பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
3 வயது குழந்தைக்கு எமனாய் மாறிய நிலக்கடலை: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
Malappuram, Kerala:மலப்புரம், கேரளா: கேரளாவின் மலப்புரம் குன்னுப்புரத்தில் உள்ள தனது வீட்டில், தற்செயலாக வேர்க்கடலை தொண்டையில் சிக்கியதால் மூன்று வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திங்களன்று நடைபெற்ற நிலையில், உள்ளூர் காவல்துறையினர் இதனை புதன்கிழமையன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
மலப்புரத்தில் நடந்த விபரீதம்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், வேர்க்கடலை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறி மூன்று வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். சிறுவன் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதில் இருந்த ஒரு வேர்க்காலை அவனது தொண்டையில் சிக்கி மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனின் மூச்சுக் குழாயில் வேர்க்கடலை பருப்பு ஒன்று சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்ட சிறுவன், மூச்சுத் திணறலால் மயக்கமடைந்தாக வெங்கரா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் துயரச் சம்பவத்தை உள்ளூர் காவல்துறையினர் புதன்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.
மேலும் படிக்க | வாங்சுக் போராட்டத்தை நீடித்தால் 2 நாட்களில் உயிரிழப்பு? நீதிமன்றத்தில் அவசர வழக்கு!
அவசர சிகிச்சையும் பயனிறி போனது
சிறுவன் மயங்கி விழுந்ததைக் கண்ட குடும்பத்தினர் அச்சிறுவனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், சிறுவனின் சுவாசத்தை மீட்டெடுக்கவும் தொண்டையில் சிக்கியிருந்த வேர்க்கடலையை அகற்றவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இருப்பினும், மூச்சுக் குழாயில் நீண்ட நேரம் அடைப்பு இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை; அவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அக்குடும்பத்தினரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோருக்கான முக்கிய எச்சரிக்கை
இச்சம்பவம் சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு ஒரு தீவிர எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளின் சுவாசப் பாதைகள் மிகவும் குறுகியதாக இருப்பதால், உலர் பழங்கள், வேர்க்கடலை மற்றும் பாப்கார்ன் (பொரித்த சோளம்) போன்ற பொருட்கள் அவற்றில் எளிதில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. மருத்துவ ரீதியாக இந்நிலை 'சோக்கிங்' (choking - மூச்சுக்குழாய் அடைப்பு) என்று அழைக்கப்படுகிறது.
பெற்றோருக்கான அறிவுறுத்தல்
குழந்தைகள் சாப்பிடும்போது உடன் இருப்பது மிக அவசியம்.
பெரிய அளவில் உள்ள உணவுப்பொருட்களை உடைத்து அல்லது நசுக்கி கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வெண்டும்.
பெரிய, கூரான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு அளிப்பதை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | இந்தியாவின் முதல் ஹைட்ரோஜென் ரயில்! டிக்கெட் விலை என்ன? எந்த ரூட்டில் இயங்கும்?
சுப்மான் கில் காயம்... ஓடிஐ கேப்டனாகும் ஷ்ரேயாஸ் ஐயர்... பிளேயிங் 11-ல் பெரிய மாற்றம்
England:Shubman Gill Injury, IND vs ENG ODI : இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த சில வாரங்களாகவே தொடர் தோல்விகள் மட்டும்தான் இருந்துவந்தன. அயர்லாந்து அணிக்கு எதிராக 0-2, இங்கிலாந்து அணிக்கு எதிராக 0-4 என டி20ஐ கிரிக்கெட்டில் தொடர் தோல்விகள்.
இவை அனைத்திற்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், நேற்று (ஜூலை 14) இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது.
259 ரன்கள் இலக்கு
பந்துவீச்சில் 4 விக்கெட்டையும், பேட்டிங்கில் 57* ரன்களையும் எடுத்த அக்சர் பட்டேல் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இங்கிலாந்து பேட்டிங்கில் ஜோ ரூட் 76 ரன்களையும், லியம் டாவ்சன் 68 ரன்களையும், டக்கெட் 43 ரன்களை எடுத்து, இந்திய அணிக்கு 259 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.
அதை இந்திய அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து அடித்துவிட்டது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
Another classy knock from Shubman Gill! H#ShubmanGill #TeamIndia #INDvsENG #ODI #IndianCricket #Cricket #CricketReels #Gill80 #FutureCaptain #CrickflixByDixit #BCCI #EnglandVsIndia #CricketFans #ViratKohli #RohitSharma pic.twitter.com/K1mW5P4P11
— CrickflixbyDixit (@cricflixbydixit) July 15, 2026
சுப்மான் கில் காயம்
ஆனால், கேப்டன் சுப்மான் கில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். ஷ்ரேயாஸ் 35, கேஎல் ராகுல் 1 என ஆட்டமிழந்தனர். சுப்மான் கில் 75 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்ஸர் என 80 ரன்களை எடுத்தபோது ரிட்டையர்ட் ஹர்ட் மூலம் பெவிலியன் திரும்பினார்.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக மும்பை செல்லும் CSK வீரர்! அவரே போட்ட சூசக பதிவு
கடைசி வரை வாஷிங்டன் சுந்தர் - அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று விளையாடி ஆட்டத்தை முடித்துவைத்தது. வாஷிங்டன் 52 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 57 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசி வரை வராத கில்
வலது காலில் திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறிய கேப்டன் சுப்மான் அதன்பின் களமிறங்கவில்லை, இதனால் அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அவர் வெளியேறிய பின்னர் அடுத்தடுத்து கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தாலும் வாஷிங்டன் சுந்தர் - அக்சர் பட்டேல் ஜோடி ஆட்டமிழக்காமல் நின்றது குறிப்பிடத்தக்கது.
