icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

ஷாக்கான மகள்... 76 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை... குற்றவாளி உடனே கைது!

Chennai, Tamil Nadu:

Chennai Crime News In Tamil: தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக முதல் நேற்று முளைத்த தவெக வரை ஆளும் திமுக ஆட்சிக்கு எதிராக முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும் ஒன்றாகும்.

குற்றங்களும், போதை புழக்கமும்...

அதேபோல், தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துவிட்டது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதே இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கும் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்துவிட்டதா?

தமிழ்நாடு அரசின் உள்துறை மற்றும் காவல்துறை தகவல்களின்படி, வழக்குப்பதிவான பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2021இல் 8,501; 2022இல் 9,450; 2023இல் 10,210, 2024இல் 9,850; 2025இல் 9,600 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம், அதாவது ஒரு லட்சம் பெண்களில் 25-30 பேர் பாதிக்கப்படுகின்றனர். தேசிய சராசரி 66.4 ஆக உள்ளது. அதைவிட தமிழ்நாட்டில் ஓரளவு குறைவாகவே உள்ளது. டெல்லியில் 144.4 மற்றும் ஹரியானா 118.7 போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் பாதியளவுக்கும் குறைவாகவே உள்ளது.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 5% மற்றும் கொலை வழக்குகள் 8.5% குறைந்துள்ளதாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

விளாத்திகுளம் சம்பவம்

இருப்பினும் கூட, தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. கடந்த மார்ச் மாதம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மூதாட்டிக்கு நடந்த அதிர்ச்சி

இந்நிலையில், சென்னையில் தனியாக இருந்த 76 வயது மூதாட்டி ஒருவரை, வீடு புகுந்து ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குற்றத்தின் பின்னணியை இங்கு காணலாம். 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 76 வயதான மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு நான்கு மகன்களும், ஒரு‌ மகளும் உள்ளனர். பிள்ளைகள் நான்கு பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மேலும், மகளும் திருமணமாகி கணவருடன் புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார்.

தனியாக வாழ்ந்து வரும் மூதாட்டியை அவரது மகள் தினமும் வீட்டுக்கு சென்று குளிக்க வைத்து சாப்பாடு கொடுத்து பராமரித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பிறப்புறுப்பில் ரத்தம்

இந்நிலையில், நேற்று (ஏப். 27) மாலை கீதா வழக்கம் போல் தாய் வீட்டிற்கு சென்று அவரை குளிக்க வைக்க சென்றபோது, அவரது பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தாயிடம் இதுகுறித்து கேட்டதில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், அதே பகுதியை சேர்ந்த 57 வயதான பிளம்பர் மருதப்பன் என்பவன் வீட்டில் புகுந்து தன்னை பாலியல் வன்கொடுக்கும் உள்ளாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மூதாட்டி கொடுத்த புகார்

இதனை கேட்டு, அதிர்ந்து போன மகள் உடனே தாயை எழும்பூரில் உள்ள தாய்சேய் நல அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதிகாலையில் கைதான பிளம்பர்

அதன் பேரில், போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிளம்பர் மருதப்பனை இன்று காலை கூடுவாஞ்சேரியில் வைத்து கைது செய்தனர். அவர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார். 

மேலும் படிக்க | ஆபாச வீடியோவை பாரு... 19 வயது பெண்ணுக்கு வந்த மெசேஜ்... பரபரப்பு சம்பவம்!

மேலும் படிக்க | ஆண்டிப்பட்டி முருகன்... பழனியில் கொலை செய்யப்பட்டது எப்படி? - 3 இளைஞர்கள் கைது

மேலும் படிக்க | தி.நகர் மக்களே... விரைவில் வருகிறது மெட்ரோ - இனி போக்குவரத்து பிரச்னை பறந்து போகும்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

MI-க்கு இனி நல்ல காலம்... சான்ட்னருக்கு பதில்... பிளேயிங் 11இல் வரும் முக்கிய வீரர் யார்?

Mumbai, Maharashtra:

Mumbai Indians Playing 11 Prediction: ஐபிஎல் 2026 சீசன் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி என இரண்டு அணிகளுக்குமே மெகா ஹிட் சீசனாக அமைந்திருக்கிறது. கடந்தாண்டும் இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில் மோதின.

பஞ்சாப், ஆர்சிபி வெற்றி பார்முலா

முன்பெல்லாம், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கும். ஆனால், தற்போது நிலைமை சற்று மாறியிருக்கிறது. அதுவும் கடந்த இரண்டு சீசன்களாக பஞ்சாப் மற்றும் ஆர்சிபி சிறப்பாக விளையாட அவர்கள் மெகா ஏலத்தில் அதிக தொகையுடன் சென்று, பக்காவான வீரர்களை வாங்கி, சரியான காம்பினேஷனை அமைத்ததே காரணம்.

சொதப்பும் மும்பை, சிஎஸ்கே

இதை இந்த முறை சிஎஸ்கேவும், மும்பை இந்தியன்ஸ் அணியும் செய்ய தவறிவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸை விட மும்பை இந்தியன்ஸின் நிலைமை மிக மிக மோசமாக உள்ளது. கடைசியாக 2020ஆம் ஆண்டில்தான் மும்பை கோப்பையை வென்றது. அதன்பின் 5 சீசன்களாக கோப்பை இல்லை. தற்போது 6வது சீசனாக தொடர்ந்து சொதப்பி வருகிறது.

மும்பை பிளே ஆப் போக வாய்ப்பிருக்கா?

நடப்பு சீசனில் மும்பை அணி 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வி என 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. நெட் ரன்ரேட் -0.736 என மிக மோசமான நிலையில் உள்ளது. மீதம் இருக்கும் 7 போட்டிகளிலும் வென்றால்தான் மும்பை பிளே ஆப் போக ஓரளவு வாய்ப்பு கிடைக்கும்.

மும்பைக்கு ஏற்பட்ட பின்னடைவுகள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் சிறப்பாக அமையாததற்கு இன்னொரு முக்கிய காரணம், சரியான காம்பினேஷனில் பிளேயிங் லெவனை அமைக்காதது. வில் ஜாக்ஸ் இல்லாததால் மும்பையின் கீழ்வரிசை பலவீனமாக இருந்தது. பும்ராவை தவிர்த்து வேகப்பந்துவீச்சில் யாரும் பெரிதாக அச்சுறுத்தவில்லை, அஸ்வானி குமார் தற்போது ஓரளவு சிறப்பாக வீசுகிறார். 

சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் மோசமான பார்ம் மும்பைக்கு பின்னடைவாக அமைந்தது. ஷர்துல் தாக்கூர் - தீபக் சஹார் இந்த முறை வேலைக்கு ஆகவில்லை. இந்திய ஸ்பின்னர்களும் மும்பைக்கு கைக்கொடுக்கவில்லை. ரோஹித் சர்மா காயத்தால் ஓரிரு போட்டிகளை தவறவிட்டதும் சிக்கலாகிவிட்டது. 

பலமான ஹைதராபாத் உடன் மோதல்

இந்தச் சூழலில், மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (ஏப். 29) மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து நான்கு போட்டிகளில் வென்று பலமான அணியாக எஸ்ஆர்ஹெச் மும்பை வந்துள்ளது. ரோஹித் காயத்தில் இருந்து மீண்டிருப்பது மும்பைக்கு நல்ல செய்தியாகும்.

சான்ட்னர் விலகல்

மும்பை இந்தியன்ஸ் அணியில் சான்ட்னர் - கசன்பர் சுழல் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், சான்ட்னர் கடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியின் இடது கை தோள்பட்டை பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

மாற்று வீரர் கேசவ் மகாராஜ்

சான்ட்னர் விலகியதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு பதில் கேசவ் மகாராஜை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய உள்ளார். தென்னாப்பிரிக்க இடதுகை ஸ்பின்னரான அவர் 30 டி20 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டை எடுத்திருக்கிறார். ஆனால் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பது கடினம்

வில் ஜாக்ஸ் விளையாடுவார்

சான்ட்னர் ஸ்பின்னராக மட்டுமின்றி கீழ்வரிசை பேட்டராகவும் செயல்பட்டார். கேசவ் மகாராஜ் முழுமையாகவே ஸ்பின்னர்தான். எனவே பிளேயிங் லெவனில் சான்ட்னர் இடத்தில் வில் ஜாக்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவன் கணிப்பு இதோ...

ரோஹித் சர்மா, குவின்டன் டி காக், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷெர்பேன் ஷெப்பர்ட், ஹர்திக் பாண்டியா, வில் ஜாக்ஸ், அல்லா கசன்பர், கிரிஸ் பகத்/ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா. இம்பாக்ட் வீரர்: அஸ்வானி குமார்.

