பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
ஏசி வெடித்து... 9 பேர் பலி - டெல்லியில் பயங்கர தீ விபத்து!
Delhi, Delhi:Delhi Fire Break Out: தேசிய தலைநகர் டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் இன்று (மே 3) அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதிகாலையில் தீ விபத்து
நான்கு மாடி குடியிருப்பின், 2ஆம் தளத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது உடன் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. அவர்கள் தீயை அணைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
மறுபுறம் மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது மாடிக்கும் தீ பரவியதை கண்டு அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியை விரைவுப்படுத்தினர். சுமார் 2 மணிநேர கடுமையான போராட்டத்திற்கு பின் அதிகாலை 6 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
#WATCH | Delhi: Deputy Commissioner of Police (DCP) for Shahdara District, Rajendra Prasad Meena, says, "Fire broke out in a house in a four-story building in Vivek Vihar, with casualties on the second floor. So far, 3-4 bodies have been found, and the search for the remaining… https://t.co/JXCQ0AMEls pic.twitter.com/ohduLZbMeG
— ANI (@ANI) May 3, 2026
10க்கும் மேற்பட்டவர்கள் பேர் மீட்பு
தற்போது இணையத்தில் வெளியாகும் இதுதொடர்பான வீடியோக்களை பார்க்கும்போது, கட்டடம் முழுமையாக தீயில் கருகி, அதன் மேல்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறி வருவதை பார்க்க முடிகிறது.
விவேக் விஹார் என்பது கிழக்கு டெல்லியின் பிரதான பகுதியாகும். அந்த கட்டத்தில் இருந்து சுமார் 12க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் குரு டெக் பகதூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏசி வெடித்ததா?
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியாவிட்டாலும், ஏசி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அங்கு இருக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார். "ஏசியில் ஏற்பட்ட வெடிப்பால் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 12-15 பேர் மீட்கப்பட்டனர். இருப்பினும், 4-5 பேரை இன்னும் காணவில்லை" என குடியிருப்பாளர் ஒருவர் ANI ஊடகத்திடம் தெரிவித்தார்.
அங்கிருந்த மற்றொரு குடியிருப்பாளர், "தீயணைப்பு துறையினர் சுமார் 20 பேரை பால்கனி வழியாக மீட்டனர். ஆனால், பின்புற பிளாட்களில் இன்னும் சில வெளியே வர முயற்சிக்கலாம் என நான் நினைக்கிறேன். ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் இன்னும் அந்த கட்டடத்தின் அடியில் இருப்பதாக தெரிகிறது" என பேசினார்.
உயிரிழந்த 9 பேரில், 1 வயது குழந்தையும் அடக்கம். போலீசாரின் கூற்றுப்படி, அனைத்து உடல்களையும் மீட்டுள்ளதாகவும், டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவிடம் உடல்களை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிகிறது.
டெல்லி முதலமைச்சர் இரங்கல்
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது X பதிவில், "விவேக் விஹாரில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் துயரமானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இந்த துயர்மிகு நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கடினமான காலத்தை தாங்கிக்கொள்ள அவர்களுக்கு வலிமையை தருமாறு இறைவனைப் பிராத்திக்கிறேன்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
பேராலயத்தில் தவெக தொண்டர்கள் ஏமாற்றம்
Velankanni, Tamil Nadu:திருச்செந்தூர் மற்றும் சீரடி சாய்பாபா கோயில்களுக்குச் சென்றதைத் தொடர்ந்து, வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு விஜய் செல்லத் திட்டமிட்டிருந்தார் விஜய். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஜய் வருவார் என எதிர்பார்த்து வேளாங்கண்ணியில் நள்ளிரவு முதல் திரண்ட ரசிகர்கள், அவர் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். ரசிகர்கள் அதிக அளவில் கூடியிருந்ததால், வேளாங்கண்ணி பேராலயத்தில் நடக்கவிருந்த காலை திருப்பலி 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இந்த திடீர் ரத்து காரணமாக, விஜய் ஞாயிற்றுக்கிழமை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு தொடர்பான ஆலோசனையில் கலந்துகொள்வார் என தெரிகிறது.
மும்பையை வீழ்த்த தோனியின் புதிய வியூகம்! பிளேயிங் 11ல் அதிரடி மாற்றம்!
Chennai, Tamil Nadu:நடப்பு 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீரர்களின் காயத்தால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், காயமடைந்து தொடரிலிருந்து முழுமையாக விலகிய இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மத்ரேவுக்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வாலை மாற்று வீரராக சென்னை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவின் U-19 உலகக்கோப்பை வென்ற அணியின் கேப்டனான ஆயுஷ் மத்ரே, இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் விளையாடிய 6 போட்டிகளில் 2 அரைசதங்கள் விளாசி அணியின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்த்தார். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின்போது துரதிர்ஷ்டவசமாக அவருக்கு இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. காயம் தீவிரமாக இருந்ததால், நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலிருந்தும் அவர் விலக நேரிட்டது சிஎஸ்கே அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

டெத் பௌலிங்கை சரிசெய்யும் வியூகம்
ஆயுஷ் மத்ரே ஒரு பேட்ஸ்மேனாக இருந்தாலும், சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு பதிலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் முக்கிய பிரச்சனையாக இருப்பது டெத் ஓவர் பந்துவீச்சுதான். மேட் ஹென்றி, முகேஷ் சௌத்ரி போன்ற பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு அனுபவமிக்க டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் அணியில் இல்லை என்ற விமர்சனம் இருந்து வந்தது. மேலும், கலீல் அகமது போன்ற வீரர்களும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், பந்துவீச்சு துறையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருந்தது. இந்த சூழ்நிலையில்தான், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரான ஆகாஷ் மத்வாலை 30 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
யார் இந்த ஆகாஷ் மத்வால்?