சுப்மான் கில்லுக்கு பதில் யார்?
இந்தச் சூழலில், நாளை (ஜூலை 15) கார்டிஃப் நகரில் நடைபெற இருக்கும் இரண்டாவது ஓடிஐ போட்டி நடைபெற இருக்கிறது. இதில் சுப்மான் கில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
ஒருவேளை அவர் விளையாடாதபட்சத்தில் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர், கேப்டன்ஸியை பொறுப்பை பெறுவார். அதேபோல், சுப்மான் கில் இடத்தில் இஷான் கிஷன் இடம்பெற வாய்ப்புள்ளது. அவர் ரோஹித் சர்மாவுடன் ஓபனிங்கில் களமிறங்குவார். இதனால், ஓபனிங்கில் இடது - வலது காம்பினேஷன் கிடைக்கும்.
இஷான் கிஷன் வருகையால் டாப் ஆர்டரில் இடது கை வீரர் ஒருவர் கிடைத்துள்ளார். ரோஹித், விராட், ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் என அடுத்தடுத்து வலது வீரர்கள் உள்ளன. வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், சிவம் தூபே என பின்வரிசையில் இடது கை பேட்டர்கள் நிறைந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க | சிஎஸ்கே புதிய கோச் யார்? பிளெமிங் விலகிய பின் ரேஸில் ஷேன் வாட்சன், அஸ்வின்!
தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்... அடுத்த 7 நாள்களுக்கு அலர்ட் - வானிலை அப்டேட்
Nagalapuram, Tamil Nadu:Tamil Nadu Today Weather Update : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் வெளுத்து வாங்க கூடிய நிலையில் வருகிற வாரம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிகிறது.தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்தாலும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என தெரிகிறது.தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில்...
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இன்றி அதிகபட்ச வெப்பநிலையே காணப்பட்டது. 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை சில இடங்களில் இயல்பிலிருந்து உயர்ந்தும் மற்ற இடங்களில் இயல்பு நிலையே நீடித்தது.
மேலும் படிக்க | 'லஞ்சம் கேட்டா உடனே புகார் கொடுங்க': வாட்ஸ்அப் எண் அறிமுகம், தமிழக அரசு அதிரடி
அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது, குறைந்தபட்சமாக கோயம்புத்தூர் விமான நிலையம்22.6 டிகிரி செல்சியஸ் மற்றும் உதகமண்டலம் 12.6 டிகிரி செல்சியஸ் பதிவானது.
மாவட்டங்களில் பதிவான வெப்பநிலை
- கரூர், திண்டுக்கல், நீலகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது.
- சென்னை, கடலூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட மிக அதிகமாக இருந்தது.
- கோயம்பத்தூர் (விமான நிலையம்), ஈரோடு, கன்னியாகுமரி, தர்மபுரி, நாகப்பட்டினம், சேலம், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் பதிவானது.
வருகிற நாட்களில்...
- இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவான வறண்ட வானிலையே தென்படும்.
- நாளை மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற இடங்கள்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவான வறண்ட வானிலையே காணப்படும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க | இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு.. எப்படி பெறுவது?
- ஜூலை 17 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
- ஜூலை 18 மற்றும் 19 ஆம் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகள்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
- ஜூலை 20 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை எச்சரிக்கை!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாகவே இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை காணப்படும் எனவே வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க | சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு: மாதம் ரூ.63000 சம்பளம்.. இன்னும் 7 நாட்கள் மட்டுமே
'லஞ்சம் கேட்டா உடனே புகார் கொடுங்க': வாட்ஸ்அப் எண் அறிமுகம், தமிழக அரசு அதிரடி
Nagalapuram, Tamil Nadu:Tamil Nadu Government: தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு வாட்ஸ்அப் உதவி எண்ணை (94981 80936) அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைத்து அரசுத் துறைகளும் இந்த வாட்ஸ்அப் எண்ணைத் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முக்கியமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சாய் குமார் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ஊழலுக்கு எதிரான புகார்களைக் குடிமக்கள் எளிதாக அளிக்கும் வகையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (DVAC) இணையதளத்திற்கான நேரடி இணைப்பை வழங்கவும் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குறித்து புகார் அளிக்கலாம்
இனி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எவரேனும் தங்கள் பணிகளை செய்ய லஞ்சம் கோரினால், 9498180936 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் (WhatsApp) செய்தி அனுப்பி அந்த நபர் மீது புகார் அளிக்கலாம்.
ஊழலை ஒழிப்பதற்காக அரசு எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் லஞ்ச ஒழிப்பு தொடர்பான அறிவிப்புப் பலகைகள் தெளிவாகத் தெரியும் வகையில் வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் செவ்வாய்க்கிழமையன்று சுற்றறிக்கை அனுப்பினார்.
மேலும் படிக்க | தமிழ் முக்கிய செய்திகள் Live : காமராஜர் 124வது பிறந்தநாள்; நாகர்கோவிலில் பதற்றம்
காமராஜருக்கு மாலை போட்டாலே பிடிக்காது... காரணம் என்ன தெரியுமா?
Allampatti, Kooraikundu, Tamil Nadu:Kamaraj 124th Birthday: கல்விக் கண் திறந்த காமராஜரின் 124வது பிறந்தநாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு கல்வியில் தற்போது இந்தளவிற்கு முன்னேற்றம் கண்டதற்கு காமராஜர் முக்கிய புள்ளியாக இருந்தார்.
