icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

இன்று எந்தெந்த ராசிகளுக்கு நல்ல நாள்...? ஜூலை 4 ராசிபலன் இதோ!

Chennai, Tamil Nadu:

மேஷம்

கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

ரிஷபம்

தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலை காணப்படும். கல்வி சார்ந்த துறைகளில் இருப்போருக்கு முன்னேற்றம் உண்டாகும். கால்நடை செயல்களில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த தெளிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : நுட்பங்களை அறிவீர்கள்.
மிருகசீரிஷம் : தெளிவுகள் ஏற்படும்.

மிதுனம்

மனதில் தேவையில்லாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சிகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். கடன் முயற்சிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சிகள் ஏற்படும்.
திருவாதிரை : அனுபவம் மேம்படும்.
புனர்பூசம் : திருப்பங்கள் உண்டாகும்.

கடகம்

உத்தியோக பயணங்களால் அலைச்சல் இருக்கும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய சில பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : அலைச்சல் இருக்கும்.
பூசம் : சோர்வுகள் உண்டாகும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

சிம்மம்

கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். பழகும் தன்மையில் சில மாற்றம் ஏற்படும். தோற்றப்பொலிவு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : வேறுபாடுகள் குறையும்.
பூரம் : நெருக்கடிகள் குறையும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

கன்னி

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது மனதிற்கு நல்லது. உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : புரிதல் உண்டாகும்.
அஸ்தம் : அமைதியான நாள்.
சித்திரை : முடிவுகள் கிடைக்கும்.

துலாம்

முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்வீர்கள். நாவல் பற்றிய ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்
சித்திரை : பாராட்டுக்கள் ஏற்படும்.
சுவாதி : வேறுபாடுகள் விலகும்.
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

மனை மற்றும் வீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். வியாபாரம் நிமித்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
விசாகம் : ஆர்வம் மேம்படும்.
அனுஷம் : நெருக்கடிகள் குறையும்.
கேட்டை : செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு

தாய் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : திருப்தியான நாள்.

மகரம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். இலக்கிய பணிகளில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் சில மாற்றம் ஏற்படும். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : கலகலப்பான நாள்.

கும்பம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் அமைதி இன்மை ஏற்படும். சமூக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். கற்றல் பணியில் புதுமையான சூழ்நிலைகள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
சதயம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : புதுமையான நாள்.

மீனம்

வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : குழப்பங்கள் விலகும்.
ரேவதி : அனுகூலம் ஏற்படும்.

பொறுப்புத் துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது

0
0
Report

அனிதா ராதாகிருஷ்ணன் கைது... தவெக ஆட்சியில் கைதாகும் முதல் திமுக Ex அமைச்சர் - பின்னணி என்ன?

Authoor, Tamil Nadu:

Anitha Radhakrishnan Arrested : திருச்செந்தூரில் கடந்த ஜூன் 20ஆம் தேதி அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை ஒருமையில் பேசியதாகவும், அவதூறாக பேசியதாகவும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நகரச் செயலர் செல்வம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் போலீசார் இன்று (ஜூலை 3) கைது செய்தனர்.

0
0
Report
Advertisement

ஆணவம் அழிவிற்கு வழி... CM விஜய்க்கு ஸ்டாலின் வார்னிங் - அனிதா கைதுக்கு கொந்தளிப்பு

Chennai, Tamil Nadu:

MK Stalin Condemn Anitha Radhakrishnan Arrest : முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளில் தூத்துக்குடி மாவட்ட ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்தது.

ஸ்டாலின் கண்டனம்

இதைத் தொடர்ந்து, ஆத்தூர் பேரூராட்சி பகுதிக்கு ஆய்வுக்காக வந்திருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரது கைது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அனிதா ராதாகிருஷ்ணனின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Take Diversion அரசு

ஸ்டாலன் அவரது பதிவில், முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு என்றும்; தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் புகாரில்...

மேலும் ஸ்டாலின் அவரது பதிவில், "சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதான் மாற்றமா...?

