பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்... நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம் - நிபந்தனை என்ன?
Chennai, Tamil Nadu:Senthil Balaji Anticpatory Bail: செந்தில் பாலாஜிக்கும், அவரது இளைய சகோதரர் அசேக் குமாருக்கும் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். தினமும் காலை மற்றும் மாலை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தம் ரத்து... குண்டை போட்ட டிரம்ப் - இனி அடுத்து என்ன நடக்கும்?
Washington, District of Columbia:US Iran War, Donald Trump : ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இனி ஈரான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை எனவும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி போர் நிறுத்தத்தை இறுதி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் மீண்டும் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் வெடித்துள்ளது.
ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி: நாளை (ஜூலை 9) சேலம் மயிலாடுதுறை ரயில் இயக்கத்தில் மாற்றம்
Karur, Tamil Nadu:கூரமங்கலம், சேலம்: ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி! கரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளப் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (ஜூலை 9) அன்று சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.
மயிலாடுதுறை–சேலம் எக்ஸ்பிரஸ்
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்:
மயிலாடுதுறை சந்திப்பிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை–சேலம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16811), விராரக்கியம் நிலையம் வரை மட்டுமே பயணிக்கும். இந்த ரயில் வழக்கத்தை போல விராரக்கியம் மற்றும் சேலம் சந்திப்புக்கு இடையே இயக்கப்படாது.
அதே பொல், சேலம் சந்திப்பிலிருந்து நாளை மதியம் 2.05 மணிக்குக் கிளம்ப வேண்டிய சேலம்–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16812), கரூர் சந்திப்பிலிருந்து மதியம் 3.40 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கும். இந்த ரயில் சேலம் சந்திப்பு மற்றும் கரூர் சந்திப்புக்கு இடையே இயக்கப்படாது. இது கரூர் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி மயிலாடுதுறை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.
மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை (09-07-2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. முழு லிஸ்ட்!
பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ்
பாலக்காடு டவுன் நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16844), கரூர் சந்திப்புடன் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும்.
பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு, வழக்கமான சேவையைப் போலவே அதே நிறுத்தங்களுடன், கரூர் முதல் திருச்சி சந்திப்பு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இது இயக்கப்படும்.
கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து காலை 8 மணிக்குக் கிளம்பும் கோயம்புத்தூர்–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16322), கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் இடையே போத்தனூர், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
இதன் விளைவாக, இந்த ரயில் கோயம்புத்தூர் வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, இங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகலூர், கரூர், பாளையம் மற்றும் எரியோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், போத்தனூர் மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில் தடங்களில் பயணிக்க திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக கோயில்களில் சிரமமில்லா தரிசனம், திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு: அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்ஸ்
Tiruchirappalli, Tamil Nadu:திருச்சி: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் அனைவரும் எந்த விதமான சிரமமும் இல்லாமல் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்படும் என்றும், இந்து அறநிலையத் துறையை மேம்படுத்தும் வகையில் விரைவில் பல வித சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
திருவானைக்காவலில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில், திருவானைக்காவலில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், 'கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பொது நலன் சார்ந்த நடவடிக்கைகளைத் தாமதப்படுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
"இந்து சமய அறநிலையத் துறை விரைவில் சீரமைக்கப்படும். இதற்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது; இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.
