பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
எந்தெந்த ரயில் பெட்டிகளில் எவ்வளவு லக்கேஜ் கொண்டு போகலாம்? ரயில்வே விதிகள்
Chennai, Tamil Nadu:Indian Railways Luggage Rules : தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை நாளை (மே 28) கொண்டாடப்படுகிறது. நாளை (மே 28) பக்ரீத் பண்டிகை மட்டுமின்றி முகூர்தத் நாளாகும். அதேநேரத்தில் மே 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை முகூர்த்தம், மே 30 மற்றும் மே 31 ஆகியவை வார இறுதி நாள்கள்களாகும்.
அடுத்து வரும் மே 31 அன்று (ஞாயிறு) வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஜூன் 3ஆம் தேதிவரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரயில்வே ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: மோடி அரசின் எச்சரிக்கை!!
சிறப்பு ரயில்கள், பேருந்துகள்
இதனால், அடுத்த ஒரு வாரத்திற்கு பேருந்து மற்றும் ரயில்களில் கடும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். முன்பதிவு செய்தவர்கள் ஒருபக்கம் முன்பதிவு செய்யாமலும் பலர் பயணிப்பார்கள். அதுவும் விடுமுறை தினத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, திருச்சியில் இருந்து தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் மக்கள் பயணிப்பார்கள். அதேபோல், விடுமுறை நிறைவடையும்போது சொந்த ஊர்களில் இருந்து நகரங்களை நோக்கியும் மக்கள் பயணிப்பார்கள். எனவே, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தெற்கு ரயில்வே போட்ட பதிவு
அந்த வகையில், விடுமுறை நாள்களை முன்னிட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே இன்று (மே 27) வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த X பதிவில், இந்திய ரயில்வேயில் ஒவ்வொரு வகுப்பிற்கும் இலவச லக்கேஜ் அளவு உண்டு. கொஞ்சம் எக்ஸ்ட்ரா இருந்தால், சிறிய கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்லலாம்.
லக்கேஜ் ரூல்ஸ்
ஆனால், அளவை தாண்டினால் அபராதம் கட்ட வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், குறைவான லக்கேஜ், நிறைவான பயணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கூடுதல் லக்கேஜ்ஜிற்கும் அனுமதி இருக்கிறது. ஆனால், கூடுதல் கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட எல்லை வரை மட்டும் எடுத்துச் செல்லலாம்.
பயணத்திற்கு ரெடியா? லக்கேஜ் லிமிட் தெரியு
— Southern Railway (@GMSRailway) May 27, 2026
இந்திய இரயில்வேயில் ஒவ்வொரு வகுப்பிற்கும் இலவச லக்கேஜ் அளவு உண்டு!
கொஞ்சம் எக்ஸ்ட்ரா இருந்தால், சிறிய கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்லலாம். ஆனால், லிமிட்டை தாண்டினால் ஃபைன் கட்ட
அளவோடு பேக் பண்ணுங்க. அசத்தலா… pic.twitter.com/VPFcfq0X9d
எந்தெந்த வகுப்புகளில் அனுமதிக்கப்பட்ட உடைமைகளின் அளவு எவ்வளவு?
| வகுப்பு | கிலோ |
| ஏசி முதல் வகுப்பு வகுப்பு (1A) | 70 கிலோ வரை |
| ஏசி இரண்டாம் அடுக்கு வகுப்பு (2A) | 50 கிலோ வரை |
| ஏசி மூன்றாம் அடுக்கு (3A) | 40 கிலோ வரை |
| தூங்கும் வசதி வகுப்பு (SL) | 40 கிலோ வரை |
| இரண்டாம் வகுப்பு அமரும் இருக்கை (2S) | 35 கிலோ வரை |
கூடுதல் அனுமதி...
- பயணிகள் கூடுதலாக, விதிமுறைக்கு உட்பட்டு 10-15 கிலோ வரை எடுத்துச் செல்லலாம்.
- இதற்கு சாதாரண உடைமைக் கட்டணத்தைப் போல் 1.5 மடங்கு செலுத்த வேண்டும்.
- இந்த கூடுதல் அனுமதி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் உடைமைகளுக்கு அபராதம் விதிக்கப்படாது.
அனுமதிக்கப்பட்ட அளவை மீறினால் என்னவாகும்?
இலவச மற்றும் அனுமதிக்கப்பட்ட உடைமைகளை அளவை மீறினாலோ அல்லது முன்பதிவு செய்யாமல் அதிகளவில் உடைமைகளை எடுத்துச் சென்றாலோ, ரயில்வே விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும்.
மேலும் படிக்க | பயணிகளுக்கு ஜாக்பாட் - 18,262 ரயில் சேவைகள்... கோடையில் மஜா பண்ணலாம்!
இந்திய கிரிக்கெட்டில் ஓய்வு! இலங்கை அணிக்காக விளையாடும் விஜய் ஷங்கர்!
Dambulla, Central Province:இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தமிழக வீரர் விஜய் ஷங்கர், இப்போது வெளிநாட்டு டி20 லீக் பக்கம் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டி ராயல்ஸ் அணியுடன் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான விஜய் ஷங்கரின் இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. விஜய் ஷங்கர் சமீபத்தில் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர், உலகின் பிற டி20 லீக்குகளில் விளையாடும் வாய்ப்புகளை ஆராய்வதாக அவர் தெரிவித்திருந்தார். அந்த திட்டத்தின் முதல் படியாகவே லங்கா பிரீமியர் லீக்கை அவர் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பேட்டிங், பவுலிங்கில் கலக்கல்! இறுதி போட்டிக்கு சென்றது ஆர்சிபி!