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா? என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாற்காலியை தக்கவைக்க...

அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர் என விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கனிமொழி கண்டனம்

'ஆணவம் அழிவிற்கு வழி!' என்றும் ஸ்டாலின் தனது பதிவின் கடைசியில் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமின்றி தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழியும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அவர் தனது X பதிவில், "முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு என்றும் இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் திமுக அடிபணியாது என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

0
0
Report

கரூரில் மக்களை கொன்றது போலீஸ்... ஸ்டாலின் தான் காரணம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகீர்

Salavankuppam, Tamil Nadu:

Minister Aadhav Arjuna About Karur Stampede : தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா மாமல்லபுரத்தில் இன்று (ஜூன் 2) நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம் ஆனந்த், திருச்சியைச் சேர்ந்த வளர்மதி உள்ளிட்ட ஏராளமானோர் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

பிரம்மாண்டமாக நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விழாவில், அமைச்சரும், தவெக தேர்தல் பிரச்சார மேலாணஅமைப்பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். 

"கரூர் விவகாரத்தில் தனிப்பட்ட கணக்கு ஒன்று உள்ளது. அந்த கணக்கை தீர்க்காமல் விடமாட்டோம். கரூரில் காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள். கரூர் மக்களின் கண்ணீரால்தான் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்றார்" என பகீரங்கமாக திமுக மீதும், ஸ்டாலின் மீதும் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டி உள்ளார்.

0
0
Report
Advertisement

செந்தில் பாலாஜி தலைமறைவு...? கரூரில் சல்லடை போட்டு தேடும் போலீஸ் - அடுத்தது என்ன?

Karur, Tamil Nadu:

Senthil Balaji Abscond : அடுத்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சாபநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசியதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரில், தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இளைய சகோதரர் அசோக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை போலீசார் கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, பண்ணை உள்ளிட்ட இடங்களிலும் சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கரூரில் உள்ள இடங்களில் செந்தில் பாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் செந்தில் பாலாஜி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால் செந்தில் பாலாஜி நேரடியாக செய்தியாளர்களை சந்திப்பார், ஆனால் இதுவரை அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. விரைவில் கைதாகலாம் என்றும் கூறப்படுகிறது.

திமுகவில் இதுதொடர்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.  

0
0
Report

வாட்ஸ்அப் கொண்டுவந்த புதிய வசதி... மத்திய அரசு போட்ட திடீர் தடை - என்ன காரணம்?

New Delhi, Delhi:

Whatsapp Username Feature: வாட்ஸ்அப் செயலியில் மொபைல் எண் இல்லாமல் தொடர்புகொள்ளும் புதிய Username அம்சத்தை கொண்டுவர மெட்டா நிறுவனம் முடிவெடுததுள்ளது. இதற்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மொபைல் எண் இல்லாதபட்சத்தில் சைபர் மோசடி குற்றவாளிகளை கண்காணிப்பதில் சைபர் கிரைம் பிரிவிற்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், Username அம்சம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும்; இந்தாண்டின் கடைசியில் படிப்படியாக வெளியிடப்படும் என்றும் வாட்ஸ்அப் தெளிவுப்படுத்தி உள்ளது.

எனவே, இந்த மூன்று நாள்களுக்குள் இந்த அம்சம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கலந்தாலோசனைகள் முடியும் வரை இந்தியாவில் இதை செயல்படுத்தாமல், நிறுத்தி வைக்குமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தனியுரிமை, பாதுகாப்பு, மோசடி தொடர்பான சாத்தியமான பிரச்னைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

0
0
Report

விஜய் கரூர் போகும் முன்... கைதாகிறாரா செந்தில் பாலாஜி...? திமுகவை முந்தும் தவெக!

