Puducherry Welfare Schemes For Different Abled People: புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 23) நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கான மாத அரிசி விநியோகமும், மாதம் கொடுக்கப்படும் பெட்ரோலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, "சமூக நலத்துறை மூலம் 21 ஆயிரத்து 539 மாற்றுதிறனாளிகள் பயன்பெறுகிறார்கள். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, இலவச வீட்டுமனை பட்டா, விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி என வழங்கப்படுகிறது. வாகனங்களுக்கான பெட்ரோல் மாதம் 25 லிட்டரில் இருந்து 5 லிட்டர் உயர்த்தி மொத்தம் 30 லிட்டராக விநியோகிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை பயனாளர்களுக்கு ரூ. 3000 உதவித்தொகை வாங்குபவருக்கு ரூ. 3500 ஆகவும், ரூ. 4800 வாங்குவோருக்கு ரூ. 5500 ஆகவும் உயர்த்தப்படும். தற்போது மாதம் 15 கிலோ அரிசிக்கு பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துகிறது. அடுத்து 20 கிலோ அரிசிக்கான பணம் வரவு வைக்கப்படும். தற்போது 15 கிலோ அரிசிக்கு கிலோவுக்கு ரூ. 30 தருவதை, ரூ. 40 ஆக உயர்த்தி மாதம் ரூ. 800 அரிசி பணம் வழங்கப்படும். பண்டிகை காலத்தில் துணிகள் வாங்குவதற்கு ரூ. 500 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ. 750 ஆக உயர்த்தி தரப்படும். உயர்த்தப்பட்ட தொகை விரைவில் தரப்படும்" என அறிவித்தார்.
மேலும் படிக்க | புதுச்சேரியில் விஜய் பேச்சு - மக்களின் கருத்து என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
IPL 2026, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மோசமான 2025 சீசனுக்கு பின் தற்போது பலம்பெற்று 2026 சீசனில் களமிறங்க உள்ளது. ஜடேஜா, சாம் கர்ரண், மதீஷா பதிரானா, ரவிசந்திரன் அஸ்வின், டெவான் கான்வே என தோனியின் படைவீரர்கள் பலரும் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்கள்.
Chennai Super Kings: சிஎஸ்கே காம்பினேஷன்
சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து பெற்றிருப்பதன் மூலம் டாப் ஆர்டரை பலமாக்கி உள்ளனர். இப்போது டாப் ஆர்டரில் உர்வில் பட்டேல் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆயுஷ் மாத்ரே அல்லது உர்வில் பட்டேல் இருவரில் ஒருவர் மட்டுமே பிளேயிங் லெவனில் அதுவும் ஓபனிங்கில் விளையாட முடியும்.
மிடில் ஆர்டர் ஏற்கெனவே செட்டாகிவிட்டது. தற்போது ஏலத்தில் தலா ரூ.14.20 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ள பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோர் பின்வரிசை பேட்டர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. தோனி ஒருவேளை குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார் என்றால் கார்த்திக் சர்மா மீதம் உள்ள போட்டிகளில் விளையாடுவார்.
Chennai Super Kings: சிஎஸ்கேவின் பந்துவீச்சு படை
வெளிநாட்டு ஆல்-ரவுண்டராக நம்பர் 8இல் ஜேமி ஓவர்டனை விளையாட வைக்க அதிக வாய்ப்புள்ளது, இவருக்கு ஜாக் ஃபௌல்க்ஸ் பேக்-அப்பாக இருப்பார். ஒருவேளை, பிரசாந்த் வீர் தேவைப்படாவிட்டால் பின்வரிசையில் வேறு பேட்டரை விளையாட வைத்துவிட்டு, நம்பர் 8இல் அகேல் ஹொசைனை விளையாடலாம். அகேல் ஹொசைன் இரண்டாம் ஆப்ஷன்தான். நூர் அகமது, கலீல் அகமது, அன்சுல் கம்போஜ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். கலீல் அகமதிற்கு பேக்-அப் குர்ஜப்னீத் சிங். மேட் ஹென்றி அல்லது நேதன் எல்லீஸ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும், டெத் ஓவர்களில் சிறப்பாக வீசுபவர் என்பதால் எல்லீஸுக்கு வாய்ப்பு உறுதி.