மேலும் படிக்க | சிஎஸ்கே அணியில் மற்றொரு இளம் புயல்! யார் இந்த ஆயுஷ் வர்தக்?

மேலும் படிக்க | சிஎஸ்கே தோல்விகளுக்கு இந்த ஒரு வீரர் முக்கிய காரணமா? என்ன ஆனது?

மேலும் படிக்க | பவர் பிளேவில் 6 விக்கெட் காலி! டெல்லி அணியின் வரலாற்று சரிவு.. ஐபிஎல் வரலாற்றில் டாப் 5 லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

கடக ராசிக்காரர் விஜய்... முதல்வர் பதவியை அடைய... அடுத்து போகும் 5 கோயில்கள்!

Chennai, Tamil Nadu:

TVK Vijay Temple Visit Latest News: தமிழ்நாட்டில் இப்போது எங்கு திரும்பினாலும் ஒரே பேச்சு... பாஸ்சிடிவாகவும் சரி, நெகடிவ்வாகவும் சரி தமிழகம் எங்கும் விஜய் குறித்து மட்டும்தான் பேச்சு.

ஹிட்டான விசில் சின்னம்

கரூர் சம்பவத்திற்கு பிறகு தொடர்ச்சியான மக்கள் சந்திப்பு பிரச்சாரங்கள் செய்யவில்லை, வழக்கமான அரசியல் கட்சிகளின் வழியில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் எதுவும் அதிகமாக நடைபெறவில்லை, பல பிரச்சார சுற்றுப்பயணங்களும் ரத்து செய்யப்பட்டன. இத்தனை பிரச்னை இருந்தும் விஜய்யும், தவெகவும், தவெகவின் சின்னமான விசிலும் தமிழ்நாட்டின் பட்டித் தொட்டியில் எல்லாம் ஹிட் அடித்திருக்கிறது.

விஜய்க்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள், இளம்பெண்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் உள்ளிட்டோர் கணிசமாக விஜய்க்கு வாக்களித்திருப்பதாக தெரிகிறது. ஒரு தரப்பினர் விஜய்க்கு 15%-20% அளவுக்கு வாக்குச் சதவீதம் கிடைக்கும், 2-3 தொகுதிகளில்தான் வெற்றிபெறுவார் என்கிறார்கள், 

இன்னொரு தரப்பினர் விஜய்யின் தவெக, அதிமுகவை காலிசெய்துவிடும் என்றும் 30% மேல் வாக்குகளை பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுவிடும் என்றும கணிக்கிறார். இன்னொரு தரப்பினர் விஜய் முதலமைச்சராகிவிடுவார் என்றும் நம்பி வருகிறார்கள். இதில் எது நடந்தாலும் விஜய்க்கு வரலாற்று வெற்றிதான். ஆனால், மக்கள் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பதை மே 4ஆம் தேதி அனைவருமே தெரிந்துகொள்ளலாம்.

திருச்செந்தூரில் விஜய்

இந்தச் சூழலில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 6 நாள்களே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் தற்போது ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. முதல்கட்டமாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஜய் இன்று அதிகாலை தரிசனம் மேற்கொண்டார்.

திருச்செந்தூர் கோயில் சார்பில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பட்டி வேட்டி, சட்டை அணிந்துவந்த விஜய் கடற்கரைக்குச் சென்றும் வழிபாடு நடத்தினார். விஜய்யின் இந்த திடீர் ஆன்மீக விசிட் பலரையும் புருவத்தை தூக்க வைத்திருக்கிறது. 

தேர்தல் முடிந்த பின்...

திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தேவாலயம், மசூதி, கோவில் என மும்மதங்களின் வழிப்பாட்டுத் தலங்களும் சென்றார். அது தேர்தலுக்கு முன் நடந்தது என்பதால் அதை 'தேர்தல் நேர ஸ்டண்ட்' என பலரும் விமர்சித்திருந்தார்கள். ஆனால், இப்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், விஜய்யின் இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

விஜய்யின் ராசி, நட்சத்திரம்

விஜய் கிறிஸ்துவர் என்றாலும் அவர் அனைத்து மதங்களையும் பின்பற்று நபராகவே பொதுவெளியில் பார்க்கப்படுகிறார். விஜய் பூச நட்சத்திரம், கடக ராசி என்றும் பொதுவெளியில் அறியப்படுகிறது. வரும் ஜூன் 2ஆம் தேதி கடக ராசியில் குரு பெயர்ச்சி இருப்பதால் இந்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என ஜோதிடர்களும் கணிக்கிறார்கள்.

திருச்செந்தூருக்கு விஜய் சென்றது ஏன்?

அப்படியிருக்க, தங்களின் அரசியல் அதிகாரங்களை நிறைவேற்ற கடலோரத் தலமான திருச்செந்தூரில் முருகனை வழிபடுவது கடக ராசிக்காரர்களுக்கு இருக்கும் தயங்களைப் போக்கி வெற்றிக்கான வேகத்தை கொடுக்கும்  என நம்பப்படுகிறது.

எதிரிகளை வெல்லும் ஆற்றலையும் சம்ஹார மூர்த்தியான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வழங்குவார். எனவேதான் விஜய் தனது ஆன்மீகச் சுற்றுலாவை திருச்செந்தூரில் இருந்து தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் ஆன்மீகச் சுற்றுலா

இந்நிலையில், விஜய் தொடர்ச்சியாக ஆன்மீக சுற்றுலாவை மேற்கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர் பதவி கிடைப்பதற்கும், தான் விரும்பும் அரசியல் அதிகாரங்களை பெறவும் விஜய் சில முக்கிய வழிபாட்டு தலங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் செல்ல வாய்ப்புள்ள 5 கோயில்கள்

அந்த வகையில், திருச்செந்தூரை தொடர்ந்து இந்த 5 திருக்கோயில்களுக்கு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய் அடுத்து எந்தெந்த கோயில்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது? அங்கு தரிசனம் செய்வதால் அவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு காணலாம்?

1. திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில்: அரசியலில் அதிகாரத்தை அடைய விரும்புபவர்கள் வணங்க வேண்டிய மிக முக்கியமான திருத்தலமாக திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் உள்ளது. இங்கே உள்ள மனுநீதிச் சோழன் தொடர்பான வரலாறு, தியாகராஜரின் அருள், நீதி தவறாத ஆளுமை திறனை வழங்கும் என நம்பப்படுகிறது. 

2. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்: தமிழ்நாடு அரசியலில் அண்ணாமலையார் வழிபாடு என்பது மிகவும் பிரபலமான ஒன்றும். அதிகாரம், ஆதிக்கம், ஆளுமை உள்ளிட்டவைக்கு சூரிய பகவான் முக்கிய காரணம் என ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. அப்படியிருக்க, அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை திருக்கோயிலை வணங்குவது, எதிர்ப்புகளை தாண்டி வெற்றியை அடைய உதவும். 

3. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்: கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் உகந்தவர். செவ்வாயின் பலம் இருந்தால்தான் அதிகாரம் நிலைக்கும். பழனி மலை ஏறி முருகனை தரிசித்தால் நிர்வாகத் திறனும், போராட்ட குணமும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. 

4. மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில்: அரசியல் ரீதியான எதிர்ப்புகள், மறைமுகச் சதித் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள மயிலாடுதுறையில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் செல்வ முத்துக்குமார் சுவாமி (முருக) வழிபாடு அவசியமானது. அதேபோல், செவ்வாய் பகவானுக்கு உரிய முக்கிய பரிகாரத் தலமாகும். 

5. சென்னை காளிகாம்பாள் திருக்கோவில்: வரலாற்று ரீதியாகவே இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக கருதப்படுகிறது. சத்திரபதி சிவாஜி போன்ற மாவீரர்கள் வழிபட்ட தலம் இது. சென்னையில் அரசியல் களம் காண்பவர்கள் காளிகாம்பாள் வழிபாட்டை மேற்கொள்வார்கள். இங்கு வழிபாடு மேற்கொண்டால் ஆளுமை திறன் அதிகரிக்கும்.

விஜய் வருவாரா?

இந்த கோயில்களுக்கு விஜய் வருகிறார் என அதிகாரப்பூர்வமாக ஏதும் சொல்லப்படவில்லை. ஜோதிடத்தின்படி, அதிகாரத்திற்கு செல்ல விரும்புபவர்கள் இந்த 5 கோயில்களிலும் வழிபாடு நடத்துவார்கள் என்பதால், திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் இநத் கோயில்களுக்கு வர வாய்ப்புள்ளது என்பதே கூறப்பட்டுள்ளது. 

