icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

மக்கள் பிரச்சினையை விட "ஜனநாயகன்" படம் முக்கியமா? தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்

Chennai, Tamil Nadu:

தமிழக அரசின் கவனம் மக்கள் நலப் பணிகளில் இருக்க வேண்டிய நேரத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படம் தொடர்பான பணிகளில் அமைச்சர்களும் அரசு நிர்வாகமும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதே நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் இறந்த நிலையில் கோழிக்குஞ்சு இருந்ததாக வெளியான தகவலை சுட்டிக்காட்டி, அரசின் முன்னுரிமைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க - 'ஜனநாயகன்' பார்க்க ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை.. திருப்பூர் நிறுவனத்தின் அறிவிப்பு வைரல்!

அமைச்சர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகளா? -டிடிவி தினகரன் கேள்வி

இந்த விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் டிடிவி தினகரன், மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும் அமைச்சர்களும், நாளை வெளியாகவுள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தின் வெளியீட்டு ஏற்பாடுகளில் அதிக ஈடுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிர்வாகம், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதிலாக திரைப்பட வெளியீட்டை முன்னிறுத்துவது ஜனநாயக ஆட்சிக்கு ஏற்றதல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார். அரசு நிர்வாகம் ரசிகர் மன்றத்தைப் போல செயல்படுவது "வெட்கக்கேடானது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரக் கட்டுப்பாடு குறித்து முக்கிய கோரிக்கை

அங்கன்வாடி மையத்தில் நடந்த சம்பவம் தனிப்பட்ட தவறு மட்டுமல்லாமல், உணவுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் தரக் கட்டுப்பாடு சரியாக பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - டெல்லி மாணவர்கள் போராட்டம்: CM விஜய் மௌனம் காப்பது ஏன்? - தவெக பதில் இதோ

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்  தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவில், 

மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும். 

எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

 

டி.டி.வி. தினகரன் பதிவின் முக்கிய அம்சங்கள் (Highlights)

அங்கன்வாடி முட்டையில் கோழிக்குஞ்சு இருந்ததாக வெளியான தகவல் பரபரப்பு.
அரசு மக்கள் நலனை விட திரைப்படத்தில் கவனம் செலுத்துவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.
"ஜனநாயகன்" திரைப்பட ஏற்பாடுகளில் அமைச்சர்கள் ஈடுபடுவது வெட்கக்கேடு என விமர்சனம்.
முட்டை வழங்கிய ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிக்கை.
மாநிலம் முழுவதும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்களுக்கு தர ஆய்வு நடத்த வலியுறுத்தல்.

மேலும் படிக்க - விஜய் மாதிரி சைகை காட்ட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி உண்டா? சபாநாயகர் விளக்கம்

0
0
Report

வீடியோ பார்க்க நேரமில்லை– மாணவர் போராட்ட வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சிஜேஐ சூரியகாந்த்

New Delhi, Delhi:

டெல்லியில் மாணவர் அமைப்புகள் மற்றும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை மற்றும் போலீஸ் தடியடி விவகாரம், தற்போது தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

போராட்டத்தின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (CJI) சூரியகாந்த் அமர்வு, அதனைச் விசாரிக்க மறுத்துத் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் படிக்க - டெல்லி CJP போராட்டம் எதிரொலி: பாதுகாப்பு காரணமாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியில், போலீஸார் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தியதாகவும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மாணவர்கள் படுகாயமடைந்ததற்கான வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் திரையிட அனுமதி கேட்டார். ஆனால் அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் (Surya Kant), 

"எங்களுக்கு இந்த வீடியோக்களைப் பார்ப்பதில் எந்த ஆர்வமும் இல்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க எங்களுக்கு நேரமில்லை. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்; உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள்," எனக் கூறி மனுவை நிராகரித்தார். 

 

வழக்கறிஞர் மீண்டும் வாதிட முயன்றபோது, "மிக்க நன்றி" எனக் கூறி விசாரணையை முடித்து வைத்தார். முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து, "நீதிமன்றத்தை அரசியல் தகராறுகளுக்குள் இழுக்க வேண்டாம்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி போராட்டம் நாடாளுமன்றத்தில் 'கருப்பு உடை' எதிர்ப்பு

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போராட்டக் களத்தில் இறங்கினார். பிரதமரின் இல்லத்தை நோக்கிச் செல்ல முயன்ற ராகுல் காந்தி மற்றும் போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் பவந்தமாகத் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் ராகுல் காந்தியின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்ததும், அவர் வீதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

மேலும் படிக்க - ஜந்தர் மந்தரில் கூடும் மாணவர்கள் படை: மீண்டும் போராட்டம் தீவிரம்.. போலீஸ், RAF குவிப்பு

'காக்ரோச் ஜனதா கட்சி' பின்னணி என்ன?

கடந்த மே 15 அன்று வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, வேலை இல்லாத இளைஞர்களைக் 'காக்ரோச்' (கரப்பான்பூச்சி) போன்றவர்கள் என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பின் அடையாளமாக உருவானதே இந்த 'காக்ரோச் ஜனதா கட்சி'.

சமூக வலைத்தளங்களில் உருவான இந்த நையாண்டி (satirical) இயக்கம், குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களைப் பெற்று மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

இது குறித்துப் பேசிய CJP செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா..

  • மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர் (FIR) வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
  • 31 நாட்களாக நாங்கள் அமைதியான முறையில் தான் போராட்டம் நடத்தி வருகிறோம். வன்முறைக்குக் காவல்துறையின் அத்துமீறலே காரணம்.
  • கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது.

ஊடகங்கள் மீது தாக்குதல்: வெடிக்கும் சர்ச்சைகள்

ஒருபுறம் காவல்துறையின் அத்துமீறல் விமர்சிக்கப்பட்டாலும், மறுபுறம் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

'டைம்ஸ் நவ்' செய்தியாளர் தேவ் கோடக் மற்றும் 'ஏபிபி' செய்தியாளர் வருண் பசின் உள்ளிட்ட நிலத்தடி நிருபர்கள் (Ground Reporters) போராட்டக்காரர்களால் அச்சுறுத்தப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாகினர்.

சில ஊடகங்கள் மாணவர்களை 'தேசவிரோதிகள்' என்றும் 'வெளிநாட்டுச் சதி' என்றும் சித்தரிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேவேளையில், "வன்முறை எந்த வடிவத்தில் வந்தாலும் அது ஜனநாயகப் போராட்டத்தைச் சிதைத்துவிடும். களத்தில் நின்று உண்மை நிலையை உழைத்துப் பதிவு செய்யும் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்துவது முற்றிலும் தவறானது" என்று நடுநிலையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அடுத்தது என்ன?

