icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

அதிரடி திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்! ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பிரஸ் மீட்!

RSRK Spark10h ago
Chennai, Tamil Nadu:

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்காக, காவல்துறையினருக்கு முதலமைச்சர் விஜய் முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புதிய அரசின் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, மற்றும் அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார். குறிப்பாக, சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் அரசு எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க - வைரலாகும் விஜய்யின் கோட் சூட்! காம்போ விலை எவ்வளவு தெரியுமா?

போதைப்பொருளுக்கு எதிராக இரும்புக்கரம்

போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறிய அமைச்சர், "மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எந்தவொரு சட்டவிரோத செயல்களையும் இந்த அரசு வேடிக்கை பார்க்காது. போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இதற்கு முதல்வர் முழுமையான அனுமதியை காவல்துறைக்கு வழங்கியுள்ளார்," என்றார். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும் என்ற அடிப்படையில், அரசியல் தலையீடுகள் இன்றி அவர்கள் செயல்பட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக ஆதவ் அர்ஜுனா கூறினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க காவல்துறைக்கு சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதுடன், இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க - அதிமுக எம்எல்ஏ 25 பேர் தகுதி நீக்கம்? விஜய்க்கு ஆபத்தா? எடப்பாடி முடிவு என்ன?

கட்சி நிர்வாகிகளுக்கு எந்த சலுகையும் இல்லை

பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் அரசு ஒப்பந்தங்கள் விஷயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று அவர் உறுதியளித்தார். "த.வெ.க கட்சியை சேர்ந்தவர்களுக்கு எந்தவொரு அரசு டெண்டரும் வழங்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் விஜய் கறாராக உத்தரவிட்டுள்ளார். தகுதியானவர்களுக்கு மட்டுமே வெளிப்படையான முறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்படும். ஊழல் மற்றும் கமிஷன் என்ற பேச்சுக்கே எங்கள் ஆட்சியில் இடமில்லை," என அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.

முன்னறிவிப்புடன் மின்வெட்டு

மின்துறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சீரான மின்சாரம் வழங்குவதே அரசின் இலக்கு என்றார். இருப்பினும், தவிர்க்க முடியாத காரணங்களால் அல்லது பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு அவசியமானால், அது குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகுந்த முறையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளைத் திட்டமிட வசதியாக இருக்கும் என்றார். "எங்கள் அரசின் இலக்கு, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதுதான். சாதி, மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, சமூக நீதி சார்ந்த நல்லாட்சியை வழங்குவோம். எங்கள் செயல்பாடுகளே எங்களின் அடையாளமாக இருக்கும்," என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க - அதிமுக எம்எல்ஏ 25 பேர் தகுதி நீக்கம்? விஜய்க்கு ஆபத்தா? எடப்பாடி முடிவு என்ன?

0
0
Report

இந்திய அணியில் வைபவ் சூரியவம்சி! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

RSRK Spark13h ago
Mumbai, Maharashtra:

ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டிக்கான இந்திய 'A' அணி அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சரியமளிக்கும் வகையில் 15 வயதே ஆகும் வைபவ் சூர்யவம்சி இடம்பெற்றுள்ளார். 15 பேர் கொண்ட இந்த அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரியான் பராக் பொறுப்பேற்கிறார். பீகாரை சேர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவம்சி, தனது 13 வயதிலேயே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். அறிமுக போட்டியிலிருந்து அவர் காட்டி வரும் அதிரடி ஆட்டங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி கோப்பையை தட்டி சென்றது. ஐபிஎல் 2026 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வைபவ், கடந்த 2024ஆம் ஆண்டு முதல் தர போட்டிகளில் அறிமுகமாகி பல சாதனைகளை புரிந்து வருகிறார். இந்த சாதனைகளின் அங்கீகாரமாகவே இந்திய 'A' அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க: ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு! யாரும் வெளியே வரக் கூடாது!

முத்தரப்பு போட்டி விவரங்கள்

வரும் ஜூன் 9ஆம் தேதி முதல் இலங்கையில் தொடங்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், இந்தியா 'A', இலங்கை 'A', ஆப்கானிஸ்தான் 'A' அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 21 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் இந்த தொடர் முடிவடையும். இதை தொடர்ந்து இலங்கை 'A' அணியுடன் இரண்டு மல்டி-டே போட்டிகளும் நடைபெறவுள்ளன. திலக் வர்மாவின் கேப்டன் தேர்வு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் தலைமை திறன்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் பிசிசிஐ எதிர்காலத்தை வலுப்படுத்த முயல்கிறது.

வைபவின் எதிர்காலம்

பலரும் வைபவ் சூர்யவம்சி எப்போது முதல் அணிக்கு வருவார்? என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். வெறும் 15 வயதில் இந்திய 'A' அணிக்கு தேர்வு பெறுவது அவரது திறமையின் உச்சமானது. பிசிசிஐ விதிகளின்படி, 15 வயது நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே தேசிய அணியில் இடம் கிடைக்கும். இந்த தொடரில் வைபவ் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொறுத்து, விரைவில் அவர் தேசிய அணியிலும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வயதிலேயே அவர் காட்டும் ஆட்டத் திறன், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது. வைபவ் சூர்யவம்சியின் இந்த தேர்வு, இந்திய கிரிக்கெட்டின் புதிய தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஐபிஎல் தொடரில் காட்டும் அவரது சாதனைகள், இப்போது சர்வதேச அளவுக்கு உயர்ந்துள்ளன. இந்த முத்தரப்பு தொடர் அவருக்கு புதிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா 'A' அணி

திலக் வர்மா, ப்ரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்சி, ரியான் பராக், ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜே, பிரப்சிம்ரன் சிங், குமார் குஷாக்ரா, விப்ரஜ் நிகம், யாஷ் தாகூர், யுத்தவீர் சிங், அன்ஷுல் கம்போஜ், அர்ஷத் கான்.

மேலும் படிக்க: ஜேமி ஓவர்டன் விலகல்.. சிஎஸ்கே அணிக்கு அடுத்த அடி! மாற்று வீரர் யார்?

0
0
Report

அதிமுக எம்எல்ஏ 25 பேர் தகுதி நீக்கம்? விஜய்க்கு ஆபத்தா? எடப்பாடி முடிவு என்ன?

RSRK Spark17h ago
Chennai, Tamil Nadu:

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டசபையில் நடைபெற்றது. ஏற்கனவே விஜய், தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த பின்பு தான், ஆளுநர் அவருக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு 144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம், தமிழக வெற்றிக் கழக அரசு சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில், தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ-கள் தங்களது ஆதரவை வழங்கினர். யாருமே எதிர்பார்க்காத விதமாக, அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்களும் விஜய்க்கு தங்களது ஆதரவை வழங்கினர். இதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் தினமும் கருப்பு நிற கோட் சூட் அணிவது ஏன்? சீக்ரெட் தகவல் இதோ

சட்டசபையில் நடந்தது என்ன?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 25 பேர் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர். இதன் காரணமாக விஜய்க்கு 144 என்ற மேஜிக் நம்பர் கிடைத்துள்ளது. இதன் மூலம் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே விஜய் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிமுகவை சேர்ந்த 22 எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு எதிராக வாக்களித்துள்ளனர். விஜய்க்கு எதிராக வாக்களித்தவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே. பாமக மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தனர். அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் கட்சிக்கு எதிராக விஜய்க்கு ஆதரவளித்தது செல்லுமா, செல்லாதா? அதிமுக என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க போகிறது என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இதற்கிடையே, நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு ஆதரவளித்த 25 எம்.எல்.ஏ-க்களையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இது இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்கியுள்ளது.