கண்டி ராயல்ஸ் அணியில் முக்கிய ஒப்பந்தம்
கண்டி ராயல்ஸ் அணி, இந்த சீசனுக்கான முக்கிய வெளிநாட்டு வீரராக விஜய் ஷங்கரை எடுத்துள்ளது. இதன் மூலம், அவர் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் வேக பந்துவீச்சுக்கு வலு சேர்க்கும் வீரராக கருதப்படுகிறார். அணியில் மொயீன் அலி, வாநிந்து ஹசரங்கா, அங்கேலோ மேத்யூஸ் போன்ற நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை லீக் தொடர் விஜய் ஷங்கருக்கு புதிய அனுபவமாக அமையும். இந்தியாவில் விளையாடியபோது கிடைத்த அழுத்தம், வெளிநாட்டு சூழ்நிலை மற்றும் டி20 வடிவத்தின் வேகமான தேவைகள் ஆகியவற்றை அவர் புதிய அணியில் வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அதேசமயம், இது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மறுபிறவி போல அமையக்கூடும் எனவும் கருதப்படுகிறது.
Kandy Royals LPL Signings
— Junaid Khan (@JunaidKhanation) May 26, 2026
Wanindu Hasaranga
Angelo Mathews
Moeen Ali
Vijay Shankar pic.twitter.com/3vw8HjZ1Ix
இந்தியாவிலிருந்து வெளிநாட்டு லீக்
இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஐபிஎல்லிலும் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, விஜய் ஷங்கர் வெளிநாட்டு லீக்குகளில் விளையாடுவது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த இந்த ஆல்ரவுண்டர், இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், தமிழ்நாடு அணிக்காக முதல் தரம், லிஸ்ட் ஏ, மற்றும் டி20 வடிவங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். விஜய் ஷங்கரின் இந்த புதிய தொடக்கம், இந்திய கிரிக்கெட்டில் வாய்ப்பு குறைந்த பின்னரும் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஒரு வீரரின் உதாரணமாக பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் ஓய்வுக்கு பிறகு முழுமையாக விளையாட்டிலிருந்து விலகும் நிலையில், அவர் வெளிநாட்டு லீக் வாய்ப்பை தேர்வு செய்திருப்பது தொழில்முறை அணுகுமுறையாக மதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னை அணிக்கு வரும் ஹர்திக் பாண்டியா? உறுதிப்படுத்திய இன்ஸ்டா பதிவு?
ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு
தமிழக ரசிகர்களிடையே விஜய் ஷங்கருக்கு எப்போதும் தனித்த இடம் உள்ளது. ரஞ்சிக் கோப்பை முதல் இந்திய அணிவரை அவர் மேற்கொண்ட பயணம், ஏற்ற இறக்கங்களால் நிரம்பியதாக இருந்தாலும், அவரது உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை பலரையும் கவர்ந்துள்ளது. இப்போது கண்டி ராயல்ஸ் அணிக்காக அவர் ஆட உள்ளதால், இலங்கை மைதானங்களில் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மொத்தத்தில், இந்திய கிரிக்கெட்டில் ஒரு அத்தியாயத்தை முடித்த விஜய் ஷங்கர், இலங்கை லீக்கில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார். இந்த வாய்ப்பு அவரது விளையாட்டு வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்க்கும் தருணமாக மாற வாய்ப்பு உள்ளது.
பகலில் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்... பிரதமர் மோடியின் அறிவுரை
New Delhi, Delhi:PM Narendra Modi : பகலில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். கடும் வெயில் காணப்படும் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என்றும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் கேன் எடுத்துச் செல்லுங்கள் என்றும் பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்தார்.
Different parts of India are witnessing soaring temperatures and the challenges that come with it. This heat is harsh on all of us and I urge you all to take as many precautions as possible. Please stay hydrated, keep water with you when stepping out. Offer a glass of water to…
— Narendra Modi (@narendramodi) May 27, 2026
தாகத்தோடு வருவோருக்கு ஒரு குவளை நீர் கொடுங்கள் என்றும்; நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் கடுமையாக உள்ளது என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். வீடு, கடைகளுக்கு வெளியே குடிநீர் வைத்துள்ளவர்களை நான் பாராட்டுகிறேன் என்றார்.
கருத்து வேறுபாடு தான்! பிளவு இல்லை - பல்டி அடித்த எஸ்பி வேலுமணி!
Chennai, Tamil Nadu:அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை சுற்றி நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த சில எம்எல்ஏக்கள் இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறி உள்ளனர். இதன் மூலம், கட்சிக்குள் இபிஎஸ் தரப்பின் பலம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்சனை, தேர்தல் தோல்விக்கு பிறகு மேலும் தீவிரமடைந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் பதவி, சட்டமன்ற குழு தலைவர் நியமனம் போன்ற விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரின் தரப்புக்கும் இடையே மறைமுக மோதல் நீடித்து வந்தது. இந்த சூழலில் தான், வேலுமணி முகாமில் இருந்த சில எம்எல்ஏக்கள் இபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற போக்கு கொடுமையானது - சீமான்!
உட்கட்சி மோதல் வெளிச்சம்
இந்த மாற்றம் அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் கணக்குகளில் முக்கிய தாக்கம் செலுத்தும் என கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து கட்சியை மீண்டும் ஒரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.
