icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்குது... முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளும் ஸ்ரீதர் வேம்பு

Chennai, Tamil Nadu:

Sridha Vembu on CM Vijay: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் தனது கிராமப்புறப் பள்ளித் திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான பணிகள் விரைவாக நடந்ததாக ஜோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு புதன்கிழமை கூறியுள்ளார். முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இதற்கு அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஸ்ரீதர் வேம்புவின் கலைவாணி கல்வி மையம்

ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, புதன்கிழமையன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம், தமிழ்நாட்டில் அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் நிலவும் ஊழல் விவகாரத்தின் மீது மீண்டும் கவனத்தைத் திருப்பியுள்ளார். லாப நோக்கற்ற அடிப்படையில் செயல்படும், குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கும் கிராமப்புறப் பள்ளியான 'கலைவாணி கல்வி மையம்' அனுமதி பெறுவதில் சிரமங்களைச் சந்தித்ததாக வேம்பு கூறினார். "கிராமப்புறக் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசக் கல்வியை வழங்கும் எங்கள் கிராமப்புறப் பள்ளியான கலைவாணி கல்வி மையம், முந்தைய அரசிடம் அனுமதி பெறுவதில் தாமதங்களைச் சந்தித்தது. அது முற்றிலும் இலவசப் பள்ளியாக இருந்தபோதிலும், கணிசமான பணம் கோரப்பட்டது; அதுவே அதற்கான ஒரே வழி என்றும் எங்களிடம் கூறப்பட்டது," என்று ஸ்ரீதர் வேம்பு தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டார்.

முந்தைய அரசுடன் ஒப்பீடு

முந்தைய அரசுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தற்போதைய நிர்வாகத்துடன் ஒப்பிட்ட ஸ்ரீதர் வேம்பு, தவெக அரசு பதவியேற்ற பிறகு அனுமதிகள் தாமதமின்றி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "விஜய்யின் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, அனுமதிகள் விரைவாகவும் தானாகவும் கிடைத்துள்ளன. நம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த நேர்மறையான மாற்றத்தைப் பாராட்டுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்திற்காக திரு.விஜய் அவர்களுக்கு நன்றி," என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாடு முக்கிய செய்திகள் Live: எ.வ.வேலு வீட்டில் சோதனை; 300 பேருந்துகளை துவங்கி வைக்கும் CM விஜய்!

திமுக மீது புதிய தாக்குதல்

மற்றொரு பதிவில், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் ஆழமாக வேரூன்றியிருந்ததாகக் கூறி ஸ்ரீதர் வேம்பு அக்கட்சியைச் சாடினார். "திமுக ஆட்சியில் தமிழகத்தில் அதிக அளவில் ஊழல் இருந்தது. இது உலகிற்கே தெரிந்த ஒன்று; இது ஒன்றும் பெரிய ரகசியம் அல்ல," என்று அவர் கூறினார். ஊழல் "இமாலய உயரத்தை" எட்டியுள்ளதாகக் கூறிய வேம்பு, மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சர் ஒருவர் முன்பு கூறிய கருத்துகளையும் சுட்டிக்காட்டினார். அந்த அமைச்சர் வேறொரு துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு ஊழல் குறித்து பகிரங்கமாகப் புகார் அளித்திருந்ததை அவர் குறிப்பிட்டார்.

தனது விமர்சனம் அரசியல் கொள்கை சார்ந்ததல்ல என்று கூறிய அவர் பொதுச் சேவைக்காகத் தான் மதிக்கும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் சுட்டிக்காட்டினார். "இது கொள்கை சார்ந்தது அல்ல. அக்காலத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த கேரள மார்க்சிஸ்டுகள் கூட, திமுக எவ்வளவு ஊழல் மலிந்த கட்சியாக இருந்தது என்பதைச் சொல்வார்கள்," என்று அவர் கூறினார். கேரளாவின் முன்னாள் நிதியமைச்சர் பாலகோபாலைப் பாராட்டிய வேம்பு, "கேரளாவின் முன்னாள் நிதியமைச்சர் திரு. பாலகோபால் போன்றவர்களின் அர்ப்பணிப்புள்ள பொதுச் சேவையை நான் எப்போதும் பாராட்டி வந்துள்ளேன்," என்றும் கூறினார்.

