழி எம்.எல்.ஏ -களும் அவ்வழி

தமிழக முதல்வர் விஜய் மட்டுமல்லாமல், அவரது கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மக்களுக்கான பணிகளை செய்வதிலும், குறைகளை தீர்க்கும் முயற்சிகளை எடுப்பதிலும் மக்களுடன் தொடர்பில் இருக்க அக்கறை காட்டுவதிலும் முனைப்புடன் இருப்பதை பார்க்க முடிகின்றது.

மேலும்  படிக்க | Tamil Nadu News LIVE : பெட்ரோல், டீசல் விலை உயர்வு; அதிமுக மா.செ கூட்டம்; கனமழை எச்சரிக்கை

சேலம் தெற்கு எம்.எல்.ஏ முக்கிய அறிவிப்பு

அந்த வகையில், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழன் பார்த்திபனின் செயல்கள் மக்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகின்றன. சமீபத்தில் தனது X தளத்தில் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். 

ஃப்ளெக்ஸ், பேனர்கள் மற்றும் பதாகைகள் குறித்து கூறியுள்ள அவர், தன்னை வரவேற்கும் நோக்கில் பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகள் வைப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளில் சால்வை அணிவித்தல், பூங்கொத்து வழங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ள அவர், அதற்கு பதிலாக, ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரிசி, பருப்பு, எண்ணெய், மாணவர்களுக்கான பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களை வழங்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.

கழகத் தோழர்கள் கடைபிடிக்க வேண்டிய  கண்ணியம், பொறுமை மற்றும் நாகரிகமான அணுகுமுறை பற்றியும் அவர் விளக்கியுள்ளார். இவை தவிர இன்னும் சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தனது சட்டமன்ற தொகுதியில் நிகழும் ஒவ்வொரு செயலிலும் நேர்மறையான செயல்பாடுகளையும், நாகரிகமான நடவடிக்கைகளையும், வெளிப்படையான மக்கள் நல பணிகளையும் அவர் எதிர்பார்க்கிறார் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.

சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ

பெயர் அ விஜய் தமிழன் பார்த்திபன்
கட்சி தவெக
தொகுதி சேலம் தெற்கு
2026 சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் 91,371
சேலம் தெற்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை  2,26,851

டிஃபென்ஸ் வைக்காமல் அடித்து ஆடும் சேலம் தெற்கு எம்.எல்.ஏ

மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழன் பார்த்திபன் பல வகையில் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். அதில் குறிப்பிடப்பட வேண்டியது மக்களுக்கான ' Digital help desk. இதை தொடக்கி வைத்து தனது X தளத்தில் பதிவிட்ட அவர், தன்னை மக்கள் ஒரு பதவிக்காக தேர்ந்தெடுக்கவில்லை என்றும், அவர்களது குரலாகத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார். வீட்டு பிரச்சனை முதல் பகுதியின் தேவைகள் வரை அனைத்தையும் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே தன்னிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

மக்கள் தன்னை தொடர்பு கொள்ளும் வகையில் கீழுள்ள முக்கிய விவரங்களை பகிர்ந்துள்ள அவர், தன்னை வீட்டின் ஒரு உறுப்பினராக எண்ணி குறைகளை பகிர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.

  • தொலைபேசி அழைப்புக்கான எண்கள்: 96550 28999, 96556 06999.
  • காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.
  • 24×7 வாட்ஸ் அப் வசதி மூலம் எந்த நேரத்திலும் உங்கள் புகார்கள், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பலாம்.

மக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

மக்களிடம் வரவேற்பு

சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.பார்த்திபனின் இந்த முன்னெடுப்பு மக்களிடையே வரவேற்பையும், உற்சாகத்தையும் பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றவுடன் தொகுதியை திரும்பிக்கூட பார்க்காத சட்டமன்ற உறுப்பினர்களையே பெரும்பாலும் காணும் மக்களுக்கு இந்த அணுகுமுறை சற்று வித்தியாசமாகத் தான் இருக்கிறது.

மேலும்  படிக்க | முதல்வர் விஜய் - சூப்பர் ஸ்டார் ரஜினி சந்திப்பு நடக்குமா? எகிறும் எதிர்பார்ப்பு!

0
0
Report
Advertisement

ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு?

Mumbai, Maharashtra:

ஐபிஎல் 2026 தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி தனது அடுத்த சர்வதேச பணிக்கு தயாராகி வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வரும் மே 19ம் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வுக்குழு எடுக்கும் முக்கிய முடிவுகள் குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. ஜூன் 6ம் தேதி தொடங்கும் ஒரே டெஸ்ட் போட்டி, ஜூன் 14, 17 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளுக்கு முன்னோட்டமாக அமையும். ஐபிஎல் முடிந்த உடனேயே இந்தியா சர்வதேச அரங்கிற்கு திரும்புவதால், அணித் தேர்வு மிகவும் கவனமாக செய்யப்படவுள்ளது.

மேலும் படிக்க: ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு! யாரும் வெளியே வரக் கூடாது!

பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ செயலாளர் சமீபத்தில் தெரிவித்த தகவலின்படி, தேர்வுக்குழு மே 19ம் தேதி கூடுகிறது. அதே கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம், சில முக்கிய வீரர்களின் பெயர்கள் உறுதியாகவோ அல்லது புறக்கணிக்கப்படவோ வாய்ப்பு இருக்கிறது. இந்த அணி தேர்வில் அதிக கவனம் பெறும் விஷயங்களில் ஒன்று ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமை மேலாண்மை ஆகும். தொடர்ச்சியாக பல போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்படலாம் என தகவல் கூறுகிறது. டெஸ்ட் போட்டிக்காக அவரை முழுமையாகத் தேர்வு செய்யாமல் இருக்கவும், அல்லது ஒருநாள் தொடரில் மட்டுமே பயன்படுத்தவும் தேர்வுக்குழு யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் அணி

டெஸ்ட் அணியில் ஷுப்மன் கில் மீண்டும் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் தலைமுறையை முன்னிறுத்தும் அணுகுமுறையுடன், சில புதிய முகங்கள் டெஸ்ட் அணியில் இடம்பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த ஒரே டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றின் ஒரு பகுதியாக இல்லாததால், தேர்வுக்குழு சில பரிசோதனை முடிவுகளையும் எடுக்க வாய்ப்பு உள்ளது.

ஒருநாள் அணியை பொறுத்தவரை, சமீபத்திய ஃபார்மை அடிப்படையாக வைத்து சில மாற்றங்கள் வரலாம். குறிப்பாக, விக்கெட் கீப்பர்-பேட்டிங் இடத்தில் புதிய தேர்வுகள் பரிசீலிக்கப்படலாம். சில மூத்த வீரர்களுக்கு பதிலாக, தற்போது ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது.

இந்தத் தொடரின் அட்டவணை இந்திய அணிக்காக சவாலாகவும், வாய்ப்பாகவும் இருக்கிறது. ஐபிஎல் முடிந்த உடனே தேர்வுக்குழு அணியை அறிவிக்க வேண்டிய சூழல் இருப்பதால், வீரர்களின் உடல் நிலை, சமீபத்திய செயல்பாடு, எதிர்கால திட்டம் ஆகியவை அனைத்தும் கணக்கில் எடுக்கப்படும். மேலும், ஜூன் மாத போட்டிகளுக்காக பயிற்சி ஏற்பாடுகளும் அதற்கேற்ற வகையில் அமைய வேண்டியிருக்கும்.

ஆப்கானிஸ்தான் தொடர்

ரை இந்திய கிரிக்கெட்டின் மறுசீரமைப்பு கட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து நடைபெறவுள்ள பெரிய தொடர்களை மனதில் வைத்து, இந்தத் தொடரில் சில இளம் வீரர்களை களமிறக்கி அவர்களுக்கு சர்வதேச அனுபவம் வழங்குவதற்கு பிசிசிஐ விரும்பலாம். அதே நேரத்தில், டெஸ்ட் அணியின் நிலைத்தன்மையும் பாதிக்கப்படக்கூடாது என்பது தேர்வுக்குழுவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அடுத்த சில வாரங்களுக்கு இந்திய கிரிக்கெட்டில் முக்கிய தலைப்பாக இருக்கும். பும்ராவுக்கு ஓய்வு கிடைக்குமா, கில் டெஸ்ட் அணியை முன்னிலை வகிப்பாரா, ஒருநாள் அணியில் யார் இடம்பிடிப்பார் என்பதெல்லாம் விரைவில் தெளிவாகும்.

இந்திய அணி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் மட்டும் அல்லாமல், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆய்வாளர்கள், தேர்வாளர்களின் முடிவுகளை உற்றுப் பார்ப்பார்கள். ஆப்கானிஸ்தான் தொடர், இந்திய அணியின் அடுத்த கட்டப் பயணத்தை சுட்டிக்காட்டும் ஒரு முக்கியக் கட்டமாகவே கருதப்படுகிறது.

மேலும் படிக்க: CSK vs SRH: சேப்பாக்கில் கடைசி போட்டி.. விளையாடும் தோனி? பிளேயிங் 11 இதுதான்!

0
0
Report

96 பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில்! பூஜையுடன் துவங்கியது!

Chennai, Tamil Nadu:

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  தயாரிப்பில்  “96, மெய்யழகன்"  படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி  K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜெயலலிதாவிற்கும் த்ரிஷாவிற்கும் இருக்கும் ஒற்றுமைகள்! கம்பேர் செய்யும் ரசிகர்கள்..

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு  இசையமைத்த கோவிந்த் வசந்தா  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

மேலும் படிக்க | த்ரிஷாவுக்கு செம்ம ஜாக்பாட்! ஒரே டைமில் ரெண்டு ஹேப்பி நியூஸ்..என்ன தெரியுமா?

 

 
0
0
Report
Advertisement
Advertisement
Back to top