icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

ஒரு டிக்கெட்டுக்கு... சொத்தையே அடகு வைக்கணும் போலையே - காஸ்ட்லி பிபா உலகக் கோப்பை பைனல்

East Rutherford, New Jersey:

FIFA World Cup 2026 Final Highest Ticket Price : கால்பந்து உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டி இந்திய நேரப்படி திங்கள் (ஜூலை 20) நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. 

விளையாட்டுக்கு பெயர் பெற்ற அமெரிக்காவில் கால்பந்து தற்போது கூடுதல் வரவேற்பை பெற்றிருக்கிறது. மிகவும் காஸ்ட்லியான விளையாட்டு நிகழ்வாகவும் உருவெடுத்துள்ளது.

மேலும் படிக்க | அர்ஜென்டினாவுக்கு தடை? சர்ச்சை பதாகையை ஏந்திய வீரர்கள் - பிபா என்ன முடிவு எடுக்கும்?

பைனலின் டிக்கெட் விலை

நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை 6,943 அமெரிக்க டாலராக (ரூ.6.68 லட்சம்) உள்ளது என Forbes செய்தி வெளியிட்டுள்ளது. 

 அர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது அரையிறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலை 7200 அமெரிக்க டாலராக (ரூ.6.93 லட்சம்)  இருந்தது.

அதிகபட்ச டிக்கெட் விலை எவ்வளவு?

டிக்கெட் விற்கும் இணையதளமான TickPick தளத்தின்படி, இறுதிப்போட்டி டிக்கெட்டின் சராசரி விலை 11,327 அமெரிக்க டாலராக (ரூ.10.90 லட்சம்)உள்ளது. இதன்மூலம், அமெரிக்காவில் அதிக விலையில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வு இதுவாகும்.

இறுதிப்போட்டி நடைபெறும் நியூயார்க் நியூஜெர்ஸி மைதானத்தில் உள்ள 115A Section பகுதிக்கான டிக்கெட் விலை 28,479 அமெரிக்க டாலர் (ரூ.27.42 கோடி) ஆகும். இதுதான் விலை உயர்ந்த டிக்கெட் ஆகும். இதை கேட்டால் லைட்டாக தலையே சுத்துகிறது அல்லவா...

மேலும் படிக்க | FIFA WC : சாம்பியன் அணிக்கு ஸ்பெஷல் பரிசும் காத்திருக்கு... ரூ.481 கோடியும் இருக்கு!

கிரிக்கெட் உலகக் கோப்பை பைனல்

2023ஆம் ஆண்டு இந்தியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியாதான் கிரிக்கெட்டுக்கு அதிக வருவாயை தரும் நாடு எனலாம்.

அப்படியிருக்க, இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய அந்த போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக 1000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடும் டிமாண்ட் காரணமாக ரூ.1.87 லட்சம் வரை டிக்கெட் விற்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

10 மடங்கு அதிகம்

கிரிக்கெட்டையும் கால்பந்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சுமார் 10 மடங்குக்கும் அதிகளவில் டிக்கெட் விலை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதை பார்க்கவும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் நியூயார்க் நியூ ஜெர்ஸி மைதானத்தில் சுமார் 82,500 பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம்.

மெஸ்ஸி vs யமால்

பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மூன்று முறை சாம்பியன் அணியான அர்ஜென்டினா, ஒரே ஒரு சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறது. முன்னாள் பார்சிலோனா வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்ஸி தொடர்ச்சியாக 2வது உலகக் கோப்பையை வெல்ல வெறியோடு காத்திருக்கிறார்.

அதே பார்சிலோனா அணியின் இன்னாள் வீரரும், ஸ்பெயின் அணியின் 19 வயது இளம் வீரருமான யமால் தனது முதல் கோப்பையை ருசிக்க உச்சக்கட்ட வெறியோடும் காத்திருக்கிறார். இறுதிப்போட்டி Zee5 தளத்திலும், Unite8 Sports தொலைக்காட்சி சேனலிலும் சந்தா செலுத்தி காணலாம்.

மேலும் படிக்க | மெஸ்ஸியும் விஜய்யின் தாரக மந்திரமும்... வாழ்க்கை ஒரு வட்டம் - வைரல் போட்டோ

0
0
Report

விண்வெளியில் வந்தே மாதரம்... விக்ரம்-1 ராக்கெட் வெற்றி - பாராட்டித் தள்ளிய பிரதமர் மோடி

Shar Project, Andhra Pradesh:

Vikram-1 Rocket Successful Launch, PM Modi Wishes : இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இன்று பகல் 11.30 மணிக்கு ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 35 நிமிடங்களுக்கு பின்னர் விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட விக்ரம்-1 தனியார் ராக்கெட் அதன் புவிவட்டப் பாதையை வெற்றிகரமாக எட்டியது. ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து விஞ்ஞானிகளும், தனியார் நிறுவனத்திரும் கைத்தட்டி, விசில் அடித்து உற்சாகமாக கொண்டாடினர். அவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்து மழை பொழிந்துகொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!

மூன்றாவது நாடு இந்தியா...

ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் விண்ணில் செலுத்திய விக்ரம் 1 ராக்கெட் ஏவப்பட்டதால், தனியார் ராக்கெட்டை திட்டமிட்ட புவிவட்டப் பாதைக்கு அனுப்பி, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

பிரதமர் மோடி செல்போனில் வாழ்த்து

தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி செல்போனில் வாழ்த்து தெரிவித்தார். ஸ்கைரூட் நிறுவன சிஇஓ மற்றும் அந்நிறுவன விஞ்ஞானிகளை செல்போனில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

"இந்திய இளைஞர்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை உங்கள் குழு சரி என நிரூபித்துள்ளது. நமது விண்வெளி கனவுகளை பலரும் சந்தேகத்திற்கு உட்படுத்துகின்றனர். ஆனால், இந்திய இளைஞர்களை நம்பினால் அவர்களால் அற்புதங்களை செய்ய முடியும் என்பதை இந்த குழுவினர் நிரூபித்துக் காட்டி உள்ளனர்" என்றார்.

9 நிமிடங்களாக வாழ்த்தி பேசிய பிரதமர்

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடியின் வாழ்த்து மைக் மூலம் ஒலிபரப்பானது. விக்ரம் திட்ட விஞ்ஞானிகள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றும்;  விக்ரம் திட்டத்தில் இளம் விஞ்ஞானிகள் இணைந்து சாதனை என்றும் அவர் பேசியிருந்தார். தன்னைச் சந்திக்க வரும்படியும் பிரதமர் மோடி அவர்களை கேட்டுக்கொண்டார். மொத்தம் 9 நிமிடங்கள் தொலைப்பேசியில் அவர்களை வாழ்த்திப் பேசினார்.