Chennai Super Kings: இந்த 4 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பே கிடையாது
சிஎஸ்கேவின் காம்பினேஷன் ஒரளவுக்கு இதுவாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. நீண்ட பேட்டிங் உடன் கூடிய 6 பந்துவீச்சு ஆப்ஷன் இந்த ஸ்குவாடுக்கு கிடைக்கும். இந்தச் சூழலில், சிஎஸ்கேவின் இந்த 4 முக்கிய வீரர்கள், 2026 ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பை பெற மாட்டார்கள் என சமூக வலைதள கிரிக்கெட் ஆர்வலர்களால் கூறப்படுகிறது. அவர்கள் யார் யார்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை இங்கு காணலாம்.
Chennai Super Kings: சர்பராஸ் கான்
இவரை ரூ.75 லட்சத்திற்கு சிஎஸ்கே எடுத்திருக்கிறது. மிடில் ஆர்டரில் இந்திய வீரர்களுக்கான பேக்-அப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் உர்வில் பட்டேல், தோனியே ஆகியோரே பேட்டிங் வரிசையில் இடத்தை தேடிக்கொண்டிருக்கையில் இவருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதுவும் இவர் பேட்டர் மட்டுமே என்பதால் அவசர காலகட்டத்தில் நம்பர் 6இல் இறக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பும் மிக மிக குறைவு.
Chennai Super Kings: மேத்யூ ஷார்ட்
இவரை ரூ.1.50 கோடிக்கு அவரது அடிப்படைத் தொகையிலேயே சிஎஸ்கே எடுத்தது. தற்போதைய பிளேயிங் லெவனை பார்த்தால் பிரெவிஸ் மட்டுமே அணி வெளிநாட்டு பேட்டராக இருப்பார். மேத்யூ ஷார்ட் பெரும்பாலான போட்டிகளில் டாப் ஆர்டரில் இறங்கி விளாசக்கூடியவர்கள். ஆனால் டாப் ஆர்டரிலேயே எக்கச்சக்க வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரெவிஸ் தொடர்ந்து சொதப்பினாலும் கூட சிஎஸ்கே அவரை தொடர்ந்து விளையாட வைக்கும். இதனால், ஷார்ட் சிஎஸ்கே ஜெர்ஸி அணியில் களமிறங்க 2026 சீசனில் வாய்ப்பில்லை.
Chennai Super Kings: ராகுல் சஹார்
இவரை ரூ.5.20 கோடிக்கு சிஎஸ்கே மினி ஏலத்தில் எடுத்தது. லெக் ஸ்பின்னர் அணியில் தேவை என்றாலும் சிஎஸ்கேவின் தற்போதைய காம்பினேஷனில் இவர் தேவையில்லை என்றுதான் கூற வேண்டும். பிரசாந்த் வீர், நூர் அகமது ஆகியோர் நிச்சயம் 8 ஓவர்கள் வீசுவார்கள் என்றால் ராகுல் சஹாருக்கான வாய்ப்பு குறைவு. இவரது பார்மும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை இம்பாக்ட் ஆப்ஷனில் இவரை வைத்துக்கொள்ளலாம் என்றாலும், சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் முக்கியத்துவம் தராத ருதுராஜ் கெய்க்வாட் இவரை பிளேயிங் லெவனில் எடுக்கும் வாய்ப்பு குறைவாகும்.