மத்திய அரசுத் தரப்பில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர், "தேர்வு முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சித் தலைவர்கள் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக மாணவர்களைத் தூண்டிவிடுகிறார்கள்" என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் நிராகரிப்பு, எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற முடக்கம், வீதியில் இறங்கியுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் என டெல்லி நிலவரம் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் படிக்க - டெல்லி சிஜேபி போராட்டம்: பெண் போராட்டக்காரரை அறைந்த டிசிபி சந்தீப் லம்பா -என்ன நடந்தது?

0
0
Report

களத்தில் குதித்த ராகுல் காந்தி... பிரதமர் இல்லம் முற்றுகை - மத்திய அரசுக்கு பெரிய நெருக்கடி

New Delhi, Delhi:

Delhi Rahul Gandhi Protest : டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள், டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுட்டு வருகின்றனர்.

தர்மேந்திர பிரதான் பதவி விலகல், பிரதமர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் முழுக்கமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | காயமடைந்த மாணவர்களை சந்தித்த ராகுல்... ஏன் மௌனம்? - பிரதமர் மோடிக்கு நறுக் கேள்வி

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இதையொட்டி, ராகுல் காந்தி பேரணியை கலைக்க போலீசார் முயற்சித்து, காங்கிரஸ் கட்சியினரை தடுத்த நிறுத்தி உள்ளனர். அவர்கள் பிரதமர் இல்லத்திற்கு அருகே சாலையிலேயே அமர்ந்து கோஷமிட்டு வருகின்றனர். கையில் விலங்கிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் ராகுல் காந்தியுடன் இருப்பவர்களை ஒவ்வொருவராக குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்துள்ளனர். குண்டர்களை கையாள்வதை போல் காங்கிரஸ்காரர்களை போலீசார் கையாள்கின்றனர் என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

'PM, HM ராஜினாமா செய்ய வேண்டும்...'

இதுகுறித்து ராகுல் காந்தி அவரது X பக்கத்தில், "நேற்று இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் கோரி, நாங்கள் அவரது இல்லத்திற்கு பேரணியாக சென்றோம். 

அரசாங்கம் எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கவும் விரும்பவில்லை. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்ததற்காக, பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க | டெல்லி போராட்டம் தொடரும்? சிஜேபி எடுத்திருக்கும் முக்கிய முடிவு! சமீபத்திய அப்டேட்..

மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை... ராகுல் மறுப்பு

பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் ராகுல் காந்தியிடம், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசின் சமரசத்தை ராகுல் காந்தி ஏற்கவில்லை என தெரிகிறது.

மேலும் படிக்க | டெல்லி போராட்டம்: போராட்டக்காரர்களுடனான அமைச்சர் நட்டாவின் சந்திப்பில் நடந்தது என்ன?

0
0
Report
Advertisement

Zee TV-க்கு நன்றி தெரிவித்த பிபா தலைவர்... இந்தியாவில் வளர்ந்து வரும் கால்பந்து

Chennai, Tamil Nadu:

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, ZEE TV பணியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். 

இந்திய நேரப்படி ஜூலை 20ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்பெயின் - அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டிக்கு முந்தைய நாளில், இந்தியாவில் கால்பந்தை மேம்படுத்துவதற்காக நீங்கள் செய்துள்ள அனைத்து விஷயங்களுக்காகவும், Zee TV பணியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Zee - FIFA பார்ட்னர்ஷிப்

மேலும் அந்த கடிதத்தில், "2027 பிபா மகளிர் உலகக் கோப்பை, பிபா இளைஞர் உலகக் கோப்பைகள், ஃபுட்சல் போட்டிகள் மற்றும் பிபா கண்டங்களுக்கு இடையேயான கோப்பை உட்பட 39 பிபா தொடர்களை உள்ளடக்கிய நமது பார்ட்னர்ஷிப் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்தியாவில் கால்பந்தை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வாக மட்டும் பார்க்காமல் ஒரு தொடர்ச்சியான கதையாடலை முன்வைக்கப்படுவதை உறுதி செய்கிறது. கால்பந்து விளையாட்டை பொருத்தவரை இந்தியா ஒரு தீவிரமான நாடு என்பதும், இந்தியச் சந்தையில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது நமக்கு முன்னரே தெரியும்.

இந்திய பயணத்தை நினைவுக்கூர்ந்த FIFA தலைவர்

2017ஆம் ஆண்டில் நடைபெற்ற 13 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கலந்துகொண்ட FIFA 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்காகவும், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான FIFA மகளிர் உலகக் கோப்பைக்காகவும் நான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது இதை என் கண்ணாலேயே கண்டேன்.

மேலும் 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) கூட்டத்திற்காகவும் நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தேன். இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக கோல்களை அடித்த முன்னாள் கேப்டனுமான சுனில் சேத்ரியை சந்திக்கும் பெருமையைப் பெற்றேன்.

மற்ற நாட்டு அணிகளில் இந்தியர்கள் 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கத்தார், காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட பிற தேசிய அணிக்களுக்காக இந்திய வம்சாவளி வீரர்கள் விளையாடுவதன் மூலம் உங்கள் அழகான நாடு 2026 பிபா உலகக் கோப்பை தொடரில் பெரிதும் பங்கேற்றுள்ளது.

போட்டியை நேரில் பார்த்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள்

பிபா உலகக் கோப்பை தொடரின் போட்டிகள் நடந்த 16 நகரங்களில், ஆட்டங்களை காண வந்த 65 லட்சம் ரசிகர்களில் ஆயிரக்கணக்கான இந்திய ஆதரவாளர்களும் இருந்தனர். அவர்களில் பலர் அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல் அல்லது இங்கிலாந்து போன்ற பிற அணிகளை ஆதரித்தனர்" என இந்திய கால்பந்து ரசிகர்கள் குறித்து சிலாகித்து பிபா தலைவர் அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Zee TV-க்கு நன்றி

மேலும், அவர் "Zee TV பிபா உலகக் கோப்பை தொடரை தனிப்பட்ட தொலைக்காட்சி வியூஸ்களுக்கு அப்பாற்பட்டு எடுத்துச் செல்ல முயற்சி செய்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

திரையரங்குகள், பப்கள், உணவகங்கள், விமான நிலையங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட திரையிடல்களை அனுமதிப்பதன் மூலம், நாடு முழுவதும் அனைவரும் போட்டியை ஒன்றிணைந்து பார்க்க நீங்கள் உதவியுள்ளீர்கள். இது ஒரு அற்புதமான முயற்சி மற்றும் கால்பந்து விளையாட்டுக்கு அளவற்ற நன்மையைச் செய்கிறது.