'இளைஞர்கள் கனவு காண ஊக்குவிக்கும்'

இதுகுறித்து பிரதமர் மோடி அவரது X பக்கத்தில், "ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருடன் பேசினேன். விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

மேலும் படிக்க | ஹைட்ரஜன் ரயில் ஓடத் தொடங்கியது: வெறும் ரூ.5 கட்டணத்தில் அட்டகாசமான ரயில் பயணம், போட்டோ பாருங்க

இந்திய நாட்டின் விண்வெளி பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். நமது தனியார் துறையின் அதிகரித்து வரும் பங்களிப்பு என்பது புதிய எல்லைகளைத் திறந்து புத்தாக்கத்தை வேகப்படுத்துகிறது. இந்த சாதனை எண்ணற்ற இளைஞர்களை பெரிய கனவுகளை காணவும், அச்சமின்றி புதுமைகளை படைக்கவும் ஊக்குவிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கைரூட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓ-வுமான பவன் குமார் சந்தனாவுக்கு வயது 35 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்கைரூட் குழுவின் சராசரி வயது 28 என்றும் பவன் குமார் சந்தனா கூறியதும் கவனிக்கத்தக்கது.

விண்வெளியில் வந்தே மாதரம்...

மேலும், முன்னதாக பிரதமர் மோடி 'வந்தே மாதரம்' என கைப்பட எழுதி அனுப்பிய குறிப்பும் தற்போது விக்ரம்-1 உடன் விண்ணுக்குச் சென்றிருப்பதாக, பவான் குமார் சந்தனா பிரதமரிடமே தெரிவித்தார். 'வந்தே மாதரம் இப்போது விண்வெளியில்...' என சந்தனா பிரதமரிடம் தெரிவித்தார்.

பிரதமர் தான் ஏன் வந்தே மாதரம் குறிப்பை அனுப்ப தேர்வு செய்ததன் காரணத்தை சொன்னார். இரண்டு காரணங்களுக்காக வந்தே மாதரம் குறிப்பை அனுப்ப முடிவு செய்ததாக பிரதமர் மோடி கூறினார். 

"முதல் காரணம், தேசிய கீதத்தின் 150வது ஆண்டு என்பதால், அதை இன்னும் சிறப்பானதாக மாற்ற விரும்பினேன். இரண்டாவதாக, வந்தே மாதரம் எப்போதும் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வந்துள்ளது" என்றார்.  நீங்கள் வந்தே மாதரத்தின் உணர்வோடு வாழ்ந்திருக்கிறீர்கள் என்றும் ஸ்கைரூட் குழுவினரை பாராட்டினார்.

பிரதமர் மோடி அவரது அழைப்பை துண்டிக்கும் முன், ஸ்கைரூட் குழுவினருக்கு, "நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள். உயரமாகப் பறங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்" என்றார். 

மேலும் படிக்க | NDA கூட்டணிக்கு ஆதரவு ஜாஸ்தி... தோற்கடிக்கப்பட்ட மசோதாக்கள் நிறைவேறும் - செக் வைக்கும் அத்வாலே

0
0
Report

சோனம் வாங்சுக் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி - டெல்லியில் பரபரப்பு

New Delhi, Delhi:

Sonam Wangchuk Hospitalized : கடந்த மூன்று வாரக் காலமாக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்தது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லி காவல்துறையினர் அவரை கட்டாயப்படுத்தி, தூக்கிச் சென்று சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். தற்போது சோனம் வாங்சுக் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை விளக்கம்

இதுகுறித்து டெல்லி காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கழும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளின்படியும் அவருக்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சையை வழங்க வாங்சுக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தை கலைக்கிறதா போலீஸ்?

ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியிருந்த போராட்டக்காரர்களை நோக்கி, விரைவில் போராட்டத்தை இடத்தை காலி செய்யுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. வாங்சுக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின், ஜந்தர் மந்தரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதி பெறாமல் சிகிச்சை கூடாது...

சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ அவரது X பதிவில், "நான் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துமனையில் இருக்கிறேன். அங்குதான் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்னிடமும் அவரது குடும்பத்தினரிடமும் கடந்த 20 நாள்களாக அவரது உடல்நிலையைக் கண்காணித்து வரும் மருத்துவர்களிடமும் அனுமதி பெறாமல் அவருக்கு வாய்வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ எதுவும் கொடுக்கக் கூடாது" என பதிவிட்டுள்ளார்.

21வது நாள் உண்ணாவிரதம்

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி ஆரம்பித்த போராட்டத்தை ஒட்டி, அதே கோரிக்கைகளை முன் நிறுத்தி, கடந்த ஜூன் 28ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இன்று 21வது நாளாகும். சோனம் வாங்சுக்கிற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

0
0
Report
Advertisement

108 அம்மன் கோவில்களுக்கு டூர்... தமிழக அரசின் ஆன்மீகச் சுற்றுலா - 5 நாள்கள் முழு பிளான் இதோ!

Chennai, Tamil Nadu:

TTDC Aadi 108 Amman Temples Spiritual Tour : ஆடி மாதம் பிறந்தாச்சு... ஆன்மீக மாதம் பிறந்தாச்சு என்றும் கூட சொல்லலாம். வழக்கமாக அனைத்து மாதங்களிலும் பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள் என்றாலும், ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்குச் செல்வது என்பது நிச்சயம் பலனை கொடுக்கும் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்றது. அம்மன் கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்து, சிறப்பு பூஜை மேற்கொண்டு, விளக்கு சாத்துவது என ஒவ்வொரு பகுதியிலும் அம்மன் வழிபாடு வெவ்வேறு விதங்களில் இருக்கும்.

ஆடி மாதத்திற்கான ஆன்மீக சுற்றுலா பிளான்

அந்த வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு விதமான அம்மன் வழிப்பாட்டை தெரிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் 'தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்' ஒரு சிறப்பான ஆடி மாதத்திற்கான பிரத்யேக ஆன்மீக சுற்றுலா திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

மேலும் படிக்க | சென்னை மக்களே... ஆடியில் அம்மன் கோவில்களுக்கு டூர் போகலாம் - தமிழக அரசின் ஏற்பாடு!

ஐந்து நாட்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் இருக்கும் 108 அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலாவை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

எப்போதெல்லாம் சுற்றுலா?