Chennai Super Kings: ஷ்ரேயாஸ் கோபால்
இவர் கடந்த சீசனிலேயே அணியில் இருந்தார். உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக பங்காற்றி வந்தாலும் சிஎஸ்கேவில் கடந்த சீசனில் வாய்ப்பு கிடைக்கவில்லை, வரும் 2026 சீசனிலும் கிடைக்கவாய்ப்பில்லை. சிஎஸ்கே லெக் ஸ்பின்னரை பிளேயிங் லெவனில் விளையாடாது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அசாதாரண கட்டங்களில் இவர் விளையாடலாம். ஆனால் அதேநேரத்தில் ராகுல் சஹாரா, ஷ்ரேயாஸ் கோபாலா என கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஷ்ரேயாஸை தேர்வு செய்யலாம். பேட்டிங்கிலும் ஓரளவு கைக்கொடுப்பார். இருப்பினும், 2021இல் கிருஷ்ணப்பா கௌதமுக்கு என்ன நடந்ததோ, அதுதான் ராகுல் சஹார் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் நிலையாகும். லெக் ஸ்பின்னரான கிருஷ்ணப்பா கௌதம் ரூ.9.5 கோடிக்கு சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டு ஒருமுறை கூட விளையாடவில்லை.
மேலும் படிக்க | CSK-வின் பிளேயிங் 12... லிஸ்ட் போட்ட அஸ்வின் - தோனி இருக்காரா இல்லையா?
மேலும் படிக்க | தோனி ஓய்வு.. சஞ்சு சாம்சனை வாங்கியது ஏன்? CSK பிளான் இதுதான்!
மேலும் படிக்க | சிஎஸ்கே அணியில் 35 வயதிற்கு மேல் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 2026 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வருங்கால கேப்டனாக கருதப்பட்ட வரும், அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக டி20 அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த சுப்மன் கில், உலக கோப்பை போன்ற மிகமுக்கியமான தொடரிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.
மேலும் படிக்க: T20 World Cup: சுப்மன் கில்லை எடுக்காதது மிகப்பெரிய தவறு.. காரணம் இதுதான்!

அதிரடி நீக்கத்திற்கான முக்கிய காரணங்கள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சுப்மன் கில்லின் நீக்கம் குறித்துத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர். முக்கியமாக இரண்டு காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன. ஒன்று சுப்மன் கில்லின் சமீபத்திய மோசமான பார்ம், மற்றொன்று அணியின் சமநிலை. சுப்மன் கில் கடந்த சில டி20 போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முறையே 4, 0 மற்றும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறினார். ஒரு பெரிய தொடருக்கு செல்லும்போது, வீரர்கள் தங்களின் சிறந்த ஆட்டத் திறனில் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் கில்லின் சமீபத்திய சறுக்கல்கள் அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டன.
விக்கெட் கீப்பர்
கில்லின் நீக்கத்திற்கு பின்னால் உள்ள மற்றொரு மிக முக்கிய காரணம் அணியின் சமநிலை மற்றும் விக்கெட் கீப்பர்களின் தேவை. தேர்வுக்குழுவினர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கக்கூடிய விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்ய முன்னுரிமை அளித்துள்ளனர். அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தொடக்க வீரர்களாகவும் செயல்படக்கூடியவர்கள் என்பதால், பிரத்யேக தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லிற்கான இடம் கேள்விக்குறியானது. "எங்களுக்கு தொடக்க வரிசையில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேவைப்பட்டனர். சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அந்த இடத்தை பூர்த்தி செய்கின்றனர். அணியின் சமநிலையை கருத்தில் கொண்டே இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டது," என்று அகர்கர் விளக்கினார்.
துணை கேப்டனாக அக்ஷர் படேல்
சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அணியின் துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் அக்ஷர் படேல் துணை கேப்டனாக செயல்படுவார். இது அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கும் ஒரு உத்தியாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அதிரடியாக விளையாடி 500-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த இஷான் கிஷன் அணிக்கு திரும்பியுள்ளார். அவரது வருகை சுப்மன் கில்லின் இடத்திற்கு பெரும் போட்டியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில்லின் இந்த நீக்கம் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், டி20 வடிவத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் கன்சிஸ்டன்சி குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இருப்பினும், வருங்கால கேப்டன் என்று அழைக்கப்பட்ட ஒருவரை இப்படி ஒரு முக்கிய தொடரிலிருந்து கழற்றிவிட்டது பிசிசிஐ எடுத்த மிகத் துணிச்சலான முடிவாகவே பார்க்கப்படுகிறது.