ஓட்டுகள் செல்லுமா?

கட்சி தலைமையின் உத்தரவை மீறி வாக்களித்த இந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள் சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள கட்சி தாவல் தடைச் சட்டம் பாயுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா பிறப்பிக்கும் உத்தரவை மீறி, அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சபையில் வாக்களித்தால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். 

அதிமுக தலைமை தற்போது இந்த 25 எம்.எல்.ஏக்கள் மீதும் சபாநாயகரிடம் புகார் அளித்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரலாம். இருப்பினும், தற்போதைக்கு சபாநாயகர் அந்த ஓட்டுகளை எண்ணி, அதன் அடிப்படையிலேயே வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்துள்ளார். எனவே, அந்த ஓட்டுகளை சபாநாயகர் உடனடியாக செல்லாததாக அறிவிக்க முடியாது.

மேலும் படிக்க: டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க கட்டுப்பாடு.. முதல்வர் விஜய் அதிரடி - இனி இவர்களுக்கு கிடையாது

நீதிமன்றம் செல்வார்களா?

இந்த விவகாரத்தில் சட்டசபை சபாநாயகரின் முடிவே இறுதியானது என்றாலும், இதில் சட்ட முரண்பாடுகள் இருப்பதாக கருதினால் அதிமுக தலைமை நீதிமன்றத்தை கூட நாடலாம். கடந்த 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சர்ச்சைகளை கண்டித்து சில உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். அதே போல, தற்போதும் கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யவும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய கோரியும் வழக்குகள் தொடரப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் ஆட்சிக்கு ஆபத்தா?

ஒருவேளை, சபாநாயகரோ அல்லது நீதிமன்றமோ இந்த 25 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தாலும், அல்லது அந்த ஓட்டுகளை செல்லாது என அறிவித்தாலும், விஜய் தலைமையிலான அரசுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றே கூறப்படுகிறது. ஏனெனில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு இருப்பதால், அவர் எளிதாக 118 என்ற பெரும்பான்மை எண்களை தாண்டிவிடுவார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அடுத்து என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க: கலைஞர் மகளிர் உரிமை தொகை வருமா, வராதா? முதலமைச்சர் விஜய்யின் முடிவு என்ன?

கட்சியின் பெயர் ஆதரவு எண்ணிக்கை
தமிழக வெற்றிக் கழகம் 108 எம்.எல்.ஏ-க்கள்
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் (வேலுமணி தரப்பு)  25 எம்.எல்.ஏ-க்கள்
கூட்டணிக் கட்சிகள் 11 எம்.எல்.ஏ-க்கள்
மொத்த ஆதரவு 144 எம்.எல்.ஏ-க்கள்

 

0
0
Report
Advertisement

அதிமுகவில் புதிய ரத்தம்: சீனியர்களுக்கு "செக்" யார் யார் விடுவிப்பு? முழு பட்டியல் உள்ளே!

Nagalapuram, Tamil Nadu:

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளார். கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூத்த நிர்வாகிகள் பலர் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய நிர்வாகிகள் விடுவிப்பு -காரணம் என்ன?

கட்சியின் வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு, தற்போது மாவட்டச் செயலாளர்களாகப் பணியாற்றி வந்த 26 முக்கிய நிர்வாகிகள் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகத் தலைமை அறிவித்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அடங்குவர்.

மேலும் படிக்க - அதிமுகவில் அதிரடி ஆக்ஷன்: வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்! இபிஎஸ் எடுத்த விஸ்வரூபம்

1. தற்போதைய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் யார்? முழு பட்டியல்

கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், பின்வரும் மூத்த நிர்வாகிகள் அவர்கள் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்:

திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., (திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. எஸ்.பி. வேலுமணி, M.L.A., (கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. சி.வி. சண்முகம், M.L.A., (விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. ஆர். காமராஜ், M.L.A., (திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர்)

டாக்டர் சி. விஜயபாஸ்கர், M.L.A., (புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. பி. தங்கமணி (நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. கே.பி. அன்பழகன், M.L.A., (தர்மபுரி மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. பா. பென்ஜமின் (திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் (திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. S.T.K. ஜக்கையன், Ex. M.P., (தேனி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

முனைவர் இசக்கி சுப்பையா, M.L.A., (திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. M.C. சம்பத் (கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. K.C. வீரமணி, M.L.A., (திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. M.R. விஜயபாஸ்கர், M.L.A., (கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. K.V. இராமலிங்கம், Ex. M.P., (ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. P. பாலகிருஷ்ண ரெட்டி, M.L.A., (கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. ஆ. அருண்மொழிதேவன், M.L.A., (கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. சு. ரவி, Ex. M.L.A., (ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. S.M. சுகுமார், M.L.A., (ராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. C. மகேந்திரன், Ex. M.L.A., (திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. கப்பச்சி D. வினோத் (நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. J. சீனிவாசன் (திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. M. பரஞ்ஜோதி (திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. ப. குமார், Ex. M.P., (திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. M. ரெத்தினசாமி, Ex. M.L.A., (தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

திரு. M. சேகர் (தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்)

மேலும் படிக்க - தமிழக அரசியலில் ‘கொறடா’ என்றால் என்ன? அர்த்தம் இதுதான்..!

2. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் யார்? -பகுதி பட்டியல்

விழுப்புரம் மாவட்டக் கழகம்: திரு. R. பசுபதி, B.A.

கடலூர் தெற்கு மாவட்டம்: திரு. சொரத்தூர் இரா. இராஜேந்திரன், M.L.A.

தர்மபுரி கிழக்கு மாவட்டம்: டாக்டர் R. அசோகன், MBBS., M.S.

தர்மபுரி மேற்கு மாவட்டம்: திரு. T.R. அன்பழகன்

திருப்பூர் புறநகர் மாவட்டம்: திரு. சி. சிவசாமி, Ex. M.P.

குறிப்பு: புகைப்படங்களில் உள்ள தகவல்களின்படி, விடுவிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சியின் மாநில அளவிலான பொறுப்புகளான கழகப் பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், அமைப்புக் செயலாளர் போன்ற பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - வாக்களிப்பா? வெளிநடப்பா? அதிமுக எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும்... விஜய்யின் கணக்கு என்ன?

0
0
Report

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி... 15% உயர்வு - தங்கம் விலை எகிறப்போகுதா...?

