பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
சென்னையில் ரயில் சேவை திடீர் பாதிப்பு... பயணிகள் கடும் பாதிப்பு - என்ன பிரச்னை?
Chennai, Tamil Nadu:Chennai Ennore Train Service Affected : சென்னை எண்ணூர் அருகே புறநகர் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணூர் மேம்பாலம் அருகே ரயில்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார கோளாறு காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில்களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நீண்ட நேரமாக ரயில்கள் நிற்பதால் பயணிகள் கீழே இறங்கி, தண்டவாளம் வழியாக நடந்தே செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்களில் பயணிகள் சிக்கி உள்ளனர். Overhead Cable எனப்படும் ஓ.ஜி. மின்கம்பி கோளாறு காரணமாக ரயில் இயக்கத்தில் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எண்ணூர் பகுதியில் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ரயில் சேவை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அசுர ஆட்டத்தை காட்டிய இந்தியா... இதுவரை எந்தெந்த போட்டிகளில் 400+ ரன்களை அடித்துள்ளது?
Ardonamau, Uttar Pradesh:Team India 400 ODI Score : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஓடிஐ போட்டி இன்று (ஜூன் 17) நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி மகத்தான சாதனையை படைத்திருக்கிறது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 402 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. கேப்டன் சுப்மான் கில் 110 பந்துகளில் 22 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 154 ரன்களையும்; விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 79 பந்துகளில் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 125 ரன்களையும் அடித்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் நங்கேயாலியா கரோட்டி 4 மற்றும் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை சரித்தது குறிப்பிடத்தக்கது.
ஓடிஐயில் இந்திய அணி...
ஓடிஐ போட்டிகளை பொருத்தவரை இந்திய அணி எப்போதுமே சிறந்த அணியாகவே திகழும். இதுவரை இந்த பார்மட்டில் மட்டும் 1983 ஐசிசி உலகக் கோப்பை, 2011 ஐசிசி உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என நான்கு முறை ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வென்றிருக்கிறது.
Innings Brea
— BCCI (@BCCI) June 17, 2026
A massive ns on the board with centurions Shubman Gill and Ishan Kishan lea
Our bowling innings coming
Scorecahttps://t.co/JYJ5l44iJ6#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/T5rJ0qHsqy
இந்திய அணியின் 400+ ரன்கள் - முக்கிய புள்ளிகள்
- அப்படியிருக்க, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 400 ரன்களை பதிவு செய்துள்ளது, முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
- இதற்கு முன், ஓடிஐ அரங்கில் இந்திய அணி 7 முறை 400 ரன்களை கடந்துள்ளது. இந்நிலையில், 8வது முறையாக இந்திய அணி தற்போது 400 ரன்களை கடந்துள்ளது.
- இந்திய அணி ஓடிஐ அரங்கை பொருத்தவரை, 2011ஆம் ஆண்டில் இந்தூர் நகரில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 418/5 ரன்களை அடித்தே, அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
- இந்திய அணி 2007 ஐசிசி உலகக் கோப்பை தொடரில், போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் பெர்முடா அணிக்கு எதிரான போட்டியில்தான் 400 ரன்களை முதல்முறையாக கடந்தது. அந்த போட்டியில் 413/5 ஸ்கோரை இந்திய அணி அடித்தது.
