icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

பிரேக்கப்பா? Never! விஜய் பிறந்தநாளுக்கு... மிட்நைட்டில் திரிஷா கொடுத்த சர்ப்ரைஸ்!

Chennai, Tamil Nadu:

Trisha birthday wish for CM Vijay: முதலமைச்சர் விஜய் நேற்று (ஜூன் 22) அவரது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடிகையும் அவரது தோழியுமான திரிஷா இன்று (ஜூன் 23) அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் முன் 5 பிறந்தநாள் கேக்கள் இருக்க, விஜய்க்கு அருகே திரிஷா அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் திரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில், "அனைத்தையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். விஜய் பிறந்தநாளில் நள்ளிரவு 12 மணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0
0
Report

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2026: இந்தியன் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Puducherry, Puducherry:

புதுச்சேரியில் அரசு வங்கியில் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சூப்பரான வாய்ப்பு வந்தாச்சு. புதுச்சேரி இந்தியன் வங்கிக் கிளையில காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கு. தகுதியும் விருப்பமும் உள்ளவங்க உடனே ஆஃப்லைன் (தபால்) மூலமா விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு பத்தின முழு விவரங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை கீழே தெளிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்

அம்சம்

விவரங்கள்

நிறுவனம் இந்தியன் வங்கி (Indian Bank - Puducherry)
பதவியின் பெயர் நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser)
காலியிடங்கள் பல்வேறு (Various)
காலியிடங்கள் பல்வேறு (Various)
கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + நகை மதிப்பீட்டாளர் படிப்பு
பணி அனுபவம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்
சம்பளம் மாதம் ரூ. 15,000 முதல் ரூ. 30,000 வரை (அரசு விதிகளின்படி)
பணியிடம் புதுச்சேரி, தமிழ்நாடு
விண்ணப்பக் கட்டணம் கட்டணம் ஏதுமில்லை (No Fee)

மேலும் படிக்க - காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2026: 21 காலியிடங்கள்.. 12ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஜூன் 19, 2026
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 30, 2026

தகுதி வரம்புகள் (Eligibility Criteria)

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளர் படிப்பை (Jewel Appraiser Course) முடித்திருக்க வேண்டும்.
  • இந்தத் துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் (Experience) இருப்பது கட்டாயமாகும்.

வயது வரம்பு

  • விண்ணப்பதாரர்களின் வயது 25 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை (Selection Process)

விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • திறன் தேர்வு (Skill Test): நகைகளின் தரம் மற்றும் மதிப்பைத் துல்லியமாகக் கண்டறியும் திறன் சோதிக்கப்படும்.
  • நேர்காணல் (Interview): தகுதி பெற்றவர்களுக்கு நேரடியாக நேர்காணல் நடத்தப்பட்டு இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.

மேலும் படிக்க - பணம் இல்லை.. ரூ.1000 உரிமைத் தொகை தற்போது கிடையாது -அரசு கூறும் காரணம் இதுதான்

விண்ணப்பிக்கும் முறை (How to Apply?)

  1. இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  2. முதலில் உங்களுடைய முழு விவரங்கள் அடங்கிய பயோ-டேட்டா (Bio-Data / CV)-வை தயார் செய்து கொள்ளுங்கள்.
  3. அதனுடன் உங்களது கல்விச் சான்றிதழ்கள், நகை மதிப்பீட்டாளர் படிப்புச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை (ஆதார்/பான் கார்டு) ஆகியவற்றின் ஜெராக்ஸ் நகல்களை இணைக்கவும்.
  4. எல்லாவற்றையும் ஒரு கவரில் வைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள மண்டல அலுவலக முகவரிக்கு 30-06-2026 மாலைக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Indian Bank,

Regional Office,

NO 66/4A East Coast Road,

Pakkamudayanpet,

Puducherry - 605008.

கவனிக்க வேண்டிய டிப்ஸ்

  • விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • கடைசி தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்புவதை உறுதி செய்யவும்.
  • அனுபவச் சான்றிதழ் மற்றும் Jewel Appraiser பயிற்சி சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும்.

மேலும் படிக்க - தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : CM விஜய் பிறந்தநாளில் இருந்து அமல் - தமிழக அரசு அறிவிப்பு

0
0
Report

காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2026: 21 காலியிடங்கள்.. 12ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்

Kanchipuram, Tamil Nadu:

காஞ்சிபுரம் மாவட்டம்: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society - DHS) சார்பில் ANM, Multipurpose Health Worker, Lab Technician, TB Health Visitor மற்றும் DRTB Counselor உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு (லிங்க்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பின் மூலம் மொத்தம் 21 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறப்படும் காலம் 22 ஜூன் 2026 முதல் 06 ஜூலை 2026 வரை ஆகும்

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: காஞ்சிபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (DHS)
  • பணியிடங்கள்: ANM, Lab Technician, Health Worker உள்ளிட்டவை
  • மொத்த காலியிடங்கள்: 21
  • வேலை இடம்: காஞ்சிபுரம், தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
  • விண்ணப்ப தொடக்க தேதி: 23-06-2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 06-07-2026
  • தேர்வு முறை: நேர்காணல் (Interview)
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை

மேலும் படிக்க - டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு : விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

கல்வித் தகுதி

ANM

  • 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 2 ஆண்டுகள் ANM பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

Multipurpose Health Worker

  • Multipurpose Health Worker / Health Inspector / Sanitary Inspector தொடர்பான 2 ஆண்டுகள் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Lab Technician

  • DMLT (Diploma in Medical Laboratory Technology) தேர்ச்சி.