பள்ளியில் மதிய உணவு, இலவச கல்வி, இலவச சீருடை, பள்ளிகளின் உள்கட்டமைப்பை சீர்செய்து, பள்ளிகளை அதிகப்படுத்தியது என காமராஜரின் அன்றைய தொலைநோக்கு திட்டங்களே, தற்போது 80 சதவீதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் படிப்பறிவு பெற்றதற்கான முதன்மை காரணம்.
'கருப்பு காந்தி' காமராஜர்
காமராஜர் சாமானிய மனிதர்களுக்கான தலைவராகவே கடைசி வரை வாழ்ந்து மறைந்தார். எளிய வாழ்க்கை முறையையே அவர் பின்பற்றி வாழ்ந்தார், கடைசிவரை குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் செல்லாமல், திருமணம் செய்யாமலே இருந்தார். காமராஜர் தனது முழு வாழ்வையும் பொது பணிகளுக்கு என தியாகம் செய்தவர்.
நாட்டின் பிரதமராகும் அதிகாரம் இருந்தும், அதனை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்தவர். மெட்ராஸ் மாகாணம் போன்று தென்னிந்தியாவில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் 'காலா காந்தி', அதாவது 'கருப்பு காந்தி' என மக்களாலும், தொண்டர்களாலும் போற்றப்பட்டவர்.
கிங் மேக்கர் காமராஜர்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் 1964ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டுவரை அகில இந்திய தலைவராக இருந்தவர் காமராஜர். இவரது பதவிக்காலத்தில் இந்தியா மூன்று பிரதமர்களை கண்டது. இவர் நேரு பிரதமராக இருந்தபோது தலைவராக பொறுப்பேற்றார், அடுத்து லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராவதற்கு காமராஜர் காரணகர்த்தாவாக இருந்தார்.
தூய்மையான அரசியல்வாதிக்கான இலக்கணம்
1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை 9 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னரே, கட்சிப் பணி ஆற்ற முதலமைச்சர் பொறுப்பை துறந்தார். இன்றும் ஊழலற்ற, தூய்மையான அரசியல்வாதியாக காமராஜர் விளங்குகிறார்.
காமராஜருக்கு பூ மாலை பிடிக்காதது ஏன்?
அப்படிப்பவர்களுக்கு பூ மாலை பிடிக்காது என சொன்னால் நம்ப முடிகிறதா... ஆம்... அவருக்கு பூ மாலைகளே பிடிக்காது. அதற்கு ஒரு சுவாரஸ்ய காரணமும் இருக்கிறது. பூ மாலைகள் பிடிக்காது என்றாலும் அவருக்கு யாராவது கதர் துண்டை பரிசளித்தால் மகிழ்ச்சியாக பெற்றுக்கொள்வாராம்.
மேலும் படிக்க | இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு.. எப்படி பெறுவது?
மதுரா வெளியீடு என்ற பதிப்பகம் வெளியிட்ட, இளசை சுந்தரம் என்பவர் எழுதிய 'காமராஜ் - நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்' என்ற புத்தகத்தில் இதுகுறித்த தகவல்கள் உள்ளன. பூ மாலைகள் ஏன் காமராஜருக்கு பிடிக்காது என்பது குறித்து அவரது உதவியாளர் வைரவன் அளித்த பதிலை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
காமராஜருக்கு பூ மாலை பிடிக்காததற்கு காரணம், அவை அழைத்தும் உடனடியாக குப்பைக்கு போயிடக்கூடியவை, அதனால் பெரிய பலனிலை என்பதும் ஒன்று. அதுமட்டுமின்றி பூக்களில் இருக்கும் புழுக்கள் கழுத்தை கடித்து புண்ணாகும் வழக்கம் இருந்ததாம்.
அதேபோல், மாலைகளில் ஜரிகை நூல் சுற்றப்பட்டிருக்கும், அந்த நூ் கழுத்தில் லேசாக அறுத்து கீறல்கள் ஏற்படுமாம். காமராஜருக்கு நீரிழிவு நோய் இருந்தது. எனவே, இதுபோதல் ஏற்படும் காய்கள், புண்கள், கீறல்களை தடுக்க காமராஜர் பூ மாலைகளை கழுத்தில் சூடிக்கொள்ளாமல், யாராவது கொண்டு வந்தாலும் அதை கைகளிலேயே வாங்கிக் கொள்வாராம்.
கதர் துண்டை ஏற்றுக்கொண்டது ஏன்?
ஆனால், கதர் துண்டு யாராவது அணிவித்தால் அதை மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வாராம். ஏனென்றால் தலைவருக்கு அணிவிக்கப்படும் துண்டுகள் அனைத்தும் 'பால மந்திர்' என்ற அனாதைச் சிறுவர் பள்ளிக்கு அனுப்பப்படும். அது அந்த குழந்தைகளுக்கு உடனடியாக பயன்படும் என்பதாலேயே அவர் கதர் துண்டுகளை விரும்பியிருக்கிறார்.
கணவரை நெரித்துக் கொன்று 3 துண்டுகளாக்கிய பெண்: நவி மும்பையில் கொடூரம்.. 11 மாதங்களுக்குப் பின் சிக்கியது எப்படி?
Navi Mumbai, Maharashtra:Navi Mumbai Crime: நவி மும்பையில் திடீரென காணாமல் போன ஒரு மனிதரின் வழக்கு காவல்துறைக்கு சவாலாக இருந்துவந்த நிலையில், கணவரை காணாமல் மனைவி பட்ட பாடு அனைவரையும் பரிதாபப்பட வைத்தது. 11 மாத கால புலனாய்வு மற்றும் தொடர் விசாரணையின் பலனாக போலீசார் இப்போது அந்த வழக்கின் பின்னுள்ள மர்மத்தை கண்டறிந்துள்ளனர். உண்மை அனைவரையும் உலுக்கிப் போட்டது. ஆம்! காணாமல் போன நபர் அவரது மனைவி மற்றும் மனைவியின் காதலனால் கொல்லப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது!
