பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
ரத்த வடு இன்னும் மறையவில்லை... அவங்கள தூக்குல போடுங்க... 8-ம் ஆண்டு நினைவு தினத்தில் கதறி அழும் உறவினர்கள்..!
Thoothukudi, Tamil Nadu:Tuticorin Sterlite Massacre Memorial Day News: உலகளவில் உலோகத் தொழிலில் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள வேதாந்தா நிறுவனம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதன் வணிக மதிப்பை மேம்படுத்த பல்வேறு துறைகளில் தடம் பதித்தது. இதன் நிறுவனரான அனில் அகர்வால் வெளிநாடுகளில் தங்களது வணிகத்தை நிலை நாட்டி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவரது பார்வை தமிழகத்தின் பக்கம் விழுந்தது.
அந்த பார்வையே கடைசியில் பல பேரின் உயிரிழப்புக்கு காரணம் ஆகாது என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆம், அப்படி ஒரு சம்பவம் தான் தூத்துக்குடியில் நடைபெற்றது. அப்படி என்னதான் நடைபெற்றது என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் பகுதியில் இயங்கி வந்த வேதாந்தா குழுமத்தில் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியின் இயற்கை வளங்கள் அனைத்தையும் நஞ்சாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தது. இந்த தாமிர உருக்காலையால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். இவ்வாலையில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
மாவட்ட ஆட்சியரிடம் மனு:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் மே 22, 2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தினர். பிப்ரவரி 4-ம் தேதி மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒன்று திரண்டு மனு ஒன்றை அளித்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச்சூடு:
100 நாட்களைக் கடந்த இந்த போராட்டத்தால் எந்த ஒரு பயனும் இல்லாமல் அதிருப்தியான மக்கள் தூத்துக்குடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் செய்வதறியாது இருந்த போலீஸார் தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அதனையெல்லாம் பொருட்படுத்தாத மக்கள் தடுப்புகளை தூக்கியெறிந்து மாவட்ட அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அதன் விளைவாக மே 22-ம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நிரந்தரமாக மூடப்பட்ட ஆலை:
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வாசலிலும் அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே உடலை வாங்குவதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவர்களின் விடாப்பிடியால், மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அரசு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அரசாணை பிறப்பித்தது.
நினைவு தினம் அனுசரிப்பு:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் இன்று (மே 22) அவர்களது 8-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, தூத்துக்குடி பாத்திமா நகரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
8 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஸ்டெர்லைட் நினைவு தினத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தங்களது இரங்கலையும், ஆறுதலையும் பதிவிட்டு வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்று 8 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இன்று வரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தூத்துக்குடி மக்களிடையே ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு... முழு விவரங்கள் உள்ளே!
Coimbatore, Tamil Nadu:Coimbatore District Job News: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் https://coimbatore.nic.in/ என்ற இணையதள முகவரியில் உள்ளன. மேலும் இந்த பணிக்கான தகுதி மற்றும் பணியிடங்கள் இந்த இணையதள பக்கத்தில் உள்ளன. மேற்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்தி அதில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலம் 02.06.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி பெயர்: பாலின நிபுணர்
சம்பளம்: ரூ.21,000
காலிப்பணியிடம்: 01
தகுதிகள்:
- விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்
- கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல்
- முதுகலைப் பட்டம் படித்து முடித்தவருக்கு முன்னுரிமை
- பணி தொடர்பான தொடர்புடைய துறையில் 3 வருடம் பணி அனுபவம்.
பணி பெயர்: பல்நோக்கு உதவியாளர்
சம்பளம்: ரூ.12,000
கல்வித்தகுதி: 10, 12-ம் வகுப்பு
காலிப்பணியிடம்: 01
விண்ணப்பத்தாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல்
முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
பழைய கட்டிடம்,
தரைத்தளம், அறை எண்:5
மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர்.
தொடர்பு எண்:0422-2228477
02.06.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்
மேலும் படிக்க: எச்சரிக்கை! AI வந்ததால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வேலைகளே இருக்காது!
பணி பெயர்: வழக்கு பணியாளர்
சம்பளம்: ரூ.18,800
பணியிடம்: 13
தகுதி: BSW, B.A.Sociology, Psychology, Clinical Psychology, MSW
வயது வரம்பு: 21-40
பணி பெயர்: தகவல் தொழில்நுட்ப பணியாளர்
சம்பளம்: ரூ.20,000
பணியிடம்: 01
தகுதி: கணினி துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 21-40
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.05.2026 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பழைய கட்டிடம், தரை தளம்,
கோயம்புத்தூர்-641018
தொடர்பு எண்:0422-2305156.
குறிப்பு: இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை.. கைநிறைய சம்பளம்.. சூப்பர் வாய்ப்பு
ஹம்சா புர்ஹான் சுட்டுக்கொலை... புல்வாமா அட்டாக்கின் மூளை இவர் தான்
Mekhtar, Balochistan:Hamza Burhan : புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹம்சா புர்ஹான், பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானில் அடுத்த ஸ்கெட்ச்! ஹம்ஸா பர்ஹான் மரணம் - இந்தியாவுக்கு ஏன் ரொம்ப முக்கியம்?