சுயபரிசோதனை அவசியம்

விமர்சிப்பவர்களைக் குறிவைப்பதற்குப் பதிலாக, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காண்பதில் திமுக கவனம் செலுத்த வேண்டும் என்று வேம்பு கூறினார். "திமுக உண்மையாகவே சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்பினால், அவர்கள் தங்கள் ஊழல் விவகாரத்திலிருந்தே அதைத் தொடங்க வேண்டும். அதற்குப் பதிலாக, என்னைப் போன்ற ஒருவனை 'தவெக கைக்கூலி', 'பிராமணர்' அல்லது 'சங்கி' என்றெல்லாம் முத்திரை குத்தித் தாக்குவதிலேயே அவர்கள் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள்," என்று அவர் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | வெயிலுக்கு பிரேக்.. கனமழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்

அமைச்சர் ராஜ்மோகன் போட்ட உத்தரவு

தமிழக பள்ளிக்கல்வுத்துறை அமைச்சர் ஏ.ஜாஜ்மோகம் கடந்த வாரம் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனுமதி மற்றும் சான்றிதழ்கள் குறித்த அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த செயல்முறைகள் எந்த வித லஞ்சமும் இன்றி பெற வழி இல்லாதபடி ஆன்லைன் மூலம் மட்டுமே நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவுக்கு பல கல்வி நிறுவனங்கள் தங்கள் நன்றியை தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ரந்து ஜோஹோ தலைவர் ஸ்ரீதர் வேம்புவின் இந்த பாராட்டு, விஜய் தலைமையிலான தவெக அரசின் இந்த புதிய முயற்சி உண்மையில் பயனுள்ளதாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் இது குறித்து அளித்த முக்கிய தகவல்கள்:

  • தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ் பெறுவதற்கு தகுதி ஒன்றே ஒரே அளவுகோல்.
  • அனுமதி பெற யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம்.
  • அரசியல் கட்சிகள், கல்வித் தரகர்கள் அல்லது வேறு யாரேனும் பணம் கேட்டு அணுகினால் நம்ப வேண்டாம்.
  • பள்ளிகளுக்கான அங்கீகாரம், புதுப்பித்தல், NOC ஆகிய அனைத்து விண்ணப்பங்களும் இனி ஆன்லைனில் மட்டுமே ஏற்படும்.
  • கல்வித்துறை அதிகாரிகளின் நேரடித் தலையீடு குறையும்.
  • வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.

மேலும் படிக்க | School Holidays: குஷியில் மாணவர்கள்.. 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு.. ஏன் தெரியுமா?

0
0
Report

ஆவின் பாலகம் தொடங்க வேண்டுமா? அரசின் மெகா அறிவிப்பு.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Chennai, Tamil Nadu:

Chennai Aavin Parlour News: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு ஆவின் நிறுவனம், மக்களுக்கு குறைவான விலையில் பால் மற்றும் பால் பொருட்களை வழங்கி வருகிறது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, தயிர், பனீர், ஐஸ்கிரீம், நெய் உள்ளட்ட பால் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஆவின் நிர்வாகம் அவ்வப்போது முக்கியமான அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகர எல்லைக்குள் காலியாக உள்ள 9 ஆவின் பாலகங்களை அமைக்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு ஜூன் 24ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கு ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 9 இடங்களில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ரூ.1 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலகத்தின் உள்கட்டமைப்பு, அலங்காரப் பணிகளுக்கான செலவையும் விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும். அந்த செலவுகள் ஆவின் நிறுவனத்தால் திருப்பி வழங்கப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது.  தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1 லட்சம் டெபாசிட் தொகை செலுத்தி, ஆவின் பாலகத்தை  அமைத்துக் கொள்ளலாம்.

ஆவின் பாலகம் அமைக்க வேண்டிய இடங்கள்

 

வ.எண் மண்டலம் பாலகம் இடம்
1. அசோக் நகர் கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி, சென்னை
2. தென் சென்னை காவலர் குடியிருப்பு, கொந்திதோப்பு, சென்னை
3. தென் சென்னை மிண்ட் தெரு, சௌகார்பேட்டை, சென்னை
4. பெரம்பூர் எண் 131, அபிராம் அவென்யூ 9வது தெரு கவியரசு கண்ணாதாசன் நகர் (ரேணுகா மருத்துவமனை அருகில்) சென்னை
5. அண்ணா நகர் எம்எம்டிஏ காலனி, மதுரவாயல், சென்னை
6. தி.நகர் லலிதாபுரம், தி.நகர், சென்னை
7. பாலவாக்கம் பிடிசி குடியிருப்பு,  பல்லவன் குடியிருப்பு, துரைப்பாக்கம், சென்னை
8. பாலவாக்கம் காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை
9. மயிலாப்பூர் சிஐடி காலனி, ஆழ்வார்பேட்டை, சென்னை

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

  • ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிறுதொழில் அல்லது வணிக அனுபவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • சில்லறை வணிகத்தில் குறைந்தது 2 ஆண்டுகள்  அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
  • கடந்த ஓராண்டுக்கான வங்கி கணக்கு வரவு ரூ.25 லட்சத்தை தாண்டியிருக்க வேண்டும் 
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
  • பாலகத்தின் உட்கட்டமைப்பு செலவை ஆவின் நிர்வாக ஏற்காது.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்க விருப்பப்படுபவர்கள் aavin.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு ஜூலை 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. 

