தமிழ் சினிமாவின் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், தனது 71வது வயதிலும் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் உடல்வாகு கொண்டவர். சமீபத்தில் கூட Dude படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அடுத்ததாக, விஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியனுடன் இணைந்து 'கொம்பு சீவி' என்ற படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. வயதானாலும் அழகும், ஸ்டைலும் மாறாத சரத்குமார், தனது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் ஃபிட்னஸ் ரகசியங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | படையப்பா ரீ-ரிலீஸ்.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு?

சரத்குமாரின் உடற்பயிற்சி ரகசியம்
- சரத்குமார் உடற்பயிற்சி செய்வதை ஒரு தவமாகவே மேற்கொள்கிறார். அவரது தினசரி உடற்பயிற்சி பழக்கங்கள் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்.
- காலை நேரப் பயிற்சி: இவருக்கு காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தான் மிகவும் பிடிக்குமாம். அதுவும் தனியாக செய்வதை விட, நண்பர்கள் அல்லது ட்ரைனர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டே பயிற்சி செய்வது இவருக்கு 'ஃபேவரைட்'.
- ஸ்ட்ரெங்த் டிரைனிங்: கார்டியோ பயிற்சிகளை விட, உடலுக்கு வலிமை சேர்க்கும் பயிற்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
- ஸ்குவாட்ஸ்: ஜிம்மில் அதிக எடை தூக்கும் 'டெட்லிஃப்ட்' பயிற்சியை விட, கால்களுக்கும் உடலுக்கும் வலு சேர்க்கும் 'ஸ்குவாட்ஸ்' பயிற்சியே தனக்கு பிடித்தமானது என்கிறார்.
- முழு உடல் பயிற்சி: வெறும் மேல் உடலுக்கு மட்டும் பயிற்சி செய்யாமல், தலை முதல் கால் வரை மொத்த உடலுக்கும் வேலை கொடுக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
டயட் முறை
உடற்பயிற்சி மட்டும் போதாது, உணவிலும் கட்டுப்பாடு அவசியம் என்கிறார் சரத்குமார். இவரது தினசரி உணவு பழக்கம் வியக்க வைக்கிறது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தண்ணீர் குடிப்பார். ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை உறுதி செய்கிறார். காலையில் நெய் சேர்க்கப்பட்ட Black Coffee with Ghee உடன் இவரது நாள் தொடங்குகிறது. பிறகு காலை உணவாக 4 முட்டையின் வெள்ளை பகுதிகளை சாப்பிடுகிறார். பிறகு 11 மணிக்கு ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்த 'ABC' ஜூஸ் எடுத்து கொள்கிறார். மதியம் வேகவைக்கப்பட்ட காய்கறிகளுடன், மிளகுத்தூள் மற்றும் உப்பு மட்டும் சேர்க்கப்பட்ட 2 சிக்கன் துண்டுகள் சாப்பிடுகிறார். மாலையில் வேர்க்கடலை கலந்த அவல் எடுத்துக்கொள்கிறார். இரவு சிக்கன் அல்லது மட்டன் சூப் உடன் முடித்து கொள்கிறார். எப்போதாவது டயட்டை மீறி சாப்பிட ஆசைப்பட்டால், இவரது சாய்ஸ் 'பிரியாணி' தானாம்!
சரத்குமாரின் அட்வைஸ்
தன்னைப்போல தீவிரமாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்ய முடியாதவர்களுக்கு சரத்குமார் ஒரு எளிய அறிவுரையை கூறுகிறார். "உங்களால் ஜிம்முக்கு சென்று கடினமான பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மட்டுமாவது செய்யுங்கள். இது அடிப்படை. இதுவே ரத்த ஓட்டத்தை சீராக்கி, உங்களைச் சுறுசுறுப்பாக வைக்கும்," என்கிறார். நடைப்பயிற்சி கூட செய்ய நேரம் இல்லாதவர்கள், நாள் முழுவதும் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உடலுக்கு வேலை கொடுக்கும்படியான சிறு சிறு வேலைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் சுறுசுறுப்பாக இயங்கினாலே போதும், நோயின்றி வாழலாம் என்பது இவரது அறிவுரை.