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, தான் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிருக்கிறார், விஜய். தமிழ்நாடு முழுவதும் இவருக்கு வரவேற்பு இருந்தாலும் தவெக என்ற கட்சி அரசியல் அதிகாரத்தை பிடிக்குமா?, அரசியல் களத்தில் தொடர்ந்து செயலாற்றுமா?, திமுக, அதிமுக போன்ற முன்னணி கட்சிகளுக்கு இணையாக வளர்ச்சி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க |  விஜய் 2 தொகுதிகளிலும் தோல்விதான்.. 200 இடங்களில் தவெக டெபாசிட் காலி! அதிரடி கணிப்பு

மேலும் படிக்க | தவெகவினர் குஷி.. சங்கீதா வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. என்ன மேட்டர்?

மேலும் படிக்க | விஜய்க்கு எத்தனை ஓட்டு விழுந்தது? உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்! பதற்றத்தில் பனையூர் பங்களா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report
Advertisement

திருச்செந்தூரில் அதிகாலையில் சாமி தரிசனம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்!

RSRK Spark23h ago
Thiruchendur, Tamil Nadu:

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தமிழகத்தின் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கடலோரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் செந்திலாண்டவனை தரிசிக்கத் தமிழகம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தருகின்றனர். பொதுவாக எந்த ஒரு கோவிலாக இருந்தாலும், அங்கு அதிகாலையில் சாமி தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலையில் சுவாமி தரிசனம் மற்றும் பூஜைகளில் கலந்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

அதிகாலை தரிசன நேரங்கள் என்ன?

திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் பாடப்படும். அதனை தொடர்ந்து, 5:30 மணி முதல் காலை 6:15 மணி வரை விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அதன் பின்னர், காலை 6:15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 8:00 மணிக்கு காலசந்தி பூஜையும் நடைபெறும்.

மன அமைதி மற்றும் விஸ்வரூப தரிசனம்

பொதுவாக அதிகாலை நேரம் என்பது பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சுழலும் பிரபஞ்ச ஆற்றல் மிக அதிகமாக இருக்கும். அதிகாலையில் கடல் அலைகளின் ஓசையோடு, கோவிலில் ஒலிக்கும் சுப்ரபாதம் மற்றும் வேத மந்திரங்களை கேட்டு முருகனை தரிசிக்கும் போது, மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், நாள் முழுக்க தேவையான நேர்மறை ஆற்றலையும் பெற முடியும். அதிகாலையில் சுவாமிக்கு நடைபெறும் முதல் தரிசனமே விஸ்வரூப தரிசனமாகும். இறைவனின் முதல் பார்வை பக்தர்கள் மீது படும் நேரம் இதுவேயாகும். இந்த விஸ்வரூப தரிசனத்தை காண்பதால், வாழ்வில் அதுவரை இருந்த கஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் தடைகள் அனைத்தும் நீங்கி, நல்ல யோகமும் வெற்றியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கடன் தொல்லைகள் தீரும்

செவ்வாய்க்கிரகத்தின் அதிபதியாக முருக பெருமான் விளங்குகிறார். எனவே, வாழ்க்கையில் தீர்க்க முடியாத கடன் தொல்லைகள், சொத்து பிரச்சனைகள் மற்றும் வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள், அதிகாலையில் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடிவிட்டு திருச்செந்தூர் முருகனை தரிசித்தால், அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் நடைபெறும் என்று நம்பப்படுகிறது. திருச்செந்தூர் கோவில் கடலோரத்தில் அமைந்துள்ளதால், அதிகாலை நேரத்தில் அங்கு வீசும் குளிர்ந்த காற்றை சுவாசித்து, கடலில் நீராடி சாமி தரிசனம் செய்வது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், தொடர்ச்சியான தோல்விகளை சந்திப்பவர்கள் அல்லது தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண நினைப்பவர்கள், புதன்கிழமை அதிகாலையில் முருகனை தரிசனம் செய்தால் தொழிலில் லாபத்தையும், வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவியும் கிடைக்கும்.

குடும்ப ஒற்றுமை மற்றும் செழிப்பு

திருச்செந்தூர் முருகனை அதிகாலையில் குடும்பத்தோடு சென்று தரிசிப்பதன் மூலம், கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். மேலும், பூர்வீகப் பிரச்சினைகள் தீர்ந்து குடும்பம் செழிக்கும் என்றும், பொருளாதார நிலை மேம்படும் என்றும் நம்பப்படுகிறது. அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்யும் போது கோவிலில் பெரிதாக மக்கள் கூட்டம் இருக்காது. எனவே, கூட்ட நெரிசலோ அல்லது எந்த ஒரு சிரமமுமோ இன்றி, அமைதியாக முழு ஈடுபாட்டுடன் முருகனைத் தரிசித்து அவனது பரிபூர்ண அருளைப் பெற்று வர முடியும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி: கடக ராசியில் குரு.. இந்த ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்!

மேலும் படிக்க: ராகு கேது பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. செல்வம், அதிர்ஷ்டம் குவியும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

Vijay: விஜய்யின் திடீர் திருச்செந்தூர் பயணத்திற்கு காரணம் இது தான்!

RSRK Spark23h ago
Thiruchendur, Tamil Nadu:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அதிகாலையில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியும் விஜய்யின் முதல் ஆன்மீகப் பயணம் இதுவாகும். அதுவும் தேர்தலுக்கு முன்பு இல்லாமல் தேர்தல் முடிந்த பின்பு விஜய் இந்த ஆன்மீக பயணத்தை மேற்கொள்வதால், இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் விஜய். விஜய் உடன் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவரது மேலாளர் உடன் சென்றுள்ளனர்.

அதிகாலையில் சுவாமி தரிசனம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. பரபரப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் விஜய்க்கு அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. வரும் மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தற்போது விஜய் திருச்செந்தூர் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விஜய் வருகை தந்தார். அதிகாலையில் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

விஜய்யை காண குவிந்த மக்கள்

தற்போது கோடை விடுமுறை என்பதால் பலரும் குடும்பங்களாக கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் ஏற்கனவே அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் விஜய் வருகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், அங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களும் உள்ளூர் பொதுமக்களும் அவரை பார்க்கக் கோவிலில் குவிந்தனர். தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த விஜய்யை பார்த்து ரசிகர்கள் பலரும் கோஷமிட்டனர். கூட்ட நெரிசலில் காரில் இருந்த விஜய், ரசிகர்களை பார்த்து காரில் இருந்து வெளியே வந்து கையசைத்தார். பின்பு, காவல்துறையினர் மற்றும் கோவில் பாதுகாப்பு பணியாளர்கள் விஜய்யை பத்திரமாக கோயிலை விட்டு வெளியே வர உதவினர்.

ஆன்மீக அரசியலை கையில் எடுக்கிறாரா விஜய்?

விஜய் தனது எந்த ஒரு படங்களின் வெளியீட்டிற்கும் முன்பாக கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டவரில்லை. இருப்பினும் வேளாங்கண்ணி கோவிலுக்கு வருடத்திற்கு ஒரு முறை விஜய் செல்வார் என்று கூறப்படுகிறது. தற்போது முழு நேர அரசியல்வாதியாகியுள்ள விஜய், திருச்செந்தூருக்கு சென்று சுவாமி தரிசனம் செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஜய்யை யாரும் ஒரு மத சாயம் பூசி பார்ப்பதில்லை; அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து வருகின்றனர். தனது அரசியல் நிலைப்பாட்டில் பலவற்றை திராவிட அரசியலில் இருந்து விஜய் பின்பற்றினாலும், ஒருவரின் தனிப்பட்ட ஆன்மீக உணர்வுகளில் தலையிட மாட்டோம் என்று விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

கடந்த இரண்டு மாதங்களாக தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய்க்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலை வீசியது. ஆரம்பத்தில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே விஜய்க்கு ஓட்டு விழும் என்று கூறப்பட்ட நிலையில், தேர்தலுக்கு பின்பு அது 25 முதல் 30 சதவீதமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விஜய் எத்தனை எம்.எல்.ஏ-க்களை வெல்வார், அவர் முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதற்கெல்லாம் மே நான்காம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள்தான் பதில் சொல்லும்.

மேலும் படிக்க: விஜய்க்கு எத்தனை ஓட்டு விழுந்தது? உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்! பதற்றத்தில் பனையூர் பங்களா

மேலும் படிக்க: விஜய் 2 தொகுதிகளிலும் தோல்விதான்.. 200 இடங்களில் தவெக டெபாசிட் காலி! அதிரடி கணிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
0
Report

பழனி முருகன் கோயில்... உண்டியல் முதல் நாள் கலெக்சன் மட்டும் எவ்வளவு தெரியுமா?