TB Health Visitor

  • B.Sc பட்டப்படிப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய பணியனுபவம்.

DRTB Counselor

  • Social Work / Sociology / Psychology துறைகளில் இளங்கலை பட்டம் (Bachelor Degree).

காலியிட விவரங்கள்

பதவி

காலியிடங்கள்

ANM 5
Multipurpose Health Worker 4
Lab Technician 7
TB Health Visitor 4
DRTB Counselor 1

மொத்தம்

21


சம்பள விவரம்

  • ANM -மாத சம்பளம்: ₹17,500
  • Multipurpose Health Worker -மாத சம்பளம்: ₹17,500
  • Lab Technician -மாத சம்பளம்: ₹17,000
  • TB Health Visitor - மாத சம்பளம்: ₹15,000
  • DRTB Counselor - மாத சம்பளம்: ₹15,000

வயது வரம்பு

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறித்த தகவல் குறிப்பிடப்படவில்லை.
  • கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவர்:

  • விண்ணப்பங்கள் பரிசீலனை
  • நேர்காணல் (Interview)
  • ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்

  • எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

மேலும் படிக்க - SBI PO Recruitment 2026: ரூ.48,000 மாத சம்பளம், 1,500 காலிப்பணியிடங்கள்... இப்பவே அப்ளை பண்ணுங்க

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

படி 1

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

படி 2

விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு, தேவையான தகவல்களை பூர்த்தி செய்யவும்.

படி 3

கல்விச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்.

படி 4

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவம் லிங்க்

https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2026/06/17821250066460.pdf

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

Executive Secretary,
District Health Society,
O/o District Health Officer,
Railway Road,
Arignar Anna Memorial TB Centre Campus,
Kanchipuram – 631501.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கும் தேதி: 22 ஜூன் 2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 06 ஜூலை 2026

முக்கியக்குறிப்பு

மருத்துவத் துறையில் அரசு சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வரும் 12ஆம் வகுப்பு, DMLT, B.Sc, BA, BSW, Diploma மற்றும் ITI தகுதியுடையவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதிகளை உறுதி செய்து கொண்டு விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிற

மேலும் படிக்க - BSNL வேலைவாய்ப்பு 2026: ரூ.40,500 சம்பளம், ஜூலை 4 கடைசி தேதி... முழு விவரம் இதோ

0
0
Report
Advertisement

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : CM விஜய் பிறந்தநாளில் இருந்து அமல் - தமிழக அரசு அறிவிப்பு

Chennai, Tamil Nadu:

Thai Maaman Thanga Moodhiram Scheme : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். தவெகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழநாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்றால் என்ன?

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பாரம்பரியத்தில், 'தாய்மாமன் சீர்' என்ற மரபின்படி, முதலமைச்சர் விஜய், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

யார் யாருக்கு தங்க மோதிரம்?

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

இதனால் என்ன பயன்?

  • தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
  • மேலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

எவ்வளவு நிதி?

  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 3755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. 
  • இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் (Tenders) உடனடியாக கோருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

எப்போது முதல் தங்க மோதிரம் கிடைக்கும்?

  • முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான நேற்று முதல் (22 ஜூன், 2026) அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். 
  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கிவைப்பார்.

இன்று அரசாணை வெளியீடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்று (ஜூன் 23) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தாய் சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையை திட்டமிடும் முறை மற்றும் கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இம்முயற்சிகள் மாநிலத்தில் தாய் சேய் நலக் குறியீடுகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளன.

0
0
Report

'கணவனை தேடும் மனைவியின் கதை' விஜய் குட்டிக்கதைக்கு... உதயநிதி பதில் அட்டாக்

Chennai, Tamil Nadu:

CM Vijay vs Udhayanidhi Stalin : ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 18ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையுடன் இன்று (ஜூன் 23) நிறைவடைந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் கடந்த சில நாள்கள் நடைபெற்ற நிலையில், இன்று முதலமைச்சர் பதிலுரை ஆற்றினார். 

இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நேற்றைய (ஜூன் 22) குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் விஜய் சட்டப்பேரவையில் உரையாற்றினார். விஜய்யின் பேச்சுக்கு இடையே திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

மேலும் படிக்க | திமுகவை கடுபேற்றிய முதலமைச்சர் விஜய்யின் அந்த ஒரு வார்த்தை! அமளி துமளியான சட்டப்பேரவை

'சட்டப்பேரவையில் நடிக்கும் முதல்வர்'

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது X பக்கத்தில், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், "சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted (எழுதிகொடுக்கப்பட்ட) அவதூறுகளை அள்ளிவீசி acting performance (நடித்துக்) காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் லைவ் கேமராவை, சினிமா கேமரா என்று நினைத்துக்கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி சிங்கிள் டேக்கில் ஷூட் செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல என்றும் விஜய்யின் பேச்சை கடுமையாக சாடி உள்ளார்.

முதல்வரிடம் எந்த பதிலும் இல்லை...

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பஞ்ச் டயலாக்கும் மட்டும்தான் இருந்ததே தவிர, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது என்றும் உதயநிதி பேசி உள்ளார்.

உதயநிதி அதிரடி அட்டாக் 

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது என்றும்; செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும் என்றும் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | “அப்பா எங்கப்பா?” CM விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி-குலுங்கி சிரித்த EPS! வைரல் மொமண்ட்..

குட்டிக்கதை vs விவாகரத்து

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஒரு குட்டிக் கதை சொல்லியிருந்தார். 'எங்கப்பா உங்க அப்பாவ காணோம்' என விஜய் பேசியிருந்தார். அதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே இல்லை என்பதை சைலண்டாக விமர்சித்திருந்தார். 

இதற்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது விஜய்யின் விவாகரத்து வழக்கை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவரது X பதிவின் இறுதியில், ஆகவே விஜய் தான் நடிகர் என்பதை மறந்து, இனியாவது முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க | அனைத்து ஊழல்களும் தோண்டி எடுக்கப்படும், யாரும் தப்பிக்க முடியாது - முதலமைச்சர் விஜய்

0
0
Report

புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி நகை திருட்டு: கோவையில் கொடூரம்

Coimbatore, Tamil Nadu:

கோயம்புத்தூர்: கோவையில் புதைக்கப்பட்ட ஒரு நபரின் உடலைத் தோண்டி எடுத்து, அவர் உடலில் இருந்த தங்கச் சங்கிலியை சிலர் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு அமைதியான மயானத்தில், உயிர் இழந்து மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கூட மீன் வியாபாரி எதிர்கொண்ட இந்த வினோத கொடுமை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மயான ஊழியர் உட்பட மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை சௌரிபாளையத்தின் சம்பவம்

கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (60). மீன் வியாபாரியான இவர், கடந்த ஜூன் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். நாகராஜுவின் உடலை அவரது மகன் வெங்கடேஷ் சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்தார். நாகராஜுக்கு மீன் வடிவிலான பதக்கம் (Pendant) கொண்ட தங்கச் சங்கிலி என்றால் மிகவும் பிடிக்கும். அதனை அவர் எப்போதும் அணிந்திருப்பார். அவர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவரது மகன், இறுதிச் சடங்கின் போது அந்தத் தங்கச் சங்கிலியை அகற்றாமல், உடனுடனேயே வைத்தார். நாகராஜின் உடல் ஜூன் 7 அன்று சௌரிபாளையம் மயானத்தில் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்: ஆந்திராவை உலுக்கிய சோகம்!

16-ஆம் நாள் சடங்கின் போது கிடைத்த அதிர்ச்சி

நாகராஜ் இறந்து 16 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவரது மகன் வெங்கடேஷ் குமார் மற்றும் உறவினர்கள், காரிய சடங்குகளைச் செய்ய மயானத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, நாகராஜ் புதைக்கப்பட்ட இடத்தின் மண் தோண்டப்பட்டு, கலைந்து கிடப்பதைக் கண்டு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

சௌரிபாளையத்தை உலுக்கிய உண்மை

இதனால் மறைந்த நாகராஜின் குடும்பத்தினருக்கு கவலை ஏற்பட்டது. இதில் ஏதோ சதி வேலை உள்ளது என சந்தேகமடைந்த குடும்பத்தினர், மயானத்தைப் பராமரித்து வந்த ஊழியரான கார்த்திகேயன் (27) என்பவரிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் தான், ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய அந்தத் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.

மேலும் படிக்க | அண்ணன் குடும்பத்தை மொத்தமாக காலி செய்த 16 வயது இளைஞன்: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மயானத்தின் சுவரேறி குதித்து துணிகரம்

சந்தேகப்பட்ட நாகராஜ் குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் விவரங்கள் தெரியவந்தன. மயான ஊழியர் கார்த்திகேயனின் உடந்தையுடன், உள்ளூரைச் சேர்ந்த சக்திவேல் (26) மற்றும் மணிகண்டன் (25) ஆகிய இருவரும் ஜூன் 16 நள்ளிரவில் மயானத்தின் சுற்றுச்சுவரை ஏறி குதித்துள்ளனர். நாகராஜின் உடலின் தலைப் பகுதி இருந்த இடத்தை மட்டும் குறிவைத்து தோண்டியுள்ளனர். அதன் பின்னர் அவரது கழுத்தில் இருந்த 3.5 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனர்.