FIFA உலகக் கோப்பையில் இந்தியா...

இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த நீங்கள் செய்த அனைத்திற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். மேலும், FIFA உலகக் கோப்பைக்கு இந்தியாவை வரவேற்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

0
0
Report

ஒரு டிக்கெட்டுக்கு... சொத்தையே அடகு வைக்கணும் போலையே - காஸ்ட்லி பிபா உலகக் கோப்பை பைனல்

East Rutherford, New Jersey:

FIFA World Cup 2026 Final Highest Ticket Price : கால்பந்து உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டி இந்திய நேரப்படி திங்கள் (ஜூலை 20) நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. 

விளையாட்டுக்கு பெயர் பெற்ற அமெரிக்காவில் கால்பந்து தற்போது கூடுதல் வரவேற்பை பெற்றிருக்கிறது. மிகவும் காஸ்ட்லியான விளையாட்டு நிகழ்வாகவும் உருவெடுத்துள்ளது.

மேலும் படிக்க | அர்ஜென்டினாவுக்கு தடை? சர்ச்சை பதாகையை ஏந்திய வீரர்கள் - பிபா என்ன முடிவு எடுக்கும்?

பைனலின் டிக்கெட் விலை

நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை 6,943 அமெரிக்க டாலராக (ரூ.6.68 லட்சம்) உள்ளது என Forbes செய்தி வெளியிட்டுள்ளது. 

 அர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது அரையிறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலை 7200 அமெரிக்க டாலராக (ரூ.6.93 லட்சம்)  இருந்தது.

அதிகபட்ச டிக்கெட் விலை எவ்வளவு?

டிக்கெட் விற்கும் இணையதளமான TickPick தளத்தின்படி, இறுதிப்போட்டி டிக்கெட்டின் சராசரி விலை 11,327 அமெரிக்க டாலராக (ரூ.10.90 லட்சம்)உள்ளது. இதன்மூலம், அமெரிக்காவில் அதிக விலையில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வு இதுவாகும்.

இறுதிப்போட்டி நடைபெறும் நியூயார்க் நியூஜெர்ஸி மைதானத்தில் உள்ள 115A Section பகுதிக்கான டிக்கெட் விலை 28,479 அமெரிக்க டாலர் (ரூ.27.42 கோடி) ஆகும். இதுதான் விலை உயர்ந்த டிக்கெட் ஆகும். இதை கேட்டால் லைட்டாக தலையே சுத்துகிறது அல்லவா...

மேலும் படிக்க | FIFA WC : சாம்பியன் அணிக்கு ஸ்பெஷல் பரிசும் காத்திருக்கு... ரூ.481 கோடியும் இருக்கு!

கிரிக்கெட் உலகக் கோப்பை பைனல்

2023ஆம் ஆண்டு இந்தியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியாதான் கிரிக்கெட்டுக்கு அதிக வருவாயை தரும் நாடு எனலாம்.

அப்படியிருக்க, இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய அந்த போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக 1000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடும் டிமாண்ட் காரணமாக ரூ.1.87 லட்சம் வரை டிக்கெட் விற்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

10 மடங்கு அதிகம்

கிரிக்கெட்டையும் கால்பந்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சுமார் 10 மடங்குக்கும் அதிகளவில் டிக்கெட் விலை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதை பார்க்கவும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் நியூயார்க் நியூ ஜெர்ஸி மைதானத்தில் சுமார் 82,500 பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம்.

மெஸ்ஸி vs யமால்

பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மூன்று முறை சாம்பியன் அணியான அர்ஜென்டினா, ஒரே ஒரு சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறது. முன்னாள் பார்சிலோனா வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்ஸி தொடர்ச்சியாக 2வது உலகக் கோப்பையை வெல்ல வெறியோடு காத்திருக்கிறார்.

அதே பார்சிலோனா அணியின் இன்னாள் வீரரும், ஸ்பெயின் அணியின் 19 வயது இளம் வீரருமான யமால் தனது முதல் கோப்பையை ருசிக்க உச்சக்கட்ட வெறியோடும் காத்திருக்கிறார். இறுதிப்போட்டி Zee5 தளத்திலும், Unite8 Sports தொலைக்காட்சி சேனலிலும் சந்தா செலுத்தி காணலாம்.

மேலும் படிக்க | மெஸ்ஸியும் விஜய்யின் தாரக மந்திரமும்... வாழ்க்கை ஒரு வட்டம் - வைரல் போட்டோ

0
0
Report
Advertisement

விண்வெளியில் வந்தே மாதரம்... விக்ரம்-1 ராக்கெட் வெற்றி - பாராட்டித் தள்ளிய பிரதமர் மோடி

Shar Project, Andhra Pradesh:

Vikram-1 Rocket Successful Launch, PM Modi Wishes : இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இன்று பகல் 11.30 மணிக்கு ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 35 நிமிடங்களுக்கு பின்னர் விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட விக்ரம்-1 தனியார் ராக்கெட் அதன் புவிவட்டப் பாதையை வெற்றிகரமாக எட்டியது. ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து விஞ்ஞானிகளும், தனியார் நிறுவனத்திரும் கைத்தட்டி, விசில் அடித்து உற்சாகமாக கொண்டாடினர். அவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்து மழை பொழிந்துகொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!

மூன்றாவது நாடு இந்தியா...

ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் விண்ணில் செலுத்திய விக்ரம் 1 ராக்கெட் ஏவப்பட்டதால், தனியார் ராக்கெட்டை திட்டமிட்ட புவிவட்டப் பாதைக்கு அனுப்பி, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

பிரதமர் மோடி செல்போனில் வாழ்த்து

தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி செல்போனில் வாழ்த்து தெரிவித்தார். ஸ்கைரூட் நிறுவன சிஇஓ மற்றும் அந்நிறுவன விஞ்ஞானிகளை செல்போனில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

"இந்திய இளைஞர்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை உங்கள் குழு சரி என நிரூபித்துள்ளது. நமது விண்வெளி கனவுகளை பலரும் சந்தேகத்திற்கு உட்படுத்துகின்றனர். ஆனால், இந்திய இளைஞர்களை நம்பினால் அவர்களால் அற்புதங்களை செய்ய முடியும் என்பதை இந்த குழுவினர் நிரூபித்துக் காட்டி உள்ளனர்" என்றார்.