The General Manager, Marketing Unit, TCMPG Ltd, No.3A Pasumpon Muthuramlinganar Salai, Nandanam, Chennai - 35 என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 3300 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

0
0
Report

இன்றைய ராசிபலன் ஜூன் 25: மேஷம் முதல் மீனம் வரை! இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

Chennai, Tamil Nadu:

Tamil Daily Horoscope, June 25: இன்று ஆனி மாதம் 11ஆம் தேதி வியாழன்கிழமை (ஜூன் 25)  பரபாவ வருடம். சுபமான காலம் அபிஜித் காலம் - நண்பல் 11:57 – 12:47 வரை, அமிர்த காலம் -  காலை 06:46 – 08:32 வரை,  பிரம்மா முகூர்த்தம் - காலை 04:32 – 05:20 வரை ஆகும்.  மேலும், இன்று இராகு - பகல் 1:55 – 3:29 வரை, எமகண்டம் -  காலை 6:08 – 7:42 வரை, குளிகை - 9:15 காலை– 10:49  வரை ஆகும். இந்த நிலையில், 12 ராசிகளுக்கான பலன்களை பார்ப்போம்.

மேஷம்

ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : லாபகரமான நாள்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

மேலும் படிக்க: சனி பெயர்ச்சி: ஜூலை 2 சனியின் முக்கிய மாற்றம்... 4 ராசிகளுக்கு பணக்கார யோகம் ஆரம்பம்

ரிஷபம்

கலை பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெரிவுகள் பிறக்கும். வெளியூர் பயணத்தில் இருந்து வந்த தாமதங்கள் மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : தாமதங்கள் மறையும்.

மிதுனம்

புத்தி கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக நிறைவு பெறும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : மாற்றங்கள் பிறக்கும்.

கடகம்

சில அனுபவம் மூலம் சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். கல்வி சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எண்ணங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதுமைகள் மூலம் லாபத்தை அடைவீர்கள். உடன் இருப்பவர்களால் நிம்மதி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : தெளிவுகள் பிறக்கும்.
பூசம் : விவேகம் வேண்டும்.
ஆயில்யம் : புதுமையான நாள்.

சிம்மம்

உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். கலைதுறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வரவுகளை மேம்படுத்துவது குறித்த எண்ணங்கள் கைகூடும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அனுபவம் வெளிப்படும்.
பூரம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.

மேலும் படிக்க: புதன் பெயர்ச்சி: இன்று முதல் பொற்காலம்... 5 ராசிகளின் தலைவிதியே மாறப்போது

கன்னி

வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பயனற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். குடும்ப விவகாரங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் அறிமுகங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : அறிமுகங்கள் ஏற்படும்.

துலாம்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்து செல்லவும். கண்களில் எரிச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : விட்டுக் கொடுத்து செல்லவும்.
விசாகம் : நெருக்கடியான நாள்.

விருச்சிகம்

குழந்தைகள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மறைமுகமான சில விஷயங்களை அறிவீர்கள். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். சிந்தனை போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
விசாகம் : புரிதல்கள் மேம்படும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.

தனுசு

வெளியூர் பயணங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். வர்த்தக தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : தீர்வுகள் கிடைக்கும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மறதிகள் விலகும். மனதில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். புதிய முயற்சியால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபிட்சம் ஏற்படும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : மறதிகள் விலகும்.
திருவோணம் : சுபிட்சம் ஏற்படும்.
அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.

கும்பம்

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : அறிமுகங்கள் ஏற்படும்.
சதயம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.

மீனம்

அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உலகியல் நடவடிக்கைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆடம்பர பேச்சுகளை நம்பி முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
உத்திரட்டாதி : தாமதம் உண்டாகும்.
ரேவதி : அலைச்சல்கள் மேம்படும்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

மேலும் படிக்க: ஜூலை மாத ராசிபலன்: 4 ராசிகளுக்கு கோடீஸ்வர வாழ்க்கை, மகிழ்ச்சி கதவைத் தட்டும்

 

0
0
Report
Advertisement

வெயிலுக்கு பிரேக்.. கனமழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்

Chennai, Tamil Nadu:

TN Weather Update Today: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. ஜூன் மாதம் முடிவடையும் தருவாயில் இருந்தாலும், பகல் நேரங்களில் வெயிலின் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. ஆனால், மாலை முதல் இரவு வரை பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இன்றைய வானிலை நிலவரம்

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 25) தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: வெறும் 58 பைசா வட்டியில் கடனுதவி! சேலம் பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்

 

ஜூன் 26ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் அலர்ட்

ஜூன் 27ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 28ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.  திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா? முக்கிய அப்டேட்

 

ஜூன் 29ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 25 தமிழகத்தில் மிதமான மழை
ஜூன் 26 தமிழகத்தில் மிதமான மழை
ஜூன் 27 கோவை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை
ஜூன் 28 திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை
ஜூன் 29 கோவை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை

சென்னையில் மிதமான மழை

சென்னையை பொறுத்தவரை, இன்று (ஜூன் 25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை, இன்று முதல் ஜூன் 29ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: School Holidays: குஷியில் மாணவர்கள்.. 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு.. ஏன் தெரியுமா?