- இந்திய அணி 8 முறை 400 ரன்களுக்கு மேல் ஓடிஐயில் அடித்திருக்கும் நிலையில், அதில் 6 மைதானங்கள் இந்திய மைதானங்களில் அடிக்கப்பட்டது. பேட்டிங்கிற்கு ஏற்ற தட்டையான ஆடுகளம் மற்றும் குறைந்த நீளத்தில் இருக்கும் பவுண்டரிகளின் காரணமாக 400+ ரன்கள் குவிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- ஆடவர் ஓடிஐ போட்டிகளை பொருத்தவரை, இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணி இரண்டும் தலா 8 முறை 400+ ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சுப்மான் கில் படைத்த அதிவேக சாதனை... விராட் கோலி லிஸ்டிலியே இல்லை
இந்திய அணியின் 400+ ஸ்கோர்கள்
| தரவரிசை | இந்திய ஸ்கோர் | எதிரணி | மைதானம் | நாள் |
| 1 | 418/5 | மேற்கு இந்திய தீவுகள் | இந்தூர், இந்தியா | டிசம்பர் 8, 2011 |
| 2 | 414/7 | இலங்கை | ராஜ்கோட், இந்தியா | டிசம்பர் 15, 2009 |
| 3 | 413/5 | பெர்முடா | போர்ட் ஆப் ஸ்பெயின், டிரினிடாட் | மார்ச் 19, 2007 |
| 4 | 410/4 | நெதர்லாந்து | பெங்களூரு, இந்தியா | நவம்பர் 12, 2023 |
| 5 | 409/8 | வங்கதேசம் | சாட்டோகிராம், வங்கதேசம் | டிசம்பர் 10, 2022 |
| 6 | 404/5 | இலங்கை | கொல்கத்தா, இந்தியா | நவம்பர் 13, 2014 |
| 7 | 402/10 | ஆப்கானிஸ்தான் | லக்னோ, இந்தியா | ஜூன் 17, 2026 |
| 8 | 401/3 | தென்னாப்பிரிக்கா | குவாலியர், இந்தியா | பிப்ரவரி 24, 2010 |
சோபா மாடல்: உதயநிதி குற்றச்சாட்டுக்கு... தவெக கொடுத்த சரவெடி பதிலடி - இதுதான் முதல்முறை
Chennai, Tamil Nadu:எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை சோஃபா மாடல் அரசு என குற்றஞ்சாட்டி வருகிறார்.
முதலமைச்சர் விஜய் கூட்டணி கட்சித் தலைவர்கள், அவரது அரசுக்கு ஆதரவு அளித்த சி.வி. சண்முகம் உள்ளிட்டோரை சந்திக்க சென்றபோது, அவர்களது இல்லத்திற்கு சோஃபாக்கள் கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அதை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை சோஃபா மாடல் என திமுக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தனர்.
மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை (ஜூன் 18) மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு லிஸ்ட்
அமைச்சர் அருண் ராஜ் X பதிவு
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினரின் குற்றச்சாட்டுக்கு முதல்முறையாக தவெக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் அவரது X தளத்தில், "தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் 'sonஆதன' சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலினே... அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
— Arunraaj TVK (@arunraajkg) June 17, 2026
அதிகாரத்தை பரவலாக்கும் ,…
உதயநிதிக்கு பதிலடி
மேலும், நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது என்றும் சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதேபோல், தமிழ்நாட்டில் மே 4ஆம் தேதி அன்று வாரிசுகளின் சிம்மானம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும் இனி தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: உண்மை தெரிந்த பெண்ணுக்கு அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Bengaluru, Karnataka:Bengaluru Murder: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் செல்போன் கடையில் வேலை செய்து வந்த இளம்பெண்ணை ஏமாற்றி ஆட்டோ ஓட்டுநர் திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த அந்த இளம்பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தன்னை பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் அந்த பெண்ணை கணவர் சந்திரசேகரன் கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணுடம் திருமணம்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் மகதி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பவானி, பி.எஸ்.சி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவின் திகளாரபாள்யா பகுதியில் உள்ள செல்போன் விற்பனை நிலையத்தில் பில்லிங் பிரிவில் பணியாற்றி வந்தார். வேலை காரணமாக துளசி நகர் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தண்ணீர் குடிக்க வந்தவருக்கு நேர்ந்த கதி! அலட்சியத்தால் பிறபோன உயிர்..ஷாக் சம்பவம்
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 33 வயதுடைய சந்திரசேகருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஆண்டு கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
முதல் திருமணத்தை மறைத்த கணவர்:
திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் கடந்த நிலையில், சந்திரசேகரின் நடவடிக்கைகள் மீது பவானிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் குறித்து விசாரித்தபோது, சந்திரசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயது குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பவானி, நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் தெரிவித்ததுடன், சந்திரசேகரை விட்டு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் பவானிக்கு வேறு திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
பவானியின் தந்தை போலீஸில் புகார்:
இந்நிலையில், கடந்த ஜூன் 13-ஆம் தேதி பவானியின் சமூக வலைதள கணக்கில், சந்திரசேகருடன் திருமணம் செய்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘ஸ்டோரி’யாக பதிவிடப்பட்டிருந்ததை அவரது உறவினர்கள் கவனித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பவானியின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பவானியை தொடர்பு கொள்ள அவரது தந்தை முயன்றபோது, அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த அவர், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் வீட்டின் உரிமையாளர் பவானியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியபோதும் எந்த பதிலும் கிடைக்காததால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2-வது மனைவி திட்டமிட்டு கொலை:
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பவானி உயிரிழந்த நிலையிலும், அருகில் சந்திரசேகர் மயக்க நிலையில் கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பவானியின் தந்தை அளித்த புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சிகிச்சைக்கு பின்னர் சந்திரசேகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பவானி தன்னை விட்டு பிரிய முடிவு செய்ததால் மன உளைச்சலில் இருந்த சந்திரசேகர், தொடர்ந்து தன்னுடன் வாழுமாறு அவரை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பவானி அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, பவானிக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்ததாகவும், அவர் அதை வாந்தி எடுத்து வெளியேற்றியதால் உயிர் தப்பிவிடக்கூடும் என்ற அச்சத்தில், வீட்டில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் சந்திரசேகர் தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சந்திரசேகரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட காதலன், அவரை பிரிய முயன்றதற்காக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: 22 வயது நடிகை உயிரிழப்பு! சோகத்தில் திரையுலகம்..இதோ முழு விவரம்
வெள்ளை அறிக்கையை வெளியிட்டது தவெக அரசு... முக்கிய அம்சங்கள் என்னென்ன?