ஒருநாள் அணியிலும் இதே நிலைமையா?
டி20 உலக கோப்பை அணியில் இருந்து நீக்கம் சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சறுக்கலாக தோன்றினாலும், இது ஒரு தற்காலிக பின்னடைவே என்று தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர் தனது பேட்டிங் திறனை மீண்டும் நிரூபித்து அணிக்குள் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலையில் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்ல துடிக்கும் வேளையில், கில் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் படை களமிறங்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் அவரது இடத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. பிசிசிஐ எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா அல்லது கில்லின் நீக்கம் அணியின் பேட்டிங்கை பலவீனப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: “அப்பவே உடைஞ்சு போயிட்டேன்”.. ஓய்வு குறித்து மனமுடைந்து பேசிய ரோகித் சர்மா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான இங்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், விரைவான தரிசனத்திற்காகவும் ரோப் கார் சேவை மற்றும் மின் இழுவை ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், ரோப் கார் சேவையானது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிகக் கடுமையான பராமரிப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டது.

பக்தர்களின் பாதுகாப்பு
தினசரி பராமரிப்பு: ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி நேரம் சேவை நிறுத்தப்பட்டு அடிப்படை சோதனைகள் செய்யப்படும்.
மாதாந்திர பராமரிப்பு: மாதம் ஒரு முறை முழுமையான ஒரு நாள் முழுவதும் சேவை நிறுத்தப்பட்டு, ரோப் காரின் கம்பிகள், பெட்டிகள் மற்றும் இயந்திரங்களின் உறுதித்தன்மை சோதிக்கப்படும்.
வருடாந்திர பராமரிப்பு: ஆண்டுக்கு ஒரு முறை சுமார் ஒரு மாதம் வரை சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு, தேய்மானம் அடைந்த பாகங்கள் மாற்றப்பட்டுப் புதுப்பிக்கப்படும்.
அதன் அடிப்படையில், இந்த மாதத்திற்கான பராமரிப்பு பணிகள் இன்று திங்கள்கிழமை மேற்கொள்ளப்படுவதால், ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் முழுவதும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான மாற்று ஏற்பாடுகள்
ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இன்று பழனிக்கு வருகை தந்துள்ள பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ரோப் கார் சேவை இல்லாத நிலையில், பக்தர்கள் மின் இழுவை ரயில் சேவையை பயன்படுத்தலாம். இதற்காக கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்பதால் பக்தர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் மற்றும் இளையவர்கள் படிப்பாதை வழியாகவோ அல்லது யானை பாதை வழியாகவோ மலைக்குச் சென்று முருகனை தரிசிக்கலாம்.
ரோப் கார் சேவையின் முக்கியத்துவம்
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் ரோப் கார் சேவையையே விரும்புகின்றனர். இதற்கு காரணம், அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும், இதில் பயணம் செய்யும்போது பழனி நகரத்தின் இயற்கை அழகையும், மேற்கு தொடர்ச்சி மலையின் எழிலையும் ரசித்தபடியே பயணிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறிய குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்கள் மலை ஏறுவதற்கு சிரமப்படுவார்கள் என்பதால், அவர்களுக்கு இந்த ரோப் கார் சேவை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இன்று இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இத்தகைய பக்தர்கள் மின் இழுவை ரயிலை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தின் வேண்டுகோள்
தைப்பூசம் நெருங்கி வரும் வேளையிலும், வார இறுதி விடுமுறை முடிந்து வாரத்தின் முதல் நாளாக இருப்பதாலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் வழக்கம் போல் காணப்படுகிறது. ரோப் கார் நிலையத்திற்கு வந்து ஏமாற்றமடைவதை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை வழக்கம் போல் ரோப் கார் சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் மற்றும் முருகனின் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: சத்துணவு பிரிவில் வேலை! பெண்கள் விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. கை நிறைய சம்பளம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Air India Plane Engine Malfunction: தலைநகர் டெல்லியில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்தபோது வலது பக்க எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டு டெல்லியில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. முக்கிய ஆயில் பிரஷர் குறைவாக இருந்ததன் காரணமாக வலது எஞ்சின் நின்றுவிட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
ஏர் இந்தியா AI 887 (போயிங் 777-337 ER விமானம்), டெல்லியில் இருந்து மும்பை நோக்கி இன்று காலையில் புறப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஞ்சின் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 6.40 மணிக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டனர்.