9 நிமிடங்களாக வாழ்த்தி பேசிய பிரதமர்

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடியின் வாழ்த்து மைக் மூலம் ஒலிபரப்பானது. விக்ரம் திட்ட விஞ்ஞானிகள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றும்;  விக்ரம் திட்டத்தில் இளம் விஞ்ஞானிகள் இணைந்து சாதனை என்றும் அவர் பேசியிருந்தார். தன்னைச் சந்திக்க வரும்படியும் பிரதமர் மோடி அவர்களை கேட்டுக்கொண்டார். மொத்தம் 9 நிமிடங்கள் தொலைப்பேசியில் அவர்களை வாழ்த்திப் பேசினார்.

'இளைஞர்கள் கனவு காண ஊக்குவிக்கும்'

இதுகுறித்து பிரதமர் மோடி அவரது X பக்கத்தில், "ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருடன் பேசினேன். விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

மேலும் படிக்க | ஹைட்ரஜன் ரயில் ஓடத் தொடங்கியது: வெறும் ரூ.5 கட்டணத்தில் அட்டகாசமான ரயில் பயணம், போட்டோ பாருங்க

இந்திய நாட்டின் விண்வெளி பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். நமது தனியார் துறையின் அதிகரித்து வரும் பங்களிப்பு என்பது புதிய எல்லைகளைத் திறந்து புத்தாக்கத்தை வேகப்படுத்துகிறது. இந்த சாதனை எண்ணற்ற இளைஞர்களை பெரிய கனவுகளை காணவும், அச்சமின்றி புதுமைகளை படைக்கவும் ஊக்குவிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கைரூட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓ-வுமான பவன் குமார் சந்தனாவுக்கு வயது 35 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்கைரூட் குழுவின் சராசரி வயது 28 என்றும் பவன் குமார் சந்தனா கூறியதும் கவனிக்கத்தக்கது.

விண்வெளியில் வந்தே மாதரம்...

மேலும், முன்னதாக பிரதமர் மோடி 'வந்தே மாதரம்' என கைப்பட எழுதி அனுப்பிய குறிப்பும் தற்போது விக்ரம்-1 உடன் விண்ணுக்குச் சென்றிருப்பதாக, பவான் குமார் சந்தனா பிரதமரிடமே தெரிவித்தார். 'வந்தே மாதரம் இப்போது விண்வெளியில்...' என சந்தனா பிரதமரிடம் தெரிவித்தார்.

பிரதமர் தான் ஏன் வந்தே மாதரம் குறிப்பை அனுப்ப தேர்வு செய்ததன் காரணத்தை சொன்னார். இரண்டு காரணங்களுக்காக வந்தே மாதரம் குறிப்பை அனுப்ப முடிவு செய்ததாக பிரதமர் மோடி கூறினார். 

"முதல் காரணம், தேசிய கீதத்தின் 150வது ஆண்டு என்பதால், அதை இன்னும் சிறப்பானதாக மாற்ற விரும்பினேன். இரண்டாவதாக, வந்தே மாதரம் எப்போதும் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வந்துள்ளது" என்றார்.  நீங்கள் வந்தே மாதரத்தின் உணர்வோடு வாழ்ந்திருக்கிறீர்கள் என்றும் ஸ்கைரூட் குழுவினரை பாராட்டினார்.

பிரதமர் மோடி அவரது அழைப்பை துண்டிக்கும் முன், ஸ்கைரூட் குழுவினருக்கு, "நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள். உயரமாகப் பறங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்" என்றார். 

மேலும் படிக்க | NDA கூட்டணிக்கு ஆதரவு ஜாஸ்தி... தோற்கடிக்கப்பட்ட மசோதாக்கள் நிறைவேறும் - செக் வைக்கும் அத்வாலே

0
0
Report

சோனம் வாங்சுக் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி - டெல்லியில் பரபரப்பு

New Delhi, Delhi:

Sonam Wangchuk Hospitalized : கடந்த மூன்று வாரக் காலமாக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்தது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லி காவல்துறையினர் அவரை கட்டாயப்படுத்தி, தூக்கிச் சென்று சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். தற்போது சோனம் வாங்சுக் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை விளக்கம்

இதுகுறித்து டெல்லி காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கழும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளின்படியும் அவருக்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சையை வழங்க வாங்சுக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தை கலைக்கிறதா போலீஸ்?

ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியிருந்த போராட்டக்காரர்களை நோக்கி, விரைவில் போராட்டத்தை இடத்தை காலி செய்யுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. வாங்சுக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின், ஜந்தர் மந்தரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதி பெறாமல் சிகிச்சை கூடாது...

சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ அவரது X பதிவில், "நான் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துமனையில் இருக்கிறேன். அங்குதான் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்னிடமும் அவரது குடும்பத்தினரிடமும் கடந்த 20 நாள்களாக அவரது உடல்நிலையைக் கண்காணித்து வரும் மருத்துவர்களிடமும் அனுமதி பெறாமல் அவருக்கு வாய்வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ எதுவும் கொடுக்கக் கூடாது" என பதிவிட்டுள்ளார்.

21வது நாள் உண்ணாவிரதம்

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி ஆரம்பித்த போராட்டத்தை ஒட்டி, அதே கோரிக்கைகளை முன் நிறுத்தி, கடந்த ஜூன் 28ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இன்று 21வது நாளாகும். சோனம் வாங்சுக்கிற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

0
0
Report

108 அம்மன் கோவில்களுக்கு டூர்... தமிழக அரசின் ஆன்மீகச் சுற்றுலா - 5 நாள்கள் முழு பிளான் இதோ!

Chennai, Tamil Nadu:

TTDC Aadi 108 Amman Temples Spiritual Tour : ஆடி மாதம் பிறந்தாச்சு... ஆன்மீக மாதம் பிறந்தாச்சு என்றும் கூட சொல்லலாம். வழக்கமாக அனைத்து மாதங்களிலும் பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள் என்றாலும், ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்குச் செல்வது என்பது நிச்சயம் பலனை கொடுக்கும் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்றது. அம்மன் கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்து, சிறப்பு பூஜை மேற்கொண்டு, விளக்கு சாத்துவது என ஒவ்வொரு பகுதியிலும் அம்மன் வழிபாடு வெவ்வேறு விதங்களில் இருக்கும்.

ஆடி மாதத்திற்கான ஆன்மீக சுற்றுலா பிளான்

அந்த வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு விதமான அம்மன் வழிப்பாட்டை தெரிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் 'தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்' ஒரு சிறப்பான ஆடி மாதத்திற்கான பிரத்யேக ஆன்மீக சுற்றுலா திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

மேலும் படிக்க | சென்னை மக்களே... ஆடியில் அம்மன் கோவில்களுக்கு டூர் போகலாம் - தமிழக அரசின் ஏற்பாடு!

ஐந்து நாட்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் இருக்கும் 108 அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலாவை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

எப்போதெல்லாம் சுற்றுலா?