மேலும் படிக்க | படையப்பா படம் வெளியான போது எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த முடிவுகள் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளன. உத்தர பிரதேசத்தின் பிரசாந்த் வீரை ரூ. 14.20 கோடிக்கு வாங்கிய கையோடு, ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதே ஆன கார்த்திக் சர்மா என்ற மற்றொரு இளம் வீரரையும் அதே ரூ. 14.20 கோடிக்கு வாங்கி அதிர்ச்சி அளித்துள்ளது. எந்தவொரு சர்வதேசபோட்டியிலும் விளையாடாத இந்த சிறுவனுக்கு இவ்வளவு பெரிய தொகையை சிஎஸ்கே ஏன் செலவிட்டது? என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க | கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?
#IPL2026Auction | Kartik Sharma to CSK at 14. 2 crore #IPL2026 | #IPLAuction | #IPL2026Auction | #KartikSharma | #CSK | #ZeeTamilNews pic.twitter.com/Cno6jqOJpc
— Zee Tamil News (@ZeeTamilNews) December 16, 2025
கார்த்திக் சர்மா கிரிக்கெட் பயணம்
ராஜஸ்தானில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 2006ம் ஆண்டு பிறந்தவர் கார்த்திக் சர்மா. சிறு வயதில் தெருவோரங்களில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய இவரது பயணம், ஒரு உள்ளூர் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்த பிறகு சூடுபிடித்தது. அங்கு இவரது இயல்பான பேட்டிங் திறமை, பந்தைக் கணிக்கும் விதம் மற்றும் பயமில்லாத அணுகுமுறை பயிற்சியாளர்களை வெகுவாக கவர்ந்தது. படிப்படியாக ராஜஸ்தான் அண்டர்-14, அண்டர்-16 மற்றும் அண்டர்-19 அணிகளில் இடம்பிடித்து தனது முத்திரையை பதித்தார். கார்த்திக் சர்மா, இந்திய ஜாம்பவான்களான மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை தனது முன்மாதிரியாக கொண்டுள்ளார். நெருக்கடியான நேரங்களில் தோனியை போல அமைதியாகவும், பேட்டிங்கில் விராட் கோலியை போல ஆக்ரோஷமாகவும் செயல்படுவதே இவரது பாணி.
சிஎஸ்கேவை கவர்ந்த புள்ளிவிவரங்கள்
- டி20 ஸ்ட்ரைக் ரேட்: இதுவரை 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 334 ரன்களை குவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இவரது ஸ்ட்ரைக் ரேட் 164. அதிலும் 28 சிக்சர்களை விளாசியுள்ளார் என்பது இவரது பவர் ஹிட்டிங் திறமைக்குச் சான்று.
- அறிமுகத்தில் சதம்: 2024-25 ரஞ்சி டிராபி சீசனில் தனது அறிமுக போட்டியிலேயே உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 113 ரன்கள் அடித்து சதம் கண்டார்.
- லிஸ்ட் ஏ சாதனை: விஜய் ஹசாரே டிராபி போன்ற லிஸ்ட் ஏ போட்டிகளில், ராஜஸ்தான் அணிக்காக 9 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து, அணியின் அதிக ரன் ஸ்கோரராகத் திகழ்ந்தார்.
- விக்கெட் கீப்பிங்: சையது முஷ்டாக் அலி டிராபியில் பேட்டிங் மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பிங்கிலும் முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
எதிர்கால திட்டம்
நீரஜ் சோப்ரா போன்ற ஒலிம்பிக் வீரர்களை நிர்வகிக்கும் JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனம், கார்த்திக் சர்மாவை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவே அவர் ஒரு 'ஸ்பெஷல் டேலண்ட்' என்பதை உறுதிப்படுத்துகிறது. தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு ஒரு நீண்ட கால விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தேவை. அந்த இடத்தை நிரப்பவே கார்த்திக் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 19 வயதில் மஞ்சள் ஜெர்சியில் நுழையும் கார்த்திக் சர்மா, தோனியின் வழிகாட்டுதலில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்! இவரின் வருகையால் சென்னை அணியில் ஏற்கனவே உள்ள உருவில் படேல் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் படிக்க: CSK இப்பவே பலமா இருக்கு.. இன்னும் இந்த 2 வீரர்களை எடுத்தால் போதும்! கப் கன்ஃபார்ம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ஐபிஎல் 2026 மினி ஏலம் இன்று செவ்வாய்க்கிழமை டிசம்பர் 16 அபுதாபியில் உள்ள எடிஹாட் அரினாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் பல வீரர்கள் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. கேமரூன் கிரீன் ஆச்சரியப்படுத்தும் விதமாக கொல்கத்தா அணியால் ரூ. 25.20 கோடிக்கு வாங்கப்பட்டார். இதனை தொடர்ந்து அனைவரின் பார்வையும் இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா (Matheesha Pathirana) மீது தான் இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் விடுவிக்கப்பட்ட இவரை, மீண்டும் சிஎஸ்கே எடுக்குமா அல்லது வேறு அணி தூக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
மேலும் படிக்க | கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?