மர்மத்தை தீர்த்த நவி மும்பை போலீஸார்
நவி மும்பை, ஐரோலியின் யாதவ் நகரில் நடந்த, 11 மாதங்களாகத் துப்பு துலங்காமல் இருந்த ஒரு கொடூரமான கொலை வழக்கை நவி மும்பை போலீஸார் வெற்றிகரமாகத் தீர்த்துள்ளனர். ஒரு 40 வயதுப் பெண்ணும், அவரது காதலன் எனக் கூறப்படுபவரும், அப்பெண்ணின் கணவரைக் கொடூரமாகக் கொன்று, உடலைத் துண்டுகளாக்கி அப்புறப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம், யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட அப்படியே மறைந்திருக்க வேண்டிய ஒரு ஒரு நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரபலே MIDC காவல்துறையினர் இக்கொலை வழக்கை இப்போது தீர்த்துள்ளனர். கொல்லப்பட்ட பலிராமின் மனைவி சுனிதா குஷ்வாஹா (40) மற்றும் அவரது காதலராகக் கருதப்படும் ராகுல் தசரத் பிரஜாபதி (30) ஆகியோரை இக்கொலைக்காக போலீசார் கைது செய்துள்ளனர். 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரவு இக்கொலை நிகழ்த்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதற்கு ஏறக்குறைய 11 மாதங்களுக்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் என்ன?
சுனிதா மற்றும் ராகுல் இடையில் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்துவந்துள்ளது. இதை பாலிராம் கடுமையாக எதிர்த்ததே இந்தக் குற்றத்திற்கான காரணம் என ரபாலே MIDC போலீஸார் கூறுகின்றனர். குடும்பத்தில் மோதல்கள் அதிகரித்த நிலையில், தங்கள் உறவைத் தொடர்வதற்கு தடையாக இருந்த பாலிராமை ஒழித்துக்கட்ட இருவரும் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
கொடூரமான சதித்திட்டம்
தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் முன், சம்பவத்தை நேரில் காண யாரும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, சுனிதாவும் ராகுலும் பாலிராமின் இரண்டு குழந்தைகளையும் அவர்களின் அத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆகஸ்ட் 9, 2025 அன்று இரவு, யாதவ் நகரில் உள்ள தனது வீட்டில் பாலிராம் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்த, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது கழுத்தை அறுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | 17வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்கசுக் உடல்நிலை கவலைக்கிடம்..விவரம்
கணவரின் உடலை துண்டு துண்டாக்கிய மனைவி
பலிராமை கொலை செய்த பின்னர், சுனிதாவும் ராகுலும் பாலிராமின் உடலை வீட்டிற்குள்ளேயே மூன்று பாகங்களாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் பின், உடல் பாகங்களை சாக்குப்பைகள் மற்றும் படுக்கை விரிப்புகளில் கட்டி, ராகுலின் ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு அடர்ந்த காவ்லி தேவ் (Gavli Dev) வனப்பகுதிக்கு அவர்கள் சென்றனர். அங்கு ஆதாரங்களை அழிப்பதற்காக உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசினர்.
மறுநாள் காலையிலேயே, சுனிதா பொய்களைப் பின்னத் தொடங்கினார். தனது கணவர் திடீரென குடும்பத்தைக் கைவிட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக உறவினர்களிடமும் அண்டை வீட்டாரிடமும் கூறினார்.
தனது கடந்த காலத்தை முழுமையாக மறைக்க, யாதவ் நகரில் இருந்த தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, சுனிதா தனது குழந்தைகளுடன் கன்சோலியில் உள்ள ராகுலின் வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். பல மாதங்களுக்கு, இந்தக் குற்றம் அந்தப் பொய்க் கதையின் பின்னால் மறைந்திருந்தது.
சகோதரருக்கு வந்த சந்தேகம்
பலிராமின் சகோதரர் தங்கள் சொந்தக் கிராமத்திலிருந்து வந்தபோதுதான் இந்தக் சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியது. பலிராம் திடீரென மாயமானார் என்ற கதையை நம்ப மறுத்த அவர், பல வித கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது விடாமுயற்சியின் காரணமாக, உண்மையான கொலை நடந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 2026-ல் ரபலே எம்.ஐ.டி.சி (Rabale MIDC) காவல் நிலையத்தில் பலிராம் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
துப்பு கிடைக்காத வழக்கை காவல்துறை எவ்வாறு தீர்த்தது?
ரபலே எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் தேவிதாஸ் கதோலே, இவ்வழக்கு ஆரம்பத்தில் நேரடி ஆதாரங்களோ அல்லது உடலோ இல்லாத, துப்பு கிடைக்காத ஒரு கொலை வழக்காக இருந்ததைக் குறிப்பிட்டார். இருப்பினும், அர்ப்பணிப்புடன் கூடிய தொழில்நுட்ப ரீதியான விசாரணை நிலைமையை மாற்றியது.
ஆரம்பகட்ட விசாரணையின்போது, சுனிதா கூறிய காலவரிசை மற்றும் வாக்குமூலங்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதை காவல் துறையினர் கவனித்தனர்.
டிஜிட்டல் தடயங்களை அழிக்க, பலி ராம் மாயமான சிறிது காலத்திலேயே சுனிதா மற்றும் ராகுல் இருவரும் தங்கள் அலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகளை மாற்றியிருந்ததை காவல்துறை கண்டறிந்தது. இது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் ஆழமாக்கியது.