  • சென்னையில் இருந்து புறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களை 5 நாள்களில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்.
  • நடப்பு ஆடி மாதம் இன்று (ஜூலை 17) முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதிவரை இருக்கும். அந்த வகையில், ஜூலை 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1,8 ஆகிய தேதிகளில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னையில் இருந்து திங்கட்கிழமை காலை புறப்பட்டால் வெள்ளிக்கிழமை இரவு திரும்பிவிடலாம், வியாழக்கிழமை புறப்பட்டால் திங்கள் இரவு சென்னை வந்துவிடலாம்.

ஐந்து நாள் - 108 அம்மன் கோவில் சுற்றுலா பிளான்

முதல் நாள்

சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படலாம். சென்னை, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வழிபாடு செய்யலாம். முதல் நாள் இரவு திருக்கடையூரில் தங்கிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஆடி மாதம் வருது... பக்தர்களே ரெடியா... தஞ்சையின் அம்மன் கோவில்களுக்கு சிறப்பு டூர்

2வது நாள்

மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வழிபாடு செய்யலாம். இரவு தஞ்சாவூரில் தங்கிக்கொள்ளலாம்.

3வது நாள்

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் வழிபாடு செய்யலாம். இரவில் மதுரை சென்று அங்கு தங்கிக்கொள்ளலாம்.

4வது நாள்

மதுரை, திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் வழிபாடு செய்யலாம். இரவில் திருச்சியில் தங்கிக்கொள்ளலாம்.

5வது நாள்

அன்று சென்னைக்கு திரும்பவீர்கள். வரும் வழியில் உள்ள கோவில்களுக்கு செல்லலாம். இரவு 9 மணிக்கு சென்னை சுற்றுலா வளாகத்திற்கு திரும்பிவிடலாம்.

மேலும் படிக்க | மதுரை மக்களே... கம்மி பட்ஜெட்டில் 7 கோவில்களுக்கு டூர் - ஆடி அம்மன் சுற்றுலாவுக்கு ரெடியா?

TTDC வழங்கும் வசதிகள்

  • பேருந்து வசதி
  • சுற்றுலா வழிகாட்டி
  • தங்குமிடம்

முன்பதிவு செய்வது எப்படி?

108 அம்மன் கோவில்களுக்கான இந்த 5 நாள்கள் சுற்றுலாவுக்கு செல்ல நீங்கள் முன்பதிவு செய்வது அவசியமாகும். www.ttdconline.com என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புகொள்வது எப்படி?

மேலும், எந்தெந்த கோவில்களுக்கு அழைத்துச் செல்வார்கள்?, அழைத்துச் செல்லும் பேருந்து ஏசி பேருந்தா? அல்லது ஏசி வசதி இல்லாத பேருந்தா?, 5 நாள்களும் உணவு ஏற்பாடு எப்படி? உள்ளிட்ட உங்களின் பல சந்தேகங்களை கேட்க 044-25333 333 மற்றும் 7550063121 (வாட்ஸ்அப்) உள்ளிட்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்.

கட்டணம் எவ்வளவு?

சென்னை, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, விழுப்பரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 108 அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இந்த ஆடி அம்மன் சுற்றுலாவுக்கு 11,250 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | தமிழக அரசின் ஆடி டூர்... திருச்சியில் எந்தெந்த அம்மன் கோவில்களுக்கு போகலாம்? - எவ்வளவு?

0
0
Report

நட்சத்திர பாகிஸ்தான் வீரருக்கு 3 மாத தடை... கறார் காட்டிய ஐசிசி - என்ன காரணம்?

Chennai, Tamil Nadu:

பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸிற்கு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் ஊக்க மருந்து விதிகளை மீறியதை அடுத்து, அவர் மீது இந்த நடவடிக்கையை ஐசிசி எடுத்துள்ளது.

மூன்று மாதக்கால தடையை நவாஸ் ஏற்றுக்கொண்டார். போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கான திட்டத்தை நிறைவு செய்யும்பட்சத்தில், இந்த தடை ஒரு மாதக் காலமாக குறைக்கப்படும்.

மேலும் படிக்க | ரோஹித் சர்மா ஓய்வு... லார்ட்ஸ் போட்டி தான் கடைசி; கம்பீர் - அகர்கர் எடுத்த திடீர் முடிவு

டி20 உலகக் கோப்பையில் நவாஸ்

கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்றது. இதில் இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை வென்றது. இத்தொடரில் பாகிஸ்தான் அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையிலேயே விளையாடியது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர மறுப்பு தெரிவித்துவிட்டது.

போதைப்பொருள் பயன்பாடு உறுதி

இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி அன்று இலங்கை தலைநகர் கொழும்பில் நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் (Carboxy-THC),  ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளின் கீழ் முகமது நவாஸ் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது.

விளக்கம் அளித்த நவாஸ்

Carboxy-THC என்பது வழக்கமான கஞ்சா போதைப்பொருள் சோதனைகளில் கண்டறியப்படும் முதன்மையான வளர்சிதை மாற்ற ஊக்கியாகும்.  நவாஸ் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் இது டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் பயன்படுத்தப்பட்டது என்றும்; இது விளையாட்டுக்கு தொடர்பற்றது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | ஹர்திக்கிடம் பேசிய தோனி.. மொத்தமாக மாறிய டிரேட் டீல்! CSK வராரா? இல்லையா?

தடைக் காலம் முடிந்துவிட்டது...

ஐசிசி விதித்த தடையை ஏற்றுக்கொண்டதன் மூலம் போதைப்பொருள் துஷ்பிரயோக சிகிச்சையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதை தொடர்ந்து நவாஸின் தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே தனது இரண்டரை மாத தடையை அனுபவித்துவிட்டார். ஐசிசியின் விதிகளுக்கு ஏற்ப சிகிச்சை நிறைவுசெய்யும்பட்சத்தில், அவர் கூடுதலாக தகுதியிழப்புக் காலத்தை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. 

அதேநேரத்தில் ஐசிசியின் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகளின்படி, பிப்ரவரி 7ஆம் தேதி அன்று நெதர்லாந்து - பாகிஸ்தான் ஆட்டத்தில் இருந்து மே 1ஆம் தேதிவரை அவர் விளையாடிய அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

நவாஸ் கடைசியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடியிருந்தார். முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக 6 இன்னிங்ஸில் 54 ரன்களை எடுத்தார். 9 போட்டிகளில் பந்துவீசி 6 விக்கெட்டை எடுத்திருந்தார். பந்துவீச்சில் அதிக ரன்களை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆல்-ரவுண்டர் நவாஸ்

ஆல்-ரவுண்டரான நவாஸ் இதுவரை பேட்டிங்கில் 6 டெஸ்ட் போட்டிகளில் 144 ரன்களையும், 44 ஓடிஐ போட்டிகளில் 538 ரன்களையும், 98 டி20ஐ போட்டிகளில் 911 ரன்களையும் அடித்துள்ளார். அதேநேரத்தில் அவர் பந்துவீச்சில் டெஸ்டில் 16 விக்கெட்டையும், ஓடிஐ 49 விக்கெட்டையும், டி20ஐயில் 101 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளார்.