#IPL2026Auction | KKR get Matheesha Pathirana at INR 18 crore.#IPL2026 | #IPLAuction | #IPL2026Auction | #MatheeshaPathirana | #KKR | #ZeeTamilNews pic.twitter.com/ogCT7fNYUg
— Zee Tamil News (@ZeeTamilNews) December 16, 2025
பதிரானாவை தூக்கிய கொல்கத்தா
விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் கொல்கத்தா அணி பத்திரனாவை 18 கோடி ரூபாய்க்கு வாங்கியது. லக்னோ அணியுடன் போட்டி போட்டு ஏலத்தில் தட்டி தூக்கியுள்ளது. மதீஷா பதிரானா ஏல பட்டியலில் 4-வது செட்டில் , 'FA1' பிரிவின் கீழ் 29வது வீரராக பட்டியலிடப்பட்டார். பதிரானாவின் அடிப்படை விலை ரூ. 2 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சீசன்களில் சிஎஸ்கே அணியின் டெத் பவுலிங் ஸ்பெஷலிஸ்டாக இருந்தவர் பதிரானா. 2023ல் சிஎஸ்கே கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், கடந்த 2025 சீசனில் பாதி போட்டியில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. மேலும் எகானமி ரேட் (10.13) சற்று அதிகமாக இருந்ததால் அவரை சிஎஸ்கே விடுவித்தது. இப்போது அவரை கொல்கத்தா 18 கோடிக்கு எடுத்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி நல்ல ஒரு டெத் பவுலரை தேடி வந்த நிலையில், பதிரானா கிடைத்துள்ளது அவர்களுக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. இதுவரை 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பத்திரனா. இவரது தனித்துவமான பந்துவீச்சு முறை லசித் மலிங்காவை நினைவுபடுத்துவதால் இவருக்கு மவுசு அதிகம். ஏற்கனவே வருண் சக்கரவர்த்தி போன்ற சிறந்த வீரர்களை வைத்துள்ள கொல்கத்தாவிற்கு பத்திரனா வருகை இன்னும் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
மேலும் படிக்க: CSK இப்பவே பலமா இருக்கு.. இன்னும் இந்த 2 வீரர்களை எடுத்தால் போதும்! கப் கன்ஃபார்ம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ஐபிஎல் 2026 மினி ஏலம் இன்று டிசம்பர் 16 அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல வீரர்களுக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ஸ்மார்ட்டான தேர்வை செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அகீல் ஹொசைனை (Akeal Hosein) அவரது அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் இந்திய வீரர் பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மாவை யாரும் எதிர்பார்க்காத விதமாக 14.20 கோடிக்கு வாங்கியுள்ளது.
மேலும் படிக்க | ரசிகர்களுக்கு அதிர்ச்சி! பதிரானாவை தட்டிதூக்கிய கேகேஆர்! கண்டுகொள்ளாத சிஎஸ்கே!
யார் இந்த அகீல் ஹொசைன்?
சிஎஸ்கே அணி தனது நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்தது. இதனால் மிடில் ஓவர்களில் பந்துவீச ஒரு தரமான இடது கை சுழற்பந்து வீச்சாளர் தேவைப்பட்டார். அந்த இடத்தை நிரப்பவே அகீல் ஹொசைன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பது அனைவருக்கும் தெரியும். அகீல் ஹொசைனின் துல்லியமான சுழற்பந்து வீச்சு இங்கு எடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்களுக்கு கோடிகளில் பணம் கொட்டப்பட்ட நிலையில், ஒரு சர்வதேச தரமுள்ள பந்துவீச்சாளரை வெறும் 2 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே-வின் சாதுரியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 87 டி20 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது எகானமி ரேட் 7.24 என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மட்டுமின்றி, பிக் பாஷ் லீக் (BBL), பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போன்ற உலகின் பல டி20 லீக்குகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு உண்டு.
பிரசாந்த் வீர்
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளம் வீரரான பிரசாந்த் வீர் (Prashant Veer), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 14.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இதுவரை எந்தவொரு சர்வதேச போட்டியிலும் விளையாடாத ஒரு இந்திய வீரருக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்படுவது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. பிரசாந்த் வீரின் அடிப்படை விலை வெறும் ரூ. 40 லட்சம் மட்டுமே. ஏலம் தொடங்கியதும் சென்னை மற்றும் SRH அணிகள் இவரை எடுக்க போட்டி போட்டன. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, துணிச்சலாக ரூ. 14.2 கோடிக்கு இவரை தட்டி தூக்கியது.