Chennai, Tamil Nadu:

Tamil Nadu Politics, Senthil Balaji : தவெக எம்எல்ஏக்கள் 15 பேரைத் தூக்க முயற்சி நடந்து வந்ததாகவும், தவெகவில் 20 எம்எல்ஏக்கள் வரை அவர்களிடம் பேரம் பேச முயற்சிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக எம்எல்ஏவிடம் நடத்தப்பட்ட பேரத்தில் செந்தில் பாலாஜி பெயர் மற்றும் தவெக எம்எல்ஏவிடம் நடத்தப்பட்ட பேரத்தில் செந்தில் பாலாஜி பெயர் அடிபட்டுள்ளது.

முன்னதாக, ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசி, தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறி IDPS திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

40 நாள்களாக நடக்கும் பேரம்

அப்போது பேதிய அவர், "சற்று நேரத்துக்கு முன்பாக சென்னை காவல் துறையில் இருந்து உங்களுக்கு செய்தி ஒன்று வெளிவந்திருக்கும். 40 நாட்களாக நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம், திமுகவும் ஸ்டாலினும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இன்றைய செய்தி குறிப்பு அதன் வெளிப்பாடாகவே வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க | குதிரை பேரக் குற்றச்சாட்டு: முதமைச்சர் விஜய், வைகோவுக்கு எதிராக ஆளுநரிடம் திமுக பரபரப்பு புகார்!

திமுகவை சேர்ந்த முக்கியமான நபர் செந்தில் பாலாஜி போன்றவர்கள், ஸ்டாலின் மற்றும் உதயநிதியின்  உத்தரவு பேரில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து 10 கோடி ரூபாய் தருகின்றோம், 20 கோடி ரூபாய் தருகிறோம் என்று எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த 40 நாட்களாக தொடர்பு கொண்டு வருகின்றனர். 

கையும் களவுமாக கைது

நாங்கள் கண்டிப்பாக இத்தனை சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்போம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவர்களிடம் மறுக்கையில் அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர்.

எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயர் மிரட்டியவர் தற்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குதிரை பேரத்தில் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ அவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.

ரூ.50 கோடி வரை பேரம்

குறிப்பாக நரேஷ் மற்றும் தியாகராஜன் என்ற இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நரேஷ் என்பவர் செந்தில் பாலாஜியுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். இதை போன்ற கேவலமான கீழ்த்தரமான பணிகளை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின், செந்தில் பாலாஜி போன்ற நபர்களை பயன்படுத்தி 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசும் போக்கினை முழு நேரமாக ஈடுபட்டு வருகின்றனர்

அடுத்து வரும் கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது வைக்கப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் திமுகவுக்கு ஆதரவாக l வாக்களிக்க வேண்டும் என பேரம் பேசி உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நபர்கள் புகார் அளித்துள்ளனர்.

குறுக்கு வழியில் முயற்சிக்கும் இபிஎஸ்

லட்சக்கணக்கான கோடியை  திமுக ஆட்சியில் கொள்ளையடித்து விட்டு எப்படியாபாது சட்டமன்ற உறுப்பினர்களை வாங்கிவிடலாம் என்று முயற்சி செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று இவர்களுடன் இணைந்து செயல்படுகிறார். 

இது போன்ற கீழ்த்தனமான செயல்களில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சட்டபூர்வமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நேரடியாக செந்தில் பாலாஜியுடன் பயணிப்பவர்கள் அவருடைய கரூர் நிறுவனத்தில் யாரெல்லாம் பணிபுரிந்து இருக்கிறார்களோ மற்றும் அவருடைய கரூர் கேங் நபர்கள் மீது நடவடிக்கை சட்டபூர்வமாக எடுக்கப்படும்.

மேலும் படிக்க | 'திமுக ஆட்சியில் ஊழல்... பொதுப்பணித்துறையில் முறைகேடு' அமைச்சர் ஆதவ்வின் அதிரடி அறிவிப்பு

ஸ்டாலினுக்கு வெட்கம் இல்லையா?