AI887 from Delhi to Mumbai on 22 December, after take-off, returned to Delhi due to a technical issue, as per standard operating procedure. The aircraft landed safely at Delhi, and the passengers and crew disembarked: Air India Spokesperson
— ANI (@ANI) December 22, 2025
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது, பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பத்திரமாக தரையிறங்கினர். இந்த எதிர்பாராத சூழ்நிலையால் ஏற்பட்ட சிரமத்திற்கு ஏர் இந்தியா மனதார வருந்துகிறது. விமானம் தேவையான சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள எங்கள் தரைப்படை குழுவினர் பயணிகளுக்கு உடனடி உதவியை வழங்கி அளித்தார்கள். மேலும் பயணிகள் விரைவில் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவில், எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு முன்னுரிமையாக உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
U19 Asia Cup 2026 Final Highlights: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
#ACC pic.twitter.com/rqWLgdE6yR
— AsianCricketCouncil (@ACCMedia1) December 21, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு, சில நாட்கள் இடைவெளி விட்டு புதுப்பித்தால், அந்த இடைப்பட்ட காலத்தை உரிமம் இருந்ததாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெலங்கானா மாநில காவல்துறை தேர்வாணையம் (Telangana State Level Police Recruitment Board) தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில், தெலங்கானா காவல்துறை தேர்வாணையம், காவலர் ஓட்டுநர் மற்றும் தீயணைப்பு துறை ஓட்டுநர் ஆகிய 325 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | அசாமில் ரயில் விபத்து: 8 யானைகள் பலியான சோகம்... தடம் புரண்ட பெட்டிகள்

சில விண்ணப்பதாரர்களின் ஓட்டுநர் உரிமம் இந்த இரண்டு ஆண்டு காலத்தில் காலாவதியாகி, பின்னர் சில நாட்கள் கழித்து புதுப்பிக்கப்பட்டிருந்தது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, உரிமம் காலாவதியான ஓராண்டுக்குள் புதுப்பிக்கப்பட்டால், அது காலாவதியான தேதியிலிருந்து செல்லுபடியாகும் என்று உயர்நீதிமன்றம் கருதி, அவர்களை தேர்வில் பங்கேற்க அனுமதித்தது. இதை எதிர்த்து தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் எஸ்.வி.என். பட்டி அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. தொடர்ச்சியாக என்ற வார்த்தைக்கு பொருள், எந்தவித இடைவெளியும் இல்லாமல் இருப்பது தான். உரிமம் காலாவதியான நாளிலிருந்து அது புதுப்பிக்கப்படும் நாள் வரையிலான இடைப்பட்ட காலத்தில், அந்த நபருக்கு வாகனம் ஓட்ட சட்டப்பூர்வ அனுமதி இல்லை. எனவே, அந்த காலத்தைத் தொடர்ச்சியான அனுபவமாக கணக்கில் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
சட்ட திருத்தம்
2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், உரிமம் காலாவதியான பிறகு 30 நாட்கள் சலுகைக் காலம் என்பது நீக்கப்பட்டுவிட்டது என்பதை குறிப்பிட்டது. எனவே, உரிமம் காலாவதியான மறுநாளே அது செல்லாததாகிவிடும். உரிமத்தை புதுப்பிக்கும்போது அது பழைய தேதியிலிருந்து செல்லுபடியாகும் என்று கருதினாலும், அது ஆவண ரீதியாக மட்டுமே சரியே தவிர, பணி நியமனத்திற்கான தொடர்ச்சியான தகுதிக்கு பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம், ஓட்டுநர் பணி நியமனங்களில் தொடர்ச்சியான அனுபவம் கேட்கப்படும்போது, இடையில் உரிமம் காலாவதியாகி இருந்தால், அது தகுதியிழப்பாக கருதப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவின் டாப் 7 பணக்காரர்கள்.. லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழர்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
ICC T20 World Cup 2026, Team India Squad: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் துணை கேப்டன் மாற்றப்பட்டுள்ளார்.