Mekhtar, Balochistan:Hamza Burhan Shot Dead: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள முசாஃபராபாத் பகுதியில், இந்தியாவின் 'மோஸ்ட் வான்டெட்' பயங்கரவாதிகளில் ஒருவனான ஹம்ஸா பர்ஹான் (Hamza Burhan), அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாஃபராபாத்தில் துப்பாக்கிச் சூடு -என்ன நடந்தது?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரமான முசாஃபராபாத்தில் பதுங்கியிருந்த ஹம்ஸா பர்ஹானை, பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் திடீரென சரமாரியாக சுட்டனர். இதில் உடலில் பலத்த குண்டுக் காயங்கள் ஏற்பட்ட ஹம்ஸா பர்ஹான், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இச்சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியைச் சுற்றி வளைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் இந்த ஹம்ஸா பர்ஹான்? (புல்வாமா பின்னணி)
பயங்கரவாத அமைப்பான 'அல்-பதர்' (Al-Badr) பிரிவின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்தவன் தான் இந்த ஹம்ஸா பர்ஹான். கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 40 சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் வீரமரணமடைய காரணமான புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய சதிகாரர்களில் இவனும் ஒருவன்.
தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை
புல்வாமா தாக்குதல் வழக்கில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இவனது பெயர் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.
பஹல்காம் தாக்குதல்
பாகிஸ்தானில் இருந்துகொண்டே ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நேரடியாக இயக்கியதும் இவன் தான்.
UAPA சட்டத்தின் கீழ் தடை
இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து நிழல் யுத்தம் நடத்தி வந்ததால், இந்திய அரசால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் இவன் பல ஆண்டுகளுக்கு முன்பே தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்தான்.
பாகிஸ்தானில் தொடரும் 'மர்ம மனிதர்களின்' வேட்டை -யார் காரணம்
கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகளை "யாரோ" குறிவைத்து அழித்து வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடப்பு 2026-ம் ஆண்டில் மட்டும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் அல்-பதர் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 7 முதல் 8 முக்கிய பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் ஊடுருவலுக்கு விழுந்த பலத்த அடி
பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI-ன் முழுப் பாதுகாப்போடு, எல்லையைத் தாண்டி ஜம்மு காஷ்மீருக்குள் ஆயுதங்களையும் உள்ளூர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதப் பாதையிலும் திருப்பி வந்தவன் ஹம்ஸா பர்ஹான். குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அண்மைக்காலமாக உள்ளூர் ஆதரவாளர்கள் (Over Ground Workers) மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்ட இவன் தீவிரமாக திட்டமிட்டு வந்ததாக இந்திய பாதுகாப்பு முகமைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.
தற்போது இவன் வீழ்த்தப்பட்டதன் மூலம், எல்லையில் பயங்கரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல் திட்டங்களுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
அலறும் பாகிஸ்தான் பாதுகாப்பு முகமைகள்
தங்கள் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள சர்வதேச பயங்கரவாதிகள், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து துல்லியமாக சுட்டுக் கொல்லப்படுவது பாகிஸ்தான் ராணுவத்திற்கும், அதன் உளவு அமைப்பான ISI-க்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் பாதுகாப்பு வளையத்தை மீறி, இந்த 'மர்ம துப்பாக்கிதாரிகள்' (Unknown Gunmen) எப்படி தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தெரியாமல் பாகிஸ்தான் உளவுத்துறை திணறி வருகிறது.
ஹம்ஸா பர்ஹானின் மரணம் குறித்து பாகிஸ்தான் அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக விரிவான அறிக்கையை வெளியிடவில்லை என்றாலும், பயங்கரவாத அமைப்புகளின் வட்டாரத்தில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் 'மோஸ்ட் வான்டெட்' பட்டியலில் இருந்த மற்றொரு முக்கிய தலைவன் பாகிஸ்தான் மண்ணிலேயே மண்ணைக் கவ்வியிருப்பது, எல்லையோர பாதுகாப்பில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து ஸ்கெட்ச் முக்கிய அம்சங்கள்
முசாஃபராபாத்தில் வேட்டை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பதுங்கியிருந்த பயங்கரவாதி ஹம்ஸா பர்ஹான் சுட்டுக்கொலை.
புல்வாமா சதிகாரன்: 2019 புல்வாமா தாக்குதல் வழக்கில் NIA குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்த முக்கிய குற்றவாளி.
UAPA தடை: இந்திய அரசால் பல ஆண்டுகளுக்கு முன்பே தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவன்.
தொடரும் மர்ம மரணங்கள்: 2026-ல் மட்டும் பாகிஸ்தான் மண்ணில் லஷ்கர், ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்த 8 பயங்கரவாதிகள் வரை எலிமினேஷன்.
மேலும் படிக்க | கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்றால் என்ன? இதை உருவாக்கியது யார்? அரசியல் அலசல்!
நடுரோட்டில் உடையும் மது பாட்டில்கள்.. அலறும் பள்ளி மாணவர்கள்: கொட்டிவாக்கம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடிதம்
Chennai, Tamil Nadu:சென்னை: சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும், அதனை உடனடியாக அகற்றக் கோரியும் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்குப் புரட்சி தமிழகம் கட்சி (பறையர் பேரவை) நிர்வாகி துரை.கதிர்வேல் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
பொதுமக்களுக்கு இடையூறு தரும் டாஸ்மாக் கடை
தென் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட இ.சி.ஆர் (ECR) நெடுஞ்சாலை, கொட்டிவாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை எண்: 4507 இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கடையின் அருகே ஏராளமான குடியிருப்புகளும், புகழ்பெற்ற துலுக்கானத்தம்மன் கோவிலும் அமைந்துள்ளன.
இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும், பொதுமக்களும், பெண் பக்தர்களும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் சாலையிலேயே நின்று கொண்டு தகாத வார்த்தைகளில் பேசுவதும், மது பாட்டில்களை நடுரோட்டில் வீசி உடைப்பதும் தொடர்கதையாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை
இதுகுறித்து முதல்வர் விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கொட்டிவாக்கம் 181-வது வட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான துரை.கதிர்வேல் குறிப்பிட்டுள்ளதாவது,
"இந்த டாஸ்மாக் கடை வாசலில் அளவுக்கு அதிகமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்கள் தினசரி செல்லும் பனையூர் சாலையில்தான் இந்த சிக்னல் அமைந்துள்ளது.
இந்த நெரிசலால் அவசரக் காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாமல் திணறும் அவல நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது."
மேலும் படிக்க - இனி டிராபிக் டென்ஷன் இல்ல.. எழும்பூரில் வேற லெவல் மாற்றம்.. குஷியில் வாகன ஓட்டிகள்
அகற்றப்படுமா டாஸ்மாக் கடை?
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும், மக்கள் நலனில் எப்போதும் அக்கறை காட்டும் தமிழக முதல்வர் இந்த டாஸ்மாக் கடையை (கடை எண்: 4507) உடனடியாக அப்பகுதியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொட்டிவாக்கம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வரின் சொந்தப் பகுதியான பனையூர் செல்லும் வழியிலேயே இத்தகைய புகார் எழுந்துள்ளதால், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என அப்பகுதி மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.
கொட்டிவாக்கம் டாஸ்மாக் கடை முக்கிய கோரிக்கை
- கொட்டிவாக்கம் ECR சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எண் 4507-ஐ அகற்றக் கோரிக்கை.
- டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு நடுரோட்டில் பாட்டில்களை உடைப்பதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு.
- பள்ளி மாணவர்கள், துலுக்கானத்தம்மன் கோவில் பக்தர்கள் கடந்து செல்ல கடும் அவதி.
- வாகன நெரிசலால் சிக்னலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சிக்கிக் கொள்ளும் அவலம்.
- முதல்வர் விஜய் பனையூர் செல்லும் வழியிலேயே இந்த பாதிப்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு
மேலும் படிக்க - ‘நோ செல்போன்’ மீறினால் சஸ்பெண்ட்! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை
புதிய ரேஷன் கார்டு : காத்திருந்தவர்களுக்கு குட்நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு
Chennai, Tamil Nadu:New Ration Card : தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகளை அடுத்த ஓரிரு மாதங்களில் விரைந்து வழங்க தமிழக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு : விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பட்டியல் - முழு விவரம்
உணவுத்துறை அமைச்சரின் திடீர் ஆய்வு
தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வெங்கடரமணன், சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ள பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
அதிகாரிகளுக்குப் பறந்த கறாரான உத்தரவு
ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் வெங்கடரமணன், "புதிய ரேஷன் கார்டு கோரி வந்துள்ள விண்ணப்பங்கள் மீது எவ்வித தொய்வும் இன்றி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் புதிய கார்டுகள் விநியோகிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்று கறாராக அறிவுறுத்தினார்.
கடை நேரமும் பொருட்களின் தரமும்
புதிய கார்டுகள் வழங்குவது மட்டுமன்றி, தற்போது செயல்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளின் தரம் குறித்தும் அமைச்சர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளும் குறிப்பிட்ட நேரத்திற்குத் திறக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தரமானதாக இருப்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் அரசின் பொங்கல் பரிசு, பேரிடர் நிவாரண உதவிகள் மற்றும் மானிய விலையிலான அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். கடந்த சில காலமாக கார்டு கிடைக்காமல் தவித்து வந்த லட்சக்கணக்கான மக்களுக்கு, அரசின் இந்த அதிரடி உத்தரவு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் வீட்டிலிருந்தபடியே டிஎன்பிடிஎஸ் இணையதளம் மூலமாகவோ அல்லது அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ இதற்கு விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
தேவையான ஆவணங்கள்
குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய ஆதார் கார்டு , கேஸ் பில், மின்சார கட்டண ரசீது வேண்டும். வாடகை வீட்டில் இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம் கொடுக்க வேண்டும். மேலும், குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முந்தைய ரேஷன் கார்டில் பெயர் இருந்தது என்றால், அங்கிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு அப்டேட் : குறைதீர்ப்பு முகாம் - பொதுமக்களுக்கான முக்கிய தகவல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
1. ரேஷன் கார்டு இணையதளமான www.tnpds.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
2. முகப்புப் பக்கத்தில் வலதுபுறம் உள்ள "மின்னணு அட்டை விண்ணப்பிக்க" என்ற லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.
3. புதிய பக்கத்தில் குடும்பத் தலைவரின் பெயர், முகவரி, கைபேசி எண் போன்ற விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரியாக நிரப்ப வேண்டும். பின்னர் குடும்பத் தலைவரின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4. உறுப்பினர்களைச் சேர்க்க என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி, குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் ஆதார் எண்களை உள்ளிட வேண்டும்.