Chennai, Tamil Nadu:White Paper On Tamilnadu Finances : முதலமைச்சர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றபோது, பதவியேற்பு மேடையிலேயே தமிழ்நாட்டின் தற்போதை நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அறிவித்தார்.
அந்த வகையில், முதலமைச்சர் விஜய் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் மரியவில்சன், தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். தொடர்ச்சியாக வெள்ளை அறிக்கை குறித்து அவர் விளக்கம் அளித்து வருகிறார்.
சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ பொறுப்பு ராஜினாமா... தவெகவில் இணைகிறாரா...?
Chennai, Tamil Nadu:C Vijayabhaskar Resignation : முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதன் கடிதத்தை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் வழங்கினார். இதனால், அதிமுகவின் எம்எல்ஏ எண்ணிக்கை 42 ஆக குறைகிறது.
கேரளாவை மிரட்டும் ஷிகெல்லா தொற்று... தமிழ்நாட்டில் என்ன நடவடிக்கை? அமைச்சர் அருண்ராஜ்
Namakkal, Tamil Nadu:Minister Arunraj Latest News : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 497 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுபாலன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டார். அரசு அதிகாரிகள, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ரேஷன் கார்டு வழங்குதல் தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு உரம் வழங்குதல் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவி வழங்குதல், கல்வி உதவித்தொகை தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை வழங்குதல், தோட்டக்கலை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 1.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
497 பேருக்கு நலத்திட்ட உதவி...
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், "திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 497 பயனாளிகளுக்கு ரூபாய் 1.76 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் நடக்கும் நிகழ்வு இனிதே நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு அரசு தான் தமிழக முதலமைச்சர் முன்னெடுத்துட்டு இருக்கிறார்.
இந்த நலத்திட்டம் கொடுக்கிறோம் என்றால், இது எல்லாமே மக்களோட வரி பணம் தான். அந்த மக்களோட வரி பணத்தை முறையாக அந்த மக்களுக்கு திருப்பி செலுத்தும் நேரம். திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இது, என்னுடைய முதல் நிகழ்வு. நலத்திட்ட உதவிகள் 497 பேருக்கு வழங்குவதில் உண்மையாகவே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
நோய் பரவாமல் தடுப்போம்...
இது ஆரம்பம் தான். கூடிய விரைவில் இன்னும் நிறைய விண்ணப்பங்கள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக நாங்கள் பரிசீலித்து, மக்களுக்கு உண்டான, மக்களுக்கு அவர்களுக்கு உரிமையான அந்த நலத்திட்டங்களை விரைவில் கொண்டு சேர்ப்பேன்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் பெருந்தொற்று நோய்கள் இப்போது அதிகமாக பரவிவரும் நிலையில், அந்த அச்சுறுத்தல் இருக்கும் இந்த காலகட்டத்தில், இதற்கான முன்னெடுப்புகள் நாங்கள் கண்டிப்பாக எடுப்போம். நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் நம் உடன் இருக்கிறார். எந்தெந்த விதத்திலும் இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ, அதை அனைத்தையும் எடுப்போம்.
ஷிகெல்லா பாக்டீரியா என்றால் என்ன?