புதிய எண்களைப் பயன்படுத்திய போதிலும், சி.டி.ஆர் (CDR) பகுப்பாய்வில், ராகுல் பல ரகசிய தொலைபேசி இணைப்புகள் மூலம் சுனிதாவோடு தொடர்ந்து மற்றும் பிரத்யேகமாகத் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. தனித்தனியான விசாரணைகளின்போது அடுக்கடுக்கான தொழில்நுட்ப ஆதாரங்களை எதிர்கொண்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உடைந்துபோய் கொலையை ஒப்புக்கொண்டனர்.
மேலும் படிக்க | ஓடும் ரயிலில் பூஜை! ஆத்தாடி இத்தனை லட்சம் செலவா? வைரலாகும் வீடியோ
வழக்கின் தற்போதைய நிலை என்ன?
சுனிதாவும் ராகுலும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, உள்ளூர் நீதிமன்றம் சுனிதா குஷ்வா மற்றும் ராகுல் பிரஜாபதி ஆகிய இருவரையும் ஏழு நாள் காவல் காவலில் வைக்க உத்தரவிட்டது.
பலிராமின் எலும்புக்கூட்டு எச்சங்களை மீட்க, கரடுமுரடான கவ்லி தேவ் மலை மற்றும் வனப்பகுதியில் காவல்துறை குழுக்கள் சவாலான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளன. உடல் பாகங்கள் வீசப்பட்டு ஏறக்குறைய 11 மாதங்கள் கடந்துவிட்டதால், அந்த எச்சங்களை மீட்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று போலீசார் ஒப்புக்கொள்கிறார்கள். இது குறித்த மேலதிக விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
கலியுகம் பலியுகமாக மாறிவருகிறது. ஒருவருடன் வாழ பிடிக்காவிட்டால் விலகிச்செல்லலாம். அவரை அழித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற அவசியம் என்ன? இப்படிப்பட்ட வழக்குகள் மனித மனதின் கொடூர பக்கத்தை வெளிச்ச்சம் போட்டு காட்டுகின்றன. முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக அறியப்பட்ட இப்படிப்பட்ட நிகழ்வுகள், இப்போது தினம் தினம் நம் கண்முன் நடக்கின்றன.
இந்த வழக்கில் பலிராமின் சகோதரரின் விடாமுயற்சியால் அவரது கொலையாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இப்படி எத்தனை பேர் மவுனமாக சடலமாகிப்போனார்களோ? இந்த வழக்கை பொறுத்தவரை, 11 மாதங்களுக்கு பிறகு பலிராம் காணாமல் போனதற்கான காரணம் அறிந்த அவரது ஊர் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நாகர்கோவில் கைதி மரணம்: உடலில் 19 இடங்களில் காயம்... வெளியான ஷாக் ரிப்போர்ட்
Nagercoil, Tamil Nadu:Nagercoil Lockup Death Updates : கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் விசாரணை கைதியாவார். இவர் நாகர்கோவில் சிறையில் போலீசாரின் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்தார் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
சாத்தான்குளம் சம்பவத்தை போன்து தனது கணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என சபரிவர்மனின் மனைவி புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடந்த பிரதேச பரிசோதனையில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன.
அவரின் கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும்; வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கை, கால்களை கட்டிப் போட்டு தாக்கியதற்கான அடையாளம் உள்ளது என்றும்; தலை, பின் கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சபரிவர்மன் மரணமடைந்த விவகாரத்தில் சிறை வார்டன் உட்பட சிறைக் காவல்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரண விவகாரத்தில் கைதான சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடைநம்பி ஆகிய மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து நெல்லை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. செந்தாமரை உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | முதலமைச்சர் விஜய்க்கு, மு.க.ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கை
மேலும் படிக்க | நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.. செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்.. என்ன மேட்டர்?
மேலும் படிக்க | நல்லா பேசுனான் இப்ப செத்துட்டான்! அவன அடிச்சே கொன்னுட்டாங்க! லாக்-அப் மரணம்?
பைனலில் ஸ்பெயின்... பிரான்ஸ் அணிக்கு பெரிய ஷாக் - எம்பாப்பே ஏமாற்றம்
Arlington, Texas:FIFA World Cup 2026, France vs Spain : 2018 பிபா உலகக் கோப்பை தொடரின் சாம்பியன், 2022 பிபா உலகக் கோப்பை தொடரின் ரன்னர் அப் அணியாக விளங்கும் பிரான்ஸ் அணி, இந்த முறை அரையிறுதியோடு வெளியேறியிருப்பது கால்பந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
FIFAWorldCup pic.twitter.com/zHvMlH6k3q
— FIFA World Cup (@FIFAWorldCup) July 14, 2026
ஸ்பெயின் அணி 2வது முறையாக பிபா உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இதற்கு முன் 2010ஆம் ஆண்டில் இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது கோப்பையை நெருங்கி உள்ளது.
மாற்றுத்திறனாளிக்கு இரண்டு மணி நேரத்தில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய கலெக்டர்!
Pudukkottai, Tamil Nadu:புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகேசன் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில், கலெக்டர் அருணாவை நேரில் சந்தித்து எனக்கு மூன்று சக்கர சைக்கிள் தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பரிசளித்த கலெக்டர் அருணா இரண்டே மணி நேரத்தில் ரூபாய் 14 ஆயிரம் மதிப்புள்ள, மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளி முருகேசன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார். அப்பொழுது அங்கிருந்த பொது மக்களையும் அலுவலர்களையும் கலெக்டரின் செயலால் மகிழ்ச்சி அடைந்தனர்.France vs Spain : முதல் செமி பைனலில் வெற்றி யாருக்கு...? - பலம், பலவீனம் என்ன?