  • சென்னையில் இருந்து புறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களை 5 நாள்களில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்.
  • நடப்பு ஆடி மாதம் இன்று (ஜூலை 17) முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதிவரை இருக்கும். அந்த வகையில், ஜூலை 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1,8 ஆகிய தேதிகளில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னையில் இருந்து திங்கட்கிழமை காலை புறப்பட்டால் வெள்ளிக்கிழமை இரவு திரும்பிவிடலாம், வியாழக்கிழமை புறப்பட்டால் திங்கள் இரவு சென்னை வந்துவிடலாம்.

ஐந்து நாள் - 108 அம்மன் கோவில் சுற்றுலா பிளான்

முதல் நாள்

சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படலாம். சென்னை, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வழிபாடு செய்யலாம். முதல் நாள் இரவு திருக்கடையூரில் தங்கிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஆடி மாதம் வருது... பக்தர்களே ரெடியா... தஞ்சையின் அம்மன் கோவில்களுக்கு சிறப்பு டூர்

2வது நாள்

மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வழிபாடு செய்யலாம். இரவு தஞ்சாவூரில் தங்கிக்கொள்ளலாம்.

3வது நாள்

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் வழிபாடு செய்யலாம். இரவில் மதுரை சென்று அங்கு தங்கிக்கொள்ளலாம்.

4வது நாள்

மதுரை, திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் வழிபாடு செய்யலாம். இரவில் திருச்சியில் தங்கிக்கொள்ளலாம்.

5வது நாள்

அன்று சென்னைக்கு திரும்பவீர்கள். வரும் வழியில் உள்ள கோவில்களுக்கு செல்லலாம். இரவு 9 மணிக்கு சென்னை சுற்றுலா வளாகத்திற்கு திரும்பிவிடலாம்.

மேலும் படிக்க | மதுரை மக்களே... கம்மி பட்ஜெட்டில் 7 கோவில்களுக்கு டூர் - ஆடி அம்மன் சுற்றுலாவுக்கு ரெடியா?

TTDC வழங்கும் வசதிகள்

  • பேருந்து வசதி
  • சுற்றுலா வழிகாட்டி
  • தங்குமிடம்

முன்பதிவு செய்வது எப்படி?

108 அம்மன் கோவில்களுக்கான இந்த 5 நாள்கள் சுற்றுலாவுக்கு செல்ல நீங்கள் முன்பதிவு செய்வது அவசியமாகும். www.ttdconline.com என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புகொள்வது எப்படி?

மேலும், எந்தெந்த கோவில்களுக்கு அழைத்துச் செல்வார்கள்?, அழைத்துச் செல்லும் பேருந்து ஏசி பேருந்தா? அல்லது ஏசி வசதி இல்லாத பேருந்தா?, 5 நாள்களும் உணவு ஏற்பாடு எப்படி? உள்ளிட்ட உங்களின் பல சந்தேகங்களை கேட்க 044-25333 333 மற்றும் 7550063121 (வாட்ஸ்அப்) உள்ளிட்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்.

கட்டணம் எவ்வளவு?

சென்னை, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, விழுப்பரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 108 அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இந்த ஆடி அம்மன் சுற்றுலாவுக்கு 11,250 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | தமிழக அரசின் ஆடி டூர்... திருச்சியில் எந்தெந்த அம்மன் கோவில்களுக்கு போகலாம்? - எவ்வளவு?

0
0
Report
Advertisement

நட்சத்திர பாகிஸ்தான் வீரருக்கு 3 மாத தடை... கறார் காட்டிய ஐசிசி - என்ன காரணம்?

Chennai, Tamil Nadu:

பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸிற்கு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் ஊக்க மருந்து விதிகளை மீறியதை அடுத்து, அவர் மீது இந்த நடவடிக்கையை ஐசிசி எடுத்துள்ளது.

மூன்று மாதக்கால தடையை நவாஸ் ஏற்றுக்கொண்டார். போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கான திட்டத்தை நிறைவு செய்யும்பட்சத்தில், இந்த தடை ஒரு மாதக் காலமாக குறைக்கப்படும்.

மேலும் படிக்க | ரோஹித் சர்மா ஓய்வு... லார்ட்ஸ் போட்டி தான் கடைசி; கம்பீர் - அகர்கர் எடுத்த திடீர் முடிவு

டி20 உலகக் கோப்பையில் நவாஸ்

கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்றது. இதில் இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை வென்றது. இத்தொடரில் பாகிஸ்தான் அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையிலேயே விளையாடியது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர மறுப்பு தெரிவித்துவிட்டது.

போதைப்பொருள் பயன்பாடு உறுதி

இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி அன்று இலங்கை தலைநகர் கொழும்பில் நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் (Carboxy-THC),  ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளின் கீழ் முகமது நவாஸ் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது.

விளக்கம் அளித்த நவாஸ்

Carboxy-THC என்பது வழக்கமான கஞ்சா போதைப்பொருள் சோதனைகளில் கண்டறியப்படும் முதன்மையான வளர்சிதை மாற்ற ஊக்கியாகும்.  நவாஸ் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் இது டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் பயன்படுத்தப்பட்டது என்றும்; இது விளையாட்டுக்கு தொடர்பற்றது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | ஹர்திக்கிடம் பேசிய தோனி.. மொத்தமாக மாறிய டிரேட் டீல்! CSK வராரா? இல்லையா?

தடைக் காலம் முடிந்துவிட்டது...

ஐசிசி விதித்த தடையை ஏற்றுக்கொண்டதன் மூலம் போதைப்பொருள் துஷ்பிரயோக சிகிச்சையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதை தொடர்ந்து நவாஸின் தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே தனது இரண்டரை மாத தடையை அனுபவித்துவிட்டார். ஐசிசியின் விதிகளுக்கு ஏற்ப சிகிச்சை நிறைவுசெய்யும்பட்சத்தில், அவர் கூடுதலாக தகுதியிழப்புக் காலத்தை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. 

அதேநேரத்தில் ஐசிசியின் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகளின்படி, பிப்ரவரி 7ஆம் தேதி அன்று நெதர்லாந்து - பாகிஸ்தான் ஆட்டத்தில் இருந்து மே 1ஆம் தேதிவரை அவர் விளையாடிய அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

நவாஸ் கடைசியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடியிருந்தார். முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக 6 இன்னிங்ஸில் 54 ரன்களை எடுத்தார். 9 போட்டிகளில் பந்துவீசி 6 விக்கெட்டை எடுத்திருந்தார். பந்துவீச்சில் அதிக ரன்களை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆல்-ரவுண்டர் நவாஸ்

ஆல்-ரவுண்டரான நவாஸ் இதுவரை பேட்டிங்கில் 6 டெஸ்ட் போட்டிகளில் 144 ரன்களையும், 44 ஓடிஐ போட்டிகளில் 538 ரன்களையும், 98 டி20ஐ போட்டிகளில் 911 ரன்களையும் அடித்துள்ளார். அதேநேரத்தில் அவர் பந்துவீச்சில் டெஸ்டில் 16 விக்கெட்டையும், ஓடிஐ 49 விக்கெட்டையும், டி20ஐயில் 101 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளார்.