குறைகளை அறிந்து, அவற்றை விரைவாகத் தீர்க்க வேண்டும்: முதல்வர் விஜய் உத்தரவு
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளை அறிந்து, அவற்றை விரைவாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். குறைதீர் கூட்டம் போன்ற இத்தகைய சந்திப்புகள் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு
திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனத்துக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், கட்டண உயர்வு தொடர்பாக வெளியான தகவல்களை மறுத்தார். தவெக அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
"நாங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகளையே தொடர்ந்து பின்பற்றுகிறோம். பக்தர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பிறகு அவை மறுஆய்வு செய்யப்படும். மக்களின் நலனுக்கு எதிரான எதையும் நாங்கள் ஒருபோதும் திணிக்க மாட்டோம்," என்று அவர் கூறினார். விஐபி (VIP) தரிசனம் தொடர்பான விவகாரத்தில், அது குறித்த கவலைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும், பக்தர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் போலி இணையதளம்
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் (Yatri Nivas) தங்குவதற்கு இணையவழியில் முன்பதிவு செய்வதாகக் கூறும் பல போலி போர்ட்டல்கள் பற்றிய புகார்கள் பல நாட்களாக இருந்து வந்தன. இது பற்றி குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், போலியான இணையதளங்களை இயக்கி வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தார். யாத்ரி நிவாஸில் முன்பதிவு செய்வதற்காக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:
- தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை குறையின்றி வழங்க விரைவில் நடவடிக்கை.
- திருப்பணிகள், பராமரிப்பின்றி உள்ள கோயில்களுக்கு தேவையன நடவடிக்கைகள், சேதமடைந்த கோயில்கள், மண்டபங்கள், கோபுரங்கள், திருக்குளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சீரமைப்ப விரைவில் நடவடிக்கை.
- விஐபி தரிசன முறையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை.
- ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாசுக்கு அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு இனையதளம்.
- ஸ்ரீரங்கம் கோயிலில் வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்த ஏற்ற இடங்களை தேர்வு செய்வதற்கான ஆய்வு.
மேலும் படிக்க | மாதம் ரூ.63,000 சம்பளம்! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. அஞ்சல் துறையில் சூப்பரான வேலை
தமிமும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை
தமிமும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என கூறிய அமைச்சர் ரமேஷ், இதை கருத்தில்கொண்டு அறநிலைத் துறை பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மெற்கொண்டு வருவதாகவும், அவற்றை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.
தமிழக கோயிகளில் ரகசிய ஆய்வுகள்
தமிழக கோயில்களின் செயல்முறைகள் குறித்து தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில், அறநிலைத் துறையில் பல வித சீர்திருத்தங்கள் படிப்படியாக மெற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில், கோயில்களின் நிலை விரைவில் வியத்தகு வகையில் மேம்படும் என்பதையும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும் படிக்க | பழனி: மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை அறிவித்த தமிழக அரசு.. எப்படி பெறுவது? முழு விவரம்
எகிறிய BP... எகிப்தை அலறவிட்ட அர்ஜென்டினா... கடைசி கட்டத்தில் 3 கோல்!
Atlanta, Georgia:Argentina vs Egypt Highlights: பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் எகிப்து அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி, காலிறுதிக்கு தகுதிபெற்றது.
rgentina have qualified for the Quarter-finals!#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) July 7, 2026
வயநாடு நிலச்சரிவு வீடியோ: மண்ணில் புதைந்த பலரை தேடும் பணி தீவிரம்... IMD ரெட் அலர்ட்
Wayanad, Kerala:வயநாடு, கேரளா: வயநாடு கல்லாடி சுரங்கப் பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் தீவிர மழையைத் தொடர்ந்து, வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது. இந்த நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இதற்கிடையில், காயமடைந்த ஆறு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லாடி பகுதியில் நிலச்சரிவு
மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வரும் 'அனக்கொம்பொயில்-மேப்பாடி' சுரங்கப்பாதை சாலைத் திட்டப் பகுதிக்கு அருகிலுள்ள கல்லாடி (Kalladi) பகுதியில், மீனாட்சி பாலத்திற்கு அருகில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் கட்டுமானப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் இணைந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர். இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்
தலவல் கிடைத்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (NDRF) மீட்புப் பணிகளில் இணைந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கேரள வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில் குமார், மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 30 பேர் கொண்ட NDRF குழு சம்பவ இடத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நிலச்சரிவுக்கான காரணம் என்ன?
கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் 265 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், இடைவிடாத மழையே இந்த நிலச்சரிவை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கப்பாதை திட்டப் பணியாளர்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட சில வாகனங்கள் இச்சம்பவத்தில் சேதமடைந்தன.