 

0
0
Report

மதுரை: வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை தரும் தமிழக அரசு, எப்படி விண்ணப்பிக்கலாம்?

Madurai, Tamil Nadu:

மதுரை: நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருக்கும், அரசு பணிகளுக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தகுதி, விண்ணப்ப முறை மற்றும் அனைத்து முக்கிய விவரங்களையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முக்கிய விவரங்களின் தொகுப்பை கீழே காணலாம்.

தமிழக அரசின் இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்துவிட்டு, நீண்ட நாட்களாக வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. தகுதியுள்ள அனைத்து இளைஞர்களும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | விஜய்யை சீண்டும் இன்பன் உதயநிதி... இன்ஸ்டா ஸ்டோரியில் சர்ச்சை பதிவு

உதவித்தொகையை பெறுவதற்கான தகுதிகள்

  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை (பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், பெறாதோர், மேல்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு) முறைப்படி பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவராக இருக்க வேண்டும்.
  • தங்கள் விண்ணப்பத்தை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்து 1 ஆண்டு பூர்த்தி அடைந்திருந்தாலே போதுமானது.
  • குடும்பத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தமிழகத்திலேயே கல்வி கற்று முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
  • வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது.
  • அரசு சார்ந்த வேறு நிதி உதவிகள் பெறுபவராகவோ இருக்கக்கூடாது.
  • தற்போது பள்ளி/கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

கல்வித் தகுதிக்கேற்ப வழங்கப்படும் உதவித்தொகை விவரம்

இந்த உதவித்தொகைத் தொகை அந்தந்த காலாண்டின் முடிவில் நேரடியாகப் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித் தகுதி பொதுப் பிரிவினருக்கான உதவித்தொகை (மாதம்) மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை (மாதம்)
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர் ₹200 ₹600
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ₹300 ₹600
மேல்நிலைக் கல்வி (12th) தேர்ச்சி ₹400 ₹750
பட்டப்படிப்பு (Graduates) தேர்ச்சி ₹600 ₹1,000

மேலும் படிக்க | திருச்செந்தூர்: மாதம் ரூ.10,000 உதவித்தொகை பெற.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு - தமிழக அரசின் அறிவிப்பு

உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பெற்று அவற்றை நிரப்பி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்ய விரும்புவோர் பின்வரும் இரு அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://tnvelaivaaippu.gov.in
www.tnvelaivaaippu.gov.in

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான உரிய ஆவணங்கள் மற்றும் சுய உறுதிமொழி ஆவணத்தை (Self-Declaration) இணைத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

உதவித்தொகையால் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படுமா?

இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதால், எதிர்காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும் அரசு அல்லது தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள்லாம்.

மேலும் படிக்க | இடி, மின்னலுடன் வெளுக்கப்போகுது.. இன்று எங்கெல்லாம் கனமழை? வானிலை அப்டேட்

0
0
Report

கல்பாக்கம் பகீர் சம்பவம்: 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை, 2 பேர் கைது

Kalpakkam, Tamil Nadu:

கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமியை கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு (Gang-rape) செய்த கொடூர சம்பவத்தில், பொறியியல் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்பாக்கம் காரைத்திட்டு கிராமத்தில் நடந்த சம்பவம்

ஜூன் 23, செவ்வாய்க்கிழமை இரவு காரைத்திட்டு கிராமத்தில் இச்சோக சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால், அவர் நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள விளைநிலப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அச்சிறுமியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

வாயை மூடி மொட்டை மாடிக்கு கடத்திச்சென்ற கயவர்கள்

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் தனியார் பொறியியல் கல்லூரி மாணவரான மகேஸ்வரன் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அஜய் (27) என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சிறுமியை மிரட்டி, சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்து, வலுக்கட்டாயமாக மகேஸ்வரனின் வீட்டு மொட்டை மாடிக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அச்சமயம் சிறுமி தப்பிக்க முயன்று எதிர்த்த போது, மிருகத்தனமாக மரக்கட்டையால் அவரது தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

மேலும் படிக்க | 9 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: 12 வயது சிறுவன் கைது, உத்தர பிரதேசத்தில் கொடூரத்தின் உச்சம்

மயங்கிய நிலையில் மீட்ட தந்தை

வெளியே சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த சிறுமியின் தந்தை அவரைத் தேடிச் சென்றுள்ளார். தனது மகளை பல இடங்களில் தேடி அலைந்த அவர் இறுதியாக, மகேஸ்வரனின் வீட்டு மொட்டை மாடியில் சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் படிக்க | பிறப்புறுப்பில் புல்லட்... பெண்ணுக்கு நடந்த கூட்டு பாலியல் கொடூரம் - நடந்தது என்ன?