மேலும் படிக்க | சிஎஸ்கே புது கோச் யார்... நிர்வாகம் போட்ட அதிரடி கண்டிஷன் - என்னென்ன தெரியுமா?

0
0
Report

பழனிக்கே மொட்டைப் போட்ட தவெக... புட்டுபுட்டு வைத்த திமுக - சூடுபிடிக்கும் நிலம் பதிவு விவகாரம்

Chennai, Tamil Nadu:

Palani Land Registration Latest News : சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் இன்று (ஜூலை 17) செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், "பழனி கோவிலின் 1.41 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் இரண்டு பேரில் பதிவு செய்து இருப்பது சர்ச்சையும், இது தொடர்பாக புகார் எழுந்துள்ளது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் தனியாரிடம் இருந்ததை கைபற்றி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் படிக்க | பழனி ரூ.100 கோடி நிலம் பதிவு... ரத்து செய்த நீதிமன்றம் - அமைச்சர் போட்ட விளக்கம்

அமைச்சர் பேச்சில் உள்நோக்கம்

இந்த இடம் கார் பார்க்கிங் பயன்படுத்தும் இடமாக இருந்ததை எப்படி தனி நபர்களின் பெயருக்கு மாறினர் என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அறியாமையின் காரணமாக தவறு நடந்து இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சொல்வதை ஏற்க முடியாது. தனி நபர்களை காப்பாற்றவும், குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதில் உள் நோக்கம் இருக்கிறது.

சார்பதிவாளர் அழுத்தம் காரணமாக...

இந்த விவகாரத்தில் பழனி சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் விடுமுறையில் இருந்த காரணமாக பதிவு செய்ய முடியாமல் இருந்த நேரத்தில் எப்படி கொடைக்கானல் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை வைத்து இந்த நிலம் பதிவு செய்யப்பட்டது. இது திட்டமிட்டு சதி செய்யும் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சார்பதிவாளர் அழுத்தம் காரணமாக பதிவு செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விவகாரம் மூலமாக பதிவு செய்ய வரும் நேரத்தில் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்ற விவரம் இருக்கும் நிலையில் அதை மாவட்ட சார் பதிவாளர் மூலம் ஆய்வு செய்து, சரிபார்த்து இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | பழனி நிலப்பதிவை செய்ய சொன்ன பவர் சென்டர் யார்? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி

எனவே நிலம் பதிவு செய்யப்பட்டதில் ஆளும் தவெக அரசுக்கு ஆதரவாக இருக்கும் பினாமி பெயரில் மாற்றப்பட்டுள்ளது. டூப் முதல்வர் விஜய் ஏன் நிலம் பதிவு செய்த சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் பழனி கோவில் நிலத்தை பாதுகாக்கப்பட்டது. தற்போது, பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கிறது.

அதிகாரிகளை காப்பாற்ற நினைக்கும் அமைச்சர்

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ஏன் இந்த விவகாரத்தில் தன்னிசையாக அதிகாரிகளை காப்பாற்ற நினைக்கிறார். ஆய்வு செய்ய இதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அதேபோல் அமைச்சர் நிர்மல்குமார், திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி குறித்து பொறுப்பு இல்லாமல், தரக்குறைவாக பேசும் நோக்கில் பேசுவது சரியல்ல. தவெக அமைச்சர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்" என எச்சரித்தார்.

வாய் திறக்காத CM விஜய்

தொடர்ந்து பேசிய பரந்தாமன், "பழனி நிலம் பத்திரப்பதிவு விவகாரத்தில் விசாரணை சரியாக இல்லை என்றால் திமுக நீதிமன்றம் செல்லும். ரூ. 15 லட்சம் சொத்தை வாங்க முடியாதவர்கள் எப்படி ரூ.2 கோடி நிலத்தை வாங்க முடியும். இதில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
 
முதல்வர் விஜய் கவனிக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் விஜய் வாய் திறந்து பேசுவதில்லை. திமுக ஆட்சியின் போது மேடை போட்டு சி.எம்.ஆர் சார் என்று பேசிய விஜய் இப்போது ஏன் பேச மறுக்கிறார்?.

புகார் நம்பர் புதிதல்ல...

முதல்வர் விஜய்க்கு தெரிந்துதான் இந்த நிலம் சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்டது. ஆனால்  லஞ்சம் இருந்தால் புகார் கொடுக்கலாம் என்ற எண் கொடுத்திருப்பது புதியது அல்ல. ஆனால் தவெக இதுபோல் பிம்பத்தை உருவாக்குகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை என்ற துறை ஏற்கனவே இருக்கிறது. அதற்கான செல்போன் எண் தனியாக இருக்கிறது. இது புதிதாக கொண்டு வந்த நடைமுறை என மாற்றுகின்றனர். அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் ஒரு நபர் பதிவு செய்தால் உடனடியாக கைது செய்யப்படும் நிலை இருக்கிறது" என்றார்.

மேலும் படிக்க | பழனி முருகன் கோயில் தரிசனத்தில் மாற்றம்.. கட்டண விவரம் இதோ.. அறநிலையத்துறை அதிரடி!

0
0
Report

பெண் கவுன்சிலர்கள் இடையே அடிதடி... திமுக vs காங்கிரஸ் மோதல் - கோவையில் பரபரப்பு

Coimbatore, Tamil Nadu:

Coimbatore Latest News Updates : கோவை மாநகராட்சியில் நடைபெற்ற 40 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, வெளிவந்த பத்திரிகை செய்தி தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்ட போது காங்கிரஸ் கட்சியின் பெண் கவுன்சிலரை மூன்றுக்கும் மேற்பட்ட திமுக பெண் கவுன்சிலர்கள் புடவை மற்றும் கையை பிடித்து இழுத்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதனால், கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் பெண் அடிதடி சண்டை நடந்தது. இதனால் மாநகராட்சி அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.

கோவை மாநகராட்சியில் 40 கோடி ரூபாய் ஊழல் என காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி புகார் தெரிவித்தார். மேலும் ஊழல் குறித்து பேசவிடாமல் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார்.