மயான ஊழியருக்கும் பங்கு

நாகராஜின் சடலத்திலிருந்து திருடப்பட்ட நகையை விற்று, அதில் கிடைத்த பணத்தை சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக மயான ஊழியர் கார்த்திகேயனுக்கு ரூ.30,000 கொடுக்கப்பட்டுள்ளது.

பீளமேடு போலீஸார் நடவடிக்கை

இதுகுறித்து நாகராஜின் மகன் வெங்கடேஷ் குமார் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருக்கும் கார்த்திகேயன், சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரையும் தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | 9 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: 12 வயது சிறுவன் கைது, உத்தர பிரதேசத்தில் கொடூரத்தின் உச்சம்

0
0
Report
Advertisement

அமோனியா வாயு கசிவு : 7 பேர் உயிரிழப்பு... நுரையீரல் வீங்கி பாதிப்பு... ICU-வில் 23 பேர்

Periyakuppam, Tamil Nadu:

Tiruvallur Ammonia Gas Leak Accident : திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று (ஜூன் 21) காலை திடீரென  அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், சுற்றுவட்டார மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

அமோனியா வாயு கசிந்ததில் சுமார் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். தொடர்ந்து அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.மேலும் 9 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பணியில் இருந்த 100 பேர்

விபத்து நடந்த இறால் தொழிற்சாலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், இன்று காலை சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அம்மோனியா வாயு கசிந்தது.

மயங்கி விழுந்த தொழிலாளர்கள்

இதனால் தொழிலாளர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பபட்டது. மேலும், கண் எரிச்சல், மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன் பலரும் மயங்கி விழுந்தனர். இதனால் தொழிற்சாலையில் பதற்றம் நிலவியது.

தகவல் கிடைத்ததும் பெரியபாளையம் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர்.

நுரையீரல் வீங்கி பாதிப்பு 

மேலும் 30க்கும் மேற்பட்டோர் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 6 தொழிலாாளர்கள் உள்பட 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆணை பிறப்பித்த ஆட்சியர்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா உடனடியாக தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான சிகிச்சைகளை வழங்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அம்மோனியா வாயு கசிவு எப்படி ஏற்பட்டது?, தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா?, தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் வாயு கசிவு ஏற்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட மற்ற துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழு அமைத்த தமிழ்நாடு அரசு

இந்நிலையில், அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

0
0
Report
Advertisement

ITI சேர்க்கை: 100% வேலை கேரண்டி, உதவித்தொகையுடன் இலவச சைக்கிள்... கலெக்டர் முக்கிய அறிவிப்பு

Nagapattinam, Tamil Nadu:

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கையின் (Spot Admission) காலக்கெடு ஜூன் 30, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முக்கிய அம்சங்கள்:

  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளை ஐ.டி.ஐ நிலையங்களில் தகுதியான மாணவ, மாணவிகள் நேரடியாகச் சேர்ந்து பயன்பெறும் வகையில் தற்போது நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெற்று வருகிறது. 
  • இதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • மாணவர்கள் இந்த தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர அதிக அவகாசத்தை அளிப்பதே இதன் நோக்கம்.
  • 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஐடிஐ நேரடி சேர்க்கை: கட்டண விவரம்

இந்த தொழிற்பயிற்சிக்கு மிக குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகின்றது. ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கு ரூ. 235 மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளுக்கு ரூ. 245 என கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்த கட்டணம் விண்ணப்பக்கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டண என பிரிக்கப்பட்டுள்ளது. 

ஐடிஐ நேரடி சேர்க்கை: தேவையான ஆவணங்கள்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) நேரடி சேர்க்கைக்கு செல்லும்போது, மாணவ, மாணவிகள் பின்வரும் அசல் சான்றிதழ்களை (Original Certificates) கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும். 

தேவையான ஆவணங்களின் பட்டியல்:

கல்விச் சான்றிதழ்:

8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அசல் சான்றிதழின் (Original Mark Sheet).

மாற்றுச் சான்றிதழ் (TC):

பள்ளியிலிருந்து பெறப்பட்ட அசல் மாற்றுச் சான்றிதழ் (Original Transfer Certificate).

சாதிச் சான்றிதழ்:

அரசால் வழங்கப்பட்ட அசல் சாதிச் சான்றிதழ் (Original Community Certificate).

அடையாள மற்றும் முகவரிச் சான்று:

ஆதார் அட்டையின் விவரங்கள்

புகைப்படம்:

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

இவற்றுடன் நீங்கள் பயன்படுத்தும் செயலில் உள்ள மொபைல் போன் எண், மின்னஞல் முகவரி ஆகிய தகவல்களுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் (போதுமான அளவு) உடன் எடுத்துச் செல்லவும்.