New Delhi, Delhi:

Gold Silver Import Duty: தங்கம், வெள்ளி மற்றும் பிற விலை மதிப்பு வாய்ந்த உலோகங்களின் இறக்குமதி தொடர்பான பல்வேறு பிரிவுகளுக்கான வரியை 6%இல் இருந்து 15%இல் ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

10% அடிப்படை சுங்க வரியுடன், 5% வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியையும் (AIDC) மத்திய அரசு விதித்துள்ளது. இறக்குமதி உயர்வு இன்று (மே 13) முதல் அமலுக்கு வருகிறது. 

தங்கம், வெள்ளி மற்றும் பிற விலை மதிப்பு வாய்ந்த உலோகங்களின் இறக்குமதி தொடர்பான பல்வேறு பிரிவுகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. குறிப்பாக, விலை உயர்ந்த உலோகங்கள், ஆபரண பாகங்கள் மற்றும் தொழில்துறை இறக்குமதிகள் தொடர்பான பல்வேறு கட்டண வகைகளில் இறக்குமதி வரி உயர்ந்துள்ளது.

இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதன் மூலம், இறக்குமதி குறைவது மட்டுமின்றி, இந்திய ரூபாய் மதிப்பை மேம்படுத்தவும் பயனளிக்கும்.

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் இவை தொடர்பான விலை மதிப்பு வாய்ந்த உலோகப் பொருள்கள், அத்துடன் நகை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கொக்கிகள், பிணைப்புகள், ஊசிகள் போன்ற நகைக் கூறுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவைககும் இந்த இறக்குமதி வரியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையால் தங்கம், வெள்ளி வர்த்தகர்கள், நகை உற்பத்தியாளர்கள், விலை மதிப்பு வாய்ந்த உலோகங்கள், அது தொடர்பான தொழில்துறை பொருள்களை கையாளும் பிற வணிகங்களுக்கான இறக்குமதி செலவுகிள் அதிகரிக்கும். 

இதன்மூலம், தங்கம் போன்ற விலை மதிப்பான உலோகங்களின் இறக்குமதியை ஓரளவு குறையும் எனலாம். சமீபத்தில், அவசியமின்றி தங்கத்தை வாங்குவதை பொதுமக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி சில நாள்களுக்கு முன் பேசியதை இத்துடன் பொருத்திப் பார்க்கலாம். 

அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்போது நாட்டின் அந்நிய செலாவணி அதிகம் செலவிடப்படும். அதை எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக பயன்படுத்துவதற்காக, தங்கத்தை வாங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

2024-25 நிதியாண்டை ஒப்பிடுகையில், 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி 2 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது. 2024-25 நிதியாண்டில் இருந்து 58 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருந்த தங்க இறக்குமதி, 2025-26 நிதியாண்டில் 71.98 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. அதற்கு முன், தங்க இறக்குமதி 2022-23 நிதியாண்டில் சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2023-24 நிதியாண்டில் 45.54 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது. 

உலகளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான சொத்தாக காலங்காலமாகவே தங்கம்தான் இருந்து வருகிறது. முக்கியமாக நகைத்துறை மற்றும் குடும்ப சேமிப்புகள் இந்தியாவில் தங்கத்திற்கு அதிக டிமாண்டை ஏற்படுத்துகிறது.

0
0
Report
Advertisement

வாக்களிப்பா? வெளிநடப்பா? அதிமுக எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும்... விஜய்யின் கணக்கு என்ன?

Chennai, Tamil Nadu:

TVK Government Floor Test, AIADMK Crisis: தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்கவே இல்லை. ஆனால், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. 

காங்கிரஸ் தவெக உடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்ததாலும்; விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவாலும் தவெக ஆட்சியை அமைத்தது. விஜய் முதலமைச்சராகவும் அவர் தலைமையில் 9 அமைச்சர்களும் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, நேற்று (மே 12) சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் மற்றும் துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில், இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நடைபெற இருக்கிறது. இதில் தவெக அரசு நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிக்கும் என்றாலும், எவ்வளவு வாக்குகளை வாங்கப்போகிறது என்பதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெகவில் இருந்து எவ்வளவு வாக்குகள் வரும்?

தவெகவை பொருத்தவரை, அவர்களிடம் 105 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. விஜய் தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற சீனிவாச சேதுபதி உயர் நீதிமன்றம் விதித்த தடையால் வாக்கெடுப்பில் பங்கேற்க இயலாது, சபாநாயகர் ஆரம்பத்தில் வாக்களிக்க மாட்டார். அதேநேரத்தில், அமமுகவின் ஒற்றை எம்எல்ஏவான காமராஜ், தவெகவுக்கு வாக்களிக்க அதிக வாய்ப்புள்ளது.

திமுகவின் முடிவு என்ன?

மறுபுறம் அதிக எம்எல்ஏக்களை (59) வைத்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான திமுக அரசுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பில்லை. எனவே, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்க்கலாம் அல்லது கூட்டணி கட்சிகளின் ஆதரவு காரணமாக திமுக ஆதரவாக வாக்களிக்கலாம்.

அதிமுக மீதே அதிக கவனம்

திமுக எடுக்கும் முடிவு ஒருபுறம் இருக்க, அதிமுக மீதுதான் அனைவரும் கவனமும் இருக்கிறது. ஏனென்றால் தற்போது அதிமுக தவெக எதிர்ப்பு மற்றும் தவெக ஆதரவு என இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு குழு தவெகவுக்கு எதிராக வாக்களிப்பதாக தெரிவித்துவிட்டது. அதேநேரத்தில் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு குழு தவெகவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்துவிட்டது.

சி.வி.சண்முகம் தரப்புக்கு சிக்கலா?

இதுவே தற்போது பிரச்னையை கிளப்பி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நியமித்த கொறடாவின் உத்தரவை மீறி, சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு வாக்களித்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்களா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. இதற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான ஐ.எஸ். இன்பதுரை அவரது X பக்கத்தில் நீண்ட விளக்கத்துடன் கூடிய பதிவை நேற்று (மே 13) பதிவிட்டுள்ளார்.

கட்சித் தாவல் தடை சட்டம் பாயும்

அந்த பதிவில், "அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்த அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்" என குறிப்பிட்டுள்ளார்.

வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டாலும்...

மேலும், ஐ.எஸ்.இன்பதுரை அவரது பதிவில், "சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.

சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது" என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் மேற்கொள்காட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், 'ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்பதுரை குறிப்பிட்டுள்ளார். 

மேலும், உச்ச நீதிமன்றம் 'சட்டமன்றக் கட்சி' மற்றும் 'அரசியல் கட்சி' இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணை 'அரசியல் கட்சியை' தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது என்றும் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

பதவி பறிபோகும்

இறுதியாக அவரது பதிவில், "அதன்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவே சட்டபூர்வமானது. எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை" என தெரிவித்துள்ளார்.

என்ன செய்யும் சி.வி.சண்முகம் தரப்பு?

தற்போது, இபிஎஸ் தரப்பில் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்? மற்றும் சி.வி.சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பில் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்? என்பது உறுதியாக தெரியவில்லை. இன்றைய வாக்கெடுப்பின் முடிவில் இதன் குழப்பம் நீங்கிவிடும். அதேநேரத்தில், இத்தனை சிக்கல் இருப்பதால் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமா அல்லது வெளிநடப்பு செய்து வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்க்குமா என்ற கேள்வியும் உள்ளது. 