எஸ்.பி.வேலுமணி
தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை திரும்பப் பெற்றுள்ளோம்; 2 மனுக்களையும் திரும்பப் பெற்றுள்ளோம்; அதிமுகவில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடுகளே இருந்தன - எஸ்.பி.வேலுமணி
மேலும் படிக்க | கட்சி மேடையில் இருந்து திடீரென குதித்த சீமான்? என்ன நடந்தது? முழு விவரம்!
ஜோதிமணி கருத்தை முரண்பட்டதாக பார்க்கிறேன் - அமைச்சர் வி்ஸ்வநாதன் பேட்டி!
Madurai, Tamil Nadu:இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் தபால் தந்தி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச்சிலைக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட காங்கிரஸ் தலைவர் நல்லமணி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன், ரிசர்வ் வங்கியில் இருந்து நாசா தொடங்கி அனைத்து நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் ஐஐடி போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நேரு அவர்களால் கட்டமைக்கப்பட்டது. இந்தியா உயர்ந்து நிற்க முழு காரணம் காங்கிரஸ் தான்., காங்கிரஸ் பேரியக்கம் தான் இந்தியாவை வலுவாக கட்டமைத்திருக்கிறது. நேருவின் கொள்ளு பேரன் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
உயர்கல்வி கல்லூரி சேர்க்கை கவுன்சிலிங் தொடர்பாக ஜூன் - 3 ஆம் தேதிக்குள் உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். மருத்துவம் பொறியியல் தேர்வில் தமிழ் மொழி இடம்பெறும் என்ற தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு? மருத்துவம் பொறியியல் தேர்வில் தமிழ் மொழி இடம்பெறாதது அது டெக்னிக்கல் காரணம் இது தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசவிருக்கிறேன். இது குறித்து முதலமைச்சர் வழிகாட்டுதன்படி செயல்படவிருக்கிறோம் முதலமைச்சரின் முடிவுக்கு காத்திருக்கிறோம் கண்டிப்பாக இது சம்பந்தமான கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கலந்து பேசவுள்ளேன். ஆளுநரே வேந்தர்களாக உள்ள நிலையில் முதல்வரே வேந்தர் என்ற முந்தைய நிலைப்பாட்டில் புதிய அரசு உள்ளதா? என்ற கேள்விக்கு?
எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார்கள் கடந்த அரசின் முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது. எங்கள் அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் விஜய் கண்டிப்பாக அமைச்சர்கள் அரசு உயரதிகாரிகள் உயர் கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலை நெறிமுறைபடுத்துவார்; முதலமைச்சர் வழிகாட்டுதல்படி விரைவில் அறிவிப்புகள் வரும். குதிரை பேரம் குறித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு? ஒரு கட்சியில் இருந்து அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விரும்பும் கட்சியில் இணைந்து மீண்டும் மக்களை சந்திக்கப் போகிறார் அவர் எம்எல்சியாக வரப்போவதில்லை ராஜ்யசபாவிலோ வரப்போவதில்லை மீண்டும் மக்களிடம் செல்ல போகிறார் மீண்டும் மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு வர விரும்புகிறார் இது ஜனநாயகத்தின் விரோதமாகவோ இல்லை!!! என்னை பொறுத்தமட்டிலும் இதனை குதிரை பேரமாக கருதவில்லை
எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் ஜோதிமணியில் கருத்து குறித்த கேள்விக்கு? நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்தாகூர் கருத்தும்,்ஜோதிமணியின் கருத்தும் முரண்பட்ட கருத்தாகவே நான் பார்க்கிறேன் ; காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்பது மாணிக்தாகூருடைய தான். மாணிக்தாகூரின் கருத்து என்னுடைய கருத்து என்றார். விசிக திமுக மோதல் குறித்த கேள்விக்கு? காங்கிரஸ் கட்சி விரும்புவது சண்டையே இருக்கக்கூடாது மோதல்கள் இருக்கக்கூடாது ஜனநாயகத்தில் மரபுகளே கடைபிடிக்க வேண்டும். விசிக தலைவர் திருமாவளவன் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார் மோதல் போக்கு கடைபிடிக்க கூடாது என்று சொல்லியிருக்கிறார். மோதல் என்பது அவசியமற்றது அநாவாசியமானது மக்கள் பணியாற்ற வந்திருக்கிறோம் மக்கள் கருத்தை தான் பிரதிபலிக்க வேண்டுமே தவிர மாறாக வன்முறை போக்கு இதற்கெல்லாம் இடமளிக்கக் கூடாது.
மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு? மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அதுதான். தமிழக முதலமைச்சர் நிலைப்பாடு என்னவோ அந்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கும். 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நிலைத்து நிற்கும் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவதற்கு இந்த ஆட்சியை 5 ஆண்டுகள் கொண்டு செல்வதற்கு காங்கிரஸ் பேரியக்கம் உறுதுணையாக அவருக்கு இரும்பு கோட்டையாக பின்னால் நிற்போம் என்றார்.
நரகமாக மாறிய பொள்ளாச்சி முத்துநகர்! மக்கள் அச்சம், நடந்தது என்ன?
Pollachi, Tamil Nadu:பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தின் மிக முக்கிய வணிக மற்றும் குடியிருப்பு நகரங்களில் ஒன்றான பொள்ளாச்சியில், தற்போது அரங்கேறி வரும் ஒரு அவல நிலை ஒட்டுமொத்தப் பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் குடியிருப்புப் பகுதியில், பாதாள சாக்கடைக் கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடி, வீடுகளுக்குள் புகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும், சொல்லொணா வேதனையும் அடைந்துள்ளனர்.