ஷிகெல்லா பாக்டீரியா (Shigella) என்பது Gastroenteritis தான். உணவு சரியான பாதுகாப்பு இல்லாத உணவுப் பொருட்கள் உட்கொண்டதால் வந்திருக்கும். இப்போது பார்த்தீர்கள் என்றால், உணவுப் பாதுகாப்பு துறையும் நமது சுகாதாரத்துறையின் கீழ்தான் இருக்கிறது.
அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடமும் நாங்கள் ஏற்கனவே பேசி உள்ளோம். கண்டிப்பாக அனைத்து உணவு விடுதிகளிலும் பாதுகாப்பான, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும், அதை உறுதி செய்ய வேண்டும் என்ற ஒரு உத்தரவையே நாங்க போட்டுள்ளோம்.
கூடுதல் பணியிடங்கள் தேவை உள்ளது
கண்டிப்பாக படிப்படியாக எங்கெங்கெல்லாம் இந்த மாதிரி பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற உணவு விடுதிகள் இருக்கிறதோ அவை அனைத்திற்கும் நாங்க ஒரு சாம்பிள்ஸ் எடுத்து, அது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக உத்தரவும் நாங்கள் போட்டுள்ளோம்" என்றார். கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா வேகமாக பரவி வருகிறது. சிறார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதை குறிப்பிட்டே அமைச்சர் அருண்ராஜ் பேசி உள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் கண்டிப்பாக தொடரும். மருத்துவர்களின் பணியிடங்களைப் பொறுத்தவரைக்கும், இப்போது இருக்கிற sanctioned இடங்கள் சுமார் 96.97 விழுக்காடு நிரம்பி உள்ளது. இருந்தாலும், கூடுதல் பணியிடங்கள் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் நான் ஒற்றுக்கொள்கிறேன்.
அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும்...
அதை முதலமைச்சரிடம் கலந்து பேசி, எந்தெந்த மருத்துவமனைகள், இப்போது மாவட்ட மருத்துவமனைகள், சில இடங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட உயர் சிறப்பு வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு எப்படி உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் பேசி அதற்கான உத்தரவை பெற்று நடவடிக்கை எடுப்போம்.
கடந்த அறுபது வருடங்களாக மாறி மாறி இந்த ரெண்டு கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டு, ஒரு புற்றுநோய் மாதிரி தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறையிலும், நிர்வாகத்திலும் படர்ந்திருக்கு. நோய் பரவி இருக்கிறது. நீங்கள் பாருங்கள், தலைமை சரியாக இருந்தால் அனைத்து துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் கண்டிப்பாக நேர்மையாக தான் செயல்பட வேண்டும். அதற்கு எந்தவித ஒரு எஸ்கேப்பும் (escape) கிடையாது.
மருத்துவர்களுக்கு அறிவுரை
படிப்படியாக பாருங்கள், அனைத்து துறையிலும் ஊழல் குறையும். இந்த ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவ துறையில் மட்டுமல்ல, பல பல்வேறு துறைகளிலும் பணி நிரந்தரம் தொடர்பான முடிவுகளை முதலமைச்சரிடம் பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம்.
மல்லசமுத்திரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை இன்று ஆய்வு செய்தேன். காலையில், மக்கள் அவர்களின் தேவைகளை சொல்லி இருந்தார்கள். முதலில் மருத்துவமனை சுத்தமாக இருக்க வேண்டும். அந்த மருத்துவமனையை பார்த்தீர்கள் என்றால், அங்கு நிறைய கட்டடங்கள் எல்லாம் இடிந்து, குப்பைகள் எல்லாம் இருந்தது. சுத்தமாகவே இல்லை. இப்போது நாங்கள் சொல்லியிருக்கோம். பொதுப்பணித்துறை பொறியாளர்களை கூப்பிட்டு பேசி இருக்கிறோம்.
மருத்துவர்களும், நோயாளிகளிடம் மிக கனிவாக, மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும். குறிப்பாக, 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சுகாதார நிலையம், இரவு நேரத்தில் வந்தாலும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, அவங்களுக்கு தேவையான சிகிச்சையை செய்து கொடுக்க வேண்டும். நான் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன்" என்றார்.
