icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

ராஜஸ்தான் செய்த 3 தவறுகள்... SRH அணிக்கு குவியும் வெற்றி - மிரட்டல் சேஸ்ஸிங்

Jaipur, Rajasthan:

IPL 2026, RR vs SRH Highlights: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 228 ரன்களை அடித்தும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதை 9 பந்துகளை மிச்சம் வைத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் இது 4வது பெரிய சேஸ்ஸிங் ஆகும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

PBKS சாதனை வெற்றி... டி20 வரலாற்றிலேயே பெஸ்ட் சேஸ்ஸிங்... அய்யோ பாவம் கேஎல் ராகுல்!

New Delhi, Delhi:

IPL 2026, DC vs PBKS Highlights: ஐபிஎல் வரலாற்றில் மட்டுமின்றி டி20 வரலாற்றிலேயே ரெக்கார்டு சேஸ்ஸிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்தி காட்டியுள்ளது. 265 ரன்கள் இலக்கை 7 பந்துகள் மிச்சம் வைத்து ஷ்ரேயாஸ் ஐயரின் படை வெற்றிகரமாக சேஸ்ஸிங் செய்திருக்கிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

லுங்கி இங்கிடிக்கு தலையில் அடி... மைதானத்திற்கே வந்த ஆம்புலன்ஸ்... என்னாச்சு...?

New Delhi, Delhi:

Lungi Ngidi Injury, IPL 2026 DC vs PBKS: ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங்கின் போது, டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனால், கடுமையாக பாதிப்படைந்த அவருக்கு மைதானத்திலேயே அவசர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். 

அக்சர் பட்டேல் வீசிய 3வது ஓவரின் 3வது பந்தை பிரியான்ஷ் ஆர்யா ஷார்ட் லாங் ஆப் திசையில் தூக்கி அடித்ததை, கேட்ச் பிடிக்க முயன்ற போது லுங்கி இங்கிடி கீழே விழுந்தார், அப்போது அவரது பின் மண்டைப் பகுதி பலமாக தரையில் மோதியது. அவர் அப்படியே பல்டியும் அடித்தார்.

இதைத் தொடர்ந்து அவரால் எழுந்து நிற்கவே முடியவில்லை. உடனடியாக மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை பரிசோதித்தனர். தலையில் பலமாக அடிப்பட்டதால் உடனடியாக ஸ்கேன் செய்து பார்த்து, காயத்தின் தன்மையை அறிவது அவசியமாகும். எனவே, தலையை அசைக்க முடியாதபடி கவசம் அணிந்து அவரை மருத்துவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர்.

லுங்கி இங்கிடி மருத்துவக் குழுவிடம் பேசுவதையும் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. மேலும், அவர் சுயநினைவுடன் உள்ளதையும் பார்க்க முடிந்தது. எனவே, கவலைக்கொள்ளும் அளவுக்கு லுங்கி இங்கிடிக்கு பாதிப்பு இருக்காது என நம்பப்படுகிறது. லுங்கி இங்கிடியின் காயம் காரணம் சுமார் 15-20 நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report
Advertisement

ஆம் ஆத்மிக்கு ஆப்பு... கட்சித் தாவும் ராகவ் சத்தா... பாஜகவுக்கு படையெடுக்கும் 7 எம்பிக்கள்!

New Delhi, Delhi:

Raghav Chadha Joins BJP: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியான ராகவ் சத்தா, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு மாநிலங்களவை உறுப்பினர்களுடன் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

மத்திய அமைச்சராகும் ராகவ் சத்தா? 

ஆம் ஆத்மி கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களை உறுப்பினர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகங்களான ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்வாதி மல்லிவால் ஆகியோரும் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.

டெல்லியில் இன்று பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, "ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதியளித்து ஒரு காலத்தில் டெல்லியில் ஆட்சிக்கு வந்த கட்சி, நேர்மையான அரசியலில் இருந்து விலகிச் சென்றுவிட்டது" என குற்றஞ்சாட்டினார். ராகவ் சத்தா பாஜகவில் இணைந்த பின்னர் அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆம் ஆத்மி எதிர்ப்பு

மேலும், ஆம் ஆத்மி எம்பிக்கள் தங்களை பாஜகவில் இணைப்பதற்காக கையெழுத்துப்போட்டு, மாநிலங்களவை தலைவருக்கு அனுப்பியிருப்பதாக ராகவ் சத்தா தெரிவித்தார். ராகவ் சத்தா குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, கட்சியை மீறி செயல்பட்டதாக ராகவ் சத்தா மீது ஆம் ஆத்மி சாடி உள்ளது. மேலும், பஞ்சாப் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என பாஜகவை அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கட்சித் தாவல் சட்டம் பாயுமா?

ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள், மற்றொரு கட்சியுடன் இணைய விலக்கு அளிக்கப்படுவதால், ராகவ் சத்தா மற்றும் 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவுடன் இணைவது கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறுவதாக அமையாது.

7 பேர் பாஜகவில் இணைகின்றனர்

ராகவ் சத்தா, ஹர்பஜன் சிங், ஸ்வாதி மலிவால், ராஜிந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி, அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகிய 7 எம்பிக்கள் ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் இணைய உள்ளனர். ஆம் ஆத்மியில் இருந்து 7 எம்பிக்கள் வெளியேறினாலும் சந்த் பல்பிர் சிங் சீச்சேவால், சஞ்சய் சிங், என்.டி. குப்தா ஆகியோர் இன்னும் ஆம் ஆத்மியில் தொடர்கின்றனர்.    

"ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த 15 வருடங்களாக எனது உயிரையே கொடுத்துள்ளேன். ஆனால், கட்சி இப்போது நேர்மையான அரசியல் பாதையில் இருந்து தவறிவிட்டது. தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்நான். நான் கட்சியில் இருந்து தாவுகிறேன். மக்களுடன் இன்னும் நெருங்குகிறேன். இன்றைய சூழலில் ஆம் ஆத்மி ஊழல் மயமாகிவிட்டது மற்றும் சமரசத்திற்கு உட்பட்டுவிட்டது" என குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆம் ஆத்மி பழைய கட்சியாக இல்லை...

2012ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி கட்சி உதயமான போது இருந்து, ராகவ் சத்தா அங்கு செயல்பட்டு வருகிறார். கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரிய நபராக ராகவ் சத்தா இருந்தார். 2015ஆம் ஆண்டில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளார். 