விஜய்யின் கணக்கு என்ன?

இதில் வெளிநடப்பு செய்தாலும் சிக்கல் வரலாம். எனவே, சி.வி.சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு எடுக்கும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும். ஒருவேளை சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு வாக்களித்தால் தவெக அரசுக்கு ஆதரவான வாக்குகள் 150-ஐ தாண்டும். இதில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக மற்றும் பாஜக, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் என்னென்ன முடிவை எடுப்பார்கள் என்பதும் கவனிக்கப்படுகிறது. 

0
0
Report

தவெக எம்எல்ஏவுக்கு தடை... விஜய்க்கு பலம் குறைகிறது... ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தவர் அப்செட்!

Tirupattur, Tamil Nadu:

Periyakaruppan Election Case: தமிழக சட்டமன்றத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு நாளை (மே 13)பெரும்பான்மையை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ 1 வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0
0
Report

விஜய்க்கு ஆதரவு பேச்சு! அமமுக எம்எல்ஏ நீக்கம் - தினகரன் அதிரடி நடவடிக்கை!

Mannargudi, Tamil Nadu:

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டு 108 இடங்களை வென்ற நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தற்போது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சட்டமன்றம் கூடியுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரே எம்.எல்.ஏ.-வான காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திடீர் ஆதரவு

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து அதிமுக மீள்வதற்குள், மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். அவர் பேசும்போது, "தமிழக இளைஞர்கள் முதலமைச்சர் விஜய் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர். இளைஞர்களை போலவே நானும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். அதனால் தவெக அரசுக்கு முழு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன்," என்று தெரிவித்தார்.

பதவியேற்பதற்கு முன் நடந்த சர்ச்சை

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாதபோது, எம்.எல்.ஏ. காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் அளித்த கடிதம் ஒன்று வைரலானது. ஆனால், உடனடியாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அது ஒரு போலி கடிதம் என்று குற்றம் சாட்டியிருந்தார். விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, அவர் சமர்ப்பித்த ஆதரவு கடிதங்களில் காமராஜின் கடிதமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் டிடிவி தினகரன் உடனடியாக ஆளுநரை சந்தித்து, அது ஒரு போலி கடிதம் என்றும், இதனை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார். இந்த சர்ச்சைக்கு மத்தியில், தற்போது சட்டமன்றத்தில் வெளிப்படையாகவே "தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்கிறேன்" என்று காமராஜ் பேசியிருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 

இதற்கு டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று கேள்வி எழுந்த நிலையில், டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. காமராஜை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டிடிவி தினகரன் அறிக்கை

எம்.எல்.ஏ. காமராஜ் நீக்கம் தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணானது.

திரு. S. காமராஜ் அவர்களின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காக பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

ஆகவே, கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. S. காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு டிடிவி தினகரன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0
0
Report
Advertisement

விஜய் முதல்வரானது குறித்த கேள்வி! ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்சன்! முழு விவரம்!

Chennai, Tamil Nadu:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்றுள்ளார். கடந்த 10ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றார். அவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று முதல்வராக பதவியேற்றுள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு பல்வேறு துறை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி, பிரதமர் நரேந்திர மோடி வரை விஜய்க்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நேற்று விஜய்யின் தலைமையில் முதல் சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அங்கு வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

மேலும் படிக்க | த்ரிஷாவுக்கு செம்ம ஜாக்பாட்! ஒரே டைமில் ரெண்டு ஹேப்பி நியூஸ்..என்ன தெரியுமா?

தலைவர்களை நேரில் சந்தித்த விஜய்

நேற்று சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிந்த பிறகு, விஜய் ஒவ்வொரு அரசியல் தலைவர்களின் வீட்டிற்கும் நேரில் சென்று சந்தித்தார். முதலாவதாக பெரியார் திடலுக்கு சென்று கி. வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மு.க. ஸ்டாலின் விஜய்யின் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார். மேலும், உதயநிதி ஸ்டாலின் வாசலிலேயே நின்று விஜய்யை கட்டியணைத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டிற்கு சென்று வாழ்த்து பெற்றார். வைகோ மற்றும் அவரது குடும்பத்தினர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன்பிறகு அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு சென்று அவரையும் சந்தித்தார். கடைசியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டிற்கு சென்றும் விஜய் வாழ்த்து பெற்றார். இந்நிலையில், அடுத்ததாக விஜய் யாரை சந்திக்க உள்ளார், ரஜினியை சந்திப்பாரா அல்லது எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன. 

மேலும் படிக்க | சூர்யா – ஜோதிகா மகள் தியாவின் 12ம் வகுப்பு மதிப்பெண்! வைரலாகும் மார்க்ஷீட்!

விஜய் குறித்து பேச மறுத்த ரஜினிகாந்த்

இந்த சூழலில், இன்று சென்னை விமான நிலையத்திற்கு சென்ற ரஜினிகாந்திடம், செய்தியாளர்கள் விஜய் முதல்வரானது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் அதற்கெந்த பதிலும் அளிக்காமல், கைகூப்பி கும்பிட்டபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது ரஜினி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். "நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு ரஜினி தற்போது வரை எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கும் பேசாமல் அமைதியாக சென்றிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்!

முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது த.வெ.க.வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, ரஜினி குறித்து ஒரு விமர்சனத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனக்கு ஆதரவாக பேசிய அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தவர், "காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்று சூசகமாக குறிப்பிட்டிருந்தார். விஜய் தேர்தலில் வெற்றிபெற மாட்டார் என்பதை குறித்தே அந்த அறிக்கை வெளியானதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து சொல்லாமல் மௌனம் காத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | காதலை சொல்லாமல் சொன்ன த்ரிஷா! விஜய் பதவியேற்பு விழா சம்பவம்..இதை பார்த்தீங்களா?

தேதி நிகழ்வு சந்தித்த தலைவர்கள் / முக்கிய நபர்கள்
மே 4, 2026 தேர்தல் முடிவுகள் வெளியீடு ரஜினிகாந்த் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் 

​மே 10, 2026

​முதலமைச்சராக பதவியேற்பு பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்பு
மே 11, 2026 முதல் சட்டப்பேரவைக் கூட்டம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் பதவியேற்பு
 மே 11, 2026  தலைவர்களுடன் சந்திப்பு  கி. வீரமணி, மு.க. ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான்
மே 12, 2026 விமான நிலைய நிகழ்வு விஜய் குறித்து பேச மறுத்த ரஜினிகாந்த்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. விஜய் எப்போது தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்?

விஜய் மே 10, 2026 அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

2. முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் எந்தெந்தத் தலைவர்களைச் சந்தித்தார்?

சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு, கி. வீரமணி (திராவிடர் கழகம்), மு.க. ஸ்டாலின் (திமுக), வைகோ (மதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக) மற்றும் சீமான் (நாம் தமிழர் கட்சி) ஆகியோரை அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றார்.