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் மத்வால், ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் கொண்டவர். 2023 மற்றும் 2024 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் இவர் விளையாடியுள்ளார். குறிப்பாக, 2023ம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடியபோது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார். அந்த சீசனில் மட்டும் 8 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி முத்திரை பதித்தார். இவர், சிஎஸ்கே அணியின் டெத் பௌலிங் பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருப்பார் என நம்பப்படுகிறது.
இன்று களமிறங்குவாரா?
ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டியான எல் கிளாசிகோ என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 44வது லீக் போட்டி இன்று நடைபெற உள்ளது. காயங்களால் தத்தளித்து வரும் சிஎஸ்கே அணி, இந்த போட்டியில் ஆகாஷ் மத்வாலை பிளேயிங் 11ல் சேர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தனது முன்னாள் அணிக்கு எதிராகவே மத்வால் சிறப்பாக செயல்பட்டு, சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் நம்பிக்கையை உயிர்ப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னை அணி
ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், சர்பராஸ் கான், எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா, உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், பிரசாந்த் வீர், ராமகிருஷ்ணா கோஷ், அமன் கான், மேத்யூ ஷார்ட், ஜாக் ஃபோல்க்ஸ், நூர் அகமது, அகீல் ஹொசைன், ராகுல் சாஹர், ஸ்ரேயாஸ் கோபால், மேட் ஹென்றி, நாதன் எல்லிஸ், கலீல் அகமது, முகேஷ் சௌத்ரி, அன்ஷுல் காம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஆகாஷ் மத்வால்.
மேலும் படிக்க | சிஎஸ்கே பிளே ஆப் செல்ல வாய்ப்பு உள்ளதா? எத்தனை வெற்றி தேவை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
கணவர்களை மாற்றிக்கொள்ள அனுமதி கொடுங்க! சகோதரிகளின் கோரிக்கை!
Pipariya Khurd, Madhya Pradesh:மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இரண்டு சகோதரிகள் தங்கள் கணவர்களை மாற்றிக்கொள்ள விரும்புவதாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தை தாண்டி சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு சகோதரிகளும் தங்களது திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லை என்றும், ஒருவரின் கணவரை மற்றொருவர் ஏற்று கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் இந்த மாற்றத்தை செய்ய விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த விசித்திரமான வழக்கு ஒட்டுமொத்த நீதிமன்றத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
இந்த வழக்கு முதலில் ஒரு கடத்தல் மனுவாக உயர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. ஆனால், விசாரணையின் போதுதான் இரு சகோதரிகளும் தங்களது கணவர்களை மாற்றி கொள்ள விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் வேறு சில காரணங்களால் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் கணவர்களுடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்க இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்த பிறகு, இது போன்ற கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. திருமண உறவுகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டவை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பரபரப்பில் முடிந்த வழக்கு
நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடிவடைந்தாலும், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் இதனை விசித்திரமான சம்பவம் என்றும், குடும்ப உறவுகளின் மதிப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும் விமர்சித்து வருகின்றனர். சிலர் திருமண வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளை சட்டபூர்வமாக தீர்க்க வேண்டும் என்றும், இத்தகைய முடிவுகள் சரியில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் குடும்ப பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வழக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப நல அமைப்புகள் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினரிடையே திருமண வாழ்க்கை குறித்த பல்வேறு விவாதங்களும் கேள்விகளும் எழுந்து வருகின்றன. அதில் இந்த ஒரு விஷயம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இரு சகோதரிகள் தங்கள் கணவர்களை மாற்றி கொள்ள விரும்புவது சட்டத்திற்கு உட்பட்டதல்ல. திருமண பிரச்சனைகளுக்கு விவாகரத்து, குடும்ப ஆலோசனை, குடும்ப நீதிமன்றங்கள் போன்ற சட்டபூர்வமான வழிகள் உள்ளன. இத்தகைய விசித்திரமான கோரிக்கைகள் சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால் நீதிமன்றம் இதனைக் கடுமையாக நிராகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேலும் நடைபெறலாம். இருப்பினும், தற்போதைக்கு இரு சகோதரிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மகனை கட்டியணைத்த படி இருந்த தாய்... 9 பேரை காவு வாங்கிய ஜபல்பூர் படகு விபத்து
மேலும் படிக்க | குடி போதையில் வந்தாரா முதல்வர்...? வீடியோவால் பரபரப்பு - பேரவையில் நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
'தவெக 121 இடங்களில் ஜெயிக்கும்... 41% வாக்குகள்' முன்னாள் போலீசாரின் கருத்துக்கணிப்பு
Chennai, Tamil Nadu:Tamil Nadu Assembly Election, IPS Ravi Exit Poll Result: தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் முன்னாள் காவல் துறையினரை வைத்து, ஐபிஎஸ் அதிகாரி ரவி நடத்திய தனிப்பட்ட கருத்துக்கேட்பில் இந்த முடிவுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதவாது, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் தலா 10 முன்னாள் காவல் துறையினரை வைத்து, அவர்களில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு தொகுதியிலும் 100 பொதுமக்களை சந்தித்து இந்த கருத்துக்கேட்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, 2340 முன்னாள் காவல்துறையினர், தமிழ்நாடு முழுவதும் 2.34 லட்சம் பேரிடம் கருத்துக்கேட்டுள்ளனர்.
மேலும், இது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பும் (Opinion Poll) இல்லை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் இல்லை (Exit Poll) என்று தெரிவித்துள்ள ரவி, இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கேட்பு (Post Exit Poll) எனவும் தெரிவித்துள்ளார்.
இதில் அனைத்து வயதினர், சமூகத்தினர், பாலித்தனவர்களை தேர்வு செய்து முன்னாள் காவல்துறையினர் கருத்துக்கேட்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் 41% தவெகவுக்கு வாக்குசதவீதம் கிடைக்கும் என்றும் 121 தொகுதிகள் வரை தவெகவுக்கு கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக ரவி கூறினார். இதன்மூலம், தவெக தனித்து ஆட்சியமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் விசில் சின்னத்தில் போட்டியிட்டது. சேலம் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த தொகுதியில் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவளித்தது. தவெக கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டதாகும்.