தொடர்ந்து பேட்டியில் அவர், "நான் இந்த கட்சியின் ஸ்தாபக உறுப்பினர். நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் பஞ்சாப், டெல்லி, பிற பகுதிகளில் கட்சியை நிறுவினோம். இன்று, ஆம் ஆத்மி கட்சி ஊழல் நிறைந்ததாகவும், சமரசம் செய்யப்பட்டதாகவும் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி பழைய கட்சி அல்ல. ஆம் ஆத்மி கட்சியின் தவறான செயல்களில் நான் ஈடுபட விரும்பவில்லை.

மேலும், எனக்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்தது. ஒன்று அரசியலை விட்டே விலகுவது அல்லது சரியானதைச் செய்வது. நான் இரண்டாவதை தேர்வு செய்தேன். மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நாங்கள், பாஜகவுடன் இணைகிறோம்" என்றார்.

ஆம் ஆத்மி வைத்த கோரிக்கை

ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி அவரை மாநிலங்களவையின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சத்தாவை நீக்கியதை தொடர்ந்து ஏற்பட்ட பெரும் சர்ச்சையானது. இந்த நடவடிக்கை, இரு தரப்புக்கும் வெளிப்படையான பிளவை பகிரங்கப்படுத்தியது. மாநிலங்களவையில் பேசுவதற்காக கட்சியின் ஒதுக்கீட்டில் இருந்து சத்தாவுக்கு நேரம் ஒதுக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மம்தா vs மோடி: தரமான சம்பவம்... 92% வாக்குப்பதிவு... 4 முக்கிய காரணங்கள் என்ன?

மேலும் படிக்க | பாஜக ஆதிக்கம்: டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள்.. 12ல் 7 இடங்களை வென்றது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

அனல் பறக்கும் வாக்குப்பதிவு... 10 தென் மாவட்டங்களின் நிலவரம் என்ன? யாருக்கு சாதகம்?

Madurai, Tamil Nadu:

Tamil Nadu Assembly Election 2026, Voters Turnout: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) நடைபெற்று வருகிறது. 38 மாவட்டங்களின் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

ஆங்காங்கே சிறு சிறு பிரச்னைகளும், தேர்தல் புறக்கணிப்புகளும் தென்பட்டாலும் வாக்குப்பதிவில் சுணக்கம் ஏதும் தெரியவில்லை. வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் காரணமாகவும், நான்கு முனை போட்டி நிலவும் காரணத்தாலும் வாக்குப்பதிவு அதிகரித்து காணப்படுகிறது. 

234 தொகுதிகளில் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சாவடிகள் 75,064 உள்ளன. 29 வயதிற்குள்ளான இளம் வாக்காளர்கள் 1.21 கோடி பேர் உள்ளனர், 70 வயதிற்கு மேல் மூத்த வாக்காளர்கள் 44.98 லட்சம் பேர் உள்ளனர். இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளைில், மதியம் 1 மணி நிலவரம் வெளியாகி உள்ளது. லைவ் அப்டேட்டை படிக்க இதை கிளிக் செய்யவும்...

1 மணி நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் மதியம் 1 மணிநிலவரப்படி சுமார் 56.81% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97% ஆக வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 50.35% ஆக வாக்குப்பதிவு நடந்துள்ளது. 

வடக்கு மண்டலம், கொங்கு மண்டலம், டெல்டா மண்டலம், தெற்கு மண்டலம் என தமிழ்நாட்டை நான்கு மண்டலமாக பிரிக்கலாம். இதில் தெற்கு மண்டலத்தை பொருத்தவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் என 10 மாவட்டங்கள் உள்ளன. இந்த 10 மாவட்டங்களில் 58 தொகுதிகள் உள்ளன. 58 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு குறித்த இங்கு காணலாம்.

