icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

இலங்கையை சதம் அடித்து மிரட்டிய... வடசென்னை 'ஆபத்பாந்தவன்' - யார் இந்த வி.கே. வினீத்?

Western Province:

Who Is VK Vineeth? : 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி தொடர் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியை விளையாட இளம் இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள ஹம்பாந்தோட்டா நகரின் மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் திட்டமிடப்பட்ட நிலையில், ஜூலை 4ஆம் தேதி ஒருநாள் தொடர் தொடங்கியது

முதல் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில், 2வது போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என சமனடைந்தது.

மேலும் படிக்க | கிளாசனை தர்றோம்.. இந்த 2 வீரரை தாங்க! சிஎஸ்கே-விடம் டீல் பேசிய SRH

அன்வே டிராவிட் விளையாடவில்லை...

இந்த தொடரில் ராகுல் டிராவிட்டின் அன்வே டிராவிட் மகன் விளையாடுவதால் கவனம் பெற்றது, அவரும் 2வது போட்டியில் 87 ரன்களை குவித்திருந்தார். ஆனால், 3வது போட்டியில் அன்வே டிராவிட் விளையாடவில்லை.

சொதப்பிய தொடக்கம்

தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் யஷ்பர்தன் சவுகான் 6 ரன்களிலும், விக்கெட் கீப்பரான ரஜத் பாகேல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியாவை காப்பாற்றிய பார்ட்னர்ஷிப்

ஓபனிங் சொதப்பினாலும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வி.கே. வினீத் மற்றும் லக்ஷயா ராய்சந்தானி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதில் வி.கே. வினீத் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஜோடி 117 பந்துகளுக்கு 108 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ஆபத்பாந்தவன் வினீத்

ராய்சந்தானி 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்தவர்கள் வினீத்திற்கு ஓரளவு பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய வினீத் 116 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இக்கட்டான நிலையில் விளையாடி வந்த இந்திய அணிக்கு, தமிழக வீரர் வினீத் ஆபத்பாந்தவனாக விளங்கினார்.

மேலும் படிக்க | IND vs ENG 4th T20: இந்தியா பிளேயிங் 11ல் சஞ்சு சாம்சன், அதிரடி வீரர் நீக்கம்? சூர்யவன்சி இல்லை!

131 ரன்களை குவித்த வி.கே. வினீத்

சதம் அடித்த பின்னரும் அதிரடி காட்டிய வினீத், 43வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசரடித்தார். அடித்து ஆட முயன்று, 45வது ஓவரில் வினீத் ஆட்டமிழந்தார். அவர் 136 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 131 ரன்களை பதிவு செய்திருந்தார்.

மற்ற பேட்டர்களும் ஓரளவு பங்களிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களை குவித்தது. தற்போது இந்திய அணி பந்துவீசி வருகிறது.

யார் இந்த வி.கே. வினீத்?

  • இந்த போட்டியை வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை கைப்பற்றும். இந்த முக்கிய போட்டியில் சதம் அடித்த வி.கே. வினீத், தமிழ்நாட்டின் வடசென்னை பகுதியைச் சேர்ந்தவர். 
  • பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் வி.கே. வினீத். 
  • வினீத் 2025ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் முத்தரப்பு தொடரில் முதல்முறையாக விளையாடினார். அத்தொடரில் இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிகள் விளையாடின.
  • 2025-26 வினோ மன்கட் கோப்பை தொடரில், வினீத் தமிழ்நாடு அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 488 ரன்களை குவித்தார், அதிகபட்சமாக 139 ரன்களை பதிவு செய்திருந்தார். அத்தொடரில் அதிக ரன்களை குவித்தவரும் இவரே.
  • அத்தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வினீத் 63 ரன்களை குவித்து கவனம் பெற்றார். தற்போது இலங்கையில் நடைபெறும் ஒருநாள் தொடரில் 2வது போட்டியில் களமிறங்கி 24 ரன்களை எடுத்திருந்த அவர், இன்றைய போட்டியில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
  • தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, வினீத்தை ரூ.2.8 லட்சத்திற்கு எடுத்துள்ளது. இடதுகை பேட்டரான இவர், ஆஃப்-ஸ்பின்னராகவும் அறியப்படுகிறார்.
  • வினீத் டிஎன்பிஎல் தொடரில் ரன்களை குவித்து, விரைவில் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்றும்; நிச்சயம் இந்திய சீனியர் அணிக்கும் விளையாடுவார் என்றும் இவரது பயிற்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | 3 RCB வீரர்களை தூக்கும் பிசிசிஐ.. கம்பீருக்கு நெருக்கடி! IND அணியில் நடக்கப்போகும் மாற்றம்

0
0
Report

மின்வெட்டு காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டதா? - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

Chennai, Tamil Nadu:

Minister Rajmohan Latest News : சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில், தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாளை ஒட்டி நடைபெறும் அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஜூலை 9) திறந்து வைத்தார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கினார்.

அதன் பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அறிவியல் தமிழ் தந்தை முஸ்தபாவின் பணி என்பது மிகவும் அளப்பரியது. அவரின் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை வைத்தது என்பது மிகவும் சிறப்புக்குரியது. பல ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்ததை தந்தவர்.

பள்ளிகளில் கட்சி நிகழ்வுகள் கிடையாது...

மேலும், பள்ளிகளில் எந்த கட்சியினராக இருந்தாலும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் மேற்கொள்ள தடை உள்ளது. அதையும் மீறி கட்சி சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதற்கு சட்டபூர்வமாக பதில் அளிப்போம்" என்றார்.

மேலும் படிக்க | டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! 25% சம்பள உயர்வு; கெடுபிடி ரூல்ஸ்..! விவரம் என்ன..?