அவசரக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் சதீஷன்
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் வி.டி. சதீஷன் வயநாடு மாவட்ட அமைச்சர் டி. சித்திக்குடன் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மேலும், நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடுமாறு அவருக்கு அறிவுறுத்தினார். நிலைமையைக் கண்காணிக்க, அமைச்சர் சித்திக்குடன் இணைந்து உடனடியாக வயநாடுக்குச் செல்லுமாறு வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில் குமாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வரின் அலுவலகம் தெரிவித்ததாக ஏஎன்ஐ (ANI) செய்தி வெளியிட்டுள்ளது.
மனிதத் தவறால் ஏற்பட்ட நிலச்சரிவு: வேளாண் அமைச்சர் டி. சித்திக்
சுரங்கப் பாதை கட்டுமானப் பணிகளின்போது தோண்டி எடுக்கப்பட்ட மண்ணையும் பாறைகளையும் "அறிவியல் பூர்வமற்ற முறையில் கொட்டியதே" நிலச்சரிவுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டிய வேளாண் அமைச்சர் டி. சித்திக், முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் இந்தத் துயரத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
"இது இயற்கையாக நிகழ்ந்த நிலச்சரிவு அல்ல; மனிதத் தவறால் ஏற்பட்ட நிலச்சரிவு. தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை அறிவியல் பூர்வமற்ற முறையில் கொட்டியதாலேயே இது நிகழ்ந்துள்ளது," என்று அவர் கூறினார். "சுரங்கப் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக மண் மற்றும் சேற்றை அறிவியல் பூர்வமற்ற முறையில் கொட்டியதால் ஏற்பட்ட பேரழிவு இது. இத்தகைய நடவடிக்கைகள் குறித்த அறிகுறிகள் தென்பட்டன; கொங்கண் பகுதி அதிகாரிகளின் கூட்டங்களிலும் இது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், எவ்விதத் திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.
இதுவரை ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோடு மற்றும் வயநாட்டிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களைத் தேடும் பணியும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றும் சித்திக் மேலும் தெரிவித்தார்.
A landslide at the Kalladi tunnel work site in #Wayanad blocked the road and injured 5 people. They have been taken to the hospital. No deaths have been reported. Work at the site had already been stopped because of heavy rain. The area received 265 mm of rain in the last 24… pic.twitter.com/3LrpPhR0gM
— Ashish (@KP_Aashish) July 7, 2026
வயநாட்டிற்கு IMD 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert)
மானந்தவாடி மற்றும் வைத்திரியில் கனமழை பதிவானதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கல்லாடி சுரங்கப் பாதை திட்டப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்தது.
அண்டை மாவட்டமான கோழிக்கோட்டிற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளையில் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' (Orange Alert) விடுக்கப்பட்டது.
மேலும் படிக்க | காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இன்று மழை வெளுக்கும்.. எந்தெந்த மாவட்டங்கள்?
வயநாடும் நிலச்சரிவுகளும்
கடந்த காலங்களில் வயநாட்டில் நிலச்சரிவுகள் பலமுறை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பல தசாப்தங்களாக இப்பகுதி பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலச்சரிவுச் சம்பவங்களைக் கண்டுள்ளது.
சமீபத்திய காலங்களில் மிகவும் பேரழிவை ஏற்படுத்திய சம்பவம் ஜூலை 30, 2024 அன்று நிகழ்ந்தது. அப்போது வயநாட்டில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதிகாலை 1:30 மணி முதல் 4:00 மணிக்குள் இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உறங்கிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலச்சரிவு சுமார் 86,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது; இதன் தொடக்கப் புள்ளி (crown) கடல் மட்டத்திலிருந்து (MSL) சுமார் 1,550 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்தது. நிலச்சரிவினால் உருவான மண் மற்றும் பாறைப் பொருட்களின் ஓட்டம் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரை பரவியிருந்தது. அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இத்துயரச் சம்பவத்தில் 298 பேர் உயிரிழந்தனர்.