மேலும் படிக்க | சிஎஸ்கே புது கோச் யார்... நிர்வாகம் போட்ட அதிரடி கண்டிஷன் - என்னென்ன தெரியுமா?

0
0
Report

பழனிக்கே மொட்டைப் போட்ட தவெக... புட்டுபுட்டு வைத்த திமுக - சூடுபிடிக்கும் நிலம் பதிவு விவகாரம்

Chennai, Tamil Nadu:

Palani Land Registration Latest News : சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் இன்று (ஜூலை 17) செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், "பழனி கோவிலின் 1.41 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் இரண்டு பேரில் பதிவு செய்து இருப்பது சர்ச்சையும், இது தொடர்பாக புகார் எழுந்துள்ளது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் தனியாரிடம் இருந்ததை கைபற்றி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் படிக்க | பழனி ரூ.100 கோடி நிலம் பதிவு... ரத்து செய்த நீதிமன்றம் - அமைச்சர் போட்ட விளக்கம்

அமைச்சர் பேச்சில் உள்நோக்கம்

இந்த இடம் கார் பார்க்கிங் பயன்படுத்தும் இடமாக இருந்ததை எப்படி தனி நபர்களின் பெயருக்கு மாறினர் என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அறியாமையின் காரணமாக தவறு நடந்து இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சொல்வதை ஏற்க முடியாது. தனி நபர்களை காப்பாற்றவும், குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதில் உள் நோக்கம் இருக்கிறது.

சார்பதிவாளர் அழுத்தம் காரணமாக...

இந்த விவகாரத்தில் பழனி சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் விடுமுறையில் இருந்த காரணமாக பதிவு செய்ய முடியாமல் இருந்த நேரத்தில் எப்படி கொடைக்கானல் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை வைத்து இந்த நிலம் பதிவு செய்யப்பட்டது. இது திட்டமிட்டு சதி செய்யும் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சார்பதிவாளர் அழுத்தம் காரணமாக பதிவு செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விவகாரம் மூலமாக பதிவு செய்ய வரும் நேரத்தில் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்ற விவரம் இருக்கும் நிலையில் அதை மாவட்ட சார் பதிவாளர் மூலம் ஆய்வு செய்து, சரிபார்த்து இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | பழனி நிலப்பதிவை செய்ய சொன்ன பவர் சென்டர் யார்? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி

எனவே நிலம் பதிவு செய்யப்பட்டதில் ஆளும் தவெக அரசுக்கு ஆதரவாக இருக்கும் பினாமி பெயரில் மாற்றப்பட்டுள்ளது. டூப் முதல்வர் விஜய் ஏன் நிலம் பதிவு செய்த சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் பழனி கோவில் நிலத்தை பாதுகாக்கப்பட்டது. தற்போது, பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கிறது.

அதிகாரிகளை காப்பாற்ற நினைக்கும் அமைச்சர்

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ஏன் இந்த விவகாரத்தில் தன்னிசையாக அதிகாரிகளை காப்பாற்ற நினைக்கிறார். ஆய்வு செய்ய இதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அதேபோல் அமைச்சர் நிர்மல்குமார், திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி குறித்து பொறுப்பு இல்லாமல், தரக்குறைவாக பேசும் நோக்கில் பேசுவது சரியல்ல. தவெக அமைச்சர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்" என எச்சரித்தார்.

வாய் திறக்காத CM விஜய்

தொடர்ந்து பேசிய பரந்தாமன், "பழனி நிலம் பத்திரப்பதிவு விவகாரத்தில் விசாரணை சரியாக இல்லை என்றால் திமுக நீதிமன்றம் செல்லும். ரூ. 15 லட்சம் சொத்தை வாங்க முடியாதவர்கள் எப்படி ரூ.2 கோடி நிலத்தை வாங்க முடியும். இதில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
 
முதல்வர் விஜய் கவனிக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் விஜய் வாய் திறந்து பேசுவதில்லை. திமுக ஆட்சியின் போது மேடை போட்டு சி.எம்.ஆர் சார் என்று பேசிய விஜய் இப்போது ஏன் பேச மறுக்கிறார்?.

புகார் நம்பர் புதிதல்ல...

முதல்வர் விஜய்க்கு தெரிந்துதான் இந்த நிலம் சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்டது. ஆனால்  லஞ்சம் இருந்தால் புகார் கொடுக்கலாம் என்ற எண் கொடுத்திருப்பது புதியது அல்ல. ஆனால் தவெக இதுபோல் பிம்பத்தை உருவாக்குகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை என்ற துறை ஏற்கனவே இருக்கிறது. அதற்கான செல்போன் எண் தனியாக இருக்கிறது. இது புதிதாக கொண்டு வந்த நடைமுறை என மாற்றுகின்றனர். அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் ஒரு நபர் பதிவு செய்தால் உடனடியாக கைது செய்யப்படும் நிலை இருக்கிறது" என்றார்.

மேலும் படிக்க | பழனி முருகன் கோயில் தரிசனத்தில் மாற்றம்.. கட்டண விவரம் இதோ.. அறநிலையத்துறை அதிரடி!

0
0
Report
Advertisement

பெண் கவுன்சிலர்கள் இடையே அடிதடி... திமுக vs காங்கிரஸ் மோதல் - கோவையில் பரபரப்பு

Coimbatore, Tamil Nadu:

Coimbatore Latest News Updates : கோவை மாநகராட்சியில் நடைபெற்ற 40 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, வெளிவந்த பத்திரிகை செய்தி தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்ட போது காங்கிரஸ் கட்சியின் பெண் கவுன்சிலரை மூன்றுக்கும் மேற்பட்ட திமுக பெண் கவுன்சிலர்கள் புடவை மற்றும் கையை பிடித்து இழுத்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதனால், கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் பெண் அடிதடி சண்டை நடந்தது. இதனால் மாநகராட்சி அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.

கோவை மாநகராட்சியில் 40 கோடி ரூபாய் ஊழல் என காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி புகார் தெரிவித்தார். மேலும் ஊழல் குறித்து பேசவிடாமல் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார்.

0
0
Report

ரோஹித் சர்மா ஓய்வு... லார்ட்ஸ் போட்டி தான் கடைசி; கம்பீர் - அகர்கர் எடுத்த திடீர் முடிவு

England:

Rohit Sharma Retirement : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஓடிஐ தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வரும் ஜூலை 19ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது ஓடிஐ போட்டிதான் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்திருக்கிறது.