ndia’s squad for ICC Men’s T20 World Cup 2026 announced
— BCCI (@BCCI) December 20, 2025
Let's cheer for the defending champions#TeamIndia | #MenInBlue | #T20WorldCup pic.twitter.com/7CpjGh60vk
இந்திய அணி ஸ்குவாட்
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்சர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Actor Sreenivasan Passes Away: பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 69. தமிழில் லேசா லேசா, ரெட்டைச்சுழி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Ban For Pit Bulls, Rottweilers In Chennai: சென்னையில் பிட்புல், ராட்வீலர் ஆகிய இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை (டிசம்பர் 20) முதல் தடை விதித்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தடையை மீறி வளர்த்தால், நாய் வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை (Leashing), வாய்க்கவசம் (Muzzling) உள்ளிட்டவை அணிவிப்பது சென்னையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#NewsUpdate | பிட்புல், ராட்வீலர் வளர்க்க தடை#ZeeTamilNews | #Chennai | #ChennaiCorporation | #GCC | #Rottweiler | #Dog | #Pitbull pic.twitter.com/aDzUsP223a
— Zee Tamil News (@ZeeTamilNews) December 19, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Tamil Nadu Draft Electoral List After SIR: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது.
சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்காளர்கள் அதற்கான படிவங்களை நிரப்பியதன் அடிப்படையில், அந்த படிவங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை காரணமாக போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர் நீக்கப்பட்டிருக்கின்றனர். சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு முன்னர் 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 5.43 கோடியாக குறைந்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
TN Pongal Gift News: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை (Pongal Festival 2026) என்றாலே பொதுமக்களின் எதிர்பார்ப்பு "பொங்கல் பரிசுத் தொகுப்பு" (TN Pongal Gift) மீதுதான் இருக்கும். இந்த ஆண்டு பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படுமா, இல்லையா என்ற பட்டிமன்றமே சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து ஒரு மிக முக்கியமான தகவல் கசிந்துள்ளது. அதாவது ஒவ்வொரு ரேஷன் கார்டு குடும்பத்திற்கும் 3000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு (1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு) வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே பொங்கல் பரிசு (TN Pongal Gift) மற்றும் ரொக்க பணம் (TN Pongal Cash) குறித்து ஆளும் திமுக அரசின் திட்டம் என்ன?, பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு எப்பொழுது வரும்?, அதற்கான முன்னேற்பாடுகள் என்ன? போன்ற விவரங்களை பற்றி பாப்போம்.
ரூ.3,000 பொங்கல் ரொக்கப் பரிசு: அதிகாரப்பூர்வ முடிவு?
பொங்கல் பரிசு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நிதித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் முடிவில், ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ. 3,000 ரொக்கப் பணம் வழங்க அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு முன் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடும் வகையில் இந்த திமுக அரசு திட்டமிட்டு வருகிறது.
அதேநேரம் பொங்கலுக்கு ரூபாய் 5,000 வழங்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதால், அரசாங்கத்தின் முடிவு முக்கியமாக பார்க்கப்படுகிறத. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டு, அப்போதைய ஆளும் அரசு அதிமுக பொங்கலுக்கு 21 பொருட்கள் (பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், மஞ்சள் பை, முழு கரும்பு) மற்றும் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கியது. அதேபோல அடுத்த வருடம் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக பொங்கலுக்கு ரொக்கப் பரிசு ரூ.3,000 வழங்க தற்போதைய ஆளும் திமுக அரசு திட்டமிட்டு வருகிறது.