Palani, Tamil Nadu:

Palani Murugan Temple Undiyal Collection: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என முருகனின் அறுபடை வீடுகளில் அமைந்துள்ள திருக்கோயில்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தற்போது கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக திருக்கோயில்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா செல்வது வழக்கம். இதனாலேயே திருக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதுவும் முருகன் கோயில்களில் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு கூட்டம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

உண்டியல் எண்ணும் பணி

இந்தச் சூழலில், முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், நேற்று (ஏப்ரல் 27) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. கோடை விடுமுறை மற்றும் விஷேட நாட்களை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில், உண்டியல்கள் நிரம்பிய காணிக்கை எண்ணும் பணி தொடங்கிவிட்டது.

ரொக்கம் மட்டும் எவ்வளவு?

கோயில் இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. நேற்று முதல் நாள் முடிவில் மலைக்கோயில் அனைத்து உண்டியல்கள் மூலம் 4 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 739 ரூபாய் ரொக்கம் வருவாயாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி எவ்வளவு கிடைத்தது?

உண்டியலில் பக்தர்கள் ரொக்கமாக மட்டுமின்றி தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களையும் காணிக்கையாக செலுத்துவார்கள். அந்த வகையில், ரொக்கத்தை தவிர்த்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்திய 748 கிராம் தங்கம் மற்றும் 12,893 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் வருவாயாக கிடைத்துள்ளன.

மேலும், இந்திய ரூபாய் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 1448 கரன்சி நோட்டுகளும் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களும், வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் பழனி கோயிலுக்கு அதிகம் வரும் காரணத்தால் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் உண்டியலில் காணிக்கையாக போடப்படுவது வாடிக்கையானதாகும்.

இன்றும் தொடரும்...

நேற்று தொடங்கிய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். உண்டியல்கள் எண்ணும் பணி இன்னும் அதிகமாக இருப்பதால், உண்டியல்களும் அதிகமாக இருப்பதால் இன்னும் இப்பணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பழனி முருகன் கோயிலில் சமீபத்தில் மொத்தம் எவ்வளவு வருமானம் உண்டியல்கள் மூலம் கிடைத்துள்ளன என்பது வரும் நாள்களில் தெரியவரும்.

பழனி கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்

பழனி திருக்கோயிலை பொருத்தவரை எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இப்போது கோடை விடுமுறை என்பதால் கூட்டமும் டபுளாக உள்ளது. மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், பொது தரிசனம், கட்டண தரிசனம் என மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தரிசனம் செய்ய பல மணிநேரங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுபடுத்தும் விதமாக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கு நடந்து செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி வரவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுபடுத்திட ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருக்கல்யாணம், தேரோட்டம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (ஏப். 28) திருக்கல்யாணமும், நாளை முன்தினம் (ஏப். 30) சித்திரை தேரோட்டமும் நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்க | திருச்செந்தூர் முருகனை சீக்கிரம் தரிசக்க சூப்பர் சான்ஸ்.. கூட்டமே இருக்காது.. எப்படி தெரியுமா?

மேலும் படிக்க | திருச்செந்தூர் உண்டியல் காணிக்கை... எவ்வளவு தெரியுமா?

மேலும் படிக்க | பக்தர்களுக்கு கட்டுப்பாடு! திருச்செந்தூர் கோயிலில் இனி இதற்கு தடை - அதிரடி உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report
Advertisement

கேஸ் சிலிண்டர் புக் பண்றீங்களா? மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசின் ரூல்ஸ்!

RSRK Spark23h ago
New Delhi, Delhi:

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை கடந்த மார்ச் மாதம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தை பதுக்கலை தடுக்கும் விதமாக, மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சில புதிய கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, மார்ச் 1 அன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை அதிரடியாக உயர்த்தின. 

மேலும் படிக்க | எச்சரிக்கை! AI வந்ததால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வேலைகளே இருக்காது!

சிலிண்டர் விலை!

இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 60 உயர்த்தப்பட்டு, தற்போது சென்னையில் ரூ. 928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 114 உயர்த்தப்பட்டு, ரூ. 2,043-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களையும், சிறு உணவகங்கள் நடத்துவோரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

புதிய 25 நாட்கள் கட்டுப்பாடு

விலை உயர்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவியதால், வசதி படைத்த பலர் தேவைக்கு அதிகமாகச் சிலிண்டர்களை முன்பதிவு செய்து இருப்பு வைக்க தொடங்கினர். இதனால், உண்மையான தேவையுடைய ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இந்த பதுக்கலைத் தடுக்கும் நோக்கத்தோடு, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் முன்னெடுப்பு விநியோகக் கொள்கை என்ற புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, இனி ஒரு வாடிக்கையாளர் கேஸ் சிலிண்டரை பெற்ற பிறகு, அடுத்த சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த இடைவெளி 15 முதல் 21 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

25 நாட்களுக்கு முன்பாகவே எவரேனும் சிலிண்டரை புக் செய்ய முயன்றால், அந்த முன்பதிவு தானாகவே ரத்து செய்யப்படும். எரிவாயு தட்டுப்பாட்டை போக்கவும், கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவுமே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை

வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை பெருமளவு உயர்ந்திருப்பதால், சில சிறு உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளை நடத்துபவர்கள், விலை குறைவான வீட்டு உபயோக சிலிண்டர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தடுக்கும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியான தேவைகளுக்கு பயன்படுத்தினால் அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கேஸ் ஏஜென்சிகள், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புகார் அளிக்க உதவி எண்கள்

சிலிண்டர்களை முன்பதிவு செய்தும் நீண்ட நாட்களாக டெலிவரி செய்யப்படவில்லை என்றாலோ, முன்பதிவு தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டாலோ அல்லது கேஸ் டெலிவரி ஊழியர்கள் கூடுதலாக பணம் கேட்டாலோ, வாடிக்கையாளர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Grievance Portal மூலமாகவும் Cash Memo Not Given, Delay in Refill Supply போன்ற பிரிவுகளின் கீழ் நேரடியாக புகார்களை பதிவு செய்யலாம். மத்திய அரசின் இந்த புதிய 25 நாள் கட்டுப்பாட்டு விதிமுறை, கேஸ் சிலிண்டர்கள் சீராகவும் தடையின்றியும் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க

 இண்டேன் கேஸ் (Indane Gas): 1800-2333-555
 பாரத் கேஸ் (Bharat Gas): 1800-22-4344
 ஹெச்பி கேஸ் (HP Gas): 1800-233-3555
 தமிழ்நாடு அரசின் மாநில நுகர்வோர் உதவி எண்: 1967 அல்லது 044-28592828 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க | PMEGP திட்டம்: தொழில் தொடங்க மானியம்... மத்திய அரசின் மாஸ் திட்டம், விவரம் இதோ

மேலும் படிக்க | 10ம் வகுப்பு முடித்தவரா? மாதம் ரூ.63,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. சூப்பரான வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
0
Report

HR துறையில் சாதிக்கலாம்... மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு - தமிழ்நாடு அரசின் இந்த படிப்பை பாருங்க!

Chennai, Tamil Nadu:

Tamil Nadu Education Latest Updates: வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார்.

தலைநகர் சென்னையில் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை - Labour Management) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை - Labour Management) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு - Post Graduate Diplomo in Labour Administration), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

பிரத்யேக கல்வித் தகுதி

சென்னை பல்கலைக் கழகத்தால் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றன.

பி.ஏ. மற்றும் எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை, பிஜி.டி.எல்.ஏ., டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு 

மேற்குறிப்பிட்ட படிப்புகள் மனிதவள மேம்பாட்டு துறையில் சீரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. இங்கு பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக (Human Resource Manager) பணிபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் சேர்க்கை

இந்நிலையில், பி.ஏ. மற்றும் எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகளுக்கு 2026 – 2027ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

12ஆம் வகுப்பு முடித்த விருப்பமுள்ள மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்பையும், இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்பையும், முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஆண்களுக்கு மட்டும் தங்கும் விடுதி வசதி

விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தங்கும் விடுதி வசதி, இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 18ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

ஒரு விண்ணப்பத்தின் கட்டணம் ரூ.200 ஆகும். பட்டியல் சமூகம் மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.100 ஆகும். விண்ணப்பத்தை பெறும்போது, சாதி சான்றிதழின் நகலை சமர்பிப்பதும் அவசியமாகும்.