TN Assembly Electioல

கன்னியாகுமரி மாவட்டம் - 50.35%

குளச்சல் - 48.62%

கன்னியாகுமரி - 53.52%

கிள்ளியூர் - 46.76%

நாகர்கோவில் - 50.89%

பத்மநாபபுரம் - 51.48%

விளவங்கோடு - 50.41%

திருநெல்வேலி மாவட்டம் - 50.73%

அம்பாசமுத்திரம் - 56.05%

நாங்குநேரி - 5059%

ராதாபுரம் - 50.13%

திருநெல்வேலி - 51.99%

பாளையங்கோட்டை - 45.37%

தென்காசி மாவட்டம் - 54.24%

ஆலங்குளம் - 54.34%

கடையநல்லூர் - 54.93%

சங்கரன்கோவில் - 53.95%

தென்காசி - 53.24%

வாசுதேவநல்லூர் - 54.83%

தூத்துக்குடி மாவட்டம் - 52.55%

கோவில்பட்டி - 52.66%

ஒட்டப்பிடாரம் - 51.24%

ஸ்ரீவைகுண்டம் - 51.26%

தூத்துக்குடி - 54.08%

திருச்செந்தூர் - 51.29%

விளாத்திகுளம் - 54.89%

ராமநாதபுரம் மாவட்டம் - 51,54%

முதுகொளத்தூர் - 51.31%

பரமக்குடி - 53.83%

ராமநாதபுரம் - 49.70%

திருவாடனை - 51.91%

விருதுநகர் மாவட்டம் - 57.27%

அருப்புக்கோட்டை - 58.68%

ராஜபாளையம் - 56.39%

சாத்தூர் - 55.56%

சிவகாசி - 56.42%

ஸ்ரீவில்லிபுத்தூர் - 57.30%

திருச்சுழி - 60.35%

விருதுநகர் - 56.48%

மதுரை மாவட்டம் - 54.75%

மதுரை மத்தி - 50.69%

மதுரை கிழக்கு - 54.61%

மதுரை வடக்கு - 50.43%

மதுரை தெற்கு -53.83%

மகுரை மேற்கு - 54.33%

மேலூர் - 55.33%

சோழவந்தான் - 57.43%

திருமங்கலம் - 60.12%

திருப்பரங்குன்றம் - 55.34%

உசிலம்பட்டி - 53.98%

திண்டுக்கல் மாவட்டம் - 59.79%

ஆத்தூர் - 58.20%

திண்டுக்கல் - 58.09% 

நத்தம் - 60.36%

நிலக்கோட்டை - 59.63%

ஒட்டஞ்சத்திரம் - 62.88%

பழனி - 59.23%

வண்டலூர் - 60.53%

தேனி மாவட்டம் - 55.63%

ஆண்டிப்பட்டி - 55.54%

போடிநாயக்கனூர் - 56.45%

கம்பம் - 56.68%

பெரியகுளம் - 53.91%

சிவகங்கை மாவட்டம் - 53.50%

காரைக்குடி - 51.36%

மானாமதுரை - 53.41%

சிவகங்கை - 54.38%

திருப்பத்தூர் - 55.07%

தவெக தாக்கம்

வழக்கமாக ஆட்சி மாற்றத்தை விரும்பினாலோ அல்லது தற்போதைய ஆட்சியை கண்டிப்பாக தொடர வேண்டும் என்ற மனநிலை நிலவினாலோ அல்லது தவெக போன்ற மூன்றாவது சக்தி உருவெடுத்தாலோ இதுபோன்று வாக்குப்பதிவு அதிகமாக நடக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எஸ்ஐஆர் நடவடிக்கையும் ஒரு காரணம் எனலாம். இருப்பினும், தவெகவின் தாக்கத்தை இதில் மறுக்க முடியாது. 

மொத்தமுள்ள 5.93 கோடி வாக்காளர்களில், மதியம் 1 நிலவரப்பி 3.25 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்துவிட்டனர். அதாவது, கடந்த 2021 தேர்தலில் மதியம் 1 மணிக்கு 39.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், தற்போது 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளது கவனிக்கத்தக்கது.

எங்கு அதிகம்?, எங்கு குறைவு?

ஆனால், மாநில சராசரியைவிட தென்மாவட்டங்களில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மொத்தம் 10 மாவட்டங்களை சேர்த்து 54.04% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 59.79% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தொகுதி வாரியாக ஒட்டஞ்சத்திரத்தில் 62.88% மற்றும் திருச்சுழியில் 60.35% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தொகுதிகளை பொருத்தவரை குறைந்தபட்சமாக பாளையங்கோட்டை - 45.37%, கிள்ளியூர் 46.75%, குளச்சல் -48.62%, ராமநாதபுரம் - 49.70% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இது யாருக்கு சாதகம்?

மற்ற மண்டலங்களை காட்டிலும் தென் மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகி உள்ளது. கடந்த 2021 தேர்தலில் இங்குள்ள 58 தொகுதிகளில் 40 தொகுதிகளை திமுக கூட்டணியும், 18 தொகுதிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்றின. இம்முறை தவெக கணிசமான வாக்குகளை பிரிப்பதால் இங்கு திமுக முன்னிலை பெற்றாலும் கடந்த முறை பெற்ற தொகுதிகளை பெறுமா என்பது கேள்விக்குறிதான். அதேநேரத்தில், அதிமுக கடுமையான சரிவை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | யார் அந்த நபர்? எதற்காக EVM-ஐ உடைத்தார்? திருவண்ணாமலை தேர்தல் களத்தில் திக் திக் நிமிடங்கள்!

மேலும் படிக்க | "No Need" என அஜித் சொன்னது உண்மையா? 2026 தேர்தலில் வெடித்த புதிய சர்ச்சை!

மேலும் படிக்க | ஸ்டாலின் vs அஜித்: தேர்தல் களத்தில் அரங்கேறிய ட்விஸ்ட்! முதலமைச்சர் சொன்ன அந்த ‘நன்றி’! திடீர் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

MI-க்கு வரலாற்றுத் தோல்வி... CSK-ன் பெஸ்ட் வெற்றி - பாயிண்ட்ஸ் டேபிளில் பெரிய ஜம்ப்!

Mumbai, Maharashtra:

Mumbai Indians vs Chennai Super Kings, IPL 2026: ஐபிஎல் 2026 தொடரில் 33வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. தலா 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், 8வது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

மும்பை அணி எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆயுஷ் மாத்ரே, மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கு பதில் கார்த்திக் சர்மா, அகேல் ஹொசைன் உள்ளிட்டோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சிஎஸ்கே அணிக்கு சிறப்பான பவர்பிளே அமைந்தது, பவர்பிளே ஓவர்களில் 73 ரன்களை எடுத்து 2 விக்கெட்டை இழந்தது. ருதுராஜ் 22, சர்பராஸ் கான் 14 எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, தூபே 5,  பிரெவிஸ் 21, கார்த்திக் சர்மா 18, ஜேமி ஓவர்டன் 15 என ஓரளவு ரன்களை அடித்தனர். சஞ்சு சாம்சன் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து நடப்பு தொடரில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். 

சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் என 101 ரன்களை குவித்தனர். இதனால், சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் 207 ரன்களை அடித்தது. அல்லா கசன்பர் மற்றும் அஸ்வானி குமார் தலா 2 விக்கெட்; ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 1 விக்கெட்டை எடுத்தார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report
Advertisement

2026 தேர்தல் வாக்குப்பதிவு... ஓவர் பில்டப்... 85% பெரிய சாதனை இல்லை - ஏன் தெரியுமா?

Chennai, Tamil Nadu:

TN Assembly Election History, Vote Turnout Details: 2026 சட்டப்பேரவை தேர்தல், 1967 மற்றும் 1977 தேர்தல்களை போன்று தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் என பேசப்பட்டது. 12 லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் உள்ளதால், தவெகவின் வருகையால் வாக்குப்பதிவு அதிகம் நடக்கும் என பேச்பபட்டது.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு அனுமதிக்கப்பட்டது. ஒருவேளை, வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு, கூட்டம் இருப்பின், டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணிவரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

6 மணி நிலவரப்படி

அந்த வகையில், மாலை 6 மணி நிலவரப்பட்டி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 85.06% வாக்குகள் பதிவாகின. கரூர் 92.66%, சேலத்தில் 90.61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கொங்கு மண்டலத்தில் அதிகளவிலான வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையிலும் 83.67% அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சம் கன்னியாகுமரியில் 75.61%

இப்படியிருக்க, காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி, திமுக முதன்முதலில் ஆட்சியை பிடித்த 1967ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் திமுக வென்று ஆட்சியமயைத்தது வரை என இந்த 13 தேர்தல்களின் மொத்த வாக்குப்பதிவு குறித்த விவரங்களை இங்கு காணலாம். 