தொற்றுநோய்கள் பரவும் அபாயம்
இந்த அவலத்தால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சேறும் சகதியுமாக உள்ள சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் விபத்துகள் மூலம் உயிர்ச்சேதம் ஏற்படும் அச்சமும் நிலவி வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபாயத்தில் முத்துநகர் மக்கள்
பொள்ளாச்சி நகராட்சியின் மிக முக்கிய மற்றும் விஐபி குடியிருப்புப் பகுதியாக விளங்குவது முத்துநகர் ஆகும். திட்டமிடப்பட்ட நகர்ப்புறக் கட்டமைப்பைக் கொண்ட இப்பகுதியில், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை (Underground Drainage) குழாய்களில் கடுமையான அடைப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் முறையற்ற பராமரிப்பு மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக, கழிவுநீர் வெளியேற வழியின்றி, அங்குள்ள மேன்ஹோல் (Manhole) மூடிகள் வழியாக வீதிகளில் பொங்கி வழிந்து வருகிறது.
தற்பொழுது இந்தச் சாக்கடைக் கழிவுநீர் ஒட்டுமொத்த முத்துநகர் மெயின் ரோடுகளிலும், சந்துகளிலும் ஆறாக ஓடி வருவதால், அந்தப் பகுதியே கடுமையான துர்நாற்றத்தில் மிதக்கிறது. நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்றால், மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல்களையும், கதவுகளையும் கூட திறக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கொசுத்தொல்லையால் கலங்கும் முத்துநகர் மக்கள்
சாலையில் தேங்கி நிற்கும் இந்தக் கழிவுநீரால் அந்த வார்டு முழுவதும் கொசுத்தொல்லை பல மடங்கு அதிகரித்துள்ளது. பகல், இரவு என எந்நேரமும் கொசுக்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளதால், அப்பகுதி நரகமாக மாறியுள்ளது.
இதன் காரணமாக:
- குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற அபாயகரமான நோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது.
- முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- தேங்கி நிற்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயமும் உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
முத்துநகர் பொதுமக்களின் புகார்
"சாக்கடைக் கழிவுநீர் எங்கள் வீட்டு வாசலிலேயே தேங்கி நிற்கிறது. குழந்தைகளை வெளியே அனுப்பவே பயமாக இருக்கிறது. சாப்பாட்டு நேரத்தில் கூட வீசும் துர்நாற்றத்தால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை," என்று அப்பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.
உயிர்ச்சேதம் ஏற்படும் முன் விழிக்குமா நகராட்சி? முத்துநகர் மக்கள் கேள்வி
பிரச்சினை துர்நாற்றத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்தச் சாக்கடை நீர் சாலைகளில் ஓடுவதால், சாலைகள் முழுவதும் பாசி பிடித்து வழுக்கும் தன்மையுடையதாக மாறியுள்ளன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். குறிப்பாக, பள்ளிக்கு நடந்து செல்லும் சிறுவர்கள் இந்தச் சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து விபத்துக்கு உள்ளாகும் அவலம் தினசரி வாடிக்கையாகிவிட்டது.
"ஏதேனும் ஒரு பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்ட பிறகு தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது அசம்பாவிதம் நடக்கும் வரை காத்திருக்கிறார்களா?" என முத்துநகர் மக்கள் ஆவேசத்துடனும், ஆதங்கத்துடனும் கேள்வி எழுப்புகின்றனர்.
முத்துநகர் வார்டு கவுன்சிலரிடமும் புகார்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடமும், வார்டு கவுன்சிலரிடமும் பலமுறை புகார் அளித்தும், இதுவரை தற்காலிகத் தீர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெறும் கம்பிகளை விட்டு அடைப்பை எடுப்பது போன்ற கண்துடைப்பு வேலைகளே நடக்கின்றன தவிர, ஒட்டுமொத்தக் குழாய்களையும் சீரமைக்கும் நிரந்தரப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
தற்போது கோடை மழை ஆங்காங்கே பெய்து வரும் நிலையில், மழைநீரும் சாக்கடை நீரும் ஒன்றாகக் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தால் நிலைமை இன்னும் மோசமாகும் எனப் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஸ்மார்ட் சிட்டி, தூய்மை பாரதம் என்றெல்லாம் பேசப்படும் இந்தத் தற்காலச் சூழலில், ஒரு நகராட்சியின் மையப் பகுதியில் இப்படி ஒரு அவலம் நடப்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.
முத்துநகர் பொதுமக்களின் கோரிக்கைகள் என்னென்ன?
முத்துநகர் குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் பொதுமக்கள் தரப்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கப்படும் முக்கியக் கோரிக்கைகள் இதோ:
- நவீன எந்திரங்கள் பயன்பாடு: பழங்கால முறைகளைக் கைவிட்டு, நவீன சக்ஷன் எந்திரங்கள் மற்றும் ஜெட்டிங் எந்திரங்கள் (Jacking and Suction Machines) மூலம் பாதாள சாக்கடை அடைப்புகளை முழுமையாக நீக்க வேண்டும்.
- முறையான பராமரிப்பு: கழிவுநீர்க் குழாய்களை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை முறையாகப் பராமரித்து, அடைப்புகள் ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்க வேண்டும்.