3 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருக்குவளை அரசினர் தொழிற்பயிற்சி மையம் மற்றும் செம்போடை அரசினர் தொழிற்பயிற்சி மையம் ஆகிய கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த அரசு பயிற்சி மையங்களைத் தவிர, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் கிடைக்கஊடிய 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் (Government Quota) நடப்பு 2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இவற்றையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | TN Power Cut: நாளை இந்த மாவட்டங்களில் கரண்ட் கட்! உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம்

ஐடிஐ கல்வி நிறுவனங்களில் வெற்றிகரமாக படித்து முடிக்கும் மாணவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் வேலையில் சேர்வதற்கும் தமிழக அரசு உதவுகின்றது. இந்த கல்வி நிறுவனங்களில் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வளாக நேர்காணல்கள் (Campus Interviews) நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் 100% வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகின்றது. இது மட்டும் இன்றி படிக்கும் போதே பெரிய நிறுவனங்களில்  வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சியும் (Apprenticeship) அளிக்கப்படுகிறது.

ஐடிஐ நேரடி சேர்க்கை முறை

ஐடிஐ கல்வி நிறுவனங்களில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகின்றது. ஆகையால் இந்த நிறுவனங்களில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்படுவதற்கு முன்பு ஆர்வமுள்ள தகுதியான மாணவர்கள் உடனடியாக சென்று சேர்க்கை செயல்முறையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் படிக்க | திருவண்ணாமலை : மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை! விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்

ஐடிஐ நேரடி சேர்க்கை: தமிழக அரசு வழங்கும் சலுகைகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ மாணவிகளுக்கு அவர்களது கல்விச் சுமையை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இலவச பொருட்கள், மாதாந்திர உதவித் தொகைகள், சலுகைகள், அரசு திட்டங்களின் நன்மைகள் ஆகியவை இதில் அடங்கும்.

மாணவர்களுக்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் 

பயணச்சலுகை மாணவ மாணவிகளுக்கு கல்வி நிலையங்களுக்கு செல்ல இலவச பேருந்து பயண அட்டை
உதவித்தொகை தொழிற்பயிற்சி பெரும் அனைத்து மாணவர்களுக்கும் மாதா மாதம் ரூபாய் 750 உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றது.
தமிழக அரசு திட்டங்களின் நன்மைகள்

தொழில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் சிறப்பு நிதி உதவி அளிக்கப்படுகிறது.

புதுமைப்பெண் திட்டம்: மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000

தமிழ்ப் புதல்வன் திட்டம்: மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000

இலவச பொருட்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் அனைத்து, மாணவ மாணவிகளுக்கும் மிதிவண்டி, சீருடைகள், நூல்கள், காலணிகள், வரைபடக் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. 

மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஐடிஐ நேரடி சேர்க்கை மற்றும் அதில் உள்ள தொழில் பிரிவுகள் குறித்த மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தில் உதவி இயக்குனரை அணுகலாம். 

இவரிடம் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்: 8526572260, 04365-250126

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு! இன்னும் 4 நாட்களே கெடு - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

0
0
Report

டெல்லி பார்க்கிங் சண்டையில் பெண் கொலை, தீவிர சிகிச்சையில் கணவன்: அதிர்ச்சி சம்பவம்!

New Delhi, Delhi:

புது டெல்லி: நாட்டின் தலைநகரமான டெல்லியில், பார்க்கிங், அதாவது வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் கணவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 2-3 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி நடந்துவருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நம்மிடம் உள்ள வாகனங்களின் பாதுகாப்பை விட சக மனிதர்களின் பாதுகாப்பு மலிவாகிவிட்டதா? சம்பவத்தின் முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

டெல்லி பார்க்கிங் சண்டை

டெல்லியில் பார்கிங் தகராறு நடப்பது பொதுவான விஷயமாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்கூட்டர், பைக், கார் என ஒவ்வொரு வாகனம் என்பது இயல்பாகிவிட்ட இன்றைய சூழலில், அவற்றை நிறுத்தும் இடத்திற்கான சண்டைகளும் இயல்பாகிவிட்டன. ஆனால், வாகங்களை பார்க் செய்ய சரியான இடம் கிடைக்காத போதோ, அல்லது தங்கள் பார்க்கிங் இடத்தில் வேறொருவருடைய வாகனத்தை காணும் போதோ கோபம் தலைக்கேறி விடுகிறது. அப்படிப்பட்ட தருணங்களில் மனிதம் எங்கோ தொலைந்து விடுகிறது.

துவாரகா ஜேஜே காலனியில் நடந்த சம்பவம்

டெல்லியில் துவாரகா பகுதியில் பிந்தாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஜேஜே காலனி செக்டார் 3 பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பார்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சனிக்கிழமையன்று 2-3 இளைஞர்கள், ஒரு இளம் கணவன் மனைவி ஜோடி மீது கத்தியால் கொடிய தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது. 

டெல்லி கிரைம்: நடந்தது என்ன?