0
0
Report

முதல்வர் பதவியை உதறிய திருமா? அதிமுக உடைய முக்கிய காரணம் - விஜய் வைத்த வெடி

Chennai, Tamil Nadu:

அதிமுக மீண்டும் உடைவதற்கு காரணம் - முழு பின்னணி: தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி உள்ளது. ஆனால், தவெகவுக்கு முன் 1997 ஆம் ஆண்டில், அப்போது தமிழக மக்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று, தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்த கட்சிதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கியது எங்கே?

பிற்காலத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் மாற்றம் பெற்ற இக்கட்சி, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரனால் தொடங்கப்பட்டது. 1977ஆம் ஆண்டில் இருந்து 1987ஆம் ஆண்டுவரை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தார். அதன்பின், ஜெயலலிதாவின் எழுச்சிக்கு 1991இல் மீண்டும் ஆட்சியை பிடித்தது, அதிமுக.

மேலும் படிக்க | தவெக எம்எல்ஏவுக்கு தடை... விஜய்க்கு பலம் குறைகிறது... ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தவர் அப்செட்!

அதன்பின் 2001, 2011, 2016 என மூன்று முறை ஆட்சியை பிடித்தது. இதற்கிடையில் சொத்து குவிப்பு உள்ளிட்ட வழக்குகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிறை செல்ல சில காலம் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சராக செயல்பட்டார். 2016ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா காலமானார். அன்றில் இருந்து அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கியது எனலாம். இன்று அக்கட்சியால் மீள முடியவில்லை.

ஒற்றை தலைமை விவகாரம்

ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா - டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி என பல பவர் சென்டர்களிடம் அதிமுக சிக்கியது. சசிகலா சிறை சென்றார், ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து டிடிவி தினகரனை கட்சியில் இருந்து வெளியேற்றி, இரட்டை தலைமையுடன் ஆட்சியை நடத்தினர். டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கினார். அதிமுகவின் இரட்டை தலைமையில் சிக்கல் எழுந்தது, ஒற்றை தலைமைக்கான கோரிக்கை 2022இல் ஓங்கியது. 

இப்போது மீண்டும் ஒரு பிளவு

இதைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் பலரும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்து வரும் செங்கோட்டையனும் ஒரு கட்டத்தில் வெளியேற்றப்பட்டார். தற்போது 2026 தேர்தலில் மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது, அதிமுக. 47 எம்எல்ஏக்களையே அதிமுக பெற்றிருக்கிறது. 

எடப்பாடி பழனிசாமி vs சி.வி. சண்முகம்

அப்படியிருக்க, தற்போது மீண்டும் ஒருமுறை அதிமுக ஒரு பிளவுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (மே 12) நடந்தது. அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக்கொண்டனர், அதிமுகவின் சி.வி. சண்முகத்தை தவிர்த்து... 

எம்எல்ஏக்கள் பதவியேற்பு முடிந்த கையோடு, அதிமுகவின் சட்டப்பேரவைக்கு குழு தலைவர் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து 17 எம்எல்ஏக்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் மனு அளித்தனர். இபிஎஸ் ஆதரவாக ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமாரவேல், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் அடக்கம்.

ஆனால், எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக முன்மொழிந்து சி.வி. சண்முகம் தரப்பு முன்மொழிந்துள்ளது. இதற்கான ஆதரவு மனுவை எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் இணைந்து 30 எம்எல்ஏக்களின் கையொப்பத்துடன் தற்காலிக சபாநாயகரிடம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த மனுவை அளிக்கும் முன் சபாநாயகர் அறையில் சி.வி. சண்முகம் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

நீடிக்கும் குழப்பம்

தற்போது இபிஎஸ் தரப்பு மற்றும் சி.வி சண்முகம் தலைமையிலான தரப்பு என பிரிந்து நிற்பதால் அதிமுகவில் யார் சட்டப்பேரவை குழுத் தலைவர் என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. இபிஎஸ் தரப்பில் தங்களுடன் 17 பேர் இல்லை, மொத்தம் 24 எம்எல்ஏக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மறுபுறம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக 30 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதிலும் குழப்பம் நீடிக்கிறது.

சி.வி. சண்முகம் அணிக்கு சட்ட சிக்கல்

ஆனால், இதில் சி.வி. சண்முகம் தரப்புக்கு பெரிய சிக்கல் இருக்கிறது. அவர்கள் கூறுவதன் படி 30 எம்எல்ஏக்கள் இருந்தாலும், அது அவர்களுக்கு பிரச்னைதான். இதனால், அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டம் பாயலாம். 

மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் இருந்தால்தான் இந்த சட்டப்பிரச்னை வராமல் இருக்கும். அப்படியென்றால் அதிமுகவில் உள்ள 47 எம்எல்ஏக்களில் 32 பேரின் ஆதரவு வேண்டியதாக இருக்கும். சி.வி. சண்முகம் அணிக்கு 2 பேர் தேவைப்படும். அந்த 2 பேர் இல்லையென்பதால் சட்டச்சிக்கல் வரும்.

இபிஎஸ் அணிக்கு சாதகம்

மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம் தலைமையிலான 30 எம்எல்ஏக்களையும் அதிமுகவில் இருந்து நீக்கினால் அல்லது தகுதி நீக்கம் கோரினால் அவர்கள் தனி அணியாக செயல்படுவார்கள், ஆனால் அதிமுகவுக்காக உரிமை கோருவதிலோ, சட்டமன்ற தலைவராக கேட்பதிலோ சி.வி. சண்முகம் அணிக்கு சிக்கல் வரலாம். 

எடப்பாடி பழனிசாமிக்கு 17 பேர் மட்டுமே இருந்தாலும், கட்சியின் அமைப்பு ரீதியான (Organizational) கட்டுப்பாடு இவர்களிடம் இருக்கிறது. அதிமுகவின் சின்னம் மற்றும் கட்சிப் பெயரைப் பாதுகாப்பதில் இவர்களுக்குச் சாதகமான சூழல் இருக்கும்.

மேலும் படிக்க | 120 கிடையாது.. தவெகவுக்கு பெருகிய ஆதரவு.. விஜய் ஆட்சி கலையவே கலையாது

என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்?

எனவே, 32 என்ற மேஜிக் எண் இல்லையெனில் சி.வி. சண்முகம் தரப்புக்கு சட்ட ரீதியான நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில், எடப்பாடி தரப்புக்கு எண்ணிக்கை ரீதியான பலவீனம் இருக்கும். எனவே, யாரை அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுப்பது என்பதில், இன்று பொறுப்பேற்க இருக்கும் ஜே.சி.டி. பிரபாகருக்கு நெருக்கடி இருக்கும்.

அதிமுகவின் பிளவுக்கு காரணம் என்ன?