தபால் மூலம் பெற வேண்டும்

விண்ணப்பங்களை தபால் மூலமாக பெற வேண்டும். விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200, SC/ST மாணவர்கள் என்றால் ரூ.100 மற்றும் தபால் கட்டணம் ரூ.50 ஆகியவற்றுக்கான வங்கி வரைவோலையினை (Bank Demand Draft) "The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai" என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

மதிப்பெண் மற்றும் தமிழ்நாடு அரசின் விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு...

இதுகுறித்து உங்களுக்கு கூடுதல் விவரங்களோ அல்லது சந்தேகமோ இருக்கும்பட்சத்தில் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பாளர்கள் இருவரின் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. 

- ஆராய்ச்சி அலுவலர், முனைவர், M. காமராஜ், மொபைல் நம்பர் - 8667754203

- உதவி பேராசிரியர், முனைவர் S. கார்த்திகேயன், மொபைல் நம்பர் - 9965899822

நேரில் சென்று விசாரிக்க...

நேரில் சென்று விசாரிக்க விரும்புபவர்கள் அம்பத்தூர் மங்களாபுரம், மின்வாரிய சாலையில், அரசு ஐ.டி.ஐ கல்லூரிக்கு பின்புறம் அமைந்துள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கு (சென்னை 600098) செல்லலாம். அதன் தொலைபேசி எண். 044 - 29567885 / 29567886. tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் நீங்கள் தொடர்புகொள்ளலாம். எனவே, 12ஆம் வகுப்பு முடித்து என்ன படிக்கலாம்? என யோசனையில் உள்ள மாணவர்களும், மனிதவள மேம்பாட்டுத்துறையில் சாதிக்க விரும்புபவர்களும் தயங்காமல் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! AI வந்ததால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வேலைகளே இருக்காது!

மேலும் படிக்க | PMEGP திட்டம்: தொழில் தொடங்க மானியம்... மத்திய அரசின் மாஸ் திட்டம், விவரம் இதோ

மேலும் படிக்க | 10ம் வகுப்பு முடித்தவரா? மாதம் ரூ.63,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. சூப்பரான வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
0
Report

சிஎஸ்கே தோல்விகளுக்கு இந்த ஒரு வீரர் முக்கிய காரணமா? என்ன ஆனது?

RSRK Spark23h ago
Chennai, Tamil Nadu:

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியான தோல்விகளால் புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள சிஎஸ்கே அணி, பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் முக்கிய நட்சத்திர ஆட்டக்காரரான சிவம் துபே, தொடர்ந்து ரன்கள் அடிக்க தவறி வருவதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் மிகவும் மந்தமாக விளையாடிய சிவம் துபே 16 பந்துகளில் 21 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது இந்த மந்தமான ஆட்டமே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க: மஞ்சள் ஜெர்சியில் தோனியை பார்க்க முடியாது? அஸ்வினால் ரசிகர்கள் அதிர்ச்சி

சிவம் தூபே

பத்ரிநாத் கடும் சாடல்

சிவம் துபேயின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் வெளிப்படையாக பேசியுள்ள பத்ரிநாத், "சிவம் துபே ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாக மாறிவிட்டார். அவர் தற்போது களத்தில் அணிக்கு ஒரு சுமையாக தான் இருக்கிறார். சிக்ஸர்கள் அடிப்பதிலும், ஸ்பின்னர்களை எதிர்கொள்வதிலும் வல்லவரான அவர், இந்த சீசன் முழுவதும் அந்தத் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டார். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 195 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சென்னை அணி, ஆரம்பத்தில் மிக சிறப்பான நிலையில் தான் இருந்தது. ஆனால் 11வது ஓவரில் சர்பராஸ் கான் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தின் போக்கு முழுமையாக மாறிவிட்டது. அடுத்து வந்த டெவால்ட் பிரெவிஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். அந்த நெருக்கடியான சூழ்நிலையில் களமிறங்கிய சிவம் துபே, பந்துகளை சரியாக எதிர்கொள்ள திணறினார். அவரால் டைமிங் செய்து பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. துபேயின் ஆட்டத்திறன் இந்த சீசனில் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது," என்று கூறியுள்ளார்.

சிவம் துபே ஏமாற்ற காரணம் என்ன?

கடந்த சில சீசன்களாக சென்னை அணியின் மிடில்-ஆர்டரில் முதுகெலும்பாக திகழ்ந்தவர் சிவம் துபே. குறிப்பாக ஐபிஎல் 2023ல் 418 ரன்களை குவித்து அசத்தினார். ஆனால், நடப்பு 2026 சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒரு அரைசதம் கூட அடிக்காமல் வெறும் 128 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்களும், கொல்கத்தா அணிக்கு எதிராக 13 ரன்களும் என தொடர்ந்து சொதப்பி வருகிறார். ரூ. 18 கோடி என்ற இமாலய தொகைக்கு தக்கவைக்கப்பட்ட ஒரு வீரர், அந்த விலைக்கு ஏற்ப விளையாடாதது அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவரது இந்த தொடர் சறுக்கலுக்கு, அணியில் அவருக்கான சரியான பொறுப்பு ஒதுக்கப்படாததே காரணம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் ஒரு ஃபினிஷரா அல்லது மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனா என்பதில் உள்ள குழப்பமும், பேட்டிங் வரிசையில் அடிக்கடி செய்யப்படும் மாற்றங்களுமே அவரது ஃபார்மை பாதித்துள்ளது.

கேப்டன்கள் பொறுப்பேற்க வேண்டும்

தொடர் தோல்விகளால் துவண்டுள்ள சென்னை அணியை மீட்க வேண்டுமென்றால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவர் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என பத்ரிநாத் ஆலோசனை வழங்கியுள்ளார். "அணியில் ஒரு வீரர் நிலையாக நின்று ஆட வேண்டியது அவசியம். அப்போது தான் மற்ற பேட்ஸ்மேன்கள் அவரை சுற்றி எந்தவித அழுத்தமும் இன்றி தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். சிஎஸ்கே அணியின் தற்போதைய நிலை கவலைமளிப்பதாக உள்ளது. அவர்கள் தங்களின் வியூகங்களை உடனடியாக மாற்றியாக வேண்டும்," என்று பத்ரிநாத் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2026

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே, உர்வில் படேல், நூர் அகமது, நாதன் எல்லிஸ், ஸ்ரேயாஸ் கோபால், கலீல் அகமது, ராமகிருஷ்ணா கோஷ், முகேஷ் சவுத்ரி, ஜேமி ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், அன்ஷுல் காம்போஜ், அகீல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மேட் ஹென்றி, ராகுல் சாஹார், ஜாக் ஃபோல்க்ஸ்.

மேலும் படிக்க: டரியலான டெல்லி... பவர்பிளேவில் குறைவான ஸ்கோர் இதுதான் - டாப் 8 லிஸ்ட் இதோ

மேலும் படிக்க: பவர் பிளேவில் 6 விக்கெட் காலி! டெல்லி அணியின் வரலாற்று சரிவு.. ஐபிஎல் வரலாற்றில் டாப் 5 லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report
Advertisement

பிரியாணிக்கு பின் தர்பூசணி... ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி - உயிரிழப்புக்கு காரணம் என்ன?

Mumbai, Maharashtra:

Bizarre News: கடந்த சனிக்கிழமை இரவு (ஏப்ரல் 25) அன்று மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்த 13 வயதான சைனப், அவரது மூத்த சகோதரி மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் தடபுடலாக பிரியாணி சாப்பிட்டுள்ளனர். 

இரவு பிரியாணி சாப்பிட்ட பின்னர் நள்ளிரவு வேளையில் அனைவருக்கும் இனிப்பு சாப்பிட வேண்டும் என தோன்றியிருக்கிறது. எனவே, அவர்கள் தர்பூசணி பழத்தை இனிப்பிற்காக சாப்பிட்டதாக தெரிகிறது.

நான்கு பேரும் உயிரிழந்தனர்

உடனே அடுத்த நாள் (ஏப். 26), அவர்களுக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவர்கள் நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதுவும் கைக்கொடுக்கவில்லை. மருத்துவமனையிலேயே 4 பேர் கொண்ட மொத்த குடும்பமும் உயிரிழந்தது. 

கெட்டுப்போன உணவை சாப்பிட்டதன் காரணமாக நான்கு பேரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மேற்கொண்டு விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். 