ஆனால் அதை விட முக்கியமானது என்னவென்றால், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3வது ஓடிஐ போட்டிதான் ஹிட்மேன் ரோஹித் சர்மாவுக்கு கடைசி சர்வதேச போட்டி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்து தொடருக்கு பின் அவரை அணியில் தேர்வு செய்யப்போவதில்லை என இந்திய சீனியர் ஆடவர் அணியின் தேர்வுக்குழு முடிவெடுத்துவிட்டதாகவும், இந்த தகவலை அவர்கள் ரோஹித் சர்மாவுக்கு தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2027 உலகக் கோப்பை தொடருக்கு ரோஹித் சர்மாவை தேர்வு செய்யப்போவதில்லை என தேர்வுக்குழுவினர் முடிவெடுத்திருப்பதாகவும்; இதை ரோஹித்திடமும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

தேர்வுக்குழுவினரும், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் கடந்த வாரமே இதுகுறித்து ரோஹித் சர்மாவிடம் பேசிவிட்டதாகவும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளதாக அவர்கள் ரோஹித்திடம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.

ஆனால், ரோஹித் சர்மாவுக்கு இதில் திருப்தியில்லை எனவும் தெரிகிறது. இதுகுறித்து பிசிசிஐயின் சிலரிடம் ரோஹித் சர்மா பேசியிருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் பிசிசிஐ இதில் ஏற்கெனவே ஒரு முடிவை எடுத்துவிட்டதாகவே தெரிகிறது.

ரோஹித் சர்மா கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதும் டி20ஐ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து கடந்த 2025ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வுபெற்றதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார். டி20ஐ மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றவிட்ட ரோஹித் சர்மாவுக்கு ஓடிஐயில் இருந்து விலக்கிவைக்கப்பட்டால், அதுதான் அவரது கடைசி போட்டியாக இருக்கும்.

ஓடிஐ போட்டிகளில் ரோஹித் சர்மாவை கடந்தாண்டு கேப்டன்ஸியில் இருந்து பிசிசிஐ திடீரென நீக்கியது. அவருக்கு பதில் சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம், பிசிசிஐ இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்

ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸியில் இந்திய அணி 2023 ஓடிஐ உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலும், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் தகுதிபெற்றது. அதேநேரத்தில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களையும் இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது.

0
0
Report

திருச்செந்தூர் கோவிலில் அனிதா ராதாகிருஷ்ணன் போராட்டம்; தவெக அரசுக்கு எதிர்ப்பு - காரணம் என்ன?

Tiruchendur Temple Latest News : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட் அகற்றக் கோரியும், உள்ளுர் மக்கள் வழிபடுவதற்கு நேரம் நிச்சயம் செய்து அடையாள அட்டை ஆதார் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என கோரியும் கோயில் நிர்வாக அலுவலரான இணை ஆணையருக்கு மனு கொடுத்தும் இப்போது வரை இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இது குறித்து திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ அனிதா R.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல ஆண்டுகளாக திருவிழா காலங்களிலும் விசேஷ நாட்களிலும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். 

மேலும் படிக்க | "திமுக - அதிமுக கூட்டணி வெறும் கட்டுக்கதை".. வதந்திக்கு இபிஎஸ் முற்றுப்புள்ளி

நம் தமிழ்நாடு மக்கள்  மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் விரதமிருந்து சுவாமி தரிசனத்திற்கு வருகின்ற நிலை பல ஆண்டு காலமாக இருக்கிறது.

தென் மாவட்டங்களில் உள்ள  விவசாயிகள் தங்களது விவசாயம் செழிக்க வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் விவசாய விளை பொருட்களை முருகப்பெருமானுக்கு காணிக்கை படைக்கும் நிகழ்வு பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. வாழைத்தார், நெல், வெற்றிலை, தேங்காய் மற்றும் இதர விளை பொருட்களை சண்முக விலாச மண்டபத்தில் காணிக்கையாக செலுத்தி கடவுளை வழிபடுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஏராளமான திருமணங்கள் சண்முக விலாச மண்டபத்தின் முன்பு நடைபெறுகிறது. இப்படியாக முக்கியத்துவம் வாய்ந்த சண்முக விலாச மண்டபம் இரும்பு கிரில் கேட் போட்டு தற்போது அடைக்கப்பட்டுள்ளது.

இரும்பு கிரில் கேட் அகற்றப்பட வேண்டும் 

முருகப்பெருமானுக்கு விவசாயிகள் காணிக்கை செலுத்துவதற்கும் உள்ளுர் மக்கள் உற்சவரை வழிபடுவதற்கும் காலங்காலமாக இருந்துவந்த மரபை தடுக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு கிரில் கேட் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் உள்ளுர் மக்கள் வழிபடுவதற்கு நேரம் நிச்சயம் செய்து அடையாள அட்டை ஆதார் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது  பக்தர்களின் கோரிக்கை 

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு ரூ.62,000 காப்பீடு.. தமிழக அரசின் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

நிர்வாக அலுவலரான இணை ஆணையருக்கு மனு 

பக்தர்களின் இந்த கோரிக்கைகளை ஜூலை 15 ஆம் தேதிக்குள் நிறைவேற்றவில்லை என்றால்  அனிதா R.ராதாகிருஷ்ணன் தலைமையில் பக்தர்கள் அறவழியில் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்பதை தெரிவித்து கோயில் நிர்வாக அலுவலரான இணை ஆணையருக்கு ஜூலை 6 அன்று மனு வழங்கியுள்ளனர்.

அறவழிப் போராட்டம் நடைபெறும் 

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படாத நிலையில் வரும் ஜூலை 22 அன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு திருக்கோயில் முன்பு சுமார் 5000 பக்தர்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் வடிவிலான அறவழிப் போராட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி MLA அனிதா R.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில் சமூக அமைப்பினரும் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ளவர்களும் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா R.ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக முக்கிய பங்கு வகித்து வருகிறார், நடந்து முடிந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு பின்னர் வந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போதய முதலமைச்சர் சி ஜோசப் விஜயை அவதூறாக பேசியதிற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய் நிகழ்ச்சிக்கு கல்தா... எல். முருகன் நிகழ்வுக்கு வருகை - மேயர் பிரியா சொன்ன பதில்

0
0
Report
Advertisement

CM விஜய் போட்ட திட்டம்.. சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.. ஆர்.பி.உதயகுமார் பகீர் தகவல்!