யார் இந்த பிரசாந்த் வீர்?
உத்தர பிரதேச மாநிலம் அமேதியை சேர்ந்தவர். இடது கை சுழற்பந்து வீச்சாளரும், அதிரடி பேட்ஸ்மேனுமான இவர் ஒரு முழுமையான ஆல்-ரவுண்டர். சையது முஷ்டாக் அலி டிராபி மற்றும் உத்தரப் பிரதேச U-23 போட்டிகளில் இவர் வெளிப்படுத்திய ஆட்டம் வியக்கத்தக்கது. சமீபத்தில் நடந்த 6 போட்டிகளில் 112 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 170) மற்றும் 9 விக்கெட்டுகளை (எகானமி 6.76) வீழ்த்தி ஸ்கவுட்களின் கவனத்தை ஈர்த்தார். நொய்டா கிங்ஸ் (Noida Kings) அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர். இவரது ஆல்-ரவுண்டர் திறமை ஜடேஜாவை நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது. ரவீந்திர ஜடேஜா இல்லாத குறையை போக்க, ஒரு தரமான இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை தேடி கொண்டிருந்த சிஎஸ்கே-வுக்கு, பிரசாந்த் வீர் ஒரு பொக்கிஷமாக கிடைத்துள்ளார்.
கார்த்திக் ஷர்மா
ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் ஷர்மா (Kartik Sharma), யாரும் எதிர்பாராத வகையில் ரூ. 14.20 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். பிரசாந்த் வீருக்கு அடுத்தபடியாக, சிஎஸ்கே இந்த ஏலத்தில் எடுத்த இரண்டாவது மிகப்பெரிய 'அன்கேப்ட்' (Uncapped) வீரர் இவர்தான். கார்த்திக் ஷர்மாவின் அடிப்படை விலை வெறும் ரூ. 30 லட்சம் மட்டுமே. சிஎஸ்கே இறுதியில் ரூ. 14.20 கோடிக்கு அவரை தட்டி தூக்கியது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஒரு வலது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். கூச் பெஹார் ட்ராபியில் ஒரே போட்டியில் 17 சிக்சர்களை விளாசி 181 ரன்கள் குவித்தார். வினு மன்கட் ட்ராபியிலும் 22 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 164. இதுவரை 12 டி20 போட்டிகளில் 334 ரன்கள் குவித்துள்ளார். தனது முதல் ரஞ்சி டிராபி போட்டியிலேயே உத்தரகாண்ட் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார்.
சிஎஸ்கே அணியின் நிலை
இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி ஏற்கனவே சஞ்சு சாம்சனை ரூ. 18 கோடிக்கு டிரேட் மூலம் வாங்கியுள்ளது. தற்போது அகீல் ஹொசைன் மற்றும் பிரசாந்த் வீர் வருகை அணியின் சுழற்பந்து வீச்சு படையை மேலும் வலுப்படுத்தும். தோனியின் தலைமையில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் அகீல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா எப்படி ஜொலிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
மேலும் படிக்க | கேமரூன் கிரீன் 25.20 கோடிக்கு ஏலம் போனாலும் 18 கோடி தான் கிடைக்கும்! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ஐபிஎல் 2026-க்கான மினி ஏலம் இன்று டிசம்பர் 16 அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் (Cameron Green), எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் மினி ஏலத்தில் ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. ரூ.25.20 கோடிக்கு கிரீன் ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் 18 கோடி தான் அவருக்கு கிடைக்கும். மீதமுள்ள பணத்தை பிசிசிஐ எடுத்துக்கொள்ளும்.
#IPL2026Auction | கேமரூன் கிரீனை ரூ.25.2 கோடிக்கு ஏலம் எடுத்த KKR#IPL2026 | #IPLAuction | #IPL2026Auction | #CameronGreen | #KKR | #ZeeTamilNews pic.twitter.com/Tpqw67MSDx
— Zee Tamil News (@ZeeTamilNews) December 16, 2025
கேமரூன் கிரீன் ஏன் இந்த மவுசு?