மின்வெட்டால் பள்ளி விடுமுறையா...?

தொடர்ந்து பேசிய அமைச்சர், "மின்சார பிரச்சனை என்பதை தாண்டி பள்ளிகளில் எந்த சுழலிலும் தேவையின்றி  விடுமுறை விடக் கூடாது. காஞ்சிபுரத்தில் மின்வெட்டு காரணம் காட்டி தனியார் பள்ளி விடுமுறை விடப்பட்டதா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.

நோயாளிகளுக்கு பாதிப்பு வராது...

அதேபோல் மருத்துவமனைகளில் நோயாளிகளில் பாதிப்படையும் நிகழ்வுகள் ஏதேனும் நடைபெற்றிருந்தால் வருத்தம் தெரிவித்த அமைச்சர், அறிவியல் தமிழ் அறிஞர் முஸ்தபா பிறந்தநாள் நிகழ்ச்சி என்பதால் மருத்துவமனையை விட வேறு பொறுத்தமான இடம் இருக்காது என்பதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் வரும்போது நோயாளிகளுக்கு தொந்தரவு தரக்கூடிய எந்த நிகழ்வும் இல்லை. அதுபோன்ற நடவடிக்கை இருந்தால், இனி வரும் காலங்களில் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்கிறேன்" என்றும உறுதியாளித்தார்.

மேலும் படிக்க | TN Power Cut: தமிழகத்தில் நாளை (10-07-2026) மின்தடை.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட் இங்கே!

தனியார் பள்ளி கட்டண பட்டியல்

மேலும், "தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு தண்டனை என்ற முறையில் சில கடுமையான சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர்கள் நமது குழந்தைகள். ஆகையால் மனிதாபிமானத்தோடு மாணவர்களை கையாள வேண்டும்.

நீதிமன்றம் மற்றும் அரசின் சார்பில் ஏற்கனவே பள்ளியில் கட்டண பட்டியலை வெளிப்படையாக வைக்க வேண்டும் என கூறியுள்ளோம். அதன்படி வைக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற பல முன்னெடுப்புகள் எடுக்கப்படும். மாணவர்களுக்கு பலபேர் பயிற்சிகள் வழங்கப்படும்.

பெரம்பூர் மாணவி மாதவிடாய் பிரச்னை

சென்னை பெரம்பூரில் மாதவிடாய் காலத்தில் மாணவி ஒருவரை வெளியே நிற்க வைத்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "அது வேண்டுமென்று நடைபெற்ற சம்பவம் அல்ல, மாணவியின் பெற்றோர்கள் வர தாமதமாகிவிட்டது. மாணவி அன்று வீட்டுக்கு செல்வதற்காக காத்திருந்தார்" என விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க | தொடரும் பவர் கட்... எப்போது விடிவுகாலம்? - சிடிஆர் நிர்மல் குமார் சொன்ன பதில்

0
0
Report

தொடரும் பவர் கட்... எப்போது விடிவுகாலம்? - சிடிஆர் நிர்மல் குமார் சொன்ன பதில்

Chennai, Tamil Nadu:

Minister CTR Nirmal Kumar : சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் தொடரமைப்பு கழக கட்டடத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்  முன்னிலையில் தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டார்..

பின்னர் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடர் மின்வெட்டு இருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "இது சம்பந்தமாக ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். எதனால் மின் தட்டுப்பாடு வருகிறது என்று சொல்லி இருக்கிறோம்.

மின்தடை ஏன்...? அமைச்சர் விளக்கம்

ஆங்காங்க இருக்கக்கூடிய குறைபாடுகளை வைத்து நிவர்த்தி செய்து வருகிறோம். ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு இருக்கிறது. டிரான்ஸ்பாரம் பிரச்சனையா அல்லது வேறு என்ன பிரச்சனை என்பது குறித்து ஆராய்ந்து சரி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் படிக்க | திமுகவும் தவெகவும் ஒரே அணியில் இருக்க வேண்டும்! திருமாவளவனின் கருத்தால் பரபரப்பு!

பாலவாக்கத்தில் கொஞ்சம் நீண்ட நேரம் ஆனது, அதன் பிறகு அதை சரி செய்து முடித்தார்கள். அதிகமான ஒப்பந்த தொழிலாளர்களை எடுத்து பிரச்சினையை சரி செய்து வருகிறோம். 

அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எடுத்து பிரச்சினையை சரி செய்து வருகிறோம். விரைவில் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மேம்படுத்தினால் தான் நிரந்தர தீர்வு கொடுக்கும் முடியும், அதற்கு சில காலங்கள் எடுக்கும்.

ஐஐடி உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்

நமக்கு நல்ல செயல்முறை மற்றும் கொள்கைகள் வேண்டும். அது இல்லாமல் புது தொழில்நுட்பங்கள் நிறைய இருக்கிறது, சர்வதேச அளவில் மானிட்டர் செய்ய வேண்டுமா?. புது டெக்னாலஜி வருகிறது, புது மீட்டர் வருகிறது. வேறு ஏதாவது டெக்னாலஜி வருகிறதா?, சோலாரில்  புது டெக்னாலஜி, இதெல்லாம் கையாள்வதற்கு நல்ல ஒரு டெக்னாலஜி குழு வேண்டும். 

அது இங்கிருக்கும் மின்சாரத் துறையின் மூத்த பொறியாளர்களும் ஐஐடியுண் இணைந்து வேலை செய்வார்கள். இதில் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது, உடனடியாக தீர்வு வேண்டும் என்று ஏற்கனவே ஐஐடி குழுவுடன் ஆலோசனை செய்திருக்கிறோம். அதெல்லாம் சேர்த்து வைத்து அதற்கான தீர்வை வரும் காலங்களில் கொடுப்பார்கள்.