5. முகவரி சான்றாக நீங்கள் தேர்வு செய்த ஆவணத்தை (ஆதார், மின்சார பில் போன்றவை) ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். எரிவாயு (Gas) இணைப்பு இருந்தால், அதுகுறித்த விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியா என்று ஒருமுறை சரிபார்த்து உறுதிப்படுத்து ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு குறிப்பு எண் குறுஞ்செய்தியாக வரும். இதை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனிலேயே கண்காணித்துக் கொள்ளலாம்.
இதன்பின், உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அதிகாரி அல்லது வருவாய் ஆய்வாளர் உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து கள ஆய்வு நடத்துவார். உங்கள் விண்ணப்பம் தகுதியானது என உறுதி செய்யப்பட்டதும், புதிய ரேஷன் கார்டு அச்சிடப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு அப்டேட் : குடும்ப தலைவரின் பெயரை மாற்றுவது எப்படி?
பெண் குழந்தைகள் வைத்திருந்தால் ரூ.50 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்
Allampatti, Kooraikundu, Tamil Nadu:Chief Minister Girl Child Protection Scheme : தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்காகவும், அவர்களின் எதிர்காலக் கல்வியை உறுதி செய்யும் நோக்கோடும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2026-2027 ஆம் நிதியாண்டிற்கு, இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளிடமிருந்து புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் வரும் தினசரி வருமானம் எவ்வளவு தெரியுமா?
பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே பெண் குழந்தைகளின் பெயரில் அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் நீண்ட கால வைப்புத்தொகையாக முதலீடு செய்வதுதான். ஒரு குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த நிதியுதவி மாறுபடுகிறது.

ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பங்கள்: ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்து, வேறு குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அந்தப் பெண் குழந்தையின் பெயரில் முதலீட்டுத் தொகையாக ரூ.50,000/- (ஐம்பதாயிரம் ரூபாய்) அரசால் வைப்புத்தொகை வைக்கப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ ரசீது குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.
இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்கள்: ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், ஒரு குழந்தைக்கு தலா ரூ.25,000/- வீதம், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.50,000/- (ஐம்பதாயிரம் ரூபாய்) வைப்புத்தொகை ரசீதாக பிரித்து வழங்கப்படும்.
மூன்று பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்கள்: சில குறிப்பிட்ட சிறப்பு நேர்வுகளின் கீழ், ஒரு குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், ஒரு குழந்தைக்கு தலா ரூ.25,000/- வீதம், மூன்று பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.75,000/- (எழுபத்தைந்தாயிரம் ரூபாய்) அரசாங்கத்தால் வைப்புத்தொகை ரசீதாக அக்குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்படும்.
முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கான தகுதிகளும் நடைமுறைகளும்
அரசால் பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்படும் இந்த வைப்புத்தொகையானது, அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களின் உயர் கல்விக்கோ அல்லது பிற முக்கியத் தேவைகளுக்கோ பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர், அவர்கள் தங்களின் முதிர்வுத் தொகையை (Maturity Amount) வட்டியுடன் சேர்த்து மொத்தமாகப் பெற்றுக் கொள்ளத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். இந்த முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கு, அக்குழந்தையின் பெற்றோர் அல்லது அக்குழந்தை சில முக்கிய ஆவணங்களுடன் அரசை அணுக வேண்டும்.
அவற்றுள், அரசாங்கத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட பெண் குழந்தையின் வைப்புத்தொகை ரசீது நகல், அக்குழந்தையின் கல்வித் தகுதியை உறுதிப்படுத்தும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் முதிர்வுத் தொகை நேரடியாகச் சென்று சேருவதற்கேற்ப அக்குழந்தையின் பெயரில் துவங்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவை மிக முக்கியமானவை ஆகும்.
இந்த ஆவணங்களைச் சேகரித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலரை நேரில் சந்தித்துச் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் இந்த ஆவணங்களைச் சரிபார்த்து, முதிர்வுத் தொகையை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளும் சான்றிதழ்களும்
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான பொதுமக்கள், தங்களின் அருகாமையில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது பின்வரும் சான்றிதழ்களின் நகல்களைத் தவறாமல் இணைக்க வேண்டும்:
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்: குழந்தையின் வயதை உறுதி செய்ய உள்ளாட்சி அமைப்பால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அவசியம்.
பெற்றோரின் வயதுச் சான்றிதழ்: தாய் அல்லது தந்தையின் வயது வரம்பை உறுதி செய்யும் அதிகாரப்பூர்வ சான்றிதழ்.
ஆண்டு வருமானச் சான்றிதழ்: இத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்குள் (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்) இருப்பதாக வட்டாட்சியரால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
குடும்பக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்: பெற்றோர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதற்கான மருத்துவச் சான்றிதழ்.
ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ்: குடும்பத்தில் ஆண் குழந்தைகள் எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்.
இருப்பிடச் சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றுகள்: தமிழ்நாட்டில் வசிப்பதற்கான பிறப்பிடச் சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் பெற்றோரின் உரிய அடையாள அட்டை நகல் ஆகியவை தேவை.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தத் திட்டம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது கூடுதல் விளக்கங்கள் தேவைப்பட்டாலோ நேரடியாக மாவட்ட அதிகாரிகளை அணுகலாம். அதற்கென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
விருதுநகர் மாவட்டம் – 626002.