மேலும் படிக்க | CM விஜய் அடித்த சிக்ஸர்... சொல்லாத வாக்குறுதியை நிறைவேற்றிய தவெக - மாஸ் அறிவிப்பு
4 நாளில் 100 மில்லியன்... ஆரம்பமே அமர்களம்! FIFA ஒளிப்பரப்பில் 'Z' பிரம்மாண்ட சாதனை
Mumbai, Maharashtra:பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் வார இறுதியில் பல்வேறு தளங்கள் வாயிலாக 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து ஜீ (Z) சாதனை படைத்துள்ளது. தொடக்க விழா உள்பட முதல் நான்கு நாள்களில், நேரலை போடடிகளை பார்த்த ஒவ்வொரு பார்வையாளரின் சராசரி நேரம் 190 நிமிடங்களுக்கும் அதிகமாக பதிவாகி Zee5 தளம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
CM விஜய் அடித்த சிக்ஸர்... சொல்லாத வாக்குறுதியை நிறைவேற்றிய தவெக - மாஸ் அறிவிப்பு
Chennai, Tamil Nadu:Muthalamaicharin Kalai Unavu Thittam Extension: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்… pic.twitter.com/jGRdHYaWoG
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 15, 2026
குறிப்பாக தந்தை பெரியாரின் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கைக்கோர்த்த Peko - Kalp; சிறு நிறுவனங்களின் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு புதிய கூட்டணி
New Delhi, Delhi:சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிதி மற்றும் வணிகத்தை மேம்படுத்தவும், மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்கவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெகோ (Peko) மற்றும் கல்ப் (Kalp) நிறுவனங்கள் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அடுத்த தலைமுறை டிஜிட்டல் வணிக உள்கட்டமைப்பை உருவாக்க பெகோ மற்றும் கல்ப் நிறுவனங்கள் கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகளாவிய சந்தைகளில் உள்ள வங்கிகள், இலவச மண்டலங்கள் (Free Zones), அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், Peko நிறுவனத்தின் வணிக சூப்பர்-பிளாட்ஃபார்முடன் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் (Distributed-ledger), புரோகிராமிங் செய்யக்கூடிய பணம் மற்றும் டிஜிட்டல் சொத்து உள்கட்டமைப்புகள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Peko - Kalp கூட்டணியின் நோக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி வணிக மேலாண்மை சூப்பர்-பிளாட்ஃபார்ம் Peko. டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் Kalp. இவை இரண்டும் இன்று (ஜூன் 14) ஒரு முக்கிய மூலோபாய கூட்டணியை அறிவித்துள்ளன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) அடுத்த தலைமுறை நிதி மற்றும் வணிகத்திற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு அடித்தளத்தை உருவாக்குவதே இக்கூட்டணியின் நோக்கமாகும்.
கிடைக்கப்பெறும் வசதிகள்
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி (MoU), KALP நிறுவனத்தின் டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் Peko தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், Peko நேரடியாகவும் அதன் நிறுவன கூட்டாளிகள் மூலமாகவும் சேவை வழங்கும் வணிகங்களுக்கு, அனுமதி பெற்ற விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் (DLT), புரோகிராமிங் செய்யக்கூடிய digital-cash, digital-asset வாலட், முக்கிய மேலாண்மை சூழல் மற்றும் டோக்கனைசேஷன் உள்கட்டமைப்பு போன்ற அதிநவீன வசதிகள் கிடைக்கப்பெறும். இந்த ஒப்பந்தம், இரு நிறுவனங்களின் தனித்துவமான பலங்களை ஒன்றிணைக்கிறது.
Peko தளத்தின் சேவை
Peko நிறுவனம், இன்வாய்சிங், பணம் செலுத்துதல், ஊதியம் (Payroll), நிறுவன உருவாக்கம், கார்ப்பரேட் பயணம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில் நவீன வணிகங்களின் இயக்க அமைப்பாக (Operating System) வேகமாக உருவெடுத்துள்ளது.
Kalp நிறுவனம் வழங்கும் சேவை
Kalp நிறுவனம், இத்தகைய தளங்களுக்குத் தேவையான அடிப்படை டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குகிறது. இது பார்ட்னர் நிறுவனங்கள் தங்களின் சொந்த பிராண்டின் கீழ் மேம்பட்ட digital-asset மற்றும் புரோகிராமிங் செய்யக்கூடிய நிதிச் சேவைகளை வழங்க வழிவகுக்கிறது.
முன்னர் பெரிய நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) அன்றாடம் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதே இந்த இரு நிறுவனங்களின் கூட்டு இலக்காகும்.
சிறு, நடுத்தர பொருளாதாரம் அதிவேகமடையும்...