லாபம் இருந்தால்தான் மக்களுக்கு நலன்... 

எது எதெல்லாம் உடனடியாக தேவையோ உடனடியாக அதை குறிப்பிடுவோம். அது இல்லாமல் மற்றவை டெக்னாலஜி வகையில் ஆராய்வோம். நிறைய டெக்னாலஜி உள்ளிருக்கிறது அந்த டெக்னாலஜியை கொண்டு வருவோம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலையை இன்றைக்கே தொடங்கி இருக்கிறோம். 
 
இதற்கு நாம் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் செயல்முறை மற்றும் கொள்கைதான். அது இல்லாமல் புது தொழில்நுட்பம் இருந்தால் அதை கண்காணிப்பதற்கு நல்ல தொழில்நுட்பம் வேண்டும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறுவனத்திற்கு உதவியாக இருந்தாலே அனைவருக்கும் உதவியாக இருக்கும். நிறுவனத்தை மேம்படுத்துவதற்காகதான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். நிறுவனம் மேம்படுத்தினாலே பொதுமக்களுக்கான லாபமாக இருக்கும்..

மின்சாரத்துறையில் ஆள் சேர்ப்பு

ஸ்மார்ட் மீட்டரில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை  டெக்னாலஜி வகையில் நாம் அதில் உறுதியாக இல்லை. இந்த வருடம் 15 ஆயிரம் நபர்களை வேலைக்கு எடுக்கிறோம். ஐந்தாயிரம் பழைய கேங்மேன் வேலைக்கு எடுக்கிறோம். ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குள்  விரைவாக முடிக்கின்ற பணியில் இருக்கிறோம்.

மேலும் படிக்க | திருநெல்வேலி: இடைநிலை, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்

அதுவரை ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து சரி செய்து வருகிறோம். மின்சாரத் துறைக்கு பணியாளர்களை எடுப்பது கண்டிப்பாக தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி வழியாக தான் நடக்கும்.

வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டது போல முறைகேடு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடைபெற்று வருகிறது. உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நிர்மல் குமார் மேடை பேச்சு

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "மின்சார வாரியத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உன்னிப்பாக நகர்த்தி வருகிறோம், நமக்கு முக்கியமான காலகட்டம், நமக்கு தேவையான ஒன்று. நமக்கு மிகப்பெரிய செயல்பாடுகள் நடக்கின்ற மின்சார வாரியத்தில் எல்லா சேவையும் கொடுத்து வருகிறோம்.

உலகத்தரம் வாய்ந்த ஒரு செயல்பாடு, பாலிசி வேண்டும். புதிய டெக்னாலஜி செயல்படுத்துவதற்கு ஒரு குழு வேண்டும். அதற்காக முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் இது. ஒவ்வொரு இடத்திலும் Vendors வேலை செய்கிறார்கள், ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு அனுபவமுள்ள நபர்கள் கொண்ட ஒரு குழு வேண்டும்" என்றார்.

ஐஐடி இயக்குநர் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி இயக்குனர் காமகோடி, "தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியும் சூரிய உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. அதனை சேமிப்பதற்கு வழிமுறைகளை அரசுக்கு இந்த ஒப்பந்தம் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகை செய்கிறோம்.

ஹைட்ரஜன் பயோகேஸ் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது , அதில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் தமிழக அரசுடன் கையெழுத்து இடுகிறோம்" என பேசியிருந்தார்.

மேலும் படிக்க | ரூ.5,000 கோடி வராது... ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட்டால்... விஜய்க்கு பாஜக செக்?

0
0
Report
Advertisement

சேலம் மக்களுக்கு சூப்பர் செய்தி: இனி 24 மணி நேரமும் குடிநீர் வசதி.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

Salem, Tamil Nadu:

சேலம்: சேலம் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லாமல் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையவுள்ள இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இதோ:

திட்டத்தின் நோக்கம்: சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் 10.83 லட்சம் (10,83,506) மக்கள் பயன்பெறும் வகையில், 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்குதல்.

திட்ட மதிப்பு: ஆரம்பத்தில் ₹758.13 கோடியாக இருந்த இத்திட்டத்தின் மதிப்பு, தற்போது ₹1,035.81 கோடியாக திருத்தியமைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த நிறுவனம்: இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் பராமரிக்கவும் M/S. SUEZ Project International Private Limited என்ற சர்வதேச நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பணிகளுக்கான டைம்லைன்:

  • முதல் ஆண்டு: தற்போதுள்ள குடிநீர் உட்கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்படும்.
  • அடுத்த 4 ஆண்டுகள்: புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் ₹1,035.81 கோடி மதிப்பில் நடக்கும்.
  • அடுத்த 25 ஆண்டுகள்: குடிநீர் விநியோகத்தை சீராகத் தொடரவும், பராமரிக்கவும், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும் இந்நிறுவனத்திற்கு ₹3,258.73 கோடி மதிப்பில் பராமரிப்புப் பணி வழங்கப்பட்டுள்ளது.