Arlington, Texas:FIFA World Cup 2026 Semi Final, France vs Spain : பிபா உலகக் கோப்பை 2026 தொடர் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. கிளைமேக்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறப்போவது யார் யார் என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.
முதல்முறையாக பிபா உலகக் கோப்பை தொடர் 48 அணிகளுடன் விளையாடப்பட்டது. குரூப் சுற்று, ரவுண்ட் ஆப் 32 சுற்று, ரவுண்ட் ஆப் 16 சுற்று, காலிறுதிச் சுற்று என இதுவரை 44 அணிகள் வெளியேறிவிட்டன. அரையிறுதிச் சுற்றுக்கு மூன்று ஐரோப்பிய அணிகளும், ஒரு தென்னமெரிக்க அணியும் என 4 அணிகள் தகுதிபெற்றுள்ளன.
மேலும் படிக்க | உலகக்கோப்பை கால்பந்து : அர்ஜென்டினா - இங்கிலாந்து மேட்சை நேரலையில் பார்ப்பது எப்படி?
அரையிறுதிப் போட்டிகள் எப்போது?
இந்திய நேரப்படி வரும் ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவு 12. 30 மணிக்கு பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும்; ஜூலை 16ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள் 2வது அரையிறுதிப் போட்டியிலும் மோதின.
இறுதிப்போட்டி எப்போது?
இதையடுத்து, அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் ஜூலை 19ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு 3வது இடத்திற்கான போட்டியில் மோதும். ஜூலை 20ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
எம்பாப்பே vs யமால்
இந்நிலையில், முதல் அரையிறுதிப் போட்டியில் மோதும் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் இரண்டுமே ஐரோப்பிய அணிகளாகும். எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் தொடர்ச்சியாக 3வது முறையாக இறுதிப்போட்டிக்குச் செல்லுமா அல்லது 18 வயதான லமினே யமால் இருக்கும் ஸ்பெயின் தகுதிபெறுமா என கால்பந்து உலகமே காத்திருக்கிறது.
எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்கும், யமால் பார்சிலோனா அணிக்கும் நேருக்கு நேர் தொடர்ந்து மோதி வருகின்றன. La Liga தொடரில் El Clasico போட்டியில் பலமுறை இருவரும் மோதியிருந்தாலும் முதல்முறையாக உலகக் கோப்பை தொடரில் மோதுகிறார்கள். இதுவரை எம்பாப்பே இடம்பெற்ற அணிக்கு எதிராக விளையாடிய இறுதிப்போட்டியில் யமால் இடம்பெற்ற அணி தோற்றதே இல்லை.
அந்த வகையில், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் இதுவரை நேருக்கு நேர் மோதியதில் யார் அதிக முறை வென்றிருக்கிறார்கள்?; சமீபத்திய போட்டிகளில் எந்த அணி அதிக முறை வென்றிருக்கிறது?; இரு அணிகளின் பலம், பலவீனம், நட்சத்திர வீரர்கள் ஆகியவற்றை இதில் காணலாம்.
பிரான்ஸ் vs ஸ்பெயின் - நேருக்கு நேர் மோதல்
- ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மொத்தமாக இதுவரை 38 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன.
- இதில் ஸ்பெயின் 18 முறையும், பிரான்ஸ் 13 முறையும் வெற்றிபெற்றுள்ளன. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
- இரு அணிகளும் கடைசியாக 2025 UEFA நேஷன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதின.
- அதில் ஸ்பெயின் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது. யமால் அந்த போட்டியில் 2 கோல்களையும், எம்பாப்பே 1 கோலையும் அடித்திருந்தனர்.
- பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் ஸ்பெயின் 3 முறையும், பிரான்ஸ் 2 முறையும் வென்றுள்ளன.
பிபா உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் vs ஸ்பெயின்
இதுவரை பிபா உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் ஒரே ஒரு முறை மட்டுமே மோதி உள்ளன. 2006ஆம் ஆண்டில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில், பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
ஈரோ தொடரில் பிரான்ஸ் vs ஸ்பெயின்
ஈரோ சாம்பியன்ஷிப் தொடரில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் 5 முறை மோதி, இரண்டு அணிகளும் தலா 2 முறை வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
கடைசியாக ஈரோ சாம்பியன்ஷிப் தொடரில், 2024ஆம் ஆண்டின் அரையிறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது. அதில் ஸ்பெயின் அணிக்கு யமால் மற்றும் டானி ஓல்மோ தலா 1 கோலை அடித்தனர்.
மேலும் படிக்க | கால்பந்து மைதான புற்கள் விற்பனை! ஒரு துண்டு புல் விலை ரூ.42 ஆயிரம்
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் - கோப்பைகள், பதக்கங்கள்
பிரான்ஸ்: 1998, 2018 என இரண்டு பிபா உலகக் கோப்பை தொடர்களையும்; 1984, 2000 என இரண்டு ஈரோ சாம்பியன்ஷிப் தொடர்களையும் பிரான்ஸ் வென்றுள்ளது. 1984ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது பிரான்ஸ்.
ஸ்பெயின்: 2010ஆம் ஆண்டில் பிபா உலகக் கோப்பையையும்; 1964, 2008, 2012, 2024 என நான்கு முறை ஈரோ சாம்பியன்ஷிப் தொடர்களையும், ஸ்பெயின் வென்றுள்ளது. அதேபோல், ஸ்பெயின் 1992 மற்றும் 2024 ஒலிம்பிக் தொடர்களில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் - முக்கிய வீரர்கள்
பிரான்ஸ்: எம்பாப்பே (8 கோல்கள், 3 அசிஸ்ட்), உஸ்மான் டெம்பேலே (5 கோல்கள்), மைக்கெல் ஒலிஸ் (5 அசிஸ்ட்)
ஸ்பெயின்: மிக்கேல் ஓயர்சபல் (4 கோல்கள்), மிக்கேல் மொரேனோ (2 கோல்கள்), மார்க் குகுரெல்லா (2 அசிஸ்ட்). யமால் 1 கோல் மட்டுமே அடித்துள்ளனர்.