மும்பையில் அப்துல்லா அப்துல் காதர் (40) என்பவர் சிறு மொபைல் கடையை வைத்திருக்கிறார். அவரது மனைவி நஸ்ரின் (35), குழந்தைகள் ஆயிஷா (16), சைனப் (13) ஆகியோர் அவர்களது உறவினர்களுடன் இரவு உணவருந்தி உள்ளனர். 5 உறவினர்களுடன் இரவு 10.30 மணியளவில் சாப்பிட்டுள்ளார். அதில் பிரியாணியும் அட்ககம். இரவு உணவை முடித்துவிட்டு பைதோனியில் உள்ள அவர்களது வீட்டுக்கு அப்துல் காதர், அவரின் மனைவி, குழந்தைகள் சென்றுவிட்டனர்.

நள்ளிரவில் தர்பூசணி

வீடு திரும்பும் வரை யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. வீட்டுக்குச் சென்ற பின்னர், நள்ளிரவு 1 மணியளவில் குடும்பத்தினர் நான்கு பேரும் தர்பூசணி பழத்தை சாப்பிட்டிருக்கிறார்கள். பின்னர், அதிகாலை 5 மணிக்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கடுமையாக வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. 

அடுத்தடுத்து உயிரிழப்பு

ஆரம்பத்தில் அருகில் இருந்த மருத்துவரை பார்த்து பரிசோதித்துள்ளனர். இருப்பினும் நிலைமை மோசமாக உடனே அவர்கள் ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர். அப்துல் காதரின் இளைய மகள் காலை 10.15 மணிக்கு உயிரிழந்தார். அதன்பின் அவரது தாயார் நஸ்ரின், ஆயிஷா ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இரவு 10.30 மணிக்கு அப்துல் காதர் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவர் சொன்னது என்ன?

முதலில், குடும்பத்தினர் நால்வரின் உடல்நிலையையும் பரிசோதித்த சையத் குரேஷி கூறுகையில், "அவர்கள் அப்போதே மிகவும் மோசமான நிலையில் இருந்தனர், கடும் சோர்வாக தென்பட்டனர். கடுமையாக வாந்தி, பேதி ஏற்பட்டது அவர்களுக்கு. அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன், அவர்கள் தர்பூசணி பழத்தை சாப்பிட்டதாக என்னிடம் சொன்னார்கள்" என்றார். 

ஃபுட் பாய்சன்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நால்வருக்கும் உடல்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. 12 மணிநேர இடைவெளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததற்கு ஃபுட் பாய்சனே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. 

காவல்துறையினர் பாதியளவு உண்ணப்பட்ட தர்பூசணித் துண்டு ஒன்றை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மும்பை காவல்துறையின் துணை ஆணையர் பிரவீன் முண்டே, "பிரேதப் பரிசோதனையின் போது உடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கூடுதல் விசாரணைக்காக எடுத்துச்செல்லப்பட்டன" என்றார். இந்த விசாரணைக்காக தடயவியல் மற்றும் உணவுத் துறைகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. ஜே.ஜே மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறை, அந்த தர்பூசணி பழத்தில் நோய்த்தொற்றுகள் அல்லது பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டறிய பரிசோதித்து வருகிறது. அனைத்து விசாரணைகளுக்கும் பிறகே உயிரிழப்புக்கான காரணங்கள் உறுதியாகும்.

மேலும் படிக்க |  உயிரை பறித்த பானிபூரி - 6 வயது சிறுவன் பலி... 18 பேர் பாதிப்பு... பெற்றோர்களே ஜாக்கிரதை

மேலும் படிக்க |  ரூ.80 லட்சம் சம்பளம் வாங்கும் நபரை... கல்யாணம் பண்ண மறுத்த பெண் - காரணம் தெரியுமா?

மேலும் படிக்க |  மதுப்பிரியர்களுக்கு ஷாக்... மதுபான விலை உயர்கிறது... அதுவும் மே 1 முதல்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

தி.நகர் மக்களே... விரைவில் வருகிறது மெட்ரோ - இனி போக்குவரத்து பிரச்னை பறந்து போகும்!

Chennai, Tamil Nadu:

Chennai Metro Rail Limited: சென்னையில் முதல்கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அன்றாடம் மக்கள் பயன்பாடுக்கு பேரூதவியாக இந்த இரு வழித்தடங்களும் உள்ளன.  

2ஆம் கட்ட மெட்ரோ - ஒரு பார்வை

சென்னையின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, பொது போக்குவரத்தை எளிமையாக்குதல் மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கூடுதலாக மூன்று வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மொத்த தூரம்: 116.1 கி.மீ.,

மொத்த மதிப்பு: ரூ.63,246 கோடி

3வது வழித்தடம்: மாதவரம் டூ சிறுசேரி - 45.4 கி.மீ.,

4வது வழித்தடம்: பூந்​தமல்லி டூ கலங்​கரை விளக்​கம் - 26.1 கி.மீ.,

5வது வழித்தடம்: மாதவரம் டூ சோழிங்கநல்​லூர் - 44.6 கி.மீ.,

விரைவில் பூந்தமல்லி - வடபழனி

அந்த வகையில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை கொண்ட 4வது வழித்தடத்தில் பூந்தமல்லி பைபாஸ் முதல் போரூர் மற்றும் போரூர் முதல் வடபழனி வரையிலான பணிகள் முடிந்துள்ளன. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை இழக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் இடையே 10 ரயில் நிலையங்கள் மட்டுமே உள்ளன. வடபழனி - போரூர் வரை ஒரு நேரத்தில் ஒரு ரயில் வரவே அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.  

அடுத்த பனகல் பார்க் மெட்ரோ

இதே வழித்தடத்தில் அடுத்து, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பனகல் பூங்கா வரை தண்டவாள பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளன. இருபுறமும் சேர்த்து மொத்தம் 5.8 கிலோ மீட்டர் நீளத்திற்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த வழித்தடத்தின் உயர்மட்ட பாதையை வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணிகள் முழு வீச்சில்...  

இதற்கான கட்டுமானம் தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் சவாலான இருக்கும் என கூறப்படுகிறது. தண்டவாளம் அமைக்கும் பணிகள் மட்டுமின்றி மெட்ரோ ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் மேல்நிலை மின்சாரக் கம்பிகள் அமைக்கும் பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாதத்திற்குள் வந்தால்...

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி  வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், தி.நகர் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பயனடைவார்கள். பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் செயல்பாட்டிற்கு வந்தால், மக்களால் தற்போது செயல்பட்டு வரும் வழித்தடத்துடன் எளிமையாக இணைந்துக்கொள்ளளாம். இது பயணிகளின் நேரத்தை வெகுவாக குறைக்கும். 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வடபழனியோடு நிறுத்தாமல் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு பனகல் பார்க் வரை கொண்டு வந்தால் சென்னையின் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஒருபடி உயரும், மக்களுக்கும் பெரும் பயனாக அமையும்.

மேலும் படிக்க |  பழைய கார்டுக்கு குட்பை.. மே 1 முதல் மெட்ரோ நிர்வாகம் அதிரடி!

மேலும் படிக்க | கோயம்பேடு - டிரேட் சென்டர் மெட்ரோ... ஜூன் மாதம் வராது? - காரணம் இதுதான்!

மேலும் படிக்க | சென்னையில் மெட்ரோ, பேருந்து இலவசம்... இந்த 7 நாள்கள் மட்டும் - பயன்படுத்துவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

ரிஷப் பண்ட் வேஸ்ட்... கேப்டன்ஸியில் இருந்து நீக்கம்? - மொத்தமாக மாறுகிறதா LSG

Lucknow, Uttar Pradesh:

IPL 2026, Rishabh Pant: ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியே காணாமல் மிரட்டலாக விளையாடி வருகிறது. ஆர்சிபி, ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் தோல்வியடைந்தாலும் ஓரளவு பலத்துடன் காணப்படுகிறது. 

இதர டெல்லி, குஜராத், சென்னை உள்ளிட்ட அணிகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மிக மிக சுமாரான நிலையில் உள்ளன.

லக்னோ மிக மிக மோசம்

10வது இடத்தில் LSG: ஆனால் மற்ற 9 அணிகளையும் விட மிக மோசமான இடத்தில், அதாவது புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியே உள்ளது. 8 போட்டிகளில் 6இல் தோற்று, 2இல் மட்டுமே வென்றுள்ளது, லக்னோ.

5 தொடர் தோல்விகள்: முதல் போட்டியிலேயே டெல்லியிடம் தோற்ற லக்னோ அணி, அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா அணிகளுடன் தலா 1 வெற்றியை பெற்றது. ஆனால் அடுத்து குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா என அடுத்தடுத்து 5 தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

200 ரன்களே வரவில்லை: லக்னோ அணி நடப்பு சீசனில் இதுவரை ஒரே ஒருமுறை 200 ரன்களுக்கு மேல் எதிரணியை அடிக்கவிட்டுள்ளது, அந்த போட்டியில் மட்டுமே லக்னோ அணி 200 ரன்களையும் அடித்திருக்கிறது. மற்ற போட்டிகளில் முதல் பேட்டிங் செய்தும் கூட 200 ரன்களை லக்னோ அடிக்கவில்லை. 