மேலும் படிக்க | விஜய்யின் அடுத்த டூர்.. நாகூர், வேளாங்கண்ணிக்கு நாளை விசிட்.. பிளான் என்ன?
மேலும் படிக்க | விஜய் ஜெயிப்பாரா? 2026 தேர்தல் குறித்து ஸ்ரீதர் வேம்பு சொன்ன முக்கிய பாய்ண்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்! தோல்வி அடைந்தால் பிளே ஆப் வாய்ப்பு இல்லையா?
Chennai, Tamil Nadu:ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 44வது லீக் போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவதால், இந்த எல் கிளாசிகோ போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசன் இரு அணிகளுக்குமே சிறப்பானதாக அமையவில்லை. முந்தைய ஆட்டங்களில் ஏற்பட்ட சரிவுகளிலிருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே அணி பவர்பிளேயில் ககிசோ ரபாடாவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆறு நாள் இடைவெளிக்கு பிறகு களமிறங்கும் சிஎஸ்கே, தனது தோல்வி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.

மேலும் படிக்க: சிஎஸ்கே பிளே ஆப் செல்ல வாய்ப்பு உள்ளதா? எத்தனை வெற்றி தேவை?
ஏப்ரல் 23 பின்னணி
இந்த சீசனில் இரு அணிகளும் ஏப்ரல் 23ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் முதல் முறையாக மோதின. அந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து, ட்ரேடிங் மூலம் அணிக்கு வந்த அதிரடி வீரர் சஞ்சு சாம்சனின் அபார சதத்தால் 207/6 என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, அகீல் ஹொசைனின் சுழல் பந்துவீச்சில் சிக்கி 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா காயத்தால் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பலம் மற்றும் பலவீனம்
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது தனிப்பட்ட ஃபார்ம் மற்றும் கேப்டன்சி பொறுப்புகளால் சற்று நெருக்கடியில் உள்ளார். எம்.எஸ். தோனியின் ஆட்டம் குறித்தான சந்தேகங்களும் எழுந்துள்ள நிலையில், சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் விளையாடுவது அணிக்கு மிக பெரிய உளவியல் ரீதியான பலமாக இருக்கும். சமீப காலங்களில் மும்பை அணிக்கு எதிரான 10 போட்டிகளில் 7-ல் சிஎஸ்கே வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே, தங்கள் அணியின் முக்கிய பிரச்சனையாக நிலைத்தன்மையற்ற ஆட்டத்தையே சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் மேட்ச் வின்னர்கள் என்றும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு திரும்பி போட்டியை மாற்றுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமையும். எனினும், சமீபத்திய போட்டிகளில் பனிப்பொழிவு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீசவே விரும்புவார். நடப்பு சீசனில் இரு அணிகளும் மோசமான ஃபார்மில் இருந்தாலும், சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதாலும், முந்தைய போட்டியில் மும்பையை வீழ்த்திய நம்பிக்கையிலும் இருப்பதால், வெற்றிபெற அதிக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும், மும்பை அணி தனது பிளே-ஆஃப் கனவை தக்கவைக்க இந்தப் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருப்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
மேலும் படிக்க: ரிஷப் பண்டுக்கு ஆப்பு வைத்த இந்த வீரர்... இனி இந்திய அணியில் இடமில்லை...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சேலத்தில் விஜய் பேசியதை தொடர்ந்து தவெக வெளிட்ட முக்கிய அறிவிப்பு!
Salem, Tamil Nadu:தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளை தீவிர படுத்தியுள்ளன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்து மக்கள் சந்திப்புகளை நடத்த திட்டமிட்டு வருகிறது. சேலத்தில் நேற்று பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக தீவிரமாக செய்யப்பட்டிருந்தன. கியூஆர் கோடு உள்ள அனுமதி சீட்டு வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேசியுள்ளது தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தி உள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்து விஜய் பேசியிருந்தார்.
மேலும் படிக்க | காஞ்சிபுரம் மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த காகங்கள்: பீதியில் மக்கள்
விஜய் பேச்சு
விஜய் சேலத்தில் பேசுகையில்," நமது இலக்கு தனிப்பெரும்பான்மை மட்டுமே. நாம் யாருடைய முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியமில்லை. மக்களாகிய எஜமானர்கள் நம்மோடு இருக்கிறார்கள். நான் அன்று ஆட்சியில் பங்கு தருவேன் என்று சொன்னது, எதிரணிகளை சிதறடிக்கவும், அவர்களின் வியூகங்களை குழப்பவும் நான் வீசிய அரசியல் குண்டு. அது பல இடங்களில் சரியாகவே வெடித்துள்ளது. இன்று பல கட்சிகள் அந்த குழப்பத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. ஆனால், நம்மை பொறுத்தவரை பாதை ஒன்றுதான், அது வெற்றியின் பாதை.
ஊழல் மலிந்துவிட்ட இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுக்கு தேவை ஒரு நேர்மையான மாற்று. அந்த மாற்று நாம்தான். ஸ்டாலின் அவர்கள் பதற்றத்தில் இருக்கிறார் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. அவர்கள் 5,000 ரூபாய் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். அது உங்கள் பணம் தான். ஆனால் ஓட்டு போடும்போது மட்டும் நம் சின்னமான விசில் ஞாபகம் வர வேண்டும்" என்று பேசி உள்ளார்.
விருப்ப மனுவை சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
சேலம் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கழகத் தோழர்களுக்கு வணக்கம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர்.
எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 20ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
— TVK Party HQ (@TVKPartyHQ) February 14, 2026
விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப்…
மேலும் படிக்க | பறவைக் காய்ச்சல் எதிரொலி... Half Boil சாப்பிடலாமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
தவெக கூட்டத்தில் இறப்பது நல்ல சகுனம் - மீண்டும் சர்ச்சையில் நயினார் நாகேந்திரன்!
Madurai, Tamil Nadu:தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) சார்பில் வருகிற மார்ச் ஒன்றாம் தேதி மதுரையில் அரசியல் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மதுரை விமான நிலையம் அருகேயுள்ள மண்டேலா நகர் பகுதியில் இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மார்ச் 1-ம் தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ள இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான முதற்கட்டப் பணிகளான முகூர்த்தக்கால் நடும் விழா பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்று முடிந்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | தேர்வு இல்லை! ஆதார் மையத்தில் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை.. கைநிறைய சம்பளம்

நயினார் நாகேந்திரன் பேச்சு!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, வருகிற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடுகின்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கு பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் இ பி எஸ் மற்றும் பிரதமர் மோடி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அன்புக்குரிய பாமக அன்புமணி ராமதாஸ், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், டிடிவி.தினகரன், பாரிவேந்தர், திருமாறன் மற்றும் பல சமுதாய அமைப்புகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கின்ற தேர்தலாக அமைய உள்ளது. அதற்கான முதல் பொதுக்கூட்டம். மதுராந்தகத்தில் நடைபெற்றது பொதுக்கூட்டம் என்று சொல்ல முடியாது. மாநாடு என்று சொல்லலாம்.
திமுக ஆட்சிக்கு பேரிடி
பிரதமர் வந்து சென்ற பிறகும் கூட பொதுமக்கள் வந்தது திமுக ஆட்சிக்கு பேரிடியாக வந்தது. தொடர்ந்து நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இது கூட்டம் அல்ல மாநாடு. பொதுக்கூட்டமா அல்லது மானாட என்று மக்கள் தீர்மானிப்பார்கள். அரசு நிகழ்ச்சியாக கூட இருக்கலாம். மாணிக்கம் தாகூர் தினமும் பேட்டி கொடுக்கிறார். திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறார். அங்கு வடிவமைப்பு உள்ளதா. முதல்வருக்கு வடிவமில்லாமல் இருக்கிறார் அவரது ஆட்சி முற்றுப்பெறவில்லை. 500க்கும் மேற்பட்ட தேர்தல் அறிக்கையில் 70 தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
33 லாக்கப் மரணம்
டிஜிபி-ஐ நியமிக்காத அரசு எப்படி சட்ட ஒழுங்கை நடத்த முடியும். 33 லாக்கப் மரணம் நடைபெற்று உள்ளது. காலவலரே காவலரை பாலியல் சீண்டல் செய்கிறார்கள். பள்ளிகளில் கஞ்சா கிடைக்கிறது. டாஸ்மாக் கூட படிப்படியாக குறையும் என்றார்கள். சகோதரி கனிமொழி ராகுல் காந்தியை சமாதானம் செய்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்குமா இருக்காதா என்று கேள்விக்குறியாக உள்ளது. என்னை பொறுத்த அளவில் யாருடைய மனதும் தனிப்பட்ட முறையில் புண்படக் கூடாது என்று நினைப்பவன் நான். அவர்களுக்கு இருக்கும் கொள்கையை புத்தகம் போட்டு அந்த கொள்கைக்கு மாறானது பாஜக என்று சொல்லலாம். பேப்பரில் மட்டும் எழுதி வைத்தால் எப்படி.
சட்டமன்ற தேர்தல்
சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டின் நடைபெறுகிறது. யார் நல்ல முதல்வராக ஆட்சி செய்தார்கள். தமிழக அரசு எந்த திட்டமும் செய்யவில்லை. அனைத்தும் செய்தது மத்திய அரசு. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 70 விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா உலக பொருளாதாரத்தில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியா வல்லரசு நாட்டை நோக்கி செல்கிறது. பிரதமர் மோடி மலேசியா சென்று தமில் மொழி மட்டும் தமிழ்நாட்டு குறித்த பேசி உள்ளார். தேர்வு ரத்து செய்யப்பட்டது எம்பிக்கு தெரிந்திருக்காது. இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக சொன்னார்கள் 90 ஆயிரம் பேருக்கு தான் வேலை கொடுத்திருக்கிறார். இப்ப சொன்னது என்னாச்சு காற்றோடு காத்தாக போயாச்சு.
தமிழக வெற்றிக் கழகம்!
பொதுமக்கள் பயணிப்பதை பொறுத்துதான் மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்ய முடியும். முதல்வராக இருந்த போது நீட் தேர்வை கொண்டு வருவதாக சொன்னார்கள் ஆனால் கொண்டு வரவில்லை. இபிஎஸ் அப்போது மத்திய அமைச்சராக இருந்த நட்டாவிடம் பேசி 7.5% வாங்கி கொடுத்தார். 41 பேர் இறந்து போனார்கள் அதற்கு தமிழக அரசும், விஜயும் காரணம். சேலத்தில் இப்போது ஒருவர் இறந்தார் அது அவருக்கு நல்ல சகுனம் தானே. இபிஎஸ் அறிவித்ததை அவர்களும் காப்பி அடித்திருக்கிறார்கள். கோடைகால விடுமுறை கூடுதலாக 2000. எந்த முதல்வரும் செய்யாத சாதனையை முதல்வர் செய்திருக்கிறார். நாங்கள் வழக்கு தொடுப்பதற்கான முகாந்திரமே இல்லை. மக்கள் வெறுக்கின்ற ஆட்சியாக உள்ளது அதை சமாளிப்பதற்காக கொடுக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்லிவிட்டு 28 மாதம் தராமல் பாராளுமன்றத் தேர்தலை வெற்றி கொடுத்திருக்கிறார்கள். தேர்தலுக்கான ஆட்சி, இது ஒரு குடும்ப ஆட்சி. துணி முதல்வரை முதல்வர் ஆக்க வேண்டும். தேமுதிக கூட்டணியில் இணைவது 1ஆம் தேதி பார்ப்போம் என கூறினார்.