ஏற்கெனவே, கட்சி தோல்வி முகத்தில் இருக்க, இன்னொரு பிளவு அதிமுகவில் ஏற்பட்டால் அதை பழைய நிலைக்கு மீட்பது மிகவும் கடினமாகிவிடும். மேலும் தவெகவின் எழுச்சியால் அதிமுக கரைந்துவிடவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அப்படியிருக்க, அதிமுகவின் தற்போதைய பிளவின் பின்னணியில் விஜய்தான் இருக்கிறாரா என்ற கேள்வியும் அனைவருக்கும் எழலாம். அதில் ஓரளவுக்கு உண்மையும் உள்ளது. 

அதிமுகவின் படுதோல்வி

மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின் எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை. தவெக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. திமுகவில் 59 பேர் வென்றாலும், அதன் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். அதிமுகவில் அதன் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வென்றாலும் கூட 47 எம்எல்ஏக்களே இருந்தனர். 

விஜய் முதல்வராகும் சூழல் உருவானது. காங்கிரஸ் உடனடியாக திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் வெளியில் இருந்து ஆதரவு தர தவெக ஆட்சியமைத்திருக்கிறது. ஆனால், இதற்கிடையே பலரும் யோசித்திராத பல்வேறு விஷயங்கள் நடந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

திமுக - அதிமுக இணைந்து... 

அதில் ஒன்று, திமுக - அதிமுக ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது. இதன் பேச்சை அதிமுக தொடங்கியதா, திமுக தொடங்கியதா என்ற வாதம் தொடர்ந்து இணையத்தில் அனல் பறந்து வருகிறது. அது ஒருபுறம் இருக்க, நேற்று (மே 12) பத்திரிகையாளர் கோலப்பன் அவரது X பதிவில் பகிர்ந்த X பதிவு அதில் புதிய கோணத்தை காட்டுகிறது.

முதலமைச்சராக திருமாவளவன்...?

அதாவது, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சியமைப்பதற்கு பதிலாக, திமுக - அதிமுக ஆதரவுடன் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்கலாம் என பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை முதலில் அதிமுக தரப்பில் இருந்து எழுந்துள்ளது. திமுகவும் இதற்கு இசைவு தெரிவித்திருக்கிறது.

இதனால்தான், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தங்களின் ஆதரவு கடிதத்தை விஜய்க்கு வழங்கிய பின்னரும், திருமாவளவன் தனது ஆதரவு கடிதத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் தங்களின் முடிவை உறுதி செய்ய காலம் தாமதம் ஏற்படுத்தவே, திருமாவளவன் தனது ஆதரவு கடிதத்தை தவெகவுக்கு அளித்துள்ளார் என கூறப்படுகிறது. 

ஒப்புக்கொள்ளாத இபிஎஸ் 

இதற்கு இடையே, புதுச்சேரியில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அழைத்துவரப்பட்டார்கள். அப்போது இபிஎஸ் தலைமையில் மொத்தம் 42 எம்எல்ஏக்கள் ஆலோசனை மேற்கொண்டனர், அந்த கூட்டத்திற்கே எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் வரவில்லை. 

திருமாவளவனை முதல்வராக்கலாம் என சி.வி.சண்முகம் தரப்புதான் அதிமுகவில் இருந்து குரல் எழுப்பியிருக்கிறது. ஆனால், அதை எடப்பாடி பழனிசாமியும் அவரது தரப்பும் திருமாவளவனை முதல்வராக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.

சி.வி. சண்முகம் அணிக்கு அதிருப்தி 

ஒருவேளை திருமாவளவன் முதல்வராக பொறுப்பேற்றால், திமுக வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்திருக்கும் என்றும், அதிமுகவினர் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் இருந்திருக்கும் என்றும் பேசப்படுகிறது. இந்த வாய்ப்பையும் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற கோபமே சி.வி. சண்முகம் தரப்புக்கு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சி.வி. சண்முகம் அணி தங்களின் ஆதரவை தவெகவுக்கு அளிக்கவும் தற்போது தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

விஜய் தாக்கமே பிளவுக்கு முக்கிய காரணம்

ஆனால், இதில் இருக்கும் சிக்கல்களை முடித்துக்கொண்டால்தான் தவெக பக்கம் அவர்கள் செல்ல இயலும். எனவேதான், நேற்று முதலமைச்சர் விஜய் ஸ்டாலின், உதயநிதி, வைகோ, துரை வைகோ, அன்புமணி, சௌமியா அன்புமணி, சீமான் உள்ளிட்டோரை சந்தித்தும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. அதிமுகவின் பிளவுக்கு விஜய் நேரடி காரணம் இல்லையென்றாலும் அவரின் தாக்கமே முதன்மையாக இருந்திருக்கிறது என்பது இங்கு புரிந்துகொள்ள முடிகிறது.

 

மேலும் படிக்க | 'திமுக - அதிமுக கூட்டணி... இபிஎஸ் முதல்வர்' - சி.வி.சண்முகம் போட்டுடைத்த மேட்டர்!

0
0
Report

இது விஜய் சர்க்கார்... 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Chennai, Tamil Nadu:

CM Vijay TASMAC Closure: முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் விஜய் அவர் பதவியேற்ற மேடையிலேயே மூன்று திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டார்.

விஜய்யின் டார்கெட் டாஸ்மாக்

200 யூனிட் இலவச மின்சார, சிங்கப்பெண் அதிரடி மகளிர் படை, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படை உள்ளிட்ட திட்டங்கள் உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார். நேற்று முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்து பின்னர், ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களிடம் வாழ்த்து பெற்றிருக்கிறார். அந்த வகையில், பெண்கள், குழந்தைகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை விஜய் குறிவைத்திருக்கிறார்.

முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு

முதலமைச்சராக முதல் இரண்டு நாள்களிலேயே பலரையும் கவனம் ஈர்த்திருக்கும் விஜய், அடுத்த அதிரடியாக தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் டாஸ்மாக் கடைகளை மூட விஜய் முடிவெடுத்துள்ளார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், "பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அரசு கண்டறிந்த இனங்கள்      மூடப்படும் கடைகள் எண்ணிக்கை
         வழிபாட்டுத் தலங்கள்                         276 கடைகள்
         கல்வி நிறுவனங்கள்                              186 கடைகள்
          பேருந்து நிலையங்கள்                         255 கடைகள்
                 மொத்தம்                         717 கடைகள்

மேலும் தொடர்ந்து அதில், "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (TASMAC) 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 வாரங்களில் மூடப்படும்

விஜய்யின் உத்தரவின்பேரில், இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்கள் அருகில் இருக்கும் 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் இருக்கும் 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருக்கும் 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த 717 கடைகள் அடுத்த இரண்டு வாரத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

படிப்படியாக குறையும் டாஸ்மாக் கடைகள்

2011ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வரும்போது 6,800க்கும் அதிமான டாஸ்மாக் டைகள் இருந்தன. 2019இல் சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, டாஸ்மாக் கடைகள் 5,198 ஆக குறைந்தது. கடந்த திமுக ஆட்சியிலும் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதன்மூலம், தற்போது தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் தற்போது இயங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.48,344 கோடி வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

போதைக்கு எதிரான அதிரடி நடவடிக்கை

ஏற்கெனவே, விஜய்க்கு பெண்கள், இளைஞர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும் சூழலில், தற்போது 717 டாஸ்மாக் கடைகளை மூடும் விஜய்யின் இந்த நடவடிக்கை மேலும் அவரின் செல்வாக்கை உயர்த்தும் நகர்வாக பார்க்கப்படுகிறது. பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், போதைக்கு எதிராக செயல்படும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் விஜய்யின் அதிரடி நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

இதன்மூலம், குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னைகளை கட்டுப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்கள் புழங்கும் நிலையில், இளைஞர்களின் வாழ்வு பெரும் கேள்விக்குறியாக உள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இதை தடுக்க போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு படையை விஜய் அவர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

0
0
Report
Advertisement

விஜய்யின் கைபிடித்த ஸ்டாலின்... கட்டிப்பிடித்த உதய்... ஆழ்வார்பேட்டையில் கூல் சந்திப்பு

Chennai, Tamil Nadu:

CM Vijay - Stalin Meeting: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மரபுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அவர் வெற்றி பெற்றதே அரசியல் களத்தில் இயங்கும் பலரும் கணிக்காத ஒன்றாகும். 