நிதிப் பங்கீடு:

  • மத்திய அரசின் அம்ரூட் (AMRUT 2.0) திட்டம் – ₹227.44 கோடி
  • தமிழ்நாடு அரசு – ₹393.92 கோடி
  • ஒப்பந்த நிறுவனம் – ₹414.25 கோடி

மேலும் படிக்க | பள்ளி, கல்லூரிகளில் CM விஜய் பிறந்தநாள் விழா.. அரசிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்திரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்

சேலம் மாநகராட்சியில் குடிநீர் உட்கட்டமைப்புகளை சீரமைப்பு செய்தும், புதிய உட்கட்டமைப்புகளை உருவாக்கியும், சேவம் மாநகரில் வசிக்கும் 10,83,506 மக்கள் பயன்பெறும் வகையில் மாநகரம் முழுவதும் 24 மணி நோமும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அரசாணை எண், GO (MS) NO.39 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA2) துறை மூலம் நாள் 08.03.2024-ன்படி மதிப்பீட்டு தொகை ரூ.758.13 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி ஒப்பந்தப்புள்ளி கோரி பல கட்டங்களில் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு சூறைந்தப்பட்சு ஒப்பந்த புள்ளி அளிந்த M/S.SUEZ Project International Private Limited என்ற நிறுவனத்தின் மூலம் இத்திட்டத்தினை நிறைவேற்ற சேலம் மாநகராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியதன் பேரில் மேற்படி நிறுவனத்திற்கு ஏற்பளிப்பு கடிதம் (LO)08.02.2026 அன்று வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களால் இத்திட்டத்திற்கான திருத்திய மதிப்பீட்டிடின்படி ரூ.1035.81 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை எண். G.O. (4D) NO.10 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MCS) துறை நாள்: 04.08.2026 அன்று வெளியிடப்பட்டது. 

மேற்காணும் தொகையில் ரூ.22744 கோடி இந்திய அரசால் அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழும். ரூ.393.92 கோடி தமிழ்நாடு மாநில அரசால் பங்களிப்பு செய்யவும், மீதமுள்ள ரூ.414.25 கோடி தொகை இத்திட்த்தினை செயலாக்கம் செய்ய தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பங்களிப்பு செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அரியலூர்: 8ம் வகுப்பு படித்தவரா? மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை.. தமிழக அரசு அறிவிப்பு

மேற்படி அரசாணையின்படி சேலம் மாநகராட்சிக்கும் M/S.SUEZ Project International Freate Limited என்ற நிறுவனத்திற்கும் இடைய 19.05.2025 அன்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

சேவம் மாநகரில் இத்திட்டத்தினை செயபடுத்திட ஏதுவாக தற்போது உள்ள குடிநீர் சம்பந்தமான உட்கட்டமைப்பு வசதிகளை முதல் வருடத்தில் ஆய்வு செய்து அடுத்துள்ள நான்கு ஆண்டுகளில் குடிநீர் திட்டம் தொடர்பான தற்போது உள்ள உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், புதிய வசதிகள் ஏற்படுத்திடவும், ரூ.1035.61 கொடி மதிப்பீட்டிலான பணிகளை ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ளும்.

மேலும் அந்நிறுவனம் மூலமாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு அத்திட்டத்தின் தொடர் பராமரிப்பு பணிகள் ரூ.3258.73 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

இப்பராமரிப்பு காலத்தில் குடிநீர் விநியோகத்தினை திறன்மிக்க வகையில் கையாளவும், குடிநீர் விநியோகம் தொடர்பான பொதுமக்களின் குறைகளை உடனுக்குஅன் களையவும், உட்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை இந்நிறுவனம் சிறப்பான முறையில் மேற்கொள்வதை உறுதி செய்யவும் இலக்குகள் நிர்ணயித்து செயல்படுத்திட இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு. இத்திட்டத்தினை செயலாக்கம் செய்திட திரு. ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. அரசு கூடுதல் தலைமை செயலாளர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை., திரு.ப. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. நகாட்சி நிர்வாக இயக்குனர் அவர்கள், திரு. சிரண்ஜித் சிங் காலோன் இ.ஆ.ப. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் அவர்கள் மற்றும் திரு. பியாரே பவுலியாக் நிர்வாக துணை தலைவர் M/S.SULL Project International Private Limited ஆகியோரது முந்னிலையில் திரு. வலித் ஆதித்ய நீலம் இ.ஆ.ப, சேலம் மாநகராட்சி ஆவண அவர்களாலும், திரு. ரஸ்மி ரஞ்ஜன்ரே. தலைமை நிர்வாக அலுவலர். M/S.SULZ Project International Private Limited அவர்களாலும் 19.08.2028 அன்று தலைமை செயலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மேலும் படிக்க | தமிழ்நாடு முக்கிய செய்திகள் LIVE: நாளை கரூர் செல்லும் CM விஜய்.. ஓணம் பண்டிக்கைக்கு சிறப்பு ரயில்கள்!

0
0
Report

இன்றிரவு ஈரானை கடுமையாக தாக்குவோம்... முன்கூட்டியே டிரம்ப் எச்சரிக்கை - அதிகரிக்கும் பதற்றம்

Washington, District of Columbia:

US Iran War : இன்றைய நேட்டோ உச்சி மாநாட்டில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியபோது, "நேற்றிரவு ஈரானை கடுமையாகத் தாக்கினோம். அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இன்று இரவும் அவர்களை கடுமையாக தாக்கப் போகிறோம்" என்றார்.

மேலும் அவரது பேச்சில், "ஈரான் மிகவும் மோசமாக நடந்துக்கொள்கிறது. நிலைமை எப்படி அமைகிறது என்பதை பார்ப்போம். ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக மக்களை கொன்று வருகிறது" என்றார்.

ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்த நிலையில், வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் தடைப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அமைதி ஒப்பந்தம் ரத்து... குண்டை போட்ட டிரம்ப் - இனி அடுத்து என்ன நடக்கும்?

மேலும் படிக்க | ஈரானில் 80 இலக்குகள் மீது அட்டாக், வெறிகொண்டு தாக்கிய அமெரிக்கா: டிரம்ப் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்!

மேலும் படிக்க | மீண்டும் வெடித்தது போர்! ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்! மத்திய கிழக்கில் பதற்றம்!

0
0
Report

சென்னை - குற்றாலம் சுற்றுலா... தமிழ்நாடு அரசின் ஸ்பெஷல் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம்?