மேலும் படிக்க | பயணிகளே அலர்ட்! சென்னை பேருந்துகளில் டிக்கெட் மெஷின் கோளாறு.. MTC முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சேலம் எடப்பாடி தொகுதியில் யார் வேட்பாளர்? விஜய் அதிரடி அறிவிப்பு!
Edappadi, Tamil Nadu:தமிழக வெற்றி கழகம் 2026சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது. அதிமுக அல்லது காங்கிரஸ் உடன் கூட்டணி சேருமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இறுதியில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை விஜய் அறிவித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வேட்புமனு பரிசீலனையின் போது எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மாயமானார். மேலும், அவரது வேட்புமனுவிலும் பல்வேறு தவறுகள் இருந்தது. இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் அவரது மனுவை நிராகரித்தனர். டம்மி வேட்பாளராக அவரது மனைவியின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரிகள் கேட்கும் போது தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மக்களவைத் தொகுதி மறுவரையறை தமிழகத்தைப் பாதிக்காது: சேலம் பிரச்சாரத்தில் இபிஎஸ்

அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் தேர்தல் அலுவலகத்திற்கு வராமல் காணாமல் போனதாகவும் தகவல் வெளியானது. எதிர்க்கட்சிகளின் சதிவேலையால்தான் இத்தகைய தவறுகள் நடந்ததாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக, 233 தொகுதிகளில் மட்டுமே தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் என்ன செய்யப் போகிறது என்பது தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், சுயேட்சை வேட்பாளருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவை தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தற்போது விஜய் சார்பில் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 19, 2026
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய… pic.twitter.com/Y9PrumJfmd
விஜய்யின் அறிக்கை!
என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு... 1400 யூனிட் இலவச மின்சராம் - வாக்குறுதியை நினைவுப்படுத்தும் EPS
Salem, Tamil Nadu:Salem Election 2026, Edappadi Palanisamy: சேலத்தில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.
நெசவாளர்களுக்கு வீடு
அந்த வகையில் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கைத்தறி நெசவாளரை காத்த அரசு, அதிமுக அரசாங்கம். அதேபோல மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடனே ஏழை கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு இல்லாமல் இருக்கின்றவர்களுக்கு அதிமுக அரசு வந்தவுடன் எப்படி, ஜெயலலிதா இருக்கும்போது கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்பட்டதோ அதேபோல அற்புதமான கான்கிரீட் வீடு நம்முடைய நெசவாளர்களுக்கு கொடுக்கப்படும்.
உதவித்தொகை உயர்த்தப்படும்
அதோட 65 வயது நெசவாளர்களுக்கு இப்போது 1000 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. இனி, அதிமுக ஆட்சி அமைந்த உடனே அந்த ஓய்வூதியத்தை உயர்த்தி 2500 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும். அதோடு, தற்போது நெசவாளருக்கு 300 யூனிட் விலை இல்லாமல் கொடுக்கப்படுகிறது. அதை, 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.
1400 யூனிட் இலவச மின்சாரம்
அதேபோல விசைத்தறி தொழில் இந்த பகுதியில் கைத்தறி, விசைத்தறி இரண்டுதான் பிரதான தொழில். இந்த இரண்டு தொழிலுமே இந்த ஆட்சியில் நலிவடைந்து போய்விட்டது. இன்றைக்கு பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டன.இந்த விசைத்தறி தொழில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இதனால் இந்த தொழில் செய்கிறவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, தொழிலாளர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்த உடனே இவர்களுக்கு ஏற்றப்பட்ட மின்கட்டணம் நிலைக்கட்டணம் இதையெல்லாம் சரி செய்யப்படும். அதேபோல, விசைத்தறி உரிமையாளருக்கு 1000 யூனிட் விலையில்லாமல் கொடுக்கிறார்கள். அதை 1,400 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.
அஇஅதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு @EPSTamilNadu அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து, ஜலகண்டபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்த போது.!#election2026 | #PMK |… pic.twitter.com/DqhYB1W4W9
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 20, 2026
காமராஜர் குறித்த அவதூறு
திருச்சி சிவா திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருக்கிறார். நாடாளுமன்றத்தில் திமுகவின் மேலவை தலைவராக இருக்கின்றார். அவர் காமராஜர் பற்றி இழிவாக பேசினார். ஆனால், இன்றைய முதலமைச்சர் அதை தட்டி கேட்கக் கூட வக்கு கிடையாது, திராணி இல்லை. காமராஜர் வேறு கட்சியாக இருந்தாலும் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர், பெருந்தலைவர் அவர்.
அப்படிப்பட்ட தலைவரை இழிவாக பேசுகின்றவரை கண்டிக்காத முதலமைச்சர்தான் ஸ்டாலின். அவர் மட்டுமல்ல இன்றைக்கு ஆர்.எஸ். பாரதி அவரும் காமராஜர் பற்றி கொச்சைப்படுத்தி பேசினார். அதையும் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. ஆகவே நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
இன்றைய தினம் மத்திய அரசு இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. அதன்படி தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
அம்மா கிளினிக், அம்மா மருந்தகம் வரும்
மினி கிளினிக் கொண்டு வந்தோம். அது ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு தெரியும், இன்றைய தினம் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அந்த பகுதியிலேயே போய் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அதுல என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி தேவை. 2000 அம்மா மருந்தகங்களை திறந்தோம். ஏழை மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்து 2000 அம்மா மருந்தகங்களை திறந்தோம்.