0
0
Report
Advertisement

ரோஹித் சர்மா ஓய்வு... லார்ட்ஸ் போட்டி தான் கடைசி; கம்பீர் - அகர்கர் எடுத்த திடீர் முடிவு

England:

Rohit Sharma Retirement : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஓடிஐ தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வரும் ஜூலை 19ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது ஓடிஐ போட்டிதான் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்திருக்கிறது.

ஆனால் அதை விட முக்கியமானது என்னவென்றால், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3வது ஓடிஐ போட்டிதான் ஹிட்மேன் ரோஹித் சர்மாவுக்கு கடைசி சர்வதேச போட்டி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்து தொடருக்கு பின் அவரை அணியில் தேர்வு செய்யப்போவதில்லை என இந்திய சீனியர் ஆடவர் அணியின் தேர்வுக்குழு முடிவெடுத்துவிட்டதாகவும், இந்த தகவலை அவர்கள் ரோஹித் சர்மாவுக்கு தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2027 உலகக் கோப்பை தொடருக்கு ரோஹித் சர்மாவை தேர்வு செய்யப்போவதில்லை என தேர்வுக்குழுவினர் முடிவெடுத்திருப்பதாகவும்; இதை ரோஹித்திடமும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

தேர்வுக்குழுவினரும், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் கடந்த வாரமே இதுகுறித்து ரோஹித் சர்மாவிடம் பேசிவிட்டதாகவும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளதாக அவர்கள் ரோஹித்திடம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.

ஆனால், ரோஹித் சர்மாவுக்கு இதில் திருப்தியில்லை எனவும் தெரிகிறது. இதுகுறித்து பிசிசிஐயின் சிலரிடம் ரோஹித் சர்மா பேசியிருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் பிசிசிஐ இதில் ஏற்கெனவே ஒரு முடிவை எடுத்துவிட்டதாகவே தெரிகிறது.

ரோஹித் சர்மா கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதும் டி20ஐ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து கடந்த 2025ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வுபெற்றதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார். டி20ஐ மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றவிட்ட ரோஹித் சர்மாவுக்கு ஓடிஐயில் இருந்து விலக்கிவைக்கப்பட்டால், அதுதான் அவரது கடைசி போட்டியாக இருக்கும்.

ஓடிஐ போட்டிகளில் ரோஹித் சர்மாவை கடந்தாண்டு கேப்டன்ஸியில் இருந்து பிசிசிஐ திடீரென நீக்கியது. அவருக்கு பதில் சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம், பிசிசிஐ இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்

ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸியில் இந்திய அணி 2023 ஓடிஐ உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலும், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் தகுதிபெற்றது. அதேநேரத்தில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களையும் இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது.

0
0
Report

திருச்செந்தூர் கோவிலில் அனிதா ராதாகிருஷ்ணன் போராட்டம்; தவெக அரசுக்கு எதிர்ப்பு - காரணம் என்ன?

Tiruchendur Temple Latest News : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட் அகற்றக் கோரியும், உள்ளுர் மக்கள் வழிபடுவதற்கு நேரம் நிச்சயம் செய்து அடையாள அட்டை ஆதார் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என கோரியும் கோயில் நிர்வாக அலுவலரான இணை ஆணையருக்கு மனு கொடுத்தும் இப்போது வரை இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இது குறித்து திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ அனிதா R.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல ஆண்டுகளாக திருவிழா காலங்களிலும் விசேஷ நாட்களிலும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். 

மேலும் படிக்க | "திமுக - அதிமுக கூட்டணி வெறும் கட்டுக்கதை".. வதந்திக்கு இபிஎஸ் முற்றுப்புள்ளி

நம் தமிழ்நாடு மக்கள்  மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் விரதமிருந்து சுவாமி தரிசனத்திற்கு வருகின்ற நிலை பல ஆண்டு காலமாக இருக்கிறது.

தென் மாவட்டங்களில் உள்ள  விவசாயிகள் தங்களது விவசாயம் செழிக்க வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் விவசாய விளை பொருட்களை முருகப்பெருமானுக்கு காணிக்கை படைக்கும் நிகழ்வு பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. வாழைத்தார், நெல், வெற்றிலை, தேங்காய் மற்றும் இதர விளை பொருட்களை சண்முக விலாச மண்டபத்தில் காணிக்கையாக செலுத்தி கடவுளை வழிபடுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஏராளமான திருமணங்கள் சண்முக விலாச மண்டபத்தின் முன்பு நடைபெறுகிறது. இப்படியாக முக்கியத்துவம் வாய்ந்த சண்முக விலாச மண்டபம் இரும்பு கிரில் கேட் போட்டு தற்போது அடைக்கப்பட்டுள்ளது.

இரும்பு கிரில் கேட் அகற்றப்பட வேண்டும் 

முருகப்பெருமானுக்கு விவசாயிகள் காணிக்கை செலுத்துவதற்கும் உள்ளுர் மக்கள் உற்சவரை வழிபடுவதற்கும் காலங்காலமாக இருந்துவந்த மரபை தடுக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு கிரில் கேட் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் உள்ளுர் மக்கள் வழிபடுவதற்கு நேரம் நிச்சயம் செய்து அடையாள அட்டை ஆதார் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது  பக்தர்களின் கோரிக்கை 

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு ரூ.62,000 காப்பீடு.. தமிழக அரசின் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

நிர்வாக அலுவலரான இணை ஆணையருக்கு மனு 

பக்தர்களின் இந்த கோரிக்கைகளை ஜூலை 15 ஆம் தேதிக்குள் நிறைவேற்றவில்லை என்றால்  அனிதா R.ராதாகிருஷ்ணன் தலைமையில் பக்தர்கள் அறவழியில் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்பதை தெரிவித்து கோயில் நிர்வாக அலுவலரான இணை ஆணையருக்கு ஜூலை 6 அன்று மனு வழங்கியுள்ளனர்.

அறவழிப் போராட்டம் நடைபெறும் 

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படாத நிலையில் வரும் ஜூலை 22 அன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு திருக்கோயில் முன்பு சுமார் 5000 பக்தர்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் வடிவிலான அறவழிப் போராட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி MLA அனிதா R.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில் சமூக அமைப்பினரும் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ளவர்களும் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா R.ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக முக்கிய பங்கு வகித்து வருகிறார், நடந்து முடிந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு பின்னர் வந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போதய முதலமைச்சர் சி ஜோசப் விஜயை அவதூறாக பேசியதிற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய் நிகழ்ச்சிக்கு கல்தா... எல். முருகன் நிகழ்வுக்கு வருகை - மேயர் பிரியா சொன்ன பதில்

0
0
Report

CM விஜய் போட்ட திட்டம்.. சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.. ஆர்.பி.உதயகுமார் பகீர் தகவல்!