பலம், பலவீனம்
பிரான்ஸ்: பிராட்லி பார்கோலா, டெம்பேலே, ஒளிஸ் என மூன்று அட்டாக்கிங் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்களுடன் எம்பாப்பே இருப்பது பெரும் பலம்.
ஆனால், குரூப் போட்டிகளில் செனகல், நார்வே அணிகளுக்கு எதிராக கோல்களை கன்சீட் செய்த பிரான்ஸ் அணிக்கு தடுப்பாட்டத்தில் சற்று வீக்னஸ் இருக்கிறது. ஆனாலும் நாக்-அவுட் போட்டிகளில் பிரான்ஸ் அணி ஒரு கோலை கூட கொடுக்கவில்லை.
ஸ்பெயின்: பிரான்ஸ் அணிக்கு தடுப்பாட்டம் சற்று பலவீனம் என்றால், ஸ்பெயின் அணியின் பலமே அதுதான். இதுவரை விளையாடிய 6 போட்டிகளில், ஸ்பெயின் 5 போட்டிகளில் ஒரு கோல் கூட கொடுக்கவில்லை. காலிறுதியில் மட்டுமே பெல்ஜியம் அணிக்கு எதிராக 1 கோலை கொடுத்தது.
ஸ்பெயினின் அட்டாக் என்பது சற்று சொதப்பலாகவே உள்ளது. கடைசி இரண்டு போட்டிகளிலும் மெரினோவின் கடைசி நேர கோல்கள் மூலமே ஸ்பெயின் வெற்றிபெற்றது. யமால் துடிப்புடன் விளையாடும்பட்சத்தில் நிச்சயம் ஸ்பெயின் அணியால் அரையிறுதியில் வெல்ல முடியும்.
மேலும் படிக்க | FIFA WC : கடைசி 5 முறை... Golden Boot விருது வாங்கியவர்கள் யார் யார்? மெஸ்ஸி இல்லை
ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கவில்லை - சென்னை வந்ததும் விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி
Chennai, Tamil Nadu:EV Velu Slams CM Vijay Allegation : திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக ரூ.3.23 கோடி டெண்ட் முறைகேடு வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 25ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், எ.வ.வேலு தொடர்புடைய பல மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஜூலை 3ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.
ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத எ.வ.வேலு, தான் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் வந்திருப்பதாக அவரது வழக்கறிஞர் மூலம் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். இருப்பினும் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் இருந்து தப்பிக்கவே வெளிநாடு சென்றார் என சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவின.
இந்தச் சூழலில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு இன்று (ஜூலை 12) தாயகம் திரும்பினார். சென்னையில் வந்து இறங்கியதும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தனது சிங்கப்பூர் பயணத்தின் காரணம் குறித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
எ.வ. வேலு சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டியில், "நான் ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கவில்லை. திமுக அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை. 2016ஆம் ஆண்டு முதலே சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைககு சிகிச்சைக்காக சென்று வருகிறேன்" என விளக்கம் அளித்தார்.
நேற்று முன்தினம் (ஜூலை 10) கரூரில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், செந்தில் பாலாஜி ஓடி ஒளிந்துவிட்டார் என்றும்; இன்னொருவர் வெளிநாட்டுக்குச் சென்று பதுங்கிவிட்டார் என்றும் எ.வ. வேலுவை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். 'சிங்கப்பூருக்குச் செக்-அப்பிற்கு போனாருல்ல அவருதான்' என எ.வ. வேலு பெயர் குறிப்பிடாமல் முதல்வர் விஜய் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற பாடகி எஸ்.ஜானகி காலமானார்... கண்ணீர் கடலில் இந்திய திரையுலகம்
Mysuru, Karnataka:Veteran Singer S Janaki Passed Away : பிரபல பின்னணி பாடகியான எஸ். ஜானகி, கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார்.
விஜய்யின் முதுகு தான்... கரூர் மக்களின் நினைவுச்சின்னம்... சிவசங்கர் கொடுத்த பதிலடி
Chennai, Tamil Nadu:SS Sivasankar Slams CM Vijay Latest News : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
முதலமைச்சர் விஜய் இன்று கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியது குறித்து எஸ். எஸ். சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரூரில் தவெக சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க | கரூர் கூட்டநெரிசல் : காவல்துறை அலர்ட் செய்யாதது ஏன்? - CM விஜய் கேட்ட கேள்விகள்
அதை குறிப்பிட்டு பேசிய எஸ்.எஸ். சிவசங்கர், "முதுகில் இருக்கிற கறையை மறைப்பதற்கு மற்றவர்களை குற்றம் சொல்வது தான் தன்னுடைய வழக்கம் என்பது போல, காவல்துறையும், காவல்துறைக்கு அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் எல்லாம் வழிகாட்டினார்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அதேபோல, அவர் இன்னும் திரைப்படத்தை விட்டு வெளியில் வரவில்லை.