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர், எந்த இடத்திலும் இறங்கி அதிரடியாக ஆடக்கூடியவர். 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 17.5 கோடிக்கு வாங்கப்பட்டார். பின்னர் 2024ல் பெங்களூரு அணிக்கு மாற்றப்பட்டார். இதுவரை 29 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 707 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 153.70) குவித்துள்ளார். பந்துவீச்சிலும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். நீண்ட நாட்களாக காயத்தில் இருந்தே கிரீன் தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் வெளிநாட்டு வீரர்களில் அதிக விலைக்கு போன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கேமரூன் கிரீன்.
விலைபோகாத வீரர்கள்
- தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரை அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்
- ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் ஃபெரேசர் மெக்கர்க் ஏலம் போகவில்லை
- நியூசிலாந்து வீரர் டென் கான்வே மற்றும் இந்திய வீரர் பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை
- SMAT தொடரில் அதிரடி காட்டி வரும் சர்பராஸ் கானும் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.
மேலும் படிக்க: CSK இப்பவே பலமா இருக்கு.. இன்னும் இந்த 2 வீரர்களை எடுத்தால் போதும்! கப் கன்ஃபார்ம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது அதிரடி ஆட்டத்திற்கு மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தற்போது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கட்டாக் டி20 போட்டியில் அபார வெற்றிக்கு பிறகு, ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவுடனான உறவை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மேலும் படிக்க | சிஎஸ்கே வீரரை குறிவைக்கும் டெல்லி! ஏலத்தில் தட்டி தூக்க மெகா திட்டம்!
Hardik Pandya said, “a special mention to my partner. A lot of great things have happened, she’s nothing but best to me ever since she arrived in my life”. pic.twitter.com/8oXwJ7TBGp
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 10, 2025
கட்டாக் போட்டியில் ஹர்திக் மாஸ்
செவ்வாய்க்கிழமை டிசம்பர் 9 கட்டாக்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் இமால வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஹர்திக் பாண்டியா. வெறும் 28 பந்துகளில் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அவர், பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை விளாசிய சாதனையும் இந்த போட்டியில் அவர் படைத்தார்.
காயத்திற்குப் பிறகு கம்பேக்
ஆசிய கோப்பை தொடரின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த பாண்டியா, தற்போது கம்பேக் கொடுத்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பிசிசிஐ வெளியிட்ட வீடியோ ஒன்றில் பேசிய அவர், தனது காயத்தை பற்றியும், அந்த கடினமான காலங்களில் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றியும் மனம் திறந்து பேசினார். அந்த வீடியோவில் ஹர்திக் பேசுகையில், "காயம் ஏற்படும் காலங்கள் ஒரு வீரருக்கு மிகவும் சோதனையானவை. அது மனரீதியாக பல சந்தேகங்களை நமக்குள்ளே எழுப்பும். ஆனால், இந்த நேரத்தில் எனக்கு துணையாக நின்ற என் அன்புக்குரியவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்," என்றார்.
Hardik Pandya works out with his Girlfriend, Mahieka Sharma
— FTino (@FernadoTin10172) December 5, 2025
Cute couple in the Town
Couple Fitness Goals .
Hardik Pandya insta pic.twitter.com/hkl5ggX2ZR
மஹிகா சர்மா
தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பாக என் பார்ட்னரை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகு, எல்லாமே நல்லபடியாக மாறிவிட்டது," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் மஹிகா சர்மாவின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவர் யாரை சொல்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெளிவாக புரிந்தது. ஹர்திக் பாண்டியாவின் இந்த வீடியோவை பிசிசிஐ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தது. இதற்கு மஹிகா சர்மா ஒரு எமோஜியை கமெண்டாக பதிவிட்டுள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியாவும் அந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில், "உன்னை மாதிரி யாரும் இல்லை ராஜா" (There is no one like you Raja) என்று பதிவிட்டுள்ளார். இது இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கத்தை உறுதி செய்வது போல அமைந்துள்ளது. சமீபகாலமாக இவர்கள் இருவரும் பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக சுற்றி வருவதும், சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்வதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மஹிகா சர்மா?