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து Peko நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான (CEO) காஷிப் அகமது கான், "நாங்கள் Peko தளத்தை உருவாக்கியபோது, வணிகச் செயல்பாடுகளை எளிதாக்குவது மட்டுமே எங்களின் நோக்கமாக இருக்கவில்லை. அதற்குப் பின்னால் இருக்கும் உள்கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்ய விரும்பினோம்.
Kalp உடனான இந்த ஒத்துழைப்பு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை சாதாரண வணிகங்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உதவுகிறது. இது சிறு, நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரத்தை அதிவேகமாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதற்கான தீர்க்கமான படியாகும்" என்றார்.
எதிர்காலத்திற்கான திட்டமிடல்
Kalp டிஜிட்டல் இன்ஃப்ரஸ்ட்ரக்சர் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் தபன் சங்கல், "அடுத்த 10 ஆண்டுகளில் வணிகங்கள் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையே மாறப்போகிறது. இந்த மாற்றத்தை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்னின்று நடத்த வேண்டும். Peko உடன் இணைவதன் மூலம், கோடிக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரம்பிற்குள் அந்த எதிர்காலத்தைக் கொண்டு வருகிறோம்" என குறிப்பிட்டார்.
அன்றாடப் பயன்பாட்டுக்கு...
Kalp நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மிருத்யுஞ்ஜய (ஜே) பிரஜாபதி, "பெகோ போன்ற பரந்த வரம்பைக் கொண்ட ஒரு தளத்துடன் கைகோர்ப்பதன் மூலம், எங்கள் உள்கட்டமைப்பு உண்மையான அளவில் வணிகங்களைச் சென்றடைகிறது. மேம்பட்ட digital-asset உள்கட்டமைப்பை வெறும் வாக்குறுதியாக வைக்காமல், நிஜப் பொருளாதாரத்திற்கான அன்றாட பயன்பாடாக நாங்கள் மாற்றுகிறோம்” என பேசினார்.
முதற்கட்ட திட்டம் என்ன?
முதற்கட்டமாக, இரு நிறுவனங்களும் இணைந்து இதன் பாதுகாப்பு மற்றும் வணிக மாதிரிகளை மதிப்பீடு செய்து, படிப்படியாக Peko அமைப்பில் இந்தச் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளன.
இந்த ஒத்துழைப்பு ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இந்தியா மற்றும் பிற சந்தைகளில் உள்ள Peko நிறுவனத்தின் நெட்வொர்க்குகளுக்கு விரிவுபடுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Dubai Gold Price: துபாயில் திடீரென உயர்ந்த தங்க விலை, 24k 22k 18k விலை எவ்வளவு?
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... மகளிர் டி20 உலகக் கோப்பையில் முதல் வெற்றி
England:INDW vs PAKW T20I WC : மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, அதன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
It's all blue in
— BCCI Women (@BCCIWomen) June 14, 2026
Scorec https://t.co/1tfRc3jcrX#TeamIndia | #WomenInBlue pic.twitter.com/slDhUJnXY5
முடிவுக்கு வருகிறது போர்... ஹார்முஸ் நீரிணை உடனே திறக்கப்படும் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு
Washington, District of Columbia:US Iran Deal, Donald Trump Announcement : மத்திய கிழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியில் இருந்து நீடித்து வரும் போர் பதற்றத்தை ஒருவழியாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்துவிட்டார் என்றே சொல்லலாம்.
சனிக்கிழமையான இன்று (ஜூன் 13) அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்திட இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட உடனே ஹார்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் திறந்துவிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது Truth Social சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் அவரது பதிவில், "இந்த ஒப்பந்தம் நாளை கையெழுத்திடப்பட உள்ளது. கையெழுத்தான உடனேயே ஹார்முஸ் ஜலசந்தி அனைவரின் பயன்பாட்டுக்கும் திறக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2016ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஈரான் உடன் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு இது நேர் எதிரானது என்றும்; ஒபாமா செய்துகொண்ட ஒப்பந்தம் என்பது ஈரான் அதன் அணு ஆயுதம் கனவை நோக்கி வேகமாக்கும் என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விமானப்படை விமானம் விபத்து : 5 அதிகாரிகள் பலி - அசாமில் நடந்தது என்ன?
Parokhuwa, Assam:Assam IAF Aircraft Accident : அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை நிலையத்தில், இந்திய விமானப்படைக்கு (IAF) AN-2 சொந்தமான போக்குவரத்து ரக விமானம் இன்று காலையில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி, தீப்பற்றி எரிந்தது.