இது மாதிரியான குதிரை பேரத்தினை நிறுத்த வேண்டும், இது போன்ற குதிரை பேரத்தில் ஈடுபட்டு விட்டு மறுபக்கம் எங்கள் மீது புகார்களை தெரிவிக்கும் ஸ்டாலினுக்கு சிறிதளவும் வெட்கம் இல்லையா...?
இதற்கு தான் மக்கள் உங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர். உங்களுடன் பயணித்த கூட்டணி கட்சிகள் உங்களை விட்டு வெளிவந்து விட்டனர். இந்தக் குதிரையை பேரத்தில் கூட வெற்றி பெற முடியாமல் இருக்கிறார் ஸ்டாலின்.

தற்பொழுது செந்தில் பாலாஜியின் நெருங்கிய நபர் கைதாகி உள்ளதால் செந்தில் பாலாஜி தொடர்பான குற்றங்கள் நமக்கு வெளி வருகிறது. ஆனால் இதைப் போன்று எத்தனை பேர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என யாருக்கு தெரியும்?

நாளை தேர்தல் வந்தாலும் தவெக வெல்லும்...

ஸ்டாலின் இதனை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் உங்கள் மாவட்ட செயலாளர்கள் போல் ஒரு தொகுதிக்கு 200 கோடி ரூபாய், ஆயிரம் கோடி ரூபாய் என்று நாங்கள் செலவளிக்கவில்லை. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெறும் மூன்று அல்லது நான்கு லட்சம் ரூபாய் மட்டுமே செலவழித்தனர். அடுத்த தேர்தலிலும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படிதான் வெற்றி பெறுவார்கள் 

மக்கள் அனைவரும் எங்கள் மீது 100 சதவீதம் நம்பிக்கை வைத்துக்கொண்டு வாக்களித்துள்ளனர் , எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். இன்று அல்லது நாளை தேர்தல் வந்தாலும் அதில் நாங்கள் சந்தித்து நாங்களே வெற்றி பெறுவோம்.

அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் 

திராவிட கழகம் ஆட்சியில் கடந்த ஐந்து வருடமாக மக்களுக்கு செய்த அநீதிகள் மற்றும் தீங்கின் காரணமாகவே நீங்கள் தோல் தேர்தலில் தோல்வி அடைந்தீர்கள். அதனை உணர்ந்துகண்டு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

உங்களை (ஸ்டாலின்) போல் இதுவரை முதலமைச்சர் வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் தோல்வியடைந்தது கிடையாது, இதுதான் மக்கள் உங்களுக்கு கொடுத்த பாடம். ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் அல்லது நீங்கள் முன்பாக முடிவு செய்தது போல் திமுக - அதிமுக இணைந்து பாரதிய ஜனதா கட்சியிடம் சேர்ந்து அரசியல் ஆதாயத்தை தேடி சொல்லுங்கள். 

அரசியல் எதிர்காலம் இல்லை

திமுக குதிரை பேரம் பேசும் நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிந்தவுடன் ஆளுநருக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும். தன் நபர்கள் இல்லை என்று ஆதாரத்தை மட்டும் காட்ட வேண்டியது தானே...? திமுக - அதிமுக இடையே கூட்டணி என்ற பேச்சுவார்த்தையின் காரணமாகவே கூட்டணி கட்சிகள் வெளியேறினர். அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளில் யாருக்கும் அரசியல் எதிர்காலம் இல்லை. 

ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பது சிறிய காரியம் கிடையாது. மக்களை சந்திக்க விடாமல் செய்தது ஸ்டாலின் மற்றும் எடப்பாடி ஆகிய இருவர் மட்டுமே. அதன் காரணமாகவே இரு கட்சிகளில் இருந்து வெளியேறி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொள்கின்றனர். எடப்பாடி முதல்வர் ஆக்குவதற்கு முயற்சிக்கிறோம் என ஸ்டாலின் கூறினால் எந்த கூட்டணி கட்சிகள் அவருடன் பயணிக்க தயாராக இருப்பார்கள்.