போலீசார் அதிரடி நடவடிக்கை

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், தலைமறைவாக இருந்த மகேஸ்வரன் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் தேடிப்பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் நள்ளிரவில் வெளியே சென்ற சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சாத்தான்குளம்: நண்பர்களுடன் விபரீத திட்டம் போட்ட காதலன், தப்பித்த +2 மாணவி, காப்பாற்றிய பொதுமக்கள்

0
0
Report
Advertisement

கொல்கத்தாவில் கட்டுமானத்தில் இருந்த கிடங்கு இடிந்து விழுந்தது: 5 பேர் பலி, பலர் படுகாயம்

Kolkata, West Bengal:

கொல்கத்தா: தென் கொல்கத்தாவில் உள்ள தாரதலா போக்குவரத்து பணிமனைக்கு அருகில் கட்டப்பட்டு வந்த கிடங்கு ஒன்றின் மேற்கூரை, புதன்கிழமை மதியம் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 50 முதல் 55 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பதின்மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் சிகிச்சைக்காக எஸ்.எஸ்.கே.எம். (SSKM) மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் மக்களின் தகவலின்படி, விபத்து நடந்தபோது அக்கிடங்கில் கான்கிரீட் வார்க்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. கொல்கத்தா காவல்துறை, பேரிடர் மேலாண்மைக் குழு, சிவில் பாதுகாப்புப் படை, தீயணைப்பு மற்றும் அவசரச் சேவைகள் பிரிவு மற்றும் ராணுவம் ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இடிபாடுகள் மற்றும் இரும்புக் கம்பிகளை அகற்றுவதற்கு ராட்சத இயந்திரங்கள் (கிரேன்கள்) கொண்டு வரப்பட்டுள்ளன; உலோகக் கம்பிகளை வெட்டுவதற்கு 'கேஸ் கட்டர்கள்' (gas cutters) பயன்படுத்தப்படுகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்கிறது; அவர்களை விரைவாக மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

0
0
Report

ரொனால்டோவின் மிரட்டலடி... ஹாட்ரிக் ஜஸ்ட் மிஸ்; 5 கோல் அடித்து போர்ச்சுகல் வெற்றி!

Houston, Texas:

FIFA World Cup 2026, Portugal vs Uzbekistan : பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் சுற்றில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ 2 கோல்களை அடித்து மிரட்டினார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் நகரின் ஹவுஸ்டன் மைதானத்தில் K பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் - உஸ்பெகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி ஜூன் 23ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மோதின. 

இதில் வென்றதன் மூலம் போர்ச்சுகல் அணி ரவுண்ட் ஆப் 32 எனும் அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. இதே பிரிவில் அடுத்து இந்திய நேரப்படி ஜூன் 24ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள கொலம்பியா - டிஆர் காங்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
Report

பிரேக்கப்பா? Never! விஜய் பிறந்தநாளுக்கு... மிட்நைட்டில் திரிஷா கொடுத்த சர்ப்ரைஸ்!

Chennai, Tamil Nadu:

Trisha birthday wish for CM Vijay: முதலமைச்சர் விஜய் நேற்று (ஜூன் 22) அவரது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடிகையும் அவரது தோழியுமான திரிஷா இன்று (ஜூன் 23) அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் முன் 5 பிறந்தநாள் கேக்கள் இருக்க, விஜய்க்கு அருகே திரிஷா அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் திரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில், "அனைத்தையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். விஜய் பிறந்தநாளில் நள்ளிரவு 12 மணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0
0
Report
Advertisement

புதுச்சேரி வேலைவாய்ப்பு 2026: இந்தியன் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Puducherry, Puducherry:

புதுச்சேரியில் அரசு வங்கியில் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சூப்பரான வாய்ப்பு வந்தாச்சு. புதுச்சேரி இந்தியன் வங்கிக் கிளையில காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கு. தகுதியும் விருப்பமும் உள்ளவங்க உடனே ஆஃப்லைன் (தபால்) மூலமா விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு பத்தின முழு விவரங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை கீழே தெளிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்