'ஓடு... ஓடு... ஓடு...' என்று அதுக்கு வேற சைகை காட்டுகிறார். அதுக்கு எங்களுடைய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மிக அழகாக பதில் சொல்லி இருக்கிறார். 'ஓடு... ஓடு... ஓடு...' என்று கரூர் சம்பவம் நடந்த அன்னைக்கு சம்பவம் முடிந்த பிறகு, கரூரில் இருந்து சென்னைக்கு ஓடி வந்தது யார் என்று நாட்டிற்கே தெரியும். அந்த 'ஓடு... ஓடு... ஓடு...' அவர்தான் உதாரணம் என்று சொல்லி இருக்கிறார்.
மிக அழகான பதில். அதேபோல, கரூரில் நினைவுச் சின்னம் அமைப்போம் என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே மக்கள் மனதில் அந்த நினைவுச் சின்னம் இருக்கிறது. திருச்சி விமான நிலையத்தில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள், 'சார்... சார்... சார்...' என்று கூப்பிடும் போது, அந்த ஒரு வேக நடை போட்டாரே, இன்றைக்கு சொன்ன அந்த "ஓடு... ஓடு... ஓடு...", அந்த முதுகு கரூர் மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நினைவுச் சின்னமாக அவர்கள் மனதில் இருக்கிறது.
நீங்கள் அமைக்கப்போகும் நினைவுச் சின்னம் காலா காலத்திற்கும் நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்தும். ஒரு நடிகர் பிரச்சாரத்திற்கு வருகிறேன் என சொல்லிவிட்டு, நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்த காரணத்தினால் 41 பேர் உயிர் இழந்தார்கள் என்பதையும் நினைவுபடுத்தும். இன்றைக்கு நேரத்திற்கு சென்றதுபோல் அன்றும் சென்றிருந்தால் இவ்வளவு பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.
5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை... தவெகவுக்கு குட்டு... ஹைகோர்ட் அதிரடி
Chennai, Tamil Nadu:Madras High Court : நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் சென்னையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் இரண்டு தொகுதியில் போட்டியிட்டார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல கரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்திருந்தார்கள்.
5 பேர் மீது வழக்கு
இவர்களை போன்று, தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் உள்ளிட்ட இருவரும் ராஜினாமா செய்தார்கள். மொத்தம் 7 தொகுதிகள் காலியானது.
இதில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய ஐந்து தொகுதிகளில் அந்த வெற்றியை எதிர்த்து, முறையே முதலமைச்சர் விஜய், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்ட அந்த ஐந்து பேரின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
உயர் நீதிமன்றத்தில் மனு
எனவே இவர்கள் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த பொதுநல வழக்கு மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருண் குமார் முன்புஸ இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது.
மனுவில் குறிப்பிடப்பட்டது என்ன?
- இந்த வழக்குகளில் தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்னிறுத்தியுள்ளனர்.
- ஆனால் இடைத்தேர்தலை நடத்தி எம்எல்ஏ-வை தேர்ந்தெடுத்தப்பின், தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்து வேட்பாளராக வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்துவிட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற நிலை ஏற்படும்.
- இதனால் இந்த வழக்கு, தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட அந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே 1967ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை உள்ள பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மனுதாரர் முன்வைத்த வாதம்
இந்த தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் தரப்பில், தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்திற்கு வரப்பெறவில்லை. ஆனால் இந்த வழக்கின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க இயலாது என்று தெரிவித்தனர்.
அரசு தரப்பு வாதம்
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடும் போது, "தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அவர்கள் ராஜினாமா செய்யும்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை, அதற்குப் பிறகுதான் இந்த வழக்கு எல்லாம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் தரப்பு வாதம்
அதேபோன்று முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கும்போது, "இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ள தொகுதியின் வாக்காளராக இல்லாத ஒரு மனுதாரர் ஒருவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார், அவ்வாறு தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
அனைத்துத் தரப்பினரையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை இன்று காலை தீர்ப்பைத் தள்ளி வைத்திருந்தனர். இன்று மாலை தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தீர்ப்பு விவரம்
- ஜனநாயக நடைமுறையில் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்த கேள்வி பொருந்தாது.
- ஆனால் தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது என்பது அரசுப் பணம் செலவிடப்படுவதோடு, ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகும்.
- எனவே இந்த வழக்கு முடியும் வரை இதில் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் உள்ளது.
- இதனையடுத்து 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட, தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாகக் கருத வேண்டியதில்லை.
- இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு, தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், முதலமைச்சர் விஜய், எம்எல்ஏ-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் மூன்று வாரக் காலத்தில் பதிலளிக்க வேண்டும்.
- இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.
அதுவரை இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதித்து இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்டநெரிசல் : காவல்துறை அலர்ட் செய்யாதது ஏன்? - CM விஜய் கேட்ட கேள்விகள்
Karur, Tamil Nadu:CM Vijay Karur Speech : கரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கரூரின் வெண்ணெய்மலை பகுதியில் நடந்த தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசினார்.
அப்போது கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்தும் அவர் சில கருத்துகளை தெரிவித்தார். 41 பேர் உயிரிழந்த அச்சம்பவம் தவெகவுக்கு எதிராக தீட்டப்பட்ட சதி என மீண்டும் ஒரு முறை விஜய் பேசியுள்ளார்.
மேலும் அவர் சில கேள்விகளையும் எழுப்பி உள்ளார். "பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டும் என காவல்துறை கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல்துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?.
நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்துவிட்டது காவல்துறையினர்தான். இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனச் சொல்லி பிரஷர் போட்டது யார்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேநேரத்தில், "நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே... எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என திமுகவை தாக்கி பேசினார்.
மேலும் அவர், "ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மனதளவில் சில காயங்கள், வலிகளை மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும்விட வலியும் காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான்" என்றார்.
நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரான சதியை, சூழ்ச்சியை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