இவ்வழக்கு குறித்த விவரங்களை துவாரகா துணை காவல் ஆணையர் (DCP) குஷால் பால் சிங் வெளியிட்டார். உயிர் இழந்த பெண் ஆர்த்தி மற்றும் அவரது கணவர் விக்கிக்கும், அவர்களது அண்டை வீட்டாரான பப்பு மற்றும் வேறு சிலருக்கும் இடையில் பார்கிங் தொடர்பான தகராறு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்துவது தொடர்பாகவே இந்தத் தகராறு எழுந்தது. பார்கிங் தொடர்பாக இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே இதற்கு முன்னரும் பல முறை தகராறுகள் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆர்த்தியின் உயிரை காவு வாங்கிய இந்த சம்பவம் சனிக்கிழமை மதியம் நடந்துள்ளது. தங்கள் வாகனங்களை நிறுத்தும் இடம் குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பப்புவும் அவனது கூட்டாளிகளும் ஆர்த்தியையும், விக்கியையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும் படிக்க | 'எனக்கு மரியாதை இல்ல, கொன்னுட்டேன்..': பணிப் பெண்ணை அடித்தே கொன்ற மருத்துவர், டெல்லியில் அதிர்ச்சி

தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சிகிச்சை

இச்சம்பவத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்த இருவரும் ஹரி நகரில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோதே அப்பெண் (ஆர்த்தி) இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது கணவர் விக்கிக்குக் கடுமையான காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

இது பற்றிய தகவல் கிடைத்தவுடன், சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தவும் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கவும் தடயவியல் (FSL) மற்றும் குற்றப்புலனாய்வுக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. முக்கியக் குற்றவாளியான பப்புவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனுடன் குற்றத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பப்புவுடன் சேர்ந்து இந்த கொடூரமான செயலை செய்த மற்றவர்கள் இன்னும் 18 வயது கூட ஆகாத சிரார்கள் என்று கூறப்படுகின்றது.

மேலும் படிக்க | யோகா அனைவரையும் இணைக்கிறது... சர்வேதச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறதா?

டெல்லியில் நடக்கும் பல குற்றங்களுக்கு தலைக்கேறும் கோவமும், அரசியல் வட்டாரங்களில் இருக்கும் அறிமுகமும், பணம் படைத்த திமிருமே காரணமாக அமைகின்றன. டெல்லியில் பார்கிங் பிரச்சனையால் ஒரு பெண் உயிர் இழந்ததற்கு ஒரு நாள் முன்பு டெல்லி அருகில் உள்ள நோய்டாவிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது. நொய்டாவின் செக்டார் 15 (பேஸ்-1 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி) பகுதியில் வசிக்கும் 77 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்கும், அவரது அண்டை வீட்டில் வசித்து வந்த ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர் ஒருவருக்கும் இடையே கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் முதியவரைத் தாக்கித் தள்ளியதில், அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. கவலைக்கிடமான நிலையில் நொய்டாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க | மூணார் ரெசார்ட்.. பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடூரம்: கேரளா போலீசிடம் சிக்கிய தமிழக ரோமியோக்கள்

0
0
Report

யோகா அனைவரையும் இணைக்கிறது... சர்வேதச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

Kolkata, West Bengal:

12th International Yoga Day : 2015ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ஆம் தேதி அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் (ஜூன் 21) உலகம் முழுவதும் சர்வேதச யோகா தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று காலையில் ஒவ்வொரு நகரிலும் மக்கள் அனைவரும் இணைந்து கூட்டாக யோகா நிகழ்வில் ஈடுபட்டனர். அந்த வகையில், 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி மேற்கு வங்கம் தலைநகர் கொல்காத்தாவில் உள்ள ரெட் ரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். 

இந்தாண்டுக்கான கரு 'ஆரோக்கிய முதுமைக்கான யோகா' என்பதுதான். அதாவது, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கை இது எடுத்துரைக்கும் விதத்தில் இன்றைய யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

மக்கள் தொகையில் அதிகமானோர் முதுமையடைவதாலும், தொற்றா நோய்களால் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலக் கவலைகளும் உலகளவில் அதிகரித்து வருகின்றன. ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் இருந்து, ஆரோக்கியக் காலகட்டம், வாழ்க்கைத் தரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கி முக்கியத்துவம் மாறி வருகிறது.

ஒட்டுமொத்த தேசமும், மற்ற உலக நாடுகளும் இணைந்திருப்பது போல் தெரிகிறது. இதுதான் யோகாவின் சக்தி. யோகா அனைவரையும் இணைக்கும் சக்தி. அனைவரையும் ஒன்றிணைக்கிறது. 

இந்த சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதற்கும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய யோகா தினத்தில், தூய்மைப் பணி இயக்கத்திற்காக பணியாற்றிய வங்காள மக்களை குறிப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான முயற்சி" என்றார்.

தொடர்ந்து அவர், "யோகா தின கொண்டாட்டம் இன்று வங்காளத்தில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் அவதரித்த, சுவாமி விவேகானந்தர் யோகாவை உலகிற்கே அறிமுகப்படுத்திய புனித பூமியான வங்காளம். 