அம்சம்

விவரங்கள்

நிறுவனம் இந்தியன் வங்கி (Indian Bank - Puducherry)
பதவியின் பெயர் நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser)
காலியிடங்கள் பல்வேறு (Various)
காலியிடங்கள் பல்வேறு (Various)
கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + நகை மதிப்பீட்டாளர் படிப்பு
பணி அனுபவம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்
சம்பளம் மாதம் ரூ. 15,000 முதல் ரூ. 30,000 வரை (அரசு விதிகளின்படி)
பணியிடம் புதுச்சேரி, தமிழ்நாடு
விண்ணப்பக் கட்டணம் கட்டணம் ஏதுமில்லை (No Fee)

மேலும் படிக்க - காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2026: 21 காலியிடங்கள்.. 12ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஜூன் 19, 2026
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 30, 2026

தகுதி வரம்புகள் (Eligibility Criteria)

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளர் படிப்பை (Jewel Appraiser Course) முடித்திருக்க வேண்டும்.
  • இந்தத் துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் (Experience) இருப்பது கட்டாயமாகும்.

வயது வரம்பு

  • விண்ணப்பதாரர்களின் வயது 25 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை (Selection Process)

விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • திறன் தேர்வு (Skill Test): நகைகளின் தரம் மற்றும் மதிப்பைத் துல்லியமாகக் கண்டறியும் திறன் சோதிக்கப்படும்.
  • நேர்காணல் (Interview): தகுதி பெற்றவர்களுக்கு நேரடியாக நேர்காணல் நடத்தப்பட்டு இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.

மேலும் படிக்க - பணம் இல்லை.. ரூ.1000 உரிமைத் தொகை தற்போது கிடையாது -அரசு கூறும் காரணம் இதுதான்

விண்ணப்பிக்கும் முறை (How to Apply?)

  1. இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  2. முதலில் உங்களுடைய முழு விவரங்கள் அடங்கிய பயோ-டேட்டா (Bio-Data / CV)-வை தயார் செய்து கொள்ளுங்கள்.
  3. அதனுடன் உங்களது கல்விச் சான்றிதழ்கள், நகை மதிப்பீட்டாளர் படிப்புச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை (ஆதார்/பான் கார்டு) ஆகியவற்றின் ஜெராக்ஸ் நகல்களை இணைக்கவும்.
  4. எல்லாவற்றையும் ஒரு கவரில் வைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள மண்டல அலுவலக முகவரிக்கு 30-06-2026 மாலைக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Indian Bank,

Regional Office,

NO 66/4A East Coast Road,

Pakkamudayanpet,

Puducherry - 605008.

கவனிக்க வேண்டிய டிப்ஸ்

  • விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • கடைசி தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்புவதை உறுதி செய்யவும்.
  • அனுபவச் சான்றிதழ் மற்றும் Jewel Appraiser பயிற்சி சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும்.

மேலும் படிக்க - தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : CM விஜய் பிறந்தநாளில் இருந்து அமல் - தமிழக அரசு அறிவிப்பு

0
0
Report

காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2026: 21 காலியிடங்கள்.. 12ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்

Kanchipuram, Tamil Nadu:

காஞ்சிபுரம் மாவட்டம்: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society - DHS) சார்பில் ANM, Multipurpose Health Worker, Lab Technician, TB Health Visitor மற்றும் DRTB Counselor உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு (லிங்க்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பின் மூலம் மொத்தம் 21 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறப்படும் காலம் 22 ஜூன் 2026 முதல் 06 ஜூலை 2026 வரை ஆகும்

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: காஞ்சிபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (DHS)
  • பணியிடங்கள்: ANM, Lab Technician, Health Worker உள்ளிட்டவை
  • மொத்த காலியிடங்கள்: 21
  • வேலை இடம்: காஞ்சிபுரம், தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
  • விண்ணப்ப தொடக்க தேதி: 23-06-2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 06-07-2026
  • தேர்வு முறை: நேர்காணல் (Interview)
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை

மேலும் படிக்க - டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு : விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

கல்வித் தகுதி

ANM

  • 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 2 ஆண்டுகள் ANM பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

Multipurpose Health Worker

  • Multipurpose Health Worker / Health Inspector / Sanitary Inspector தொடர்பான 2 ஆண்டுகள் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Lab Technician

  • DMLT (Diploma in Medical Laboratory Technology) தேர்ச்சி.

TB Health Visitor

  • B.Sc பட்டப்படிப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய பணியனுபவம்.

DRTB Counselor

  • Social Work / Sociology / Psychology துறைகளில் இளங்கலை பட்டம் (Bachelor Degree).