1967

திமுக ஆட்சிக்கு வந்து அண்ணாதுரை முதலமைச்சராக பதவியேற்ற இந்த தேர்தலில் மொத்தம் 76.5% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 

1971

திமுக 2வது முறையாக தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்தது இந்த ஒரே ஒருமுறைதான். கருணாநிதி - எம்ஜிஆர் இணைந்து சந்தித்த தேர்தல் இது. இதில் மொத்தமே 72.10% வாக்குகள் பதிவாகின.

1977

எமர்ஜென்சிக்கு பின் நடைபெற்ற தேர்தல் இது. அதிமுக சந்தித்த முதல் தேர்தல். அதிமுக கூட்டணி 144 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் 61.58% வாக்குகள் பதிவாகின. 

1980

எம்ஜிஆர் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த தேர்தல் இது. திமுக - காங்கிரஸ் இணைந்து இத்தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் 65.42% வாக்குப்பதிவு நடந்தது. 

1984

எம்ஜிஆர் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் மொத்தம் 73.47% வாக்குப்பதிவு நடைபெற்றது. 

1989

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் நடைபெற்ற தேர்தல் இது. அதிமுக ஜெ அணி, ஜா அணியாக பிரிந்திருந்த காலக்கட்டம். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 150 இடங்களை பெற்று சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் 69.69% வாக்குப்பதிவு நடந்தது. 

1991

2 ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டு, ராஜிவ் காந்தி உயிரிழந்த பிறகு இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக - காங்கிரஸ் உருவானது. அதிமுக ஒன்றிணைந்தது, ஜெயலலிதா முதலமைச்சரானார். 63.84% வாக்குகள் பதிவாகின.

1996 

திமுக கூட்டணி 221 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதிமுக வெறும் 4 இடங்களிலேயே வென்றது. இந்த தேர்தலில் 66.95% வாக்குகள் பதிவாகி உள்ளன. 

2001

மீண்டும் ஜெயலலிதா வென்று முதலமைச்சராக தேர்வானார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 196 இடங்களில் வென்றது. அதில் 59.07% வாக்குப்பதிவானது.

2006

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது, ஆனால் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. விஜயகாந்தின் முதல் தேர்தல் இதுதான். இதில் 70.56% வாக்குகள் பதிவாகின. 

2011

2ஜி ஊழல் குற்றச்சாட்டு, தமிழீழ பிரச்சனை, தொடர் மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளால் திமுக அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. அதிமுக கூட்டணி 203 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்தது. இதில் 78.29% வாக்குகள் பதிவாகின. 

2016

திமுக - அதிமுக - மக்கள் நலக் கூட்டணி என மும்முனை போட்டி காரணமாக அதிமுக கூட்டணி 136 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 98 தொகுதிகளிலும் ஆட்சியை அமைத்தது. மக்கள் நலக்கூட்டணி ஒரு தொகுதியை கூட வெல்லவில்லை. இந்த தேர்தலில் 74.81% வாக்குகள் பதிவாகின. 

2021

திமுக கூட்டணி 159 இடங்களை வென்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சி அமைத்தது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை வென்றது. இந்த தேர்தலில் 73.63% வாக்குகள் பதிவாகின.

எவ்வளவு வாக்குப்பதிவு?

தமிழ்நாட்டில் தற்போதைய 2026 தேர்தலில் 4.87 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். 2021 தேர்தலில் 4.63 கோடி பேர் வாக்களித்த நிலையில், கடந்த தேர்தலை விட 24 லட்சம் பேர்தான் அதிகம் வாக்களித்துள்ளனர். இன்னும் வாக்குப்பதிவு விவரம் முழுமையாக தெரியவில்லை என்றாலும், அதிகபட்சம் ஓரிரு லட்சம் வாக்குகள் உயரலாம்.

24 லட்சம்+ வாக்குகள் அதிகம்

கடந்த 2016ஆம் தேர்தலில் 4.32 கோடி வாக்காளர்களும், 2021 தேர்தலில் 4.63 கோடி வாக்காளர்களும் வாக்களித்தனர். அதாவது, 31 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக வாக்கு செலுத்தினர். ஆனால், தற்போது 2021 தேர்தலை விட சுமார் 24 லட்சம் வாக்குகளே அதிகமாகியிருக்கிறது.

இது வழக்கமானதுதான்...

எனவே, இது பெரியளவில் சாதனையாக பார்க்க முடியாது என வல்லுநர்கள் கூறுகின்றனர். 6.29 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை, எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு 5.7 கோடியாக குறைந்தது. வரலாற்று சிறப்புமிக்க வகையில் 85% அளவுக்கு மேல் வாக்குப்பதிவாகியிருப்பது ஒன்றும் சாதனை அல்ல என்றும் இது வழக்கமானதுதான் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆர்வமுடன் வாக்களிப்பு

89% அல்லது 90% நெருங்கியிருந்தால் இதை சாதனையாக பார்த்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இருப்பினும், இளம் தலைமுறையினர் அதிகமானோர் ஆர்வத்துடன் வாக்களிக்க தன்னார்வமாக வந்ததையும் களத்தில் பார்க்க முடிந்தது. வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்தும் கூட அதிகமானோர் சொந்த ஊர் வந்தனர்.

சென்னையில் இருந்து சொந்த ஊர் வர, அதிகமானோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்ததையும் பார்க்க முடிந்தது. எனவே, தரவுகளின்படி பார்த்தால் பெரியளவில் உயரவில்லை என்றும் மக்களிடம் வாக்களிக்கும் மனநிலை நேர்மறையாக உயர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. 

மேலும் படிக்க | திமுக - அதிமுக கோட்டையை தகர்க்குமா தவெக? கொங்கு மண்டலத்தில் எகிறும் வாக்குப்பதிவு - முழு விவரம்!

மேலும் படிக்க | அனல் பறக்கும் வாக்குப்பதிவு... 10 தென் மாவட்டங்களின் நிலவரம் என்ன? யாருக்கு சாதகம்?

மேலும் படிக்க | தேர்தலை புறக்கணித்த கிராமம்... ஆனால் துணிந்து ஓட்டு போட்ட பெண்மணி - நாங்குநேரியில் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

திமுக vs தவெக: சேகர்பாபு - சினோரா அசோக் மோதல் காட்சிகள் Viral - நடந்தது என்ன?

Chennai, Tamil Nadu:

Chennai Harbour Election 2026, Sekar Babu vs Sinora Ashok: சென்னை துறைமுகம் தொகுதியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சேகர்பாபுவுக்கும், தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவுபெறும் நேரத்தில் கடும் மோதல் ஏற்பட்டதால் பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது. 