Madurai, Tamil Nadu:

Admk RB Udhayakumar: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தவெக அரசை கடுமையாக விமர்சித்து தினந்தோறும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில்,  இன்று (ஜூலை 16) ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், ”நடந்து முடிந்த தேர்தலிலே 35 சதவீதம் ஆதரவு வாக்குகளை பெற்று, 65 சதவீதம் எதிர்ப்பு வாக்குகளை பெற்று இருக்கின்ற முதல்வர் விஜயின் பாப்புலாரிட்டி இப்போது  உலகத்திலேயே உச்சத்தில் இருக்கிறதாக தொடர்ந்து பக்காவான பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு தகவல்

இந்த சோசியல் மீடியாவில ட்ரெயின் ப்ரொபஷனல்  இன்புலியன்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த வாடைக்கு அமர்ந்திருப்பவர்கள். விஜயின் பின்பத்தை பாப்புலர்லாக்கி கட்டமைக்கின்ற கடமையை கச்சிதமாக காட்சிப்படுத்த கணக்கு வழக்கு இல்லாமல் பல கோடி ரூபாயை கொட்டி கொடுப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. 

அதற்கு சில உதாரணங்களை நாம் இன்றைக்கு பார்க்கிறோம். நம்ம முதல்வர் விஜய் எவ்வளவு அழகாக கொடி அசைக்கிறார் பார்த்தீர்களா. எந்த மனசு சார் அவருக்கு எவ்வளவு, ஸ்டைலாக நடக்கிற பாத்திங்களா , போதை பொருள் ஒழிப்பதற்கு எவ்வளவு வேகமாக ஓடுகிறார் பாத்திங்களா, என்ன மனசு சார் முதல்வர் விஜய்க்கு, லஞ்சத்தை ஒழிக்க எவ்வளவு துணிச்சலாக whatsapp எண் அறிவித்திருக்கிறார் பார்த்தீர்களா  என்ன தைரியம் நம்ம முதல்வருக்கு .

பயபக்தியோட தன்னடக்கமாக  எப்படி சாமி கும்பிடறார் பார்த்தீங்களா.  யாருக்கு சார் இந்த மனது வரும் வரும்? என்னமா சட்டசபையில் கலக்குகிறார். எப்படி செமையா செய்கை பாத்திங்களா இதெல்லாம் ஒரு தில்லு வருது சார்.  ரேசன் கடையிடல் கீழே கொட்டால் சர்க்கரையை எப்படி கைக்குள்ள கொட்டுகிறார் பாத்திங்களா? சீராக எப்படி கார் ஓட்டுகிறார் , அங்கே கர்நாடகாவில் இருந்த ஓட்டி வருகிறபோது பிளாஸ்டிக் பாட்டில்ல  வச்சிருந்தை  மட்டும் கேட்கக்கூடாது.

இப்படி ஒவ்வொரு நொடிக்கு நொடி விஜயின் பிம்பத்தை செயற்கையாக கட்டமைப்பதை பார்க்கின்ற போது ஏதோ இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எந்த  எந்த முதல்வரும் செய்யாத திட்டங்களை, இப்போது இவர் மட்டும்தான் மக்களுக்கு செய்து வருவது போல ஒரு கனகச்சிதமான கட்டமைப்பு செய்து வருவதோடு, எதிர்க்கட்சிகள் யாராவது ஏதாவது இதை பற்றி விஜிய்யிடம் கேள்வி கேட்டால் போச்சு உடனே என்ன சொல்வார்.வாய் இருக்கிறது என்பதால்  என் மேல பழி போடுறாங்க என்று உணர்ச்சிவசமான, வசீகரமான வசனத்தை பேசி அசத்தி அரசியலை அதிரவை பார்முதல்வர் விஜய்.

அதிமுகவை அபகரிக்க திட்டம்

அவர் ஆடுகிற அரசியல் ஆட்டத்தில் முக்கியமான ஒன்று அதிமுகவை அபகரிக்க வேண்டும் என்ற பேராசையில் முதல்வர் விஜய்  ஒவ்வொரு முறையும் தடுமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாட்டு மக்களும் இதை உன்னிப்பாக பார்த்து வருகிறார்கள். 
அண்ணா திமுக தொண்டர்களும் இதை வேதனையோடு பார்த்து வந்தார்கள். 

த.வெ.க அரசின் பெரும்பான்மை நிரூபிக்க விஜய்க்கு ஆதரவு அளிக்க 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து அதிமுகவை அலேக்காக தூக்கிவிடலாம். அதன் பிறகு விஜய்க்கு ஆதரவாக சட்டமன்றத்திலே அவர்களை வாக்களித்தால், ஆதரவளித்த உறுப்பினர்களை அமைச்சர் அதிகாரம் அளித்து என்கிற ஆசை காட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சாமானியர்  என்று விஜய் தப்பு கணக்கு போட்டு விட்டார். எடப்பாடியாரை குறைத்து மதிப்பீடு செய்து  விட்டார்.

சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்

ஆகவே தான் அவருடைய ரகசிய திட்டம்  எடப்பாடியாரை விலக்கி வைத்துவிட்டு, அதிமுகவை விஜய்க்கு அடகு வைக்கவும் ,அடிமை சாசனம் எழுதி வைப்பதற்கு தயாராக இருப்பவர்களை வைத்து அதிமுகவை வழிநடத்தும் எடப்பாடியாரையும், அதிமுகவை ஒட்டுமொத்தமாக அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்ற விஜய்யின் ரகசிய திட்டத்தை, எடப்பாடியார் செய்த புண்ணியம்,  எதற்கும் அஞ்சாத மன உறுதி எப்போதும் மாறாத விசுவாச தொண்டர்களின் ஆதரவால் அதிமுகவின் ஒரே நம்பிக்கையை எடப்பாடியார் என்று ஒட்டுமொத்தமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சூளுரை ஏற்று விஜய் என்று ரகசிய திட்டத்தை சுக்கு நூறாக அகற்றி எரிந்து விட்டார்கள்.

இன்னைக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆன்மாக்களின் ஆசி  எடப்பாடியாருக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் பேராசை பிடித்தவர்களிடமிருந்து ,அதிமுகவை மீண்டும் மீட்டெடுத்து புதிய பொலிவோடும் வலிமையோடும் தலைமை தாங்கி வழி நடத்தி மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்பை காட்டுவேன் என்று தன்னை அர்ப்பணித்து அயராது உழைத்து வரும் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான கழக தொண்டர்கள் விசுவாச உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது” என்றார்.

0
0
Report
Advertisement
Advertisement
Back to top