பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
IND vs AFG: ஜடேஜா, சஞ்சுவுக்கு ஆப்பு; ஓடிஐ, டெஸ்ட் - இந்திய அணி அறிவிப்பு
Guwahati, Assam:IND vs AFG Squad Announcement : ஐபிஎல் முடிந்த கையுடன் வரும் ஜூன் மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. மேலும், இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி என்பது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஓடிஐ மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஸ்குவாடை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தின் கௌகாத்தியில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான குழு இன்று கூடிய நிலையில், ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.
-match ODI series against Afghanistan in JuneINDvAFG pic.twitter.com/hFiABALLld
— BCCI (@BCCI) May 19, 2026
இந்திய டெஸ்ட் ஸ்குவாட்
சுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெயஸ்வால், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார், குர்னூர் பிரர், ஹர்ஷ் தூபே, துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்)
இந்திய ஓடிஐ ஸ்குவாட்
சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா*, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா*, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரர், ஹர்ஷ் தூபே. (* குறியிடப்பட்ட வீரர்கள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்)
நரக வாழ்க்கையாக மாறிய நடிகையின் காதல் திருமணம்... கடைசி போன் காலின் திக் திக் நிமிடங்கள்!
Noida, Uttar Pradesh:Twisha sharma death case : உத்திரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா ஷ்ர்மா என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வழக்கறிஞர் ஒருவர் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறி 5 மாதங்களுக்கு முன்பு ட்விஷாவும், போபாலைச் சேர்ந்த வழக்கறிஞரான சமர்த் சிங்கும் திருமணம் செய்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற திருமண வாழ்க்கை ஒரு கட்டத்தில் கசக்கவே சமர்த் சிங் நாளடைவில் மனைவி மீது வெறுப்பைக் காட்டத் தொடங்கினார். இந்த வெறுப்பு இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறி பெரிய சண்டைக்கு வழிவகுத்தது. தனது கணவர் தன்னிடம் அடிக்கடி சண்டையிடுவது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்துள்ளார். அவர்களும் தனது மகளுக்கு அனுசரித்து போகும்படி அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும் படிக்க| சூட்கேசில் தலையில்லா சடலம்! பெண் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்..
மேலும் தொடர்ந்து பெற்றோரிடம் திருமண வாழ்க்கை நரகமாகிவிட்டதாக பலமுறை குடும்பத்தினரிடம் கூறியிருந்த ட்விஷா தற்போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12-ம் தேதி இரவு 10 மணியளவில் ட்விஷா தனது தாயை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
கணவர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகவும் அவர் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் பேசிக்கொண்டிருந்த வேளையில், திடீரென அவரது கணவர் அறைக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார்.
துண்டிக்கப்பட்ட செல்போன் அழைப்பு:
தனது மகள் செல்போன் துண்டிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ட்விஷாவின் பெற்றோர் அவரது கணவர் சமர்த் சிங்கையும், மாமியார் கிரிபாலா சிங்கையும் பலமுறை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். யாரும் அழைப்பை எடுக்காத நிலையில், சுமார் 10 நிமிடங்கள் கழித்து மாமியார் கிரிபாலா சிங் அழைப்பை ஏற்று, ட்விஷா மூச்சுவிடல என்று கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக ட்விஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 5 கிலோ மீட்டர் தூரத்தில் மருத்துவமனை இருந்ததாக கூறப்படும் நிலையில், வேண்டுமென்றே மருத்துவ உதவி வழங்க தாமதம் ஏற்படுத்தி தனது மகளை அவரது கணவர் வீட்டார் அநியாயமாக கொன்றுவிட்டதாக வேதனை தெரிவித்தனர்
மேலும் படிக்க| 13 வயது சிறுவன் கொலை... அடித்துக் கொன்ற நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி
ஹர்சித் ஷர்மாவின் வாக்குமூலம்:
ட்விஷாவின் மரணம் குறித்து பேசிய அவரது சகோதரரான இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஹர்ஷித் ஷர்மா, “என் சகோதரை தொடர்ந்து குடும்ப வன்முறைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்ததாகவும், கர்ப்பமாக இருந்தபோது குழந்தையை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று கணவர் மற்றும் மாமியார் கடுமையான அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
இது வரையில் அவரை உடல் ரீதியாக புண்படுத்தி வந்த கணவர் குடும்பத்தினர், மன ரீதியாக அவர் மீதான நடத்தை குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். கர்ப்பம் தரித்திருந்த ட்விஷா அவருக்கு முறையற்ற உறவில் குழந்தை உருவானதாக மேலும் அவர் மீது பகிர் குற்றச்சாட்டுக்களை கணவர் குடும்பத்தார் அடுக்கியுள்ளனர்.
அவரை மன ரீதியாக துன்புறுத்தியது போதாமல், மேலும் ட்விஷாவின் தந்தை திருமணத்திற்கு பரிசாக வழங்கிய 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகள் மற்றும் முதலீடுகளை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார். இந்த வேளையில் மர்மமான முறையில் இறந்த ட்விஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
ட்விஷா உயிருடன் இருக்கும்போதே கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டதாகவும், அவரது உடலில் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்திருக்கிறது. மேலும் சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ட்விஷாவின் கணவர் வழக்கறிஞர் என்பதாலும், அவரது மாமியார் ஓய்வுபெற்ற நீதிபதி என்பதாலும் ஆதாரங்கள் சிதைக்கப்படலாம் என அச்ச்சப்படும் குடும்பத்தினர் அவர்களது வீட்டை உடனடியாக சீல் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வரதட்சனை கொடுமை மற்றும் கொலை வழக்கு ஆகிய பிரிவுகளின் கீழ் சமர்த் சிங் மற்றும் கிரிபாலா சிங் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இளம்பெண்ணை வரதட்சனைக் கொடுமைப்படுத்தி தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
தெருநாய்களை கருணை கொலை செய்ய அனுமதி... உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னணி
New Delhi, Delhi:Supreme Court On Stray Dogs Case: ரேபிஸ் நோய் தாக்கிய தெருநாய்களையும், ஆக்ரோஷமான தெருநாய்களையும் கருணைக்கொலை செய்ய அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியிருக்கிறது.