தொலைபேசி எண்: 04562-252701
கூடுதல் தகவல்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சி : 10 ஆயிரம் ஊக்கத்தொகை + இலவச இசைப்பயிற்சி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Tiruchirappalli, Tamil Nadu:Trichy music school admission : கலை மற்றும் இசையின் மீது ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு இசைப்பள்ளியில், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்குப் பல்வேறு அதிரடிச் சலுகைகளையும், அரசு வேலைவாய்ப்பு முன்னுரிமைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | எம்பி பதவி ராஜினாமா? தவெக அமைச்சரவையில் திருமாவளவன்? திருச்சி கிழக்கில் க்ளைமாக்ஸ்
இப்பள்ளியில் என்னென்ன கலைகள் கற்றுத்தரப்படுகின்றன?
7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான படிப்புகள்: குரலிசை, தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம்.
எழுதப் படிக்கத் தெரிந்தாலே போதும்: நாதசுரம் மற்றும் தவில் ஆகிய துறைகளில் சேர எழுத, படிக்கத் தெரிந்திருந்தாலே போதுமானது.
வயது வரம்பு மற்றும் கட்டணம்:
வயது வரம்பு: குறைந்தபட்சம் 12 வயதுக்கு மேல், 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்விக் கட்டணம்: இந்த 3 ஆண்டு காலச் சான்றிதழ் படிப்பில் பயில, ஆண்டுக் கட்டணமாக வெறும் ரூ. 350/- மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
அள்ளிக்கொடுக்கும் அரசுச் சலுகைகள்:
மாதாந்திர ஊக்கத்தொகை: இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ. 1000/- (ஆண்டுக்கு சுமார் ரூ. 10,000/-க்கும் மேல்) கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இலவச தங்குமிடம்: வெளியூர் மாணவர்களுக்கு அரசு விடுதியில் தங்கிப் பயில இலவச தங்குமிட வசதி செய்து தரப்படும்.
இலவசப் பயணம்: மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல பேருந்துகளில் இலவசப் பயண அட்டை (Bus Pass) வழங்கப்படும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள சிறப்புகள்:
இணைச் சான்றிதழ்கள்: 8 ஆம் வகுப்பு முடித்து இங்கு சேருபவர்கள் இசைப்பள்ளியிலேயே 10 ஆம் வகுப்பும், 10 ஆம் வகுப்பு முடித்துச் சேருபவர்கள் 12 ஆம் வகுப்பும் தொடரலாம். பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து இதற்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
நேரடி கல்லூரி சேர்க்கை: இதில் தேர்ச்சி பெறுபவர்கள் சென்னை, மதுரை, திருவையாறு, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டயப் படிப்பில் (Diploma) நேரடியாக 3-ஆம் ஆண்டில் சேரலாம்.
அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: படிப்பு முடிந்ததும் அரசுப் பள்ளிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் மற்றும் திருக்கோயில்களில் (Temples) நாதசுரம், தவில், தேவாரம் படித்த இருபாலருக்கும் முன்னுரிமை அளித்து வேலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
கலை ஆர்வம் மிக்க மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, கீழே உள்ள முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்கள் மூலமாகவோ தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொள்ளலாம்:
தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி,
எண்: 32, மூலத்தோப்பு, மேலூர் ரோடு,
திருவரங்கம், திருச்சிராப்பள்ளி - 620 006. கைபேசி எண்: 94861 52007, தொலைபேசி எண்: 0431-2962942
திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை
இதேபோல், மற்றொரு அறிவிப்பில் திருச்சி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கறாராக கூறியுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்துத் தனியார் மகளிர் விடுதிகளும் "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2014"-இன் படி உரிய உரிமம் (License) பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் விடுதிகளை இயக்குவது சட்டப்படி குற்றமாகும்.
திருச்சி மாவட்டத்தில் தற்பொழுது உரிமம் பெறாமலும், முறையான அனுமதியின்றியும் செயல்பட்டு வரும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள், எளிய ஆளுமையின் கீழ் வரும் (SIMPLEGOV) இ-சேவை (e-Sevai) மையம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஒரு மாதத்திற்குள், அதாவது 15.06.2026 ஆம் தேதிக்குள் தங்களது விடுதிகளைப் பதிவு செய்து, உரிய உரிமத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தவறினால் சீல் வைக்கப்படும்
குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறும் தனியார் மகளிர் விடுதிகள் மீது, சட்டப்படியான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விடுதிகள் சீல் வைக்கப்படும் என்று இந்த அறிவிப்பின் மூலம் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறை கதவுகளை உடைத்த கைதிகளின் கல்வி அறிவு... இருள் சூழ்ந்த இரும்புக் கதவுக்குள் இமாலய சாதனை... கம்பி எண்ணிய கைகளால் மார்க் எண்ணும் சிறைக் கைதிகள்..!
Tiruchirappalli, Tamil Nadu:எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சிறைக் கைதிகள் சாதனை:
திருச்சி சிறைக் கைதிகளின் இமாலய வெற்றி:
தவெக அமைச்சரவை விரிவாக்கம்: 21 புதிய அமைச்சர்கள்... யார் யாருக்கு வாய்ப்பு?