லஹிரி மகாசயா போன்ற மாபெரும் யோகிகள், யோகாவின் பாரம்பரியத்தை புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்ற இடம் இது. இன்று அதே மண்ணில் நடைபெறும் கூட்டு யோகா நிகழ்வு, ஒரு தனித்துவமான ஆன்மீக அனுபவத்தை தருகிறது" என்றார்.

0
0
Report
Advertisement

“என் அத்தை மண்டைய போடனும்” - 20 ரூபாய் நோட்டில் சாமிக்கு கடிதம்...பக்தரின் விநோத வேண்டுதல்..!

MMathan3d ago
Ananthapur, Andhra Pradesh:

20 Rupees Note Viral: ஆந்திராவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு 20 ரூபாய் தாளில் பக்தர் ஒருவர் விநோதமான வேண்டுதலை வைத்து காணிக்கை செலுத்தியிருந்தது தெரியவந்தது. அதில் “என் அத்தை சாக வேண்டும்” என்று பக்தர் வைத்துள்ள வேண்டுதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற பம்பனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 16-ம் நுற்றாண்டில் விஜயநகரப் பேரரசை சேர்ந்த வியாசராஜு என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் அனந்தபுரம் மாவட்ட மக்களின் முக்கிய கோவிலாக திகழ்கிறது. அது மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு வேண்டுதல்களுக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை அப்டேட்: இவர்களுக்கு ரூ.2500 கிடையாது.. அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்!

இந்த கோவிலில் தொடர்ந்து 9 அல்லது 11 செவ்வாய்க்கிழமைகளில் 108 பிரதட்சிணங்களுடன் மூல தெய்வத்திற்குப் பூஜை செய்வதால், நாக தோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், நவ கிரக தோஷம், குஜ தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாது அனைத்து நாட்களிலும் பக்தர்களில் அதிகளவில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த புகழ்பெற்ற கோவிலில் தான் ஒரு விநோதமான வேண்டுதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பொதுவாக ஒருவர் கோவிலுக்கு நிம்மதியை தேடி செல்வர். அங்கு, அவர்கள் நன்றாக இருக்க வேண்டும், அக்கம்பக்கத்தினர் நன்றாக இருக்க வேண்டும், உறவினர்கள் நன்றாக இருக்க வேண்டும் அல்லது பக்கத்து வீட்டுக்காரன் நன்றாக இருக்கக் கூடாது, தான் ஒரே இரவில் பணக்காரணாக வேண்டும், தனக்கு நல்ல வேலை வேண்டும், தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பாஸ் ஆக வேண்டும், நல்ல வேலை கிடைக்கனும், வீடு கட்டனும், திருமணம் ஆகனும், குழந்தை வரம் வேண்டும் என்று இவ்வாறெல்லாம் தங்களது வேண்டுதலை கடவுளிடம் வைத்து விட்டு வருவர்.

அதே வேளையில் உண்டியல் காணிக்கை அல்லது துண்டு சீட்டு எழுதி மரத்தில் கட்டிவிட்டு வருவர். இது தான் இதுவரையில் இருக்கின்ற வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் ஒருவர் உடைத்து ஒரு விநோத வேண்டுதலை கடவுளிடம் வைத்திருக்கிறார் என்பதை சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அப்படியொரு வேண்டுதலை தான் அந்த நபர், இந்த 5 நூற்றாண்டு பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்துவிட்டு வந்திருக்கிறார். 

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை அப்டேட்: இவர்களுக்கு ரூ.2500 கிடையாது.. அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல்!

விநோத வேண்டுதல்:

இந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பணம் எண்ணிக்கையின் போது அந்த பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் ஒரு ரூபாய் நோட்டில் இருந்த வாசகத்தை பார்த்து திகைத்துப் போயுள்ளார்.

அந்த ரூபாய் நோட்டில் “என் அத்தை சீக்கிரம் சாக வேண்டும்” என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகம் 20 ரூபாய் தாளில் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த சக பணியாளர்கள் ஆச்சரியப்பட்டு தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள்:

இதனைப் பார்த்த சமூக வலைத்தள பயனாளர்கள் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து சில காமெடியான கருத்துக்களையும், இது போன்ற செயல்களை யார் செய்திருப்பார்கள்? ஒரு வேளை உள்ளூர்காரர்களே இந்த வேண்டுதல வைத்தனரா? மேலும் இதில் அத்தை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது அவருடைய சொந்த அத்தையா? அல்லது மாமியார் எனப்படும் அத்தையா? என பல்வேறு கேள்விகளையும் எழுப்பி தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை! பின்னணியில் வாட்ஸ் அப்? சி.இ.ஓ குற்றச்சாட்டு

0
0
Report

வெளுக்கப்போகுது! இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் அலர்ட்

Chennai, Tamil Nadu:

TN Weather Update Today: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம் (TN Weather) குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை அலர்ட்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சுமார் 0.9 கிமீ உயரத்தில் கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 20) தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: நீட் எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு... தமிழகத்தில் 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 21ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஈரோடு டூ சேலம்.. தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!