வயநாட்டில் நிலச்சரிவுகளின் வரலாறு
வயநாட்டில் நிலச்சரிவுகள் ஏற்படும் வரலாறு பல தசாப்தங்களாக நீடிக்கிறது.
- 1984-ல் நிகழ்ந்த முண்டக்கை நிலச்சரிவு 14 பேரின் உயிரைப் பறித்ததோடு, வளமான விவசாய நிலங்களையும் அழித்தது.
- 1992-ல் படிஞ்சாரத்தாரா அருகே ஏற்பட்ட கப்பிக்களம் நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர்.
- மற்றொரு முக்கிய சம்பவமான, 2007 ஜூன் 23 அன்று நிகழ்ந்த வளம் தோடு நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஜோலார்பேட்டை: இன்ஸ்டாகிராம் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை, சோகத்தில் மூழ்கிய கிராமம்!
Jolarpet, Tamil Nadu:ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, செல்போனில் இன்ஸ்டாகிராம் பார்த்ததை பெற்றோர்கள் கண்டித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமால் நேர்ந்த விபரீதம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகள் சுதா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ வகுப்பில் படித்து வந்தார். சுதாவுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியொக்கள் மற்றும் பிற பதிவுகளை பார்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், நேற்று மாலை மாணவி சுதா வீட்டில் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் (Instagram) பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில் படிக்காமல் ஏன் செல்போன் பார்க்கிறாய் என பெற்றோர்கள் சுதாவை கண்டித்ததாகத் தெரிகிறது. வழக்கமாக எப்போதும் கண்டிப்பதை போலவே பெற்றோர் இம்முறையும் சுதாவை கண்டித்துள்ளனர். ஆனால், அதன் விளைவு யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது.
மகள் எடுத்த விபரீத முடிவு
பெற்றோர்கள் கண்டித்ததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சுதா, உடனடியாக வீட்டின் அறைக்குச் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சுதாவை கதவை திறக்குமாறு சத்தம் போட்டுள்ளனர். ஆனால், உள்ளே இருந்து எந்தப் பதிலும் வராததால், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சுதா அறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர்
தூக்கில் தொங்கிய சுதாவை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜோலார்பேட்டை போலீசார் தீவிர விசாரணை
மகள் உயிரிழந்தது குறித்து மாணவியின் தந்தை சுபாஷ் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவி செல்போன் பார்த்ததை கண்டித்ததற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. இன்னல்கள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!
உங்களையோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களையோ ஏதேனும் மன உளைச்சல் அல்லது தற்கொலை எண்ணங்கள் பாதித்தால், கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்:
மாநில அரசு உதவி எண்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050
மேலும் படிக்க | நானே அரசுப் பள்ளி மாணவி தான்! உண்மை என்ன தெரியுமா? அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
7வது முறை சாம்பியன்... மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி
England:ICC Women's T20 World Cup 2026, Australia vs England: 10வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2010, 2012, 2014, 2018, 2020, 2023 ஆகிய தொடர்களில் மகளிர் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது.
முப்பாட்டன் முருகன் வட நாட்டு கடவுளா...? பாயிண்ட் பாயிண்டாக கிழித்த சீமான்!
Chennai, Tamil Nadu:Lord Murugan, NTK Seeman : முருகப்பெருமான் வரலாற்றை திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்ட அறிக்கையில், "முருகப்பெருமானை மையப்படுத்தி என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், முருகன் வடநாட்டில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க | தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. அதிர்ச்சியில் அறிவாலயம்! யார் தெரியுமா?
தமிழரின் மெய்யியல் கோட்பாடு
சீமான் அவரது பதிவில், "50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும்.
இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது.
திரிபுகள் திணிப்பை அனுமதிக்க முடியாது...
அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும். அப்படியிருக்க கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றார்.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுள் என திருடிச்சேர்த்துக் கொண்டனர்.
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 5, 2026
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர்… pic.twitter.com/1zTIwtooi3
கடவுள்களை அபகரித்துவிட்டனர்...