Madurai, Tamil Nadu:

Admk RB Udhayakumar: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தவெக அரசை கடுமையாக விமர்சித்து தினந்தோறும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில்,  இன்று (ஜூலை 16) ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ”நடந்து முடிந்த தேர்தலிலே 35 சதவீதம் ஆதரவு வாக்குகளை பெற்று, 65 சதவீதம் எதிர்ப்பு வாக்குகளை பெற்று இருக்கின்ற முதல்வர் விஜயின் பாப்புலாரிட்டி இப்போது  உலகத்திலேயே உச்சத்தில் இருக்கிறதாக தொடர்ந்து பக்காவான பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு தகவல்

இந்த சோசியல் மீடியாவில ட்ரெயின் ப்ரொபஷனல்  இன்புலியன்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த வாடைக்கு அமர்ந்திருப்பவர்கள். விஜயின் பின்பத்தை பாப்புலர்லாக்கி கட்டமைக்கின்ற கடமையை கச்சிதமாக காட்சிப்படுத்த கணக்கு வழக்கு இல்லாமல் பல கோடி ரூபாயை கொட்டி கொடுப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. 

அதற்கு சில உதாரணங்களை நாம் இன்றைக்கு பார்க்கிறோம். நம்ம முதல்வர் விஜய் எவ்வளவு அழகாக கொடி அசைக்கிறார் பார்த்தீர்களா. எந்த மனசு சார் அவருக்கு எவ்வளவு, ஸ்டைலாக நடக்கிற பாத்திங்களா , போதை பொருள் ஒழிப்பதற்கு எவ்வளவு வேகமாக ஓடுகிறார் பாத்திங்களா, என்ன மனசு சார் முதல்வர் விஜய்க்கு, லஞ்சத்தை ஒழிக்க எவ்வளவு துணிச்சலாக whatsapp எண் அறிவித்திருக்கிறார் பார்த்தீர்களா  என்ன தைரியம் நம்ம முதல்வருக்கு .

பயபக்தியோட தன்னடக்கமாக  எப்படி சாமி கும்பிடறார் பார்த்தீங்களா.  யாருக்கு சார் இந்த மனது வரும் வரும்? என்னமா சட்டசபையில் கலக்குகிறார். எப்படி செமையா செய்கை பாத்திங்களா இதெல்லாம் ஒரு தில்லு வருது சார்.  ரேசன் கடையிடல் கீழே கொட்டால் சர்க்கரையை எப்படி கைக்குள்ள கொட்டுகிறார் பாத்திங்களா? சீராக எப்படி கார் ஓட்டுகிறார் , அங்கே கர்நாடகாவில் இருந்த ஓட்டி வருகிறபோது பிளாஸ்டிக் பாட்டில்ல  வச்சிருந்தை  மட்டும் கேட்கக்கூடாது.

இப்படி ஒவ்வொரு நொடிக்கு நொடி விஜயின் பிம்பத்தை செயற்கையாக கட்டமைப்பதை பார்க்கின்ற போது ஏதோ இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எந்த  எந்த முதல்வரும் செய்யாத திட்டங்களை, இப்போது இவர் மட்டும்தான் மக்களுக்கு செய்து வருவது போல ஒரு கனகச்சிதமான கட்டமைப்பு செய்து வருவதோடு, எதிர்க்கட்சிகள் யாராவது ஏதாவது இதை பற்றி விஜிய்யிடம் கேள்வி கேட்டால் போச்சு உடனே என்ன சொல்வார்.வாய் இருக்கிறது என்பதால்  என் மேல பழி போடுறாங்க என்று உணர்ச்சிவசமான, வசீகரமான வசனத்தை பேசி அசத்தி அரசியலை அதிரவை பார்முதல்வர் விஜய்.

அதிமுகவை அபகரிக்க திட்டம்

அவர் ஆடுகிற அரசியல் ஆட்டத்தில் முக்கியமான ஒன்று அதிமுகவை அபகரிக்க வேண்டும் என்ற பேராசையில் முதல்வர் விஜய்  ஒவ்வொரு முறையும் தடுமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாட்டு மக்களும் இதை உன்னிப்பாக பார்த்து வருகிறார்கள். 
அண்ணா திமுக தொண்டர்களும் இதை வேதனையோடு பார்த்து வந்தார்கள். 

த.வெ.க அரசின் பெரும்பான்மை நிரூபிக்க விஜய்க்கு ஆதரவு அளிக்க 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து அதிமுகவை அலேக்காக தூக்கிவிடலாம். அதன் பிறகு விஜய்க்கு ஆதரவாக சட்டமன்றத்திலே அவர்களை வாக்களித்தால், ஆதரவளித்த உறுப்பினர்களை அமைச்சர் அதிகாரம் அளித்து என்கிற ஆசை காட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சாமானியர்  என்று விஜய் தப்பு கணக்கு போட்டு விட்டார். எடப்பாடியாரை குறைத்து மதிப்பீடு செய்து  விட்டார்.

சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்

ஆகவே தான் அவருடைய ரகசிய திட்டம்  எடப்பாடியாரை விலக்கி வைத்துவிட்டு, அதிமுகவை விஜய்க்கு அடகு வைக்கவும் ,அடிமை சாசனம் எழுதி வைப்பதற்கு தயாராக இருப்பவர்களை வைத்து அதிமுகவை வழிநடத்தும் எடப்பாடியாரையும், அதிமுகவை ஒட்டுமொத்தமாக அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்ற விஜய்யின் ரகசிய திட்டத்தை, எடப்பாடியார் செய்த புண்ணியம்,  எதற்கும் அஞ்சாத மன உறுதி எப்போதும் மாறாத விசுவாச தொண்டர்களின் ஆதரவால் அதிமுகவின் ஒரே நம்பிக்கையை எடப்பாடியார் என்று ஒட்டுமொத்தமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சூளுரை ஏற்று விஜய் என்று ரகசிய திட்டத்தை சுக்கு நூறாக அகற்றி எரிந்து விட்டார்கள்.

இன்னைக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆன்மாக்களின் ஆசி  எடப்பாடியாருக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் பேராசை பிடித்தவர்களிடமிருந்து ,அதிமுகவை மீண்டும் மீட்டெடுத்து புதிய பொலிவோடும் வலிமையோடும் தலைமை தாங்கி வழி நடத்தி மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்பை காட்டுவேன் என்று தன்னை அர்ப்பணித்து அயராது உழைத்து வரும் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான கழக தொண்டர்கள் விசுவாச உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது” என்றார்.

0
0
Report

தமிழகத்தில் வெங்காய விலை கிடு கிடு உயர்வு!வரும் நாட்களில் ரூ.60ஐ தொடுமா?