24 வயதான மஹிகா சர்மா, டெல்லியை சேர்ந்த ஒரு பிரபல மாடல் ஆவார். பல முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களுக்காக இவர் ராம்ப் வாக் செய்துள்ளார். இசை ஆல்பங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். 'மாடல் ஆஃப் தி இயர்' விருதை வென்றுள்ள இவரை, இந்தியாவின் வளர்ந்து வரும் ஃபேஷன் ஐகானாக பல பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. படிப்பிலும் கெட்டிக்காரரான மஹிகா, பொருளாதார துறையில் பட்டம் பெற்றவர் என்பது கூடுதல் தகவல். ஹர்திக் பாண்டியா, கடந்த 2020-ம் ஆண்டு மாடல் நடாஷா ஸ்டான்கோவிக்கை மணந்தார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளார். நான்கு வருடத் திருமண வாழ்க்கைக்கு பிறகு, ஜூலை 2024ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஹர்திக், தற்போது மஹிகா சர்மாவுடன் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
மேலும் படிக்க | இந்திய அணி ஜெயித்தாலும்... பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் தேவை - யாரை நீக்க வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட பரபரப்பான டி20 தொடர் இன்று தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு தயார்படுத்தும் விதமாக இந்த தொடர் அமைந்துள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெறவில்லை.
மேலும் படிக்க | கோலிக்கு இடத்தில் இவரா? பிசிசிஐ கூட்டத்தில் பேசிய கம்பீர் - முக்கிய தகவல்!
இந்திய அணியின் சொதப்பல் பேட்டிங்
இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடியாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்து பவர் பிளே முடிவதற்குள் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. சும்மன் கில் 4 ரன்களுக்கும், சூரியகுமார் யாதவ் 12 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அதிகம் எதிர்பார்த்த அபிஷேக் சர்மா 17 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்பு நிதானமாக விளையாடினர் திலக் வர்மா மற்றும் அக்சர் படேல். இருப்பினும் இருவரும் 26 மற்றும் 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
ஹர்திக் பாண்டியாவின் அதிரடி
காயத்திற்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்த ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். வெறும் 28 பந்தில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் அடித்தார். இவரது அதிரடியின் காரணமாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்தது. தென்னாபிரிக்கா அணியின் தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கட்டுகளையும், சிபம்லா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 176 ரன்கள் அடித்தால் வெற்றியின் நிலையில் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது.
Hardik Pandya special in the T20I series opener!
— BCCI (@BCCI) December 9, 2025
How good was that finish from the #TeamIndia all-rounder?
Updates https://t.co/tiemfwcNPh #INDvSA | @hardikpandya7 | @IDFCFIRSTBank pic.twitter.com/6CC8ejk4eF
தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்
இந்த பிச்சில் சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியை போலவே அவர்களும் பவர் பிளே முடிவதற்குள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் ஆட்டமிழந்தினர். அக்சர் படேலின் துல்லியமான பந்தில் மார்க்கரம் 14 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர்,ஃபெரீரா, மார்கோ ஜான்சன் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து தடுமாறினர். நிதானமாக ஆடிய பிரவீஸ் பும்ரா பந்தில் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இறுதியில் 12.3 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாபிரிக்கா அணி. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 4 கேட்களை சிறப்பாக பிடித்தார். மேலும் பேட்டிங்கிலும் 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்து இருந்தார். இதனால் இனி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.
மேலும் படிக்க | IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மீண்டும் மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டு வருகிறார். இன்று பாண்டிச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பின் தொடர்ச்சியாக, ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடந்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம், தற்போது டிசம்பர் 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு! போலீஸ் கையை கடித்து குதறிய தவெக தொண்டர்.. வைரல் வீடியோ
மாற்றத்திற்கான காரணம் என்ன?
முதலில், ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள பவளத்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திடலில் டிசம்பர் 16-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெக தலைமை திட்டமிட்டிருந்தது. இதற்கான அனுமதியைக் கோரி, கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். ஆனால், காவல்துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்த போது, அங்கு எதிர்பார்க்கப்படும் கூட்டத்தை கையாள்வதற்கு போதிய இடவசதி இல்லை என்றும், வாகன நெரிசல் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி அனுமதி மறுத்துவிட்டனர்.