2.25 கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்
தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்தச் சலுகை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்வது மற்றும் இதர பொருட்களைத் தயார் நிலையில் வைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பொங்கல் பரிசு பணம் எப்படி வழங்கப்படும்?
பொங்கல் பரிசு: இந்த முறை பொங்கல் பரிசுப் பணத்தை விநியோகிப்பதில் ஒரு புதிய முறையை அரசு கையாளப்போவதாகக் கூறப்படுகிறது.
நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT): வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ள கார்டுதாரர்களுக்கு, பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும்.
ரேஷன் கடைகள்: வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அல்லது தொழில்நுட்ப சிக்கல் உள்ளவர்கள் நேரடியாக ரேஷன் கடைகளில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொருட்கள்: அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவற்றை எப்போதும் போல ரேஷன் கடைகளிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் " பொங்கல் பரிசு மழை"
வரும் காலங்களில் தேர்தல் நெருங்கி வருவதால், இந்த பொங்கல் பரிசு அரசுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 2,500 வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை திமுக அரசு ரூ. 3,000 வழங்கத் திட்டமிட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 4,000: மகளிர் உரிமைத் தொகை + பொங்கல் பணம்
மேலும், ஜனவரி மாதத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகையுடன், இந்த ரூ.3,000 பொங்கல் பரிசும் சேரும் என்பதால், இல்லத்தரசிகள் இந்த பொங்கலை கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
2026 பொங்கல் பரிசின் முக்கிய அம்சங்கள்
- பொங்கல் பரிசு திட்டம் சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முக்கியமானது
- ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3000 ரூபாய் ரொக்க பரிசு வழங்க திட்டம்.
- 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
- பணம் நேரடியாக வங்கி கணக்குக்கு டிடிபி முறையில் வழங்கப்படும்; இல்லையெனில் ரேஷன் கடையில் பெறலாம்.
- தமிழகத்தில் 2.25 கோடி குடும்பங்களுக்கு இந்த தொகுப்பு வழங்கப்படும்.
- பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் ஜனவரி முதல் அமல்படுத்தப்படலாம்.
- தேர்தல் காலத்திற்காக இந்த பரிசு திட்டம் முக்கிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
- எதிர்கட்சிகள் அதிக தொகை வழங்க கோரிக்கை; அரசாங்கத்தின் முடிவு என்ன என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னர் எந்த தகவலும் உறுதி செய்யக்கூடாது;
முக்கிய குறிப்பு
பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்துவிட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அறிவிப்பு வந்த பிறகே இது இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - புதிய ரேஷன் கார்டு + பொங்கல் பரிசு கிடைக்குமா? அமைச்சர் சக்கரபாணி கொடுத்த அப்டேட்
மேலும் படிக்க - பொங்கல் பரிசு மட்டும் இல்லை! மக்களுக்கு கிடைக்கப்போகும் கூடுதல் நன்மை!
மேலும் படிக்க - பொங்கல் பரிசு 2026: ரூ.5000 உறுதி? அரசின் சூப்பர் பிளான்.. 10 முக்கிய விசியங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Old Pension Scheme Update: 2021 சட்டமன்றத் தேர்தலின் போது "ஆட்சிக்கு வந்தால் OPS அமல்படுத்தப்படும்" என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சி முடிய உள்ள நிலையில் ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிதி நிலைமை மற்றும் ஊழியர் நலன் குறித்து அமைச்சர்களின் அவசர ஆலோசனை. பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயமாக அமலுக்கு வரும் என அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றன. தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட காலக் கனவான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் அமலாகப் போகிறதா? 2026 தேர்தலுக்கு முன் அதிரடி திருப்பம் நிகழுமா? பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) குறித்து தற்போதைய தமிழக அரசின் நிலைபாடு என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
திமுக தேர்தல் அறிக்கை
தமிழக அரசு ஊழியர்களும் மற்றும் ஆசிரியர்களும் ஓபிஎஸ் எனப்படும் பழைய பென்ஷன் திட்டத்தை (Old Pension Scheme - OPS) மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்" என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னமும் பழைய பென்ஷன் திட்டம் குறித்து முடிவு ஏதும் அதிகாரப்பூர்வமாக இன்னும் எடுக்கப்படவில்லை.