Nagalapuram, Tamil Nadu:

Tamilnadu Onion Price Hike : கடந்த நாட்களில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான பல்லாரி வெங்காயம் தற்போது விலை உயர்ந்து ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிராவில் மழை தொடர்ந்தால் வெங்காயத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது!

பல்லாரி வெங்காய வரத்து குறைவு 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாசிக், புனே, சோலாப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து தமிழகத்திற்கு அனுப்பப்படும் பல்லாரி வெங்காயத்தின் வரத்து தற்போது குறைந்து வருவதாக தெரிகிறது.

மேலும் படிக்க | வெப்ப அலை அலர்ட்! பள்ளிகளுக்கு விடுமுறை? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

தென் மாவட்டங்களின் முக்கிய காய்கறி மொத்த விற்பனை மையமாக மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்கள் மட்டுமின்றி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்கிலிலிருந்தும் தினமும் இங்கு ஏராளமான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இது மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனையாகும் பல்லாரி வெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு மற்றும் மதுரை மாட்டுத்தாவணி உள்ளிட்ட முக்கிய சந்தைகளுக்கு வழக்கமாக தினமும் 60 முதல் 65 லாரிகளில் பல்லாரி வெங்காயம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இந்த கனமழை காரணமாக வரத்து குறைந்து தற்போது 30 முதல் 35 லாரிகளாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | பதவி பறிக்கப்படும்... ரீல்ஸ் போடக்கூடாது... CM விஜய் கறார் - ஆடிப்போன அமைச்சர்கள்!

விலை உயர்வு 

சந்தையில் வெங்காயத்தின் இருப்பு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள வியாபாரிகள், அதன் எதிரொலியாக இதற்கு முன்பு ரூ.20 முதல் ரூ.25 வரையே விற்பனையான பல்லாரி வெங்காயம் தற்போது உள்ள நிலையில் ரூ.30 முதல் ரூ.35 வரை விலை உயர்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் மேலும் உயருமா?

தற்போதே விலை உயர்ந்து காணப்படும் வெங்காயம், மகாராஷ்டிராவில் கனமழை நீடித்தால் வெங்காய வரத்து மேலும் பாதிக்கப்படும். அதன் விளைவாக வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் உயர்ந்து ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் மேலும் வெங்காயம் விலை உயர்ந்தால் தினசரி காய்கறி விற்பனையாளர்கள், பொதுமக்கள் வெகுவாக பாதிப்படைவார்கள் என கவலை தெரிவிக்கின்றனர். இந்த விலை ஏற்றம் வெங்காயத்திற்கு மட்டும் தான் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா கனமழையால் மற்ற காய்கறியின் விலையில் பாதிப்பு எதுவும் இல்லை, வெங்காய உற்பத்தி மட்டுமே அங்கிருந்து அதிகமாக நடைபெறுவதால் வெங்காயத்தின் விலையில் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே மற்ற காய்கறிகள் வழக்கம் போல விற்பனையாகி வருகிறது என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 255 புதிய வேலைவாய்ப்புகள்! தமிழக இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

0
0
Report

பதவி பறிக்கப்படும்... ரீல்ஸ் போடக்கூடாது... CM விஜய் கறார் - ஆடிப்போன அமைச்சர்கள்!

Chennai, Tamil Nadu:

Tamil Nadu Government Cabinet Meeting : சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படலாம். பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கலாம்.

இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், "ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும். எனது தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்" என அமைச்சர்களை எச்சரித்துள்ளார்.

மேலும், ஊழலற்ற அரசாக இருக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியும் உள்ளார். தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பார்க்க மாட்டேன் என்றும்; உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, "பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று வீடியோ எடுத்து, பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது" என அமைச்சர்களுக்கு, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

0
0
Report
Advertisement

எஸ். ஜானகிக்கு நடந்த பேரிழப்பு - மகனின் சாவையும் மிஞ்சிய மற்றொரு சோகம்... பேத்தி போட்ட பதிவு

Chennai, Tamil Nadu:

s janaki death news : மறைந்த எஸ்.ஜானகி கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் , எளிமையை விரும்பி தன் இறுதி நாட்களில் மைசூரில் சொந்த வீடு தனக்கென இருந்தும் , அங்கே ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரின் இந்த செயலுக்கு பின்னால் அவருடைய வாழ்க்கையில் சந்தித்த இழப்புக்களே காரணம். கடந்த ஆண்டு தன் ஒரே மகனை இழந்த ஜானகி அந்த இழப்புக்கு முன்னதாகவே இன்னொரு இழப்பை அவர் சந்தித்ததாக ஜானகியின் பேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஜனநாயகன் ஜூலை 23ஆம் தேதி ரிலீஸ்! டிக்கெட் புக்கிங் தொடங்குவது எப்போது?

மறைந்த எஸ். ஜானகி

இந்த குரலை கேட்டிராத ஆட்கள் உண்டோ? என கேட்கும் அளவிற்கு இவரது பாடல்கள் பிரபலமானவை. இவர் யார் என்று அறியாத இன்றைய தலைமுறையினர் கூட இந்த குரலை ரசித்திருக்கிறார்கள். இந்த இனிமையான குரலுக்கு ரசிகர்கள் ஏராளம், ரசிகர்களின் பேரன்பால் "ஜானகி அம்மா" என அழைக்கப்பட்டார். ஜானகி அம்மா மறைந்திருந்தாலும் அவரது குரலுக்கு என்றும் அழிவில்லை. தனது வாழ்க்கையை இசைக்காக அர்ப்பணித்தவர், பல மொழிகளில் 48,000 பாடல்கள் மேல் பாடியுள்ளார்

அவரது இறுதி வாழ்க்கை  

கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் தனது இறுதி நாட்களில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். மைசூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அதே ஊரில் அவருக்கு சொந்தமாக வீடு இருந்தும் அங்கே செல்லவில்லை. அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு உயிரிழந்தார், அந்த வேதனையையை தாங்கி கொள்ள முடியாத அவர் மைசூருக்கு இடம்பெயர்ந்ததற்கு இந்த இழப்பே காரணம். 