துறைமுகம் தொகுதியில் ராயபுரம் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. ஒரு வாக்குச்சாவடியை திமுக வேட்பாளர் சேகர்பாபு கைப்பற்ற வந்ததாக, சினோரா அசோக் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டதாகவும்; இதில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. வாக்குவாதத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை தொடர்ந்து, போலீசார் இருதரப்பை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளனர்.

மேலும், சேகர்பாபுவுக்கும், சினோரா அசோக்கிற்கும் நடந்த மோதல் காட்சிகளை தவெக ஆதாரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதை வைரலாக்கி வருகின்றனர். சென்னை துறைமுகத்தில் மட்டுமின்றி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ஐஸ்ஹவுஸ் அருகே திமுக - தவெக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. திமுக தொண்டர்கள் தங்களை தாக்கிவிட்டதாக தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026, பெரம்பலூர் மாவட்டம்: வாக்குப்பதிவு நிலவரம்

Perambalur, Tamil Nadu:

TN Assembly Election 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

காலை 11 மணியளவில் வாக்குப்பதிவு நிலவரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், காலை 11 மணியளவில், வாக்களிப்பு விகிதத்தின் தோராய அளவு 37.56 சதவிகிதமாக இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, ஏப்ரல் 23, 2026 அன்று காலை 9:00 மணி வரை, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்களிப்பு விகிதம் 18.56% என மதிப்பிடப்பட்டது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, காலை 9:00 மணி நிலவரப்படி, தமிழ்நாடு மாநிலம் தழுவிய சராசரி வாக்களிப்பு விகிதம் சுமார் 17.69% ஆக இருந்தது.

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். 1,752 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட, பெரம்பலூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த மாவட்டம், மாநிலத்தில் மக்காச்சோளம் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்யும் முதன்மையான வேளாண்மை மையமாகத் திகழ்கிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: பெரம்பலூர் மாவட்ட தொகுதிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் மொத்தம் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம், வேட்பாளர் பட்டியல், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்கு நிலவரம் ஆகிய முக்கிய விவரங்களை இங்கே காணலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள்:

பெரம்பலூர் (தனி) (147)
குன்னம் (147)

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 732 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குச்சாவடி மையங்களும்  உள்ளன.

பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளின் முக்கிய தரவுகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியின தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எம்.பிரபாகரன். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த  எம்.பிரபாகரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் இளம்பை இரா தமிழ்ச்செல்வனை விட 31034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

- எஸ்டி ஜெயலட்சுமி (திமுக), 
- இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் (அஇஅதிமுக),
- கே.சிவக்குமார் (தவெக)
- ஜான்சி ராணி (நாதக)

குன்னம் சட்டமன்றத் தொகுதி தொகுதிகளின் முக்கிய தரவுகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னம் சட்டமன்றத் தொகுதியின தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எஸ்.எஸ்.சிவசங்கர். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எஸ்.எஸ்.சிவசங்கர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் ஆர்டி ராமசந்திரனை விட 6329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

குன்னம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

- சி சிவசங்கர் (திமுக)
- சரண்யா (IJK)
- எம்.ரேவதி (தவெக)
- கீர்த்தி வாசன் (நாதக)

மேலும் படிக்க | LIVE: தமிழ்நாடு தேர்தல் 2026 'தலைவிதியை' நிர்ணயிக்கும் நாள்.. 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

மேலும் படிக்க | ஸ்டாலின் vs அஜித்: தேர்தல் களத்தில் அரங்கேறிய ட்விஸ்ட்! முதலமைச்சர் சொன்ன அந்த ‘நன்றி’! திடீர் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report
Advertisement

நள்ளிரவில் கட்டு கட்டாக சிக்கிய கேஷ்! பெரம்பலூரில் ரூ.2.5 கோடி பறிமுதல்

Perambalur, Tamil Nadu:

TN Assembly Election: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில், அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கான பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, எந்த வித பிரச்சாரமும் நடத்தப்படக்கூடாது என்றும், தொகு​திக்கு சம்​பந்​தம் இல்​லாதவர்​கள் அங்கிருந்து வெளி​யேற வேண்டும் என்றும் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

ரூ.2.5 கோடி ரொக்கப் பணம் பரிமுதல்

இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் தமிழகம் முழுவதும் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் கடைசி கட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, ​​கணக்கில் வராத சுமார் ரூ.2.5 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை இரவு பிடிபட்ட பணம்

திங்கள்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில், வட்டாட்சியர் பழனிசெல்வம் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், ஜெயராமன் என்பவர் ஓட்டி வந்த 'ஸ்விஃப்ட் டிசையர்' காரை வழிமறித்துச் சோதனை செய்தபோது இந்தப் பறிமுதல் நடைபெற்றது. வாகனத்திற்குள் ரூ.2,49,95,000 ரொக்கப் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர் என்றும் அதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் சம்பவ இடத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளும் ரூ.500 முகமதிப்பு கொண்டவையாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட தொகை

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2,49,95,000 ரொக்கப் பணம், பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான திருமதி எம்.அனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மேல்விசாரணைக்காக அப்பணம் வருமான வரித் துறையினரிடம் மாற்றப்பட்டது.

முறையான ஆவணங்கள் இல்லை

பணத்தின் ஆதாரம் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான நோக்கத்தை நிரூபிக்கும் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றும், உரிமையாளர் இவற்றை சமர்ப்பிக்கும் பட்சத்தில், அப்பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெயராமன் என்பவர் கீழப்புலியூரைச் சேர்ந்த திமுக விவசாய அணி நிர்வாகி என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், கட்டு கட்டாக இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெற உள்​ளது. மார்ச் 15 ஆம் தேதி இதற்​கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டது. இந்த அறிவிப்பு வந்தது முதல் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​தன. தமிழ்நாடு முழு​வதும் பறக்​கும் படை​யினர், கண்​காணிப்​புக் குழு​வினர் என பல பிரிவினர் தீவிர சோதனைகளை நடத்தி வரு​கின்​றனர். இந்த சோதனைகளில் பல இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்கமாக பணம் கைப்பற்றப்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றி அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

1. தமிழக சட்டமன்றத் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறவுள்ளது?

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும்.

2. தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன? 

தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் வழிகாட்டுதல்களின் தொகுப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனப்படும். கூட்டங்கள், ஊர்வலங்கள், தேர்தல் அறிக்கைகள், வாக்குப்பதிவு மற்றும் பொதுவான நடத்தை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கையாளும் விதிமுறைகளின் தொகுப்பாக இது விளங்குகிறது.

3. வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நபர்கள் எப்படி வாக்களிப்பட்து?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாகப் 12 அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி மக்கள் வாக்களிக்கலாம். அவற்றின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | "நெருக்கடியும்.. வேதனையும் தான் அதிகம்” கடைசி கட்ட பிரச்சார நேரத்தில் மனம் விட்டு பேசிய விஜய்!

மேலும் படிக்க | தேர்தலுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

0
0
Report

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: மதுப்பிரியர்களே உஷார்! அடுத்தடுத்து 4 நாட்கள் டாஸ்மாக் லீவு!

Chennai, Tamil Nadu:

TN Election Liquor Shops closed in Chennai: தமிழகத்தில் ஜனநாயகத் திருவிழாவான சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மதுக்கடைகள் மூடப்படுமா? மற்றும் தமிழ்நாடு தேர்தல் 2026 டாஸ்மாக் விடுமுறை நாட்கள் குறித்து பார்ப்போம்.

4 நாட்களுக்கு மது விற்பனைக்குத் தடை என்ன காரணம்?

தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்கவும், வாக்காளர்களுக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும் டாஸ்மாக் கடைகளுக்குத் தேர்தல் ஆணையம் விடுமுறை அறிவித்துள்ளது. சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மொத்தம் நான்கு நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் செயல்படாது.

நாள் கிழமை காரணம்
ஏப்ரல் 21, 2026 செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள்
ஏப்ரல் 22, 2026 புதன்கிழமை வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள்
ஏப்ரல் 23, 2026 வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் நாள்

மே 04, 2026

திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்

ஏப்ரல் 21-ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு வரை தொடர்ச்சியாக மது விலக்கு அமலில் இருக்கும் என்பதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும். இது தவிர தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் மே 4-ம் தேதியும் 'உலர் தினமாக' (Dry Day) அறிவிக்கப்பட்டு இருப்பதால், டாஸ்மாக் கடைகள் செயல்படாது.

எந்தெந்த இடங்களுக்கு மது விற்பனை தடை பொருந்தும்?

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) கீழ் இயங்கும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மட்டுமின்றி, தனியார் கிளப்புகள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் (FL-2 முதல் FL-11 வரை) என அனைத்து இடங்களுக்கும் இந்த தடை பொருந்தும். இருப்பினும் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள சில குறிப்பிட்ட உரிமங்களுக்கு (FL-6) மட்டும் விலக்கு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தடையை மீறி மது விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்ந்தப்பட்டவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு: களத்தில் இறங்கும் முப்படையினர்

வாக்குப்பதிவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படையை சேர்ந்த துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல மாநிலக் காவல்துறையை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் மாநிலம் முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பறக்கும் படையினர் மூலம் 24 மணி நேரமும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஜனநாயகக் கடமையை வாக்காளர்கள் அச்சமின்றி ஆற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சட்டவிரோத மது விற்பனை அல்லது பணப் பரிமாற்றம் குறித்துத் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாகப் புகாரளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதி: ₹727 கோடி பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த பணம் மற்றும் பரிசுப் பொருட்களைப் பறிமுதல் செய்வதில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், ரொக்கம், தங்கம் மற்றும் இதர பொருட்கள் என இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை ₹727 கோடி ஆகும். பொதுமக்கள் தரப்பிலிருந்து இதுவரை 3,791 புகார்கள் வந்துள்ளன. இதில் 727 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக வாக்காளர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்

தேர்தல் பிரசாரம் இன்றுடன் (ஏப்ரல் 21) நிறைவடைய உள்ள நிலையில், வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் மூடப்படுவதால், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதைக் கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மது பிரியர்களுக்கு இந்த 4 நாள் விடுமுறை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெற இது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உங்கள் தொகுதியில் ஏதேனும் தேர்தல் விதிமீறல்கள் நடந்தால், தேர்தல் ஆணையத்தின் cVIGIL செயலியைப் பயன்படுத்திப் புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரத்துடன் புகாரளிக்க மறக்காதீர்கள்.

வாக்காளர்களே நினைவில் கொள்ளுங்கள்.. உங்கள் வாக்கு, உங்கள் உரிமை! ஏப்ரல் 23 அன்று தவறாமல் வாக்களியுங்கள்!

மேலும் படிக்க - டாஸ்மாக் கடைகள் இருக்காது! வெளியான முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க - "நெருக்கடியும்.. வேதனையும் தான் அதிகம்” கடைசி கட்ட பிரச்சார நேரத்தில் மனம் விட்டு பேசிய விஜய்!

மேலும் படிக்க - தேர்தலுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 டாஸ்மாக் கடை மூடல்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்த தேதியில் நடைபெறுகிறது?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2. டாஸ்மாக் கடைகள் எத்தனை நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்? 

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஏப்ரல் 21, ஏப்ரல் 22, ஏப்ரல் 23, மே 04 என மொத்தம் 4 நாட்கள் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

3. எப்போது முதல் மதுக்கடைகள் மூடப்படும்? மீண்டும் எப்போது திறக்கப்படும்? 

ஏப்ரல் 21-ம் தேதி காலை 10:00 மணி முதல் மதுக்கடைகள் மூடப்படும். வாக்குப்பதிவு முடிந்து ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும். அதேபோல், மே 4-ம் தேதி அன்று முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

4. கிளப்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்களுக்கும் இந்தத் தடை பொருந்துமா? 

ஆம். FL-2 முதல் FL-11 வரையிலான உரிமம் பெற்ற அனைத்து பார்கள், கிளப்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் மதுபான விற்பனையகங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.

5. தடையை மீறி மது விற்பனை செய்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? 

தேர்தல் விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937-ன் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் உரிமமும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

0
0
Report

தேர்தலுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

Chennai, Tamil Nadu:

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமுமின்றி சுலபமாக வாக்குச்சாவடிக்கு சென்று தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக, தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச நகர பேருந்து வசதியை அறிவித்துள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியான பிரவீன்குமார், மதுரை மாவட்டத்தில் இதற்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேபோல், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

மேலும் படிக்க | தங்கம், வெள்ளி வாங்கும் முன்.. கவனிக்க வேண்டிய 2 முக்கிய விஷயங்கள்!