ஜூன் 22ஆம் தேதி  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 23 முதல் ஜூன் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை பற்றிய அறிவிப்பு

ஜூன் 20 முதல் ஜூன் 23ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை பெய்யுமா?

சென்னையில் இன்று (ஜூன் 20) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெதர்மேன் முக்கிய அலர்ட்

 

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், மத்திய மற்றும் டெல்டா மண்டலப் பகுதிகளுக்கு இது ஒரு சிறப்பான நாள்; இப்பகுதிகளில் பலத்த மழை (அதாவது 'டமால் டுமீல்' என இடி-மின்னலுடன் கூடிய கனமழை) பெய்துள்ளது. இன்று, வட உள் தமிழகத்தில் மழைப்பொழிவு சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை நோக்கி நகரும். இவை இடி-மின்னலுடன் கூடிய மழையாக இருக்கும். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலும் இல்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டினால் அது ஒரு அதிசயமாகவே இருக்கும்” என்று கூறினார்.

மேலும் படிக்க: நீலகிரி : சம்பளத்தில் ஏமாற்றும் நிர்வாகம்... கூடலூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

 

 

0
0
Report

இரு மடங்கு அபராதம்! ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்தால் நடவடிக்கை.. புது ரூல்ஸ் இதோ

Chennai, Tamil Nadu:

Indian Railway Rules Latest: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது  ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினமும் 15,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  குறைந்த கட்டணம்,  கழிவறை வசதி, படுக்கை வசதி போன்றறை இருப்பதால் பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். 

இரட்டிப்பாகும் ரயில்வே அபராதம்

அவ்வப்போது ரயில் பயணிகளுக்காக விதிமுறைகளை இந்தியன் ரயில்வே அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது. மேலும், டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளையும் இந்தியன் ரயில்வே கடுமையாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதாவது,  ரயில்வே அபராத தொகையை இந்தியன் ரயில்வே இரட்டிப்பாக்கி உள்ளது. 

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி,  ரயில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கான அபராதத்தை  அதிகரித்துள்ளது.ரயில்வே விதித்த குறைந்தபட்ச அபராதம் ரூ.250-ஐ ரூ.500 ஆக உயர்த்தியுள்ளது.  ரயில்வே சட்டம், 1989-இன் 137 மற்றும் 138 பிரிவுகளின் கீழான குறைந்தபட்ச அபராதம், ஜூலை 1, 2026 முதல் ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போருக்கு அபராதமாக ஜூலை 1 முதல் ரூ.500 இனி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஆறு மாதங்கள் தண்டனை விதிக்கப்படலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வெறும் ரூ.1,650 தான்.. திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனம்.. ஐஆர்சிடிசி சூப்பர் பேக்கேஜ்

ரயில்வே விதிகளில் திருத்தம்

மேலும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அல்லது பயணிகளைப் பொருட்கள் வாங்கத் துண்டுபவர்கள் மீதான விதிமுறையை இந்தியன் ரயில்வே கடுமையாக்கி உள்ளது.  இத்தகைய  குற்றங்களுக்கு ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
மேலும், ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ குடிபோதையில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். அனுமதியின்றி ரயில்களில் பயணிகள் அமருக்கு இருக்கைகள் அல்லது பகுதிக்குள் நுழைவது, வெளியேற  மறுப்பதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் இல்லாமல், மற்ற ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அத்துமீறி நுழைவதற்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டி, இருக்கை அல்லது அறைக்குள் அனுமதியின்றி நுழையும் ஆண் பயணிக்கு ரூ.2500 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை செலுத்த  தவறினால், நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு, ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய  வளாகத்திற்குள் தவறான இடத்தில் வாகன நிறுத்துதல், ஒருவழிப் பாதை விதிகளை மீறுதல் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால் ஆகியவற்றுக்கு ரூ.500  அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க: குற்றாலத்தை விடுங்க... கேரளாவின் இந்த 5 அருவிகளுக்கு போங்க... இப்போ செம சீசன்!

ஜூலை 1 முதல் அமல்

விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. இருப்பினும், புதிய விதிகளைச் செயல்படுத்த தனி அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், ஜூலை 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் வழக்குகளுக்குத் திருத்தப்பட்ட அபராதங்களைச் செயல்படுத்துமாறு பயணச்சீட்டு சோதனையாளர்கள் (TTEs), வணிகப் பணியாளர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் பிற களப் பணியாளர்களுக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. 

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதைக் கட்டுப்படுத்துதல், விதிமுறைகளுக்கு இணங்குவதை ஊக்குவித்தல், ரயில்வே வருவாயைப் பாதுகாத்தல் மற்றும் பயணச்சீட்டு சோதனை முறையை மேலும் திறம்படச் செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஒரே இரவில் பேய்களால் கட்டபட்ட கோவில்! 6 மணிக்கு மேல் நோ எண்ட்ரி..எங்க இருக்கு?

 

0
0
Report
Advertisement
Advertisement
Back to top