The Indian Air Force deeply regrets the loss of five personnel in the An-32 accident at Jorhat, Assam.
— Indian Air Force (@IAF_MCC) June 13, 2026
Sqn Ldr Prashant Singh, Flt Lt Shubham Kumar, Sgt Jitendra Sharma, Agniveervayu Khemaram Kumawat and Agniveervayu Danish Alam made the supreme sacrifice in the line of duty.… pic.twitter.com/9SmOjtS5mU
இதில் விமானப் படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, உயிரிழந்தவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டது.
1. படைப்பிரிவுத் தலைவர் பிரசாந்த் சிங்
2. விமான லெப்டினன்ட் சுபம் குமார்
3. சார்ஜென்ட் ஜிதேந்திர சர்மா
4. அக்னிவீர்வாயு கெமரம் குமாவத்
5. அக்னிவீர்வாயு டேனிஷ் ஆலம்
3 லட்சம் பேருக்கு வெறும் 6 பேர் தானா? மயிலாடுதுறை ‘சிங்கப்பெண்’ படைக்கு விழுந்த முதல் செக்.!
Mayiladuthurai, Tamil Nadu:Mayiladuthurai Singappen Scheme: தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பதவியேற்ற தவெக தலைவர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பிரத்யேகமாக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்படும் என்ற கோப்பில் முதலாவதாகக் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (10.06.2026) முதல் இந்த அதிரடிப்படை தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தின் தற்போதைய கள நிலவரம் மற்றும் புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேற தற்போதைய கட்டமைப்பு போதுமானதா? அல்லது இது வெறும் விளம்பர முழக்கமா?" என்ற விவாதத்தையும், சமூக ஆர்வலர்களிடையே பெரும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
3 லட்சம் பெண்களுக்கு 6 பேர் மட்டுமே! - விந்தையான கணக்கீடு:
சமீபத்திய மக்கள் தொகை மற்றும் வாக்காளர் புள்ளிவிவரங்களின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண் மக்கள் தொகையினர் வசித்து வருகின்றனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், தினசரி சந்தை மற்றும் பொது இடங்களுக்கு வரும் பெண் தொழிலாளர்கள் எனப் பெரும் பகுதியினர் அடங்குவர்.
மேலும் படிக்க: ஆவின் பச்சை பால் விற்பனை நிறுத்தம்? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
ஆனால், இவ்வளவு பெரிய பரப்பளவும் மக்கள் தொகையும் கொண்ட இந்த மாவட்டத்திற்கு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த காவல்துறையினரின் எண்ணிக்கை வெறும் 6 பேர் மட்டுமே (2 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 பெண் காவலர்கள்).
ஷிப்டுக்கு 3 பேர்: 1300 சதுர கிலோமீட்டரை எப்படிக் கண்காணிப்பது?
மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்ய ‘சுழற்சி முறை’ பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த 6 பேரும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு ஷிப்ட்டிற்கு ஒரு உதவி ஆய்வாளர் (SI) மற்றும் இரண்டு பெண் காவலர்கள் (PC) என மொத்தம் 3 பேர் மட்டுமே களத்தில் இருப்பார்கள். மயிலாடுதுறை மாவட்டம் என்பது மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், குத்தாலம் எனப் பல முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய, சுமார் 1,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய மாவட்டமாகும்.
சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி:
ஒரே ஒரு அதிநவீன ரோந்து வாகனத்தை வைத்துக்கொண்டு, ஒரு ஷிப்ட்டில் இருக்கும் 3 பெண் காவலர்கள், ஒட்டுமொத்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒரே நேரத்தில் எப்படிக் கண்காணிக்க முடியும்?
நீண்ட தூரப் பயணமும், 'மின்னல் வேக' நடவடிக்கையின் சாத்தியமும்!
காவல்துறை தரப்பில், "அவசரக் கால உபகரணங்கள் கொண்ட வாகனம் வழங்கப்பட்டுள்ளது, எந்தவொரு அவசர அழைப்பிற்கும் இவர்கள் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மயிலாடுதுறையின் ஒரு எல்லையான கொள்ளிடத்திலோ அல்லது குத்தாலத்தின் கிராமப்புறப் பகுதியிலோ ஒரு பெண்ணிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றால், அந்த நேரத்தில் இந்த சிங்கப்பெண் படை மாவட்டத் தலைமையகத்திலோ அல்லது சீர்காழியிலோ ரோந்துப் பணியில் இருந்தால், அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சேரக் குறைந்தது 45 நிமிடங்களாவது ஆகும்.