நம் பகுதியில மட்டும் 17 அம்மா மருந்தகங்கள், கிளினிக் எடப்பாடி சட்டப்பேரவையில் திறந்தோம். ஒவ்வொரு அம்மா மினி கிளினிக்கிலும் ஒரு எம்பிபிஎஸ் டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டு, யாராவது அந்த பகுதியில் ஏழைகள் நோய்வாய்ப்பட்டால் அம்மா கிளினிக்கில் நேரடியா சென்று அவர்கள் வைத்தியம் பார்த்துக்கொள்ளலாம். சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அது, ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. மக்களிடத்தில மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த திட்டம் தொடர்ந்து செயல்பட்டால் அதிமுக கட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்ற அடிப்படையில அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடனே இந்த அம்மா மினி கிளினிக் திட்டம் தொடரும்.
பாமகவை உடைக்க முயன்றனர்
அதிமுகவைப் போல் பாமகவை பிளவுப்படுத்த விஷமிகள் முயன்றனர். திமுகவின் சூழ்ச்சிகளை அன்புமணி முறியடித்துவிட்டார்; திமுகவால் அதிமுகவையும், பாமகவை வீழ்த்தவே முடியாது. முதலமைச்சரின் ஆசையெல்லாம் நிராசையாகிவிட்டது. அவர் கண்ட கனவு ஒன்று, ஆனால் நடந்தது ஒன்று. உங்கள் ஆட்சியை முடிவுகட்டுகின்ற தேர்தல்தான் இந்த தேர்தல்" என பேசினார்.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நாளையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. எனவே, தனது சொந்த மாவட்டத்தில் அதிகம் உள்ள நெசவாளர்கள் மத்தியில் அவர்களுக்கான வாக்குறுதியை நினைவுப்படுத்தினார். மேலும் அப்பகுதியில் வன்னியர் சமூக வாக்குகள் அதிகம் என்பதால் பாமக தலைவர் அன்புமணியையும் பிரச்சாரத்தில் உடன் வைத்திருந்தார்.
மேலும் படிக்க | விஜய் செய்தது முறைகேடு... சொன்னது ஹைகோர்ட் - வேட்புமனுவில் ரூ.100 கோடியை காணோம்!
மேலும் படிக்க | நாளை மாலை 6 மணி முதல் இதையெல்லாம் செய்தால் ஜெயில்.. தேர்தல் ஆணையம் அதிரடி!
மேலும் படிக்க | சர்ச்சுக்குள் விஜய் செய்த அந்த தப்பு... 5 வருஷம் சிறையா? - திருச்சி சம்பவம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
நாளை தஞ்சையில் தவெக கூட்டம் நடக்குமா? காவல் துறை கொடுத்த நிபந்தனைகள்!
Thanjavur, Tamil Nadu:தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டமாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வரும் விஜய், நாளை தஞ்சாவூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். கடைசியாக வேலூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், அடுத்ததாக டெல்டா மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த கூட்டத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது.
மேலும் படிக்க | TN GOVT: உங்கள் வங்கி கணக்கில் ரூ.3,500 வந்ததா? எப்படி செக் செய்வது?

தஞ்சையில் ஏற்பாடுகள் தீவிரம்
பொதுமக்களை நேரடியாக சந்திக்க விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், கட்சி நிர்வாகிகளை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக விஜய் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி என்ற இடத்தில் நாளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் உள்ள மிகப்பெரிய இடம் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த நிகழ்ச்சிக்கான அனுமதியும் காவல்துறை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காவல்துறை விதித்த நிபந்தனைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொடர்ந்து, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நேரில் சென்று ஆய்வுகளை நடத்தினார். என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை விசாரித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த கூட்டங்களை போலவே இந்த கூட்டத்திற்கும் கடுமையான நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐந்தாயிரத்திற்கும் குறைவான நிர்வாகிகள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் அனுமதி சீட்டுகள் கட்டாயம் வழங்கப்படும் வேண்டுமென்றும், அனுமதி சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அரங்கிற்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பங்கேற்கும் இடம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் கூட்டம் நடைபெற வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விஜய் பேச்சு எப்படி இருக்கும்?
தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடைபெறும் நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் விஜய் அவற்றை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தலுக்கான பணிகள் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து விஜய் பேசுவார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த வேலூர் கூட்டத்தில் பேசிய விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து மக்களை சந்திப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறும் சில முக்கிய தகவல்களையும் விஜய் பேசியிருந்தார். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. நாளை நடைபெறும் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிகக் | NDA கூட்டணியில் சசிகலா? அமித்ஷாவுடன் ஆலோசனை.. இபிஎஸ் பேட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
பரபரப்பான அரசியல் சூழல்! விஜய் எடுத்த அதிரடி முடிவு - காவல்துறை அனுமதி!
Thanjavur, Tamil Nadu:தமிழக வெற்றிக் கழகம் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளது. விஜய் ஒவ்வொரு மாவட்டமாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த கூட்டங்களில் விஜய் பேசுவது மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வேலூரில் விஜய் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி இருந்தார். அதுவரையில் திறந்த வெளியில் நடந்த இந்த சந்திப்புகள் முதல் முறையாக கூடாரம் அமைக்கப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நிர்வாகிகளின் பாதுகாப்பிற்காக இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் விஜய் பேச உள்ளார். வரும் மார்ச் 4ம் தேதி தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டியில் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச உள்ளார்.
மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு, மார்ச் மாத தாயுமானவர் திட்டம் - 2 முக்கிய அப்டேட்டுகள்

தஞ்சையில் மாபெரும் ஏற்பாடுகள்!