மகனை வைத்து பயிற்சி

மு.க. ஸ்டாலின் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு எந்த வேலையும் பார்க்காமல் எப்படியாவது பொறுப்பினை பணம் கொடுத்து வாங்கி விட வேண்டும் என இந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படியாவது குறுக்கு புதியில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியும் என்று நினைத்தால் அது முடியாது.

உங்கள் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் உங்கள் மகனை வைத்து பயிற்சி மேற்கொண்டீர்கள். அரசியலுக்கு அது வெற்றி பெற முடியவில்லை, இன்று அவர் துபாயில் இருக்கிறார். துபாயில் உதயநிதிக்கு என்ன வேலை?. முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் பயிற்சி தாருங்கள், நீங்களே கடைசி வரை அரசியல்வாதியாக ஆக முடியவில்லை.

திமுக கதை முடிந்துவிட்டது

இன்னைக்காவது ஸ்டாலின் தலைமையிலான அரசு என்று சொல்லி இருக்கிறாரா? திராவிட மாடல் அரசு என்றுதான் சொல்லி இருக்கின்றார். ஏனென்றால் அவருக்கே அந்த தைரியம் கடைசி வரை வரவில்லை. இப்போதும் நாங்கள் சொல்கின்றோம் திமுகவுடைய அத்தியாயம் இத்துடன் முடிவடைந்துவிட்டது. என்றைக்கு அதிமுகவுடன் சேர்ந்து பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று எண்ணம் வந்ததோ அன்றே திமுக உடைய அத்தியாயம் முடிவடைந்துவிட்டது" என பேசியிருந்தார்.

செந்தில் பாலாஜி கைதா...?

இவ்வாறு அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அடுக்கி உள்ளார். இருப்பினும் இதுகுறித்து திமுக தரப்பிலோ அல்லது செந்தில் பாலாஜி தரப்பிலோ இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

வரும் ஜூலை 10 மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் விஜய் கரூருக்குச் செல்வதற்குள் செந்தில் பாலாஜி மற்றும் அவரது இளைய சகோதரர் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்படலாம் என்றும் பேசி உள்ளனர்.

தொடர்ந்து சோபா மாடல், குதிரை பேரம் என தவெக மீது திமுக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது திமுகவை மிஞ்சும் அளவுக்கு தவெக குற்றஞ்சாட்டை அடுக்கி உள்ளது. இதற்கு திமுகவின் பதில் என்ன என்பதே அரசியல் களத்தில் தற்போதைய கேள்வியாக உள்ளது.

மேலும் படிக்க | விஜய் ஆட்சியை கவிழ்க்க... செந்தில் பாலாஜி சதி...? - 3 பேர் கைது - இதுவரை நடந்தது என்ன?

0
0
Report
Advertisement

பொறியியல் தரவரிசை பட்டியல் வந்தாச்சு... ரேங்கிங் எண்ணை தெரிந்துகொள்வது எப்படி? முழு விவரம்

Chennai, Tamil Nadu:

TNEA Ranking List 2026 : பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று (ஜூலை 1) வெளியிடப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின் பேசிய அமைச்சர் விஸ்வநாதன் பல்வேறு தகவல்களை வெளியிட்டார். தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு விண்ணப்பப் பதிவு செய்ய கட்டணம் செலுத்திய மாணவர்களின்  எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிர்தது 235 என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | VB GRAM G Act : புதிய 125 நாள் வேலை திட்டத்தின் 8 முக்கிய நன்மைகள் என்ன? முழு விவரம்

இதில் தரவரிசை எண் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? 

  • மாணவர்களின் எண்ணிக்கை: 1 லட்சத்து 30 ஆயிரத்து 767 
  • மாணவிகளின் எண்ணிக்கை: 1 லட்சத்து 5 ஆயிரத்து 245 
  • மூன்றாம் பாலினத்தவர்: 5 பேர்
  • மொத்த எண்ணிக்கை: 2 லட்சத்து 36 ஆயிரத்து 17 பேர்

7.5% இட ஒதுக்கீடு விண்ணப்பம்

  • இந்த ஆண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 50 ஆயிரத்து 494 மாணாக்கர்கள் விண்ணப்பித்துள்ளனர். 
  • இதில் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 46 ஆயிரத்து 604 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு பிரிவில் எத்தனை பேர் விண்ணப்பம்? 