தமிழர் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர் என்றும்; அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள்; கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள்; திருமாலை விஷ்ணுவாக்கினார்கள்; கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள்; சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்" என சீறியுள்ளார்.
மேலும் படிக்க | மக்களே அலர்ட்.. தமிழகத்தில் நாளை மின்தடை! 8 மணி நேர பவர் கட் எங்கெல்லாம்?
தமிழ்க்கடவுள் முருகன்
தொடர்ந்து, முருகன் குறித்து தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சீமான் பட்டியிலிட்டுள்ளார். அதில், "இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான். தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான்.
அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று.
முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
தமிழ் இலக்கியங்களில் முருகன்...
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன.
மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம்...
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன.
எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். வணிகத்திற்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது...
ஆகவே, முருகப்பெருமான் வட மாநிலங்களில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிப்பதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ்த்திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும்.
அரசுக்கு கோரிக்கை...
இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்ப் பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ, தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்" என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் படிக்க | துணை முதல்வராகும் திருமாவளவன்.. திருச்சி கிழக்கில் போட்டி? விசிகவினர் செய்த சம்பவம்
FIFA WC : மெஸ்ஸியை மிஞ்சும் எம்பாப்பே... கோல்டன் பூட் ரேஸில் அடிதடி
Philadelphia, Pennsylvania:FIFA World Cup 2026, Golden Boot Race : பிபா உலகக் கோப்பை 2026 தொடரின், நாக் அவுட் சுற்று போட்டிகள் உச்சக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது. ரவுண்ட் ஆப் 16 சுற்று போட்டிகள் இந்திய நேரப்படி நேற்று (ஜூலை 4) தொடங்கியது.
ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மொராக்கோ, பிரான்ஸ் அணிகள் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. இன்னும் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் ஆறு போட்டிகள் மீதம் உள்ளன. ஜூலை 8ஆம் தேதிவரை ரவுண்ட் ஆப் 16 தொடர் நடைபெறுகிறது.
வரும் ஜூலை 10ஆம் தேதி காலிறுதிச் சுற்று போட்டிகள் தொடங்குகிறது. அன்று முதல் போட்டியில் மொராக்கோ - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜூலை 15, 16 தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜூலை 18ஆம் தேதி மூன்றாவது இடத்திற்கு போட்டியும்; ஜூலை 20ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற இருக்கிறது.
இந்தச் சூழலில், நடப்பு பிபா உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியுடன், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேவும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இருவரும் தலா 7 கோல்களை அடித்துள்ளனர்.
அடுத்து நார்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹோலேண்ட் மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் ஆகியோர் தலா 5 கோல்களை அடித்துள்ளனர். இவர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு நேரடி செக்... சம்மன் கொடுத்த போலீசார் - அடுத்தது என்ன?
Karur, Tamil Nadu:Senthil Balaji : தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது இளைய சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருவரும் விசாரணைக்கு ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இன்று எந்தெந்த ராசிகளுக்கு நல்ல நாள்...? ஜூலை 4 ராசிபலன் இதோ!
Chennai, Tamil Nadu:மேஷம்
கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரிஷபம்
தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலை காணப்படும். கல்வி சார்ந்த துறைகளில் இருப்போருக்கு முன்னேற்றம் உண்டாகும். கால்நடை செயல்களில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த தெளிவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : நுட்பங்களை அறிவீர்கள்.
மிருகசீரிஷம் : தெளிவுகள் ஏற்படும்.
மிதுனம்
மனதில் தேவையில்லாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சிகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். கடன் முயற்சிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சிகள் ஏற்படும்.
திருவாதிரை : அனுபவம் மேம்படும்.
புனர்பூசம் : திருப்பங்கள் உண்டாகும்.
கடகம்
உத்தியோக பயணங்களால் அலைச்சல் இருக்கும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய சில பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : அலைச்சல் இருக்கும்.
பூசம் : சோர்வுகள் உண்டாகும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
சிம்மம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். பழகும் தன்மையில் சில மாற்றம் ஏற்படும். தோற்றப்பொலிவு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : வேறுபாடுகள் குறையும்.