குறிப்பாக, அந்த 7 ஏக்கர் நிலப்பரப்பு, விஜய்யை காண வரும் 70,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களை கொள்ளும் அளவுக்கு போதுமானதாக இருக்காது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, வேறு ஒரு பாதுகாப்பான மற்றும் விசாலமான இடத்தை தேர்வு செய்யவும், காவல்துறை அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தை கருத்தில் கொண்டும் கூட்டம் டிசம்பர் 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய இடம் தேர்வு
காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, தற்போது ஈரோட்டில் வேறு ஒரு விசாலமான தனியார் இடத்தை தவெக நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர். இதற்கான புதிய அனுமதி கோரும் மனுவையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். புதிய இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் தீவிர ஏற்பாடு
இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதில் முன்னாள் அமைச்சரும், தவெக மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இது அவரது சொந்த மாவட்டம் என்பதால், விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளார். "அரசு விதிமுறைகள் மற்றும் காவல்துறை வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் இந்த கூட்டம் நடத்தப்படும்," என்று அவர் உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில் நடந்த கூட்டத்திற்கு பிறகு, விஜய்யின் இந்த ஈரோடு பயணம் கொங்கு மண்டல அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - புதுச்சேரி விஜய் கூட்டம்! துப்பாக்கியுடன் வந்த நபர்? உண்மையில் யார் இவர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மகிஹா ஷர்மா (Mahieka Sharma) குறித்து பத்திரிகையாளர்கள் எடுத்த கண்ணியமற்ற புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டு கொதித்தெழுந்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகக் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள ஒரு உணவகத்திற்கு ஹர்திக் பாண்டியாவின் காதலியான மகிஹா ஷர்மா சென்றிருந்தார். அங்கிருந்து வெளியே வரும்போது, அவர் படிக்கட்டுகளில் இறங்கி வந்துள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த சில போட்டோகிராபர்கள், அவர் நடந்து வருவதைக் கீழ் கோணத்தில் இருந்து மிகவும் ஆபாசமாக தெரியும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இது ஒரு பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைக்கும் செயல் என்று ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க | T20 Worldcup: ரசிகர்களுக்கு அதிர்ச்சி! Hotstarல் டி20 உலக கோப்பை இல்லை!
Hardik Pandya instagram story for his girlfriend Mahieka Sharma privacy. pic.twitter.com/9DqGYD9kYr
— Niro(@Niroy45) December 9, 2025
ஹர்திக் பாண்டியாவின் ஆவேச பதிவு
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள ஹர்திக், "நாங்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால் மக்கள் எங்களை கவனிப்பார்கள், போட்டோ எடுப்பார்கள் என்பதை நான் அறிவேன்; அதை ஏற்கிறேன். ஆனால் இன்று நடந்த சம்பவம் எல்லை மீறிய ஒன்று. மகிஹா படிக்கட்டுகளில் சாதாரணமாகத் தான் இறங்கி வந்தார். ஆனால், எந்த பெண்ணையும் புகைப்படம் எடுக்கக்கூடாத ஒரு மோசமான கோணத்தில் அவரை படம் பிடித்துள்ளனர். ஒரு தனிப்பட்ட தருணத்தை வைத்து கேவலமான முறையில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்," என்று சாடியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இது யார் எடுத்தது, என்ன தலைப்பு கொடுத்தார்கள் என்பதல்ல பிரச்சனை; இது அடிப்படை மரியாதை சம்பந்தப்பட்டது. பெண்களுக்கு கண்ணியம் உள்ளது. அனைவரும் எல்லைகளை மதிக்க வேண்டும். பத்திரிகை நண்பர்களின் உழைப்பை நான் மதிக்கிறேன், எப்போதும் ஒத்துழைப்பு தருகிறேன். ஆனால் தயவு செய்து கொஞ்சம் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை," என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காதலை உறுதி செய்த ஹர்திக்
ஹர்திக் பாண்டியா மற்றும் மாடல் அழகியான மகிஹா ஷர்மா இருவரும் காதலிப்பதாக பல மாதங்களாக வதந்திகள் பரவி வந்தன. கடந்த அக்டோபர் 2025ல், தனது பிறந்தநாளுக்கு முன்னதாக மகிஹாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து ஹர்திக் இந்த காதலை உறுதி செய்தார். மகிஹா ஷர்மா ஒரு யோகா பயிற்றுவிப்பாளர் மற்றும் மாடல் ஆவார். ஏற்கனவே நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கை மணந்து விவாகரத்து பெற்ற ஹர்திக் பாண்டியா, தற்போது தனது கிரிக்கெட், மகன் அகஸ்தியா மற்றும் காதலி மகிஹா ஆகிய மூன்றும் தனது வாழ்க்கையின் முன்னுரிமைகள் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கில் விளையாடுகிறாரா? சஞ்சு சாம்சன் தொடக்க வீரரா? சூர்யகுமார் யாதவ் பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், தனது X தளத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல், சிறிது நேரம் குழப்பத்திலும் ஆழ்த்தியது. பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படத்தையும், ஒரு தெருவின் படத்தையும் பகிர்ந்திருந்தார்.
மேலும் படிக்க: இந்தியாவின் டாப் 7 பணக்கார கிரிக்கெட் வீராங்கனைகள்.. ஸ்மிருதி மந்தனாவுக்கு எந்த இடம்?