- கிருமிநாசினி தெளிப்பு: தற்போது தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றிவிட்டு, அந்தப் பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினிகளைத் தெளித்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- கண்காணிப்பு: பாதாள சாக்கடையில் பிளாஸ்டிக் மற்றும் திடக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுப்பாரா பொள்ளாச்சி நகராட்சி ஆணையர்?
பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக முத்துநகர் பகுதியில் நேரில் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். அதிகாரிகள் இதில் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? பாதாள சாக்கடை பிரச்சனை தீருமா? உயிர் பயம் போகுமா? மக்களின் குறைகள் தீர்க்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
மேலும் படிக்க | டாஸ்மாக் கடை இன்றும் மூடலா...? அமைச்சர் கொடுத்த முக்கிய வாக்குறுதி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு... இது 6வது முறை - சென்னை நிலவரம் என்ன?
Chennai, Tamil Nadu:Petrol Diesel Price Hike May 27 : பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. மே 15ஆம் தேதியில் இருந்து சுமார் 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து, 108.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து, 99.98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்ந்தால் பெட்ரோல் 110 ரூபாயையும், டீசல் 100 ரூபாயையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவில் ஜொலிக்கும் ‘ராட்கிளிஃப் எல்லைக் கோடு’... விமானி பகிர்ந்த வீடியோ வைரல்..!
Wadgaon, Maharashtra:India - Pakistan Border Line Illuminated News: அனைவரின் வாழ்க்கையில் சமூக வலைத்தளம் என்பது ஒரு முக்கியமான அங்கமாகவே மாறிவிட்டது எனலாம். ஏனென்றால் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாமல் இருப்பவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல முடியாது. அவ்வாறு சமூக வலைதளங்களில் வரும் சில வீடியோக்கள் இணையதள வாசிகளை மெய்சிலிர்க்க வைக்கிறதே என்று சொல்லலாம். அப்படியொரு வீடியோ தான் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ குறித்த விரிவான தகவல்களை முழு விவரங்களை இங்கே காணலாம்.
மேலும் படிக்க: மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்
விமானி பகிர்ந்த வீடியோ:
இண்டிகோ ஏர்லைன் விமானத்தில் விமானியாக பணிபுரிந்து வரும் கேப்டன் பிரதீப் கிருஷ்ணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவையும் - பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோடுகளான ‘ராட்கிளிப் கோடுகள்’ மஞ்சள் நிற ஒளியில் மிளிரும் காட்சியை தனது செல்போனில் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்த எல்லை நெடுகிலும் இரு நாடுகளின் புறக்காவல் நிலையங்களும், பாதுகாப்பு முகாம்களும் அமைந்துள்ளன. இரு நாடுகளின் எல்லைக் கோடுகளை இரவு நேரத்தில் பார்க்கும்பொழுது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டத்தைப் போல் உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
வீடியோ வைரல்:
மேலும் விமான பயணிகளிடையே இது குறித்து பேசிய அந்த விமானி, பெண்களே, ஜெண்டில்மேன் நீங்கள் விமானத்தின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் உலகின் மிகவும் உணர்ச்சிபூர்வமான பலத்த பாதுகாப்புடன் இருக்கும் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடுகளைக் காணலாம். இந்த எல்லைக் கோடுகளில் ஒளிரவிடப்படும் மின்விளக்குகள் மிகவும் பிரகாசமாக ஒளிர்வதால் இரவு நேரத்தில் விண்வெளியில் இருந்து இந்த எல்லைக் கோடுகளை தெளிவாகக் காணலாம் எனவும் கூறினார்.
மேலும் படிக்க: தொலைதூர விமான சுவையை ரத்து செய்த இண்டிகோ!
மேலும் இருளில் அந்த ஒளி மிகவும் பிரகாசமாக தெரிவதால் அதனை விண்வெளியில் இருந்தே கூட பார்க்க முடியும் என்று சொல்லப்படுவதாக பதிவிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பதிவிட்டதிலிருந்து 1.8 மில்லியன் வரையிலான பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
రాత్రిపూట ఇండిగో విమానం నుంచి ఫ్లడ్లైట్ల వెలుగుల్లో మెరిసిపోతున్న భారత్-పాక్ రాడ్క్లిఫ్ లైన్ను పైలట్ వీడియో తీశారు. భారీ భద్రత మధ్య వెలుగుల హారంలా కనిపించిన సరిహద్దు దృశ్యాలు నెట్టింట వైరల్ అయ్యాయి.pic.twitter.com/EY7RJSa7Tk
— TG Govt Updates (@TGGovtUpdates) May 26, 2026
ராட்கிளிஃப் கோடுகள்:
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பிரிட்டிஷ் ஆட்சி முடிவுற்றவுடன், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலையடைந்ததைத் தொடர்ந்து, இந்துக்கள் வாழும் பகுதியான இந்தியாவையுன், முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியான பாகிஸ்தானையும் இரண்டு நாடுகளாக பிரிக்கப் போவதாக அப்போதைய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு அறிவித்தார். இந்த எல்லையை துல்லியமாக பிரிப்பதற்காக ஜூன் 1947-ல் பஞ்சாப் மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளுக்கு இரண்டு எல்லை கமிஷன்கள் அமைக்கப்பட்டன.