அப்படியிருக்க இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகள் நிறைவடைந்ததும், தலைமைச் செயலகத்தில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்றார்.

மேலும் படிக்க | விஜய் - ஸ்டாலின் சந்திப்பு.. இருவரும் பேசியது என்ன? சீமானை சந்திக்கிறாரா முதல்வர்?

ஸ்டாலின், உதயநிதி உடன் சந்திப்பு

அங்கு வாசலிலேயே எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விஜய்யை புன்னகையுடன் வரவேற்றார். விஜய்யும், உதயநிதியும் பரஸ்பரம் ஆரத்தழுவி தழுவி வரவேற்றனர். வீட்டுக்குள் சென்றதும் ஸ்டாலினும் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றார். மேலும், விஜய்யின் கையை பிடித்து ஸ்டாலினின் ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.

மேலும் படிக்க | முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த புத்தகம்! எங்கு கிடைக்கும்? விலை என்ன?

விஜய் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை அளித்தார். உடனே, ஸ்டாலினும் சால்வை அணிவித்து முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு "காலத்தின் நிறம் கருப்பு, சிவப்பு" என்ற திமுக பதிப்பித்த புத்தகத்தை பரிசளித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன்பின், விஜய், ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் சற்று நேரம் ஹாலில் அமர்ந்து சில நிமிடங்கள் பேசினர். பின்னர் முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.

இந்த சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின், ""தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்" என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில் பதிவிட்டார்.

இதுகுறித்து விஜய்யை பாராட்டி விசிக தலைவர் திருமாவளவன் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதலமைச்சர் விஜய் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற மேனாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்" என்றார். 

வைகோ உடன் சந்திப்பு

ஆழ்வார்பேட்டையில் இருந்து புறப்பட்டு சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்திற்கு விஜய் சென்றார். அங்கு மதிமுக தலைவர் துரை வைகோ அவரை வீட்டு வாசலிலேயே கட்டியணைத்து வரவேற்றார். வைகோவும் அவர் வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். வைகோ குடும்பத்தினர், வீட்டு பணியாளர்கள், மதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

வைகோ - விஜய் சிறிது நேரம் உரையாடினர். விஜய்யும், வைகோவும் கையை பிடித்துக்கொண்டு ஒன்றாக வீட்டைவிட்டு வெளியே வந்தனர். இருவரும் கூடியிருந்த மக்களை நோக்கி ஒரே நேரத்தில் கை அசைத்தனர். இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். வைகோ விஜய்யை கார் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.

அன்புமணியுடன் சந்திப்பு

ஸ்டாலின், வைகோவை தொடர்ந்து, நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணியின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கும் வீட்டு வாசலிலேயே அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வீட்டில் விஜய்யுடன் அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்தனர். அமைச்சர் என். ஆனந்த் அன்புமணியிடம் வாழ்த்து பெற்றார். 

இதன் பின்னர், விஜய் - அன்புமணி சந்தித்து பேசிக்கொண்டபோது அவருடன் அவரின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும் உடன் இருந்ததது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து வரும் முதலமைச்சர் விஜய், அடுத்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க உள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் யார் யாருக்கு z + security இருக்கிறது? முழு விவரம்!

0
0
Report

தமிழ்நாட்டில் யார் யாருக்கு z + security இருக்கிறது? முழு விவரம்!

Chennai, Tamil Nadu:

இந்தியாவில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளை வழங்குகின்றன. அதில் உச்சபட்ச பாதுகாப்பாக கருதப்படுவது Z+ Security ஆகும். தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மத்திய அரசு Z+ Security பாதுகாப்பை வழங்கி உள்ளது. ஏற்கனவே விஜய்க்கு பாதுகாப்புகள் அதிகம் உள்ள நிலையில், தற்போது அது கூடுதல் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி விஜய் வீடு மற்றும் அலுவலகங்களில் எப்போதும் பாதுகாப்பு படையினர் இருப்பார்கள். தமிழ்நாட்டில் எந்தெந்த தலைவர்களுக்கு இந்த உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஸ்டாலினை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய்? என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்

Z+ Security என்றால் என்ன?

இந்தியாவில் பாதுகாப்பு அடுக்குகள் பொதுவாக X, Y, Y+, Z மற்றும் Z+ என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் Z+ என்பது பிரதமருக்கு வழங்கப்படும் SPG பாதுகாப்புக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பாகும். ஒருவருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டால், அவருக்கு 24 மணி நேரமும் சுமார் 55 பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பளிப்பார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், அதிநவீன ஆயுதங்கள் தாங்கிய காவலர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அடங்குவர். மேலும், இவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் பயணங்களின்போது பைலட் மற்றும் எஸ்கார்ட் வாகனங்களும் வழங்கப்படும்.

மேலும் படிக்க | முதல்வர் விஜய்க்கு Z+ Security.. என்னென்ன சிறப்பம்சங்கள்? கிட்ட நெருங்கவே முடியாது

தமிழ்நாட்டில் Z+ பாதுகாப்பு உள்ள தலைவர்கள்

முதலமைச்சர் மற்றும் ஆளுநர்

வழக்கமாக, ஒரு மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் மற்றும் மாநில ஆளுநருக்கு உச்சபட்ச பாதுகாப்பான Z+ பாதுகாப்பு வழங்கப்படும். அந்த வகையில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்க்கும், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கும் இந்த பாதுகாப்பு நடைமுறையில் உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆரம்பத்தில் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், 2025ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசால் அவருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கும் மாநில அரசின் சார்பில் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் ஒரு எம்எல்ஏ கூட ஆகவில்லை என்பதால் பாதுகாப்பில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மற்ற பிரிவுகளில் உள்ள தமிழக தலைவர்கள்

Z+ பாதுகாப்பு என்பது தேசிய அளவில் சுமார் 40 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு பாதுகாப்பாகும். தமிழ்நாட்டில் Z+ அல்லாமல் பிற முக்கிய பாதுகாப்பு பிரிவுகளை பெற்றுள்ள தலைவர்களும் உள்ளனர். தமிழ்நாடு முன்னாள் பாஜக மாநில தலைவரான கே. அண்ணாமலைக்கு ஆரம்பத்தில் X பிரிவு பாதுகாப்பு இருந்தது. பின்னர் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசால் அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதில் சுமார் 30 கமாண்டோக்கள் பாதுகாப்பளிப்பார்கள். மேலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இதே பாதுகாப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

மத்தியப் புலனாய்வு அமைப்புகளான ஐபி மற்றும் RAW போன்ற ஏஜென்சிகள், ஒரு தலைவருக்கு உள்ள அச்சுறுத்தல்களின் அளவை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் மத்திய உள்துறை அமைச்சகம் ஒருவருக்கு எந்த பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்குவது என்பதை தீர்மானிக்கிறது. அச்சுறுத்தல் குறையும்போது பாதுகாப்பு குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | காதலை சொல்லாமல் சொன்ன த்ரிஷா! விஜய் பதவியேற்பு விழா சம்பவம்..இதை பார்த்தீங்களா?