— Ashwin (@ashwinravi99) December 9, 2025
என்ன அந்த புதிர்?
அஸ்வின் பகிர்ந்த படத்தில் ஒரு பக்கம் பிரபல நடிகை சன்னி லியோன், மறுபக்கம் ஒரு தெருவின் படத்தை பார்த்த ரசிகர்கள், "அஸ்வின் என்ன சொல்ல வருகிறார்?" என்று தலையை பிய்த்து கொண்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் அந்த புதிரை விடுவித்துவிட்டனர். சன்னி லியோனிலிருந்து 'சன்னி' (Sunny) + தெருவில் இருந்து 'சந்து' (Sadhu) = சன்னி சந்து (Sunny Sandhu). ஆம், அஸ்வின் குறிப்பிட்டது வேறு யாரையும் அல்ல, தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் ஆல்-ரவுண்டரான சன்னி சந்து (Sunny Sandhu) என்பவரை தான்.
யார் இந்த சன்னி சந்து?
தற்போது நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் 22 வயதான இளம் வீரர் சன்னி சந்து. சமீபத்தில் அகமதாபாத்தில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், கடைசி நேரத்தில் களமிறங்கி ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 9 பந்துகளில் 30 ரன்கள் விளாசி, தமிழ்நாடு அணி 183 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக அமைந்தார். சாய் சுதர்சனுடன் இணைந்து அவர் அமைத்த கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இவரது இந்த அதிரடி ஆட்டத்தை பாராட்டும் விதமாகத்தான், அஸ்வின் தனது பாணியில் ஒரு 'மீம்' போட்டு பாராட்டியுள்ளார். வழக்கமான பாராட்டுக்களை விட, இப்படி சற்றே வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் அஸ்வின் பாராட்டியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
— BCCI Domestic (@BCCIdomestic) December 8, 2025
With 40 required off four overs, Sunny Sandhu turned it around with a game-changing over
Scorecard https://t.co/DlpijtPpFx@IDFCFIRSTBank | #SMAT pic.twitter.com/bkaaSpEl1S
சிஎஸ்கே ஏலத்தில் எடுக்குமா?
ஐபிஎல் மினி ஏலம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் அஸ்வின் சில சீக்ரட்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றார். அதேபோல சென்னை அணிக்கு ஒரு ஃபினிஷர் தேவைப்பட்டு வரும் நிலையில், ஒருவேளை சிஎஸ்கே அணி சன்னி சந்துவை ஏலத்தில் எடுக்க முடிவு செய்திருக்கலாம். அதை சுட்டிக்காட்டும் விதமாக தான் அஸ்வின் இவ்வாறு பகிர்ந்துள்ளார் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு வீரர்களை சென்னை அணி மினி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த இளம் வீரரையும் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் தற்போது புதுச்சேரியை மையமாக கொண்டு தீவிரமடைந்துள்ளது. நாளை டிசம்பர் 9 புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். விஜய்யின் வருகையால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உப்பளம் மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிக்கு விடுமுறை ஏன்?
விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த பகுதிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்திற்கு மிக அருகிலேயே ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், திரும்பும்போதும் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படக்கூடாது என்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி நிர்வாகம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.
ரோடு ஷோ ரத்து - பொதுக்கூட்டம் உறுதி
முன்னதாக, புதுச்சேரியில் வீதிவீதியாக சென்று மக்களை சந்திக்கும் 'ரோடு ஷோ' நடத்த தவெக திட்டமிட்டிருந்தது. ஆனால், புதுச்சேரியின் குறுகிய சாலைகள் மற்றும் கடந்த காலங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது. அதற்கு பதிலாக, உப்பளம் மைதானத்தில் கட்டுப்பாடுகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, இந்த முறை காவல்துறை மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
- கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- க்யூஆர் கோடு (QR Code) பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
- வெளியூர் ஆட்களுக்கு அனுமதி இல்லை; உள்ளூர்வாசிகள் மட்டுமே பங்கேற்கலாம்.
- காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே கூட்டம் நடைபெறும்.
- விஜய் 45 நிமிடங்கள் உரையாற்றுவார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
உப்பளம் மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் வாகனங்களை நிறுத்த தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மரம், சுவர் போன்றவற்றின் மீது ஏறி நின்று பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு, புதுச்சேரியில் தவெக-வின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: குட் நியூஸ்! ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் - எப்போது? அரசின் செம்ம திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