Chennai, Tamil Nadu:TVK Cabinet Expansion: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று (மே 21) விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த அமைச்சரவையில் இடம்பெற இருக்கின்றனர். அமைச்சரவை விரிவாக்க விழா இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது.
ஏற்கெனவே, கடந்த மே 4ஆம் தேதி முதலமைச்சர் விஜய் உள்பட மொத்தம் 10 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், இன்று 21 முதல் 23 பேர் வரை அமைச்சர்களாக பொறுப்பேற்க கூடும் என தெரிகிறது.
மேலும் படிக்க | 59 வருடங்களுக்கு பின்.. தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்...
கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்
59 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சரவை இடங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மதுரை மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெறுகிறார்கள். இதில் விஸ்வநாதன், பொதுத்தொகுதியில் வெற்றி பெற்ற தலித் என்பது கூடுதல் சிறப்பு. சுமார் 59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பிடிக்கிறது.
விசிக மற்றும் ஐயூஎம்எல்: விசிக தரப்பில் ஒருவரும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தரப்பில் ஒருவரும் இந்த அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாக தெரிகிறது. இதில் 17 பேர் தவெக தரப்பில் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. விசிக தரப்பில் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் தரப்பில் தஞ்சை பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகான் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெகவில் யார் யார்?
இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவெக தரப்பில் வெளியாகவில்லை. இருப்பினும் வெளியாகி உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை காணலாம்.
1. பார்த்திபன் (சேலம் தெற்கு)
2. பர்வேஸ் (திருச்சி - அறந்தாங்கி)
3. ஆர்.வி. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)
4. மரிய வில்சன் (சென்னை - ஆர்.கே. நகர்)
5. வி. ராஜ்குமார் (கடலூர்)
6. ஸ்ரீநாத் (தூத்துக்குடி)
7. விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)
8. சத்யபாமா (திருப்பூர் வடக்கு)
9. விஜயலட்சுமி (நாமக்கல் - குமாரபாளையம்)
7 தலித் அமைச்சர்கள்... 4 பெண்கள்... தவெகவின் சமூக நீதி அமைச்சரவை - சிறப்பம்
Chennai, Tamil Nadu:Tamil Nadu Cabinet Expansion: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு இலாகா கடந்த மே 16ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்படியிருக்க, சுமார் 11 நாள்கள் கழித்து தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவிக்காம் செய்யப்பட்ட அமைச்சரவையில் கூடுதலாக 21 தவெக அமைச்சர்களும், 2 காங்கிரஸ் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் மட்டுமே தற்சமயம் இடம்பெற்றுள்ளது.
விசிக, ஐயூஎம்எல், அதிமுக இல்லை
விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஆனால் அவர்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அதேபோல், அதிமுகவின் சி.வி.சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு அமைச்சரவையில் இடம்கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கும் இடமளிக்கவில்லை.
19 மாவட்டங்களுக்கு நோ அமைச்சர்கள்
கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருவாரூர், திருவள்ளூர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்கள் யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
| வ.எண் | அமைச்சர்கள் பெயர் | தொகுதி |
| 1. | ஸ்ரீநாத் | தூத்துக்குடி |
| 2. | கமலி | அவிநாசி |
| 4. | ஆர்.வி. ரஞ்சித்குமார் | காஞ்சிபுரம் |
| 5. | வினோத் | கும்பகோணம் |
| 6. | ராஜீவ் | திருவாடனை |
| 7. | ராஜ்குமார் | கடலூர் |
| 8. | வி. காந்திராஜ் | அரக்கோணம் |
| 9. | மதன் ராஜா | ஒட்டப்பிடாரம் |
| 10. | ஜெகதீஸ்வர் | ராஜபாளையம் |
| 11. | ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) | கிள்ளியூர் |
| 12. | விஜய் பாலாஜி | திருச்சி கிழக்கு |
| 13. | லோகேஷ் தமிழ்செல்வன் | ராசிபுரம் |
| 14. | விஜய் தமிழன் பார்த்திபன் | சேலம் தெற்கு |
| 15. | ரமேஷ் | ஸ்ரீரங்கம் |
| 16. | விஸ்வநாதன் (காங்கிரஸ்) | மேலூர் |
| 17. | குமார் | வேளச்சேரி |
| 18. | தென்னரசு | ஸ்ரீபெரும்புதூர் |
| 19. | வி. சம்பத் குமார் | கோவை வடக்கு |
| 20. | முகமது ஃபர்வாஸ் | அறந்தாங்கி |
| 21. | சரத்குமார் | தாம்பரம் |
| 22. | மரிய வில்சன் | ஆர்.கே. நகர் |
| 23. | விக்னேஷ் | கிணத்துக்கடவு |
3 மாநிலங்களை இணைக்கும் அதிவேக வந்தே பாரத் ரயில்... 4 முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் அட்டவணைகள் இதோ!
Bengaluru, Karnataka:Banglore Vande Bharath Trains: இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையங்களுக்கு தலைமையிடமாக அமைந்துள்ள ‘சிலிக்கான் வேலி’ என்றழைக்கப்படும் பெங்களூரு பல முன்னனி நிறுவனங்களுக்கு முக்கிய இடமாக திகழ்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பெங்களூருவை நோக்கி படையெடுக்கும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்கள் தங்களது பணியிடங்களுக்கு சரியான நேரத்தில் சென்று வர போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாதது ஒரு முக்கிய குறையாகவே பார்க்கப்படுகிறது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. இந்த சேவையான நாளடைவில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, ஓசூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி போன்ற முக்கிய நகரங்கள் வழியாக வந்தே பாரத் ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. பெங்களூருவில் இருந்து தமிழகத்தில் வழியாக செல்லும் வந்தே பாரத் ரயில்களின் முழு விவரங்களைக் காண்போம்.