Melagaram, Tamil Nadu:

Chennai - Courtallam TTDC Tour Package : தென்மேற்கு பருவமழை காலகட்டம் தற்போது உச்சத்தில் உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் மழை அடித்துக் கொட்டுகிறது. கேரளாவில் மழை பெய்கிறது என்றால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை அதிகம் இருக்கும்.

அதிலும் குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால மக்களுக்கு சீசன் தொடங்கிவிடும். இந்த வருடன் ஜூன் 4ஆம் தேதி முதல் குற்றால சீசன் தொடங்கிவிட்டது. நடப்பு சீசனில் அருவிகளில் தண்ணீர் இல்லாமலும் இருந்திருக்கிறது, அதிகளவில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் குற்றாலத்திற்கு தினம் தினம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து வருகிறது.

குற்றலாத்தில் அனுமதி உள்ள அருவிகள்

  • மெயின் அருவி
  • ஐந்தருவி
  • பழைய குற்றாலம்
  • புலியருவி
  • சிற்றருவி

இவை ஒருபுறம் இருக்க, சென்னையில் இருந்து குற்றாலம் செல்ல விரும்பும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் (TTDC)சிறப்பு சுற்றுலா திட்டத்தை வைத்துள்ளது. சென்னை - குற்றாலம் மூன்று சுற்றுலா திட்டத்தில் எந்தெந்த இடங்களை பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்?, என்னென்ன வசதிகள் கிடைக்கும்?, சுற்றுலாவுக்கான கட்டணம் எவ்வளவு? உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | சென்னையில் இருந்து ஒரே ஒரு நாள்... TTDC-ன் சூப்பரான டூர் பிளான்... கட்டணம் எவ்வளவு?

முதல் நாள் - புறப்பாடு

சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து முதல் நாள் மாலை 4.30 மணிக்கு சுற்றுலா பேருந்து புறப்படும்.

இரண்டாம் நாள் - அருவிகளுக்கு விசிட்

  • காலை 5 மணிக்கெல்லாம் குற்றாலத்தை அடைந்துவிடலாம். குற்றலாத்தில் ரம்மியமான காலையை நீங்கள் கண்டு ரசிக்கலாம். அங்குள்ள ஹோட்டல் தமிழ்நாடு அறை ஒதுக்கப்படும். அங்கு செக்-இன் செய்து சுற்றுலாவுக்கு புறப்படலாம். 
  • காலை 9 - 10 மணிக்கு காலை உணவு வழங்கப்படும். 
  • காலை 10 மணிக்கு மெயின் அருவிக்கு புறப்படலாம். அங்கு மதியம் 12 மணிவரை நீங்கள் குளிக்கலாம், கடைகளில் வேண்டிய பொருள்களை வாங்கலாம். அங்கு தேவையென்றால் நீங்களே உணவுப் பொருள்களை வாங்கி உண்ணலாம். குற்றலாநாத சுவாமி கோவிலிலும் தரிசனம் செல்லலாம்.
  • மதியம் 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஐந்தருவிக்கு குளிக்க செல்லலாம். மதியம் 12.20 மணியில் இருந்து 1.20 மணிவரை அங்கு குளிக்கலாம். அடுத்து ஹோட்டலுக்கு திரும்பி மதிய உணவை சாப்பிடலாம்.
  • மதியம் 2.30 மணிக்கு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு பழைய குற்றலா அருவிக்கு புறப்படலாம். மதியம் 3 மணிமுதல் மாலை 4 மணிவரை அங்கு குளிக்கலாம். பின்னர் அங்கிருந்து ஹோட்டலுக்கு திரும்பி, இரவு உணவை அங்கு சாப்பிடலாம்.

மேலும் படிக்க | மதுரைக்கு 3 நாள் சுற்றுலா... மலை ஏறலாம், அருவியில் குளிக்கலாம் - எவ்வளவு கட்டணம்?

மூன்றாம் நாள் - செண்பகாதேவி மலையேற்றம்

  • காலை உணவை முடித்துவிட்டு, 8.30 மணிக்கு செண்பகாதேவி என்ட்ரி பாயிண்டுக்கு சென்றுவிடலாம். காலை 9 மணி முதல் செண்பகாதேவியை மலையில் ஏறி, மதியம் 12.30 மணிக்கு கீழே வந்துவிடலாம்.
  • அதன்பின் ஹோட்டலுக்கு புறப்பட்டு மதியம் உணவை சாப்பிட்டு, மதியம் 2 மணிக்கு ஹோட்டலில் இருந்து செக்-அவுட் செய்து ஸ்ரீவல்லிபுத்தூர் கோவிலை நோக்கிச் செல்லலாம்.
  • மாலை 4.30 மணிக்கு கோவிலை சென்றடைந்து, மாலை 6 மணிவரை கோவிலில் தரிசனம் மேற்கொள்ளலாம்.

எவ்வளவு கட்டணம்?

அதன்பின் அங்கிருந்து சென்னை நோக்கி புறப்படலாம். வழியில் இரவு உணவை சாப்பிடலாம். அடுத்த நான்காம் நாள் காலை 5 மணிக்கு சென்னை வந்தடையலாம்.

செண்பகாதேவி மலையில் அருவியும் இருக்கிறது. இங்கு பயணிகளால் எளிதாக பயணிக்க முடியாது. வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். எனவே, இதன்மூலம் பயணிப்பவர்களுக்கு அந்த கவலையில்லை.