புதிய பென்ஷன் திட்டம்
அதே சமயம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடும் பொழுது தற்போது "புதிய பென்ஷன் திட்டம்" தான் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்ததால், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யல்லது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து இடைவிடாமல் போராடி வருகின்றனர்.
ககன்தீப் சிங் பேடி குழு அறிக்கை
இந்த நிலையில் முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வகையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பழைய ஓய்வுதிய திட்டம் (Old Pension Scheme - OPS), பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (National Pension System - NPS), ஒருங்கிணைந்த ஓய்வுதிய திட்டம் (Unified Pension Scheme - UPS) ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.
அந்த குழுவினர் அரசு ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் எல்ஐசி போன்ற நிதி நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துறைகள் குறித்து தற்பொழுது தீர்மானங்கள் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
அமைச்சர்கள் ஆலோசனை
தற்பொழுது ககன்தீப் சிங் பேடி குழுவினருடன் தமிழ்நாடு அமைச்சர்களான தங்கம் தென்னரசு, ஏவா வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விரிவாக விவாதித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். தமிழக அரசின் நிதிநிலைமை மற்றும் அரசு ஊழியர்களின் நலன் ஆகிய இரண்டையும் சமன்படுத்தும் வகையில், எந்த திட்டம் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதா தகவல் வெளியாகி இருக்கிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம் இறுதி அறிக்கை
இதற்கிடையே அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து டிசம்பர் மாத இறுதிக்குள்ள ககன்தீப் சிங் பேடி குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இந்த இறுதி அறிக்கை தொடர்பாகத் தான் தற்பொழுது பரபரப்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ககன்தீப் சிங் தலைமையிலான குழுவினர் மூன்று வகையான பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ததில், இறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு சிபாரிசு செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.
நிதி பற்றாக்குறை
தமிழக அரசை பொறுத்தவரையில் நிதி பற்றாக்குறை காரணத்தால் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கி வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் மிகவும் நெருங்கி விட்டதால் ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல் செய்யாவிட்டால், அது திமுகவிற்கு பெரிய பின்னடைவாகும் என அமைச்சர்கள் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி
அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுவதால், நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு ஜிஎஸ்டி வரி சமன்பாட்டில் இருந்து பணத்தை பங்களிக்கலாம் என்ற ஒரு ஆலோசனை செய்யப்பட்டதாம். அதன் அடிப்படையில் டிசம்பர் இறுதியில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான இறுதி அறிக்கை பரிசீலனை செய்து, ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்
தற்பொழுது சட்டமன்ற தேர்தல் வருவதால அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் திட்டம் என்பது திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அதிமுக தரப்புக்கு மிகவும் சாதகமாகும் என்பதல, பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயமாக அமலுக்கு வரும் என அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றன.
50 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்ப வாக்கு
அதே சமயம் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அறிவிப்பதன் மூலம் திமுக அரசிற்கு தமிழ்நாடு அரசை சேர்ந்த சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்ப வாக்கு கிடைக்கலாம். அதனால் இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பழைய பென்ஷன் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தால், அது அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். டிசம்பர் இறுதி அறிக்கைக்குப் பின் முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த 'மெகா' முடிவு என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க - OPS திரும்புமா? 8-வது ஊதியக் குழுவில் மாற்றம் கோரி PM மோடிக்கு ஊழியர் சங்கம் கடிதம்