இளையராஜாவை கேலி செய்த விவகாரம்..வருத்தம் தெரிவித்த ‘கருப்பு’ படக்குழு!
Chennai, Tamil Nadu:Karuppu Team Regrets Mocking Ilaiyaraaja : கடந்த 15ஆம் தேதி வெளியான திரைப்படம், கருப்பு. இந்த படத்தில், ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடித்ததோடு படத்தை எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து காெள்வோம்.
கருப்பு திரைப்படம்:
சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் முன்னர் ஹிட் அடித்திருந்த நிலையில், படமும் வெளியான பிறகு நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தில் ஓரிரு இடங்களில் இசை சரியாக கேட்கவில்லை என்பது ரசிகர்களின் விமர்சனமாக இருந்தது. இதையடுத்து, இத்திரைப்படத்தின் இசை ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது இந்த படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | நடிகை ஸ்ரீலீலா காதலிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்? தாயார் சொன்ன உண்மை!
இளையராஜாவை கலாய்த்த காட்சி!
இசையுலகின் ராஜாவாகவும், 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இசை ஜாம்பவானாகவும் திகழ்பவர் இசைஞானி இளையராஜா. இவர், மஞ்சுமெல் பாய்ஸ், குட் பேட் அக்லி, கூலி உள்ளிட்ட பல படங்களில் தன் பாடல்கள் அனுமதி கேட்காமல் உபயோகிக்கப்பட்ட போது, தனது காப்புரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை வைத்து ‘கருப்பு’ படத்தில் கேலி செய்ய பட்டிருந்தது.
1985ல் வெளியான அலை ஓசை என்கிற படத்தில் வெளியான பாடல் இது. இதனை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். இந்த பாடல், பரியேறும் பெருமாள் படத்தில் போராட்டத்திற்கான பாடலாக உபயோகிக்கப்பட்டிருக்கும். அப்போதிருந்து இந்த பாடல், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்த பாடலாகும்.
‘கருப்பு’ படத்தில், ஏழுகிணறு எனும் நீதிமன்றத்தை சேர்ந்த அனைவரும் தங்களது கட்டடம் இடிந்து விழுந்ததால், இதனை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்துவர். படத்தில், இந்த போராட்டம் நடத்தும் போது அவர்கள் “போராடடா” எனும் பாட்டை உபயோகித்திருப்பர். கடைசியில், “தன் பாடலை உபயோகித்ததற்காக வழக்கறிஞர்கள் மீது இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்” என செய்திகள் வெளியில் வரும்.
ஏற்படுத்திய சர்ச்சை:
கருப்பு படத்தில், இது போல தனது உரிமைக்காக போராடும் இளையராஜாவை, ஒரு நகைச்சுவை எலிமெண்டாக சித்தரித்தது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், அனைவரும் கருப்பு படக்குழுவிற்கும், குறிப்பாக ஆர்.ஜே.பாலாஜிக்கும் கண்டனங்களை தெரிவித்தனர். இளையராஜாவின் சட்டப்போராட்டத்தை இப்படி கேலி செய்து எப்படி எடுக்க முடியும் என்பது கண்டனம் தெரிவித்தவர்களின் குரலாக இருந்தது. இதையடுத்து, படக்குழு இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பதிவு!
கருப்பு திரைப்படத்தை தயாரித்த ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம், சமீபத்தில் எழுந்துள்ள இந்த பிரச்சனை குறித்து விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், “மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு, "கருப்பு" திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.
#Pressrelease #PublicAnnouncement #Karuppu #MaestroIlayaraaja pic.twitter.com/hdgP3wZhBL
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 19, 2026
50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
| படம் | கருப்பு |
| சர்ச்சை | இளையராஜாவின் காப்புரிமையை கேலி செய்த விவகாரம் |
| ரசிகர்கள் ரியாக்ஷன் | சமூக வலைதளங்களில் கண்டனம் |
| படக்குழு ரியாக்ஷன் | ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது |
| ஏற்பட்ட மாற்றம் | இளையராஜ தொடர்பான காட்சி படத்திலிருந்து நீக்கம் |
மேலும் படிக்க | கருப்பு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்! ரிலீஸான நான்கு நாட்களில் இத்தனை கோடியா?
காட்சி நீக்கம்!
50 வருடங்களுக்கும் மேலாக, இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ சிறிதளவும் இல்லை என கருப்பு படக்குழு விளக்கமளித்து, வருத்தம் தெரிவித்ததையடுத்து இன்னொரு மூவ்-ஐயும் எடுத்துள்ளது. கருப்பு படத்தில் இளையராஜா தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.
மொத்த வசூல்..
சூர்யாவிற்கு கடந்த13 வருடங்களில், நல்ல வெற்றியை கொடுத்த படமாக இருக்கிறது, கருப்பு. கடைசியாக வெளியான கங்குவா மற்றும் ரெட்ரோ உள்ளிட்ட திரைப்படங்கள் கவிழ்த்துவிட்ட நிலையில், சூர்யாவிற்கு இந்த வெற்றி தேவைப்படும் ஒன்றாக இருந்தது. இப்படம், வெளியான 4 நாட்களில் சுமார் ரூ.147 கோடி வரை வசூலித்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த வசூல் ரூ.60 கோடியை கடந்தது. படத்தின் ரிலீஸ் தேதியான 14ஆம் தேதி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்த நிதி பிரச்சனை காரணமாக, இப்படத்தை அன்றைய தினத்தில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இதையடுத்து, ஆர்.ஜே.பாலாஜிக்கும் சரி, சூர்யாவிற்கும் சரி இந்த படம் இப்படி நல்ல வெற்றியை தந்துள்ளது பெரு மகிழ்ச்சியை தந்துள்ளது. அடுத்தடுத்து புதிதாக எந்த புதிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதாலும், இது சம்மர் லீவ் சமயம் என்பதாலும் கண்டிப்பாக இந்த படம் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்று தியேட்டரில் நன்றாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த ஓடிடியில் வெளியாகும்?
கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது. படம் தியேட்டரில் வெளியாகி 48 நாட்களுக்கு பிறகு, வழக்கமாக படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும். அப்படி, இந்த படத்தின் அப்டேட்டும் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ’கருப்பு’ திரைப்படம் இத்தனை படங்களின் காப்பியா? RJB-ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சால்வை, பேனர் வேண்டாம், குறைகளைச் சொல்லுங்க! சேலம் தெற்கு தவெக எம்.எல்.ஏ தரமான சம்பவம்
Salem, Tamil Nadu:Salem South TVK MLA: சேலம் தெற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அ. விஜய் தமிழன் பார்த்திபன் அரசியலில் புதிய ட்ரெண்டை உருவாக்கி மாஸ் காட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் தொடங்கிய 'Digital Help Desk' அத்தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. ரமணா படத்தில் வரும், 'யாருப்பா அவரு? எனக்கே அவர பார்க்கணும் போல இருக்கே!' என பலரும் எண்ணும் வகையில், சில அதிரடி அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். "நோ பிளக்ஸ், நோ பேனர், நோ சால்வை.... ஒன்லி பப்ளிக் சர்வீஸ்!" என்ற ரீதியில் தொகுதி மக்களின் குறைகளுக்கு டிஜிட்டல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சேலம் தெற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ தமிழன் பார்த்திபன்.
மக்கள் முதல்வர் விஜய்
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். மாற்றத்திற்கான விடையாக, ஊழலின் எதிர்ப்பாக, பெண்களின் பாதுகாவலனாக, தங்கள் வீட்டில் ஒருவராக பெரும்பாலான மக்கள் சேர்ந்து அவரை சி.எம். பதவியில் அமர வைத்துள்ளார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகளும், பதவி ஏற்பு விழா உரையில் தெரிந்து அர்ப்பணிப்பும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழகம் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தைக் காணும்.
மேலும் படிக்க | CM விஜய் வாங்கும் மாத சம்பளம் எவ்வளவு? சலுகைகள் என்னென்ன?
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பு
முதல்வராக பதவி ஏற்ற உடனேயே அவர் கூறிய சில விஷயங்கள் பலரது கவனத்தை கவர்ந்தன. மாநிலத்தின் முதலமைச்சராக தான் என்ன செய்வேன் என கூறியது மட்டுமல்லாமல், தனது கட்சியில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் கோடிட்டுக்காட்டினார். இது மக்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது.
முதல் பந்திலேயே சிக்சர்
முதலமைச்சராக அனைவரது பாராட்டையும் உடனடியாக பெறுவது சாத்தியம் இல்லை. அதற்கு சிறிது காலம் செல்ல வேண்டும். ஆனால், தொடக்கம் நன்றாக இருந்தால், தொடர்வதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு பிறக்கும். அந்த வகையில் முதல்வர் விஜய் முதல் பந்திலேயே சிக்சர் அடித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். பதவியேற்பு விழா மேடையிலேயே, பொதுமக்களுக்கு 200 யூனிட்கள் இலவச மின்சாரம், பெண்களுக்கு சிங்கப் பெண் அதிரடிப்படை, போதை பொருட்களுக்கு எதிரான போதைப்பொருள் தடுப்புப் படைகள் என்று 3 முக்கிய திட்டங்களை அறிவித்தார். இதன் மூலம் மக்கள் மனதிலும் நம்பிக்கையை வித்திட்டுள்ளார்.
முதல்வர் எவ்வழி எம்.எல்.ஏ -களும் அவ்வழி
தமிழக முதல்வர் விஜய் மட்டுமல்லாமல், அவரது கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மக்களுக்கான பணிகளை செய்வதிலும், குறைகளை தீர்க்கும் முயற்சிகளை எடுப்பதிலும் மக்களுடன் தொடர்பில் இருக்க அக்கறை காட்டுவதிலும் முனைப்புடன் இருப்பதை பார்க்க முடிகின்றது.
சேலம் தெற்கு எம்.எல்.ஏ முக்கிய அறிவிப்பு
அந்த வகையில், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழன் பார்த்திபனின் செயல்கள் மக்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகின்றன. சமீபத்தில் தனது X தளத்தில் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
ஃப்ளெக்ஸ், பேனர்கள் மற்றும் பதாகைகள் குறித்து கூறியுள்ள அவர், தன்னை வரவேற்கும் நோக்கில் பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகள் வைப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளில் சால்வை அணிவித்தல், பூங்கொத்து வழங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ள அவர், அதற்கு பதிலாக, ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரிசி, பருப்பு, எண்ணெய், மாணவர்களுக்கான பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களை வழங்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.
கழகத் தோழர்கள் கடைபிடிக்க வேண்டிய கண்ணியம், பொறுமை மற்றும் நாகரிகமான அணுகுமுறை பற்றியும் அவர் விளக்கியுள்ளார். இவை தவிர இன்னும் சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தனது சட்டமன்ற தொகுதியில் நிகழும் ஒவ்வொரு செயலிலும் நேர்மறையான செயல்பாடுகளையும், நாகரிகமான நடவடிக்கைகளையும், வெளிப்படையான மக்கள் நல பணிகளையும் அவர் எதிர்பார்க்கிறார் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.
முக்கிய அறிவிப்பு
— Tamilan Parthiban (@TamilanParthib1) May 15, 2026
அன்பிற்கினிய கழகத் தோழர், தோழிகளே,
உங்கள் அன்பு சகோதரனின் வேண்டுகோளை ஏற்று, எனது வரவேற்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களின் நேர்மையான ஆட்சியின் கீழ், தமிழக அரசின் நற்பெயரையும், மக்கள்… pic.twitter.com/tRnGE0osy3
சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ
| பெயர் | அ விஜய் தமிழன் பார்த்திபன் |
| கட்சி | தவெக |
| தொகுதி | சேலம் தெற்கு |
| 2026 சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் | 91,371 |
| சேலம் தெற்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை | 2,26,851 |
டிஃபென்ஸ் வைக்காமல் அடித்து ஆடும் சேலம் தெற்கு எம்.எல்.ஏ
மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழன் பார்த்திபன் பல வகையில் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். அதில் குறிப்பிடப்பட வேண்டியது மக்களுக்கான ' Digital help desk. இதை தொடக்கி வைத்து தனது X தளத்தில் பதிவிட்ட அவர், தன்னை மக்கள் ஒரு பதவிக்காக தேர்ந்தெடுக்கவில்லை என்றும், அவர்களது குரலாகத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார். வீட்டு பிரச்சனை முதல் பகுதியின் தேவைகள் வரை அனைத்தையும் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே தன்னிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மக்கள் தன்னை தொடர்பு கொள்ளும் வகையில் கீழுள்ள முக்கிய விவரங்களை பகிர்ந்துள்ள அவர், தன்னை வீட்டின் ஒரு உறுப்பினராக எண்ணி குறைகளை பகிர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.