தஞ்சாவூரில் 8 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி என்ற இடத்தை தேர்வு செய்துள்ளனர். மார்ச் 4-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 வரை இந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு முன்பே தஞ்சாவூரில் விஜய் பேச திட்டமிட்டு இருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப் போய், தற்போது மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் நிர்வாகியில் சந்திப்பை எந்தவித இடையூறும் இல்லாமல், வெற்றிகரமாக நடத்துவதற்காக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அனுமதி வேண்டி மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவில் கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தமிழக வெற்றிக் கழகத்தினர் தேர்வு செய்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பிறகு வழக்கமான சில நிபந்தனைகளுடன் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளனர். விஜய் பேச போகும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

விஜய்யின் பிரச்சாரம்
சமீபத்தில் வேலூரில் பேசி இருந்த விஜய், "நான் நேரில் வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. எதிர்க்கட்சியாக கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகள் உங்களுக்கு தெரியும். நம் ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து என் சொந்தங்களாகிய உங்களை சந்திப்பேன்" என்று பேசியிருந்தார். விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை கடந்து தொடர்ந்து முன்னேறி சென்று கொண்டுள்ளார் விஜய். சமீபத்தில் அவரது குடும்பத்தில் இருந்தே குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் தஞ்சாவூரில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதை பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். தேர்தல் நெருங்கி வருவதால் விஜய் மக்கள் சந்திப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று விஜய் மக்கள் சந்திப்பு பணிகளில் ஈடுபடுவர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! தேதியை நோட் பண்ணுங்க.. முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மகனை கட்டியணைத்த படி இருந்த தாய்... 9 பேரை காவு வாங்கிய ஜபல்பூர் படகு விபத்து
Jabalpur, Madhya Pradesh:Jabalpur Cruise Boat Accident: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் பயங்கர படகு விபத்து ஏற்பட்டது. இதயத்தை கனமாக்கும் சம்பவத்தில் சுமார் 9 பேர் உயிரிழந்தனர். அந்த படகில் மொத்தம் 29 பேர் பயணித்துள்ளனர்.
தொடரும் மீட்புப்பணி
ஜபல்பூர் நகரில் பர்கி அணை நீர்த்தேக்கத்தில் பயணிகளுக்கு படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது. திடீரென பலத்த காற்று வீசியதால், படகு கவிழ்ந்து விபத்து உள்ளாது. 9 பேர் உயிரிழந்த நிலையில், இன்னும் பல பேரை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புக்குழு, உள்ளாட்சி அதிகாரிகள், உள்ளூர் போலீசார் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்தது எப்படி?
நேற்று (ஏப். 30) மாலை 6 மணிக்கு நீர்த்தேக்கம் பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியது. இதன் காரணமாகவே ஆற்றில் வெள்ளத்தின் போக்கு கடுமையாகி உள்ளது.
அப்போது படகில் இருந்து பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், கரைக்கு உடனடியாக திரும்பும்படி படகு ஊழியர்களை கேட்டுக்கொண்டனர். ஆனால் பயணிகளின் கோரிக்கைக்கு செவிக்காமல், படகு தொடர்ந்து மதந்து சென்றிருக்கிறது. அப்போது திடீரென படகு கவிழ்ந்துவிட்டது.
உயிர் பிழைத்தவர் கூறியது என்ன?
சில உள்ளூர்வாசிகள் கயிறுகளின் உதவியுடன் குறிப்பாக, உயிர் காப்பு அங்கி அணிந்திருந்தவர்களை மீட்க முயற்சித்தனர். இருப்பினும், சிலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில், அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லவே இல்லை என்றும் அனைத்து பயணிகளுக்கும் உயிர் காப்பு அங்கிகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
அமைச்சர் சொன்னது என்ன?
தொடர்ந்து, விபத்து நடந்த இடத்திற்கு மாநில அமைச்சர் ராகேஷ் சிங் விரைந்து வந்தார். ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ராகேஷ் சிங், "நிலைமை இன்னும் சிறிது நேரத்தில் தெளிவாகிவிடும். மீட்புப் பணிகள் முடிந்த பிறகு மக்கள் உயிர் காக்கும் மேலங்கிகளை அணிந்திருந்தும் ஏன் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்" என்றார்.
இந்த விபத்தில் உருக்கமான ஒரு சம்பவமும் நடந்தேறியது. ஜபல்பூர் படகு விபத்தில் தொடர்ந்து 9 பேரின் சடலங்களை மீட்டபோது, ஒரு தாய் மற்றும் நான்கு வயது மகனின் உடலையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
தாயும், மகனும் பலி... உருக்கமான சம்பவம்
விபத்து ஏற்பட்டபோது அச்சத்தில் தனது தாயை அந்த மகன் கட்டியணைத்துள்ளார். அவர்களின் உடலை மீட்டபோதும், அந்த தாயை மகன் கட்டியணைத்தவாறே இருந்துள்ளார்.
மீட்புப் பணியாளர்கள் அந்த தாய் மற்றும் அவரது குழந்தையின் உடல்களை நீரில் இருந்து வெளியே எடுத்தனர். ஒரு உயிர் காக்கும் அங்கு அவர்களை மூடியிருந்தது. இதைப் பார்த்த அவர்களின் குடும்பத்தினர் சம்பவ இடத்தில் கதறி அழுதனர். இது அமைச்சரையும் கலங்கச் செய்தது.
மேலும் படிக்க | சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு... ஷாக்கில் மக்கள் - பெட்ரோல், டீசல் விலை அப்டேட்
மேலும் படிக்க | Labour Day 2026: வங்கிகள் முதல் கடைகள் வரை – எது இயங்கும், எது இயங்காது?
மேலும் படிக்க | May 1: இந்தியாவின் முதல் மே தினத்தின் வரலாறு... பின்னணியில் சென்னை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மதுரை குலுங்க... குலுங்க... பச்சை பட்டுடுத்தி வந்த கள்ளழகர் - இதில் விசேஷம் என்ன?
Goripalayam, Tamil Nadu:Madurai Kallazhagar In Vaigai River: மதுரை குலுங்க... குலுங்க... கள்ளழகர் இன்று வைகையாற்றில் எழுந்தருளி பாண்டிய தேசத்து மக்களுக்கு தரிசனம் கொடுத்துவிட்டார். லட்சோப லட்ச பக்தர்கள் கள்ளழகரை தரிசித்து அருள் பெற்றனர்.