மோசமான நெட் ரன்ரேட்: மறுமுனையில், 170 ரன்களுக்கு குறைவான இலக்கை இரண்டு போட்டிகளில் அடிக்க முடியாமல் தோல்வியை தழுவியிருக்கிறது. நேற்றும் கூட மோசமாக விளையாடிய கேகேஆர் அணியிடம் மிக மிக மோசமாக விளையாடி சூப்பர் ஓவருக்குச் சென்று தோல்வியடைந்தது லக்னோ அணி. இதனால் தற்போது நெட் ரன்ரேட்டும் (-1.106) லக்னோவுக்கு மிக மோசமான நிலையிலேயே உள்ளது.'

ரிஷப் பண்ட் கேப்டன்ஸி மோசம்

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பான வீரர்களை லக்னோ வைத்திருக்கிறது. அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் சம அளவில் இருந்தாலும், வெற்றி இலக்கை அடைய லக்னோ திணறுவதற்கு ரிஷப் பண்டின் கேப்டன்ஸி முக்கிய காரணம் எனலாம். 

உதாரணத்திற்கு நேற்றைய போட்டியிலேயே 20வது ஓவரை லெக் ஸ்பின்னரான திக்வேஷ் ராத்தீயை பந்துவீச வைத்தார். அந்த ஓவரில் 4 சிக்ஸர் உள்பட 26 ரன்கள் குவிக்கப்பட்டது. மிடில் ஓவரிலேயே திக்வேஷ் ஒரு ஓவரை வீசியிருந்தால் நிச்சயம் கடைசி கட்டத்தில் பிரின்ஸ் யாதவ் சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தியிருப்பார். விக்கெட்டுக்கு ஆசைப்பட்டு போட்டியை தவறவிட்டார் ரிஷப் பண்ட். பார்மில் இல்லாத நிக்கோலஸ் பூரனை சூப்பர் ஓவரில் களமிறக்கியதும் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், லக்னோ அணியின் கேப்டன்ஸியில் இருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. ரூ.27 கோடிக்கு எடுக்கப்பட்ட ரிஷப் பண்டால் பேட்டிங்கிலும் கேப்டன்ஸியிலும் சமமாக கவனம் செலுத்த முடியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இந்நிலையில், ரிஷப் பண்ட்டை கேப்டன்ஸியில் இருந்து நீக்கிவிட்டு, எய்டன் மார்க்ரமை கேப்டனாக்கலாம் என மூத்த இந்திய வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாபர் சொல்லும் ஐடியா

அவரது யூ-ட்யூப் சேனலில் வாசிம் ஜாபர் கூறுகையில், "லக்னோ அணி தற்போது முற்றிலும் வலுவிழந்து காணப்படுகிறது. அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பது என்று கூட யோசிக்க கடினமாக இருக்கிறது. நான் முடிவெடுக்கும் இடத்தில் இருந்திருந்தால், எய்டன் மார்க்ரமை கேப்டனாக நியமிப்பதே நான் செய்யும் முதல் காரியமாக இருக்கும்.

எல்எஸ்ஜி பேட்டிங் ஆர்டர்

மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் ஓபனிங், நம்பர் 3இல் பூரன், அடுத்து ரிஷப் பண்ட், நம்பர் 5இல் ஆயுஷ் பதோனி, நம்பர் 6இல் அப்துல் சமத், நம்பர் 7இல் முகுல் சௌத்ரி. இதுதான் எனது லக்னோ அணியின் பேட்டிங் ஆர்டராக இருக்கும்.

ரிஷப் பண்டுக்கு சுமை வேண்டாம்

ரிஷப் பண்ட் போன்ற ஒருவர், அணியில் ஒரு வீரராக மட்டுமே விளையாட வேண்டும என நினைக்கிறேன். அவரை சுதந்திரமாக விளையாட வைத்து, களத்தில் இறங்கி அணியை தனியாக நின்று விளையாடி போட்டிகளை வெல்லச் சொன்னால்தான் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை நீங்கள் பெற முடியும். கேப்டன் பொறுப்பை அவர் மீது சுமையாக சுமத்த வேண்டாம்.

மார்க்ரம் கேப்டனாகலாம்...

எய்டன் மார்க்ரம் ஒரு தலைசிறந்த கேப்டன் என நான் நினைக்கிறேன். அவர் தென்னாப்பிரிக்காவுக்கு மிக சிறப்பான கேப்டனாக செயலாற்றி உள்ளார். மனரீதியாகவும் வலிமைமிக்கவர், நிதானமானவர். மற்ற வீரர்களிடம் இருந்து சிறந்த திறனை வெளிக்கொணரே மார்க்ரமால் முடியும். 

ஆனால் இது நடக்குமா என்பது தெரியாது. இது எனது யோசனை மட்டுமே, லக்னோ அணியும் முடிவெடுக்கும் இடத்தில் நான் இருந்திருந்தால் அதைதான் செய்திருப்பேன்" என்றார்.

ரிஷப் பண்டும் மோசமான பேட்டிங்கும்

வாசிம் ஜாபர் சொல்வது ஒரு வகையில் உண்மைதான். 2021இல் இருந்து ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2021இல்  16 இன்னிங்ஸில் 419 ரன்கள், 2022இல் 340 ரன்கள், 2024இல் 13 போட்டிகளில் 446 ரன்களை டெல்லி அணிக்காக அடித்து வந்தார். 

எல்எஸ்ஜிக்கு வந்த பின்னர் 2025 சீசனில் 13 இன்னிங்ஸில் 269 ரன்களையும், நடப்பு சீசனில் 8 போட்டிகளில் 189 ரன்களை அடித்துள்ளார். கேப்டன்ஸிக்கு முன்னரே அவரது பேட்டிங் சரிந்துவிட்டது என்றாலும், கேப்டன்ஸி அவர் மீது சுமை ஏற்றியுள்ளது. 2018இல் அதிகபட்சமாக 684 ரன்களை குவித்தார். அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி அவர் ஒரு சீசனில் 500 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மஞ்சள் ஜெர்சியில் தோனியை பார்க்க முடியாது? அஸ்வினால் ரசிகர்கள் அதிர்ச்சி

மேலும் படிக்க | சிஎஸ்கே-வை சீண்டுகிறாரா சுப்மன் கில்? கையில் ‘மஞ்சள் விசில்’ உடன் பகிர்ந்த புகைப்படம் - கொதிக்கும் ரசிகர்கள்!

மேலும் படிக்க | தோனி செய்வது பெரிய தவறு... பிளேயிங் 11 சிக்கல் - CSK செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report
Advertisement

அடுப்பு எரியல, ஆனா வயிறு எரியுது! கோவை தொழிலாளர்களின் கண்ணீர்-சிலிண்டர் விலை ஷாக்

Coimbatore, Tamil Nadu:

கோயம்புத்தூர் செய்திகள்: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர், இன்று ஒரு மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை சீர்குலைத்துள்ள நிலையில், அதன் நேரடி பாதிப்பு கோவையின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) மீது விழுந்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக நீடிக்கும் இந்த வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ரூ.2000 - ரூ.7000: அதிர வைக்கும் விலை உயர்வு - கறுப்புச் சந்தை

சாதாரணமாக ரூ.1,900 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர்கள், தற்போது கடும் தட்டுப்பாடு காரணமாக கறுப்புச் சந்தையில் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என்ன?

அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் முறைப்படி முன்பதிவு செய்தாலும், சிலிண்டர்கள் கிடைப்பதில் வாரக்கணக்கில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் தொழிலை முடக்க விரும்பாத உற்பத்தியாளர்கள், வேறு வழியின்றி மூன்று மடங்கு கூடுதல் விலை கொடுத்து வெளிச்சந்தையில் சிலிண்டர்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அபரிமிதமான விலை உயர்வு, உற்பத்தி செலவை (Production Cost) பல மடங்கு அதிகரித்துள்ளதால், பல நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றன.

20% தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்: ஜேம்ஸ் (TACT தலைவர்) ஆதங்கம்

இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (TACT) தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், "கோவையைப் பொறுத்தவரை இது பலதரப்பட்ட தொழில்கள் நிறைந்த மாவட்டம். வார்பட்டறை (Foundry), ஃபேப்ரிகேஷன் (Fabrication), மேனுஃபேக்சரிங் என ஏறத்தாழ 50,000 தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. இதில் 20% முதல் 25% வரையிலான நிறுவனங்கள் எரிவாயுவை (Gas) முதன்மை ஆதாரமாகக் கொண்டு இயங்குபவை.