பேருந்து, தங்குமிடம், சுற்றுலா வழிகாட்டி ஆகிய வசதிகளை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு வாரியம் (TTDC) வழங்குகிறது. இதற்கு மொத்தம் 8,400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

1800-4253-1111 என்ற இலவச எண், support@ttdconline.com என்ற மின்னஞ்சல் மூலம் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தை தொடர்புகொள்ளலாம். இதன் தேதி உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | சென்னை - கொல்லிமலை: 2 நாள் இன்ப சுற்றுலா... தமிழக அரசின் ஏற்பாடு - கட்டணம் எவ்வளவு?

0
0
Report
Advertisement

ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி: நாளை (ஜூலை 9) சேலம் மயிலாடுதுறை ரயில் இயக்கத்தில் மாற்றம்

Karur, Tamil Nadu:

கூரமங்கலம், சேலம்: ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி! கரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளப் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (ஜூலை 9) அன்று சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.

மயிலாடுதுறை–சேலம் எக்ஸ்பிரஸ்

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்:

மயிலாடுதுறை சந்திப்பிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை–சேலம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16811), விராரக்கியம் நிலையம் வரை மட்டுமே பயணிக்கும். இந்த ரயில் வழக்கத்தை போல விராரக்கியம் மற்றும் சேலம் சந்திப்புக்கு இடையே இயக்கப்படாது. 

அதே பொல், சேலம் சந்திப்பிலிருந்து நாளை மதியம் 2.05 மணிக்குக் கிளம்ப வேண்டிய சேலம்–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16812), கரூர் சந்திப்பிலிருந்து மதியம் 3.40 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கும். இந்த ரயில் சேலம் சந்திப்பு மற்றும் கரூர் சந்திப்புக்கு இடையே இயக்கப்படாது. இது கரூர் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி மயிலாடுதுறை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.

மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை (09-07-2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. முழு லிஸ்ட்!

பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ்

பாலக்காடு டவுன் நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16844), கரூர் சந்திப்புடன் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும். 

பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு, வழக்கமான சேவையைப் போலவே அதே நிறுத்தங்களுடன், கரூர் முதல் திருச்சி சந்திப்பு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இது இயக்கப்படும்.

கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து காலை 8 மணிக்குக் கிளம்பும் கோயம்புத்தூர்–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16322), கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் இடையே போத்தனூர், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

மேலும் படிக்க | தமிழக கோயில்களில் சிரமமில்லா தரிசனம், திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு: அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்ஸ்

இதன் விளைவாக, இந்த ரயில் கோயம்புத்தூர் வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, இங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகலூர், கரூர், பாளையம் மற்றும் எரியோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், போத்தனூர் மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில் தடங்களில் பயணிக்க திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி: 839 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்? முழு விவரம்

0
0
Report
Advertisement

தமிழக கோயில்களில் சிரமமில்லா தரிசனம், திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு: அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்ஸ்

Tiruchirappalli, Tamil Nadu:

திருச்சி: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் அனைவரும் எந்த விதமான சிரமமும் இல்லாமல் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்படும் என்றும், இந்து அறநிலையத் துறையை மேம்படுத்தும் வகையில் விரைவில் பல வித சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

திருவானைக்காவலில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில், திருவானைக்காவலில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், 'கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பொது நலன் சார்ந்த நடவடிக்கைகளைத் தாமதப்படுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

"இந்து சமய அறநிலையத் துறை விரைவில் சீரமைக்கப்படும். இதற்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது; இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

குறைகளை அறிந்து, அவற்றை விரைவாகத் தீர்க்க வேண்டும்: முதல்வர் விஜய் உத்தரவு

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளை அறிந்து, அவற்றை விரைவாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். குறைதீர் கூட்டம் போன்ற இத்தகைய சந்திப்புகள் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி: 839 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்? முழு விவரம்

திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு

திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனத்துக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், கட்டண உயர்வு தொடர்பாக வெளியான தகவல்களை மறுத்தார். தவெக அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

"நாங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகளையே தொடர்ந்து பின்பற்றுகிறோம். பக்தர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பிறகு அவை மறுஆய்வு செய்யப்படும். மக்களின் நலனுக்கு எதிரான எதையும் நாங்கள் ஒருபோதும் திணிக்க மாட்டோம்," என்று அவர் கூறினார். விஐபி (VIP) தரிசனம் தொடர்பான விவகாரத்தில், அது குறித்த கவலைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும், பக்தர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் போலி இணையதளம்

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் (Yatri Nivas) தங்குவதற்கு இணையவழியில் முன்பதிவு செய்வதாகக் கூறும் பல போலி போர்ட்டல்கள் பற்றிய புகார்கள் பல நாட்களாக இருந்து வந்தன. இது பற்றி குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், போலியான இணையதளங்களை இயக்கி வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தார். யாத்ரி நிவாஸில் முன்பதிவு செய்வதற்காக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:

  • தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை குறையின்றி வழங்க விரைவில் நடவடிக்கை.
  • திருப்பணிகள், பராமரிப்பின்றி உள்ள கோயில்களுக்கு தேவையன நடவடிக்கைகள், சேதமடைந்த கோயில்கள், மண்டபங்கள், கோபுரங்கள், திருக்குளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சீரமைப்ப விரைவில் நடவடிக்கை.
  • விஐபி தரிசன முறையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை.
  • ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாசுக்கு அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு இனையதளம்.
  • ஸ்ரீரங்கம் கோயிலில் வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்த ஏற்ற இடங்களை தேர்வு செய்வதற்கான ஆய்வு.

மேலும் படிக்க | மாதம் ரூ.63,000 சம்பளம்! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. அஞ்சல் துறையில் சூப்பரான வேலை

தமிமும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை

தமிமும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என கூறிய அமைச்சர் ரமேஷ், இதை கருத்தில்கொண்டு அறநிலைத் துறை பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மெற்கொண்டு வருவதாகவும், அவற்றை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.