இலவச பேருந்து பயணம்: யாருக்கெல்லாம் அனுமதி?

தேர்தல் நாளான ஏப்ரல் 23ம் தேதியன்று, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்கள் கட்டணமில்லா பயண டோக்கன்களை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எந்தவித கட்டணமுமின்றி பயணம் செய்யலாம். இலவச பயணத்தை மேற்கொள்ள விரும்பும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பேருந்து நடத்துநரிடம் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் சில ஆவணங்களை காண்பித்து இலவச பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். 

முதியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன், தங்களின் வயது மற்றும் அடையாளத்தை உறுதி செய்யும் ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை அட்டை அல்லது நலவாரிய அட்டை ஆகிய அரசு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம். இந்த இலவச பயண சலுகையானது, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை, அதாவது வாக்குப்பதிவு நடைபெறும் நேரம் முழுவதும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கே வரும் இலவச வாகன வசதி

பேருந்துகளில் கூட பயணிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்கள், உடல் இயக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் வீல்சேர் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தல் ஆணையம் ஒரு சிறப்பான வசதியை செய்துள்ளது. இவர்கள் தங்கள் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சென்று, வாக்களித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வரை பிரத்யேக வாகன வசதியை தேர்தல் ஆணையமே இலவசமாக வழங்குகிறது. இந்த வசதியை பெற விரும்புவோர், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சக்சம் என்ற மொபைல் செயலி மூலமாகவோ, அல்லது 1950 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்புகொண்டோ முன்பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

100 சதவீத வாக்குப்பதிவு இலக்கு

ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது என்பதை உணர்த்தும் வகையிலும், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைபாடுகளை காரணம் காட்டி யாரும் வாக்களிக்காமல் இருந்துவிட கூடாது என்பதற்காகவுமே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கும் வனத்துறையின் உதவியுடன் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி, மூத்த குடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் ஏப்ரல் 23ம் தேதி தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனத் தேர்தல் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. தேர்தல் நாளில் யார் யாருக்கெல்லாம் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை உண்டு?  

பதில்: வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதியன்று, 60 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்கள் மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் (பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் உட்பட) நகரப் பேருந்துகளில் முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

2. இந்த இலவச பயணத்திற்குத் தனியாக டோக்கன் அல்லது அட்டை வாங்க வேண்டுமா?  

பதில்: இல்லை. முதியவர்கள் தங்களிடம் இருக்கும் கட்டணமில்லா பயண டோக்கன்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அடையாள அட்டையைக் காண்பித்து நேரடியாகப் பேருந்து நடத்துநரிடம் கட்டணமில்லா பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 

3. பேருந்தில் பயணிக்க என்னென்ன ஆவணங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும்?  

பதில்:  
 முதியவர்கள்: வாக்காளர் அடையாள அட்டையுடன், வயதை உறுதிப்படுத்தும் ஆதார் அட்டையைக் காண்பிக்க வேண்டும். 
 மாற்றுத்திறனாளிகள்: வாக்காளர் அடையாள அட்டையுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.

4. இந்த இலவசப் பயணச் சலுகை எந்த நேரம் வரை அமலில் இருக்கும்?  

பதில்: வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை, சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இந்தச் சலுகை அமலில் இருக்கும். அரசு விரைவுப் பேருந்துகளில் இந்தச் சலுகை கிடையாது.

மேலும் படிக்க | மீனவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு - தமிழ்நாடு அரசின் மூன்று அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report
Advertisement

நடுவானில் 4 மணிநேரம்... உயிரை கையில் பிடித்திருந்த பயணிகள் - விமானத்தில் நடந்தது என்ன?

Hubballi, Karnataka:

Fly91 Hyderabad Hubbali Flight Issue, Viral Video: விமானப் பயணத்தின் மூலம் உங்களால் விரைவாக ஒரு இடத்தில் மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும்.  பல்வேறு பயன்கள் விமான பயணத்தில் இருந்தாலும், அதன் விலை அதிகம் என்பதை தாண்டி, விமானத்தில் பயணிக்க பலருக்கும் நிச்சயம் பயம் இருக்கும்.

கதறி அழுத பெண் பயணி

ரயில், பேருந்து, கார், இருச்சக்கர வாகனம் என அனைத்திலும் விபத்து ஏற்படும் என்றாலும் விமானப் பயணம் பலருக்கும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது. அந்த வகையில், விமானத்தில் பயணித்த இந்தியப் பெண் ஒருவர், விமானத்தில் இருந்துக்கொண்டு அச்சத்தில் நடுங்கி, கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

நடுவானில் 4 மணிநேர போராட்டம்

Fly91 விமானத்தில் அந்த பெண்மணி பயணித்துள்ளார். மோசமான வானிலை காரணமாக, சுமார் நான்கு மணிநேரத்திற்கு அந்த விமானம் வானத்திலேயே வட்டமிட்டுள்ளது. இதனாலேயே அந்த பெண் அச்சத்தில் உறைந்துவிட்டார், உயிரை காப்பாற்றும்படி கடவுளிடம் மன்றாடுவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. 

அந்த வீடியோவில் அந்த பெண் மட்டுமின்றி, சுற்றி இருந்த பயணிகள் பலரும் பயத்தில் அலறுவதை கேட்க முடிகிறது. நடுவானில் சுமார் நான்கு மணிநேரம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்ததை அந்த வீடியோவை பதிவு செய்த பெண்ணின் கண்களிலேயே தெரிந்தது.

விமானி அறிவுரையும், பயணிகளின் அலறலும்...

வைரலான அந்த பெண்ணின் வீடியோவின் மூலம் விமானி பயணிகள் மத்தியில் பேசுவதையும், அதற்கு பயணிகள் அச்சத்தில் பதிலளிப்பதையும் கேட்க முடிகிறது. 

விமானி: நாங்கள் முயற்சித்து வருகிறோம். அமைதியாக இருக்கவும், அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். 

பயணிகள்: பைலட்டை பெங்களூருக்கு போகச் சொல்லுங்கள். அல்லது குறைந்தபட்சம் பெல்காமிற்கு நாம் போகலாம். 

மற்றொரு பயணி: ஆம், அது பக்கத்தில் தானே இருக்கிறது.