போக்குவரத்து நெரிசல்களையும் கடந்தே அவர்கள் செல்ல வேண்டும். இத்தகைய சூழலில், மின்னல் வேக நடவடிக்கை" என்பது தற்போதைய 3 பேர் கொண்ட ஒரு ஷிப்ட் அமைப்பில் எப்படிச் சாத்தியமாகும் என்பது சமூக ஆர்வலர்களின் நியாயமான கேள்வியாக உள்ளது.
மேலும் படிக்க: மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பது எப்படி?
முக்கியப் பொறுப்புகளும், பற்றாக்குறையான மனிதவளமும்:
இந்த அதிரடிப்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலக்குகள் மிக அதிகம். மாவட்ட எஸ்பி G.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இவர்கள் கண்காணிக்க வேண்டிய இடங்கள்:
- மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்.
- மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியச் சந்திப்புகள்.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்.
- வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருவிழா நடக்கும் பகுதிகள்.
- இதுதவிர, பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்களையும் இவர்களே நடத்த வேண்டும்.
ஒரு மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களையும், பேருந்து நிலையங்களையும் வெறும் 3 பேர் கொண்ட ஒரு குழு தினசரி எப்படிக் கண்காணித்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியும்? இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று எனப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீர்வு என்ன? சமூக ஆர்வலர்களின் கோரிக்கை:
முதலமைச்சரின் இந்த ‘சிங்கப்பெண் படை’ என்ற தொலைநோக்குத் திட்டம் மிகச் சிறப்பானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெண்களிடத்தில் இது பாதுகாப்பைப் பற்றிய ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. ஆனால், இந்தத் திட்டம் வெறும் காகித அளவிலும், பெயரளவிலும் சுருங்கிவிடக் கூடாது என்றால், அரசு உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தாலுக்கா வாரியான பிரிவுகள்:
மாவட்டத்திற்கு 6 பேர் என்பதை மாற்றி, மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவிற்கும் (மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்) தலா ஒரு சிங்கப்பெண் படைப் பிரிவு அமைக்கப்பட வேண்டும்.
மனிதவளத்தை அதிகரித்தல்:
ஒரு ஷிப்ட்டிற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 பெண் காவலர்களாவது சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும்.
இருசக்கர வாகன ரோந்து:
குறுகலான தெருக்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல, நான்கு சக்கர வாகனத்துடன் சேர்த்து, பெண் காவலர்களுக்குத் இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட வேண்டும்.
ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக, பெண்களின் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்யக் கொண்டுவரப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’, மயிலாடுதுறை மாவட்டத்தின் 3 லட்சம் பெண்களுக்கும் உண்மையான அரணாக விளங்க வேண்டுமே தவிர, வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாது. அரசு உடனடியாக இந்த ஆட்கள் பற்றாக்குறையைக் கவனித்து, கூடுதல் காவலர்களை நியமித்தால் மட்டுமே, இந்தச் சிங்கப்பெண்கள் உண்மையான ‘அதிரடிப்படையாக’ உருவெடுக்க முடியும் என்று சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ரூ.2 லட்சம் வழங்கும் தமிழக அரசு.. எப்படி பெறலாம்? ஜூன் 30ம் தேதி கடைசி நாள்!
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் முடங்கியது... கதறும் இளசுகள் - என்னாச்சு?
Chennai, Tamil Nadu:Facebook, Instagram, Whatsapp Down : உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா தளங்கள் முடங்கி இருப்பதாக தெரிகிறது. இதனால், ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று இரவு 7.45 மணியளவில் பேஸ்புக்கில் பிரச்னை என சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் புகார் தெரிவித்திருப்பதாக Downdetector தளத்தில் தெரிகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பிரச்னையை பயனர்கள் சந்திக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் லாக்-இன் செய்ய முடிவில்லை போன்ற புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற மெட்டா செயலிகள் முடங்கியிருப்பதை X தளத்தில் பல பயனர்கள் குறிப்பிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. முடக்கத்திற்கான காரணம் குறித்து மெட்டா இதுவரை அதிகாரப்பூர்வமாக விளக்கம் தெரிவிக்கவில்லை.