இந்த எல்லைக்கோடுகளை வரைவதற்காக லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞரான சர் சிரில் ராட்க்ளிஃப் வரவழைக்கப்பட்டார். இறுதியாக நாடுகள் சுதந்திரம் பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு 1947 ஆகஸ்ட் 17 அன்று இந்த எல்லைக் கோடு அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த எல்லைக் கோடுகள் வரையறுக்கப்பட்ட போது அங்கிருந்த மக்கள் வெளியேறிய வேளையில் சுமார் 20 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட ராட்கிளிஃப் கோடு:
- இந்தியா, மேற்கு பாகிஸ்தான் - தற்போதைய பாகிஸ்தான்
- கிழக்கு பாகிஸ்தான் - தற்போதைய பங்களாதேஷ்
- தற்போதைய இந்தியா பாகிஸ்தான் எல்லையின் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் - ரன் ஆஃப் கட்ச் பகுதிகள்
மேலும் படிக்க: ரூ.7,000 டிக்கெட் ரூ.40 ஆயிரமா? மனசாட்சி இல்லையா? Indigo சர்ச்சை என்ன?
இசக்கி சுப்பையா ராஜினாமா! அடுத்து தவெக பக்கம் வரப்போவது யார்?
Ambasamudram, Tamil Nadu:கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார் அம்பாசமுத்திரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா.
12-ம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குதான்... வெலிங்டன் காலேஜ்ல வேலைவாய்ப்பு அறிவிப்பு.!
Wellington, Tamil Nadu:Employment at Nilgiris Traininig College News: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பகுதியில் டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் காலேஜ் எனப்படும் முப்படை உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த மையத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விபரம்:
லோயர் டிவிஷன் கிளர்க்: 09
சிவிலியன் வாகன ஓட்டுநர்: 13
மல்டி டாஸ்கிங் ஸ்டாப்: 38
சுருக்கெழுத்தர்: 05
சூப்பர்வைசர்: 01
நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர்: 04
ஹார்ட்வேர் அட்மினிஸ்ட்ரேட்டர்: 04
லைன்மேன்: 02
போட் பில்டர்: 01
தொழில்நுட்ப உதவியாளர்: 01
அச்சு இயந்திர இயக்குபவர்: 01
கல்வித்தகுதி:
ஒவ்வொரு பணியிடங்களுக்கு தகுந்தவாறு கல்வித்தகுதி மாறுபடும். லோயர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 12-ம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் திறன் அவசியம். ஓட்டுநர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹெவி வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் அவசியம், டிரைவிங் துறையில் இரண்டு ஆண்டுகள் அவசியம்.
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 10-ம் வகுப்பும், சூப்பரவைசர் பணிக்கு என்ஜினியரிங் பிரிவு அல்லது டெக்னாலஜி அல்லது கம்யூட்டர் அப்ளிகேஷனில் டிகிர் முடித்து இருப்பது அவசியம் ஆகும். மேலும் சம்பந்தப்பட்ட துறைகளில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம் ஆகும்.
மேலும் படிக்க: கோவை மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு... முழு விவரங்கள் உள்ளே!
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்சவரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் விவரம்:
சிவிலியன் மோட்டார் டிரைவர்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
லோயர் டிவிஷன் கிளார்க்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
மல்டி டாஸ்கிங் ஸ்டாப்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
ஸ்டெனோகிராபர் கிரேடு-2: ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
ஹார்டுவேர் அட்மினிஸ்ட்ரேட்டர்: ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை
நெட்வொர்க்கிங் சூப்பர்வைசர்: ரூ.29,200 முதல் ரூ.92,300
நெட்வொர்க் அட்மினிஸ்ரேட்டர்: ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை
லைன்மேன்: ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
தொழில்நுட்ப உதவியாளர்: ரூ.18,00 முதல் ரூ.56,900
படகு கட்டுநர்: ரூ.19,900 முதல் ரூ.63,200
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் தேர்வுக் கட்டணமக ரூ.100 செலுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு ஜாக்பார்ட்! பயிர்க்கடன் தள்ளுபடி - முதல் விஜய் அதிரடி அறிவிப்பு!
Chennai, Tamil Nadu:தமிழகத்தில் உள்ள குறு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, கூட்டுறவு வங்கிகளின் மூலம் 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து குறு விவசாயிகளுக்கும் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று வரலாற்று சிறப்புமிக்க அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக விவசாய பெருங்குடி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில பருவங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை, எதிர்பாராத பருவமழை பொய்ப்பு மற்றும் சாகுபடி செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாய பெருமக்கள், குறிப்பாக குறைந்த நிலப்பரப்பை கொண்டுள்ள குறு விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கடன் சுமையால் தவித்து வரும் இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அடுத்தடுத்த போக சாகுபடிகளை அவர்கள் எவ்வித தொய்வும் இன்றி தொடரவும் இந்த கடன் தள்ளுபடி அவசியமாகிறது என்று முதலமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் குறு விவசாயிகள் (2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள்) பெற்ற 50,000 ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள், அதற்கான வட்டி மற்றும் அபராத வட்டிகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இதற்கான அரசாணை உடனடியாக பிறப்பிக்கப்பட்டு, தகுதியுள்ள விவசாயிகளின் பட்டியல் அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு, கடன் இல்லா சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்படும்.
கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள், வரும் காரீப் மற்றும் ரபி பருவ சாகுபடிகளுக்கு எவ்வித தடையுமின்றி கூட்டுறவு வங்கிகளில் புதிய பயிர்க்கடன்களைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனே முதன்மை
இந்த திட்டம் குறித்து தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் வெளியான அறிவிப்பில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வி. காந்திராஜ், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி முழுமையாக ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். கூடுதல் செலவினம் ஏற்படும். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய சங்கங்களின் வரவேற்பு
அரசின் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய சங்கங்கள் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.