பூரம் : நெருக்கடிகள் குறையும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
கன்னி
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது மனதிற்கு நல்லது. உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : புரிதல் உண்டாகும்.
அஸ்தம் : அமைதியான நாள்.
சித்திரை : முடிவுகள் கிடைக்கும்.
துலாம்
முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்வீர்கள். நாவல் பற்றிய ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்
சித்திரை : பாராட்டுக்கள் ஏற்படும்.
சுவாதி : வேறுபாடுகள் விலகும்.
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
மனை மற்றும் வீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். வியாபாரம் நிமித்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
விசாகம் : ஆர்வம் மேம்படும்.
அனுஷம் : நெருக்கடிகள் குறையும்.
கேட்டை : செல்வாக்கு அதிகரிக்கும்.
தனுசு
தாய் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : திருப்தியான நாள்.
மகரம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். இலக்கிய பணிகளில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் சில மாற்றம் ஏற்படும். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : கலகலப்பான நாள்.
கும்பம்
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் அமைதி இன்மை ஏற்படும். சமூக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். கற்றல் பணியில் புதுமையான சூழ்நிலைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
சதயம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : புதுமையான நாள்.
மீனம்
வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : குழப்பங்கள் விலகும்.
ரேவதி : அனுகூலம் ஏற்படும்.
பொறுப்புத் துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது
111வது நிமிடத்தில் காபோ வெர்டே செய்த பெரிய தவறு... அதிர்ஷ்டத்தால் ஜெயித்த அர்ஜென்டினா
Miami Gardens, Florida:Argentina vs Cape Verde Highlights : பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில், கத்துக்குட்டி அணியான காபோ வெர்டே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி தகுதிபெற்றுள்ளது.
Argentina have qualified for the Round of 16!#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) July 4, 2026
111வது நிமிடத்தில் காபோ வெர்டே அணி வீரர் அடித்த சுய கோல் தான் அர்ஜென்டினாவை வெற்றி பெறவைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது... தவெக ஆட்சியில் கைதாகும் முதல் திமுக Ex அமைச்சர் - பின்னணி என்ன?
Authoor, Tamil Nadu:Anitha Radhakrishnan Arrested : திருச்செந்தூரில் கடந்த ஜூன் 20ஆம் தேதி அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை ஒருமையில் பேசியதாகவும், அவதூறாக பேசியதாகவும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நகரச் செயலர் செல்வம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் போலீசார் இன்று (ஜூலை 3) கைது செய்தனர்.
ஆணவம் அழிவிற்கு வழி... CM விஜய்க்கு ஸ்டாலின் வார்னிங் - அனிதா கைதுக்கு கொந்தளிப்பு
Chennai, Tamil Nadu:MK Stalin Condemn Anitha Radhakrishnan Arrest : முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளில் தூத்துக்குடி மாவட்ட ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்தது.
ஸ்டாலின் கண்டனம்
இதைத் தொடர்ந்து, ஆத்தூர் பேரூராட்சி பகுதிக்கு ஆய்வுக்காக வந்திருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரது கைது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அனிதா ராதாகிருஷ்ணனின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Take Diversion அரசு
ஸ்டாலன் அவரது பதிவில், முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு என்றும்; தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் புகாரில்...
மேலும் ஸ்டாலின் அவரது பதிவில், "சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
— M.K.Stalin (@mkstalin) July 3, 2026
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ்… https://t.co/CWcWJJlm3j
இதுதான் மாற்றமா...?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா? என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாற்காலியை தக்கவைக்க...
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர் என விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கனிமொழி கண்டனம்
'ஆணவம் அழிவிற்கு வழி!' என்றும் ஸ்டாலின் தனது பதிவின் கடைசியில் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமின்றி தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழியும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
அவர் தனது X பதிவில், "முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திரு. @ARROffice அவர்களை, தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 3, 2026
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது…
மேலும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு என்றும் இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் திமுக அடிபணியாது என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