- தொலைபேசி அழைப்புக்கான எண்கள்: 96550 28999, 96556 06999.
- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.
- 24×7 வாட்ஸ் அப் வசதி மூலம் எந்த நேரத்திலும் உங்கள் புகார்கள், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பலாம்.
மக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
அன்பார்ந்த சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களே!
— Tamilan Parthiban (@TamilanParthib1) May 15, 2026
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தது
ஒரு பதவிக்காக அல்ல…
உங்கள் குரலாக நிற்கத்தான்.
உங்கள் வீட்டின் பிரச்சனை முதல்
உங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் வரை…
இனி உங்கள் குறைகளை சொல்ல
அலுவலகம் தேடி அலைய வேண்டாம்…
ஒரு அழைப்பு போதும்…… pic.twitter.com/svEQtYoGsI
மக்களிடம் வரவேற்பு
சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.பார்த்திபனின் இந்த முன்னெடுப்பு மக்களிடையே வரவேற்பையும், உற்சாகத்தையும் பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றவுடன் தொகுதியை திரும்பிக்கூட பார்க்காத சட்டமன்ற உறுப்பினர்களையே பெரும்பாலும் காணும் மக்களுக்கு இந்த அணுகுமுறை சற்று வித்தியாசமாகத் தான் இருக்கிறது.
மேலும் படிக்க | முதல்வர் விஜய் - சூப்பர் ஸ்டார் ரஜினி சந்திப்பு நடக்குமா? எகிறும் எதிர்பார்ப்பு!
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு?
Mumbai, Maharashtra:ஐபிஎல் 2026 தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி தனது அடுத்த சர்வதேச பணிக்கு தயாராகி வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வரும் மே 19ம் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வுக்குழு எடுக்கும் முக்கிய முடிவுகள் குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. ஜூன் 6ம் தேதி தொடங்கும் ஒரே டெஸ்ட் போட்டி, ஜூன் 14, 17 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளுக்கு முன்னோட்டமாக அமையும். ஐபிஎல் முடிந்த உடனேயே இந்தியா சர்வதேச அரங்கிற்கு திரும்புவதால், அணித் தேர்வு மிகவும் கவனமாக செய்யப்படவுள்ளது.
மேலும் படிக்க: ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு! யாரும் வெளியே வரக் கூடாது!
பிசிசிஐ அறிவிப்பு
பிசிசிஐ செயலாளர் சமீபத்தில் தெரிவித்த தகவலின்படி, தேர்வுக்குழு மே 19ம் தேதி கூடுகிறது. அதே கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம், சில முக்கிய வீரர்களின் பெயர்கள் உறுதியாகவோ அல்லது புறக்கணிக்கப்படவோ வாய்ப்பு இருக்கிறது. இந்த அணி தேர்வில் அதிக கவனம் பெறும் விஷயங்களில் ஒன்று ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமை மேலாண்மை ஆகும். தொடர்ச்சியாக பல போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்படலாம் என தகவல் கூறுகிறது. டெஸ்ட் போட்டிக்காக அவரை முழுமையாகத் தேர்வு செய்யாமல் இருக்கவும், அல்லது ஒருநாள் தொடரில் மட்டுமே பயன்படுத்தவும் தேர்வுக்குழு யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் அணி
டெஸ்ட் அணியில் ஷுப்மன் கில் மீண்டும் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் தலைமுறையை முன்னிறுத்தும் அணுகுமுறையுடன், சில புதிய முகங்கள் டெஸ்ட் அணியில் இடம்பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த ஒரே டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றின் ஒரு பகுதியாக இல்லாததால், தேர்வுக்குழு சில பரிசோதனை முடிவுகளையும் எடுக்க வாய்ப்பு உள்ளது.
ஒருநாள் அணியை பொறுத்தவரை, சமீபத்திய ஃபார்மை அடிப்படையாக வைத்து சில மாற்றங்கள் வரலாம். குறிப்பாக, விக்கெட் கீப்பர்-பேட்டிங் இடத்தில் புதிய தேர்வுகள் பரிசீலிக்கப்படலாம். சில மூத்த வீரர்களுக்கு பதிலாக, தற்போது ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது.
இந்தத் தொடரின் அட்டவணை இந்திய அணிக்காக சவாலாகவும், வாய்ப்பாகவும் இருக்கிறது. ஐபிஎல் முடிந்த உடனே தேர்வுக்குழு அணியை அறிவிக்க வேண்டிய சூழல் இருப்பதால், வீரர்களின் உடல் நிலை, சமீபத்திய செயல்பாடு, எதிர்கால திட்டம் ஆகியவை அனைத்தும் கணக்கில் எடுக்கப்படும். மேலும், ஜூன் மாத போட்டிகளுக்காக பயிற்சி ஏற்பாடுகளும் அதற்கேற்ற வகையில் அமைய வேண்டியிருக்கும்.
ஆப்கானிஸ்தான் தொடர்
ரை இந்திய கிரிக்கெட்டின் மறுசீரமைப்பு கட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து நடைபெறவுள்ள பெரிய தொடர்களை மனதில் வைத்து, இந்தத் தொடரில் சில இளம் வீரர்களை களமிறக்கி அவர்களுக்கு சர்வதேச அனுபவம் வழங்குவதற்கு பிசிசிஐ விரும்பலாம். அதே நேரத்தில், டெஸ்ட் அணியின் நிலைத்தன்மையும் பாதிக்கப்படக்கூடாது என்பது தேர்வுக்குழுவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அடுத்த சில வாரங்களுக்கு இந்திய கிரிக்கெட்டில் முக்கிய தலைப்பாக இருக்கும். பும்ராவுக்கு ஓய்வு கிடைக்குமா, கில் டெஸ்ட் அணியை முன்னிலை வகிப்பாரா, ஒருநாள் அணியில் யார் இடம்பிடிப்பார் என்பதெல்லாம் விரைவில் தெளிவாகும்.