காதலிக்க மறுத்த பெண்... கோவையில் பட்டப்பகலில் அரங்கேறிய பெட்ரோல் குண்டு சம்பவம்.!
Coimbatore, Tamil Nadu:Kovai Petrol Bomb Thrown Incident News: கோவை, தொண்டாமுத்தூர் அருகே காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது பட்டப்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து பெட்ரோல் குண்டு வீசி செல்லும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
காதலிக்க மறுப்பு:
தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகள் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அவர் படித்து வந்தபோது சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஒரு கட்டத்தில் நன்றாக பழகி வந்த நிலையில், கார்த்திக் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த நபர் குறித்த சில குற்றச் செயல்கள் குறித்த தகவல்கள் பெண்ணின் காதிற்கு வரவே அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் படிக்க: கோவை சிறுமி கொலை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
மேலும், கார்த்திக் ஒரு மிகப்பெரிய குற்றவாளி என்பதும், அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு போன் செய்த அந்த நபர் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து போன் காலை துண்டித்துள்ளார்.
போன் கால் துண்டிப்பு:
அந்த பெண்ணிடம் நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார்த்திக், அவரை மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். கார்த்திக்கின் உண்மையான குணம் என்னவென்று தெரிந்த அந்த பெண் அவருடனான முழுமையாக நட்பை துண்டித்துள்ளார். மேலும் அவர் போனில் தொடர்பு கொண்டபோது சரிவர பதிலளிக்காமல் அவரது தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் கடும் கோபத்திற்குள்ளான அந்த நபர் நேரிடையாகவும், செல்போன் மூலமாகவும் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு சரிவர பதிலளிக்காமல் இருந்த அந்த பெண்ணை எப்படியாவது பழிவாங்கியாகி வேண்டும் என்று யோசித்த அந்த நபர் தனது நண்பர்களை வைத்து திட்டம் தீட்டியுள்ளார்.
மேலும் படிக்க: சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அசத்திய சிறார்கள்..!
பெட்ரோல் குண்டு வீச்சு:
இதன் உச்சகட்டமாக நேற்று மாலை (மே 24) கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேருடன் 2 இருசக்கர வாகனங்களில் வந்து அந்த பெண்ணின் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்த அவரது தந்தை சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கொண்டு வந்த பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டிலில் தீ பற்றவைத்து அவரது வீட்டின் மீது வீசியுள்ளார்.இதில் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் போர்டிகோ பகுதியில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
போலீஸார் தீவிர விசாரணை:
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது பெண்ணின் தந்தை சுந்தரமூர்த்தி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அருகிலிருந்த சிசிடிவிக் கேமராக்களை ஆய்வு செய்ததில் அவர்கள் எரிபொருள் வாங்கிச் செல்வதும், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதும் தெளிவாக பதிவாகி இருந்தது.
பட்டப்பகலில் அரங்கேறிய இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பத்தில் ஈடுபட்ட ஏற்கனவே குற்றம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நபர் உட்பட 3 நபர்களை சிசிடிவி ஆதாரங்களை வைத்து தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேலும் படிக்க: ச்சீ..கோவை பஸ்ஸில் இப்படியா? இளசுகள் செய்த ரவுசு!
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்!
Chennai, Tamil Nadu:தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, அதிமுகவை சேர்ந்த 3 முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை திடாரென ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகிய மூவரும் இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை முறைப்படி அளித்துள்ளனர். ஒரே நேரத்தில் 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவியை துறந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
ராஜினாமாவின் பின்னணி
சென்னை தலைமை செயலகத்திற்கு ஒன்றாக வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை அவரது அறையில் நேரில் சந்தித்தனர். சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை தனித்தனியாக வழங்கிய அவர்கள், தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவர்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் உடனடியாக பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக உடைக்கிறதா?
அதிமுகவில் கடந்த சில வாரங்களாகவே நிலவி வரும் உட்கட்சி பூசல்கள், சீட் ஒதுக்கீட்டு விவகாரங்கள் மற்றும் மாவட்ட அளவிலான அரசியல் முரண்பாடுகளே இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்று அரசியல் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தங்கள் தொகுதிகளில் உள்ள உள்ளூர் அரசியல் மேலிடத்தின் அழுத்தம் மற்றும் கட்சி தலைமையின் சில அண்மைக்கால முடிவுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே இவர்கள் இந்த தீவிரமான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக தலைமைக்கு விழுந்த பலத்த அடி
தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் தலைமை தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்த இந்த 3 முக்கிய மக்கள் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் கட்சியை விட்டும், பதவியை விட்டும் வெளியேறியிருப்பது அதிமுக தலைமைக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த 3 தொகுதிகளும் இப்போது காலியானதாக அறிவிக்கப்படும் பட்சத்தில், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும்.
அடுத்த நகர்வு என்ன?
பதவியை ராஜினாமா செய்துள்ள மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இவர்கள் விரைவில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்றும், அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாலேயே இந்த அதிரடி ராஜினாமா அரங்கேறியுள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர். ஒரே நாளில் 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள இந்த சம்பவம், தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலும், நடப்பு அரசியல் களத்திலும் ஒரு புதிய புயலை கிளப்பியுள்ளது.