உலகப் புகழ்பெற்ற நிகழ்வான இது, ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருள்வார்.
நேற்று முன்தினம் அழகர் புறப்பட்டார்
இந்தாண்டிற்கான மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 3வது நாள் நிகழ்வாக நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 29) அன்று மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டார்.
பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்த புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
எதிர்சேவை நிகழ்ச்சி
நேற்று (ஏப்ரல் 30) அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நள்ளிரவில் திருமஞ்சணம்
கள்ளழகர் வரும் வழி முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி வரவேற்பு கொடுத்தனர். இன்று நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நிகழ்வும் நடைபெற்றது.
தங்க குதிரையில் புறப்பட்ட அழகர்
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்தில், தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். இதனையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவில் முன்பாக உள்ள ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சக்கரை தீபம் ஏற்றி வரவேற்பு
இதனைதொடர்ந்து வைகையாற்றை நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.
வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக் குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். வைகை ஆற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.
கோவிந்தா... கோவிந்தா...
அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்காண பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் 'கோவிந்தா கோவிந்தா' என மதுரையே அதிரும் வகையில் பக்தி கோஷங்களை முழங்கினர். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பச்சை பட்டு உடுத்தியது விசேஷம்
கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குவது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தாண்டு முழுவதும் நாடு செழிப்பாகவும், விவசாயம் அமோகமாகவும், மக்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்பது ஐதீகம். பச்சை நிறம் பசுமை, செழிப்புக்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவே, போதிய மழை பொழிந்து வளம் கூடும் என மக்களால் நம்பப்படுகிறது.
அழகர் உடுத்தும் பட்டு
பச்சை மட்டுமின்றி வெற்றியையும், சுபிட்சத்தையும் குறிக்கும் வகையில் சிவப்பு பட்டு; மங்களகரமான நிகழ்வுகளையும், செல்வத்தையும் குறிக்கும் வகையில் மஞ்சள் பட்டு; அமைதியைக் குறிக்கும் வகையில் வெள்ளை பட்டு உடன் கள்ளழகர் ஆற்றில் இறங்குவார். இந்தாண்டு பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கியிருக்கிறார்.
அடுத்த தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு புறப்பாடு
இதனைத்தொடர்ந்து தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள் மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீரராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ராமராயர் மண்டகப்படியில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டுச் சென்றார்.
சித்திரை திருவிழா ஏற்பாடுகள்
முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2 டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்ஷித் தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. வெளிநாட்டவர்களும் வருகை தந்திருந்தனர்.
விழாக் கோலத்தில் மதுரை
கள்ளழகர் எழுந்தருளியபோது வைகையாற்று நீரை தெளித்து உற்சாகத்துடன் நடனமாடினர். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
"வாராரு வாராரு அழகர் வாராரு... சப்பரம் ஏறி வாராரு... நம்ம சங்கம் தீர்க்க போறாரு..." "சாமி கண்டதும் பாதி சனங்க... சாமியேறி ஆடுதே... சாதி சனங்க கோடி சனங்க... சாதி மறந்து கூடுதே..." என்ற வரிகள் இன்று மதுரையில் எட்டுத்திசையும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. (இந்த வரிகள் கள்ளழகர் திரைப்படத்திற்காக தேவா இசையில், கவிஞர் வைரமுத்து எழுதியவை)
மேலும் படிக்க | பழனி முருகன் கோயில்... உண்டியல் முதல் நாள் கலெக்சன் மட்டும் எவ்வளவு தெரியுமா?
மேலும் படிக்க | விஜய் மீது பாயும் நடவடிக்கை.. டிஜிபிக்கு பறந்த கடிதம்.. என்ன மேட்டர்?
மேலும் படிக்க | தமிழ்நாடு வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு... ஷாக்கில் மக்கள் - பெட்ரோல், டீசல் விலை அப்டேட்
Chennai, Tamil Nadu:LPG Cylinder Price Hike In India: 1ஆம் தேதி நெருங்க நெருங்க ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் பதற்றத்தில் இருந்தது. தேர்தல் சீசனும் முடிந்துவிட்டது, போர் பதற்றமும் முடிந்தபாடில்லை, எனவே பெட்ரோல், டீசல், LPG விலை கடுமையாக உயருமோ என்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது.
இந்நிலையில், மே 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.993 அளவுக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. பெட்ரோல் மற்றும் டீசலும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் போர் சூழல் காரணமாக, எரிபொருளின் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்திருக்கிறது, இருப்பினும் அதன் தாக்கம் உள்நாட்டு நுகர்வோர்களை எட்டவில்லை. உள்நாட்டு விமானங்களுக்கான ATF (விமான டர்பைன் எரிபொருள்) விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒட்டுமொத்தமாக சுமார் 80% பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது பெரும்பாலான நுகர்வோருக்கு நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. மொத்த மற்றும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
மொத்த டீசல் மற்றும் சர்வதேச விமானச் செயல்பாடுகளுக்கான ATF ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சுமார் 4% பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது உலகளாவிய விலை மாற்றங்களின் மாறும் தன்மையை பிரதிபலிக்கிறது" என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.203 அளவுக்கு உயர்ந்து, ரூ.2,246.50 விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.928 விலை உயர்ந்துள்ளது, இதனால் 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.3,1740.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
The retail prices of petrol, diesel, and domestic LPG (14.2 kg cylinders) have remained unchanged, fully insulating domestic consumers from the recent increase in international fuel prices. No change in prices of domestic LPG (14.2 kg) for 33 crore domestic LPG consumers. No…
— ANI (@ANI) May 1, 2026
இந்நிலையில், மே 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.993 அளவுக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. பெட்ரோல் மற்றும் டீசலும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