தமிழக கோயிகளில் ரகசிய ஆய்வுகள்

தமிழக கோயில்களின் செயல்முறைகள் குறித்து தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில், அறநிலைத் துறையில் பல வித சீர்திருத்தங்கள் படிப்படியாக மெற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில், கோயில்களின் நிலை விரைவில் வியத்தகு வகையில் மேம்படும் என்பதையும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க | பழனி: மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை அறிவித்த தமிழக அரசு.. எப்படி பெறுவது? முழு விவரம்

0
0
Report

வயநாடு நிலச்சரிவு வீடியோ: மண்ணில் புதைந்த பலரை தேடும் பணி தீவிரம்... IMD ரெட் அலர்ட்

Wayanad, Kerala:

வயநாடு, கேரளா: வயநாடு கல்லாடி சுரங்கப் பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் தீவிர மழையைத் தொடர்ந்து, வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது. இந்த நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இதற்கிடையில், காயமடைந்த ஆறு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லாடி பகுதியில் நிலச்சரிவு

மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வரும் 'அனக்கொம்பொயில்-மேப்பாடி' சுரங்கப்பாதை சாலைத் திட்டப் பகுதிக்கு அருகிலுள்ள கல்லாடி (Kalladi) பகுதியில், மீனாட்சி பாலத்திற்கு அருகில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் கட்டுமானப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் இணைந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர். இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

தலவல் கிடைத்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (NDRF) மீட்புப் பணிகளில் இணைந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கேரள வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில் குமார், மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 30 பேர் கொண்ட NDRF குழு சம்பவ இடத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிலச்சரிவுக்கான காரணம் என்ன?

கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் 265 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், இடைவிடாத மழையே இந்த நிலச்சரிவை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கப்பாதை திட்டப் பணியாளர்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட சில வாகனங்கள் இச்சம்பவத்தில் சேதமடைந்தன. 

அவசரக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் சதீஷன்

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் வி.டி. சதீஷன் வயநாடு மாவட்ட அமைச்சர் டி. சித்திக்குடன் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மேலும், நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடுமாறு அவருக்கு அறிவுறுத்தினார். நிலைமையைக் கண்காணிக்க, அமைச்சர் சித்திக்குடன் இணைந்து உடனடியாக வயநாடுக்குச் செல்லுமாறு வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில் குமாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வரின் அலுவலகம் தெரிவித்ததாக ஏஎன்ஐ (ANI) செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | முதல் மழையிலேயே மூழ்கிய மும்பை! காலநிலை மாற்றமா? AI தொழில்நுட்பம் வெள்ளத்தைத் தடுக்க உதவுமா?

மனிதத் தவறால் ஏற்பட்ட நிலச்சரிவு: வேளாண் அமைச்சர் டி. சித்திக்

சுரங்கப் பாதை கட்டுமானப் பணிகளின்போது தோண்டி எடுக்கப்பட்ட மண்ணையும் பாறைகளையும் "அறிவியல் பூர்வமற்ற முறையில் கொட்டியதே" நிலச்சரிவுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டிய வேளாண் அமைச்சர் டி. சித்திக், முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் இந்தத் துயரத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்று குறிப்பிட்டார். 

"இது இயற்கையாக நிகழ்ந்த நிலச்சரிவு அல்ல; மனிதத் தவறால் ஏற்பட்ட நிலச்சரிவு. தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை அறிவியல் பூர்வமற்ற முறையில் கொட்டியதாலேயே இது நிகழ்ந்துள்ளது," என்று அவர் கூறினார். "சுரங்கப் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக மண் மற்றும் சேற்றை அறிவியல் பூர்வமற்ற முறையில் கொட்டியதால் ஏற்பட்ட பேரழிவு இது. இத்தகைய நடவடிக்கைகள் குறித்த அறிகுறிகள் தென்பட்டன; கொங்கண் பகுதி அதிகாரிகளின் கூட்டங்களிலும் இது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், எவ்விதத் திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. 

இதுவரை ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோடு மற்றும் வயநாட்டிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களைத் தேடும் பணியும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றும் சித்திக் மேலும் தெரிவித்தார்.

வயநாட்டிற்கு IMD 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert)

மானந்தவாடி மற்றும் வைத்திரியில் கனமழை பதிவானதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கல்லாடி சுரங்கப் பாதை திட்டப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்தது. 

அண்டை மாவட்டமான கோழிக்கோட்டிற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளையில் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' (Orange Alert) விடுக்கப்பட்டது.

மேலும் படிக்க | காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இன்று மழை வெளுக்கும்.. எந்தெந்த மாவட்டங்கள்?

வயநாடும் நிலச்சரிவுகளும்

கடந்த காலங்களில் வயநாட்டில் நிலச்சரிவுகள் பலமுறை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பல தசாப்தங்களாக இப்பகுதி பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலச்சரிவுச் சம்பவங்களைக் கண்டுள்ளது.

சமீபத்திய காலங்களில் மிகவும் பேரழிவை ஏற்படுத்திய சம்பவம் ஜூலை 30, 2024 அன்று நிகழ்ந்தது. அப்போது வயநாட்டில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதிகாலை 1:30 மணி முதல் 4:00 மணிக்குள் இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டபோது, ​​பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உறங்கிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலச்சரிவு சுமார் 86,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது; இதன் தொடக்கப் புள்ளி (crown) கடல் மட்டத்திலிருந்து (MSL) சுமார் 1,550 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்தது. நிலச்சரிவினால் உருவான மண் மற்றும் பாறைப் பொருட்களின் ஓட்டம் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரை பரவியிருந்தது. அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இத்துயரச் சம்பவத்தில் 298 பேர் உயிரிழந்தனர்.