பயணிகளின் இந்த உரையாடலின் மூலமே அவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதை உணர முடிகிறது. 

விமானத்தில் நடந்தது என்ன?

Fly91 ஏர்லைன்ஸின் விமானம் IC3401 (ATR turboprop AT7) நேற்று மதியம் மூன்று மணிக்கு ஹைதராபாத் நகரின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் மாலை 4.30 மணிக்கு சென்றிருக்க வேண்டும். 

ஆனால் விமானம் ஹூப்பள்ளி விமான நிலையத்தை நெருங்கிய போது வானிலை மோசமாகி உள்ளது. இதனால், தரையிறங்காமல் விமானம் வானத்திலேயே வட்டமிட்டுள்ளது. சுமார் நான்கு மணிநேரத்திற்கு வானத்திலேயே வட்டமிட்டிருக்கிறது. 

4 மணிநேரம் எங்கு வட்டமிட்டது?

முண்ட்கோட், தாவணகெரே, சிவமொக்கா உள்ளிட்ட பகுதிதகளில் சுமார் நான்கு மணிநேரத்திற்கு விமானம் வட்டமிட்டிருக்கிறது. அதன்பின் நிலைமைச் சமாளித்து, பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எப்போது, எங்கு தரையிறங்கியது? 

பல்வேறு முயற்சிகளுக்கு பின், பயணிகளின் பதைபதைக்கு நடுவே அந்த விமானம் பெங்களூருவின் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு 7.30 மணிக்கு தரையிறக்கப்பட்டது.

பயணிகளின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

இந்த விமானத்தில் பயணித்த விமானிகளின் குடும்பத்தினர் Fly91 விமான நிறுவனத்தின் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். முறையான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அலட்சியம் காரணமாக, முறையான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. 

ஆனால், விமான நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. மேலும் விமானத்தில் எந்தவொரு தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை என்றும் விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.

விமான நிறுவனம் கொடுத்த விளக்கம்

இதுகுறித்து Fly91 விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில ஊடகங்களில் செய்தியாக வருவது போல், ஹைதராபாத் நகரில் இருந்து ஹூப்பள்ளி நகருக்குச் சென்ற IC3401 விமானத்தில் எந்தவிதமான தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை. 

அந்த விமானம் ஹைதராபாத் நகரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டது. ஹூப்பள்ளியை நெருங்கும்போது மோசமான வானிலை காரணமாக விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர், விமானம் மீண்டும் ஹூப்பள்ளிக்குத் திரும்பி, அங்கிருந்து ஹைதராபாத் நகரில் உள்ள சொந்த தளத்திற்கே திரும்பியது.

பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை. விமானத்தை ஹூப்பள்ளிக்கு மேலே பறக்கவைத்து, பெங்களூருவுக்கு திருப்பிவிடுவது வழக்கமான இயக்க நடைமுறையின் ஒரு பகுதியாகும். இது விமானத் துறையால் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும்" என தெரிவித்துள்ளது. 

எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கப் பயிற்சி பெற்ற மிகவும் திறமையான விமானிகள், விமானப் பணிப்பெண்கள் மற்றும் தரைப் பணியாளர்கள் அடங்கிய குழு தங்களிடம் இருப்பதாகவும், தங்களது பாதுகாப்பு சாதனைப் பதிவு குறைபாடற்றது என்றும் Fly91 நிறுவனம் விளக்கம் அளித்தது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

0
0
Report

குஷியில் CSK... நெட் ரன்ரேட்டில் அடிவாங்கிய LSG - புள்ளிப்பட்டியல் அப்டேட்

Tira, Punjab:

IPL 2026, PBKS vs LSG: ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை, 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணி இத்தொடரில் இதுவரை தோற்கவே இல்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 

0
0
Report

விருதுநகரில் பயங்கர வெடிவிபத்து: 22 பேர் உயிரிழப்பு... முதல்வர் இரங்கல்

Allampatti, Kooraikundu, Tamil Nadu:

Virudhunagar Fireworks Explosion Latest News Updates: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள வனஜா என்ற தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு மருந்துகள் பயங்கரமாக வெடித்து சிதறியதால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டது.

சிகிச்சையில் 6 பேர்

வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு அறைகள் முற்றிலும் தரைமட்டமானது. இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

பணியில் இருந்த 30 பேர்

முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில் இந்த திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தகவல் கூறப்படுகிறது.

விபத்தின் காரணம்

பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த சம்பவ இடத்தில் எஸ்பி ஸ்ரீநாதா ஆய்வு செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட X பதிவில்,  "விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். 

இதுகுறித்து அவரது X பதிவில், "விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டார். 

மேலும் ஆளும் திமுக ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்தார். அதில், "கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டன. இதுகுறித்து நானும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசு.

மாறாக, பட்டாசு ஆலை என்ற பெயரில் ஒரு பளபளக்கும் அறையில் போட்டோஷூட் மட்டுமே எடுத்தார். இன்னும் சில நாட்களில் அமையவுள்ள அதிமுக அரசு இப்படியெல்லாம் ஏமாற்றாமல், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன் இரங்கல்

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விருதுநகர் விபத்து குறித்து அவரது X பதிவில், "விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கட்டனார்பட்டியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில், இதுவரை 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

இக்கொடூர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்" என தனது இரங்கலையும், ஆறுதலையும் பதிவுசெய்தார்.

கோடை காலத்தில் கூடுதல் கவனம் தேவை

மேலும், கோடைகாலம் துவங்கிவிட்ட நிலையில் வெடிமருந்துகளைப் புழங்கும் பட்டாசு ஆலைகள் அதீத கவனத்துடன் செயல்படுவதோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை இரங்கல்

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 14 பேர் உயிரிழந்துள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்துள்ளவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தேர்தல் சிறப்பு ரயில்... இதோ உங்களுக்காக - தென் மாவட்ட வாக்காளர்களே மிஸ் பண்ணாதிங்க!

மேலும் படிக்க | தென் மாவட்ட மக்களே... சம்மர் லீவுக்கு சிறப்பு ரயில் - எங்கெல்லாம் நிற்கும்?

மேலும் படிக்க | 2021ல் உதவியது போல 2026லும் உதவுகள்.. மோடி, அமித்ஷாவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் - திருச்சி சிவா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

0
0
Report
Advertisement
Advertisement
Back to top