காலியிட விவரங்கள்

பதவி

காலியிடங்கள்

ANM 5
Multipurpose Health Worker 4
Lab Technician 7
TB Health Visitor 4
DRTB Counselor 1

மொத்தம்

21


சம்பள விவரம்

  • ANM -மாத சம்பளம்: ₹17,500
  • Multipurpose Health Worker -மாத சம்பளம்: ₹17,500
  • Lab Technician -மாத சம்பளம்: ₹17,000
  • TB Health Visitor - மாத சம்பளம்: ₹15,000
  • DRTB Counselor - மாத சம்பளம்: ₹15,000

வயது வரம்பு

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறித்த தகவல் குறிப்பிடப்படவில்லை.
  • கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவர்:

  • விண்ணப்பங்கள் பரிசீலனை
  • நேர்காணல் (Interview)
  • ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்

  • எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

மேலும் படிக்க - SBI PO Recruitment 2026: ரூ.48,000 மாத சம்பளம், 1,500 காலிப்பணியிடங்கள்... இப்பவே அப்ளை பண்ணுங்க

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

படி 1

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

படி 2

விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு, தேவையான தகவல்களை பூர்த்தி செய்யவும்.

படி 3

கல்விச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்.

படி 4

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவம் லிங்க்

https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2026/06/17821250066460.pdf

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

Executive Secretary,
District Health Society,
O/o District Health Officer,
Railway Road,
Arignar Anna Memorial TB Centre Campus,
Kanchipuram – 631501.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கும் தேதி: 22 ஜூன் 2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 06 ஜூலை 2026

முக்கியக்குறிப்பு

மருத்துவத் துறையில் அரசு சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வரும் 12ஆம் வகுப்பு, DMLT, B.Sc, BA, BSW, Diploma மற்றும் ITI தகுதியுடையவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதிகளை உறுதி செய்து கொண்டு விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிற

மேலும் படிக்க - BSNL வேலைவாய்ப்பு 2026: ரூ.40,500 சம்பளம், ஜூலை 4 கடைசி தேதி... முழு விவரம் இதோ

0
0
Report

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : CM விஜய் பிறந்தநாளில் இருந்து அமல் - தமிழக அரசு அறிவிப்பு

Chennai, Tamil Nadu:

Thai Maaman Thanga Moodhiram Scheme : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். தவெகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழநாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்றால் என்ன?

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பாரம்பரியத்தில், 'தாய்மாமன் சீர்' என்ற மரபின்படி, முதலமைச்சர் விஜய், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

யார் யாருக்கு தங்க மோதிரம்?

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

இதனால் என்ன பயன்?

  • தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
  • மேலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

எவ்வளவு நிதி?

  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 3755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. 
  • இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் (Tenders) உடனடியாக கோருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

எப்போது முதல் தங்க மோதிரம் கிடைக்கும்?

  • முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான நேற்று முதல் (22 ஜூன், 2026) அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். 
  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கிவைப்பார்.

இன்று அரசாணை வெளியீடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்று (ஜூன் 23) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தாய் சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையை திட்டமிடும் முறை மற்றும் கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இம்முயற்சிகள் மாநிலத்தில் தாய் சேய் நலக் குறியீடுகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளன.

0
0
Report
Advertisement

'கணவனை தேடும் மனைவியின் கதை' விஜய் குட்டிக்கதைக்கு... உதயநிதி பதில் அட்டாக்

Chennai, Tamil Nadu:

CM Vijay vs Udhayanidhi Stalin : ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 18ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையுடன் இன்று (ஜூன் 23) நிறைவடைந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் கடந்த சில நாள்கள் நடைபெற்ற நிலையில், இன்று முதலமைச்சர் பதிலுரை ஆற்றினார். 

இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நேற்றைய (ஜூன் 22) குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் விஜய் சட்டப்பேரவையில் உரையாற்றினார். விஜய்யின் பேச்சுக்கு இடையே திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

மேலும் படிக்க | திமுகவை கடுபேற்றிய முதலமைச்சர் விஜய்யின் அந்த ஒரு வார்த்தை! அமளி துமளியான சட்டப்பேரவை

'சட்டப்பேரவையில் நடிக்கும் முதல்வர்'

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது X பக்கத்தில், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், "சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted (எழுதிகொடுக்கப்பட்ட) அவதூறுகளை அள்ளிவீசி acting performance (நடித்துக்) காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் லைவ் கேமராவை, சினிமா கேமரா என்று நினைத்துக்கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி சிங்கிள் டேக்கில் ஷூட் செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல என்றும் விஜய்யின் பேச்சை கடுமையாக சாடி உள்ளார்.

முதல்வரிடம் எந்த பதிலும் இல்லை...

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பஞ்ச் டயலாக்கும் மட்டும்தான் இருந்ததே தவிர, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது என்றும் உதயநிதி பேசி உள்ளார்.

உதயநிதி அதிரடி அட்டாக் 

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது என்றும்; செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும் என்றும் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | “அப்பா எங்கப்பா?” CM விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி-குலுங்கி சிரித்த EPS! வைரல் மொமண்ட்..