இந்திய அணி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் மட்டும் அல்லாமல், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆய்வாளர்கள், தேர்வாளர்களின் முடிவுகளை உற்றுப் பார்ப்பார்கள். ஆப்கானிஸ்தான் தொடர், இந்திய அணியின் அடுத்த கட்டப் பயணத்தை சுட்டிக்காட்டும் ஒரு முக்கியக் கட்டமாகவே கருதப்படுகிறது.
மேலும் படிக்க: CSK vs SRH: சேப்பாக்கில் கடைசி போட்டி.. விளையாடும் தோனி? பிளேயிங் 11 இதுதான்!
96 பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில்! பூஜையுடன் துவங்கியது!
Chennai, Tamil Nadu:வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஜெயலலிதாவிற்கும் த்ரிஷாவிற்கும் இருக்கும் ஒற்றுமைகள்! கம்பேர் செய்யும் ரசிகர்கள்..
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது
மேலும் படிக்க | த்ரிஷாவுக்கு செம்ம ஜாக்பாட்! ஒரே டைமில் ரெண்டு ஹேப்பி நியூஸ்..என்ன தெரியுமா?
குடும்பத்தை கெடுத்த '3 எழுத்து இட்லி நடிகை...' ரவி மோகன் கண்ணீர் - யார் அவர்?
Chennai, Tamil Nadu:Actor Ravi Mohan Latest News Updates : சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் ரவி மோகன் இன்று (மே 16) தனது செய்தியாளர் சந்திப்பில், "மனைவி ஆர்த்தி உடன் விவாகரத்து கிடைக்கும் வரையில் திரைப்படங்களில் நடிக்கப்போவது இல்லை. என்னால் நடிக்க முடியவில்லை. எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்றார்.
மேலும், 'மூன்று எழுத்து கொண்ட இட்லி நடிகையே' தனது குடும்பத்தை கெடுத்துவிட்டதாக, நடிகையின் பெயரை குறிப்பிடாமல் ரவி மோகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அதிரடி திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்! ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பிரஸ் மீட்!
Chennai, Tamil Nadu:தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்காக, காவல்துறையினருக்கு முதலமைச்சர் விஜய் முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புதிய அரசின் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, மற்றும் அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார். குறிப்பாக, சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் அரசு எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க - வைரலாகும் விஜய்யின் கோட் சூட்! காம்போ விலை எவ்வளவு தெரியுமா?
போதைப்பொருளுக்கு எதிராக இரும்புக்கரம்
போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறிய அமைச்சர், "மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எந்தவொரு சட்டவிரோத செயல்களையும் இந்த அரசு வேடிக்கை பார்க்காது. போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இதற்கு முதல்வர் முழுமையான அனுமதியை காவல்துறைக்கு வழங்கியுள்ளார்," என்றார். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும் என்ற அடிப்படையில், அரசியல் தலையீடுகள் இன்றி அவர்கள் செயல்பட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக ஆதவ் அர்ஜுனா கூறினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க காவல்துறைக்கு சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதுடன், இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க - அதிமுக எம்எல்ஏ 25 பேர் தகுதி நீக்கம்? விஜய்க்கு ஆபத்தா? எடப்பாடி முடிவு என்ன?
கட்சி நிர்வாகிகளுக்கு எந்த சலுகையும் இல்லை
பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் அரசு ஒப்பந்தங்கள் விஷயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று அவர் உறுதியளித்தார். "த.வெ.க கட்சியை சேர்ந்தவர்களுக்கு எந்தவொரு அரசு டெண்டரும் வழங்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் விஜய் கறாராக உத்தரவிட்டுள்ளார். தகுதியானவர்களுக்கு மட்டுமே வெளிப்படையான முறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்படும். ஊழல் மற்றும் கமிஷன் என்ற பேச்சுக்கே எங்கள் ஆட்சியில் இடமில்லை," என அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.
முன்னறிவிப்புடன் மின்வெட்டு
மின்துறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சீரான மின்சாரம் வழங்குவதே அரசின் இலக்கு என்றார். இருப்பினும், தவிர்க்க முடியாத காரணங்களால் அல்லது பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு அவசியமானால், அது குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகுந்த முறையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளைத் திட்டமிட வசதியாக இருக்கும் என்றார். "எங்கள் அரசின் இலக்கு, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதுதான். சாதி, மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, சமூக நீதி சார்ந்த நல்லாட்சியை வழங்குவோம். எங்கள் செயல்பாடுகளே எங்களின் அடையாளமாக இருக்கும்," என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்க - அதிமுக எம்எல்ஏ 25 பேர் தகுதி நீக்கம்? விஜய்க்கு ஆபத்தா? எடப்பாடி முடிவு என்ன?
இந்திய அணியில் வைபவ் சூரியவம்சி! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Mumbai, Maharashtra:ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டிக்கான இந்திய 'A' அணி அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சரியமளிக்கும் வகையில் 15 வயதே ஆகும் வைபவ் சூர்யவம்சி இடம்பெற்றுள்ளார். 15 பேர் கொண்ட இந்த அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரியான் பராக் பொறுப்பேற்கிறார். பீகாரை சேர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவம்சி, தனது 13 வயதிலேயே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். அறிமுக போட்டியிலிருந்து அவர் காட்டி வரும் அதிரடி ஆட்டங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி கோப்பையை தட்டி சென்றது. ஐபிஎல் 2026 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வைபவ், கடந்த 2024ஆம் ஆண்டு முதல் தர போட்டிகளில் அறிமுகமாகி பல சாதனைகளை புரிந்து வருகிறார். இந்த சாதனைகளின் அங்கீகாரமாகவே இந்திய 'A' அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு! யாரும் வெளியே வரக் கூடாது!
முத்தரப்பு போட்டி விவரங்கள்
வரும் ஜூன் 9ஆம் தேதி முதல் இலங்கையில் தொடங்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், இந்தியா 'A', இலங்கை 'A', ஆப்கானிஸ்தான் 'A' அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 21 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் இந்த தொடர் முடிவடையும். இதை தொடர்ந்து இலங்கை 'A' அணியுடன் இரண்டு மல்டி-டே போட்டிகளும் நடைபெறவுள்ளன. திலக் வர்மாவின் கேப்டன் தேர்வு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் தலைமை திறன்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் பிசிசிஐ எதிர்காலத்தை வலுப்படுத்த முயல்கிறது.