  • இந்த ஆண்டு விளையாட்டு பிரிவின் கீழ் 7,981 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். 
  • அவர்களின் விளையாட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 3 ஆயிரத்து 210 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த கல்வியாண்டில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர் பிரிவின் கீழ் 1,176 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
  • மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 500 மாணாக்கர்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

200க்கு 200 கட் ஆப்

200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 53. அதில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணாக்கர்கள் 39 மற்றும் மற்ற தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 14.

தரவரிசை எண்ணை தெரிந்துகொள்வது எப்படி?

  • மாணவ, மாணவியர் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
  • இணையதளத்திற்கு சென்றதும் TNEA 2026 Rank List என முகப்பு பக்கத்தில் இருக்கும் இணைப்பை கிளிக் செய்யவும்.
  • அடுத்து தரவரிசையின் PDF திரையில் தெரியும்.
  • அதை தரவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | VB-G RAM G: இன்று முதல் 125 நால் வேலை திட்டம் அமல், தமிழக அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்

பெயர் இல்லாத மாணவர்கள் கவனத்திற்கு...

மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்து, தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் 6 நாட்களுக்குள் (ஜூலை 6ஆம் தேதிக்குள்) தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்தினை (TFC's) அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்யலாம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அவகாசம்

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்திற்கு கோராமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று ஜூலை 6ஆம் தேதிக்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம்.

சந்தேகங்களை தீர்க்க தொடர்பு எண்

  • மாணாக்கர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தினை தொலைபேசி (1800-425-0110) வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
  • இதுவரையில் அழைப்பு மையத்தினை தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 843 என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதேபோல், tneacare@gmail.com  என்ற மின்னஞ்சலை பயன்படுத்து 10 ஆயிரத்து 125 மாணாக்கர்களும் மற்றும் நேரடியாக 1,497 மாணாக்கர்களுக்கும் தங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளனர்.

மேலும் படிக்க | திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் புதிய கட்டுப்பாடு அமல், மொபைல் போனுக்கு தடை

0
0
Report
Advertisement

'வாழ முடியல, சேர்ந்து சாகலாம்' காரில் பாம் போட்டு இறந்த காதலன்... வெளியே குதித்து தப்பிய காதலி

Tumakur, Karnataka:

Bengaluru Bizarre News : கர்நாடகா மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூருவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார். அவரை பெங்களூருவை சேர்ந்த நாகேந்திரா என்பவர் காதலித்து வந்துள்ளார்.

இருவருக்கும் சமீபத்தில் பிரேக் அப் நடந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் காதலியை சந்தித்து, மீண்டும் உறவை ஏற்படுத்திக்கொள்ள ஆசை ஆசையாய் பெங்களூருவில் இருந்து வாடகை காரை நேற்று (ஜூன் 27) முன்பதிவு செய்துள்ளார் நாகேந்திரா.

மேலும் படிக்க | தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவி, சுட்டுக் கொன்ற கணவன்: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

வலுகட்டாயமாக கடத்தல்

பெங்களூரு ஜெயாநகரில் உள்ள அந்த பெண்ணின் வாடகை வீட்டிற்கே நேரடியாக சென்றிருக்கிறார் நாகேந்திரா. காரில் தன்னுடன் வரும்படி நாகேந்திரா கேட்டுள்ளார். நாகேந்திரா மீது பெரிதாக பற்று இல்லாத அப்பெண் முதலில் நாகேந்திராவுடன் காரில் பயணிக்க மறுத்துள்ளார். 