குட்டிக்கதை vs விவாகரத்து

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஒரு குட்டிக் கதை சொல்லியிருந்தார். 'எங்கப்பா உங்க அப்பாவ காணோம்' என விஜய் பேசியிருந்தார். அதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே இல்லை என்பதை சைலண்டாக விமர்சித்திருந்தார். 

இதற்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது விஜய்யின் விவாகரத்து வழக்கை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவரது X பதிவின் இறுதியில், ஆகவே விஜய் தான் நடிகர் என்பதை மறந்து, இனியாவது முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க | அனைத்து ஊழல்களும் தோண்டி எடுக்கப்படும், யாரும் தப்பிக்க முடியாது - முதலமைச்சர் விஜய்

0
0
Report

புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி நகை திருட்டு: கோவையில் கொடூரம்

Coimbatore, Tamil Nadu:

கோயம்புத்தூர்: கோவையில் புதைக்கப்பட்ட ஒரு நபரின் உடலைத் தோண்டி எடுத்து, அவர் உடலில் இருந்த தங்கச் சங்கிலியை சிலர் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு அமைதியான மயானத்தில், உயிர் இழந்து மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கூட மீன் வியாபாரி எதிர்கொண்ட இந்த வினோத கொடுமை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மயான ஊழியர் உட்பட மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை சௌரிபாளையத்தின் சம்பவம்

கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (60). மீன் வியாபாரியான இவர், கடந்த ஜூன் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். நாகராஜுவின் உடலை அவரது மகன் வெங்கடேஷ் சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்தார். நாகராஜுக்கு மீன் வடிவிலான பதக்கம் (Pendant) கொண்ட தங்கச் சங்கிலி என்றால் மிகவும் பிடிக்கும். அதனை அவர் எப்போதும் அணிந்திருப்பார். அவர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவரது மகன், இறுதிச் சடங்கின் போது அந்தத் தங்கச் சங்கிலியை அகற்றாமல், உடனுடனேயே வைத்தார். நாகராஜின் உடல் ஜூன் 7 அன்று சௌரிபாளையம் மயானத்தில் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்: ஆந்திராவை உலுக்கிய சோகம்!

16-ஆம் நாள் சடங்கின் போது கிடைத்த அதிர்ச்சி

நாகராஜ் இறந்து 16 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவரது மகன் வெங்கடேஷ் குமார் மற்றும் உறவினர்கள், காரிய சடங்குகளைச் செய்ய மயானத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, நாகராஜ் புதைக்கப்பட்ட இடத்தின் மண் தோண்டப்பட்டு, கலைந்து கிடப்பதைக் கண்டு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

சௌரிபாளையத்தை உலுக்கிய உண்மை

இதனால் மறைந்த நாகராஜின் குடும்பத்தினருக்கு கவலை ஏற்பட்டது. இதில் ஏதோ சதி வேலை உள்ளது என சந்தேகமடைந்த குடும்பத்தினர், மயானத்தைப் பராமரித்து வந்த ஊழியரான கார்த்திகேயன் (27) என்பவரிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் தான், ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய அந்தத் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.

மேலும் படிக்க | அண்ணன் குடும்பத்தை மொத்தமாக காலி செய்த 16 வயது இளைஞன்: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மயானத்தின் சுவரேறி குதித்து துணிகரம்

சந்தேகப்பட்ட நாகராஜ் குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் விவரங்கள் தெரியவந்தன. மயான ஊழியர் கார்த்திகேயனின் உடந்தையுடன், உள்ளூரைச் சேர்ந்த சக்திவேல் (26) மற்றும் மணிகண்டன் (25) ஆகிய இருவரும் ஜூன் 16 நள்ளிரவில் மயானத்தின் சுற்றுச்சுவரை ஏறி குதித்துள்ளனர். நாகராஜின் உடலின் தலைப் பகுதி இருந்த இடத்தை மட்டும் குறிவைத்து தோண்டியுள்ளனர். அதன் பின்னர் அவரது கழுத்தில் இருந்த 3.5 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனர்.

மயான ஊழியருக்கும் பங்கு

நாகராஜின் சடலத்திலிருந்து திருடப்பட்ட நகையை விற்று, அதில் கிடைத்த பணத்தை சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக மயான ஊழியர் கார்த்திகேயனுக்கு ரூ.30,000 கொடுக்கப்பட்டுள்ளது.

பீளமேடு போலீஸார் நடவடிக்கை

இதுகுறித்து நாகராஜின் மகன் வெங்கடேஷ் குமார் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருக்கும் கார்த்திகேயன், சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரையும் தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | 9 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: 12 வயது சிறுவன் கைது, உத்தர பிரதேசத்தில் கொடூரத்தின் உச்சம்

0
0
Report
Advertisement
Advertisement
Back to top