பேத்தி அப்சராவின் பதிவு

கடைசி நாட்களில் ஜானகி தனது மருமகள் மற்றும் பேத்தி அப்சரா உடன் வாழ்ந்து வந்தார். அப்சரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் மகனை இழப்பதற்கு முன்னதாகவே வேறு ஒரு பெரிய இழப்பை அவர் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அவர் சந்தித்த இழப்பு, அவருடைய ஒரே மகன் முரளியின் இன்னொரு மகள் வர்ஷா. ஜானகிக்கு இரண்டு பேத்திகள் ஒருவர் வர்ஷா, இன்னொருவர் தான் அப்சரா. வர்ஷாவும் ஜானகியும் மிகவும் நெருக்கமானவர்கள், ஜானகி அம்மாவுக்கு உலகிலேயே மிகவும் பிடித்த நபர் வர்ஷா தான் என அவர் தெரிவித்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் அதீத அன்பு கொண்டிருந்தனர்,  இன்று ஜானகியை பார்த்துக்கொள்ள வேண்டிய இடத்தில வர்ஷா இருந்திருக்க வேண்டும் என வேதனையோடு தெரிவித்துள்ளார். வர்ஷா இருந்திருந்தால் பாட்டிக்கு அனைத்திலும் அவர் உதவியாக இருந்திருப்பர்.

மேலும் படிக்க | ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே நடக்கிறது? வெளியான அப்டேட்!

பேத்தி வர்ஷாவின் இழப்பு 

ஜானகியின் அன்பிற்குரிய பேத்தியான வர்ஷா 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த உலகை விட்டு பிரிந்தார். இதுவே பாட்டியின் முதல் பேரிழப்பாக இருந்தது. இந்த இழப்பிலிருந்து வெளிவருவதற்கு முன்பே அடுத்த பேரிடியாக மகன் முரளி கிருஷ்ணாவின் மறைவு அமைந்தது. இது போன்று அடுத்தடுத்த இழப்புகள் அவரை உருக்குலைத்து என அப்சரா தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பதிவில் 

"துயரங்கள் முழுமையாக விலகுவதில்லை, வாழ்க்கை முழுவதும் சுமந்து செல்ல கற்றுக்கொள்கிறோம்" எங்கோ ஒன்றாக எனது பாட்டி ஜானகியும் சகோதரி வர்ஷாவும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பது தான் என்னுடைய ஆறுதல். வாழ்க்கை முடிந்தாலும் அன்பு முடிவதில்லை. அனுபவங்கள் தான் என்னை பலமாக்குகிறது. துயரம் எப்போதும் வெளிப்படையாக இருக்காது. சில நேரங்களில் அது அமைதியான, தனிப்பட்ட உணர்வாக இருக்கும்". என்று தெரிவித்துள்ள அவர், மேலும், "எனது பாட்டி யாரையும் குறை சொல்லாதவர். எல்லோரிடமும் நல்லதையே பார்ப்பவர். என் சகோதரியும் அப்படி பட்டவர்தான். இருவருமே குழந்தை குணம் கொண்டவர்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அன்பை பரப்பினர். அவர்களிடம் பேசுபவர்கள் அனைவரும் அவர்களை நேசித்து விடுவார்கள். இப்போது இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதுவே என்னுடைய மன நிம்மதி" என்று அப்சரா பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அமீர்கான் தன் மனைவிகளை மதம் மாற சொன்னாரா? அவரே கொடுத்த விளக்கம்

0
0
Report

மெஸ்ஸியின் மேஜிக்... பைனலில் அர்ஜென்டினா... இங்கிலாந்து கனவு காலி

Atlanta, Georgia:

Argentina vs England : 2022 பிபா உலகக் கோப்பையை வென்ற அதே உற்சாகத்தோடு அர்ஜென்டினா அணி தற்போது 2026 பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அர்ஜென்டினா வரலாற்றில் அதன் 4வது உலகக் கோப்பையை குறிபார்த்து தற்போது காத்திருக்கிறது.

பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் அர்ஜென்டினா - இங்கிலாந்து மோதும் 2வது அரையிறுதிப் போட்டி அட்லாண்டா நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று (ஜூலை 16) நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கியது. 

இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டிா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. வரும் ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

0
0
Report

3 வயது குழந்தைக்கு எமனாய் மாறிய நிலக்கடலை: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Malappuram, Kerala:

மலப்புரம், கேரளா: கேரளாவின் மலப்புரம் குன்னுப்புரத்தில் உள்ள தனது வீட்டில், தற்செயலாக வேர்க்கடலை தொண்டையில் சிக்கியதால் மூன்று வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திங்களன்று நடைபெற்ற நிலையில், உள்ளூர் காவல்துறையினர் இதனை புதன்கிழமையன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

மலப்புரத்தில் நடந்த விபரீதம்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், வேர்க்கடலை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறி மூன்று வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். சிறுவன் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதில் இருந்த ஒரு வேர்க்காலை அவனது தொண்டையில் சிக்கி மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனின் மூச்சுக் குழாயில் வேர்க்கடலை பருப்பு ஒன்று சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்ட சிறுவன், மூச்சுத் திணறலால் மயக்கமடைந்தாக வெங்கரா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் துயரச் சம்பவத்தை உள்ளூர் காவல்துறையினர் புதன்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.

மேலும் படிக்க | வாங்சுக் போராட்டத்தை நீடித்தால் 2 நாட்களில் உயிரிழப்பு? நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

அவசர சிகிச்சையும் பயனிறி போனது

சிறுவன் மயங்கி விழுந்ததைக் கண்ட குடும்பத்தினர் அச்சிறுவனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், சிறுவனின் சுவாசத்தை மீட்டெடுக்கவும் தொண்டையில் சிக்கியிருந்த வேர்க்கடலையை அகற்றவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இருப்பினும், மூச்சுக் குழாயில் நீண்ட நேரம் அடைப்பு இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை; அவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அக்குடும்பத்தினரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | IRCTC புதிய இணையதளம்: இனி டிக்கெட் புக்கிங் ரொம்ப ஈசி.. அதிரடி மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

பெற்றோருக்கான முக்கிய எச்சரிக்கை

இச்சம்பவம் சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு ஒரு தீவிர எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளின் சுவாசப் பாதைகள் மிகவும் குறுகியதாக இருப்பதால், உலர் பழங்கள், வேர்க்கடலை மற்றும் பாப்கார்ன் (பொரித்த சோளம்) போன்ற பொருட்கள் அவற்றில் எளிதில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. மருத்துவ ரீதியாக இந்நிலை 'சோக்கிங்' (choking - மூச்சுக்குழாய் அடைப்பு) என்று அழைக்கப்படுகிறது.

பெற்றோருக்கான அறிவுறுத்தல்

குழந்தைகள் சாப்பிடும்போது உடன் இருப்பது மிக அவசியம்.

பெரிய அளவில் உள்ள உணவுப்பொருட்களை உடைத்து அல்லது நசுக்கி கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வெண்டும்.

பெரிய, கூரான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு அளிப்பதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் ஹைட்ரோஜென் ரயில்! டிக்கெட் விலை என்ன? எந்த ரூட்டில் இயங்கும்?

0
0
Report
Advertisement
Advertisement
Back to top