போர் பதற்றம் தணிந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், சந்தையில் இன்னும் தட்டுப்பாடு நீடிக்கிறது. அரசு நிறுவனங்களில் சிலிண்டர் கிடைக்காத நிலையில், வெளிச்சந்தையில் ரூ.7000 கொடுத்து வாங்கினால் எப்படி தொழில் நடத்த முடியும்? இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

வேலையிழக்கும் தொழிலாளர்கள்: சிறு குறு நிறுவனங்களின் தற்போதைய நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஃபேப்ரிகேஷன் யூனிட்டுகள் மற்றும் மெஷின் ஷாப்களில் வெல்டிங் மற்றும் ஹீட்டிங் தேவைகளுக்காக வணிக சிலிண்டர்கள் அத்தியாவசியமானவை. வருவாய் குறைந்ததால், பல நிறுவனங்கள் ஷிப்ட் முறையைக் குறைத்துள்ளன. தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.

குறித்த காலத்தில் பொருட்களை உற்பத்தி செய்து வழங்க முடியாததால், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு ஆர்டர்கள் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.ஒரு பெரிய நிறுவனம் முடங்கும்போது, அதை நம்பியிருக்கும் சிறு ஜாப் ஒர்க் (Job Work) நிறுவனங்களும் சங்கிலித் தொடராகப் பாதிக்கப்படுகின்றன.

தமிழக அரசுக்கு தொழில்முனைவோர் வைக்கும் பிரதான கோரிக்கைகள்

இந்த நெருக்கடியான சூழலில் இருந்து சிறு குறு தொழில்களைக் காக்க, தொழில்முனைவோர் முன்வைக்கும் கோரிக்கைகள் என்னவென்று பார்த்தால்,  அரசு எண்ணெய் நிறுவனங்கள் (IOCL, BPCL, HPCL) வணிக சிலிண்டர் விநியோகத்தை முன்னுரிமை அடிப்படையில் சிறு தொழில்களுக்கு வழங்க வேண்டும்.

தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி வெளிச்சந்தையில் அதிக விலைக்கு சிலிண்டர் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச காரணங்களால் விலை உயரும்போது, சிறு குறு தொழில்கள் தப்பிப் பிழைக்க தற்காலிகமாக சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக மத்திய எரிசக்தி துறையுடன் பேசி கோவைக்கான எரிவாயு ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

கோவையில் தொழில் முடக்கம்

கோவை மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் சிறு குறு தொழில்கள் சிதைந்தால், அது ஒட்டுமொத்த தமிழகத்தின் ஜிடிபி (GDP)-யிலும் எதிரொலிக்கும். "போர் ஓரிடத்தில் நடந்தால், அதன் பாதிப்பு இங்குள்ள சாமானியத் தொழிலாளியின் அடுப்பில் தெரிகிறது" என்பதே தற்போதைய நிதர்சனம். அரசு உரிய நேரத்தில் தலையிடாவிட்டால், கோவையின் பல தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளது.

மேலும் படிக்க - தமிழ்நாட்டில் மே மாதம்... அதிக பவர் கட் இருக்குமா...? மத்திய அரசின் பிளான் என்ன?

மேலும் படிக்க - சேலத்தில் பயங்கரம்.. தாயை காப்பாற்ற வந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. துடிதுடித்து கொலை!

மேலும் படிக்க - ‘தங்க நாயணம்’.. திமுக ஸ்மாட் மூவ்.. செந்தில் பாலாஜியால் வானதி சீனிவாசன் அதிர்ச்சி!

கோவை வணிக சிலிண்டர் தட்டுப்பாடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. கோவையில் தற்போது வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அளவில் நிலவும் எரிவாயு விநியோகச் சங்கிலி (Supply Chain) பாதிப்புகள் காரணமாக, இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

2. வணிக சிலிண்டரின் தற்போதைய விலை எவ்வளவு?

சாதாரணமாக ₹1,900 முதல் ₹2,000 வரை விற்கப்பட வேண்டிய 19 கிலோ வணிக சிலிண்டர், தற்போதைய தட்டுப்பாடு காரணமாக வெளிச்சந்தையில் ₹5,000 முதல் ₹7,000 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

3. இந்த தட்டுப்பாட்டால் எந்தெந்த தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன?

கோவையில் உள்ள வார்பட்டறைகள் (Foundries), ஃபேப்ரிகேஷன் யூனிட்டுகள் (Fabrication), ஹீட் ட்ரீட்மெண்ட் பிளான்ட்கள் மற்றும் உணவுத் தொழில் சார்ந்த சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

4. எத்தனை நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன?

கோவையில் உள்ள சுமார் 50,000 தொழிற்சாலைகளில், எரிவாயுவை முதன்மை எரிபொருளாகக் கொண்ட 20% முதல் 25% வரையிலான நிறுவனங்கள் (சுமார் 10,000 முதல் 12,000 யூனிட்டுகள்) முடங்கும் அல்லது மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

5. தொழில் முனைவோர் சங்கத்தின் (TACT) முக்கிய கோரிக்கை என்ன?

அரசு எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சீரான சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும், விலையை முறைப்படுத்த வேண்டும் மற்றும் இக்கட்டான சூழலில் சிறு தொழில்களைக் காக்க சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

ஆண்டிப்பட்டி முருகன்... பழனியில் கொலை செய்யப்பட்டது எப்படி? - 3 இளைஞர்கள் கைது

Dindigul, Tamil Nadu:

Dindigul Crime News: திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பாலசமுத்திரம் சாலையில் உள்ள வரட்டாற்று பாலத்தின் அருகே நேற்று முன்தினம் (ஏப். 25) அதிகாலை வயல் காட்டிற்குச் சென்ற பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆம்புலன்ஸ் வருவதற்கு உயிரிழந்த முருகன் 

பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, அவர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த நபர் அங்கிருந்தவர்களிடம் தாகத்தால் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என கேட்டு வலியில் துடித்துள்ளார். 

இதைக் கண்டு பதறிய பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவித்து விட்டு அவருக்கு உதவ முயன்றனர். ஆனால், ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கட்டையால் தாக்கியதால் படுகாயம்

தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த போயன் என்பவரது மகன் முருகன் (44) என்பது தெரியவந்தது. மர்ம நபர்கள் அவரைத் தலை மற்றும் உடல் பகுதிகளில் கட்டையால் கொடூரமாகத் தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணை

​தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் எதற்காக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வந்தார்? அவர் என்ன தொழில் செய்து வருகிறார்? முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், முருகன் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளைப் பழனி தாலுகா போலீசார் நேற்று (ஏப். 26) கைது செய்தனர். மேலும் இதுகுறித்த முதற்கட்ட தகவலும் வெளியாகி உள்ளது.

முருகன் பழனி வந்தது ஏன்?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த முருகன், உடுமலையில் உள்ள பேக்கரி ஒன்றில் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர் சென்றிருக்கிறார். 

மீண்டும் பணிக்குத் திரும்பும் வழியில் பழனி வந்துள்ளார். பழனி பேருந்து நிலையத்தில் மது அருந்திய முருகனுக்கு, பாலசமுத்திரத்தைச் சேர்ந்த பழக்கமுள்ள மூவரை அழைத்துள்ளார். அன்று இரவு, முருகன் மற்றும் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் 3 பேரும் வரட்டாற்று பாலத்தின் அருகே அமர்ந்து மீண்டும் மது அருந்தி உள்ளனர்.

வாக்குவாதத்தால் வந்த சண்டை 

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மூவரும் முருகனைக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடி உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலசமுத்திரம் கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (22), நாகராஜ் (20) மற்றும் சங்கிலிதுரை (27) ஆகிய மூவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்கான முழுமையான காரணம் குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மே மாதம்... அதிக பவர் கட் இருக்குமா...? மத்திய அரசின் பிளான் என்ன?

மேலும் படிக்க | கோடையில் குளு குளு... மஜாவான 5 சுற்றுலா தலங்கள் - சென்னை வெயிலுக்கு குட் பை!

மேலும் படிக்க | என்னாது.. நிலாவுக்கு செல்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜுனா சொன்ன செம மேட்டர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

சூப்பர் ஓவர் திரில்லர்... கேகேஆர் போராடி வெற்றி... லக்னோவை வீழ்த்திய ரிங்கு சிங்!

Ardonamau, Uttar Pradesh:

IPL 2026, LSG vs KKR Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, 8வது இடத்திற்கு முன்னேறியது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
0
Report
Advertisement
Advertisement
Back to top