இந்நிலையில், அந்த காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றிருக்கிறார் என காவல்துறையினர் குற்றஞ்சாட்டினார். பெண் காணாமல் போனதாக ஜெயாநகர் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர், அவரை கடத்திச் சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

காரில் நடந்த பேச்சுவார்த்தை

துமகூரு மாவட்டத்தின் சிரா தாலுகாவில் அங்கோலா பகுதியை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுள்ளது. அப்போது நைசாக நாம் திருமணம் செய்துக்கொள்ளலாமா என பேச்சை தொடங்கினார். நாகேந்திரா மீது பயம் ஒருபக்கம் இருக்க, மெதுவாக முடியாது... செட் ஆகாது என அந்த பெண் மறுத்து பேச ஆரம்பித்தார். இதை தாங்கிக்கொள்ள முடியாத நாகேந்திரா... சரி உனக்கும் வேணா... எனக்கும் வேணை.. என்னுடன் வாழ பிடிக்கா பரவால... சேர்ந்தே சாவோம்... என சினிமா வசனத்தை பேசியுள்ளார்.

பதறிப்போன டிரைவர்

அந்த நொடியில், இதை கேட்ட டாக்ஸி டிரைவர் பிரவீன் கதிகலங்கிபோனார். அடுத்து என்ன செய்வது என யோசிப்பதற்குள், நாகேந்திரா கையில் கத்தியை எடுத்து ஆருயிர் காதலியை தாக்கினார். காரை நிறுத்த முற்பட்ட பிரவீனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. நாகேந்திரா தனது கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்கச்செய்ய மும்முரம் காட்டினார்.

மேலும் படிக்க | டெல்லியில் கொடூரம்: 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கேப் டிரைவர்

காருடன் பற்றி எரிந்த நாகேந்திரா

கண் மூடி திறப்பதற்குள் சமயோசித புத்தியால் அப்பெண் கார் கதவை திறந்து வெளியே குதித்துவிட்டார். சூழ்நிலையை புரிந்துக்கொண்ட டிரைவர் பிரவீனும் காரை நிறுத்திவிட்டு வெளியே குதித்தார். அடுத்த நொடியே வெடிகுண்டு வெடித்து, காரும் சிதறி வெடித்தது. இதில் நாகேந்திரா காருடன் பற்றி எரிந்து உயிரிழந்தார்.

இருவர் உயிர் தப்பினர்

இந்த கொடூர சம்பவத்தில் அப்பெண்ணும், டிரைவரும் சிறு காயங்களுடன் உயர் தப்பினர். சம்பவ இடத்தை துமகூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். வெடிப்புக்கான காரணம், பயன்படுத்தப்பட்ட வெடிபொருளின் தன்மை மற்றும் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணை

நாகேந்திரா வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்றதாகவும், அவரே அதை வெடிக்க வைத்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என துமகூரு காவல் கண்காணிப்பாளர் அசோக் கே.வி. தெரிவித்தார். வாகனத்தில் இருந்து வெடிகுண்டு போன்ற வெடிபொருளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த வெடிப்பொருளின் தன்மை, அது எவ்வாறு வெடித்தது அல்லது வெடிக்கவைக்கப்பட்டது, அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடைபெறுகிறது.

மேலும் படிக்க | சாக்கடையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. பாஜக கவுன்சிலரின் வினோத வீடியோ! வைரல்

0
0
Report

காவ்யா மாறன் - அனிருத் திருமணம் விரைவில்... பிரபல நடிகர் சொன்ன தகவல்

Chennai, Tamil Nadu:

Kavya Maran - Anirudh Marriage : பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து அறிய பொதுமக்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. அதுவும் அவர்களின் திருமணம் மற்றும் காதல் சார்ந்த தகவல்களை அறியவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள், இதில் ஆண், பெண் வித்தியாசம் ஏதுமில்லை.

அந்த வகையில், அனிருத் - காவ்யா மாறன் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக, இதுவரை சமூக வலைதளங்களில் அரசல்புரசலாக பரப்பப்பட்ட வந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பேசி உள்ளார். இதன்மூலம் விரைவில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிகிறது.