பாதுகாப்புப் பிரிவு மொத்த காவலர்கள் கமாண்டோக்கள் (NSG/CRPF) சிறப்பு அம்சங்கள்
<table style="border-collapse: collapse; width: 100%; font-family: Arial, sans-serif; class=" [&_tr:last-child_td]:border-b-0="" my-0="" w-full="" table-auto="" border-separate="" border-spacing-0="" text-sm="" font-sans="" rounded-lg="" [&_tr:last-child_td:first-child]:rounded-bl-lg="" [&_tr:last-child_td:last-child]:rounded-br-lg"="">
SPG மிக ரகசியம் அதிநவீன கமாண்டோக்கள் இந்தியப் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும் உச்சபட்சப் பாதுகாப்பு.
Z+ (Z Plus) 55 வீரர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு, குண்டு துளைக்காத வாகனங்கள் (Bulletproof cars).
Z (Z Category) 22 வீரர்கள் 4 முதல் 5 பேர் எஸ்கார்ட் வாகனங்களுடன் கூடிய சுழற்சி முறைப் பாதுகாப்பு.
Y+ (Y Plus) 11 வீரர்கள் 2 பேர் ஷிப்ட் முறையில் வீட்டின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு.
Y (Y Category) 8 வீரர்கள் 1 அல்லது 2 பேர் இரண்டு ஷிப்டுகளில் தலா ஒரு தனிநபர் பாதுகாப்பு அதிகாரி.
X (X Category) 2 வீரர்கள் கமாண்டோக்கள் இல்லை அடிப்படைப் பாதுகாப்பு, ஆயுதம் ஏந்திய உள்ளூர் காவலர்கள்.
 

 

 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்புப் பிரிவு எது?

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்புப் பிரிவு SPG ஆகும். இது இந்தியப் பிரதமருக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்பாகும்.

2. பிரதமருக்கு அடுத்தபடியாக உள்ள உச்சபட்சப் பாதுகாப்பு எது?

பிரதமருக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பு Z+ பாதுகாப்பாகும்.

3. தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது?

தமிழ்நாட்டில் தற்போதைய முதலமைச்சர், ஆளுநர், மற்றும் முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

0
0
Report

முதல்வரான விஜய்! உடனடியாக டெல்லி பயணம்! யார் யாரை சந்திக்கிறார்?

New Delhi, Delhi:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் இன்று சட்டமன்றத்தில் கலந்து கொண்டார். வெற்றி பெற்ற எம்எல்ஏகள் சட்டமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று மதியம் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியானது. மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் சந்திக்க உள்ளார் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் இந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சோனியா காந்தி ஆகியோர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க | ஸ்டாலினை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய்? என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்

முதல்வரான விஜய்!

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதன்முறையாக இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்தார். அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். இன்றைய கூட்டத்தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள எம்.வி. கருப்பையா, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவைக்குள் நுழைந்த தருணம் மற்றும் அவர் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற நிகழ்வு ஆகியவை தமிழக அரசியல் களத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

மு.க. ஸ்டாலின் மற்றும் வைகோவுடன் சந்திப்பு

சட்டமன்ற நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் விஜய் முன்னெடுத்துள்ள அரசியல் நாகரிகம் பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இன்று மதியம், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தியே விஜய் ஆட்சியை பிடித்துள்ளார். மேலும், மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். இத்தகைய அதீத அரசியல் போட்டிக்கு மத்தியிலும், வெற்றி பெற்ற பிறகு முன்னாள் முதலமைச்சரை நேரில் சென்று சந்திப்பது என்பது தமிழக அரசியலில் இதுவரை காணாத ஒரு புதிய அரசியல் நாகரிகத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. 

அதேபோல, திராவிட அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவையும் இன்று விஜய் சந்திக்க உள்ளார். மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களின் ஆலோசனைகளைக் கேட்கும் விஜய்யின் இந்த அணுகுமுறை, அவர் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல விரும்புகிறார் என்பதையே காட்டுகிறது.

மேலும் படிக்க | முதல்வர் விஜய்க்கு Z+ Security.. என்னென்ன சிறப்பம்சங்கள்? கிட்ட நெருங்கவே முடியாது

முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி பயணம்

தமிழ்நாட்டில் தனது அரசியல் நகர்வுகளை மிக கவனமாக மேற்கொண்டு வரும் முதலமைச்சர் விஜய், தேசிய அளவிலும் தனது ராஜதந்திரத்தை வெளிப்படுத்தத் தயாராகிவிட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இந்த வாரம் அவர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த டெல்லி பயணம் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவை தொகைகள், பேரிடர் நிவாரண நிதிகள் மற்றும் மாநில உரிமைகள் குறித்த முக்கிய கோரிக்கைகளை அவர் பிரதமரிடம் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவர் ஆற்றிய முதலமைச்சர் உரையில், முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுள்ளது என குறிப்பிட்டிருந்தார். எனவே, மாநிலத்தின் நிதிநிலையை சீர்செய்ய மத்திய அரசின் உதவியை கோருவது இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

பிரதமரைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்கவுள்ளார். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான மத்திய அரசின் ஒத்துழைப்பு குறித்து இந்தச் சந்திப்புகளில் விவாதிக்கப்படலாம்.

சோனியா காந்தியுடன் சந்திப்பு: கூட்டணியின் பலம்

மத்திய பாஜக அமைச்சர்களுடனான சந்திப்பை முடித்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியையும் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். நடப்பு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை மட்டுமே பெற்றுத் தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவால்தான் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். எனவே, தனக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமைக்கு நேரில் நன்றி தெரிவிக்கும் விதமாக சோனியா காந்தியை அவர் சந்திக்கிறார். மேலும், கூட்டணிக் கட்சிகளுக்குத் தமிழக அமைச்சரவையில் இடமளிப்பது குறித்தும், எதிர்காலத் தேர்தல் வியூகங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்படும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | காதலை சொல்லாமல் சொன்ன த்ரிஷா! விஜய் பதவியேற்பு விழா சம்பவம்..இதை பார்த்தீங்களா?

0
0
Report
Advertisement
Advertisement
Back to top