வைபவின் எதிர்காலம்
பலரும் வைபவ் சூர்யவம்சி எப்போது முதல் அணிக்கு வருவார்? என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். வெறும் 15 வயதில் இந்திய 'A' அணிக்கு தேர்வு பெறுவது அவரது திறமையின் உச்சமானது. பிசிசிஐ விதிகளின்படி, 15 வயது நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே தேசிய அணியில் இடம் கிடைக்கும். இந்த தொடரில் வைபவ் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொறுத்து, விரைவில் அவர் தேசிய அணியிலும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வயதிலேயே அவர் காட்டும் ஆட்டத் திறன், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது. வைபவ் சூர்யவம்சியின் இந்த தேர்வு, இந்திய கிரிக்கெட்டின் புதிய தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஐபிஎல் தொடரில் காட்டும் அவரது சாதனைகள், இப்போது சர்வதேச அளவுக்கு உயர்ந்துள்ளன. இந்த முத்தரப்பு தொடர் அவருக்கு புதிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
News
— BCCI (@BCCI) May 14, 2026
India A squad for ODI tri-series in Sri Lanka announced.
The upcoming tri-series is scheduled to be held in June, 2026.
More Details https://t.co/ZmL2u1boAW pic.twitter.com/7WXzZeeUFq
இந்தியா 'A' அணி
திலக் வர்மா, ப்ரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்சி, ரியான் பராக், ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜே, பிரப்சிம்ரன் சிங், குமார் குஷாக்ரா, விப்ரஜ் நிகம், யாஷ் தாகூர், யுத்தவீர் சிங், அன்ஷுல் கம்போஜ், அர்ஷத் கான்.
மேலும் படிக்க: ஜேமி ஓவர்டன் விலகல்.. சிஎஸ்கே அணிக்கு அடுத்த அடி! மாற்று வீரர் யார்?
அதிமுக எம்எல்ஏ 25 பேர் தகுதி நீக்கம்? விஜய்க்கு ஆபத்தா? எடப்பாடி முடிவு என்ன?
Chennai, Tamil Nadu:தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டசபையில் நடைபெற்றது. ஏற்கனவே விஜய், தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த பின்பு தான், ஆளுநர் அவருக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு 144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம், தமிழக வெற்றிக் கழக அரசு சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில், தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ-கள் தங்களது ஆதரவை வழங்கினர். யாருமே எதிர்பார்க்காத விதமாக, அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்களும் விஜய்க்கு தங்களது ஆதரவை வழங்கினர். இதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் தினமும் கருப்பு நிற கோட் சூட் அணிவது ஏன்? சீக்ரெட் தகவல் இதோ
சட்டசபையில் நடந்தது என்ன?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 25 பேர் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர். இதன் காரணமாக விஜய்க்கு 144 என்ற மேஜிக் நம்பர் கிடைத்துள்ளது. இதன் மூலம் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே விஜய் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிமுகவை சேர்ந்த 22 எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு எதிராக வாக்களித்துள்ளனர். விஜய்க்கு எதிராக வாக்களித்தவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே. பாமக மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தனர். அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் கட்சிக்கு எதிராக விஜய்க்கு ஆதரவளித்தது செல்லுமா, செல்லாதா? அதிமுக என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க போகிறது என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இதற்கிடையே, நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு ஆதரவளித்த 25 எம்.எல்.ஏ-க்களையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இது இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்கியுள்ளது.
ஓட்டுகள் செல்லுமா?
கட்சி தலைமையின் உத்தரவை மீறி வாக்களித்த இந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள் சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள கட்சி தாவல் தடைச் சட்டம் பாயுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா பிறப்பிக்கும் உத்தரவை மீறி, அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சபையில் வாக்களித்தால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
அதிமுக தலைமை தற்போது இந்த 25 எம்.எல்.ஏக்கள் மீதும் சபாநாயகரிடம் புகார் அளித்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரலாம். இருப்பினும், தற்போதைக்கு சபாநாயகர் அந்த ஓட்டுகளை எண்ணி, அதன் அடிப்படையிலேயே வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்துள்ளார். எனவே, அந்த ஓட்டுகளை சபாநாயகர் உடனடியாக செல்லாததாக அறிவிக்க முடியாது.
நீதிமன்றம் செல்வார்களா?
இந்த விவகாரத்தில் சட்டசபை சபாநாயகரின் முடிவே இறுதியானது என்றாலும், இதில் சட்ட முரண்பாடுகள் இருப்பதாக கருதினால் அதிமுக தலைமை நீதிமன்றத்தை கூட நாடலாம். கடந்த 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சர்ச்சைகளை கண்டித்து சில உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். அதே போல, தற்போதும் கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யவும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய கோரியும் வழக்குகள் தொடரப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் ஆட்சிக்கு ஆபத்தா?
ஒருவேளை, சபாநாயகரோ அல்லது நீதிமன்றமோ இந்த 25 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தாலும், அல்லது அந்த ஓட்டுகளை செல்லாது என அறிவித்தாலும், விஜய் தலைமையிலான அரசுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றே கூறப்படுகிறது. ஏனெனில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு இருப்பதால், அவர் எளிதாக 118 என்ற பெரும்பான்மை எண்களை தாண்டிவிடுவார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அடுத்து என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: கலைஞர் மகளிர் உரிமை தொகை வருமா, வராதா? முதலமைச்சர் விஜய்யின் முடிவு என்ன?
| கட்சியின் பெயர் | ஆதரவு எண்ணிக்கை |
| தமிழக வெற்றிக் கழகம் | 108 எம்.எல்.ஏ-க்கள் |
| அதிமுக எம்.எல்.ஏ-க்கள் (வேலுமணி தரப்பு) | 25 எம்.எல்.ஏ-க்கள் |
| கூட்டணிக் கட்சிகள் | 11 எம்.எல்.ஏ-க்கள் |
| மொத்த ஆதரவு | 144 எம்.எல்.ஏ-க்கள் |
அதிமுகவில் புதிய ரத்தம்: சீனியர்களுக்கு "செக்" யார் யார் விடுவிப்பு? முழு பட்டியல் உள்ளே!