மேலும் படிக்க: சென்னை புல்லட் ரயில் திட்டத்தின் நிலைமை என்ன? 6 திட்டங்களை மாற்றிய மத்திய அரசு!
பெங்களூரு - கோவை வந்தே பாரத்:
கோவையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1.45 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. அங்கிருந்து மறுமார்கமாக கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக இரவு 8.40 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடைகிறது. சுமார் 380 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 6 மணி நேரம் 20 நிமிடங்களில் கடக்கிறது. பெங்களூரு-கோவை இடையிலான ரயில் சேவை வியாழக்கிழமை மட்டும் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தேசிய அளவில் முந்தும் வந்தே பாரத் ரயில்கள்... முழு விவரம்..
சென்னை - மைசூரு வந்தே பாரத்:
தெற்கு ரயில்வேயின் கீழ் சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2022 நவம்பர் 11 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. 16 பெட்டிகள் அடங்கிய இந்த ரயில் 496 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 6 மணி 30 நிமிடங்களில் கடக்கிறது. சென்னையில் இருந்து அதிகாலை புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்:20607) அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. மறுமார்கமாக மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்:20608) இரவு 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடைகிறது. இவ்வாறு சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் காட்பாடி, கே.எஸ்.ஆர் பெங்களூரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
பெங்களூரு - மதுரை வந்தே பாரத்:
மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.00 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்கமாக கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 9.40 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. சுமார் 572 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தை 8 மணி நேரத்தில் கடந்து செல்கிறது. சாதாரணமாக இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் அல்லது பேருந்தில் பயணித்தால் சுமார் 10 முதல் 11 மணி நேரம் ஆகும் பட்சத்தில் 8 மணி நேரத்தில் பயணிக்கு இந்த ரயில் சேவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். வாரத்தின் 6 நாள் இயங்கும் இந்த சேவை செவ்வாய்க்கிழமை மட்டும் இயங்காது என ரயில்வெ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு - எர்ணாகுளம் வந்தே பாரத்:
பெங்களூரு-எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்:26651) பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1.50 மணியளவில் எர்ணாகுளத்தை சென்றடைகிறது. மறுமார்கமாக (வண்டி எண்:26652) எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணியளவில் கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. பெங்களூரு - எர்ணாகுளம் இடையேயான 638 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 40 நிமிடங்களில் கடந்து கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது. 3 மாநிலங்களை இணைத்து பயணிக்கு இந்த ரயில் சேவை ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வழித்தடத்திலான வந்தே பாரத் சேவை புதன்கிழமை மட்டும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Thazh Thiravaa Movie கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த தாழ் திறவா!
Chennai, Tamil Nadu:தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுக்கும், மாறுபட்ட ஜானரிலான முயற்சிகளுக்கும் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இப்போது “தாழ் திறவா” திரைப்படம் கேன்ஸ் திரைவிழாவில் பெற்ற கவனத்தால் பேசுபொருளாகியுள்ளது. அமானுஷ்யம், மர்மம், திகில், வரலாற்று பின்னணி என பல அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகும் இப்படத்தின் டீசரும், தற்போது வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பார்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பரணி சேகரன் இயக்குகிறார். ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வழக்கமான ஹாரர் படங்களை போல அல்லாமல், அகழ்வாராய்ச்சி சார்ந்த ஒரு மர்மக் கதையை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. கிராமப்புறப் பின்னணி, பழமையான எழுத்துகள், மறைந்திருக்கும் ரகசியங்கள், அமானுஷ்ய சம்பவங்கள் ஆகியவை இப்படத்தின் முக்கிய தூண்களாக அமைந்துள்ளன.
மேலும் படிக்க | குடும்பத்தை கெடுத்த '3 எழுத்து இட்லி நடிகை...' ரவி மோகன் கண்ணீர் - யார் அவர்?
கேன்ஸ் திரைப்பட விழா
கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் மே 19ஆம் தேதி “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் திரை ரசிகர்களும், விமர்சகர்களும் கவனிக்கும் பிரசித்தி பெற்ற மேடையில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் இடம்பிடித்திருப்பது, படக்குழுவினருக்கே அல்லாமல் தமிழ் சினிமாவிற்கும் பெருமையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கேன்ஸ் போன்ற சர்வதேச திரைவிழாவில் ஒரு தமிழ் ஹாரர் திரில்லர் படம் கவனம் பெறுவது, அந்த படத்தின் உள்ளடக்கத்துக்கும், விளக்கவுரை தரத்துக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம்.
Thazh thiravaa 2026 - A Mystery horror film.