மேலும் படிக்க | காவ்யா மாறன் - அனிருத் இடையே வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

இது அனிருத்தின் சகாப்தம்

பிரபல இசையமைப்பாளரான அனிருத் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இவரது இசையமைப்பில் தயாரான ஜனநாயகன் ரிலீஸிற்கு காத்திருக்கிறது. 

அடுத்து DC, ஜெயிலர் 2 ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாக காத்திருக்கின்றன. மேஜிக், தி பாரடைஸ் என இரண்டு தெலுங்கு படங்களும் இந்தாண்டு வெளியாக உள்ளன.

வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் அரசன், ஷாருக்கானின் கிங் (இந்தி) என தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களிலும் அனிருத் பணியாற்றி வருகிறார். 

அடுத்தடுத்து ரஜினி - அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் தர்மன், அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் இணையும் AA23, கமல் - ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் KH x RK படத்திலும் அனிருத் ஒப்பந்தமாகி உள்ளார்.

வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 திரைப்படங்கள் அனிருத் இசையில் வெளியாகும். இந்தாண்டில் கடைசியாக வெளியான LIK திரைப்படம், அவருக்கு 41வது திரைப்படமாகும். 35 வயதான அனிருத் அடுத்தாண்டு அவரது 15வது ஆண்டு திரைவாழ்வை நிறைவு செய்ய உள்ளார்.

மேலும் படிக்க | ரூ. 1 கோடி வசூல் செய்த பாக்யராஜ் படம் - தமிழ் சினிமாவில் முதல்முறை... எது தெரியுமா?

3 அணிகளை கவனிக்கும் காவ்யா

மறுபுறம் 33 வயதான காவ்யா மாறன், சன்ரைசர்ஸ் அணிகளின் உரிமையாளராக உள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்ட்ரன் கேப், இங்கிலாந்தின் The hundred தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் உள்ளிட்ட அணிகளை காவ்யா மாறன் கவனித்து வருகிறார்.

சன் குழுமத்தின் நிறுவனத் தலைவரான கலாநிதி மாறனின் ஒரே மகள் தான் காவ்யா மாறன்.  சன்ரைசர்ஸ் அணிகளை மட்டுமின்றி சன் டிவி நெட்வொர்கிலும் காவ்யா மாறன் முக்கிய பொறுப்பை வகிக்கிறார்.

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்?

அவரவர் துறையில் பெரும் உச்சத்தில் இருக்கும் காவ்யா - அனிருத் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வருவதாக தகவல்கள் கசிந்தன. அவர்கள் வெளிநாடுகளில் ஒன்றாக இருப்பது போன்ற உறுதிப்படுத்தப்படாத புகைப்படங்களும், வீடியோகளும் இணையத்தில் அவ்வப்போது பரவும்.

ஒய்.ஜி. மகேந்திரன் சொன்ன தகவல்

இந்தச் சூழலில், பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் காவ்யா மாறன் - அனிருத் திருமணம் குறித்த தகவலை தற்போது தெரிவித்துள்ளார். அனிருத் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென திருமண டாப்பிக்கை தொட்ட ஒய்.ஜி. மகேந்திரன், "நானும் கேள்விப்பட்டதை வைத்துதான் சொல்கிறேன், கண்டிப்பாக அது நடக்கும். அந்த பொண்ணு (காவ்யா மாறன்) ஒண்ணும் சாதாரண பொண்ணு இல்லை.

அவ்வளவு பெரிய டீமை பார்த்துக்கொள்ள முடிகிறது என்றால் அவரது அப்பாவின் வியாபார மூளையை பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மியூஸிக்கல் பிசினஸ் பண்ணுவாங்க" என சொல்லியிருந்தார். ஒய்.ஜி. மகேந்திரன் பேசும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒய்.ஜி. மகேந்திரன் - அனிருத் ஆகியோர் உறவினர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | அனிருத்துக்கு வெளிநாட்டில் திருமணம்? தடபுடலான ஏற்பாடு..பொண்ணு யாரு?

0
0
Report
Advertisement
Advertisement
Back to top