Nagalapuram, Tamil Nadu:சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளார். கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூத்த நிர்வாகிகள் பலர் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய நிர்வாகிகள் விடுவிப்பு -காரணம் என்ன?
கட்சியின் வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு, தற்போது மாவட்டச் செயலாளர்களாகப் பணியாற்றி வந்த 26 முக்கிய நிர்வாகிகள் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகத் தலைமை அறிவித்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அடங்குவர்.
மேலும் படிக்க - அதிமுகவில் அதிரடி ஆக்ஷன்: வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்! இபிஎஸ் எடுத்த விஸ்வரூபம்
1. தற்போதைய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் யார்? முழு பட்டியல்
கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், பின்வரும் மூத்த நிர்வாகிகள் அவர்கள் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்:
திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., (திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. எஸ்.பி. வேலுமணி, M.L.A., (கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. சி.வி. சண்முகம், M.L.A., (விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. ஆர். காமராஜ், M.L.A., (திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர்)
டாக்டர் சி. விஜயபாஸ்கர், M.L.A., (புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. பி. தங்கமணி (நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. கே.பி. அன்பழகன், M.L.A., (தர்மபுரி மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. பா. பென்ஜமின் (திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் (திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. S.T.K. ஜக்கையன், Ex. M.P., (தேனி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
முனைவர் இசக்கி சுப்பையா, M.L.A., (திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. M.C. சம்பத் (கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. K.C. வீரமணி, M.L.A., (திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. M.R. விஜயபாஸ்கர், M.L.A., (கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. K.V. இராமலிங்கம், Ex. M.P., (ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. P. பாலகிருஷ்ண ரெட்டி, M.L.A., (கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. ஆ. அருண்மொழிதேவன், M.L.A., (கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. சு. ரவி, Ex. M.L.A., (ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. S.M. சுகுமார், M.L.A., (ராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. C. மகேந்திரன், Ex. M.L.A., (திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. கப்பச்சி D. வினோத் (நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. J. சீனிவாசன் (திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. M. பரஞ்ஜோதி (திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. ப. குமார், Ex. M.P., (திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. M. ரெத்தினசாமி, Ex. M.L.A., (தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
திரு. M. சேகர் (தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்)
மேலும் படிக்க - தமிழக அரசியலில் ‘கொறடா’ என்றால் என்ன? அர்த்தம் இதுதான்..!
2. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் யார்? -பகுதி பட்டியல்
விழுப்புரம் மாவட்டக் கழகம்: திரு. R. பசுபதி, B.A.
கடலூர் தெற்கு மாவட்டம்: திரு. சொரத்தூர் இரா. இராஜேந்திரன், M.L.A.
தர்மபுரி கிழக்கு மாவட்டம்: டாக்டர் R. அசோகன், MBBS., M.S.
தர்மபுரி மேற்கு மாவட்டம்: திரு. T.R. அன்பழகன்
திருப்பூர் புறநகர் மாவட்டம்: திரு. சி. சிவசாமி, Ex. M.P.
குறிப்பு: புகைப்படங்களில் உள்ள தகவல்களின்படி, விடுவிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சியின் மாநில அளவிலான பொறுப்புகளான கழகப் பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், அமைப்புக் செயலாளர் போன்ற பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி இறக்குமதி வரி... 15% உயர்வு - தங்கம் விலை எகிறப்போகுதா...?
New Delhi, Delhi:Gold Silver Import Duty: தங்கம், வெள்ளி மற்றும் பிற விலை மதிப்பு வாய்ந்த உலோகங்களின் இறக்குமதி தொடர்பான பல்வேறு பிரிவுகளுக்கான வரியை 6%இல் இருந்து 15%இல் ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
10% அடிப்படை சுங்க வரியுடன், 5% வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியையும் (AIDC) மத்திய அரசு விதித்துள்ளது. இறக்குமதி உயர்வு இன்று (மே 13) முதல் அமலுக்கு வருகிறது.
தங்கம், வெள்ளி மற்றும் பிற விலை மதிப்பு வாய்ந்த உலோகங்களின் இறக்குமதி தொடர்பான பல்வேறு பிரிவுகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. குறிப்பாக, விலை உயர்ந்த உலோகங்கள், ஆபரண பாகங்கள் மற்றும் தொழில்துறை இறக்குமதிகள் தொடர்பான பல்வேறு கட்டண வகைகளில் இறக்குமதி வரி உயர்ந்துள்ளது.
இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதன் மூலம், இறக்குமதி குறைவது மட்டுமின்றி, இந்திய ரூபாய் மதிப்பை மேம்படுத்தவும் பயனளிக்கும்.
தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் இவை தொடர்பான விலை மதிப்பு வாய்ந்த உலோகப் பொருள்கள், அத்துடன் நகை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கொக்கிகள், பிணைப்புகள், ஊசிகள் போன்ற நகைக் கூறுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவைககும் இந்த இறக்குமதி வரியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் தங்கம், வெள்ளி வர்த்தகர்கள், நகை உற்பத்தியாளர்கள், விலை மதிப்பு வாய்ந்த உலோகங்கள், அது தொடர்பான தொழில்துறை பொருள்களை கையாளும் பிற வணிகங்களுக்கான இறக்குமதி செலவுகிள் அதிகரிக்கும்.
இதன்மூலம், தங்கம் போன்ற விலை மதிப்பான உலோகங்களின் இறக்குமதியை ஓரளவு குறையும் எனலாம். சமீபத்தில், அவசியமின்றி தங்கத்தை வாங்குவதை பொதுமக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி சில நாள்களுக்கு முன் பேசியதை இத்துடன் பொருத்திப் பார்க்கலாம்.
அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்போது நாட்டின் அந்நிய செலாவணி அதிகம் செலவிடப்படும். அதை எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக பயன்படுத்துவதற்காக, தங்கத்தை வாங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
2024-25 நிதியாண்டை ஒப்பிடுகையில், 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி 2 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது. 2024-25 நிதியாண்டில் இருந்து 58 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருந்த தங்க இறக்குமதி, 2025-26 நிதியாண்டில் 71.98 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. அதற்கு முன், தங்க இறக்குமதி 2022-23 நிதியாண்டில் சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2023-24 நிதியாண்டில் 45.54 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது.
உலகளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான சொத்தாக காலங்காலமாகவே தங்கம்தான் இருந்து வருகிறது. முக்கியமாக நகைத்துறை மற்றும் குடும்ப சேமிப்புகள் இந்தியாவில் தங்கத்திற்கு அதிக டிமாண்டை ஏற்படுத்துகிறது.
ஜோதிடர் ரத்தன் பண்டிட் : ஒரே நாளில் அரசு பதவிக்கு ஆப்பு... ரூ.1.5 லட்சம் ஊதியம் போச்சு!
Chennai, Tamil Nadu:Radhan Pandit Vettrivel: முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நேற்று (மே 12) நியமிக்கப்பட்ட நிலையில், அந்த ஆணையை தமிழ்நாடு அரசு இன்று (மே 13) திரும்பப்பெற்றது.
எதிர்க்கட்சித் தரப்பிலும், ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் தரப்பிலும் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதன் நியமன ஆணையை திரும்பப் பெற்றுள்ளது.
வாக்களிப்பா? வெளிநடப்பா? அதிமுக எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும்... விஜய்யின் கணக்கு என்ன?
Chennai, Tamil Nadu:TVK Government Floor Test, AIADMK Crisis: தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்கவே இல்லை. ஆனால், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது.
காங்கிரஸ் தவெக உடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்ததாலும்; விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவாலும் தவெக ஆட்சியை அமைத்தது. விஜய் முதலமைச்சராகவும் அவர் தலைமையில் 9 அமைச்சர்களும் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, நேற்று (மே 12) சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் மற்றும் துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில், இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நடைபெற இருக்கிறது. இதில் தவெக அரசு நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிக்கும் என்றாலும், எவ்வளவு வாக்குகளை வாங்கப்போகிறது என்பதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தவெகவில் இருந்து எவ்வளவு வாக்குகள் வரும்?
தவெகவை பொருத்தவரை, அவர்களிடம் 105 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. விஜய் தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற சீனிவாச சேதுபதி உயர் நீதிமன்றம் விதித்த தடையால் வாக்கெடுப்பில் பங்கேற்க இயலாது, சபாநாயகர் ஆரம்பத்தில் வாக்களிக்க மாட்டார். அதேநேரத்தில், அமமுகவின் ஒற்றை எம்எல்ஏவான காமராஜ், தவெகவுக்கு வாக்களிக்க அதிக வாய்ப்புள்ளது.
திமுகவின் முடிவு என்ன?
மறுபுறம் அதிக எம்எல்ஏக்களை (59) வைத்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான திமுக அரசுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பில்லை. எனவே, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்க்கலாம் அல்லது கூட்டணி கட்சிகளின் ஆதரவு காரணமாக திமுக ஆதரவாக வாக்களிக்கலாம்.
அதிமுக மீதே அதிக கவனம்
திமுக எடுக்கும் முடிவு ஒருபுறம் இருக்க, அதிமுக மீதுதான் அனைவரும் கவனமும் இருக்கிறது. ஏனென்றால் தற்போது அதிமுக தவெக எதிர்ப்பு மற்றும் தவெக ஆதரவு என இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு குழு தவெகவுக்கு எதிராக வாக்களிப்பதாக தெரிவித்துவிட்டது. அதேநேரத்தில் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு குழு தவெகவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்துவிட்டது.
சி.வி.சண்முகம் தரப்புக்கு சிக்கலா?
இதுவே தற்போது பிரச்னையை கிளப்பி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நியமித்த கொறடாவின் உத்தரவை மீறி, சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு வாக்களித்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்களா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. இதற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான ஐ.எஸ். இன்பதுரை அவரது X பக்கத்தில் நீண்ட விளக்கத்துடன் கூடிய பதிவை நேற்று (மே 13) பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி. சண்முகம் அவர்களின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.பி. வேலுமணி, திரு. சி.வி. சண்முகம்,
— TN DIPR (@TNDIPRNEWS) May 12, 2026
1/2 pic.twitter.com/uUs3LnplWt
கட்சித் தாவல் தடை சட்டம் பாயும்
அந்த பதிவில், "அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்த அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்" என குறிப்பிட்டுள்ளார்.
வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டாலும்...
மேலும், ஐ.எஸ்.இன்பதுரை அவரது பதிவில், "சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.
சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது" என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் மேற்கொள்காட்டியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான@EPSTamilNadu அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக…
— I.S.INBADURAI (@IInbadurai) May 12, 2026
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், 'ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்பதுரை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்றம் 'சட்டமன்றக் கட்சி' மற்றும் 'அரசியல் கட்சி' இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணை 'அரசியல் கட்சியை' தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது என்றும் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
பதவி பறிபோகும்
இறுதியாக அவரது பதிவில், "அதன்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவே சட்டபூர்வமானது. எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை" என தெரிவித்துள்ளார்.
என்ன செய்யும் சி.வி.சண்முகம் தரப்பு?
தற்போது, இபிஎஸ் தரப்பில் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்? மற்றும் சி.வி.சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பில் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்? என்பது உறுதியாக தெரியவில்லை. இன்றைய வாக்கெடுப்பின் முடிவில் இதன் குழப்பம் நீங்கிவிடும். அதேநேரத்தில், இத்தனை சிக்கல் இருப்பதால் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமா அல்லது வெளிநடப்பு செய்து வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்க்குமா என்ற கேள்வியும் உள்ளது.
விஜய்யின் கணக்கு என்ன?
இதில் வெளிநடப்பு செய்தாலும் சிக்கல் வரலாம். எனவே, சி.வி.சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு எடுக்கும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும். ஒருவேளை சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு வாக்களித்தால் தவெக அரசுக்கு ஆதரவான வாக்குகள் 150-ஐ தாண்டும். இதில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக மற்றும் பாஜக, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் என்னென்ன முடிவை எடுப்பார்கள் என்பதும் கவனிக்கப்படுகிறது.