— CinemaInbox (@CinemaInbox) May 20, 2026
Thazh thiravaa Firstlook posters and Teaser will be premiered at ‘festival de Cannes’ on May 19th! #@aadhavkk @vanibhojanoffl @sureshmenonnew @subbu6panju @barmanpictures @baranisekaran @BoazDs @osho_venkat @Lyricist_Mohan… pic.twitter.com/bd5Es1Zbmg
மைய கதைக்களம்
படத்தின் மைய கதைக்களம் ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழைய எழுத்துக்களை சுற்றி நகர்கிறது. அந்த எழுத்துகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மர்மம், அந்த மர்மம் உருவாக்கும் அச்சம், அதனால் பாதிக்கப்படும் மனிதர்கள் ஆகியவற்றைத் தழுவிய கதையாக இது உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அகழ்வாராய்ச்சி, பழமையான நாகரிகங்கள், தொன்மையான ரகசியங்கள் போன்ற கூறுகளுடன் ஹாரர் ஜானரை இணைப்பது அரிதான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் “தாழ் திறவா” ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இப்படத்தின் மனநிலையை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. முதல் போஸ்டரில், இருளால் சூழப்பட்ட அறை ஒன்றில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள், வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், ஆதவ் கண்ணதாசன் பதற்றத்துடன் அவரை காப்பாற்ற ஓடிவரும் காட்சி, திகிலையும், நெருக்கடியையும் ஒருசேர உருவாக்குகிறது. ஒரு பார்வையிலேயே பார்வையாளருக்கு பய உணர்வைத் தூண்டும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, அமானுஷ்ய சூழல், பயத்துடன் நிற்கும் குழந்தைகள், ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் என பல பரபரப்பூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரில் காணப்படும் ஒவ்வொரு விவரமும் ஒரு மர்மப் பின்னணியைச் சுட்டிக்காட்டுகிறது. கதையின் பின்புலத்தில் ஏதோ பெரிய ரகசியம் மறைந்திருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்
ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் ஆகிய இருவருடன் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கூடுதலாக குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் கதைக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்படத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் முக்கிய தருணங்களில் இடம்பெறுவது, கதையின் உணர்ச்சிப்பூர்வமான பரிமாணத்தை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க | “4 மாச கரு கலஞ்சிது..” ரவி மோகன்-ஆர்த்தி விவாகரம் குறித்து கெனிஷா வீடியோ!
தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் வரும் தினசரி வருமானம் எவ்வளவு தெரியுமா?
Chennai, Tamil Nadu:தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை என்பது அரசின் வருமானத்தில் முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் போன்ற நேரங்களில் மதுபான விற்பனை சாதாரண நாள்களை விட பல மடங்கு அதிகரிப்பது வழக்கம். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் ஒருநாள் வருமானம் எவ்வளவு என்ற கேள்வி, ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் மீண்டும் மீண்டும் பேசுபொருளாகிறது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அதிகாரப்பூர்வமாக, வெளியாகும் தகவல்களின்படியும், தினசரி விற்பனை சராசரியாக ரூ.100 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. வார இறுதி நாட்களில் இது ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை உயர்வதாகவும் தகவல்கள் உள்ளன.
பண்டிகை காலம்!
பொங்கல் காலத்தில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு உயர்கிறது என்பதற்கு சமீபத்திய புள்ளிவிவரங்களே சான்றாக உள்ளன. 2025 பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டும் டாஸ்மாக் மூலம் ரூ.725.56 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்ததாக செய்திகள் வெளியாகின. அந்த ஆண்டில் ஜனவரி 13 முதல் 16 வரை விற்பனை அதிகரித்து, ஒருநாள் சராசரி ரூ.145 கோடியை தொட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கும் அடுத்த ஆண்டில் நிலை இன்னும் உயர்ந்தது. 2026 பொங்கல் காலத்தில் 2 நாட்களில் மட்டும் ரூ.517.85 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல்கள் வெளியானது. இதில் ஜனவரி 14ஆம் தேதி ரூ.184.05 கோடியும், ஜனவரி 15ஆம் தேதி ரூ.251.23 கோடியும் விற்பனையாகியுள்ளதாக செய்திகள் கூறுகிறது. பின்னர் போகி மற்றும் பொங்கல் தினங்களில் சேர்த்து சுமார் ரூ.850 கோடி அளவுக்கு விற்பனை நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் விற்பனை
இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை எந்தளவுக்கு உயர்கிறது என்பதை காட்டுகிறது. அதேசமயம், அரசுக்கு இந்த விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் இது நெகட்டிவ் விவாதத்தையும் உருவாக்குகிறது. பண்டிகை காலத்தில் குடும்ப செலவுகள் அதிகரிக்கும் நேரத்தில், மது விற்பனையும் உச்சத்தை அடைவது சமூக ரீதியாக பல கேள்விகளை எழுப்புகிறது.
டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பதற்கான மற்றொரு காரணம் விற்பனை மையங்களின் எண்ணிக்கையும், மக்களின் தேவை அடிப்படையிலான நுகர்வும் ஆகும். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கடைகள் செயல்படுகின்றன. வழக்கமாக வார இறுதியில், மாலை நேரங்களில், பண்டிகை விடுமுறைகளில் கடைகளுக்கு கூட்டம் அதிகமாக வரும். இதனால் பல கடைகளில் நீண்ட வரிசை, கூடுதல் ஊழியர்கள், போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
கூடுதலாக 10 ரூபாய்
சமீப காலங்களில் மது பாட்டில்களுக்கு எம்ஆர்பி விலையை விட கூடுதலாக 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. தற்போது விஜய் தலைமையிலான அரசு இந்த கூடுதல் 10 ரூபாய் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