பிளே ஆப் சென்ற RR... PBKS, KKR கனவில் மண்ணள்ளி போட்ட MI
Mumbai, Maharashtra:MI vs RR, IPL 2026 : ஐபிஎல் லீக் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4வது மற்றும் கடைசி அணியாக தகுதிபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றதன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.
ஏற்கெனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. நான்காவது இடத்திற்கு பஞ்சாப், ராஜஸ்தான், கேகேஆர் அணிகளுக்கு போட்டி இருந்தது.
A
— IndianPremierLeague (@IPL) May 24, 2026
#TATAIPL | #KhelBindaas | #MIvRR pic.twitter.com/egtoP5bh7e
இன்று மாலை மும்பையில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் மும்பை வென்றால் மட்டுமே பஞ்சாப் மற்றும் கேகேஆர் அணிக்கு பிளே ஆப் போவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, பஞ்சாப் மற்றும் கேகேஆர் அணியையும் தன்னோடு வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய போட்டியை வென்று 7வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது. 2008ஆம் ஆண்டில் ஷேன் வார்னே தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன்பின் 2022ஆம் ஆண்டில்தான் இறுதிப்போட்டிக்கே தகுதிபெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய போட்டியில் 205 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் துருவ் ஜூரேல் 38, ஜோப்ரா ஆர்ச்சர் 32, தசுன் ஷனகா 29 ரன்களை குவித்தனர். மும்பை அணியில் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 60, ஹர்திக் பாண்டியா 34, வில் ஜாக்ஸ் 33 ரன்களை எடுத்தனர். இருப்பினும் ஆர்ச்சர் 3, பிரிஜேஷ், நான்ரே பர்கர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பிளே ஆப் போட்டிகள்
- மே 26 - குவாலிபயர் 1 : ஆர்சிபி vs குஜராத்
- மே 27 - எலிமினேட்டர் : எஸ்ஆர்ஹெச் vs ராஜஸ்தான்
- மே 29 - குவாலிபயர் 2 : குவாலிபயர் 1 தோல்வியடைந்தவர் vs எலிமினேட்டர் வெற்றியாளர்
- மே 31 - இறுதிப்போட்டி : குவாலிபயர் 1 வெற்றியாளர் vs குவாலிபயர் 2 வெற்றியாளர்
RSS பிள்ளையை தத்தெடுப்பதா? விசிகவில் இருந்து விலகிய பனையூர் பாபு - அடுத்தது யார்?
Chennai, Tamil Nadu:Panaiyur Babu Left VCK : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பனையூர் பாபு அக்கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிள்ளை என விஜய்யை விமர்சித்துவிட்டு, அவரையே தத்தெடுப்பதா என திருமாவளவனை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகியிருப்பதாகவும் அறிவித்துள்ளார். அவர் விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்தார்.
பனையூர் பாபு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகலை நீண்ட அறிக்கையை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில், சுமார் 6 பக்கத்திற்கு அவர் நீண்ட விளக்கத்தையும், திருமாவளவன் மீதான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, "நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்; நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறி மீறி பாய்தல் தீரம்" என திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெகவின் அமைச்சரவையில் விசிக இடம்பிடித்த நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.
அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பங்கு அளப்பரியது என்றும் ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அவர் என்றும் திருமாவளவனை புகழ்ந்து அந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அதில் தொடர்ச்சியாக, "சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்றுதான் நான் முழுமையாக நம்பினேன். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்தேன்" என திருமாவளவன் மீது வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.
தொடர்ந்து அறிக்கையின் பிற்பகுதியில், ஆனால், அந்த அடிப்படை அரசியல் அறம் தடம் மாறும் போது தன்னால் மௌனமாகக் கடந்து செல்ல முடியவில்லை என்றும் மிகுந்த மனவேதனையோடு ஒரு யதார்த்தத்தை இங்குப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தான் தள்ளப்பட்டுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில், "சமீப காலங்களாகத் தலைமையின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குப் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன. ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவது அவரது இயல்பல்ல. நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, மீண்டும் இரவில் சமூக வலைத்தள நேரலையில் முற்றிலும் முரணான ஒரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
திமுக - அதிமுக இணைவது குறித்த பேச்சுவார்த்தை குறித்தும், திருமாவளவனை முதலமைச்சராக முன்னிறுத்தி பேசப்பட்ட திரைமறைவு பேச்சுவார்த்தை குறித்தும் திருமாவளவன் பல்வேறு இடங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னுக்கு பின் முரணமாக கருத்து தெரிவிப்பதாக பலரும் குற்றஞ்சாட்டிய நிலையில், அதை திருமாவளவனுக்கு நெருக்கமாக இருந்த பனையூர் பாபுவே குறிப்பிட்டுள்ளது கவனிக்க வேண்டியது.
"நேற்று வரை ஒரு நடிகரை (விஜய்) 'ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பெற்றெடுத்த பிள்ளை’ என்று கடுமையாக விமர்சித்த அவர், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது" என குற்றஞ்சாட்டி உள்ளார்.
'விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்' என்று விசிகவை கடுமையாக விமர்சித்த திருமாவளவன், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் அந்த அறிக்கையில், "ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்; அது நிலையற்றது. ஆனால், பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்த கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள். அரசியல் தளத்தில், 'மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது' என்று அம்பேத்கர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஆனால் இன்று அந்த அபாயகரமான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன். கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது.
எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கட்சியிலிருந்து விலகினாலும் திருமாவளவனிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல் உறுதியாக நின்று பயணிப்பேன். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