வயநாட்டில் நிலச்சரிவுகளின் வரலாறு

வயநாட்டில் நிலச்சரிவுகள் ஏற்படும் வரலாறு பல தசாப்தங்களாக நீடிக்கிறது.

  • 1984-ல் நிகழ்ந்த முண்டக்கை நிலச்சரிவு 14 பேரின் உயிரைப் பறித்ததோடு, வளமான விவசாய நிலங்களையும் அழித்தது.
  • 1992-ல் படிஞ்சாரத்தாரா அருகே ஏற்பட்ட கப்பிக்களம் நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர்.
  • மற்றொரு முக்கிய சம்பவமான, 2007 ஜூன் 23 அன்று நிகழ்ந்த வளம் தோடு நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க | மும்பையை பதம் பார்க்கும் மழை, IMD அலர்ட்: மிதக்கும் வாகங்கள், தள்ளளிக்கும் மாநகரம்.... வீடியோ

0
0
Report
Advertisement

ஜோலார்பேட்டை: இன்ஸ்டாகிராம் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை, சோகத்தில் மூழ்கிய கிராமம்!

Jolarpet, Tamil Nadu:

ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, செல்போனில் இன்ஸ்டாகிராம் பார்த்ததை பெற்றோர்கள் கண்டித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமால் நேர்ந்த விபரீதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகள் சுதா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ வகுப்பில் படித்து வந்தார். சுதாவுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியொக்கள் மற்றும் பிற பதிவுகளை பார்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், நேற்று மாலை மாணவி சுதா வீட்டில் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் (Instagram) பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில் படிக்காமல் ஏன் செல்போன் பார்க்கிறாய் என பெற்றோர்கள் சுதாவை கண்டித்ததாகத் தெரிகிறது. வழக்கமாக எப்போதும் கண்டிப்பதை போலவே பெற்றோர் இம்முறையும் சுதாவை கண்டித்துள்ளனர். ஆனால், அதன் விளைவு யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

மகள் எடுத்த விபரீத முடிவு

பெற்றோர்கள் கண்டித்ததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சுதா, உடனடியாக வீட்டின் அறைக்குச் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சுதாவை கதவை திறக்குமாறு சத்தம் போட்டுள்ளனர். ஆனால், உள்ளே இருந்து எந்தப் பதிலும் வராததால், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சுதா அறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க | தமிழ்நாடு முக்கிய செய்திகள் நேரலை: மழை எச்சரிக்கை; CM விஜய்க்கு எதிரான வழக்குகள் இன்று விசாரணை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர்

தூக்கில் தொங்கிய சுதாவை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Jolarpettai Suicide News

பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Jolarpettai Suicide News

மேலும் படிக்க | தேர்தல் வழக்கு: விஜய்-க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.. குறைபாடுகளை சரிசெய்ய 3 வார கெடு!

ஜோலார்பேட்டை போலீசார் தீவிர விசாரணை

மகள் உயிரிழந்தது குறித்து மாணவியின் தந்தை சுபாஷ் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவி செல்போன் பார்த்ததை கண்டித்ததற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. இன்னல்கள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!! 

உங்களையோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களையோ ஏதேனும் மன உளைச்சல் அல்லது தற்கொலை எண்ணங்கள் பாதித்தால், கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்:

மாநில அரசு உதவி எண்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050

மேலும் படிக்க | நானே அரசுப் பள்ளி மாணவி தான்! உண்மை என்ன தெரியுமா? அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

0
0
Report

முப்பாட்டன் முருகன் வட நாட்டு கடவுளா...? பாயிண்ட் பாயிண்டாக கிழித்த சீமான்!

Chennai, Tamil Nadu:

Lord Murugan, NTK Seeman : முருகப்பெருமான் வரலாற்றை திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்ட அறிக்கையில், "முருகப்பெருமானை மையப்படுத்தி என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், முருகன் வடநாட்டில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க | தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. அதிர்ச்சியில் அறிவாலயம்! யார் தெரியுமா?

தமிழரின் மெய்யியல் கோட்பாடு

சீமான் அவரது பதிவில், "50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும்  கொண்டதாகும். 

இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது.

திரிபுகள் திணிப்பை அனுமதிக்க முடியாது...

அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும். அப்படியிருக்க கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றார்.

தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுள் என திருடிச்சேர்த்துக் கொண்டனர்.

கடவுள்களை அபகரித்துவிட்டனர்...

தமிழர் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர் என்றும்; அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள்; கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள்; திருமாலை விஷ்ணுவாக்கினார்கள்; கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள்; சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்" என சீறியுள்ளார்.

மேலும் படிக்க | மக்களே அலர்ட்.. தமிழகத்தில் நாளை மின்தடை! 8 மணி நேர பவர் கட் எங்கெல்லாம்?

தமிழ்க்கடவுள் முருகன்

தொடர்ந்து, முருகன் குறித்து தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சீமான் பட்டியிலிட்டுள்ளார். அதில், "இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான். தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். 

அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. 

முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.

தமிழ் இலக்கியங்களில் முருகன்...

முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம்  சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. 

மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம்...

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. 

எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு.  மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். வணிகத்திற்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது...

ஆகவே, முருகப்பெருமான் வட மாநிலங்களில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிப்பதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ்த்திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும்.

அரசுக்கு கோரிக்கை...

இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழ்ப் பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ, தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்" என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும் படிக்க | துணை முதல்வராகும் திருமாவளவன்.. திருச்சி கிழக்கில் போட்டி? விசிகவினர் செய்த சம்பவம்

0
0
Report
Advertisement
Advertisement
Back to top